Wednesday, September 30, 2015

மகாளயபட்சம் ஆரம்பம் 28.9.15 முதல் 12.10.15 வரை


ஒவ்வொரு ஆண்டும் இறந்த முன்னோர்கள்,பித்ருக்களின் உலகில் இருந்து பூமிக்கு வருவது இந்த 15 நாட்கள் மட்டுமே! நமது வீட்டில் இருக்கும் நீர்நிலைகள் அல்லது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் இவர்கள் இந்த 15 நாட்கள் வாசம் செய்வர்;இந்த 15 நாட்களில் ஒரே ஒரு நாளாவது நமது வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் எவராவது பித்ரு தர்ப்பணம் செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் காத்திருப்பர்;


நாம் தான் பணத்தின் பின்னால் ஒடும்போது எப்படி இதையெல்லாம் செய்வோம்?இந்த ஒரே ஒரு கடமையைச் செய்பவர்கள் ஒராண்டு வரை எந்தவித பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ்வார்கள்;எந்தவிதமான ஆபத்துக்களும் இவர்களை நெருங்காது;எந்தவிதமான கஷ்டங்களும் இவர்களை நெருங்கவே நெருங்காது;முன்னோர்களின் ஆசிக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

அது எப்படி?

நாம் தினமும் வழிபட்டு வரும் கடவுளை விடவுமா?
ஆமாம்!


ராமயணகாலத்தில் ராமபிரான் வனவாசம் இருந்த போது, தனது தந்தையாகிய தசரத மஹாராஜாவுக்கு பித்ரு பூஜை செய்த இடங்கள் நிறைய உண்டு;அவற்றில் முக்கியமான இடங்கள் கும்பகோணம் மகாமகப் படித்துறையில் பைரவப் படித்துறையும்;அட்டவீரட்டானங்களில் முக்கியமான வீரட்டானம் என்று கருதப்படும் கொறுக்கை என்ற குறுக்கையும் ஆகும்;இவ்விடங்களில் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது,அதை ஏற்றிட தசமகாராஜாவே நேரில் வந்திருக்கிறார்;அவரை பார்க்க வெட்கப்பட்ட சீதா பர்ணசாலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாளாம்;


அருட்சக்தி என்று பார்த்தால்,தெய்வத்தின் அருளைக் காட்டிலும் பித்ருக்களின் அருளே அதிக சக்தி வாய்ந்தது;ஏன் எனில்,ஒரு தெய்வத்தை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அந்த தெய்வத்தின் அருள் பரவலாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது;ஆனால்,பித்ருக்களின் அருட்சக்தியோ தனக்கு கர்மா செய்யும் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது;ஆகவே,பித்ருக்களின் சக்தி அளவு அவர்களுக்கு அதிகமாகவே கிடைக்கிறது;

அதுமட்டுமா?

நாம் எந்தக்கோவிலுக்குச் சென்று என்ன பரிகாரம் செய்தாலும்,அதற்குரிய பலனை அந்தக் கடவுள் நேரடியாகத் தருவதில்லை;அப்படி ஒருவேளை தந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் ஆத்மபலம் நம்மிடம் இல்லை;அவை நமது பித்ருக்கள் மூலமாகவே நமக்குக் கிடைக்கிறது;குலதெய்வ வழிபாடும்,பித்ருக்கள் வழிபாடும் நமது இரு கண்கள்;இதை முறைப்படி யார் செய்கிறார்களோ அவர்களே சில ஆண்டுகளில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுகிறார்கள்;

இன்று இருக்கும் மேல்நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களின் சி.ஈ.ஓ  க்கள் யார் தெரியுமா?
முற்பிறவிகளில் இந்தியாவில் பிறந்து குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் பித்ருக்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தவர்களே!

ஒரு ஆண்டில்(ஒரு தமிழ் ஆண்டில் என்று எடுத்துக் கொள்ளவும்) ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்தமூன்றில் ஏதாவது ஒரு அமாவாசையில் மட்டும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அவசியம்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால்,கடந்த 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனைப் பெறலாம்;இந்த 15 நாட்களும் தாம்பத்தியத்தை நிறுத்தி வைப்பது அவசியம்;அது தொடர்பான எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது;பேசக்கூடாது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;


Wednesday, September 23, 2015

மந்திரங்கள் என்றால் என்ன? அவைகளால் என்ன பயன்?


மனத்தை திறனாக்கும் எந்த ஒரு எழுத்தும் மந்திரம் எனப்படும் என்கிறார் திருமூலர்;
மந்திரம் என்பதற்கு வீடு என்று ஒரு அர்த்தமும் உண்டு;

நாம் உண்ணும் உணவு,70 நாட்களுக்குப் பிறகு,நமது உடலில் விந்து அணுவாக மாறுகிறது;18 வயது முதல் 70 வயது வரையிலும் ஒரு ஆணால் தனது வாழ்க்கைத் துணைக்கு தாம்பத்திய சுகத்தை,திருப்தியைத் தரமுடியும்;பழமையான ஆன்மீக நூல்கள் சொல்வது என்னவெனில்,மாதம் இருமுறை மட்டும் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் இது சாத்தியம் என்று விளக்கியுள்ளன;

ஆன்மீக ரகசியங்கள்,மந்திரங்கள்,இறைவழிபாட்டுமுறைகள் எல்லாமே 40,50,60 வயதுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டு,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதில்லை;இது மாபெரும் தவறு;ஏனெனில்,ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழி யோகக் கலையை ஐந்து வயதில் கற்க வேண்டும்;அப்படி கற்பதற்கு உடலை ஐந்து வயதிலேயே வளைத்துப் பழக்க வேண்டும்;

அதே சமயம்,யோகாசனம் செய்யும் போது மந்திரம் ஜபிக்க வேண்டும்; என்பது  சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்ட மரபாக இருக்கிறது;ஆமாம்! ஒவ்வொரு யோகா செய்யும் போதும் அதற்குரிய கடவுளின் மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;அப்போதுதான் அந்த யோகாசனம் உரிய தெய்வீக ஆற்றலை நமக்கு வழங்கும்;

இன்றைய வேகமான வாழ்க்கையில் யோகாவுக்கு அனைவரும் செல்கிறோம்;யோகாவை தினமும் எப்பாடு பட்டாவது செய்கிறோம்;ஆனால்,மந்திரங்கள் ஜெபியுங்கள் என்று எழுதினாலே,அவரை மந்திரவாதி என்று ஒதுக்குகிறோம்;

சமுதாய நலனுக்கு என்று உருவாக்கப்பட்டவையே அஷ்டகர்ம மந்திரங்கள்;இந்த மந்திரங்களுக்குள் இருந்து இவைகளுக்கு உயிராக இருப்பவர்களே அஷ்டபைரவப் பெருமான் கள்!

மனிதன் எந்த யுகத்திலும் செய்யும் செயல்களை எட்டுவிதங்களுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்திட அல்லது ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யவே அஷ்டகர்ம மந்திரங்கள் பயன்படுகின்றன;


இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவங்கள் அல்லது புண்ணியச் செயல்களை ஒவ்வொரு மனிதனாலும் செய்ய முடியும்;எனவேதான் அஷ்டபைரவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டாக பிரிந்து 64 பைரவர்களாக உதயமானார்கள்;இந்த 64 பைரவர்களே,அஷ்ட கர்மாக்களால் செய்யப்படும் 64 வித பாவங்களுக்குத் தண்டனைகளை சூட்சுமமாக அடுத்தடுத்து வரும் பிறவிகளில் தருவர்;ஒருவேளை இந்த அஷ்ட கர்மாக்களைக்கொண்டு 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்தால் அதற்கு உரிய யோகங்கள்,வரங்களையும் தருபவர்கள் இந்த 64 பைரவர்களே! அப்படி 64 வித பைரவர்கள் தரும் வரத்தை செயல்படுத்தும் சக்திகளே 64 வித வராகிகள்!


