Wednesday, May 29, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1.6.13சனிக்கிழமை) வழிபாடு!!!

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;




பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.


17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

30.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

31.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=30.6.13  ஞாயிற்றுகிழமை முழுவதும்   அமைந்திருக்கிறது.(ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை!!!)


ஓம் சிவசிவ ஓம்

Friday, May 24, 2013

நோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமையும்!!!



எனது நண்பரின் அப்பா தினமும் அவர் வாழ்ந்து வந்த ஊரில் சிவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்;சிவாலயம் சென்று மூலவரின் முன்பாக அமர்ந்து குறிப்பிட்ட தேவாரப் பதிகங்களைப் பாடுவார்;இந்தப் பழக்கத்தை அவருடைய அப்பா சுமாராக ஐம்பது ஆண்டுகளாகச் செய்துவர,அந்த பழக்கம் இவருக்கும் வந்துவிட்டது.

எனது நண்பரின் அப்பாவுக்கு ஜோதிடத்தில் அளவற்ற ஆர்வமுண்டு;ஜோதிடத்தை அவர் தொழிலாகச் செய்யாவிட்டாலும்,பொழுதுபோக்காக பல ஆராய்ச்சிகள் செய்து பலருக்கு முக்கியமான எதிர்காலச் சம்பவங்களை கணித்துச் சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்டவருக்கு தனது மரணம் எப்படி வரும்? என்பதை ஆராய்ந்து சளியினால் தனக்கு  வரும் என்பதைக்கண்டறிந்திருக்கிறார்.

கூடவே தனது நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டத்தில் எப்படியெல்லாம் மரணம் வருகிறது? என்பதையும் சில ஆண்டுகளாக ஆராய்ந்திருக்கிறார்.அதன் மூலமாக அவர் எடுத்த முடிவு என்னவெனில்,சளியின் வேதனையால் தனது உயிர் பிரியக்கூடாது என்று உறுதிபூண்டிருக்கிறார்.அவரது ஜனன ஜாதக கிரகநிலையும் அதற்கு துணைபுரிந்திருக்கிறது.

அது தொடர்பாக தேவாரப்பாடல் ஏதும் உள்ளதா? என்பதை ஆராயும்போது அதற்கும் ஒரு பதிகம் இருப்பதை அறிந்தார்;அந்தப்பதிகத்தை பல சிவனடியார்களிடம் கேட்டு அது சளியினால் மரணம் வராமல் இயற்கையாகவே வர வைக்கும் பதிகம் தான் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்.
அந்த பதிகத்தை தினமும் அவர் பாடிக் கொண்டே வந்ததால்,அவரது மரணம் சளியினால் வராமல் இயற்கையான முறையில் வந்திருக்கிறது.இது தொடர்பாக தனது மகனுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.அவரது மகனும்,தனது அப்பாவின் மரணத்துக்குப் பிறகு மீடியம் மூலமாக அந்தப் பதிகத்தின் ‘சக்தியை’ உணர்ந்திருக்கிறார்.சைவத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது.கலியுக வேகத்தில் அது எல்லோருக்கும் பரவ வில்லை;


திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய தேவாரத்தில் ஆறாம் திருமுறை திருத்தாண்டகத்தில் திருக்கன்றாப்பூர் பகுதியில் ஏழாவது பாடலாக பாடியிருக்கிறார்.

இந்தப்பதிகத்தை வயது முதிர்ந்தவர்கள் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் இருபத்தேழு முறை தமது வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் பாட வேண்டும்.


ஐயினால் மிடறைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி விடுவதன்முன் மதியஞ்சூடும்
ஐயனார்க் காளாகி அன்புமிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே


*உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும்* என்பது திருமுறைகளில் புதைந்திருக்கும் சைவ ரகசியம் ஆகும்.

ஓம்சிவசிவஓம்

Thursday, May 23, 2013

பைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச்சி!!!



ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மனமகிழ்ச்சியைத் தருபவர் குருபகவான் ஆவார்.மனித உடலில் இருதயத்திற்கு அதிபதியான அவர் முழுச் சுபக் கிரகமாகத் திகழ்கிறார்.ஒருராசியைக் கடக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார் குருபகவான்!!! மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களான வீடு/வேலை/தொழில் மாற்றம், திருமணம்,குழந்தைப்பிறப்பு,கடன் தீரல்,வராக்கடன் வசூலாகுதல்,சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது கட்டிக் குடியேறுதல்,தங்க நகை சேமிப்பு,பணச் சேமிப்பு,கஷ்டங்களிலிருந்து மீள சரியான ஜோதிடரை சந்தித்தல் போன்றவைகளுக்குக் காரகத்துவம் குரு பகவானின் பொறுப்பில் இருக்கிறது.
சனிபகவானும்,குருபகவானும் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை மேஷராசியில் முதல் நட்சத்திரமான அசுபதி/அஸ்வினியின் சந்தித்துக் கொள்கின்றனர்.இந்த சந்திப்பின் அடிப்படையிலேயே தமிழ் வருடங்கள் 60 என்று நமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.


28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று இரவு மணி 9.15க்கு குருபகவான் ரிஷபராசியின் இறுதி முனையான மிருகசீரிடம் 2 ஆம் பாதத்தில் இருந்து மிதுனராசியின் ஆரம்ப முனையான மிருகசீரிடம் 3 ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்.மிதுனராசியை 12.6.14 வரை கடந்து சென்று 13.6.14 அன்று கடகராசிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில்,13.6.14 அன்று குருபகவான் உச்சமடைய இருக்கிறார்.இதன் மூலம் பொருளாதாரரீதியான உயர்வுகள் ஒவ்வொரு இந்தியர்களிடமும் ஏற்பட இருக்கின்றன.
28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குருபெயர்ச்சி ஆவதால்,பூமியில் நிலம் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.மனதாலும்,ஐம்புலன்களாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தேடல் உள்ளவர்களுக்கு இந்த ஒரு வருடம் சிக்கல்கள் நிறைந்த வருடமாக அமையும்.
மேலும்,ஜோதிடப்படி இந்த குருப்பெயர்ச்சி ஏழரைச்சனியில் ஜன்மச்சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு மகத்தான நிம்மதியையும்,பணரீதியான/மனரீதியான/மணரீதியான/குடும்பம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு கட்டப் போகிறது.எழுபது சதவீத கஷ்டங்கள் நீங்க இருக்கின்றன.

