Tuesday, January 31, 2012

ஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது? நன்றி:தமிழ்தாமரை


ஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது, ஸ்ரீ சக்கரம் வரைவதை பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது ஸ்ரீ சக்கரம் வரைவது எப்படி , ஸ்ரீ சக்கரம் வரைவதை பற்றிய குறிப்புவது

சித்தர்களின் நெறி


சித்தன் அன்டத்தைப் பார்க்கிறான் எப்பொழுதும் போலவே இருக்கிறது. சூரியன், சந்திரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தது இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது இனியும் இருக்கும். இந்த மண் இருந்தது மீண்டும் அப்படியே இருக்கும் ஆமாம் நீரும் தான் இருக்கிறது சமுத்திரங்களும் இருக்கிறது பிரளயத்தால்
இடத்தை மாற்றிக் கொண்ட போதும் இருக்கத்தான் செய்கிறது.
நம்மை தீண்டி கொண்டும் வெளியில் உலவிக் கொண்டும் காற்று கூட தன் வலிமையை இழக்காமல் இருக்கிறது. அது உலர்ந்து போவதில்லை ஒரே இடத்தில் அடைந்து கிடக்கவும் இல்லையே! உலகெலாம் பரவிக்கிடக்கிறதே! அது அடங்கிவிடவும் இல்லையே?

நெருப்பும் கூட ஒரே தன்மையாக அதன் வீரியத்தை இழக்காமல் இருக்கிறதே! அன்றும்
சுட்டது இன்றும் சுடுகின்றது பலவற்றை உலர்த்துகின்றது பக்குவப் படுத்துகின்றது
ஜொலிக்கின்றது. அதன் தன்மையை ஒருபோதும் இழந்து விட வில்லை. ஆகாயம் பரந்து விரிந்து தன் விசாலமான பரப்பினுள்ளே பேரண்டம் சிற்றண்டம் கோள்கள் இவற்றுகெல்லாம் இடம் கொடுத்து கொண்டிருக்கிறது. இப்படி பஞ்ச பூதங்கள் காலங்காலமாகக் தனது இயல்புகளை இழந்து விடாமல் நிலைத்து நின்று அழியாத நிலையில் யாரோ ஒருவரால் நியதிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும். அவரே மெய்பொருளாகிய இறைவன்  என்பதையும் அறிந்தார்கள்.

இந்த உடலிலும் பஞ்ச பூத கலப்பின் விகிதம் அறிந்தார்கள். பிறகு அந்த விகிதாச்சாரத்தை மாற்றியும் அமைத்து மரணத்தை வென்றார்கள் இந்த கலைக்கு சாகாக்கலை என்று பெயரிட்டார்கள் அல்லது தகரவித்தை என்றார்கள்.சாகும் தன்மை கொண்ட தூல உடம்பை சாக விடாது சோதி யெனும் அருளினாலேயே கரைய செய்து வேதியலாக் குவதே ஒளி உடம்பு பெருதல். இதுதான் சின்மயமாதல் ஆகும்.

சித்தர்களின் அறிவியலில் பஞ்சாட்சரம் இருவகைப்படும்

1. தூல பஞ்சாட்சரம்
2. சூக்கும பஞ்சாட்சரம்.

இதில் தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய, சூக்கு பஞ்சாட்சரம் என்பது சிவயநம. திருமூலர் இதனை. எளியவாது செய்வாரெங்கள் ஈசனை ஒளியையுண்ணி யுருகு மனத்தாராய்த் தெளியவோதி சிவாய நம வென்னும் குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே. திருமந் - 2709.

தமிழ் ஞான மூதாட்டியாகிய ஓளவையும் சிவயநம என்றிருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்கிறார்.இறைவன் ஒளிமயமானவன் சோதிமய மானவன் என்பதை அறிந்து அதிலே தனது கரணங்களை ஒடுக்கி தூல விகிதத்தை சூக்கும விகிதமாக மாற்றி தூல உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இறைவனோடு இரண்டற கலப்பதேயாகும்.
சிவாக்கியார் சூக்கு பஞ்சாட்சர மகிமையை பின்வருமாரு கூறுகிறார்.

சிவயவசி என்னவும் செவிக்க இச்சகமெலாம்
சிவயவசி என்னவும் செவிக்க யாவும்
சித்தியாம் சிவயவசி என்னவும் செவிக்க வானமாளலாம்
சிவயவசி என்பதே இருதலை தீ ஆகுமே!

இதை தக்க குருமூலம் உபதேசக்கலையால் கடவுள் நிலையறிந்து அம்மய மாதலாகும். இது பிரம்ம ரகசியம் சிவரகசியம் என வேத ஆகமங்கள் கூறும் மெய் நெறியாகும். இது எந்நாட்டவரும் எம்மதத்தினரும் எச்சமயத்தவரும் உணர்ந்து சமரசம் பெறும் மெய்நெறியாகும். இதுவே சித்தர்களின் நெறியாகும.

