Saturday, January 30, 2010

கலிகாலத்தின் பரிணாம வளர்ச்சி:நன்றி தமிழ் வெப்துனியா 30.1.2010

சீனா: குழந்தை பெற்ற 9 வயது சிறுமி
பீஜிங் , சனி, 30 ஜனவரி 2010( 18:00 IST )


சீனாவில் 9 வயது சிறுமி ஒருத்தி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளாள்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சாங்சுன் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில், சிசேரியன் மூலம் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

சீன சட்டப்படி 14 வயதுக்கு குறைவான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக சட்ட உதவியை நாடியுள்ளதாக சாங்சுனிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்தோ அல்லது அந்த் சிறுமி யார் என்பது குறித்தோ விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ஷாங்காய் மருத்துவமனை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கருக்கலைப்பு செய்து இளம்பெண்களில் 30 % பள்ளி மாணவிகள் என்றும், இவர்களில் பாதிபேர் தொழிற் பயிற்சி பள்ளிகளிலும், மீதமுள்ளோர் கல்லூரிகளிலும் பயில்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை முடிந்தவுடனேயே இவ்வாறு கர்ப்பம் தரிக்கும் இளம்பெண்கள் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருவதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் கர்ப்பம் உண்டாகி இடைநிலையிலோ அல்லது குழந்தை பிறக்கும் தருவாயிலோ வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அல்லது சீனாவில் இதுவரை 9 வயது சிறுமி குழந்தை பெற்றதாக தகவல் இல்லை.11 வயது சிறுமி குழந்தை பெற்றதாகத்தான் தகவல் உள்ளது.
நன்றி:தமிழ் வெப்துனியா 30.1.2010 நான் கேள்விப்பட்ட இந்துபுராணத்தகவல் என்னவெனில்,கலியுகத்தின் முடிவில் 10 வயதில் பேரன் பேத்தி பெற்றுக்கொள்ளுமளவிற்கு ஒழுங்கீனம் தலைவிரித்தாடும்.இந்த நிலையை நோக்கி பூமியுலக மக்களாகிய நாம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த தகவல் ஒரு ஆதாரம் .இது மட்டுமா? கலிகாலத்தில் காமசுகத்துக்காக மட்டுமே திருமணம் நடக்கும்.அளவற்ற காமம்,எக்கச்சக்கமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இந்த மூன்றையும் அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான்.அப்படி எவன் அல்லது எவளாவது விரும்பாமல் இருந்தாலும்,மற்றவர்கள் மேற்கூறிய மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஆடும் அகங்காரமான ஆட்டத்தால் அளவின்றி பாதிக்கப்படுவர்.அதன் முடிவாக,அவர்களும் அளவற்ற காமம்,ஏராளமான பணம்,வரைமுறையற்ற அதிகாரம் இவற்றில் ஏதாவது ஒன்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்நாள் செலவழியும். இப்போதே இதுதான் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகத்தில் நடக்கிறது என்கிறீர்களா?

சில பயனுள்ள ஆன்மீகத்தகவல்கள்





* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.



* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)



* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.



* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.



* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.



* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.



* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.



* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.



சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.



* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.



* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.



* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.



* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.



* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.



* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.



* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.



* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.



* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொட்டால் மூதேவியே பீடிப்பாள்.



* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

நன்றி:www.vetham4u.blogspot.com

துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழ்க வளமுடன்!!!



அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்


சாதாரண கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.


காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:
அருணாச்சல புராணம்.

சரி அதையும் செய்து பார்த்து நிம்மதியாக வாழ்வோம் என பஞ்சாங்கத்தைப் பார்த்தால், ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை துவாதசி திதி வருகிறது.வளர்
பிறை துவாதசி மற்றும் தேய்பிறை துவாதசி என இருமுறை வருகிறது.


ஜோதிடம் பற்றி அடிப்படை அறிந்தவர்களால் மட்டுமே இதைக் கண்டறிய
முடியும்.அந்த சிரமம் நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு இருக்க வேண்டாமே
என விக்ருதி தமிழ் வருடத்தில் (14.4.2010 முதல் 13.4.2011 வரை) வரும்
துவாதசி திதி நாட்களை இங்கு அட்டவணையிட்டுள்ளோம்.


கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது வறுமை அல்லது முன்வினை
இவற்றில் ஏதாவது ஒன்றால் நாம் அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை!

இந்த வலைப்பூவை வாசிக்கும் அனைவரும் பின்வரும் நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஒரே ஒரு முறை
திரு அண்ணாமலைக்கு வந்து அன்னதானம் செய்து உங்களின் கஷ்டங்கள்,
முன்வினைகளை நீக்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும் வாழ்க வளமுடன்!!!

25.4.2010 ஞாயிறு இரவு 11.39 முதல் 26.4.2010 திங்கள் இரவு 9.40 வரை

10.5.2010 திங்கள் காலை 6.00 முதல் 11.5.2010 செவ்வாய்காலை 6.43 வரை

25.5.2010 செவ்வாய்காலை8.25 முதல் 26.5.2010 புதன் காலை 6.59 வரை

9.6.2010 புதன் இரவு மணி7.44 முதல் 10.6.2010 வியாழன் இரவு 7.29 வரை

23.6.2010புதன் மாலைமணி5.53 முதல் 24.6.2010 வியாழன் மாலை 5.19 வரை

9.7.2010 வெள்ளிகாலைமணி6.29முதல் 10.7.2010 சனி விடிகாலை 4.52 வரை

22.7.2010 வியாழன் காலை 4.56 முதல்23.7.2010 வெள்ளி காலை 5.10 வரை

7.8.2010 சனி மதியம் 3.26 முதல் 8.8.2010 ஞாயிறு மதியம் 1.35 வரை

21.8.2010 சனி மாலை 5.49 முதல் 22.8.2010 ஞாயிறு இரவுமணி7.08 வரை

5.9.2010 ஞாயிறு இரவு 11.42முதல் 6.9.2010 திங்கள் இரவு 9.26 வரை

20.9.2010 திங்கள் காலை 9.11முதல் 21.9.2010 செவ்வாய் காலை 11.08 வரை

5.10.2010 செவ்வாய் காலை8.04 முதல் 6.10.2010 புதன் விடிகாலை 3.36 வரை

19.10.2010 செவ்வாய் நள்ளிரவு2.34 முதல் 21.10.2010 வியாழன் விடிகாலை 4.32 வரை

3.11.2010 புதன் மாலை மணி 5.09 முதல் 4.11.2010 வியாழன் மதியம் 2.57 வரை

18.11.2010 வியாழன் இரவு 8.48 முதல் 19.11.2010 வெள்ளி இரவு 10.12 வரை

3.12.2010 வெள்ளி விடிகாலை 3.33 முதல் 4.12.2010 சனி விடிகாலை 1.32 வரை

18.12.2010 சனி மதியம் 2.18 முதல் 19.12.2010 ஞாயிறு மதியம் 2.49 வரை

17.1.2011 திங்கள் காலை 6.09 முதல் 18.1.2011 செவ்வாய் காலை5.24 வரை

31.1.2011 திங்கள் விடிகாலை 5.38 முதல் 1.2.2011 செவ்வாய் காலை6.00 வரை

15.2.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 16.2.2011 புதன் மாலை 6.06 வரை

1.3.2011 செவ்வாய் இரவு 9.40 முதல் 2.3.2011 புதன் இரவு 10.48வரை

17.3.2011 வியாழன் காலை 6.52 முதல் 18.3.2011 வெள்ளி விடிகாலை3.52வரை

31.3.2011 வியாழன் மதியம் 2.38 முதல் 1.4.2011 வெள்ளி மாலை 4.29 வரை
பின்குறிப்பு:இந்த வலைப்பூவை வாசிக்கும் யாராக இருந்தாலும்,எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திரு அண்ணாமலையில் இந்த நாட்களில் வரும் நேரத்தில் ஒரு முறை அன்னதானம் செய்தாலும் போதும்.நமக்கு மறுபிறவி
கிடையாது.
அன்னதானத்தைப் பொறுத்தவரையில் திரு அண்ணாமலைக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளுக்கு முதல் நாளில் வந்து,சமைத்து அவற்றை பொட்டலங்களாக கட்டிவிடுவது நன்று.அப்படி கட்டப்பட்ட உணவுப்பொட்டலங்களை கிரிவலப்பாதையில் வசிக்கும் துறவிகளுக்கு வழங்கலாம்.

பெரிய அளவில் செய்ய முடியாதவர்கள்,சுமார் ரூ.1000/- கொண்டு வந்து இங்கு கோவிலைச் சுற்றியுள்ள உணவகங்களில் ரூ.1000க்கும் உணவுப்பொட்டலங்கள்
விலைக்கு வாங்கியும் அன்னதானம் செய்யலாம்.உணவுப்பொட்டலங்களின் விலைகள்
ரூ.10/-லிருந்து துவங்குகின்றன.
நான் கேள்விப்பட்ட வரையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நித்திய அன்னதான மடங்களை கிரிவலப்பாதையில் நிறுவியுள்ளனர்.
தவிர,பல இனத்தைச் சேர்ந்தவர்களும் அன்னதான சாலைகளை நிறுவியுள்ளனர்.

நம்மிடம்,உணவுப்பொட்டலத்தைப் பெறும் துறவிகளில் சில போலிகளும் இருப்பது நிஜம்.அவர்கள் நம்மிடம் வாங்கிய உணவுப்பொட்டலத்தை விற்கும் பழக்கமும்
இருக்கிறது.அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது.

Friday, January 29, 2010

திருமணம் என்ற அமைப்பைச் சிதைக்கும் திருமணத்தரகர்கள்



திருமணம் என்ற அமைப்பைச் சிதைக்கும் திருமணத்தரகர்கள்



உங்களது மகள் அல்லது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறீர்களா?

திருமணத் தரகரின் நம்பகத்தன்மையை தீர விசாரித்தப் பிறகு, அவர் மூலமாக

திருமண வரனைத் தேடுங்கள்.ஏனெனில்,தற்காலத்தைய திருமணத்தரகர்களில்

பெரும்பாலானவர்கள் 'பணத்திற்காக என்ன வேண்டுமானாலும்' செய்யும்

நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.இந்த நிலை கி.பி.1990 களின் மத்தியில்

இருந்து மிகப்பரவலாகிவிட்டது.



சில உதாரணங்களை நான் நேரில் வைக்கிறேன்.இந்த உதாரணங்கள்

நம் தமிழ்நாட்டில் நிகழ்ந்தவை.இதே போன்ற சம்பவங்கள் உங்களது ஊரிலும்

நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பது நிஜம்.



ராஜன் என்பவரின் வயது 22.ஒரு ஆலையில் பணிபுரிந்துவருகிறார்.இவருக்கு

இரண்டு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.இவரது பெற்றோரும்

இவரும் அவ்வளவாக விபரம் தெரியாதவர்கள்.ராஜன் ஒரு பட்டதாரி;

இருந்தபோதிலும்,இவரது சுபாவம் யாரைப்போல என்றால்,சின்னத்தம்பி படத்தில்

வரும் பிரபுவின் கேரக்டரைவிட கொஞ்சம் புத்திசாலி.அவ்வளவே!





இவருக்கு ஒரு பெண்ணை திருமணத்தரகர் மூலமாக பார்த்தனர்.இந்தப் பெண்ணின்

குடும்பம் ராஜன் வாழும் ஊரின் பக்கத்து ஊரில் வசிக்கிறது.

இந்தப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்து வரும் சம்பவங்களை இங்கே

அச்சில் எழுத முடியாதவை.ஆனாலும்,இந்தப் பெண்ணின் பெற்றோர் திருமணத்

தரகரிடம் பேரம் பேசியுள்ளனர்.

'அய்யா தரகரே! எனது மகளுக்கு நீங்கள் திருமணம் செய்துவைத்துவிட்டால்,

உங்களுக்கு ரூ.5,000/- தரகாக (திருமண கமிஷனாக) வாங்கிக் கொள்ளுங்கள்.

அவளைப் பற்றி நாங்கள் கேள்விப்படும் விஷயங்களை எங்களால்

மறுக்கவோ,மறைக்கவோ முடியவில்லை'



ராஜனையும்,அந்தப்பெண்ணையும் பெண்பார்க்க வைத்தார் ஒரு திருமணத்தரகர்.

அப்படி பெண்பார்க்கும் சில நிமிடங்களுக்கு முன்பு,எல்லோருக்கும் காபி

வாங்கிக் கொடுத்தார்.ராஜனுக்குக் கொடுக்கப்பட்ட காபியில் ஒரு 'மந்திரீகம்

செய்யப்பட்ட பொடியை' கலந்து கொடுத்தார்.ராஜன் வசியமானான்.

கோவில் ஒன்றில் பெண்பார்க்கும் படலம் நடந்தது.கோவிலில் எல்லோர்

முன்னிலையிலும்,'இவளைத்தான் நான் திருமணம் செய்வேன்'என அடம்

பிடித்தான்.

மூன்று நாட்களுக்குள் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்தது.நான்காம்

நாள் காலையில் ராஜன் தனது பெற்றோரிடம் எனக்கு எப்போது

நிச்சயதார்த்தம் நடந்தது? எனக்கேட்டான்.ராஜனின் பெற்றோர்கள் அதிர்ந்தனர்.

இருந்தாலும்,ஊராரின் ஏச்சுக்கு ஆளாகாமலிருக்க இந்த திருமணத்திற்கு

சம்மதித்தனர்.

திருமணம் நடந்தது.திருமணமான அன்றிரவு,முதலிரவன்று மணப்பெண்

சொன்ன வார்த்தைகளால் ராஜன் அதிர்ச்சியடைந்தான்.

"இன்று உனக்கு முதலிரவு.அதனால்தான் நான் 'இதுக்கு'சம்மதிக்கிறேன்"என்றாள்.

