Sunday, January 31, 2016

தை மாத தேய்பிறை அஷ்டமி 1.2.16 திங்கள்


தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;இந்தத் தேய்பிறை அஷ்டமியானது திங்கட்கிழமையன்று வருவதால் ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;

இவர்கள் அனைவரும் 1.2.16 திங்கட்கிழமையன்று வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அடுத்த தேய்பிறை அஷ்டமி:1.3.16 செவ்வாய் மதியம் 12.34 முதல் 2.3.16 புதன் ம்தியம் 1.52 வரை அமைந்திருக்கின்றது;

செவ்வாய்க்கிழமை இராகு காலம்: மதியம் 3 மணி முதல் 4.30வரை

புதன் கிழமை இராகு காலம்:மதியம் 12 முதல் 1.30 வரை

*தேய்பிறை அஷ்டமியும் இராகு காலமும் இரண்டு நாட்களும் வருவதாலும்,இரண்டு நாட்களின் இராகு காலத்திலும் வருவதாலும் இரு நாட்களும் பைரவப் பெருமானை வழிபடலாம்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!


Friday, January 29, 2016

இந்துதர்மத்தின் ஆணிவேரான குடும்ப அமைப்பின் இன்றைய நிலையைப் பாரீர்!!!


திருமண வரன் பார்க்கும் போது:மணமகனின் வயதை விடவும்,மணமகளின் வயது குறைந்தது 4 ஆண்டுகள் குறைவாக இருக்க வேண்டும்;அதிகபட்சமாக 8 ஆண்டுகள் குறைவாக இருக்கலாம்;

கணவனின் வயதைவிடவும்,மனைவியின் வயது 3 வருடம் அல்லது 2 வருடம் அல்லது 1 வருடம் குறைவாக இருந்தால் அந்த மனைவியின் புத்திசாலித்தனம்,சிந்திக்கும் வேகம் அந்தக் கணவனைக் கட்டிப் போட்டுவிடும்;

திருமணம் ஆன முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆம்பளை அடங்குவானா?யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தம் ஆரம்பிக்கும்;

கணவனின் பெற்றோர்கள் கணவன் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே கவனிப்பார்கள்;
மனைவியின் பெற்றோர்கள் தனது மகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே உணர்வார்கள்;

வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றங்களுக்குச் சென்று பாருங்கள்;மணவிலக்கு வழக்குகளின் பின்னணி இதுவாகத் தான் இருக்கும்;

காதலித்து திருமணம் செய்தாலும் இதே நிலைமைதான்!
திருமணம் ஆன 10 ஆண்டுகளுக்குப் பிறகே,தன்னை விடவும் தனது மனைவி புத்திசாலி என்பதை ஒவ்வொரு கணவனும் உணர்கிறான்;ஆனாலும்,ஒத்துக் கொள்வதில்லை;

திருமணம் ஆன 15 ஆண்டுகளுக்குப் பிறகு,கணவனே தனது மனைவிக்கு மனைவியாகி விடுகிறான்;அதுவே குடும்ப அமைப்பின் ஆதாரம்;

எந்த ஆம்பிளையும் நான் என் பொண்டாட்டி பேச்சை மட்டும்தான் கேட்பேன் என்று சொல்வதில்லை;ஆனால்,செய்கிறார்கள்;

பி.ஈ., படித்த மாப்பிள்ளை இக்காலத்தில் பி.ஈ.,படித்த மணமகளைத்தான் எதிர்பார்க்கிறான்;இருவரும் சேர்ந்து தமது பொறியியல் பட்டப்படிப்பை வைத்துக் கொண்டு வீடா கட்டப்போகிறார்கள்?

காதலித்து கல்யாணம் செய்து,சண்டை வந்தால் இருவரின் பெற்றோர்களும் எட்டிக் கூடபார்ப்பதில்லை;

பெற்றோர்கள் வரன் பார்த்து திருமணம் செய்தாலும்,அப்போது தம்பதியினரிடையே சண்டை வந்தாலும் இருவரின் பெற்றோர்கள் எட்டிப் பார்ப்பதில்லை;

குடும்ப அமைப்பு 1980களிலேயே சிதையத் துவங்கியிருக்கின்றது;
1990களில் குடும்ப அமைப்பு பெயரளவுக்கு இருக்கிறது;
2000களில் குடும்ப அமைப்பை முகமூடியாக அணிந்து வருகின்றனர்;
2010களில் தனிக்குடும்பமும் சிதைந்து,கணவன் பணிபுரிவது ஒரிடம்;மனைவி வாழ்வது ஒரிடம்;குழந்தைகள் படிப்பது ஒரிடம் என்று ஆகிவிட்டது;


2020களில் ம் ஹீம் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை;யூகம் செய்யவும் முடியவில்லை;

Thursday, January 28, 2016

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;

குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;

இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)
அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து பாடி வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து பாடி வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து பாடி வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;

ஜின் மாந்திரீகத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!!!



 ஏனெனில்,பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;


இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!

