Thursday, April 28, 2016

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!


சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 29.4.16 வெள்ளிக்கிழமை மாலை 5.08 முதல் 30.4.16 சனிக்கிழமை மாலை 4.07 வரை



 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

தினமும் துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவ அஷ்டகம் 33 முறை வீட்டிலேயே முறைப்படி ஜபித்துவருவதன் மூலமாக நீண்டகாலக் கடன்,நீண்டகாலமாக வராமல் இருக்கும் கடன் இவைகளைத் தீர்க்க முடியும்;கடந்த சில ஆண்டுகளில் பலர் முறைப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வீட்டிலேயே வழிபட்டு வளமான வாழ்க்கையை அடைந்துள்ளனர்;

அடுத்த தேய்பிறை அஷ்டமி:29.5.16 ஞாயிற்றுக்கிழமை (சதுர்முகி வருடம்,வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி)

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Tuesday, April 26, 2016

நமது கர்மவினைகளைப் போக்கும் தேய்பிறை பஞ்சமி ஜபம்!!!






உலகம் இன்று எதிலும் வேகம்,எங்கும் வேகம் என்று போய்க் கொண்டிருக்கின்றது;அதனால்,எந்தக் கடவுளை வழிபட்டால் பலனும் வேகமாகக் கிடைக்கும்? என்று ஏங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது;


அரசியல்,ஆன்மீகம்,தொழில்துறை,குடும்பம்,உறவுகள்,நட்பு வட்டம் என எங்கும் எதிலும் போட்டி மனப்பான்மை குறைந்து போய் பொறாமையும் அதனால் தனக்கு நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை;தன்னுடன் பழகுபவர்கள் நன்றாக வாழக் கூடாது என்ற மனோபாவம் இன்று நாடு முழுவதும்,வீடுகள் தோறும் பரவியிருக்கின்றது;


மறுபக்கம் தான் உண்டு;தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த பொறாமை எண்ணத்தை எதிர்கொள்ளத் தெரியாமல் தத்தளிக்கின்றனர்;பொறாமையின் உச்சமாக ஒருவரது வேலை/தொழிலில் இடைஞ்சல்/அவமானம்/நஷ்டத்தை உருவாக்கி ரசிக்கும் குரூர எண்ணம் ஆன்மீகத்தில் இருப்பவர்களிடமும் ஊடுருவி இருக்கின்றது;இதை அவ்வளவு சுலபத்தில் நம்மால் கண்டறிய முடியாது;


மனதால் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் தான் உண்டு,தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்பவர்களுக்கு மறுவிநாடியே பாதுகாப்பு தரும் ஒரே மஹாசக்தி அன்னை ஆதி வராகி மட்டுமே!

மனதெல்லாம் நயவஞ்சகத்தையும்,பொறாமையையும் வைத்துக் கொண்டு அன்னை ஆதி வராகிக்கு பல ஆயிரம் ரூபாய்கள் அல்லது  பல லட்ச ரூபாய்கள் செலவில் பூஜை,அபிஷேகம் செய்துவிட்டால் செய்த தவறுகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால்,அந்த கருணை மாதாவின் அருட்பார்வை கூட கிட்டாது;

பிறரின் மாந்திரீகத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு,அப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட தெரியாத அபலைகள் பின்வரும் அன்னை ஆதி வராகி என்ற மங்கள மகா காளியின் 12 பெயர்களை அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!) ஜபித்து வரவேண்டும்;





ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் மற்றும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் இந்த 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;அதிகாலையில் ஜபிக்க இயலாதவர்கள்,மதியம் 12 மணிக்குள் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஜபிக்க வேண்டும்;

இன்று 26.4.16 தேய்பிறை பஞ்சமியாக இருப்பதால்,இன்றே ஆரம்பிப்பது மிகவும் நன்று;இன்று முதல் தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;

31 வது நாளில் இருந்து காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

91 வது நாளில் இருந்து 1008 வது நாள் வரையிலும் காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து முதல் 20 நிமிடங்களுக்கு அன்னையின் 12 பெயர்களையும்,அடுத்த 20 நிமிடங்களுக்கு வராகி பரணி(வராகி மாலை/வராகி அந்தாதி)யை ஒருமுறையும் ஜபிக்க வேண்டும்;

அன்னைக்கு விருப்பமான நிறம் பச்சை;எனவே,பச்சை நிறத்துண்டின் மீது,கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஜபிக்க வேண்டும்;பச்சை நிறத்துண்டின் மீது அமர்ந்து தொடர்ந்து ஜபித்து வந்தால்,நமது வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்வதுடன்,பண வரவு அதிகரிக்கத் துவங்கும்;

தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் அன்னை ஆதிவராகியை ஜபித்து வந்தால்,எப்பேர்ப்பட்ட கர்மவினையாக இருந்தாலும் அதில் இருந்து மீட்டு நம்மை தனது குழந்தையாக பாதுகாப்பவள் அன்னை ஆதிவராகி!

