Monday, August 31, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகளில் முக்கியமானது


விருதுநகர் மாவட்டத்தில்,மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இந்த ஊரில் கைத்தறி நெசவாளர்கள் மூன்றில் ஒருபகுதியாக வாழ்ந்து வருகின்றனர்;ஊரை இரண்டாக மதுரை தேசிய துணை நெடுஞ்சாலை பிரிக்கிறது;அதன் குறுக்காக சிவகாசி,சாத்தூர் சாலை செல்கிறது;மதுரை சாலைக்கும்,சிவகாசி சாலைக்கும் இடைப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் கால் பங்குப் பகுதியில் 16 தெருக்களில் நெசவுத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்;இந்த 16 தெருக்களிலும் தலா ஒரு ஜீவசமாதி இருக்கிறது;


ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்குத் திசையில் சிவகாசி சாலை இருக்கிறது.இந்த சிவகாசி சாலை வழியாக நடந்து சென்றால் முதலில் ஆர்.சி.சர்ச் வரும்;அதற்கு அடுத்தபடியாக கனரா வங்கி,மெர்கண்டைல் வங்கி,கைகாட்டிகோவில் பஜாரைக் கடந்ததும் ஐந்து கடை பஜார் வரும்;அதைக் கடந்ததும்,தென்மேற்காகத் திரும்பினால் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டித் தெருவை சென்றடையலாம்;

இந்த தெருவின் மையத்தில் வடக்கு நோக்கிய கோவில் ஆர்ச்சைப் பார்க்கலாம்;இதுதான் அன்னை பத்திரகாளி ஆலயத்தின் நுழைவாசல்;சுமார் 3000 குடும்பங்களின் குலதெய்வம் இந்த அன்னை;

ஒவ்வொரு ஆண்டும் வரும் சிவராத்திரி அன்று இரவு ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்;அதை அன்று இரவே அன்னை பத்திரகாளிக்கு படையல் போட்டு சிவராத்திரி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்றிரவே பகிர்ந்து கொடுப்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்!

இந்த ஆண்டு சிவராத்திரி 7.3.2016 திங்கட்கிழமையன்று வர இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அன்னையின் அருளை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்றை எழுதுவதில் பெருமை கொள்கிறோம்;எமது வாழ்நாளில் 8.8.2004 முதல் பல நூறு சம்பவங்கள் மூலமாக அன்னை பத்திரகாளி அடியேனைப் பாதுகாத்து வந்தாள்;வழிநடத்தினாள்;அவளின் ஆசியில்லாமல் போயிருந்தால் அடியேன் வீணனாகப் போயிருப்பேன்;இன்றும் அன்னை பத்திரகாளி பலரது வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மை;

இந்தத் தெருவில் ஒரு பெண்ணை பக்கத்து கிராமத்தில் திருமணம் செய்து வைத்தனர்;அந்தப் பெண் கர்ப்பிணியானதும்,வளைகாப்பு வைத்து,திரும்ப தனது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்;அன்னை பத்திரகாளியின் அருளாற்றலை புரிந்து வைத்திருந்தாள்;எனவே,தனது கர்ப்ப காலம் முழுவதும் அன்னை பத்திரகாளியின் ஆலயத்திலேயே இருந்திருந்தாள்;

காலையில் உணவு உண்டதும்,அன்னை பத்திரகாளி ஆலயத்திற்கு வந்துவிடுவாள்;மதியம் கோவில் நடை சாத்தப்படும் வரை இருப்பாள்;மாலையில் கோவில் திறந்ததும் மீண்டும் கோவிலுக்கு வந்து,அன்னை பத்திரகாளியின் எதிரே அமர்ந்து அன்னை பத்திரகாளியைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்;பிரசவ தினம் வரும் வரை ஒரு நாள் கூட வராமல் இருந்ததில்லை;

பிரசவ தினத்தன்று உள்ளூரில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள்;மருத்துவரோ,இன்னும் 1 மணி நேரத்தில் சிசேரியன் செய்யப் போகிறோம் என்று தெரிவித்துவிட்டு,அடுத்த அறைக்குப்போய்விட்டார்;அந்த கர்ப்பிணிப் பெண் தனது அப்பாவை அழைத்தாள்;

உடனே,பத்திரகாளி கோவிலுக்குச் சென்று,மஞ்சள் காப்பு வாங்கி வரும் படி அனுப்பினாள்;அவரும் சில நிமிடங்களில் வாங்கிவந்துவிட்டார்;

அந்த மஞ்சள் காப்பை தனது நெற்றியில் பூசிவிட்டு,தனது வயிற்றின் மீது பூசினாள்;அப்படி வயிற்றில் பூசும் போது,
“அம்மா பத்திரகாளி,எனக்கு சுகப்பிரசவம் ஆகணும்;உன்னைத் தான் நம்பியிருக்கேன்” என்று வேண்டிக் கொண்டாள்;

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,மருத்துவர் வந்தார்;சிசேரியனுக்குரிய பரிசோதனைகள் செய்யத்துவங்கினார்;முடிவில்,சிசேரியன் தேவையில்லை;என்பதை அறிவித்தார்;

அன்றைக்கே சுபமான லக்னத்தில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது;


அன்னை பத்திரகாளியின் கருணையே கருணை!!!


நாமும் அண்ணாமலையும்


யார் ஒருமுறை கூட அண்ணாமலைக்கு வந்ததில்லையோ,அவருக்கு இன்னும் பல ஆயிரம் பிறவிகள் இருக்கின்றன என்று அர்த்தம்;

யார் ஒருமுறை கூட அண்ணாமலை கிரிவலம் செல்லவில்லையோ,அவருக்குரிய கர்மவினைகள் அப்படியே இருக்கிறது(மனதிற்குள் ஆன்மீக மனோபாவம் மலரவில்லை) என்று அர்த்தம்;

யார் அண்ணாமலையாரை தரிசிக்கும் போது உடல் சிலிர்க்கவில்லையோ,அவர்கள் இன்னும் மனப்பூர்வமாக ஆன்மீக வாழ்க்கைக்குத் தயாராகவில்லை(தனது குறைகளைத் திருத்திக்கொள்ளத் தயாராகவில்லை) என்று அர்த்தம்;

அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ ஒருமுறை கூறினால் 3,00,000 முறை ஓம் நமசிவாய நமஹ என்று ஜபித்தமைக்குச் சமம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;

பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும்;என்பது பன்னிருத்திருமுறைகள் தெரிவிக்கும் சிவரகசியம்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

உணவுதியானம் செய்பவர்கள்


பசிக்காம சாப்பிடக்கூடாது;(காலையில் சாப்பிட்ட உணவு,ஜீரணித்தால் தான் மதியம் பசிக்கும்;அப்படி பசிக்காவிட்டால்,மதியம் சாப்பிடக் கூடாது;மதியம் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆனால் தான் இரவு பசிக்கும்;)

எக்காரணம் கொண்டும் காலைச் சாப்பாட்டை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது;அப்படி ஒராண்டு வரை காலையில் சாப்பிடாமல் இருந்தால்,39 அல்லது 49 ஆம் வயது வரும் போது பக்கவாதம் வரும்;

பின்னிரவில் சாப்பிடக்கூடாது;(இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடவும்;அதன் பிறகு சாப்பிட்டால்,ஜீரண மண்டலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்;ஜீரணிக்க)


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவது ஜீரணமண்டலத்தை,சாப்பிடுவதற்குத் தயார் செய்யும்;