நன்றி சிவராமன் USA

விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை


உணவுப் பாதுகாப்பு மசோதா

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.  ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன.
இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.  முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும்.
இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது. ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும் கூட புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது.
இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.  மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது.
அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப் போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.
கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது. மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து.
இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே?
பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?  மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக் கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!
விலை நிலங்கள் வீட்டுமனைகளாக்கி வருகின்ற வேகத்தை பார்த்தால் இந்தியா முழுவதும் விவசாயம் செய்யும் நிலங்களின் மொத்த கணக்கு சரிதானா? என்பது கேள்விக்குரியதாக உள்ளது. தரிசு நிலங்கள் விளை நிலங்களாக்க வேண்டும்.விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை விதிக்க வேண்டும்.இலவசங்களை மறு பரிசீலனை செய்தால்தான் பொருளாதாரம் மேம்படும்.
இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்ச் சேர்ந்துவிடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகை முழுவதையும் உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர். அதாவது இத்திட்டமானது ஏழைகளுக்கு கொடுப்பது போல் கொடுத்து வாக்குகளையும் வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதோடு தொழிலதிபர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு தேர்தல் செலவுக்குப் பணம் வாங்கவே இந்தத்திட்டம்.

காஷ்மோரா என்றால் என்ன?


காஷ்மோரா என்பது உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த மாந்திரீக வித்தை;அதை ஏவினால் போதும்.அதற்கு மாற்று எதுவும் கிடையாது.யார் மீது காஷ்மோராவை ஏவினோமோ,அந்த மனிதனை யாராலும் காப்பாற்ற முடியாது.(பக்கம் 105);யாருடைய வீட்டில் துளசிச்செடி வளர்க்கப்படுகிறதோ,அங்கே காஷ்மோராவால் செயல்பட முடியாமல் போய்விடும்.
சூனியம் என்பது 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒரு மனசக்தி கலை;யாருக்கும் தெரியாத,ரகசியம் நிறைந்த அந்த கலையை தற்போது கற்க ஆளில்லாமல் அழிந்துபோயிருக்கிறது.தற்போது இந்தியா முழுவதற்கும் இந்தக் கலை அறிந்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.
