Tuesday, March 24, 2009

சிறந்த தம்பதியாக வாழவும்,சிறந்த வாழ்க்கைத்துணையைத்தேர்ந்தெடுக்க...


கணவன் மனைவிக்கு சில உருப்படியான யோசனைகள்

கணவன் மனைவி உறவு காம சுகத்திலிருந்தே ஆரம்பமாகிறது.இதில் கணவன் மனைவியை படுக்கையில் திருப்திபடுத்தவேண்டும். மனைவிக்கு திருப்தி கிடைக்க படுக்கையில் கணவனது ஆசைகளை மனைவி நிறைவேற்ற வேண்டும்.அதாவது,படுக்கையில் மனைவியானவள் கணவனுக்கு அடிமையாக(தாசியாக) நடந்து கொள்ளவேண்டும்.
பெண் என்பவள் காம சொரூபம்.ஆண் என்பவன் ஒரு பெண்ணை காமத்தில் திருப்திபடுத்தவே படைக்கப்பட்டிருக்கிறான்.அதன் பிறகே,அவனது சம்பாத்தியம்,கவுரவம்,திறமை எல்லாமே!

ஆனால் இன்று திருமணம் ஆணின் சம்பளம் மற்றும் பெண்ணின் வரதட்சணை இவற்றைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்,ஆணின் திருமண வயதைவிட பெண்ணின் திருமணவயது குறைந்தது 3 வருடங்கள் குறைவாக இருப்பது மிக நல்லது.அதிக பட்சம் 8 வருடங்கள் குறைவாக இருக்கலாம்.அதைவிட அதிகமாக இருப்பது விரும்பத்தக்கது அல்ல.10 வருடம்,12 வருடம்,14 வருடம் வித்தியாசம் இருந்தால் அந்த மனைவியின் ஒழுக்கத்திற்கு காரண்டி தரமுடியாது.

தன்னைவிட மூத்த பெண்ணை ஒருவன் உறவு கொண்டால் அவனது முகத்தில் கிழத்தன்மை வந்துவிடும்.அதே சமயம் அந்த மூத்த பெண்ணிற்கு இளமைத்தன்மை வந்துவிடும்.ஏன் இப்படி வருகிறது?
ஒவ்வொரு ஆணின் பிறப்புறுப்பு வழியாக சுக்கிலம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது.ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக சுரோணிதம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது.இந்த திரவங்கள் அவரவரது உடல்வாகு, வயது,வலிமையைப் பொருத்து மாறுபடுகிறது.ஒரு ஆணின் சுக்கிலம் நீண்டகாலமாக ஒரே பெண்ணின் உடலுக்குள்ளும்,ஒரு பெண்ணின் சுரோணிதம் ஒரே ஆணின் உடலுக்குள்ளும் பாய்ந்தால் இருவரின் உடலும் முழு ஆரோக்கியமாக இருக்கும்.
பலருடன் உடலுறவு கொள்ளும்போது உடல் சமநிலை பாதிக்கப்படும்.இதைத்தான் நமது தமிழ் முன்னோர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையாக தமிழ்மரபாக வகுத்தனர்.மிகுந்த காம இச்சை உள்ளவர்கள்-ஆணோ,பெண்ணோ-துணைவி/துணைவன் கூடுதலாக வைத்துக்கொள்ளலாம்.ஆனால் அதுதான் எல்லை.
இந்த எல்லையை மீறும்போது ஒரு குடும்பம் சிதைகிறது.
இப்படி பல குடும்பங்கள் சிதைந்தால்,ஒரு ஜாதியே நாசமடைகிறது.பல ஜாதிகள் நாசமடைந்தால்,நாடு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.
எனவே,ஒருவனுக்கு ஒருத்தியாக வாழுங்கள்.