தை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி (28.1.16 இரவு)


கடந்த மூன்று பிறவிகளில் நாம் மனிதப் பிறவி எடுத்திருக்க வேண்டும்;அப்படி மனிதப்பிறவி எடுத்து,ஒவ்வொரு பிறவியிலும்,பிறவி முழுவதும் பழுத்த சிவனடியாராக இருந்திருக்க வேண்டும்;அல்லது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்திருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே இப்பிறவியில் பைரவப்பெருமானை தொடர்ந்து வழிபட முடியும்;=இது காகபுஜண்டர் அவர்களின் வாக்கு!

கடந்த ஒன்பது பிறவிகளில்,ஒவ்வொரு பிறவியிலும் நாம் மனிதப் பிறவி எடுத்திருக்க வேண்டும்;அந்த ஒன்பது பிறவியிலும் சித்தரின் தீட்சையைப் பெற்றிருக்க வேண்டும்;அம்பாளை தனது அன்னையாக மனதில் நினைத்து அவளை ஒரு நாள் விடாமல் தியானித்திருக்க வேண்டும்;அப்படிப்பட்டவர்கள் மட்டுமே இப்பிறவியில் அன்னை அரசாலை(வராகி)யை தொடர்ந்து வழிபடமுடியும்;

இவளை வழிபட பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்;இல்லாவிடில்,சில வாரங்களோடு இந்த வழிபாட்டைத் தொடர முடியாது;

முந்தைய ஐந்து பிறவிகளில் ஒரு பிறவியிலாவது
“அம்மா! இனி எந்த ஒரு மனித பிறவி எடுத்தாலும்,நீயே என்னைப் பாதுகாக்க வேண்டும்;நீயே என்னை வழிநடத்த வேண்டும்; உன் நினைவு எனக்கு வருவதற்கு நீயே காரணமாக இருக்க வேண்டும்” என்று மனம் உருகி வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் இவளை,இந்த பிரபஞ்ச அன்னையை தினமும் வழிபட முடியும்;

பகல் பொழுது ஈசனுக்குரியது;இரவுப்பொழுது அன்னைக்குரியது;

16 தேய்பிறை பஞ்சமி திதி இரவுகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் அன்னை அரசாலை(வராகி)யைத் துதித்து வந்தால்,நமது அனைத்து மனிதப்பிறவி கர்மாக்களையும் நம்மிடம் இருந்து நீக்கிவிடுவாள்;ப்ராப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற இந்த மூன்று கர்மாக்களையும் ஒரே மூச்சில் நம்மிடம் இருந்து வீசித்தள்ளிவிடுவாள்;

அரசியலில் இருப்பவர்கள்,அரசுப்பணியில் இருப்பவர்கள்,அரசுப் பணிக்கு முயற்சி செய்பவர்கள்,அதிகாரம் நிறைந்தவர்களிடம் பணிபுரிபவர்கள் தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி இரவுகளில் இவளை இவளது பெயர்களைச் சொல்லி ஜபித்தாலே போதுமானது;நமது நியாயமான நோக்கங்களை உடனே நிறைவேற்றுவாள்;

16 தேய்பிறை பஞ்சமி இரவுகள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தாலே நமது வாழ்வு நிறைவுமிக்கதாக மாறிவிடும்;கடந்த பல நூற்றாண்டுகளாக பல லட்சக்கணக்கானவர்கள் அன்னையிடம் இப்படித்தான் வரங்கள் பெற்றார்கள்;அவளின் அருளையும் பெற்றார்கள்:

தை மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதி 28.1.16 வியாழக்கிழமை காலை 11.49 மணிக்குத் துவங்கி, 29.1.16 வெள்ளிக்கிழமை மதியம் 1.46க்கு நிறைவடைகிறது;

வியாழக்கிழமையும் தேய்பிறை பஞ்சமீயும் வருவதால்,இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை அன்னை அரசாலை(வராகி)யை ஜபிக்க ஏற்ற நேரம் ஆகும்;

உத்திரபிரதேசத்தில் வசிப்பவர்கள் காசியில் அன்னபூரணி சன்னதியில் இரவு 8 முதல் 9 மணி வரை ஜபிக்கலாம்;அல்லது கங்கைக்கரையோரத்தில் ஜபிக்கலாம்;

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே அமைந்திருக்கும் பள்ளூர் கிராமத்தில் இருக்கும் அன்னை அரசாலை சன்னதியில் வராகி மாலையை ஜபிக்கலாம்;

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் ஆதிவராகி ஆலயத்தில் இதே நேரத்தில் வராகி மாலையை ஜபிக்கலாம்;

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பெரிய கோவிலுக்குள் அமைந்திருக்கும் மஹாவராகி சன்னதியில் வராகி மாலையை ஜபிக்கலாம்;

சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் சன்னதியில் ஈசனின் சன்னதி முன்பாக 30 நிமிடமும்,அம்பாளின் சன்னதி முன்பாக 30 நிமிடமும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
மகாபலிபுரத்தில் இருந்து 20 கி.மீ.தொலைவில் (சென்னையில் இருந்து 45 கி.மீ தூரத்தில்)அமைந்திருக்கும் திருவிடந்தைப் பெருமான் ஆலயத்தில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;

திரு அண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரு அண்ணாமலை கோவிலில் அண்ணாமலை சன்னதியில் 30 நிமிடமும்,உண்ணாமுலை அம்மன் சன்னதியில் 30 நிமிடமும் ஜபிக்கலாம்;
அல்லது
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் சன்னதியில் 30 நிமிடமும்,அம்பாளின் சன்னதியில் 30 நிமிடமும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
அரித்துவராமங்கலத்தில் பாதாள வரதர் சன்னதியில் 30 நிமிடமும்(இரவு 8 முதல் 8.30 வரை);அலங்காரவல்லி சன்னதியில் 30 நிமிடமும்(இரவு 8.31 முதல் 9 வரை) வராகி மாலையை ஜபிக்கலாம்;

திருச்சி தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளித்தலையில் அமைந்திருக்கும் அருள் மிகு கடம்பவனேஸ்வரர் சன்னதியில் இரவு 8 மணி முதல் 8.30 வரையிலும்,பாலகுஜாம்பாள் சன்னதியில் இரௌவ் 8.31 முதல் 9 மணி வரையிலும் வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
அரியலூர் ஆலந்துறையார் ஆலயத்தில் ஒப்பில்லா அம்மன் சன்னதியில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திரு ஆனைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் சன்னதியில் 30 நிமிடமும்,அகிலாண்டேஸ்வரி சன்னதியில் 30 நிமிடமும் வராகி மாலையை இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஜபிக்கலாம்;

கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாக்குமரி அன்னையின் சன்னதியில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வராகி மாலையை ஜபிக்கலாம்;
அல்லது
திருப்பன்றிக்கோடு மகாதேவன் ஆலயத்தில் ஈசன் சன்னதி முன்பாக இரவு 8 முதல் 8.30 வரையிலும்,அம்பாள் சன்னதி முன்பாக இரவு 8.30 முதல் 9 வரையிலும் வராகி மாலையை ஜபிக்கலாம்;

வராகி மாலையைப் பற்றி அறியாதவர்கள்,பின்வரும் அன்னையின் 12 பெயர்களை ஜபித்தாலும் போதுமானது;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

ஒருவேளை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நகரைத்தவிர,பிற ஊர்களில் வசிப்பவர்கள் அவர்களது ஊர்களில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஜபிக்கலாம்;

அதுவும் செல்ல இயலாதவர்கள் அவரவர் வீட்டுப் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;

தமிழ்நாட்டிற்கு வெளியே பாரததேசம் முழுவதும் மற்றும் தொலைதூர தேசங்களில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளில் அன்னையை வழிபடத் துவங்கலாம்;

 இன்று இரவு 8 முதல் 9 மணி வரை குரு ஒரையாக இருப்பதால்,வராகி மாலையை 5 முறை ஜபிக்கவும்;

ஈசன் சன்னதியின் முன்பாக மூன்று முறையும்,அம்பாள் சன்னதி முன்பாக இரண்டு முறையும் ஜபிக்கவும்;

வீட்டில் ஜபித்தாலும் வராகி மாலையை ஐந்து முறை ஜபிக்கவும்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்


Saturday, January 23, 2016

நம் ஒவ்வொருவருக்கும் உடனடித்தேவை:தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்தி;(வெறும் தெய்வபக்தி அல்ல!!!)


உலகத்திலேயே மிகப் பெரிய குடும்பம் நமது பாரத நாடுதான்;சிறு சிறு சச்சரவுகள் பல நூற்றாண்டுகளாக இங்கே இருக்கத்தான் செய்கின்றன;

இந்த சிறு சிறு சச்சரவுகளைப் பயன்படுத்தி,வருமானமும்,கொள்ளை லாபமும் பார்ப்பவை வெளிநாட்டு நிறுவனங்களே!

இந்த வரிகளில் மறைந்திருக்கும் உண்மையை விவரிக்கும் திரைப்படங்கள் பேராண்மை,லிங்கா,பூலோகம்

பின் வரும் நூல்களை வாசித்தப் பின்னர் இந்த திரைப்படங்களை வாசித்தால் நாம் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்!!! என்பதை நம் ஒவ்வொருவருமே உணரலாம்;

1.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ
2.வந்தார்கள் வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுர வெளியீடு)
3.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடு
4.திராவிடத்தால் வீழ்ந்தோம்?=குமரிப்பதிப்பகம்,எண்;8 நீலா தெற்கு வீதி,நாகப்பட்டிணம்
5.ஸ்ரீரங்கன் உலா
6.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=விநாயக தாமோதர சாவர்க்கர்(தற்போது வெளியிடப் படவில்லை;நூலகங்களில் தேடவும்)
7.A Beautiful Tree
8.உப்புவேலி



ஜெய் ஹிந்த்