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு தண்ணீர் (தாகம் எடுத்தால்) அருந்திக்கொள்ளலாம்;சாப்பிட்ட 30 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீர் அருந்தலாம்;சாப்பிட்ட உடனே அருந்தப் படும் தண்ணீரானது,உண்ட உணவை நஞ்சாக்குகிறது;(சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்லும் ஆரோக்கியக் குறிப்பு)

ஒவ்வொரு வேளை உணவிலும் பாதி காய்கறிகளும்,பாதி சோறும் இருப்பது நன்று;
மூன்று வேளையும் பழங்களை மட்டும் உணவாகச் சாப்பிடலாம்;(இப்படிச் சாப்பிட்டுத்தான் 80 வயது வரை நம்ம வீட்டுப் பெருசுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்)


*மூன்று வேளைகளும் சாப்பிட ஏற்ற பழம் செவ்வாழை மட்டுமே!
வறுத்த காய்கறிகள்,வறுத்த சோறு ஒருபோதும் சாப்பிடவே கூடாது;(சைனீஸ் உணவுகள் சைனாக்காரனுக்குப் பொருந்தும்;நமக்குப்பொருந்துமா? ஏன் எது கிடைச்சாலும் தூக்கி உள்ளே போடுறீங்கப்பா!!!)

சாப்பிடும் நேரத்தில் செல்போனை அணைத்து வைப்பது ப்ரான்ஸ் நாட்டுப் பழக்கம்;இதைப் பின்பற்றலாமே!!
ஆமாம்! சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக்கூடாது;லேப்டாப்பும் தான்;
சாப்பிடும் போது வேகமாகச் சாப்பிடக் கூடாது;மென்று சாப்பிட வேண்டும்;சாப்பிடும் ஒவ்வொரு கவளத்திலும் நமது உமிழ்நீர் கலக்க வேண்டும்;அதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை;
சாப்பிடும் போது மென்று சாப்பிடவேண்டும்;(மென்று சாப்பிட மெதுவாக சாப்பிட வேண்டும்;)

அசைவம் சாப்பிடுவது மாபெரும் தவறு;அது நமது ஆயுளைக் குறைக்கும்;

இந்த விதிகளைப் பின்பற்றுவோர் உணவுதியானம் செய்பவர்கள் என்று அர்த்தம்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்



ரத்தப் பிரிவுகளும்,உண்ண வேண்டிய உணவுகளும்



A Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு பச்சைக்காய்கறிகள்,உளுந்தம்பருப்பு,பீன்ஸ்,பட்டாணி,
கொண்டைக் கடலை அதிகம் தேவைப்படும்;இவைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உணவில் சேர்ப்பது அவசியம்;


 B Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மென்மையான சீரண மண்டலம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன;இவர்கள் பால்,காபி,டீ ஒருபோதும் சேர்க்கக் கூடாது;பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம்;பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்;மிதமான உணவுகள் (அசைவம் அனைத்தும்,புரோட்டா,சப்பாத்தி கடின உணவுகளே) சாப்பிட்டுப் பழகுவது நன்று;


AB Group ரத்த வகையில் பிறந்தவர்கள், மெதுவாகச் சீரணிக்கும் சீரண மண்டலத்துடன் பிறந்தவர்கள்;இவர்களுக்கு வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொஞ்சமே சுரக்கும்;எனவே இவர்கள் சாப்பிடும் எந்த உணவையும் மொக்கக்கூடாது;கொஞ்சமாகவே சாப்பிட வேண்டும்;இவர்களுக்கு சளித் தொல்லை உறவினரைப் போலவே தொற்றிக் கொள்ளும்;இவர்கள் தினமும் அதிகாலையில் மிதமான வென்னீரில் லெமன் கலந்து அருந்தி வருவது அவசியம்;நன்று;

O Group இல் பிறந்தவர்களுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் சுரக்கும்;புரோட்டீன் உடலில் இராது;இதனால் இவர்கள் மாமிச உணவுகள் சாப்பிடுவதிலும்,திட உணவுகள் சாப்பிடுவதிலும் விருப்பமுள்ளவராக இருப்பார்;மாமிச உணவு உண்பதற்குப் பதிலாக,முளை கட்டிய தானியங்களை(முளை கட்டிய உளுந்து,முளை கட்டிய கொள்ளு)அதிகம் சாப்பிடுவது நன்று;

நன்றி:இயற்கை உணவு சார்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரின் டேபிளில் இருந்து;


இயற்கை உணவு,இயற்கை உணவு பயிற்சி,இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு!!!



அலோபதி,யுனானி,சித்தா,ஆயுர்வேதம் என்று ஏராளமான வைத்திய முறைகள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் அல்லது வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள்,பலசரக்குகளைக் கொண்டே நமது நோய்களைக்குணப்படுத்திடமுடியும் என்று கடந்த 20,000 ஆண்டுகளாக இயற்கை மருத்துவம் நிரூபித்திருக்கிறது;

இது தொடர்பாக தினசரி,வார,மாத இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன;ஆனால்,இதில் கூறப்படும் பொருட்கள்,தானியங்கள்,அரிசி வகைகள் எங்கே கிடைக்கும்? எப்படி இதைப் பயன்படுத்த வேண்டும்? எந்த மாதிரியான உடல் வாகு (வாத உடல்,பித்த உடல்,சிலேட்டும உடல்) அமைப்புள்ளவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்? என்பது பற்றி தெரிவதில்லை;

அப்படித் தெரிந்து கொள்ள விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளைத் தயாரிக்க விரும்புவோர்;

இயற்கை உணவு வகைகளுக்கு என்று ஒரு ஓட்டல் நடத்திட விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளை விளைவிக்க விரும்புவோர்,

இயற்கை உணவுகளுக்குள் மறைந்திருக்கும் சித்தர் ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புவோர்;

இதுவரை இயற்கை நலவாழ்வு பற்றி புத்தகத்தில் மட்டும்  படித்திருப்பவர்கள்,அதை நேரடியாக அறிந்து கொள்ள விரும்புவோர்,

ரசாயன உரங்களின் பக்கவிளைவுகளை அறிந்து,வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைக்க விரும்புவோர்,

 நமது குடும்பத்திற்கு மட்டும் இயற்கை உரங்களால் காய்கறிகள்,கீரைகள் அந்த மாடித்தோட்டத்தின் மூலமாகவே விளைவிக்க விரும்புவோர்,

செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை வாங்க விரும்புவோர்,விற்க விரும்புவோர்;

இயற்கை விளைபொருட்கள் மூலமாகவே நோய்களைக் குணப்படுத்திட விரும்புவோர்;

விளைநிலங்களில் மூலிகை அல்லது சிறுதானியங்கள் விளைவிக்க விரும்புவோர்;

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு,

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகரம்,தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருக்கும் தாய் வழி இயற்கை உணவகத்திற்கு ஒருமுறை வருகை தருவது நன்று;


மேலே கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழு பக்கபலமும் , வழிகாட்டிதலும் இவர்களிடம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது;


உலகமயமாக்கலால் அழிந்து வரும் இந்தியாவின் பாரம்பரியம்





1.1.1995 முதல் இந்தியாவும் உலகமயமாக்கல்,டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது;உலகில் இருக்கும் 220 நாடுகளில் 195 நாடுகள் கையெழுத்திட்டன;இந்த ஒப்பந்தப்படி,இந்த 195 நாடுகளுக்குள் யார் வேண்டுமானாலும்,எந்த பொருளை வேண்டுமானாலும்,எந்த நாட்டிலும் விற்கலாம்;வாங்கலாம்;அந்தந்த நாட்டு அரசுகள் இதைத் தடுக்க முடியாது;இதுதான் சொன்னது;ஆனால் செய்தது என்ன தெரியுமா?

