Saturday, October 8, 2011

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை தினசரிக்கடமைகளில் ஒன்றாக்குங்கள்




சிவசிவ என்று தினமும் 15 நிமிடங்கள் ஜபித்தாலே,நம்மை உயர்ந்த துறவறத்தில் கொண்டுபோய்விட்டுவிடும் என மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்திருக்கிறது.இன்றைய வேகமான உலகில் துறவுவாழ்க்கை வாழ்வது சாத்தியக்குறைவே!

குடும்பஸ்தர்களாகிய நமக்கு அருள்வளமும்,பொருள் வளமும் ஒன்றாகக் கிடைக்க வேண்டும்;அதே சமயம் அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது.அப்படி சுலபமான மந்திரம் ஒன்று இருக்குமா? என பல்லாண்டுகளாக மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்,பல சிவனடியார்கள்,சாதுக்கள்,துறவிகள்,மகான்களிடம் தேடித்தேடி நமக்காகக் கண்டுபிடித்த சிவ வைரமே ஓம்சிவசிவஓம்.

சிவசிவ என்ற மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் என்ற மந்திரம் சேர்க்கும்போது அது குடும்பஸ்தர்களுக்காக மாறிவிடுகிறது.இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளோடு எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;ஒன்று 21 வயது நிரம்பியிருக்கவேண்டும்.(ஏனெனில்,சூட்சுமமாக சிவகணங்கள் அல்லது ஒரு சிவகணம் நமது கோரிக்கையை நிறைவேற்றும்;)மற்றது அசைவம் சாப்பிடக்கூடாது;நமது பிறந்த நேரப்படி,நாமே பலவிதமான கஷ்டங்களுக்கும்.துயரங்களுக்கும் ஆளாகிறோம்.நாம் சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,நண்டு,மீன் போன்றவைகளுக்கும் ஜாதகம் உண்டு.(யாரும் எழுதுவதில்லை:அதிலும் அவைகளுக்கு பாவ புண்ணியத்தை அனுபவிக்க வேண்டும் என்பது இருக்கும்)அவைகளின் உடலை நாம் சாப்பிடுவதன் மூலமாக அவைகளின் கர்மாக்களையும் நாம்தான் சுமக்க வேண்டும்.மேலும்,அசைவம் சாப்பிடுபவர்களுக்கு சுலபமாக மாந்திரீகம் வைக்க முடியும்.மனதில் மனித நேய எண்ணங்கள் அழிந்துவிடும்.மிருக உணர்ச்சி உண்டாகி,மனிதன் காம வெறிபிடித்தவனாகவோ அல்லது பொறுமையற்றவனாகவோ மாறிவிடுகிறான்.இதனால்,சாத்வீகமான சிவமந்திரத்தை ஜபிக்கும் தகுதியை நாம் இழந்துவிடுகிறோம்.

எனவே,தினமும் அதிகாலை அல்லது காலை அல்லது மதியம் அல்லது இரவு அல்லது நள்ளிரவில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்(ஆரம்பகாலத்தில் 10 நிமிடம்,பின்னர் படிப்படியாக 1 மணி நேரம் வரை) ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்குவோம்.நமது முன்வினைகளையும்,முற்பிறவி பாவங்களையும்,நமது முன்னோர்களின் பாவங்களையும் கரைக்கத் துவங்குவோம்;

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment