Sunday, January 20, 2019

கலியுக குரு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்!!!


உங்களை கலியுகத் துன்பங்களில் இருந்து காக்கும் வீரபிரம்மேந்திரர்!!!

உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் அனைத்தும் காலத்திற்கும்,கால மாற்றத்திற்கும் உட்பட்டவையே! சக்ரா தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நமது பாரத தேசம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;இலவச இணைய வீடியோக்களிலும் இதுபற்றிய பாடங்கள் இருக்கின்றன;

உலகத்தில் 84,00,000 உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன;ஒரு நாள் ஆயுள் கொண்ட ஈசல் முதல் 300 வருட ஆயுள் கொண்ட ஆமை,6000 வருட ஆயுள் கொன்ட மரங்கள் வரை இருந்தாலும்,மனித இனம் இவைகளில் இருந்து    எப்படி வேறு பட்டது தெரியுமா?


மனிதன் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஆறு சக்கரங்கள் சூட்சுமமாக இயங்குகின்றன;மனிதனின் உடலுக்கு வெளியே தலைக்கு மேலே இன்னும் 3 சக்கரங்கள் இயங்குகின்றன;இந்த சக்கரங்கள் மனித இனத்திற்கு மட்டுமே உண்டு;வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது;


இந்த 9 சக்கரங்களையும் பல கோடி ஆண்டுகள் தவ முயற்சியாலும்,பல உலகங்களில் பலப்பல பிறவிகள் எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சித்தர்கள்!


அதில் ஒரு சித்தர் பிரான் தான் இன்றைய ஆந்திர மாநிலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீவீரபிரம்மேந்திரர்!!!இவர் கலியுகம் முழுவதும் எப்போது என்ன நடக்கும் என்பதை காலக்ஞானம் என்ற பெயரில் கணித்துள்ளார்;இந்த நூல் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,ஆங்கில மொழிகளில் வெளிவந்திருக்கின்றது;


இவர் 175 ஆண்டுகள் வாழ்ந்தார்;கலியுகாதி 4094,விசாக சுத்த தசமி அன்று கடப்பா மாவட்டம்,கந்திமல்லையபல்லி என்ற இடத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இன்று அது பிரம்மம்காரி மடம் என்று அழைக்கப்படுகின்றது;

அவர் எழுதிய ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து,அதை பூமியில் புதைத்துள்ளார்கள்;அதன் மீது ஒரு புளியமரம் நடப்பட்டு,இன்றும் வளர்ந்து வருகின்றது;அந்த புளியமரத்தின் வயது 701 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது;இந்த புளியமரம்,இன்றைய கர்னூல் மாவட்டத்தில் பனகனாபல்லி மடத்தில் இருக்கின்றது;இம்மடத்தை சிந்தமானு மடம் என்று பொது மக்கள் அழைக்கின்றார்கள்;

இருவிதங்களில் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் காலக்ஞானம் நூலை எழுதியிருக்கின்றார்;ஒன்று வசன நடை;மற்றது செய்யுள் போல எழுதியிருக்கின்றார்;இன்று வரையிலும் பனகனாபல்லி நகரத்தில் நாடோடிப் பாடல்கள் போல பாடப்பட்டு வருகின்றது;அவ்வூர் மக்கள் இதை சாந்திர சிந்து வேதம் என்று அழைக்கின்றார்கள்;
கலியுகத்தில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ,துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நான் மீண்டும் வருவேன் என்று ஸ்ரீவீரபிரம்மேந்திரர் தெரிவித்திருக்கின்றார்;அதன் படி,இவரே மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்று மக்கள் போற்றுகின்றார்கள்;

ஸ்ரீவீரபிரம்மேந்திரர் கலியுகம் முடியும் வரை எப்போது என்ன நடைபெறும் என்பதை 3,34,000 பாடல்களாக எழுதியிருக்கின்றார் என்ற கருத்து உண்டு;அதில் சிறு பகுதி மட்டுமே கால ஞானம் என்ற பெயரில் பலர் தமிழ்,தெலுங்கு,ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்;இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் கந்திமல்லையாபல்லி,முடுமாலா,நகரிபாடு,பனகானபல்லி போன்ற ஊர்களில் இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் மடங்களில் இருக்கின்றன;


