Thursday, April 27, 2017

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறு எளிய விளக்கம்

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?


14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.

அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.

இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

யோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் திறன் மீண்டும் கிடைத்தது.



மும்பை ரயில் குண்டு வெடிப்பால் காது கேட்கும் திறனை இழந்தார் டாக்டர் காமத் என்பவர்.அவரது வயது 57.இவர் இயற்கை உணவு நிபுணர். 11.6.2006 ஆம் நாளன்று மும்பையில் பயங்கரமான ரயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடித்து ஏற்பட்ட பயங்கர சப்தத்தால் காது கேட்கும் திறன் இழந்தார்.

அவர் இயற்கை வைத்தியம் மற்றும் யோகா சிகிச்சையை மேற்கொண்டார்.சில மாதங்களில் அவரது காது கேட்கும் திறன் 80% அளவுக்கு அதிகரித்தது.

மும்பை கூப்பர் மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை நிபுணர்களால் இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


ஆதாரம்:தினமலர் ஜீலை 14,2007.

ஜோதிடப் பட்டயப்படிப்பின் வரலாறு

ஜோதிடப்பட்டயப்(D.A.,)படிப்பின் வரலாறு

(Diplamo in Astrology)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடத்தில் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியது.ஆறுமாத பட்டயப்படிப்பு அது.இந்த படிப்பை அறிமுகப்படுத்திய உடனே மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனேகமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் என நினைக்கிறேன்.கம்யூனிஸ்டுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பின் அடையாளமாக பெரியாரிலிருந்து பல்கலைக்கழகம்செல்லும் ஒரு நகரப் பேருந்தை(டவுண் பஸ்) எரித்தன!!!

இதைப் பார்த்து எத்தனை மக்கள் சிரித்திருப்பார்கள்.மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மாநில அரசாங்கத்தின் மந்திரிகள் துர்கா பூஜைகளில் திருட்டுத்தனமாக இன்றும் கலந்துகொள்ளுகிறார்கள்.

(சிலரது பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அவர் தெய்வநம்பிக்கையற்றவராகவும், தனது பிறந்த நாட்டின் புராதன சாஸ்திரங்களைக் கிண்டல் செய்பவராகவும் இருப்பார் என ஜோதிடம் சொல்லுகிறது)

அதே சமயம், ஜோதிடப்பட்டயப்படிப்பிற்கு முதல் பேட்ச் மாணவர்களின் எண்ணிக்கை 60,000.இத்தனைக்கும் இது அஞ்சல்வழிப்படிப்பாகும்.


2009 இல் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடப் பட்டயப் படிப்பை நிறுத்திக்கொண்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்யூனிஸ்டின் கிளைகளில் ஒன்று;அந்த சமயத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தவர்களும் கம்யூனிஸ்டுகள்!!!


ஆனால்,இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.20,00,000/-(இருபது லட்சம் ரூபாய்) வருமானம் பல்கலைக்கழகத்துக்குத் தந்துகொண்டு இருந்தது.ஆதாரம்: தினமலர்,பிப்ரவரி,2009.

அதே சமயம், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் கற்பகம் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜோதிடப் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இதில் சாஸ்திரா பட்டயம் முதல் முதுகலை வரை ஜோதிடவியல் பாடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது.
அமெரிக்காவில் வேத ஜோதிடம் (vedic astrology) என்ற பெயரில் நமது இந்து ஜோதிடக்கலையை பல பல்கலைக் கழகங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அமெரிக்க வேத ஜோதிட சங்கம்(www.aava.com= American Association of Vedic Astrology),இங்கிலாந்தில் பிரிட்டன் வேத ஜோதிட சங்கம்(British Association of Vedic Astrology = www.bava.org) என அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

கி.பி.2002 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.இங்கிலாந்து அரசு .400 கோடி பவுண்டுகள் செலவழித்து பல யாகங்களை லண்டன் மாநகரத்தில் செய்தது.(ஆதாரம் தினமலர் கி.பி.2002)
இங்கிலாந்து அரசு வேத ஜோதிடர்களைக் கொண்டு தனது நாட்டின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னது. அந்த கணிப்பின் படி கி.பி.2012 முதல் 2015க்குள் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்க இருப்பதைக் கண்டறிந்தது.

கடந்த நூற்றாண்டில் அது உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்தது.அப்போது அதன் நிர்வாகிகளும் இங்கிலாந்து ராணுவமும் பல மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை இடித்தாலும், ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்தியதாலும், கற்பழித்ததாலும் இந்த சாபம் உருவானது.
இதை மாற்ற கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பல யாகங்களைச் செய்தது.


அன்பார்ந்த   மஹாவில்வம் வாசகர்களே! இந்தச் செய்தி முழு நிஜம்.ஆதாரம் சேகரிக்குமளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.நான் 1985 முதல் தினமும் தினமலர், தினத்தந்தி, சுதேச மித்திரன்(இப்போது இது வெளிவரவில்லை) வாசித்து வருகிறேன்.


வந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக்கும் ஊரு!!!



வந்தாரை வாழ வைக்கும் ஊரு என்பது நம் தமிழ்நாட்டுக்கே உரிய பெருமை!

இங்கேயே வாழ்வோரை சாகடிக்கும் ஊரு என்ற
பெயரையும் நம் தமிழ்நாடு இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகாசி, மதுரை முதலான மாநகரங்களில் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 1000 பேர் வேலை தேடி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஃபேபிரிக்கேஷன், வெல்டிங் வேலைகளுக்கே வருகின்றனர். இந்த நிலை 1990களில் இருந்தது.

கி.பி.2000 வாக்கில் ராம் தேவ், ஜெயின் கோவில் என்ற பெயரில் சொத்துக்கள், தொழிற்சாலைகள், பண்ணை வீடுகள்,திரைஅரங்குகள், கல்யாண மண்டபங்கள் வாங்கிக்குவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதைத் தவிர, எந்தத் தொழிலையும் இவர்கள் முறைப்படி செய்வது இல்லை;
தவிர, அப்படி வேலைதேடி வரும் வடநாட்டினருக்கு நம் தமிழ்நாட்டு முதலாளிகள் நம் தமிழ்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் நடக்கிறது.
இப்படியே போனால், 2010 முதல் 2020 க்குள் தமிழக சட்டசபையில் இவர்கள் எம்.எல்.ஏ.வாக நுழைந்து ராஜபக்ஷேவாக மாறி சட்ட ஒழுங்கை தன் வசப்படுத்திவிடுவார்கள்.2030க்குள் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் சிறுபான்மையினராகிவிடுவோம்.
இது ஓவர் பயம் அல்ல.யதார்த்தம்!!!!
வேண்டுமானால் கோவைத் தொழிலதிபர்களிடம் சர்வே செய்து பார்க்கவும்.