மறுநாள் முதல்,மணப்பெண் தன் கணவனான ராஜனை தனது பெற்றோரின்

ஊருக்கு குடியேற வைக்க 7 நாட்கள் வரை பிரம்மப்பிரயத்தனம் செய்தாள்.

கதை நடக்க வில்லை.

8 ஆம் நாள்,ராஜனின் வீட்டின் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒரு ரூபாய்

காயின் பாக்ஸிலிருந்து மணப்பெண் தனது வீட்டிற்கு போன் செய்தாள்.

தன்னை ரொம்ப கொடுமை படுத்துகிறார்கள்.எனவே,இப்பவே ,உடனே

வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு அழுதுவிட்டு போனைத் துண்டித்து

விட்டாள்.போனைத் துண்டித்துவிட்டு,கையோடு கொண்டு வந்திருந்த

பிளேடால் தனது கை கால்கள்,இடுப்பில் கீச்சிவிட்டு நடுத்தெருவில் படுத்து

அழுது அரற்றத் துவங்கிவிட்டாள்.

அது கிராமம் ஆக இருந்ததால்,கிராமமே கூடிவிட்டது.

21 நாளில் காவல் நிலையத்தில் வரதட்சணை திருப்பித்தரப்பட்டு,இருவரும்

பிரிந்தனர்.

அந்தப்பெண் மணிக்கும் அவளது அக்கா மாப்பிள்ளைக்கும் நீண்ட காலமாக

உறவு இருந்திருக்கிறது.அந்தப்பெண்மணி பிரசவ மருத்துவமனையில்

பணிபுரிவதால்,அவளால் சுலபமாக 10 வருடத்தில் சுமார் 5 முறை கருக்கலைக்க

முடிந்திருக்கிறது.



இன்னொரு நிஜக்கதை:

ஒரு தம்பதிக்கு ஒரே மகன்.ஏழைக்குடும்பம் தான்.தினக்கூலியாக அம்மா,அப்பா,

மகன் மூவருமே வேலைபார்த்துவருகின்றனர்.அப்பாவானவர்,தனது பக்கத்து

தெருவில் உள்ள ஒரு அடாவடிப்பெரியவரிடம் ரூ.10,000/-கடன் வாங்கியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக கடனுக்கு வட்டி கட்ட வில்லை;கடன் வாங்கி 3 ஆண்டுகள்

ஆகிறது.திடீரென,அந்த அடாவடி பெருசு,இந்த அப்பாவுக்கு கெடு விதித்தார்.



கெடு முடிந்தது;மறுநாள் வந்தார்.நான் கொடுத்த பணத்தை வட்டியோடு தா

எனக் கேட்டார்.என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.ஒரு ஆண்டுக்கான

வட்டியைத் தருகிறேன் என அப்பாவானவர் மன்றாடினார்.அடாவடி பெருசு

தனது பரிவாரங்களுடன் வந்து அப்பாவை மிரட்டி,அவரது ஒரே மகனுக்கு

தனது மகளை நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்.திருமணத்தரகர் மூன்று

நாட்கள் தொடர்ந்து பேசி அப்பாவை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்தார்.

இப்படி சம்மதிக்க வைத்ததற்கு அவருக்கு ரூ.2000/-அந்த அடாவடி பெருசால்

வழங்கப்பட்டது.இதில் குறிப்பிடத்தக்க அதிசயமான அசிங்கம் என்னவெனில்

மணமகனின் வயது வெறும் 18.அடாவடிப் பெருசின் கடைசிமகளான

மணமகளின் வயது 28.இருவரும் சேர்ந்து வாழ்ந்தது வெறும் 7 நாட்கள்

மட்டுமே! மணமகள் கர்ப்பமானாள்.இருவரும் பிரிந்தனர்.

மணமகன் தனது காதலியுடன் தனது 19 ஆம் வயதில் ஓடிப்போனான்.மணமகள்

தனது .. வது காதலனுடன் சேர்ந்து வாழத்துவங்கினாள்.கூடவே தனது

1 வயது மகனுடன்.தவிர,போலீஸ்காரர் ஒருவரையும் அந்த மணமகள்

இன்று வரை காதலித்துக்கொண்டிருக்கிறாள்.வடிவேல் ஜோக்குகளில் ஒன்று

இதே போல வரும் இல்லையா?அது வெறும் ஜோக் அல்ல.கொடூரமான

நிஜம்.



மூன்றாவதான நிஜம்:"யோவ் தரகரே! நீ என்ன செய்வியோ தெரியாது.

அந்த ஈ.பி.,ஏ.ஈ.,யின் ஒரே மகளை எனது மகனுக்கு முடிச்சுக் கொடுத்துடும்.

உமக்கு நீர் என்ன கேட்கிறீரோ அதை வாங்கிக்க" என ஒரு நடுத்தர

குடும்பத்தின் தலைவர் பேசுகிறார்.சரி உங்க மகனது பிறந்த ஜாதகத்தைக்

குடுங்க என திருமணத்தரகர் வாங்கிக் கொள்ளுகிறார்.



அந்த ஈ.பி.ஏ.ஈ.க்கு ஜோதிட நம்பிக்கை அதிகம்.கூடவே,இந்த திருமணத்

தரகரிடம் நல்ல பழக்கமும் கூட.ஈ.பி.,ஏ.ஈ.யின் மகளின் பிறந்த ஜாதக

நகலை வாங்கிய திருமணத்தரகர் செய்த முதல் காரியமே அவளின்

பிறந்த நட்சத்திரத்துக்குப் பொருத்தமான நட்சத்திரத்தினை கண்டறிந்து

அந்த நட்சத்திரத்தில் நாம் பார்த்தோமே,அந்த நடுத்தரக்குடும்பத்தின் மகன்

பிறந்ததாக போலி ஜாதகம் தயாரித்துவிட்டார்.





பிறகென்ன டும் டும் தான்.திருமணம் முடிந்தும் கூட, நடுத்தர குடும்பத்

தலைவரானவர்,திருமணத்தரகருக்கு கமிஷன் கூடத் தரவில்லை;

பதிலாக,திருமணத்தன்று,அந்தத் தரகருக்கு பட்டு வேட்டியும்,சட்டையும்

வாங்கிக் கொடுத்து,திருமணத்தில் 'முதல் மரியாதை'செய்துவிட்டார்.

திருமணமான ஒரே வருடத்தில் இந்தத் தம்பதி பிரிந்துவிட்டனர்.

எல்லாப் பழியும் இப்போது திருமணத்தரகரின் தலையில் விழுந்துவிட்டது.

இரண்டு வருடமாகப் போராடிய ஈ.பி.,ஏ.ஈ., தனது ஒரே மகளின்

வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து,நினைத்து

மாரடைப்பில் காலமாகிவிட்டார்.இப்போது,அம்மாவும் மகளும்

நடைபிணமாக வாழ்ந்துவர, கணவன் வீட்டார் இவர்களிடமிருந்து

பணம் கறந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

1.ரூ.10/-க்கு ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என்ற

புத்தகம் எங்கும் கிடைக்கிறது.அந்தப்புத்தகம் எல்லா திருமணத் தரகர்களிடமும்

இருக்கிறது.அதை வைத்து மட்டும் திருமணப்பொருத்தம் பார்ப்பது மாபெறும்

தவறு. மாப்பிள்ளை,பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்த பின்பே, முடிவு

செய்வது அவசியம்.

சர்ப்ப தோஷம்,தார தோஷம்,மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம், இருவரின்

சுபாவம் என பல கோணங்களில் ஆராய்ந்து திருமணப்பொருத்தம்

பார்த்தால் உங்களது வீட்டில் திருமணத்தால் எந்தப்பிரச்னையும் வராது.



2.திருமணத்தரகர் என்னதான் பிராடாக இருந்தாலும்,வரனின் பிறந்த ஜாதகத்தை

உண்மைதானா? என்று ஒரு முறை நம்பகமான ஜோதிடரைக்கொண்டு

பரிசோதிப்பது அவசியம்.(என்னிடம் வந்த பல திருமணப்பொருத்தம் பார்க்க

வந்த ஜாதகங்களில் ராசிக்கட்டத்தில் ஒன்பது கிரகங்கள் இல்லை.ஆறு அல்லது

எட்டு கிரகங்களே இருந்தன.இதில் வேடிக்கை என்னவென்றால்,அந்த

எட்டு கிரகங்களில் மூன்று சூரியன்கள் இருந்தன.திருமணத் தரகர்கள்

இப்படியெல்லாம் தடயத்தோடு தப்புக்கள் செய்கிறார்.



3. சில நிமிடங்களில் உங்களது ஆஸ்தான ஜோதிடரைக்கொண்டு,

உங்களது மகன்/மகளுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது தவறு.

உங்களுக்கு வந்துள்ள வரனின் பிறந்த ஜாதகத்தை ,இவரை/இவளைப்

பற்றி விரிவாகக் கூறுங்கள் என உங்களது ஆஸ்தான ஜோதிடரிடம்

கேட்டதுண்டா?அப்படிக் கேட்கும்போது உங்களது மகளை/மகனையும்

உடன் வைத்துக்கொண்டு அந்த வரனின் சுபாவத்தை அறிந்துகொள்ள

உங்களது மகன்/மகளுக்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுத்ததுண்டா?



(ஏனெனில் இறுதிவரை வாழப்போவது உங்களது மகன்/மகள் தானே?

இந்த சுபாவத்தை உங்களது மகன்/மகளால் ஏற்று குடும்பம் நடத்த

முடியுமா?என்பது உங்களுக்கா தெரியும்?.இதனால்தான் மறுமணத்

திருமணத் தகவல் மையங்களும்,இணையதளங்களும் பெருகிக்

கொண்டே செல்லுகின்றன)



4. ஆணோ அல்லது பெண்ணோ திருமணமாகி,வாழ வெட்டனாக(!),

வாழா வெட்டியாக பிறந்த வீட்டிற்கு வந்தால் அந்தக்கொடுமையை

அனுபவித்தால் மட்டுமே தெரியும்.அனுபவிக்காமல் தெரியாது.



5. திருமணம் என்பது முன்வினைப்படி அமைகிறது என சித்தர்கள்

கூறியுள்ளனர்.இருந்தாலும்,ஜோதிடம் என்ற அறிவியலின் மூலமாக

70% ப்ரச்னைகளைத் தீர்க்க முடியும்.



திருமணம் என்பது அழிந்து வரும் மரபாகும்.முடிந்தவரையில் இதைப் பாதுகாப்போம்.

Thursday, January 28, 2010

இயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

இயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

நேற்று ஒரு தமிழ் தினசரி நாளிதழ் தமிழ் திரைப்பட இயக்குநர்
பாலாவைப் பேட்டிகண்டது:

கேள்வி:நான் கடவுள் படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியதற்காக
கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா?
இயக்குநர் பாலாவின் பதில்: நடிகர்கள் நடிகைகள் கஷ்டப்பட்டு நடித்தார்கள்;.................................
.......இல்லாத கடவுளுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்.

நமது வேண்டுகோள்:இயக்குநர் பாலா அவர்களே! உயிருக்குப் போராடும்
ஒரு நோயாளியைக் காப்பாற்றும் டாக்டரையே நாம் 'டாக்டர் நீங்க
கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க' எனக் கூறுகிறோம்.
உங்கள் திறமைக்குத் தான் மத்திய அரசின் விருது கிடைத்தது என
நாங்கள் பெருமைப்படுகிறோம்.(உங்களுக்கு விருது கிடைத்தால் நாங்கள்
ஏன் பெருமைப்பட வேண்டும் என்றா நாங்கள் நினைக்கிறோம்?!)

உங்களை இந்த உலகத்திற்குத் தந்தார்களே உங்கள் அம்மாவும் அப்பாவும்
அவர்கள் உங்களுக்கு கடவுளாகத் தெரிய வில்லையா?அவர்களுக்கு
நன்றி சொல்லலாமே!

கடவுள் இல்லை எனக்கூறிய தமிழ் நடிகர்கள் திரையுலகிலிருந்தே காணாமல் போனதை மறந்துவிட்டீர்களா?

குருகுலத் தென்றல் மாத இதழில் இருந்து

குருகுலத் தென்றல் மாத இதழில் இருந்து சில துளிகள்

1.பாரத நாட்டின் (நமது இந்தியாவின் நிஜப்பெயர்) உயிர் ஆதாரங்களாக
பசு,பெண்,விவசாயம்,ஆலயங்கள் இருந்தன.நம் நாடு ஆங்கிலேயரின்
ஆதிக்கம் அடையும்வரை இவை போற்றப்பட்டன.இதனால்,கடந்த
25,000 ஆண்டுகளாக உலகின் ஒரே வல்லரசாக இருந்தது.
நயவஞ்சகம் பிடித்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் இவற்றை சிதைக்கும்
விதமாக நமது பாடத்திட்டம்,கல்விக்கொள்கை,அரசு செயல்பாடு,
அரசியலை உருவாக்கினான்.அதன் விளைவுகளை நாம் இன்றும்
அனுபவிக்கிறோம்.

2.புராதனப் பொருளாதாரம் (கி.பி.1890 வரை) நமது நாட்டில் பசுவை
மையப்படுத்திக்கொண்டு இயங்கியது.விவசாயம் செல்வத்தை அள்ளித்
தரும் தொழிலாக இருந்தது.நமது நாட்டில் பிச்சைக்காரர்கள் என்ற
வர்க்கமே இல்லாமல் இருந்தது.(மகான்கள்,துறவிகள் பிச்சையெடுத்ததற்குக்
காரணம் : மாபெரும் செல்வச்செழிப்பான காலத்திலும் தானம் செய்யும்
குணம் இருக்க வேண்டும் என்பதற்காக. . .)