சிவபெருமான் அல்லது பைரவப் பெருமான் தமது பக்தர்களுக்கு வரங்களைத் தருவர்;எந்த ஒரு பெண் அல்லது ஆண் தொடர்ந்து தன்னை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு தக்க நேரத்தில் வரம் தருவது இவர்களின் கடமை;அப்படி வரம் தரும்போது சில சமயம் முழுமையாகத் தராமல் போவதுண்டு;அந்த அரைகுறை வரத்தை முழுமைப்படுத்துவது சிவனின் துணை ஆதிபராசக்தி;பைரவப் பெருமானின் துணை வராகி;


நாம் பிறந்த ஜாதகத்தில்,சந்திரனுக்கு 2 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ,அல்லது 12 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ அதற்கு மஹா சக்தி யோகம் என்று பெயர்;இவர்களுக்கு அன்னை அரசாலையின் அருள் விரைவாக கிட்டும்;அதே போல,சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நின்று ஸர்ப்ப நட்சத்திரங்களில் நின்றாலும் அன்னை அரசாலையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்று அர்த்தம்;


கும்ப லக்னமாகி,10 இடத்தில் ராகு இருக்கப் பிறந்தவர்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சில மாதங்களுக்குள் கிட்டும்;ஏன் எனில்,இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சர்;இவர் கொல்கொத்தா மாநகரத்தில் ஒரு காளிகோவிலில் பூசாரியாக வாழ்ந்து வந்தவர்;இவர் காளியிடம் தினமும் பேசுபவர்;

இதே அளவுக்கு காளியிடம் பேசும் திறன் உள்ளவர்கள் இன்றும் நம்முடைய தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்;ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பேசியது ஸ்ரீவராகிகாளியம்மன் என்ற தெய்வத்திடம் என்று கேள்விப்படும் போது பிரமித்துப் போகிறோம்;


ஓம் மகா கணபதி நமஹ என்பதும் ஒரு மந்திரமே!
வாழ்க வளமுடன்;வாழ்க வையகம் என்பதும் ஒரு பொதுநலம் தரும்,பூமி நலம் தரும் சர்வசக்தி வாய்ந்த மந்திரமே!
வாழ்க அறமுடன்;வளர்க அருளுடன் என்பதும் ஒரு ஆன்மீக மந்திரமே!
ஓம் சரவணபவசிவ ஓம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் காளி ஜெய் காளி என்பதும் ஒரு வித மந்திரமே!
ஓம் வராகி சிவசக்தி ஒம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் ஆம் ஹெளம் செள என்பது ஒரு சிவமகா மந்திரமே!
ஓம் என்பதும் ஒரு விதமுக்கியமான மந்திரமே!
ஆமென் என்பதும் ஒரு மந்திரமே!
ஆமீன் என்பதும் ஒரு மந்திரமே!
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் என்பது சைவ கூட்டுப்பிரார்த்தனை மந்திரமே!
ஓம் சிவசக்தி வராகி ஓம் என்பதும் ஒரு மந்திரமே!


எந்த மந்திரமாக இருந்தாலும்,1,00,000 முறை ஜபித்தப் பின்னரே அதற்கு உயிர் உண்டாகும்;ஆனால்,சில மந்திரங்கள் 1000 முறை ஜபித்ததும் அதற்கு உயிர் வந்துவிடும்;சில மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபித்தாலே போதும்;அவைகள் உடனடியாக இயங்க ஆரம்பித்துவிடும்;



நமது நாடு மந்திரங்களின் தாய்நாடு;மந்திரங்களை முறையாக நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தினால்,நாம் பொருளாதாரத் தன்னிறைவை கண்டிப்பாக எட்டிவிடுவோம்;சில மாதங்களிலேயே! நாம் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிட்டால் நமது நாடும் உலக வல்லரசு தேசமாகிவிடும்;

அப்படி ஆகாமல் இருக்கவே நாத்திகம்,கம்யூனிசம்,ஜாதியிசம் போன்றவை திட்டமிட்டு பணிபுரிந்து(?!) வருகின்றன;இப்போதாவது விழித்துக்கொள்வோமா?

யோகம் நிறைந்த குழந்தைகள் பிறக்க


பகவத் கீதை,திருக்குறள்,விஷ்ணு சகஸ்ரநாம சாஸ்திரம்,லலிதா சகஸ்ரநாம சாஸ்திரம்,திருமந்திரம்,காளிதாசனின் உத்திரகாலாமிருதம்,ஜோதிட ராமாயாணம்,சீவகசிந்தாமணி,மணிமேகலை,குண்டலகேசி போன்ற நமது மரபுச்செல்வங்களை கற்க வேண்டிய வயது 50,60,70 அல்ல;

300 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மகனை படிக்க குருகுலத்திற்கு அனுப்புவர்;5 வயது முதல் 15 வயதுவரை குருகுலத்தில் தங்கி கல்வி பயில வேண்டும்;பாடத்திட்டம் 16 மொழிகள்(இந்தியாவின் பிரதான மொழிகள்),வில் வித்தை,ஜோதிடம்,சித்த மருத்துவம்,மூலிகைகளை இனம் காணுதல்,மந்திர ஜபம்,மந்திர பிரயோகம்,போர்க்கலையான தனுர்வேதம்,பிராணயாமம்,யோகக் கலையான பிராணயாமமும் 1008 யோகாசனங்களும்,சரக்கலை என்ற சுவாசக் கலை,கண்ணாடி தியானம்,கோவிலைக் கட்டும் ஆகமங்கள் போன்றவையே பாடத்திட்டங்களாக இருந்தன;ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி சமயத்தில் ஒரு பட்சகாலம் (15 நாட்கள்) மட்டுமே ஆண்டு விடுமுறையாக குருகுலத்தில் இருந்து வீட்டுக்கு வரலாம்;

15 வயது நிறைவடையும் போது அந்த இளைஞன் எப்படி இருப்பான் தெரியுமா? 

அரு.ராமனாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி என்ற வரலாற்று நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது;அதில் உள்ள கதாநாயகன் போலவே ஆளுமைத்திறன் உள்ளவனாக ஒவ்வொரு இந்துவும் உருவாகியிருப்பான்;

அல்லது 

சாண்டில்யன் எழுதிய விலைராணி என்ற நாவலை வாசித்துப் பாருங்கள்;யவனராணி என்ற நாவல் 3 பாகங்களாக வெளிவந்திருக்கின்றன;இவைகளில் இருக்கும் அரசனைப் போலவே ஒவ்வொரு இந்துவையும் குருகுலம் உருவாக்கியுள்ளனர்;

இவைகளை முதன்முதலில் அழித்தது இஸ்லாமியப் படையெடுப்பு; பாடலிபுத்ரத்தில் மட்டும் தான் பல்கலைக்கழகம் இருந்தது என்று எண்ண வேண்டாம்;இதோ நம்ம காஞ்சிபுரத்திலும்,இன்றைய சங்கரன் கோவிலிக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே இருக்கும் கழுகுமலையிலும் பல்கலைக்கழகங்கள் 12,000 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளன;


சுமாராக 1400 தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் மேலே உள்ள குருகுலக் கல்வியைப் பயின்றுள்ளனர்;அவைகள் இன்னும் நமது எலும்பு மஜ்ஜையில் புதைந்திருக்கிறது;ஏழாம் அறிவு திரைப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் போதி தர்மன் என்ற கதாபாத்திரம் பொய் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை; நாம் ஒவ்வொருவருமே போதி தர்மனின்,ராஜராஜ சோழனின்,சாணக்கியனின்,அவ்வையாரின்,ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின்,கிருஷ்ண பகவானின்,தர்மரின்,பீமரின்,அர்ஜீனரின்,சகாதேவனின் வாரிசுகளே!