உதாரணமாக 5 டன் இரும்புக்கழிவு அல்லது 20,000 காலண்டர் வாங்குகின்றனர் எனில் அதற்கு பில் இல்லாமல் வாங்கி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் அரசுக்குப் போக வேண்டிய வரி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், அதனால் அந்த வடநாட்டினருக்கு மிச்சமாகும் பணம் மட்டும் ஒரு வருடத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

கி.பி.2002 இல் பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ரெயில்வே தேர்வு எழுத நான் போயிருந்தேன்.பாட்னா ரயில் நிலையத்திலேயே என்னை மடக்கி திருப்பி அனுப்பினர் பீகாரிகள்.
தமிழ் தெரிந்தவர்களை வைத்து அவர்கள் சொன்னது:

பரீட்சை எழுதாமல் திரும்பப்போய்விடுங்கள்.மீறிச் சென்றால் பரீட்சை எழுதும் கல்லூரியின் வாசலில் உள்ள எங்கள் ஆட்கள் உங்களை மிரட்டிவிடுவர்.
ஒரு வேளை இந்த பரீட்சையில் பாஸ் ஆகி பீகாருக்கு வந்தால் உன்னைக் கொல்லுவோம்.

நாங்கள் மதராஸிக்கு வந்தால் எங்களை நீ என்ன வேணும் னாலும் செய்துகொள்

ஆகா!!! இந்தியாவில் ஏன் ராஜ்தாக்கரே உருவானார் என இப்போதுதான் புரிகிறது.

போன 2004-2009 மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சியில் லாலு ரயில் மந்திரியாக இருந்தார் அல்லவா?
அப்போது அவர் செய்த அக்கிரமம் என்ன தெரியுமா?
தகுதியற்ற பீகார்காரர்களை ரெயில்வேயில் தேர்வு மூலமாக ரெயில்வே ஊழியர்களாக்கியதுதான்.
இப்படி தேர்வு செய்வதற்காகவே பீகார் மண்டலத்தின் தேர்வை மும்பையில் நடத்தினார். இதை மோப்பம் பிடித்த ராஜ்தாக்கரே வடநாட்டாரை(பீகாரிகளை) தேர்வு எழுத விடாமல் தடுத்தார்.

காதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.


 காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.



அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. 

மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.


கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.


ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.
காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.


இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். 

வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]
ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.


காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?


காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.


உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.


அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.


காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.


அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.
இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.


எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். 

இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.
உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.
முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. 

சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]
எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். 

மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.


தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.நன்றி:www.writerpara.com/paper/

நாத்திகர்கள் பற்றிய உண்மை

கேள்வி:நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்கள் ஆத்திகத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இந்து மதத்தை மட்டுமே தாக்குகிற நிலைப்பாட்டிற்கு,ஆத்திகர்களாக இருக்கக்கூடியவர்கள் எத்தகைய வெளிப்பாட்டை முன்னிறுத்த வேண்டும்?


பதில்: நாத்திகர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மொத்த தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட கிடையாது.அது ஒரு மலிவான தந்திரம்நிறைந்த வியாபாரம்! அது தந்தை பெரியாரால் துவக்கப்பட்டது.தந்தை பெரியார் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

அதில் நாத்திகர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்துமதஎதிர்ப்பையும்,பிராமண எதிர்ப்பை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.மற்ற விஷயங்களை எல்லாம்விட்டுவிட்டார்கள்.

சமூகநீதி என்று சொல்வார்கள்.ஆனால் தந்தை பெரியார் எழுதிய புத்தகம் இரண்டு ரூபாய்.ஆனால்,திரு.கி.வீரமணி எழுதிய புத்தகம் ரூபாய் இருபது என்று விற்பனை செய்வார்கள்.அதிலேயே ஒரு நீதிஎன்பது அவர்களிடத்திலே கிடையாது.இவர்களெல்லாம் சமூக நீதி பற்றிப்பேசுவது நகைச்சுவையான விஷயம்.

இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்கவில்லை என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசுவார்கள்.ஆனால் திராவிடர் கழகம் என்பது ஆரம்பத்தில் இருந்தே ஆளும்கட்சிகளை ஆதரித்துத்தான் அறிக்கை விடும்.ஏனென்றால்,தாங்கள் செய்கின்ற தொழில்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம் ஆகும்.
நன்றி:பி.எஸ்.பி.அவர்களின் விடியல் மாத இதழ்

வேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா அவர்கள்


நமது புனிதமான பாரதத் தாய்திருநாட்டின் வரலாற்றில் ஐரோப்பியர்கள் புகுத்திய தவறுகள் கணக்கில் அடங்கா.
நம்நாட்டின் தொன்மையான ஓலைச்சுவடிகளைப்படித்து பிரதிஎடுக்கும்போதும்,கல்வெட்டுக்களைப்பிரதி யெடுத்துப் பொருள் கொள்ளும்போதும்,அவற்றில் பொய்களைப் புனைந்துரைத்தல்,தவறுகளைப் புகுத்துதல்,தவறாகப்பொருள் உரைத்தல்,இடைச்செருகல்களை நுழைத்தல்,தவறாகத்திருத்திக்கூறல்,உண்மைகளைஅழித்தல்மற்றும் மறைத்தல்,பொய்யான ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்குதல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அநீதிகளைச் செய்தார்கள்.

அவர்களின் நோக்கம் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் நமக்குள் செயற்கையாகப் பிரிவினையை உருவாக்க வேண்டும்.இவற்றின்மூலம் நம்மை அவர்கள் என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டி,தாம் கொழுக்க வேண்டும் என்பதே!


இதற்காக அவர்கள் புரிந்த,சிறிதும் நியாயமற்ற செயல்களில் மிக முக்கியமானவை.1.ஆதாரபூர்வம் ஏதுமற்ற கிரேக்க நாட்டுக்குறிப்புக்களை,உறுதியான மற்றும் முடிந்த முடிவான ஆதாரமாகக்கொண்டு(sheet anchor) நம் நாட்டு வரலாற்றின் கால வரிசைக்கிரமத்தை முற்றிலும் தவறாக நிர்ணயித்து,நமது தொன்மையை செயற்கையாகக் குறைத்தது.2.அலெக்ஸாண்டரை மிகப்பெரிய வீரனாகப் பொய்யாக உயர்த்திக்கூறியது.புருஷோத்தமன் தோற்றுப்போனதாகப் புனைந்துரைத்தது. 3.நமது பாரத தேசத்தில் செயற்கையாகப்பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டுவதற்கு ஐரோப்பியர் திட்டமிட்டது.இதற்கு ஏதுவாக மொழி,சமூக,பிராந்திய மற்றும் சமுதாயப் பழக்க வழக்க ரீதியில் நம்மவருக்குள் மனத்தளவில் பிரிவினை மற்றும்துவேசத்தை விதைத்தது.இதுவே அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.
இதற்காக நமது நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற,முற்றிலும் தவறான கருத்துக்களைச் செயற்கையாகப் புகுத்தினர்.இதற்கு ஒரு உதாரணமாக,ஐரோப்பியரும் அவர்களது அடிவருடிகளும் புனைந்துரைத்த,ஆரிய திராவிட இனவாதகட்டுக்கதையைக் கூறலாம்.


