Sunday, February 28, 2016

மாசி மாத தேய்பிறை அஷ்டமி 1.3.16 செவ்வாய் மதியம் முதல் 2.3.16 மதியம் வரை!



 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;இந்தத் தேய்பிறை அஷ்டமியானது திங்கட்கிழமையன்று வருவதால் ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;

இவர்கள் அனைவரும் 1.3.16 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ஆரம்பித்து,2.3.16 புதன்கிழமை அன்று மதியம் வரை அமைந்திறது.
இரண்டு கிழமைகளிலும் ராகு கால நேரம் தேய்பிறை அஷ்டமித் திதிக்குள் அமைந்திருக்கின்றது;
செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 4.30க்குள்ளும்;
புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 1.30 வரையிலும்;

எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

தினமும் துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவ அஷ்டகம் 33 முறை வீட்டிலேயே முறைப்படி ஜபித்துவருவதன் மூலமாக நீண்டகாலக் கடன்,நீண்டகாலமாக வராமல் இருக்கும் கடன் இவைகளைத் தீர்க்க முடியும்;கடந்த சில ஆண்டுகளில் பலர் முறைப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வீட்டிலேயே வழிபட்டு வளமான வாழ்க்கையை அடைந்துள்ளனர்;

அடுத்த தேய்பிறை அஷ்டமி:31.3.16 வியாழக்கிழமை வர இருக்கின்றது;

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!


Monday, February 22, 2016

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 

சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.

3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.


ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.


ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.




ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?

பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)


இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)

ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.
தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.



முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!


உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)                           

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது = பாகம் 3




+2வில் தொழிற்கல்வி பாடத்தினைப் படித்தவர்கள் தொழில் நுட்ப உயர்கல்வி வரை பயில வழிவகை செய்யப்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் உள்ளவர்களும் பெரும் பணக்காரர்களும் தங்கள் வீட்டு பராமரிப்பு வேலைகளையும்,பழுது பார்ப்பு வேலைகளையும் தாங்களே செய்து கொள்கின்றனர்;அதனை அவர்கள் பெருமையுடன் செய்கின்றனர்;

ஆனால்,நம் நாட்டில் இதை கேவலமாக நினைப்பதால்,வீட்டில் ஏற்படும் சாதாரணப் பழுதுகளுக்கும் வெளி ஆட்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.இதனால்,கீழ் நிலை பணிகளுக்கு நிறைய ஆட்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.அதனால்,உயர் நிலை தொழில் நுட்பத்தைக் கற்றவர்கள் குறைவாக இருக்கிறது,இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து,சாதாரணர்களுக்கும்,சிறு தொழில் நுட்பப் பயிற்சி அளிக்க கொள்கையில் வழி வகுக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உபகுழு தொழில் கல்வியை எட்டாம் வகுப்பில் இருந்து அறிமுகப்படுத்தவும் இந்தப் பணியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தவும்,பயிற்சிகளை மாநிலம்,மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய 3 நிலைகளில் செயல்படுத்தவும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது போல தொழில் திறன் பெறும் உரிமைச்சட்டத்தினை இயற்றிடவும் பரிந்துரை செய்துள்ளது.

தனி நபர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்ற கருத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய மத்திய அரசு, இத்திட்டத்தை அதற்கேற்றாற் போல வகுத்திருந்தாலும் தனி நபர் முன்னேற்றம் என்பது ஊதியத்திற்கு வேலை செய்ய ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல;கற்ற திறனை சுய தொழில் ஆரம்பிக்கவும் பயன்படுத்தப் படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு கவனமாக உள்ளது.

சுய தொழிலுக்கான திறனை வளர்த்துக்  கொள்ளுதல்,அந்தத் திறனின் அடிப்படையில் சுயதொழிலை ஆரம்பிக்க மத்திய அரசு ஆரம்பித்துள்ள முத்ரா வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என இரண்டு அம்சங்களும் இணையும் போது நம் இளைஞர்கள்,இளம் பெண்களின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் அமையும் என்பது உறுதி.