இந்த எலும்பு மஜ்ஜையில் இருக்கும் முன்னோர்களின் திறமையை அழிக்கும் வேலையைத் தான் ஃபுளூரைடு கலந்த பற்பசைகள் செய்துவருகின்றன;நம்மை நமது அறிவை மழுங்கடிக்கும் வேலையை மேற்கு நாடுகள் செய்துவருகின்றன;அவைகளின் தற்போதைய வடிவமே பிட்காயின்,பியூச்சர் டிரேடிங்,கமாடிட்டி டிரேடிங்,ஆன்லைன்  ஷேர்மார்கெட்,செல்போன் தொழில் நுட்பம்,இணையத் தொழில் நுட்பம்,ஜீன்ஸ் தொடர்ந்து அணிவதன் மூலமாக ஆண்மையும் அழியும்;பெண்மையும் அழியும்;மினரல் ஹெ2ஓ நம்முடைய உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மழுங்கடிக்கும்;பாலியல்தளங்கள் நமது இளம் குழந்தைகளை ஆண்மையற்றவர்களாக,பெண்மையற்றவர்களாக மாற்றுகின்றன;மேலும்,தாம்பத்திய திருப்தியை கானல் நீராக்கி,காமப் பிசாசுகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன;


இந்துக்கள் அதிகம் வாழ்ந்து வரும் நகரின் மின்சாரத்துறை தலைமை அதிகாரியாக வேற்று மதத்தைச் சேர்ந்தவர் இருந்தால்,வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி வாக்கிலும் மற்றும் இந்துக்களின் முக்கியத் திருவிழாக் காலங்களில் திருவிழா நேரத்திலும் மின் வெட்டை அமல்படுத்திவருகின்றனர்;இதன் பின்னணியில் இருப்பது அவர்களின் மதக் கண்ணோட்டமே!


இயற்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்;`18 வயது முதல் 40 வயது வரையிலும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரையிலாவது (காலை 30 நிமிடம்;இரவு 30 நிமிடம்) ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்து வரவேண்டும்;அப்படி செய்தால் மட்டும் சில ஆண்டுகளில் நாம் ஜபிக்கும் மந்திரஜபம் சில லட்சங்களை எட்டும்;அப்படி சில லட்சங்களை எட்டியப் பின்னர் திருமணம் செய்து,குழந்தைக்கு முயற்சி செய்தால் நிச்சயமாக ஆரோக்கியமும்,யோகமும் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்;


எனது தேசத்தின் சகோதர,சகோதரிகளே! எனது தமிழ்ச் சொந்தங்களே! நமது பண்பாட்டை நாம் தான் பாதுகாக்க வேண்டும்;நமது வாரிசுகளை சகல கலா வல்லவர்களாக நாம் தான் ஆன்மீகப் பயிற்சி,தேசபக்திப் பயிற்சி,ஜோதிடப் பயிற்சி,மனோதத்துவப் பயிற்சி,ஆழ்மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சி,இயற்கை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி என்று 15 வயது முதல் 25 வயது வரை ஒவ்வொரு ஆண்டு விடுமுறை சமயத்திலும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;இது நமது கடமை;

இதற்குத் தேவையான பொருளாதார தன்னிறைவை எட்டிட எமது ஜோதிட,ஆன்மீக ஆலொசனைகளைப் பின்பற்றினால் போதும்,சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;

பொறாமை,திட்டு முறைப்பாடுகளை நீக்கும் மயில்தோகை விசிறி


மயில் தோகையால் விசிறி செய்து கைகளால் விசிறும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா,இலங்கை,மலேஷியா,சிங்கப்பூரில் இருந்துவந்தது;இப்போது மிகவும் அரிதிலும் அரிதாக மயில் தோகையால் செய்யப்படும் கைவிசிறிகள் பயன்படுத்தப்படுகிறது;


நமது திறமையை பயன்படுத்தும் சந்தர்ப்பம் வரும்போது,அதனால் சாதனைகளை நிகழ்த்துவது வழக்கம்;இந்தச் சாதனையை,வெற்றியை நம்முடைய உறவுகள்,அடிக்கடி பழகுபவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் நம்முடைய சுபாவம்;அப்படி பகிரிந்த உடனே அதை நமது நெருங்கிய நட்பு/உறவு வட்டத்தால் ஜீரணிக்க முடிவதில்லை;அதனால் தான் நமக்கு திடீர்,திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்படுகிறது;அல்லது நமது ரத்த உறவுகளுக்கு ஏற்படுகிறது;

இதில் இருந்து விடுபடவே நம்முடைய முன்னோர்கள் மயில் தோகையால் விசிறி வீட்டில் வைத்திருந்தனர்;


மீண்டும் நாம் இதைப் போல உருவாக்கி,பயன்படுத்துவோமா? 

பழமையான பொருட்கள் உள்ள வீடாக (உங்கள் வீடு)இருந்தால் தேடிப்பாருங்கள்;நிச்சயம் இருக்கும்;அதைக் கூட இப்போது நாம் பயன்படுத்தலாம்;

மனிதன் சமுதாயப் பிராணி என்ற நிலையில் இருந்து,சமுதாய அடிமை!




நாம் பேசுவதை சித்தார்த் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்ற டயலாக் தனி ஒருவன் என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது;இதே வேலையைத் தான் நமது செல்போன் பேச்சுக்கள் செய்கின்றன;பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக யாராவது மாநிலம் தழுவிய அளவில் விழிப்புணர்வை உருவாக்கினால்,அந்த பன்னாட்டு நிறுவனங்கள் உடனடியாக அந்த நபரை தொந்தரவோ,கொலை முயற்சியோ செய்வதில்லை;அந்த நபரின் செல் போன் பேச்சுக்களைத்தான் கண்காணிக்கின்றன;

இதுதான் முதலாளித்துவத்தின் கோரமுகம்;இதுதான் உலகமயமாக்கலின் உயிர்மூச்சு;இதுதான் தாராளமயமாக்கலின் சுபாவம்;ஆமாம்! நாம் ஒவ்வொருவருமே நவீன அடிமைகள்! 

நமது சிந்தனைகள்,பேச்சுக்கள்,எழுத்துக்கள்,செயல்பாடுகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன;அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன;இதோ இந்த இணையதளமும் அதற்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன;

Tuesday, September 22, 2015

ஒரே நேரத்தில் அண்ணாமலையார் அருளையும்,அன்னை அரசாலை அருளையும் அள்ளித் தரும் மந்திர ஜெபம்!!!


கலியுகத்தில் பிறந்திருக்கும் நாம்,நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த நல்வினை,தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;இருப்பினும்,ஈசன் கருணை மிகுந்தவன்;மனிதனாகப் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருந்திட பலமுறை சந்தர்ப்பம் அளித்துக் கொண்டே இருக்கிறான்;அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்துபவர்கள் தமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறார்கள்;இப்பிறவியில் இனி வர இருக்கும் இம்சைகளில் இருந்து மீண்டு விடுகிறார்கள்;


கடன்,நோய்,எதிரிகள்,தொல்லை,அவச்சொற்களால் தினமும் நிம்மதியிழத்தல்,ஒழுக்கமாக வாழ்ந்துவரும் வேளையில் ஒழுங்கீனமானவராக பிறர் சித்தரிப்பதால் வரும் சோகம்,திருமணத் தடை,கல்வித்தடை,பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்லுறவு இன்மை,கணவன் மனைவி இடையே ஒற்றுமையின்மை/புரிதல் இன்மை,சந்தேகப்படுதல் முதலான எந்த ஒரு வாழ்வியல் சிக்கல்களையும் இந்த தினசரி மந்திர ஜபம் தீர்த்து வைக்கும்;