பிரஹத்ஜோதியைப் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு மனித அணுவின் மீது ஆட்சி செலுத்துவது எளிது.சப்த அணுக்கள் எனப்படும் மனித சருமம்,மனித ரத்தம்,மனித சதைப்பகுதி,மனித எலும்புகள்,மனிதனின் எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜை,ரேதஸ் முதலியவற்றைச் சூனியம் வைப்பவன் தன்னுடைய வசத்திற்குக் கொண்டுவந்து துன்புறுத்துவான்.இந்த சப்த தாதுக்களுக்கும் சப்த அதிஷ்டான தேவதைகள் இருக்கிறார்கள்.சருமத்திற்கு டாகினி முதல் ரேதஸ்ஸிற்கு யாகினி வரை.இந்த சப்த தேவதைகளை சூனியம் செய்யப்பட்டவர்களின் ஏழு அங்கங்களில் காணலாம்.டாகினியை கழுத்தில்,மற்ற தேவதைகளை வரிசையாய் இதயம்,நாபி,சிச்னம்,மூலாதாரம்,பூமத்யம்,பிரம்மத் துவாரத்தில் காணலாம்.இந்த தேவதைகள் பீஜாக்ஷரங்களுக்குப் பிரச்சன்னமாவார்கள்.யம்,ரம்,லம்,வம்,சம்,ஸம்,ஹம் என்ற சப்த பீஜங்களின் மூலமாக அங்கங்களை ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் தேவதைகளை வசப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட ஆளைத் துன்புறுத்தலாம்.அதனால்தான் காஷ்மோராவை ஏவியதும் ஒவ்வொரு நாளும் ஏவப்பட்டவருக்கு ஒவ்வொரு நோயாக தாக்குகிறது.அதன் பிறகு உபாசகன் வாயுக்களை தன் வசத்தில் எடுத்துக்கொள்கிறான்.பிராணவாயுவை மட்டுமின்றி நாபியிலிருக்கும் சமான வாயுவை,கழுத்திலிருக்கும் உதான வாயுவை ஸ்தம்பிக்கச் செய்து துன்புறுத்துவான்.
இதிலிருந்து மீள ஒரு வழி உண்டு.முதுகுத்தண்டின் கடைசியில் இருப்பது ஸ்ரீசக்கரம்.இதை மூலாதாரச்சக்கரம் என்றும் அழைப்பார்கள்.குண்டலினியை எழுப்பி சுஷம்ன வழியாக மூலாதாரத்திலிருந்து சகஸ்ரத்திற்குச் சேர்க்க முடிந்தவன் யோகி.மூன்று ஏக பீஜ மந்திரங்களை ஜபிக்கவும்.க்ஷாம் என்பது நரசிம்ம பீஜம்.ஹ்ரீம் என்பது புவனேஸ்வரி மந்திரம்;க்லீம் என்பது காமராஜ பீஜம்.108 முறை இந்த மந்திரங்களை ஜபம் செய்.இந்தத் தண்ணீரில் அமர்ந்து கொண்டு மந்திரங்களைச் சொல்லியபின் இந்த எண்ணெய்யைக் குடி.இந்த எண்ணெய் சூரிய கிரகணத்தன்று மாலகம் விதையிலிருந்து பாதாள மந்தரிம் வழியாக எடுத்தது.நீ ஜபித்த 108 மந்திரங்களும் உன் மகளுடைய பொம்மையில் குத்தி வைக்கப்பட்டுள்ள 108 முட்களுக்கு எதிராக வேலை செய்யும்.பொம்மை ஏற்கனவே சிதிலமடைந்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.காஷ்மோராவை எதிர்க்கக் கூடியது காளி ஒன்றுதான்.அம்பாளைப் பிரசன்னம் செய்துகொள்.காஷாய வஸ்திரத்துடன் பூசத்தன்று பறித்த விஷ்ணு கிராந்திப்பூக்களின் சூரணத்தை உன் நெற்றியில் திலகமாக வைக்கிறேன்.இந்த திலகத்தை இட்டுக்கொண்டு நீ யாரைப் பார்க்கிறாயோ அவன் உனக்கு அடிமையாகிவிடுவான்.உன் மகளின்மீது சூனியத்தை ஏவிவிட்டவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடி.இன்ரு 21 வது நாள்.இன்று இரவு 12 மணிக்குள் இது நடந்தாக வேண்டும்.இன்று இரவு 12 மணிக்குப் பொம்மையின் கட்டுக்களை அவிழ்த்து ஹோமத்தில் போடுவான் மந்திரவாதி.அப்படி போடுவதற்குள் நான் சொன்னது நடந்து முடியவேண்டும்.இதோ இந்தப் பலகையின் மீது ஸ்ரீசக்கரத்தைச் செதுக்கி இருக்கிறேன்.இதனால்  தான் அவனை அடிக்க வேண்டும்.இந்த துளசி தீர்த்தத்தை அந்த ஹோமத்தில் போட வேண்டும்.(பக்கம் 282,283)எண்டமூரி விரேந்திரநாத் எழுதிய துளசி தளம்;மாந்திரீகம் பற்றிய நாவல்.

பிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் இருக்கின்ற ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்தில் இருந்த நமீம் அக்தர் என்கிற பெண்ணிற்கு பிரசவவலி எடுத்தது. அருகில் எந்த மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து வசதி எதுவும் இல்லை.  ஆபத்திற்கு ராணுவ வீரர்கள் கைகொடுத்தனர். ராணுவவீரர்கள் அப்பெண்ணை ஒரு கயிற்றுக்கட்டிலில் வைத்து 7கி.மீ. தூரத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு  அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது அழகான பெண் குழந்தை பிறந்தது. மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம்.

பாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்



ஆங்கிலத்தில்: ஷாலினி சக்சேனா
தமிழில்: நிகரியவாதி
இந்த நவீன காலத்திலும் கூட மந்திரங்களின் வாயிலாக பாம்புக் கடியையும் தேள் கடியையும் குணப்படுத்த முடியும். மொபைல் போன் வாயிலாக மாந்திரத்தை உச்சரித்தால் கூட குணம் அளிக்க முடியும் என்பதை நம்புவது சற்று கடினமானதுதான். ஆனால் அதுதான் உண்மை. மந்திரவாதிகள் சிலர் பாம்புக் கடியையும் தேள் கடியையும் சில நொடிகளிலேயே குணப்படுத்திவிடுகிறார்கள். டாக்டர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்டவர்களைக் கூட மந்திரவாதிகள் குணமாக்கியுள்ளனர் என்பதுதான் விசேஷமான அம்சமாகும். 
மந்திரவாதி.
1960ஆம் ஆண்டு மத்திய பிரதசேத்தில் உள்ள சாகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு மனிதர் தனது வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று எதிர்பட்டது. அது புல் நிறைந்த பகுதியாகும். மழைக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை அடிப்பதற்கு தடி கொண்டு வாருங்கள் என்று அவர் அலறினார். அங்கு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இவரது அலறலைக் கேட்டு தடியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அந்த மனிதரை ராஜநாகம் கடித்துவிட்டது. ராஜநாகத்தால் கடிபட்டவர் தலைமைப்  பொறியாளரின் உதவியாளர்  ஆவார். அவரை அரசு மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு சென்றனர். விஷ முறிவு மருந்தை டாக்டர்கள் செலுத்தினார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
தலைமைப்  பொறியாளரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடிவிட்டனர். ராஜநாகத்தால் கடிபட்டவரின் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அந்த கூடத்திலிருந்த ஒருவர் பாம்புக் கடியை குணப்படுத்தக்கூடிய மந்திரவாதி ஒருவரை தனக்குத் தெரியும் என்று கூறினார். ஆனால் தலைமை பொறியாளருக்கோ அல்லது பாம்புக் கடிபட்டவரின் குடும்பத்தினருக்கோ ஜார்புங்கா வாலா (பாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதி) குறித்து நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இக்கட்டான சூழலில் அதையும்தான் செய்து பார்ப்போமே என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். 
மந்திரவாதி உடனடியாக மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். பாம்புக் கடி பட்டவரை மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வாருங்கள். தோட்டத்தில் கிடத்துங்கள் என்று மந்திரவாதி கூறினார். அவர் சில மந்திரந்தங்களைத் தொடர்ந்து உச்சரித்தார். அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம். பாம்புக் கடி பட்டவரின் உடல் பாம்பைப் போல முறுக்கிக் கொண்டது. பாம்புக் கடிபட்டவரின் தலையில் தண்ணீர் பாத்திரம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பாத்திரம் அங்கு நிற்கவில்லை. பாம்புக் கடிபட்டவரின் கை அதை தட்டிவிட்டது. 20 நிமிடங்களுக்குப் பிறகே தண்ணீர் பாத்திரம் அவரது தலையில் நின்றது. 
ராஜ நாகம்
பாம்புக் கடிபட்டவரின் உடலில் பாம்பு குடி புகுந்திருந்தது. இந்த மனிதரை நீ ஏன் கடித்தாய் என்று பாம்பிடம் மந்திரவாதி கேட்டார். “நான் புல் தரையில் சென்று கொண்டிருந்தேன். இந்த மனிதர் என்னைக் கொல்வதற்காக முயற்சி செய்தார். தடியைக் கொண்டு வாருங்கள் என்று மற்றவர்களிடம் கூறினார். இதனால்தான் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தால்தான் இவரைக் கடித்தேன்.” என்று பாம்பு குரல் கொடுத்தது. “இவரின் உடலிலிருந்து  உடனடியாக நீ வெளியேறிவிடு” என்று அரூபமாக உள்ள பாம்பிடம் மந்திரவாதி கூறினார். ஆனால் பாம்பு சுலபமாக வெளியேற சம்மதிக்கவில்லை. மந்திரவாதி நீண்டநேரம் கெஞ்சிக் கூத்தாடினார். கடைசியில் ஒரு நிபந்தனையின் பேரில் அம்மனிதரின் உடலிலிருந்து வெளியேற பாம்பு சம்மதித்தது. 
