Thursday, June 25, 2009

பாரதம் அன்றும் இன்றும்


பாரதம் அன்றும் இன்றும்

கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.

கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையான
போர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.

அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக
365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.

கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.

கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.

சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்

இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி.2005 ஆம் வருடம் வரதட்சணை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்களில் 260 புகார்களில் 200 பொய்யானவை.கி.பி.2006 ஆம் வருடம் கொடுக்கப்பட்ட புகார்களில் 285 புகார்களில் 220 பொய்யானவை என தெரியவந்துள்ளது.மாமியார் மற்றும் மனைவியின் பெற்றோர்களின் பணத்தாசையே பெரும்பாலும் காரணம்.தன் மகளின் ஒழுக்கமான எதிர்காலம் பற்றி சிறிதும் கவலையில்லை.
ஆக சட்டங்களால் சமுதாய கட்டமைப்பை அழிக்கத்தான் முடியும்.

இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் மொத்தம் 12,400 காவல் நிலையங்களே உள்ளன.பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே காவலர்கள் 7 லட்சம் கிராமங்களுக்கும் வருவார்கள்.

நாமக்கல்லில் இந்தியாவிலேயே அதிக லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள்.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட கனரகவாகனங்கள் பற்றி ஆய்வு நடத்திட நாமக்கல்லுக்குத்தான் வருகிறார்கள்.

அமெரிக்காவில் சாலையோர உணவகங்கள் எனப்படும் மோட்டல்களில் 80% குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து மான்செஸ்டர் பஞ்சாலைகளை ராம்காடியா சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூரில் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் வெறும் 300 தமிழர்கள் மட்டுமே! இவர்களில் 99% பேர் படிப்பில் 6 ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.

சுதந்திரம் வாங்கிய போது கி.பி.1947 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.2%.இந்திய பொருளாதார வளர்ச்சி 2% மட்டுமே!
இன்று(அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால்) உலக பொருளாதார வளர்ச்சி(கி.பி.2007)3.1%
இந்திய பொருளாதார வளர்ச்சி 7%
நம்மைப் பார்த்தே ஆங்கிலேயர்கள் சமுதாயக் கல்வியில் ஈடுபட்டனர்.

சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்


இலங்கையில் சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்

12 வயது முதல் 40 வயது வரை உள்ள தமிழர்களில் ஆண்கள், பெண்களை பிரித்து சித்ரவதைக்கூடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு அவர்கள் செய்யும் சித்திரவதைகளை அனுபவிக்கும் போதே காந்தியை நான் தான் கொன்றேன் என ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.அப்படி ஒப்புக் கொள்ளாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும்.
பெண்களின் நிலை மிக மிக மோசம்.கர்ப்பிணிப் பெண்கள் 4-5-6-7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக கருக்கலைக்கப்படுகின்றனர்.இளம்பெண்களின் மானம் காற்றில் பறக்கிறது.சிங்கள ராணுவம் குழுவாக ஒரே தமிழ்ப்பெண்ணைக் கற்பழிக்கிறார்கள்.கற்பழித்த பிறகு அந்த பெண்ணின் பிறப்புறுப்பினுள் வெடிகுண்டு வைத்து அதை வெடிக்க வைத்துக் கொல்கின்றனர்.சில சித்திரவதைகளை இங்கு எழுத முடியவில்லை.அவ்வளவு கொடுமைகள் இன்னும் இலங்கைத் தீவில் தொடர்கிறது.இந்த நிலை இன்று வரை(25.6.2009) தொடர்கிறது.இனியும் தொடரும்.. .. .. .. .. .. .. ..
இதைக் கூட நாம் கண்டிக்காமல் வாழ்ந்தால் நாமெல்லாம் மனிதர்களா? தமிழன் என்பதை பிறகு பார்ப்போம்.
சரத் பொன் சேகா-இவன் தான் தலைமை ராணுவத் தளபதியாம்,ராஜபக்ஷே தான் இலங்கையின் ஜனாதிபதியாம்.
மானம், மனித நேயம் ,சமதர்மம் என்பது இந்தியாவுக்கு இருக்குமானால் இந்தகொடூரங்களை உடனே நிறுத்தப்படவேண்டும்.ஏன் எனில் இலங்கையை வளமான தீவாக மாற்றியதற்கு சிங்கள ஹிட்லர் அரசு தமிழர்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?
ஒரு நாளும் சீனாவும் பாகிஸ்தானும் மனித நேயம் என்றால் என்னவென்றே உணராது.அவை வெறி பிடித்த நாடுகள்.
இத்தாலிக்காரி சோனியாவை ஜெயிக்க வைத்த நமக்கு நாளைக்கே நம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மேலே கூறிய கொடூரங்களை அனுபவித்த பின்னர்தான் நமக்கு புத்தி வருமா?

Wednesday, June 24, 2009

ஜாதிகள் பற்றிய சரியான விளக்கம்:காஞ்சி சுவாமிகள்

ஜாதிகளைப் பற்றி சரியான விளக்கம்:காஞ்சி பரமாச்சாரியர் சுவாமிகள் சொன்னது

ஆதியில் பாரம்பரியம் என்ற கட்டுப்பாடாக வைத்தார்கள்.அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் ‘இது நம் அப்பன் பாட்டன் காலச் சொத்து;நம் குல தனம்’ என்ற நிறைவு இருந்தது.அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது.அதனால் நல்ல திறமையும் இருந்தது.
இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டதால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான்.
முன்காலத்தில் பணம் இரண்டாம் பட்சம்தான்;விசுவாசத்தோடு ‘தன் தொழில்’ என்று திருப்தியோடு செய்ததால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன.சமுதாயமும் நன்றாயிருந்தது.
ஆதாரம்:பக்கம் 222,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சி சுவாமிகள்.

தமிழ்ப் பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்


தமிழ்ப்பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்

பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.
ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.
ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியா

அமெரிக்காவும் ஒரு இந்து தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்

ஸாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளத்துக்கு வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களை தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்.- இது ராமாயணக்கதை.
நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமாக-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169 வானதிப் பதிப்பகம் வெளியீடு।இணையதளம்:www.vanathi.in

Sunday, June 21, 2009

பணம் பணம் பணம் பணம்







பணம் பற்றிய பழமொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

பாதிப் பணக்காரனாகிவிட்டால் முழுப்பணக்காரனாவது எளிது.

செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்;அப்படி சேர்க்கும் செல்வத்தை கட்டிகாக்க துணிவு வேண்டும்.அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை.(அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)

வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை.விற்பவனுக்கு ஒரு கண் போதும்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.

எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள்.அடுத்தவருடைய பணத்தை மட்டும்!!!
ஒரு முறை சம்பாதித்த பணம் இருமுறை சேமித்ததற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி பணப்பையை மூடிக்கொள்ளும்.

பணத்தை உங்களுக்கு அடிமையாக்குங்கள்.இல்லையேல் அது உங்களை அடிமைப்படுத்திவிடும்.இதனால் உங்களது ரத்த உறவுகள் சிதைந்துவிடும்(மொத்த தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் இந்த சிதைவு தான் நடக்கிறது.)

காலத்தை வீணாக்குவதே மோசமான செலவு

செல்வச்செருக்குடையவர்கள் தங்களுடைய உடமையை மட்டுமல்ல;உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத் தயங்க மாட்டார்கள்.

உலகை ஆளத்துவங்கும் இந்து சமயல் பொருட்கள்











மிளகு,மஞ்சள்,சீரகம் பற்றி அவங்க சொல்றாங்க:
நம்மவங்க இப்ப நம்புவாங்க

தலைவலிக்கு நம்மூர் குழம்புப்பொடி போதுமாம்.ஆம், ஆஸ்பிரினில் உள்ள மருத்துவ குணங்கள், இந்து ‘கறிப்பொடிகளில்’ அதிகம் உள்ளது என நம் தாத்தாக்களின் வாழ்க்கை முறை கூறிய போது நம்பவில்லை;ஸ்காட்லாந்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கூறிவிட்டனர். எப்போது?
28.8.2006 ஆம் நாளன்று தினமலரில்!!!

மருத்துவ நிபுணர்களில் ஒருவரான கேரி டத்தே வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் உள்ள விஷயங்களைப் படித்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.நம்மூர் சாம்பார், ரசம் குடித்து அவற்றை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் விளக்கம் வருமாறு:தலைவலிக்கான மாத்திரை ஆஸ்பிரின்.இது பக்கவிளைவைத் தருகிறது.ஆனால்,இந்து சமயலறைகளில் உள்ள சமையல் தானிய வகைகளில் ஆஸ்பிரினைத் தாண்டி பலன் தரும் வகையில் சத்துக்கள் அமைந்துள்ளன.
இந்து சமையலறைகளில் மிளகு, மஞ்சள்,கறிவேப்பிலை போன்றவை இல்லாமல் சமையலே இல்லை.அவற்றைக் கொண்டுதான் குழம்புப்பொடி, ரசப்பொடி என்று பவுடர்களைத் தயாரிக்கின்றனர்.இந்த கறிப்பொடிகளில் மூலிகை சத்துக்கள், ஆஸ்பிரினில் உள்ள ரசாயன(கெமிக்கல்)சத்துக்களைவிட சிறந்தவை.

