Saturday, December 12, 2020

வாசகர்களிடம் ஒரு மன்னிப்புக் கோரிக்கை

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்


இந்த டிசம்பர் 2020 முதல் தொடர்ந்து பதிவுகள் நமது மஹாவில்வம் வலைப்பூவில் வெளிவரும்.


பல்வேறு சிரமங்களால் கடந்த சில மாதங்களாக பதிவுகள் வெளியிட முடியாமல் போய்விட்டது;மன்னிக்கவும்.

இப்படிக்கு


கை.வீரமுனி......

Monday, June 8, 2020

அற்புதமான சிவ மந்திரம்

க்லீம் சிவாய நம

என்ற இந்த மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டுவரை ஜபித்து வர,மகத்தான  செல்வ வளம் தேடி வரும்!!!

அனைவரும் நீடூழி வாழ்க!!!

Monday, January 13, 2020

பித்ரு தர்ப்பணங்களில் மிக மிக உயர்ந்தது



பித்ரு தர்ப்பணங்களில் மிக மிக உயர்ந்தது

உங்களுக்கு இன்று வரையிலும் ஒரு குறையும் இல்லை என்றால்,நீங்கள் இதுவரையிலும் மாதம் தோறும் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறீர்கள் என்று தான் அர்த்தம்!

உங்களுக்கு குறையும்,ஏக்கமும்,விரக்தியும்,வெறுப்புமே வாழ்க்கையாக இன்று வரையிலும் இருந்தால்,நீங்கள் இன்று வரையிலும் ஒரே ஒரு முறையாவது பித்ரு தர்ப்பணம் செய்திருக்கிறீர்களா என்பதை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்

நாடு முழுவதும் தெய்வபக்தி தழைத்திருந்தால்,குடும்பங்கள் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டு இருக்கும்;குடும்பங்கள் சுபிட்சமாக வாழ்ந்து வருகின்றது என்றால்,ஒவ்வொரு குடும்பத்தாரும் மாதம் தோறும் முன்னோர்களுக்காக பித்ரு தர்ப்பணம் செய்து வருகின்றார்கள் என்று தானே அர்த்தம்?

ராமாயணம் நடைபெற்று 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன;அன்று முதல் 1750 வரையிலும் சுமாராக 2,00,000 தலைமுறைகளாக பித்ரு தர்ப்பணம் செய்து வந்தது நமது தமிழ்ப் பரம்பரை!கிறிஸ்தவ ஆங்கிலேய ஆதிக்கம்,இங்கே இருக்கும் செல்வ வளத்தைக் கொள்ளையடித்தது; (ஆதாரம்:உத்சா பட்நாயக் அவர்கள் எழுதிய முழுப்பக்க கட்டுரை,தினமலர்,பக்கம் 5,வெளியீடு 4.12.2018,மதுரைப் பதிப்பு)     மீண்டும் இந்த நாடு எந்த விதத்திலும் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது;(ஆதாரம்:நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல்)

தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்களாக இருந்த கோமாதா என்ற பசு,விவசாயம்,பெண் இனம்,கோவிலும் கோவிலைச் சார்ந்த பொருளாதாரத்தையும் சிதைக்கும் வேலையை கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஆரம்பித்தான்;இதன் விளைவாக உலகத்தின் முதன்மை வல்லரசாகவும்,6,00,000 கிராமங்களும் தன்னிறைவு பெற்ற சிறு தன்னாட்சி குடியரசுகளாகவும் (அக்காலத்தைய உள்ளாட்சி) இருந்த நிலை படிப்படியாக மாறத் துவங்கியது;

எப்படி மாறியது ? என்பதை அறிந்து கொள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தை பாருங்கள்;அதில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் முழு உண்மையே!!! லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பேசும் வசனங்கள் நமது நாட்டின் இழிநிலையை அப்படியே வெளிப்படுத்தி இருக்கின்றது;

சுதந்திரம் அடைந்த பின்னரும்,இந்த  நாட்டின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதும்,தமிழ்நாட்டின் மக்களின் பக்தி வளமே இந்த நாட்டிற்கு ஆன்மீக பலத்தைத் தருகின்றது என்பதை உணர்ந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் அதை தகர்க்க சில அடிமைகளை உருவாக்கினான்;

அந்த அடிமைகளால் 1964 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் பக்தியை இழந்தோம்;ஆன்மீக வளத்தை இழந்தோம்;கூட்டுக் குடும்ப அமைப்பு சிதையத் துவங்கியது;தனிக் குடும்பங்களும் நிம்மதியின்றி வாழ இயலாமல்,குடும்ப அமைப்பே சிதையத் துவங்கி விட்டது;   இலவசங்களை நம்பி வாழும் இழிநிலைக்கு ஆளானோம்;அதனால்,இன்று யாரும் கடவுளையும் நம்புவதில்லை;தீய சக்திகளான மாந்திரீகத்தையும் நம்புவதில்லை;குறுக்கு வழிகளில் உலகத்தையே கட்டுப்படுத்தும் அதர்வண வேதத்தையும் நம்புவதில்லை;
ஆனால்,இந்த ஆன்மீக வழிமுறைகளையும்,அதர்வண வேதத்தின் டெக்னிக்குகளையும் மேற்கு நாடுகள் பயன்படுத்தி,நம்மை இப்போது அடிமைப்படுத்தி வருகின்றன;

நாமோ இப்போது தான் அவர்களுடைய தந்திரங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றோம்;ஆனால்,மொத்த மக்கள் தொகை அளவுக்கு பார்க்கும் போது போதுமான அளவுக்கு தேசபக்தியுடன் கூடிய தெய்வ பக்தி இன்னும் பரவவில்லை என்றே தெரிகின்றது;

இனிமேலும் வெறும் தெய்வபக்தியுடன் மட்டும் வாழ்ந்து வந்தால்,2030க்குப் பிறகு கோவிலுக்குச் செல்லவே யார் யாரிடமோ அனுமதி பெறும் இழிநிலை உருவாகிவிடும்;எனவே,உங்கள் வாரிசுகளுக்கு தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்தியை (12 வயது முதல் 22 வயதுக்குள்) ஊட்டுங்கள்;


ராமாயண காலத்தில் ராமபிரான் வனவாசம் 14 ஆண்டுகள் சென்றார்;அப்போது மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் செய்திருக்கின்றார்;அப்படி பித்ரு தர்ப்பணத்தினை பித்ருக்கள் உலகத்தில் இருந்து தசரத மஹாராஜாவே நேரில் வந்து பெற்றிருக்கின்றார்;

தற்போதும் கூட,கலியுகாதி 5121 ஆம் ஆண்டில் கூட ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் பித்ரு தர்ப்பணம் சில குறிப்பிட்ட இடங்களில் செய்யும் போது அவர்களுடைய முன்னோர்கள் நேரில் வந்து தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்;

1600 வரை தினசரி பித்ரு தர்ப்பணம் செய்து வந்தோம்;1800 வரும் போது,கிறிஸ்தவ ஆங்கிலேயனின் சுரண்டலால் ஆண்டுக்கு 12 முறை (மாதம் ஒரு முறை=அமாவாசை அன்று மட்டும்) தர்ப்பணம் செய்தால் போதும் என்று சம்பிரதாயம் மாறியது;காரணம் செல்வ வளத்தை இழந்த நமது ஆன்மீக பூமி,வறுமையுள்ள குடும்பங்களை உருவாக்கிக் கொண்டு இருந்தது;

1950 வரும் போது ஆண்டுக்கு 3 முறை மட்டும் பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும் என்ற இழிநிலையை கலியுகம் தோற்றுவித்துவிட்டது;ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று மூன்றே மூன்று முறை பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும் என்றாகிவிட்டது;


1990 வரும் போது ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்தாலே போதும்;சென்ற 12 ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்ட பித்ரு தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சுருங்கிவிட்டது;அதனாலேயே 99.99% மக்கள் தினசரி வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சாதனை என்று ஆகிப் போனது;


சித்தர்களின் அருளால் இப்போது ஒரு உண்மை கிடைத்திருக்கின்றது;தை முதல் நாள் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் கடந்த 70 ஆண்டுகளாக (சுமாராக 2 அல்லது 3 தலைமுறை) செய்யாமல் விடுபட்ட குறைகளை நீக்கும் சக்தி வாய்ந்தது என்று சித்தர் பெருமக்கள் உபதேசம் செய்துள்ளார்கள்;
இன்றைய அனைத்து விதமான தனி மனித ஏக்கங்கள்,பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே செல்வதற்குக் காரணம் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான்!




உங்கள் வீடு அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான கோவில் குளக்கரை/நதிக்கரை/கடலோரம் தை 1 ஆம் நாளன்று(15.1.2020 புதன் கிழமை அன்று) பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்:அனைத்து குறைகளும் நீங்கி சுபிட்சமாக வாழ்க வளமுடன்!!!

                        

படிப்படியான செல்வ வளம் பெருக


படிப்படியான செல்வ வளம் பெருக

உங்கள் வீட்டில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தினமும் ஒரு முறை வராகி மாலை பாடல்கள் 32 ஐயும் இரவில் ஜபித்து வர வேண்டும்;இதன் மூலமாக,உங்கள் குடும்பத்தின் தலைமை அன்னையாக மஹாவராகி ஆகி இப்பிறவி முழுவதும் சூட்சுமமாக வழிநடத்துவாள்;

உங்களிடம் பின்வரும் அன்னையின் படம் வீட்டில் இருக்க வேண்டும்;உங்களுடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு 2,4,6,8,10 வது நட்சத்திரம் வரும் நாளன்று இரவில் குரு ஓரை அல்லது புதன் ஓரையில் பின் வருமாறு அன்னை மஹாவராகியை வழிபட வேண்டும்;

மரிக்கொழுந்து மாலையை அன்னையின் படத்திற்கு அணிவிக்க வேண்டும்;பிறகு,மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;அப்போது கோரைக்கிழங்கால் செய்த பாயாசத்தை அன்னையின் படையலாக வைக்க வேண்டும்;

இருகுழைக் கோமளம் தாள்புட்ப ராகம்  இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!


என்ற இந்த பாடலை 25 முறை ஜபிக்க வேண்டும்;இப்படி ஓராண்டு வரை செய்து வர படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;


4 முதல் 5 ஆண்டுகள் வரை தினமும் வராகி மாலை ஜபித்து முடித்துவிட்டால்,இதுவரை உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ பிறர் செய்த மாந்திரீகத் தீங்குகள் விலகிவிடும்;இந்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை அசைவம்,மதுவைக் கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;தமிழ்ப் பண்பாட்டினை விடாப்பிடியாக பின்பற்றி வந்திருந்தால்,இந்த வருமான அதிகரிப்பு பூஜை முழுமையான பலனைத் தரும்;

புனர்பூ தோஷத்தை நீக்கும் சுய வழிபாடு


புனர்பூ தோஷத்தை நீக்கும் சுய வழிபாடு

உங்கள் ஜாதகப்படி,நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவரா? அல்லது கடக ராசியில் பிறந்தவரா? ஆம்   எனில்,உங்களுக்கு புனர்பூ தோஷம் இருக்கின்றது;இந்த தோஷம் உங்களுடைய வாழ்க்கைத் துணையுடனும்,தொழில் கூட்டாளிகளுடனும்,நெருங்கிய நண்பர்களுடனும் தொடர்ந்து நல்லுறவுடன் வாழ இயலாத சூழலை உருவாக்கியிருக்கும்;


தவிர,சபையில் சொல்லமுடியாத சோகங்கள் அல்லது அவமானங்கள் அல்லது குறைகள் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும்;இதைச் சரிசெய்ய பாம்பாட்டி சித்தர் நமக்கு ஒரு பரிகாரத்தை போதித்திருக்கின்றார்;

சுமாராக 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கடக லக்னம்,பூசம் நட்சத்திரத்தன்று ஸ்தாபிக்கப்பட்டவர் தான் அபய சனீஸ்வரர் ஆவார்;இவர் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகரில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றார்;

புனர்பூ தோஷம் தீர,ஏதாவது ஒரு சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்  மூலவராகிய அருள்மிகு வைத்தியநாதசுவாமிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;அருள்மிகு சிவகாமி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்;

முடிவாக,சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்த பின்னர்,வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;

கோவிலை விட்டு வெளியே வரும் போது சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அல்லது கோவில் வாசல் பகுதியில் திரியும் தெரு நாய்களுக்கு ஒரு வேளை உணவு தானம் (பிஸ்கட் அல்லது பொறை) செய்ய வேண்டும்;


இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே புனர்பூ தோஷம் நீங்கிவிடும்;அப்படி நீங்கியதை நீங்கள் உணர 90 நாட்கள் வரை ஆகும்;

திருமணத் தடை நீக்கும் சுய பரிகாரங்கள்


திருமணத் தடை நீக்கும் சுய பரிகாரங்கள்

உங்களுக்கு அல்லது உங்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்றதா?

ஆண் எனில் 30 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளாகவும் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும்;லிவ்விங் டுகெதர் நமது பண்பாட்டை நாசமாக்கும் பழக்கமாகும்;ஒருவனுக்கு ஒருத்தி என்றால் என்னவென்றே தெரியாத மேல்நாடுகளில் இருந்து நமது ஆன்மீக பூமிக்குள் புகுந்த விஷக் கருத்து தான் லிவ்விங் டுகெதர்!


உலக வரலாற்றைப் பார்த்தால்,பெண் சுதந்திரம்,லிவ்விங் டுகெதர்,பஃபே சிஸ்டம்,மோட்டல் உணவுப் பழக்கம்,வீட்டிற்கே வந்து உணவு சப்ளை செய்வது,ஜீன்ஸ் அணிவது,ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்று எண்ணுவது,பஃப் கலாச்சாரம் அனைத்துமே ஆன்மீக பூமியின் ஆன்மீக வளத்தைச் சிதைக்கும் சாத்தானின் நடைமுறைகள்! இதில்,மேற்கு நாடுகளின் வருமானச் சுயநலமும் மறைந்திருக்கின்றது;


ஒரு பெண்ணுக்கு 27 வயதிற்குள் திருமணம் நடைபெறாவிட்டால்,அவள் அருள்மிகு மங்களாம்பிகை திருக்கோவில்,கூகூர் என்ற ஆலயத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை அன்று செல்ல வேண்டும்;திருச்சி லால்குடிக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;அவளது வயது என்னவோ அத்தனை எண்ணிக்கையில் நெய்தீபம் ஏற்றி மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;அதன்பிறகு,அங்கே ஒரே ஒரு சாதுவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதைச்செய்ய  இயலாதபட்சத்தில்,அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி,அடுத்த 3 நாட்களுக்குள் சொந்த ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் ஒரே ஒரு சாதுவுக்கு அன்னதானம் ஒரு வேளை செய்ய வேண்டும்;

ஒரு ஆணுக்கு 30 வயதிற்குள் திருமணம் ஆகாவிட்டால்,திருமண தோஷம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்;அவர் ஏதாவது ஒரு அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் (பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில்) திருவீழிமிழலைக்குச் செல்ல வேண்டும்; அருள்மிகு திருவீழி நாதரை வழிபட வேண்டும்; தனது வயது எண்ணிக்கையில் உள்பிரகாரத்தை வலம் வர வேண்டும்;வலம் வரும் போது “சிவாய நம” என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர்கள்,ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தர வேண்டும்;ஈசனின் கிழமையான திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது வியாழக் கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மூலவராகிய அருள்மிகு வைத்தியநாத சுவாமிக்கும்,அதே சன்னதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு மனோன்மணித் தாயாருக்கும் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;

இப்படி 6 திங்கட்கிழமை அல்லது 6 வியாழக்கிழமை செய்தாலே திருமணத் தடை நீங்கிவிடும்;விரைவில் திருமணம் நடைபெறும்;திருமணம் நடைபெற்ற பின்னர்,ஓராண்டுக்குள் தம்பதியாக வருகை தர வேண்டும்;வந்து,அருள்மிகு வைத்திய நாத சுவாமிக்கும்,அருள்மிகு மனோன்மணி அன்னைக்கும் (மனதார) மனதார நன்றி தெரிவிக்க வேண்டும்;

ஸர்ப்ப தோஷம் நீங்கிட


ஸர்ப்ப தோஷம் நீங்கிட

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் யாரும் காரணம் கிடையாது;எந்த கடவுளும் காரணம் கிடையாது;நீங்கள் மட்டுமே காரணம்! போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளீர்கள்;

1960க்குப் பிறகு 1000 க்கு 125 மனிதப் பிறப்புகளும்

1980 க்குப் பிறகு 1000 க்கு 250 மனிதப் பிறப்புகளும்

2000 க்குப் பிறகு 1000 க்கு 750 மனிதப் பிறப்புகளும் 

ஸர்ப்ப தோஷத்துடன் தான் பிறக்கின்றார்கள்;லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால்,அவர்களுக்கு ஸர்ப்ப தோஷம் உள்ளது என்று அர்த்தம்;லக்னத்திற்கு 2 இல் ராகு அல்லது கேது இருக்கப் பிறந்தாலும் இதே ஸர்ப்ப தோஷம் தான்!

கலியுகம் செல்லச் செல்ல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை அருகிக் கொண்டே வரும்;இதனால்,சமுதாயத்தில் அமைதி சீர்குலையத் துவங்கும்;இருப்பினும் திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உருவாக வேண்டும் என்ற பூர்வபுண்ணியம்   உள்ளவர்கள் மட்டுமே வாழ்நாளில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவார்கள்;மற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வேறு மாநிலம்   அல்லது நாட்டிற்குச் சென்று விடுவர்;

ஸர்ப்ப தோஷம் தீர சுலபமாக பரிகாரத்தை பாம்பாட்டி சித்தர் தனது சீடர்களுக்குப் போதித்திருக்கின்றார்;

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு ஆயில்யம் நட்சத்திர நாளன்று செல்ல வேண்டும்;

ஆயில்யம் நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும் இராகு காலத்தில்  ஒரே நேரத்தில் ராகு கிரகத்திற்கும்,கேது கிரகத்திற்கும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும்;


பிறகு, ராகுவுக்கு கறுப்பு/நீல நிற வஸ்திரத்தையும்,கேதுவுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தையும் அணிவிக்க வேண்டும்;நிறைவாக,யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கின்றதோ,அவரது பெயர்,ஜன்ம நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்; இப்படி 16 ஆயில்யம் நட்சத்திரநாட்கள் (16 மாதங்கள்) செய்து விட்டால்,ஸர்ப்ப தோஷத்தினால் வர இருக்கும் தீமைகள்,துயரங்கள் விலகிவிடும்;


தவிர,ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஊர்/மாவட்டத்தில் இயங்கி வரும்   உழவாரப் பணி செய்யும் சிவனடியார்கள் குழுவில் நிரந்தர உறுப்பினராகிவிட வேண்டும்;உங்கள் வாழ்நாளில் குறைந்தது 108 சிவாலயங்களில் உழவாரப் பணி செய்திருக்க வேண்டும்;இதன் மூலமாக ஈசனின் அருள் கடாட்சம் கிட்டும்;