ரிஷபம்,கடகம்,சிம்மம்,தனுசு,கும்ப ராசிக்காரர்களுக்கு குருவால் கோடி நன்மைகள் கிடைக்க இருக்கின்றன.
மேஷம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,மீனராசியினருக்கு இதுவரை குருபகவானால் கிடைத்துவந்த நற்பலன்கள் குறையத்துவங்கியிருக்கும்.



உலகத்தின் முதல் விநாயகர் ஆலயமான பிள்ளையார் பட்டிக்கு 28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செல்ல வேண்டும்.அங்கே முழுமுதற்கடவுளாக வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு அந்த கோவில் சம்பிராதயப்படி பூஜை செய்ய வேண்டும்;பூஜையை முடித்துவிட்டு,அந்த ஆலய வளாகத்தினுள் அமைந்திருகும் குபேர லட்சுமி பைரவப்பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்;பிறகு,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை அந்தக் கணத்தில் ஜபிக்கலாம்)
பிறகு கோவிலுக்கு வெளியே ஐந்து சாதுக்களுக்கு ஐந்து இட்லி+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியுடன் தானம் செய்யவேண்டும்.

இவ்வாறு தானம் செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டிற்கும் செல்லாமலும் நமது இருப்பிடத்தைச் சென்றடைய வேண்டும்.
28.5.13 செவ்வாய்க்கிழமை காலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் அல்லது மதியம் பனிரெண்டு மணி முதல் ஒரு மணிக்குள் அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் மேலே கூறிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

தங்களது தினசரி வாழ்க்கையில் கடுமையான சிக்கல்கள் உள்ளவர்கள்,பலவிதமான எதிர்ப்புகள் உள்ளவர்கள்,தேவையே இல்லாமல் கோர்ட் கேஸ் என்று அலைபவர்கள் இந்த செவ்வாய்க்கிழமை துவங்கி தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு பிள்ளையார்பட்டிக்குச் சென்று இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.28.5.13 அன்று மட்டுமே குபேர லட்சுமி பைரவபெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்.மற்ற செவ்வாய்க்கிழமைகளில் அதற்குப்பதிலாக வழக்கமான செவ்வரளிமாலையை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு செய்து முடித்தால்,முடித்த 90 நாட்களுக்குள் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள்,சிக்கல்கள்,பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.

அடுத்த ஏழு செவ்வாய்க்கிழமைகள்:
4/6/2013
11/6/2013
18/6/2013
25/6/2013
2/7/2013
9/7/2013

ஓம்சிவசிவஓம்

Sunday, May 12, 2013

அட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வேண்டியது என்னென்ன?







ஒவ்வொரு தமிழ் வருடமும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய த்ருதியை என்று அழைக்கப்படுகிறது.அட்சய என்றால் “முடிவில்லாமல் வளர்ந்து வரும்” என்று அர்த்தம்.இதை இன்றைய வணிகர்கள் வர்த்தகமயமாக்கிவிட்டனர்.இந்த திருதியையை நமது முன்னோர்கள் தமது தபோபலத்தால் கண்டறிந்தது எதற்குத் தெரியுமா? கலியுகத்தில் வாழும் மக்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காகத்தான்!


இந்த நன்னாளில் நாம் செய்யும் ஒரு சிறு புண்ணியச் செயலும் நமது தலைவிதியில் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும்.ஆமாம்! நீங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து,பல சில காரணங்களால் அடிக்கடி பல சில வாரங்கள்/மாதங்கள் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அது பற்றி சிறிதும் கவலையில்லை;அவ்வாறு ஜபிக்க முடியாதவர்கள் இந்த நன்னாளில்(13/5/13 திங்கள்) காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது குரு ஓரை காலங்களான காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை அல்லது மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை அல்லது இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரையிலான நேரத்தில் =
மேலே கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைச் செய்யலாம்;


மிக மிக மிக முக்கியமானது எதுவெனில்,13/5/13 திங்கட்கிழமை காலை ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அன்னதானம் அல்லது பழங்களுடன் கொஞ்சம் இனிப்புகளும் வழங்குவதே அட்சய திருதியை அன்று நாம் செய்யும் மகத்தான புண்ணியம் ஆகும்.மாநகரங்கள்,தொலைதூர நாடுகளில் வசிப்பவர்கள் அனாதை இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.


செய்வோமா?
ஓம்சிவசிவஓம்

ஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்!!!

நன்றி:நமது ஆன்மீகக்கடல் வாசகர்!!!

Friday, May 10, 2013

பிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங்க வழிபாடு!!!



சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கியவாறு இருபத்தேழு நட்சத்திரங்களும் சிவலிங்க வடிவில் அமைந்திருக்கின்றன;தெற்கு நோக்கி  அரிய பைரவர் அருள்பாலிக்கிறார்.பல சித்தர்கள்,மகான்கள் ஒவ்வொரு யுகத்திலும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்;சில மகான்கள் இங்கேயே சிவசமாதி(ஜீவ சமாதி) ஆகியிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.தற்போதும் பல மகான்கள்,சித்தர்கள் சாதாரண மனித வடிவில் இங்கே வந்து வழிபாடு செய்வதாக இங்கே வசிப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


கர்மவினைகளாலோ,பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர  ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக ஒரு எளிய சுயபரிகாரத்தை வழங்கியிருக்கிறார்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் இந்த சுயபரிகாரம் கைகொடுக்கும்.


இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர்,கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;நமது பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை/இருமுறை வரும்;மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.


நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்;சில மாதங்களில் இரண்டு முறை வரும்.அதற்கு மேல் வராது.நமது நட்சத்திரம் வரும் நாளானது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.அதாவது பூராடம் நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் எனில்,இன்று காலையில் இருந்து நாளை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;இன்று மதியம் ஆரம்பித்து,நாளை மதியம் வரை இருக்கும்;அல்லது இன்று மாலை ஆரம்பித்து நாளை மாலை வரை  இருக்கலாம்.