நவீன (மேலைநாட்டு)பொருளாதாரம் தங்கத்தையும்(டாலரையும்) மையம்
கொண்டு உலகளவில் செயல்பட்டுவருகிறது.இதனால்,பணம் என்ற
பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால்,உணவுக்காக கொள்ளை,
கொலை,விபச்சாரம் என மனிதன் இயல்பாகவே திசை திருப்பப்படுகிறான்.

3.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இந்தியாவில் ஓட்டலே கிடையாது.உணவு,
தண்ணீர்,கல்வி இவற்றை விற்பனை செய்வது பெரும் பாவம் என்ற
இந்துதர்மம் வடக்கே காபூலில் இருந்து தெற்கே கண்டி(இன்றைய இலங்கை)
வரையிலும்,கிழக்கே ஈரான் முதல் மேற்கே தாய்லாந்து வரையிலும்
பரவி நடைமுறை வாழ்க்கையாக இருந்தது.
இன்றைய நவீன கம்யூட்டர் காலத்திலோ,இந்த மூன்றுமே பணம்
கோடிக்கணக்கில் கொட்டும் தொழிலாக கருதப்படுகிறது.இப்படிப்பட்ட
மாபெரும் தீங்கான மாற்றத்தைக் கொண்டு வந்த கிறிஸ்தவமும்
அதனைப் பின்பற்றிவரும் (நம்மை அடிமைப்படுத்திய) இங்கிலாந்தும்
நல்ல நாடாக இருக்குமா?

4.பெண் ஆனவள் தெய்வத்திற்குச் சமமாக நமது பாரத நாட்டில் போற்றப்
பட்டனர்.இந்தக்கொள்கை ஆசியா முழுக்கவும் தற்போதும் ஒரு
பண்பாடாகவே இருக்கிறது.
பாரத நாட்டில் பெண் இனத்தில் ரிஷிகள்,துறவிகள்,அரசிகள்,ஆசிரியர்கள்,
போர்க்கலை நிபுணர்கள்,உளவுத்துறை அதிகாரிகள்,பெண்களுக்கு
வாக்குரிமை என உயர்ந்த அந்தஸ்தில் போற்றப்பட்டனர்.
இதற்கு நேர்மாறான கொள்கையுடையது இஸ்லாம்.இந்தியாவில் இஸ்லாம்
ஊடுருவத்துவங்கியப்பின்னர்தான்,சமுதாய அமைதி கருதி பெண்களுக்கு
இருந்த சுதந்திர உரிமைகள் தற்காலிகமாக குறையத்துவங்கின.
இதற்குமாறாக,1700 களில் உலகிலேயே முதன்முதலில் படிக்கவும்,வாக்களிக்கவும்
இங்கிலாந்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டன என வரலாற்றில்
படிக்கிறோம்.
கோயில்களை மையமாகக் கொண்டே குடியிருப்புக்கள் உருவாகின.பக்தியுமஅன்புமே சமுதாயத்தை வழிநடத்தின.இதனால்,வியாபாரத்தையும் அரசியலையும் நேர்மையே வழிநடத்தியது.
கோயில்களைக்கொண்டு உருவான குடியிருப்புக்கள் பிற்காலத்தில்
நகரங்களாக உருவெடுத்தன.மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக்
கொண்டு மும்பை மாநகரமும், டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக்
கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷ் நாட்டின் தலைநகரம்)வும், காமாட்சியம்மனின் கோயிலை மையமாகக்கொண்டு காஞ்சிபுரமும்
உருவானது.
நன்றி:குருகுலத் தென்றல்,அறிவியல்பூர்வமாக இந்துமதத்தை ஆராயும் மாத இதழ்,
நவம்பர் 2005.பக்கம் 12.

Tuesday, January 26, 2010

நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்: நவபிருந்தாவனம் பற்றிய முழுமையான முதல் தமிழ் புத்தகம்


ஆன்மீகத் தேடல் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த புத்தகம்

ஆந்திரமாநிலத்தில் இருக்கும் நவபிருந்தாவனம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இங்கு ஒரு முறை சென்றுவந்த உடனே உங்களது நீண்ட காலப்பிரச்னைகள்
தீர்ந்துவிடுகின்றன.இதில் திருமணத்தடை,நீண்டகால நோய்கள்,வழக்குகள்,
நிலத் தகராறு,மாந்திரீகக் கோளாறுகள்,எதிரிகளால் நிம்மதியின்மை,
வேலைவாய்ப்புக்கு ஏங்குதல் என சகல விதமான பிரச்னைகளும்
தீர்ந்து வருகின்றன.


நான் கேள்விப்பட்டவரையிலும்,திருச்சியிலிருந்து வட தமிழ்நாடு மாநிலம்
முழுவதும் பல ஊர்களில் சுற்றுலாவாக ஏராளமானவர்கள் சென்று
நவபிருந்தாவனங்களில் உறைந்து நிற்கும் நவ மகான்களைத் தரிசித்து
சர்வ நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால்,அங்கு எப்படி போவது? எவ்வளவு நாள் தங்குவது?
எந்த விதத்தில் வழிபடுவது? என இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்து
முழுமையாக ஒருவர் இதுபற்றி ஒரு தமிழ் புத்தகம் எழுதியுள்ளார்.
அப்படி எழுதியவர் அம்மன் சத்தியநாதன் அவர்கள்.

இந்தப் புத்தகத்தின்பெயர் நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்,ரூ.90/-
பக்கங்கள் 264.
புத்தகம் வெளியிட்டவர்: அருள்மிகு அம்மன் பதிப்பகம்
மிகச் சிறந்த நூல்கள் வெளியிடுவோர்
16/116,T.P.கோவில் தெரு,
'திருமலா ஃப்ளாட்ஸ்'(ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி,சென்னை-600 005.
தொலைபேசி எண்கள்:42663545,42663546.
புத்தகம் கிடைக்குமிடம்: தமிழகத்தின் எல்லா புத்தகக் கடைகள்

Monday, January 25, 2010

செல்போனை எப்படி பயன்படுத்தக்கூடாது?


செல்போனை எப்படி பயன்படுத்துவது?

பின்வரும் செயல்களைச் செய்தால் செல்போன் உங்களுக்கு
ஏதாவது ஒரு விதத்தில் மகத்தான இம்சை தரும் என்பது
அனுபவ உண்மை.நன்றி:ஆனந்த விகடன் பக்கம் 57,21.1.10
மற்றும் சொந்த அனுபவங்கள்

1.எத்தனை நெருக்கமான நண்பராக/நண்பியாக இருந்தாலும்
உங்கள் அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி அவருக்கு
அல்லது அவளுக்கு சிம் கார்டு வாங்கித் தராதீர்கள்.

2.காதலி அல்லது காதலன் அல்லது நெருக்கமானவரின் மிக
அந்தரங்கமான செய்திகள்/வீடியோக்கள்/பேச்சுப்பதிவுகளை
பொக்கிஷம் போல(உங்களது செல்போனில்) பாதுகாத்து
வைக்காதீர்கள்.

3.எதிர்முனையில் பேசுபவர் உங்கள் உரையாடலைப் பதிவு
செய்யக்கூடும் என்பதால் மூன்றாம் நபரைப்பற்றி
(நீங்களாகவோ/கேட்டாலோ கூட) அவதூறாகப்
பேசாதீர்கள்.

4.உங்களது ஏ.டி.எம்.,வங்கிக் கணக்கு,ஆன் லைன் நடைமுறை
களுக்கான பாஸ்வேர்டுகளை செல்போனில் பதிவு செய்து
வைக்காதீர்கள்.

5.உங்களது மெமரிக்கார்டு முழுக்கவும் ஆபாசப் படங்களை
சேமித்து வைக்காதீர்கள்.உங்கள் அம்மா/சகோதரி அல்லது
அப்பா/சகோதரன் அவற்றைக் காண நேர்ந்தால் என்னாகும்?
என்று யோசியுங்கள்.

6.யாராக இருந்தாலும்,செல்போனில் 20 நிமிடங்களுக்குமேல்
பேசாதீர்கள்.

7.எப்போதும் வலதுகாதை மட்டும் செல்போன் பேச்சுக்கு
பயன்படுத்தாதீர்கள்.

8.பயன்படுத்தாத மற்றும் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம் என நீங்கள்
முடிவு செய்து ஒரு சிம் கார்டை வைத்திருந்தால் அதை
யாரிடமும் தரக்கூடாது;உங்கள் குப்பைத் தொட்டியில்
வீசி விடக்கூடாது.அந்த சிம் கார்டை இரு துண்டுகளாக
உடைத்துவிடுங்கள்.இது மிக நல்லது.

அமெரிக்காவின் குசும்பு;


சீனா அச்சுறுத்தல்: அமெரிக்காவின் இரட்டை வேடம்
வெள்ளி, 22 ஜனவரி 2010( 11:42 IST )


இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் பேசியதாக” இராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சீனா ஒரு இராணுவப் பெரும் சக்தியாக உருவெடுப்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கவலையளிக்கக் கூடியதாகும் என்றும் கூறியுள்ளார்.

சீனா இராணுவ பெருக்கம் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச வேண்டும் என்றும் ஆலோசனை அளித்ததாகக் கூறுகிறார்.

இந்திய, சீன எல்லையில் எண்ணிடங்கா ஊடுவல், அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கு எதிர்ப்பு, பிரதமரின் அலுவலக கணினிகளில் உள்ள தகவல்களை எடுக்கும் முயற்சி என்று சீனத்திற்கு இந்தியாவிற்கும் இடையே சிக்கல் நிறைந்த ஒரு சூழலில் டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு முக்கியமான இடத்தைத் தந்துள்ளது போல, “ தெற்காசியாவிலும், உலக அளவிலும் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் இந்தியா ஒரு நங்கூரமாக இருந்து வருகிறது” என்று புகழ்ந்துள்ளார்.


WD
இராபர்ட் கேட்ஸ் கூறிய வார்த்தைகளையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் வாசகங்களுடன் ஒப்புட்டுப் பார்த்தால் அமெரிக்கா போடும் இரட்டை வேடம் தெளிவாகத் தெரியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஒபாமாவும் ஹூ ஜிந்தாவோவும் வெளியிட்ட அந்தக் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் இதுதான்: “. The U.S. side reiterated that it welcomes a strong, prosperous and successful China that plays a greater role in world affairs”. இதன் பொருள்: “உலக விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கும் அளவிற்கு வலிமையான, செழுமையான, வெற்றிகரமான நாடாக சீனா இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது”.

கூட்டறிக்கையில் இவ்வாறு கூறியது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமைதி ஏற்படுத்த சீனா...
உதவிட வேண்டும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட சீனா உதவ வேண்டும் என்று ஒபாமா கேட்டுக் கொண்டார் என்ற செய்தியும் வந்தது. அவ்வளவுதான் கொதித்தெழுந்தது டெல்லி. “தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள இந்தியாவிற்கு எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் அவசியமல்ல” என்று அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் உடனடியாக அறிக்கை விடுத்துக் கண்டித்தார்.

சீனா வலிமையாக இருக்க வேண்டும், உலக விவகாரங்களில் அதன் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும், தெற்காசியாவின் அமைதியில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றெல்லாம் கூறிவிட்டு, இப்போது, சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் அச்சுறுத்தலே என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் இந்தியாவில் வந்து கூறுவது ஏன்?

உலக விவகாரங்களில் சீனாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்று பீஜிங்கில் சீன அதிபரோடு நின்றுகொண்டு ஒபாமா அறிக்கை வெளியிடுகிறார். டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், உலக மற்றும் தெற்காசிய மண்டலத்தின் பாதுகாப்பில் இந்தியா நங்கூரமாக இருக்கிறது என்று கூறிகிறார்!

சீனாவிற்குப் போனால் அந்நாட்டை மையப்படுத்தி, பெருமைபடுத்திப் பேசுவது, டெல்லிக்கு வந்தால் இந்தியாவை பெருமைப்படுத்தி பேசுவதா? இதற்குப் பெயர்தான் இராஜதந்திரமா?

சீன இராணுவம் நவீனமயமாக்கலையும், பலப்படுத்துதலையும் குறித்து இந்தியா பேச வேண்டும் என்று ஆலோசனை கூறும் அமெரிக்கா அதைச் செய்யலாமே?

பயங்கரவாத அணுகுமுறையிலும் இரட்டை நிலை

அல் கய்தா இயக்கமே அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் இணைக்கும் குடையாக உள்ளதென்றும், அதன் கீழ்தான் தாலிபான், தெரிக் இ தாலிபான் பாகிஸ்தான், லஸ்கர் இ தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இயங்குகின்றன என்று கூறுகிறார்.

ஆனால், இந்த இயக்கங்களின் வளர்ச்சியிலும், தாக்குதல் திட்டத்திலும் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஜ.யின் கை உள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாற்றிவருவது குறித்து எதையும் கூறாமல் தவிர்த்துவிடுகிறார்.ஏனென்றால், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் நண்பன் பாகிஸ்தான்!

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்தியாவிற்கு அறிவுரை கூறும் அமெரிக்கா, பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறுவதை சரியென்றோ தவறென்றோ இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

இந்தியா எனும் பெரும் சந்தை வேண்டும், அணு உலைகளுக்கும், ஆயுதங்களுக்கும் அந்நாடு அளிக்கும் ஒப்பந்தங்கள் வேண்டும். ஆனால் அந்நாட்டு பாதுகாப்பு குறித்து அது அதன் அண்டை நாடுகளுடன் பேச வேண்டும்!

