Monday, January 31, 2011

ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன?





ராஷ்டீரிய ஸ்வயம்சேவ சங்ஹ் என்பது இதன் விரிவாக்கம்.உயிர்துடிப்புள்ள நாட்டிற்காக தானாகவே முன்வந்து வேலை செய்பவர்களின் சங்கம் என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது.



சுதந்திரம் வாங்கும் முன்பாக, எல்லோரும் எப்படியாவது வெள்ளைக்காரனை இங்கிருந்து துரத்தியாக வேண்டும் என்ற சிந்தனையோடு சுதந்திரப்போராட்டம் நடைபெற்றது.ஒரே ஒரு எம்.பி.பி.எஸ்.முடித்த டாக்டர் மட்டும் இதற்கு மாறுபட்டு சிந்தித்தார்.

இரண்டாயிரம் மைல் நீளம்,இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள இந்த பாரத தேசத்தில் வீரர்களுக்கும்,தலைசிறந்த மன்னர்களுக்கும்,செல்வ வளத்துக்கும் சிறிதும் குறைவில்லை;எல்லாதுறைகளிலும் தன்னிறவு பெற்றிருந்தோம்.இருந்தும் எப்படி இந்த ஆங்கிலேயன் இந்த நாட்டை அடிமைப்படுத்தினான்?

எப்படியும் நாம் இந்த வெள்ளையனை துரத்திவிடுவோம்.அதில் சந்தேகமில்லை;ஆனால்,மீண்டும் வேறுவடிவங்களில்,வேறு முகமூடி அணிந்து(சோனியா) நமது நாட்டைக் கைப்பற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்.இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன? என்பதை சுமார் 3 ஆண்டுகளாக சிந்தித்தார்.பல அரசியல் தலைவர்களிடம் கலந்து ஆலோசித்தார்;சுவாமி விவேகானந்தரிடமும் ஆலோசனை கேட்டார்.



அதன்படி,இந்த நாட்டின் கடைசி குழந்தை பிறக்கும் வரை நிரந்தரமான தேசபக்தியை ஊட்டக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.அதன்படி 1925 ஆம் ஆண்டு விஜயதசமியன்று பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.

இன்று மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாள்






தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளன்று சில உண்மைகளை உங்களிடம் உரைக்க விரும்புகிறேன்.

மகாத்மா காந்தி எனப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் நமது நாட்டின் சுதந்திரத்துக்குப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களில் முக்கியமானவர்.இந்த நாளில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவன் அவரை சுட்டுக்கொன்றான்.இதுமட்டுமே நாம் அறிந்துள்ள வரலாறு.



இங்கிலாந்து நமக்கு சுதந்திரம் தரும் முன்பாகவே,யார் பிரதமராக வருவது என்ற கோஷ்டி சண்டை ஆரம்பித்துவிட்டது.இந்த சண்டை இன்று இந்தியாவில் இருக்கும் 540 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினரிடம் பரவி யிருக்கிறது.அது போகட்டும்.

ஒருவழியாக நேரு பிரதமரானார்.அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.மீது ஒரு சந்தேகம்.இவர்கள் எங்கே நம்மை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ? என்று.மகாத்மா காந்தியின் மரணத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்.காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என வதந்தி பரப்பி,இந்திய மக்களை ஆர்.எஸ்.எஸ்.ஸீக்கு எதிராக திருப்பினார்.

சரி! நாதுராம் விநாயக் கோட்சேயின் வாக்குமூலத்தை ஏன் இந்த காங்கிரஸ் கட்சி ஐம்பது ஆண்டுகளாக வெளியிடவில்லை?அப்படி வெளியிட்டால்,அன்றே காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாக தேய்ந்து இன்றைய கம்யூனிஸ்டு கட்சியாக சிறுத்துப்போயிருக்கும்.

நாதுராம் விநாயக் கோட்சே என்ற பெயரில் இஜட்.ஒய்.ஹிம்ஸாகர் என்பவர் எழுதி தமிழில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது.குமரி பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம்,தமிழ்நாடு என்ற பதிப்பகம் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறது.

இந்த புத்தகத்தில் காந்தியை சுட்டுக்கொன்றதும்,கோட்சேயை காவல்துறை கைது செய்தது;நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.கோட்சேவின் குமுறல்களை தனது வாக்குமூலமாக பதிவு செய்தது.மனித தர்மப்படி கோட்சேவின் குமுறல்கள் நியாயமானவை.இந்திய சட்டப்படி?

கோட்சேவின் குமுறல்களை இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை;அப்படிக் கண்டுகொண்டிருந்தால்,மும்பையில் தாஜ் ஹோட்டலில்;வி.டி.ரயில்வே நிலையத்தில்; நமது மதிப்பு மிக்க பாராளுமன்றத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கமாட்டார்கள்.

இன்றும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை தாஜா செய்யாமலிருந்து,நிஜமான இந்து முஸ்லீம் ஒற்றுமை அரசியல் தளத்திலும் உருவாகியிருக்கும்.கோடிகளை காங்கிரஸ் கொள்ளையடித்திருக்காது.ஒருமுறை இந்த புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள்.காங்கிரஸின் சுயநல சொரூபம் புரியும்

Friday, January 28, 2011

உங்களது சிந்தனைக்கு






ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?



அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய தாய்மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அதுபோதும்



இந்த உரையாடல் நமது சுதந்திரத்துக்கு முன்பாக நடைபெற்றது.கேள்வி கேட்டவர் மான்மை தாங்கிய நமது மகாராஜாக்களில் ஒருவர்.



பதிலளித்தவர் ஆங்கிலேயத் தளபதி.



நாம் ஏன் ஜாதி ரீதியாகப் பிரிந்திருக்கிறோம்? நாம் ஏன் நமது கோவில் சொத்துக்கள் நமது அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? நமது நகைச்சுவை நடிகர்கள் நமது பெருமதிப்புக்குரிய புராதனப்பண்பாட்டினை கேலி செய்தாலும்,அவமானப்படுத்தினாலும் சிரித்துவிட்டுப்போகிறோம்? என்று புரிகிறதா?



நமது கல்வித்திட்டம் ஆங்கிலேயன் மெக்காலேயால் கொண்டுவரப்பட்ட சக்கையான கல்வித்திட்டம்.இந்த கல்வித்திட்டம் நம்மிடையே திமிர்பிடித்த,ஈகோ மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு நாட்டை உருவாக்கியிருக்கிறது.விளைவு?



நம்மை ஆளுபவர்களில் ஒரு சிறந்த சுதேசத் தலைவர்கள் கூட இல்லை;இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.இது அவமானம் இல்லையா?

விக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்சிய மைத்ர முகூர்த்த நாட்கள்





ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று உண்டு.இந்த நேரம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில்,ஒவ்வொரு நாளும் அதிக பட்சமாக இரண்டு மணிநேரம் வரை இந்த மைத்ரமுகூர்த்தம் இருக்கும்.இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பங்கினை,கடன் வாங்கியவரிடம் திருப்பி செலுத்த வேண்டும்.(வட்டியை இந்த நேரத்தில் கட்டக்கூடாது)அப்படி செலுத்தினால்,அதன்பிறகு,நமது கடன் எவ்வ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைத்ர முகூர்த்த நேரங்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்தி,அவர்களது மாபெரும் கடன்களை அடைத்துள்ளனர்.



நமது தமிழ் வருடம் பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மாதங்களில் இருக்கும் மைத்ர முகூர்த்த நேரங்கள் வருமாறு:



9.2.2011 புதன் காலை 10.45 முதல் 12.45 வரை



24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் 1.39 வரை



9.3.2011 புதன் காலை 9.01 முதல் 11.01 வரை



24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் 11.45 வரை



5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் 8.46 வரை



இந்த மைத்ர முகூர்த்த நேரங்கள் இந்தியா முழுவதற்கும்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் நிகோபார்,மொரிஷியஸ் தீவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Thursday, January 27, 2011

தை அமாவாசை 2.2.11 புதன்கிழமையைப் பயன்படுத்துங்கள்

ஜோதிடப்படி,அசுரர்களுக்குத் தெரியாமல் நான்கு வேதங்களை மகாவிஷ்ணு மறைத்துவைத்த ராசிகள் கடக ராசியும்,மகர ராசியும் ஆகும்.இங்கிருந்து இந்த ராசிகளுக்கு நாம் ராக்கெட்டில் பயணம் செய்தால் சுமார் 20,000 முதல் 90,000 வருடங்கள் ஆகும்.அதுவும் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்! இந்த விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் என்பது ஒளி வேகம் ஆகும்.அவ்வளவு தூரத்தில் இந்த ராசிமண்டலங்கள் அமைந்திருக்கின்றன.

ஆடிமாதத்தில் நமது சூரியன் கடகராசியையும்,தை மாதத்தில் மகர ராசியையும் கடக்கும்.அப்படிக் கடக்கும்போது,ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நாட்களே ஆடி அமாவாசையும்,தை அமாவாசையும்.இந்த இரண்டு நாட்களிலும் நாம் நமது முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதால்,நாம் இந்தப்பிறவியில் நம்மையறியாமல் வர இருக்கும் பிரச்னைகள்,விபத்துக்கள்,அவமானங்களிலிருந்து தப்பிக்கலாம்.நம்மை அரூபமாக நமது முன்னோர்கள் (பித்ரு தர்ப்பணம் செய்வதால்)காப்பாற்றுவார்கள்.
எதிர்வரும் தை அமாவாசையானது 2.2.11 புதன் கிழமையன்று வருகிறது;அன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் பலனை முழுமையாகவும்,மிக அதிகமாகவும் பெறுவதற்கு முயல வேண்டும்.
ஒன்று:நமது ஊருக்கு அருகில் இருக்கும் கடலோரக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.அது முருகன்,காளி,பெருமாள் என எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி;அதிகாலையிலேயே எழுந்து சூரியன் உதயமாகும் வேளையில் கடலில் நீராடியிருக்க வேண்டும்.சரியாக சூரியன் உதயமாகும் வேளையில் நாம் நமது மஞ்சள் துண்டு,ருத்ராட்சங்கள்,விபூதியோடு அந்த கடலோரக்கோவிலுக்குள் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இதனால்,நமது ஜபத்தின் பலன் 1000 கோடி மடங்குகளாகப் பெருகும்.இந்த நாளில் நாம் காலை 5.45 முதல் 6.45 வரையிலும் கடலோர கோவிலுக்குள் அமர்ந்து ஜபிக்க வேண்டும்.(பலர் கோவிலுக்கு வருவார்களே? என்ன செய்வது?)கண்களை மூட வேண்டாம்.வேடிக்கை பார்ப்பது போல் கைகளுக்குள் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,உதடு அசையாமல் ஜபித்துவருவது நல்லது.யாரிடமும் பேச வேண்டாம்.யாராவது பேசினால்,ஒரு புன்னகை செய்தால் போதுமானது.
ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் முடிந்தப்பின்னர்,அந்த கோவில் மூலவரை வழிபட்டப்பின்னர்,கோவிலுக்கு வெளியே நம்மால் ஆன அன்னதானம் அல்லது உணவு(பழங்கள்/இனிப்பு)தானம் சிலருக்குச் செய்ய வேண்டும்.அதன் பிறகு,நாம் அங்கேயே நமது காலை உணவை முடிக்கலாம்;அல்லது நமது வீட்டிற்குத் திரும்பிவந்தும் காலை உணவை முடிக்கலாம்.

கடலோரக்கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அருகிலிருக்கும் மலைக்கோவிலுக்குச் சென்று இதேபோல செய்யலாம்.(நமதுவீட்டில் குளித்துவிட்டுச் சென்று மலைக் கோவிலுக்குச் சென்று)ஒரு மணி நேரம் மந்திர ஜபம் செய்யலாம்.விடிகாலையில் இப்படி செய்ய முடியாதவர்கள்,அன்று 2.2.11 புதன் கிழமையன்று ஏதாவது ஒரு மணிநேரத்தில் மேற்கூறியதுபோல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.

விடுமுறையும் எடுக்க முடிந்து,ஓரளவு பணமும் வைத்திருப்போர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சித்தர்களின் வீடாகிய சதுரகிரிக்கு அல்லது சித்தர்களின் கோவிலாகிய (விழுப்புரம் அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம்) திருவண்ணாமலைக்கு அல்லது சித்தர்களின் தவச்சாலையாகத் திகழும் வேலூர் அருகில் இருக்கும் பர்வத மலைக்கு செல்லுங்கள்.அங்கே இதேபோல் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்யுங்கள்.முடிந்தால் மூன்று மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க அடுத்த சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்களது நீண்ட நாள் சிக்கலான பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும் என்பது உறுதி.

திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றுகொண்டே நமது ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.தை அமாவாசை என்பதால் அன்றிரவு திருஅண்ணாமலைக்கு உங்களது ருத்ராட்சங்களோடு வந்து இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு (ஐந்துமுக)ருத்ராட்சங்களை மடக்கியவாறு மாலை  6 மணிக்கு மேல் அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் இருந்து,அவரைவணங்கி,அனுமதி கேட்டு கிரிவலம் புறப்படலாம்.ஒரு முறை கிரிவலம் முடிக்க ஆறு மணி நேரம் ஆகும்(இரவு என்பதால் ஐந்து மணி நேரம் ஆகும்)

ஆக,தை அமாவாசையில் திருஅண்ணாமலை கிரிவலம் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறு செல்லுவதே
மிகவும் சுலபமானது;சிறப்பானது.திரு அண்ணாமலை கிரிவலத்தை பூதநாராயணப்பெருமாள் கோவிலில் முடிக்க வேண்டும்.