இந்த குழம்புப்பொடியில் சாலிசிலிக் ஆசிட் என்ற ரசாயனக்கலவை கிடைக்கிறது.இதுதான் தலைவலியைப் போக்க முக்கியமானது.
அதே சமயத்தில் நீண்டகாலமாக ஆஸ்பிரின் முழுங்கிக் கொண்டே இருந்தால் பக்கவிளைவு நிச்சயம்.உதாரணமாக, கிட்னி செயலிழந்து போகலாம்.

ஆனால், நீண்டகாலம் இந்தகுழம்புப்பொடியை உணவில் பயன்படுத்தினால் தலைவலி பறந்து போகும்.அதையும் மீறி தலைவலி வந்தால் அதற்கு வேறு பல காரணங்கள் இருக்கும்.
இந்த குழம்புப்பொடியில் சிறிதளவு எடுத்து சோதனை செய்து பார்த்ததில் 95 மில்லி கிராம் சாலிசிலிக் ஆசிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதே சமயம் ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றில் வெறும் 65 கிராம் சாலிசிலிக் ஆசிட்தான் இருக்கிறது.

அதே போல எந்தளவுக்கு சூடாக சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு பலன் இருக்கிறது.இந்த மூலிகை சத்துக்கள் நிறைந்த சாற்றை(ரசம் அல்லது குழம்பை) சூடாகக் குடித்தாலே தலைவலி போய்விடும்.இவற்றில் உள்ள மிளகு, மஞ்சள்,சீரகம் இம்மூன்றும் உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.முழு மனித உடல் ஆரோக்கியத்துக்கு இவை பயன்படுகின்றன.


இப்போது புரிகிறதா? நமது சமையல் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன।வெகு விரைவில் சமையல்பொடிகள் ஏற்றுமதி செய்தே பல இந்திய கோடிஸ்வரர்கள் உருவாகப் போகிறார்கள்.

இரு உருப்படியான இணையதளங்கள்


இரு உருப்படியான இணையதளங்கள்



நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையதளத்தை நடத்துபவரின் தபால் முகவரி வேண்டுமா?

ரொம்ப எளிது.www.who.is என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.அதில் நீங்கள்பார்க்கும் ,இணையதள முகவரியை முழுமையாக சிறுதவறு கூட இல்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.
உரிய தளத்தின் உரிமையாளரின் முகவரி, மின் அஞ்சல், போன், சர்வர் முகவரி அனைத்தும் கிடைக்கும்.

அதே போல ஒரு தொலைபேசியின் தபால் முகவரியைக் கூட கண்டுபிடித்துவிடலாம்.www.phonenumbers.net என்றதளத்திற்குச் சென்று அந்த தொலைபேசியின் நாடு, மாநிலம், மாவட்டம் வரை கண்டுபிடித்தால் முழு தபால் முகவரி கிடைக்கும்.




இந்துமயமாகிவரும் அமெரிக்கா


இந்து மயமாகி வரும் அமெரிக்கா

இந்துத்தாய்க்குப் பிறந்து இந்துத்தாயின் பாலைப்பருகி வளர்ந்து இந்து மதத்தைத் துவேஷிக்கும் இந்து அரசியல்வாதிகள் இதைக் கண்டிப்பாக படிக்கவும்.
ஆதாரம்:குமுதம் ஜோதிடம்- ஜோதிட வார இதழ் 26.12.2008

டெக்கான் கிரானிக்கல் என்ற நாளேடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் தமிழாக்கம் இது;-

அமெரிக்க ஜனநாயக கட்சியினர் தங்கள் நாட்டின் மிக முக்கிய செனட் கூட்டத்தை இந்துக்களின் மிகப்புராதனமான உபநிஷத்துக்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ரிக்வேத மந்திரங்களுடன் ஆரம்பித்தனர்.
இந்துப்புரோகிதரான திரு.ராஜன் ஷெட் சம்ஸ்க்ருதத்தில் காயத்ரி மந்திரத்தையும், வேறு பல வேத மந்திரங்களையும் உச்சரித்ததுடன், அவற்றின் அர்த்தங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கினார்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் கூட்டம் ஆரம்பித்தது.உலகின் மிகப் பழமையான வேதமந்திரங்களும் ஓதப்பட்டன.


மேலும் பிரகத் தாரண்ய உபநிஷத், தைத்ரிய உபநிஷத் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்லோகங்களும் சொல்லப்பட்டன.

மேலே உள்ள படம் அமெரிக்க செனட்டின் உள்புறத் தோற்றமாகும்.

ரத்ததான இணையதளம்=திருச்சிமாவட்டக் கல்லூரிமாணவர்களின் அட்டகாசமான ஐடியா


ரத்த தானம் செய்ய கல்லூரி மாணவர்களின் அட்டகாசமான ஏற்பாடு


இந்துயா, தமிழ்நாடு, திருச்சி மாவட்டத்தில் 20 கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்ய ஒரு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை ரத்த கொடையாளர்களாகப் பதிந்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இணையதளத்தைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பகுதியைச் சேர்ந்த ரத்த கொடையாளரை உடனடியாகத் தொடர்புகொள்ளலாம்.
தவிர உடல் உறுப்பு தானம் செய்யவிரும்புவோர் இந்த தளத்தில்பதிந்து கொள்ளலாம்:
http://www.savepeoplelife.org/
மின் அஞ்சல்:savepeople@savepeoplelife.org

இதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் முயற்சி செய்யலாமே!
ரத்தத்தை விற்பனை செய்யும் மருத்துவமனைகளின் கொட்டத்தை அடக்கலாமே!!!

சமஸ்க்ருதம் பயிலும் முஸ்லீம்கள்


சமஸ்க்ருதம் பயிலும் முஸ்லீம்கள்

புதுடெல்லியின் மையப்பகுதியில் உள்ளது ஜமாலியா நகர்.இப்பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழுமிடம் ஆகும்.இங்கு இஸ்லாமிக் அகாடமி என்ற மதரசா(முஸ்லீம் மதப் பள்ளி) இருக்கிறது.

இதன் நிர்வாகிகள் பாடத்திட்டத்தில் நவீனங்களை சேர்க்க முடிவு செய்தனர்.அதன் படி அறிவியல், புவியையல், மனோதத்துவம், சமஸ்க்ருதம் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

சமஸ்க்ருதம் பயில அவர்கள் மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறையைத் தொடர்பு கொண்டனர்.

இந்தத் துறையின் வழிகாட்டுதல் படி ராஷ்டீரிய ஸ்ம்ஸ்க்ருத சன்ஸ்தான் என்ற அமைப்பு சமஸ்க்ருதம் கற்றுத்தர முன்வந்துள்ளது.
இதன் படி கடந்த இரு ஆண்டுகளாக ஏராளமான முஸ்லீம் மாணவ மாணவிகள் சமஸ்க்ருதம் பயின்று வருகின்றனர்.

உங்கள் குழந்தை உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?


உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?

இன்று தமிழ் உலகத்தின் முக்கியப்பிரச்னை: என் குழந்தை என் பேச்சைக் கேட்பதில்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை;
உங்களின் குழந்தையின் 3 வயது முதல் 12 வயது வரை
அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்களா?

தகுந்த நபரிடம் உங்கள் குழந்தையை அறிமுகம் செய்திருக்கிறீர்களா?

சுய சிந்தனையை ஊக்குவிக்குறீர்களா?

இவற்றுக்கெல்லாம் இல்லை என்பதால்தான் 12 வயதிற்கு மேல் உங்கள் குழந்தை( ஆணும் சரி பெண்ணும் சரி) உங்கள் பேச்சைக் கேட்பது இல்லை.
தகவல் ஆதாரம்:விஜய பாரதம் தேசிய வார இதழ் 23.5.2008 பக்கம் 35.
எனக்கு எவ்வளவு வேலை இருக்குது தெரியுமா? என் பிள்ளையிடம் கூட மனம்விட்டுப் பேச நேரமில்லை; என்கிறீர்களா?
நீங்கள் சம்பாதிப்பது யாருக்காக?
உங்களது அடுத்த தலைமுறையை பொறுப்பாக வளர்க்கும் பொறுப்பு உங்களது குழந்தையின் ஆசிரியர்களுக்கு வெறும் 20% தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதே சமயம் உங்களது பங்கு 80% என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் அன்பு செலுத்தவும் மனம் விட்டுப்பேசவும் நேரம் ஒதுக்காத போது அந்த இடத்தைப்பிடிப்பது யார் தெரியுமா? காமவெறிபிடித்தவர்கள்,நயவஞ்சகம் நிறைந்தவர்கள், உங்கள் குடும்பத்தை நாசமாக்கிட நினைக்கும் உங்கள் உறவினர்கள்.