இதுதான் அமெரிக்காவின் நட்பு, இந்நாட்டுடன்தான் இந்தியா பலமான உறவு கொணடுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறுகிறார்.நன்றி:தமிழ் வெப்துனியா 21.1.2010
«


எப்படியாவது இந்தியாவும் சீனாவும் போரிட வேண்டும் என அமெரிக்கா ஆசைப்படுகிறது.அப்படிப்போரிட்டால்,இரு நாடுகளும் பலத்த அழிவை சந்திக்கும்.இரு
நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்யலாம்.அதன் மூலம் மீண்டும் தான் வலிமை மிக்க நாடாக மாறிவிட அமெரிக்கா துடிக்கிறது.இந்தியா சீனா போர் வந்தால்,அணு ஆயுதங்கள்
பயன்படுத்தப்படும்.இரு நாடுகளின் பொருளாதாரமும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும்.
இந்தியாவும் சீனாவும் மீண்டும் வல்லரசு நாடுகளாக மாற சில நூற்றாண்டுகளாக காத்திருக்க
வேண்டும் .அதுவரை தான் இந்த உலகத்தில் ஒரே வல்லரசாக ஆட்சிபுரியலாம் என அமெரிக்கா கணக்குபோடுகிறது.இதுவே நமது ஆன்மீகக்கடலின் யூகம்.

சில மாதங்களுக்கு முன்பு,பா.ஜ.க. சொன்னது நிஜம் என்பதை இந்த அமெரிக்காவின் அறிக்கைகள் நிரூபிக்கின்றன.உலக அரங்கில் நாம் தனிமைபடுத்தப்பட்டுள்ளோம்.சீனாவின்
வல்லாதிக்கத்தை எதிர்கொள்ளுவதற்காக நாம் ஒரு நட்பு நாட்டை தேட வேண்டும் என பா.ஜ.கட்சி கூறியுள்ளது.

மன்னர் வீரபாண்டியக் கட்ட பொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைப்பற்றி இரு நல்ல செய்திகள்:

சுதந்திரப்போராட்ட காலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதிக்கு அருகில் உள்ள காட்டில் மறைந்திருந்தார்.
அவர் மறைந்திருந்த காடு நூற்றாண்டுகளைக் கடந்தப்பின்னரும்
இப்போதும் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அங்கு யாரும் மரம் வெட்டவோ,சுள்ளி பொறுக்கவோ
போவதில்லை.அந்தக் காடு அவர்களுக்கு தெய்வம்!!!

ஆதாரம்:காடு விகடன் பக்கம் 130,இணைப்பு:ஆனந்தவிகடன்
27.1.2010 வெளியீடு.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்துவந்த எட்டயாபுரம் பகுதி
தற்போது கோவில்பட்டி அருகில் இருக்கிறது.அப்பகுதி மக்கள்
இன்றும் தமது மன்னர் மீது இருக்கும் அபிமானத்தால் ஒரு
விஷயத்தில் உறுதியாக இருக்கின்றனர்.அது என்ன வென்றால்,
தனது மன்னரான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களைக்
ஆங்கிலேயனுக்குக் காட்டிக்கொடுத்த எட்டப்பனை மறந்தும்கூட
பேச்சில் பயன்படுத்துவதில்லை.

உதாரணமாக,எண்களைக் கூறும்போது,1,2,3,4,5,6,7,மகாராஜா,9 என்றே
கூறிவருகின்றனர்.
80 என்பதை மகாராஜா பத்து என்றும்
88 இரட்டை மகாராஜா என்றும்
800 என்பதை மகாராஜா நூறு என்றும் பேசுகின்றனர்.
இந்துபாரம்பரியத்தின் ஒரு சிறு அடையாளமே இது என்பது எனது
தாழ்வான கருத்து.நன்றி;ஆனந்த விகடன் 1981.

சுற்றுச்சூழலையும் சிதைக்கும் உலக வர்த்தக அரசியல்



மனிதன் என்றாலே சுயநலம்தான்.சுற்றுச்சூழலைஉலகளவில் முறையாகப்

பராமரிக்காமல் இருந்ததால் கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம்
அழியும் என்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட்
திரைப்படமே 2012 ருத்ரம்.இந்தப் படத்தில் காட்டப்படுவது போல்,
உலகத்தின் வெப்ப நிலையைக் குறைக்க சில தொழிற்கொள்கைகளை
வகுப்பதில் பிடிவாதம் பிடிக்கின்றன G 8 எனப்படும் வல்லரசு நாடுகள்.
இதிலும்,அமெரிக்காவே முன்னணியில் இருக்கின்றது.

அழிக்கப்படும் வனங்களுக்குப் பின் ஒரு உலகளவிலான அரசியல்
சுயநலம் இருக்கின்றது.முன்னொருகாலத்தில் இந்தியப் புவியியல்
பரப்பில் சுமார் 20% காடுகளாக நிரம்பியிருந்தது.தேசிய வனத்
திட்டத்தின்படி, மூன்றில் ஒரு பங்கு நிலம் மரங்களால் சூழப்பட்டு
இருக்க வேண்டும்.

45,000 தாவர இனங்கள், 81,000 உயிரினங்கல் மட்டுமே இருக்கும்
நம் காடுகளில்,
5,150க்கும் அதிகமான தாவர இனங்களும்,1837 க்கும் அதிகமான
உயிரினங்களும் மிக வேகமாக அழிந்துவரும் பட்டியலில் இடம்
பெற்றிருக்கின்றன.

95 தேசியப் பூங்காக்கள், 500 வன விலங்கு சரணாலயங்கள்,இரண்டு
பல்லுயிர்ப் பாதுகாப்பு மையங்கள் போன்றவைகளுக்காக சுமார்
5% காடுகள் ஒதுக்கப்பட்டாலும்கூட, நம் காடுகளில்தான் மிக வேகமாக
அழிந்துவரும் உயிரினங்களும் இருக்கின்றன.இதைப்புரிந்து கொள்ளுவதே
சுற்றுச்சூழல் அரசியலின் முதல் நிலை.(இதன் எளிய வடிவமே தமிழ்த்
திரைப்படமான பேராண்மை)

அமெரிக்கா,கனடா,ஜெர்மனி,இங்கிலாந்து,ஜப்பான்,ஆஸ்திரேலியா,பிரான்ஸ்
முதலான வல்லரசு நாடுகள் தனது நாட்டுக் காடுகளை முடிந்த வரையிலும்
பாதுகாத்து வருகின்றன.அதே சமயம்,இந்தியா போன்ற வளரும் நாடுகள்
தங்களின் காட்டு வளங்களை(மூலிகைகள், காட்டு உயிரினங்கள்,அவற்றின்
உடல் பாகங்கள்,மரங்கள்,வேர்கள்,கனிகள்,இலைகள்,பூக்கள். . .) ஏற்றுமதி
செய்வதை ஊக்குவிக்கின்றன.இந்த நயவஞ்சகத்தின் முழுப்பரிமாணத்தை
விளக்கவே இன்னொரு சுற்றுச்சூழல் கடல் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் என்ற
வலைப்பூ முகவரியை ஆரம்பித்து நிரப்பிவிட முடியும்.
இந்த நயவஞ்சகத்தினை புரிந்துகொள்ளுவது சுற்றுச்சூழலியல் அரசியலின்
இரண்டாம் நிலை!!

பெருகிவரும் மக்கள் தொகையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
என்ற விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை.(அப்படி
ஏற்பட்டால் பல பன்னாட்டு நிறுவனங்கள் திவாலாகும்).பொருளாதார
நிலைப்பாட்டிலிருந்தே மக்கள்தொகைப் பெருக்கம் பார்க்கப்படுகிறதே
தவிர, வாழ்வாதார நிலையில் இருந்து எந்த நடவடிக்கையும் (உலகளவில்
பெரும்பாலான நாடுகளில்) எடுக்கப்பட வில்லை.காடுகள் அழிக்கப்படுவது
மக்களின் குடியேற்றத்துக்காகவா அல்லது பன்னாட்டு நிறுவனங்களின்
லாபத்துக்காகவா என்ற கேள்வியை எழுப்பினால் சுற்றுச்சூழல் அரசியலின்
மூன்றாம் நிலை புரியும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும்,உலகின் பல நாடுகள் அரசியல் சுதந்திரம்
பெற்றன.நாம் இந்தியாவாக கி.பி.1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தோம்.
கி.பி.1960 களில் கஞ்சித் தொட்டிக்காலம் என ஒரு பஞ்சகாலம் நம் நாட்டிலும்
தமிழ்நாட்டிலும் இருந்தது.அரசாங்கமே, ரேஷனில் எல்லா மக்களுக்கும்
கஞ்சி ஊற்றியது.அதிலும் கூட நயவஞ்சக அமெரிக்கா இந்தியாவை
நாசக்காடாக்கப் பார்த்தது.ஆம்! நமக்கு இலவசமாக கோதுமையை அனுப்பியது
அப்படி வந்த கோதுமையோடு பார்த்தீனியவிதைகள் இந்தியாவில் பரவியது.
(அதுவரை இந்தியா நீர்வளம் நிரம்ப இருந்தது.இதை அழிக்கும் நோக்கோடு
ஆகாயத்தாமரை,பார்த்தீனியவிதைகளை கோதுமையோடு கலந்து அப்படிப்பட்ட
நச்சுக்கோதுமையை இந்தியாவுக்கு அனுப்பியது அமெரிக்கா)

இதன் எதிரொலியாக,கி.பி.1967 முதல் கி.பி.1978 வரையில் பசுமைப் புரட்சி என்ற
பெயரில் உணவு தன்னிறைவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதனால்,நாம்
உணவில் போதுமான விளைச்சலை அடைந்தோம் என்பது நிஜம்தான்.ஆனால்,
நமது பாரம்பரியமான 4,00,000 நெல் ரகங்களை இழந்தோம்.சுமார் 10,000 வருடம்
விவசாய அனுபவத்தையும் இழந்தோம்.மிகவும் வலிமையும்,மிகவும் ஆரோக்கியம்
இவற்றை இழந்தோம்.அமெரிக்காவின் ரசாயன உரம் தயாரிக்கும் நிறுவனங்கள்
3000% அளவிற்கு வளர்ச்சியடைந்தன.இந்தியர்களின் ஆண்மைத்தன்மை 45%
அளவுக்கு குறைந்தது.இந்தியத் தாய்மார்களின் தாய்பாலில் கூட ரசாயன
உரங்களின் நச்சு 78% அளவுக்கு உயர்ந்தது.இந்நிலை இன்றும் தொடர்கிறது.
சுகப்பிரசவம் என்பது அபூர்வமாகி விட்டது.பணத்துக்காக,பிரசவ மருத்துவமனைகள் சுகப்பிரசவம் செய்யும் ஆரோக்கியம் உள்ள நிறைமாத
கர்ப்பிணிகளைக் கூட அரசு மானியத்துக்காக சிசேரியன் செய்யும் கொடூரம்
சகஜமாகிவிட்டது.
இந்திய விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன.இருந்த போதிலும்,ஒரு சிறு
நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத்துவங்கிவிட்டன.ஆனால்,தமிழ்நாடு மாநில
அளவில் இந்த ஒளிக்கீற்று குறைந்தபட்சம் அளவுகூட பரவவில்லை.
இயற்கை விவசாயம்,பஞ்ச கவ்யம்,நவ கவ்யம் என இந்தியர்களாகிய
நாம் இழந்த விவசாய பாரம்பரியங்களை மீட்டெடுக்கத் துவங்கிவிட்டோம்.
கோ.நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாய விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலால்
10,000 வருட இந்து விவசாய மரபுகள் மீண்டும் புனர்நிர்மாணம் ஆகத்
துவங்கிவிட்டன.இன்று,இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி,
காய்கறிகள் தமிழ்நாட்டில் பல மாநகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றைத் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு சர்க்கரை நோய்,மன அழுத்தம்,
ரத்த அழுத்தம் போன்றவை முழுமையாக குணமடைகின்றன.(அட!
நிஜம் தான்ங்க)

இன்று மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு திணிக்கப்பட்ட
காய்கறிகளை இந்தியாவில் சந்தைப்படுத்த முனைந்துள்ளன.மனிதன் உண்ணும்
உணவின் விதைகளை பயோ டெக்னாலஜியால் நவீனப்படுத்தி அதைக் கொண்டு
உலக மக்களின் வயிற்றில் அடிக்க திட்டமிடுகிறது பன்னாட்டு பயோடெக்
நிறுவனங்கள்.இதன் மூலமாக,இயற்கைக்கு எதிராக நமது வாழ்க்கையைத்
திருப்பப் பட்டு இருப்பதை உணர்ந்தால்,அது சுற்றுச்சூழல் அரசியலின்
நான்காம் அரக்கப் பரிமாணம் ஆகும்.


கி.பி.1875 ஆம் ஆண்டு வரையிலும் செல்வ செழிப்புள்ள நாடாக இருந்த
நமது பாரதம், இன்று உலக வல்லரசுநாடுகளின் குப்பைக்கிடங்காக மாறி
வருகிறது.முதுகெலும்பில்லாத மத்திய அரசு,தொலை நோக்கில்லாத
அரசியல் தலைவர்கள்,பேராசை பிடித்த ஒழுக்கமற்ற அரசு அதிகாரிகளால்
இந்நிலை தற்போது இருக்கிறது.

இவற்றையா நாம் நமது மகன்களுக்கும்,மகள்களுக்கும் தரப்போகிறோம்?

நன்றி:ஆனந்த விகடனின் இலவச இணைப்பு:காடு விகடன் பக்கங்கள் 124,125; 27.1.2010

ஆக,அரசியல்வாதிகளுக்கும்,அரசியலுக்கும் அளவற்ற சுதந்திரம் கொடுத்து
நாம் இன்று மன நோயாளிகளாக மாறி இருக்கிறோம்.