இவற்றில் எதுவும் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்துக்கு (காலையிலோ,மாலையிலோ,இரவிலோ)சென்று ஓம்சிவசிவஓம் ஒரு மணிநேரம் ஜபித்துவரலாம்.இதுவும் முடியாதவர்கள்,உங்களின் வீட்டின் மாடியில் தை அமாவாசை அன்று இரவு ஏதாவது ஒரு மணிநேரத்துக்கு(மொட்டை மாடியாக இருந்தாலும்) ஓம்சிவசிவஓம் ஜபித்துவருக!! அளவற்ற சிவ ஆசிர்வாதம் பெறுக!!!

இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகம் செய்துவைத்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நன்றிகள்!!!!

சிவ ஆலய புணருத்தாரனத்திற்கு உதவ விருப்பமா?

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள தெங்கால் என்னும் கிராமத்தில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலான , தொன்மை வாய்ந்த ஒரு சிவ ஆலயம் உள்ளது.  ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருகண்டேஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இந்த ஆலயம்  சமீப காலமாய் வெகுவாக சிதிலம் அடைந்து , இப்போது முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை  காரணமாக வேலைகள் சற்று தாமதமாகி வருகிறது. இந்த ஆலயம் பற்றிய ஒரு கட்டுரை, சக்தி விகடனில் சென்ற வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இதழில் வெளியாகி , ஏராளமான அன்பர்கள் நிதி உதவி செய்து , ஆலயப் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளன. அந்த இதழின் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்யவும்



http://www.ziddu.com/download/13375806/shakti1.pdf.html

 http://www.ziddu.com/download/13375824/shakti2.pdf.html


கிராம மக்களிடமும் இயன்ற அளவு நிதி பெறப்பட்டுள்ளது. இப்போது ஐயனுக்கும், அம்மனுக்கும் - கோபுர வேலைகள் தொடங்கப் பட உள்ளன . விருப்பம் இருக்கும் அன்பர்கள், தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்யலாம். பணம் அனுப்பும் முறைக்கு ஆலய திருப்பணிக் குழு செயலாளர் திரு. பத்மநாபன் ( அலை பேசி :  93617 28052 ) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு , மேலும் விபரங்கள் பெற்றுக் கொள்ளவும்.

Crystal Shivling

 இப்போது உள்ள நிலவரப்படி இன்னும் சுமார் 10 லட்சம் வரை நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தெரியப் படுத்தி , ஆலயப் பணிகளில் கரம் கோர்த்து இறையருளை பெற வேண்டுகிறோம.

திருப்பணி தகவல் ஏடு பற்றி மேலும் விபரங்கள் அறிய, இங்கே க்ளிக் செய்து file ஐ  டவுன்லோட் செய்யவும்.
http://www.ziddu.com/download/13376225/temple.pdf.html

 இங்குள்ள திருகண்டேஸ்வரரை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நிறைவேறும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நிறைந்த ஞானமுள்ள குழந்தைகள் கிடைக்கும். இத்தனை சக்தி வாய்ந்த இறைவன் இப்போதுதான் ஆலயம் பற்றி தகுதி உள்ளவர்களுக்கு தெரியப் படுத்த திருவுளம் கொண்டு இருக்கிறார் போல... ம்ம்..

பொதுவாக எந்த ஒரு ஆலயத்திற்கு நீங்கள் உதவினாலும், ராமருக்கு உதவிய அணில் போல சிறு உதவி ஆனாலும், உங்கள் வாழ்வில் நிறைந்த ஐஸ்வர்யங்கள் கிடைப்பது உறுதி.. 

இந்த  தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எமது இணைய தளம் பெருமை கொள்கிறது. உங்களால் முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்தி ஆலயத்திற்கு உதவுங்களேன்....

சிவ அதிர்வை உணர்த்தும் ஓம்சிவசிவஓம்



எனது நண்பர் ஒருவர் ஒரு நாளுக்கு மூன்று முறை ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருக்கிறார்.(அவருக்கு அவ்வளவு ஓய்வு நேரம் கிடைக்கிறது).ஓவ்வொரு முறையும் அவர் ஒரு மணி நேரம் வீதம் ஒரு நாளுக்கு மூன்று மணி நேரங்கள் வரை ஜபித்துவருகிறார்.



இவர் நமது வலைப்பூவை தினமும் வாசித்து,அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை ஆராய்ந்து,அதன்படி அதைவிட சிறப்பாகவே ஜபித்துவருகிறார்.



இவர் இரண்டு மஞ்சள் நிற டவல்களை வாங்கியுள்ளார்.ஒன்றை விரிப்பாகவும்,மற்றதை தனது இடுப்பில் கட்டியும்,கழுத்தில் ஒரு ருத்ராட்சமும்,இரண்டு கைகளில் தலா ஒரு ருத்ராட்சங்களையும் வைத்தவாறும்,சிவாலயத்தில் வாங்கிய விபூதியை நெற்றி,தோள்பட்டைகள்,மார்பு,வயிறு,கழுத்தில் பூசிய பின்னர் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.



இரண்டாவது மாதத்தில் ஒரு நாள்,அன்று அவரது பிறந்த நட்சத்திரம் நின்றநாளாம்;இவரது வலது கால் பெருவிரலில் இருந்து மூட்டுவரை ஒரு வித மெல்லிய மின் அதிர்வு கோடு போல சில நிமிடம் வரையிலும் அதிர்ந்தது.இவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை;



அவர் சொல்வது என்னவெனில், “எப்போதும் சிவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் ஜபித்தாலே,நம்மை சிவன் சோதிப்பார்.ஆனால்,இந்த ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்கியதிலிருந்து,அப்படிப்பட்ட சோதனை எதுவும் வரவில்லை.மனதில் அடிக்கடி எழும் காம எண்ணங்கள் நீங்கியிருக்கின்றன.



முன்பெல்லாம் எளிதில் ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்தாலே காம வசப்படுவது இயல்பு.ஆனால்,இன்றோ,ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பார்த்தும் கூட காம எண்ணம் சிறிதும் வரவில்லை.உங்களுக்கு நன்றிகள்!

நான் ஒருபோதும் இந்த ஒம்சிவசிவஒம் ஜபிப்பதை விட மாட்டேன்”
thanks: http://www.omshivashivaom.blogspot.com/http://www.omshivashivaom.blogspot.com/

பெண்களால் கெட்ட பெயர் வராமலிருக்க ஒரு சுலபப் பரிகாரம்

மிகச் சிறந்த மனைவி அமைய செய்ய வேண்டிய வழிபாடு






உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்தில் கன்னிமார் சந்நிதி இருக்கும்.அந்த கன்னிமார்களுக்கு 27 வளர்பிறை ஏகாதசி திதிகளில் தொடர்ந்து நெய்விளக்கேற்றி வணங்கி வர வேண்டும்.இதனால்,மிகச்சிறந்த மற்றும் யோகமான மனைவி அமைவார்.



கிராமங்களில் கன்னிமார் ஆலயம் காட்டுப்பகுதிகளில் இருக்கும்.நகரங்களில் உள்ள சிவாலயங்களில் கன்னிமார்கள் சந்நிதி இருக்கும்.






பெண்களால் எந்த நிலையிலும் கெட்ட பெயர் வராமலும்,அழிவுகள்,விரையங்கள் வராமலும் இருக்க நினைப்பவர்கள் 27 வளர்பிறை ஏகாதசி திதியில் கன்னிமார்கள் சந்நிதிக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வணங்கி வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெண்களால் கெட்டபெயர் வராது.அழிவுகளும் வராது.

வழிகாட்டுபவர்:ஐயா சிவ.சேதுபாண்டியன்

நன்றி;பால ஜோதிடம் பக்கம் 16,4.1.2010.

ஜனன ஜாதகத்தில் மாந்தி




உங்களுடைய ஜனன ஜாதகத்தில் (ஆண்,பெண் அனைவருக்கும்) லக்னத்துக்கு 2,5,8,11 போன்ற இடங்களில் மாந்தி இருந்தால்,நீங்கள் இந்தப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும்.



உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,4,7,10 ஆம் இடங்களில் மாந்தி இருப்பின்,இப்பிறவியில் நீங்கள் பல சந்தர்ப்பத்தில் தெரிந்தே பல தவறுகள் செய்வீர்கள்;அதே சமயம் அப்படி செய்யும் தவறுகளுக்கான தண்டனையை உடனுக்குடன் அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி சமயத்தில் அனுபவிக்க வேண்டும்.



கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்





உங்களது பிறந்த ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் சிக்கி,கடிகாரச் சுற்றுப்படி அனைத்துக்கிரகங்களும் கேதுவை நோக்கிச் சென்றால் அது கால சர்ப்ப தோஷம் ஆகும்.



சிலருக்கு இப்படி இருந்தாலும் ஏதாவது ஒரே ஒரு கிரகம் சிக்காமல் இருக்கும்;ஜோதிட அனுபவத்தில்,இப்படி இருந்தாலும்,அது கால சர்ப்ப தோஷமே.



இப்படிப்பட்ட கிரக நிலையில் பிறந்தவர்கள்,31 வயது வரையிலும் யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற அணுகுமுறை தெரியாது.32 முதல் 36 வயதிலிருந்துதான் இந்த அணுகுமுறை வளரும்;அதன் பிறகே இவர்களுக்கு வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படத்துவங்கும்.



லக்னத்துக்கு 2 இல் ராகு அல்லது கேது,லக்னத்துக்கு 8 இல் கேது அல்லது இராகு,இராகு திசை அல்லது கேது திசை இருப்பவர்களும் பின்வரும் பரிகார வழிபாடு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.



தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் கி.பி.1881 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நாகநாத சிவன் கோவில் இருக்கிறது.இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷப்பரிகாரத்திற்காக ரிஷபாருடராகக் காட்சி தருகின்றார்கள் ராகுவும் கேதுவும்.

புதுக்கோட்டையிலிருந்து நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் பேரையூர் இருக்கிறது.



இந்த திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும்.நீராடியபிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி அங்கேயே போட வேண்டும்.தலைக்கு மேல் ஈர ஆடைகளைக் கொண்டு வரக்கூடாது;அதன்பிறகு அக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து,பரிகாரம் செய்ய வேண்டும்.இதனால்,தோஷம் நீங்கிவிடும்.


சொன்னவர்:திரு.சிவ.சேதுபாண்டியன் ஐயா அவர்கள்


முகவரி:நாக நாத சிவன் கோவில்,பேரையூர்,சிவபுரம் (வழி)622422.ஓதுவார் கமிட்டி செல்:9443999037.

போன்:04333 277497.



நன்றி:பால ஜோதிடம் பக்கம் 3,13.4.2009.

இந்தியக் குடியரசு தினத்தில் இந்தியாவின் குடியரசு நிலை






நேற்று 26.1.2011 நமது பாரத நாட்டின் குடியரசு தினம்.

இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சியாகிய பாரதிய ஜனதாக் கட்சியினர்,நமது நாட்டின் மணிமகுடமாகத் திகழும் காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் இருக்கும் லால் சவுக் என்ற இடத்தில் தேசியக்கொடியை ஏற்றிட கடந்த சில நாட்களாக தேசபக்தி விழிப்புணர்வுப்பேரணியை நடத்தினர்.



இந்த சூழ்நிலையில்,இன்றைய அரசியலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லாவின் தேசியமாநாட்டுக்கட்சியும்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி செய்கிறது.



முஸ்லீம்களை தாஜா செய்யும் காங்கிரஸ் கட்சி,இன்று முஸ்லீம்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்யுமளவுக்கு தரங்கெட்டுப் போய்விட்டது.



சென்ற ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது,இதே லால்சவுக் பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் கொடியேற்றியுள்ளனர்.இதை காஷ்மீரின் ஆளும் கட்சிகள் கண்டிக்கவுமில்லை;தடுக்கவுமில்லை;

விளைவு?

கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் வாழும் மக்கள் நமது ராணுவ வீரர்கள் மீது தினமும் கல்லெறிவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.உலகின் தலைசிறந்த ராணுவம் என்ற பெருமையை அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் கட்சி சீர்குலைத்துவருகிறது;நமது பெருமை மிகு ராணுவத்தின் சுய கவுரவத்தை கெடுத்துவருகிறது.



ஆமாம்! காஷ்மீரில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கும் நமது ராணுவத்துக்கு சோனி(யா) காங்கிரஸ் என்ன உத்தரவிட்டிருக்கிறது தெரியுமா?



உங்கள் மீது கல்லெறிபவர்கள் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது;தற்காப்பு நடவடிக்கை கூட எடுக்கக் கூடாது.





நமது நாட்டில் குடியரசு தினத்தன்று லால் சவுக் பகுதியில் நமது தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துவிட்டது.இதற்காக முயன்ற அனைத்து பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களையும் கைது செய்துவிட்டது.



அகில இந்தியக் கத்தோலிக்க காங்கிரஸ் கட்சியின் இந்த துக்கிரித்தனத்தால்தான் அடிக்கு அடி;உதைக்கு உதை என்ற சித்தாந்தத்தை இந்துக்கள் பின்பற்ற தூண்டுகிறது.





சதுரகிரியில் இருக்கும் மூலிகைகள்






வெட்டுப்பட்ட காயங்களை உடனே சீர்படுத்த அடுகள்ளி,தொடுகள்ளி என்ற மூலிகைகள் சதுரகிரியில் மட்டுமே காணப்படுகின்றன.(கொல்லிமலையில் இருக்கலாம்).சர்ப்ப கந்தி என்ற மூலிகையும் இங்கு காணக்கிடக்கிறது.பாம்பின் விஷத்தை உடனே முறிக்கும் சக்தியுடைய இம்மூலிகையை நமது வீட்டின் புழக்கடையில் வளர்ப்பதால் அந்த இடத்துக்கு பாம்பு வராது.



அலைபாயும் மனத்தை ஒருமுகப்படுத்திட சர்ப்ப கந்தி மூலிகையின் விதை,பழம்,இலை இவற்றில் ஏதாவது ஒன்றை உட்கொண்டு சமாதிநிலை வரை போகமுடியும்.இதைப் பயன்படுத்தும் ரகசியத்தை சித்தர்கள் தமது சீடர்களுக்கு உபதேசித்துள்ளனர்.



முண்டக விருட்சம் என்ற மூலிகை மரமும் சதுரகிரி வனப்பகுதியில் இருக்கிறது.இதன் அடியில் நாம் அமர்ந்தால் நமக்கு எத்தனை நாள் ஆனாலும் பசி,தாகம் எதுவும் எப்போதும் ஏற்படாது.சித்தர்கள் இந்த உலகை விட்டு நீங்க உதவும் சூட்சும பாதையாக இந்த மரத்தை இன்றும் பயன்படுத்திவருகின்றனர்.



ஜோதி விருட்சம் என்றொரு மரம் இங்கு இருக்கிறது.இதுபற்றி பல ஜோதிட இதழ்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.பகலில் சாதாரணமாகக் காட்சி தரும் இந்த மரம் இரவில் ஒளி வீசும் தன்மை உடையது.இதிலிருந்து வடியும் பாலுக்கும் ஒளிவிடும் தன்மையுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.(குருபலம் இருந்தால் மட்டுமே இதை பார்க்க முடியும்).இந்த மரத்தின் பாலை ஒரு தேக்கரண்டி வீதம் 3 நாள் 3 வேளை உட்கொண்டால் இதன் வீர்யம் தாங்காமல் நம் உடல் மூர்ச்சை அடைந்து விடும்.அதேசமயம் பசுவின் பாலை புகட்டிவந்தால்,மயக்கம் தெளிந்துவிடும்.



நன்றிகள்:சதுரகிரி இலவச மாத இதழ்,பக்கம் 12,13;தை2011.

Tuesday, January 25, 2011

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்








ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.



சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?



நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்(உடலுறவு கொள்ளுவதும்,சுய இன்பம் அனுபவிப்பதும்).காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.



பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.



நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?



உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ஓம்சிவசிவஓம் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க தூண்டுங்கள்.



அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.








ஓம்சிவசிவஓம்

Sunday, January 23, 2011

கோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர திருஅண்ணாமலை கிரிவலம்




திருஅண்ணாமலையின் பெருமைகளைப் பற்றி விளக்கவே ஒரு தனி வலைப்பூவை உருவாக்கலாம்;இருந்தபோதிலும்,திரு அண்ணாமலை பற்றி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?



சுமார் 240 கோயில்களில் ஒராண்டு வரை தினமும் நாம் செய்யும் வழிபாடுகள்,பூஜைகளுக்குச் சமமானது ஒரே ஒரு முறை திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது.அதனால் தான் திரு அண்ணாமலையைப் பற்றி நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் இவ்வளவு விரிவாக,நிறைய தகவல்களை நிரப்புகிறோம்.



ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும்.அமாவாசை அல்லது பவுர்ணமியன்று ஆண்கள் மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது கர்மங்களை அழிக்கும்.ஏனெனில்,இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள்.அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது பல்லாயிரம் முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.இதுக்கெல்லாம் ஆதாரம் தர முடியாது;உணர மட்டுமே முடியும்.(அப்படிப் படும் சித்தர் நமது தாத்தாவுக்கு தாத்தாவாக இருப்பார் என்பதும் சூட்சும ஆன்மீக ரகசியம்)



தீராத கடன் தொல்லை,பல வருட நோய், துரத்திகொண்டே இருக்கும் எதிரி,அரசாங்கத்தின் கோபத்தினை எதிர்கொள்ள முடியாத அப்பாவிகள்,சட்டத்தினால் பாதிக்கப்பட்டு நியாயம் கிடைக்காமல் குமுறும் சராசரி மனிதர்கள்,வாழ்க்கைத்துணையை இழந்து அல்லது பிரிந்து தவிக்கும் இளம்பெண்கள் /இளைஞர்கள், திருமணம் தாமதமாகும் முதிர்கன்னிகள்,முதிர் இளைஞர்களுக்காகவும் மேலும் பல சொல்ல முடியாத பிரச்னைகளிலிருந்து மீளவும் பல்லாயிரக்கணக்கான பரிகாரங்கள் இருக்கின்றன.அவற்றில் மிக மிக சுலபமான பரிகாரமே திருஅண்ணாமலை கிரிவலம்.



முன்பே சொன்னபடி,திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுவதிலேயே 1,00,008 விதங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் செல்லும் கிரிவலம்.



சிவபெருமானின் அவதார நட்சத்திரம் திருஆதிரை எனப்படும் திருவாதிரை.இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில் திருஅண்ணாமலைக்கு வந்து நாம் கிரிவலம் சென்றால்,மற்ற நாட்களில் கிரிவலம் சென்றால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட பல கோடி மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது உறுதி.இதை அருணாச்சல புராணம் பாடல்களாகவே தெரிவிக்கிறது.



கூடவே,கிரிவலம் செல்லும்போது அன்னதானம் செய்வது இன்னும் அதிகமான புண்ணியத்தை நமக்குத் தரும்;நமது முற்பிறவி கர்மாக்கள்;நமது முன்னோர்களின் கர்மாக்களை அழித்துவிடும்.(நமது அம்மா,அப்பாவின் ஐந்து தலைமுறை முன்னோர்களின் புண்ணியம் மற்றும் பாவத்தின் ஒரு பகுதியை நாம் அனுபவித்துவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்).



கிரிவலம் செல்லும்போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்துக்கொண்டே 14 கிலோ மீட்டர்களும் பயணிப்பதால்,இன்னும் அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்;நமது கடுமையான கர்மங்கள் அழியும்.



கர வருடத்தின்(14.4.2011 முதல் 13.4.2012 வரை) திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்கள்(ஆங்கிலத் தேதிப்படி)



7.5.2011 சனி காலை 8.05 முதல் 8.5.2011 ஞாயிறு காலை 8.08 வரை



3.6.2011 வெள்ளி மதியம் 3.54 முதல் 4.6.2011 சனி காலை 4.03 வரை



30.6.2011 வியாழன் இரவு 11.41 முதல் 1.7.2011 வெள்ளி இரவு 11.57 வரை



28.7.2011 வியாழன் காலை 7.24 முதல் 29.7.2011 வெள்ளி காலை 7.47 வரை



24.8.2011 புதன் மதியம் 2.57 முதல் 25.8.2011 வியாழன் மதியம் 3.26 வரை



20.9.2011 செவ்வாய் இரவு 10.28 முதல் 21.9.2011 புதன் இரவு 11.04 வரை



18.10.2011 செவ்வாய் காலை 6 முதல் 19.10.2011 புதன் காலை 6.38 வரை



14.11.2011 திங்கள் மதியம் 1.18 முதல் 15.11.2011 செவ்வாய் மதியம் 2.08 வரை



11.12.2011 ஞாயிறு இரவு 8.36 முதல் 12.12.2011 திங்கள் இரவு 9.34 வரை



8.1.2012 ஞாயிறு காலை 4.04 முதல் 9.1.2012 திங்கள் காலை 5.09 வரை(இது மார்கழி மாத பவுர்ணமி)



4.2.2012 சனி காலை 11.31 முதல் 5.2.2012 ஞாயிறு மதியம் 12.22 வரை



2.3.2012 வெள்ளி இரவு 7 முதல் 3.3.2012 சனி இரவு 8.18 வரை



30.3.2012 வெள்ளி விடிகாலை 2.15 முதல் 31.3.2012 சனி விடிகாலை 4.01 வரை



ஓம்சிவசிவஓம்

துவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்




கலிகாலத்தில் வாழும் நாம் மற்றும் நமது முன்னோர்களின் புண்ணியங்களையும் பாவங்களையும் சேர்த்தேதான் நமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம்.அதேசமயம்,பல வம்சவளியில் ஏதாவது ஒரு நோய் அல்லது கடன் அல்லது குடும்பப்பிரிவினை அல்லது திருமணம் ஆகாமலிருப்பது என ஏதாவது ஒரு கடுமையான கர்மம் நம்மை சோகத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது.இப்படிப்பட்ட கடுமையான கர்மங்களை இந்த கலியுகத்தில் நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திர ஜபத்திற்கும் மட்டுமே உண்டு.மந்திரஜபத்திற்கு நமது இன்னொரு வலைப்பூவாகிய www.omshivashivaom.blogspot.com ஐ அணுகவும்.நமது சொந்த ஊரில் அன்னதானம் செய்தாலே நமது கர்ம வினைகள் படிப்படியாக குறையத்துவங்கும்;அன்னதானத்திலேயே மிகவும் உயர்வானது அண்ணாமலை அன்னதானம் ஆகும்.அந்த அண்ணாமலை அன்னதானத்தை துவாதசி திதி ஒரே ஒரு முறை செய்து நமது கர்மவினைகளை ஒரே தடவையில் நீக்கவே எனது தமிழ்மக்களுக்காக இந்த ஜோதிடக்கட்டுரை!



காசியில் ஒருவருக்கு இடப்படும் அன்னதானமானது மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;ஆனால்,திருஅண்ணாமலையில் ஏழை ஒருவனுக்கு (சாதாரண நாளில்) அளிக்கப்படும் அன்னதானமானது காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அளித்த அன்னதானத்தை விட உயர்வானது;அதிலும் துவாதசி திதியன்று திருஅண்ணாமலையில் ஒருவர் அன்னதானம் செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்.இதனால்,அன்னதானம் செய்தவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என சிவமகாபுராணத்தின் வித்யாசார சம்ஹிதை விவரிக்கிறது.



கர வருடத்தில்(14.4.2011 முதல் 13.4.2012 வரை) வர இருக்கும் துவாதசி திதி நாட்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.உங்களுக்கு வசதியான துவாதசி நாளில்,தமிழ்நாடு மாநிலம்,சென்னை அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரமாகிய திருஅண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரையும்,உண்ணாமலையம்மாளையும் தரிசித்து,கிரிவலம் சென்று,கிரிவலப்பாதையில் வாழும் துறவிகளுக்கு அன்னதானம் செய்து சுபிட்சம் பெறுக!!!



ஓம்சிவசிவஓம்



14.4.2011 வியாழன் மாலை6.27 முதல் 15.4.2011 வெள்ளி மாலை 4.10 வரை



29.4.2011 வெள்ளி முழுவதும்



13.5.2011 வெள்ளி நள்ளிரவு(சனி விடிகாலை) 2.38 முதல் 14.5.2011 சனி இரவு 12.13 வரை



28.5.2011 சனி இரவு 9.58 முதல் 29.5.2011 ஞாயிறு இரவு 11.48 வரை



12.6.2011 ஞாயிறு முழுவதும்



27.6.2011 திங்கள் மதியம் 1 முதல் 28.6.2011 செவ்வாய் மதியம் 2.12 வரை



11.7.2011 திங்கள் மாலை 5.28 முதல் 12.7.2011 செவ்வாய் மதியம் 3.42 வரை



27.7.2011 புதன் முழுவதும்



10.8.2011 புதன் முழுவதும்



25.8.2011 வியாழன் மதியம் 2.22 முதல் 26.8.2011 வெள்ளி மதியம் 1.43 வரை



8.9.2011 வியாழன் மதியம் 12.31 முதல் 9.9.2011 வெள்ளி மதியம் 12.27 வரை



24.9.2011 சனி முழுவதும்



8.10.2011 சனி முழுவதும்



23.10.2011ஞாயிறு காலை 11.22 முதல் 24.10.2011 திங்கள் காலை 9.20 வரை



6.11.2011 ஞாயிறு மாலை 6.19 முதல் 7.11.2011 திங்கள் இரவு 8.08 வரை



22.11.2011 செவ்வாய் முழுவதும்



6.12.2011 செவ்வாய் மதியம் 1.06 முதல் 7.12.2011 புதன் மதியம் 3.13 வரை



21.12.2011 புதன் காலை 7.44 முதல் இன்று முழுவதும்



5.1.2012 வியாழன் காலை 8.45 முதல் 6.1.2012 வெள்ளி காலை 10.28 வரை



19.1.2012 வியாழன் மாலை 6.39 முதல் 20.1.2012 வெள்ளி மாலை 4.44 வரை



4.2.2012 சனி முழுவதும்



18.2.2012 சனி முழுவதும்



4.3.2012 ஞாயிறு இரவு 7.25 முதல் 5.3.2012 திங்கள் இரவு 7.09 வரை



18.3.2012 ஞாயிறு மாலை 6.46 முதல் 19.3.2012 திங்கள் மாலை 6.26 வரை



3.4.2012 செவ்வாய் காலை 8.32 முதல் 4.4.2012 புதன் காலை 7.18 வரை





ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

அன்புடையீர் வாழ்கவளமுடன்,




பருவ வயது ஆரம்பித்ததில் இருந்து 40கள் வரும்வரை காம இச்சை எழுவது ஆண்,பெண் அனைவருக்கும் இயற்கையானதே.அதன் தாக்கத்திலிருந்து மீண்டு,சராசரியான மனிதனாக வாழவே இந்த மந்திர ஜபத்தினை பரப்பிவருகிறோம்.