Tuesday, June 16, 2009

கி.பி.2100 க்குள் இந்தியாவின் நிலை

http://www.geocities.com/jonathanpastor/conversion.html
கி।பி।இரண்டாயிரத்து நூறுக்குள் (நாம் இந்து விழிப்புணர்வு பெறாவிடின்)நமது
இந்தியா இந்த இணையதளத்திலுள்ளது போல மாறிவிடும்.

இந்து மதத்தை நயவஞ்சக அரசியலுடன் கலந்தது-2


இந்து மதத்தோடு அரசியலைக்கலந்தது -2

5।கி।பி।1700களில் இன்றைய பாண்டிச்சேரி அன்றைய பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது।அப்போது, பிரான்ஸ் கவர்னராக டுப்ளே என்பவன் இருந்தான்।அவனுக்கு துபாஷியாக/மொழி பெயர்ப்பாளராக திரு.ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர் இருந்தார்.அவர் பாண்டிச்சேரி பிரான்ஸ் அரசாங்கத்தில் நடந்த சம்பவங்களை தனது தனிப்பட்ட டைரிக்குறிப்பில் நாள்வாரியாக எழுதியுள்ளார்.இக்குறிப்புகள் கி.பி.1990 வாக்கில் ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள் என்று புத்தகமாக வெளிவந்துள்ளது.
இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வானம் வசப்படும் என்ற நாவலை தினமணி பத்திரிகையில் எழுதினார்.தினமணியின் ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவரும் தினமணிக்கதிரில் பல வாரங்கள் வெளிவந்தது.
இந்தத் தொடருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
வானம் வசப்படும் என்ற அந்த நாவலில் பாண்டிச்சேரியில் இருந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் என்ற சிவாலயத்தை பாண்டிச்சேரியை ஆண்ட பிரான்ஸ் கிறிஸ்தவர்கள் எப்படி இடித்துத் தரைமட்டமாக்கினார்கள் ? என்பதை விளக்கியுள்ளார்.அதுமட்டுமல்ல அப்படி இடிக்கப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் இடிபாட்டுக் கற்களைக் கொண்டு அந்தக்கோவில் இருந்த அதே இடத்தில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டியுள்ளனர்.இன்றும் அந்த சர்ச் இயங்கிவருகிறது.
இது போல இந்தியா முழுக்க 30,000 கோவில்கள் கி.பி.1000 முதல் கி.பி.1947 வரை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு சர்ச் ஆகவோ, மசூதியாகவோ மாற்றப்பட்டுள்ளது.(அட இதைத் தான் பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வருகிறது.)

யாராக இருந்தாலும், நானாக இருந்தாலும் சரி கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அழிவுதான் மிஞ்சும்.
தனிமனிதன் கடந்தக் காலத்தவறுகளைத் திருத்திக்கொண்டால் அவன் மாமனிதனாவான்.
குடும்பம் தனது கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக் கொண்டால் சில குடும்பங்களாவது நிம்மதியடையும்.
ஒரு மதம்/மதத்தின் குடிமக்கள் அதாவது மதத்தைப் பின்பற்றுவோர் கடந்தகாலத் தவறுகளிலிருந்து தன்னை திருத்திக்கொண்டால் அந்த மதம் உலகிற்கே வழிகாட்டும் கலங்கரைவிளக்காகும்.அது நமது இந்து தர்மம்தான் எப்போது நம்மை திருத்திக் கொள்ளப்போகிறோம்?

6।1980 களில் ஜம்மு-காஷ்மீரில் ஒரு சம்பவம் நடந்தது।அங்கு ஒரு மசூதியில் முகமது நபிகள் அவர்களின் தலைமுடி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்।அது திடீரெனக் காணாமல் போனது।





காஷ்மீர் முஸ்லீம்கள் இதனால் கலவரம் செய்தார்கள்.ஒருவாரத்தில் 20 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாயின.
அரசாங்கமும் பெருமுயற்சியெடுத்து காணாமல் போன நபிகளின் தலைமுடியை கண்டுபிடித்தது.

2000 க்குப்பிறகு, ஒரு முறை நமது தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலைச்சராக இருந்தபோது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே குண்டு வெடித்தது.ஒரே ஒரு அரசுப் பேருந்து கூட சிறிதும் சேதமாக வில்லை.
இத்தனைக்கும் சுமார் 1000 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களுக்கு மீனாட்சியம்மன் குல தெய்வம்!!!
நமது இந்து மத உணர்வு செத்துவிட்டது.
இந்த இந்துமத விழிப்புணர்வு இல்லாத நிலைதொடர்ந்தால் விரைவில் நமது குடும்ப அமைப்புமுறை கிறிஸ்தவ மிரட்டலால் அழிந்துவிடும்.ஜாக்கிரதை???

7।நமது பங்காளி பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசு.அங்கு இந்துக்கள் சிறுபான்மையினர்.அங்கு வாழும் இந்துக்களுக்கு மாநில அரசில்கூட வேலைவாய்ப்பு கிடையாது.ஆனால், நம் தமிழ்நாட்டிலோ, தலைகீழ்.எப்படி?


மாவட்ட அல்லது மாநில அளவில் ஒரு கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் அரசு வேலை நியமிக்கும் அதிகாரம் மிக்கப் பதவிக்கு வந்தால், வந்த அன்றே அவர்/ள் செய்யும் முதல் வேலை எது தெரியுமா?
தனது துறையில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதுதான்.அதற்கு எத்தனைபேர் இன்று வரை விண்ணப்பித்துள்ளார்கள்? இந்த இரண்டையும் கண்டறிந்து தனது மதத்தைச் சேர்ந்தவருக்கு அன்றைக்கே பணி நியமன ஆணை அனுப்புவதுதான்.
8.ஒரு முறை பாகிஸ்தானில் ஒரு 14 வயது முஸ்லீம் சிறுவனை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிவிட்டனர்.மதம் மாறிய சிறுவனை, பாகிஸ்தானின் உள்ளூர் மத நீதிமன்றம் சாகும் வரை தூக்கிலிடும்படி தீர்ப்பளித்தது.
மதம் மாறிய சிறுவன் கிறிஸ்தவப்பாதிரிகளின் உதவியோடு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான்.உச்சநீதி மன்றமோ அவனுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
உடனே,இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டது.அந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க முயன்றது.முடியவில்லை;உடனே அந்த ஒரே ஒரு 14 வயது முஸ்லீம் சிறுவனுக்காக தனி விமானத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியது.அவனுக்கு அமெரிக்கக் குடியுரிமையை உடனே தந்து அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டது.ஆஹா! இதுவன்றோ மத விழிப்புணர்வு.
இந்தியாவில் பாராளுமன்றத்தினை தாக்குதல் நடத்திய அப்சல் முகமதுவின் தூக்குதண்டனையை காங்கிரஸ் அரசும் கட்சியும் நிறுத்தி வைத்துள்ளது.இந்த முஸ்லீம் டெல்லியைச் சேர்ந்தவன்.இவனை அப்சல் குரு என இந்துச்சாயம் பூசி இந்து தர்மத்திற்கும் இந்துயாவிற்கும் துரோகம் செய்கிறது அ.இ.கா.க எனப்படும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஓ ஸாரி அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ்!!!!

இந்துமதத்துடன் நயவஞ்சக அரசியலைக் கலந்தது யார்?


இந்தியாவில் இந்துமதத்தோடு அரசியலைக் கலந்தது யார்? அதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என்னென்ன?

இந்த தலைப்பில் 20 பி.எச்.டி வாங்க முடியும்.நமது இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்தது; ஆனால்,முழுமையான விஞ்ஞான பூர்வமானது என்பது நமக்கு ஓரளவே தெரியும்.மத ரீதியாக நம்மை எதிரியாக நினைக்கும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் அறிஞர்களுக்கு இந்த விஷயம் முழுமையாகத் தெரியும்.அதனால் தான் இந்த பூமி முழுவதும் இந்து மதத்தை முழுமையாக அழிக்கப்பார்க்கின்றன.
இதில் நம் நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள்(சுமார் 12 கம்யூனிஸ்டுகள் உள்ளன.இடது, வலது,நடு, வீணாகப் போனது, நக்ஸலைட்),காங்கிரஸ்,தி.க. எனப்படும் பகுத்தறிவுக் கட்சி , தி.மு.க.,
சரி ! நமது இந்து தர்மத்தை அரசியலுடன் கலந்தது யார் என நமது நாட்டு வரலாற்றைப்பார்த்தால் சுமார் 100 புத்தகங்களை கடந்த 12 ஆண்டுகளாகப் படித்துப்பார்த்தால் ஏ யப்பா இந்துக்களாகிய மதசுயநலம் சிறிதும் இல்லை என்றே தெரிகிறது.

1.மருது பாண்டியர்களை மடக்கிய கிறிஸ்தவ ஆங்கிலேயன்
கி.பி.1700 களில் ஆங்கிலேய கவர்னர் ஒரு அறிக்கையை வெளியிடுகிறான்.
குறிப்பிட்ட தேதிக்குள் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயரிடம் சரணடையாவிட்டால் அவர்கள் உருவாக்கிய காளையர்கோவில் கோபுரம் பீரங்கி வைத்து இடித்து தரைமட்டமாக்கப்படும்.
தன்னை விட தான் உருவாக்கிய கோவில் கோபுரம் முக்கியம் என முடிவெடுத்து மருதுபாண்டியர் சரணடைந்தனர்.பிறகு ஆங்கிலேய கிறிஸ்தவன் அவர்களை என்ன செய்தான் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?மருதுபாண்டியர் தேவர் இனத்தைச் சேர்ந்த மன்னர்.ஆனால், இன்று தேவர் இனத்தில்தான் பெருமளவு கிறிஸ்தவ மதமாற்றம் நடக்கிறது.
அதாவது எந்த கிறிஸ்தவ மதம் தனது ஜாதியைச் சேர்ந்த மன்னனை நயவஞ்சகமாக கொன்றதோ அதே கிறிஸ்தவ மதத்தை தேவரின மக்கள் பின்பற்றுகிறார்கள்.எப்படி இருக்குது?
இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான்.இதே போல நாயக்கர்,பிள்ளை,பிராமணர்,முதலியார்,வன்னியர் என இந்தியாவிலுள்ள 6000 ஜாதிகளிலும் கிறிஸ்தவ ஆங்கிலேயனை எதிர்த்து- நமது இந்துஸ்தானின் சுதந்திரத்திற்குப் போராடி உயிரிழந்துள்ளனர்.
(அப்போ பாபர் மசூதி இடித்தது மட்டும் தான் மதவாதம்.)

2.முதல் இந்திய விடுதலைப்போர் 1875 ஆம் வருடம் நடைபெற்றது.இதை கிறிஸ்தவ ஆங்கிலேயன் சிப்பாய்க் கலகம் என குறிப்பிடுகிறான்.நாமும் இந்துமத விழிப்புணர்வு இல்லாமல் நமது பாடத்திட்டத்தில் சிப்பாய்க் கலகம் என நமது அடுத்த தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அக்காலத்தில் கிறிஸ்தவ ஆங்கிலேயனின் ராணுவத்தில் நமது இந்துக்கள் படைவீரர்களாகப் பணியாற்றிவந்தனர்.
கிறிஸ்தவ ஆங்கிலேயன் அவர்கள் பசுவைப் புனிதமாக மதிப்பதை உணர்ந்தான்.வீம்பு மப்புக்கென்றே பசுவின் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கிகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தான்.அதே சமயத்தில், இந்திய முஸ்லீம்கள் பன்றியை புனிதமாகக் கருதுவதை உணர்ந்த கிறிஸ்தவன்,தனது ராணுவத்தில் பணிபுரியும் முஸ்லீம் வீரர்களுக்கு பன்றியின் கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தான்.
இந்த கிறிஸ்தவ(ஆங்கிலேய)னின் திமிர்த்தனம் வாய்ந்த செய்கைதான் முதல் விடுதலைப்போர் துவங்கிடக் காரணமானது.
(இன்றும் கூட கிறிஸ்தவ அமெரிக்காவின் ராணுவவீரர்கள் ஈராக்கில் உள்ள சிறைகளில் முஸ்லீம்களின் புனிதப் புத்தகமான திருக் குரான்களை கழிவறையில் கிழித்து வீசிக்கொண்டிருக்கிறார்கள்.ஏசு இதை உணர்ந்தால் எத்தனை முறை தற்கொலை செய்வாரோ?)
3.ஒரு நாட்டின் தேச பக்தியை அழிப்பது எப்படி? என்று ஒருமுறை நமது மகாராஜா ஆங்கிலேயனிடம் கேட்டார்.அதற்கு அந்த ஆங்கிலேயன் சொன்னான்:
ரொம்ம்ப சிம்பிள்.அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய (தாய்)மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக் கொள்.அது போதும்
நாம் ஏன் நம் அப்பா, அம்மா,உடன்பிறந்தோரை மதிப்பதில்லை;அவர்களும் நம்மை மதிப்பதில்லை எனப் புரிகிறதா? இன்றைய கல்வி மனிதனின் தன் முனைப்பு என்ற ஈகோவை வளர்க்கவே பயன்படுகிறது.நம்மில் எத்தனை பேருக்கு திருமந்திரம் , திருக்குறள், பகவத்கீதை,அர்த்த சாஸ்திரம், கொக்கேக முனிவரின் காம சாஸ்திரம்,ராமாயணம், மகாபாரதம், கேனோபனிஷத், முண்டோபனிஷத்,தொல்காப்பியம் தெரியும்?
நாம் நமது அடிப்படை வேர்களை மறந்தோம்.நம் வளமான நிம்மதியான வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறோம்.

4.இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் சுதந்திர இந்துஸ்தானிற்காக ஒன்றுபட்டுப் போராடியதைக் கண்ட கிறிஸ்தவ ஆங்கிலேயன் பயந்து போனான்.இந்த ஒற்றுமையை சீர்குலைக்க முஸ்லீம் லீகை உருவாக்கினான்.நமது காந்தித்தாத்தாவின் சிந்தனையும் மிகவும் பலவீனமாக இருந்தது.
அவர் முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் இந்துஸ்தானுக்கு(இந்தியாவிற்கு) சுதந்திரம் வாங்க முடியாது என நினைத்தார்.ஆனால், தனது மதமான இந்து மதத்திற்கு துரோகம் விளைவித்தார்.
அவர் அரசியலுக்கு வரவிரும்பிய போது தனது அரசியல் குருவான கோபால கிருஷ்ணகோகலேயிடம் ஆலோசனை கேட்டார்.

அதற்கு அவர்,நீ அரசியலுக்கு வரும் முன் நமது நாட்டை சுற்றிப்பார்.அதன் பிறகு அரசியலுக்கு வா என்றார்.அதன்படி காந்தி சுமார் இரு வருடங்கள் நமது இந்தியாவைச் சுற்றிப்பார்த்தார்.சுற்றிப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார்.
அந்த முடிவு: இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குண்டர்களாக இருக்கிறார்கள்;ஆனால், இந்துக்கள் கோழைகளாக இருக்கிறார்கள்.
காந்தி மகாத்மாவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
முஸ்லீம்களின் ரவுடித்தனத்தை அடக்கியிருக்கவேண்டும். அல்லது இந்துக்களையும் குண்டர்களாக மாற்றியிருக்க வேண்டும்.
அவர் இரண்டையும் செய்யவில்லை.மாறாக, முஸ்லீம்களுக்கு செல்லம் கொடுக்க ஆரம்பித்தார்.அதாவது சலுகை வழங்க ஆரம்பித்தார்.விளைவு?பாகிஸ்தான் பிரிந்தது.(கிறிஸ்த இங்கிலாந்தின் பிரித்தாளும் திட்டம் ஒர்க் அவுட் ஆனது)பாகிஸ்தானின் வளர்ச்சி 1947 முதல் 2009 வரை முஸ்லீம் பயங்கரவாதம் இந்தியா முழுக்கப்பரவக் காரணமானது.
காந்தியின் செல்லம் கொடுக்கும் கொள்கையால் இந்துக்கள் இன்று இந்துக்களின் ஒரே நாடான இந்துயாவில் சிறுபான்மையாக மாறத்துவங்கிவிட்டனர். அதாவது, எல்லா சலுகைகளும் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான்.மிச்ச மீதி இருந்தால் பிச்சைக்காரனுக்குக் கிடைக்குமே அதுதான் இந்துக்களாகிய நமக்கு?
இன்று இந்துக்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி! ஒரு நர்சரி அல்லது மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆரம்பிப்பதாக இருந்தால் அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.பிறகே ஆரம்பிக்கவேண்டும்.ஆனால், சிறு பான்மையினர் என்ற (காந்தி கொடுத்த) ஆயுதம் கிறிஸ்தவரோ அல்லது முஸ்லீமோ பள்ளி ஒன்றை ஆரம்பித்துவிட்டு மாநில அல்லது மத்தியக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதும்.மாநில அரசிடம் ஆசிரியர் தேர்ந்தெடுக்க அனுமதி கேட்கத் தேவையில்லை.இத்தனை பேரை வாத்தியாராக எனது பள்ளியில் நியமித்திருக்கிறேன் என தகவல் அனுப்பினால் போதும்.மாநில அரசு மறுப்பேதுமில்லாமல் அவர்களுக்கு ஆயுள் முழுக்க சம்பளம் தரும்.தந்து கொண்டு இருக்கிறது.