ஓம் பாம்பாட்டி சித்த குரு நமஹ

சனி+ராகு சேர்க்கையின் தீமையை விலக்கிட




                                                   சனி+ராகு சேர்க்கையின் தீமையை விலக்கிட

உங்கள் பிறந்த ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சனியுடன் ராகு சேர்ந்திருந்தால் அல்லது சனியானது திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரத்தில் நிற்கும் போது நீங்கள் பிறந்திருந்தால் தொழிலில் அடிக்கடி நிலையற்ற தன்மை இருக்கும்;வேலைக்குச் சென்றால்,ஒரு இடத்திலும் நிரந்தரமாகப் பணிபுரிய இயலாது;அசைவ உணவின் மீதும்,மது,போதைப் பொருட்கள் மீதும் நாட்டம் இருந்து கொண்டே இருக்கும்;

அதே போல,உங்களுடைய ஜாதகத்தில் ராகு கிரகம் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி என்று மூன்று நட்சத்திரங்களில் ஒன்றில் இருக்கும் போது பிறந்திருந்தாலும் இதே நிலைதான்!
ராகு மஹாதிசையோ,சனி மஹாதிசையோ உங்களுடைய இப்பிறவியில் வர வேண்டும்;அப்படி வந்தால் தான் இப்படிப்பட்ட நிலை என்று இல்லை;இப்படிப்பட்ட கிரக அமைப்பு இருந்தாலே போதும்;


இதைச் சரிசெய்ய பாம்பாட்டி சித்தர் நமக்கு ஒரு சுலபமான அபிஷேக முறையை போதித்திருக்கின்றார்; அருள்மிகு வைத்திய நாத சுவாமி என்ற பெயரில் மூலவர் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;

அங்கே ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் அபிஷேகம் நமது செலவில் செய்ய வேண்டும்;இப்படி 8 ஆயில்யம் நட்சத்திர நாட்களில் அபிசேகமும்,அர்ச்சனையும் செய்துவிட்டால்,சனி+ராகு சேர்க்கையால் விளைந்த தொழில்/வேலை நிலையற்ற தன்மை மாறிவிடும்;

இந்தப் பரிகாரம் செய்தாலும்,பரிகாரம் நிறைவு செய்த நாள் முதல் 3 ஆண்டுகள் அசைவம்,மது=இரண்டையும் கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே தாங்கள் செய்த பரிகார பூஜை பலன்களை அள்ளித் தரும்;(நிம்மதியான,ருணமற்ற வாழ்க்கை இப்பிறவி முழுவதும் கிட்டும்)

தமிழ்நாட்டில் பல ஊர்களில் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே இருக்கும் கால பைரவருக்கு அபய ஸர்ப்ப பைரவர் என்று பெயர்!


உதாரணம்:அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்;

ஓம் பாம்பாட்டி சித்தகுரு நமஹ

Friday, January 10, 2020

பல மடங்கு ஆன்மீக முன்னேற்றம் தரும் சந்திர கிரகண ஜபம்!!!



உங்களது இப்பிறவி வாழ்க்கையை தீர்மானித்தது யார் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


போன 4 ஜன்மங்களில் நீங்கள் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்பாகவே உங்களுக்கு இப்பிறவியில் இந்த வேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;இவ்வளவு வருமானமும்,சொத்துக்களும் கிடைத்திருக்கின்றன;குடும்பம்,புகழ்,தனித்திறமை அனைத்துமே போன 4 பிறவிகளில் செய்த நற்செயல்களின் தொகுப்பு மட்டுமே!

அதே போல போன 4 பிறவிகளில் நீங்கள் செய்த அடாவடிகள்,அகங்காரங்கள்,தேவையற்ற தீமைகளே இப்பிறவியில் கடன்,நோய்,எதிரி,துரோகங்கள்,வம்பு வழக்குகளாகவும்,ஏழரைச்சனியில் அனுபவிக்கும் துயரங்களாகவும்,அஷ்டமச்சனியில் கைநழுவிப் போன வாய்ப்புகளாகவும் இருக்கின்றன;


புண்ணியத்தை அதிகப்படுத்துவதில் முதலிடம் வகிப்பது அன்னதானம்,இரண்டாம் இடத்தில் இருப்பது அண்ணாமலை கிரிவலம்,மூன்றாம் இடத்தில் இருப்பது நீங்கள் தினமும் நேரம் ஒதுக்கி செய்யும் மந்திர ஜபம்! மந்திரங்களில் உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டியவை;உபதேசம் பெறாமல் ஜபிக்க வேண்டியவை என்று இரண்டு வகைகள் இருக்கின்றன;