ஸ்ரீவீரபிரம்மேந்திரர் அவர்களின் கணிப்புகள் அனைத்தையும் இந்த இணைய வெளியில் வெளியிட முடியாது;உரிய நூல்களை வாங்கி படித்துக் கொள்ளுங்கள்;ஒரு சில உதாரணங்களை மட்டும் ஸ்ரீவீரபிரம்மேந்திரரின் அருளாசியுடன் இங்கே குறிப்பிடுகின்றோம்;

சுயம் அறிந்த குரு தேவர்கள் வருவது இனி அரிதாகும்;போலிச் சாமியார்கள் பெருகுவார்கள்;


வெண்மை நிறத் தோலுடைய மக்கள் இந்த பாரத நாட்டை ஆள்வார்கள்;

கலியுகாதி 5000 ஆண்டுகள் முடிந்த பின்னர்,இந்த புண்ணிய பூமியான பாரத நாட்டில் தர்மம் படிப்படியாக தேய்ந்து போகும்;தற்போது கலியுகாதி 5119 (கிபி 2019) நடைபெற்று வருகின்றது;கலியுகாதி 4095 இல் (கி.பி.1995) நமது புண்ணிய பூமிக்கு இணைய வசதி வரத் துவங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்;


மிதுனத்தை சனி கடக்கும் போது அழிவுகள் அதிகமாகும்;1913, 1943, 1973, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்;அடுத்தபடியாக 2033 இல் மீண்டும் மிதுனத்தை சனி கடக்க இருக்கின்றார்;பாவங்கள் கடுமையாகச் செய்பவர்கள் மொத்தமாக இறக்கும் காலம் இந்த இரண்டரை ஆண்டுகள் தான்!!!


சுபக்ருதி ஆண்டில் (நவம்பர் 2022) பாரதத்தின் தெற்குப் பகுதியில் வால் நட்சத்திரம் தெரியும்;அதனால்,நிறைய உயிர்ச் சேதங்கள் உண்டாகும்;


யார் ஒருவர் தினமும் 108 முறையாவது பின்வரும் மந்திரத்தை எழுதி வருகின்றார்களோ,அவர்களை நான் காப்பாற்றுவேன்;


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமசிவாய ஸ்ரீவீரப் பிரம்மேந்திர சுவாமினே நமஹ


ஸ்ரீவீரப்பிரம்மேந்திர சுவாமிகள் விசுவாச ஆண்டில் மீண்டும் வெளிப்படுவார்;அடுத்த விசுவாச ஆண்டு கி.பி.2025 டூ 2026 ஆம் ஆண்டு வருகின்றது;


கலியுகம் செல்லச் செல்ல நிம்மதியாக தினசரி வாழ்க்கையை கழிப்பதே பெரும்பாடாக இருக்கும்;இது ஏழைகளுக்கும்,செல்வந்தர்களுக்கும்,மிகப் பெரும் செல்வந்தர்களுக்கும் பொருந்தும்;


எந்த ஒரு நவீன தொழில் நுட்பத்தாலும்,அரசாங்கத்தாலும்,கார்ப்பரேட் நிறுவனத்தாலும் ஒரு தனி மனிதனின் நிம்மதியைத் தர முடியாது;
அவரவர் தனது பக்தி உணர்ச்சியின் மூலமாக நிம்மதியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்;


மேலே கூறப்பட்டிருக்கும் மந்திரத்தை தினமும் சிவாலயத்தில் 30 நிமிடம் வரை ஜபிக்கவும் செய்யலாம்;எந்த ஒரு ஆச்சார அனுஷ்டானங்களும் தேவையில்லை;ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் என்னைப் பாதுகாக்கும் குரு என்று எண்ணிக் கொண்டு தினமும் ஜபித்து வந்தால் போதும்!!!


குரு அருள் பெற்று,இறைவனின் ஆசிகளை பெறுங்கள்! நிம்மதியாக நீடூழி வாழுங்கள்!!!