பலருக்கு பணம் போதுமான அளவில் வருமானமாகவோ,லாபமாகவோ கிடைக்காமல் இருக்கிறது;அதையும் தீர்த்து வைக்கும் இந்த மந்திர ஜபம்;


இந்த மந்திர ஜபத்தை ஜபிக்கத் தேவையான பொருட்கள்:

மஞ்சள் பட்டுத்துண்டு, மகாலட்சுமி விளக்கு புதியது,பஞ்சுத்திரி,செக்கில் ஆட்டிய இலுப்பை எண்ணெய்


இந்த மந்திரம் ஜபிக்கத் தேவையான தகுதிகள்:


18 வயது நிரம்பிய ஆண்,பெண் எவரும் ஜபிக்கலாம்;
எந்த ஜாதி,மதம்,மொழி,இனமாக இருந்தாலும் ஜபிக்கலாம்;
இந்த மந்திரம் தினமும் ஜபிக்க வேண்டிய நேரம்:
தினமும் காலை 4.30 முதல் 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 9.30 வரையிலான நேரத்தில் ஏதாவது 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;


இந்த மந்திரத்தை ஜபிக்கும் முறை:

புதியதாக வாங்கிய மகாலட்சுமிவிளக்கை வடக்கு நோக்கி தீபம் எரியுமாறு வைக்கவேண்டும்;
மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து மகாலட்சுமி விளக்கில் இலுப்பை எண்ணெய் நிரப்பி,பஞ்சுத்திரியில் தீபம் ஏற்ற வேண்டும்;
பிறகு,கிழக்கு நோக்கி மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;அப்படி அமர்ந்திருக்கும் போது,உடலின் எந்தப்பகுதியும் தரையில் படக் கூடாது;அப்படிப்பட்டால்,மந்திர ஜபத்துக்கான பலன் நம்மை வந்து சேராமல் பூமிக்குள் போய்விடும்;

ஓம் அகத்தியர் முதலான 18 சித்தர் பெருமக்கள் போற்றி என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் மகா கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;
பிறகு, ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஜபிக்கும் போது எண்ணக் கூடாது;


ஒரு அமாவாசையன்று இந்த ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;
அன்று முதல்தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;
இரண்டாவது அமாவாசை வரும் போது,ஜபநேரத்தை 30 நிமிடமாக உயர்த்துங்கள்;
மூன்றாவது அமாவாசை வரும் நாளில் இருந்து,ஜபநேரத்தை 45 நிடமாக அதிகப்படுத்துங்கள்;
நான்காவது அமாவாசையிலிருந்து தினமும் காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபித்து வரவும்;ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் வீதம்,இரண்டு மணி நேரம் வரை ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்தாலே அவர்களுடைய அனைத்து லட்சியங்களும் படிப்படியாக நிறைவேறும்;

முக்கியமான உபதேசம் என்னவெனில்,இந்த ஜபத்தை ரகசியமாக,எவரிடமும் தெரிவிக்காமல் பின்பற்றிவருவது அவசியம்;இதனால்,நீங்கள் சர்வசக்தி வாய்ந்த,அதேசமயம் அடக்கமான மனிதராகவும் இருப்பீர்கள்;இந்த உலகத்திலேயே நிம்மதியாக இருப்பவர் நீங்கள் மட்டுமே!

இந்த முறைப்படி மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஒம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்துவந்தால்,இந்த உலகத்திலேயே அனைத்தும் உள்ளவர் நீங்கள் மட்டுமே!


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

Monday, September 21, 2015

எமது ஜோதிட மாணவ,மாணவிகளுக்கு,


1.எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால்,அவர்கள் குடியிருக்கும் வீட்டிலேயே தண்ணீர் வற்றாமல் ஆயுள் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்?

2.எந்த ஜாதகர்,பேயோட்டுபவராக இருப்பார்?

3.ஒருவர் நாத்திகவாதியாக இருப்பதற்கு காரணமான கிரக அமைப்புக்கள் என்னென்ன?

4.எம்மாதிரியான களத்திராதிபதி அமைந்தால்,அவர்கள் தனது தெருவில் இருக்கும் பெண்/ஆணையே திருமணம் செய்வார்?

5.எம்மாதிரியான களத்திராதிபதி,களத்திரஸ்தானதிபதி அமைந்தால்,அவர் அந்நிய நாட்டுக்குரியவரை மணப்பார்?

6.ஜோதிடர்களை திருமண ஜோதிடர்,வாஸ்து ஜோதிடர்,அருள்வாக்கு ஜோதிடர்,மரண ஜோதிடர் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்;எம்மாதிரியான கிரக அமைப்புக்களில் பிறந்திருந்தால் ஒருவர் கல்யாண ஜோதிடர் என்று பெயர் எடுப்பார்? அல்லது அருள்வாக்கு ஜோதிடர் என்று பெயர் எடுப்பார்?

7.யாருக்கெல்லாம் உக்கிர பெண் தெய்வத்தின் அருளாசி உடனே கிடைக்கும்?

8.யாருக்கெல்லாம் வராகி தெய்வத்தின் தரிசனம் இப்பிறவியிலேயே கிடைக்கும்?

இப்படிக்கு


27 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் பயிற்சியாளர் கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990,9364231011

எனது ஜோதிட மாணவ,மாணவிகளுக்கு


1.யாருக்கு மாந்திரீக பாதிப்பு வரும்?

2.லக்னத்துக்கு 2,11க்குரியவர் ஆட்சி அல்லது உச்சம் அல்லது உச்சத்துக்கு இணையான இடத்தில் இருக்கப் பிறந்தவர்கள் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் யாரை குரு என்று போற்றுகிறார்களோ,அவர்களுக்கு பெயரும் புகழும் உலக அளவில் உருவாகும்;அதே போல,லக்னத்துக்கு 2,9க்குரியவர் ஒன்றாகி இருந்தாலும் இதே நிலைதான்;இந்த ஜோதிட ரகசியம் பலருக்குத் தெரிவதில்லை;இப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களின் வசியத்துக்கு அடிமையாவார்கள்? அப்படி வசியத்துக்கு அடிமையானால் எப்போது அதிலிருந்து மீள்வார்கள்?

3.எந்த மாதிரியான கிரக அமைப்பில் பிறந்திருந்தால்,அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதைக் கண்டுபிடிக்கலாம்?

4.எந்த யுகத்தில் பூமியில் மனிதர்கள் மத்தியில் நாகராஜாக்கள்,நாகராணிகள்,நாக மஹாராஜாக்கள்,நாக மஹாராணிகள் அதிகம் பிறப்பார்கள்?

5.ஒரு கோவிலின் அருளாற்றல் அந்தக் கோவிலின் எந்தப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருக்கும்?

6.எந்த மாதிரியான கிரக அமைப்பில் பிறந்தால்,அவர்கள் பிறந்த நாட்டிற்குத் துரோகம் செய்வார்கள்?(தேசத்துரோகிகள்)

7.நினைத்த உருவம் எடுக்கும் இச்சாதாரிகளின் ஜாதக அமைப்பு எப்படிப்பட்ட கிரகச் சேர்கைகளோடு இருக்கும்?

8.யார் சனியின் அம்சத்துடன் இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்?அவர்களுக்குரிய லக்னம்,ராசி,நட்சத்திரம் எதுவாக இருக்கும்?

