Thursday, December 31, 2015

நமது கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்


உங்களுடைய கடன் எவ்வளவு இருந்தாலும்,அது தீர ஜோதிட விஞ்ஞானம் வழிகாட்டுகிறது;ஆமாம்! அடுத்த 16 மாதங்களில் எந்த நாட்களில் மைத்ர முகூர்த்தம் வருகின்றன? என்பதைக் கணித்து கை.வீரமுனி. . .(ஸ்ரீவில்லிபுத்தூர்)யாகிய அடியேன்  8 ஆம் ஆண்டாக வெளியிட்டு வருகிறோம்;(2007 முதல்) தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடான காலப்பிரகாசிகையில் உள்ள  ஒரு ஜோதிடக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இதை வெளியிட்டு வருகிறோம்;

ஒருவரிடம் நாம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம்;அவரிடம் இங்கே குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் மைய பாகத்தில் அசலில் ஒருபகுதியை (உதாரணமாக ரூ.1000/-) திருப்பிக் கட்டவேண்டும்;அப்படி கட்டினால் வெகுவிரைவில் மீதி ரூ.99,000/-கடன் தீர்ந்துவிடும்;

கடந்த 7 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பின்பற்றி தங்கள் கடன் களை அடைத்துள்ளனர்;

வங்கிக் கடனுக்கும் இது பொருந்தும்;தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,லட்சத்தீவு பகுதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்;கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே,அது தீர வேண்டும் என்று முயலுபவர்களுக்காக இந்த ஜோதிட ரகசியத்தை வெளியிடுகிறோம்;

கந்து வட்டிக்கு இது பொருந்தாது;வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதைப் பயன்படுத்திட விரும்பினால்,இந்திய நேரத்திற்கும் அந்த நாட்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும்;

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை
6.1.17 வெள்ளி மதியம் 1.14 முதல் 3.14 வரை
3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை
18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை
18.3.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை
25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை
25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

Wednesday, December 30, 2015

உணவே மருந்து- 03

நம்முடைய மூளையின் மனதின் சிந்தனைகளை, எண்ணங்களை நாம் வார்த்தைகளால் சொல்கிறோம்.. எழுத்துக்களால் எழுதுகிறோம்.. ஆனால் நம் உடம்போ தன்னுடைய மொழியில் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளாலும் பேசுகிறது... தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தன மீதே அறிகுறிகளாக எழுதுகிறது... கல்லீரலில் ஒரு பிரச்னை இருக்கிறது... சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது... இதயத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது.. என்பது போன்ற விஷயங்களை உடல் தனக்கு தெரிந்த மொழியில் அறிகுறிகளாக நமக்கு சொல்கிறது... அது காய்ச்சலாகவோ, தலைவலியாகவோ, கால்வலியாகவோ, கண்நகம் போன்றவற்றின் வற்றின் நிற மாற்றமாகவோ, ஏதேனும் ஒரு இடத்தில் வீக்கமாகவோ இருக்கலாம்... 

உடம்பில் இருக்கும் உறுப்புகள் பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு அறிகுறியை கொடுக்கும்... ஆனால் அதை எல்லாம் கவனிக்க நமக்கு ஏது நேரம்... நமக்குத்தான் உடனடியாக ரிசல்ட் வேண்டுமே... ஆகவே தான் கடைகளுக்கு ஓடிச்சென்று அனாசினோ நோவால்ஜின்னோ வாங்கி சாப்பிட்டு அந்த அறிகுறிகளை மறைத்துவிட்டு மறுபடியும் ஓடத்தொடங்கி விடுகிறோம்.... நமது உடம்போ.. இப்படி சமிக்கை மொழியில் கதறி கதறி நாம் கண்டுகொள்ளாமல் போக... சம்மந்தப்பட்ட பாதிக்கப்பட்ட உறுப்பு வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கும்.... அப்புறம் தான் நமக்கு அது உறைக்கும்.... உடனே ஒரு பெரிய மருத்துவமனையை நோக்கி ஓடுவோம்... அங்கே மருத்துவர் இரத்த பரிசோதனை, சிறுநீர்மல பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ.ஜி.சி, ஸ்கேன் இன்னும் என்னெல்லாம் இயந்திரங்கள் வாங்கி வைத்திருக்கிறார்களோ... அத்தனைக்கும் நம்மை வைத்து வேலை கொடுத்து விடு கடைசியாக சிறுநீரகங்கள் கெட்டுப்போய் விட்டது என்றோ... ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது என்றோ ஒரு குண்டை தூக்கி நம் தலையில் வீசுவார்கள்...

அப்புறம் சேமிப்பை எல்லாம் கரைத்து மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கும் கொடுத்து விட்டு உயிருடன் நடைபினமாகவோ உயிரற்ற முழு பிணமாகவோ தான் நாம் வெளியேற வேண்டும்...
இதற்கெல்லாம் யார் காரணம்...? வேறு யாரையும் குறை சொல்லவே முடியாது.. முழுக்க முழுக்க நாம் மட்டும் தான் காரணம்.. நம்முடைய "அவசர” புத்தி காரணம்.. நம்முடைய அறியாமை காரணம். நம்முடைய விளம்பர மோகம் காரணம்.. நம்முடைய முன்னோர்களை நாம் புறக்கணித்தது காரணம்.. அவர்களின் வாழ்க்கையை நான் ஏளனமாய் நினைத்தது காரணம்...


சரி.. என்னவோ நடந்தது நடந்துவிட்டது... இதிலிருந்து மீள என்ன வழி...?? முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைக்கு மாறிவிட்டால் போதுமா?


நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைகளுக்கு மாறினால் நாம் தொலைத்த ஆரோக்கியம் திரும்ப வந்துவிடுமா... என்றால்... நிச்சயம் முழுக்க வரவே வராது... பாதியளவு வேண்டுமானால் ஆரோக்கியம் வரலாம்... அப்படியானால் மீதி ஆரோக்கியம்??


நம் முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, சாமை, திணை,குதிரைவாலி போன்ற சிரறுதானியங்களை அதிக அளவில் உட்கொண்டார்கள்.... அதில் கிடைத்த சக்தியால் நாள் முழுதும் உழைத்தார்கள்.. அதனால் உடலில் சேர்ந்த சக்தி (கலோரீஸ்) எரிக்கப்பட்டது... உடல் ஆரோக்கியமாய் திகழ்ந்தது.... ஆரோக்கியமான உடலை தொட்டுப்பார்க்கவே நோய்கள் அஞ்சியது... அதே உணவை நாம் உட்கொண்டால் என்னாகும்?
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு அது சரி... ஏனென்றால் அன்று சொல்போன் இல்லை.. கம்ப்யூட்டர் இல்லை... டெலிவிஷன் இல்லை ரேடியேஷன் இல்லை.. போல்யூஷனும் இல்லை.. ஆனால் நம்முடைய காலகட்டத்திலோ இவைகள் எல்லாம் இருக்கிறது.. ஆரோக்கியமும் நிம்மதியும் இல்லை... என்னதான் நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை இன்று நாம் பின்பற்றினாலும் அவர்களை போல உழைக்க நாம் தயாராக இல்லை... அல்லது உழைக்கும் தேவை இருக்கவில்லை.... ஆகவே அந்த உணவுகளை உட்கொண்டு உடலால் உழைக்காமலேயே இருந்தாலும் அந்த சக்தி சேமிக்கப்படும்... அது நாளடைவில் நோயாக மாற்றமடையும்... கூடவே நாம் இன்று உபயோகிக்கும் மின்னணுக்கருவிகளின் கதிர் வீச்சும், மாசுபட்ட காற்றும் நிச்சயம் நோயை கொண்டுவரவே செய்யும்..


நமது ஊரில் இயற்கை உணவுகள் விற்பனை செய்வது எப்படி?

நாம் தினமும் எந்த மாதிரியான இயற்கை உணவினை சாப்பிட்டுவந்தால்,நமது குடும்பத்தில் இருக்கும் அனைவரது நோய்களும் சில வாரங்களில் குணமாகும்?

எந்தெந்த இயற்கை உணவினை எப்போது சாப்பிடவேண்டும்? எப்போது சாப்பிடக் கூடாது?

நமது ஊரில் இயற்கை உணவுகள் விற்பனை மையம் நாம் துவங்கியப் பின்னர் அதை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவது எப்படி?


இது போன்ற கேள்விகளுக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 3 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர்;விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்;

உணவே மருந்து- 2; கார்ப்பரேட் கலாசாரம் தந்த வாழ்க்கை முறை...

இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறை...கார்ப்பரேட் கலாசாரம் உருவாக்கி வைத்திருக்கும் "கௌரவ” உணவுப்பழக்கம்...காற்றில் பரவிக்கிடக்கும் கதிரியக்க வலை....இவற்றின் ஆக்கிரமிப்பில் நம்மிடம், நம் முன்னோர்களிடம் இருந்த விஷயங்கள் எல்லாம் கூட நமக்கு "எங்கேயோ கேட்ட விஷயங்களாய்” ஆகிப்போனதன் பலன் தான் இந்த கட்டுரைத் தொடரின் ஆணிவேர். 

காலைல இருந்து வேலை செஞ்சது உடம்பு அலுப்பா இருக்கு... ஒரு இஞ்சிக் கஷாயம் வச்சு குடிச்சா காலைல உடம்பு கலகலன்னு இருக்கும் என்ற முன்னோர்களின் வழி வந்த நாம்... 

”காலைல இருந்து உட்கார்ந்திருந்தது ரொம்ப டயர்டா இருக்கு.... ஒரு எனர்ஜி டிரிங் சாப்பிட்டா ரெப்ரஷ் ஆயிடலாம்” என்று சொல்லப்பழகி விட்டோம். அதை விட கொடுமையான விஷயம், அதை பெருமை என நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி நம்ப வைக்கப்பட்டோம் என்பதும் உண்மை. 

கரித்தூளையும், உப்பையும் சேர்த்து பல் துலக்குவதை அவமானம் என்று நம்பவைத்தவர்கள், இன்று "உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா... சார்க்கோல் இருக்கிறதா” என்று நம்மிடமே கேள்வி கேட்டு, அதையும் காசு கொடுத்து வாங்க வைத்து விட்டது தான் சோகம். 

"இதை” சாப்பிட்டால் இதய நோய் வராது என்று விளம்பரங்கள். மருத்துவ ஆய்வுகள் சொல்வதாகச் சொல்கிறார்கள். அடுத்த நான்கு வருடத்தில் "அதை”சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது. இடைப்பட்ட நான்காண்டுகளில் நாலு கோடிக்கு மேற்பட்டவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு மருந்தோ-செயற்கை உணவோ வரும் முன்பு அவைகள் சோதனை சாலைகளில் எலிகள்-முயல்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுமாம். ஆனால், இப்போதெல்லாம் கார்ப்பரேட்கள் அம்மாதிரியான சோதனைகளை ஆய்வகங்களில் செய்வதற்கு பதிலாக இந்தியா போன்ற நடுத்தர மக்கள் நிறைந்த நாடகள் மீதுதான் சோதனை செய்கின்றன. 

இருபது வருடங்களுக்கு முன்பு "மாரடைப்பு” மரணம் எங்கோ நிகழும். "கேன்சர்” என்பது எங்கோ கேள்விப்பட்ட வார்த்தையாக இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு, கேன்சர் மரணங்கள் நமது ஊரில், நமது தெருவில், நமது வீட்டிலே கூட நிகழும் பேரபாயம் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது. யார் சொல்வதை நம்புவது, யார் சொல்வதை நிராகரிப்பது, எது ஆரோக்கியம், எது கெளரவம், எது நல்லது, எது கெட்டது... எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லாவிட்டாலும் சில தெளிவுகளையாவது இனி வரும் கட்டுரை தொடர்கள் நிச்சயம் கொடுக்கும் என நம்பலாம்.


உணவே மருந்து- 1

நொறுங்க தின்றால் நூறு வயது... என்று பழமொழி உருவாக்கிய நம் முன்னோர்களின் வழித் தோன்றலகளாகிய நாம் இன்று நாற்பதை தொடும் போதே "சுகரு ஏறிப்போச்சு... ரெண்டு சப்பாத்திக்கு மேல சாப்பிட கூடாதாம்...” என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்.... 

"உப்பில்லா பண்டம் குப்பையிலே..”என்று சொன்னவர்களின் வாரிசுகள் "பிரஷரு ஏறிப்போச்சு... உப்பு அதிகம் சேர்க்க கூடாது” என்று சொல்வதை வாடிக்கையாக்கி விட்டோம்... இதற்கெல்லாம் காரணம் என்ன... என்பதை நாம் தேடியலைய வேண்டிய அவசியமே இல்லை... நாம் எதை எல்லாம் மறந்துவிட்டோம்.. எதை எல்லாம் தொலைத்துவிட்டோம் என்று தேடினாலே போதுமானது.. 

கேழ்வரகையும், கம்பையும், தினையையும், குதிரைவாலியையும் உண்டு, வயல் வெளிகளில் நாள் முழுதும் உழைத்து ஆரோக்கியமாய் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.. இன்று வயல்வெளிகளும் குறைத்து விட்டது... கேழ்வரகு-சாமை-திணை-கம்பு-குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும் அரிதாகி விட்டது... 

சேற்றில் கால்வைத்தவன் வாழ்க்கை முன்னேறாமல் போனதன் எதிர் விளைவு , அந்த உழைப்பாளிகளின் வாரிசுகள் அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் வித்தை கற்க ஆர்வமாகி விட்டார்கள்.. எல்லோருமே வெளிநாட்டு வேலைக்கோ - பெரிய நிறுவன வேலைக்கோ போகத்தொடங்கி விட்டார்கள்.. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் விவசாய வேலைகளை விட, ஒயிட் காலர் வேலை மிக மிக லாபகரமானதாகவே இருக்கிறது... ஆனால்.. இந்த லாபத்திற்காக நாம் கொடுத்த விலையின் மதிப்போ.... அதில் கிடைத்த லாபத்தை விட கோடி மடங்கு உயர்வானது.... ஆம்.. அதற்காக நாம் கொடுத்த விலை... நம் ஆரோக்கியமும், உழைப்பும், நிம்மதியும், ஆயுளும்... 

சிறுதானியங்களால் செய்யப்பட கூழ், கஞ்சி போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய சத்து நிறைந்த உணவுகள் , அவர்களுக்கு உழைக்க தேவையான சக்தியை கொடுத்தது... அந்த உணவுகளில் கிடைத்த சக்தி.. அவர்களின் உழைப்பால் கரைக்கப்பட்டது....சக்தி கிடைத்தாலும், சக்தி செலவழித்தாலும் ஒரு சீரான சுழற்சி முறையில் நடைபெற்றதால் நோய்கள் விலகி நின்றே வேடிக்கை பார்த்தது... ஆனால் இப்போதைய தலைமுறையோ... சக்தி கூடிய (கலோரீஸ்) பீஸா-பார்க்கர், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உடம்பில் கூடுதல் சக்தியை ஏற்றிக்கொண்டு, அதனை எரித்து கரைக்கும் உழைப்பு இல்லாமல் காலை முதல் மாலை வரை அலுவலகத்தின் நாற்காலியிலும், பிறகு வாகனங்களிலும், வீட்டிற்கு வந்து இணையத்தின் முன்போ- தொலைகாட்சியின் முன்போ அமர்ந்தும் பொழுதை கழித்து விடுவதால்... உடம்பில் ஏற்றப்பட்ட சக்தி செலவழிக்க வழியே இல்லாமல் உடம்பிலேயே சேமிப்பில் வைக்கப்படுகிறது... சேமிக்கப்படும் அதிக தேவையில்லாத சக்தியே கொழுப்பு... இந்த கொழுப்பு உடம்பில் சேர சேர அவைகள் இரத்தக்குழாய்களை அடைக்கின்றன... அப்புறம் நெஞ்சு வலி, மூச்சு திணறல், இதய இரத்த நாளங்களில் அடைப்பு, ஆஞ்சியோகிராம் - பைபாஸ் சர்ஜரி என்று ஐம்பது வயதை அடையும் முன்பாகவே முத்திரை குத்தப்பட்ட நோயாளிகளை வளம் வர தொடங்கி விடுகிறோம்... 