Saturday, January 19, 2019

சிவமஹான் வீரப் பிரம்மம் அவர்களின் சூட்சும வழிகாட்டுதலைப் பெற


இன்றைய ஆந்திரமாநிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் வீரபிரம்மம்! இவர் ஒரு தலைசிறந்த சிவமகான் ஆவார்;கலியுகத்தில் என்னவெல்லாம் நடைபெறும் என்பதை இவர் அக்காலத்தில் ஒலைச்சுவடியில் எழுதி வைத்துள்ளார்;ஒலைச்சுவடித் தொகுதியில் இருந்து சிறு பகுதியை புத்தகமாக அவரது வழித்தோன்றல்கள் வெளியிட்டுள்ளனர்;

அந்த புத்தகத்தின் பெயர்:கால ஞானம்!


கலியுகம் முடியும் வரை என்னென்ன நடைபெறும்?என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்;அவரது எழுத்தின் முன்பாக நார்ஸ்டர்டாமஸ் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்;நார்ஸ்டர்டாமஸின்  நூற்றாண்டுகள் புத்தகத்தை விடவும் மிகவும் எளிமையாக,எல்லோருக்கும் புரியும் படியாக சிவமகான் வீரப்பிரம்மம் தனது சிவ அருளால் நமக்கு வழங்கியிருக்கிறார்;


நார்ஸ்டர்டாமஸை மேற்கு நாடுகள் தூக்கிவைத்துக் கொண்டு ஆட்டட்டும்;ஆனால்,எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை எழுத நார்ஸ்டர்டாமஸிற்கு துணை இருந்தது அவரது காசிப் பயணமே!

 கி.பி.1400களில் நார்ஸ்டர்டாமஸ் நமது நாட்டிற்கு வந்து மூன்று ஆண்டுகள் காசியில் தங்கி ஜோதிடம் கற்றுக் கொண்டார் என்பதை எவரும் சொல்வதில்லை;


ஆனால்,சிவமகான் வீரப்பிரம்மம் ஈசனிடம் பேசும் திறன் பெற்றவர்;அவர் ஈசனிடம் நினைக்கும் போதெல்லாம் உரையாடி கால ஞானத்தை எழுதியிருக்கிறார்;தமிழில் கற்பகம் புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது;


சிவனருள் கிட்டிட ஒரு அரிய சிவமந்திரத்தை சிவமகான் வீரபிரம்மம் அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்;


இதை 25,000 தடவை ஜபித்தாலே போதும்;இந்த மந்திரத்தை நமக்கு உபதேசித்த சிவமகான் வீரபிரம்மத்தின் அருளும்,சூட்சும வழிகாட்டுதலும் நமக்கு கிட்டும்;முயற்சி செய்வோமா?


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீரீம் நமசிவாய பிரம்மனே நமஹ


ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,ஓராண்டு தினமும் ஜபித்துவந்தாலே நமது ஜப எண்ணிக்கை 25.000 ஐத் தொட்டுவிடும்;


நம் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றும் ஆற்றல் நமது மந்திர ஜபம்,நாம் சில குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் செய்யும் அன்னதானம்,நாம் சிலருக்கு குறிப்பிட்ட கிழமையில் செய்யும் உதவி=இவைகளுக்கு மட்டுமே உண்டு;


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

ஒருமாதம் வரை வருமானத்தை அதிகரிக்கும் சொர்ண பைரவ வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,     தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 28.1.2019 திங்கட்கிழமை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

திங்கட்கிழமை குளிகை காலம் மதியம் 1.30 முதல் 3  மணி வரை இருக்கின்றது.

 திங்கட்கிழமை   இராகு காலம் காலை 7.30 முதல் 9  மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 26.2.2019 செவ்வாய்க்கிழமை காலை 10.36 முதல் 27.2.2019 புதன் கிழமை காலை 10.37 வரை

Thursday, January 3, 2019

கால பைரவப் பெருமானின் அருளைப் பெற....


கால பைரவர் பரணி நட்சத்திரத்தில் உதயமானார்!
கால பைரவர் அஷ்டமி திதியில் உதயமானார்;
அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே வருவது மிகவும் அபூர்வம்....