Sunday, January 24, 2010

எனது ஜோதிட அனுபவத்தில் கிடைத்த ஒரு ஆராய்ச்சி முடிவு

எனது ஜோதிட அனுபவத்தில் ஒரு ஆராய்ச்சி முடிவு:


கொஞ்ச காலத்துக்கு முன்பு தனம் என்ற தமிழ்ப்படம் வெளிவந்தது.
இந்தப்படத்தில் 'உயிர்'சங்கீதா நடித்திருந்தாள்.இந்தப்படத்தில் ஒரு
ஜோதிட உண்மையை மையக்கருவாக வைத்திருக்கின்றார் இப்படத்தின்
இயக்குநர்.படம் பார்க்காதவர்களுக்கு அதன் திரைக்கதை சுருக்கமாக:

ஆசாரமான பிராமணக்குடும்பத்தில் நமது ஹீரோ சுமார் 22 வயதுடன்
வாழ்கிறார்.அவருக்கு இரண்டு அண்ணன்கள்.அவனது அப்பா ஒரு மர
அரவை ஆலை வைத்திருக்கிறார்.ஒழுக்கம்,குடும்பத்தில் அனைவரும்
அப்பாவை மதித்தல் என்பவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த கூச்சமும்,படிப்புக்களையும் உள்ள
ஹீரோ மேல்படிப்பிற்காக ஆந்திரமாநிலத்தின் தலைநகரமான
ஐதாராபாத்துக்குச் செல்கிறான்.

அங்கே இவன் தங்கும் இடத்தில் அருகில் தனம் என்ற பெண் இருக்கிறாள்.
இவள் ஒரு விபச்சாரியாக அப்பகுதியில் வாழ்கிறாள்.அவளிடம் புதிதாக
ஒரு ஆண் எவன் பேசினாலும் ரூ.500/-வைத்திருக்கிறாயா? என்று
மட்டும் கேட்பாள்.ஆமாம் என சொன்னதும் உடனே அவனுடன்
மறைவிடத்திற்குப்போய் விடுவாள்.அதே சமயம்,அவள் நிராகரித்த ஆண்களும்
உண்டு.

இந்நிலையில் நமது ஹீரோ ரொம்ப கூச்சமுள்ளவர்.ஆனாலும்,அவருக்கு
தனத்தின் மீது ஒரு 'இது'.அதாங்க காதல்.பல நாட்களாக அவளை பின் தொடர்ந்து
அவளிடம் தனது காதலைச் சொல்ல அவள் விழுந்து,விழுந்து சிரிக்க இறுதியாக
இருவரும் இணைகிறார்கள்.அப்போது,மற்ற வாடிக்கையாளர்களை விட
நம்ம ஹீரோவிடம் ரொம்ம்பவே நெருக்கம் காட்டிவிடுகிறாள் தனம்.

விளைவு?இந்த நெருக்கம் அடிக்கடி நடக்க ஒரு கட்டத்தில் தனத்திடம்
நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது எனக்கூறுகிறான் நமது ஹீரோ!
(முதன் முதலில் எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணிடமும் உறவு
கொண்டதும் அந்த ஆணுக்கு உருவாகும் எண்ணம் இதுதான்.
இதேபோலத்தான் பெண்ணிற்கும்!!!)

தனது நட்புவட்டத்தில் கலந்து ஆலோசித்தப்பின்னர்,தனம் ஹீரோவை திருமணம்
செய்ய ஒப்புக்கொள்கிறாள்.அதே சமயம்,ஒரு கட்டுப்பாடு விதிக்கிறாள்.
உனது வீட்டாரிடம் நான் இதுவரை ஒரு விபச்சாரியாக இருக்கிறேன் என்பதை
நானே சொல்லுவேன்.அதையும் மீறி அவர்கள் என்னை மருமகளாக ஏற்றுக்
கொண்டால் மட்டுமே நமது திருமணத்திற்கு நான் சம்மதிப்பேன் என்கிறாள்.
அதற்கு நம்ம ஹீரோ சம்மதிக்கிறான்.(சற்று சிந்தித்துப்பார்த்தால்,இந்த
சூழ்நிலை நம்மில் எவருக்கு வந்தாலும் ஏற்போமா?எல்லாம் முதல் காம அனுபவம்
படுத்தும் பாடு)

ஐதாரபாத்திலிருந்து ஹீரோவின் வீட்டுக்கு தனமும்,ஹீரோவும் செல்லுகின்றனர்.
ஹீரோவின் வீட்டார் யார் இவள்? எனக்கேட்கின்றனர்.

ஹீரோ 'நான் இவளைத் தான் கல்யாணம் செய்வேன்' எனக்கூறுகிறான்.
உடனே,நீ யாருமா? என தனத்திடம் கேட்கின்றனர்.
தனமோ 'நான் ஒரு விபச்சாரி' என்கிறாள்.அவ்வளவுதான்,ஹீரோவின் அப்பா
ஒரு குடம் தண்ணீர் எடுத்து தனது தலையில் ஊற்றிக்கொள்கிறார்.(ஹீரோவை
தலைமுழுகுகிறாராம்)உடனே,தனம் அங்கிருந்து ஐதாராபாத் புறப்பட்டுவிடுகிறாள்.

ஹீரோவின் வீட்டைவிட்டு தனம் வெளியேற,ஹீரோவின் ஆஸ்தான ஜோதிடர்
அதே சமயம் ஹீரோவின் வீட்டுக்கு வருகிறார்.ஹீரோவின் அப்பாவை
சமாதானப்படுத்துகிறார்.
அந்த ஜோதிடர் பிரசன்னம்,(இப்போது இந்த விநாடியை ஜாதகமாகக் கணித்தல்) என்ற ஜோதிட முறையைப் பயன்படுத்தி சில ஜோதிட உண்மைகளைக் கூறுகிறார்.

"சில குறிப்பிட்ட கிரக நிலைகளில் பிறக்கும் பெண்ணை எவன் மணம் செய்கிறானோ
அவன் தனது பிறந்த ஜாதகப்படி,யோகங்கள் இல்லாவிட்டாலும்,அந்த யோகமான
பெண்ணை திருமணம் செய்வதால், அவன் கோடீஸ்வரனாகிறான்.
அதேசமயம்,அந்தப் பெண் தங்கள் வீட்டு மருமகளாக வருவதால்,அவள் (கூட்டுக்
குடும்பம் என்பதால்) தங்கள் வீட்டில்தான் வாழப்போகிறாள்.அப்படி அவள்
தங்கும் வீடும்,அந்த வீட்டுக்காரர்கள் செய்யும் வேலை அல்லது தொழிலும்
கொழிக்கும்.
இந்த ஜோதிட ரகசியத்தை உணர்ந்த முற்கால மன்னர்கள்,தனது அந்தப்புரத்தில்
இப்படிப்பட்ட யோகங்கள் நிறைந்த பெண்களை நிரந்தரமாக தங்கி வாழ
வைத்திருந்தனர்.அதனால்,அந்த மன்னர்களின் கஜானா எப்போதும்
நிரம்பி வழிந்தது."
கதைப்படி, ஹீரோவின் மொத்தக்குடும்பமும் ஐதாராபாத்துக்குப்போய்,
தனத்தை அழைத்துவந்து, தனது மகனுக்கு(நமது ஹீரோவுக்கு) மணம் செய்து
வைக்கின்றனர்.திருமணத்திற்குப்பின்னர், அவர்களின் ஆஸ்தான ஜோதிடரின்
வாக்குப்படி, ஹீரோவின் அப்பாவின் மர அரவை ஆலை லாபம் சம்பாதிக்கிறது.

இதற்குமேல் இருக்கும் காட்சிகள் சினிமாத்தனமானவை.
இந்த சம்பவம் எந்த அளவுக்கு நிஜம் என்பதை சுமார் இரண்டு ஆண்டுகளாக
ஆராய்ந்தும்,எனது ஜோதிட குருநாதர்களிடம் கலந்து ஆலோசித்தும்,சில சினிமா
நட்சத்திரங்களை ஆராய்ந்தும் பார்த்ததில் இவை அனைத்தும் உண்மை என
தெரிகிறது.

பெண் இனத்தின் சிறப்பே அவள் கருவை சுமப்பதால்தான்.அதனால்தான் இந்த
யோகம் அவளது கணவன்/காதலனை யோகங்கள் நிறைந்தவனாக ஆக்குகிறது.

சினிமா உலகத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ காதல் ஜோடிகளை நாம்
பார்த்திருக்கிறோம்.அதில் ஜோதிட விபரங்கள் கிடைத்து,அதன் அடிப்படையில்
தனம் போன்ற யோகம் உடைய பெண் நடிகை நயன் தாரா ஆவாள்.சிம்புவுக்கும்
நயன் தாராவுக்கும் காதல் இருந்த காலத்தில் சிம்புவின் படங்கள் பெரும் வெற்றி
பெற்றுள்ளன.அதே சமயம்,சிம்புவை வம்பு என பத்திரிகைகள் எழுதித்தீர்த்தன.
நயன் தாராவைப் பிரிந்தது முதல் சிம்புவைத் தேட வேண்டியிருக்கிறது.சிம்புவால்
வெற்றிப்படம் தர முடியவில்லை.

நயன் தாராவின் பிறந்த ராசி மேஷம் ஆகும்.லக்னம் துலாம் ஆகும்.துலாம்
லக்னத்தின் ஏழாம் இடமாக மேஷம் வருகிறது.இதுவே நயன் தாராவின்
கணவன் ஸ்தானத்தைக் குறிக்கின்றது.மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய்
நயன் தாரா பிறக்கும் போது உச்சமாக இருக்கின்றது.(அவளின் பிறந்த ஜாதகத்தை
பார்த்தால் தெரியும்.அது என்னிடம் இருக்கிறது.பல ஜோதிட இதழ்களில்
பல முறை வந்திருக்கிறது)
நயன் தாராவின் காதல் நயன் சிம்பு தம்பதிகளாகும் அளவுக்குச் சென்றது.
செவ்வாய் உச்சமாக இருந்ததால்,சிம்பு நயனைக் காதலிக்கும்(?!)வரையிலும்
டென்ஷன் பார்ட்டியாகவே இருந்திருந்திருக்கிறார்.(ஒரு திரைப்பட
இயக்குநர் அப்படி இருப்பது தவறு.படைப்பாளி இல்லையா?)அதே சமயம்,
சிம்புவால் வெற்றிகரமான இயக்குநராக செயல்பட முடிந்தது.

இதே யோகமுள்ள பெண்ணை ஒரு அரசியல் வாதி நிரந்தரமாக மனைவியாக்கி
அடிக்கடி முதலமைச்சராகியிருக்கிறார்.அந்தப் பெண்ணின் தொடர்பு இருக்கும்
வரை அரசியலில் அவரை வீழ்த்த ஆளில்லை.

இதே யோகமுள்ள கிரக நிலையில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்த
ஒரு சராசரி மனிதன்,வெறும் ஐந்து வருடங்களில் ரூ.100 கோடி சொத்துக்களுக்கு
அதிபதியாகிவிட்டார்.

இதேயோகமுள்ள கிரகநிலையில் பிறந்த ஒரு பெண்ணை தனது நிரந்தர
மனைவியாக வைத்திருக்கும் விளையாட்டுவீரரை நான் அறிவேன்.

ஆக,ஜோதிடத்தை ஒரு வருமான வாய்ப்பாக கற்றுக்கொண்ட நான்,இந்த 22
வருடங்களில் ஜோதிடம் ஒரு வருமான வாய்ப்பு மட்டுமல்ல;அது
மனிதனின் தலையெழுத்தையே மாற்றும் துல்லிய விஞ்ஞானம் என்பதை
உணர்ந்து கொண்டேன்.இன்று,என்னால்,நிம்மதியாக சாப்பிட முடியவில்லை;
நிம்மதியாக குளிக்க முடியவில்லை;அந்தளவுக்கு எனது செல்போன்கள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

அதே சமயம், மேலே சொன்ன யோகத்திற்கு எதிரான கிரக நிலையில்
பிறந்த பெண்களையும் நான் கடந்த 11 ஆண்டுகளாக ஆராய்ந்து
வருகிறேன்.கணவனுக்குரிய கிரகம் நீசமானால்,அந்தப் பெண்ணை
எவன் திருமணம் செய்கிறானோ,அவன் தனது பிறந்த ஜாதகப்படி,
எவ்வளவு யோகக் காரனாக இருந்தாலும்,அவன் தனது
வாழும் இடத்தில் சகலவிதமான மரியாதைகளையும் இழக்கிறான்.
அவன் எவ்வளவுதான் உலகப்புகழையும்,பெரும் செல்வத்தையும்
தனது உழைப்பால் பெற்றாலும், அவன் வாழும் தெரு,நட்பு வட்டம்,
சொந்தங்கள் மத்தியில் எல்லாவிதமான அவமானங்களையும்
தினமும் அடைகிறான்.

Wednesday, January 20, 2010

சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்கள்

சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்களும் அவர்களை வழிபடும் முறைகளும்

சித்தர்களின் அருளைப் பெறுவதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன.ஏன் சித்தர்களின் அருளை நாம் பெற வேண்டும் ?
சைவ சித்தாந்தம் எனப்படும் சிவ வழிபாட்டுத் தத்துவப்படி, இறைவனை விட இறை தொண்டரே உயர்ந்தவராகிறார்.இறை தொண்டரின் பாசமானது இறைவனின் மீது மகன் அப்பாவாகவும், மகள் அப்பாவாகவும், மகன் அம்மாவாகவும்,மகள் அம்மாவாகவும் இருக்கிறது.அந்த பேரன்பு,பக்தர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத சோதனையின் விளைவாகவும், இனி இழப்பதற்கு என்று ஒன்றுமேயில்லை என்ற நிலை வரும்போதும் அந்த விரக்தியானது இறைவனின் மீது ஆழ்ந்த பக்தி உருவாகக் காரணமாகிறது.
ஆக,பின்வரும் சித்தர்களின் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் உரிய சித்தரின் தொடர்பும்,ஆசியும் நமக்குக் கிடைக்கும்.பல கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றி பயனடைந்து வருகிறார்கள்.பலர் வறுமையை அடியோடு நீங்கி,செல்வ வளத்தோடு இருக்கிறார்கள்.
நீங்களும் முயன்று பாருங்கள்.
சித்தரின் பிறந்த நட்சத்திரமானது,ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக இரு முறை வரும்.அது அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்கு வரும்.