திருமணமான தம்பதிகள் ஒவ்வொரு முறையும் உறவு கொள்ளும்போதும் வித்தியாசமாக உறவு கொண்டால் கிக் அதிகமாகும்.இல்லாவிட்டால்,வாழ்க்கைத்துணை மீது காம மயக்கம் வராது.
கணவன் மனைவியையும்,மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை 60 டெக்னிக்குகளாக விவரிக்கும் புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது.அந்த புத்தகத்தை ஒவ்வொரு திருமணத்தம்பதியும் அவசியம் படிக்கவேண்டும்.ஏன் எனில் இன்று காமம்-மனைவியைப்பற்றி- அவளை/அவனை எப்படி வளைத்துப் போடுவது என்பது பற்றி சொல்லித்தர ஆளில்லை.அப்படியே இருந்தாலும் சொல்லித்தருபவர்கள் அவமானம் அடைகிறார்கள்.
அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் ரூ.100க்கு வெளியிட்டுள்ளது.அந்த புத்தகத்தின் பெயர்:ரொமான்ஸ் ரகசியங்கள்.
இதில் விளக்கப்பட்டுள்ள 60 டெக்னிக்குகளில் 20 மட்டும் பின்பற்றினாலே கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவனுக்கும் காமவெறியே உண்டாகும்.முடிவாக சிறந்த தம்பதியாக வாழ்வார்கள்.இது அனுபவ உண்மை.
இதே புத்தகம் 60 வயதைக்கடந்த தம்பதிக்கும் பல அரிய யோசனைகளைக்கூறுகிறது.
தம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் செவன் இயர் இட்ச் என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.7ஆம் வருடம் தனது இல்லற வாழ்வில் ஒருவித சோர்வு உண்டாகிறது.சிலருக்கு இது 7ஆம் வருடம் உண்டாகாமல் 9 அல்லது 10 அல்லது 12 ஆம் வருடம் உண்டாகிறது.இந்த சமயத்தில்தான், மூன்றாம் ஆள் உள்ளே நுழைந்து கள்ளக்காதல் பிறக்கிறது.இதை சரிசெய்ய, அந்த வருடங்களில் 7,9,10,12 ஆம் வருடங்களில் 10 நாட்களுக்கு ஏதாவது கடலோரம் அல்லது மலையோரம் உள்ள சுற்றுலாஸ்தலம் ஒன்றிற்குச் சென்று அங்கே ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டும்.குழந்தைகளை உடன் அழைக்காமல் சென்றால் நல்லது.


Tuesday, March 10, 2009

ஆன்மீகம் நமக்கு அவசியமா? ஏன்? எதற்கு?

ஆன்மீகம் நமக்கு அவசியமா?ஏன்? எதற்கு?

இந்த கேள்வி கேட்பது மிகச் சுலபமானது.ஆனால் பதிலோ மிக விரிவானது.
இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவில் செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான் என்ற கட்டுரையை வாசித்திருப்பீர்கள்.இதெல்லாம் நிஜமா? என சந்தேகம் கூடப்பட்டிருப்பீர்கள்.இதே தகவலை அமெரிக்கா அல்லது ஆங்கில நாடு வெளியிட்டிருந்தால் நாம் காலரைத் தூக்கிக் கொண்டாடியிருப்போம்.இல்லையா? இந்த சம்பவம் நிஜமாக இருந்தும் கூட ஏன் அமெரிக்கா இதைப் பிரபலப்படுத்தவில்லை?
ஏனென்றால்,இந்த அதிசயம் இந்து மதத்தின் பெருமைகளில் ஒன்றாக உள்ளது.கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா எப்படி இதை ஒப்புக்கொள்ளும்?!

ஒரு மாறுதலுக்காக திருநள்ளாறு சனிபகவான் கோவில் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.சனிபகவான் கிறிஸ்தவமதத்திற்குச் சொந்தம் என்று வைத்துக்கொண்டால்,கதையே வேறு.மாதம் 1000 கோடி டாலர்கள் செலவழித்து சனிபகவான் கோவிலை பிரபலப்படுத்தியிருப்பர்.இஸ்லாமிய நாடுகளில் இந்த விஷயத்தை-அதிசயத்தை பிரபலப்படுத்தியே இஸ்லாம் மத மக்கள் தொகையை 99% அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு மாற்றத்துவங்கியிருப்பர்.ஒசாமா பின்லேடன் சனிபகவான் கோவிலைத் தாக்க தனி பயங்கரவாதக்குழுக்களை அனுப்பி.. ..
சரி! இந்துக்களாகிய நாம் ஏன் இந்த விஷயத்தைக் கொண்டாடுவதில்லை.இந்த விஷயம் பிரபலமடையாமல் தி.மு.க., கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் மிகக் கவனமாக பார்த்து-இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.அப்படி பிரபலப்படுத்த விட்டால்,இந்துத்துவக் கட்சியான பா.ஜ.க.வளர்ந்துவிடுமே!
அரசியல் வேறு,நமது பெருமைமிகு பண்பாடு வேறு என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.பிறகு,எப்படி இந்துக்களாகிய நமக்கு நமது பெருமை தெரியும்?
ஒரு சாதாரண இந்த அதிசய சம்பவத்திற்கே இப்படி என்றால் சேது சமுத்திரத்திட்டம்,அயோத்தி ராமர் கோவில் பிரச்னை,அமர்நாத் பனிலிங்கம் சார்ந்த பிரச்னை,சபரிமலை தந்திரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு,திருப்பதி கோவிலில் கிறிஸ்தவ (ஆந்திர முதல்வர் சாமுவேல் ராஜ சேகர ரெட்டி)செய்யும் சேட்டைகள் 100 பக்கம் எழுதலாம்.தினமும் ஒரு பிரச்னையைப்பற்றி பார்க்கலாம்.