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும்,ஏழை மேலும் மேலும் ஏழை ஆவதற்குமான வழிகள் திறக்கப்பட்டன;பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட சேட்டிலைட் சேனல்கள் இன்று மக்களை கிறுக்காக்கிக் கொண்டிருக்கின்றன;(இந்தியாவில் எஃப் டிவியும்,அமெரிக்காவில் சன் டிவியும் ஒளிபரப்பாவதற்கு இதுவே காரணம்)

எல்லைகளில் இருக்கும் ராணுவத்திற்கு வேலையே இல்லாத அளவுக்கு ஜி 8 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவிவிட்டன;கொள்ளை லாபத்திற்கு நோயையோ அல்லது தரமற்ற பொருட்களையோ குவித்து நமது பர்ஸை நாகரீகமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன;

இந்தியாவில் நெய்யப்படும் பட்டுச்சேலையை ரூ.600/-க்கு வாங்கும் கிழக்கு ஆசிய நாடுகள்,ரீ பேக் செய்து இந்தியாவுக்கே ரூ.8000/- க்கு விற்பனை செய்யும் அட்டகாசமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் அரிய மூலிகைகள் கிலோ ரூ.20/-க்குப் பிடுங்கப்படுகின்றன;அவை இந்தியத் துறைமுகத்தை அடையும் போது ரூ.100/-க்கு விலை உயருகிறது;மேல்நாட்டைச் சென்றடையும் போது ரூ.500/-ஆகி,அதில் இருந்து தயாராகும் அரிய மருந்து ரூ.19,000/-

(இதில் வெறும் 5 கிராம் தான் அந்த மூலிகை கலக்கப்பட்டிருக்கும்)5 கிராம் ரூ.19,000 எனில் 1000 கிராமுக்கு எத்தனை 19,000 ரூபாய்கள் என்று கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்;ஒரு கட்டத்துக்கு மேல்,இந்தியாவில் விளையும் மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய முடியாத வெளிநாட்டினர்,நமது நாட்டினருக்கு மட்டுமே உருவாக்கிய படிப்பே பயோ டெக்னாலஜி! ஏழாம் அறிவு திரைப்படத்தில் வருவது போல,நாம் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க,அதை திருடிவதே இவர்களின் நோக்கம்;

நமது தேசத்தின் பெருமைகளைப்பற்றி அறியாத,நமது மக்களின் சுபாவத்தை உணராத,இந்தியாதான் உலகிற்கே வழிகாட்டும் எதிர்கால வல்லரசு என்பதை உணராத,மேல்நாடுகளின் மறைமுக மிரட்டலுக்கு மட்டும் அடிபணிந்த, தேசபக்தி இல்லாத பிரதமர்கள் நம்மை ஆண்டதால் வந்த வினை இது;

இந்தியா போன்ற கலப்புப் பொருளாதார நாடுகள் கூட முதலாளித்துவநாடாக மாறத் துவங்கியிருக்கின்றன;ஏற்கனவே,தொழிலாளித்துவம் உலக அரங்கில் தோல்வியடைந்துவிட்டது;அப்படி தோல்வியடைய 70 ஆண்டுகள் ஆயின;முதலாளித்துவம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் வந்தாலும் வெறும் 15 ஆண்டுகளிலேயே படுதோல்வி யடைந்துவிட்டது;ஆனாலும்,அதன் பின்விளைவுகள் இன்று இந்தியாவாகிய நம் நாட்டில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிக இடைவெளியை உருவாக்கிவிட்டது;

அன்பு,பாசம்,சமுதாய நலன் போன்றவைகளைக் கொண்ட மனிதர்கள் அருகிக் கொண்டே வரத் துவங்கிவிட்டனர்;

உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் போன்றவைகளால் ஒரே நன்மை ரூ.5000/- என்று இருந்த மாதச் சம்பளம் ஒரேயடியாக ரூ.50,000/-ஆரம்பச் சம்பளம் என்று எகிறியது மட்டுமே! இந்தச் சம்பளமானது,நாடு முழுவதும் ஒரே சீராக கிடைத்திருந்தால்,இந்நேரம் வறுமை ஒழிந்திருக்கும்;அதுதான் நடைபெறவில்லை;



Tuesday, August 25, 2015

ராம நாம கீர்த்தனைக்கு ஒர் ஆஸ்ரமம்


ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது;முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்;அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!

அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்;உணவும் கிடைக்கும்;இலவசமாக! தனியாக செல்லலாம்;தம்பதியாகச் செல்லலாம்;நண்பர்களாகச் செல்லலாம்;
ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;

இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால்,இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக,நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்;அதுவும் சரியாகிவிடும்;ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்)இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;ராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்;தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்; 

இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;



அந்த ராம நாம கீர்த்தனை:


ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது;உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;

இந்த ஆஸ்ரமத்தை எந்த விதத்திலும் விளம்பரப் படுத்தக் கூடாது என்று ஆஸ்ரம விதிகளில் ஒன்றாக இருப்பதால்,இதன் முகவரியை வெளியிட இயலவில்லை;முகவரியை அறிந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

உலகின் இரண்டாவது பழமையான வராகி ஆலயம் பள்ளூர்










உலகத்திலேயே முதல் பழமையான வராகி ஆலயம் உத்தரகோசமங்கையில்  அமைக்கப்பட்டுள்ளது;அதன் பிறகு,அமைக்கப்பட்ட இரண்டாவது வராகி ஆலயம் பள்ளூரில் அமைக்கப்பட்டிருக்கிறது;

இந்த ஆலயம் காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது;

முற்காலத்தில் மிகப் பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தது;என்பதை ஆலய அமைப்பைப் பார்க்கும் போதே உணரமுடிகிறது;



ஒம் வராகி சிவசக்தி ஓம்

Monday, August 24, 2015

ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவாசல்!!!


விநாயகரை தேய்பிறை சதுர்த்தி வரும் நாளிலும்,முருகக்கடவுளை செவ்வாய்க்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் மொத்தமாகக் கிடைக்கும்;

குலதெய்வத்தை எந்த நாளிலும்,அண்ணாமலையாரை எந்த கிழமையிலும்,எந்த நாளிலும் வழிபடலாம்;

மஹவிஷ்ணுவை புதன் கிழமையன்றும்,மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் கிட்டும்;

காலபைரவப்பெருமானை தேய்பிறை அஷ்டமியிலும்,வராகியை தேய்பிறைபஞ்சமியிலும் வழிபட்டால் வரங்கள் பெறமுடியும்;

உக்கிரமான பெண்தெய்வங்களான காளி,மாரி,முத்துமாரி,அங்காள பரமேஸ்வரி,புன்னைநல்லூர் மாரி,சமயபுரம்மாரி,இருக்கன் குடி மாரி,கன்னியாக்குமரி,புற்றுமாரி,நாகவல்லி,நாகேஸ்வரி முதலான தெய்வங்களின் அருள் கிட்டிட பவுர்ணமி நாட்களே சிறந்தது;

