Sunday, March 19, 2017

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

20.3.2017 திங்கள் காலை 7 மணி முதல் 21.3.2017 செவ்வாய் காலை 8 மணி வரை இருக்கின்றது;
இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;
(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
35.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:
ஹேவிளம்பி,சித்திரை மாதம்,18.4.2017 செவ்வாய் காலை 11.48 முதல் 19.4.2017 புதன் மதியம் 12.46 வரை

Wednesday, March 15, 2017

செல்வ வளத்தையும்,செல்வாக்கையும் அள்ளித் தரும் சிவராத்திரி கிரிவலம்!!!


உலகத்தை வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரத நாடுதான் பூஜை அறையாக இருக்கும்;அந்த பூஜை அறையில் சுவாமி படங்கள்,விக்கிரகங்கள் இருக்கும் இடமாக நமது தமிழ்நாடு இருக்கும்;பூமியில் அனைத்துவிதமான கடவுளின் திருவிளையாடல்களும் நிகழ்ந்தது நமது தமிழ்நாட்டில் தான்;

நாம் எவரும் ஆகாயத்தில் இருந்து குதித்துவிடவில்லை;ஈசனின் அம்சமாகிய ஒரு ஆண்;சக்தியின் சிறுவடிவமான ஒரு பெண்;இருவரின் இணைப்பால் தான் நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்திருக்கின்றோம்;மனிதப் பிறவி மிகுந்த போராட்டம் மற்றும் புண்ணியச் சேர்க்கையால் தான் நமக்குக்கிடைத்திருக்கின்றது;

இப்பிறவியில் தமது ஆயுளில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு தினமும் நெற்றியில் யார் விபூதி/குங்குமம்/திருநாமம் அணியவில்லையோ அவர்கள் மறுபிறவியில் மரம்/செடி/கொடியாகத்தான் பிறப்பார்கள் என்பது அகத்தியர் கூறும் தேவரகசியம்!

விண்ணுலகில் நமது முன்னோர்கள் கடுமையாக விரதம் இருந்து வரம் பெற்றால் மட்டும் தான் இங்கே நம்மால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும்;இல்லாவிட்டால் ஒருமுறை கூட அண்ணாமலை என்ற ஊருக்குக் கூட செல்ல முடியாது;சதுர்த்தசி திதி வரும் நாளைத்தான் சிவராத்திரி என்று நாம் கொண்டாடுகின்றோம்;

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் மாதப்  பிறப்பு அன்று கிரிவலம் செல்வதுதான் மரபாக இருந்துவந்தது;தற்போது அண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;நம்மில் பலர் அண்ணாமலையை பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றோம்;இது அறியாமையின் வெளிப்பாடு;எல்லா நாட்களிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக அண்ணாமலை கிரிவலம் வந்தது ப்ரபஞ்ச அன்னையான பார்வதி தேவியே! அன்னைக்கு துணையாக சென்றது பார்வதி தேவியின் அருந்தவப் புதல்வனும்,நமது ஆதி முன்னோருமாகிய அகத்தியரும் கிரிவலம் வந்தார்கள்;அப்படி அவர்கள் கிரிவலம் வந்தது ஒரு சிவராத்திரி அன்றுதான்;அதனால் தான் பவுர்ணமி கிரிவலத்தை விடவும் சிவராத்திரி கிரிவலம் மிகவும் சர்வசக்தி வாய்ந்ததாக இருக்கின்றது;

தொடர்ந்து 36 சிவராத்திரி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்தாலே போதும்;நமது அனைத்து கர்மவினைகளும் கரைந்து நலமான,வளமான,சக்தி வாய்ந்த வாழ்க்கை இப்பிறவியிலேயே கிட்டிவிடும்;


தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வரலாம்;நமது முயற்சியை நமது கர்மவினைகள் தடுக்கத் தான் செய்யும்;அதனால்,தொடர்ந்து சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செல்ல இயலாவிட்டாலும்,விட்டுவிட்டாவது 36 சிவராத்திரிகிரிவலத்தை நிறைவு செய்து வளமோடு வாழ்க!


அடுத்த ஓராண்டு சிவராத்திரி நாட்கள் பட்டியலை             ( அண்ணாமலையாரின் ஆசிகளோடும்,அகத்திய மகரிஷியின் அருளாலும்) உங்களுக்கு வழங்குகின்றோம்.

26.3.2017 ஞாயிறு காலை 11.05 முதல் 27.3.2017 திங்கள் காலை 10.03 வரை

24.4.2017 திங்கள் இரவு 10.05 முதல் 25.4.2017 செவ்வாய் இரவு 8.10 வரை

24.5.2017 புதன் காலை 6.44 முதல் நள்ளிரவு 3.46 வரை

22.6.2017 வியாழன் மதியம் 2.05 முதல் 23.6.2017 வெள்ளி காலை 11.36 வரை

21.7.2017 வெள்ளி இரவு 8.54 முதல் 22.7.2017 சனி மாலை 6.36 வரை

19.8.2017 சனிக்கிழமை பின்னிரவு(மறுநாள் விடிகாலை)3.48 முதல் 20.8.2017 ஞாயிறு பின்னிரவு 2.24 வரை

18.9.2017 திங்கள் மதியம் 1.25 முதல் 19.9.2017 செவ்வாய் மதியம் 12.11 வரை

17.10.2017 செவ்வாய் இரவு 12.42 முதல் 18.10.2017 புதன் இரவு 12.26 வரை

16.11.2017 வியாழன் மதியம் 3.07 முதல் 17.11.2017 வெள்ளி மதியம் 3.57 வரை

16.12.2017 சனி காலை 8.16 முதல் 17.12.2017 ஞாயிறு காலை 10.05 வரை

15.1.2018 திங்கள்

13.2.1018 செவ்வாய் இரவு 11.24 முதல் 14.2.2018 புதன் இரவு 1.14 வரை

15.3.2018 வியாழன் மாலை 5.36 முதல் 16.3.2018 வெள்ளி மாலை 6.24 வரை

அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் சிவராத்திரி கிரிவலம் வரும் போது சில சித்தர்களது தரிசனம் நம் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;அந்த சித்தர்களது வம்சாவழியில் நாம் பிறந்திருக்கின்றோம் என்று அர்த்தம்;

அண்ணாமலை கிரிவலத்தின்போது உங்களுக்கு கிட்டும் தெய்வீக அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தாதீர்கள்;அது தவறு;

சிவராத்திரி கிரிவலத்தின் போது,அன்னதானம்,ருத்ராட்ச தானம்,ஆடை தானம்,பழதானம்,கோதானம்,சொர்ண தானம்,பழச்சாறு தானம் செய்வது நன்று;இந்த தானங்கள் அனைத்தும் செய்ய முடியாவிட்டாலும்,இதில் ஏதாவது ஒரு தானத்தைச் செய்துவருவது நன்று;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