Tuesday, February 21, 2017

தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மகாவராகி!


எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே நமது பாரத தேசம் அனைத்து துறைகளிலும்(இல்லற வாழ்க்கை,நீதி நிர்வாகம்,விவசாயம்,பொருளாதாரம்,உணவு உற்பத்தி மற்றும் உணவு மருத்துவம்,ஆன்மீகம்,போர்க்கலை,சூட்சுமக்கலைகள் மற்றும் நிதி நிர்வாகம்,அரசியல்) அன்னை மஹாவராகியை தினமும் உபாசனை செய்து வந்ததால்     தன்னிறைவை பெற்றிருந்தது;

1980 களில் ஆங்கில வழி பள்ளிகளுக்கு லைசென்ஸ் கொடுக்க ஆரம்பித்ததன் மூலமாக தமிழ்நாட்டில் தமிழே தெரியாத சமுதாயத்தை உருவாக்கும் நயவஞ்சகச் செயல்திட்டம் நடைமுறைக்கு வந்தது;இதன் பின்விளைவுதான் இன்று பலருக்கு(100 க்கு 95 பேர்கள்) சைவ சித்தாந்தப் பாடல்களான தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்றவைகளுக்கு அர்த்தமும்    புரியவில்லை;சரியான விதத்தில் உச்சரிக்கவும் தெரியவில்லை;

முத்தமிழை வித்தவர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் தமிழ்மொழியையும்,தமிழ்ப் பண்பாட்டையும் கடந்த 30 ஆண்டுகளாக     தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்கும் வேலையைத் தந்திரமாகச் செய்தார்;ஆமாம்! தமிழ் மொழியை தன்னால் மட்டும் தான் காக்க முடியும் என்ற மாயையை அரசியல் களத்தில் உருவாக்கி,அந்த பொய்ப் பிம்பம் உடையாமல் பாதுகாத்து தமிழ் வம்சாவழியினர் தமிழே அறியாத விதமாக உருவாக்கும் கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றார்.


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வித்திட்டம் தான் ஒரு குழந்தையை சரளமாக பேசவும்,அழகாக எழுதவும் பயிற்றுவிக்கின்றது;பத்தாம் வகுப்பு வரையிலும் ஒவ்வொரு குழந்தையும் தாய் மொழியில் கல்வி பயில வேண்டும்;


ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டத்தினால் தமிழ் மீடியத்தில் படிக்கும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை சரியானவிதத்தில் எழுத விடாமல் கெடுக்கும்;இதன் மூலமாக,தாய் மொழியில் பயின்றாலும்,உருப்படாமல் போவதற்குரிய வேலையை செயல்படுத்தியுள்ளது வேதனைக்குரிய விஷயம்;இந்தத் திட்டத்தை செயல்படுத்திய நிழல் யார் தெரியுமா? உலகத்தையே தமது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இலுமுனாட்டிகள் தான்!(அவர்களை எதிர்த்துப் போராடும் ஒரே இனம் தமிழ் இனம் என்று அறிந்தமையால் அவர்கள் இப்படிப்பட்ட தமிழ் இன அழிவு வேலைகளைச் செய்து வருகின்றார்கள்)

2016 ஆம் ஆண்டு மத்திய அரசுத்துறையானது ஐந்தாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற திட்டத்தை அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டமியற்றியுள்ளது இன்னும் வேதனைக்குரிய விஷயம்;

இதுமாதிரியான துரோகச் செயல்களை நமது நாட்டில் சர்வசாதாரணமாகச் செயல்படுத்துவது எதனால் தெரியுமா?


தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகியை வழிபடுவது குறைந்து போனதால் தான்! தமிழ்நாட்டின் காவல் தெய்வம் மஹாவராகி தான் என்பதே பலருக்குத் தெரியாத ஆன்மீக உண்மை!

தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் என்ற பூர்வீக ஜாதிகள் சுமார் 440 இருக்கின்றன;இவர்கள் பல நூற்றாண்டுகளாக சப்தகன்னியரை குலதெய்வமாகவும்,சதாசிவனை இஷ்ட தெய்வமாகவும் வழிபட்டு வந்துள்ளார்கள்.கடந்த 300 ஆண்டுகளில் இந்த கருத்து படிப்படியாகவும்,திட்டமிட்டும் பொதுமக்களிடம் இருந்து அதாவது இந்த 440 சமுதாய மக்களிடம் இருந்து அழிக்கப்பட்டு வேறு தெய்வ வழிபாடுகள் புகுத்தப்பட்டன;இதன் பின்விளைவாகத்தான் இன்று ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு சமுதாயத்திலும்,ஒவ்வொரு குலதெய்வ உறவுகளிலும் துரோகிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றார்கள்;கலியுகம் என்பதும் ஒரு காரணமாகும்;

ஞாயிற்றுக்கிழமையும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாட்களிலும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாட்களிலும்
செவ்வாய்க்கிழமையும் உத்திராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும் ஒருங்கிணையும் நாட்களிலும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும் வரும் நாட்களிலும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் வரும் நாட்களிலும் 

பிறப்பவர்கள் முற்பிறவிகளிலும் சில சொல்ல முடியாத தவறுகளை சந்தர்ப்பவசத்தால் செய்துவிடுகின்றார்கள்:இவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற ஒரே ஒரு வழி மட்டும் தான் உண்டு;அது,மறைமுகமாக அன்னை மஹாவராகியையும்,இஷ்ட தெய்வமாக அவரவர் ஊரில் இருக்கும் அல்லது பக்கத்து ஊரில் இருக்கும் சுயம்புலிங்க ஆலயத்திற்கு தமது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத் தொண்டு ஆற்றிடவேண்டும்;

ராஜராஜசோழன் என்ற அருண்மொழித்தேவன் என்ற சோழமன்னனும் அவரது முன்னோர்களும் வெளிப்படையாக மஹாகால பைரவப் பெருமானையும்,பரம ரகசியமாக அன்னை மஹாவராகியையும் தான் வழிபட்டு வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்;ராஜராஜசோழனின் அப்பா திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு தங்கத்தால் ஆன பசுவை தானமாக அளித்தார்;அதன் விளைவாக உலகத்தை ஆளும் யோகம் நிறைந்த மகனான ராஜராஜசோழனை மகனாக பெற்றார்;


இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,குமரிக்கண்டம் முழுவதும் ராஜராஜசோழன் ஆட்சி நடைபெற்றது;அவரது ஆட்சிக்காலம் வரையிலும் தமிழ் மொழி வட்டெழுத்து முறைதான் புழக்கத்தில் இருந்து வந்தது;அவர் தமிழ் மொழியில் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இன்றைய சீனா,ஜப்பான்,தாய்லாந்து நாடுகளுக்குப் பரவாமல் போனது;அதனால் அவர்கள் மொழியினால் வேறுபட்டுப் போனார்கள்;ஆனால்,பண்பாட்டில் அவர்கள் இன்று வரையிலும் தமிழ் பண்பாட்டைத்தான் பின்பற்றிவருகின்றார்கள்:தவிர,விவசாயத்திற்குரிய ஒரே தெய்வம் அன்னை மஹாவராகி என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத உண்மை;அன்னை மஹாவராகியை பல நூற்றாண்டுகளாக உபாசித்து வந்தமையால் தான் தமிழ்நாட்டில் அதுவும் சோழ நாட்டில் 16,000 நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன;($இதனால் தான் சோழ வளநாடு சோறுடைத்து என்ற பழமொழியே உருவானது)

எந்த ஒரு கடவுளையும் முறைப்படி வழிபாடு,பூஜை,யாகம் செய்தால் அந்த தெய்வீக சக்தி மந்திரங்களுக்கும்,அவிர்ப்பாகத்திற்கும்,படையலுக்கும் கட்டுப்பட்டு வரங்கள் தந்துதான் ஆக வேண்டும்;

ஆனால்,அன்னை மஹாவராகியை அப்படி பூஜை,பரிகாரம் மூலமாக ஏமாற்றிடமுடியாது;மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் அன்னை மஹாவராகி ஓடோடி வந்து வரங்களை அள்ளித்தருவாள் என்று வராகி கல்பம் தெரிவிக்கின்றது;

ஆக,ராஜராஜசோழன் ஆட்சி காலம் வரையிலும் ஒரு சமுதாயம் மொத்தமும் மனதால் பிறருக்கு தீங்கு தர எண்ணாமல் வாழ்ந்திருக்கின்றது;அந்த வம்சாவழியில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் மற்றும் அயல்நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;இவர்கள் நேர்மையாக வாழத் துடிக்கின்றார்கள்:இவர்களுக்காகவே அன்னை மஹாவராகி வழிபாடு பற்றி எழுதுகின்றோம்!!!