Friday, June 12, 2009

தினசரி வாழ்க்கைக்கு வேண்டிய சில ஆன்மீகக்குறிப்புகள்


சில ஆன்மீக குறிப்புகள்:தினசரி வாழ்க்கைக்கு

· சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
· வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
· இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா குலத்தில் அவதரித்தார்.
· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
· நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா?
· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

சித்தர்கள் கூறிய ஆரோக்கிய குறிப்பு

சித்தர்கள் கூறியுள்ள ஆரோக்கிய குறிப்பு

நமது உடல்நிலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு சித்தர்கள் கூறிய வழிகளில் ஒன்று உள்ளது.இதுவே மிக எளிய வழிமுறை:
நமது உள்ளங்கையை முன்னந்தலையில் வைத்து மணிக்கடை கூர்ந்துபார்க்க வேண்டும்.
முன்கை பருமன் குறுகி குச்சிபோல தோற்றமளித்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

எப்போதாவது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டோம்.பசி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.என்ன செய்ய?
நமது நாக்கை C போல மடித்து,நாக்கின் நுனியை மேல்வாய்ப் பகுதியினைத் தொடுவதுபோல சிலநிமிடங்கள் வைக்க வேண்டும்.இதனால், பசிக்காது.
ஒரு மனிதனால் இப்படிச் செய்து 12 நாட்கள் வரை பசியைக் கட்டுப்படுத்த முடியும்.

Tuesday, June 9, 2009

ஆழ்மனதின் சக்திகள்:அனுபவ உண்மை

ஆழ்மனதைப் பயன்படுத்தி நமது லட்சியங்களை அடைவது எப்படி?

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியும்.அதற்கு வேண்டியதெல்லாம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலை 15 நிமிடம் மற்றும் மாலை 15 நிமிடம் ஒரு குறிப்பிட்ட தியானம் செய்ய வேண்டியதே!

அது எப்படி தியானம் செய்தால் கோடீஸ்வரராக முடியும்.நாம் ஒவ்வொருவரும் கடவுள்தன்மையோடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் அதை நாம் உணராமல் இருக்கிறோம்.
www.alphamindpower.net என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.இது சென்னையிலிருந்து செயல்படும் ஒரு தமிழ் இணையதளமாகும்.
இதில் கூறப்பட்டுள்ள நாளில் உங்களுக்கு அருகிலுள்ள நகரில் ஆல்பா தியானப் பயிற்சியில்(தமிழில் அல்லது ஆங்கிலத்தில்) கலந்து கொள்ளுங்கள் । பயிற்சிக்கட்டணம் உண்டு;கலந்து கொண்ட பிறகு உங்களது நியாயமான ஆசைகள் நிஜமாகும் என்பதை உணரலாம்.
எந்தெந்த ஆசைகள் நிறைவேறும்?
1.ஐ.ஏ.எஸ் ஆவது
2.மாநிலத்திலேயே முதல் மாணவராவது
3.ஒரு கோடி ரூபாய்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பது
4.குடிக்கும் கணவன்/சகோதரன்/அப்பாவை குடிக்காமல் நிறுத்தச்செய்வது
5.குடும்பப்பிரச்னைகள் தீர்வது
6.கடன் தீர்வது
7.நீண்டகால உடல் அல்லது மன நோய் தீர்வது
8.செய்யும் வேலையில் இன்னும் கவனமாக செயல்பட்டு பதவி உயர்வுகிடைப்பது
9.எல்லோரும் வெறுக்கும் நம்மை நேசிக்கச்செய்வது
10.பொருளாதார வளம் அடைவது
11.இன்னும் நிறைய
இதெல்லாம் எப்படி சாத்தியம்?நான் நம்ப மாட்டேன் எனக்கூறுகிறீர்களா?
இந்த அறையில் டாடா, ரிலையன்ஸ்,ஓடபோன், ஏர்செல், ஏர்டெல்,எம்.டி.எஸ் மற்றும் செல் ஒன்னின் செல்போன் அலைகள் இருப்பது உண்மைதானே!அவற்றைப்பார்க்க முடியுமா? உரிய செல் எண்ணுடன் செல்போனை ஆன் பண்ணினால்தானே உணர முடியும்.அது போலத்தான்.
இருந்தாலும் சுருக்கமாக ஏற்கனவே இந்த ஆன்மீகக்கடலில் விளக்கியுள்ளேன்.
மீண்டும் சுருக்கமாக:
மனித மனம் இரண்டு பெரும் பிரிவுகளாக செயல்படுகின்றன.ஒன்று மேல் மனம்.இதற்கு ஓரளவே சக்தி உண்டு.பெயர்கள்,நமது வீடு,நமது அலுவலகம்,படிக்கும்/படித்த பள்ளி/கல்லூரி இவை ஞாபகமிருக்கும்.
மற்றது ஆழ்மனம்.இதைப் பற்றி நாம் அதிகம் அறிய வில்லை.இதன் சக்தி எல்லையற்றது.நாம் மனம் இதயத்தில் இருப்பதாக நம்புகிறோம்.ஆனால் நமது மனம் நமது வலப்பக்க மூளையில் இருக்கிறது.இதற்கு திரைப்படம் போலக் காட்சிகள் மட்டுமே தெரியும்.இது முழுக்க உணர்வுகளால் மட்டுமே ஆனது.
நாம் பிறந்ததுமுதல் மரணம் அடையும் வரை நமது வாழ்வில் நடந்த நடக்கும் நடக்கப்போகும் அத்தனை சம்பவங்களும் இங்கே பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.எதையெல்லாம் நாம் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அது மேல்மனதைக்கடந்து ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது.
எதெல்லாம் ஆழ்மனதில் பதிவாகிறதோ(அது நல்ல விஷயமோ கெட்டவிஷயமோ எதுவானாலும்),அதை ஆழ்மனமானது விண்வெளியில் உள்ள பிரபஞ்சமனத்திடம் அஞ்சல் செய்துவிடுகிறது.
பிரபஞ்ச மனதில் பதிவான உடனே அந்தக் காட்சி நமது நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்துவிடுகிறது.

நாம் காலையில் தூங்கியெழும் சில நிமிடங்களுக்கு முன்பாக பால்க்காரனின் சப்தம்,பறவைகளின் ஒலி முதலியவற்றைக் கேட்டிருப்போம் இல்லையா? அதுதான் நமது ஆழ்மனம் விழித்திருக்கும் நேரம்.
அதன்பிறகு ஒருநாளில் அடிக்கடி நமது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வரும்.ஆனால் அது எப்போது என்பதை நம்மால் உணர முடியாது.
இந்த ஆல்பா மைண்டு தியானத்தில் நாம் விரும்பும்போது நம்மால் நமது ஆழ்மனதை திறக்கச் சொல்லித்தருகிறார்கள்.அப்படித் திறந்து நமது நியாயமான ஆசை/லட்சியங்களை ஆழ்மனதில் பதியச்செய்கிறார்கள்.நமது லட்சியங்களை நிறைவேற்ற நமது ஆழ்மனம் உதவுகிறது.
இந்த ஆல்பா தியானப்பயிற்சி 5 லெவல்களைக் கொண்டது.
இதில் 1ஆம் லெவலை மட்டுமே தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும்.நாம் கோடீஸ்வரராக முடியும்.இப்படி கோடீஸ்வரரானவர்கள் பற்றி அறிய www.alphamindpower.net-இல் Testimonial பகுதியைப் பார்க்கவும்.
குறிப்பு:எல்லோரின் ஆசையும் கோடீஸ்வரராவது என்று இருக்காது.சிலர் அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதாக இருக்கலாம்.சிலர் காதலில் வெற்றியாக இருக்கலாம்.சிலர் சினிமாவில் ஜெயிப்பதாக இருக்கலாம்.சிலர் வெளிநாட்டில் குடியேறுவதாகக்கூட இருக்கலாம்.உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் அது நியாயமாக இருக்கவேண்டும் அது மட்டுமே நிபந்தனை.முயன்று பாருங்கள்.
எனது ஆல்பாதியான பயிற்சிப்படி எனது நியாயமான ஆசை ஒன்று நிறைவேற மூன்று மாதங்கள் ஆனது.மூன்றாவது மாதத்திலிருந்து எனது ஒரு லட்சியம் நிறைவேறுவதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.நான் ஒன்றரை வருடங்களாக ஆல்பா தியானம் செய்து வருகிறேன்.