2.2.2020 சண்டே அன்று மாலை 4.44 வரை அஷ்டமி திதியும்,இரவு 8.13 வரை பரணி நட்சத்திரம் சேர்ந்து வருகின்றது;

கால பைரவரின் அருளைப் பெற இந்த நேரத்தில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்;


முடிந்தால் இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் செல்வதால்,அண்ணாமலையாரின் அருளும்,கால பைரவரின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்;


கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று ஜபிக்கலாம்;இதுதான் பைரவ உலகத்திற்கும் நமது பூமிக்கும் இடையே இணைப்பு ஆன்மீகப் பாலமாக இருக்கின்றது;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்த பொன் பேத்தி அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் பொற்றளி பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம்;இவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவராக கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதயமானார்;


அட்டவீரட்டானங்கள் என்ற பைரவரின் எட்டு படைவீடுகளில் ஜபிக்கலாம்

(திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்,
பண்ருட்டி அருகில் இருக்கும் திருவதிகை,
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கும் திருக்கண்டியூர் அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி மற்றும் திருக்கடையூர் மயானம்,
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்
திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி வீரட்டேஸ்வரர்,
மயிலாடுதுறை அருகில் இருக்கும் செம்பொனார் கோவில் பகுதியைச் சேர்ந்த திருப்பரசலூர்
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்து பிறகு விசாரித்துச் சென்றால் வரும் குறுக்கை என்ற கொறுக்கை=இங்கே இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் மன்மதனை எரித்த சாம்பல் இன்றும் இருக்கின்றது)

தவிர,அவரவர்களுடைய ஜன்ம நட்சத்திர பைரவர் ஸ்தலங்கள்:-
அசுபதி = பேரூர் சிவாலாயத்தில் இருக்கும் ஞானபைரவர்

பரணி = காரைக்குடி திருப்பத்தூர் அருகில் அமைந்திருக்கும் கண்டரமாணிக்கம் சென்று பெரிச்சி கோவில்


கார்த்திகை = அண்ணாமலை உள்பிரகாரத்தில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

ரோகிணி = திருக்கண்டியூர் பிரமசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் வடுக பைரவர்


மிருகசீரிடம் = க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழி)

திருவாதிரை = திருவண்டார் கோவில் பைரவர்(விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம்)


புனர்பூசம் = விஜயபைரவர்,பழனி(ரோப்கார் அருகில் இருக்கும் சாது சுவாமிகள் மடாலயம்)


பூசம் = யோக பைரவர்,ஸ்ரீவாஞ்சியம்

ஆயில்யம் = பாதாள பைரவர்,காளஹஸ்தி


மகம் = அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவில் பைரவர்,வேலூர்

பூரம் = பட்டீஸ்வர பைரவர்(கும்பகோணம் அருகில்)


உத்திரம் = ஜடாமண்டல பைரவர்,அருள்மிகு ஆவுடையம்மன் சமேத அம்மநாதர் கோவில்,சேரன்மாதேவி,நெல்லை மாவட்டம்


அஸ்தம் = யோக பைரவர்,திருப்பத்தூர்

சித்திரை = அருள்மிகு கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜீனர் கோவிலில் இருக்கும் பைரவர்,தர்மபுரி


சுவாதி = திருவரங்குளம் (பொற்பனைக்கோட்டை) பைரவர்,வழி:புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 வது கி மீ

விசாகம் =கோட்டை பைரவர்,திருமயம்(சாலையோரம் இருக்கும் ஆலயம்)

அனுஷம் = அருள்மிகு ஆபத்சகாயர் கோவில் பைரவர்,ஆடுதுறை

கேட்டை= அருள்மிகு ஆவுடைநாயகி சமேத தேசிகநாதர் கோவிலில் இருக்கும் கதாயுத பைரவர்,சூரக்குடி,பள்ளத்தூர்(காரைக்குடி)

மூலம் = ஆகாச பைரவர்,சட்டநாதர் கோவில்,சீர்காழி


பூராடம் = அவிநாசி கோவிலில் இருக்கும் இரண்டு பைரவர்கள்


உத்திராடம் = வடுக பைரவர்,அருள்மிகு பசுபதி நாதர் கோவில்,கரூர்


திருவோணம் = மார்த்தாண்ட பைரவர்,வைரவன்பட்டி

அவிட்டம் = அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் கோவில்,சீர்காழியில் இருக்கும் அஷ்ட பைரவர்கள்