சிவபெருமான் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தமது சக்தியில் ஒரு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;சிவபெருமானின் முதல் அவதாரமாக ஒரு சிறு சக்தி சிவத்திடம் இருந்து வெளிப்பட்டது;அதுதான் மஹா கால பைரவம்!

ப்ரபஞ்சத்தின் நலன் கருதி அந்த மஹா கால பைரவம் 8 வித அவதாரங்கள் எடுத்தன;அந்த 8 மஹா கால பைரவமும் 64 ஆக விரிவடைந்தன;இந்த 64 வித பைரவ சக்திகளின் துணை சக்திகள் தான் மஹா வராகி சக்திகள்!


நமது பூலோகத்தில் தான் பல குடும்பங்களில் மனைவியரின் ஆட்சி என்று நம்புகின்றோம்;மேல் உலகங்களிலும் இதே நிலைதான்;சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற பழமொழி சாதாரண பழமொழி அல்ல;அதனுள் ஏராளமான தத்துவங்கள் புதைந்திருக்கின்றன;அது இழிவான பழமொழி என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கின்றோம்;அது மாபெரும் தவறு;


மனிதர்கள் எட்டுவிதமான செயல்களைச் செய்கின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவச் செயல்கள் அல்லது 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்ய முடியும்;அதற்காகவே 64 விதமான பைரவ அவதாரங்கள் தோன்றின;64 வித பைரவ அவதாரங்களுக்குத் துணையாக 64 விதமான வராக சக்திகளும் உருவாகின;
மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இல்லறவாசிகளாக இருப்பதால்,முதன்மையான அஷ்டவராகிகளை படிப்படியாக வழிபட்டு வந்தாலே போதுமானது;


1.ஆதி வராகி

ஸ்ரீவித்யா மகார்ணவம் என்ற நூலில் ஆதி வராகியைப் பற்றி முழு விளக்கங்கள் இருக்கின்றன;மாத்ருகா தேவதைகளும்,பைரவர்களும் இந்த ஆதி வராகிக்கு பணிவிடை செய்ய காத்துக் கிடக்கின்றார்கள்;மனிதர்களுடைய நோய்களைத் தீர்க்கும் சாஸ்திரங்கள்,அஸ்திரங்களை தாங்கி அருள்பாலித்து வருகின்றாள் ஆதி வராகி;
மனிதர்களின் வினைகளால் ஏற்பட்டுள்ள தன்மைகளை அறிந்துள்ளாள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;அந்த வினைகளை எதிர்ப்பதற்கான மார்க்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றாள்;

2.லகு வார்த்தாளி என்ற லகு வராகி

மஹாவராகியின் அபிமானக் கோட்டையான மரகதக் கோட்டையில் சொப்பன வராகி,திரங்கரிணி,பஞ்சமி ஆகியோருடன் இந்த உன்மத்த வராகி வசித்துவருகின்றாள் என்று லலிதோபாக்யானம் தெரிவிக்கின்றது;
மஹாவராகியின் அங்கதேவியான இவள்,எதிரிகளின் திமிரை அடக்குபவள்;எதிரிகளின் அறிவுத்திறனை நிர்மூலமாக்கி அவர்களை பைத்தியமாக்கிவிடுவாள்;சத்தியத்திற்காகவும்,நீதி நேர்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் என்ற கொள்கை உடையவர்கள் இந்த அன்னையை தினசரி தியானிக்க வேணும்;
மிகப் பெரிய கொம்புகளையும்,மிகப் பிரம்மாண்டமான உருவத்தையும் கொண்ட இந்த அன்னை மஹாவராகியின் பிரதான செயலாளராகச் செயல்பட்டுவருகின்றாள்;நமது கோரிக்கைகளை உடனடியாக முடித்துக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவள் இந்த அன்னை!!!