உணவே மருந்து- என்று உலகிற்கே சொல்லிக்கொடுத்த சித்தர்கள் நம் முன்னோர்கள்.. நாமோ... உணவே மாத்திரைகள்- மருந்துகளே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.. எத்தனையோ நூற்றாண்டு-ஆயிரம் ஆண்டுகளாய் தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் தான் இத்தனை மாற்றங்களை அடைந்திருக்கிறது... இது ஒரு குறுகியகால மாற்றம் என்பதால் இதை நிவர்த்தி செய்யவும் குறுகிய காலம் போதும் என்பதே எமது நம்பிக்கை... ஒரு குடும்பத்தின் உணவு முறை என்பது பெரியவர்கள் முடிவு செய்வது... எது ஆரோக்கியம்.. எது விஷம் என்ற விழிபுணர்ச்சியை குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் பெற்று விட்டால்... இனி வரும் தலைமுறையையாவது ஒரு ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்கலாம்....


உலக வல்லரசு அமெரிக்காவின் உண்மை நிலை என்ன?


உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகை மொத்தத்தை விடவும்,உலக நாடுகளிடம் அமெரிக்கா வாங்கியிருக்கும் கடன் தொகை மிக அதிகம்;

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால்,அதற்கு கடன் கொடுத்த நாடுகளுக்கு கடன் தொகை திரும்ப வராது;அதனாலேயே அமெரிக்காவின் பொருளாதாரத்தை இன்று உலக நாடுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டு வருகின்றன;


1990க்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காட்சி கண்டிப்பாக வரும்;இப்போது அம்மாதிரியான காட்சிகளை எந்த இயக்குநரும் வைப்பதில்லை;கடைசியாக அண்ணாமலை என்ற ரஜினிப் படத்தில் அம்மாதிரியான காட்சியை வைத்தார்கள்;
கதாநாயகி குஷ்பூவை ரஜினி ஏடாகூடமாக பார்த்துவிடுவார்;
அதை ரஜினி கடவுளே,கடவுளே என்பார்;
அடுத்த காட்சியில் குஷ்பூ,ரஜினியிடம் “நீதான் என்னை முழுசாப் பார்த்தே! அதனால் நீதான் என் புருஷன்”என்று ஜோடிகளை சேர்க்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்துப் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;

இந்த பண்பாடுதான் கடந்த 20,00,000 ஆண்டுகளாக லெமூரியக் கண்டத்தில் (தமிழ்நாடு) இருந்து உலகம் முழுக்கவும் பரவியிருக்கின்றது;இதைத் தகர்க்கும் விதமாக இணையம் அதன் இணையதளங்கள் செயல்படுவதால்,இன்று சீன நாகரீகம்,இந்து நாகரீகம்,இஸ்லாமிய நாகரீகம்,ஆப்ரிக்க நாகரீகம்,ஜப்பானிய நாகரீகம்,தென் அமெரிக்கா நாகரீகங்கள் என்று அனைத்தும் அமெரிக்காவின் இணைய நாகரீகத்தால் சிதையத் துவங்கிவிட்டன;இதனால் உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடு அழிய ஆரம்பித்திருக்கின்றது;இதன் விளைவாக இன்னும் 12 மாதங்களில் உலக வல்லரசு அமெரிக்கா பஞ்சபூதங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்;தனது வல்லரசு நிலையை இழந்தே தீரும்;


இப்போதே ஒவ்வொரு நாளும் 10,000 கோடி டாலர்கள் கடன் வாங்கித்தான் வெள்ளை மாளிகை நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது;

ஏதாவது ஒரு உலகப் போரை உருவாக்கி அதன் மூலமாக தன்னை,தனது உலக வல்லரசு என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளலாமா? என்று அமெரிக்க வெளியுறவுத்துறையும்,பாதுகாப்புத்துறையும் கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து வருகின்றன;

இரு நாடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிடுவது;
அந்த இரண்டு நாடுகளுக்கும் தனது போர் ஆயுதங்களை விற்பது இப்படியே கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்கா தனது உலக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது;இதைத் தகர்க்க எந்த ஒரு நாட்டாலும் முடியவில்லை;அவ்வளவு வலிமையான உளவுத்துறை அதனிடம் இருந்து வருகிறது;

எனவே,உலகமக்களின் கண்ணீரையும்,உலகமக்களின் காம உணர்ச்சியை வரைமுறையின்றி தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாலும் உலக வல்லரசு அமெரிக்காவுக்கு பஞ்சபூதங்களே தண்டனை கொடுக்கப் போகின்றன;

நார்ஸ்டர்டாமஸீம்,பால்கன் நார்ஸ்டர்டாமஸீம் அமெரிக்காவும் சுதந்திர ஜாதகமும்,பல சர்வதேச ஜோதிட ஆய்வுக் கட்டுரைகளும் இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தவாறு உள்ளன;


வாழ்க பாரதம்;வெல்க பாரதத்தின் பண்பாடு;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


எமது ஜோதிட அனுபவங்கள் பகுதி 5(ஜோதிடர்களை பிரம்மா ஆக்கும் கலியுகம்)


அந்த நண்பருக்கு வயது 35 ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது;ஏற்கனவே இரண்டு குழந்தைகள் அவருக்கு! அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது,ஒருமுறை எம்மை சந்தித்தார்;அப்போது நாங்கள் நான்கு ஜோதிடர்கள் ஒன்றாக காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம்;

மதுரை,ஈரோடு,வேலூர்,சென்னை போன்ற நகரங்களில் ஜோதிட ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன;அவைகள் அறக்கட்டளைகளின் கீழ் இயங்கிவருவதால்,அங்கே ஜோதிடர்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விடுமுறை நாட்களில் சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;


ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற சிறுநகரங்களில் ஜோதிடப் பயிற்சியே கிடைப்பது அரிது;இரண்டு ஜோதிடர்கள் சந்தித்துக் கொண்டால்,ஒருவரை பார்த்து இன்னொருவர் சந்தேகப்படுவது அல்லது பம்முவது(பயப்படுவது)தான் காலம் காலமாக நடந்து வரும் உண்மை;அதையும் மீறி சில ஜோதிடர்களை ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை ஒருங்கிணைப்பது வழக்கம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அல்லது சிவகாசி சாலையில் அமைந்திருக்கும் மூவர் ஜீவசமாதியில் ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு அதை ஆராய்வது வழக்கம்;

இதன் மூலமாக அங்கே வரும் ஜோதிடர்கள்,ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிட ஆர்வலர்களுக்கு ஜோதிட விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன;ஜோதிடர்களின் வறுமையும் குறையத் துவங்கியது;ஒரு நாளில் சுமாராக ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஜோதிட கலந்துரையாடல் செய்வது வழக்கம்;

அப்படி ஒரு நாளில் தான்,35 வயது நண்பர் அங்கே வந்தார்;வந்து,எங்களின் ஜோதிடப் புலமையைக் கவனித்துக் கொண்டே இருந்தார்;மறுநாள் எம்மை தனிமையில் சந்தித்தார்;