இப்படிக்கு

கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர்.9092116990,9364231011

Friday, September 18, 2015

அன்னை அரசாலை(வராகி)யின் அருளைத் தரும் புரட்டாசி பஞ்சமி(18.9.15 வெள்ளி)


சப்த கன்னியர்களில் ஐந்தாவதாக இருக்
கும் கன்னியே வராகி;இதனால் வராகிக்கு பஞ்சமீ என்றொரு பெயரும் உண்டு;ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து உருவானதாலும் இந்தப் பெயர் உருவானது;

18.9.2015 வெள்ளிக்கிழமையன்று புரட்டாசி மாதத்தின் முதல் நாள் மற்றும் பஞ்சமீ திதி ஒன்றாக வருகிறது;இந்த நாளில் அன்னை அரசாலை(வராகி)யின் அருளைப் பெறுவது மிகவும் சுலபம்;தமிழ் மாதப்பிறப்பன்று சூரியன் ஒரு ராசிக்குள் நுழைந்த நாளாக இருக்கிறது;அதனால் சூரியன் முழு பலத்தோடு இருப்பார்;புரட்டாசி மாதத்தில் தான் நமது முன்னோர்களில் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் பித்ருக்களாக காலம் காலமாக மாறியிருப்பர்;அவர்கள் தர்மதேவதை,பித்ருக்களின் தலைமை கடவுளிடம் அனுமதி பெற்று பூவுலகிற்கு வருவர்;வந்து தமது பரம்பரையினரை நேரில் சந்திப்பர்;

ஆவிகள் உலக ஆராய்ச்சி செய்பவர்கள்,லக்னத்துக்கு 5 ஆம் இடம் அல்லது 9 ஆம் இடத்தில் செவ்வாய்+சுக்கிரன்+கேது சேர்ந்திருப்பவர்களுக்கு காட்சியளிப்பர்;

கலியுகமாக இருப்பதால்,நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் வருவது நமது கண்களுக்குப் புலப்படுவது இல்லை;தினமும் ஏதாவது ஒரு இறை மந்திரம் ஜபித்துக்கொண்டு,அந்த ஜப நாட்கள் 1000 ஐக் கடந்திருப்பவர்களுக்கு பித்ருக்கள் கண்களுக்குத் தெரிவார்கள்;

எப்படிப் பார்த்தாலும்,நம்மில் பலர்,பல குடும்பத்தினர் கடன் சுமையில் வாடிவருகின்றனர்;அல்லது நிரந்தர வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்;சிலர் திருமண வயதைக் கடந்தும் கூட திருமணம் முடியாமல் தவித்துவருகின்றனர்;இன்னும் சில கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் கூட அதை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்;இன்னும் சிலர் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் வரவுக்கும் செலவுக்கும் நடுவே திண்டாடி வருகின்றனர்;பல குடும்பங்களில் கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள்,மருமகன் மருமகள் இடையே ஒற்றுமையில்லை;இவைகள் அனைத்திற்கும் காரணம் தெய்வ நம்பிக்கை குறைவாக இருப்பதும்,ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்யாமல் இருப்பதுமே காரணம்;


புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று 18.9.15 வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் பின் வரும் அன்னை அரசாலை(வராகி)யின் பெயர்களை ஜபிக்கத்துவங்கினாலே அடுத்த சில நாட்களில் நமது கஷ்டங்கள் தீர வழி கிடைத்துவிடும்;

அன்னையின் பெயர்களை ஜபிக்க வயது வரம்பு இல்லை;ஆனால்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;இன்றைய நாகரீக உலகில் முட்டையும் அசைவமே! புரோட்டாவும் அசைவமே!!

அருகில் இருக்கும் கோவிலில் அம்மன் சன்னதியில் அல்லது சிவபெருமான் சன்னதியில் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் ஜபித்தாலே அன்னை அரசாலை(வராகி)யின் அருள் கிட்டிவிடும்;


முறைப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாளும் இதுவே:ஏற்கனவே அன்னை வழிபாடு செய்து வருபவர்களும் இந்த நாளில் அதிகமான அளவில் அன்னையின் பெயரை ஜபிப்பது அவசியம்;

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களையும் ஒருமுறை ஜபித்தால்,வராகி பரணியை ஒருமுறை ஜபித்தமைக்கு இணையான புண்ணியம் கிட்டும்;ஆனால்,இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் ஒருமுறை ஜபித்தால்,10,000 முறை வராகி பரணியை ஜபித்தமைக்கு ஈடான புண்ணியம் கிட்டும்;இரவு 8 முதல் 9 க்குள் ஒருமுறை ஜபித்தால்,1,00,000 முறை ஜபித்தமைக்கான புண்ணியம் கிட்டும்;


வீட்டில் அல்லது ஏதாவது ஒரு அன்னையின்(காளி,மாரி,துர்க்கை,பட்டத்தரசி,அங்காளபரமேஸ்வரி,தண்டுமாரியம்மன்,செல்லியம்மன்,புன்னைநல்லூர் மாரியம்மன்,ஆதிபராசக்தி,சப்த கன்னியர்,கனகவல்லி,செங்கோடம்மா,குலதெய்வம் சன்னதி,) சன்னதியில் இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி ஜபித்தால் மேலே கூறிய எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு புண்ணியம் கிட்டும்;

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் அனைத்திலும் ஊடுருவி சக்தியாக பரிமணித்து நம்மை இயக்கி வருவது அன்னையே!

அன்னை வழிபாடு செய்வதன் மூலமாக பில்லி,சூனிய பாதிப்பு மூன்றாம் நாளில் இருந்தே விலகத் துவங்கும்;
நவக்கிரகங்களால் உண்டாகியிருக்கும் எந்த தோஷமும் கரையத் துவங்கும்;

கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,அது தீர்வதற்குரிய நேர்மையான வழிமுறை தேடி ஓடி வரும்;


அன்னை வராகியின் சன்னதிகள் இருக்கும் ஊர்களில் உள்ளவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பெயர்களால் ஜபிப்பதன் மூலமாக அன்னையை சூட்சுமமாக தரிசிக்கும் பாக்கியம் பெறலாம்;கடந்த 25,000 ஆண்டுகளாக அன்னையை அப்படி தரிசித்துள்ளனர் பல ஆயிரம் பேர்கள்;


அன்னை வராகி அருள்பாலிக்கும் ஊர்கள்:

உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசியில் பிந்துமாதவர்  கோவிலுக்கு அருகில்
உத்திரகோசமங்கை
தஞ்சைப் பெரியகோவில்
பள்ளூர்(காஞ்சிபுரத்திற்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைந்திருக்கும் சிறு கிராமம்)
திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி
திருப்பூந்துருத்தி அ/மி.புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் நான்கு கரங்களுடன்
ஒரிசா மாநிலம் பூரியில் ஜகன்னாதர் ஆலயத்திற்கு அருகில்
மற்றும் சப்த கன்னியர்கள் இருக்கும் ஆலயங்கள் அனைத்திலும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


தொப்பையை உருவாக்கும் தவறான உணவுப்பழக்கம்


நம்மில் பெரும்பாலானவர்கள்,சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்துகிறோம்;அல்லது சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துகிறோம்;இரண்டுமே நமது சீரணமண்டலத்தின் இயக்கத்தை ஸ்தம்பிக்க வைப்பவை;இதனால் தான் குண்டாகிறோம் அல்லது கர்ப்பிணிப்பெண்களுக்கு இணையான அளவில் தொப்பையை வளர்க்கிறோம்;

சாப்பிட்டு முடித்ததும்,வாயைக் கொப்பளிக்கக் கூடாது;அதை அப்படியே விழுங்குவது அவசியம்;அப்படி விழுங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகபட்சம் 15 மி.லி.தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்;

அதே போல,காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலும் தொப்பையை உருவாக்கிவிடும்;

எப்போது தண்ணீர் அருந்தலாம்?

சாப்பிடும் நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாக அல்லது சாப்பிட்டு முடித்த 30 நிமிடம் பின்பாக மட்டும் தண்ணீர் அருந்தலாம்;
சரி! முழு ஆயுள் பெற நாம் செய்ய வேண்டியது என்ன?
ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதுதான்;

ஒருலிட்டர் முடியாவிடில் கொஞ்சம்,ஒரு தம்ளர் அளவுக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்;

ஏன் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்?