அகத்தியர் - ஆயில்யம்

நந்தீசர் - விசாகம்

திருமூலர் - அவிட்டம்

கருவூரார் - அஸ்தம்

ராமதேவர் - பூரம்

பதஞ்சலி - மூலம்

கமலமுனி - பூசம்

குதம்பைசித்தர்- விசாகம்

கோரக்கர் - ஆயில்யம்

தன்வந்திரி - புனர்பூசம்

சுந்தரானந்தர் - ரேவதி

கொங்கணர் - உத்திராடம்
சட்டமுனி - மிருகசீரிடம்

வால்மீகி - அனுஷம்

இடைக்காடர் - திருவாதிரை

மச்சமுனி - ரோகிணி

போகர் - பரணி

பாம்பாட்டி - மிருக சீரிடம்

Tuesday, January 19, 2010

PT

பி.டி. கத்தரிக்காய்: கர்நாடகமும் எதிர்ப்பு
செவ்வாய், 19 ஜனவரி 2010( 13:55 IST )


FILEமரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்தரிக்காய்க்கு தமிழ்நாடு அரசு ‌சிவ‌ப்பு க‌ம்பள‌ம் விரித்து வரவேற்பு கொடுக்கும் நிலையில், அதற்கு கர்நாடக அரசு வேளான் துறை மாநில அரசிற்கு அளித்த அறிக்கையில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கும் பயிரிடுவதற்கும் மத்திய அரசின் மரபணு மாற்ற விதைகளுக்கான அனுமதிக் குழு ஏற்பளித்துள்ள நிலையில், அது குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மக்கள் சந்திப்புகளை மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த மக்கள் சந்திப்பு வரும் 26ஆம் தேதி கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதற்கு அனுமதி அளிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கர்நாடக அரசிற்கு அம்மாநில வேளாண்துறை அறிவுரையளித்துள்ளது.

“கத்தரிக்காய் ஒரு தோட்டப்பயிர், மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தி கத்தரிக்காய் சாகுபடி செய்யும் அளவிற்கு பூச்சிப் புழு பாதிப்பு அதிகமில்லை. பி.டி. கத்தரிக்காய் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பாக வேளாண் துறையிலேயே கருத்து மாறுபாடு இருந்தது. அதன் காரணமாகவே அறிக்கை அளிப்பதில் தாமத‌ம் ஏற்பட்டது” என்று கர்நாடக அரசின் வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நாளேடு கூறியுள்ளது.

எவ்வளவு தெளிவான அணுகுமுறை! மரபணு மாற்ற பயிர்கள் தொடர்பாக தங்களுக்குள் கருத்து மாறுபாடு இருந்தாலும், அரசிற்கு ஆலோசனை வழங்கும்போது, ‘அவசரம் காட்ட வேண்டாம்’ என்று அறிவுறுத்தியிருப்பது அம்மாநில வேளாண் துறை கர்நாடக விவசாயிகள் மீது கொண்டுள்ள பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில்... தமிழக அரசு முதல் வேளாண் பல்கலைக் கழகம் வரை எல்லோரும் ஒருமித்த குரலில் வா பி.டி. விதையே வா என்று வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றனர்.

சட்டப் பேரவையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், “பி.டி. கத்தரிக்காய் விதைகளை பயன்படுத்தலாம், அதனால் தீங்கேதும் ஏற்பட்டால் பிறகு நீதிமன்றத்திற்கு போகலாம்” என்று கூறுகிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தினால் நன்மை ஏற்படுமா, தீதாகுமா என்பது குறித்து உறுதியான முடிவு செய்யாமலேயே, விதையுங்கள் பார்க்கலாம் என்று பொறுப்பற்று பேசினார் தமிழக வேளாண் அமைச்சர்.


FILEமரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை கோவையிலுள்ள வேளாண் பல்கலை விதைத்து சோதனை செய்து பார்த்ததாகவும், கத்தரிக்காய்கள் விளைந்த பிறகு, அதில் பூச்சி அடித்த கத்தரிக்காய்களை (!) ஆட்களை வைத்துப் பிரித்தார்கள் என்றும், அவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் சென்னையில் நடந்த கருத்தரங்கில் கூறினார்.

கத்தரிக்காயைத் தாக்கும் தண்டுப் புழுவைத் தடுக்கும் நோக்கிலேயே பி.டி. கத்தரிக்காய் அறிமுகப்படுத்தப்படுவதாக, அதனை கண்டுபிடித்த மான்சாண்டோ நிறுவனம் கூறுகிறது. ஆனால் சோதனை சாகுபடியில் அந்தக் கத்தரிக்காய்களையும் தண்டுப் புழுத் தாக்கியுள்ளது என்ற விவரத்தை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசோ அல்லது வேளாண் பல்கலைக் கழகமோ வெளியிடாதது ஏன்?

கத்தரிக்காயை அதிகமாகப் பயிரிடும் மேற்கு வங்கமும், பீகாரும் பி.டி. கத்தரிக்காயை நிராகரித்து விட்டன. கர்நாடக மாநிலம் அவசரம் காட்ட வேண்டாம் என்கிறது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு மட்டும் விதையுங்கள் பார்க்கலாம் என்கிறது.
thanks:tamilwebdunia 19.1.2010

Friday, January 15, 2010

இந்திய விவசாயத்தை அழிக்க வந்திருக்கும் மான்சாண்டோ

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்
வெள்ளி, 15 ஜனவரி 2010( 11:11 IST )

பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.


webdunia photoWD
சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.

எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.

“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.

இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.


WD
பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.

பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.

1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.

“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate agriculture)உதவுவதே என்றார். நன்றி:தமிழ் வெப்துனியா 15.1.2010

Wednesday, January 13, 2010

சுதேசிச் சிந்தனை:5 இந்தியாவைக் காப்பாற்றிவரும் குடும்பம் என்ற அமைப்பு:இந்துமதத்தின் வேர் குடும்பம் என்ற அமைப்புதான்


சுதேசிச் சிந்தனை:5 இந்தியாவைக் காப்பாற்றி வரும் குடும்பம் என்ற அமைப்பு

இந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் உள்ளன.ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் ஒரு தம்பதியும் அதிக பட்சம் 150 பேர்களும் இருக்கின்றனர்.

சங்கரன்கோவில் அருகே இருக்கும் ஒரு கிராமம் கூட்டுக்குடும்பமாக இருந்தது.ஒரு கணவன்,9 மனைவி,110 பிள்ளைகள் என அந்த குடும்பத்தில் மொத்தம் 120 பேர்கள் அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,மச்சான்,மாமா,அத்தை,சித்தி,பெரியம்மா,பேரன்,பேத்தி என வாழ்ந்து வந்தார்கள்.அந்த குடும்பத்தின் தலைவர் கி.பி.1980 ஆம் ஆண்டு மறைந்த பின்பே தனியாக சமைக்கவும்,வாழவும் துவங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருப்பது வத்திறாயிருப்பு.இது ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சியாகும்.இந்த பேரூராட்சியின் ஒரு அங்கமே W புதுப்பட்டி என்ற கிராமம் ஆகும்.இங்கு இருக்கும் ஒரு குடுமத்தின் பெயரே 16 பிள்ளைக்காரி குடும்பம் ஆகும்.ஒரே ஒரு கணவன் மனைவிக்கு மொத்தம் இருப்பது இன்றும் 16 குழந்தைகள்.தற்போதுதான் 6 ஆம் குழந்தைக்கு திருமணம் செய்துள்ளனராம்.இவையெல்லாம் வெறும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள்.இவற்றை விட பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்ன வென்றால் எந்த வித பொருளாதார நெருக்கடியையும் தாங்கி வல்லரசு நிலைக்கு நமது பாரத நாடு வந்ததற்குக் காரணம் குடும்பம் என்ற அமைப்புதான்.அது எப்படி? பார்ப்போம்.

உங்கள் தெரு அல்லது கிராமம் அல்லது பகுதியில் உள்ள வசதியான குடும்பங்களை கூர்ந்து கவனியுங்கள்.அங்கு பெரும்பாலும் அந்தக்குடும்பத்தின் குடும்பத்தலைவியின் கையிலேயே மொத்த அதிகாரமும் இருக்கும்.அப்படி இருக்கும் குடும்பங்களின் வருமானம் 10 முதல் 25 வருடங்களுக்குப் பாதுகாக்கப்பட்டு அவை அசையாத சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கும்.அந்த அம்மா என்ன சொன்னாலும் அவளின் கணவன் மறுக்கவே மாட்டார்.ஏன் எனில்,அவளின் கணவனுக்குத் தெரியும்.தனது மனைவி எடுக்கும் சிறு முடிவு அல்லது முக்கிய முடிவு எதுவாக இருந்தாலும் சரியாக இருக்கும் என்று.ஆனால்,இதை தனது உயிர் நண்பனிடம் கூட ஒரு தடவை கூட சொல்லியிருக்க மாட்டான்.போடா பொண்டாட்டிக்கு பயந்தவனே என பலரும் அவனை நக்கல் செய்திருப்பர்.ஆனாலும் அவனுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.எனக்குத் தெரிந்து ஒரு தி.மு.க.நகர் மன்றத் தலைவராக இருப்பவர், பல தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்.அரசியலில் இவரை பார்த்தாலே நடுங்குவர்.ஆனால்,இவர் அடிக்கடி தனது மனைவியிடம் அடி வாங்குவார்.இவர் திருமணம் செய்த போது குடிசைவீட்டில் இருந்தவர்.இன்று கோடிகளில் புரளுபவர்.

இவர் வசிக்கும் பகுதியிலேயே இன்னொரு அரசியல்வாதி! பரம்பரை பணக்காரர் அல்ல.அரசியல் சம்பாதித்த கோடிகளை, மனைவியையே அடக்கி ஆண்டதால் அத்தனையையும் இழந்துவிட்டார்.எப்போதும் ஆல்கஹாலில் மிதப்பவர்.
முதலில் சொன்ன அரசியல்வாதி போல நமது பாரதப்பொருளாதாரம் இருக்கிறது.இரண்டாவதாக சொன்ன அரசியல்வாதியைப் போல மேல்நாடுகளின் பொருளாதாரம் செயல்படுகிறது.சரி! இதற்கும் பொருளாதார வலிமைக்கும் என்ன தொடர்பு?

ஒரு சோப் கம்பெனி ஒருவர் ஆரம்பித்தால், அதன் மூலமாக 10 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதற்குத் தேவையான முதலீடு வெறும் ரூ.2,00,000/-மட்டுமே.ஆனால், மறைமுகமாக உருவாகும் வேலைவாய்ப்பு சுமார் 120 பேர்களுக்கு.இந்த இரண்டு லட்ச ரூபாய்கள் அரசு வங்கி,தனியார் வங்கி தரும் சதவீதம் வெறும் 1% ஆக இருக்கின்றது நமது இந்தியாவில்!!!
ஆக,மீதி 95% தொழிற்கடன் எப்படி உருவாகிறது?குடும்பங்களின் சேமிப்புக்களே தொழில் முதலீடாக மாறுகின்றது.நமது அம்மாக்கள், சித்திகள்,சகோதரிகளின் சேமிப்புக்களே இந்தியாவின் தொழில்வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.4% அளவுக்கான தொழிற்கடன் சுயசேமிப்பு மற்றும் நண்பர்கள் அல்லது மனைவியின் சேமிப்பாகக் கிடைக்கின்றன.

சில புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.இந்தபுள்ளி விபரங்கள் பிஸினஸ் பத்திரிகைகள்,இந்திய வங்கி அமைப்புக்கள், தேசிய புள்ளிவிபர வெளியீடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள குறைந்த பட்ச இருப்பு( மினிமம் பேலன்ஸ்)த் தொகைகளின் மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ரூ.38,00,000 கோடிகள்.

எல்.ஐ.சி.ஆப் இந்தியாவில் ஒழுங்காக கட்டாமல் விடப்பட்ட பிரீமியத்தொகைகளின் மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ரூ.3,000 கோடிகள்.

நமது அம்மாக்கள் நமது அப்பாக்களுக்கும் நமக்கும் தெரியாமல் அவசரத் தேவைக்கு என கடுகுடப்பாக்களில் சேமித்துவைத்திருக்கும் தொகையை இந்திய அரசு நிதித்துறை மதிப்பிட்டுள்ளது.அந்தத் தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
ரூ.50,000 கோடிகள்!
நூறு CIAக்கள் வந்தாலும் இந்த பழக்கத்தை நிறுத்த முடியாது.
.

இதனால், இரண்டாம் வகுப்பு கூட தாண்டாத 5000 திருப்பூர் தொழிலதிபர்கள்தான் உலக பனியன்,ஜட்டி சந்தையில் 85% அளவுக்கு கைப்பற்றியுள்ளனர்.இந்த மாபெரும் சாதனைக்குக் காரணம் கொங்குவேளாளர்களின் இந்து வாழ்க்கை முறையே காரணம்.
இதேபோல், டெக்ஸ்டைல் என் ஜினியரிங், ஸ்பின்னிங் தொழிலில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை புகழ் பெறக்காரணம் நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாயத்தின் இந்து வாழ்க்கை முறையே!!
தமிழ்நாட்டின் பலசரக்கு வணிகம் 80% அளவுக்கு வளர்த்தெடுப்பதில் நாடார் சமுதாயத்தின் பங்கு மிக முக்கியமானது.இவர்களின் சமுதாய ஒற்றுமையே நம்மை வல்லரசு நிலைக்கு உயர்த்திவருகின்றது.