இந்த உலகத்தில் எப்பேர்ப்பட்ட துஷ்டப் பிரயோகங்கள் ஒருவர் மீது ஏவப்பட்டாலும்,அதில் இருந்து மீட்டு முழுப் பாதுகாப்பு தருவது அன்னை ஆதிவராகியின் அருள் மட்டுமே!

அசைவம்,மது இவை இரண்டையும் கைவிட்டவர்களுக்கு அன்னை ஆதிவராகியின் அருள் விரைவாகக் கிட்டும்;

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்களுக்கும்,பரணி,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கும்,நிம்மதியாக நமது வேலையைப் பார்க்க மாட்டோமா? என்று ஏங்குபவர்களுக்கும் அன்னை ஆதிவராகியின் அருள் உடனடியாகக் கிட்டும்;


அன்னை ஆதிவராகியை தினமும் ஜபிப்பவர்களுக்கு சத்ரு பயம் சிறிதும் இராது;

நள்ளிரவு நேரத்தில் தனியாக நடந்து வரக்கூடிய சூழ்நிலை உண்டானாலோ,தூங்கும் போது யாராவது நம் மீது அமர்ந்து கொண்டு நம்மை அழுத்துவது போன்ற உணர்வு உண்டானாலோ ஸ்ரீவராகி,ஸ்ரீவராகி என்று நினைத்தாலே போதும்;அந்த துஷ்டசக்திகள் உடனே ஓடிவிடும்;

ஒவ்வொரு நாளும் ஸ்ரீவராகி என்றோ அல்லது வராகி சகாயம் என்று கூறி அந்த நாளை ஆரம்பிக்க வேண்டும்;அப்படிச் செய்தால் அந்த நாளின் ஒவ்வொரு செயலும் வெற்றிகள் நிரம்பியதாக மட்டுமே இருக்கும்;

தினமும் இரவுப்பொழுதில் அன்னை ஆதிவராகியின் சன்னதியில் இந்த 12 பெயர்களை ஜபிப்பது நன்று;

தமிழ்நாட்டில் அன்னை ஆதிவராகிக்கு என்று தனி சன்னதிகளும்,தனி ஆலயங்களும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன;எனவே,சிவாலயத்தில் சிவன் சன்னதியின் முன்பாக சிறிது நேரமும்,அம்பாள் சன்னதியின் முன்பாக சிறிது நேரமும்(குறைந்தது 30 நிமிடம்) ஜபித்து வரவேண்டும்;இதனால்,பலரது நீண்டகால சிக்கல்கள் சில நாட்களில் தீர்ந்திருக்கின்றன;சிலருக்கு சில வாரங்களில் தீர்ந்திருக்கின்றன;ஈசனும்,அம்பிகையும் இணைந்த ஒரே வடிவம் அன்னை ஆதிவராகியே!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ப்ருஹத் வராகியாக அருளாட்சி புரிந்து வருகிறாள்;

இராமநாதபுரம் அருகில் இருக்கும் உத்திரகோசமங்கையில் மங்கள மகாகாளி என்ற ஆதிவராகியாக அரசாட்சி புரிந்து வருகிறாள்;

காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்திற்கும் நடுவே பள்ளூரில் அரசாலை என்ற பெயரில் அருள்மழை புரிந்து வருகின்றாள்;

திருச்சி திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரியாக அன்னை வராகியே அருள்பாலித்து வருகின்றாள்;

மதுரையில் மீனாட்சியாக பாண்டிய நாட்டு மக்களுக்கு படியளந்து வருகின்றாள்;

ஒட்டு மொத்த பாரத தேசத்திற்கும் பாரதமாதாவாக இருந்து நம் அனைவரையும் பாதுகாத்து வருகின்றாள்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

Monday, April 25, 2016

வெற்றி மொழி !!!

 தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

 பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.

 நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச்செய்கின்றன.

 விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தையே வெற்றி.

 ஒருவரின் தோல்விகளின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியாது.

 ஒரு விருப்பம் ஒரு வழியை கண்டறிகின்றது.

 நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.

 ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தனது சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுபவன் அல்ல; அவன் தனக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்கிறான்.

 அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.

 “உங்கள் வாடிக்கையாளரின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்” என்பதே ஒவ்வொரு தொழிலதிபருக்குமான சிறந்த விதி.

 அதிகமாக பெறுவதற்கு, கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்.

 பெரும்பாலான மனிதர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் தோல்விகளை எதிர்கொண்டதாலேயே இறுதியில் வெற்றி பெறுகின்றார்கள்.

 நமது எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக் கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்.

 ஒரு சரியான அமைப்பு, இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவை குறைக்கும்.