இதில்,உபதேசம் பெறாமல் ஜபிக்கக் கூடிய மந்திரங்களையே இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்;

ஆண் எனில் 14 வயது நிறைவடைந்த பின்னரும்,பெண் எனில்,பருவம் அடைந்த பின்னரும் இந்த மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

தரையில் அமர்ந்து,அதன் மீது எந்தவித விரிப்புகளும் இல்லாமல் மந்திரம் ஜபிக்கக் கூடாது;அப்படி ஜபித்தால்,அது பூமிக்குள் போய்விடும்;அதனால்,உங்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாமல் போய்விடும்;

பழமையான கோவிலுக்குள் அமர்ந்து அல்லது நடந்தவாறு ஜபிக்கலாம்;அங்கே கருங்கல்லே விரிப்புக்கு இணையாக இருக்கிறது;வீடு,தங்கும் இடம் எனில்,பூஜை அறை அல்லது தூங்காத அறை ஒன்றைத் தேர்வு செய்து அதில் ஒரு புதிய துண்டு/விரிப்பு விரித்து அதன் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;கிழக்கு/வடக்கு அமர்ந்து ஜபிக்க வேண்டும்;விரிப்பு மீது அமர்ந்திருக்கும் போது உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;


பலர் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா?


இந்த மந்திர ஜபம் எல்லாம் தாம்பத்திய சுகத்தை நிரந்தரமாகக் கைவிட்டவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று! இது முற்றிலும் தவறு!!! இல்லறத்தில் இருந்தவாறும்,திருமணம் செய்யாத ஆணும்,பெண்ணும் கூட மந்திர ஜபம் செய்யலாம்;ஜபித்து முடிக்கும் வரை உடல் சுத்தம் அவசியம்:அவ்வளவு தான்!


எந்த ஒரு மந்திரமும் ஒரு மணி நேரம் ஜபித்துவிட்டால் மட்டுமே பலன் தரும் என்று எண்ணக் கூடாது;ஒரு லட்சம் தடவை ஜபித்த பின்னர் தான் பலன் தர ஆரம்பிக்கும்;கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து/விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வரை ஒரு மந்திரத்தை ஜபிப்பது நன்று;பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஜபிக்கக் கூடாது;


சூரிய கிரகணம் நடைபெறும் போது ஆண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;


சந்திர கிரகணம் நடைபெறும் போது பெண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமானதை ஜபிக்கலாம்;

கிரகணம் துவங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;கிரகணம் முடிவதற்கு 15 நிமிடம் முன்பாகவே ஜபத்தை முடித்துவிட வேண்டும்;கிரகணம் முடிந்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்;


இப்படிச் செய்தால் மட்டுமே மந்திர ஜபம் பலன் தரும்;
ஒரு மந்திரத்தை நமது விட்டில் 1 முறை ஜபித்தால் 10 முறை ஜபித்த பலனைத் தரும்;


பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன்  தரும்;

தமிழ் மாதப் பிறப்பு,தமிழ் வருடப் பிறப்பு அன்று ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 மடங்கு பலன் தரும்;

கடலோரம் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,1 கோடி முறை ஜபித்த பலன் தரும்;

மலை மீது ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,2 கோடி மடங்கும்,
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகண நேரத்தில் ஜபித்தால் மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை பெருக்கல் 1000 கோடி மடங்கு பலன் தரும்;


10.1.2020 வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.37 முதல் நள்ளிரவு 2.42 வரை சந்திர கிரகணம் வர இருக்கிறது;

நீங்கள் இரவு 10.47 மணி முதல் பின்னிரவு 2.32 மணி வரை பெண் தெய்வ மந்திரம் ஒன்றை ஜபிக்கலாம்;சுமார் 3 மணி நேரம் 45 நிமிடம் வரை ஜபிக்க இயலாதவர்கள்,இதற்குள் 30 நிமிடம் மட்டுமாவது ஜபிப்பது போதுமானது;


ஒரு போதும் துரோகங்களும்,எதிர்ப்புகளும் உங்களை இனிமேல் நெருங்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால்,பிரபஞ்சத்தை ஆளும் அன்னை,கருணைக் கடல் மஹாவராகியை ஜபிக்கலாம்;

ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தை இந்த 3.45 மணி நேரம் வரையிலும் ஜபிக்கலாம்;

வராகி பரணி என்ற வராகி மாலை


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

*****************************************************************************************************************************************************

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;

குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;

இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)

அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;

தீராத பிரச்சினை அல்லது கர்மவினையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்களா?

இந்த வராகி மாலையை ஒரு நாளுக்கு ஐந்து முறை வீதம் 90 நாட்கள் இடைவிடாமல் ஜபித்தால் போதுமானது;இந்த 90 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்தில் அம்பாள் சன்னதியில் ஜபிப்பது மிகவும் நன்று;இந்த 90 நாட்களும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;

இப்படி 90 நாட்கள் ஜபித்தால்,அதன் பிறகு அல்லது அந்த 90 நாட்களுக்குள் உங்கள் நீண்ட கால பிரச்சினை/கர்மவினை தீர்ந்துவிடும்; அல்லது தீர்வதற்கு வழிகிடைத்துவிடும்;

பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;

இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!