3.பஞ்சமி வராகி

நாம் தெய்வீக நிலைகளை கொஞ்சம் அறிந்தால் மட்டும் தான் பஞ்சமி வராகியின் அவதாரத்தை புரிந்து கொள்ள முடியும்;

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் சூட்சுமமாக இயக்குவது நவக்கிரகங்கள்;இவர்கள் நமது முற்பிறவிகள் ஐந்தில் செய்தவைகளை அனுபவிக்கும் விதமான கிரக அமைப்பில் பிறக்க வைக்கின்றார்கள்;இவர்களை பல்வேறு சதவீத கலவையால் ஆட்டுவிப்பது பஞ்சபூதங்கள்;பஞ்சபூதங்களுடன் ஆட்டுவிப்பது அஷ்டதிக்பாலகர்கள்;பஞ்சபூதங்களை மும்மூர்த்திகளும்,மும்மூர்த்திகளை பதினோரு ஏகாதசருத்ரர்களும்,இவர்களை ஐந்துவிதமான சிவன்களும்,ஐந்துவிதமான சிவன்களை லலிதாபரமேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியும் இயக்கிவருகின்றார்கள்;

லலிதாபரமேஸ்வரியைத் தாங்குவது ஐந்துவிதமான சிவபெருமான்கள்;இந்த ஐந்துவிதமான சிவபெருமான்களில் ஒருவர் தான் சதாசிவன்;இவரது துணை சக்தியாக இருப்பவளே பஞ்சமீ வராகி!

சதாசிவனுடன் இணைந்து படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐந்துவிதமான தொழில்களையும் புரிகின்றாள்;

மோட்சங்கள்  ஐந்து வகைப்படும்;அவைகள்:-சாமிப்யம்,சாருப்யம்,சாயுஜ்யம்,கைவல்யம்
இந்த ஐந்து விதமான மோட்ச நிலைகளில் கைவல்ய நிலையை அருள்பவள் பஞ்சமி வராகி!

லலிதா சகஸ்ரநாமம் இவளை பஞ்சபூதேசி என்று அழைக்கின்றது;

4.அஸ்வாரூடா வராகி என்ற குதிரைக்காரி

லலிதாபரமேஸ்வரியின் குதிரைப்படைகளின் தலைவி இந்த அஸ்வாரூடா வராகி;
பக்தர்களின் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றல் படைத்தவள் இவள்;இவளை தொடர்ந்து வழிபட்டால் அரசாங்கமே உங்கள் காலடியில் கிடக்கும்;
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் நியாயமான வழியில் வெற்றியைப் பெறச் செய்யும் அன்னை இந்த குதிரைக்காரி;ஒற்றுமையான குடும்ப வாழ்க்கையை உருவாக்குபவளும் இவளே!

5.தண்டநாத வராகி

தவறு செய்பவர்களுக்குத் தண்டனையையும்,அன்புள்ளம் கொண்டு பிறரது தீங்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அபயத்தையும் அளிப்பவள் தண்டநாத வராகி!

6.தூம்ர வராகி

காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாச்சரியம் போன்ற துர்க்குணங்களுக்கு இவள் பகையானவள்;
இந்த அன்னையைச் சரணடைந்தால் மட்டும் தான் நமது ஆழ்மனதில் பல பிறவிகளாக புதைந்து கிடக்கும் துர்க்குணங்கள் அழியும்;
அழுக்கான ஆடைகள் மற்றும் சரியாக வாரப்படாத கூந்தலுடன் காட்சியளிப்பவள் இந்த தூமாவதி;
பிரளயத்திற்கும் படைப்புக்கும் இடையே பாழாக இருக்கும் வெற்றிடைத்தில் இருப்பவள் தான் இந்த அன்னை;


7.ப்ருஹத் வராகி

இவளது மறுபெயர் வார்த்தாளி;வடமொழியான சம்ஸ்க்ருதத்தில் வார்த்தா என்றால் ஆரோக்கியம்,நல்வாழ்வு என்று பொருள்;செழிப்பை உண்டுபண்ணி பூமியைக் காப்பாற்றும் விவசாயத்தின் சக்தியாக இருப்பவள் தான் இந்த ப்ருஹத் வராகி;
சொல்லின் வன்மை உடையவர்களாக இருந்தால் உங்களுக்கு உறுதுணையாக நின்று அருள்பாலிப்பவள்;
இவள் தான் சோழர்களை உலகாளும் அரசுக்கு உரிமையானவர்களாக மாற்றியதோடு,உணவுப் பஞ்சமே இல்லாத அன்னம் நிறைவு தேசமாக மாற்றியதும் இந்த அன்னையே!