திறன் மேம்பாட்டுக் கொள்கை அமலாக்கம் என்பது 3 வழிகளில் அமையும்.பள்ளியில் இருந்தும்,கல்லூரியில் இருந்தும் படித்துவிட்டு fresher ஆக வெளிவருபவர்களுக்கு என ஒரு வகைப் பயிற்சியளிக்கப்படும்.இதற்காக Labour Market Information System மூலம் நாட்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வருபவர்கள் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இருக்கக் கூடிய தொழில்களின்  போக்கு,அதற்குத் தேவையான திறன் கள்,தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பற்றிய புள்ளிவிவரங்களை உலக மட்டம்,தேசிய மட்டம்,மாநில மட்டம் என வகைப்படுத்தி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைகள் உதவும்.

அடுத்ததாக,மாறிவரும் சூழ்நிலையில் வழக்கொழிந்து போன தொழில் நுட்பங்களில் திறன் படைத்தவர்களை புதுத் திறன் களை கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு திறன் பெற்றவர்கள் வேலையில் சேரும் பொருட்டு தேசிய அளவில் ஒரே சீரான முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.
முக்கியமாக +2வில் தொழிற்கல்வியை ஊக்கப்படுத்துவதாக இக்கொள்கை அமையும்.

தொழிற்பயிற்சி பெறுபவர்கள் வேலையில் சேர்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திடும்;மேலும் பிரதம மந்திரியினால் நேரடியாக ஒரு அலுவலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்படுவர்;அவ்வாறு நியமிக்கப்பட்டு,திட்ட அமலாக்கம் கண்காணிக்கப்படப் போவதாலும் இந்தத் திட்டம் மோடிஜி அவர்களது ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு,பாரதம் உலகத்தின் தொழில் திறன் தலைநகராகும் கனவு வெகு விரைவில் நனவாகும்;


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 8,9,10,வெளியீடு செப்டம்பர் 2015

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது=பாகம் 2


ஒரு இளைஞர் தனது தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ள அரசாங்கத்தின் நிறுவனத்தையோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தையோ அணுகலாம்;அவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும்.இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறை;

அப்பயிற்சி நிறுவனங்கள் தங்களிடம் பயிற்சி பெற்றவர்களுள் 50% பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாக இருந்தது;

ஊழலில் திளைத்தவர்கள் போலியாக ஒரு பயிற்சி நிறுவனத்தை துவக்கி ஒன்றுக்கு பத்தாக அரசாங்கத்திடம் இருந்து கட்டணம் வசூலித்து பயிற்சி பெற்றவர்களில் 50% பேர்களுக்கு தங்களுடன் ஒத்துழைக்கும்,வேலையளிக்கும் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அரசினை ஏமாற்றிவிடலாம்;பயிற்சி பெற்றவர்களும் சொற்ப சம்பளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேலையை விட்டுவிடுவார்கள்;அடுத்த பேட்சில் பயிற்சி பெறுபவர்களை பணியமர்த்த வேறு ஒரு நிறுவனத்தைத் தேட வேண்டாமே! இப்படியாக பயிற்சி நிறுவனங்கள் அரசு நிதியை கபளீகரம் செய்து வந்தன.(தற்போதைய பொறியியல் கல்லூரிகளும் தமது மாணவ,மாணவிகளை இப்படித்தான் பயன்படுத்தி வருகின்றன)