4.உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு,முழு பாரதத்தையும் ஆண்ட வீரதீரம் பொருந்திய மாபெரும் மன்னர்களான விக்ரமாதித்ய மற்றும் சாலிவாஹன மன்னர்களை,வரலாற்று நாயகர்களாக ஏற்றுக்கொள்ளாது,மக்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று வரலாற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப தவறாகமாற்றிஎழுதியது.
5.கனிஷ்கர் (கி.மு.1294முதல் கி.பி.1234 வரை) என்ற காஷ்மீரத்தின் க்ஷ்த்ரிய குல மன்னனை ஹீணமன்னனாக மாற்றி , அவரின் காலத்தை நவீன காலத்தை நோக்கி மாற்றியது.


6.மிகிரகுல (காஷ்மீரத்து க்ஷத்திரிய மன்னர் கி.மு.704 முதல் கி.மு.634 வரை)மற்றும் தோரமாணா (காஷ்மீரத்து க்ஷத்திரிய இளவரசர் கி.மு.16) ஆகியோரை ஹீண மன்னர்களாக தவறாகக் கூறி,618 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகிர குலனை,அவருக்கு மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்த தோரமாணாவின் மகனாக வரலாற்றை தவறுபட எழுதியது.

7.நம்நாட்டின் பண்டைய விஞ்ஞான மற்றும் பிற நூல்கள்,அவற்றின் ஆசிரியர்களின் கால நிர்ணயத்தில்,நீதிக்குப்புறம்பாகத் தொன்மையை வெகுவாகக் குறைப்பதற்குச் செய்த மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை ஒவ்வொன்றாக சிந்திக்கலாம்.


மெகஸ்தனிஸின் சண்ட்ரகோட்டோஸ்
பாரத நாட்டின் வரலாற்றைத் தவறாக எழுத முயற்சித்த ஐரோப்பியர்களுக்கு,கிரேக்க நாட்டின் அலெக்ஸாண்டர் மற்றும் செல்யூகஸீடன் பாரதம் வந்த மெகஸ்தனிஸ் என்பவர் நமது நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப்பற்றிய சிலவிபரங்கள் கிடைத்தன.அவற்றில் மெகஸ்தனிஸ் காலத்தில் ப்ராஸி என்ற பகுதியின் பாலிபோத்ரா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயர் சண்ட்ரகோட்டோஸ் என்று ஓரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.(Ref.Ancient India as described by Megasthenes and Arrian,John W.Mc Crindle,Munishiram,New Delhi (1926)2000,page 5,19,66)வெறும் இந்தப்பெயரை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இந்த சண்ட்ரகோட்டோஸ் என்பது சந்த்ர குப்தா: என்றும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட
சந்த்ர கும்பதர் என்றும் ஐரோப்பியர் முடிவு கட்டினர்.சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் நாட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிப்பிரிவில்,பாரதத்தில் கி.பி.1780 களில் பணிபுரிந்து வந்தார்.1784 இல் கொல்கத்தாவில் ராயல் ஆசியாடிக் சொசைட்டியை (Royal Asiatic Society)ஏற்படுத்தி,நம் நாட்டின் வரலாற்றை,ஐரோப்பியருக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்தார்.நம் நாட்டின் ராதாகண்ட்(Radhakant)என்ற ஸமஸ்க்ருத நிபுணர்,இந்த துரோகத்திற்கு உதவியாய் இருந்தார்.நம் நாட்டின் பாகவதபுராணம் உட்பட பற்பல புராணங்களைப் புரட்டிப் பார்த்த வில்லியம் ஜோன்ஸீக்கு அந்த புராணங்கள் விவரித்த நம் நாட்டின் மிகமிகத் தொன்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்வதில் எண்ணற்ற சிரமங்கள் இருந்தன.உதாரணமாக,அவரது மத நம்பிக்கையின்படி,உலகம் இன்றைக்கு 6014 ஆண்டுகளுக்கு முன்புதான் (கி.மு.23.10.4004 காலை 9 மணிக்கு) படைக்கப்பட்டது.ஆகவே,பத்தாயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நம்நாட்டின் பழமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.நம் நாட்டினைத் தாழ்வாக சித்தரிக்கும் அவரது நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிராக இருந்தது.ஆகவே,கிரேக்க நாட்டவரான மெகஸ்தனிஸின் குறிப்புகள் மற்றும் தான் அரைகுறையாகப் படித்திருந்த நமது புராணங்கள் இவற்றை வைத்துக்கொண்டு,அவசர கதியில்,மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புக்களில் காணப்பட்ட பாலிபோத்ராநகரமானது,பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) என்றும்,இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயரான ‘சண்ட்ரகோட்டோஸ்’என்பது சந்திரகுப்தர் என்பதன் உருமாற்றம் எனவும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட சந்த்ரகுப்தர் என்றும் அரைகுறையாக 28.02.1793இல் முடிவுகட்டினார். 

இதைப்பற்றி வில்லியம் ஜோன்ஸ், “இது முடிந்த முடிவு அல்ல;இது பற்றிய தனது ஆய்வுகள் மற்றும் முடிவுகள் அடுத்த கட்டுரையில் தான் முழுமையாக முடிவாகும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால்,அடுத்த கட்டுரை எழுத,காலம் அவருக்கு அவகாசம் தரவில்லை.வில்லியம் ஜோன்ஸ் 27.4.1794இல் காலமாகிவிட்டார்.(ஆதாரம் 1. “The work of Sir WilliamJones” in 13 Volumes,Volume 4,1807 Edition,pages 1,2,6,36 to 40,42 to 46 by Lord TEignmouth and 2.”Is Sandrakottas Chandragupta Mauraya)” by Sree Shriram Sathe,1985 Edition,Pages 1 to 9)நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்

சுதேசிச் சிந்தனைகள்:1.அமெரிக்கா எப்படி திவாலாகும்?


அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்! 
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.


இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.



இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!

அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

சிவசித்தர் வர்மம் எனப்படும் நோக்கு வர்மம்:அடிப்படை உண்மைகள்







சிவன் வழியில் சித்தர்கள் தெரிந்துகொண்ட இந்த வர்மக்கலை மர்மமாகவும்,சூட்சுமரீதியாகவும் இன்றளவும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.ஆனால்,அதை எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக யாரும் தர முன்வரவில்லை.வர்ம ஆசான்களால் ஒவ்வொரு விஷயங்களாக மறைக்கப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.


இந்த வர்மக்கலை சேர , சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் போர்க்கலையாக இருந்தது.இது எல்லோருக்கும் தெரிந்தால் நட்டில் தன்னைக் காத்துக்கொள்ள பயன்படுத்தாமல் ஒரு சிறிய பிரச்னைக்குக்  கூட இதைப் பயன்படுத்தி அழிக்க நினைப்பார்கள் என்ற எதார்த்தத்தின் காரணமாக ஆசான்கள் யாரும் எவருக்கும் முழுமையாகக் கற்றுத்தரவில்லை.

வர்ம ஆசான்கள் முதலில் மருத்துவத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள்.இதில் காயம்,வீக்கம்,ரத்தக்கட்டு,சுளுக்கு மற்றும் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வியாதிகளுக்கு கஷாயம்,எண்ணெய்,தைலம்,குளிகை போன்ற மருந்து வகைகளைத் தயாரிக்கவும்,பயன்படுத்துமுறையையும் சொல்லிக்கொடுத்தார்கள்.இதில் முழுமையான பயிற்சியளிக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.
ஒரு மாணவன் முழு வர்மக்கலையும் அறிந்துகொள்ள 12 ஆண்டுகள் ஆகும்.அத்தனைக் காலங்கள் ஒரு மாணவன் பொறுமையோடு காத்திருந்தால் தான் ஒரு வர்மானியாக முடியும்.பொறுமையில்லாத மாணவர்கள் பாதியிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.புதிதாக ஆர்வப்பட்டு அதிகம் பேர் இதை நோக்கி வரவும் இல்லை.

வர்ம ஆசான்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை;ஓர் உன்னதமான வர்மக்கலை கண்டவர்களிடம் எளிமையாக சென்று சேரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
இந்தக் கலையின் சூட்சுமத்தை சாதாரணமாக சொல்லிக் கொடுத்து,செல்வம் சேர்க்கவோ,பொருளீட்டவோ விரும்பவில்லை.ஆனாலும் அவர்கள் தேவையானதை இந்த வர்மக்கலையை சூட்சுமரீதியில் பயன்படுத்தி பலனடைந்தார்கள்.இதை யாரும் தடுக்க முடியாது.அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இது தான் உண்மை.வர்மத்தை பயன்படுத்தி,என்னவெல்லாம் அடையலாம் என்று கேட்டால்,
1.ஒருவனை வீழ்த்த முடியும்- அதே சமயம் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்.
2.ஒருவனை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைக்கமுடியும்.அதிலிருந்து விடுதலையாக்கவும் முடியும்.(அனுபவத்தில் கண்ட உண்மை)
3.வர்மக் கலையால் ஒரு காரியத்தில் செய்லவடிவத்தை முன்கூட்டியே உணரமுடியும்.(முன் உணர்வு)
4.மனிதனின் சகலவிதமான நோய்களில் இருந்து நிரந்தர தீர்வைப் பெறலாம்.
5.நியாயமான முறையில் என்னவெல்லாம் நினைக்கிறாயோ அதையெல்லாம் கண்டிப்பாக அடைய முடியும்.

உலகியல் நடைமுறையில் கண்திருஷ்டி என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.ஒரு சிலர் அதற்காக பரிகாரங்களையும் செய்துகொண்டு தான்  இருக்கிறார்கள்.என்ன பரிகாரம் செய்தாலும் அதை நிவர்த்தி செய்ய முடியாது.
ஏன் என்றால் உங்களுக்குப் பிடிக்காதவர்கள் ஓர் வக்ர பார்வையோடு உங்கள் குடும்பத்தையோ, தொழிலையோ,நிறுவனத்தையோ பார்க்கும்போது அங்குதான் நோக்கு வர்மம் 1/1000 மடங்கு அங்கே சாதாரணப் பார்வையில் செயல்படத்துவங்கும்.அதையே வாழ்க்கையில் நீங்கள் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பீர்கள்.அவ்வாறு மீண்டும் மீண்டும் பார்வைபடும்போது அதிலிருந்து உங்களால் எந்த வகையிலும் மீள முடியாது.இதிலிருந்து விடுதலை பெற வர்மக்கலையில் எந்திரங்கள்,மூலிகை,மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும்,சித்தர்கள் அடர்ந்த காடுகளில்,கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களை நோக்கு வர்மத்தை பயன்படுத்தியே காத்துக்கொண்டார்கள்.


இந்தக் கட்டுரையை ஜோதிடபூமி,பிப்ரவரி 2012 இல் பக்கம் 27 இல் தொடராக எழுதி வருபவர்:பண்டிட் ஜி.செல்லத்துரை.

பவகார யோகம் என்றால் என்ன?


பவகார யோகம் என்றால் காற்றை சாப்பிடுவது என்று பொருள்.தொடர்ச்சியான பிராணயாமப் பயிற்சிகளால் யோகியானவன் உணவு வகைகளை,அதாவது திட மற்றும் திரவ உணவுவகைகளை ஒதுக்கி வாயுவாகிய காற்றை உண்டு(சுவாசித்து) மட்டுமே வாழக்கூடிய தகுதியைப் பெறுகிறான்.

காற்றை மட்டும் உண்டு வாழும் யோகிக்கு உடலில் கழிவுப்பொருட்கள் உண்டாவதில்லை.உடல் எனப்படும் தேகம் பரிமள வாசனையோடும் இருக்கும்;இந்த யோகிகளுக்கு மரணம் என்பதே கிடையாது.மரணத்தின்மீது முழு ஆதிக்கம் செலுத்தி,மனதின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி,புலன் ஈர்ப்பு விசை எல்லைகளைக் கடந்து,புவியீர்ப்பு விசை எல்லைகளையும் கடந்து,மரணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கிடைக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து வரும் ஸ்ரீமகா அவதார பாபாஜி,அவர் தம் தமக்கையார்(சகோதரி) ஸ்ரீநாகலட்சுமி தேவியார் ஆகியோர் இவ்வகை யோகிகளுக்கு உதாரணம் ஆகும்.