அவர் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி என்னை வழிபடவேண்டும் என்பதுதான் பாம்பு விதித்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனை  ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த மனிதரின் உடல் மறுபடியும் பாம்பைப் போல் முறுக்கிக் கொண்டது. படிப்படியாக நீல நிறம் மாறத் தொடங்கியது. கால் மணி நேரத்திற்குள் இந்த மனிதர் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டார். இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த தலைமைப்  பொறியாளர் அதிர்ச்சியில் உறைந்தே போனார். இதைப் போல ஊரூக்கு ஊர் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் இவைகளைக் கட்டுக் கதைகள் என்றே கருதி ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். 
எல்லா வித பிரச்சினைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு இல்லை. மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்டும் பல தீர்வுகள் உள்ளன. எல்லாவற்றையும் மருத்துவத்தால் தீர்க்கமுடியும் என்றால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று மருத்துவர்கள் கூறுவது ஏன்? என பண்டிட் ரமேஷ் போஜ்ராஜ் துவிவேதி கேள்வி எழுப்புகிறார். துவிவேதி மந்திரங்கள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். 
சாகரில் நடைபெற்றதைப் போன்ற நிகழ்வுகள் வேறு பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன. பலர் இவற்றைக் கண்டுள்ளனர். பாம்புக் கடியை குணமாக்கும் மந்திரவாதிகள் நாலா பக்கங்களிலும் நாணயங்களை தூக்கி எறிவது வழக்கம். அப்போது நாணயத்தை தலையில் ஏந்தியபடி அங்கு பாம்பு வந்துவிடும். மீண்டும் சில மந்திரங்களைக் கூறிய பிறகு பாம்புக் கடிபட்டவர் குணமாகிவிடுவார். மருத்துவர்கள் பலர் இதை நம்புவது கிடையாது. இது வெறும் கண்கட்டி வித்தை என்று கூறுகிறார்கள். 
பிரதிப் குமார் சிங் என்ற ஜார்புங்கா வாலா கட்டாக்கில் (ஓடிஸா) உள்ள வனத்துறையில் அதிகாரியாக உள்ளார். எனது தந்தையும் வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர்தான் என்று அவர் கூறுகிறார். தனது தந்தையிடம் இருந்து பாம்புக்டியை குணப்படுத்தும் மந்திரத்தை கற்றுக் கொண்டதாக அவர் தெரிவிக்கிறார். நான் விஞ்ஞானம் படித்தவன்தான். ஆனால் விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டது கடவுள் சக்தி. இந்த மந்திரம் கடவுள் சக்தியைச் சார்ந்ததுதான் என்று பிரதாப் குமார் சிங் கூறுகிறார். 
1983  ஆம் ஆண்டு பிரதாப் குமார் சிங்கிற்கு 18 வயது நடந்து கொண்டிருந்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை தாம் குணப்படுத்தியதாக பிரதாப் குமார் சிங் நினைவு கூறுகிறார். இதுவரை எத்தனை பேரை குணப்படுத்தியிருப்பேன் என்பதற்கு கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று அவர் சொல்கிறார். நேரில் மட்டும்தான் மந்திரம் சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்பது கிடையாது. மொபைல் போன் வாயிலாகவும் மந்திரம் சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்று அவர் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார். 
பாம்புக் கடிபட்டவரின் பெயர், தனக்கு தெரிவிக்கப்படவேண்டும். அவருக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றனவோ அத்தனையும் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டப் பெயர்கள் கேலிப் பெயர்கள் இருந்தால் அவைகளையும் தெரிவிக்க வேண்டும். அந்த நபர் குணமாக வேண்டும் என்று கூறி நான் மந்திரம் சொல்லத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடலில் மாறுதல் தெரியத்   தொடங்கிவிடும் என்று பிரதாப் குமார் சிங் கூறுகிறார். மருத்துவ மனைகளிலிருந்துதான் தனக்கு அதிக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார். 
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படாத நபரை, பாம்புக் கடியை குணப்படுத்திய பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்து விஷம் நீங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நான்  கூறுவது வழக்கம் என்று அவர் தெரிவிக்கிறார். நான் செய்வது ஏமாற்று வேலை அல்ல. உண்மையானதுதான் என்பதை நிலைட்டவே இதைச் செய்கிறேன் என்று தனது செயல்பாட்டுக்கான காரணத்தையும் அவர் கூறுகிறார். 
தினந்தோறும் தனக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது வரும் என்று அவர் கூறுகிறார். மொபைல் போனில் 5 நிமிடங்கள் மந்திரம் சொன்னாலே போதும். மொபைல் போனை பாம்புக் கடிபட்டவரின் காதில் பொறுத்தியிருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பாம்புக் கடிபட்டவருக்கு சுவாசம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மட்டுமே இவர் வலியுறுத்திக்  கூறுகிறார். தொலைதூர இடங்களிலிருந்துகூட அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இவர் கூறுகிறார். 
