Wednesday, April 20, 2011

சனிப்பிரதோஷத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபித்துவாருங்கள்






பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று உருவானதால்,சனிப்பிரதோஷம் மற்ற பிரதோஷங்களை விடவும் மிக முக்கிய நாளாக சிவபக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

தினப்பிரதோஷ நேரம் என்பது தினமும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையாகும்.இதில்,ஞாயிற்றுக்கிழமையன்று இதே நேரத்தில் தான் இராகு காலமும் அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் தான் சிவபெருமானின் நேரடி அவதாரமான பைரவ வழிபாட்டைத் துவக்க வேண்டும்.

இதே நேரத்தில் துர்கை அல்லது உக்கிரமான பெண் தெய்வத்தின் வழிபாட்டையும் செய்ய ராகுவின் உக்கிரம் நம்மை பாதிக்காமல் வாழலாம்.



எதிர்வரும் சனிப்பிரதோஷம் 30.4.2011 சனிக்கிழமையன்று வருகிறது.இந்த நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலிருக்கும் திருவானைக்கால் அல்லது நெருப்பு ஸ்தலமாகிய அண்ணாமலை அல்லது சிதம்பரம் அல்லது உங்கள் ஊரிலிருக்கும் பழங்கால சிவாலயம் அல்லது கொல்லிமலை அல்லது சித்தர்களின் வீடு சதுரகிரிக்குச் செல்லுங்கள்.

இந்த பிரதோஷ நேரத்தில் வழக்கம் போல்,மஞ்சள் விரிப்பில் அமர்ந்தும்,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும்,இரு உள்ளங்கைகளில் தலா ஒரு ருத்ராட்சம் அணிந்தும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவாருங்கள்.இந்த ஒன்றரை மணி நேரம் ஜபிக்க இயலாதவர்கள் மாலை 5.30 முதல் 6 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வாருங்கள்.

இந்த கோவில்களில் ஏதாவது ஒன்றுக்குச் செல்ல இயலாதவர்கள் அவரவர் வசிப்பிடத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவும்.



ஒரு சனிப்பிரதோஷத்தன்று ஒருவன் சிவாலயம் சென்றால்,ஐந்தாண்டுகள் தினமும் சிவாலயம் சென்ற புண்ணியம் கிடைக்கும்.

அந்த சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று ஓம்சிவசிவஓம் ஜபித்தால்?

(கலியுகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே கடுமையான கர்மங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களே! கர்மங்களைக் கழிக்க சுலப வழிமுறைகளில் ஒன்றே ஓம்சிவசிவஓம்!!!)

பண நெருக்கடியிலிருந்து மீள உதவவும்,செய்யும் தொழிலில் ஏற்படும் விழ்ச்சியைத் தடுக்கவும்,நமது கர்மங்களை அழித்தவாறே,நமக்குச் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


எனது குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடும்,வழிகாட்டுதலோடும் இந்த கட்டுரையை மஹாவில்வம்       வலைப்பூ வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த பைரவர் வழிபாட்டினை மீண்டும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.இவர் சுமார் 40 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது அனுபவங்களால் பல்லாயிரக்கணக்கான மக்களை மாந்திரீக பாதிப்பிலிருந்து நீக்கியவர்;கடுமையான கர்ம வினைகளைப் போக்கி பலரது வாழ்க்கையில் நிம்மதி,செல்வ வளம் என்னும் தீபங்களை ஏற்றியவர்.

அவரது லட்சியங்கள் மூன்று:முதன்மையானது ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்புதல்

அடுத்தது பைரவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணரச்செய்வது

மூன்றாவது அன்னதானத்தின் பெருமைகளை நித்யக் கடமையாக்குவது

இறுதியாக ஆன்மீக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தேவையான உதவிகள்,வழிகாட்டுதல்கள் செய்து அவர்களது முதுமைக் காலத்தில் கஷ்டமில்லாமல் வாழ வைப்பது.

இதில் முதல் மூன்று லட்சியங்களை கை.வீரமுனியாகிய நான் ஆன்மீகக்கடல் வலைப்பூ மூலமாகவும்,பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாகவும் பரப்பத் துவங்கியிருக்கிறேன்.



இதில் அடுத்த கட்டமாக பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடக்கூடியவரான சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்துவது என முடிவு செய்து,எனது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம்  அவர்களின் அனுமதியைக் கேட்டேன்.அவர் எனக்கு பரிபூரணமாக ஆசிர்வாதித்து அனுமதித்தார்.



இன்னும் பல ஆன்மீக சூட்சும ரகசியங்கள் நமது மஹாவில்வம் வலைப்பூவில் வெளிவர விருக்கின்றன.



சொர்ண ஆகர்ஷண பைரவரை எப்படி வழிபட வேண்டும்?என்ற கட்டுரை நமது வலைப்பூவில் மலர்ந்துவிட்டது.சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோ தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே கிடைப்பதாலும்,அவரை வீட்டில் வைத்து எப்படி வழிபடுவது? என்ற விபரம் மிகச் சிலரிடம் மட்டுமே இருப்பதாலும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவும்,அவரை வீட்டிலேயே வைத்து வழிபடும் முறையை அச்சடித்து போட்டோவுடன் விநியோகிக்க முடிவு செய்துள்ளேன்.

90 நாட்கள் தொடர்ந்து நமது வீடு அல்லது அலுவலகத்தில் சொர்ண பைரவரின் போட்டோவை வைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றினால்,எந்த ஜாதகராக இருந்தாலும் அவரது பண நெருக்கடி தீரத்துவங்கும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல அவரவரின் திறமை,தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.



பலர் கொடுத்த கடனை திருப்பிவாங்கிட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பர்;அவர்களுக்கு வராகடன் வசூலாகும்;

செய்தொழிலில் திடீரென நெருக்கடியோ வீழ்ச்சியோ துவங்கியிருக்கும்;அந்த நிலையை மாற்றி தொழிலில் படிப்படியான எழுச்சி உண்டாகும்.