Monday, March 2, 2009

சித்தர்கள் பற்றி நான் அறிந்தவை


சித்தர்கள் பற்றி இதுவரை நான் அறிந்தவைகள்

சித்தர்களின் தலைவர் அகத்தியர் அவர்கள் ஆவார்.
சித்தர்கள் பல்லாயிரம் பேர்கள் உள்ளனர்.
சித்தர்கள் எப்போதும் பிச்சை எடுக்க மாட்டார்கள்.
தமிழகக் கோவில்களில் உள்ள குளங்களில் இப்போது துர்நாற்றம் வீசுகிறது.கி.பி.2011 வாக்கில் அல்லது அதற்கு முன்பே சித்தர்களின் ஆட்சி நமது இந்துயாவை தலைமையகமாகக் கொண்டு பூமியை ஆளப்போகிறார்கள்.
சித்தர்களின் ஆட்சி ஆரம்பம் ஆனதும் கோவில் குளங்களில் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.
கி.பி.2011 முதல் 300 ஆண்டுகளுக்கு நமது பூமி முழுக்க இந்து மதம் பரவிக்கொண்டே இருக்கும்.
26.12.2004 அன்று சுனாமி வந்தமைக்கு புவியியல் ரீதியான விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறினாலும், 2004 வரை கடலோரங்களில் மனிதத்தன்மையற்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன.இந்த குற்றங்களின் சிந்தனை-காந்த வீச்சு கடலுக்கடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தவம் செய்து கொண்டிருந்த காக புசுண்டர் என்ற சித்தரின் கோபத்தைத் தூண்டும் விதமாகவும் தவத்தைக் கலைக்கும் விதமாகவும் அமைந்துவிட்டது.அவர் கோபமாக,தவம் கலைந்து எழுந்ததால் தான் சுனாமி எனும் ஆழிப்பேரலை உண்டாகி பல லட்சம்மக்கள் மாண்டனர்.
கி.பி.2010 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலைத்தொடரில் சித்தர்கள் பூமியில் சித்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டின் முடிவில் உலகம் சித்தர்களின் ஆளுகைக்கு வரும்.
மறுபுறம் சித்தர்கள் தனது சூட்சும உடல் மூலமாக வானில் எந்த பாதைவழியாக பறக்கிறார்கள் என்பதை புதுடெல்லியில் உள்ள சித்தர்கள் ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2008 இல் சித்தர்கள் பற்றி உலகளவிலான மாநாடு ஒன்று நடத்தினர்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினத்தந்தி பத்திரிகையில்
செவ்வாய்க்கிழமை தோறும் வரும் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் தொடர் சித்தர்களைப்பற்றி நாவல் போல விளக்குகிறது.
வெள்ளி தோறும் அகத்தியர் ஜீவநாடி தொடர்-அகத்தியர் அவர்கள் பல மக்களின் பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுகிறார்.
வெகு விரைவில் சித்தர்கள் பல்லாயிரம் அதிசயங்கள் நிகழ்த்த உள்ளனர்.பாவம் செய்யாதவர்களால் மட்டுமே அவற்றை உணர முடியும்.
சித்தர்கள் நமது முன்னோர்கள்! சித்தர்களின் வாரிசுகள் நாம். . .