இந்தியாமுழுக்க உணவுத்தொழிலில் 90 % செட்டியார் மற்றும் பட்டேல் இனத்தவர்களின் கடும் உழைப்பும் இந்துப் பாரம்பரிய வாழ்க்கை முறையுமே காரணம்.
திருப்பூரைப் போல இந்தியா முழுவதும் சுமார் 400 சிறுதொழில் நகரங்கள் உள்ளன.இவற்றில் சிவகாசி,கோயம்புத்தூர்,ஈரோடு என தமிழ்நாட்டில் சில உதாரணங்களைச் சொல்லலாம்.சிவகாசியின் தீப்பெட்டிகள் இந்தியாவின் தீப்பெட்டிச் சந்தையில் சுமார் 90% அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளன.

ஆக, எப்போது அரசியலில் ஜாதி நுழைந்ததோ அப்போதும், எப்போது ஜாதியில் அரசியல் நுழைந்ததோ அப்போதும் மாபெரும் அழிவுகளை சந்தித்து வருகிறோம்.

குடும்ப அமைப்பால் ஜெயித்த ஒரு நிறுவனத்தை இங்கு கூற விரும்புகிறேன்:
திருப்பூரில் ஒரு குடும்பம்.அவர்களின் முதல் மகனுக்கு படிப்பே வரவில்லை.இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்துகிறார் அவனது அப்பா.கூடவே,அவனை மறுநாள் முதல் ஒரு டீக்கடைக்கு வேலைக்கு அனுப்ப முடிவெடுக்கிறார்.இந்த 7 வயது சிறுவன் அன்று இரவே தனது பாட்டியைத் தேடிச் செல்கிறான். “பாட்டி எனக்கு படிப்பு வரலைங்கறதால என்னை டீக்கடையில் வேலைக்கு அனுப்பப் போறாராம் அப்பா”எனக்கூறுகிறான்.
பாட்டி அப்போதே தனது மருமகனைத் தேடி வருகிறார்.
“மாப்ளே! என் பேரனை நீங்க எப்படி டீக்கடைக்கு அனுப்பலாம்?”
“அவனுக்கு படிப்பு வரலை.அதனால டீக்கடைக்கு அனுப்பறேன்”
“வேற எங்கேயாவது அனுப்புங்க”
அப்பாவின் முடிவு பாட்டியின் யோசனையால் மாறுகிறது.பனியன் கம்பெனியில் 7 வயது சிறுவன் வேலைக்குச் சேர்க்கப்படுகிறான்.10 ஆண்டுகள் கழிகின்றன.பனியன் கம்பெனியின் சகல நிர்வாக சூட்சுமங்களும் 7 வயது சிறுவனுக்கு 17 வயதுக்குள் அத்துப்படியாகின்றன.18 ஆம் வயதில் தனது அப்பாவிடம் கேட்கிறான்.

“அப்பா நான் பனியன் கம்பெனி ஆரம்பிக்கப்போறேன்.”
“ஒழுங்கா வேலையைப் பாரு.”

மறுபடியும் 18 வயது இளைஞர் பாட்டியைத் தேடிச் செல்கிறார்.பாட்டி தனது பேரன் மீதான பாசத்தில் தனது தங்க நகைகளையெல்லாம் தருகிறார்.கூடவே, கேள்விகளும் கேட்கிறார்.
“எப்படிப்பா கம்பெனியைநிர்வாகிப்பே?”
“பாட்டி, பி.ஏ.படிச்ச ஒருத்தர் எங்க கம்பெனியில் மேனேஜராக இருக்குறார்.அவரை பார்ட்னராக சேர்க்கலாம்னு இருக்கேன்”
“சரிப்பா நல்லா வளர்க”

ஆறே மாதம் தான்.அந்த பி.ஏ.படித்த மேனேஜரும்,இந்த 18 வயது இளைஞரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிக்கின்றனர்.பி.ஏ.படித்த மேனேஜர் இந்த 18 வயது பார்ட்னரிடமிருந்து பணத்தை திருடி ஓடியே போய்விட்டான்.மீண்டும் பாட்டியை சந்தித்து என்ன செய்யட்டும் எனக் கேட்கிறார் 18 வயது.

பாட்டியின் ஆறுதல் தான் அந்த இளைஞனை திடப்படுத்தியது.என்னிடம் 4 ஏக்கர் நிலம் இருக்கு.உனது அம்மாவின் பங்கு 2 ஏக்கரை உனக்குத்தருகிறேன் எனக்கூற அதன்படி 2 ஏக்கர் பாரம்பரிய சொத்து பனியன் கம்பெனியின் முதலீடாக மாறுகிறது.
இன்று அந்த பனியன் கம்பெனியே பனியன் தொழிலில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வைக்கிங்!!!

இதுபோல சுமார் 1,00,000 நிஜக் கதைகள் நம்மைச் சுற்றிலும் உண்டு.பெரும்பாலும் தமிழ்நாட்டில் தனது தம்பி அல்லது அண்ணன்மார்களுக்கு தனது நகைகளையும்,சேமிப்பையும் தொழில்முதலீடாக வழங்கும் அக்காக்களும் தங்கைகளுமே அதிகம்.ஆக,குடும்பம் அமைப்பே இந்தியாவின் பொருளாதார வலிமையாக இருக்கிறது.

இந்த குடும்ப அமைப்பைச் சிதைப்பதில் செல்போன் கேமிராக்கள்,இண்டர்நெட்,ஐ.டி.நிறுவனங்களின் அமெரிக்க நிர்வாக முறை, வெளிநாட்டு வங்கிகள்,வெளிநாட்டு இன்சூரன்ஸ்கள்,அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.எல்.எம். எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன.இவற்றை நாம் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும்.

சுதேசிச் சிந்தனைகள்:4 இந்திய மக்கள்தொகை வளர்ச்சி இந்தியாவுக்கு பிரச்னையா?


சுதேசிச் சிந்தனைகள்:4 இந்திய மக்கள்தொகைப்பெருக்கம் ஒரு பிரச்னை?!

இப்படித்தான் நாம் நமது பொருளாதாரம் பற்றி நமது பாடத்திட்டத்தில் படித்திருக்கிறோம்.ஆனால் அதில் ஒரு நிஜமான திருத்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.அது என்ன?
இந்திய மக்கள்தொகைப்பெருக்கம் அமெரிக்க ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு ஒரு பிரச்னை! உலக அமைதிக்கு ஒரு அவசியம்!!! என இன்றுமுதல் வாசிப்போம்.எப்படி இது சாத்தியம்?

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஐரோப்பாவில் மக்கள்தொகை வளர்ச்சி 20 % ஆக இருந்தது. கி.பி.1950 களில் அந்த வளர்ச்சி 11 % ஆக வீழ்ந்தது.இன்னும் 100 ஆண்டுகளில் கி.பி.2110 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை வளர்ச்சி 3 % ஆக தொபுக்கடீர்!!!இப்போதே ஐரோப்பாவில் பல நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி ஒற்றை இலக்க சதவீதத்திற்கு வந்துவிட்டது.
அமெரிக்காவிலும் இதே நிலைதான்.இந்த நிலை எப்படி வெள்ளைத் தோல்நாடுகளுக்கு வந்தது?

பெண் விடுதலை,பெண் சுதந்திரம் என கி.பி.1900 இன் ஆரம்பங்களில் மேற்கு நாடுகளில் துவங்கியது.இதன் விளைவாகவும்,பைபிளின் கொள்கைப்படி திருமணம் என்பது ஒரு சமுதாய ஒப்பந்தம்.ஆக,அந்த ஒப்பந்தத்தை சர்வசாதாரணமாக்கிவிட்டனர்.
18 வயதுக்குப்பிறகு,மேல்நாடுகளில் ஒரு இளைஞனும்,இளம்பெண்ணும் தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதில்லை.காலையில் கல்யாணம்,மதியம் முதலிரவு . . .ஓ . . . மன்னிக்கவும். . .முதல் மத்தியானம் மாலையில் மணமுறிவு என வேகமாக வாழ்க்கை வாழத்துவங்கினர்.இதனால்,குழந்தைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் அங்கு இல்லை.விளைவு? யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் என்ற நிலை சகஜமாகிப்போனது.எனவே,தனி மனிதனின் அளவற்ற சந்தோஷம், அந்த நாட்டின் வளர்ச்சி,மனித வள வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி என சுழலில் விழ வைத்துவிட்டது.யாரும் சேமிப்பதில்லை.குழந்தை இருந்தால்தானே அதற்கு,அதன் கல்வி, ஆரோக்கியம், சொத்துக்களுக்காக சேமிக்கும் குணம் இருக்கும்.
ஒரு வருடத்தில் சேமிக்கும் மொத்தப் பணத்தையும், அமெரிக்கர்கள் அந்த வருட இறுதிவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று செலவழித்து விடுவர்.ஹாலிவுட் படங்களில் தான் அமெரிக்காவும்,அமெரிக்கர்களும் ரொம்ப நல்லவர்கள் போலவும்,உலக நன்மைக்காக பாடுபடுபவர்கள் போலவும் காட்டுவர்.2012 என்ற திரைப்படத்தில் கூட அமெரிக்க ஜனாதிபதி தனது மக்களுடனே இருந்து சுனாமியில் மடிவதாக காட்டுகின்றனர்.நிஜத்தில் அப்படியா?

இன்று, மேல்நாடுகளில் குப்பை அள்ள, லாரி டிரைவர், முனிசிபாலிட்டி வேலை,மின் அளவு அதாங்க ரீடிங் எடுக்க, டாக்டர், மனோதத்துவ நிபுணர்,சிவில் என்சினியர்,நர்ஸ் என எல்லாவற்றிற்கும் ஆட்கள் தேவை.ஐரோப்பாவில் கி.பி.2020 க்குள் 6 கோடிபேர்கள் இத்தகைய பணிகளுக்குத் தேவை.இந்த 6 கோடி பணிகளுக்கும் ஐரோப்பாவில் வேலைக்குச் சேரப்போவது நமது இந்தியர்கள் மட்டுமே!


சரி! 112 கோடி பேர்களாக இருப்பதால் மட்டும் நாம் வல்லரசாகிவிடமுடியுமா? எப்படி நாம் உலகப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும்,துபாய் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் பாதிக்காமல் தப்பித்து வருகிறோம்?

நல்ல கேள்வி!

நமது தமிழ்நாட்டில் மட்டும் கி.பி.2010 முதல் 2011 க்கான கல்வியாண்டில் செயல்படும் என் ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500! ஒரு கல்லூரியில் 100 மாணவ மாணவிகள் படிப்பார்கள் என கருத்தில் கொண்டால் எத்தனை சிவில் பொறியாளர்கள்,எத்தனை கணினி பொறியாளர்கள்,எத்தனை மெக்கானிக்கல் பொறியாளர்கள்,எத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்கள் உருவாகுவார்கள்.இது ஒரு கல்வியாண்டிற்கு மட்டுமான கணக்கு.ஆக நமது இளைஞர் வளமானது திறமையான கல்வியாளர்கள்,கல்வி அமைப்புக்களால் கூர்திட்டப்பட்டு திறன்மிகுந்த ஒரு சமுதாயத்தையே உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.இவர்களால்தான் இன்று உலகின் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன என்பதே நிஜம்.ஆக, நாம் எப்போதோ இந்த உலகத்தை ஆளத்துவங்கிவிட்டோம்.;

ஒரு மாறுதலுக்கு இப்படி சிந்தித்துப் பார்ப்போமே?!

அமெரிக்காவும்,ஐரோப்பாவும் சேர்ந்து இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு இனி ஒரு ஒப்பந்தம் கூட தர மாட்டோம் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுவோம்.என்னாகும்?
இன்று வரை வெறும் 20,00,000 இந்தியர்கள் தான் ஐ.டி.துறையில் பணிபுரிகின்றனர்.இந்த எண்ணிக்கையானது தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் வாழும் ஜனத்தொகைக்குச் சமம்.அல்லது பின்லாந்து நாட்டின் ஜனத்தொகைக்குச்சமம்.இந்த 20,00,000 பேருக்கும் வேறு வேலை கிடைக்காதா என்ன?

இந்தியப் பங்குச் சந்தையை சுமார் 10 ஆண்டுக்கு தடை செய்வதாக வைத்துக்கொள்ளுவோம்.அமெரிக்கா தனது செல்வாக்கினால்,உலக வங்கி,ஐ.நா.சபை மூலமாக உயிரியல் ஆயுதங்கள் இந்தியா வைத்திருக்கிறது என மிரட்டி இப்படி ஒரு தடையைச் செய்தால் இந்தியாவின் 3 % இந்தியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர்.

இந்தியாவின் ஏற்றுமதியை இதே பாணியில் அமெரிக்கா தடை செய்கிறது என வைத்துக்கொள்வோம்.கி.பி.2011 முதல் கி.பி.2021 வரை இந்தியா உலகின் எந்த ஒரு வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது என நமது கழுத்தை நெறிப்பதாக வைத்துக்கொள்வோம்.அமெரிக்கா நெறிப்பது இந்தியாவின் கழுத்தை அல்ல;இந்தியாவின் கெண்டைக்காலைத் தான் நெரிக்கிறது என்று அர்த்தம்.சுமார் 1,00,000 இந்திய ஏற்றுமதியாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.ஆக, இந்தியாதான் உலகின் ஒரே வல்லரசு! யாரையும் எதற்காகவும் சார்ந்திராத தன்னையும் தனது உழைப்பையும் நம்பி வாழும் சுயச்சார்புள்ள வல்லரசு!

ஒருவேளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்து சீனாவுக்கு இந்தத் தடைகளில் ஏதாவது ஒன்றை விதித்தால் போதும்.சீனா அம்பேல்தான்.