நமது உடலில் 70% தண்ணீர் இருக்க வேண்டும்;அலைச்சல்,கடும் வேலை,தொடர் பயணம் இவைகளால் தண்ணீரை நமது உடலில் இருந்து இழக்கிறோம்;அதை ஈடுகட்டிட ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும்;மினரல் வாட்டர் தொடர்ந்து அருந்துவதால்,நமது உடலானது நோய் எதிர்ப்புத் திறனை படிப்படியாக இழக்கிறது என்பதை பாட்டி மருத்துவமும் தெரிவித்தது;நவீன மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

குரு பலம் தரும் ஸ்ரீஅசிதாங்க பைரவப் பெருமான்!!


நவக்கிரகங்களின் பிராணதேவதையாக அஷ்டபைரவர்கள் இயங்கிவருகின்றனர்;சூரியனின் பிராணதேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இயங்கிவருகிறார்;குரு கிரகத்தின் பிராணதேவதையாக ஸ்ரீஅசிதாங்க பைரவர் செயல்பட்டுவருகிறார்;தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த அஷ்டபைரவப் பெருமான் கள் அருள்பாலித்துவருகின்றனர்;


ஸ்ரீஅசிதாங்க பைரவரின் சன்னதி வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு நாகநாதர் திருக்கோவிலில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவரும்,ஸ்ரீஅசிதாங்க பைரவரும் அருள்பாலித்துவருகின்றனர்;

குரு பலம் இல்லாதவர்கள்(மகர ராசியில் குரு இருக்கும் போது பிறந்தவர்கள்),தகுந்த ஆன்மீக குருவைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்,குரு பலம் இல்லாததால் திருமணம் அல்லது குழந்தைப் பேறு தாமதம் ஆகிறது என்பதை தமது ஆஸ்தான ஜோதிடர்கள் மூலம் அறிந்தவர்கள் இந்த ஸ்ரீஅசிதாங்க பைரவப்பெருமானை வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபடலாம்;


பின் வரும் முறைப்படி மூன்று வியாழக்கிழமைகள் வழிபடுவதன் மூலமாக குருவின் அருளைப் பெற முடியும்;

இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு நாகநாதரை வில்வத்தளங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு இங்கே இருந்து அருள்பாலித்து வரும் அன்னையை குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,இங்கே அருள்பாலித்து வரும் அன்னை வராகியை (சப்தகன்னியர்கள் இருக்கின்றனர்) வழிபட்டுவிட்டு,பிறகு கால பைரவப் பெருமானை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 12 முறை ஜபித்துவிட்டு,பிறகு பின் வரும் அசிதாங்க பைரவ காயத்ரியை 12 முறை ஜபிக்க வேண்டும்;


ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்சத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்

ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்,புரோகிதம் செய்பவர்கள்,ஜோதிடர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,வருவாய்த் துறையில் பணிபுரிபவர்கள்,டியூசன் நடத்துபவர்கள்,பொற்கொல்லர்கள்,நவரத்தினங்கள் விற்பனை செய்பவர்கள்,அருள்வாக்கு சொல்பவர்களும் இந்த முறையில் அசிதாங்க பைரவப் பெருமானை வழிபடலாம்;

குரு திசை நடப்பவர்கள் கண்டிப்பாக ஒரு வியாழக்கிழமை அன்று இங்கே வந்து இந்த முறைப்படி வழிபட வேண்டும்;

படத்தில் காணப்படுவது காலபைரவருடன் அருள்பாலித்து வரும் ஸ்ரீஅசிதாங்க பைரவப் பெருமான்;ஆம்பூர்,வேலூர் மாவட்டம்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!! 

கடகராசி & மீன ராசியினருக்கு வாழ்க்கை தரும் குரு மங்கள யோகம் & தர்மகர்மாதிபதி யோகம்!


கடகராசியில் பிறந்தவர்களுக்கும்,மீன ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த மாதம் ஒப்பற்ற மாதம் ஆகும்;ஏனெனில்,இந்த இரண்டு ராசியினருக்கும் தர்மகர்மாதிபதியோகத்தைத் தரும் கிரகங்கள் குருவும்,செவ்வாயும் ஆவர்;

இரு கிரகங்களுமே சிம்மராசியில் இருக்கும் போது உச்சத்துக்குரிய சக்தியுடன் செயல்படுகின்றன;இன்று 18.9.15 முதல் 45 நாட்களுக்கு இவை இரண்டும் இணைந்து சிம்மராசியில் இருக்கின்றன;இந்த 45 நாட்களில் கடகராசியைச் சேர்ந்தவர்களும்,மீன ராசியைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒர் உன்னதமான லட்சியத்தை அடைவார்கள்;அப்படி அடைவதற்கு குருவும் செவ்வாயும் காரணமாக இருப்பார்கள்;

குரு மங்கள யோகத்தால் நமது பாரத தேசமும்(சுதந்திர ராசி கடகம் என்பதை நினைவில் கொள்க) ஒரு மகத்தான சாதனையைச் செய்யும் அல்லது ஒரு முக்கியமான திருப்புனை கட்டத்தைச் சந்திக்கும்;

பாரத மாதா என்பது அன்னை வராகியே தான் என்பது பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட ரகசியம்;

நமது நாட்டை நேசிப்பவர்கள் ஒவ்வொருவருமே,தினமும் அன்னை வராகியை வழிபட வேண்டும்;அப்படி வழிபடுவதன் மூலமாக நமது பாரத தேசம் உலகின் சக்தி வாய்ந்த தேசமாக மாறும்;நாம் ஒவ்வொருவருமே செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும்,பொருளாதாரத்தில் தன்னிறைவு மிக்கவர்களாகவும் மாறிவிடுவோம்;

ஓம் வராகி சிவசக்தி ஒம்

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Friday, September 11, 2015

யோகமான பெயர்களைத் தேடுபவர்கள் கவனத்திற்கு


எமது 27 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தின் படி,அவரவர் பிறந்த ஜாதகப்படி, பொருத்தமான பெயர் வைத்துத் தருகிறோம்;

1.பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த கிரக அமைப்பின் படி யோகம் தரக் கூடிய பெயர் வைத்துத் தருகிறோம்;

2.புதிதாகத் துவங்க இருக்கும் வர்த்தக நிறுவனங்கள்,முகமைகள்(ஏஜன்சிகள்),ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு அதன் உரிமையாளர்களின் பிறந்த ஜாதகத்தைப் பொருத்து வளமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் விதமாக பெயர் அமைத்துத் தருகிறோம்;

3.ஏற்கனவே இருக்கும் அறக்கட்டளைகள்,சேவை அமைப்புகள்,ஆன்மீக அமைப்புகளுக்கு உரிய பொருத்தமான, அவைகளின் லட்சியம் ஈடேற வைக்க,பக்க பலமாக இருக்கக் கூடிய பெயர்கள் வைத்துத் தருகிறோம்;

தொடர்பு கொள்ளவும்;

அன்னை அரசாலையின் அருளை விரைவாகப் பெற


நாம் இந்தக் கலியுகத்தில் பிறக்கக் காரணமே நமது கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;ஆனால்,இறை சக்தி கருணையுள்ளது;திருந்த வேண்டும்;மனம் வருந்த வேண்டும் என்பதற்காக பல சந்தர்ப்பங்களை இறை சக்தி நமக்குத் திரும்பத் திரும்ப நம் வாழ்நாளில் அடிக்கடி உருவாக்கிக் கொண்டே இருக்கிறது;                                                         அதில் முதன்மையானதும்,முக்கியமானதும்,அவசி
யமானதும் தான் அன்னை அரசாலை வழிபாடு;

வராகி அன்னையின் 1000 பெயர்களில் ஒன்றுதான் அன்னை அரசாலை! மும்மூர்த்திகளை விடவும் உயர்ந்தவர்;அவர்களது செயல்களை நிர்ணயிப்பவர் மகா காலபைரவப் பெருமான்;அவரது சக்தியாக இருப்பவளும்,பிரபஞ்சம்,உயிர்கள்,கடவுள் சக்திகள்,குலதெய்வங்கள் என அனைத்துக்கும் இயங்கு சக்தியாக இருப்பவளே வாராகி என்ற அரசாலை!