15 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மனிதனுக்கும் காம இச்சை எழுவது உடலால் உருவாக்கப்பட்ட தற்காப்பு அமைப்புக்களில் ஒன்று.

ஆனால்,நவீன தொழில்நுட்பவளர்ச்சியால் 24 x 7 நேரமும் காம வெறிபிடித்து அலையும் நிலை சகஜமாகிவருகிறது.அதுவும் கேமிரா செல்போன் வந்தப்பின்னர்,நிலைமை இன்னும் மோசம்தான்.



இந்த நிலை தொடர்ந்தால்,அதாவது தினமும் அல்லது அடிக்கடி காம வீடியோக்கள்,புகைப்படங்கள்,இணையதளங்கள் பார்த்துக்கொண்டே இருந்தால்,அப்படிப் பார்க்கும் ஆண் நிச்சயமாக கற்பழிப்பு வழக்கில் சிக்குவது நிச்சயம்.பெண் எனில்,அவளுக்கு எய்ட்ஸ் வருவது உறுதி.மேலும்,50 வயதில் வரவேண்டிய மூட்டுவலி 30 வயதிலேயே வரத்துவங்கிவிடும்.மூட்டுவலி வந்துவிட்டால்,நடந்து செல்வதே சிரமம் ஆகிவிடும்.நாம் நடந்து செல்ல யாராவது நமக்கு துணைவருவார்களா?(நமது மூட்டுக்களுக்கு சக்தியளிப்பது விந்துதான்.அதை அளவுக்கதிகமாக செலவழித்தால்,முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;பிறகு,அடிக்கடி நிலைதடுமாறுவோம்;மூன்றாவதாக இருமல் எப்போதும் கூடவே இருக்கும்;நான்காவதாக லேசாக கால் மூட்டுக்கள் வலிக்கத்துவங்கும்;இறுதியாக 30 வயதிலேயே 50 வயதுக்குரிய முதுமை நம்மை செயல்படவிடாமல் முடக்கிவைக்கும்)

இதனால்தான் நமது முன்னோர்கள் பிரம்மச்சாரியத்தை கடுமையாகப் பின்பற்றும்படி வலியுறுத்தினார்கள்.கணவன் மனைவியே மாதம் இரண்டுமுறை மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தனர்.



ஆல்பா மைண்டு பவர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மாநகரங்களில் மாதம் தோறும் தியானப்பயிற்சி வகுப்புகளை டாக்டர் விஜய லட்சுமி பந்தையன் என்ற அம்மையார் நடத்திவருகிறார்.அந்த ஒருநாள் பயிற்சி எடுத்தப்பின்னர்,நமது மனதில் இதுவரை பதிந்துள்ள தேவையற்ற காம படங்கள்,ஒலிகள்,வீடியோக்களை அடியோடும்,முழுமையாகவும் நீக்கிவிடலாம்.இதன் மூலம் மனம் சுத்தமாகும்.அப்படி சுத்தமாகாவிட்டால்,நமது மனதில் பதிந்திருக்கும் காம ரீதியான படங்கள்,ஒலிகள்,வீடியோக்கள் நம்மை காம நடவடிக்கைகளில் மட்டுமே செயல்பட வைத்து, நம்மை காமவெறி பிடித்த மனித மிருகங்களாக்கிவிடும்.



இன்னொரு (சுலபமான) வழிமுறைதான் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்.ஒரு வேளைக்கு 30 நிமிடம் வீதம்,இரண்டு வேளைக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வந்தால்,30 நாட்களுக்குள் காமத்தின் மீதான அளவற்ற இச்சை நம்மை விட்டு நீங்கிவிடும்.இது அனுபவ உண்மை.



படிப்படியாக நம்மிடமிருக்கும் அளவற்ற காம இச்சை நீங்கி,மனதில் இயல்பான ஆரோக்கியம் உருவாகும்.எனவே,நீங்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.மேலும் விபரமறிய www.omshivashivaom.blogspot.comhttp://www.omshivashivaom.blogspot.com/ என்ற வலைப்பூவைப் பார்க்கவும்.அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப்பின்பற்றவும்.

Saturday, January 22, 2011

கிரகப்பெயர்ச்சியும் முன்னேற்பாடுகளும்






கடக மற்றும் மகர ராசி ஆன்மீகக்கடல் வாசகர்களே!



உங்களுக்கு ஏழரைச்சனி(கடக ராசி),அஷ்டமச்சனி(மகர ராசி) முடிந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.இருந்தபோதிலும்,இதுவரை பெரும்பாலான கடகராசி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நன்மையைச் செய்யவில்லை;



ஆனால்,இன்னும் ஏழு மாதங்களில் சனிபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார்.



சனிபகவானுக்கு மந்தன் என்றொரு பெயரும் உண்டு.ஆம்! மந்தமாக செயல்படுவதால் இவருக்கு இந்தப் பெயர் உண்டானது.ஒரு ராசியை இவர கடப்பதற்கு இரண்டரை ஆண்டுகள்(30 மாதங்கள்=900 நாட்கள்) எடுத்துக்கொள்ளுகிறார்.



இன்று முதல் அடுத்த ஏழு மாதங்களுக்குள் கடகராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலைப் பெறுவார்கள்.மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்துவருடங்களாக இருந்துவந்த மந்தமான நிலை மாறத்துவங்கும்;



மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் பொறுப்பு சனி பகவானுக்கு மட்டுமே உண்டு.(நவக்கிரகங்கள் ஒருங்கிணைந்துதான் எந்த பலனையும் தருவார்கள் என்பது அனுபவம்)

இன்றுவரையிலும் எப்படித்தான் நாம் இந்த விலைவாசியில் உயிர்வாழ்வதோ? என்னுமளவுக்கு விரக்தியில் கடகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இருந்துவருகின்றனர்.இந்த மந்த நிலை இன்று முதல் எந்த விநாடியும் மாறிவிடும்.



உங்களது வயது,அனுபவம்,இருக்கும் திறமை,மன வலிமை,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்,கையிலிருக்கும் பணம் இவற்றைப் பொறுத்து உங்களது வேலை அல்லது தொழில் அமையும் என்பது நிச்சயம்.



குருபகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகி சில மாதங்களாகியும்,ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே நல்ல பலன்களைத் தந்துள்ளார்.சனிபகவானின் ஏழாம் பார்வையில் குருபகவான் சிக்கியுள்ளதால்,குருவால் சுபமானப் பலன்களைத் தரமுடியவில்லை என்பதே நிஜம்.

அதே சமயம்,குருபகவான் இந்த முறையும் ஒரு வருடம் வரை மீனராசியில் இருக்கமாட்டார்.மே மாதம் முதல் வாரம்,தமிழ் மாதப்படி சித்திரை மாதம் இரண்டாம் வாரம் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகப்போகிறார்.



இதனால்,கடந்த ஐந்துவருடங்களாக நொந்து நூடுல்ஸாகிப்போன சிம்ம ராசிக்காரர்களுக்கு கடும் நெருக்கடி நிலை நீங்கத்துவங்கும்;துலாம் ராசிக்காரர்களுக்கு விரையச்சனியின் கடுமை ஓரளவு குறையும்.மிதுன ராசிக்காரர்களுக்கு லாப குருவாக மாறுவதால், எல்லா விதமான சிக்கல்களிலிருந்து நீங்கி நிம்மதியடைவர்.ரிஷபராசிக்காரர்களுக்கு சுப விரையம் உருவாகும்.



குருவின் பார்வையில் இருந்துவந்த கடக ராசி,கன்னிராசி,விருச்சிக ராசிக்காரர்களில் விருச்சிகம்,கன்னி ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.பணப்புழக்கத்தில் இதுவரை இருக்கும் சரளமான நிலை, மே மாதம் முதல் இருக்காது.விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டாமிட ராகு எதிர்பாராத அவமானத்தை தரும்;சிலர் காவல் நிலையம் வரை செல்ல வேண்டியிருக்கும்.(செல்லாமலிருக்க இன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு தினமும் ஏதாவது ஒரு அம்மனை வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெரியளவு பிரச்னைகள் வராமல் சுருங்கிவிடும்)



2007 முதல் 2014 வரை வருடக் கிரகங்களான குரு,சனி,இராகு கேது மற்றும் மற்ற மாதக்கிரகங்களின் செயல்பாடுகள் வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளன.இதனால்,உலக நில அமைப்பு அடியோடு மாறப்போவது நிச்சயம்.இதுவரை லஞ்சம்,ஊழல்,ஏமாற்றுதல்,வட்டார உணர்வுகளைத் தூண்டி சுயநலமாக வாழ்ந்தவர்களுக்கு பேரழிவு ஏற்படுவது உறுதி.அன்புக்கு ஏங்கியவர்கள்,எல்லோருக்கும் உதவும் எண்ணம் உடையவர்கள்,பிறருடைய மனைவியை நோக்காதவர்கள்,காமரீதியான குற்றம் செய்யாதவர்கள்,அப்படிப்பட்டக் குற்றங்களைத் தடுத்தவர்கள் என தர்மத்தின் பிரதிநிதிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது.



ஓம்சிவசிவஓம்

உங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை






மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.



உதாரணமாக,நான் சிவக்குமார் என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியுள்ளேன் என்று வைத்துக்கொள்வோம்.கடன் வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டன;வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.அசலை எப்போதுதான் கட்டுவது? என்ற பயமே வந்துவிட்டது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் நான் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அதாவது சிவக்குமாரிடம் ரூ.5000/-ஐ ஒரு முறை அசலாக திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.



கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடலில் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தினை கணித்து வெளியிட்டுள்ளோம்.இதைப் பயன்படுத்தி,கடனிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 637.



20.4.2011 புதன் இரவு 7.30 முதல் 9.30



30.4.2011 காலை 6 முதல் 7,காலை 11 முதல் 1,மாலை 5 முதல் 7 வரையிலும்.



1.5.2011 ஞாயிறு காலை 5.11 முதல் 7.11



17.5.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 8.00 வரை



18.5.2011 புதன் மாலை 6.01 முதல் 6.40 வரை



14.6.2011 செவ்வாய் மாலை 4.43 முதல் 6.43 வரை



22.7.2011 வெள்ளி இரவு 11.36 முதல் நள்ளிரவு 1.36 வரை



8.8.2011 திங்கள் மதியம் 12.45 முதல் 2.45 வரை



19.8.2011 வெள்ளி இரவு 10 முதல் 12 வரை



4.9.2011 ஞாயிறு காலை 11.05 முதல் 1.05 வரை



16.9.2011 வெள்ளி இரவு 8.05 முதல் 10.05 வரை



2.10.2011 ஞாயிறு காலை 9.09 முதல் 10.38 வரை



12.10.2011 புதன் இரவு 7.57 முதல் 8.30 வரை



29.10.2011 சனி காலை 7.02 முதல் 9.02 வரை



9.11.2011 புதன் மாலை 4.12 முதல் 6.12 வரை



25.11.2011 வெள்ளி மாலை 5.40 முதல் 7.40 வரை



6.12.2011 செவ்வாய் மதியம் 2.40 முதல் 4.40 வரை



23.12.2011 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை



3.1.2012 செவ்வாய் மதியம் 1.45 முதல் 3.45 வரை



30.1.2012 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை



26.2.2012 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை



27.2.2012 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை



13.3.2012 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை



25.3.2012 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை



9.4.2012 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை



இந்த நேரங்கள் அனைத்தும் தென் இந்தியா மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.அட்லீஸ்ட்,நாம் வாங்கிய கடனை திருப்பித் தரப்படும் இடம் மேற்கூறிய பகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.



பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.



ஒரே நபர் பலரிடம் கடன் வாங்கியிருந்தால்,தனித்தனியாக அசலைத் தர முயல வேண்டும்.அப்படித் தரும்போது வட்டியைத் தரக்கூடாது.அசலில் பத்தில் ஒரு பங்கு அல்லது நூற்றில் ஒரு பங்கு அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கினைத் திருப்பித்தரவேண்டும்.அப்படி திருப்பித்தந்து,அசலில் வரவு வைக்க வேண்டும்.இது முக்கியம்.





முயலுங்கள்;கடன் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள்;

உங்களுக்கு ஆன்மீகக்கடல் எப்போதும் துணை நிற்கும்.



ஓம்சிவசிவஓம்.