யோகமான ஜாதகம் நமக்கு இல்லை எனில் எப்படி வசதியாக வாழ்வது? என்று கேட்டார்;
யோகமான கிரக அமைப்பில் பிறந்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் போதும் என்று கூறினோம்;
அது முடியாவிட்டால் என்ன செய்ய?
நீங்கள் கேட்பது புரியவில்லை;என்றோம்;
யோகமான பெண்ணை திருமணம் செய்ய முடியாவிட்டால்,எப்படி வசதியாக வாழ்வது? என்று கேட்டார்;
உங்கள் ஜாதகத்தில் மறைந்திருக்கும் தோஷங்கள்,சாபங்களை நீங்களே நிவர்த்தி செய்தால் போதும்;வசதியான,வளமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று விளக்கினோம்;
சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போன அவர்,அடுத்த கேள்வியை வீசினார்;
அப்படி நிவர்த்தி செய்ய எவ்வளவு காலமாகும்?
குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்;அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கூட ஆகலாம்; என்றதும்,இடைமறித்து,அடுத்த கேள்வியை வீசினார்;
“அதுவரைக்கெல்லாம் என்னால் பொறுக்க முடியாது;சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகணும்”அதுக்கு ஏதும் வழி இருக்கா? என்றார்;
எமக்கு சிரிப்புத் தாளவில்லை;வேகமாக பணம் சம்பாதித்தால்,அது வேகமாகப் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய அரசியலில் படுவேகமான உயர்ந்து,படுவேகமான வீழ்ந்தவர்களின் வரலாற்றை விவரித்தோம்;

ஒரு கேவலமான பார்வை எம்மை அவர் பார்த்தார்;அதில் நீ எனக்கு உதவ மாட்டாய்;உதவ முடிந்தாலும் செய்ய மாட்டாய் என்ற அவரது எண்ணம் புலப்பட்டது;பல்லைக் கடித்துக் கொண்டு போய்ட்டு வாரேன் என்று போய்விட்டார்;சில மாதங்கள் கடந்தன;ஒருநாள் மீண்டும் அவர் வந்தார்;


“எனது மனைவிக்கு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது” என்றார்;
அப்படியா! சுகப் பிரசவம் நடைபெற வாழ்த்துக்கள் என்றோம்;
டாக்டர் மேடம்,குறிப்பிட்ட நேரம் குறித்துவிட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்;என்பதை மெதுவாகவும்,எதிர்ப்பார்ப்போடும் கூறினார்;
அப்போது நிறைய ஓய்வு நேரம் இருந்தபடியால்,அவரிடம்,
“அப்படியா! ரொம்ப நல்லது;இப்போ நீங்க ஃப்ரீதானே?”என்று கேட்டோம்;
அதற்கு என்று காத்திருந்தவர் போல,படுவேகமாக ஆமாம் ஆமாம் என்று கூறினார்;
உங்கள் டாக்டர் மேடம் எனென்ன தேதிகள் கூறியிருக்கிறார்? என்று கேட்டோம்;
இந்த மாதம் 7,8,9 கூறியிருக்கிறார்;என்று அவர் உற்சாகம் கொப்பளிக்க விவரித்தார்;
சுமாராக 30 நிமிடங்கள் கரைந்தன;
“9 ஆம் தேதியில் இரண்டு நேரங்களை குறிப்பிட்டு,இந்த நேரத்தில் உங்கள் குழந்தை பிறந்தால்,சில ஆண்டுகள் வரை நீங்களும்,உங்கள் மனைவியும் கஷ்டப்படவேண்டும்;அல்லது தினமும் சண்டையிட வேண்டும்;அதன் பிறகு,நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்” என்றோம்;
அந்த நேரம் தான் எனக்கு வேண்டும்’ என்றார் படு உற்சாகமாக;
“தம்பீ! உங்களுடைய கஷ்டம் புரியுது;உங்களைப் பற்றியும்,உங்கள் வாழ்க்கை முறையைப் பற்றியும் விசாரிச்சதுல,நீங்கள் சிறு வயசில் இருந்தே பணத்தால் ரொம்ப அவமானப்பட்டு இருக்கீங்கனு கேள்விப் பட்டேன்;. . .”
அடிவயிற்றில் இருந்து கணீர் குரலில்,
“அண்ணே! நான் என்ன கஷ்டம்னாலும் பட்டுக்கறேம்ணே!நான் கோடீஸ்வரன் ஆகணும்;அந்த நேரத்தைக் குடுங்க.டாக்டர் மேடத்திடம் கொடுக்கணும்”என்று அவசரப்படுத்தினார்;நாம் சொல்வதைக் கவனிப்பதாக இல்லை;

(இன்றைய கால கட்டத்தில் இவரைப் போலத்தான் பலர் இருக்கின்றனர்;சிறுவயது முதல் உறவுகள்,நட்புகளின் பணத்திமிரால் பல்வேறுவிதங்களில் அவமானப்படுகின்றனர்;பரிதாபமாக இருக்கின்றது.உலகமயமாக்கல்,ஊழலால் நேர்மையாளர்கள் படும் கஷ்டம்,அரசியலின் சூழ்நிலை போன்றவை அப்பாவிகளையும் பேராசை மிக்கவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது)

குழந்தை பிறக்க இருக்கும் நேரத்தை எழுதிக் கொடுத்தோம்;பத்து நாட்கள் கடந்தன;
அந்த 35 வயது நண்பர் போன் செய்தார்;
“அண்ணே! நீங்க சொன்ன நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தை பிறந்துடுச்சு;நான் கோடீஸ்வரன் ஆயிடுவேன்ல”என்று ஒரு தகவலோடு,ஒரு சந்தேகக் கேள்வியையும் எழுப்பினார்;

நாம் பொறுமையாக, “தம்பீ! நீங்க கோடீஸ்வரன் ஆன பிறகு,எம்மை மட்டுமல்ல;யாரையும் மதிக்க மாட்டீங்க;யாரிடமும் பழகவும் மாட்டீங்க”என்று கூறினோம்;அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை;அடுத்த 22 நிமிடத்தில் நேரில் வந்தார்; “அப்போ நீங்களே என் குழந்தைக்கு ஜாதகம் எழுதிடுங்க” என்றவர், ‘ஜாதகம் எழுதறதுக்கு எவ்வளவு தட்சிணை?’என்றார்.நாம் சொன்னதும் முழுத் தொகையையும் கொடுத்துவிட்டு பொறுமையின்றி புறப்பட்டுவிட்டார்;

45 நாட்களில் வந்து தமது குழந்தை ஜாதகத்தை வாங்கிவிட்டுப் போனார்;
குழந்தை பிறந்தது முதல் 1 வருடம் 7 மாதம் வரை வீட்டில் ஒரே சண்டையாக இருக்கும்பா என்றோம்;சரிங்கண்ணே! நான் சமாளிச்சுக்கிறேண்ணே என்றார் எரிச்சலுடன்!