ஆனால்,மோடி அரசு இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.அதாவது பயிற்சி பெற்றவர் ஒரு வருடத்திற்கு மேல் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு ஊக்கத் தொகை அளிக்கும்.அதே போல்,பயிற்சி பெற்றவர் ரூ.15,000/-க்கு மேலான சம்பளத்தில் பணியில் அமர்ந்தாலும் பயிற்சி நிறுவனத்திற்கு ஊக்கத் தொகை உண்டு.இதனால்,போலி பயிற்சி நிறுவனங்கள் அறவே இல்லாத நிலை உருவாகும்.இவாறு தீர்க்கமான சிந்தனையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு பயிற்சியும் அதன் பாடத்திட்டத்தையும் மதிப்பீடு முறையைச் சார்ந்தே சிறப்பானதாக அமையும்.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுக் கொள்கை – 2015 இல்,பயிற்சிக்கான பாடத்திட்டத்திற்கும் மதிப்பீட்டு முறைக்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.தேசிய தொழிற்திறன் தகுதி கட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் 11 ஆம் வகுப்பில் இருந்து உயர்த் தொழில் நுட்பக் கல்வி நிலை வரையிலான தொழிற்கல்விப் பாடத்திட்டங்கள் 5 நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலைக்கும் உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டு மக்களிடையே +2 வில் தொழிற்கல்வி பாடத்தினை படிப்பவர்கள் பற்றி ஒரு கீழான எண்ணம் நிலவுகிறது.அதனால்,தொழில் நுட்ப உயர்கல்வியாக பொறியியல் பட்டப்படிப்பு படிக்க நினைப்பவர்கள் +2வில் குரூப் 1,குரூப் 2 பாடப்பிரிவுகளில் படித்துவிட்டு பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றனர்;+2 வில் தொழில் கல்வியைப் பாடமாகப் படித்தவர்களுள் பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்வதில்லை.இந்த நிலையை உடைத்திட திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 இல் வழி வகை செய்துள்ளது.


மூன்றாம் பாகம் தொடரும் . . .

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும் வேலையின்மையும் குறையத் துவங்குகிறது!!!=பாகம் 1


ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.தொழில் வளம் பெருக,உற்பத்தி பெருக வேண்டும்.உற்பத்தி பெருக திறமையான தொழிலாளர்கள் அவசியம்;

திறமையான தொழிலாளிகள் பரம்பரை பரம்பரையாக தம் குலத் தொழிலை கற்று அறிந்தவர்களாக இருந்து வந்தார்கள்;இந்நிலை, கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தும் வரை இருந்து வந்தது;

ஆனால்,அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தவுடன் நம் நாட்டுத் தொழில் நுட்பங்களையும்,தொழிலாளர்களின் தொழில் திறனையும் சிறுமைப்படுத்த ஆரம்பித்தனர்.இதனால்,நம் நாட்டு கைவினைஞசர்கள் தம் தன்னம்பிக்கையை இழந்தனர்;தத்தம் குஅல்த் தொழிலைச் செய்வதையே கேவலமாக கருதினர்;(இந்த மனோபாவத்தை இவர்களிடம் நாடு முழுக்க உருவாக்கிட கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு 200 ஆண்டுகள் ஆயின)அதன் விளைவால்,அவர்களது சந்ததியினருக்கு தம் குலத் தொழிலை கற்றுத் தர கூச்சப்பட்டனர்;

இதனால்,தலைமுறை தலைமுறையாக் நாம் கற்றறிந்த தொழிற்திறன் இரண்டு நூற்றாண்டுகளில் அழிந்து போனது;(அந்த அழிவின் மீதுதான் ஊழலும்,லஞ்சமும்,தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதும் வளரத் துவங்கின)


அதன் பலனாக,பாரதம் சுதந்திரம் அடைந்த போது,தொழிற்கல்வியை நாம் கற்க அந்நியரின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது;

தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சுதேசிய சித்தாந்தங்கள் புரிந்திருக்கவில்லை என்பதால் தொழில் திறன் மேம்பாடு,தொழில் முனைவு என்பதில் எல்லாம் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.அந்நியர்களின் கொள்கைகளையே தம் கொள்கையாக காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு வந்தது.