சொர்ண பைரவரின் போட்டோ(சிறப்பான பிரேம் போட்டது),சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை தேவைப்படுவோர் எமது வாட்ஸ் அப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்;






ஏற்கனவே, சனிப்பிரதோஷம்,மாத சிவராத்திரி நாட்களில் தமிழ்நாட்டில் புராதனமான சிவாலயங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஜோதிட இதழ்கள்,ஜனரஞ்சக பத்திரிகைகள்,வட்டார பத்திரிகைகள்,எனது நேரடி ஜோதிட சீடர்களால் ஓம்சிவசிவஓம் மந்திரமும்,பைரவ வழிபாட்டு முறைகளும் பரப்பட்டு வருகின்றன.



தவிர,மஹாவில்வம் வலைப்பூவில் சொல்லப்பட்ட பல ஆன்மீகப் பரிகாரங்கள்,வழிபாட்டு முறைகள் என்னால் அல்லது என்னிடம் ஜோதிடம் பார்த்தவர்களால் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே,மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிடப்பட்டு வருகின்றன.எனவே, நீங்கள் உங்களது வாழ்க்கையில் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் (மஹாவில்வம் வழிகாட்டுதலின் படி) வாழ்க வளமுடன்!!!

ஓம்சிவசிவஓம்

Monday, April 18, 2011


தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்


இலங்கையில் வாழ முடியாமல் தவிக்கும் நமது தமிழ் உறவுகளுக்கு விடிவு கிடைத்திட,பின்வரும் பதிகத்தினை தினமும் ஏதாவது ஒரு சிவாலயத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலோ அல்லது அவரவர் வீட்டிலோ பூஜை அறையில் ஒரு முறை வாசித்து வரவேண்டும்.இப்படி 90 நாட்கள் வரை தினமும் வாசித்து வர,நமது கடல் கடந்த தீவு உறவுகளுக்கு நிம்மதியான மறுமலர்ச்சி நிறைந்த வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும்.
இப்படி ஜபித்து முடித்ததும்,ஒரு தம்ளர் தண்ணீர் அல்லது ஒரு தம்ளர் இளநீர் அருந்திவிட்டு,ஓம்சிவசிவஓம் என ஜபித்து இந்த பதிகவாசிப்பை நிறைவு செய்வது நன்று.

வளைந்தது வில்லு:;விளைந்தது பூசல்;
உளைந்தன முப்புரம்-உந்தீ பற!
ஒருங்கு உடன் வெந்தவாறு-உந்தீ பற!

ஈர் அம்பு கண்டிலம்,ஏகம்பர தம் கையில்;
ஓர் அம்பே முப்புரம்-உந்தீ பற!
ஒன்றும் பெருமிகை-உந்தீ பற!

தச்சு விடுத்தலும்,தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று-உந்தீ பற!
அழிந்தன முப்புரம்-உந்தீ பற!

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே-உந்தீ பற!
இளமுலை பங்கன் என்று உந்தீ பற!

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி-உந்தீ பற!
உருத்திர நாதனுக்கு-உந்தீ பற!

ஆஆ திருமால்,அவிப்பாகம் கொண்டன்று,
சாவாது இருந்தான் என்று-உந்தீ பற!
சதுர்முகன் தாதை என்று-உந்தீ பற!

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று-உந்தீ பற!
கலங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே? ஏடி-உந்தீ பற!
பணை முலை பாகனுக்கு-உந்தீ பற!

புரந்தனார் ஒரு பூம் குயில் ஆகி,
மரம் தனில் ஏறினார்-உந்தீ பற!
வானவர் கோன் என்றே-உந்தீ பற!

வெம் சிவ வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி-உந்தீ பற!
தொடர்ந்த பிறப்பு அற-உந்தீ பற!

ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக்
கூட்டியவா பாடி-உந்தீ பற!
கொங்கை குலுங்க நின்று-உந்தீ பற!

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே,
கண்ணைப் பறித்தவாறு-உந்தீ பற!
கருக் கெட,நாம் எலாம்-உந்தீ பற!

நாமகள் நாசி; சிரம் பிரமன்,படச்
சோமன் முகம் நெரித்து-உந்தீ பற!
தொல்லை வினை கெட-உந்தீ பற!

நான்மறை யோனும்,அகத்திய மான்படப்
போம் வழிதேடுமாறு-உந்தீ பற!
புரந்தரன் வேள்வியில்-உந்தீ பற!

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி,நெரித்த ஆறு-உந்தீ பற!
மயங்கிற்று வேள்வி என்று-உந்தீ பற!

தக்கனார்,அன்றே தலை இழந்தார்;தக்கன்
மக்களைச் சூழ நின்று-உந்தீ பற!
மடிந்தது வேள்வி என்று-உந்தீ பற!

பாலகனார்க்கு அன்று,பால் கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே-உந்தீ பற!
குமரன் தன் தாதைக்கே-உந்தீ பற!

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று-உந்தீ பற!
உகிரால் அரிந்தது என்று-உந்தீ பற!

தேரை நிறுத்தி,மலை எடுத்தான் சிரம்
ஈர் ஐந்தும் இற்ற ஆறு-உந்தீ பற!
இருபதும் இற்றது என்று-உந்தீ பற!

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று-உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று-உந்தீ பற!

இராமேஸ்வரம் மீனவர்களின் நலனுக்காகவும்,தமிழ் இனத்தின் நலனுக்காகவும் இந்த பதிகத்தை தினமும் வீட்டுப் பூஜையறையில் வாசிக்க நலம் உண்டாகும் நம் இனத்துக்கு!!!

