Thursday, November 21, 2019

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

உலக வழக்கில் பலவிதமான பழமொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன;அதற்கு உரிய அர்த்தம் நமக்கு உடனே கிடைப்பதில்லை;

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பல நூற்றாண்டுகளாக நம்மிடையே பரவிக்கொண்டு இருக்கும் பழமொழி!

பொன் என்றால் குருபகவான் என்று அர்த்தம்;
நமது கலியுக வாழ்க்கையில் அதை நமக்கு வழிகாட்டக் கூடிய குரு என்று எடுத்துக் கொள்ளலாம்;

உண்மையான,சரியான குரு ஒருவருக்கு அமைந்தாலும்,அவரது உபதேசங்கள் சீடனுக்கு கிடைத்தாலும் கூட,குருவிடம் இருக்கும் சக்தி,சீடனுக்கு அதே போல அமையாது;


குரு தனது வாழ்க்கையில் முயற்சி செய்து கிடைத்த வித்தையை தனது அனுபவமாக  சீடனுக்கு போதிக்கிறார்;அப்படி போதித்தாலும்,அதே போல சீடன் முயற்சித்தாலும்,சீடனுக்கு குருவின் அனுபவம் போல கிடைப்பதில்லை;

வித்தைகளுக்கு அதிபதி புதன்;பொன்(குரு) கிடைத்தாலும் (வித்தையின் அனுபவம் சீடனுக்கு அதே மாதிரி)புதன் கிடைக்காது;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டு வித்தை என்பதும் அடுத்த பழமொழி!!!

அட்டவீரட்டானங்களுக்கு இணையான பைரவர்கள்!!!


அட்டவீரட்டானங்களுக்கு இணையான பைரவர்கள்!!!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் அந்த அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி இயக்கிவருவது காலதேவன் என்ற மஹாகால பைரவர் ஆவார்;
பெரும்பாலான பைரவ சன்னதிகள்,நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கும்;ஏன் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,பிற உலகங்கள்(கணபதி உலகம்,முருக உலகம்,இந்திர உலகம்,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,விஷ்ணு லோகம் என்ற திருப்பாற்கடல்,சித்தர்கள் உலகம்) அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பது நடராஜரின் நடனமே ஆகும்;அந்த நடனத்தில் இருந்து காலத்தை நிர்ணயித்து,கால இயக்கத்தை நிர்வகித்து,அதன் சூட்சுமத்தின் படி மஹா கால பைரவர் இயக்கி வருகின்றார்;


108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்பவர்களுக்கு ஜோதிட ஞானம் வளரும்;காலம் பற்றிய பல சூட்சும ரகசியங்களை உணரும் வரம் கிட்டும்;


எல்லா சிவாலயங்களிலும் இருக்கும் பைரவரை சேத்திர பாலர் என்று அழைப்பது வழக்கம்;சேத்திரம் என்றால் ஆலயம் என்று பெயர்;இன்னொரு அர்த்தமும்   உண்டு;சேத்திரம் என்றால்,அந்த சிவாலயத்தில் இருந்து குறிப்பிட்ட சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவை நிர்வாகிப்பவர் என்ற அர்த்தமும் உண்டு;


பின்வரும் ஊர்களில் வசிப்பவர்கள்,அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்கு அடிக்கடி சென்று 1 மணி நேரம் வரை பைரவ ஜபம் செய்வது நன்று;

பைரவர் ஜபித்து வர தேவையான சுய கட்டுப்பாடு அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;பைரவ ஜபம் அவரது சன்னதிக்கு அருகில் அமர்ந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;சிறிது தொலைவில் கூட அமர்ந்து கொள்ளலாம்;

கோவிலுக்குள் நுழைந்ததும்,நேராக பைரவர் சன்னதிக்குச் சென்று அவரை மட்டும் ஜபித்துவிட்டு திரும்புவது மாபெரும் தவறு.

 முறைப்படி ஒவ்வொரு சன்னதியையும்  வழிபட்டுவிட்டு, நிறைவாக,கால பைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;


யாருக்கெல்லாம் தமது கர்மவினைகளை அனுபவிக்காமலேயே தீர்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கின்றதோ,அவர் பைரவரை தனது முழு முதற் கடவுளாக மனதிற்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும்;இது உபாசனை அல்ல;பக்தி மார்க்க முயற்சி மட்டுமே!