இவர்களுடைய சிந்தனைப் போக்கின் விளைவாகத்தான் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த ‘குலக்கல்வித்திட்டத்திற்கு’ கடும் எதிர்ப்பு எழுந்து,அந்தத் திட்டமே கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

ஆனால்,மக்களிடம் இருந்து எழுந்த தலைவரான நரேந்திர மோடிஜி அவர்களது தெளிவான சுதேசி சிந்தனை விளைவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்திறனுடைய, கைவினைஞர்களால் எவ்வாறு நம் பாரதநாடு உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்ததோ அதே நிலைக்கு பாரதத்தினை உயர்த்திட மத்திய அரசு தொழிற்திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 என்ற கொள்கையை வகுத்துள்ளது.
இக்கொள்கையில் வழக்கமாக மோடி அரசு நிர்வாக நடவடிக்கைகளில் காணப்படும் “மோடி டச்” நிறையவே காணப்படுகிறது.

இக்கொள்கை பலனை எதிர்நோக்கிய திட்டமாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தை காண்கிறது.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 7,8 வெளியீடு      செப்டம்பர் 2015

இரண்டாம் பாகம் தொடரும். . .

Saturday, February 20, 2016

பக்தியால் நமக்கு வர இருக்கும் சோதனைகள்,அவமானங்கள்,துன்பங்களை 90% குறைக்க முடியும்!


96 கோடி தடவை ராமா என்ற பெயரை தனது வாழ்நாள் முழுவதும் ஜபித்தவர்,தனது 97 வது வயதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி,சீதாதேவி,லட்சுமணன்,அனுமன் சமேதமாக தரிசனம் செய்தார்;

26 கோடி தடவை சிவாய நம,சிவாய நம என்று ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு, செம்பைப் பார்த்தால், அது தங்கமாக மாறிவடும்;என்ற இந்த  சிவரகசியத்தை
நமக்கு சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி நமக்கு போதித்திருக்கிறார்;

சில குறிப்பிட்ட சிவமந்திரங்களை அண்ணாமலை கிரிவலத்தின் போது மட்டும் ஜபித்து அண்ணாமலையாரை தரிசித்தவர்களும் நம்மிடையே இந்தக் காலத்திலும் வாழ்ந்து வருகின்றனர்;


பலர் பல முற்பிறவிகளில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டுள்ளனர்;அவர்கள் இப்பிறவியில் சில நாட்கள் அன்னையைச் சரணடைந்ததன் மூலமாக இப்பிறவியில் இது வரை இருந்து வந்த வறுமை,வேதனைகள்,அவமானங்கள் நீங்கி சுகமாக வாழ்ந்துவருகின்றனர்;

26.2.2016 வெள்ளிக்கிழமையன்று விருச்சிகராசிக்குள் செவ்வாய் பெயர்ச்சி ஆகப் போகிறார்;(45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடக்கும் இவர் தற்போது ஆறரை மாதமாக தனது விருச்சிகராசியில் இருக்கப் போகிறார்)ஆகி 19.9.2016 வரை விருச்சிகச்சனியுடன் சேர்ந்து இருக்கப் போவதால்,12 ராசிக்காரர்களுக்கும் மனத்தடுமாற்றம்,திடீர் ஆவேசம்,திடீர் தற்கொலை எண்ணம்,கோபமான மன நிலையில் வாகனத்தை ஒட்டிச்செல்வது என்று நடைபெற இருக்கிறது;

ஏற்கனவே,100 நாட்களுக்கும் மேலாக அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டு வருபவர்களுக்கு இந்த ஆறரை மாதங்கள் பெரிய அளவு துன்பங்கள் வராது;அன்னை அரசாலை(வராகி)யின் கருணை மனத்தினால் நிம்மதியாக இந்த கால கட்டத்தைக் கடந்துவிடுவீர்கள்:

மற்றவர்கள் இந்த மறுபதிவினை வாசித்தப் பின்னராவது, அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவது நன்று;எதற்காக இதை மீண்டும் நினைவூட்டுகிறோம்?