கடும் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்க உதவும் ஓம்சிவசிவஓம்


கடும் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்க உதவும் ஓம்சிவசிவஓம்




கணவன் மனைவி பிரிவினை இந்த காலத்தில் சிம் கார்டுகள் ரேஞ்சுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.இருவர் மீதும் அல்லது யாராவது ஒருவர் மீது தவறு இருந்தாலும்,கோர்ட்டுக்கு நடையாய் நடப்பவர்களை நாம் நமது தெருவிலேயே பார்க்கலாம்.அவர்களுக்கு ஒரு இறுதிமுடிவு தெரிய தினமும் இரண்டு முறை வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,30 ஆம் நாளிலிருந்து,அவர்களது சிக்கலான பிரச்னைகள் தீரத்துவங்கும்.



நமது ஆரம்பகால ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவர் நான்கு ஆண்டுகளாக மணவிலக்கு கோரி நீதிமன்றத்துக்கு அலைந்துவருகிறார்.அவர் நமது ஆலோசனைப்படி,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.தற்போது,இந்த மணவிலக்கு வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.விரைவில் அது பற்றிய முழு விபரம் நமது ஓம்சிவசிவஓம் வலைப்பூவில் இடம்பெறும்.

http://www.omshivashivaom.blogspot.com/





மந்திரங்களை எப்போதெல்லாம் ஜபிக்கலாம்?




மந்திரங்கள் எதுவாக இருந்தாலும்,உடல் சுத்தத்துடன் ஜபிப்பது அவசியம்.வாய் விட்டுச் சொல்லுவதை விட, மனதுக்குள் சொல்லுவது/ ஜபிப்பதே நன்று.ஏனெனில்,மனதுக்குள் ஒரு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்த உடனேயே மனமானது ஒரே கவனத்தில் குவிய ஆரம்பித்துவிடுகிறது.



சரி மந்திரங்களை ஜபிக்கும் நாட்களில் உடலுறவு கொள்ளலாமா?காம நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?



தாராளமாக! ஆனால்,மந்திரம் ஜபிக்கும் நேரத்தில் மட்டும் உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.காம நடவடிக்கைகள் மனிதனின் வழக்கமான நடவடிக்கைகள்.உடல் சுத்தமில்லாமல் மந்திர ஜபம் செய்யும்போது பாவம் சேர்வதோடு,அந்த ஜப எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொட்டதும் மாபெரும் விபத்து,காயம்,மன நிலை பாதித்தல் ஏற்படுகிறது.



இதேபோலத்தான் அசைவம் சாப்பிடுவதும்.அசைவம் சாப்பிட்டப்பின்னர் அன்று முழுவதும் எந்த மந்திரமும் ஜபிக்காமல் இருப்பது கட்டாயம்.மீறினால்,ஏடாகூடமாக ஏதாவது நிகழும்.எச்சரிக்கை:



மனிதர்கள் வாழும் இந்த பூமியில் ஏழு கோடி மந்திரங்கள் மனிதர்களின் மத்தியில் புழங்குகின்றன.இவற்றில் பல மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபிப்பதற்கே ஆயுள் முழுவதும் (ஜபிப்பவர்) பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்.இந்த மந்திரங்கள் தற்போது காட்டுக்குள் வாழும் மகான்களிடம் மட்டுமே இருக்கின்றன.



எப்படி மந்திரங்களை ஜபிக்கவேண்டும் என்பதை அறிய www.omshivashivaom.blogspot.comhttp://www.omshivashivaom.blogspot.com/ என்ற நமது துணை வலைப்பூவுக்கு வருக!

த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: காஞ்சி காமாட்சி அம்மனை எந்த மாதிரியான சிக்கல்கள் தீர வழிபடலாம்?




ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.





எவ்வளவோ பேர்களை, பிரிந்திருந்தவர்களை காஞ்சி காமாட்சி அம்மனிடம் போய்விட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன். விவாகரத்து ஆன கணவன், மனைவியைக் கூட காமாட்சி அம்மன் கோயிலிற்குப் போய் வாருங்கள் என்று சொன்னேன். விவாகரத்து வாங்கிவிட்ட பிறகு எப்படி ஒன்றாகப் போவது என்று கேட்டார்கள். ஆண்டவனுக்கு ஒரு வேண்டுதல் என்று சொல்லிவிட்டுப் போய் வணங்கிவிட்டு வாருங்கள் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும் என்று சொன்னேன்.



வணங்கிவிட்டு வெளியே வந்தபிறகு, நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று கணவன் கேட்க, நானும் அதைத்தான் நினைத்தேன் என்று மனைவி சொல்ல, அம்பாள் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது. நமக்குள்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதே என்று மனைவி சொல்ல, இல்லை அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன் கணவன் சொல்லியிருக்கிறேன். இதுபோன்றெல்லாம் பார்க்கிறோம். குடும்பம் அமைதியாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அந்த குடும்ப அமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் மாதிரி ஒரு சாத்வீகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு அம்மனே கிடையாது.



அதற்கடுத்து தனதான்ய சமர்த்து. ஏனென்றால் ஸ்ரீசக்கரம் பிரதோஷ்டம் செய்திருக்கிறார்கள். ஆதிசங்கரர்தான் செய்து வைத்தார். ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம். அதனால் மிகவும் விசேஷமானது. வாராக் கடன்கள் வர ஆரம்பிக்கும். இந்த அம்மனுடைய கண்களில் தீட்சாயனம், தீர்க்கம் பார்க்கலாம். அவர் உட்கார்ந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம். ஆசனங்களிலேயே முக்கியமான ஆசனம் பத்மாசனம். அந்த பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதால்தான் கேட்டது கிடைக்கும். எது நியாயமானதே அதை உடனே கொடுக்கக் கூடிய அம்பாள்.



அதற்கடுத்தது, அம்பாளுக்கு வலப்பக்கமாக இன்னொரு அம்பாள் தவக் கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள். அதனால்தான் அந்த அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது. மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள். பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார். இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.



சிவாலயங்களில் பார்த்தீர்களானால், தில்லை நடராஜர் கோயிலிற்குப் போனால் எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும். அதேபோல, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன்.



காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில் உருகி உருகி பாடியிருக்கிறார்கள். அந்த விருத்தத்தில் ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும் உண்டாகும்
கிறிஸ்துவர்கள் இரு கால்களையும் மண்டியிட்டு வணங்கியும்,இஸ்லாமியர்கள் இரு கால்களையும் அழுத்தி உட்கார்ந்து தொழுவதன்மூலமும் ஸூக்ஷமணா நாடியைத் தூண்டுகிறார்கள்.நாடிகள் ஆன்மீகம் சார்ந்தவை.மதத்தைச் சார்ந்தவை அல்ல;


நன்றி:சுபவரம் மாத இதழ்,பக்கம் 41,மே 2010.

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.




ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.



அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.



விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.



மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.



எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.



எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.









நன்மை செய்பவர்களாகவே இருங்கள்




வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.



ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்.

நாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து




பார்வையற்ற ஒருவன் தத்துவவாதியாகவும்,வாதிடுபவனாகவும் இருந்தான்.

அவன் எல்லோரிடமும் ‘வெளிச்சம் என்பதே கிடையாது;என்னைப் போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்தான்.நான் அதை அறிந்துகொண்டேன்.நீங்கள் அறிந்துகொள்ளவில்லை.அதுதான் வித்தியாசம்!வெளிச்சம் என்ற ஒன்று இருந்தால்,வெளிச்சத்தைக் கொண்டுவாருங்கள்.நான் அதை ருசித்துப்பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை தொட்டாவது பார்க்கிறேன்.அதன்பின் தான் நம்ப முடியும்!’ என்று கூறினான்.



அவனோடு வாதிட முடியாமல்,கிராமத்து மக்கள் புத்தரிடம் அவனை அழைத்து வந்தார்கள்.



புத்தர் எதுவும் சொல்லாமல், “இவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”என்றார்.மருத்துவர் அவனை விரைவில் குணப்படுத்தி பார்வை வரச் செய்தார்.



அவன் புத்தருக்கு நன்றி சொல்ல வந்தான்.அப்போது புத்தார், “இப்போது நீ வெளிச்சத்தை நுகர வேண்டும்.தொட்டு ருசிக்க வேண்டும்;அதைத் தொட வேண்டும்;” என்றார்.



அவன் புத்தரின் கால்களில் விழுந்தான். “தங்களால்தான் எனக்குப் பார்வை கிடைத்தது.இவ்வளவு நாள் நான் எனது அறியாமையில் வாதிட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான்.



கருத்து:எதிர்மறையானவற்றை(நாத்திகம்,கம்யூனிசம்,போலி மதச்சார்பின்மை) மிக எளிதில் நிருபித்துவிடலாம்.ஆனால்,நேர்மறையானவற்றை நிருபித்தல் சாத்தியமில்லை.எனவேதான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும்,ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவனால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடிவதில்லை.

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்




பூமியில் எல்லா கனிம வளங்களும் இருப்பினும் எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்காது.எது எது எந்த இடத்தில் உள்ளது என தக்கவர்களைக்கொண்டு ஆராய்ந்து அவர்கள் சொல்லும் அந்தந்த இடங்களில்தான் அது அது கிடைக்கும்.

உதாரணமாக தங்கம் வேண்டுமானால் கோலாரிலும்,நிலக்கரி நெய்வேலியிலும்,பெட்ரோல் வேண்டுமானால் நரிமணத்திலும் தோண்ட வேண்டும்.

அதுபோல்,அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ப திருவருள் விளங்கித் தோன்றும் திருக்கோயில்களைக் கண்டு நம் மெய்ஞானிகளாகிய நால்வர் பெருமக்கள் ஆய்வு செய்து அதற்குரிய தலங்களை தேர்வு செய்து பதிகங்கள் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.நமது ஆஸ்தான ஜோதிடர்களும் நமக்கு வழிகாட்டிவருகின்றனர்.

சிக்கலான தருணங்களில் பெண்கள் உச்சரிக்க ஒரு சொன்ன சுலோகம்:




ஐங்கார ஸ்ருஷ்டி ரூபாய

ஹ்ரீங்கார ப்ரதி பாலிகா

க்லீம் காளி கால ருபிண்யை

பீஜ ரூப நமோஸ்துதே!



சாமுண்டா சண்ட ரூபாயை

யைங்காரி வரதாயிணி

விச்வேத்வம் பயதா நித்யம்

நமஸ்தே மந்த்ர ரூபிணி!

ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொன்னவர்:சங்கரநாராயணன்.

தினமும் இருபத்தோரு முறை “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தைச் சொல்லி வருபவருக்கு,அவர் சொல்வதற்கான பலனை அவரது இருபத்தோரு தலைமுறையும் அனுபவிக்கும்.



நாம் பெற்ற தாய்க்குச் சமம் பசு

நாராயணகுருவிடம் ஒருவர் கேட்டார்.


“குருஜி,நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது?அதுதான் செத்துவிட்டதே?உயிரோடு இருக்கும்போதே அதன் பாலைக்குடிக்கிறோமே,அது பசுவின் ரத்தம் தானே!”



“நியாயம்தான்” என்று சொன்ன நாராயணகுரு அவர்கள் சிறிதுநேரம் கழித்துக்கேட்டார்.

“உங்க அம்மா இருக்காங்களா?”



“போனவருஷம் இறந்துட்டாங்க,குரு” என்றார் அவர்.



“உங்க அம்மாவைத் தின்னுட்டீங்களா?” எனக் கேட்டார்.


இலவச ஆருடம் பார்க்கலாம்






ஆருடம் கேட்பவரின் மனதில் உள்ள கேள்வியை தற்கால கோட்சார கிரக நிலையைக் கொண்டு கண்டறிந்து அதற்குரிய பலாபலன்களைக் கூறும் முறைக்கு ஆருடம் என்று பெயர்.

பிறப்பு விபரம் தெரியாதவர்கள்,ஜாதகம் கணிக்க முடியாதவர்கள்(பிறந்த தேதி,நேரம் தெரியாதவர்கள்) கையில் ஜாதகம் இல்லாதவர்களுக்கு தற்கால பலாபலன்களையும் தெரிந்துகொள்ள தினசரி காலை 9 மணி முதல் 10 மணிவரை(இந்திய நேரம்) இலவசமாக சொல்லப்படும்.செல் எண்:99653 05042

Friday, January 14, 2011

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்புThanks:dinamalar 14.1.11

விருதுநகர்: விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.








உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.







இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.







இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்

கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர் கண்டுபிடித்த "சேப்டி லாக்'thanks:dinamalar 14.1.2011

மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் "சேப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக். மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதற்காக கடந்தாண்டு தேசிய விருதும் பெற்றார். இவரது பகுதியில், ஆட்டோ டயர்கள் அடிக்கடி திருடு போயின. "இதுவரை 100 டயர்கள் காணாமல் போய்விட்டன. இனி திருட்டு நடக்காமல் இருக்க ஏதாவது கண்டுபிடிங்க' என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினர்.








இதைதொடர்ந்து, "சேப்டி லாக்கை' கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: "வீல்'லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டுபிடித்துள்ள இந்த "சேப்டி லாக்' நட்டுகளை மறைப்பதோடு, புது டிஸைனாகவும் இருக்கும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. இதன் காரணமாக, டியூப் காற்றை இறக்கவும் முடியாது. இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கார் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுகொண்டால், அவர்களிடமும் இதை செயல்படுத்தி காட்டுவேன், என்றார். இவரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் குமாரவேல் பாராட்டினர்.



thanks:tamil webdunia 14.1.2011

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: போரினால் சிதறிடிக்கப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்குமா? தற்பொழுது வீடின்றி, நிலமின்றி வாழ்ந்து வரும் அவர்களுக்கு பன்னாட்டு உதவிகள் பெருகுமா? அந்த மக்களுடைய வாழ்க்கை 2011இல் எப்படி இருக்கும்?








ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஈழத்தைப் பொறுத்தவரையில் 08.05.2011இல் குரு மாறுகிறது. அந்த மாற்றம் ஈழத்தில் சில மாற்றங்களை மறுபடியும் உண்டாக்கும்.



உரிமைக்காகப் போராடிக்கூடிய மக்களுடைய குரல் மீண்டும் அங்கு ஓங்கி ஒலிக்கும். பன்னாட்டு உதவிகள் அவர்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அரசிற்கு எதிரான சம்பவங்களெல்லாம் மே மாதத்திலிருந்து அங்கு அதிகரிக்கும். இழந்த மக்கள், தவித்த மக்களுக்கெல்லாம் ஒரு தீர்வும் கிடைக்கும். அதை உறுதியாக எதிர்பார்க்கலாம்.

அன்னதானத்தின் மகிமைகள்:மறு விளக்கம்

எவ்வளவோ ஆன்மீகப்புதிர்கள் நமது இந்து தர்மத்தில் இருக்கின்றன.அவைகள் பெரும்பாலும் ஜோதிடக்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி இணைக்கப்பட்டுள்ளவைகளை பாமர மக்களுக்கும் புரியும்விதமாக வெளிப்படுத்துவது நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பொறுப்புக்களில் ஒன்று.



நமது ஊரில் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் உத்திரப்பிரதேசமாநிலத்தில் இருக்கும் சிவபூமியான காசியில் ஒரே ஒரு நாள்(மூன்று வேளை) அன்னதானம் செய்தால்,கிடைத்துவிடும்.



காசிக்கு நாம் சென்று,அங்கேயே ஒரு வருடம் வரை தங்கி,அந்த ஒரு வருடம் முழுவதும்(ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம்) அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம்,நாம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில் இருக்கும் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.எனவே, வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளிலிருந்து வரும் அன்பர்கள் எப்போது அண்ணாமலைக்குச் சென்றாலும்,அங்கே ஒரு நாளுக்கு மூன்று முறை அன்னதானம் செய்வது அவசியம்.



துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால்,காசியில் நாம் வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறோம்.மேலும்,அப்படி அன்னதானம் செய்தவர்,தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தையும் அடைகிறார்.மற்றும் பிறாவத நிலை எனப்படும் முக்தியை அடைகிறார் என அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.



ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை துவாதசி திதி வருகிறது.பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தவர்கள்,நேரம் கிடைக்கும்போதெல்லாம் துவாதசி திதி பார்த்து அண்ணாமலை சென்று அன்னதானம் செய்துவரலாம்.அன்று கிரிவலம் செல்லாமலும் கூட அன்னதானம் செய்யலாம்.



16.1.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை மணி 8.06 முதல் மறுநாள் 17.1.2011 திங்கள் காலை மணி 8.00 வரையிலும் துவாதசி திதி வருகிறது.எனவே, விடுமுறையில் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு,உங்களது கர்மவினைகளை அழித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.



ஓம்சிவசிவஓம்

Sunday, January 9, 2011

இந்தியா வரை நீளும் சீன மூக்கு

பச்சை பசேல் என்ற புல்வெளி அதில் கலைநயமிக்க வெள்ளைநிற மாளிகை, நீல வான பின்னனி, ஒங்கி வளர்ந்த மரங்களுக்கிடையில் ஒய்யார குதியாட்டம் போடும் முயல்குட்டிகள், அழகான மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் இப்படி ஒரு ஆனந்த வாழ்வு ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் நிம்மதி என்பது தாமாக வந்துவிடுமா?

அதிக ரத்த அழுத்தம்  , நானூறை தாண்டும் சக்கரை, நெஞ்சு படபடப்பு, இத்தனை நோய் ஒரு புறம் என்றால் எமன் மாதிரி  வந்து உட்கார்ந்து கொண்ட புற்றுநோய் எப்படி வரும் சந்தோஷம்.  கோட்டை கட்டி வாழ்ந்தாலும் உடல் கூடெல்லாம் நோயால் சூழப்பட்டால் எங்கேயிருந்து மகிழ்ச்சி வரும்.  ஒட்டை வீட்டில் உறங்கினாலும், அடுத்த வேளைக்கு உணவு இல்லை என்றாலும், மாற்ற கூட துணியில்லையென்றாலும் ஆரோக்கியம் மட்டும் இருந்துவிட்டால் ஆனைகூட்டம் எதிரே வந்தாலும் பூனைகளை போல் தூக்கி போடலாம் அதனால் தான் நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம் என்றார்கள்.

        ஒரு தனிமனித சுகவாழ்வுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ஏன் அதை விட முக்கியமானது ஒரு தேசத்தின் பாதுகாப்பு.  வெள்ளி பனிமலையில் தூங்காத இரவுகளை தினசரி ராணுவவீரன் எதிர்கொண்டால் தான் வீட்டு திண்ணையில் நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்ற வார்த்தை மிகைப்படுத்தப்பட்ட கருத்து அல்ல, கண் முன் நிஜமாக நிற்கும் உண்மையாகும்.

        தேச பாதுகாப்பு என்றவுடன்  நமது மனக்கண் முன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்குகளும் குஜராத் கடற்கரைகலும், ராஜஸ்தான் பாலைவனங்கலும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.  இந்தியாவின் விரோதி யாரென்று தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவனை கூப்பிட்டு கேட்டாலும், திண்ணையில் பல்லாங்குழி ஆடும் பாட்டியிடம் கேட்டாலும் பாகிஸ்தான் என்று பளிச்சென்று பதில் வரும், நிஜமாகவே நமது எதிரி நாடு பாகிஸ்தான் தானா?  பாகிஸ்தான் மட்டும் தானா? நேரு காலம் தொடங்கி மன்மோகன்சிங் காலம் வரையில் காங்கிரஸ் அரசாங்கம் அப்படி தான் சொல்லி கொண்டு வருகிறது.  அல்கொய்தா தாலிபான் இன்னும் என்னென்னவோ வாயில் நுழையாத அரபு பெயர்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் வழியாக தான் இந்தியாவிற்குள் நுழைகின்றன.   நமது நாடெங்கும் குண்டுகளை வைப்பதும், பாரளுமன்றத்துகுள்ளேயே தாக்குதல் நடத்துவதும், மும்பை பெருநகரத்தில் ஆக்கிரமிப்பு செய்வதும் பாகிஸ்தான் உளவு படையின் கைங்கர்யம் தானே.  அதனால் காங்கிரஸ் சொல்லுவது சரியாகத் தான் இருக்கும் என்று ஆடு மேய்க்கும் அண்ணாமலையிலிருந்து கணிப்பொறி தட்டும் கவிதா வரையிலும் நம்புகிறார்கள்.   இந்த நம்பிக்கை உண்மையா?

        நம்பிக்கை என்னவோ உண்மைதான் ஆனால் பாகிஸ்தான் மட்டும் தான் எதிரியென்று காங்கிரஸ் சொல்லுவது உண்மையல்ல.  வடஎல்லையில் பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஆப்கானிஸ் தானிலிருந்தும்  பயங்கரவாதிகள் உடுருவுகிறார்கள் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பு கரம் ரகசியமாக நீண்டு கொண்டுயிருக்கிறது.  வங்கதேசத்தில் இருந்து அந்நிய அடிப்படைவாத அமைப்புகள் நாட்டிற்குள் குடியுரிமை பெற்று சுகந்திரமாக நடமாடுகிறார்கள்.   நேற்றுவரை நேபாளத்தில் இருந்த மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு பொதுவுடமை தீவிரவாதிகளின் சர்வதிகார அரசு பொறுப்பேற்று ஈரம் காய்வதற்குள்ளே இந்திய நக்சல்பாரி இயக்கங்களோடு கைகோர்க்க ஆரம்பித்துவிட்டது.  இந்திய அரசின் பழிவாங்கும் போக்கால் இலங்கையின் இனவாத அரசு புத்துயிர் பெற்று சீன பங்காளிகளோடு உறவாடி அமைதி பூங்கவான இந்தியாவின் தெற்கு எல்லையில் பீரங்கி முழக்கங்கள் வருங்காலத்தில் கேட்க வழி ஏற்பட்டு இருக்கிறது.  மக்மோகன் எல்லை கோட்டை பொருட்படுத்தாத சீனா அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தனக்கு சொந்தமென உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டது.  பக்கத்து நாடான பர்மா கூட இன்று இந்தியாவுக்கு நண்பன் இல்லை.  பூடானும், மாலத்தீவும் தொடர்ந்து நண்பர்களாகயிருப்பார்களா என்பதும் சந்தேகமே, ஆக இத்தனை எதிரிகள் நம்மை நாலாபுறமும் சுற்றி நின்று கொத்தி குதற முயற்சிக்கும் போது பாகிஸ்தானை மட்டும் பகையாளியாக காட்டுவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.
      ராணுவரீதியில் பார்க்கும் போது பாகிஸ்தான் என்பது நமது பெண்களின் பாவாடை நாடாவுக்கு சமமானது. அமெரிக்க அண்ணா மட்டும் அந்நாட்டை கண்ணெடுத்து பார்க்கவில்லையென்றால் வெறும் ஐந்து மணி நேர தாக்குதலிலே இஸ்லாமாபாத்தை டெல்லியோடு இணைத்து விடலாம்.  ஆனால் சீனா அப்படியல்ல பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் நம்மை விட பெரியது , என்று மட்டும் தான் நாம் நினைத்து கொண்டியிருக்கிறோம்.   உண்மையில் சீனாவின் ராணுவபலம் என்பது தற்போதைய சூழலில் பீம புஷ்டி கொண்டது என்றே சொல்லலாம்.  இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அதன் ராணுவபலம் அமெரிக்காவுக்கு இணையாகிவிடுமாம்.

        கடந்த 2009-தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தி முன்றாம்தேதியன்று சீனாவில் உள்ள கிங்டாவோ என்ற இடத்தில் முதலாவது சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு நடந்தது.  இந்த அணிவகுப்பில் பங்குபெற இந்தியாவிலிருந்து இரண்டு போர் கப்பல்கள் உட்பட பதினாலு நாடுகளிலிருந்தும் பல  போர் கப்பல்கள் வந்து கலந்து கொண்டன.  ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்த கையோடு இந்த அணிவகுப்பை நடத்தி சர்வதேச ராணுவ நிபுணர்களின் வியப்பிற்கு உரம் போட்டது, எனது பொருளாதார பலம் என்பது உலகம் நினைப்பது போல சாதாரணமானது அல்ல, ஒரே நேரத்தில் சர்வதேச விளையாட்டையும், சர்வதேச ராணுவ அணிவகுப்பையும் என்னால் நடத்த முடியும் என்று உலகத்தின் முகத்தில் ஒங்கி அறைந்து சொல்வது போல சொல்லி சீனா உலகை அதிர வைத்திருக்கிறது. 

        ராணுவ அணிவகுப்பு நடத்துவது பல நாடுகளில் வருடா வருடம் நடக்கும் நடைமுறை சடங்கு தானே அதை சர்வதேச அணிவகுப்பாக நடத்துவது கூட ஒன்றும் பெரிய விஷயமில்லையே இந்தியாவில் கூட இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு இதே போன்ற ஒரு சர்வதேச அணி வகுப்பு நடந்ததே அதில் சீன அணிவகுப்பில் கலந்து கொண்ட உலக நாடுகளை விட அதிகமான நாடுகள் பங்கெடுத்து கொண்டனவே, உருவத்தில் கூட சீன அணிவகுப்பு சுண்டெலிக்கு சமமானது இந்திய அணிவகுப்பு திமிங்கலம் போன்ற பிரம்மாணடமானது தானே என்று சிலர் கேட்கலாம்

        வாஸ்தவம் தான் நம் அணிவகுப்பு சீனாவின் அணிவகுப்பை விட வண்ணத்திலும், எண்ணத்திலும் பெரியது தான், அதில் சந்தேகம் இல்லை, ஆனால் கவனிக்க வேண்டியது அணிவகுப்பை அல்ல, அணிவகுப்பில் பங்குபெற்ற ராணுவ தளவாடங்களை, இந்திய ராணுவ தளவாடங்கள் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரானது அல்ல,  அயல்நாட்டு இறக்குமதிகளே அதிகம், சீனாராணுவ தளவாடங்கள் மட்டுமல்ல அதிலுள்ள சின்ன நட்டு, போல்டு கூட அந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவைளே ஆகும்.   உள்நாட்டு தயாரிப்புகளின் நம்ப தன்மை என்பது வேறு அயல்நாட்டு பொருட்களின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது வேறு.

        சீனாவின் ராணுவ பலத்திற்கு சரியான முறையில் ஈடு கொடுக்க வெளிநாடுகுளை சார்ந்த இருப்பதை தவிர்த்தால் தான் முடியும்.  சீனா கூட சில ராணுவ உதிரி பாகங்களை ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.  ஆனால் இந்தியா அமெக்க, ரஷ்யா உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இஸ்ரேலிருந்தும் கூட இறக்குமதி செய்கிறது.  இதனால் நம் நாட்டு ராணுவ தொழில்நுட்பம் பல வகைகளில் ரகசியங்களை தொலைக்க வாய்யப்புள்ளது. 