இவைகளை எல்லாம் ஒரே நிமிடத்தில் வாசித்துவிட்டோம்;ஆனால்,சித்தர்கள் இந்த தேவ ரகசியங்களை அறிய பல நூற்றாண்டுகளாகத் தவம் இருந்தனர்;

ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை செவ்வாய்க் கிரகம் நீசமடையும்;அந்த 45 நாட்களில் செவ்வாயின் ராசிகளான மேஷராசி,விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கவுரவ இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்;

அதே போல ஆண்டுக்கு ஒருமுறை சூரியன்,புதன்,சுக்கிரன் வெவ்வேறு மாதங்களில் நீசமடைவர்;அப்போது சிம்மராசி(சூரியனின் ராசி),ரிஷபராசி மற்றும் துலாம் ராசி(சுக்கிரனின் ராசி); மிதுனம் மற்றும் கன்னிராசி(புதனின் ராசி)யில் பிறந்தவர்கள் அவமானத்தை/அவதூறைச் சந்திக்க வேண்டியிருக்கும்;இதை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஜோதிடம் அறிந்தவர்களுக்கு மட்டுமே உண்டு;

அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற ஒரு ரகசியக் கலை இருக்கிறது.ஜோதிடத்தின் உச்சக்கலை இது;இந்தக் கலையின் படி ஆலோசனை பெற்றவர்கள்,வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றனர்;அமாவாசைத் திதி அல்லது பவுர்ணமித் திதியில் பிறந்தவர்களுக்கு பஞ்சபட்சியில் தீய நேரமான படுபட்சி நாள் என்பதே கிடையாது;15 நாட்கள் காலண்டர் அடிப்படையில் பஞ்சபட்சி சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் செயல்படுகிறது;இதன்படி ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை படுபட்சி நாள் என்று ஒன்று வரும்;அந்த நாட்களில் எடுக்கும் காரியங்களில் ஜெயிப்பது கடினம்;தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் இதில் தேர்ச்சி பெற்ற ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கிறார்கள்;அரசியல்தலைவர்கள் மட்டுமா? பெரும் தொழிலதிபர்களும்,அரசுப்பணியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்;

மேஷராசியினர் மகரராசியினரால் அதிகமான நன்மைகளைப் பெறுவர்;துலாம் ராசியினரிடம் நட்பு பெறுவர்;
இதே போல எந்த ராசியினருக்கு எந்த ராசியினர் உதவி செய்வார்கள்;எந்த ஜாதியில் பிறந்த மனிதர்களால் உதவி கிடைக்கும்;எந்த ஜாதியில் பிறந்தவர்களால் தொல்லை உண்டாகும் என்பதையும் ஜோதிட ஆலோசனையின் படி தெரிவிக்க முடியும்;

சிலருக்கு குறிப்பிட்ட வருடங்கள் வரை மட்டுமே அருள்வாக்கு கைகூடும் என்பதையும் ஜோதிடத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்;

சிலர் இப்பிறவியிலேயே சிவதரிசனத்தைப் பெறவே பிறந்திருப்பர்;அது அவர்களின் பிறந்த ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைப்பைப் பொறுத்துக் கண்டறியலாம்;

சிலர் 10,000 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்பதையும் கண்டறிய ஜோதிடம் மட்டுமே துணை;

ஜோதிட நம்பிக்கை இருப்பவர்களுக்கே ஆன்மீகம் விரைவாகக் கைகூடுகிறது என்பதற்கு கோடிக்கணக்கான சம்பவங்கள் ஆதாரமாக எல்லா யுகங்களிலும்,எல்லா காலங்களிலும்,எல்லா ஜாதி மக்களிடமும் நிகழ்ந்துள்ளன;நிகழ்ந்து வருகின்றன;

தமிழ்நாட்டில் ஒரு மனிதன், தன்னையறியாமலேயே மிகவும் சுபமான லக்னம் உதயமாகும் நேரத்தில்,முதல் வீடு கட்ட ஆரம்பிக்க,அதன் பிறகு அந்த மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுக்கவும் வீடுகள் கட்டிக் கொண்டே இருந்துள்ளான்;முதல் வீடு கட்ட ஆரம்பித்த சுப லக்னமானது அவனைக் கோடீஸ்வரனாக்கியிருக்கிறது;ஆனால்,அந்த மனிதனின் ஜாதகப்படி ஒரே ஒரு சொந்த வீடு கட்டும் யோகம் கூட இல்லை;இந்த சம்பவத்தை ஒருமுறை கூர்ந்து கவனித்த ஒரு சித்தர் பெருமான்,இந்த சம்பவத்தின் அடிப்படையில் நவக்கிரகங்கள் சூட்சுமமாகச் செய்யும் அதிசயங்களை பல ஆண்டுகளாக ஆராய்ந்திருக்கிறார்;அப்படி ஆராய்ந்து,ஆய்வு முடிவுகளைத் தொகுத்து உலகத்திலேயே தலைசிறந்த ஜோதிட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்;அதுதான் காலப்பிரகாசிகை!


இதே போல பல ஜோதிட அனுபவஸ்தர்கள் தமது ஜோதிட அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்;அது புதிய ஜோதிடர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது;பல லட்சம்தமிழர்கள் அதனால் வளமான,நலமான வாழ்வை அடைந்து கொண்டே இருக்கிறார்கள்:

பஞ்சபட்சியை சதாசிவன் முதன் முதலில் ரோமரிஷிக்கு உபதேசித்தார்;அதன் பிறகு,அந்தக் கலையானது குரு சீடன் பரம்பரை மூலமாக பல கோடி ஆண்டுகளாக பல லட்சம் ஜோதிடர்களால் இன்று நம்மிடையே பரவியிருக்கிறது;முதன் முதலில் ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றுக் கொண்டதால் சாகா வரம் பெற்று இன்றும் சூட்சுமமாக வாழ்ந்து வருகிறார்;தவம் செய்து வருகிறார்;பூமியில் 435 கோடி வருடங்கள் கடந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்;இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆகிவிட்டால்,அந்த பிரம்மாவின் ஆயுள் முடிந்ததாக அர்த்தம்;ஒரு பிரம்மா இறந்தால் ரோமரிஷியின் உடலில் இருந்து ஒரு ரோமம் உதிரும்;இது ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றதனால் கிடைத்த புகழ் ! பஞ்ச பட்சிக்கு அடிப்படையே ஜோதிடம் தான்;

இதே பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணராக இருப்பவர் காகபுஜண்டர் சித்தர்;இவர் அழிவே இல்லாத மகா சித்தர்;இவர் கூறுகிறார்;நாம் வாழ்ந்து வரும் பூமி இதுவரை ஆறு முறை அழிக்கப்பட்டிருக்கிறாதாம்;அதற்கு சாட்சியாக இருந்து வருபவர் அவர் மட்டுமே!

ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதை மேல்நாட்டின் புரிந்து கொண்டதால் தான் அவர்களுடைய முக்கியமான பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது,ஜோதிட ஆலோசனையைக் கேட்கின்றனர்;சி.ஐ.ஏ.வுக்கே ஜோதிட ஆலோசனைப்படியே ஒற்றர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்;தமிழ்நாட்டில் ஒரு தினசரி செய்தித்தாள் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே தனது எடிட்டோரியலுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது;

ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே பிரிட்டன் அரசு,இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தையும்,கிறிஸ்தவத்தையும் கட்டாயப்படுத்திப் பரப்பியது;இதன் மூலமாக அடுத்தடுத்து வரும் இந்தியத் தலைமுறையினரை இந்து தர்மத்தில் இருந்து பிரித்துவிடலாம்;என்பதே அவர்களின் அரசியல் தொலைநோக்குத் திட்டம்;இதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்;

ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே இருப்பதிலேயே மோசமான நேரத்தைத் தேர்ந்தெடுத்து,அந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் தந்தது பிரிட்டன்;நமது கண்களை,நமது கைகளாலேயே குத்த வைப்பது என்பது இதுதானோ?!!!

ஜோதிடத்தின் மூலமாக வேற்றுக்கிரக மனிதர்களை நாம் எப்போது சந்திப்போம் என்பதைக் கணிக்க முடியும்;
மூன்றாம் உலகப் போர் எப்போது எந்த நாட்டினரால் ஆரம்பமாகும்;அதன் முடிவு என்னவாக இருக்கும்;என்பதையும் கணிக்கலாம்;

பூமியில் விடுபடாத புதிர்களை ஜோதிடத்தின் மூலமாக விடுவிக்க முடியும்;

எந்த நாடு எப்போது இரண்டு மூன்று துண்டுகளாக உடையும் என்பதையும் கணிக்கலாம்;

ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம்;

ஜோதிடத்தை தொழில்முறையாகக் கற்றாலும் சரி;பொழுதுபோக்காகக் கற்றாலும் சரி;ஜோதிடம் கற்பவர்கள் சமஸ்க்ருதம் கற்பது அவசியம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Sunday, August 23, 2015

கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம்





ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.
கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான். பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


படித்து பாருங்கள் உங்களுக்கு மெய்
சிலிர்த்துபோகும் !!
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது..
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..
இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி

எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்




இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும்  முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன்,
இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும்  ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும்

••
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
2) 
மகாபாரதம் –  கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) 
தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) 
நாலாயிர திவ்ய பிரபந்தம்  மூலமும் உரையும்
5) 
கம்பராமாயணம்–   மர்ரே ராஜம் பதிப்பு
6) 
திருக்குறள்  – மூலமும் உரையும்
7) திருஅருட்பா  – மூலமும் உரையும்
8)சிலப்பதிகாரம்  – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை  – மூலமும் உரையும்
10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு  – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள்  முழுதொகுப்பு
14)பாரதிதாசன் கவிதைகள்.
15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு  – 12 தொகுதிகள்
16)பெரியார் சிந்தனைகள் –  ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை  – மூலமும் உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள்–  மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும்–   மயிலை சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள்  முழுதொகுப்பு
24)மௌனி கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள்  முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
28) வண்ணநிலவன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
31)அசோகமித்ரன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள்  முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
35)ஆ.மாதவன் சிறுகதைகள்  முழுதொகுதி
36)விடியுமா  குப.ராஜகோபாலன் சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை  ந.முத்துசாமி சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும்  அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள்  முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி சிறுகதைகள்  இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள்  முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்
46)மதினிமார்கள் கதை  – கோணங்கி
47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்
48)இரவுகள் உடையும்  பா.செயப்பிரகாசம்
49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்
50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
52)புளியமரத்தின் கதை  சுந்தர ராமசாமி
53)கரைந்த நிழல்கள்  – அசோகமித்ரன்
54)மோகமுள் – தி.ஜானகிராமன்
55)பிறகு – .பூமணி
56)நாய்கள்  நகுலன்
57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
58)இடைவெளி – சம்பத்
59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  – ஜெயகாந்தன்
60)வாசவேஸ்வரம் – கிருத்திகா
61)பசித்த மானுடம்  கரிச்சான்குஞ்சு
62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்
63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்
64)பொன்னியின் செல்வன்–   கல்கி
65)கடல்புரத்தில்  – வண்ணநிலவன்
66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்
67)சாயாவனம்  சா.கந்தசாமி
68)கிருஷ்ணபருந்து  – ஆ.மாதவன்
69)காகித மலர்கள்  ஆதவன்
70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்
71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
72)விஷ்ணுபுரம் –  ஜெயமோகன்
73)உபபாண்டவம்  – எஸ்.ராமகிருஷ்ணன்
74)கூகை  – சோ.தர்மன்
75)ஆழிசூழ்உலகு–   ஜோசப் டி குரூஸ்
76)ம்  – ஷோபாசக்தி
77)கூளமாதாரி  – பெருமாள் முருகன்
78)சமகால உலகக் கவிதைகள்  – தொகுப்பு பிரம்மராஜன்
79)ஆத்மநாம் கவிதைகள்  முழுதொகுப்பு
80)பிரமிள் கவிதைகள்  முழுதொகுப்பு
81)கலாப்ரியா கவிதைகள்  முழுதொகுப்பு
82)கல்யாண்ஜி கவிதைகள்
83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
84)நகுலன் கவிதைகள்  முழுதொகுப்பு
85)ஞானகூத்தன் கவிதைகள்  முழுதொகுப்பு
86)தேவதச்சன் கவிதைகள்  முழுதொகுப்பு
87)தேவதேவன் கவிதைகள்  முழுதொகுப்பு
88)ஆனந்த் கவிதைகள்  முழுதொகுப்பு
89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு
90)சமயவேல் கவிதைகள்  முழுதொகுப்பு
91)கோடைகால குறிப்புகள்  சுகுமாரன்
92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் –  மனுஷ்யபுத்திரன்
93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்
94) ரத்த உறவு– . யூமா வாசுகி
95)மரணத்துள் வாழ்வோம்  – கவிதை தொகுப்பு
96)சொல்லாத சேதிகள்  கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
97)தமிழக நாட்டுப்புறக் கதைகள்  தொகுப்பு.–  கி.ராஜநாராயணன்
98)தமிழக நாட்டுபுறபாடலகள் –  நா.வானமாமலை
99)பண்பாட்டு அசைவுகள்–   தொ.பரமசிவம் கட்டுரைகள்
100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்