தினமும் அல்லது சனிக்கிழமைகள் அல்லது பரணி நட்சத்திர நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை 1 மணி நேரம் ஜபித்து வருவது போதுமானது;கூடவே,தெரு நாய்களுக்கு அடிக்கடி உணவு தானம் செய்ய வேண்டும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை அல்லது ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்; வாரம் ஒரு நாள் வீதம் 1008 நாட்கள் ஜபித்து வருவதால்,பைரவருடைய அருளைப் பெற முடியும்;


காகபுஜண்டர் சித்தரின் அருளால் இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


1.அருள்மிகு ஏகாம்பர நாதர் திருக்கோவில்,காஞ்சிபுரம்

2.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்.காஞ்சிபுரம்

3.அருள்மிகு ஆட்சிபுரீஸ்வரர் திருக்கோவில்,அச்சிறுப்பாக்கம்;வழி:மேல்மருவத்தூர் அருகில்

4.அருள்மிகு பெரியநாயகி சமேத பழமலைநாதர் திருக்கோவில்,விருதாச்சலம்;

5.அருள்மிகு பெரிய நாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்,திருப்பாதிரிப்புலியூர்.

6.அருள்மிகு கடந்தை நாயகி சமேத சுடர்க்கொழுந்து நாதர் திருக்கோவில்,திருத்தூங்கானை மாடம்.
வழி:திட்டக்குடி டூ விருத்தாச்சலம் சாலை

7.அருள்மிகு ராமகிரி பைரவர்;
வழி:சென்னை டூ திருப்பதி சாலை(நாகலாபுரம் வழி) சுருட்டப்பள்ளி கடந்து நாகலாபுரத்தில் இருந்து 4 கி மீ தூரம்

8.அருள்மிகு மேற்றளீஸ்வரர் திருக்கோவில்,திரு மேற்றளத் தெரு,பிள்ளையார்பாளையம்.காஞ்சிபுரம்

9.அருள்மிகு அம்புஜாட்சி சமேத வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்,திருமாணிக்குழி
வழி:பண்ருட்டி டூ திருவந்திபுரம் சாலையில் சுந்தரர்பாடி- கெடில நதிப்பாலம் வழி

10.அருள்மிகு உண்ணாமலை சமேத அண்ணாமலையார் திருக்கோவில்,திரு அண்ணாமலை

11.அருள்மிகு ஆதி அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,திரு அண்ணாமலை கிரிவலப் பாதை(வாயுலிங்கம் கடந்ததும்)

12.சிதம்பரம்

13.அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,சீர்காழி

14.அருள்மிகு பிரம்ம வித்யாநாயகி சமேத திருவெண்காட்டு நாதர்,திருவெண்காடு

15.ஆனந்த தாண்டவபுரம்(மாயவரம் அருகில்)

16.அருள்மிகு சிவலோக தியாகராஜசுவாமிகள் திருக்கோவில்,ஆச்சாள்புரம் அஞ்சல்,கொள்ளிடம்(வழி)சீர்காழி தாலுகா

17.அருள்மிகு அழகம்மை,தவக்கோலம்மை சமேத மனோக்கிய நாதசுவாமி திருக்கோவில்,திருநீலக்குடி,திருவிடைமருதூர் வட்டம்

18.அருள்மிகு தான் தோன்றீஸ்வரர் ஆலயம்,தான் தோன்றிமடம்,ஆக்கூர்.மயிலாடுதுறை வட்டம்.

19.அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்,
கோவில் மாகாளம்,பூந்தோட்டம் அஞ்சல்,நன்னிலம் தாலுகா

20.அருள்மிகு விசித்தர பாலாம்பிகை சமேத குற்றம் பொறுத்த ஈஸ்வரர் திருக்கோவில்,தலை ஞாயிறு அஞ்சல்;
இளந்தோப்பு வழி;மயிலாடுதுறை.

21.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத சிவயோகி நாத சுவாமி திருக்கோவில்,திருவிசநல்லூர்.

22.அருள்மிகு அருமருந்து நாயகி சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில்,திருந்துதேவன் குடி,திருவிசநல்லூர் அருகில்,கும்பகோணம் தாலுகா

23.அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத எழுத்தறிநாதர் திருக்கோவில்,இன்னம்பர்,
வழி:கும்பகோணம் டூ திருவையாறு சாலையில் திருப்புறம்பியம் வழிகாட்டியில் 3 கி மீ தொலைவு

24.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பூந்துருத்தி
வழி:தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூர் செல்லவேண்டும்;அங்கிருந்து 3 கி மீ

25.அருள்மிகு சிவகுகநாதர் திருக்கோவில்,சிவபுரம்,சாக்கோட்டை அஞ்சல்,கும்பகோணம்.

