Sunday, June 30, 2013

25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் கோமாதா இனம்!!!



 

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.

அர்க் எனும் அருமருந்து!

"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!

அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே!

தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324.                  நன்றி:www.farmingnature.blogspot.in

Thursday, June 27, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30.6.13ஞாயிற்றுக்கிழமை) வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;




பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

30.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

31.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=30.6.2013 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருக்கிறது.(ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை)ஞாயிற்றுக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=29.7.13 திங்கள் மாலை 3.57 முதல் 30.7.13 செவ்வாய் மாலை 4.28 வரை அமைந்திருக்கிறது.


ஓம் சிவசிவ ஓம்

Wednesday, June 26, 2013

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!! (அவசியமான மறுபதிவு)


கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.
இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
  விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;
20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;
29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;
15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;
25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;
11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;
21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;
22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)
9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;
19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;
4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;
15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;
30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;
13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;
14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;
30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;
9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;
6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;
22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;
5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;
21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;
1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;
12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;
இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 
ஓம்சிவசிவஓம்

Saturday, June 22, 2013

ராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வேண்டிய பைரவ வழிபாட்டு முறைகளும்!!!



விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி


விரையச்சனி காலத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும்;வருமானத்திற்கும்,செலவிற்குமான இடைவெளி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்;அவ்வாறு அலைச்சல்கள் வருவதற்கு நமது கவனக்குறைவே காரணமாக அமையும்.


ஜன்மச்சனி காலத்தில் உயிரைத் தவிர அனைத்தையும் இழக்கும்(தற்காலிகமாகத்தான்!) சூழ்நிலை படிப்படியாக உருவாகும்;சேமிப்புகள் கரைந்துவிடும்;கணவன் மனைவிக்குள் தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு பிரியவேண்டியிருக்கும்;அடிக்கடி சண்டைகள் வரும்;நிரந்தரமான பிரிவோ,நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையோ இருப்பது அரிதாக இருக்கும்;இந்த கால கட்டத்தில் சுயதொழில் துவங்கிடக் கூடாது;ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவு படுத்தாமல் இருப்பதும் அவசியம்;குருப்பெயர்ச்சி ஓரளவு நிம்மதியைத் தரும்;ஆனாலும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவோம்;நிரந்தரமான வேலை அமைவது அரிது;அலைந்து திரிந்து பார்க்கும் வேலையைத் தேர்வு செய்வது நன்று;நமது தனித்திறமை நமது மேலிடத்திற்குத் தெரியாமல்,வேறு யாரோ ஒருவர்/ள் தன்னுடையதாகக் காட்டி முன்னேறுவார்;நம்மால் எதுவுமே செய்ய முடியாது; தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தின் மீது ஆளுமைத்திறன் தாக்குதல் நடைபெறும்;அவமானத்தின் முழுப்பரிமாணத்தையும்,புறக்கணிப்பின் அர்த்தத்தையும் உணரும் சூழ்நிலை இந்தக் கால கட்டம் ஆகும்.பலர் கடனால்/நோயால்/தேவையற்ற எதிர்ப்புகளால் படாத பாடு படுவர்;எப்போதும் அகலக்கால் வைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்;

வாக்குச்சனி காலத்தில் நாம் எதைப் பேசினாலும்,அது பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்;ஜன்மச்சனிகாலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;ஒரு சிறு செயலைக் கூட ஒரே தடவையில் செய்து முடிக்க முடியாமல் 900 நாட்கள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? அதே போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தொடரும்;பண வரவு கொஞ்சம் அதிகரிக்கும்;

அஷ்டமச்சனி காலமானது ஏழரைச்சனி முடிந்த 13 வது ஆண்டில் துவங்கும்;இரண்டரை ஆண்டுகளில் ஏழரைச்சனிகாலத்தில் தந்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்;இதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.விதி விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தாது;ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணத்தில் சனி இருக்க ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் நன்மைகளை மட்டுமே செய்யும்.இவர்கள் முற்பிறவிகளில் ஸ்ரீகால பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக வழிபட்டவர்கள் ஆவர்.

ஏழரைச்சனி 26.6.2012 அன்றுடன் சிம்மராசிக்காரர்களுக்கு நிறைவடைந்தாலும்,மறுநாளே அவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவான் தந்துவிட மாட்டார்;அந்த நாளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் கழிந்தப் பின்னரே,அவரது வயது,கல்வித்தகுதி,திறமை,தனித்திறமை,பேச்சாற்றல்,யூகிக்கும் சாமர்த்தியம் இவைகளுக்குப் பொருத்தமான வேலை/தொழில் அல்லது இரண்டையும் தருவார்;