மேலும் ஸ்ரீகவுரி சங்கர் பீடத்தில் பாபாஜியுடன் வசித்துவரும் 8 சிஷ்யர்களும் இதற்கு உதாரணம்.இமயமலை வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்துவரும் பல்வேறு யோகிகளும்,யூதரான ஈசா எனப்படும் யேசு,புனிதபவுல்,யோவான் ,எலீயா போன்றவர்களும் தங்கள் பருவுடலை நினைத்தபோது சிதைத்துக்கொள்ளும்,நினைத்தபோது மீண்டும் எடுத்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்று இருந்தது சிலவகை சித்தர்முறையிலான மூச்சுப்பயிற்சிகளால்தான்!!! 

ஆதாரம்:சித்தர் களஞ்சியம் ,பக்கம் 108

பெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேலப்பெரும்பள்ளம்











நம் எல்லோருக்கும் கீழப்பெரும் பள்ளம் தெரியும்.கேதுஸ்தலம் என்பதும்,கேது சார்ந்த தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போய் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.மேலப்பெரும்பள்ளம்?



ஸ்ரீ தோஷம் நீக்கும் ஸ்தலம் என இணையப்பெருங்கடலில் இந்த கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.வேறுவிபரங்கள் கிடைக்கவில்லை.எனது ஆன்மீக குருநாதர்களில் ஒருவர் இந்த ஸ்தலம் பற்றி கூற,கூற இப்படி ஒரு கோவில் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அதுவும் நமது தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கும் பூம்புகாருக்கும் நடுவே ஒரு சிறு கிராமத்தில் வலம்புரநாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பது புரிந்தது.இந்த பதிவில் காட்சியளிப்பது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் தான்.இந்தப் பதிவினை வெளியிடுவதில்  மஹாவில்வம்   பெருமை கொள்கிறது.



சரி! யாரெல்லாம் இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?



முற்பிறவிகளில் பெண்ணை(*மனைவியை/சகோதரியை/தாயை/மகளை/மருகளை *)அவமானப்படுத்தி,அலங்கோலப்படுத்தியவர்கள் இந்த பிறவியில் அதே மாதிரியான அவமானங்களை அனுதினமும் சந்திப்பார்கள்.



யாருக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருக்கின்றதோ அவர்கள் கட்டாயமாக 24 முறை இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்.ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்து,ராகு திசையோ அல்லது சுக்கிர திசையோ வந்தால் அந்த ஜாதகரின் நிலை என்ன தெரியுமா?



சொல்லவே கூச்சமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் வேறு வழியில்லை.உரிய ஜாதகர் இனி நிம்மதியாக வாழ வழி காட்டித்தான் ஆக வேண்டும்.



ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிரதிசையோ அல்லது ராகு திசையோ வந்தால் அவரது முழு உடலும் புகைப்படம் அல்லது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துவிடும்.சரி,சுக்கிரனும்,ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிர திசை அல்லது ராகு திசை வராவிட்டால்? வாழ்க்கையில் ஒருதடவையாவது காமரீதியான அவமானத்தை அடைய வேண்டும்.இந்த சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இவர்களின் முன் ஜன்மத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது.இந்த சுக்கிரன் ராகு சேர்க்கையை குருவின் ஏழாம் பார்வை பார்த்தாலும்,குரு சேர்ந்திருந்தாலும் இதே நிலைதான்!



வெள்ளைக்காரர்கள்,வெள்ளைக்காரிகளுக்கு இது பொருந்தாது.ஏனெனில்,அவர்களின் நாகரீகம் அம்மண நாகரீகம்.மானங்கெட்ட நாகரீகம்.



இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் எந்த மதமாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் மேற்கூறிய கிரக அமைப்புள்ள ஆண்/பெண் பிறந்தால்,அந்த ஜாதகர் உரிய திசையான ராகு திசை அல்லது சுக்கிரதிசை வரும் போது இந்த மகத்தான அவமானத்தை அடைவார்;



இந்த திசை வருவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு அதிக பட்சமாக 24 முறையும்,குறைந்த பட்சமாக 6 முறையும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 க்குள் (ஆமாம் ,இராகு காலத்தில்)108 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டப்பின்னர், இந்த வலம்புரநாதரின் சன்னிதிக்கு முன்பாக மஞ்சள் பட்டுத்துண்டில் அமர்ந்து  ஒரு மணி நேரம் வரை சிவாய நம  என ஜபிக்க வேண்டும்.அகல் விளக்குகள் இந்தக் கோவிலில் போதுமான அளவில் இருக்கின்றன.எனவே ,நெய் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றால் போதுமானது.



தவிர,சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருக்க ஒரு பெண் பிறந்திருந்தால்,அந்தப் பெண்ணுக்கு ஒரு தடவையாவது கர்ப்பம் கலையும்.தவிர வாழ்நாளில் ஒரு தடவையாவது காமரீதியான அவமானங்களை அடைந்தாக வேண்டும்.இதே கிரக அமைப்பில் ஒரு ஆண் பிறந்தால்,ஆண்மைக்குறைவுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.அல்லது காதலால் அல்லது பெண்ணால் அவமானப்பட வேண்டும்.



அப்படி அவமானப்படாமலிக்க இந்த மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலுக்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வருகை தந்து காலை 11 முதல் 12 மணிக்குள்ளும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளும் நெய் தீபங்கள் ,அகல் விளக்கில் 108 எண்ணிக்கையில் ஏற்றி வழிபட வேண்டும்.



மேலும்,எந்த ஒரு பெண் அல்லது ஆணின் பிறந்த ஜாதகத்தில் ,(எந்த ராசியாக இருந்தாலும்,எந்த நட்சத்திரமாக இருந்தாலும்,எந்த லக்னமாக இருந்தாலும்) கன்னி ராசியில் சுக்கிரன்,செவ்வாய்,இராகு சேர்ந்திருந்தால் அல்லது சுக்கிரன்,செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால் 24 செவ்வாய்க்கிழமைகளும்,12 வெள்ளிக்கிழமைகளும் இங்கு வருகைதந்து 108 நெய் தீபம் அகல் விளக்கு எனப்படும் மண் சட்டியில் ஏற்றிவிட்டு,சன்னதியில் அமர்ந்து  ஒரு மணி நேரம் வரை சிவாய நம என்று    ஜபிக்க வேண்டும்.இவர்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை;



தமிழ்நாட்டில் பல ஆண்களும் பல பெண்களும் பெற்ற தாய் தந்தையாலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர்.ஆமாம்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வயது 25.எம்.எஸ்.ஸி படித்துவிட்டு,வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.21 வயதில் ஒருவனை காதலித்திருக்கிறாள்.22 ஆம் வயதில் இந்த காதல் அவளது அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.அவர் இந்த காதல் பற்றி எதுவுமே சொல்ல வில்லை;எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவுமில்லை;இவளோ பயந்துபோய்,தனது காதலனை உதறியிருக்கிறாள்.இவளது அப்பா தனது அலுவலக நண்பர்கள்,தெரு நண்பர்கள்,உறவினர்கள் என எல்லோரிடமும் இந்த 22 வயது மகளைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ,அவ்வளவு இழிவாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.இப்போது அந்த பெண்ணுக்கு வயது 27.பெற்ற அப்பாவே இப்படி அவதூறு பரப்புவதால்,அந்தப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.இவரது ஜாதகத்தினைப் பார்த்தப்பின்னர்தான் காரணமும்,இவரது முன் ஜன்ம ரகசியங்களும் புரிந்தது. பரிகாரமாக இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி வழிகாட்டிட,4 தடவை மட்டுமே இந்தப் பெண் தனது அம்மாவுடன் மிகுந்த போராட்டத்துக்கிடையே போயிருக்கிறாள்.தற்போது மிகச்சிறந்த கணவன் அமைந்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.



செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தப் பரிகார வழிபாட்டு முறையை நமது  மஹாவில்வம்    வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும்,தான் செய்த தவறுக்கு மனதார வருந்தி,உரிய பரிகார வழிபாட்டைச் செய்தால் மட்டுமே கிரகங்கள் தீமைகளைக்குறைக்கும்; ‘கடமைக்கே’ என்றோ அல்லது ஜாலி ட்ரிப்பாக செய்தால் பலனில்லை;



மேலப்பெரும்பள்ளம் செல்வது எப்படி?



மயிலாடுதுறை ,சீர்காழி , பூம்புகார் இந்த மூன்று ஊர்களும் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த முக்கோணத்துக்கு நடுவே அமைந்திருக்கிறது.மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் மேலையூரில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.அல்லது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்னுமிடத்தில் இறங்க வேண்டும்.இங்கிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.கோவிலின் அருகிலேயே கோவில் காவலாளியின் வீடு அமைந்திருக்கிறது.பல மகான்களும்,சித்தர்களும் சூட்சுமமாக இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகைதந்து வழிபட்டு வருகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது.கோவிலின் உள்ளே ஒரே சன்னதியில் நம்மை இயக்கும் சனிபகவானும்,அவரது குருவும் பிரபஞ்சத்தை இயக்கும் கால பைரவரும் காட்சியளித்துவருகின்றனர்.ஒரு முறை போய்வருவது நல்லது.கோவிலை ஒட்டி ஒரு டீக்கடை கூட கிடையாது.எனவே, அருகில் இருக்கும் ஊரிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்லவும்.



இன்னொரு சுலப வழி உண்டு.கீழப்பெரும் பள்ளம் செல்லவும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்தும் செல்லலாம். 

காமரீதியான பிரச்னைகளும்,கலியுகத்தின் வீச்சும்










ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர்ப் பண்பாடிலும் கூட மனித ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது.காம இச்சை என்பது மிருக குணம்தான்.அது அளவு மீறும்போது!!!தமிழர் பண்பாடுதான் இந்துப் பண்பாடாக பரிணமித்திருக்கிறது.



சுக்கிலம் என்பது விந்து அல்ல;அது காமக்கிளர்ச்சி உண்டாகும்போது ஆணின் உடலில் இருந்து வெளிப்படுவது! அதே போல பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுவதற்கு சுரோணிதம் என்று பெயர்.





ஒரு பெண் ஒரே ஒரு ஆணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்துவருவதாலும்,ஒரு ஆண் ஒரேஒரு பெண்ணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்து வருவதாலும் இந்த ஆணின் சுக்கிலம்,அவனது ஜோடியான பெண்ணின் உடலுக்குள் பாய்கிறது.அதே போல,அந்தப் பெண்ணின் சுரோணிதம்,இந்த ஆணின் உடலுக்குள் பாய்கிறது.இப்படி மாறிமாறிப் பாய்வதால்,இருவரின் உடல் நலமும் பரிபூரணமடைகிறது.இதை 20,00,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழினம் ஆராய்ந்து கண்டறிந்து,ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தனது அடையாளமாக்கிக் கொண்டுவிட்டது.(2005 ஆம் ஆண்டு மாலை முரசு,தீபாவளி மலர்,திருச்சி பதிப்பில் இது தொடர்பாக எனது கட்டுரை வெளிவந்திருக்கிறது)



இந்த தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாகவும் பரிணமித்து,மேற்கு நாடுகள் பொறாமைப் படுமளவுக்கு இந்தியா இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், ‘ காம இச்சை என்பது நெருப்பைப் போன்றது.அது ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் வளர்ந்து கொண்டே செல்லும்’ என்றும்;



ஒரு மனிதனுக்கு= அவன் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்,அவனு/ளுக்கு= காம இச்சையை விட மோசமாக பிணி எதுவும் இந்த பூமியில் இல்லை’ என்றும்; 



“ எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் குடும்பம் என்ற அமைப்பு ஆகும்.ஆனால்,அதைவிட வேறு எதுவும் இந்த சமுதாயத்தை கட்டமைக்க உதவாது” என்றும் கூறியிருக்கிறார்.



கலியுகம் பிறந்து 5118 ஆண்டுகள் ஆகின்றன.கடந்த 1000 ஆண்டுகளில் நமது இந்துப்பண்பாடும்,தமிழர் பண்பாடும் இஸ்லாமியப்படைப்பாலும்,கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பாலும் சிதைந்துவிட்டது.இதில் இஸ்லாமியப் படையெடுப்பால் சிதைந்தது மிக மிகக் குறைவு; கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பால் சிதைந்ததே மிக மிக அதிகம்.



தமிழ்ப் பண்பாடு பற்றி கடந்த சில ஆண்டுகளாகத் தேடித் தேடி படித்ததன் சுருக்கம்:



ஒரு பெண் தனது உடலைக் காட்டி யாருக்காவது காமக் கிளர்ச்சியை உண்டாக்கினால்,அவனது காமக் கிளர்ச்சியைத் தணிக்க வேண்டும்.அந்தக் காலத்தில் போட்டோக்கள் கிடையாது;ஆனால்,இன்று வக்கிர மனிதர்களாக பிறக்கும் கொடூரம் நிறைந்த காலம்! கேமிராவின் தரமோ,நிஜத்தை விடவும் துல்லியம்.போதையிலோ,காதலனுக்காகவோ ஒரு பெண் தனது முழு உடலை போட்டாவாக / வீடியோவாக எடுக்கச் சம்மதிப்பது தவறில்லை;ஆனால்,அந்த காதல் உடைந்துபோனால்,இணையத்தில் அவளது உடலைத் தாங்கும் போட்டோவும்/வீடியோவும் பல கோடி ஆண்களால் ரசிக்கப்படும்.எத்தனை கோடி ஆண்கள் காம வசப்படுவார்கள்?அது யாரென்றே அந்த பெண்ணுக்குத் தெரியாது.