இல்லறவாசிகளுக்கு உடனடியாக அருளை வாரி வழங்கி நிம்மதியையும்,செல்வ வளத்தையும்,அருட் செல்வத்தையும் தருவதில் பெற்ற அன்னைக்கு நிகர் இந்தப்  பிரபஞ்சத்தில் உண்டா?

சதாசிவனோ அல்லது காலபைரவப் பெருமானோ வரங்களைத் தரும் போது சில சமயம் அந்த வரம் முழுமையில்லாமல் இருப்பதுண்டு;அதை உடனே கவனித்து அந்த வரத்தை முழுமைப்படுத்துவது அன்னையே!

நாளை 12.9.15 சனிக்கிழமையும்,நாளை 13.9.15 ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசைத் திதி அமைந்திருக்கிறது;தவிர,12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமையும் சிம்மகுருவும் உடன் இருப்பதால் இந்த நாளில் அன்னை அரசலை(வராகி)யை வழிபடத் துவங்குபவர்கள் முற்பிறவிகள் மூன்றில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்ட சித்த சீடர்கள் என்பதே சூட்சுமம்!!!

சூரியனுடைய வீடான சிம்மத்தை குரு கடப்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே! இந்த மாதமே ஆவணி மாதம்;முன்னொரு காலத்தில் தமிழ் வருடப்பிறப்பு ஆவணி மாதம் முதல் நாளாக இருந்தது;இந்த ஆவணி மாதம் முழுவதும் ஆத்மக்காரகனாகிய சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்;குரு உச்சத்துக்குரிய சக்தியுடன் சிம்மத்தில் இருக்கிறார்;அடுத்த இரண்டு நாட்களில் மனக்காரகனாகிய சந்திரனும் வர இருக்கிறார்;இந்த அதி நுட்பமான,விஷேசமான நாளில் ஜோதிடர்களும்,ஜோதிட ஆர்வலர்களும் அன்னை அரசாலையை(வராகி) வழிபடத் துவங்கிடலாம்;இதன் மூலமாக தன்னுடைய வாக்கு பலத்தை அதிகரித்துக்  கொள்ள ஒரு சுலபமான வாய்ப்பு;

இன்றும் நம்மில் பலர் ஏதாவது ஒரு அம்மனை தினமும் வழிபட்டு அல்லது துதித்து வருகின்றனர்;அவர்கள் அந்த அம்மன் வழிபாட்டோடு அன்னை அரசாலை(வராகி)யை வழிபடத் துவங்கினால்,அவர்கள் வழிபடும் பெண் தெய்வத்தின் அருள் அதிவிரைவில் கிட்டிவிடும்;கடந்த ஒராண்டாக நேரில் உணர்ந்த ஆன்மீக உண்மை இது;

அன்னையின் 12 பெயர்களை தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை தினமும் காலையிலும்,இரவிலும் ஜபிப்பதே அன்னை அரசாலையைச் சரணடைவதன் முதல் கட்டம்!

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்கள் அல்லது உக்கிரமான பெண் தெய்வக் கோவில்கள் அல்லது சப்த கன்னியர்கள் சன்னதிகள் இருக்கும் எந்தக்கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவில்கள் அல்லது குலதெய்வக்கோவில்களில் தினமும் இரவு 8 முதல் 8.30 க்குள் அன்னையின் 12 பெயர்களை ஜபிக்கலாம்;இதன் மூலமாக பல ஆண்டுகளாக உங்களுக்கு இருந்து வரும் வாழ்வியல் சிக்கல்கள் தீர வழிகிடைக்கும்;கடன் கள் தீர எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்;

தினமும் கோவிலுக்குச் சென்று ஜபிக்க முடியாதவர்கள்,உங்களுக்கு வசதியான நாட்களில் ஜபிக்கலாம்;வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் அல்லது உங்களுக்கு எப்போதெல்லாம் ஆலயத்திற்குச் செல்ல முடியுமோ அப்போதெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு 30 நிமிடத்தில் ஜபிக்கலாம்;


ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அன்னை வராகியின் சன்னதிகள் அல்லது தனிக்கோவில்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன;


அன்னையின் வழிபாட்டைத் துவக்கிட நமக்குத் தேவையான தகுதிகள்:

1.அசைவம் சாப்பிடக் கூடாது;(புரோட்டா,முட்டை வகை உணவுகள் அசைவமே)

2.யாருக்கும் மனதால் தீங்கு நினைக்கக் கூடாது;பிறர் நமக்கு நினைத்தால் அதை அன்னை அரசாலையிடம் முறையிட்டுவிட்டு,நமது வேலை/தொழிலை பார்த்துக்கொண்டே சென்றால் போதும்;

3.இப்படிப்பட்ட வழிபாட்டை பின்பற்றத் துவங்குவதையோ அல்லது வழிபாடு செய்வதையோ எவ்வளவுக்கெவ்வளவு ரகசியம் காக்கிறோமோ அவ்வளவு நன்மை தரும்;

அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை ஒருமுறை ஜபித்தால்,ஐந்து முறை வராகி மாலையை பாடியதற்குச் சமம்;

அந்த 12 பெயர்கள் வருமாறு:

பஞ்சமீ

தண்டநாதா

சங்கேதா

சமேஸ்வரீ

சமய சங்கேதா

வராகி

போத்ரிணி

சிவை

வார்த்தாளீ

மகாசேனா

ஆக்ஞாசக்ரேஸ்வரீ

அரிக்நீ

ஏற்கனவே,அன்னையின் 12 பெயர்களை ஜபித்து வருபவர்கள் 12.9.15 சனிக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்கலாம்;அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்கலாம்;

13.9.15 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது காலை 11 மணி முதல் 12 மணிக்குள் அல்லது இரவு 6 மணி முதல் 7 மணிக்குள் அல்லது இந்த நேரங்கள் அனைத்திலும் அருகில் இருக்கும் சிவாலயத்தில் சிவன் சன்னதி முன்பாக பாதிநேரமும்,அம்பாள் சன்னதி முன்பாக மீதி நேரமும் ஜபிக்கலாம்;

இதன் மூலமாக அமாவாசை திதி,குருச்சந்திரயோகம்,சிவராஜயோகத்தின் பலன் போன்றவைகளை முழுமையாகப் பெறலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


Thursday, September 10, 2015

எத்தனை எத்தனை மூலிகைகள்!


சுணங்கி விருட்சம் என்ற மூலிகை இனம் உள்ளது;சதுரகிரி,கொல்லிமலை,பர்வதமலைப்பகுதிகளில் கிடைக்கிறது;அடையாளம் காண விரும்பினால் அவரவர் ஜாதகத்தில் உரிய கிரக அமைப்பு இருக்க வேண்டும்;இதன் காய் முதிர்ந்து விழும் போது,நாய் கத்துவது போன்ற சப்தம் கேட்கும்;இந்தக் காயை யாரும் பறித்துச் செல்ல முடியாது;

 போகர் தவம் இருந்து இந்தக் காயை எடுத்திருக்கிறார்;

இந்தக் காயை வாயில் போட்டு அடக்கிக் கொண்டால்,நாம் எங்கு போக நினைக்கிறோமோ அங்கே பறந்து செல்லலாம்;நன்றி:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக எண்ணமுள்ள பெரியவர்கள்

மாந்திரீகக் கோளாறுகளை நீக்கும் வாத்தியாரய்யா!