ஆறு மாதங்கள் கடந்தன;

ஒரு நாள் ஓடி வந்தார்; இடம் பொருள் பார்க்காமல், “ அண்ணே! உங்கள் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ணே. . .” என்று இழுத்தார்;

தம்பீ! இப்போ ராஜபாளையத்துக்கு போய்க்கிட்டு இருக்கேன்;நீங்கள் மாலையில் வர்றீங்களா? என்றோம்;
நானும் உங்க கூட வர்றேனே? என்ற வார்த்தைகளில் கெஞ்சல் தெரிந்தது;

சரி வாங்க என்று அடுத்து வந்த தனியார் பேருந்தில் ஏறினோம்;
உட்கார சீட் கிடைத்தது;பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை;உட்கார்ந்த உடனே அவர் அழுத அழுகையில் பேருந்தில் இருந்த அனைவருமே திரும்பிப் பார்த்தனர்;இவரோ,அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவென பெரும் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்தார்;

கண்டக்டரோ பேருந்தை அவசரமாக நிறுத்திவிட்டு என்னவென்று விசாரிக்க வந்துவிட்டார்;கூடவே டிரைவரும்! எமக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது;இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது?என்று தெரியாமல் அந்த கணத்தில் தடுமாறித்தான் போனோம்;

அழுகையை நிறுத்திய அந்த நண்பர்,கண்டக்டரிடம், “அண்ணே! எனக்கு குடும்பக் கஷ்டம்;நீங்க தப்பா நினைக்காதீங்க” என்று உறுதியான குரலில் சொல்லிவிட,பேருந்து புறப்பட்டது;
அழுகையை நிறுத்தியவர்,எம்மிடம் நீங்கள் சொன்னது மாதிரி தினமும் என்னை ரொம்பக் கேவலமா என் பொண்டாட்டி திட்டுறா;கையில் எது கிடைச்சாலும் எடுத்து என் மேலே வீசுறா; இது எத்தனை நாளில் நிற்கும்? என்றார்;

குழந்தை பிறந்து எவ்வளவு நாள் ஆகுதுபா? என்று கேட்டோம்;
மனதில் கணக்கு போட்டவாறு, 4 மாசம் என்றார்;
“குழந்தைக்கு 1 வயது 7 மாசம் முடியும் வரை இதுதான்பா நடக்கும்” என்றோம்;

உடனே அதையும் மனக்கணக்கு போட்டு,கண்களை அகலமாக விரித்துக் கொண்டு, “இன்னும் ஒரு வருசம்,3 மாசமா? அதுவரைக்கும் என்னால் தாக்குப் பிடிக்க முடியாதுண்ணே!”என்றார்;

நமக்கு முணுக்கென்று கோபம் வந்தது;
அன்னைக்கு நான் பாத்துக்குறேன்னு சொன்னே? என்று பதிலுக்கு நாம் கத்தினோம்;

அந்த நண்பரோ கொஞ்சமும் அசரவில்லை; அதைவிட அதிகமான குரலில் கத்தியவாறு, “ஆமாம்! நான் தான் சொன்னேன்;. . .”என்றவர் சட்டென குரலினை தாழ்த்தியவாறு
“பரிகாரம் ஏதும் இருக்கா?”என்றார்;

“தம்பீ! இதுக்கு பரிகாரம் இல்லை;நீங்கள் உள்ளூரிலேயே லாட்ஜில் தங்கிக்குங்க;இது மட்டும் தான் வழி”என்றோம்;
எமது குரலில் இருந்த தீர்க்கமான பதிலைக் கேட்டு,அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவர்,(வன்னியம்பட்டி ஸ்டாப் அது=ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் நடுவே இருக்கும் ஸ்டாப் அது) மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போயேவிட்டார்;

பேருந்தில் இருந்தவர்கள் பார்த்த பார்வை இருக்கிறதே? என்னை வட்டிக்கு விடுபவனைப் போல பார்த்தார்கள்;

3 ஆண்டுகள் கடந்தன;அந்த 35 வயது நண்பர் இப்போது கார் வாங்கிவிட்டார்;ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில்(ராஜீவ் காந்தி நகர்) ஒரு பெரிய வீடு கட்டினார்;இப்போது எம்மை எங்கு பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை;கலியுகத்தின் அடையாளங்களில் ஒன்று இது;இன்று ஏற்றுமதித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


Tuesday, December 29, 2015

காஞ்சிப் பரமாச்சாரியாரின் உபதேசம்


“நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியினால் எல்லா சவுகர்யங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்;மதமும்,அனுஷ்டானமும் எதற்கு வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள்;ஸயன்ஸினால் பல சவுகரிய சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே; ஆனால்,இதனால் ஆனந்தம் வந்துவிட்டதா என்பது தான் கேள்வி;

ஆனந்தம் என்பது மனதிருப்தியை,உள்ள நிறைவைக் குறித்த விஷயம்;சவுகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை.இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஓயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் அதிருப்தியா அடைந்து வருகிறார்கள்?
ஏற்கனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்க்கிறோம்.அதோடு இதில் போட்டா போட்டி,வர்க்க பேதம்,துவேஷம் எல்லாமும் வளர்ந்துவிட்டன;மனுஷ்யனின் ஆசையை பூர்த்தி செய்வது முடியாத காரியம்;ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காண முடியும்.இதற்கு வழிகாட்டுவது மதம் தான்;ஆனபடியால்,ஸயன்ஸ் அபிவிருத்தி ஆகியிருப்பதாலேயே மதத்தின் தேவையும் அதிகமாயிருக்கிறது எனலாம்;

லெளகீக,விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்மசாந்தி காணமுடியவில்லை என்று அமெரிக்கா,ருஷ்யா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன;முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைச் சுற்றவிட்ட நாடு ருஷியா;அது கம்யூனிஸ நாடு;அங்கு மத போதனை கிடையாது;இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை;அதனால் தான் நமது மகாபாரதத்தை ருஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் அவர்கள் போதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்;அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி(Emotional Satisfation) இல்லாததாலேயே அவர்கள் யோகம்,வேதாந்தம்,சங்கீர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள்;ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சவுக்கியத்தில்(fashion,amazing,complete enjoy) இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமானது;

நம் தேசத்தில் லெளகீக ஆசையும்,நாஸ்தீகமும்,தெய்வ நிந்தனையும் தலைதூக்கினால் கூட,ஜீவசக்தி வாய்ந்த நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எந்நாளும் அழிவு வராது என்று நம்பலாம்;அப்படி அழிவு வராமல் காப்பது நம்முடைய கடமை.

‘காப்பது’ என்றால் என்ன செய்ய வேண்டும்? 

நாஸ்திகர்களோடு,மத நம்பிக்கையில்லாதவர்களோடு சண்டை போடுவதா? இல்லை;ஹிந்து மதம் சண்டையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது;

ஸ்ரீமகாவராகி மங்கள ஆரத்திப் பாடல்


ஜெய் ஜெகதீஸ்வரியே! அம்மா அகிலாண்டேஸ்வரியே!
அம்மா அகிலாண்டேஸ்வரியே!!
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அன்புடன் எழுந்தருள்வாய்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

செல்வச் செழிப்பினைத் தந்தருள்வாயே
ஸ்ரீபரமேஸ்வரி, அம்மா ஸ்ரீபரமேஸ்வரி
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
அம்மா வராகமுகி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

உயிரினை வளர்க்கும் உடல் நலம் காக்க
மாரியாய் எழுந்தருள்வாய்
அம்மா மாரியாய் எழுந்தருள்வாய்
ஆத்மா நீ என்றறிந்திடச் செய்வாய்
ஸ்ரீகாமேஸ்வரி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்
தலைமை ஏற்றிடுவாய்,அம்மா தலைமை ஏற்றிடுவாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ரூபிணியே
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

வாராகி வாராகி ஓம்
க்ஷம் வாராகி வாராகி வாராகி ஓம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!!


Thursday, December 24, 2015

அன்னை அரசாலை(வராகி)யின் அருளை பெற நாம் செய்ய வேண்டியது என்ன?


அலைபேசியும்,இணையமும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக மாற்றிவிட்டன;நம் ஒவ்வொருவருக்கும் குடும்பப் பொறுப்பு,வேலை/பணிப்பொறுப்பு/தொழில் பொறுப்பு என்ற சுமைகளுடன் சொந்த ஆன்மீக லட்சியத்தை அடையும் பொறுப்பு என்று ஏராளமான சுமைகளை மனதுக்குள் சுமந்து கொண்டு தான் தினசரி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது;

இந்த சூழ்நிலையில் உடனடி உணவு,உடனடி வேலை என்று நமது வாழ்க்கைப் பயணம் மாறிவிட்டதால்,உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்ற மனோபாவமும் நம்மிடையே பரவி விட்டது;இதற்கு பேராசை என்று சொல்வது சரியா?