Monday, June 8, 2009

வாழ்க்கை வழிகாட்டி:சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்-1


சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்

புராதன நாலந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்றவர் சாணக்கியர் என்ற கவுடில்யர்.இவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் 25,000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திவருகிறது.
இந்துக்களாகிய நாம் இப்பேர்ப்பட்ட அரசியல்துறவியை நமது முன்னோர்களாகக் கொண்டிருக்கிறோம்.
சீனா நமது நண்பர்களான இலங்கை,பர்மா,நேபாளம், பங்களாதேஷ் இவர்களை நமக்கு எதிராக திருப்பிவிட்டு நமக்கு தீராத பிரச்னையை உண்டாக்கிவருகிறது.
சுண்டைக்காய் நாடு இலங்கை நம்மை மிரட்டுகிறது.எங்கள் உள்நாட்டுவிவகாரத்தில் நீங்கள்(இந்தியா) தலையிடக்கூடாது என மிரட்டுகிறது.
சரி போகட்டும்.இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் சாணக்கியராக வேண்டும்.அதற்காக சில அர்த்த சாஸ்திரக் கருத்துக்களை இங்கே பார்ப்போம்:
ஒருவன் தன்னுடைய மனைவி, உணவு, செல்வம் இம்மூன்றிலும் திருப்தியுடையவனாக இருக்க வேண்டும்.(மனைவியால் மட்டும் திருப்தியடையாவிட்டால் காம வெறி பிடித்தவனாகிவிடுவோம்.உணவு தின்று கொண்டே இருந்தால் 30+ வயதிலேயே நோய்கள் நம்மைத் தாக்கும்.செல்வம் சம்பாதிப்பதில் பேராசை வருவதால் தான் அம்மா தன து மகளையே விபச்சாரியாக்குகிறாள்.அப்பா தனது மகனிடமிருந்தே ஆபத்துக்காலத்தில் செலவழித்ததற்கு பணம் பிடுங்குகிறார்.கட்சித்தலைவர் ஆசியாவிலேயே பெரும் பணக்காரராகிவிடுகிறார்.கி.பி.2009 முதல் 2019க்குள் அவர்களுக்கு பெரும் வீழ்ச்சி இருக்கிறது)
ஆனால் ஒருபோதும் தன்னுடைய தவத்திலோ(இக்காலத்தில் தினசரி செய்யும் தியானம் என க் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்),தானத்திலோ(தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ற இந்த வலைப்பூப் பகுதியை மீண்டும் ஒருமுறைப் படிக்கவும்), படிப்பிலோ திருப்தியடைக்கூடாது.
நாம் எந்தத்துறையோ அந்தத் துறை தினமும் பிரம்மாண்டமாக வளர்ந்துவருகிறது.அதுபற்றி அறிய நாம் இணையம் மூலமாக நமது துறைசார்ந்த பிளாக்(google-blogsearch),குழுக்கள்(google groups, yahoo groups),இணையதளங்கள்(websites) மூலமாக வாழ்நாள்முழுக்க அறிந்து கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் செய்துவந்தால் மட்டுமே நேர்காணலில்(interview)வெற்றி பெறுவோம்.


யாரெல்லாம் பெற்ற தாய்க்குச் சமமானவர்கள்?
அரசனின் மனைவி, குருவின் மனைவி,நண்பனின் மனைவி, மனைவியின் தாய்,தன்னுடைய தாய் இந்த ஐவரும் பெற்ற தாய்க்குச் சமமாக போற்றத்தக்கவர்கள்(திருட்டுப் பயலே படம் பார்த்தீர்களா?மாளவிகாவின் கணவன் பிஸினஸ் என அலைய அவன் மனைவியோ காமசுகத்திற்கு தன் கணவனின் நண்பனையே தேர்ந்தெடுக்க,அதை நம்ம ஹீரோ பார்த்துவீடியோ எடுக்க ஒரு முழுப்படம் வாழ்க்கையை விளக்குகிறது)

Sunday, June 7, 2009

இந்துக் காலக் கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு

ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600
21,600 x 200 43,20,000

ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.
கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்
திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்

ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.
1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.
2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)
2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
தற்போதையபிரம்மாவின் வயது 51 .

Friday, June 5, 2009

மூதேவி எங்கெல்லாம் இருப்பாள்?

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

அருட்திரு இராமலிங்க அடிகளார் தீபம் இல்லாத வீட்டில் இரவில் கூட தூங்கக்கூடாது என அருளியுள்ளார்.வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே தூங்கச் செல்லவேண்டும்.இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்திருக்கும்.அங்கேல்லாம் மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.
துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல்(இன்றைய கல்லூரி மாணவிகள் விடுதிகளில் தினமும் செய்வது),எதிர்மறையான எண்ணங்கள்(அதான் அடுத்தவரை கெடுக்க நினைப்பது,தவறான ஆலோசனை தருவது)அடிக்கடி கொட்டாவி விடுதல்,தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்தும் மூதேவியின் அடையாளங்களாகும்.இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும்.

மூதேவி வராமலிருக்க நாம் நமது வீட்டில்/அலுவலகத்தில்/கடைகளில் வைத்திருக்கவேண்டியவை:
தீபம், தூபம், உப்பு,மஞ்சள்,கண்ணாடி,பட்டு ஆடைகள்,தேங்காய்,பால்,வெண்ணெய்,மாவிலை,கோமியம்(பசுவின் சிறுநீர்)

மூதேவியின் புகைப்படம் இணையம் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை.(இதனால் கூட இணையம் இன்னும் பிரம்மாண்டமாக வளருமோ!).எனவே புகைப்படமின்றி நாம் இந்த வலைப்பூவை பதிப்பிக்கிறோம்.

தொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்


தொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்

திருவாரூரிலிருந்து 7 மைல் தொலைவில் கீழ்வேலூரில் குபேரனுக்கு கோவில் உள்ளது.

நாகப்பட்டினத்தின் மையத்தில் அமைந்திருக்கும் குமரன் கோவிலில் அருள்பொழியும் முகத்துடன் குபேரன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.

அல்லது வீட்டில் குபேரன் புகைப்படம் வாங்கி பூஜைஅறையில் வைத்துக் கொள்ளவும்.

தினமும் 27 முறை காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.பின்னர் குபேரன் தியான சுலோகம் சொல்லி மந்திரஜபம் செய்யவும்.லட்சுமி குபேர வழிபாட்டால் திடீர் பணவரவு,வீடு,வாகனங்கள் உண்டாகும்.தன லாபம் உண்டாகும்.மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவது நிச்சயம்.

1)தொழில் சம்பந்தப்பட்ட கொடுக்கல், வாங்கலில் பிரச்னை இருப்போரும், தொழில் தொடங்குவோரும் குபேரனிடம் வந்து சிறந்த முறையில் லட்டு நிவேதனம்,பிரார்த்தனை,அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

2)பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேரும் நாட்களில் அபிஷேக ஆராதனைகள் பூரணமாக செய்து சுவர்ணார்ச்சனை 108,1008,10,008 கணக்கில் செய்து வரலாம்.
3)செல்வ நிலை தாழாமலிருக்கவும், திடீர் தனவரவுக்கும் பவுர்ணமி தினத்தில் குபேரனுக்கு மூலமந்திர அர்ச்சனை செய்து வழிபடலாம்.
4)வணிகம் நன்றாக விருத்தி அடையவேண்டும் என்றால் வெள்ளிக்கிழமைகளில் நல்ல நேரத்தில் குபேரனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் குபேரனை அலங்காரம் செய்து வழிபட வேண்டும். மேலும் உடனடியாக பிரார்த்தனை நிறைவேற நெய்தீபம் ஏற்றி வரலாம்.

இவை அனைத்தும் எனது தொழில்முறை நண்பர்களால் பரிசோதிக்கப்பட்டவை. 98% துல்லியமாக பலன் கொடுத்துள்ளன.மீதி 2% குறைவதற்கு இதை பரீட்சித்துப்பார்த்தவர்கள் சிரத்தை(அக்கறை)யோடு இருந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்


காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல.(இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.

ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்

இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும்.
இதன் தமிழ் அர்த்தம் என்ன?
‘யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.
சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரிமந்திரத்தின் வடிவமாக ஸ்தூல வடிவமாக அமர்ந்திருக்கிறாள்.அவளுக்கு ஐந்து திருமுகங்கள்!
லட்சுமி, சரசுவதி,பார்வதி,மகேசுவரி,மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவுபடுத்துகின்றன.

காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும்.தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும்.காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும்.(நாம் அகத்திய மகரிஷியை நமது குருவாகக் கொள்வோம்.இந்த வலைப்பூவில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்ற தலைப்பைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.அதில் உள்ள வழிமுறைப்படி 48 நாட்கள் முயன்று அகத்தியரை தரிசித்து அவரது அருளாற்றலால் காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவோம்)
அஷ்ட ஐஸ்வர்யங்களும்,அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம்.