26.அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,சாக்கோட்டை.கும்பகோணம் தாலுகா

27.அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோவில்,திருச்சேறை.

28.அருள்மிகு சித்தநாதேஸ்வர சுவாமி திருக்கோவில்,நாச்சியார் கோவில்.
வழி:கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 8 வது கி மீ

29.அருள்மிகு நேத்திராம்பிகை சமேத முக்திபுரீஸ்வரர் திருக்கோவில்,திருப்பயற்றூர்.
வழி:திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலை

30.அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோவில்,திருச்செங்காட்டாங்குடி.
வழி:திருவாரூர் டூ திருமருகல் சாலையில் 1 கி மீ

31.அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்,திருமருகல்
வழி:திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலியில் நன்னிலம் கடக்கவும்;


32.அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சாத்தமங்கை
வழி:திருமருகல் டூ நாகூர் சாலையில் 1 கி மீ

33.அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்,நாகப்பட்டிணம்

34.அருள்மிகு கமலாம்பிகை சமேத தியாகராஜசுவாமிகள் திருக்கோவில்,திருவாரூர்,

35.அருள்மிகு அமுதவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்,திருக்களர்.திருவாரூர் மாவட்டம்.


36.அருள்மிகு நடனபாதேஸ்வரர் திருக்கோவில்,வடுவூர்
வழி:கடலூர் டூ பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பத்திற்கு வடமேற்கே 1 கி மீ

37.சேத்திரபாலபுரம்

38.அருள்மிகு தளிநாதர் திருக்கோவில்,திருப்பத்தூர்.


39.அருள்மிகு பெரியநாயகி சமேத ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோவில்,மாத்தூர்,காரைக்குடி அருகில்


40.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோவில்,இலுப்பைக்குடி


41.அருள்மிகு வடிவுடை அம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோவில்,வயிரவன் பட்டி.காரைக்குடி அருகில்


42.அருள்மிகு செண்பகாதேவி ஆலயம்,குற்றாலம்.தென்காசி மாவட்டம்.


43.அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோவில்,திருக்கோகர்ணம்
வழி:புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் 2 கி மீ


44.அருள்மிகு தான் தோன்றி நாதர் திருக்கோவில்,இடையாத்தூர் அஞ்சல்,புதுக்கோட்டை மாவட்டம்.


45.அருள்மிகு ஞானாம்பிகை சமேத பட்டீஸ்வரர் திருக்கோவில்,பட்டீஸ்வரம்.கும்பகோணம் தாலுகா.


46.அருள்மிகு பெரியநாயகி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சக்தி முற்றம்.பட்டீஸ்வரம் அருகில்


47.அருள்மிகு பங்கஜவல்லி சமேத பசுபதீஸ்வரர் திருக்கோவில்,ஆவூர்,கும்பகோணம் அருகில்.

48.அருள்மிகு மறைக்காட்டீஸ்வரர் திருக்கோவில்,வேதாரண்யம்

49.அருள்மிகு கோளிலி நாதேஸ்வரர் திருக்கோவில்,திருக்குவளை.நாகை மாவட்டம்.



மார்கழி மாதத்தின் பெருமைகளில் ஒன்று!!!


மார்கழி மாதத்தின் பெருமைகளில் ஒன்று!!!

உங்களுடைய நீண்டகால பிரச்சினை ஒன்றை தீர்க்க ஈசன் திருவுள்ளம் கொண்டிருக்கின்றார்;

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்!!!

17.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று மார்கழி மாதம் ஆரம்பமாக இருக்கின்றது;அன்று முதல் 30 நாட்களுக்கு தினமும் அதிகாலையில்(3.30 முதல் 4.30 வரை) குளித்துவிட்டு,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;

இந்த 30 நாட்களும் முதன் முதலில் உங்கள் ஊரில் இருக்கும் ஈசனை தரிசிப்பவராக நீங்கள் இருக்க வேண்டும்;(நீங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்)


இப்படிச் செய்தால்,தை 1 ஆம் நாளன்று உங்களுடைய நீண்டகாலப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துவிடும்;
கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த முதல் சிவ தரிசனம் பல கோடி மனிதர்களுக்கு பல கோடி துயரங்களை நீக்கி இருக்கின்றது;


சிவாலயத்திற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அதுவரை போனிலோ,நேரிலோ எவரிடமும் பேசக் கூடாது;