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நண்பர்கள் மூலமாக இது பரவுகிறது. நண்பர்களின் நண்பர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். கோமா நிலையில் உள்ளவர்களைக் கூட தன்னால் குணப்படுத்த முடியும் என்று பிரதிப்குமார் சிங் உறுதிப்பட உரைக்கிறார். எனது குடும்பத்திலும் மருத்துவர்கள் உள்ளார்கள். மந்திரத்தின் மகத்தான சக்தியால் பாம்புக்கடி தேள் கடி ஆகியவற்றுக்கு வைத்தியம் பார்க்க முடியும் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 
இனி மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம். “நான் கேட்டரிங் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். எனது ஊழியர் ஒருவரை நாகப்பாம்பு ஒன்று கடித்து விட்டது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கே போதுமான மருந்து இருப்பில் இல்லை என்ற காரணத்தால் அவரை புவனேஸ்வரத்துக்கு கொண்டு சென்றார்கள். அப்போது சிங்கின் மொபைல் போன் எண் எனக்கு நினைவுக்கு வந்தது. புவனேஸ்வருக்கு எனது தொழிலாளியை கொண்டு செல்லும் வழியிலேயே சிங்குடன் நான் பேசினேன். பாம்புக் கடிபட்டவரின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று சிங் கேட்டார். அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்று நான் பதில் அளித்தேன். என்ன ஆச்சரியம் புவனேஸ்வரத்துக்கு கொண்டு செல்லும் வழியிலேயே எனது ஊழியர் எழுந்து உட்காரத் தொடங்கினார். ஆனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்து பாருங்கள் என்று சிங் வற்புறுத்தினார். புவனேஸ்வரம் மருத்துவமனையில் டாக்டர்கள் சோதனை செய்தனர். பாம்பு கடித்தது என்பதற்கு எந்தத்  தடயமும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.  எதற்கும் முன்னெச்சரிக்கையாக மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே நான்கு நாட்கள் அவரை வைத்திருந்தோம். 20 வயதான எனது ஊழியர் பூரண நலமுடன் வீட்டுக்குத் திரும்பினார்” என்று அக்ஷைகுமார் படசாணி கூறுகிறார். 
இதுபோன்றே மற்றொருவரும் சிங்கின் மந்திர சக்திக்கு சான்றுரைக்கிறார். அவர் முக்தி காந்த் பாரி ஆவார். பாரியின் வயதான தாயாருக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது. தாயாருடன் பாரி தங்கியிருந்தார். அப்போது பாம்பால் கடிக்கப்பட்ட 10 வயது சிறுவனை அங்கு கொண்டு வந்தார்கள். விஷப் பாம்பினால் கடிப்பட்ட சிறுவனின் உடலில் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தில் இருந்த ஒருவர் சிங்கின் பெயரைக் கூறினார். மொபைல் போன் வாயிலாகவே மந்திரம் கூறி சிறுவனை பிழைக்க வைக்க சிங்கால் முடியும் என்று கூறியதை தான் முதலில் நம்பவில்லை என்று பாரி கூறுகிறார். ஆனால் சில நிமிடங்களிலேயே அதிசயம் நிகழ்ந்தது. மொபைல் போன் வழியாக மந்திரத்தைக் கூறி சிறுவனை சிங் பிழைக்க வைத்து விட்டார் என்று பாரி கூறுகிறார். மந்திரத்தால் சிறுவனுக்கு குணம் கிடைத்ததோ அல்லது மருத்துவர்களின் சிகிச்சையால் குணம் கிடைத்ததோ  எப்படியோ சிறுவன் குணம் அடைந்துவிட்டான் என்று பாரி கூறுகிறார். சிலர் மந்திரத்தை முழுமையாக நம்புகிறார்கள். மற்றவர்கள் அறைகுறையாக நம்புகிறார்கள். அவநம்பிக்கைவாதிகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் சான்றிதழ் வேண்டியிருக்கிறது. நிரூபணம் வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் நிரூபணம் அளிப்பது சாத்தியமல்ல. சில விஷயங்கள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டவை. இவற்றை நம்பிக்கையின் வாயிலாகத்தான் உணர்ந்து கொள்ள முடியும். நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள் நம்பிக்கையாளர்களாக மாறிவிடுகிறார்கள். சில நிருபர்கள் சிங் மீது சந்தேகப் பார்வையை வீசியதுண்டு. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளைக் கூட பாம்புக்கடியிலிருந்து மீட்டுள்ளதாக சிங் தெரிவிக்கிறார். 
“எனது உறவினர் ஒருவரை 2007 ஆம் வருடம் விஷப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது. அப்பெண்ணின் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் அங்கே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதையடுத்து சற்று தொலைவில் இருந்த பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். கொண்டு செல்லும் வழியிலேயே சிங்கைத் தொடர்பு கொண்டோம். பாம்புக் கடிபட்டவரை பெயரை அவர் கேட்டார். அதை அவருக்கு தெரியப்படுத்தினோம். சில நிமிடங்களிலேயே பாம்புக் கடி பட்டவர் எழுந்து உட்கார்ந்து விட்டார்.” என்று ராஜேந்தர் லெங்கா கூறுகிறார். அவர் அரசியல்வாதியாவார். அதுமட்டுமல்லாமல் அரசின் வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்தும் செய்து வருகிறார். 