தவிர,அந்தக் காதலியின் உடலை இணையத்தில் வெளியிடும் காதலன்,வெளியிடும் இணையதளம்,அதை பரப்புபவர்கள் அனைவருமே மறு ஜன்மத்தில் இதே மாதிரியான அவமானத்தை அனுபவிப்பதற்காகவே அப்பாவிப் பெண்ணாகப் பிறப்பார்கள்.இதற்கு பரிகாரமே கிடையாது.

ஒரு கண்டமே இதை பொழுதுபோக்காக செய்தால்?

ஐரோப்பாக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் இதை பொழுது போக்காக செய்வதால், இன்று ஐரோப்பா பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கிறது.1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு இணையம் பரவத்துவங்கியது;இன்று 22 ஆண்டுகளில் இந்த இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் ஒழுக்கம் தவறி நாசமாகிட இந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் மட்டுமே காரணம்.எனவே, ஐரோப்பாவும்,அமெரிக்காவும் வெகு விரைவில் பொருளாதார பிச்சைக்கார நாடுகளாக மாறப்போவது உறுதி.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த பரிகாரங்களாலும் நிறுத்திட முடியாது.



காமிரா செல்போன்கள்,டிஜிட்டல் கேமிராக்கள்,நீலப்படங்கள்,விபச்சார தரகர்கள்,வறுமையால் விபச்சாரம் செய்வோர்கள்,சினிமாவில் கவர்ச்சி போட்டி போட்டு நடித்து பல கோடி ஆண்களை காமக்கிளர்ச்சிக்குள்ளாக்குபவர்கள்,கவர்ச்சியால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இயக்குநர்கள்,நடிகைகள்,தயாரிப்பாளர்கள் என மிகப் பெரிய நெட்வொர்க் இன்று கலியுகத்தின் அடையாளமாக பெரிய அளவில் செயல்பட, யாகூ குரூப்ஸ்,கூகுள் குரூப்ஸ்,காமரீதியான வலைப்பூக்கள்,காம வீடியோக்களை வெளியிடும் இணையதளங்கள் அனைவருமே பெண் சாபத்துக்கு உள்ளாவர்கள்.இவர்கள் செய்யும் பாவத்தை இவர்களால் ஒரு ஜன்மத்தில் கரைக்க முடியாது.தவிர, இதுபற்றி கிசுகிசு என எழுதுபவர்கள்,நமது தெரு/அலுவலகத்தில் பிறரது அந்தரங்கங்களை சிலாகித்துப் பேசுபவர்களும் இப்படிப்பட்ட பாவத்துக்கு ஆளாவர்கள்.



யாருக்குமே தெரியாமல் காமரீதியான பேராசைகளைச் செய்துவிடலாம்.அதுயாருக்குத் தெரியும் என நினைத்துவிடாதீர்கள்.நம் ஒவ்வொருவரின் கூடவே,நவக்கிரகங்களின் பிரதிநிதிகள் நாம் பிறந்ததிலிருந்து வருகின்றனர்.நாம் செய்யும் பாவ புண்ணிய காரியங்களை உடனுக்குடன் அஷ்டதிக் பாலகர்களிடம் சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்திலும் இந்த நவக்கிரக பிரதிநிதிகளில் தலா ஒரு பிரதிநிதி நம்மோடு இருந்தாலும்,சனியின் பிரதிநிதி இரண்டுபேர்கள் வந்துசேர்கின்றனர்.அவர்கள் சூட்சுமமாக நமது நன்மைகளை உடனே அனுபவிக்க முடியாமல் தடுக்கின்றனர்.நமது சேமிப்பைக் கரைக்கின்றனர்;நமது மன உறுதியைக் குலைக்கின்றனர்;நம்மை எந்த ஒரு முடிவும் எடுக்க விடாமல் திணறடிக்கின்றன.அதுவும் காமரீதியாக ஆடாத ஆட்டம் ஆடியவர்களின் கதி அதோ கதிதான்.மற்றவை பாவங்களுக்கான தண்டனைகூட,நமது மன உறுதியால் தாங்கிவிடலாம்.காமரீதியான குற்றங்களுக்கான தண்டனை நமக்கு 20 முதல் 40 சதவீதம் நமது அஷ்டமச்சனி சமயத்தில் கிடைக்கிறது.மீதி அடுத்த ஜன்மங்களுக்கு சேமிப்பாகிறது.விடாத பைரவர் வழிபாடு மட்டும் ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.



எனவே,எனதருமை  மஹாவில்வம்   வாசகர்களே, காமரீதியான தவறுகள் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம்.நிம்மதியாக வாழ்வதும்,ஒழுக்கமாக வாழ்வதுமே கோடீஸ்வர வாழ்க்கை ஆகும்.



தவறான பாதையில் எவ்வ்வ்வளவு தூரம் போயிருந்தாலும் சரி! உடனே திரும்புங்கள்.இந்த நொடியிலிருந்து சரியான பாதையில் வாழத்துவங்கவும்.கூடவே,செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 6 தடவை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவிலுக்குச் சென்று,நெய்தீபம் ஏற்றி,  ஒரு மணி நேரம் வரை சிவாய நம என்று ஜபித்துவிட்டு வருக!!!

படத்தில் காணப்படுவது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலில் ஒரே சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனியும்,சனியின் குரு காலபைரவரும்!!!

சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?







ஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை!



விநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெரிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.



இந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.

பி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;

பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.



சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.



எஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”








‘காந்தி கொலையில் சாவர்க்கரின் கைவரிசை உண்டு’ என்று பாடும் பாட்டு புதிதல்ல;இதில் சாவர்க்கருக்கு சம்பந்தம் கிடையாதென்று நீதிமன்றமே விடுதலை செய்தது.காங்கிரஸ் ஏஜண்டுகளாக வாழும் சில புத்திசாலிகள் நம்பமுடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் கல் எறிந்து தேசபக்தியை காட்டினர்.சாவர்க்கரின் தம்பி நாராயணராவ் கல்வீச்சில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அன்றைக்கு சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘இந்த கொலையில் சாவர்க்கரின் பங்கு இல்லை’ என்று நேருவிடம் கூறினார்.

இருந்தும் நேரு கேட்கவில்லை;1948 மார்ச் 11 ஆம் தேதி ஒரு குற்றவாளி ஆக்கப்பட்டார்.வழக்கறிஞர் போபட் அவர்களுக்கு விவரம் கிடைத்தது.வீரசாவர்க்கர் நிரபராதி என்று தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.மேல்முறையீட்டு முயற்சியை தைரியமில்லாமல் கைவிட்டார் ஜவஹர்லால் நேரு.