        பொதுவுடமை சீனா உருவான காலத்திலிருந்தே அதற்கென்று தனியான அரசியல் பார்வையும் லட்சியமும் உள்ளது.   ஒரு குறிப்பிட்ட காலகெடுவை தனக்கென்று ஏற்படுத்திக் கொண்டு அந்தந்த கால கட்டத்திற்குள் எப்பாடுபட்டாவது இலக்கை அடைந்து விடுவது சீனர்களின்ன இயல்பு.   அவர்களின் தற்போதைய கணக்கு இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு முடிவதற்குள் பூகோளரீதியாக தன்னோடு சம்பந்தப்பட்ட நாடுகளை விட ராணுவ பலத்தில் வலு மிக்கதாக தனது தேசத்தை உருவாக்குவது.  இரண்டாயிரத்து முப்பதாம் ஆண்டிற்கு துவங்கத்திலிருந்து நடுத்தர நிலையில் உள்ள எதிரி நாடுகளோடு வரம்புக்கு உட்பட்ட போர் நடத்தி தனது நிலையை சர்வதேச அரங்கில் உறுதிபடுத்தி கொள்வது இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டிற்குள் அமெக்காவுக்கு இணையான மாற்று சக்தியாக உலகில் உருவாவது இது தான் சீனாவின் இப்போதைய கணக்கு.
          தனது தேசத்தின் இந்த வளர்ச்சிக்கான இந்த இலக்கை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடைவதற்கும், வெற்றி பெறுவதற்கும் சீனாவின் கைவசம் துல்லியமான திட்டம் உள்ளது.  நமது நாட்டை பொறத்த வரை அப்படி எந்தொரு திட்டமும் கிடையாது என்பதை விட அதைப்பற்றிய எண்ணம் கூட நமது தலைவர்கள் எவருக்கும் துளி கூட இல்லை.

          காலையிலிருந்து இரவு வரை தன்னுடைய எதாவது ஒரு செயல் சோனியாகாந்தியை கோபப்படுத்தி விட கூடாது என்ற கவலை தான் நமது பிரதமரை  ஆட்டி வைக்கிறது,   தேசத்தை பற்றி அக்கறை  கொஞ்சமாவது நமது நாட்டு தலைவர்களுக்கு இருக்குமேயானால் இரவு பத்து மணிக்கு மும்பை தாஜ் ஒட்டலை ஆக்கிரமித்து கொண்ட பயங்கரவாதிகளை விரட்ட அடுத்த நாள் காலை 11 மணிக்கு தான் ஆலோசனை கூட்டம் நடத்துவார்களா?  மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காகளை காப்பாற்றி கொள்வதும் இரவு பகலாக வசூல் வேட்டைகளை நடத்துவதிலும் தான் வழக்கமாக இருக்கிறதே தவிர நாட்டு பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதற்கோ வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதற்கோ எங்கே நேரமிருக்கிறது.

        சீனாவின் ராணுவ நிர்வாகம் என்பது மிகவும் கட்டு கோப்பானதாகும்.  ஒரே ஒரு தளபதியின் கீழ் அனைத்து ராணுவ பிவுகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.   நிர்வாகத்திற்காக ராணுவ அதிகார கேந்திரங்கள் பல அடுக்குகளை கொண்டதாகவும் இருக்கிறது.   ராணுவத்தின் செயல்பாடு இப்படி தான் இருக்க வேண்டுமென்று தீர்க்கமான முடிவு அரசாங்கத்திற்கும் உண்டு.  ஆனால் நம் நாட்டில் காணப்படும் நிலவரம் தலைகீழானது.  ராணுவ அதிகாரிகளின் முடிவுகளை விட அரசியல் தலைவர்களின் முடிவே  இங்கு பிரதனமானது.  களத்தில் இருக்கும் ராணுவ அதிகாகள் பாதுகாப்பு சூழலை பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கலாமே தவிர நிலைமைக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்க முடியாது, அதாவது எல்லை கோட்டில் எதிரிகளை சுட்டு கொன்டு  இருக்கும் நேரம் நேருக்கு நேர் எதிகளை சுடாதே என்று அரசியல் தலைமையிடம் இருந்து கட்டளை வந்தால் குண்டடிப்பட்டு சாகலாமே தவிர பதில் தாக்குதல் நடத்த கூடாது.

         இந்த கேவலமான நிலையில் தான் உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்ட இந்திய ராணுவம் இருந்து வருவதை இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் இருந்த போது நம்மால் அறிய முடிந்தது.  ஆரத்தி காட்டி வரவேற்ற தமிழ் மக்களே  துரத்தி அடிப்பதற்கு கூட்டமாக சேர்ந்ததும், வாவென்று கம்பளம் விரித்த இலங்கை அரசே போ என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்கும், ஈழ தமிழர்களின் வாழ்வு இன்பமாக ஆகப்போகிறது என கனவு கண்ட தமிழகத்து தமிழர்களே முணுமுணுத்து முகத்தை துக்கி வைத்து கொண்டதற்கும், இந்திய அரசு தலைவர்களின் நிலையில்லாத புத்தியே காரணம்,  சீனாவில் உள்ளது போல் இந்தியாவில் ராணுவத்திற்கும் அரசிற்கும் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு இல்லை, அணு ஆயுதங்களாக இருக்கட்டும் வேறுவித படைகலன்களாக இருக்கட்டும் எல்லாமே வெவ்வேறு துறைகளின் கட்டுபாட்டிலே உள்ளன.   அவசர காலத்தில் இந்திய ராணுவத்தால் துரிதமாக செயல்பட முடியாது என்ற எண்ணத்தில் தான் எல்லை பகுதிகளில் சீனாவும், பாகிஸ்தானும் பல ஆயிரம் முறைகள் ஊடுருவி முறைதவறி உள்ளன. 

        இந்தியா மற்றும் சீன ராணுவத்தோடு ஒப்பிடும் போது பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் ஒன்றும்மோசமானது அல்ல என்பதை ஒத்து கொள்ள வேண்டும்.  ஆப்கானிஸ்தானம் வழியாக பொருட்களை எடுத்து செல்வதற்கு அங்கு உள்ள குட்டியரசுகள் தடையாக இருப்பதற்காக ஒமர் அப்துல்லாவின் தாலிபன் என்ற சின்னசிறிய படைக்கு வீடியோ காஸட் முலமாகவே சரியான பயிற்சி கொடுத்து தாலிபான்கள் வெற்றியடைய வழிசெய்தது ஒரே ஒரு உதாரணமே அந்த நாட்டின் ராணுவத்தின் திறனை மெச்சதக்க விதத்தில் நமக்கு காட்டும், ஆனால் துரதிஷ்டவசமாக அங்கிருக்கும் ஒவ்வொரு ராணுவவீரனும் ஒரே ஒரு நாளாவது பாகிஸ்தான் அதிபராகி விட வேண்டும் என்பது தான் அந்த நாட்டின் சாபம்.  அதுவே நமக்கு கடவுள் கொடுத்த வரம்.

         சீனாவின்போர் வியூகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.  அந்த விஷயத்தில் நாம் சூடுப்பட்ட பூனை. உலக நாடுகள் சிவப்பு சீனாவை அங்கிகரிக்க தயங்கிய போது ஜனநாயக நாடான இந்தியாவை பயன்படுத்தி கொண்ட போதும்,  ஐக்கிய நாட்டு சபையில்  நிரந்தரமான இடம் வருவதற்க்காக நம் மூலமாக காய்களை நகர்த்திய போதும் பஞ்சசீல கொள்கையில் கையெழுத்து போட்ட பேனாவின் மை காய்வதற்கு முன்பே நம் மீது போர் தொடுத்த போதும் சீனாவின் முகம் இது  தான் என நாம் தெளிவாகவே தெரிந்ததே வைத்திருக்கிறோம்.


        சீனாவின் ராணுவ அணுகு முறையானது ஒரே நேரத்தில் பல எதிரிகளை குறி வைப்பது அல்ல.   அப்படி செய்வது அமெக்கா மட்டும் தான்,  ரஸ்யாவை பயமுறுத்தி கொண்டியிருந்த அதே வேளையில் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வேட்டை நடத்திய கதையெல்லாம் அதற்கு உதாரணம்.  ஆனால் சீனா ஒரு நேரத்தில் ஒரு அண்டை நாட்டுடன் தான் பிரச்சனையை வளர்த்து கொள்ளும்.   சில காலத்துக்கு முன்பு வரை கூட தைவான் நாட்டுடன் குழாய் அடி சண்டை போட்டு கொண்டிருந்த சீனா இப்போது  புன்முறுவல்  காட்ட துவங்கியுள்ளது, இதை விட ஒரு படி கீழே இறங்கி உன்னை அடித்தது தவறு தான், வேண்டுமானால் வீக்கத்திற்கு மருந்து கூட தடவி விடுகிறேன் என்று ஒப்பந்தங்கள் எல்லாம் கூட போட ஆரமித்து விட்டது.  இப்போது சீனா தனக்கு எதிரி என்று எந்த நாட்டை பார்கிறது தெரியுமா? அதிர்ச்சியே வேண்டாம்.  இந்தியாவை தான்,  அது தனது முதல் எதிரியாக குறி வைத்திருக்கிறது.


          விடுதலைக்கு பிறகு கெடுதலையான தலைவர்கள் பலர் இந்தியாவை ஆண்டாலும் கூட இந்தியா பல வகையில் வளர்ந்து வருகிறது.  இந்தியர்களின் தொழில் நுட்ப அறிவு சீனர்களை ஒப்பிடும் போது பல மடங்கு உயர்வாக உள்ளது.   இந்தியாவின் கனிம வளங்கள், இயற்கை செழிப்புகள் அற்புதமானவை,  ஆயிரம் முறை சர்வதேச பொருளாதார தடை இந்தியா மீது திணிக்கபபட்டாலும் கூட இந்திய கப்பல் தரை தட்டாது.

        சீனர்களை போல் இந்தியர்கள் அடிமை புத்தியை அதிகம் கொண்டவர்கள் அல்ல.  இரண்டாயிரம் ஆண்டுகளாக அந்நிய அரசாட்சி இந்தியாவில் நடந்தாலும் மக்களின் கருத்து சுகந்திரம் அதிகமாக பாகிக்கப்பட்டதும் இல்லை.  இந்தியர்கள் என்ன விலை கொடுத்தாவது கருத்து சுகந்திரத்தை காப்பாற்றியே தீருவார்கள். இது சீனர்களுக்கு மிக நன்றாக தெரியும்.  சீனநாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்திலும் சரி,  நிலபிரபுக்களின் ஆட்சி கொடி கட்டி பறந்த போதும் சரி, தற்போதைய பொதுவுடமை வாதிகளின் சர்வதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் போதும் சரி மக்கள் என்பவர்கள் களிமண் மொம்மைகள் தான் அரசாங்கம் பிடித்து வைத்தது போல உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் அவர்களின் வேலை.  அரசாங்கத்தை கேட்காமல் சின்ன முணுமுணுப்பு கூட அவர்களிடமிருந்து வெளிவந்தால் அவ்வளவு தான், கதை முடிந்தது,   பாதாள சுரங்கங்கறுக்குள் காலம் தள்ள வேண்டியது தான், இத்தகைய அடிமை வாழ்க்கை முறை சீனர்களுக்கு பழகிபோய் விட்ட ஒன்று தான் என்றாலும் கூட திறந்தவெளி சிறைச்சாலையான நாட்டிலிருந்தே சிறந்த பண்பாடையும் ஆச்சர்யப்படதக்க கலை முன்னேற்றத்தையும் அவர்கள் பெற்றிருந்தார்கள் என்று அறியும் போது நமக்கு வியப்பு ஏற்படுவது வேறு விஷயம்.

        இந்தியர்களின் சுகந்திர உணர்வை உணர்ந்து தான் பொதுவுடமை சித்தாந்தம் இந்தியாவில் பரவ முடியாது என்று இடது சாரி இயக்கங்களை அந்நாடு இந்தியாவை பொறத்தவரை கைவிட்டு விட்டது.   இல்லையென்றால் 1962-ல் சீன படையெடுப்பை வரவேற்று பரணி பாடியவர்கள்  இந்தியாவை சிவப்பாக்கி இருப்பார்கள்.   நல்லவேளை கடவுள் நம்மை காப்பாற்றினார்.  ஆனாலும் கூட சீனா நக்சல்பாரி இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வதை இன்னும் நிறுத்தவில்லை.  சீனாவின் சிவப்பு விழிகள் இந்தியாவின் மீது திரும்பிய பிறகு தான் இங்கு பொதுவுடமை தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை கவனிக்க வேண்டும்.   ஆனால் நமது அரசயல்வாதிகள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டார்களா?  என்பது சந்தேகமாக இருக்கிறது. லாலு   பிரசாத் யாதவ் போன்ற அதிமேதாவிகள், நக்சல்லைட்டுகள் அப்பாவி மக்களை தாக்கமாட்டார்கள் என்று சொல்வதிலிருந்தே சிவப்பு அபாயத்தை இவர்கள் சரிவர உணரவில்லை என்று தோன்றுகிறது.