ஏழரைச்சனி காலத்தில் சாதாரண வேலை அல்லது தொழிலில் இருக்கலாம்;ஏழரை முடிந்த ஒரு வருடத்துக்குள் சிறந்த வேலையில் சேர வேண்டும்;சேமிக்கத் துவங்க வேண்டும்;தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும்;ஒரு போதும் பிறருக்குத் தீங்கு தரக் கூடாது;ஒரு போதும் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது;ஒரு போதும் தவறான வழியில் சம்பாதிக்கக் கூடாது;தவறான வழியில் சொத்து சேர்க்கக் கூடாது;தவறான வழியில் பெண்களை(ஆண்களும்)/ஆண்களை(பெண்களும்) அணுகக்கூடாது;அப்படி தவறான வழியில் செல்பவர்களுக்கு தண்டனை அஷ்டமச்சனி காலத்தில் கடுமையாக இருக்கும்;அதுவரையிலும் நம் ஒவ்வொருவரின் செயல்களும்,பேச்சும்,சிந்தனையும் நமது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் பதிவாகிவரும்;

எனவே,அடுத்த 13 ஆண்டுகளுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விதமான சனிப்பெயர்ச்சிகள் வர இருக்கின்றன என்பதை தெரிவித்துவிட்டோம்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானைச் சரணடைந்து நிம்மதியும்,பணக்கஷ்டமும் இல்லாத வாழ்வைப் பெறுவீர்களாக!!!

ஓம்சிவசிவஓம்

அனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்!!!





மூவுலகிற்கும் பயணித்துக் கொண்டே இருப்பவர் நாரதமஹரிஷி! அவருக்கு ஒரு இரும்புக்குண்டு கிடைத்தது;அந்த இரும்புக்குண்டு எந்த பத்தினிப்பெண்ணின் கையில் வைத்தாலும்,அந்த இரும்புக்குண்டு உடனே உண்ணும் பொரியாக மாறிவிடும்;எனவே,நாரதர் நேராக பிரம்மலோகத்திற்குச் சென்றார்;அந்த இரும்புக் குண்டின் மகத்துவத்தை தனது தாயான கலைவாணியிடம் கூறி,அதை அவரிடம் கொடுக்கிறார்.அந்த இரும்புக் குண்டு மாறவில்லை;
பிறகு,வைகுண்டத்திற்குச் செல்கிறார்.அங்கே,மஹாலட்சுமியிடம் அந்த இரும்புக்குண்டு பற்றிய அதிசயத்தைக் கூறியவாறு,அதை அவரிடம் கொடுக்கிறார்.இரும்புக்குண்டு மாறவில்லை;இதே போல,சிவலோகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் மலைமகள்(பார்வதி) மூலமாகவும் சோதித்து அறிகிறார்.இரும்புக் குண்டு மாறவில்லை;
முடிவாக,பூலோகம் எனப்படும் நாம் வாழ்ந்துவரும் கர்மபூமிக்கு வருகிறார்;பல ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே இருக்கும் ரிஷிபத்தினிகளிடம் விளக்கம் சொல்லி,ஒவ்வொருவரிடமும் அந்த இரும்புக் குண்டினைத் தருகிறார்,அது அப்படியே இருக்கிறது;பொரியாக மாறவில்லை;


அதேபோல,அத்திரிமகரிஷி-அனுசியா தேவி தம்பதியர் வாழ்ந்துவரும் வனப்பகுதிக்கு வருகிறார்.அனுசுயா தேவியிடமும் இந்த இரும்புக் குண்டு பற்றிய விளக்கம் சொல்லி,அவரிடமும் தருகிறார்.உடனே,அந்த இரும்புக் குண்டு,பொரியாக மாறிவிடுகிறது.அந்த பொரியை நாரதமகரிஷி சாப்பிட்டுவிட்டு,அனுசுயாவிடம் ஆசி வாங்கிவிட்டுப் போய்விடுகிறார்.
நேராக,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,வைகுண்டம்,திருக்கையிலாயம் என்ற சிவலோகத்துக்குப் பயணித்து,அனுசுயாதேவியின் கற்புத்திறத்தை விளக்குகிறார்.முப்பெரும்தேவியரான கலைமகள்,அலைமகள்,மலைமகள் மூவரும் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்கின்றனர்.தங்களுடைய கணவன்மார்களை அத்திரி மகரிஷி அனுசுயா தேவி வசிக்கும் ஆசிரமப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.எதற்காக?
தங்களை விடவும் பூலோகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தினியாக இருப்பதை இம்மூவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை;எனவே,அந்த பெண்ணின் கற்புத்திறன் சிறிதாவது பழுதடையவேண்டும்.