உடனடியாக அல்லது மிகவும் குறுகிய காலத்திற்குள் வரங்களை அள்ளித் தருபவர்கள் பைரவரும்,வராகியும் ,லட்சுமி நரசிம்மரும் மட்டுமே!

முறைப்படி மந்திரஜபம் ஜபித்தாலே இவர்களின் அருள் கிட்டிவிடும்;இன்னும் விரைவாக கிட்டிட நாம் செய்ய வேண்டியது பின்வரும் ஆலயங்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கலாம்;அல்லது இந்த ஊரில் நீங்கள் வசிக்கலாம்;இந்த ஆலயங்களில் காலையில் 6 மணிக்குள்ளாகவும்,மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாகவும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள் மற்றும் வராகி மாலை(வராகி பரணி)யை ஜபிப்பது நன்று;

தேய்பிறை பஞ்சமி மற்றும் பவுர்ணமி நாட்களில் இவைகளை ஐந்து அல்லது ஐந்தின் மடங்குகளில் ஜபிப்பது அவசியம்;

இந்த ஆலயங்களைத் தவிர,நமது ஊர்களில் இருக்கும் பழமையான ஆலயங்களிலும் ஜபிக்கலாம்;உள்ளூரில் வசிப்பவர்கள் தினமும் வசிக்கலாம்;தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலையிலும் ஜபிக்கலாம்;

இந்த பூமியில் நாம் கேள்விப்படும் அனைத்து பெண் தெய்வங்களும் அன்னை அரசாலை(வராகி)யின் அம்சங்களே!சிவனும்,பார்வதியும் இணைந்த ஒரே வடிவம் அரசாலை(வராகி);மஹாவிஷ்ணுவின் வராக அவதாரமும் அன்னை அரசாலை(வராகி)யே!

1.காசி
2.திருவிடந்தை(சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் 45 வது கி.மீ.தொலைவில்) அருள்மிகு லட்சுமி வராகப் பெருமாள்+கோமளவல்லித் தாயார் ஆலயம்
3.அரியலூர் ஆலந்துறையார் ஆலயம்(இங்குள்ள போர்க்காளி அன்னை அரசாலையே!)
4.செங்கண்மால் அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர்+பெரிய நாயகி( சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ளது)
5.திருப்பன்றிக்கோடு,கன்னியாக்குமரி மாவட்டம்
6.அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளவரதர்+அலங்காரவல்லித் தாயார்
7.குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர்+பாலகுஜாம்பாள்(கடம்பவன நாதர்+மற்றிலா முலையாள்)
8.தஞ்சை பிரகதீஸ்வரர்(அன்னையின் பெயர் பிருகத் வராகி)
9.உத்திரகோசமங்கை(ராமநாதபுரம் மாவட்டம்)
10.பள்ளூர் அரசாலை(காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் 15 வது கி.மீ.)
11.அண்ணாமலை(அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்)
12.காளஹஸ்தி அருள்மிகு காளஹஸ்திநாதர் என்ற குடுமிநாதர்
13.ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீவராகப் பெருமாள் ஆலயத்தில் பூவராகர்!
14.திருமலை திருப்பதியில் ஆதிவராகர்
15.ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநா
தசுவாமி+சிவகாமி அம்பாள்
16.காஞ்சிபுரம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
17.கும்பகோணம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
18.திருச்சி திருஆனைக்கா அகிலாண்டேசுவரி
19.பழைய சமயபுரம்
20.இருக்கன் குடி
21.கன்னியாக்குமரி அம்மன் கோவில்

இந்த ஆலயங்களில் சிவம் அல்லது பெருமாள் சன்னதியின் முன்பாக 15 நிமிடமும்,அம்பாள்/தாயாரின் சன்னதி முன்பாக 15 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;செல் போனை இந்த சமயத்தில் அணைத்து வைக்கவும்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

செல்வ வளத்தை அள்ளித் தரும் ஸ்ரீஅரசாலை(சொர்ண வராகி) வழிபாடு!!!


தொடர்ந்து 27 பவுர்ணமி நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீஅரசாலையை வழிபட்டால்,மகத்தான செல்வ வளம் நம்மைத் தேடி வரும் என்பதை எமது குருவின் உபதேசத்தின் பெயரில் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;

நம்மில் பலர் தினசரி அன்னை அரசாலையின் 12 பெயர்களை ஜபித்து வருகிறோம் அல்லவா?

அவர்கள் அனைவருமே 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் இரவு ஒரு மணிநேரம் தொடர்ந்து இந்த 12 பெயர்களை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபித்து வரலாம்;ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கு இந்த 12 பெயர் ஜபமே செல்வ வளத்தை,வேலை வாய்ப்பைத் தந்துவிடும்;

சிலருக்கு திருமணத் தடை இருக்கும்;அது நீங்கிவிடும்;
சிலருக்கு வராக்கடன் இருக்கும்;அது திரும்பக் கிடைத்துவிடும்;
சிலருக்கு ஊரெல்லாம் கடன் வாங்கியிருப்பர்;அவர்களுக்கு அந்தக் கடன் களை தீர்க்கும் சந்தர்ப்பம் அமையத் துவங்கும்;
சிலருக்கு திருமணம் ஆகி,பல ஆண்டுகள் ஆகியிருக்கும்;ஆனால்,குழந்தை இல்லையே? என்ற ஏக்கம் இருக்கும்;அன்னை அரசாலை(வராகி)யின் 12பெயர்களை ஜபிக்க ஆரம்பித்ததும்,அந்த குறை நீங்கியிருக்கும்;
குறைந்த பட்சம் 108 நாட்கள் தொடர்ந்து ஜபித்திருந்தால் இவைகளெல்லாம் நடைபெற்றிருக்கும்;

சிலருக்கு 200 நாட்கள்,300 நாட்கள் ஆகியிருந்தாலும் ஒன்றுமே நடக்காமல் விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளியிருக்கும்;அவர்கள் ஜாதகப்படி கடுமையான கர்மவினைகள் இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்;

அப்படிப் பட்டவர்கள் தினமும் அன்னை அரசாலையின் 12 பெயர்களை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்;மேலும்,ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி இரவிலும் ஒருமணி நேரம் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபிக்க வேண்டும்;

கூடவே,ஒவ்வொரு பவுர்ணமி இரவன்றும் அன்னையின் 12 பெயர்களை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு தவிர்த்து உலகின் பல ஆலயங்கள்,மடங்கள்,ஆசிரமங்கள்,சத்சங்கங்களில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;அங்கே ஒரு மணி நேரம் அன்னை அரசாலை(வரா
கி)யின் 12பெயர்களை ஜபிப்பது நன்று;

தொடர்ந்து 27 பவுர்ணமி இரவுகள் இப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபட வேண்டும்;இதில் முதல் 9 பவுர்ணமிகள் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போதே,எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;அதன் மூலமாக ஸ்ரீசொர்ண வராகி வழிபாட்டுமுறையை தங்களுக்கு போதிக்கும் சந்தர்ப்பத்தை அன்னை அரசாலை(வராகி) அருளுவாள்;தொலைதூரங்களில் இருப்பவர்கள் மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது அவசியம்;

பவுர்ணமி நாட்களின் பட்டியல் இதோ:இந்த நாட்களின் இரவில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபடவும்:

24.12.2015 வியாழன்
23.1.2016 சனி
21.2.2016 ஞாயிறு இரவு 11.5 முதல் 22.2.2016 திங்கள் இரவு 11.57 வரை;
22.3.2016 செவ்வாய்
21.4.2016 வியாழன்
20.5.2016 வெள்ளி நள்ளிரவு 1.33 முதல் 21.5.2016 சனி பின்னிரவு(ஞாயிறு விடிகாலை)3.17 வரை;
18.6.2016 சனி
19.7.2016 செவ்வாய்
16.8.2016 செவ்வாய்
15.9.2016 வியாழன் வியாழன் இரவு 2.58 முதல் 16.9.2016 வெள்ளி இரவு 1.16 வரை;
14.10.2016 வெள்ளி
13.11.2016 ஞாயிறு
12.12.2016 திங்கள்
10.1.2017 செவ்வாய்
9.2.2017 வியாழன்
11.3.2017 சனி
9.4.2017 ஞாயிறு
இதில் 17 பௌர்ணமிகளைக் குறிப்பிட்டிருக்கின்றோம்;அடுத்த பவுர்ணமி நாட்களை டிசம்பர் 2016 இல் வெளியிடுவோம்;

இனி எப்போதும் மனிதப் பிறவி வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் நம்மில் பலர் இங்கே பிறந்திருக்கின்றோம்;ஆனால்,அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லவிடாமல் நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மாக்கள் தடுக்கின்றன;இது புரியாமல் நம்மில் பலர் இறைசக்தியை திட்டிக்கொண்டும்,சபித்துக் கொண்டும் இருக்கின்றோம்;இப்படி செய்யலாமா?

பதிலாக,பிறப்பற்ற முக்தியை அடைய முதலில் நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத் தன்னிறைவை எட்டுவோம்;அப்படி எட்டுவதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும்,அதிகபட்சம் சிலபல ஆண்டுகளும் ஆகும்;அதன் பிறகு இறைசக்தியுடன் கலப்பதற்குரிய சூட்சும வழிமுறைகள் நம்மைத் தேடிவரும்;

அன்னை அரசாலை(வராகி)யின் கருணைக்குப் பாத்திரமானால் இவை அனைத்தும் நடைபெற்றே தீரும்;

இந்த பவுர்ணமியில் இருந்தே அன்னை அரசாலையை வழிபடத் துவங்குவோம்!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Tuesday, December 22, 2015

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை


தினமும் காலை(4.30 முதல் 6 மணி என்றே இதுவரை எழுதியிருந்தோம்;குளிர்காலம் துவங்கிவிட்டது அல்லவா?ஏப்ரல் 14 வரை 5 முதல் 7 மணி வரை) 15 நிமிடம் அன்னையின் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;

இரவில் அதே போல 15 நிமிடம் அன்னை அரசாலை(வராகி)யின் பெயரை ஜபிக்க வேண்டும்;முதல் 30 நாட்கள் மட்டும் தான் 15 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

31 வது நாளில் இருந்து 60 வது நாள் வரை தினமும் காலையில் 30 நிமிடமும்;இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து 90 வது நாள் வரை காலையில் 45 நிமிடமும்;இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

91 வது நாளில் இருந்து (ஜபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து=கணக்கிற்கு) 3 ஆம் ஆண்டு வரையிலும் தினமும் காலையில் 1 மணி நேரமும்;இரவில் 1 மணி நேரமும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை ஜபித்து வர வேண்டும்;


இப்படி ஜபிக்கத் தேவையான தகுதிகள்:
1.அசைவம்,மது அறவே தவிர்க்க வேண்டும்;மீன்,முட்டை,முட்டை உணவுகள்,புரோட்டா இவைகளும் முழு அசைவமே!
2.வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்;
3.இந்த மந்திர ஜபத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக தினமும் ஜபிக்கிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு அளவற்ற நன்மைகள் தங்களைத் தேடி ஓடி வரும்;
4.இந்த மந்திர ஜபத்திற்கு குரு உபதேசம் அவசியம் இல்லை;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளே அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள்!


அன்னை அரசாலை(வராகி)யே நமது பாரதமாதா என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ரகசியம்!!!

ஏன் இலவசமாக ஜோதிடப்பலன் கள் சொல்லக் கூடாது தெரியுமா?


கலையை காசாக்கத் தெரியாதவர்களுக்கு,தட்சிணா தேவியின் சாபம் பீடிக்கும்;
செருப்பு தைப்பது ஒரு கலை;
முடிவெட்டுவது ஒரு கலை;
விவசாய நிலத்தில் களை எடுப்பதும் ஒரு கலை;(நீங்களோ,நானோ களை எடுத்துக்க மாட்டோம்)
சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பதும் ஒரு கலை;
இளநீர் சீவித்தருவதும் ஒரு கலை;
கூட்டம் கூட்டுவது ஒரு கலை;
கோவிலில் பூஜை செய்வதும் ஒரு கலை;
கோவிலில் அல்லது வீட்டுப் பூஜையறையில் பாடுவது ஒரு கலை;
பாட்டு இயற்றுவது(எழுதுவது) ஒரு கலை;
கதை சொல்வது ஒரு கலை;(இந்தக் கலையின் தாயகம் நமது தமிழ்நாடுதான்!)
அதே போல ஜோதிடம் கணித்து எதிர்காலம் சொல்வதும் ஒரு கலை;
கலையை காசாக்கத் தெரியாதவர்கள்(ஜோதிடம் பார்ப்பதும் ஒரு தொழிலே!) தட்சிணைக்குரிய சக்தியாகிய தட்சிணாதேவியின் சாபத்திற்கு ஆளாவார்கள்;இதனால் அடுத்து வரும் பிறவிகளில் ஜோதிடத்தில் பிரபலம் ஆக முடியாது;ஆனால்,அதில் பிறரைவிடவும் ரொம்ப திறமைசாலியாக இருப்பார்கள்;அதை வெளிப்படுத்திட சந்தர்ப்பம் கிடைக்காது;

இதற்குப் பரிகாரம் என்னவெனில்,இப்பிறவியில் ஒரு ஜாதகம் பார்த்தாலும் அதற்கு தட்சிணை வாங்குவது மட்டுமே!

திருவனந்தபுரத்தில் ஒரு அம்மையார் வாழ்ந்துவந்தார்;அவருக்கு அவரது 37 ஆம் வயதில் ஒரு மகானின் ஆசி(அவரது ஜாதகப்படி) கிடைத்தது;அந்த ஆசியால் அருள்வாக்கு சொல்லும் ஆற்றல் உருவானது;எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்லும் திறன் உருவானது;இதை எப்படி குறுகிய காலத்தில் பிரபலப்படுத்த?

ஒரு மாதம் மட்டும் இலவசமாக அருள்வாக்கு சொல்ல முடிவெடுத்தார்;

ஆனால்,பொதுமக்களின் மனோபாவம் வெறும் 16 நாளுடன் இலவசமாக பார்க்கும் ஆர்வத்தையே பொசுக்கிவிட்டது;
ஆமாம்! இலவசம் என்பதால் ஒரு அம்மையாரிடம் கேட்கக் கூடாத தமது அந்தரங்க சந்தேகங்களுக்கு விடை தேட ஆரம்பித்துவிட்டனர்;

எனவே,ஜாதகம் பார்ப்பதற்கு கண்டிப்பாக தட்சிணை வாங்குவது அவசியம்;

இப்படிக்கு

27 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர்;ஜோதிடப் பயிற்சியாளர்,ஜோதிட எழுத்தாளர்,கலையுலக ஜோதிடர் கை.வீரமுனி . . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990  9364231011

Monday, December 21, 2015

பலபிறவிக் கர்மாக்களை அழிக்கும் அன்னைஅரசாலை(வராகி) வழிபாடு!