8.சொப்பன வராகி

மந்திரமஹோததி என்ற நூல் 64 விதமான வராகி வழிபாட்டு முறைகளையும் தெரிவிக்கின்றது;
குருவின் மூலமாக முறையாகக் கற்று இத்தேவியின் மந்திரத்தை ஜபித்து வந்தால் அவர்களின் கனவில் தோன்றி நல்ல பலன்களை வாரி வழங்குபவள்;

எல்லா மனிதர்களும் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கலாம்;ஒரே நிபந்தனை;அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;முடியாத பட்சத்தில் முதல் மூன்று ஆண்டுகள் வரையாவது கைவிடவேண்டும்;


பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்து வந்தாலே ஒரு ஆண்டுக்குப் பின்னர் 64 வராகி அவதாரங்களில் தாங்கள் எந்த அவதாரத்தைச் சேர்ந்த வம்சாவழியினர் என்பதை அறிந்து கொள்வீர்கள்!!!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ

தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா

ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை தினமும் 15 நிமிடம் வரையிலும்
இரண்டாவது வாரம் முழுவதும் 20 நிமிடம் வரையிலும்
மூன்றாவது வாரம் முழுவதும் 25 நிமிடம் வரையிலும்
நான்காவது வாரம் முழுவதும் 30 நிமிடம் வரையிலும்
ஐந்தாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடம் வரை ஜபித்துவிட்டு,வராகி மாலையை ஒரு முறை ஜபிக்க வேண்டும்;
ஆறாவது வாரத்தில் இருந்து இந்த 12 பெயர்களை 30 நிமிடமும்,ஒருமுறை வராகி மாலையும்,வராகி 64 போற்றிகள் ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

ஆறாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை இப்படிச் செய்ய வேண்டும்;

ஒரு பச்சைத் துண்டு மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்,இன்னொரு மண் விளக்கில் சுத்தமான பசு நெய் தீபத்தையும் ஏற்றி வைத்து ஜபிக்க வேண்டும்; தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது இரவுப் பொழுதில் அல்லது இரண்டு நேரங்களிலும் இவ்வாறு அமைத்து ஜபிக்கலாம்;

வராகி சித்தர் என்று போற்றப்படும் ஸ்ரீவாத்தியார் ஐயாவின் அருளாசிகளோடு அன்னை மஹாவராகியைச் சரணடைவோம்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்

Saturday, February 18, 2017

ராகு காலத்திற்குள் வராத தேய்பிறை அஷ்டமி!

இன்று 18.2.2017 சனிக்கிழமை உச்சிப் பொழுது 12.11 முதல் நாளை 19.2.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.20 வரை மாசி மாத தேய்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;
சனிக்கிழமை இராகு காலம் காலை 9 முதல் 10.30 வரை
ஞாயிற்றுக்கிழமை இராகு காலை மாலை 4.30 முதல் 6 வரை
வருடத்தில் ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமி இப்படி ராகு காலத்திற்கு வராமல் அமைவது வழக்கம்;
இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:சதுர்முகி வருடம்,பங்குனி மாதம் 20.3.2017 திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 21.3.2017 செவ்வாய்க்கிழமை காலை 8.39 வரை அமைந்திருக்கின்றது;

Thursday, February 2, 2017

ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய அண்ணாமலையார் அஷ்டகம்!


ஈரேழு பதினாலு உலகங்களிலும் காணப்படும் ஒரே மலை அண்ணாமலை என்ற அருணகிரி என்ற அருணாச்சலம்!

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

அண்ணாமலையை தினமும் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்;அப்படி நினைத்துக்கொண்டே இருந்தால்,நமது வாழ்க்கையின் இறுதி நாளில்,இறுதி நேரத்திலும் அண்ணாமலை நினைவுக்கு வரும் என்று அர்த்தம்;அப்படி நினைத்துவிட்டால்,இப்பூமியில் பிறக்காமல் இருக்கும் முக்தி கிடைத்துவிடும் என்று அர்த்தம்;

சரி,எப்படி அண்ணாமலையை நினைத்துக்கொண்டே இருப்பது?
ஒரு வருடத்திற்குள் 12 தடவை(தேய்பிறை சிவராத்திரி என்றால் மிகவும் நன்று) அண்ணாமலை கிரிவலம் சென்றால் நமது நினைவில் நிற்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்;

பிரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை என்ற அருணாச்சலத்தைக் கிரிவலம் வந்தது,பிரபஞ்ச அன்னை பார்வதி தேவியே! அன்னைக்குத் துணையாக நமது தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமான நமது தமிழ் இனத் தந்தை அகத்தியர்,நமது அன்னை பார்வதி தேவி உடன் கிரிவலம் வந்தார்;இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் சுவாமிகள்;இவர் மூலமாக ஸ்ரீலஸ்ரீ வேங்கடரமண சுவாமிகளுக்கு உபதேசமாகக் கிட்டிட,வாத்தியார் சுவாமிகள் என்ற ஸ்ரீலஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் மூலமாக நமக்கு கிடைத்திருக்கின்றது;


6.2.2017 திங்கட்கிழமையும்,ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் மலையே ஈசனாக அருள்பாலித்து வரும் அண்ணாமலையார் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது;இதில் பூர்வபுண்ணியம் உள்ளவர்களும்,அருணாச்சலேஸ்வரின் அருளுக்குப் பாத்திரமானவர்களுமே கலந்து கொள்ள முடியும்;


கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் அந்த நாளில் காலை 9 மணிக்குள் ஒருமுறையாவது இந்த அண்ணாமலையார் அஷ்டகத்தை ஜபித்தால் போதுமானது;வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் ஜபிக்க வேண்டும்;இதை ஒரு முறை ஜபித்தால்,அண்ணாமலை கிரிவலம் ஒருமுறை சென்று வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்த பாக்கியம் கிட்டும்;


ஓம் துர்கை சித்தர் போற்றி!  போற்றி!!  போற்றி!!!

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷிய மாம்ருதாத்

பொங்கிவரு கங்கையான பொன்னி யானவன்
பொன்னுடனே பொருளளித்த பொதிகை யானவன்
தங்கி நிற்க யிங்கு வந்த தந்தை யானவன்
தவமளித்த இன்பமான தருண னானவன்
சங்கெடுத்து இசையளித்த சதுர னானவன்
சத்தியத்தின் சபையளித்த சடைய னானவன்
நங்கை யுமை அன்னைமகிழ் நம்ப னானவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே          (1)

அழலெடுத்து ஆடுகின்ற அண்ணாமலையானே
அங்குமிங்கு மெங்குமாக அருகில் நின்றவா
நிழலெடுத்து நிறைவுகாட்டி நித்தம் காத்தவா
நின்றுநின்று நினைப்பளித்து நிதியும் தந்தவா
விழலிடத்து முகிலுமாகி விளைவு மானவா
விந்தையான தமிழினோடு விளக்கு மானவா
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (2)

வளங்களோடு வையவாழ்வு வகுத்துத் தந்தவன்
வறுமை தீர பொறுமையோடு வழிகள் தந்தவன்
விளங்கனியில் சுவை மடுத்த விளைவும் தந்தவன்
விண்ணுமண்ணும் ஒன்றுமான வேதம் தந்தவன்
அளங்களெங்கும் நெற்குவித்து அளந்து தந்தவன்
அன்பர்வாழ மண் நடந்து அருளும் தந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (3)

காட்சி தந்து காத்து நிற்கக் கயிலை விட்டவன்
காலமெல்லாம் காவலாகக்  காக்க வந்தவன்
மாட்சிபொங்கக் கொன்றையான மாலை யிட்டவன்
மாதவத்தர் உள்ளம்பாட மயங்கி வந்தவன்
ஆச்சியான காளியோடு ஆட்ட மிட்டவன்
ஆறுமுகன் யானையோடு ஆக்க வந்தவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (4)

செண்டு கொண்ட சாத்தனையும் செகத்திற்க் கீந்தவன்
சென்மபாபம் யாவுந்தீரச் செபமும் சொன்னவன்
கண்டுகொள்ள வந்தபேர்க்குக் கண்கள் ஈந்தவன்
கவலைதீரக் கடுமை போகக்கவிதை சொன்னவன்
தண்டெடுத்துத் தொல்லையோட்டி தண்மை ஈந்தவன்
தயவுசெய்து தலங்கள் தோறும் தங்கி நின்றவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (5)

மறைகளான தமிழில் பாட மகிழ்வு கொண்டவன்
மங்கலத்து வாழ்வு ஆன மன்னர் மன்னவன்
நிறைவு கொண்டு கோயில்தங்க நெஞ்சம் கொண்டவன்
நியமமான நந்திமகிழ நிருத்தம் செய்தவன்
இறைவனென்ற பெயருக்கேற்ற இனிமை கொண்டவன்
இன்றுபோல என்றுமென்றும் இளமை யானவன்
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (6)