காயத்ரி மந்திரத்தை மனதிற்குள் ஜபிப்பது 1000 பங்கு பலனைத் தரும்.உதடுகள் மட்டும் அசைந்தவாறு ஜபித்தால் 100 பங்குபலனும் சப்தமில்லாமல் ஜபித்தால் 10 பங்கு பலனும் தரும்.ஒவ்வொரு முறையும் 27 முறையாவது ஜபிப்பது நன்று.
இந்த காயத்ரி மந்திரத்தை ஏதாவது ஒரு அம்மன்(பத்ரகாளி அல்லது மாரி அல்லது வெயிலுகந்தம்மன் அல்லது வைஷ்ணவி அல்லது வராஹி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வம்) சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு ஜபித்தால் அதனால் கிடைக்கும் பலன்களைச் சொல்ல இந்த சர்வர் பத்தாது.ஏன் இந்த உலகில் உள்ள மொத்தசர்வர்களும் பத்தாது.

என் அனுபவத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் முதல் முறையாக ஒன்பதுமுறை ஜபித்த உடனே குளிரூட்டப்பட்ட காரில் பயணம் செய்யும் வாய்ப்பு உடனே கிடைத்தது.

யாக சாலையில் அமர்ந்து காயத்ரிமந்திரத்தை ஜபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.
தொடர்ந்து ஒருவன் அல்லது ஒருத்தி காயத்ரி மந்திரத்தை ஜபித்துவந்தால் அவன்/ள் பெரும் செல்வந்தராவது நிச்சயம்.

வீட்டில் அல்லது கோவிலில் காயத்ரிமந்திரத்தை பயபக்தியோடும் முழுமனதோடும் சொல்பவர்கள்(ஜபிப்பவர்கள்) நிச்சயம் பலன் பெறுவார்கள்.இந்த ஜபம் செய்ய தண்ணீர் மட்டும் போதுமானது.
ஒருவேளை தண்ணீருக்குப்பதிலாக இளநீர் வைத்துக்கொண்டு ஜபிப்பது மிக மிக நன்று.நீண்ட நேரம் மந்திர ஜபம் செய்துவிட்டு முடிவில் இளநீர் அருந்தினால் அந்த மந்திர அலைகள் நம் உடலிலேயே தங்கிவிடும் என பிரபல ஜோதிடரும் எனது ஆத்மார்த்த குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.

Wednesday, June 3, 2009

பொருளாதார வலிமையில் ஒப்பீடு:நமது இந்தியாவும் அமெரிக்காவும்


பொருளாதர வலிமையில் ஒப்பீடு:நமது இந்துயாவும் அமெரிக்காவும்

நமது ஜனத்தொகை 103 கோடிகள்.அமெரிக்காவின் ஜனத்தொகை 30 கோடிகள்.
நமது நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை 38 கோடிகள்.இதில் பருவ வயதில் இருப்பவர்கள் மட்டும் 25 கோடி பேர்கள்.அதாவது 13 வயது முதல் 19 வயது வரை இருக்கும் இளம் இந்தியர்கள்.
அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 4 கோடிகள் மட்டுமே.
நாம் வெளிநாடுகளுக்குத் தந்துள்ள மொத்தக்கடன் 12,00,000,00,00,000/-.அதாவது 12 லட்சம் கோடி ரூபாய்கள்.இதில் பாதிக்கும் மேல் அமெரிக்கா நமக்குத் தரவேண்டியிருக்கிறது.


அமெரிக்கா ஒரு நாளுக்கு அரசாங்கத்தை நடத்த 10,000 கோடி டாலர்களை கடன் வாங்கிக் கொண்டேடேடே இருக்கிறது.
நேற்று லேமன் பிரதர்ஸ் திவாலானது.(காரணம் ரூ.10 முதலீட்டில் மட்டும் தொழில் செய்தால் கடனே இல்லாமல் வளரலாம்.ரூ.10 முதலீட்டில் ரூ.300 கடன் வாங்கி தொழில் செய்தால் பிச்சை கூட எடுத்து கடனை அடைக்க முடியாதே.)
இன்று(3.6.2009) ஜெனரல் மோட்டார்ஸ் திவாலாகிவிட்டது.நாளை அமெரிக்காவே திவாலாகும்.திவாலாகியே தீர வேண்டும்.
ஏனெனில், தன்வினை தன்னையே டுமீல்.ஆமாம் வெறும் ஆயுத விற்பனைக்காக அமெரிக்கா என்ன
ஆட்டம் ஆடியது.கொரியாவைப் பிரித்தது;ஜெர்மனியைப் பிரித்தது;இந்தியா பாகிஸ்தானிடம் சண்டையை மூட்டி விட்டது.
ஒன்று உங்களுக்குத் தெரியுமா? 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள் இருக்கின்றன.அதாவது ஒரு அமெரிக்கனுக்கு சராசரியாக மூன்று கடன் அட்டைகள்(அதாங்க க்ரெடிட் கார்டு)இருக்கின்றன.


அமெரிக்கக்காரன் என்ன செஞ்சுருக்கான் தெரியுமா?
கி.பி.ஏப்ரல்2010 - மார்ச் 2011 வரையிலான வருமானத்தை இப்பவே செலவழிச்சுட்டான்.அப்பறமென்ன சொல்லவா வேண்டும்.


நம்ம நாட்டுல நம்ம அம்மாக்கள் வீட்டில் அப்பாவுக்கும் நமக்கும் தெரியாமல் கடுகு டப்பாக்கள்,அரிசிப்பைகள்,பட்டுபுடவைகளுக்குள் சேமித்து வைத்திருக்கும் பணத்தின் மொத்தமதிப்பு ரூ.50,000,00,00,000/-(ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள்)என மதிப்பிட்டுள்ளனர்.எனக்கென்னமோ இந்த மதிப்பீடு ரொம்பக் கம்மின்னுதான் நெனைக்கிறேன்.
ஆக சிக்கனம் நமது குடும்பத்தைக் காக்கும்.குடும்பப்பாதுகாப்பு நமது இந்தியாவைக்காக்கும்.இந்தியாவை உலகின் சக்திவாய்ந்த வல்லரசாக்கும்.


வெட்டிச்செலவு வல்லரசு அமெரிக்காவையே வல்லரசு அந்தஸ்திலிருந்து தூக்கியெறியும்.
அமெரிக்காவின் சரிவு உலகில் போரற்ற உலகத்தை உருவாக்கும்.
இந்தியாவின் வளர்ச்சி உலகம் முழுவதற்கும் அமைதி கலந்த வளர்ச்சியைத் தரும்.சுபிட்சமான உலகம் இதோ கி.பி.2100க்குள் உருவாகிவிடும்.


ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.50/-என நம்புகிறோம்.ஆனால் உண்மையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெறும் ரூ.8/-மட்டுமே!
அது எப்படி?ப.சிதம்பரத்தை கேளுங்கள்.

நெற்றியில் திலகம் அணியவேண்டும்.ஏன்?


நெற்றியில் திலகம் இடுவதன் நோக்கம் என்ன?

இந்து சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், முக்கியமாக மணமான பெண்மணிகள்,நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர்.மேலும் விசேஷ நாட்களிலும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்போ பின்போ அணியப்படுகிறது. பல சமூகங்களில் மணமான பெண்டிர் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப்பொட்டுடன் திகழவேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது.சமயக்கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் திலகம் இடுவதை ஒரு சடங்காகவே செய்கின்றனர்.ஆன்மீகப்பெரியோர்களையும், ஆண்டவனையும் திலகமிட்டு தொழுது வணங்குவதும் வழக்கில் உள்ளது.வட இந்தியாவில் பல பகுதிகளில் மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கும்போதும் வழியனுப்பும்போதும் திலகமிடுவது வழக்கில் உள்ளது.

ஏன் திலகம் அல்லது பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் அணிகிறோம்?


திலகம் அதனை அணிபவரிடத்திலும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான, புனிதமான உணர்வை ஏற்படுத்துகிறது.இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம்,குங்குமம் மற்றும் பஸ்மம்(விபூதி) முதலியன பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.அதனை நமது நெற்றியில்,புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிகிறோம்.இப்பகுதி நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாகும்.யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.திலகத்தின் நெற்றியில் இடும்போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறது.


“இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக.புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்.என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்”


இவ்வாறு திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன் தவறான இயல்புகளினின்றும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது.


நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது.நெற்றியும்,புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.(இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள ஓஷொ என்ற ரஜனீஷ் அவர்கள் எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.உங்களின் தினசரி வாழ்வின் மீது முழுப்பிடிப்பு வந்துவிடும்.அந்த அளவிற்குப்பிரமித்துப்போவீர்கள்)

இதன் பொருட்டே
மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிரவைத்து உடல் உபாதையிலிருந்து பாதுகாக்கிறது.நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலகாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலையும்(மன வலிமை மிக்க மந்திரவாதியால் மயக்கப்படுவது) தடுக்கிறது.மேலும் உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.சில சமயங்களில் நெற்றிப்பகுதி முழுவதும் சந்தனம் அல்லது விபூதி(பஸ்மம்) பூசிக் கொள்வதும் உண்டு.