எது கோடீஸ்வர வாழ்க்கை தெரியுமா?
கடன் இல்லாமல்,நோய் நொடி இல்லாமல்,தினசரி வாழ்க்கை அமைதியாகவும்,நிம்மதியாகவும்  ஓடிக்கொண்டிருந்தால்,அதுவே கோடீஸ்வர வாழ்க்கை;

அசைவம் தவிர்த்துவிட்டு,இந்த மந்திர ஜபத்தை ஜபிப்பது அவசியம்;மது அருந்துவதையும் கைவிடவும்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணி
சிவா
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்னீ

அன்னை அரசாலை(வராகி) சிவனும்,சக்தியும் இணைந்த வடிவமே! எனவே,அன்னையை வழிபடுவதன் மூலமாக ஒரே சமயத்தில் சிவனையும்,சக்தியையும் ஒருங்கே வழிபடுவதற்குச் சமம்;சிவலிங்கம் என்பது சிவசக்தி கலப்பே! சிவலிங்க வழிபாட்டிற்கு இணையானது அன்னை அரசாலை(வராகி) மந்திர ஜபம்!

கடலுக்குள் மூழ்கிக் கிடந்த பூமியை வராக அவதாரம் எடுத்து தனது கொம்புகளால் தூக்கி நிறுத்தியவர் மஹாவிஷ்ணு;அப்படி தூக்கி நிறுத்தும் சக்தியை அன்னை அரசாலை(வராகி)யிடம் இருந்து பெற்றவர் மஹாவிஷ்ணு;அவரது பத்து அவதாரங்களில் ஒன்றுதான் வராஹ அவதாரம்;எனவே.அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது வைஷ்ணவ வழிபாட்டிற்கும் இணையானது;

வராகி மாலையில் 32வது பாடலில் முதல் வரியைக் கவனியுங்கள்;சிவஞானபோதகி என்று வரும்;ஈசனைப் பற்றி அறிய ஏராளமான நூல்கள் உள்ளன;அவைகளில் முதன்மையானது சிவஞான போதம்!

இந்த சிவஞானபோதத்தை மனிதர்களுக்கு புரியும் விதமாக போதிக்கும் ஆசிரியை,குரு அன்னை அரசாலை மட்டுமே!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

Monday, February 15, 2016

நமது கர்மவினைகளை கரைத்துவிடும் தேய்பிறை பஞ்சமிகள்!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் நிர்வகித்து வருபவர் கால தேவன் என்று அழைக்கப்படும் மஹா காலபைரவப் பெருமான்;அவருக்கு அப்படி நிர்வகிக்கும் சக்தியை அருளிக் கொண்டிருப்பது அன்னை அரசாலை(வராகி)!!!

அரசாலை என்பது வராகியின் 1000 திருநாமங்களில் ஒன்று;





அரசாலை அம்மன் என்பது பள்ளூர் என்ற இடத்தில் வராகியின் பெயர் ஆகும்;காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் நடுவே அமைந்திருக்கும் சிற்றூர் பள்ளூர் ஆகும்;இங்கே அரசாலையம்மனாக அன்னை வராகி அருளாட்சி புரிந்து கொண்டிருக்கிறாள்;


தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி இரவுகளில் 1 மணி நேரம் வரை அன்னை அரசாலை(வராகி)யை வீட்டிலேயே வழிபட்டு வந்தால்,அன்னையின் கருணையால் நமது அனைத்து முற்பிறவி கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;


எப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது?
பின் வரும் அன்னையின் பெயர்களை வீட்டில் ஜபிப்பதுதான்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

சந்தர்ப்பமும்,பூர்வபுண்ணியமும் இருந்தால் இந்த 16 தேய்பிறை பஞ்சமி நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 1 மணி நேரம் ஜபிக்கலாம்;


27.2.16 சனி
28.3.16 திங்கள்
26.4.16 செவ்வாய்
26.5.16 வியாழன்
9.6.16 வியாழன்
24.6.16 வெள்ளி
24.7.16 வெள்ளி
22.8.16 திங்கள்
20.9.16 செவ்வாய்
19.10.16 புதன்
18.11.16 வெள்ளி
18.12.16 ஞாயிறு
16.1.17 திங்கள்
15.2.17 புதன்
17.3.17 வெள்ளி


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!