சதயம் = சர்ப்ப பைரவர்,சங்கரன் கோவில்

பூரட்டாதி = திருச்செங்கோடு தாலுகா,கொக்கராயன்பேட்டையில் இருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் பைரவர்


உத்திரட்டாதி = ஓசை உடைய பைரவர்,சேங்கனூர்,கும்பகோணம் அருகில்


ரேவதி = கரூர் மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் பஞ்சமுக பைரவர்

அல்லது

காலபைரவர் ஆட்சி புரியும் காசியில் 64 படித்துறைகள் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரு படித்துறையில் கங்கையில் மூழ்கியவாறு ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஒரு மணி நேரமாவது ஜபிக்கலாம்;

அல்லது

காசியில் எட்டு பைரவர்களின் ஆலயங்கள் இருக்கின்றன;இங்கே ஏதாவது ஒரு இடத்தில் ஜபிக்கலாம்;


அல்லது

சூரியனின் ப்ராண தேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;இவர் சிதம்பரம் ஆலயத்தில் இருந்து அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;


சந்திரனின் ப்ராண தேவதை கபால பைரவர்;இவர் தென்காசிக்கு அருகில் இருக்கும் திருமலைக்கோவில் முருகன் கோவிலில் அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

குருவின் ப்ராண தேவதை அசிதாங்க பைரவர்;இவர் ஆம்பூர் சிவாலயத்தில் அருள்புரிகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

மற்ற கிரகங்களின் ப்ராண தேவதையாக இருக்கும் பைரவ ஆலயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;


அல்லது

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னதி

அல்லது

இங்கே எங்கேயும் செல்ல இயலாதவர்கள் உங்கள் தெருவில் வசிக்கும் பைரவ வாகனத்திற்கு உணவு தானம்,பிஸ்கட் தானம் செய்யலாம்;

நம்முடைய கடுமையான கர்மவினைகளை கரைக்க ஓர் பொன்னான பைரவ வாய்ப்பு!!!

மனம் வருந்தி ஈசனைச் சரண் அடைந்தவர்களுக்காக....

 


மனத்தால் செய்த பாவங்கள் தீர ஒரு சுலபமான வழி உண்டு;சென்னையில் இருக்கும் திருநின்றவூர் அருள்மிகு இருதயாலீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி அல்லது அடிப்பிரதட்சணம் அல்லது அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்;இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஆன எது செய்தாலும் மனதால் செய்த பாவங்கள் தீரும்;ஆனால்,திரும்பவும் அதே பாவங்களை ஒரு போதும் செய்யக்கூடாது;

அல்லது/மேலும்


உடலாலும் மனதாலும் செய்த பாவங்கள் தீர,திங்கட்கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

கிரிவலம் முழுவதும் ஒரு போதும் பேசாமல் இருந்து ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபித்து வரவேண்டும்;வசதி உள்ளவர்கள் கன்றுடன் கூடிய பசுவை அழைத்துக் கொண்டு கிரிவலம் வரலாம்; கிரிவலம் நிறைவடையும் போது அந்த கன்றையும்,பசுவையும் அண்ணாமலையாரின் கோசாலைக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட வேண்டும்;

திங்களும் பவுர்ணமியும் வரும் நாளில் அல்லது பூசமும் திங்களும் வரும் நாளில் கிரிவலம் வருவது மிகுந்த வரங்களைத் தரும்;

21.1.2019 திங்கட்கிழமை அன்று காலை 11.08 வரை பவுர்ணமி திதி இருக்கின்றது;அன்று முழுவதும்,மற்றும் மறுநாள் விடிகாலை 3.59 வரை பூசம் நட்சத்திரம் இருக்கின்றது; 

16.6.2019 ஞாயிறு மதியம் 3 மணிக்குத் துவங்கும் பவுர்ணமி மறுநாள் 17.6.2019 திங்கள் மதியம் 2.54 வரை இருக்கின்றது;17.6.2019 திங்கள் சூரிய உதயத்தில் இருந்து மதியம் 2.54 வரை அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

11.11.2019 திங்கள் மாலை 6.46 க்கு பவுர்ணமி ஆரம்பம் ஆகின்றது;மறுநாள் சூரிய உதயம் வரை அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