ப. பெருமாள்


இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நூலகங்களுள், சரஸ்வதி மகால் நூலகம் ஒன்றாகும். இந்நூலகம் கி.பி. 16ஆம் நூற்றண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்-தில் அரண்மனை நூலகமாக ஆரம்பிக்கப்பட்டு, பின் வந்த மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்-பட்டது. நாயக்க மன்னர்கள் தஞ்சையை கி.பி. 1535ஆம் ஆண்டு முதலாக ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களுள் முக்கியமானவர்கள் ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆவர். இவர்களது காலத்தில் இம்மன்னர்கள் இயற்றிய நூல்கள் மற்றும் அரண்மனைப் புலவர்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நூலகம் சரஸ்வதி பண்டாரம் என அழைக்கப்பட்டது. கி.பி. 1676க்குப் பின் மராட்டிய மன்னர்கள் 1855 வரை ஆட்சி செய்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கி.பி. 1684 முதல் கி.பி. 1712 வரை ஆட்சி செய்த சகஜி மன்னரும், கி.பி. 1798 முதல் கி.பி. 1832 வரை அரியணையிலிருந்த இரண்டாம் சரபோஜியும் ஆவர். சகஜி மன்னர் அதிகமாகப் புலவர்களை ஆதரித்ததனால் பல நூல்கள் எழுதப்பட்டன. இவர் காலத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி, மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. சகஜி மன்னரும் நூல்கள் இயற்றி-யுள்ளார். அவர் திருவாரூர் தியாகராஜர் பேரில் பாடிய கீர்த்தனங்கள் மிகவும் குறிப்பிடத்-தக்கனவாகும்.
இரண்டாம் சரபோஜி மன்னர் இந்நூலகத்தை வளர்த்து உலகறியச் செய்தவர் ஆவார். இவருடைய கல்வி மற்றும் கலை ஆர்வத்தினால் அரிய சுவடிகள், ஓவியங்கள், உலக வரை-படங்கள் மேலை நாட்டு அச்சு நூல்கள் இந்நூல-கத்தில் சேர்க்கப்பட்டன. இவர் கி.பி. 1820இல் காசி யாத்திரை செல்லும்போது தன்னுடன் நூலகர்கள் மற்றும் எழுத்தர்களை அழைத்துச்-சென்று இந்நூலகத்தில் இல்லாத சுவடிகளைப் பிரதி செய்து சேர்த்துள்ளார்கள். மேலும் காசியில் உள்ள 64 படித்துறைகளின் ஓவியத்தை அரண்மனை ஓவியர்களால் வரையப்பெற்று இந்நூலகத்தில் சேர்த்துள்ளார். மராட்டிய மன்னர்களால் வட இந்தியாவிலிருந்து இராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சத்திரங்களிலும் தான் அமைத்த -ஒரத்தநாடு சத்திரத்திலும் பள்ளிகள் ஆரம்பித்து, தமிழ், மராத்தி, வடமொழி கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழங்கு-வதற்காக கி.பி. 1803இல் கல்லால் ஆன தேவநாகரி அச்சகத்தை தோற்றுவித்தார். அவ்வச்சகத்தின் பெயர் நவ வித்யா எந்திரசாலா என்பதனை அவ்வச்சகத்தில் அச்சிடப்பட்ட குமாரசம்பவ சம்பு, அன்னம்பட்டா, அமரகோசம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம். தென்னிந்தியாவில் முதன்முதலில் ஆரம்பித்த தேவநாகரி அச்சுக்கூடம் இது என இந்தியன் ஆன்டிக்கொரி என்ற நூலில் குறிப்பிடப்பட்-டுள்ளது.
சரபோஜி மன்னர் மருத்துவத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவர். இவ்வரண்மனையில் ‘தன்வந்திரி மகால்’ என்னும் மருத்துவமனையை ஆரம்பித்து மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்தார். இம்மருத்துவமனையில் சித்த, ஆயுர்வேத, அலோபதி மற்றும் யுனானி மருத்துவமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமுறைகளைப் பிற்கால சந்ததியினர் அறியும் வகையில் அரண்மனைப் பண்டிதர்-களைக் கொண்டு ஓலைகளில் எழுதி வைக்கச் செய்துள்ளார். இது போன்று வானவியல், சோதிடம், தத்துவம் போன்ற பலதரப்பட்ட வல்லுநர்களைக் கொண்டு நூல் எழுதச் செய்து சேர்ப்பித்துள்ளார். இவருடைய காலத்தில் தஞ்சைக்கு வருகை புரிந்த ரெவரண்டு ஃபாதர் பிஷப்ஹீபர் மற்றும் வேலன்சியா போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து, இம்மன்னர் கல்வி மற்றும் கலைக்கு ஆற்றிய பணியினை அறிய முடிகிறது. இம்மன்னர் பதவிக்கு வந்தவுடன் இந்நூலகச் சுவடிகளுக்கு சரியான அட்டவணை இல்லை என்பதை அறிந்து, தகுந்த நபர்களை அமர்த்தி ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளுக்கு ஓலையிலும், காகிதச்சுவடிகளுக்குக் காகிதத்திலும் அகர-வரிசைப்படுத்தி அட்டவணை தயார் செய்-துள்ளார். இவ்வாறு இவர் இந்நூலகத்தை ஓர் அரிய கருவூலமாக மிளிரச் செய்தார். அவருடைய தொண்டினை உலகுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அவருடைய பெயரைச் சேர்த்து தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் என்று அழைக்கப்படுகிறது.
சுவடிகள், நூல்கள் தொகுப்பு
இந்நூலகம் கி.பி. 1918ஆம் ஆண்டு வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொதுநூலகமாகவும் மாற்றி-யமைக்கப்பட்டது. மேலும் இந்நூலகத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் உள்ள சுவடிகள் மன்னர்காலத்தில் தொகுக்கப்பட்டது மட்டுமின்றி, பல கல்வியாளர்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற சுவடிகளும் நூல்களும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 49,000 சுவடிகள் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் மராட்டிய மொழிகளில் பனை ஓலைகளிலும், காகிதத்திலும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலகச் சுவடிகள் வேதாந்தம், புராணம், இசை, நாடகம், மருத்துவம், சோதிடம் போன்ற 18 பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்மொழிச் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் பனைஓலைகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச்சுவடிகளை இலக்கியம் மற்றும் மருத்துவம் எனப் பல பிரிவு-களாகப் பிரித்து இருபத்தாறு தொகுதிகள் விவர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன. இச்-சுவடிகள் இலக்கியம், சிற்றிலக்கியம், புராணம், தலபுராணங்கள், பக்தி இலக்கியங்கள், ஜோதிடம், தத்துவம், இசை, நாடகம், சித்த மருத்துவம் போன்ற தலைப்புகளில் உள்ளன. சில தமிழ்ச்-சுவடிகள் வடமொழி வார்த்தை கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகளில் ஆண்டு, மாதம், நாள் மற்றும் கிழமை குறிப்பிட்டு இருப்பின் காலம் காணலாம். ஆனால் ஆண்டு, மாதம், நாள் மட்டும் குறிப்பிட்டிருப்பின் தமிழ் வருடங்களில் எந்தச் சுற்று எனக் காண்பது கடினம். தற்பொழுது சுவடிகளை நூல்களாகப் பதித்தல் போன்று முற்காலத்தில் மடாதிபதிகள் தங்கள் மாணாக்கர் மூலம் ஒரு சுவடிக்குப் பல பிரதிகள் தயாரித்து பலருக்குத் தானமாக கொடுத்துள்ளனர். இதனை கிரந்த தானம் என குறிப்பிடுவர். இதுபோன்ற செயல்பாட்டினாலும், பல அறிஞர்கள் தங்களுக்குத் தேவையான சுவடிகளை மற்றவர்களிடம் இருந்து பிரதி செய்தமையாலும் இன்று ஒரு தலைப்பில் பல சுவடிகள் கிடைக்கப் பெறுகின்றன.
அரிய சுவடிகள்