அரவெடுத்துக் கங்கணமாய் அணிந்து பார்த்தவன்
அய்யனாகி அண்ணாமலை அமர்ந்து பார்த்தவன்
துறவுபோன்ற வறுமை நோயைத் துடைத்துப் பார்த்தவன்
துதிக்கை கொண்ட தும்பி தோலைத் துணித்துப் பார்த்தவன்
உறவு கொண்டு நஞ்சையுண்டு உலகைப் பார்த்தவன்
உமையாள் பாட மதியைச் சூடி நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!         (7)

பூதநாதன் வேத நாதன் பூமிநாதனே
பூழிசூடி புன்மைதீர்த்த பூவை பாகனே
தாதனாகித் தாபம்போக்கு தாயு நாதனே
தாரகத்தின் பொருள்மடுத்த தாணு நாதனே
நாதநாத நாதநாத நாத நாதனே
நாதமோடு நாடுபாடு நாக நாதனே
நங்கையுமை அன்னைமகிழ் நம்பன் ஆனவன்
எங்களண்ணா மலையமர்ந்த தேவ தேவனே!        (8)

ஓம் அருணாச்சலாய நமஹ

(ஒருமுறை அண்ணாமலை என்று கூறினாலோ அல்லது அருணாச்சலம் என்று சொன்னாலோ 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம்=அருணாச்சல புராணம்)

பணத்தை அள்ளித் தரும் பதிகம்!


சுந்தரர் “திருஓணகாந்தன் தளி” திருத்தலத்தில் இறைவனை நோக்கிப் பாடிய பாடல் இது! இப்பதிகத்தில் உள்ள பத்துப் பாடல்களையும் பாடிட,பொன்னும் பொருளும் கிட்டிடும்;
இப்பதிகத்தை முழு நம்பிக்கையுடன் தினமும் வாசித்துவர,உங்களது வறுமை நீங்கி, பொன்னும் பொருளும் கிட்டி,உங்களுக்கு நல்ல வாழ்வு அமைந்திடும்;

பதிகம் ஜபிக்க ஆரம்பித்த சில நாட்களுக்கு மட்டும் தான் ஜபம் சிரமமாக இருக்கும்;சில வாரங்களில் மனப்பாடம் ஆகிவிடும்;அப்புறம் எப்போது வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;

இப்பதிகத்தை ஒருமுறை எழுதி வைத்து,அதை தினமும் ஜபிக்க வேண்டும்;வீட்டிலும் ஜபிக்கலாம்;சிவாலயத்திலும் ஜபிக்கலாம்;


திருச்சிற்றம்பலம்

நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசனை செய்யல் உற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை
கழலடி தொழுதுய்யின் அல்லால்
ஐவர்கொண் டிங்காட்ட ஆடி
ஆழ் குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யும் ஆறு ஒன்றருளிச் செய்யீர்
ஓணகாந்தன் தளி உளீரே

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கோற்றட்டியாளார்
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்
ஓணகாந்தன் தளி உளீரே

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணியும் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்றிலர் என்றிரங்கி
மதி உடையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆபற் காலத்தடிகேள் உம்மை
ஒற்றிவைத் திங்குண்ணலாமோ
ஓணகாந்தன் தளி உளீரே

வல்லது எல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தினாலும் வாய் திறந்தொன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்பதென்னீர்
பல்லை உக்க படுதலையில்
பகல் எலாம் போய்ப் பலி திரிந்திங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓணகாந்தன் தளி உளீரே

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறை படாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்புடையவர்க்கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஒடிப் போகீர் பற்றும் தாரீர்
ஓணகாந்தன் தளி உளீரே

வார் இருங்குழல் வாள் நெடுங்கண்
மலைமகள் மது விம்மு கொன்றைத்
தார் இரும் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊர் இடும் பிச்சை கொள்வதென்னே
ஓணகாந்தன் தளி உளீரே

பொய்ம்மையாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள் ஒன்றிடவுங்கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை யன்றே எம்பெருமான்
ஓணகாந்தன் தளி உளீரே

வலையம் வைத்த கூற்றம் மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலை அமைத்த சிந்தையாலே
திருவடி தொழுதுய்யின் அல்லால்
கலை அமைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவரூடை
உலை அமைத்திங்கொன்ற மாட்டேன்
ஓணகாந்தன் தளி உளீரே


வாரம் ஆகித் திருவடிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவதென்னே
ஆரம் பாம்பு வாழ்வதாரூர்
ஒற்றியூரேல் உம்மதன்று
தாரமாகக் கங்கையாளைச்
சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடும் உடையும் தோலே
ஓணகாந்தன் தளி உளீரே

ஓவணமேல் எருதொன்றேறும்
ஓணகாந்தன் தளியுளார்தாம்
ஆவணம் செய்தாளுங் கொண்ட
வரை துகிலொடு பட்டு வீக்கிக்
கோவண மேற்கொண்ட வேடம்
கோவையாக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்
பறையும் தாம் செய்த பாவம் தானே!


திருச்சிற்றம்பலம்

ஸ்ரீலஸ்ரீதுர்கைச்சித்தர் அருளியிருக்கும்ரோக நிவாரண அஷ்டகம்!


தாம்பரம் அருகில் அமைந்திருக்கும் கிராமம் படப்பை;இங்கே அருள்மிகு ஜெயதுர்கா பீடத்தை அமைத்து பக்தியைப் பரப்பிக் கொண்டிருந்தவர்தான் அருள் நிறைச் செல்வர் ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர்;இவருக்கு உபாசனா குலபதி என்ற பட்டம் உண்டு;இவரது எழுத்துக்களில் இவரது ஆன்மீக அனுபவங்கள் அப்படியே நிரம்பியிருக்கின்றன;நேரில் இருந்து நமக்கு வழிகாட்டுவது போலவே இருக்கின்றன;

அவரது நூல்கள் மூலமாக நமக்கு மானசீக குருவாக இருந்து நம்மை வழிநடத்தி வருபவர்;அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்;

ரோகம் என்றால் நோய் என்ற அர்த்தம் மட்டும் அல்ல;கடன் என்ற அர்த்தமும்,தேவையற்ற வாழ்க்கைச் சிக்கலையும் ரோகம் என்றே அழைத்தார்கள் நமது முன்னோர்கள்!

கடன்/நோய்/எதிரிகள்/துயரங்கள்/கடுமையான சோகங்கள்/தீராத சோகங்களால் தற்கொலை செய்து செத்துவிடலாமா? என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு அதில் இருந்து மீள இந்த ரோக நிவாரண அஷ்டக ஜபம் கைகொடுக்கின்றது;

உங்கள் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயம் அல்லது அம்மன் ஆலயத்தினுள் தினமும் காலை 10 மணிக்குள் ஒருமுறையும்,இரவு 10 மணிக்குள் ஒருமுறையும் இந்த பாடலை ஜபித்து வரவேண்டும்;

பகவதி தேவி பர்வத தேவி
   பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
   சங்கரி யுன்னைப் பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
   தளிர்ந்திடுஜோதி யான வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா! (1)

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
   கட்கினி தேவி துர்க் கையளே
தந்தன தான தனதன தான
   தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
   முனிவர்கள் தேவி மணித் தீவி
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(2)

காளினி நீயே காமினி நீயே
   கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி
   நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
   மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா(3)

நாரணி மாயே நான்முகன் தாயே
   நாகினி யாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுறை தாயே
   ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
   கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாபநிவாரணி ஜெய துர்க்கா!(4)

திருமகளானாய் கலைமகளானாய்
   மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
   பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய்
   நந்தினி யானாய் நங்கை யளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(5)

வேதமும் நீயே வேதியள் நீயே
   வேகமும் நீயே துர்க் கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
   நாணமும் நீயே நாய கியே
மாதமும் நீயே மாதவம் நீயே
   மானமும் நீயே மாய வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாபநிவாரணி ஜெய துர்க்கா!(6)

கோவுறை ஜோதி கோமள ஜோதி
   கோமதி ஜோதி துர்க் கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
   நாட்டிய ஜோதி நாச்சி யளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
   பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
   தாப நிவாரணி ஜெய துர்க்கா!(7)

ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
  சாரிணி சந்த்ர கண்டி னியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
  மாதினி காத்யா யன்ய யளே
ஜெய ஜெய கால ராத்திரி கெளரி
  ஸித்திதா ஸ்ரீநவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
  தாப நிவாரணி ஜெய துர்க்கா!(8)

அவரவர் பூர்வபுண்ணிய வினைக்கு ஏற்ப ஒராண்டு முதல் மூன்றாண்டு வரைப் பாடி வர கடன் தீரும்;நோய் விலகும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!