நாம் மட்டும்தான் நம்மை மட்டும் சார்ந்து வாழ்ந்து வருகிறொம்.ஒரே வருத்தம், உலக மயமாக்கலை நாம் தான் ரொம்பவும் பின்பற்றுகிறோம்.கேவலம் பிரதமரையல்லவா இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.

ஆக, இந்தியாவின் பொருளாதார வலிமையும்,பொருளாதார வாழ்க்கையும்,இந்து மதமும் இனி உலகத்திற்குத் தேவை.வெகு விரைவில் இந்துதர்மம் எந்த வற்புறுத்தலும் இன்றி உலக மயமாகும்.இதற்கு இறைவனின் கருணை நமது பாரத நாட்டின் மீது இருக்கிறது.

சுதேசிச் சிந்தனைகள்:3 மரபணு மாற்றப்பட்ட உணவுகள் தேவையா?

சுதேசிச் சிந்தனைகள்:3 மரபணு உணவு உலகிற்கு தேவையா?

மான்சாண்டோ: இந்த அமெரிக்க நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கான விதைகளை உருவாக்கும் பன்னாட்டு பிசாசு.மரபணு மாற்றம் செய்யப்படும் கத்தரிக்காய் பி.டி.கத்தரிக்காய் என அழைக்கப்படுகிறது.இந்த பி.டி.கத்தரிக்காயில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக இருக்கும்.வயலில் வளரும்போது எந்த வித பூச்சித்தாக்குதலும் இராது.எந்த வித நோயும் தாக்காது.அதே சமயம் அளவற்ற விளைச்சல் தரும் என மான்சாண்டோ அறிவித்துள்ளது.ஆனால்,உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

ஒவ்வொருமுறையும் மரபணு மாற்றம் பெற்ற பயிர்களை பயிரிட மான்சாண்டோ நிறுவனத்திடம் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.(முதல் முறை வாங்கிய விதைகளை சேமித்து வைக்கக்கூடாது.அப்படி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்)அதன் விலை பலமடங்கு அதிகம்.
நிஜத்தில் மரபணு மாற்றம்செய்யப்பட்ட பயிர்கள் ,மரபணு திணிக்கப்பட்டவையே!

மான்சாண்டோவின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்:ஜெரால்டு ஆர்.ஃபோர்டு,ஜேம்ஸ் கர்ட்,ரொனால்டு ரீகன் இந்த மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளும் மான்சாண்டோவின் அக்குளில் இருந்தனர்.அந்தளவுக்கு வெள்ளைமாளிகையையே தனது பணசெல்வாக்கால் வளைத்திருந்தனர்.

அக்காலத்தில்,அதாகப்பட்டது கி.பி.1985 வரை மரபணு திணித்த பயிர்களை அமெரிக்காவில் பயிரிட வற்புறுத்தப்பட்டனர்.அந்த பயிர்கள் பயிரிடப்பட்ட வயலின் அருகே இருக்கும் வேறு ஒருவரின் பயிரில் மகரந்தச்சேர்க்கையால் அல்லது பூச்சிகளால் மரபணு திணித்த பயிர்கள் பரவியிருந்தால்,பக்கத்துவயலின் விவசாயி கைது செய்யப்படுவார்.இதற்கு விவசாயக்காவல்துறையை மான்சாண்டோ அமெரிக்காவில் உருவாக்கியிருந்தது.இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்:

கி.பி.2001 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது.அமெரிக்காவில் நோய்கள் இரட்டிப்பானதற்கு மரபணுத்திணித்த உணவுப்பொருட்களின் பரவலே காரணம் என அப்பத்திரிகை குற்றஞ்சாட்டியது.இப்படியொரு குற்றச்சாட்டிற்கு நோய்க் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட ஆவணத்தை நியூயார்க் டைம்ஸ் மேற்கொள் காட்டியது.

அமெரிக்க விஞ்ஞானிகள் நோய் இரட்டிப்பானதற்கு மரபணு திணித்த மக்காச்சோளம் மற்றும் சில உணவுப்பொருட்களே! என்றும் இவற்றை பரவவிட்ட மான்சாண்டோ நிறுவனமே காரணம் என விவரித்தது.

ஆவணங்கள் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.மரபணு திணிப்பு உணவுப்பொருட்களை உண்டதால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேர்கள்.இவர்களில் மருத்துவமனை சிகிச்சைகளால் பலனளிக்காமல் இறந்தவர்கள் 5000 பேர்கள்.

இங்கிலாந்தில் “யார்க்” சத்துணவு ஆய்வுக்கூடம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் சோயா மொச்சை உண்டதால் ஏற்படும் ஒவ்வாமை 50% அதிகரித்துள்ளது.அத்தகைய நோய் அதிகரித்த காலமும் மரபணு திணிக்கப்பட்ட சோயா மொச்சை புகுத்தப்பட்ட காலமும் ஒத்துப்போனது.

இத்தனைக்கும் உலகின் நம்பர் 1 பிராடு கம்பெனி என்ற மாபெரும் பெயரை பெற்ற நிறுவனமே மான்சாண்டோ நிறுவனம் ஆகும்.
அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நமது பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவிற்குப்போய் இந்திய அமெரிக்க வேளாண் அறிவியல் ஒப்பந்தம் அமெரிக்க வியாபார நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.மரபணு திணிப்புப் பயிர்களால் மனிதர்களின் மரணம் நிச்சயிக்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் அவற்றை அனுமதிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் தலைகீழாக இருக்கிறது.

எந்தவகையான உணவு தொடர்பான சோதனையும் செய்துபார்க்கப்படாமலேயே மான்சாண்டோ மகிகோ கம்பெனி உற்பத்தி செய்த பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கப்படுகிறது.ஏறத்தாழ 11 கோடி உழவர் குடும்பங்கள் பயிர் செய்யும் பயிர் கத்தரிக்காய்.
உழவர் அல்லாத குடும்பங்களிலும் கூட தொட்டியில்,பெட்டிகளில்,மாடிகளிலும்,வீட்டுத் தோட்டங்களிலும் பயிர்செய்து பறித்து உண்ணக்கூடிய காய்கறியான இது 112 கோடி இந்தியர்களின் உணவுப்பண்டமாகும்.
இதில் மரபணுவைத் திணித்து,இந்தியாவின் உணவுச்சந்தையை தனது கைக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது அமெரிக்க பகாசுர மான்சாண்டோ.

எதிர்காலத்தில், இந்தியாவின் உணவுப்பயிர்கள் அனைத்தும் கிலோ ரூ.10,000/-க்கு விற்றால் சாதாரண இந்தியர்களின் நிலை என்னவாகும்?

Tuesday, January 12, 2010

சுதேசிச் சிந்தனைகள்:2

சுதேசிச் சிந்தனைகள்:2 பாரதத்தின் பெருமைகள்

அரசியல் சுதந்திரம் வாங்கிய போது பாரத்தில் 6,00,000 கிராமங்கள் இருந்தன.தற்போது 3,50,000 கிராமங்கள் தான் உள்ளன.ஒவ்வொரு கிராமமும் சுயச்சார்புள்ள பொருளாதாரக்குடியரசாக இருந்தது.
இந்த சுயச்சார்புக்குடியரசை சிதைப்பதில் பிரிட்டன் முழுமையாக வெற்றி பெற வில்லை;ஒரு வேளை அப்படி வெற்றி பெற்றிருந்தால், தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பில் இருந்து போராடியிருப்போம்.

ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி,கோதுமை,மைதா,பயறு வகைகள், காய்கறிகள், ஆடைகள்,நகைகள்,துணிமணிகள், சொகுசுப்பொருட்கள் என அனைத்துமே அந்த குடும்பம் வாழும் கிராமத்திலேயே கிடைத்துவந்தது.சுமார் 20,000 ஆண்டுகளாக!!!800 ஆண்டுகளாக இந்தியாவைக் கைப்பற்றப் போராடிய இஸ்லாமிய அரசுகள்,மன்னர்களால் கூட இந்த கிராமீய சுயச்சார்புப்பொருளாதாரத்தை சிதைக்க முடியவில்லை.
அதே சமயம்,நமது பாரதத்தில் மட்டும் 4,00,000 அரிசி ரகங்கள் நாம் சுதந்திரம் வாங்கும் வரை புழக்கத்தில் இருந்தன.பசுமைப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்க ஐரோப்பிய உரக்கம்பெனிகள் 3000% வளர்ச்சி அடைய இந்தியாவின் அறிவுஜீவிகள் வழிசெய்தனர்.பசுமை புரட்சி துவங்கும் வரை பாரதத்தில் 2,00,000 அரிசி ரகங்கள் இருந்தன.ரசாயன உரங்கள் வந்தன.18,000 விதமான விவசாய உறுதுணைதரும் சிறுபூச்சியினங்கள் சுவடுகளின்றி அழிந்தன.உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம்.
அதே சமயம்,இன்று 99 % சிசேரியன் பிறப்புகளுக்குக் காரணமும் இந்த ரசாயன உரங்களால் வளர்ந்து ரசாயன உரங்களுடன் சாப்பிடும் நமது உணவுப்பொருட்களே!!! இது பற்றி விரிவாக பிறகு.



150 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு ஒரே மாதிரியான மண்ணும்,தண்ணீர்குணமும் இருந்தன.அதற்குத்தகுந்தாற்போல,வட்டார விவசாயக்கருவிகள் புழக்கத்தில் இருந்துவந்தன.100 வயதைக்கடந்து வாழும் மனிதர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கிராமத்திலும் 25% அளவுக்கு இருந்தது.வீட்டுக்கு ஒரு ஜோதிடர் இருந்தார்.


கிராமங்கள் சுயச்சார்புடன் திகழ்ந்ததால், மன்னனுக்கு பாதுகாப்புத் தருவதைத் தவிர வேறு வேலை இல்லாமலிருந்தது.எனவேதான், தமிழ்நாட்டில் சுமார் 36,000 பெரிய கோவில்கள் இன்று(பல ஆயிரம் ஆண்டுகள் வயதை உடையவை) உயிர்வாழ்கின்றன.ஆம்! கோவில் கட்டுவதை தனது கடமைகளில் ஒன்றாக அக்கால தமிழக மன்னர்கள் கொண்டிருந்தனர்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற அளவுக்கு ஆராய்ச்சி செய்யும் எண்ணம் மதுரை மன்னனுக்கு இருந்தது.

இன்றோ, நம்மிடம் இருப்பவை 300 அரிசி ரகங்கள் மட்டுமே!ஆதாரம்:உங்கள் பகுதியில் வாழும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்வோர் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.முழு விபரங்கள் கிடைக்கும்.

விவசாயத்தில் 10,000 வருடப் பாரம்பரியமும்,அனுபவமும் இருந்த நாம்,வெறும் 100 வருடங்களில் அந்த அனுபவத்தொகுப்பை மெக்காலே கல்வித்திட்டம்,பேப்பரில் பி.எஸ்.ஸி., அக்ரி படித்ததால் இழந்தோம்.

இன்று,2010 ஆம் ஆண்டில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யுமளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம்.உணவுப்பொருட்களில் நாம் தன்னிறைவை எட்டாவிட்டால், நாம் சோமாலியா ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில்,நமது மக்கள் தொகை 106 கோடிகளாகும்.உலகில் உள்ள எல்லா நாடுகளிடமும் அரிசி, கோதுமை வாங்கினாலும்,அப்படி வாங்கி,கப்பலில் நமது இந்தியத்துறைமுகங்களில் இறக்கி,மத்திய அரசின் உணவுக்குடோன்களுக்குக் கொண்டு சென்று, ரேஷனில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க எவ்வளவு செலவாகுமோ,அது நாம் உணவில் மொத்தத் தன்னிறைவை எட்டும் செலவை விட மூன்று மடங்கு அளவாகும்.
ஆக, உலக வங்கி, அமெரிக்கா,சீனாவின் சதி,பாகிஸ்தானின் தீவிரவாதம் இத்தனையையும் மீறி ரொம்ப உஷாராக இல்லாவிட்டால், பசி இந்த நாட்டின் தேசிய அடையாளமாகிவிடும்.

சுதேசிச் சிந்தனைகள்:1 அமெரிக்கா எப்படி திவாலாகும்?

சுதேசிச் சிந்தனைகள்:1.அமெரிக்கா எப்படி திவாலாகும்?

அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்!
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.இப்போது அந்த வங்கியை நமது ப.சிதம்பரத்தாலோ,மான் டேக்சிங் அலுவாலியாவாலேயோ,மன்மோகன்சிங்காலேயே காப்பாற்ற முடியுமா?
இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.
இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!
அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

Friday, January 8, 2010

பாம்பாட்டிசித்தர்

சித்தர்களில் போகர் எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானவர், பாம்பாட்டி சித்தர். காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.




பாம்பாட்டிசித்தர் வாழ்க்கை குறிப்பு

இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது.

அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை.

பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.

‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.


‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை.

அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர்.

சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’

_ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார்.

செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள்.

பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.

எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள்.


கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது.இவர் சித்தாருடம் என்னும் நூலை எழுதியுள்ளார்.நன்றி:தமிழ் விக்கிபீடியா,108 சித்தர்கள்

கோரக்கர் சித்தரின் வாழ்க்கை

சித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர். விபூதி எனில் சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள்.

ஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை... ஆனால் அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த உலகத்தில் காத்திருந்தது.


இந்தப்பட்டியலில் கோரக்கரையும் இவரது குருவான மச்சமுனியையும் சேர்க்கலாம்.








மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன.

எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி.

இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். எப்படி? மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள்.

ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார். ‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள்,

பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்? சில காலம் சென்றது.

மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது.

நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்.

அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார்.


அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார்.


அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார்.

பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.