உன்னால் முடியும்: நிலையான வருமானம் தந்த பெர்மாகல்சர்

சேலத்தைச் சேர்ந்தவர் அல்லி. தையல் கலைஞராக பரபரப்பாக இயங்கியவர், தற்போது பெர்மாகல்சர் என்கிற நிலையான விவசாய முறையை பரவலாக்கும் முயற்சிகள் இறங்கியுள்ளார். குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளாக பெர்மாகல்சர் தோட்டத்தை அமைத்துக் கொடுக்கும் ஆரண்யா ஆர்கானிக் பார்மிங் என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.
விவசாய குடும்ப பின்னணி என்றாலும் திருமணத்துக்கு பிறகு விவசாயத்தை விட்டு அந்நியமாகவே இருந்தேன். ஆனாலும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு முதலில் சிறிய அளவில் ஒரு தையலகம் தொடங்கினேன். அடுத்தது இரண்டு டைலர்களுடன் கடையை விரிவாக்கம் செய்து இப்போது பத்து பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறேன். ஆனால் இப்போது எனது மகளிடம் இந்த வேலைகளை விட்டு விட்டு நான் முழு நேரமாக விவசாய துறையில் இறங்கிவிட்டேன்.
ஒருமுறை எங்களது விவசாய நிலத்தில் எனது மகன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவனது காயத்தில் அங்கு சிந்திக்கிடந்த பூச்சிகொல்லி மருந்து பட்டு விட்டது. இதனால் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த அனுபவத்திலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பயிர்கள் என்றாலே பயம் ஏற்பட்டு விட்டது. அதற்கு பிறகு எங்களது தேவைக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக்கொண்டு அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாத விவசாயத்தை மேற்கொண்டோம். இயற்கை முறையிலான விவசாய பணிகளிலும் கவனம் செலுத்துகிறேன் என்றதும் எனது வீட்டினரும் பக்கபலமாக இருந்தனர்.
தையல் பணிகளைப் பார்த்துக் கொண்டே வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுக்கும் முயற்சிகளிலும் இறங்கினேன். சேலம் மாநகரில் 350க்கும் மேற்பட்ட வீடுகளில் நான் அமைத்து கொடுத்த வீட்டுத்தோட்டம் உள்ளது. இதற்கு பிறகு, இயற்கை விவசாயத்தில் வேறு முயற்சிகளில் ஈடுபடலாம் என்று யோசித்தபோதுதான் பெர்மாகல்சர் விவசாயத்தை முயற்சித்து பார்க்கலாம் என்று இறங்கினேன்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவின் சீடர் குமார் அம்பாயிரம் உதவியோடு எங்களது அரை ஏக்கர் நிலத்தில் இந்த வேலைகளில் இறங்கினோம். சாதாரணமாக இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் விளைச்சலை விட இந்த பெர்மாகல்சர் முறையில் ஐந்து மடங்கு கூடுதல் மகசூல் எடுக்க முடியும். இதற்கு நிலத்தை சரியாக மதிப்பிட்டு தொடர்ச்சியான சில அடிப்படை வேலைகளை செய்து கொள்ள வேண்டும். நீர், காற்று, சூரிய ஒளியை சரியான முறையில் பயன்படுத்தும் விவசாய முறை இது. இந்த முறையில் எங்களது நிலத்தை பண்படுத்தி நிலையான விளைச்சலை கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. இப்போது எந்த உரங்களும் இல்லாமல் விளைந்த காய்கள், கீரைகள் மற்றும் சில பழ வகைகள் எங்களது நிலத்தில் விளைகிறது.
இந்த விவசாய முறையை கேள்விப் பட்ட சென்னை போரூரைச் சேர்ந்த பிரதிமா கணேஷ்ராம் அவர்களது 5,000 சதுர அடி நிலத்தில் இதை அமைத்து தர கோரினார். அந்த வாய்ப்புக்கு பிறகு மேலும் பல இடங்களிலிருந்தும் அழைப்பு வரத் தொடங்கியது. இப்போது ஆறு புராஜக்ட்கள் முடித்துள்ளேன். இதன் மூலம் நிரந்தரமாக பத்து நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளேன். தேவைக்கு ஏற்ப கூடுதல் தொழிலாளர்களை அழைத்துக் கொள்கிறேன். இப்போது இதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவென்றால் வீடுகளில் அழகு தோட்டங்களுக்கு பதில் இந்த விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்கிறேன்.
சேலத்தில் எங்களது வீட்டுக்கு அருகில் இருக்கும் கட்டுமான நிறுவனம் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பெர்மாகல்ச்சரை அமைக்க இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. வீடு வாங்கும் மக்கள் இங்கு இயற்கையாக விளையும் கீரைகள் காய்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளனர். தவிர இந்த முறையில் 5,000 சதுர அடியில் மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்பதும் எங்களது அனுபவத்தில் நாங்கள் கண்டது. இதை தொழிலாக மேற்கொள்ள தொடங்கினால் வீட்டுத் தேவைகள், தொழில்வாய்ப்பு சுற்றுச் சூழல் என பல முனைகளிலும் நல்லது. இதற்கு பலரும் முன்வர வேண்டும் என்றார். இந்த அமைதி புரட்சிக்கு எல்லோரும் ஆதரவளிக்கலாம்.

Monday, April 18, 2016

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்

உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.


ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?


Share to Pinterest

பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)

இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)

ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.

அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.

தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.

முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!

உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)