மும்மூர்த்திகளும்(பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்) துறவி வேடம் பூண்டு அத்திரி மகரிஷி ஆசிரமத்தை அடைகின்றனர்; அதிதி தேவோ பவ: என்ற வேதவாக்கியத்தின் படி(இதற்கு அர்த்தம்:அதிதி=விருந்தினர்;விருந்தினர் கடவுளுக்குச் சமம்)வந்திருக்கும் மூன்று துறவிகளையும் அனுசுயாதேவி வரவேற்று உபசரிக்கிறாள்.அந்த சமயத்தில்,அத்திரிமகரிஷி அங்கே இல்லை;அந்த மூன்று துறவிகளுக்கும் தலைவாழை இலை போட்டு,அறுசுவைஉணவுகளைப் பரிமாறுகிறாள் அனுசுயாதேவி.

ஆனால்,அந்த மூன்று துறவிகளும் உண்ணும் இடத்தில் அமர்ந்தார்களே தவிர,சாப்பிட ஆரம்பிக்கவில்லை;மூன்று துறவிகளுமே ஒரே குரலில் அனுசுயா தேவியிடம், “நீ உனது கையால் உணவு ஊட்ட வேண்டும்.அவ்வாறு ஊட்டினால்தான் நாங்கள் சாப்பிடுவோம்”என்று கூறிவிட,ஒருகணம் அனுசுயாதேவி திடுக்கிட்டுப்போனார்.
உடனே,சமையலறைக்குச் சென்று,தனது தனது தவ ஆற்றலால் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதையும்,அவர்கள் எதற்காக வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்கிறாள்.எனவே,தான் தவம் செய்யும் போது பயன்படுத்தும் கமண்டல நீரை எடுத்து,தனது கணவர் அத்திரிமகரிஷியை நினைத்து,அந்த மூன்று துறவிகள் மீதும் தெளிக்கிறாள்.அந்த மூவருமே ஒரு வயது குழந்தைகளாக உருமாறிவிடுகிறார்கள்.


இப்போது அந்த மூன்று குழந்தைகளுக்குமே தனது கையால் உணவு ஊட்டிவிடுகிறாள்.(நீங்கள் இந்த இடத்தில் வேறுவிதமாக படித்திருப்பீர்கள்;அதுதான் உண்மை!)
தத்தம் கணவன்மார்கள் பூமிக்குச் சென்று வெகு காலம் ஆகியும் திரும்பவில்லை என்பதை அறிந்து கலவரப்பட்ட மனதோடு கலைமகளாகிய சரஸ்வதி,அலைமகளாகிய மஹாலட்சுமி,மலைமகளாகிய பார்வதி மூவருமே அத்திரிமகரிஷி ஆஸ்ரமத்தை அடைகின்றனர்;அங்கே தமது கணவன் குழந்தையாக இருப்பது கண்டு திகைத்து,மூவருமே அனுசுயாதேவியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.அந்த கணத்தில் அந்த மும்மூர்த்திகளுமே ஒன்றிணைந்து உருவாக்கிய தெய்வமே ஸ்ரீதத்தாத்தரேயர்.


இந்த கதை புராணங்களில் வருகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில்,பொறாமை உணர்ச்சியும்,தான் என்ற அகங்காரமும்(திமிரும்) ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உண்டு;அதைக் கைவிட முறையான பயிற்சி எடுக்க வேண்டும்;


தினசரி ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீகால பைரவரை வழிபட்டு வருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வருவதாலும் நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்;குரு அருள்,திரு அருள்,சிவ அருள் கிட்டும்;அதே சமயம்,நமது மனம் கொஞ்ச காலம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்;பிறகு,நம்மைவிட ஆன்மீகத்தில் முன்னேறியவர்களைக் கண்டு பொறாமைப்படும்;நம்மை விட ஆன்மீகத்தில் பின் தங்கியிருப்பவர்களைக் கண்டு திமிர் கொள்ளும்;பேராசைக்காரனும்,பொறாமைப்பிடித்தவனும் தான் நினைத்ததைச் சாதிக்க எதையும் செய்யத் தயங்க மாட்டான் என்பது சாணக்கிய நீதி சொல்லும் சத்திய வாசகம் ஆகும்.


நமது வேலை அல்லது தொழிலைச் செய்து கொண்டே ஆன்மீக முயற்சிகளில் படிப்படியாக முன்னேறும் போது இரண்டே இரண்டு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;ஒன்று முறையான தாம்பத்தியத்தை இறைவனே அனுமதிக்கிறார்;(இல்லறமல்லாமல் துறவறம் இல்லை;என்பதன் அர்த்தம் இதுதான்!)இரண்டு=நானே பெரியவன் என்ற அகங்காரம் வராமல் நமது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்;இந்த இரண்டும் நமது ஒவ்வொரு பிறவியிலும் நம்மோடு வந்தால் அடுத்த சில பிறவிகளிலேயே காம ஆசையே இல்லாத ஞானியாக(ஸ்ரீரமணமகரிஷி/சுவாமி விவேகானந்தர்) பிறக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேறிவிடுவோம்;அவ்வாறு முன்னேறிவிட்டால்,மறுபிறவி இல்லாத முக்தியை நம்மால் எட்டிவிட முடியும்.