10.3.2020 திங்கள் காலை சூரிய உதய நேரத்தில் இருந்து இரவு 11.36 வரை பவுர்ணமி இருக்கின்றது;

21.10.2019 திங்கள் மதியம் 2.44 முதல் பூசம் ஆரம்பமாகின்றது;மறுநாள் மதியம் 1.35 வரை பூசம் இருந்தாலும்,மறுநாள் சூரிய உதயத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்துவிட வேண்டும்;

18.11.2019 திங்கள் இரவு 9.32 வரை பூசம் இருக்கின்றது;இன்று காலை சூரிய உதயத்தில் இருந்து இரவு 9.32 க்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

இளநீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அது கோமுகம் வழியாக வரும் போது அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து,சித்த பிரம்மை,மன நோய் உள்ளவர்களை அருந்தச் செய்ய வேண்டும்; இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் மன நோய்களும்,சித்தபிரம்மையும்,காத்துகருப்பும் விலகிவிடும்;

இந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்வோம்;அளவற்ற வரங்களை பெறுவோம்;

ஓம் ஸ்ரீஅண்ணாமலை குருவே துணை

மன அடக்கத்துடன் கூடிய செல்வச் செழிப்பைத் தரும் அஸ்வாரூடா வராகி ஜபம்!!!


உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் முந்தைய பிறவிகள் நான்கில் செய்த பாவ,புண்ணியத்தினால் விளைந்த கர்மவினைகளை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளார்கள்;இதில் விலங்குகளும்,மரம் செடி கொடிகளும் அடங்கும்;

புராணங்களை வாசித்துப் பார்த்தால்,ஒரு உண்மை விளங்கும்;இந்திரன்,தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள் என்று யாராக இருந்தாலும் முறையற்ற காம இச்சையால் ரிஷியிடம் அல்லது துறவியிடம் சாபம் பெற்றிருப்பார்கள்;அல்லது நான் என்ற அகங்காரத்தினால் சாபம் பெற்று தனது பதவியை இழந்திருப்பார்கள்;

அது எப்படி தேவ உலகத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கும் நான் என்ற அகங்காரம் உண்டாகின்றது;முறையற்ற காம இச்சை தோன்றுகின்றது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை;

ஆக,பல கோடி பிறவிகளாக ஒவ்வொரு மனிதனும் சேமித்த புண்ணிய சக்திகளின் தொகுப்பாகவே ஒருவன் இந்திரப் பதவியை அடைகின்றான்;அல்லது அஷ்டதிக்கு பாலகர் என்ற பொறுப்பினை ஏற்கின்றான்;பிரம்மா என்பதும் ஒருவித பதவியே;விஷ்ணு என்பதும் ஒரு வித பதவியே;அதனால் தான் 1970 க்கு முந்தைய ஜோதிட நூல்கள்,வைத்திய நூல்கள்,ஆன்மீக வெளியீடுகளை வாசித்தால் இறைவன் என்றால் அது ஈசன் என்பதை உணரலாம்;

மஹா கணபதி உபாசனை செய்வதன் மூலமாக தடைகளை நீக்கி விடலாம்;

பைரவ உபாசனை செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகளை கரைத்துவிடலாம்;

ஸ்ரீவித்யா உபாசனை செய்து வருவதன்  மூலமாக பாவமற்ற நிலையை அடைந்துவிடலாம்;

அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக மீண்டும் இந்த பூமியில் பிறவாத முக்தியை அடைந்துவிடலாம்;


இன்றைய கலியுகத்தில் உபாசனை என்ற ஆன்மீக வழிமுறையை பின்பற்ற யாராலும் இயலாது;மனிதர்களே உட்புக முடியாத வனப்பகுதிக்குள் சிலர் உபாசனை செய்து வருகின்றார்கள்;இன்றைய ஜனத்தொகை விகிதப்படி 1 கோடியில் ஒருவருக்கு உபாசனை கைகூடும்;மற்றவர்களுக்கு உபாசனையை போதிப்பதற்குக் கூட ஆன்மீக குரு கிடைப்பதில்லை;


இங்கே யாம் தெரிவிப்பது பக்தி மார்க்கத்தில் தான்;

இறைசக்தியின் அருளை பெற நான்கு விதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்பெருமக்கள் போதித்திருக்கின்றார்கள்;