எப்படி இருந்தாலும்,நமது நட்சத்திரம் இருக்கும் நாளில்,நமக்கு வசதியான நேரத்தில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால்,ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.பூசாரிக்கு மனதார நம்மால் முடிந்த தட்சிணையைத் தர வேண்டும்;(குறைந்தது ரூ.51/-)அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்;(பூசாரியிடம் சொல்லியும் அந்த பாலுடன் சேர்த்து அபிஷேகம் செய்ய வைக்கலாம்)அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.அபிஷேகம் முடிந்தப் பின்னர்,நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.பிறகு,நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.(வேறு எந்தக் கோவிலுக்கும் போகக் கூடாது)


இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல்(சகுனத் தடையில் சிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்!) வழிபாடு செய்ய வேண்டும்.செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிட்ட ஆரம்பிக்கும்.


நாம் வாழும் கலியுகத்தில் பொறாமை யார் படுவார்கள் என்று எவருக்குமே தெரியாது;எனவே,இந்த வழிபாட்டை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி,அவர்களையும் அழைத்துச் சென்று அவர்களையும் செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் மட்டும் செய்யுங்கள்.இவ்வாறு வழிபாடு செய்வதை பரம ரகசியமாக செய்து முடித்துவிடுங்கள்;செய்து முடித்தப் பின்னரும்,எவரிடமும் சொல்லாதீர்கள்;நீங்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறுங்கள்;
மேலும்,இந்த ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;நம்மால் ஆன பொருள் உதவி,பண உதவி,உழவாரப்பணி செய்வது மிகவும் அவசியம்.





ஓம்சிவசிவஓம்

ருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்!!!





ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்திலும் லக்னத்துக்கு ஆறாம் இடம் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ருணம் பற்றி விவரிக்கும்;எட்டாமிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய மிகப் பெரிய வீழ்ச்சி அல்லது எழுச்சியைப் பற்றி சொல்லும்;பனிரெண்டாம் இடம் ஒருவரின் வாழ்க்கையில் எதையெல்லாம் விரையம் செய்வார் என்பதைப் பற்றி கூறும்;இந்த மூன்று இடங்களைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்தால் ஒருவரின் வாழ்க்கையின் ரிஸ்க்குகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்கலாம்.ஆனால்,வேகமான வாழ்க்கையில் அதைப்பற்றியெல்லாம் ஆராய எத்தனை ஜோதிடர்களுக்கு நேரம் இருக்கும்? அல்லது நமக்குத் தான் அதைப் பற்றி அறிந்து அதற்கு ஏற்றாற் போல நமது வாழ்க்கையை ‘வடிவமைத்து’க் கொள்ளத் தான் நேரம் இருக்கிறதா?

எனது உறவினரின் சோகம் வினோதமானது;அவர் விற்ற வாகனம்  மூன்றே ஆண்டுகளில் பலர் கைமாறிச் சென்று விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான போது அந்த வாகனத்தை விலைக்கு வாங்கியவர்,தனது பெயரில் வாகனத்தை மாற்றியிருக்கவில்லை;எனது உறவினரின் பெயரிலேயே (சுமார் ஏழு பேர்களின் கை மாறியப் பின்னரும்)இருந்திருக்கிறது;விபத்தின் போது வாகனத்துக்குரியவர் எஸ்கேப்!!! வழக்கோ எனது உறவினரின் மீது எங்கிருந்தோ பாய்ந்தது;இதுவும் எடுத்து வைத்தும்,கொடுக்காமல் ‘சிக்க’ வைத்திருக்கிறது என்ற பழமொழிக்கு உதாரணமாகச் சொல்லலாமா?

தனது வருமானத்துக்குள் வாழ்க்கையை நகர்த்தத் தெரியாதவர்கள்,கடன் என்ற புதைகுழியில் சிக்கிக்கொள்கிறார்கள்;அல்லது சிக்கனமான கணவனுக்கு ஊதாரி மனைவியோ அல்லது சிக்கனமான மனைவிக்கு ஊதாரி கணவனோ அமைவதும் தலைவிதி.சிலருக்கு கடனை உருவாக்கிட அல்லது பல ஆண்டுகளாக குருவி போல உழைத்து சேமித்ததை அழிக்க ஒரே ஒரு வாரிசு போதும்;

ஆக,எப்படிப் பார்த்தாலும் நமது வாழ்க்கையில் ஏற்படும் கடன் அல்லது ருணம் அல்லது சிக்கல்கள் நமது முற்பிறவிகளில் செய்தவையே திரும்பவருகின்றன;அதுவும் எப்போது வருகின்றன தெரியுமா?


ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி காலத்தில் வருகின்றன;பலருக்கு ஏழரைச்சனி ,அஷ்டமச்சனி இல்லாத காலத்திலும் கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் தொல்லை ஏற்படுவதுண்டு;அவர்களுக்கு லக்னத்துக்கு ஆறாமிடத்து/எட்டாமிடத்து/பனிரெண்டாமிடத்து அதிபதியின் திசை வந்து,லக்னாதிபதி பலமிழந்து இருந்தால்,அம்போதான்!
ஆனால்,நாம் ‘ கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனையைக் கொடுக்கிறாய்?’ என்று அவர் மீது பழிபோடுகிறோம்.நாம் கற்ற கல்வி மட்டும் நமது ஏழு பிறவிகளுக்கு கூட வருகிறது என்று நினைக்கக் கூடாது;நமது பிறவி சுபாவமும்,பூர்வபுண்ணியமும்,பூர்வபாவமும் தான்!
இதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா? 


செவ்வாய்க்கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதிக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அபிஷேகத்தின் முடிவில் இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யும் போது,இடையில் சகுனத் தடை வரத்தான் செய்யும்.அவ்வாறு வந்தாலும்,விட்டுவிட்டாவது ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு மட்டும் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதை எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும்,எதற்காக இந்த பரிகாரம் செய்கிறோம்? என்பதை மட்டுமல்ல;இந்த பரிகாரம் செய்வதையே பகிர்ந்து கொள்ளாமல் செய்தால் மட்டுமே நமது நீண்டகால ருணம்/நோய் தீரும்.




ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ

Tuesday, May 7, 2013

ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)பயன்படுத்துவோம்! பைரவப் பெருமானின் அருளை அள்ளுவோம்!!!






பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதமும்,பரணி நட்சத்திரமும்,தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்த நன்னாளில் பிரபஞ்சத்தின் தலைவனாகிய சதாசிவன் என்ற ஆதிசிவனின் நெற்றியில் இருந்து ஸ்ரீகால பைரவப் பெருமான் உதயமானார்; ஆதிசிவனின் பிள்ளைகளாக விநாயகர்,முருகக் கடவுள்,ஐயப்பன் இருக்கிறார்கள்;ஆனால்,ஆதிசிவனின் அவதாரமாக பைரவப் பெருமானும்,வீரபத்திரரும் இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் பைரவரையும்,வீரபத்திரரையும் ஆதிசிவனின் மகனாகவே பேசவும்,எழுதவும் செய்கிறார்கள்.அது பொருத்தமானது அல்ல;

பரணி நட்சத்திரத்தில் பவுர்ணமி தோன்றுவதில்லை;அதனால்,ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியை பைரவ ஜன்ம அஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.

அதே போல,சித்திரை மாதத்து அமாவாசையானது பெரும்பாலும் பரணி நட்சத்திரத்திலேயே வரும்;சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பரணி நட்சத்திரத்தில் நமது ஆத்மாக் காரனாகிய சூரியனும்(தமிழில் ரவி என்று பெயர்!),நமது மனக் காரகாகிய சந்திரனும்(தமிழில் சந்திரனுக்கு மதி என்று பெயர்!!) ஒன்று சேருகின்றனர்.அப்போது பைரவசக்தி பூமிக்கு அளவற்ற விதத்தில் வெளிவரும்;
இந்த விஜயவருடத்தின் சித்திரை மாதத்து அமாவாசையானது 9.5.2013 வியாழக்கிழமை வருகிறது.இந்த நன்னாளில் நாம்
அல்லது

2.நமது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து வியாழக்கிழமை வரும் இராகு கால நேரமான மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்யலாம்.அபிஷேகப் பொருட்கள்:அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,செவ்வரளி மாலை மற்றும் உதிரிப்பூக்கள்,பால்.நிவேதனாமாக அவல் பாயாசத்தைப் படைக்கலாம்;
அவ்வாறு அபிசேகம் செய்யும் போது கூட்டாக ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஸ்ரீகால பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை பாடலாம்;தனியாளாகச் செல்லும் நிலை வந்தால் மனதுக்குள் ஜபிக்கலாம்;
அல்லது
3.அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை ஸ்ரீகால பைரவர் சன்னதியில் அமர்ந்து எழுதலாம்;(எழுதும் போது என்ன உணர்வு வந்தது என்பதை எமக்கு மின் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கவும்)
அல்லது
4.கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே அல்லது தங்குமிடத்திலேயே கால பைரவர் 108 போற்றி அல்லது கால பைரவர் 1008 போற்றியை எழுதலாம்;எழுதிவிட்டு நமது வீட்டு பூஜை அறையில் அல்லது பணப் பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
5.இந்தப் பதிவையும்,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டு சுமாராக 108 ஜெராக்ஸ் எடுத்து உங்கள் நட்பு மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களிடம் விநியோகம் செய்யலாம்.
மேலும்
உங்கள் குழந்தைகள் என்ன வயதாக இருந்தாலும் சரி! அவர்களை 9.5.2013 வியாழன் மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்க வைத்து ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை வீட்டில் எழுத வைக்கலாம்.
9.5.13க்குப் பிறகு, இதே போல ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும்.ஏழாவது பரணி நட்சத்திரம் வரும் நாளில் அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம் சென்று காலபைரவபெருமானுக்கு அவல் பாயாசத்தை படையலாக வைத்து கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.செய்த பின்னர்,அவல் பாயாசத்தை அங்கே வரும் பக்தர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதில் ஒருபகுதியைச் சாப்பிடலாம்;
இந்த ஆண்டின் பரணி நட்சத்திரம் வரும் நாட்களும்,அந்த நாளில் ராகு கால நேரமும்(அடைப்புக்குறிக்குள்);அயல்நாடுகளில் இருப்பவர்கள்,இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்குமான வித்தியாசத்தைப் பின்பற்ற வேண்டும்;
பல ஆலயங்களில் நாம் குறிப்பிடும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்கு பூஜை செய்ய அனுமதிப்பதில்லை;அந்த சூழ்நிலை வந்தால் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் பூஜை செய்யலாம்;அல்லது நமது குலதெய்வம் கோவிலில்(கால பைரவர் இருந்தால்!!!) இந்த தேதிகளையும்,நேரங்களையும் முழுமையாகப்பின்பற்றலாம்.

5.6.13 புதன் மதியம் 2.30 முதல் 6.6.13 வியாழன் மாலை 4.12 வரை;(வியாழன் மதியம் 1.30 முதல் 3 வரை)

3.7.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

30.7.13 செவ்வாய்;(மாலை 3 முதல் 4.30 வரை)

26.8.13 திங்கள் மதியம் 1.01 முதல் 27.8.13 செவ்வாய் மதியம் 2.23 வரை;(இராகு காலம் வர வில்லை)
23.9.13 திங்கள்(காலை 7.30 முதல் 9 வரை)

20.10.13 ஞாயிறு(மாலை 4.30 முதல் 6 வரை)

16.11.13 சனி காலை 11.19 முதல் 17.11.13 ஞாயிறு காலை 12.21 வரை(இதில் இராகு காலம் வரவில்லை;ஆனால்,ஞாயிற்றுக்கிழமையன்று கார்த்திகை மாத முதல் நாளும்,பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது;எனவே,காலை ஐந்து முதல் ஏழுக்குள் வரும் நேரத்தைப் பயன்படுத்துவது உத்தமம்)

14.12.13 சனி(காலை 9 முதல் 10.30 வரை)

10.1.14 வெள்ளி(காலை 10.30 முதல் 12 வரை)

6.2.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

6.3.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

2.4.14 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.அதற்கு மேல் செய்யக் கூடாது.இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலமாக நமது வாழ்நாள் முழுவதும் பைரவரின் பாதுகாப்பு கிட்டும்;பைரவரின் அருள் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
தினசரி ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,மாதத்திற்கு ஒரு நாள் வீதம் ஏழு நாட்கள் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுப்பு விட்டு,இந்த வழிபாடு செய்து வரலாம்;


ஓம்சிவசிவஓம்

இவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்:நன்றி தினமணி



Monday, May 6, 2013

ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!(முழுமையான வடிவில்)





உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக  தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
நம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால  யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது!
எனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்!!!