யாரெல்லாம் இப்பிறவி முழுவதும் வயதுக்குரிய மெச்சூரிட்டி இல்லையோ,அவர்கள் அனைவருமே 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு இப்பிறவியில் மனிதராகப் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்;

பல முறை மனிதப் பிறவி எடுத்தவர்களே ஜோதிடர்களாக,பிரபல தொழிலதிபர்களாக,சக மனிதர்களை பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாக (திரைப்பட இயக்குநர்,பஞ்சாயத்து போருட் தலைவர்,அரசியல் கட்சியில் முக்கியப் பதவி,வங்கி அதிகாரி,காவல்துறை அதிகாரி,கோடிகளைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள்,ஜவுளிக்கடை விற்பனையாளர்,கள்ளக் கடத்தல் தலைவர்கள்,மருத்துவர்கள்,பேருந்து ஓட்டுனர்கள்,ஆசிரியர்கள்,உடற்பயிற்சி ஆசான்கள்,யோகா மாஸ்டர்கள்,ரெய்கி மாஸ்டர்கள்,பெட்டிக்கடை நடத்துபவர்கள்,கோவில் பூசாரிகள்) இருக்கின்றார்கள்:இதை நீங்கள் நம்பாவிட்டாலும்,உண்மைகள் எப்போதுமே உண்மைகள் தான்!

விநாயகர் உபாசனை,முருக உபாசனை,சிவ உபாசனை,ஆஞ்சனேய உபாசனை,ஹயக்ரீவர் உபாசனை,குபேர உபாசனை,லக்ஷ்மீ நரசிம்மர் உபாசனை,பைரவ உபாசனை,காளி உபாசனை,நீல சரஸ்வதி உபாசனை,துர்கை உபாசனை,நவக்கிரக உபாசனை,சித்தர்கள் உபாசனை,துறவிகள் உபாசனை,மகான் உபாசனை,பிரம்மா உபாசனை,குலதெய்வ உபாசனை என்று எத்தனை இருந்தாலும், மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு யார் வருவார்கள் தெரியுமா?

ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் தான்!

அது எப்படி?

நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப யோகங்களையும்,அவமானங்களையும்,பணச் சிக்கல்களையும் அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;கஷ்டம் தாங்கமுடியாத போது கடவுளை கண்டமேனிக்குத் திட்டுகிறோம்;கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா?(குணங்களைக் கடந்தவர் ஈசன்/கடவுள் என்று சொல்வது இதற்குத்தான்;அவருக்கு பழிவாங்குவது தெரியாது)
இந்த நவக்கிரகங்கள் பஞ்சபூதங்களின் குறிப்பிட்டச் சேர்க்கைகளால் செயல்படுகின்றன;

இந்த பஞ்சபூதங்களினை இயக்குவது பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளே!

இந்த மும்மூர்த்திகளுக்கு சக்தியளிப்பது இவர்களின் மனைவிகளான கலைவாணி,மகாலட்சுமி,ருத்ரி;
இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் 11 ருத்ரர்கள்;
இவர்களையும் இயக்குபவர்கள் ஐந்து விதமான சிவபெருமான் கள்:

இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவது அண்ணாமலையார்!!!
அண்ணாமலைக்கும் சக்தியளிப்பது தான் அன்னை அரசாலை என்ற வராகி!

வராகி யார் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியின் படைத்தளபதி!

அன்னை அரசாலை என்பது வராகியின் 1000 பெயர்களில் ஒன்று;

அரசாலையை 10 வயது முதல் 100 வயது வரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்;இரண்டு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினால் வழிபாடு வெற்றிபெறும்;

முதல் கட்டுப்பாடு: அசைவம்(முட்டை,புரோட்டா மற்றும் அனைத்துவிதமான அசைவ உணவுகளும்) ஒரு போதும் சாப்பிடக் கூடாது;

இரண்டாவது கட்டுப்பாடு:இந்த வழிபாடு செய்வதை நமது வீட்டில் இருப்பவர்களிடம் மட்டும் தெரிவித்தால் போதும்;ஒரு போதும் பிறரிடம் காட்டிக் கொள்ளக் கூடாது;(ஏன் காட்டிக் கொள்ள கூடாது? இதற்கான விளக்கம் நாம் எப்போது நேரில் சந்திக்கிறோமோ அப்போது விவரிப்போம்)

நமது அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாள் எது?
ஒரு வருடத்தில் 365 நாட்களுமே ஏற்றதுதான்;

தினமும் காலை(அதிகாலை 4.30 முதல் 6க்குள்)யில் 15 நிமிடமும்,இரவில்(மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு 11 மணிக்குள்) 15 நிமிடமும் பின் வரும் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;



 பின்வரும் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஒருபோதும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

ஒரு மாதம் ஆனதும்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
இரண்டு மாதம் ஆனதும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
மூன்றாவது மாதம் ஆனதில் இருந்து நமது ஆயுள் முழுக்கவும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்க வேண்டும்;

அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சீக்கிரம் கிட்டிட பின் வரும் நாட்களில்(தேய்பிறை பஞ்சமி இரவு) அதிக நேரம் ஜபிக்க வேண்டும்;அவ்வளவுதான்;

முதல் மாதம் முழுக்கவும் இருவேளை 15 நிமிடம் ஜபிப்பீர்கள் அல்லவா? இந்த நாளில் மட்டும் உங்களால் முடிந்தவரையிலும் 15 நிமிடத்தைவிடவும் அதிகமான நேரம் ஜபிக்க வேண்டும்;அதுவும் இரவில் மட்டும் தான் இப்படி ஜபிக்க வேண்டும்;

எப்படி ஜபிக்க வேண்டும்?
வீட்டுப் பூஜை அறையில் மஞ்சள் துண்டு விரித்து(புதியதாக வாங்கிக் கொள்ளவும்)செம்புத் தட்டில் பச்சரிசியைப்பரப்பி அதன் மீது 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்;இரண்டில் ஒன்றில் நெய் நிரப்பி,தாமரைத் தண்டுத் திரியாலும்,மற்றதில் இலுப்பை எண்ணெயில் பஞ்சுத்திரியாலும் விளக்குகள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;

அன்னை அரசாலை(வராகி) வடக்கு நோக்கி இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்;

இந்த மன்மத ஆண்டின் தேய்பிறை பஞ்சமீ நாட்கள்;மற்றும் அடுத்த ஆண்டின்(துர்முகி) நாட்களும்!!!

29.12.2015 செவ்வாய்
28.1.2015 வியாழன்
27.2.2016 சனி
28.3.2016 திங்கள்
26.4.2016 செவ்வாய்
26.5.2016 வியாழன்
9.6.2016 வியாழன்
24.6.2016 வெள்ளி
24.7.2016 ஞாயிறு
22.8.2016 திங்கள்
20.9.2016 செவ்வாய்
19.10.2016 புதன்
18.11.2016 வெள்ளி
17.12.2016 சனி
16.1.2017 திங்கள்
15.2.2017 புதன்
16.3.2017 வியாழன் இரவு 12.58 முதல் 17.3.2017 வெள்ளி நள்ளிரவு 2.36 வரை(இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரத்தில் ஜபிக்கலாம்;வியாழக்கிழமை இரவு 1 மணிக்குப் பிறகு ஜபிக்க வேண்டும்)

மற்ற நாட்களில் மாலை 6 மணிக்குப் பிறகு எப்போது உங்களுக்கு வசதியோ அப்போது இரவில் ஜபிக்கலாம்;

தொடர்ந்து அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள்,ஒருமுறை எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;

சரி! எப்போது இந்த வழிபாட்டை(ஜபத்தை) ஆரம்பிப்பது?
இன்றை விட சிறந்த நாள் உண்டா! இன்று இரவிலேயே ஆரம்பிக்கலாம்;

அன்னை அரசாலை(வராகி) அருள் புரிய காத்திருக்கிறாள்;அவளைச் சரணடைவோம்;அருள் பெறுவோம்;


தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டு நமது பிறவிகளின் எண்ணிக்கையையும்,இப்பிறவிகளின் கர்மாக்களையும் காணாமல் போகச் செய்வோம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;