Thursday, October 13, 2011

திருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை






மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடும், வழிகாட்டுதலோடும் இந்தக் கட்டுரை ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்;பிறகு கடலில் குளிக்க வேண்டும்.கடலில் எவ்வளவு நேரமானாலும் குளிக்கலாம்;குளித்தபின்னர்,கடற்கரையில் காசிச்சுவாமிகள்,மவுனம் சாமிகள்,ஆறுமுகச்சாமிகள் என மூன்றுபேர்களின் ஜீவசமாதிக்கு முதலில் செல்ல வேண்டும்.குளித்த ஈர ஆடையோடு சென்று இந்த மூவர் ஜீவசமாதியில் நமது கோரிக்கைகளை மனப்பூர்வமாக வேண்ட வேண்டும்.

அதன் பிறகே,திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும்.வழிபட்ட அன்று முழுவதும் குளிக்கக் கூடாது;வழிபட்ட அன்றே வீட்டுக்குப் புறப்படலாம்.தப்பில்லை;

ஜோதிடத்தை முழு நேரமாக செய்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலமாக,அதுவரையிலும் ஜோதிடருக்கு இருந்த நவக்கிரக சாபங்கள் நீங்கும்.ஏனெனில்,ஜோதிடர்,தன்னை நாடி வருபவர்களின் ஜாதகத்தை கணித்து,நவக்கிரகங்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து,பலனாகக் கூறுகிறார்.கிரகங்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கூறி,ஜாதகரை பாதுகாத்துவிடுவதால்,நவக்கிரகங்கள் அந்த ஜோதிடரை சபிக்கும்.இந்த சாபம் ஓரளவுக்கு மேல் அதிகரிக்கும்போது,ஜோதிடரின் உடல் எரிச்சலை எட்டும்.சில மாதங்களிலேயே அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்தவேமுடியாது.இதைச் சரி செய்ய திருச்செந்தூர் சென்று மேற்கூறிய முறைகளின் படி திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும்.

ஓம்சிவசிவஓம்











3 comments:

  1. jothidam solvadhu sabhathai kodukkuma, idhu kasu vangi kondu thozhilaaga seibhavarukku mattuma,alladhu kasu vangadhu, matravarukku nanamai seyyum nokkam kondavarukkumaa?

    ReplyDelete
  2. அந்த கடற்கரையில் சமாதிகள் எங்கு உள்ளன என்று தெரிவிக்க முடியுமா

    Kannan

    ReplyDelete
  3. When you go from the temple to naali kinaru there a bus stand. From there, there is a road going paralel to the beach. The samadhis are on the left side about 200 -250 metres from the bus stand.

    ReplyDelete