ஓம்சிவசிவஓம்

கடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூறப்பட்ட தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம்



விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய


கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காத ராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ சிவாய

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸீந்ருத்யகாய
தாரித்ரிய் துஹ் கதஹநாய நமஹ சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலேஷணாய மணிகுண்டலமண்டி தாய
ம்ஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பஞ்சாநநாய பாணிராஜவிபூஷணாய
ஹோமாம்சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோமயாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

பானுப்ரியாய பவஸாக ரதாரணாய
காலாந்தகாய கமலாஸநபஜிதாய
நேத்ரத்ரயாய சுபலஷண லக்ஷிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

ராமப்ரியாய ரகுநாதவரதப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவதாரணாய
புண்யேஷீ புண்ய பரிதாய ஸீரார்சிதாய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

முக்தேச்வராய பலதாய கணேச்வராய
கீதப்ரியாய வருஷபேச்வரவாஹநாய
மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய

வசிஷ்டேநக்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வ ரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ரபவுத்ராதி வர்த்தனம்
த்ரிஸந்த்யம் யஹ படேந்நித்யம் ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதி ஸ்ரீ  வஸிஷ்டவிரசிதம்
தாரித்ரிய தஹநசிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

இம்மந்திரத்தை நமக்கு அனுப்பிய ஆன்மீககடல் வாசகர் கோவை எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு பரிபூரண நன்றிகள்!!!

கடன்களை நீக்கிட உதவும் ருண விமோசனலிங்க வழிபாடு




கும்ப கோணம் வட்டம் திருச்சேறையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானம்பிகை சமேத  சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் ருண விமோசன லிங்கம் அமைந்திருக்கிறது.

இங்கு 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து பால் அபிஷேகம் செய்தால்,நீண்ட காலக் கடன்கள் தீர்ந்துவிடும்;திருமணத் தடை அகலும்;குழந்தையில்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்;தொழிலில் இருந்துவரும் தடைகள் அடியோடு நீங்கிவிடும்;வேலையில்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் ;
ஒருவேளை நேரில் உங்களால் வர இயலாவிட்டால்,11 வார அர்ச்சனைக் கட்டணமாக ரூ.165/ம்,11 வார அபிஷேகக் கட்டணமாக ரூ.250/- சேர்த்து ரூ.450/- பணவிடை எனப்படும் மணி ஆர்டர் மூலம் அனுப்பினால்,உங்கள் பெயருக்கு அர்ச்சனையும்,அபிஷேகமும் செய்து ஒவ்வொரு வாரமும் பிரசாதம் உங்களுக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
நீங்கள் தொகை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில்,திருச்சேறை-612 605.கும்பகோணம் வட்டம்.தொலைபேசி:0435- 2468001.

Thursday, April 14, 2011

தினசரி ஆன்மீகக் கடமைகள்





நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.



வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.



எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.



எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.



எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.



எந்த வீட்டில் நிர்வாணமாக குளிக்காமலும்,நிர்வாணமாக தூங்காமலும் இருக்கிறார்களோ,கணவனின் காமத் தேவைகளை மனைவியும்,மனைவியின் காமத் தேவைகளை கணவனும் மறுக்காமலும்,வெறுக்காமலும் நிறைவேற்றுகிறார்களோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.



ஒரு வீட்டில் ருத்ராட்சம் இருந்தாலே அங்கே பேய் பிசாசு,பில்லி சூனியம் வேலை செய்யாது;யார் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அம்மனின் அருட் பிரசாதமான எலுமிச்சை பழம் அல்லது மஞ்சள் காப்பு அல்லது குங்குமம் அல்லது இவை அனைத்தும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் நிரம்புமோ அங்கே நிம்மதியும்,செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.





Wednesday, April 13, 2011

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தொழில்நுட்ப யுத்தம்




உங்களின் செல் எண்ணுக்கு ஒரு அழைப்பு வரும்.அதில் உங்களது செல் எண்ணை செக் செய்கிறோம்.ஒரு முறை #09 என்றோ அல்லது #90 என்றோ டைப் செய்யச் சொல்லும் அந்தக் குரல்.

அதன் படி செய்தீர்களெனில்,உங்கள் செல் எண் தொழில் நுட்ப ரீதியாக திருடப்படும்.ஆம்! இந்த தொழில் நுட்பத் திருட்டு நோக்கியா மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சி.என்.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பலரது கவனத்துக்கு இந்த செய்தி குறுந்தகவலாக வந்திருக்கும்.இருந்தபோதிலும்,ஆன்மீகக் கடல் வாசகர்களுக்காக இந்த செய்தி வெளியிடப்படுகிறது

Tuesday, April 12, 2011

சித்ரா பவுர்ணமியன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்





17.4.2011 ஞாயிறு மற்றும் 18.4.2011 திங்களில் சித்ரா பவுர்ணமி வருகின்றது.பஞ்சாங்க வேறுபாடுகளின் படி சிலவற்றில் 16.4.2011 சனிக்கிழமையன்றும் ஆரம்பிப்பதாக சொல்லுகின்றனர்.உங்களது காலண்டர் அல்லது ஜோதிடர்களின் ஆலோசனைப்படி,சித்ரா பவுர்ணமிநாளில் நமது வீட்டு மொட்டை மாடியில் அல்லது அருகிலிருக்கும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில் மஞ்சள் விரிப்பு விரித்து,இரண்டு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து கைகளை மடக்கியவாறு குறைந்தது ஓரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.

(எனது ஊரில் இதோ மின் வெட்டு வந்துவிட்டது.எப்போது வேண்டுமானாலும் இந்த கணினி செயலிழக்கலாம்.எனவே,விவரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்)



15.4.11 முதல் ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் வரையிலும் மின் வெட்டு இருக்குமாம்.ஆன்மீகக் கடலை தொய்வின்றி நடத்திட ஓம்சிவசிவஓம் கூடுதல் நேரமெடுத்து ஜபிக்க வேண்டுகிறேன்.



ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம் மின் மகிமைகள்





மதுரையில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தரக் குடும்பம் அது.கணவர்,மனைவி இருவருமே நமது வலைப்பூ மூலமாக அறிமுகமாகி ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.

இவர்களின் ஆன்மீகப் பாதுகாப்பாக ஓம்சிவசிவஓம் மாறிவிட்டது.இவர்களின் தினசரி வாழ்க்கையை சீராக,மகிழ்ச்சியாக,சிறப்பாக வைத்திருக்க ஓம்சிவசிவஓம் உதவுகிறது.இருவருமே தலா ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.