1.ராஜ யோகம் = ப்ராணயாமம்,யோகா,வாசி யோகம் மூலமாக முயற்சிப்பது

2.ஞான யோகம் = பக்தி நூல்களை வாசிப்பது,குருவின் வழிகாட்டுதல் படி செயல்படுவது

3.கர்ம யோகம் = மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த எவரும் இதைச் செயல்படுத்தலாம்;சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய கர்ம யோகம் நூல் தான் இதற்கு வழிகாட்டி;

4.பக்தி யோகம் =இன்றைய கால கட்டத்தில் இல்லறவாசிகளான நமக்கு இதுதான் ஒத்து வரும்;காவடி எடுப்பது,பாத யாத்திரை செல்வது;அன்னதானம் செய்வது;கோவில் கட்டுவது/மறு நிர்மாணம் செய்வது/சீரமைப்பது; தினசரி மந்திர ஜபம் செய்வது;ஆன்மீக முயற்சிகளை ஜோதிடத்தின் அடிப்படையில்,ஜோதிட வழிகாட்டுதலின் படி செயல்படுத்துவது;

 அஸ்வாரூடா மாலையை    தினமும் ஒருமுறையும்,ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து அல்லது இருபத்தைந்து முறையும் ஜபிக்க வேண்டும்;அஸ்வாரூடா வராகிக்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு ஜபிப்பது சிறப்பு;அந்த சமயத்தில் மனதில் அன்னையின் உருவம் தெரியும் விதமாக நினைத்துக் கொண்டே(இதற்கு பாவனை என்று பெயர்) ஜபிக்க வேண்டும்;

சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு,அஸ்வாரூடா வராகியின் அருளை சூசகமாக உணரலாம்;அதன் பிறகு தொடர்ந்து அஸ்வாரூடா மாலையை ஜபித்து வர மூன்று முதல் ஐந்து  ஆண்டுகளுக்குள் மனமானது மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையில் இருந்து முழுமையாக விலகிச் சென்றுவிடும்;


நமது ஆன்மீக லட்சியங்களை நோக்கி அதன் பின்னர் படுவேகமாக முன்னேறலாம்;



அஸ்வாரூடா மாலையையும்,அஸ்வாரூடா வராகியின் முழுமையான வழிபாட்டுமுறையையும் பெற விரும்புவோர் எம்மை நேரில் சந்திக்கவும்;

அஷ்டமச்சனியினால் ஏற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர





16.12.2017 முதல் பிப்ரவரி 2020 வரையிலும் ரிஷப ராசியினருக்கு அஷ்டமச்சனி இருக்கின்றது.

ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.


கடந்த 15 ஆண்டுகளில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால்,அஷ்டமச்சனியில் படாத பாடுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இது அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தும்.


அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லதுபைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.


இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.

அல்லது

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று வீட்டில் எழுதி வர வேண்டும்;இயலாத பட்சத்தில் 108 முறை எழுதலாம்; பிப்ரவரி 2020 வரை தினமும் எழுதி வர வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்கள் தவிர பிற நாட்களில் எழுதலாம்;




சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;கால பைரவரை யார் தொடர்ந்து வழிபடுகின்றார்களோ அதை எண்ணி மன மகிழ்ச்சி அடைபவர் சனிபகவான்;இதனால்,தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார்;

ஜன்மச்சனியின் துயரங்கள் நீங்கிட


16.12.2017 முதல் முன்றாண்டுகளுக்கு தனுசு ராசியை சனிபகவான் கடக்கிறார்இதுவே தனுசு ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.

நவக்கிரகங்களில் சனிக்கிரகத்தின் குருவாக கால பைரவர் இருக்கின்றார்;சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவரும் கால தேவன் என்ற கால பைரவப் பெருமானே!!!


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த மூன்றாண்டுகளும் துலாம் ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.

மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.



 சனிப்பிரதோஷ நாட்களில்        திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

வீட்டிலேயே தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும்; இது முடியாதவர்கள் 108 முறையாவது தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்; ஜனவரி 2020 வரை தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி நடைபெற்று வருவதால் பைரவரின் அருளைப் பெற முயற்சிப்பது அவசியம்;