இனி மற்றொரு மந்திரவாதியைப் பற்றிப் பார்ப்போம். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஹாதத் என்பவர் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவர் பாம்புக்கடியை குணப்படுத்தும் விதம் சிங்கின் வழிமுறையிலிருந்து சற்று மாறுபட்டது. 
ஷாஹாதத் பாம்பு கடிபட்டவரின் பெயரை மட்டுமல்லாமல் அவரது தாயாரின் பெயர், கிராமம் மற்றும் தாலுகா, மாவட்டத்தின் பெயரையும் கேட்கிறார். ஏனெனில் ஒரே பெயரில் பலர் இருக்கக்கூடும் என அவர் அதற்கு காரணம் கூறுகிறார். 250 மில்லி பாலை கொதிக்க வைக்க வேண்டும். அது வெதுவெதுப்பாக இருக்கவேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஷாஹாதத் மந்திரம் சொல்லிக் கொண்டே  இருப்பார். ஸ்பூனில் பாலை பாம்புக் கடிபட்டவருக்கு உறவினர்கள் புகட்ட வேண்டும். பாலை எளிதில் புகட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து புகட்ட முயற்சிக்க வேண்டும். பாலை பாம்புக் கடிபட்டவர் உட்கொண்டுவிட்டால் விஷம் முறிந்துவிடும். பாலை அவர் குடித்து முடிக்கும் வரை தொடர்ந்து புகட்டிக் கொண்டே  இருக்க வேண்டும் என்று ஷாஹாதத் கூறுகிறார். 15 நிமிடங்களுக்குள் பாம்புக் கடிபட்டவர் தானாகவே  எழுந்து உட்கார முடியும், வேலைகளைச் செய்ய முடியும். இருப்பினும் தொடர்ந்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றும்,  பூஜை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஷாஹாதத். 
“இயற்கையில் நான் குறுக்கிட வேண்டியிருக்கிறது. மன்னிப்புக் கேட்டு நான் மன்றாட வேண்டியிருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நான் படிப்பறிவில்லாத முட்டாள். எனக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. எனக்கு உருது மட்டுமே பேசத் தெரியும். வேறு மொழியில் யாராவது பேசினால் என்னால் புரிந்து கொள்ள கூட முடியாது. எனக்கு இந்த மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தவர் எனது குரு பண்டிட் யஷ்வந்த் மராட்டா ஆவார். 
இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பரிபூரண தூய்மையுடன் இருக்க வேண்டும். அழுக்கான உடலோடோ அல்லது அழுக்கான மனத்தோடோ மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது. மந்திரத்தை காசுக்காக உச்சரிக்கக் கூடாது. காசு வாங்கிக் கொண்டு மந்திரத்தை உச்சரித்தால் அது பலிக்காது. நான் விவசாயியாக இருக்கிறேன். விவசாயம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சோறு போடுகிறது. நான் ஏழைதான். ஆனாலும் இலவசமாக பாம்புக்கடி மந்திரத்தை உச்சரித்து வருகிறேன். எனது கஷ்டத்தைப் பார்த்து எனது மொபைலை எனது கிராமத்தினர்  அவ்வப்போது ரிசார்ச் செய்து தருகிறார்கள்” என்று 63 வயதான ஷாஹாதத் கூறுகிறார். 
தொடர்ந்து அவர் கூறியதாவது, “எனக்கு 40 வயது நடந்துகொண்டிருந்த போது மனத்தில் குழப்பம் ஏற்பட்டது. நான் எனது கிராமத்தை விட்டு வெளியேறினேன். அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன். வழிபாட்டுத்  தலங்களுக்குச் சென்றேன். சாதுக்களிடம் அடைக்கலம் அடைந்தேன். அவர்கள் ஒரு குருவிடம் கொண்டு என்னைச் சேர்த்தார்கள். குரு பண்டிட் யஸ்வந்த் மராட்டா எனக்கு மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. 
இந்த 23 ஆண்டுகளில் நான் ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். இதற்கு நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தினந்தோறும் 10 பேரையாவது காப்பாற்றி வருகிறேன். இப்போது நான் இது தொடர்பாக கணக்கும் வைத்துக் கொள்ளத்  தொடங்கியுள்ளேன். ஏனென்றால் பலர் நிரூபணம் கேட்கிறார்கள். அதற்காகத்தான் இதை நினைவில் வைத்துள்ளேன். எனக்கு 16 குழந்தைகள் உள்ளனர். எதற்கும் உதவாதவனாக என்னைப்பற்றி நான் தாழ்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது எனது வாழ்க்கை சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது”. 
மந்திரங்கள் அனைத்தும் வேத காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றன. நோயை குணமாக்க, வறுமையைப் போக்க, எண்ணியதை நிறைவேற்ற என பல்வேறு விஷயங்களுக்காக மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. மந்திரங்களை உச்சரிக்கும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உச்சரிப்பில் சிறு பிசிறுகூட ஏற்படக் கூடாது. பிசிறு ஏற்பட்டால் விபரீதமான விளைவுகள்  ஏற்பட்டுவிடும் என்று பண்டிட் போஜிராஜ் துவிவேதி கூறுகிறார். மந்திரங்களை நேரில்தான் சொல்ல வேண்டுமே தவிர மொபைல் போனில் சொல்லக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். ஆனால் காலமாறுதலுக்கு ஏற்ப மொபைல் போனிலும் மந்திரங்களைச் சொல்லலாம் என்று மந்திரங்கள் வாயிலாக பாம்புக்கடியை குணப்படுத்திவரும் மந்திரவாதிகள் கூறுகிறார்கள். ஆதாரம்: இங்கே சொடுக்கவும்.

மனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.



நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்ற சொலவடைக்கு ஏற்றவகையில் நம் உணவு எந்த வடிவில் இருக்கிறதோ அந்த வடிவிலான நம் உடல் உறுப்புக்களுக்கு அவை வலிமை சேர்ப்பவையாக இருக்கின்றன என்பது ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். 


சில கனிவகைகளை கீழே காணலாம்.


1. காரட்டும், கண் விழியும்.
Courtesy: iStockphoto
காரட்டை பச்சையாக மென்று தின்பவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். காரட்டை குறுக்காக நறுக்கி வைத்துப் பார்த்தால் கண்ணின் கருவிழியில் உள்ளது போல தெரியும். காரட்டில் நிறைய விட்டமின்களும், ஆண்டி ஆக்சைடன்ட்களும் உள்ளன. விழித்திரைக் குறைபாடுகளை நீக்கும் தன்மை காரட்டுக்கு உண்டு என்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த டாக்டர் சாசன் மௌலாவி.


2. வால்நட்டும், மனித மூளையும்.
Courtesy: iStockphoto
வால்நட்டில் நாம் காணும் மடிப்புக்களும், சுருக்கங்களும், மூளையை ஒத்திருக்கின்றன. இரண்டு பாகங்களை பிரிக்கும் பிரிவுகள் கூட மூளையை போலவே இருப்பதை காணலாம். இவை மூளைக்கான உணவு என்றே அழைக்கப் படுகின்றன. ஒமேகா த்ரீ பாட்டி ஆசிட்களை நிறையக் கொண்ட வால்நாட்களை மூளையின் வாழ்நாட்களை அதிகரிக்கும். ஆரோக்கியமான மூளையை பெற வால்நட்டுகளை விரும்பி உண்ணுங்கள்.


3. செலரியும், எலும்பும்:



செலரியின் நீண்ட மெல்லிய தண்டுகள் மனித உடலின் எலும்பைப் போலவே காட்சி அளிக்கின்றன. எலும்புக்கு வலிமை சேர்ப்பவை செலரி என்பதில் ஐயமே வேண்டாம். எலும்பில் இருபத்து மூன்று சதவீதம் சோடியம் சத்து உள்ளது. செலரியிலும் சோடியம் அதே அளவில் இருக்கிறது என்பது வியப்பூட்டும் உண்மை. செலரியில் உள்ள சிலிக்கன் மூலக் கூறு எலும்பின் கட்டுமானத்தின் அடிப்படையாக விளங்கும் ஒன்று. செலரி சாப்பிடுவோருக்கு எலும்பு தொடர்பான தொல்லைகள் நீங்கும்.


4. அவாகேடோவும், கர்ப்பப்பையும்.

முட்டை பல்பை போல காட்சி அளிக்கும் கருப்பையும், அவேகாடோ பழமும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளவை. கருப்பை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட துணை புரிவது அவேகாடோ. ஃ பாலிக் ஆசிட் நிறைய கொண்ட அவேகாடோ உண்பதால் செர்விகள் டிச்பெப்சியா என்னும் குறைபாட்டை நீக்கலாம். இதன் மூலம் கருப்பை கான்சர் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சொமேர் எனும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்.


5. சாத்துக்குடி பழமும், மார்பகமும்.


இரண்டும் பார்க்க ஒன்று போல  இருப்பதின் ரகசியம் லிமொனாயிட்கள் எனும் பொருள் சிட்ரஸ் வகை பழங்களில் நிறைந்திருப்பது தான். மார்பக புற்று நோயை வராமல் தடுக்கும் ஆற்றல சிட்ரஸ் வகை பழங்களுக்கு உண்டு.

6. தக்காளியும், இதயமும்.

தக்காளிப் பழத்தை குறுக்காக நறுக்கிப் பாருங்கள். அவற்றில் காணப்படும் அறைகள் இதயத்தின் உள்ளே உள்ள அறைகளைப் போன்றே இருக்கும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் என்சைம் தக்காளியை உண்பதன் மூலம் இதய நோய்களை தடுத்துக் கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சோமர். தக்காளியுடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால், லைகொபீன் சத்து பத்து மடங்காக உடலில் சேரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


7. இஞ்சியும், இரைப்பையும்.


வயிற்றுப் பொருமல் வந்தால் ஜிஞ்சர் பீர் சாப்பிட்ட அனுபவம் உண்டா? 


ஆம் என்று சொல்பவருக்கு இஞ்சியின் பெருமைகளை விளக்கவே வேண்டாம். குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கும் வல்லமையும், வயிற்றின் ஜீரணக் கோளாறுகளை நீக்கும் வல்லமையும், இஞ்சிக்கு உண்டு. இஞ்சியை உணவில் அளவாய் சேர்த்து வளமாய் வாழ்வோம்.


8. சர்க்கரை வள்ளிக் கிழங்கும், கணையமும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பலர் மறந்தே போய் விட்டோம். இதனைப் பார்த்தால் கணையத்தை பார்க்க வேண்டாம். இரண்டும் ஒன்று போலவே காட்சி அளிக்கும். சர்க்கரை வெள்ளியில் உள்ள பீடா கராடின் கணையம் வயதாவதாலும், கான்சராலும் பழுது படாமல் காக்கும்.
ஆதாரம்: http://www.womansday.com

சமூக நலம் கருதி வெளியிட்டவர்: 

வாழி நலம் சூழ.