நம்மில் பெரும்பாலானவர்கள் சக உறவினர்கள்,நண்பர்கள்,தொழில் எதிரிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் இருந்து மீள்வது எப்படி?
நாமும் பதிலடியாக மாந்திரீகத்தை ஆயுதமாக எடுத்தால்,அது நமது அடுத்த 16 தலைமுறைகளைப் பாதிக்கும்;அப்புறம் பழிவாங்கவே தலைமுறைகள் உருவாகும்;இது முறையல்ல;


இதில் இருந்து மீள சுலபமான வழி இருக்கிறது;முதலில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;அப்படி நிறுத்தாவிட்டால் இந்த வழிபாடும் பலன் தராது;


தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு 6 பவுர்ணமிகளுக்கு சிங்கம்புணரி வாத்தியாரய்யா கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வதுதான் அந்த வழிபாடு;

ஸ்தம்பனம்,பில்லி,ஏவல்,பிசாசு என்று எப்பேர்ப்பட்ட மாந்திரீக பாதிப்பாக இருந்தாலும் அதில் இருந்து மீள வாத்தியாரய்யா கோவிலுக்கு வரவேண்டும்;பவுர்ணமி அன்று இரவு 8 மணிக்கு வந்து இரவு அந்தக் கோவிலில் தங்க வேண்டும்;மறுநாள் காலை 6 மணிக்குப் பிறகு அங்கிருந்து செல்ல வேண்டும்;

வாத்தியாரய்யா என்ற முத்துவடுகநாதர் கடந்த நூற்றாண்டுகளில் அன்னை அரசாலை(வராகி)யின் உபாசகராக வாழ்ந்தார்;அன்னையின் அருள் கிட்டிட வாத்தியாரய்யாவின் கருணைப் பார்வை விழும்படி மனதார வழிபட்டால் போதும்;

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பேருந்துகள் இந்த ஊருக்குச் செல்கின்றன;மதுரை டூ திருச்சி சாலை மார்க்கத்தில் பொன்னமராவதியில் இருந்தும் செல்லலாம்;


ஓம் வராகி சிவசக்தி ஒம்

ஸ்பைருலினாவும்,அதில் தயாராகும் மாத்திரைகளும்


400 ஆண்டுகளுக்கு முன்பு,பிரான்ஸ் நாட்டினர் கிழக்கு ஆப்ரிகாவில் அமைந்திருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருந்தனர்;அப்போது விஷ காய்ச்சல் பரவி பல கிராமங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது;ஆனால்,ஒரு ஏரியைச் சுற்றிலும் இருந்த சில கிராமங்களில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை;

இதை கவனித்த அவர்கள்,அந்த கிராம மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தனர்;அவர்கள் அனைவரும் அந்த ஏரித்தண்ணீரை அருந்தவும்,சமைக்கவும் பயன்படுத்தியதால்,அவர்களை விஷ காய்ச்சல் தாக்கவில்லை;அந்த ஏரியை ஆராய்ந்த போது ஸ்பைருலினா கண்டுபிடிக்கப்பட்டது;

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் ஸ்பைருலினா விற்பனை பரவலாகிவருகிறது;எம்.எல்.எம்மில் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள்;மாவட்டத்திற்கு ஒரு ஸ்பைருலினா தயாரிப்பாளர்கள் உருவாகி வருகின்றனர்;இதனால் 100 மாத்திரைகள் கொண்ட டப்பா ரூ.200 முதல் ரூ.300க்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது;

நமது உடலில் என்னென்ன சத்துக்கள் எந்த இடங்களில் குறைவாக இருக்கிறதோ,அவைகளை ஒரே சமயத்தில் நிவர்த்தி செய்து முழு ஆரோக்கியத்தைத் தருகிறது ஸ்பைருலினா என்ற சுருள்வடிவ பச்சைப்பாசி!

ஆனால்,மாவட்டம் தோறும் உற்பத்தியாளர்கள் உருவானதும்,இதிலும் தங்களது வர்த்தக நோக்கை திணிக்கத் துவங்கிவிட்டனர்;ஆமாம்!

உண்மையான ஸ்பைருலினா பொடியானது அழுகிய முட்டைவாடையில் இருக்கும்;நமது தமிழ்நாட்டு ஸ்பைருலினா உற்பத்தியாளர்கள் ஸ்பைருலினாவுடன் வேப்பிலைப்பொடி அல்லது நெல்லிக்காய் பொடியைக் கலந்து விற்பனைச் செய்துவருகிறார்கள்;ஸ்டிக்கரில் ஒரு சதவீதம் குறிப்பிடுவது போல கலப்பது இல்லை;ஸ்பைருலினா 80%;நெல்லிப்பொடி 20% என்று அச்சடித்திருப்பர்;ஆனால்,நெல்லிப்பொடி 80%;ஸ்பைருலினா 20% என்றுதான் கலந்து கட்டி 400% முதல் 800% லாபம் பார்க்கிறார்கள்;லாபம் இவர்களுக்கு;கெட்டப் பெயர் ஸ்பைருலினாவுக்கு!

விண்வெளியில் மாதக்கணக்கில் தங்கிப் பணிபுரிபவர்களுக்கு நாசா உணவாக பரிந்துரைப்பது இந்த ஸ்பைருலினாவைத்தான்!

வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் நாம்,பெரும்பாலும் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை;இது 40 வயதுக்குப் பிறகு ஸ்ட் ரோக்கை உருவாக்கும்;இதைச் சரி செய்ய ஒருவேளை உணவாக 4 ஸ்பைருலினா மாத்திரைகளைச் சாப்பிடாலே போதுமானது;

மேலே கூறியபடி வேப்பிலைப்பொடியோ நெல்லிப்பொடியோ கலந்திருந்தாலும் அதனால் எந்தப் பக்கவிளைவும் வராது;ஸ்பைருலினாவின் முழு மருத்துவகுணம் நமக்குக் கிடைக்காமல்,வேப்பிலைப்பொடியின் மருத்துவகுணமும்,நெல்லிப்பொடியின் மருத்துவகுணமும் கிடைக்கும்;அவ்வளவுதான்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

உலக அரசியலில் இனி நடக்க இருப்பது. . .


1995 ஆம் ஆண்டுடன் கம்யூனிஸம் உலக அரசியலில் இருந்து காணாமல் போனது;

2005 ஆம் ஆண்டில் இருந்து முதலாளித்துவம் சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது;கோடிக்கணக்கான பணம் தான் அந்தச் சிதைவை தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது;

முதலாளித்துவ நாடுகளுக்கு ஒரு பயம்;எங்கே மீண்டும் கம்யூனிஸம் வந்துவிடுமோ? என்று! கம்யூனிஸம் உருவாக எவையெல்லாம் காரணிகளாக இருக்கின்றனவோ அவைகளை திட்டமிட்டு அழிக்கும் (உலக அளவில்) வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;

மிஞ்சி இருப்பது பாரதத்தின் கிராமம் சார்ந்த தன்னிறைவுப் பொருளாதாரம் தான்;இதுவே அடுத்த 20 நூற்றாண்டுகளுக்கு உலகை ஆளப் போகிறது;

வாஷிங்டன் ஆப்பிள் அல்லது நியூசிலாந்து ஆப்பிளை நம்ம தெரு சுப்பனோ குப்பனோ என்னிக்காவது கேட்டானா? இந்த அமெரிக்கா உலக வர்த்தக அமைப்புங்கற பெயருல காராமணித் தெருவுல வந்து இந்த ஆப்பிள்களை விக்குது;
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை நியூயார்க் லேன்யூ சாப்பிடுவாளா?


அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களே அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவாக இருக்கும்;இதுதான் பாரதப் பொருளாதாரத்தின் அடிப்படை!