இந்நூலகச் சுவடிகள் சுமார் 400 ஆண்டு-களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். இந்நூலகத்தில் உள்ள பல தலைப்புகளில் உள்ள சுவடிகள் இங்கு மட்டுமே உள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சில சுவடிகள் அரியனவாகவும் கருதப்படுகிறது. அவற்றுள் வடமொழிப் பிரிவில் உள்ள ‘சப்தார்த்த சிந்தாமணி’ என்னும் நூலில் வலது பக்கம் இருந்து படித்தால் இராமனின் கதை-யாகவும் இடது பக்கத்தில் இருந்து படித்தால் கிருஷ்ணன் கதையாகவும் கூறும் வண்ணம் வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நிரோஷ்ட்ய சீதா கல்யாணம்’ என்னும் தெலுங்கு நூல் சீதா கல்யாணத்தை இரு உதடுகளும் சேராமல் உச்சரிக்கும் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘மேகமாலா மஞ்சரி’ என்னும் நூல் மேகக்கூட்டங்கள், விண்மீன்கள் போன்ற-வைகளைக் குறிப்பிடுவதுடன் மழை பெறும் அளவு, வானிலை போன்ற பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதுபோன்று தமிழ்ச் சுவடிகளில் ‘கூப சாத்திரம்’ என்னும் சுவடி நிலத்தடி நீர் பற்றிய ஆய்வின் முக்கிய நூலாகும். ‘பூமி சல்லியம்’ என்னும் பிறிதொரு சுவடி நிலத்தடி மூலங்களைப் பற்றிக் கூறுவதாகும். பஞ்சபட்சி சாத்திரம் என்னும் மிகச் சிறிய அளவு சுவடி (5 ஜ் 3 செ.மீ.) இந்நூலகத்தில் உள்ளது. மேலும் சில சுவடிகள் தமிழ் மொழியில் வேறு எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ‘பாவப்பிரகாசிகா’ என்னும் கண்நோயைப் பற்றிய நூலும், வீரசிவாஜிக்கு அவரது குரு சமர்த்த ராம்தாஸ் செய்த ‘தால போதம்’ என்னும் வேதாந்த உபதேசங்கள் தமிழ் மொழியில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதுபோன்ற பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
அரிய நூல்கள்
இந்நூலகத்தில் சுவடிகளுடன் சுமார் 65,-000 அச்சுநூல்கள் உள்ளன. இந்நூல்கள் மேலை நாட்டில் அச்சான சரபோஜி மன்னரின் நூல் தொகுப்புடன் கி.பி.1918க்குப் பின் தனியார்-களிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள், மத்திய அரசின் மூலம் பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்ட நூல்களும் ஆகும். சரபோஜி மன்னர் தொகுப்பில் சுமார் 4500 நூல்கள் ஆங்கிலம், ஜெர்மன், டேனிஷ், டச்சு போன்ற மொழிகளில் உள்ளன. இத்தொகுப்பில் மிகவும் பழைய அச்சுநூல் கி.பி. 1694இல் வெளியிடப்-பட்ட பிரெஞ்சு மொழி உலக வரைபட நூலாகும். அது போன்று தமிழகத்தில் கி.பி. 1712இல் தரங்கம்பாடியில் சீகன்பால் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் அச்சுக் கூடத்தில் கி.பி. 1806இல் அச்சடிக்கப்பட்ட ‘சாலமோன் ராசாவின் வாக்கியங்கள்’ என்ற நூல், மேல் நாட்டினர் தமிழ் கற்பதற்காக கி.பி. 1779 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி அச்சகத்தில் சுமார் 6000, தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தத்துடன் பாதர் பெப்ரீசியஸ் அவர்களால் தொகுத்து ‘தமிழும் இங்கிலீசுமாயிருக்கிற அகராதி’ (கி விணீறீணீதீணீக்ஷீ ணீஸீபீ ணிஸீரீறீவீsலீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) போன்ற பழமையான நூல்களும் நூலகத்தில் உள்ளன. இந்நூலகத்தில் சுவடிகள், அச்சுநூல், அரிய வரைபடங்கள் ஓவியங்களுடன் மராட்டிய மன்னர்கள் காலத்தில் 250 ஆண்டுகால மராட்டிய மொழியில் மோடி என்னும் சுருக்கு எழுத்தால் எழுதப்பட்ட ஆவணங்கள் 1200க்கு மேற்பட்ட கட்டுகளும் (சுமார் 3,00,000 தாளில்) உள்ளன. இவ்வாவணங்கள் கி.பி. 1750 இலிருந்து 1855 வரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள், கடிதங்கள், கணக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் கொண்ட ஆவணங்கள் ஆகும்.
இந்நூலகம் கி.பி. 1918 வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொது நூலகமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்நூலகத்தின் முக்கியப் பணிகள் சுவடிகளைத் தொகுத்தல், அட்ட-வணைப்-படுத்தல், பாதுகாத்தல், வெளிவராத சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடுதல் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவுதல் ஆகும். பாதுகாப்புப் பணியாக இந்நூலகச் சுவடிகளைப் பிரதி செய்தல், மைக்ரோ ஃபிலிமில் பதிவு செய்தல், சுவடிகள், நூல்கள் அழியா வண்ணம் மரபு வழி மற்றும் நவீன முறை பாதுகாப்புப் பணிகள் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
இந்நூலகத்தில் காகிதச்சுவடிகள், புத்தகங்-களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்-களான வசம்பு, கரும்சீரகம், இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு ஆகிய ஐந்து பொருட்களையும் நிழலில் காயவைத்துப் பொடிசெய்து ஒரு வெள்ளைத் துணியில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடி-யுடன் சிறு சூடக்கட்டியைச் சேர்த்துக் கட்டி பீரோக்களில் வைத்துப் பூச்சி-களின் பாதிப்-பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
நூலக அட்டவணைகள்
இந்நூலகத்தில் உள்ள சுவடிகளுக்கு 1801இல் சரபோஜி மன்னர் காலத்தில் ஓலைச் சுவடி-களுக்கு ஓலை-யிலும், காகிதச் சுவடிகளுக்குக் காகிதத்திலும் அட்டவணை தயாரிக்கப்பட்-டுள்ளது. அதன் பின் அவரது மகன் இரண்-டாம் சிவாஜி காலத்திலும், 1855இல் தஞ்சையின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி போர்ப் என்பவரது ஆணையின்படியும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.  1872இல் தஞ்சையில் செசன்சு நீதிபதியாக இருந்த டாக்டர் ஏ.சி. பர்னல் நான்கு ஆண்டுகள் இந்நூலகத்தி-லிருந்த வடமொழிச் சுவடிகளைப் பார்வையிட்டு அட்டவணைப்படுத்தி, 1880ஆம் ஆண்டு லண்டனில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். அதன்பின் 1918இல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட பின் இந்நூலகச் சுவடிகளைச் சரிபார்த்து முழுமையான விவர அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதுவரை 62 தொகுதி சுவடிகளுக்கான விவர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அட்டவணைப்படுத்தும் பணி முடிவுற்ற பின் நூல்கள் வெளியிடு-வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1938இல் கௌரவச் செயலராகப் பணியாற்றிய அட்வகேட் எஸ். கோபாலன் அவர்களால் நூலகத்திற்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வண்ணம் நூலகத்தில் உள்ள சிறிய சுவடிகளையும் மற்றும் சுவடிகள் பற்றிய தகவல்களை வெளியிட, வருடத்திற்கு மூன்று முறை வெளியிடும் வகையில் பருவஇதழ் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெளியிடப்-படுகிறது. பல சுவடிகளைப் பற்றிய தகவல், குறுஞ்சுவடிப் பதிப்புகள், பருவஇதழ் வாயிலாக