வாடகை வீட்டில் வாழ்ந்து,இருவருமே வேலைக்குச் சென்று இரு பருவ வயதுக் குழந்தைகளையும் வளர்த்து வருவது,மன்மோகன்சிங் இந்தியாவை ஆள்வதை விட கஷ்டமானது.# ஏன்யா நான் சரியாப் பேசுறேனா?



சரி,விஷயத்துக்கு வருவோம்.ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவிட்டன.மகனின் ஒன்பதாம் வகுப்பு முடிந்து,பத்தாம் வகுப்புக்குத் தயார் செய்வதற்காக கணித டியூசனுக்காக சரியான ஆசிரியரைத் தேடிக்கொண்டிருந்தனர்.கட்டணமோ மிக அதிகம்.அங்கே படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ ஏராளம்.



இவர்கள் கேள்விப்பட்ட டியூசன்களின் கட்டணமும் பிற விபரங்களும் இவர்களுக்கு திருப்தியில்லை;குடும்ப பட்ஜெட்டுக்கு ஒத்து வரவில்லை;இல்லத்தரசர் தொடர்ந்து மூன்று நாட்களாக ‘எனது மகனுக்கு குறைவான கட்டணத்தில்,நிறைவான கணித டியூசன் அமையவேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.

நான்காவது நாளாக,ஒன்றாம் வகுப்பு ஆசிரியையின் சந்திப்பு பல வருடங்களுக்குப் பிறகு அந்த தம்பதிக்கு மீண்டும் அமைந்தது.


அவர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் மிக அருகில்,குறைந்த கட்டணத்திலும்,சிறப்பான பயிற்சி தரும் ஆசிரியரும் அமைந்தது அவர்களுக்கு ஆழ்ந்த மன நிம்மதியைத் தந்தது.

அவர்களின் அனுமதியோடு இந்த வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.

கர வருடத்தின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.




ஆத்மாக் காரனாகிய ரவி எனப்படும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.ஒவ்வொரு ராசியிலும் ரவி நுழையும் நாளில் நாம் நமது வீடு அல்லது கோவில் அல்லது மலையோரக் கோவில்களில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



ஜோதிடப்படி,ரவி ஒரு ராசியின் ஆரம்ப முனையில் நிற்கும்போது அதன் பலம் பல கோடி மடங்குகளாக இருக்கும்.இதனால்,மனிதர்களின் ஆத்மாவுக்கு அந்த நாளில் (சித்திரை1,வைகாசி 1 முதலான எல்லா தமிழ் மாதங்களிலும் முதல் நாட்கள்) அளவற்ற ஆத்மசக்தி கிடைக்கும்.எதிர்காலத்தில் இந்த துறையில் மேல்நாடுகள் ஆராய்ச்சி செய்வதற்காகவே செயற்கைக் கோள்களை சூரியனை நோக்கி ஏவும்.

அந்த நாட்களில் நாம் உயரமான இடத்திலிருந்து ஓம்சிவசிவஒம் ஜபித்துவந்தால்(குறைந்தது ஒரு மணி நேரம்) நமது கர்மவினைகள் குறையும்.தேவைகள் நிறைவேறும்.



இந்த கர வருடம் 14.4.2011 வியாழன் காலை 11.20 வாக்கில் பிறப்பதால்,காலை 11.30 முதல் 12.30 வரையிலும் நமது வீட்டு மாடியில் அல்லது அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குள் அல்லது அருகிலிருக்கும் மலைக்கோவிலில் உயரமான இடத்தில் மரத்து நிழலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.



கர வருடம் முழுவதும் வெற்றிகர வருடமாக நமக்கு இருக்கும்.

இந்த நாளில் 14.4.11 வியாழன் அன்று ஒரு போதும் நெகடிவ்வான வார்த்தைகளைப் பேச வேண்டாம்;சிந்திக்க வேண்டாம்.

உலகின் முதல் இனமாகிய தமிழ் இனமாகிய நாம் இந்த கர வருட பிறப்பன்று தமிழ் ஈழம் பிறக்க கோவில்களில் வேண்டுவோம்;ஈழத் தமிழ் ரத்தங்களுக்கு விடிவு கிடைக்க நமது குலதெய்வத்தின் கோவில்களில் சங்கல்பம் செய்வோம்.

ஊழலுக்கு எதிரான அறப்போருக்கு ஆதரவு தாருங்கள்;இந்தியா வல்லரசாகுதோ இல்லியோ,இந்தியர்களின் வறுமை நீங்க வேண்டும்.




பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் ஒரே நல்லரசு மற்றும் வல்லரசு இந்தியாவாகிய நமது நாட்டில் ஊழல் செல்போன் அலைகளைப் போல எங்கும் பரவியிருப்பதை எதிர்த்துப் போராட,நமது தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் அரசியல் ஆயுதமான உண்ணாவிரதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

நாடு முழுக்க ஆதரவு குவிவதைக் கண்டு ஊழல் காங்கிரஸ் அரசு நடுங்கிப் போய்விட்டது.

நேற்றோடு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார்.இருந்த போதிலும் நாமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?

02261550789 என்ற எண்ணுக்கு நமது செல்லிலிருந்து ஒரு நழுவிய அழைப்பு கொடுப்போம்;(இதற்குக் கட்டணம் கிடையாது)இந்த ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாக நமது ஊழலுக்கு எதிரான ஆதரவு பதிவாகிவிடும்.இப்படி பதிவாகியதும்,நமது செல்லுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.

எனது கருத்து என்னவெனில்,இந்தியாவை நாசமாக்கிட,சீனாவோ,சீனாவின் வால்களாகிய 12 கம்யூனிஸ்டுகளோ,அமெரிக்காவோ,பங்காளி பாகிஸ்தானோ,தம்பி இலங்கையோ வேண்டாம்.ஊழலில் திளைக்கும் நமது பேராசைத் தலைவர்களே போதும்.இந்த நிலையை மாற்றிட நம்மாலான ஆதரவினை ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாகத் தருவோம்.

இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கும்,சமூக சேவையுடன் கூடிய வியாபாரமும்






ரசாயன உரங்களால் வளர்க்கப்பட்ட அரிசி,காய்கறிகளை நாம் சாப்பிட்டு வருவதால்,தாய்ப்பால் கூட கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி வருவதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வு நம் இந்தியாவில் நிரூபித்தது.

இந்த நிலையை மாற்றிட முழுக்க முழுக்க இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடப்பட்டு அரிசி,காய்கறிகள் விளைவிக்கப்பட்டு நமது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

கிலோ ரூ.35/-,ரூ.45/-க்கு சாதாரண அரிசியும்,ரூ.45/-ரூ.55/-க்கு பொன்னி அரிசியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசியை நாம் தினமும் சோறாக்கி உண்பதால் சர்க்கரை நோய்,மூட்டு வலி முதலான நோய்களின் வேதனை குறைகின்றன.சில காலங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது நமது மருந்துச்செலவும் குறைகிறது.

படிக்கும் குழந்தைகள் இந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டு வரும்போது நினைவுத்திறன் அதிகரிக்கிறது;ஞாபக மறதி குறைகிறது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

Sunday, April 10, 2011


பிதுர்கள் உலகமும் நமது கடமையும்
உலகம் படைக்கப்பட்டதோ,அன்றே பித்ருக்களின் உலகத்தில் பசுக்கள்,ருத்திரர்கல்,ஆதித்யர்கள் என்ற 31 பித்ரு தேவதைகளும் சிருஷ்டிக்கப்பட்டனர்.மகத்தான சக்தி பெற்ற இந்த தேவதைகள் பித்ருக்களின் உலகில் எழுந்தருளியுள்ளனர்.

நாம் மறைந்த முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம்,திதி,சிரார்த்தம் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அன்னமாக(உணவாக)மாற்றி மறைந்த நமது முன்னோர்களுக்கு இந்த தேவதைகள் அளிக்கின்றனர்.இவற்றைப் பித்ரு தேவதைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் நமது மூதாதையர்கள் மிகவும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும் அடைந்து நம்மை ஆசிர்வாதிக்கின்றனர்.
இவ்வாறு நமது பித்ருக்கள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கலையும்,ஒரு லட்சம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பலன்களையும்,நூறு ஏழை கன்னியர்களுக்கு விவாகம் செய்து கொடுத்த (கன்னிகாதானம் செய்வித்த)புண்ணியத்தையும்,கங்கை நதியில் நீராடும் புண்ணியப்பலன்களையும்,அனாதையாக இறந்தவர்களுக்குச் செய்யும் அந்திமக்கிரியைகளினால் ஏற்படும் புண்ணியப்பலனையும் அளிக்கிறது.
ஆதலால்,மிக எளிய,ஆனால் அளவற்ற புண்ணிய பலன்களை நமக்கு உடனுக்குடன் அளிக்கக் கூடிய பித்ரு பூஜையை நாம் விட்டுவிட்டால் மேற்கூறிய அரிய நற்பலன்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.எனவே,திலா ஹோமம் செய்ய வேண்டியவர்கள்(உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்) உடனடியாகச் செய்யவும்.
நன்றி:குமுதம் ஜோதிடம் 28.3.2003,பக்கம்12.
நடைமுறை அனுபவத்தில்,பித்ரு பூஜை,திலா ஹோமம்,சிரார்த்தம்,திதி தொடர்ந்து செய்துவருவதால் நமக்கு திடீரென ஏற்பட இருக்கும் அவமானங்கள்,விபத்துக்கள்,ஏமாற்றங்கள் நம்மை அண்டாமல் சூட்சுமமாக நமது பித்ருக்கள் காப்பாற்றிவிடுகின்றனர்

Saturday, April 9, 2011

ஸ்பருலினாவின் நிரூபிக்கப் பட்ட மருத்துவகுணங்கள்











41 வயதாகும் அவருக்கு குடிப்பழக்கம் மூச்சுவிடும் அளவுக்கு வந்துவிட்டது.24 மணி நேரமும் எதையாவது ஆல்கஹாலை அருந்தாவிட்டால்,கைகால்கள் நடுங்கத்துவங்கும்.மறுவாழ்வு மையத்துக்குச் சென்றும் கூட ஓரளவுக்கு மேல் சரி செய்ய முடியாத நிலை.இந்நிலையில் சும்மா ஒரு பரிசோதனைக்கு ஸ்பருலினா மாத்திரையை காலை 3 மாலை 3 என சாப்பிட வைத்துள்ளனர் அவரது மனைவியும் மகளும்!ஒரு மாதம் ஆனப்பின்னர் மதுவின் போதையிலிருந்து மீண்டுவிட்டார்.அவர்களின் ஆனந்தக் கண்ணீருக்கு அளவே இல்லை.

27 வயதுப் பெண்மணி அவர்.பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்ததால்,முதுகுவலி வந்துவிட்டது.ஓராண்டாகியும் முதுகுவலி தீரவில்லை(அடிக்கடி பேருந்தில் நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,டூவீலரில் பயணித்தவாறே வாழ்பவர்களுக்கும் இதே நிலையே!)ஒரு நாளுக்கு 4 கிராம் வீதம் 45 நாட்களுக்கு (காலை 2,மதியம் 2,இரவு 2) என ஸ்பைருலினா கடல் பாசி மாத்திரை சாப்பிட்டு வர இன்று முதுவலியைக் காணவில்லை.

5 வருடங்களாக இருந்துவந்த மலச்சிக்கல் பலருக்கு தினமும் ஸ்பைருலினா மாத்திரை ஒரே ஒரு மாதம் சாப்பிட்டதில் தீர்ந்துவிட்டது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.சர்க்கரை நோயால் கைகால்களில் மதமதப்பு வந்துவிட்டது.சுமார் இரண்டாண்டுகளாக எப்போதும் கைகளும் கால்களும் அரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? ஸ்பைருலினா சாப்பிட்டு வந்த ஒரு மாதம்கழிந்து இந்த மதமதப்பு தீர்ந்தது.