தீரவே தீராத பிரச்சினைகளைத் தீர்க்கும் வராகி ஜபம்!



தீரவே தீராத பிரச்சினைகளைத் தீர்க்கும் வராகி ஜபம்!
    
உங்களுடைய வயது ஆண் எனில் 21 நிரம்பியிருக்க வேண்டும்;பெண் எனில்,18 நிரம்பியிருக்க வேண்டும்;கண்டிப்பாக ,அசைவம் சாப்பிடுவதை கைவிட்டிருக்க வேண்டும்;மது அருந்தவே கூடாது;

இன்று 14.1.2020 செவ்வாய்க்கிழமை அன்னை மஹாவராகியின் அருளைத் தரும் தேய்பிறை பஞ்சமி திதி!!! இன்று முதல் வராகியை ஜன்மாந்திர அன்னையாக நினைக்கிறேன் என்று மனதில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்;

வராகி ஜபம் செய்வதை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிவித்துக் கொள்ளலாம்;ரகசிய வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று;’

ஒருவேளை எல்லோருக்கும் தெரியும்படியாக நீங்கள் வராகி ஜபத்தை ஆரம்பித்தால்,சில நாட்கள் மட்டுமே ஜபிப்பீர்கள்:அதன் பிறகு,ஜபிக்க முடியாது;மனிதர்களின் தீய எண்ணங்களுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது;

எப்படி ஜபிப்பது?

ஒரு புதிய துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்;அந்த துண்டு வெண்மை நிறமாக இருக்கலாம்; அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறம் நன்று;இதை ஜபத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;

இலுப்பை எண்ணெய் அல்லது கலப்படம் இல்லாத நெய்யில் தீபம் ஏற்றுங்கள்:தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும்;   பிறகு,
சந்தன வாசம் அல்லது மல்லிகைப்பூ வாசம் அல்லது சாம்பிராணி வாசம் தரும் பத்தியை பொருத்துங்கள்;

வராகி மாலையை ஜபியுங்கள்;இரவில் மட்டுமே வராகி மாலையை ஜபிக்க வேண்டும்;இரவு 7 மணி முதல் காலை 6 மணிக்குள் உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜபித்து வாருங்கள்:
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 3 ஆண்டுகள் வரை தினமும் வராகி மாலை ஜபித்து வருக!

வெகுசீக்கிரமாக உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்கள் தீர வேண்டுமா? அதற்கும் வழி இருக்கிறது;

ஒரு நாளுக்கு ஐந்து முறை வராகி மாலையை ஜபியுங்கள்;அப்படி 90 நாட்கள் ஜபியுங்கள்:உங்கள் 10 வருட,15 வருட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்;

சிலருக்கு பல முற்பிறவி கர்மவினைகள் பெருமளவு இருக்கும்;அவர்களது வாழ்க்கை மிகவும் சராசரியாக இருக்கும்;ஆனால்,நிம்மதியான,வளமான வாழ்க்கை நமக்கு கிடைக்காதா? என்று ஏங்குவோர் 91 வது நாளில் இருந்து மீண்டும் , தினமும் 5 முறை வராகி மாலையை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;

இரண்டாவது 90 நாட்கள் ஜபித்து முடித்ததும்,91 வது நாளில் மீண்டும் ஐந்து முறை வராகி மாலையை தினமும் ஜபிக்க வேண்டும்;இப்படி ஐந்து 90 நாட்கள் வரை ஜபித்து வருவதால்,அன்னை மஹாவராகியின் கருணை கிட்டிவிடும்; உங்களது நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி விடுவாள்:


தினமும் ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்துவிடுங்கள்;
ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் அன்னைக்கு படையல் வைக்கலாம்;சிகப்பு நிறக் கனிகள் வைக்கலாம்;இரவில் வைத்த படையலை காலையில் எடுத்து நீங்கள் சாப்பிடலாம்;

ஓராண்டுக்குள் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற


ஓராண்டுக்குள் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற

உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இதுவரை இருந்தாலும் சரி;இன்று  முதல் அடியோடு மாறுகிறது;அதற்குரிய வழிமுறைகளை இங்கே உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;

1.ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமி 24.7.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.55 முதல் 25.7.2020 சனிக்கிழமை மதியம் 2.37 வரை இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் அண்ணாமலைக்கு சென்று,அங்கே உண்ணாமலை சன்னதியில் அன்னையை வழிபட்டுவிட்டு,அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து அன்னையை தியானித்துவிட்டு ஒரு முறை வராகி மாலையை ஜபியுங்கள்;