சிலப் பெண்கள் ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட ஒட்டும் பொட்டுக்களை பலமுறை பயன்படுத்தலாம் என்பதும், இவை அலங்காரத்திற்கு மட்டுமே ஏற்றவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே.ஆனால் இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல.


திலகம் அணியும் மரபு இந்தியர்களுக்கே உரித்தான ஓர் வழக்கமாகும்.உலகில் இந்தியாவைத் தவிர எந்த இடத்திலும் இந்தியர்களை இனம் காண இது உதவுகிறது.

இந்துமயமாகிவரும் அமெரிக்கா:ஆதாரங்களுடன்




இந்துமயமாகிவரும் அமெரிக்கா

அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியர்கள்.

அவர்களுக்கும் நமது இந்துக்களுக்கும் பண்பாட்டு ரீதியான

ஒற்றுமை நிறையவே இருக்கிறதாம்.அதற்கு பல உதாரண-



ங்களை எடுத்துக்காட்டி கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்



அமெரிக்கரான பிரான்சிஸ்.அவரது கட்டுரையிலிருந்து சில



அம்சங்கள் மட்டும்:

அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் ரியோ கிரேண்ட், மிசிசிபி ஆகிய நதிகளில் கங்கை நதிநீரை கலந்து புனிதமாக்கி வருகி-
றார்கள்.(ஆனந்த தாண்டவம் தமிழ்ப்படத்தின் இடைவெளிக்கு
பிறகு உள்ள காட்சிகளை நினைத்துக் கொள்ளவும்)
அது மட்டுமல்லாமல்,பாரதத்தில் உள்ள புனிதமான திருமலை
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் போன்று
பிட்ஸ்பர்க்கிலும் ஒரு பெருமாள் கோவிலை அமைத்திருக்கி-
றார்கள்.(கூகுள் எர்த் தினை பதிவிறக்கம் செய்து அமெரிக்கா-
பிட்ஸ்பர்க்-பெருமாள் டெம்பிள் எனத் தேடவும்)இதே
போன்று சிவன், அம்மன் என வட அமெரிக்கக் கண்டத்தில்
(அமெரிக்கா நாட்டில்) 1,500 க்கும் மேற்பட்ட ஆலங்களை
கட்டியிருக்கிறார்கள்.



ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சமயத்துறைப்
பேராசியராகப் பணியாற்றிவரும் வசுதா நாராயணன்,
“அமெரிக்காவிற்கும் பாரதத்திற்கும் கலாச்சார ரீதியான
ஒற்றுமை இருக்கிறது.இதனை இந்துப்புராணங்களே
விவரித்திருக்கின்றன”என்கிறார்.



வடபாரதத்தில் உள்ள பார்சானா என்ற இடம் ஸ்ரீகிருஷ்ணரின்
மனைவியான ராதை அவதரித்த இடமாகும்.
அதை மனதிற்கொண்டு அமெரிக்காவில் உள்ள
ஹவாய் அருகில் உள்ள பகுதிக்கு பார்ஸானா என்ற
பெயரிட்டு அங்கு கிருஷ்ணருக்கும் ராதைக்கும்
கோயில் அமைத்துள்ளனர்.



மகாபாரதத்தில் அர்ஜீனனின் மனைவிகளில் ஒருத்தி
அமெரிக்காவில் பிறந்தவள்.கிருஷ்ணரும் அர்ஜீனனும்
மகாபாரத காலத்திலேயே இன்றைய ஸ்டீம்போட் போன்ற
அந்தக்கால நாவாய் மூலமாக அமெரிக்காவிற்குப் பலமுறை
கடல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளபடம் செயற்கைக்கோளிலிருந்து அமெரிக்காவை எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

பாம்பன் சுவாமிகள் செய்யும் அதிசயங்கள்







பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள் ஒருமுறை சக்திவிகடனின் கூறியது:


பாம்பன் சுவாமிகள் அருளிய ‘வேற்குழலி வேட்கை’ என்ற பாடல்களைத் தொடர்ந்து 48 நாட்கள் படித்தால் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இது என் மருத்துவ நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நான் சொல்லி நடந்த அதிசயம்.திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாத அந்த டாக்டர் தம்பதிக்கு,அந்த ‘வேற்குழலி வேட்கை’ படித்து குழந்தை பிறந்தது.இது தெய்வீக அதிசயம்.

தீவிரமான இதய நோய்பாதிப்புடன் வரும் என் நோயாளிகளுக்காக பாம்பன் சுவாமிகளை முழுமனதுடன் பிரார்த்திப்பேன்.உடல் ஆரோக்கியத்துக்காக பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘சண்முக கவசம்’ படிக்கிறது சிறந்த மருந்து.
நான் ஒவ்வோரு அறுவை சிகிச்சை மற்றும் ஆடியோகிராமுக்கு முன்பும் கந்தரனுபூதியிலிருந்து
‘வினைஓடவிடும் கதிர்வேல் மறவேன்’ என்று தொடங்கும் பாடலைச் சொல்லிய பிறகே ஆரம்பிப்பேன்.

Tuesday, June 2, 2009

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.

ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

Monday, June 1, 2009

ஏன் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாகவில்லை?

அப்துல்கலாம் அவர்கள் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகவில்லை?

நமது நாட்டின் அரசியல் சாசன சட்டப்படி, முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அவர்களே!
ஒரு இந்திய ஜனாதிபதி முப்படைகளின் படைக்கலன்கள், பீரங்கிகள்,ஏவுகணைகள் பற்றிய முழுவிபரம் தெரிந்தவராக இருந்தால் எப்படி இருக்கும்?!இந்த சிந்தனையில்தான் பா.ஜ.க.ஆளும்கட்சியாக இருந்தபோது டாக்டர்.அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதியாக்கியது.இவர் ஜனாதிபதியானதும் நமது நாட்டின் எதிரி நாடுகள் பயந்து நடுங்கின.ஏன் அமெரிக்காவே ரொம்பவும் யோசித்தது.(உதாரணமாக ரஷ்ய அதிபர் புதின் முன்னாள் ரஷ்ய உளவுப்படை தலைமை அதிகாரி.சீனாவின் ஜனாதிபதி மற்றும் அதிபர்கள் கனவே சீனா இன்னோரு அமெரிக்காவாக வேண்டும் என்பதே.அங்கும் அமெரிக்காவிலும் ராணுவ அதிகாரியாக இருந்தவரே ராணுவ அமைச்சராக முடியும்.இதனால் அந்த நாடுகள் தனது சுய கவுரவத்தை தனது நட்புநாடுகளிடம் கூட விட்டுக்கொடுப்பதில்லை.)இதனால் நமது நாட்டு ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெருமை.

இந்நிலையில் பா.ஜ.க ஆட்சி நிறைவடைந்து காங்கிரஸ் ஆளும் கட்சியானது.ஆட்சியமைக்க தனது ஆதரவு எம்.பிக்களின் கடிதங்களோடு சோனியா மீமொய்னோ அவர்கள்(காங்கிரஸ் கட்சித் தலைவி) ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தார்.

அப்போது ஜனாதிபதியும் இந்த தேசத்தின் ஆன்மாவை இன்றைய சிறுவர்-சிறுமிகளிடம் தட்டி எழுப்பிய தேசபக்தருமாகிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சோனியா மீமொய்னோவிடம் ஒரு கேள்வி கேட்டார்.

நீங்கள் இன்றுவரை இத்தாலிக்குடியுரிமை வைத்திருக்கிறீர்களா?
அதற்கு சோனியா ஆம் எனப் பதிலளித்தார்.அதற்கு நீங்கள் பிரதமர் பதவிக்கு யாரையாவது பரிந்துரையுங்கள் என டாக்டர் அப்துல்கலாம் பரிந்துரைத்தார்.
இதனால், கோபமடைந்த சோனியா மறு ஜனாதிபதி தேர்தலின் போது டாக்டர் அப்துல்கலாம் ஜனாதிபதியாகாமல் பார்த்துக்கொண்டார்.அந்த சமயத்தில் சோனியா மீமொய்னோவைத் தவிர எல்லாக் கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் டாக்டர் அப்துல்கலாம் அவர்களே மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என்றே விரும்பினர்.
ஒரே ஒரு குடும்பத்தலைவியின் பிடிவாதத்தின் விளைவைப்பாருங்கள்.
2009உடன் முடிந்த மக்களவைத்தேர்தலுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன்சிங் பல முறை கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சோனியா ஒரு சராசரி


குடும்பத்தலைவி.அவரிடம் சராசரி

குணங்கள்தான் இருக்கின்றன.பிடிவாதம் ரொம்ப

இருக்கிறது.

இதை நம்பாதவர்கள் 2004 முதல் 2009 வரையிலான தினசரிகளை வாங்கிப்படித்துக் கொள்ளவும்.இந்த வாசகங்கள் அவற்றில் வெளிவந்துள்ளன
.