Sunday, October 7, 2018

உலகம் முழுவதும் பரவியிருக்கும் முருக கடவுள் வழிபாடு!



உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் படைத்தவர் உருவம் இல்லாத ஈசன்! அந்த ஈசன் சிவலிங்க வடிவில் உலகம் முழுவதும் அருள்பாலித்துவருகின்றார்;கலியுகம் உருவாகும் வரையில்,இன்றைக்கு 5119 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1000 கோடி சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;தற்போது,பாரத நாட்டில் மட்டும் 1 கோடி ஆலயங்களாக மிஞ்சி இருக்கின்றன;ஈசனின் முதல் படைப்பு தான் முருகக் கடவுள்!

ஈசனையும்,முருகனையும் மனிதனாகிய நாம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்றால்,குறைந்த பட்சம் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;அப்படி விடாமுயற்சி செய்தால்,12 வது அல்லது 13 வது பிறவியில் சிவதரிசனம் அல்லது முருகக் கடவுள் தரிசனம் கிடைக்கலாம்;

ரெஜித்குமார் என்பவர் திருச்சூரில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றார்;இவருக்கு சிறுவயது முதல் முருக பக்தி அதிகம்;இவரது தாயும்,தந்தையும் இறந்த பின்னர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்;அதன் விளைவாக,நாத்திகவாதியாக மாறிவிட்டார்;அப்போதும்,அவரது தேடல் தொடர்ந்திருக்கின்றது;அதன் முடிவாக மீண்டும் முருக பக்தராகவும்,ஆராய்ச்சியாளராகவும் ஆகியிருக்கின்றார்;
பழனிமலைக்கு கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக வருகை தந்து வழிபடுவது வழக்கம்;இது குமரிக்கண்டம் தோன்றியதில் இருந்து (சுமார் 50,00,000 ஆண்டுகள்) இன்றுவரை தொடருகின்றது;

2006 முதல் 2013 வரை திரு.ரெஜித்குமார் உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்;முருக கடவுள் வழிபாடு உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே பயணம் செய்து ஆதாரங்களையும் வரலாற்றுப் பூர்வமாகவும்,தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் திரட்டிவிட்டார்;

குமரிக் கண்டம் என்ற லெமூரியக் கண்டத்தில் குமரக் கடவுள் என்ற முருகக்கடவுள் வழிபாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது;மனிதன் நாகரீகம் அடைந்து முதன் முதலில் வாழ்ந்த இடம் குறிஞ்சி!இங்கே வேட்டையாடுவதுதான் மனிதனின் ப்ரதான தொழில்! வேடர் குலப் பெண் வள்ளியை முருகக் கடவுள் திருமணம் செய்தார் என்று வாசித்திருக்கின்றோம்;இதுதான் முதல் ஆதாரம்;


பூடான் நாட்டில் டைகர் மலையானது,திபத் மதத்தின் முதல் மத குரு (ரிம்போச்சே) பத்ம சம்பவர் வாழ்ந்த இடம் ஆகும்;இங்கே முருகக் கடவுள் வழிபாடு இருந்திருப்பதை பத்ம சம்பவர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது;
பாலித் தீவு இந்தோனோஷியாவில் ஒரு பகுதி ஆகும்;இங்கே புரா பெசாகி(PURA BESAKIH) 86 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன;இங்கே,வாசுகி என்ற நாகம் முருகக் கடவுளை வழிபட்டது;இப்பகுதியில் காணப்படும் புராணக் கதை மூலமாக இதை உணரலாம்;


தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் தி ட்ரூத் (Sanctuary of Truth) ஆலயம் சென்ற போது,அங்கிருந்த பழமையான ஓவியத்தில் இருந்த திரு உருவம் முருகப் பெருமானின் ஆதி வடிவை ஒத்திருந்தது;இதை அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்;

இங்கிலாந்தின் டிராகன் மலையின் மண்ணுக்கும்,இலங்கையின் கதிர்காம மண்ணும் ஒரே மாதிரியான மண் அமைப்பைக் கொண்டிருக்கின்றது;

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள நீல மலைத் தொடர்களில் (Blue Mountain) செய்த ஆய்வுகளின் முடிவாக குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பெரும் யுத்தத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன;குமரிக்கண்டத்து மக்கள் எப்போதும் வடக்கு நோக்கியே திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபடுவது வழக்கம்;தினமும் காலையில் வடக்கு நோக்கி(இன்றைய கன்னியாக்குமரியில் இருந்து 2800 கி மீ வரை பரவியிருந்தது குமரிக்கண்டம்) கை எடுத்து கும்பிட்டுவிட்டே அன்றாடப் பணிகளைத் துவக்குவது வழக்கம்;குமரிக்கண்டத்தின் வடக்கு எல்லையில் உயரமான மலைப்பகுதியாக கெந்தமாதன பர்வதம் விளங்கியிருக்கின்றது;1600 களில் இது கடலில் மூழ்கியதால் தான் இன்றைய செந்திலாண்டவர் கோவிலை மூன்று சாதுக்கள் திருச்செந்தூரில் கோவிலாக கட்டினார்கள்;படகோட்டிகள் மூலமாக,திருச்செந்தூர் கோவிலுக்கு நேர் கிழக்காக 2.5 கி மீ பயணித்தால்,கடலுக்குள் மூழ்கி இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றுச் சுவரின் மேல் பகுதியைத் தொட்டுக் கும்பிட முடியும்;


திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வழிபட்டுவிட்டு,முருகக் கடவுள் அன்றைய போர்க்களத்தில் 2000 கி மீ தொலைவு வரை போரிட்டவாறே சென்று இன்றைய ஆஸ்திரேலியாவின் நீல மலைப்பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்திருக்கின்றார்;ஒரு ராணுவம் 2000 சதுர கி மீ பரப்பளவுக்கு பரவியிருந்து போரிட்டு இருந்தால் எத்தனை கோடி போர்வீரர்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள்!!!


நீலமலையில் ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப் பெருமானின் திருப்பாதம்  பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்;
தென் கொரியா,வடகொரியா,மலேசியா,சிங்கப்பூர் என தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் முருகக் கடவுளின் வழிபாடும் சித்தர் பெருமக்களின் நடமாட்டங்களும் இன்று வரை அதிகமாக இருக்கின்றன;


ஆதியில் குமரிக் கண்டத்தில் தோன்றிய குமரக்கடவுள் வழிபாடு,உலகம் எங்கும் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பிக்கும்;அப்போது,உலகில் சத்தியமும்,தர்மமும் ஓங்கி நிற்கும்;


லயன் மயூரா ராயல் கிங்டம் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகின்றார்;நன்றி:சக்தி விகடன்,பக்கங்கள் 78 டூ 81,வெளியீடு 9.10.2018 மற்றும் பல முருக பக்தர்கள் மற்றும் முருகக் கடவுள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் வெளியீடுகள்

வேலுண்டு;வினையில்லை;மயிலுண்டு;பயமில்லை;



ஒரு கோடி முறை முருகா,முருகா என்று இப்பிறவிக்குள் யார் ஜபிக்கின்றார்களோ அவர்களுக்கு முருக சித்தர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கத் துவங்கும்;

Tuesday, October 2, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 2.10.2018 செவ்வாய்க்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை இருக்கின்றது.

 செவ்வாய்க்கிழமை   இராகு காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 31.10.2018 புதன் மதியம் 12 மணி முதல் 1.11.2018 வியாழன் காலை 9.38 வரை