தினமும் ஆறு மாத்திரைகள் சாப்பிட்டுவர,உங்களது நோய்கள் குணமாகும்.

ஸ்பைருலினா ஒரு கடல் பாசியாகும்.

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


சோலைமலை முருகன் கோயிலில் 35 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.


  13 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா' என்று கேட்டபோது, திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணத்தன்று, 30,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.இந்த ஆண்டு திருக்கல்யாணம் 15-04-2011 அன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.  இந்த விருந்தில், பூந்தி, மூன்று வகை காய்கறிகள், அப்பளம், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர், வாழைப்பழம் இடம்பெறுகிறது.


14-04-2011 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


 திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell:9442408009 , Shop:0452 2345601

Friday, April 8, 2011

நடுத்தரக்குடும்பத் தேவையை நிறைவேற்றும் ஓம்சிவசிவஓம்






தினந்தோறும் உயரும் விலைவாசியால் இந்தியாவின் 121 கோடி பேர்களில் 120.5 கோடி இந்தியர்கள் படும் கஷ்டத்தை ஒரு பக்கத்தில் விவரிக்க முடியாது;மன்மோகன் துவங்கி,நமது முதல்வர் வரையிலும் தேசபக்தியும் கருணையும் கொண்டவர்கள் நமது நாட்டில் நமது தலைவர்களாக இருக்கிறார்களா?

ஓம்சிவசிவஓம் மட்டுமே துணையிருக்கிறது!!!

மாதக்கடைசி நாட்களான 25 ஆம் தேதி முதல் 30,31 ஆம் தேதி வரையிலும் சமாளிக்கும் குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தை ஒரு ஆண்டு வரையிலாவது இந்தியாவின் பெண் அரசியல் வாதிகளுக்கு உணர்த்திட வேண்டும்.சரி அது போகட்டும்.எதற்கு வீண் கற்பனை?

ஒரு குடும்பத்தில் ஒரு மகனும்,மகளும் பெற்றோரும்!

குடும்பத்தலைவரும்,குடும்பத்தலைவியும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.ஜபிக்கத் துவங்கும் முன்பாக இருந்த குடும்ப சூழ்நிலை இப்போது மெதுவாக மாறிவருகிறது.

ஒரு நாள் இந்த குடும்பத் தலைவர்,ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குகையில் தனக்கு இன்று ரூ.500/- கிடைக்க வேண்டும் என்ற சிற்ற்ற்ற்று கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினார்.ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு, அலுவலகம் புறப்பட்டுவிட்டார்.

நீண்ட நாட்களாக அவருக்கு வர வேண்டிய அலுவலகத் தொகை( பயணப்படி) ரூ.512/- அந்த நாளில்,அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஒப்படைக்கப்பட்டது.அசந்தே போனார்.மாய்ந்து மாய்ந்து நம்மிடம் இந்த சாதனையைப் பகிர்ந்து கொண்டார்.

மாதக் கடைசி நாட்களில் இந்த ரூ.512/- எப்படியெல்லாம் கைகொடுத்தது? என்பதையும் என்னிடம் விவரிக்க எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.


எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை வந்துவிட்டது.



இந்த மந்திரத்தை எமக்கு புத்தக வடிவில் உணர்த்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!

Thursday, April 7, 2011

அமெரிக்காவின் ஆயுத விற்பனையும் அதில் ஒளிந்திருக்கும் நரித்தனமும்



எப்போதுமே இராணுவ ஆயுதங்கள்,தளவாடங்கள்,விமானங்கள் வாங்குவதில் அமெரிக்காவை நம்புவதை விட,ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போடுவது நன்று.கடந்த கால வரலாறு இதை அடிக்கடி நிரூபித்திருக்கிறது.

இன்று கணினி வைரஸ்களின் முக்கியப்பணியே உளவு வேலை பார்ப்பதுதான்.

கணினி நிபுணர்களுக்கு ட்ரோஜன் குதிரைகள் பற்றித் தெரியும்.புராதன காலத்தில் கிரேக்கப்போரின் போது எதிரிகளின் கோட்டையை பல மாதங்கள் முற்றுகையிட்டு வெல்ல முடியாமல்,மிகப் பெரிய மரக்குதிரையை தயார் செய்து அந்த கோட்டையின் முன்பாக வைத்துவிட்டுச் சென்றுவிடுவர்.உடனே,கோட்டைக்குள் இருப்பவர்கள் அந்த மகா குதிரையின் அழகில் மயங்கி கோட்டைக்குள் கொண்டு சென்றுவிடுவர்.விளைவு? கோட்டைக்குள் சென்றதும் குதிரைக்குள் ஒளிந்திருந்த அதிரடிப் படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவர்.இதே டெக்னிக்கில் தான் இன்று கணினி வைரஸ் உருவாக்கப்படுகிறது.

உதாரணமாக,ஒரு பத்திரிகையின் இணையதளத்துக்குள் இம்மாதிரியான வைரஸ் நுழைந்துவிட்டால்,அந்தப் பத்திரிகையின் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்கள்,அந்த பத்திரிகையை எந்தெந்த நாட்டு வாசகர்கள் எவ்வளவு பேர்கள் வாசிக்கிறார்கள்? போன்ற அதிமுக்கிய ரகசியங்களை வைரஸை அனுப்பியவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கமுடியும்.இதன் மூலமாக அந்த பத்திரிகையின் வளர்ச்சியை நிர்மூலமாக்கிட முடியும்.

இதே வேலையைத் தான் இந்தியாவின் ஏர்டெல் செல் போன் நிறுவனம் தனது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாக விடுதலைப்புலிகளை சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்தது.

கணினி கருவிகளில்(சிப்களில்)எம்படேடு கிருமிகளை வைத்துவிட்டால் யார் தகவல் சேகரிக்கிறார்கள் என்பதே தெரியாது)

அமெரிக்க ராணுவ தளவாடங்களில் உள்ள கணினி சிப்களில் பெண்டகனின் ஆதரவு எம்படேடு வைரஸ்கள் பதிக்கப்பட்டே உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.எனவே,அமெரிக்க ராணுவ தளவாடங்களை வாங்கும் நாட்டின் ராணுவத்தின் முதுகெலும்பை இதன் மூலம் முறித்து,எதிரிநாட்டுக்கு வெற்றியை அமெரிக்காவால் தர முடியும்.

அமெரிக்காவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்கிய நாடுகளுக்கு போர் சமயத்தில் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவாகி,அந்த நாடுகளின் வரலாறே மாறிப்போனது.இதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும்போதும்,வாங்கியப்பின்னரும் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவானதில்லை;

2010 முதல் 2015 வரை இந்தியாவை கட்டாயப்படுத்தி 1,00,000 கோடி ரூபாய்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு,ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்: அமெரிக்கா இனியும் உலக வல்லரசாக இருக்கணுமா? அமெரிக்காவின் அடிவருடிகளான மன்மோகன்,பசி,மண்டேக்சிங்,சோனியா இந்தியாவை ஆளணுமா?

தகவல் நன்றி:மக்கள் குரல் 26.10.2010 தலையங்கம்

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதில் இன்னொரு முறை




ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களின் வசிப்பிடத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முன்பாக, டையமண்டு கல்கண்டையும் ஏலக்காயையும் அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்ததும்,இந்த பசும்பால் கலவையை அருந்தி வருவதால்,ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் உங்களின் உடலுக்குள் பதிவாகிவிடும்.

இப்படி ஒரு லட்சம் தடவைக்கு மேல் உங்களின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கையைத் தாண்டும்போது நீங்கள் சிவனின் அம்சமாகிய ருத்ரனாக,ருத்ரியாக மாறிவிடுவீர்கள்.
குரு உபதேசம் செய்தவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்!!!

Wednesday, April 6, 2011

புத்திர பாக்ய வேள்வி அழைப்பிதழ்



குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியர்கள் இந்த புத்திர பாக்ய வேள்வியில் கலந்துகொள்ளலாம்.1.5.11 ஞாயிறு மற்றும் 2.5.11 திங்கள் என இரு நாட்களில் கொழுக்கட்டைச் சாமியாரின் பதினெண் சித்தர்கள் தர்ம சேவாசிரமத்தில்,வைத்து நடைபெற இருக்கிறது.

முகவரி:கொழுக்கட்டை சாமியார் ஆசிரமம்,சதுரகிரி அடிவாரம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம்,வத்திராயிருப்பு சாலை,மகாராஜாபுரம்,வத்திராயிருப்பு.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.

மேலும் விபரமறிய:98659 26214

Tuesday, April 5, 2011

செல்வத்தின் அதிபதி திருப்பதி பாலாஜி கோவிலில் சேவை செய்யும் ஊழியராக இருக்க விருப்பமா?




உங்கள் வயது 20 முதல் 60 வரை இருக்க வேண்டும்;உங்கள் ஊரிலிருந்து திருப்பதிக்கு உங்கள் சொந்தச் செலவில் போய் வர ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.குறைந்தது ஒரு வாரம் தங்கிட வேண்டும்.ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வரை திருப்பதி கோவிலுக்குள் அல்லது கோவில் பகுதியில் கோவில் நிர்வாகம் ஸ்ரீவாரி சேவை செய்ய பொறுப்பு தரும்.

குறைந்தது 10 பேர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.அதிகபட்ச எண்ணிக்கைக்கு வரம்பு ஏதுமில்லை;இந்த குழுவில் எத்தனை ஆண்களும்,எத்தனை பெண்களும் இருக்கலாம்.

இந்த புண்ணிய சேவையில் ஈடுபடவும்,மேலும் விபரமறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்:MR.PRASANNA 98429 85071

Sunday, April 3, 2011

சுயச்சார்பு அப்துல்கலாமும்;சுயநல இந்திய ஆள்பவர்களும்

3



கி.பி.2006 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்,இந்தியாவுக்கு வருகை தருவதாக அறிவித்தார்.பாதுகாப்புக்காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகையின் வரவேற்பறை,வராந்தா பகுதி,தரைக் கம்பளங்களை மாற்ற வேண்டும் என்றனர் அமெரிக்க அதிகாரிகள்.



அதோடு, ‘குடியரசுத் தலைவர் மாளிகையை புஷ்ஷின் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்தியப் பாதுகாப்பை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்றும் அமெரிக்கத் திமிர்த்தனத்தைக் காட்டினர்.

ஆனால்,நமது தேசத்தை நேசிக்கும் நமது நிரந்தர ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த கண்ணியத்துடனும்,தெளிவான குரலுடனும் இரண்டையும் மறுத்துவிட்டார்.

“உலகப்புகழ் பெற்ற தலைவர்கள்,ஞானிகள் பலரின் பாதம்பட்ட ‘கார்பெட்’களில்,புஷ் அவர்களின் பாதம் படுவது பெருமைக்குரிய விஷயம்.எனவே,அதை மாற்ற இயலாது”என்று இந்தியாவின் சுயமரியாதையை அமெரிக்க அதிகாரிகளுக்கு உணர்த்தினார்.


அத்துடன்,இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷை,எங்கள் பாதுகாப்புப் படையினர்,உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பர்.வேண்டுமானால்,அமெரிக்க காவல் துறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து,மாளிகையின் மேலிருந்து கண்காணிக்கலாம்.அதுவும்,கையில் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அப்துல் கலாம் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.

ஆனால்,இன்று கி.பி.2011 இல் நடப்பது என்ன? அணுசக்தி ஆராய்ச்சியில் யுரேனியத்தை விடவும்,சுலபமாகவும்,அதிகமாகவும் தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரிக்க முடியும்;தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரித்தப்பின்பு ஏற்படும் கதிர்வீச்சு யுரேனியத்தைவிடவும்,புளூட்டோனியத்தை விடவும் மிகக்குறைவாகவும் இருக்கிறது.எனவே,வெகு விரைவில் இந்தியாவால் உலகம் முழுவதும் தோரியத்தினால் இயங்கும் அணு உலைகளை நிறுவிட முடியும்; என்பதை கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.உலகம் முழுவதும் கிடைக்கும் தோரியத்தில் 90% தென் மாவட்டங்களான நெல்லை,குமரி மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் அமெரிக்காவை தூங்க விடாமல் செய்துவிட்டது.