நாட்டின் முதல் குடியரசு நாளின் கொண்டாட்டத்திற்கு சாவர்க்கருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று நேரு நினைக்கவே இல்லை.பிரிட்டிஷ் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்ட சாவர்க்கரின் வீட்டை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை;ஆனால்,இதே நேரு 1950 ஏப்ரல் 4 இல் பாகிஸ்தான் தலைவர் லியாகத் அலி நம் நாட்டிற்கு வந்தபோது சாவர்க்கரை ‘சட்ட ஒழுங்கு’பிரச்னையைக் காரணம் காட்டி கைது செய்ய மறக்க வில்லை;



சாவர்க்கரின் நண்பர்கள் கவுரவபூர்ணமாக ‘ம்ருத்யுஞ்ச நாள்’ கொண்டாடியதை வானிலை ஒலிபரப்பு செய்யாமல் இருக்க நேரு தடுத்தார்.அந்தமான் செல்லூலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அறையை தரைமட்டமாக்கிட முயன்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.கணேசவரின் எதிர்ப்பினார் கைவிட்டார் நேரு.சாவர்க்கரின் வாழ்நாளின் கடைசி நாட்களில்(இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும்) சி,ஐ,டிக்கள் வேலை செய்தனர்.



கடைசியில் 1966 பிப்ரவர் 26 அன்று சாவர்க்கர் வீரமரணத்தைத் தழுவியபோது கூட சவப்பெட்டி(கன் கேரேஜ்) கிடைக்காமல் செய்தவர் இந்த ஜவஹர்லால் நேரு.உடலைக் கொண்டு செல்ல கன் கேரேஜை ஏற்பாடு செய்தவர் சினிமா நடிகர் வி.சாந்தாராம் ஆவார்.சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை; நாடாளுமன்றத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தக்கூட அனுமதியளிக்க வில்லை;உறுப்பினரல்லாதவர்கள்(எம்.பி.இல்லாதவர்கள்) நாடாளுமன்றத்தில் கண்ணீர் அஞ்சலி செய்ய அவசியமில்லை என்றார் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் உக்கும் சிங்.



ஆனால்,ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் மரணமடைந்தபோது,இந்தியப்பாராளுமன்றம் கண்ணீர் சிந்தியது.இப்போது சொல்லுங்கள் நேரு போன்றவர்களே இப்படி சிறு மனப்பான்மையில் ஊன்றி இருந்தபோது,அவர் குடும்பத்தின் வாலாக இருக்கும் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பேசியது தவறா?

‘விஸ்வேஸ்வரபட் நூற்றெட்டு பேச்சு’ பக்கத்தில் விஜயகர்நாடகா 16.9.2004.



நன்றி:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்148,எழுதியவர் பேராசிரியர் தச்சம்பட்டு திரு.கே.பழநி(கிரிவலப்பிரியன்) வெளியீடு:ராஷ்ட்ரீய சாகித்ய சங்கமம்,கேசவன்குடில்,தச்சம்பட்டு-606806.திருவண்ணாமலை மாவட்டம்.விலை ரூ.60/-

W.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகள்



சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் எவராக இருந்தாலும் , மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி,அங்கிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் வத்ராப் நோக்கிப் பயணிக்க வேண்டும்.வத்ராப் நோக்கிப் பயணிக்கையில் கோபாலபுரத்தைக் கடந்ததும்,ஒரு சாலை பிரிந்து தெற்கே செல்லும்.அந்த சாலை W.புதுப்பட்டி என்னும் கிராமத்திற்குச் செல்லுகிறது.இங்கே அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெரு இருக்கிறது.இந்தத் தெருவின் நீட்சியாக புதுத்தெரு இருக்கிறது.இங்கிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணி ஆரம்பப்பள்ளியை ஒட்டி கிழக்கு நோக்கி இந்த புதுத்தெரு அமைந்திருக்கிறது. இந்த புதுத் தெருவின் கிழக்கு கடைசியில் அமைந்திருப்பதுதான் மூவர் ஜீவ சமாதி ஆகும்.    

                                                                                                                                      இந்த மூவர் ஜீவசமாதியின் நடுநாயகமாக இருந்து அருள்பாலிப்பவர் திரு.கருப்பஞானியார் அவர்கள்;(மிக தடிமனான சிவலிங்கம் இருக்கும் படம்)இவரது வலது பக்கம்(தெற்குப்புறம்) இருந்து அருள்பாலிப்பவர் திரு. யாழ்ப்பாணம் சுவாமிகள்( சிவலிங்கத்தின் மீது விபூதிபூசியிருக்கும் படம்); இடது பக்கத்தில் இருந்து அருள்பாலிப்பவர் திரு. ஆறுமுகச்சாமிகள்(சிறியதான சிவலிங்கம் இருக்கும் படம்)     

                                                                                                                  W.புதுப்பட்டி மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிவருபவர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.இவர் கருப்பஞானியர் சுவாமிகளின் சீடராக பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்தார்;    

                                                                                 விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் மாநகர் தெற்கு வைத்திய்நாதபுரம் தெருவில் கிழக்கு எல்லையில் இருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும்,இங்கிருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவருவரும் ஒருவரே!ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களிலும் காட்சியளித்த மகான் திரு.கருப்பஞானியார் சுவாமிகள்!!!!   

                                          இன்றும் கூட, தீராத நோய்களுக்கும்,உயிராபத்தான பிரச்னைகளுக்கும் உடனடியான அருளாசிகளை வழங்குபவர் திரு.கருப்பஞானியார் சுவாமிகளின் சீடர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.நாம் செய்ய வேண்டியது மனப்பூர்வமாக வேண்டுவதோடு,இவரது சன்னிதியில் தீபம் ஏற்றி,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுதான்.                  

                                                               ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று இவரது குருபூஜை விழா மிகச் சிறப்பாக கடந்த 63 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.                                                                                                                                                 திரு.ஆறுமுகச்சாமிகள் கடந்த 30 ஆண்டுகள் வரையிலும் தினமும் அன்னக்காவடி எடுத்து வந்து,இப்பகுதி மக்களின் பசிப்பிணியைப்  போக்கியவர் ஆவார்.இந்த மூன்று சிவ மகான்களின் வரலாற்றை வெளியிடுவதில் மகாவில்வம் பெருமை கொள்கிறது.     

                                                                                வாசகர்களே,வாசகிகளே நாம் செய்ய வேண்டியது: இந்தப் புகைப்படங்களை அச்சடித்து,பிரேம் போட்டு,நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து,நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.எனது பிறந்த நாளன்று தங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருளவும் என வேண்டலாமே! அதன் மூலமாக நாம் நிம்மதியை அடைய முடியும் இல்லையா?