வெளியிடப்படுகின்றன. 1948ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள இரண்டு சுவடிகள் நூலகங்-களான சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சென்னையில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களில் உள்ள முக்கியச் சுவடி-களை நூல்களாக வெளியிட்டு மக்கள் பயன்-பாட்டிற்கு ஏற்படுத்த தமிழக அரசால் டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களைத் தலைவ-ராகக் கொண்ட வல்லுநர் குழு மக்களுக்குப் பயன்படும் மற்றும் அரிய, வெளிவராத சுவடிகளைத் தேர்வு செய்து தமிழக அரசின் நிதியுதவியில் பதிப்பித்து வெளியிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு மொழிச் சுவடிகளை அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு தேர்வு செய்து பதிப்பித்து நூல்களாக வெளி-யிடப்பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட இந்நூலகத்தின் முதல் நூல் 1948இல் சமஸ்கிருதச் சுவடியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் வி. இராகவன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘முத்ராக்சா நாடக கதா’ என்ற நூலாகும். அது போன்று தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் நூல் இந்நூலகப் பண்டிதர் கே. வாசுதேவ சாஸ்திரி மற்றும் டாக்டர் எஸ். வெங்கட்ராஜன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘சரபேந்திர வைத்திய முறைகள்: குன்மரோக சிகிச்சை’ என்ற நூலாகும். 1948 முதல் 2008 வரை சுமார் 515 நூல்கள் சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  அவற்றுள் சுமார் 250 நூல்கள் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. சில நூல்கள் மற்ற மொழியிலிருந்து மொழி-பெயர்ப்பு நூல்களாக வந்துள்ளன. மற்ற மொழி நூல்கள் தமிழ் மொழி சுருக்கங்களுடன் வெளி-யிடப்பட்டுள்ளன. இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி தஞ்சை மற்றும் பதிப்புப் பணியில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்கள் தேர்வு செய்ய அவ்வப்பொழுது மொழி வல்லுநர் குழு ஒன்றையும் அமர்த்தி தேர்வு செய்யப்படுகிறது.
இந்நூலகத்தில் இலக்கியம், சிற்றிலக்கியம், நிகண்டு, இலக்கணம், தத்துவம், மருத்துவம், ஜோதிடம், இசை, நாடகம், சிற்பம், நீதிநூல், தலபுராண நூல்கள், சமய நூல்கள் போன்ற தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் இலக்கிய நூல்களாகப் பெருந்தேவனார் பாரதம், நாலடியார் உரைவளம், திருக்குறள் பழைய உரை, திருக்குறள் ஜைன உரை என்ற இலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூல்களான அரிச்சந்திரன் அம்மானை, அதிரியர் அம்மானை, சித்திர புத்திரன் அம்மானை, சீவகசிந்தாமணி அம்மானை, கஞ்சனம்மானை, மார்க்கண்டேயர் அம்மானை, ராமையன் அம்மானை, பார்கவநாதர் அம்மானை, திரௌபதி அம்மானை, சுந்தரி அம்மானை,  இராமர் அம்மானை, காஞ்சி மன்னன் அம்மானை நூல்களும், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், கமலாலய அம்மன் பிள்ளைத்-தமிழ், சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் குடந்தையந்தாதி, அருணகிரியந்தாதி, பிள்ளையந்தாதி, மருதூர் அந்தாதி போன்ற அந்தாதி நூல்களும், நாராயண சதகம், வடிவேல் சதகம், குமரேச சதகம் போன்ற சதக நூல்களும் ஞானக் குறவஞ்சி, வெள்ளைப்-பிள்ளையார் குறவஞ்சி நூல்களும், மாலைத் தொகுப்பு நூல்களான ராஜகோபால மாலை, திருவாய் மொழி வாசக மாலை போன்ற மாலை நூல்களும் வண்ணத்திரட்டு நூல்களும் குசலவன் கதை, மரியாதை ராமன் கதை, ஆழம் நபி பாட்டு, இராயர் அப்பாஜி கதை நூல்களும், தாது வருட கருப்பி கும்மி போன்ற கும்மி நூல்களும் நம்மாழ்வார் திருத்தாலாட்டு போன்ற தாலாட்டு நூல்களும், புராண நூல்களான அருணாசல புராணம், ஆத்திசூடி புராணம், கும்பகோணம் புராணம், கூர்ம புராணம், சரப்புராணம், ததீசீ புராணம், திருசோற்றுத்துறை தலபுராணம், திருநல்லூர் புராணம், திருப்பெருந்துறை புராணம், திருவாப்பூர் புராணம், திருவையாற்றுப் புராணம் போன்ற புராண நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன. இலக்கண நூல்களான தொல்-காப்பியம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், சிதம்பரச் செய்யுட் கோவை, நிகண்டு நூல்களான ஆசிரியர் நிகண்டு, சோதிட நூல்களான காலப்பிரகாசிகா வராகர் ஓரசாத்திரம், ஜாதகலங்காரம், காலசக்கரம், ஜாதக சிந்தாமணி, பஞ்சபட்சி சாத்திரம், நட்சத்திர சிந்தாமணி, நீதி நூல்களான நீதி வெண்பா, நீதி சதகம், நீதி நூல் திரட்டு, தரும நெறி நீதிகள், சாணக்கிய நீதி சமுச்சியம், சித்த மருத்துவ நூல்களான சரபேந்திர வைத்திய முறை நூல்கள், அகத்தியர், ராமதேவர், போகர், தன்வந்திரி நூல்கள் வைத்தியர் ரத்னாவளி, சித்தமருத்துவச் சுடர், அனுபவ வைத்தியத் திரட்டு போன்ற வைத்திய நூல்கள் ராம நாடகக் கீர்த்தனைகள், சப்தம் என்னும் தாளச் சொற்கட்டு சிறு தொண்டர் நாயனார் இசை நாடகம், ஐந்து தமிழிசை நாட்டிய நாடகம், தமிழிசைப் பதிகங்கள் தாள சமுத்திரம் போன்ற இசை-நூல்கள், தனிப்பாடல் திரட்டு, மலையருவி போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களும், பண்டையகால கணக்குமுறைகளைக் கூறும் கணக்கதிகாரம் நூல்களும், திருமுரு-காற்றுப்படை, பக்தி இலக்கிய நூல்களும் சுவடி-களிலிருந்து வெளியிடப்படுகின்றன. சுவடிகள் இல்லாத ஆய்வு நூல்களாகத் தமிழக கோயிற்-கலை மரபு, தஞ்சை நாயக்கர் வரலாறு, தமிழகத்-தில் விஜயநகர ஆட்சி, மனோரா சரபோஜி மன்னர் ஆய்வுக் கோவை, கோவில் அரும்-பொருள் பாதுகாப்பு நூல், கொடுந்தமிழ், செந்தமிழ் என்னும் மதிப்பு நூல்களும் ஆனத கந்தம், ராஜமிருகாங்கம், பரதார்ணவம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன.
இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி, அடிகளாசிரியர், தி.வே. கோபாலையர், தி.வே. கங்காதரன், டாக்டர் வி. இராகவன், கீ. கோதண்ட-பாணி, சி. கோவிந்தராஜனார், டாக்டர். வெங்கட்ராமன், டாக்டர். சௌரிராஜன், டாக்டர் ரங்கராஜன் போன்ற சுவடியியல் அறிந்த பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து, நுண்ணாய்வு செய்து நூல்கள் வெளியிடப்-படுகின்றன. இப்பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதிப்பித்த நூல்கள் வாசகர்களின் தேவைக்கேற்ப மறுபதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. இதுபோன்று இந்-நூலகம் தொடர்ந்து நூல்கள் வெளியிடுவ-துடன் மக்கள் பயன்படும் வகையில் சரபோஜி மன்னர் பிறந்தநாளையட்டி ஓரிரு மாதங்-களுக்கு ஒவ்வொரு வருடமும் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்கிறது. இவ்வாறாகப் பதிப்புப் பணியைச் செய்யும் நூலகத்தை நாம் பாதுகாத்துப் பயனடைய வேண்டும்.