ஓம் கால பைரவனே போற்றி
ஓம் லோகவல்லபனே போற்றி                                     ஓம் காளிநாயகனே போற்றி
ஓம் காளிப்பிரியனே போற்றி
ஓம் வெள்ளி உடையோனே போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் தீர்த்தராசனே போற்றி
ஓம் புனிதமானவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் தனம் தருபவனே போற்றி                             10

ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
ஓம் புகழ் உடையோரே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் பவ்யப்ரியனே போற்றி
ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
ஓம் மல்லப்ரியனே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
ஓம் வனங்களின் தலைவனே போற்றி                       20

ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சதியின் கேசவனே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் எங்கள் நாயகனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் காளிநாதனே போற்றி
ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி                                  30

ஓம் தினகரனே போற்றி
ஓம் தயையே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் பூதவிநாசகனே போற்றி
ஓம் வடிவே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி                            40

ஓம் அமரப்பிரபுவே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
ஓம் பிரஜாபதியே போற்றி
ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
ஓம் சூர்யபதியே போற்றி
ஓம் ஆராதிப்பவனே போற்றி
ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
ஓம் காளிகாதனே போற்றி
ஓம் கோரநாதனே போற்றி                                50

ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
ஓம் மகா தபசியே போற்றி
ஓம் ஒளிச்சுடரே போற்றி
ஓம் தயை உடையாய் போற்றி
ஓம் தனேஸ்வரனே போற்றி
ஓம் நதிகளின் தலைவனே போற்றி
ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதபதியே போற்றி                                   60

ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் மல்லகாய போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மகா வீர்யனே போற்றி
ஓம் வனப்பிரபுவே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் ரவிக்கதிரே போற்றி
ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி                                 70

ஓம் திவாகரனே போற்றி
ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
ஓம் கனாந்தகனே போற்றி
ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் செல்வக் கோடானே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் மந்திரவடிவானவனே போற்றி                         80

ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பலம் உடையவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் மேதாப் பிரியனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
ஓம் யாமம் ஆனவனே போற்றி
ஓம் இலக்குமீதரனே போற்றி
ஓம் உக்கிரமானவனே போற்றி
ஓம் சுராதீசனே போற்றி                                 90

ஓம் சேவாப் பிரியனே போற்றி
ஓம் சாகரனே போற்றி
ஓம் நாதப்பிரியனே போற்றி
ஓம் வீரவந்தியனே போற்றி
ஓம் காளியின் தலைவனே போற்றி
ஓம் கனமூர்த்தியே போற்றி
ஓம் சனகனே போற்றி
ஓம் யாக புருசனே போற்றி
ஓம் திடமானவனே போற்றி
ஓம் தீட்சாகரனே போற்றி                             100

ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
ஓம் தீரத்தலைவனே போற்றி
ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
ஓம் பார்வதி நாதனே போற்றி
ஓம் பலபத்ரனே போற்றி
ஓம் பூதேசனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் மந்திரமே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சகலமும் அருள்பவனே போற்றி                   110

ஓம் சப்த வடிவமே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் குதிரை தலைவனே போற்றி
ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
ஓம் தேவ முதல்வனே போற்றி
ஓம் காளியின் தனமே போற்றி
ஓம் என்றும் இருப்பவனே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி                        120

ஓம் காப்பவனே போற்றி
ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
ஓம் திவாகரனே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
ஓம் பார்வதீ ரமணனே போற்றி
ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற்கரசே போற்றி                        130

ஓம் மேதாவியே போற்றி
ஓம் மாலதீ நாயகா போற்றி
ஓம் உமை ஒரு பாகமே போற்றி
ஓம் செல்வ நாயகனே போற்றி
ஓம் சாதனனே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
ஓம் அகர முதலானவனே போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பலிப்ரியனே போற்றி                             140

ஓம் காளி இதய ஞானமே போற்றி
ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் காப்புடையாய் போற்றி
ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
ஓம் பகலோனே போற்றி
ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் தீரருக்கு இறைவனே போற்றி
ஓம் நதீஸ்வரனே போற்றி
ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி               150

ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஆதியானவனே போற்றி
ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
ஓம் மந்தர நாயகனே போற்றி
ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
ஓம் மாயை ஆனவனே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி                 160

ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
ஓம் நான்முகன் தலைவனே போற்றி
ஓம் சராசரம் உடையவனே போற்றி
ஓம் மக்களின் தலைவனே போற்றி
ஓம் இதயநாதனே போற்றி
ஓம் தாவரம் ஆனவனே போற்றி
ஓம் தவத் தெய்வமே போற்றி
ஓம் செல்வ ஒளியோனே போற்றி                    170

ஓம் பூமிநாதனே போற்றி
ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
ஓம் மானம் உடையாய் போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
ஓம் மேன்மைக்குரியவனே போற்றி                   180

ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் வழி நடத்துபவனே போற்றி
ஓம் அழகிய வடிவானவனே போற்றி
ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
ஓம் அடியாந்த காவலனே போற்றி                    190

ஓம் மகா நாதனே போற்றி
ஓம் யமி தேவனே போற்றி
ஓம் ஓங்கியவனே போற்றி
ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் சதி நாதனே போற்றி
ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் காளிகா ரமணனே போற்றி
ஓம் கண முதல்வனே போற்றி                         200

ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
ஓம் தல சோதியே போற்றி
ஓம் செல்வ ராசனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் பாண்டவனே போற்றி
ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
ஓம் தக்கன தருபவனே போற்றி
ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
ஓம் மகேசனே போற்றி
ஓம் மனம் அருள்பவனே போற்றி                       210

ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் கொற்றக் குடையோனே போற்றி
ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
ஓம் வீரத்தலைவனே போற்றி
ஓம் நாகர் இறைவனே போற்றி
ஓம் உலகினைக் காப்பவனே போற்றி                   220

ஓம் மோகமானவனே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் மல்லனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உயிரினும் உயிரே போற்றி
ஓம் வன வடிவானவனே போற்றி
ஓம் கருணையின் கடலே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
ஓம் உடமைகள் தருபவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி                      230


ஓம் குரூரனே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி
ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
ஓம் தாமிரமே போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் விண்ணவர் தலைவனே போற்றி                    240

ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி
ஓம் பீம சேனனே போற்றி
ஓம் சற்குணனே போற்றி
ஓம் அனைத்துமானவனே போற்றி
ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனக மாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி               250

ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் தத்துவத் தலைவனே போற்றி
ஓம் குருநாதனே போற்றி
ஓம் ஈசானனே போற்றி
ஓம் காமத்தை வென்றவனே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
ஓம் வெற்றியின் காரணனே போற்றி
ஓம் ஓங்கார உருவே போற்றி
ஓம் மனத்தை வென்றவனே போற்றி                    260

ஓம் பூவடிவானவனே போற்றி
ஓம் ஸ்ரீமானே போற்றி
ஓம் தலைவனே போற்றி
ஓம் முதலோனே போற்றி
ஓம் நாகத் தலைவனே போற்றி
ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
ஓம் மஞ்சலாயனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி                 270

ஓம் ராமனே போற்றி
ஓம் வேணுப்பிரியனே போற்றி
ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி
ஓம் சச்சித்தனே போற்றி
ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
ஓம் பூதங்களின் தலைவனே போற்றி                                 ஓம் வெற்றிச் செல்வனே போற்றி
ஓம் விசிஷ்டனனே போற்றி
ஓம் ஞானமே போற்றி                                 280

ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
ஓம் டங்க நாயகனே போற்றி
ஓம் சமநிலை ஆனவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் செல்வத்தரசே போற்றி
ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி                        290

ஓம் தியானத்தின் தலைவா போற்றி
ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
ஓம் முழு முதற் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பொருளே போற்றி
ஓம் வாம வல்லபனே போற்றி
ஓம் சகல கலா வல்லபனே போற்றி
ஓம் அன்பின் ஊற்றே போற்றி
ஓம் ஏழைகளின் துணையே போற்றி
ஓம் இரக்கமிக்கோனே போற்றி                        300

ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் விருத்தனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் உயிர்களின் நாதனே போற்றி
ஓம் வேள்வித் தலைவனே போற்றி
ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
ஓம் தலத்தின் தலைவனே போற்றி
ஓம் தனஞ்சயனே போற்றி                 310

ஓம் உலகப் பிரியனே போற்றி
ஓம் பழம் பொருளே போற்றி
ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
ஓம் பலிப்பிரபுவே போற்றி
ஓம் மகத்தானவனே போற்றி
ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி
ஓம் மதுரனே போற்றி
ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
ஓம் வேள்வியின் இறைவா போற்றி
ஓம் வளங்களின் தலைவா போற்றி         320

ஓம் குளிர்ச்சியே போற்றி
ஓம் வீரத் தலைவா போற்றி
ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் சித்த ராசனே போற்றி
ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் கடலரசனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் பனிமலை அரசே போற்றி               330

ஓம் இமயத்தரசே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் மோக மூர்த்தியே போற்றி
ஓம் மானம் காப்பவனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் சய சய ஒளியே போற்றி
ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
ஓம் திருவடி முதலே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி                   340

ஓம் செல்வப்ரியனே போற்றி
ஓம் பூ அழகனே போற்றி
ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
ஓம் உயிர்களின் உயிரே போற்றி
ஓம் முக்கட் சுடரே போற்றி
ஓம் தூய சித்தமே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் மகாபலம் உடையவனே போற்றி
ஓம் தெய்வக் கடலே போற்றி
ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி         350

ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பாலனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் கபாலனே போற்றி
ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் டங்கேசனே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி
ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் செல்வம் தருபவனே போற்றி                360

ஓம் பூமியின் கேள்வனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் பக்திக்குரியவனே போற்றி
ஓம் பலிராசனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் மகேஸ்வரனே போற்றி
ஓம் மங்கள நாதனே போற்றி
ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி                                    ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி
ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி              370

ஓம் மீன் பிடித்தவனே போற்றி
ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
ஓம் தீரம் உடையவனே போற்றி
ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
ஓம் ஒளிவீசுபவனே போற்றி
ஓம் கேடகப் பிரியனே போற்றி
ஓம் வீரியனே போற்றி
ஓம் மலையைக் காத்தவனே போற்றி
ஓம் சீறும் சிவனே போற்றி
ஓம் கணங்களின் தலைவனே போற்றி               380

ஓம் குணங்களின் தலைவா போற்றி
ஓம் கணங்கள் உடையவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி             390

ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
ஓம் புலன்களை வென்றவனே போற்றி
ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் வேத மயிலே போற்றி
ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி         400

ஓம் வெற்றியின் வீரனே போற்றி
ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
ஓம் டகார வடிவமே போற்றி
ஓம் வினாயக ராசனே போற்றி
ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
ஓம் வில்லாளனே போற்றி
ஓம் ஊற்றமுடையவனே போற்றி
ஓம் நிலையான ராசியே போற்றி
ஓம் காமோதரனே போற்றி
ஓம் அருளும் அப்பனே போற்றி            410

ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிரந்தரனே போற்றி
ஓம் உடுக்கை உடையவனே போற்றி
ஓம் வசுபதியே போற்றி
ஓம் அமைதிவடிவே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி            420

ஓம் செல்வனே போற்றி
ஓம் அக்னி தேவனே போற்றி
ஓம் தூயோனே போற்றி
ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
ஓம் தலப்பிரபுவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் அக்னியே போற்றி
ஓம் தலப்புதல்வனே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி            430

ஓம் தலத்தின் நாயகனே போற்றி
ஓம் நீண்ட தோளனே போற்றி
ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
ஓம் பாரதனே போற்றி
ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
ஓம் எல்லாம் உடையவனே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி            440

ஓம் மண்ணின் நாயகனே போற்றி
ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி
ஓம் நாரதனே போற்றி
ஓம் நிலம் தருபவனே போற்றி
ஓம் பால் குணனே போற்றி
ஓம் மலை அரசன் மனமே போற்றி
ஓம் பாஞ்சாலமே போற்றி
ஓம் பலத்துக்கரசே போற்றி
ஓம் பல் குணனே போற்றி
ஓம் தவ வலி கொண்டவனே போற்றி        450

ஓம் அருள் தரும் அப்பனே  போற்றி
ஓம் பாம்பை உடையவனே போற்றி
ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
ஓம் பாலகனே போற்றி
ஓம் மலையின் அரசே போற்றி
ஓம் பலியே போற்றி
ஓம் பாம்பரசனே போற்றி
ஓம் பலிநாதனே போற்றி
ஓம் எங்களின் அன்பனே போற்றி         460

ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி
ஓம் எங்களின் அரனே போற்றி
ஓம் மகரிசியே போற்றி
ஓம் எங்களின் பெருமானே போற்றி
ஓம் வேத முடிவே போற்றி
ஓம் பீமனே போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி                   470

ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் மகரனே போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மாணிக்கமே போற்றி
ஓம் மெளனியே போற்றி
ஓம் மணிரஞ்சிதமே போற்றி
ஓம் மகீதரனே போற்றி
ஓம்  மணி ரம்மியனே போற்றி          480

ஓம் மனுப் பிரியனே போற்றி
ஓம் மகீப் பிரியனே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மனு ராசனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
ஓம் மகீ பாலனே போற்றி
ஓம் மகீசாநனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி                    490

ஓம் முக்தனே போற்றி
ஓம் ரமாநாதனே போற்றி
ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் முகுந்தனே போற்றி
ஓம் மணி கூடனனே போற்றி
ஓம் மணிப் பிரியனே போற்றி
ஓம் ரமாபதியே போற்றி                         500

ஓம் பரஞான வடிவே போற்றி
ஓம் ரமா காந்தனே போற்றி
ஓம் தவ வலிவுடையோனே போற்றி                                ஓம் வணங்கப்படுபவனே போற்றி                                  ஓம் ரமா தீசனே போற்றி
ஓம் நான்மறை முதல்வா போற்றி
ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் எங்களின் துணைவா போற்றி               510

ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
ஓம் ராம வல்லபனே போற்றி
ஓம் குளிரின் சுகமே போற்றி
ஓம் வன நாயகனே போற்றி
ஓம் சித்தி கரனே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் சீலம் உடையவனே போற்றி
ஓம் அமுதமே போற்றி
ஓம் சனி பகவானே போற்றி              520

ஓம் நண்பனே போற்றி
ஓம் அருள்பவனே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சத்பதியே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சீலனே போற்றி
ஓம் குணாதரனே போற்றி
ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
ஓம் நெறியே போற்றி                                 530

ஓம் எண்ணமே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் வேதியே போற்றி
ஓம் தேவர்களின் இறைவா போற்றி
ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி
ஓம் சதீஸ்வரனே போற்றி                                540

ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
ஓம் சூரசேனனே போற்றி
ஓம் அமுதக் கடலே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கோவே போற்றி
ஓம் எந்தாய் போற்றி
ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் அரசனே போற்றி                                  550

ஓம் காபாலியே போற்றி
ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
ஓம் கமல நாதனே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தர்க்கமே போற்றி
ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மகத அரசனே போற்றி
ஓம் நதி நாயகனே போற்றி
ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி             560

ஓம் மலர் போன்றவனே போற்றி
ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் சிவசூரியனே போற்றி
ஓம் சோதிப் பரனே போற்றி
ஓம் சய சய போற்றி
ஓம் புதுமையோனே போற்றி                            570

ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
ஓம் தர்கவல்லபனே போற்றி
ஓம் புதனுக்கு அரசே போற்றி
ஓம் இலக்குமயோனே போற்றி
ஓம் வாசல் காப்போனே போற்றி
ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
ஓம் நற்குணம் உடையவனே போற்றி
ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி                   580

ஓம் குரு பைரவனே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
ஓம் நிழலே போற்றி
ஓம் கால தேவனே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
ஓம் முகிலே போற்றி                             590

ஓம் தேவே போற்றி
ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
ஓம் புதன் ஆவியே போற்றி
ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
ஓம் தேவியின் புதல்வனே போற்றி
ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
ஓம் யாவும் ஆனவனே போற்றி
ஓம் மாம்பூ உடையோனே போற்றி
ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி              600

ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
ஓம் நீங்கா இறைவனே போற்றி
ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
ஓம் மான் ஏந்தியவனே போற்றி
ஓம் கண்மணியே போற்றி
ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
ஓம் மலை அரசனே போற்றி
ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி                    610

ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
ஓம் விதர்க்கமே போற்றி
ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் இலக்குவனனே போற்றி
ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் நந்திப்பிரியனே போற்றி
ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
ஓம் மாலதீ மலரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி                  620

ஓம் கனலே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
ஓம் கடயோக வல்லவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
ஓம் அரசருக்கு அரசனே போற்றி
ஓம் குண்டலீசனே போற்றி                630

ஓம் தர்க்கசித்தனே போற்றி
ஓம் புத சித்தனே போற்றி
ஓம் இலக்கின் கட்டமே போற்றி
ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
ஓம் கேவலனே போற்றி
ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் அமுதம் அருளியவனே போற்றி
ஓம் கரும்பின் இனிப்பே போற்றி             640

ஓம் கலப்பை உடையோனே போற்றி
ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் கடலின் முத்தே போற்றி
ஓம் திகம்பரனே போற்றி
ஓம் நகப்பிரியனே போற்றி
ஓம் இடாகினி நாயகனே போற்றி
ஓம் மகாகாரனனே போற்றி
ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி                650

ஓம் புத்தியே போற்றி
ஓம் புத்தொளியோனே போற்றி
ஓம் மறைபொருளே போற்றி
ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
ஓம் மாமர வாசனனே போற்றி
ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
ஓம் அமுத அன்பனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி               660

ஓம் மேருமலையோனே போற்றி
ஓம் நன்மை செய்வோனே போற்றி
ஓம் குறைவில்லாதவனே போற்றி
ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் மகாராசனே போற்றி
ஓம் காலனை வென்றவனே போற்றி
ஓம் புதன் அன்பனே போற்றி            670

ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
ஓம் தேவியின் தொண்டனே போற்றி
ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
ஓம் மாமர வல்லபனே போற்றி
ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
ஓம் தத்துவனே  போற்றி
ஓம் நடராசனே போற்றி
ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி   680

ஓம் பார்வதியின் பாகனே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
ஓம் பூதப்படையோனே போற்றி
ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சடையாய் போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் பொருளே போற்றி                                    690

ஓம் தேவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் தாரகனே போற்றி
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் தேவி புத்ரனே போற்றி
ஓம் அமுத இனியவா போற்றி
ஒம் மணியே போற்றி
ஓம் நஞ்சுண்டோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் சதுரா போற்றி                           700

ஓம் அருமருந்தே போற்றி
ஓம் காலக் கடவுளே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் சூளாமணியே போற்றி
ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் வித்தின் வித்தே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சோமனே போற்றி
ஓம் மூவுலகாமணியே போற்றி
ஓம் கூர்வாள்படையோய் போற்றி                    710

ஓம் தாப அக்னியே போற்றி
ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் மாம்பழ அழகனே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
ஓம் அன்னவடிவே போற்றி
ஓம் தேசவிளக்கே போற்றி
ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி                      720

ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் கபாலபாணியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி
ஓம் சோமநாயகனே போற்றி
ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
ஓம் கெளரவனே போற்றி                     730

ஓம் மேன்மை ஆனவனே போற்றி
ஓம் நன்மையறிவாய் போற்றி
ஓம் மாமிசப்ரியனே போற்றி
ஓம் ஹரிநாதனே போற்றி
ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
ஓம் அரன் வடிவே போற்றி
ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
ஓம் ஈசான திசையோனே போற்றி
ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
ஓம் காபாலியே போற்றி                      740

ஓம் தேவரறியாத தேவனே போற்றி
ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
ஓம் புத நாதனே போற்றி
ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
ஓம் மரிகிதனே போற்றி
ஓம் நந்திகேச்வரனே போற்றி
ஓம் குணோபேதனே போற்றி
ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி      750

ஓம் அஷ்ட பைரவனே போற்றி
ஓம் மலையில் உள்ளவனே போற்றி
ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
ஓம் புன்சிரிப்பே போற்றி
ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் பொறுமைக்கரசே போற்றி
ஓம் மாயோனே போற்றி
ஓம் உர்வாங்கனே போற்றி                 760

ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் அதிரூபனே போற்றி
ஓம் மரீசியே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் குருப்ரியனே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
ஓம் கணங்களை உடையவனே போற்றி          770

ஓம் வார்சடை விரும்பியே போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
ஓம் அன்ன நடையோனே போற்றி
ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
ஓம் காலபுருசனே போற்றி
ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி       780

ஓம் இடாகினி இதயமே போற்றி
ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
ஓம் சுக்ரனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் வேள்விப்பொருளே போற்றி
ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி               790

ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி
ஓம் கருணைப் பார்வையனே போற்றி
ஓம் அம்பேசனனே போற்றி
ஓம் இடாகினி பாகனே போற்றி                  800

ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
ஓம் மங்கலமே போற்றி
ஓம் கோலாடைக் குழகரே போற்றி
ஓம் நரர்களின் தேவனே போற்றி
ஓம் தேவியின் பிராணனே போற்றி
ஓம் கோபவர்த்தனே போற்றி
ஓம் சகதீசனே போற்றி
ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
ஓம் மதுபாயனே போற்றி
ஓம் பொன்னே போற்றி                           810

ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
ஓம் பூதத் தலைவனே போற்றி
ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
ஓம் நொடியை அருள்பவனே போற்றி
ஓம் பொறுமையின் கலையே போற்றி
ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி            820

ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
ஓம் சோமப் பிரபையே போற்றி
ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
ஓம் மதுப்பிரியனே போற்றி
ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி            830

ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
ஓம் செந்நிறத்தோனே போற்றி
ஓம் உலகச் சுடரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
ஓம் பொறுமையே போற்றி                    840

ஓம் புதாகரனே போற்றி
ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் தேவேந்திரனே போற்றி
ஓம் நந்தனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் காரணனே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி                 850

ஓம் லயம் செய்பவனே போற்றி
ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
ஓம் நீலமே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பெளத்த காமனனே போற்றி               860

ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
ஓம் குணசிந்தனே போற்றி
ஓம் ஞானமூர்த்தியே போற்றி
ஓம் தவவலிமை உடையோய் போற்றி
ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி
ஓம் அன்ன ஒளியோனே போற்றி
ஓம் உலகத் தலைவனே போற்றி               870

ஓம் பொறுமை உடையவனே போற்றி
ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
ஓம் திசை மலைகளே போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் காமனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி       880

ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் காலங் கடந்தவனே போற்றி
ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
ஓம் மூலத்து முதலே போற்றி
ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
ஓம் பொறுமை மனமே போற்றி              890

ஓம் சூலக்கரத்தோனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் கனகச் சுடரே போற்றி
ஓம் திசைகளின் அரசனே போற்றி
ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
ஓம் குணரம்மியனே போற்றி
ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி          900

ஓம் கணங்களின் அரசே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி
ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
ஓம் முழு முதல் வித்தே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
ஓம் யானை வாகன அழகனே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி                910

ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
ஓம் சக்கரத்து அரசே போற்றி               920

ஓம் பழச்சுவை அமுதே போற்றி
ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி                                           ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி                           ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
ஓம் பேச வைப்பவனே போற்றி              930

ஓம் மங்கலாகரனே போற்றி
ஓம் மனவடிவே போற்றி
ஓம் குருவாகி நின்றவனே போற்றி                                 ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி                940

ஓம் அதிபதியே போற்றி
ஓம் நிழல்தரு மரமே போற்றி
ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
ஓம் விரிசடையோனே போற்றி
ஓம் பரமசிவனே போற்றி
ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
ஓம் பல்லூளித் தலைவா போற்றி
ஓம் பித்தனே போற்றி
ஓம் பொறுமை வடிவே போற்றி
ஓம் உலக நலமே போற்றி                       950

ஓம் உலக நாதனே போற்றி
ஓம் நொடிக் காலமே போற்றி
ஓம் உலகநாயகனே போற்றி
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி                   960

ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
ஓம் நாக வல்லபனே போற்றி
ஓம் பற்பல உயிரோனே போற்றி
ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் எங்களின் கோவே போற்றி
ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
ஓம் பொன்மலையோனே போற்றி
ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
ஓம் ஆவிவடிவே போற்றி                   970

ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
ஓம் சோம சித்தனே போற்றி
ஓம் சோமேஸ்வரனே போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் காசியைக் காத்தவனே போற்றி
ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் மகிழ்ச்சியே போற்றி
ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி                           980

ஓம் குணமே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இறைவனே போற்றி
ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் பொய்யா புகழே போற்றி                    990

ஓம் மரகத அதிபதியே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
ஓம் ஆவி நாயகனே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் அறந்த முடி நெறியே போற்றி
ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
ஓம் எங்கள் பெருமானே போற்றி                                  ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி             1000

ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
ஓம் அழியாச் செல்வம் போற்றி
ஓம் அமிர்த கரும்பே போற்றி
ஓம் காலமும் தேசமும் போற்றி
ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008

      
 ஓம்சிவசிவஓம்