 நமக்கும் சீனாவுக்கும் இன்னும் தீர்க்கப்படாத தாவாக்கள் பல உண்டு,  குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் நமது எல்லையில் உள்ள 4000 கிலோ மீட்டர் தொலைவை சீனா இன்னும் உரிமை கொண்டாடுகிறது.  இந்த பிரச்சனையை தீர்க்க இருபத்தி ஒன்பது ஆண்டுகள் பேச்சு வார்த்தை நடத்தி போதும் சொல்லி கொள்கின்ற மாதிரி முன்னேற்றம் எதுவும் இல்லை, வேண்டும்யென்றே தொடர்ச்சியான முட்டுகட்டைகளை சீனா ஏற்படுத்தி வருகிறது.  அருணாச்சல பிரதேச மக்களுக்கு வெள்ளைதாளில் விசா கொடுக்க துவங்கிய சீனா இதே திட்டத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு வரையில் விரிவுப்படுத்தி விஷ விளையாட்டை ஆடி வருகிறது. 

        சீனாவின் இத்தகைய சீண்டல்களுக்கு மூலகாரணம் என்ன என்பதை தோண்டி எடுக்கும்போது அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் கிடைக்கின்றன.  இந்தியாவின் வளர்ச்சி பல வகைகளில் நல்ல முறையில் இருந்தாலும், ராணுவத்தை பொறுத்த வரை இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை ராஜ்வ்காந்தி, வாஜ்பாய் போன்ற பிரதமர்களை தவிர மற்றவர்கள் ராணுவ வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை அல்லது ராணுவ முக்கியத்துவத்தை உணரவில்லை இந்திரா காந்தி யுத்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ராணுவத்தை உள்நாட்டிற்குள் பயன்படுத்துவதில் காட்டிய அக்கறையை அதன் வளர்ச்சியில் காட்டுவது கிடையாது.   ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் தான் இந்திராகாந்தி போன்ற அரசியல் தலைவர்கள் அக்கறை  கொண்டிருந்தார்களே தவிர உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஈடுபாடு கொள்ளவில்லை ரஷ்யாவின் காலாவதியான ஆயுத தொழில்நுட்பம் பாகிஸ்தானை மிரட்டுவதற்கு சரியாக இருக்கமே தவிர சீனாவோடு மோத கூடிய அளவிற்கு தகுதி வாய்ந்தவைகள் அல்ல.  காலம் கடந்த ஞானம் போல் சமீப காலங்களில் தான் அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்க துவங்கியுள்ளது.  வெளிநாடுகளிடமிருந்து அவசர அவசரமாக இறக்குமதி செய்தாலும் சீன அளவு தனது வலுவை உயர்த்தி கொள்ள இந்தியாவிற்கு குறைந்த பட்சம் 2015-வரையாவது ஆகலாம், அதற்குள் உள்நாட்டு பிரச்சனைகளில் இந்தியா மூழ்கும் படியும் எல்லை தகராறுகளில் தத்தளிக்கும் படியும் செய்துவிட்டால் தனது வல்லரசு கனவை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம் என சீனா என்ணுகிறது.

இத்தனைக்கும் சீனாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று சொல்லிவிடமுடியாது இந்திய பொதுவுடமைவாதிகள் கனவு காணுவது போல் சீனாவில் பாலும் தேனும் ஒடவில்லை.   அதன் மறுபக்கம் பொதுவுடமையால்  சிவப்பாக்கப்பட்டதல்ல வறுமையால் சிவப்பாக்கப்பட்டதாகும்.   வேலை இல்லாமல் பலர் கிடக்கிறார்கள்.   தெருத் தெருவாக பிச்சையெடுக்கும் சீனர்களும் அங்கு ஏராளமாக உண்டு.  ஆனாலும் சீனா அதை சர்வதேச ரீதியில் மிக சாமார்த்தியமாக மறைத்து வருகிறது.   நெருப்பை எத்தனை நாட்கள் தான் மடியில் சுட்டி பாதுகாக்க முடியும்,  உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும், சீனாவிற்கும் திபெத்திற்கும் உள்ள பிரச்சனை அனுமார் வாலில் பற்றிய நெருப்புக்கு சமமானதாகும்.  சர்வதேச அரங்கில் தாலாய்லாமாவுக்கு உள்ள மதிப்பும் செல்வாக்கும்,  அமெக்காவின் கருணை பார்வையும்  தாலாய்லாமா மீது சமீபத்தில் விழந்து வருவதும் சீனா என்ற வெடிமருந்து பீப்பாயில் வெகு சீக்கிரத்தில் நெருப்பு வைக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

        சீனாவில் கீழக்கே உள்ள கடலோர பிரதேசங்கள் மிக செழிப்பானதாகும்.   அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மிக உயர்வான நிலையிலேயே இருக்கிறது.  ஆனால் மேற்கு கடலோர பகுதிகள் வளமையற்ற, வறண்ட நிலங்களாகும். இங்குள்ள மக்களில் பலர் எல்லோரும் எல்லாமே பெறலாம் என்ற பொதுவுடமை தத்துவம் ஆட்சி செய்யும் நாட்டில் பட்டினியில்; கிடக்கிறார்கள்.  இப்படி ஒரு பகுதி வளமையும் மறுபகுதி வறுமையும் சூழ்ந்திருப்பது பல பொருளாதார ஏற்றத்தாழ்வையும் மனக்கசப்புகளையும் உள்ளுக்குள் வளர்த்து வருகிறது. தேசத்தின் பருவ நிலைக்கு ஏற்றவாறு தொழில் திட்டங்களை வகுக்காததால் இயற்கை அமைப்பு சீரழித்து பல சுற்றுசூழல் பிரச்சனைகளை சீனா எதிர்நோக்கி உள்ளது   வெள்ளபெருக்கு,  நில அதிர்வு கடல்மட்டம் உயருதல் போன்ற இயற்கை பேரிடர்களையும் அது சந்திக்க வேண்டியுள்ளது.  ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி நிர்வாகத்தில் சர்வதிகார தன்மை மேலோங்கி நிற்பதால் தீழ்மானிக்கப்பட்ட ராணுவ இலக்குகளை மிக சுலபமாக அந்நாட்டால்  எட்டி விட முடியும்.    


         நமது நாட்டிற்குள் உள்ள சவால்கள் நமக்கு நன்றாக தெரியும்.
சுயநலம் இல்லாத   அரசியல் தலைவர்கள், தேசபக்தியுள்ள நிர்வாகிகள் அரசியல் விழிப்புணர்சி கொண்ட மக்கள் இந்தியாவில் குறைவு,   நாட்டுவலம் கருதி முடிவுகளை எடுப்பதை விட தலைவர்களின் நலன் கருதியே இந்திய முடிவுகள் பல நேரங்களில் அமைந்து விடுகிறது, மிக சமீபத்திய உதாரணங்களை சொல்வதாக இருந்தால் இலங்கை தமிழர் விஷயத்தில் நம் நாடு மேற்கொண்ட முடிவுகளை சொல்லலாம்.

        திருமதி.   இந்திராகாந்திக்கு பல சுயநல ஆசைகள் உண்டு என்றாலும் கூட இந்தியாவை ஆசிய  வல்லரசாக கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது, அந்த கணவின் வெளிப்பாடு தான் ஒருங்கிணைந்த பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாடை உருவாக்கியது,  இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் இலங்கையால் வருங்காலத்தில் பிரச்சனைகள் வரும் என்று அவர் தீர்க்கமாக நம்பினார்,  இதன் அடிப்படை தான் தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் ஆக்கபூர்வமான பல உதவிகளை செய்தார்.  பல போராளி குழக்கள் இலங்கûயில்இயங்கினாலும்,  புலிகள் அமைப்பை  மட்டும் அவர் தேர்ந்தெடுத்ததிற்கு பல காரணங்கள் உண்டுயென்றாலும் அதில் முக்கியமான காரணம் எம்,ஜி. ஆர்  ஆகும்.  பலவித விமர்சனங்கள் எம்.ஜி.ஆன் அரசியல் வாழ்க்கை பற்றி இருந்தாலும் கூட அவர் மனிதர்களை தரம் பிரிக்கும் விஷயத்தில் மிக கெட்டிக்காரர் என்பதை அவர்  எதிரிகள் கூட ஒத்துகொள்வார்கள்.

     வேலுபிள்ளை பிரபாகரனிடம் உள்ள தலைமை பண்பு,   சரியாக திட்டமிடும் இயல்பு, கட்டுகோப்பாக இயக்கத்தை வழி நடத்தும் பாங்கு போன்றவைகள் எம்.ஜி.ஆரின் கவனத்தை கவர்ந்ததன் அடிப்படையில் இந்திரா காந்தியிடம் மிக நல்ல அறிமுகத்தை பிரபாகரன் பெற நேரிட்டது.  ராஜீவ்காந்தி கொலை விஷயத்தில் புலிகளை குற்றம் சாட்டாலாம் தவிர மற்றப்படி ஈழ தமிழர்களை பொறுத்தவரை  அவர் சரியான முறையிலேயே பல நேரங்களில் நடந்து கொண்டார் எனலாம்.   ஆனால் வரலாற்று தெளிவும் அரசியல் தெளிவும் அறவே இல்லாத சோனியா காந்தியின் தவறான வழிகாட்டுதல் முலம் இந்திய அரசு இலங்கை பேரினவாத அரசுக்கு உதவி செய்து தமிழர்கள் வாழ்வில் மட்டுமல்ல இந்தியர்கள் வாழ்விலும் பலவிதமான தொல்லைகளை அணுபவிக்க வழி செய்து விட்டது.

        சீன பொதுவுடமைவாதிகள் மதங்களின் விரோதிகள் போல காணப்பட்டாலும் கூட அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டார்கள்.  இலங்கை அரசு, பௌத்த அரசு,  சீனமக்களும் பௌத்தத்திற்க்கு விரோதிகள் அல்ல.   நீயும் பௌத்தன்.  நானும் பௌத்தன.  இடையில் இந்திய இந்துகளுக்கு என்ன வேலை?  உனக்கு துனையாக நான் வருகிறேன் என்று இலங்கையில் வந்து உறுதியாக சீனர்கள் காலூன்றி விட்டார்கள்.

        இனி இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ராணுவ இலக்குகளை மிக சுலபமாக கண்காணிக்கவும் தாக்கவும் சீனாவால் முடியும்.  அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புகளை நேராக அனுபவித்து அறியாத தமிழக மக்களும், கேரள மக்களும் அனுபவிக்க போகிறார்கள்.   இமயம் மலையில்மட்டுமே தான் கேட்ட பீரங்கி முழக்கங்கள் குமரி கடற்கரையிலும் கேட்க போகிறது,  எதிர்கால விளைவுகளை தீ்ர்மானிக்கும் திறனற்ற தலைவர்களிடம் பொறுப்பை கொடுத்தால் பிணம் தின்னும் கழகுகள் தான் அமைதி புறாக்களாக வேடமிட்டு அணிவகுக்கும்.

         சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் ஜவகர்லால் நேருவை போல் காலம் கடந்து முடிவெடுத்து கவலைப்படுவதை விட்டுவிட்டு காலத்தே முடிவெடுக்க வேண்டும்  பருவ நிலா காலத்தில் பயிரை போய் காக்காமல் அறுவடைக்கு சென்று பார்த்தால் அழாக்கும் மிஞ்சாது என்பதை நமது தலைவர்கள் உணர வேண்டும்.   முதல்கட்டமாக திபெத் பற்றி அதாவது அது சீனாவின் ஒருங்கினைந்த பகுதி அல்ல என்பதில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும்,  காஷ்மீர் பள்ளதாக்கில் உள்ளவர்களுக்கும் வெள்ளை தாளில் சீனா விசா வழகங்குவது போல் திபெத்தில் உள்ள ஜில்ஜியாங் மாகாண மக்களுக்கு நாமும் வெள்ளை தாள் விசா வழங்க வேண்டும் அப்படி செய்தால் தான் அடுத்தவனின் வலி என்னவென்று சீனாவுக்கு புரியும்,  அதை விட்டுவிட்டு சீன தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதுவது,  வேண்டுகோள் வைப்பது,  எச்சரிக்கை விடுவது என்று இருந்தால் நிலைமை கெட்டு எல்லாம் கைமீறி விடும்.


     பொருளாதார நிலை,  தகவல் தொழில் நுட்ப நிலை,  எரிசக்தி நிலை போன்வற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் நிலையானதாக இரு்க்க  இந்திய தேசிய ராணுவம்  வலுவுடையதாக இருக்க வேண்டும்.   நமது ராணுவ பலத்தை கண்டு பக்கத்து நாடுகள் அச்சமடைவது நாகரிகமான செயல் அல்ல.  என்று பலர் கருதினாலும் முயல் பேசுகின்ற சமாதானம் காற்றில் கரைந்து விடும்.  சிங்கம் பேசுகின்ற சமதானமே அம்பலத்தில் ஏறும் என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டு அண்டைநாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும்,  அந்நாட்டு மக்களுக்கான நியாமான அரசியல் தீர்வுகளுக்கு துணை நிற்கவும் கற்று கொண்டால் நமது எதிரிளான சிவப்பு சீனாவும்,  பச்சை பாகிஸ்தானும்,  நிச்சயம் யோசித்து தொல்லை கொடுப்பதை நிறுத்த முடிவெடுப்பார்கள்.