இராமர் பாலத்தினால் கடலில் இருந்த தோரியத்துகள்கள் 17,50,000 ஆண்டுகளாக சேகரமாகி சுமார் 4000 சதுர கிலோ மீட்டர்களில்(நாகப்பட்டினம் துவங்கி கன்னியாக்குமரி வரை) தோரியம் பரவிக்கிடக்கிறது என்பதும் அமெரிக்காவின் வல்லரசுத் திமிருக்கு அடியாக விழுந்துவிட்டது.எங்கே அடுத்த நூற்றாண்டு துவங்கும் முன்பாகவே தோரியம் மூலமாக மட்டுமே இந்தியா வல்லரசாகிவிடுமோ? என பயந்து போய்,இந்திய அரசினை மறைமுகமாக மிரட்டி,இராமர் பாலத்தை உடைக்கவும்,சேது கால்வாயைக் கொண்டு வரவும் திட்டமிட்டது.

கூடவே,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மிகக்குறுகிய கடற்பரப்பை சர்வதேச எல்லைப் பகுதியாக (இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே) அறிவிக்க வைத்தது.

இருந்தும் அமெரிக்காவின் பயம் தீர வில்லை;வற்புறுத்தி தன்னுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வைத்தது.இதன் மூலமாக,தோரியம் மூலமாக அணு மின்சாரம் தயாரிக்கும் ரகசியத்தினையும் திருடிச் சென்றுவிட்டது.

இதுஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில்,நமது நிஜமான பங்காளி சீனாவோ,அமெரிக்காவின் அத்தனை செல்வாக்குகளையும் சர்வதேச அரங்கில் ஒடுக்கும் திட்டத்துடன் செயல்பட்டு,40 ஆண்டுகளுக்குப்பின்னர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

தோரியத்தை அமெரிக்கா இங்கு(கன்னியாகுமரி பக்கம் வந்து திருடும் முன்பாக)இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் நோக்குடன் நுழைந்துள்ளது.

இன்னொரு புறம்,இந்தியாவின் தலையெழுத்தை இத்தாலி நிர்ணயித்துவருகிறது.இதற்கான வரலாற்றுக்காரணங்களை அறிய உலக வரலாற்றில் இனி என்ன நடக்கும்?மூன்று பாகங்கள் என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டு ஆன்மீகக் கடல் வலைப்பதிவுகளை வாசிக்கவும்.

இந்தியாவில் சுதேசத் தொழில்கள் அழிந்து வருவதற்கு உலக மயமாக்கல் காரணம் என கூப்பாடு போட்டு வருகிறோம்.ஆனால்,அது காரணமல்ல;இந்திய குறு மற்றும் சிறு தொழில்களை பாதுகாக்கும் எண்ணமுடைய அரசு வராததே காரணம்.இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன? என்பதை அறிய சுதேசிச் செய்தி என்ற மாத இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.அதற்கான முகவரியை நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம்.ஓராண்டுச் சந்தா ரூ.75/மட்டுமே!

உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் சீன மூலிகை சுவையூட்டியான அஜினோமோட்டோவை உலகம் முழுவதும் தடை செய்துவிட்டனர்.இந்தியாவில் மட்டும் அபாரமாக விற்பனையாகி,இந்தியர்களை நோயாளியாக்கி வருகிறது.ஒரே ஒருமுறை 0.01 கிராம் நமது உணவின் மூலமாக நமது உடலுக்குள் போனாலும் சுமார் 64 விதமான நோய்களை உருவாக்கும் திறனுடையது;புரோட்டாவின் குழம்பான சால்னாவின் ரத்த சிகப்புக்கும்,சிக்கன் முதலான சகலவிதமான அசைவ உணவிலும் அஜினோமோட்டோ சர்வ சாதாரணமாகக் கலக்கப்படுகிறது.

அடுத்த படியாக,மலிவு விலை சீனப்பொருட்கள் இந்தியாவின் சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து வருகிறது.விளைவு? இந்தியா குண்டூசிக்குக் கூட வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

எந்த ஒரு இந்திய அரசியல் வாதிக்கும் இந்தியாவின் நலன் முக்கியமில்லை;ஊழல்! ஊழல்!! ஊழல்!!! தான் இவர்களின் லட்சியம்!!!

மீறி தேசபக்தியாக செயல்படும் இந்திய அரசியல்வாதிகளை தீவிரமாக செயல்படவிடாமல் அமெரிக்காவும்,சீனாவும்,பாகிஸ்தான் மற்றும் இத்தாலி உளவுத்துறையால் மிரட்டப்பட்டுவருகின்றனர்.அதற்கும் திமிறுபவர்கள் கொல்லப்பட்டுவருவது சகஜம்.

இவ்வளவு கடுமையான சூழ்நிலையிருந்தும்,கடவுளின் அருள் நமது இந்தியாவுக்கு இருக்கிறதுதான் ஒரு மாபெரும் அதிசயம்.2014க்குள் ஒரு தேசபக்தி நிறைந்த சர்வாதிகாரி இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்.அந்த சர்வாதிகாரி வட பாரதத்தைச் சேர்ந்த மாவீரன் ஆவார்.அந்த மாவீரன் தென் பாரதத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் அரசியலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.அந்த மாவீரன் சித்தர்களின் ஆசி பெற்றவர் ஆவார்.அவரது ஆட்சிகாலத்தில் பிராடுகளுக்கு மீள முடியாத நிரந்தர இம்சைகள் துவங்கும்.நீதி நேர்மை,தர்மம் என வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்ட நல்ல மனிதர்கள் இந்தியாவின் முக்கிய அரசு,அரசியல்,வெளியுறவு,கொள்கை வகுப்பு,உலக அரசியல் அரங்கில் முத்திரை பதிப்பார்கள்.ஜெய் ஹிந்த்;ஜெய் விஸ்வம்(உலகம்)!!!