2.அதன் பிறகு, தேய்பிறை பஞ்சமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;தேய்பிறை திதிகளில் செய்யப்படும் ஜபம்,கிரிவலம்,அன்னதானம் நம்முடைய கர்மவினைகளை எரித்து சாம்பலாக்கிவிடும்;

தேய்பிறை பஞ்சமி திதி வரும் நாட்களில் வராகியை முழு முதற்கடவுளாக எண்ணி பல பிறவிகளாக தவம் செய்து வரும் வராகி சித்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்:அவர்களுடைய சூட்சும வழிகாட்டுதல் கிடைக்க 36 தேய்பிறை பஞ்சமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;


விகாரி வருடத்தின் தேய்பிறை பஞ்சமி நாட்கள்:

14.1.2020 செவ்வாய் மாலை 5.45 முதல் 15.1.2020 புதன் மதியம் 3.27 வரை
13.2.2020 வியாழன்
13.3.2020 வெள்ளி மதியம் 2.26 முதல் 14.3.2020 சனி மதியம் 12.29 வரை
12.4.2020 ஞாயிறு

சார்வரி வருடத்தின் தேய்பிறை பஞ்சமி நாட்கள்:

11.5.2020 திங்கள் இரவு

10.6.2020 புதன் இரவு 11.52 வரை;

9.7.2020 வியாழன் இரவு

8.8.2020 சனி இரவு

6.9.2020 ஞாயிறு இரவு 

6.10.2020 செவ்வாய் இரவு

5.11.2020 வியாழன் இரவு

4.12.2020 வெள்ளி இரவு

3.1.2021 ஞாயிறு இரவு

1.2.2021 திங்கள் இரவு 7.55 முதல் 

3.3.2021 புதன் இரவு

1.4.2021 வியாழன் இரவு





3.ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிங்கம்புணரி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே முத்துவடுக நாதர் என்ற வராகி சித்தர் ஐக்கியமாகி இருக்கிறார்;எல்லா பவுர்ணமி இரவுகளிலும் இங்கே யார் வேண்டுமானாலும் தங்கி,நள்ளிரவு 12 மணி அபிஷேகத்தை தரிசிக்கலாம்;


சிங்கம்புணரி என்ற ஊர் சிறிய ஊர்;மதுரை மாட்டுத்தாவணியில்  இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன;90 நிமிடங்கள் பயணம் இருக்கிறது;திண்டுக்கல் டூ காரைக்கடி சாலை மார்க்கத்தில் பொன்னமராவதிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது; ஆடி மாதம் வரும் ரோகிணி நட்சத்திர தினத்தன்று வருடாந்திர குரு பூஜை விழாவும்,அன்னதானமும் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது;

பவுர்ணமி இரவில் இங்கே வந்ததும்,இங்கேயும் வராகி மாலையை ஐந்து முறை ஜபிக்க வேண்டும்;வாய் விட்டுப் பாடக் கூடாது;உதடு அசையும் விதமாக ஜபிக்கக் கூடாது;உதடு அசையாமல் ஜபித்தால் முழுப் பலனையும் பெறலாம்;


4.இந்த ஓராண்டில் ஐந்து நபர்களுக்கு வராகி ஜபத்தின் முக்கியத்துத்தை புரிய வைக்க வேண்டும்;அவர்களையும் தினமும் வராகி மாலை ஜபிக்க வைக்க வேண்டும்;அன்னை மஹாவராகிக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் இதுவும் ஒன்று;

5.இந்த ஒராண்டுக்குள் பின்வரும் வராகி கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும்;

அமாவாசை/புதன் கிழமை/பஞ்சமி திதி/சனிக்கிழமை இதில் ஏதாவது ஒரு நாளில் செல்வது நன்று;


1.மங்களமஹா காளி கோவில்,உத்திரகோச மங்கை சிவாலயம் அருகில்,இராமனாதபுரம் மாவட்டம்,

2.ப்ருஹத் வராகி சன்னதி,பெரிய கோவில்,தஞ்சாவூர்

3.அருள்மிகு அரசாலையம்மன் திருக்கோவில்,பள்ளூர்;
காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் 15 கி மீ (காஞ்சிபுரத்தில் இருந்தும் 15 கி மீ தூரம்;அரக்கோணத்தில் இருந்தும் 15 கி மீ தூரம்)


4.பாதாள வராகி கோவில்,காசி என்ற வாரணாசி  ( தினமும் காலை 4 முதல் 5.40 வரை மட்டுமே திறந்திருக்கும்).உத்திரப்பிரதேச மாநிலம்;


5.அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்,வழுவூர்.
வழி:மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ சென்று அங்கே உள்ளடங்கிய கிராமத்தில் இருக்கிறது;


இங்கே தான் அன்னை மஹாவராகி ஈசனிடம் பல வரங்களைப் பெற்றார்!!!