சிவாய நம,சிவசிவ,நமச்சிவாய,ஓம் நமச்சிவாய என்று எந்த ஒரு சிவ மந்திரத்தையும் ஜபிக்கலாம்;

வடக்கு அண்ணாமலையும்,தெற்கு அண்ணாமலையும்


வடக்கு அண்ணாமலையும்,தெற்கு அண்ணாமலையும்

உலகத்தில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் இணையாக இன்னொரு ஆலயம் அல்லது வேறு சில ஆலயங்களை சித்தர்களின் தவ ஆற்றலால்,ஈசனின் திருவிளையாடல் மூலமாக மன்னர்கள் உருவாக்கி உள்ளார்கள்

வடக்கு திரு அண்ணாமலையின் புகழையும்,கிரிவலத்தின் மகிமைகளையும் விவரிக்க 100 ஆண்டுகள் போதாது; இங்கே 400 ஆண்டுகளுக்கு முன்பு வல்லாள மகராஜா என்று ஒரு மன்னர் ஆட்சி புரிந்தார்;இவரிடம்   அருணாச்சலேஸ்வரர் ஏராளமான திருவிளையாடல் புரிந்துள்ளார்;இவருக்கு குழந்தை இல்லாததால்,இவருக்கு தானே மகனாகி,ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் செய்து வருகின்றார்;ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு திருவிழாவாக நடைபெற்றுவருகின்றது;

தெற்கு அண்ணாமலை என்று அழைக்கப்படுவது அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில் ஆகும்;இது கரிவலம்வந்த நல்லூர் என்ற கிராமத்தில்  அமைந்திருக்கின்றது;விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகரில்  இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சங்கரன் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கின்றது;

இங்கே இருந்து அருளாட்சி புரிந்து வரும் பால்வண்ணநாதர்,இங்கே ஆட்சி புரிந்த வரகுணப் பாண்டியன் என்ற மன்னனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் கொடுத்து வருகின்றார்;இம்மன்னனுக்கு குழந்தைகள் இல்லை; இம் மன்னனின் வேண்டுதல் படி ஒவ்வொரு ஆண்டும் ஈசனே வருடாந்திர சிரார்த்தம் செய்து வருகிறார்;

முக்தியைத் தேடுவோர் கவனத்திற்கு


முக்தியைத் தேடுவோர் கவனத்திற்கு


உங்களைப் போல,பல லட்சம் பேர்கள் முக்தி அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரே பிறவியிலேயே, அதாவது இந்த ஒரு பிறவியோடு முக்தி அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது;


அந்த ஆசைக்குக் காரணம்,அந்ந்ந்த அளவுக்கு இப்பிறவியில் இன்று வரையிலும் அவர்களுடைய தினசரி வாழ்க்கை சோகங்கள்,அவமானங்கள்,சிக்கல்கள் நிரம்பியதாக இருக்கின்றன;


நாம் ஒவ்வொருவருமே குறையே இல்லாதவர்கள் என்று எண்ணினால் அது தவறு;சில பல குறைகள் ஒவ்வொரு ஆணுக்கும்,ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு.


நாம் வாழ்ந்து வரும் ஊரில் இன்றும் கல்விச் செருக்கு,செல்வச் செருக்கு,வித்தை கர்வம் என்று பலவிதமான சுபாவங்களுடன் பலர் வாழ்ந்து வருகின்றார்கள்;

கல்விச் செருக்கு என்றால்,நாம் படித்த படிப்பினால் நம்மைப் பற்றி உயர்வாக நினைப்பது;பிறரை மட்டமாக நினைப்பது,பேசுவது,பழகுவது.

செல்வச் செருக்கு என்றால் செல்வ வளத்தினால் பிறரை விடவும்  நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடனே எல்லோரிடமும் பழகுவது;தன்னைவிட அதிக செல்வ வளம் உள்ளவர்களைப் பார்த்து மனதுக்குள் கருவிக் கொண்டே இருப்பது;

வித்யா கர்வம் என்றால் தனித் திறமையால் வருவது!!!கார் ஓட்டச் சொல்லித் தருவது,ஓவியம் வரைவது,அழகுக் கலையால் சம்பாதிப்பது,கணிதம் டியூஷன் சொல்லித் தருவது;


ஆனால்,இந்த கல்வி,இந்த செல்வ வளம்,இந்த வித்யா திறமை போன 7 பிறவிகளுக்குள் சேமித்த புண்ணியம்,இறை வழிபாடு போன்றவைகளால் தான் இந்த பிறவியில் கிடைத்தது என்பது  பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை;


ரொம்பவும் தீவிரமான முயற்சி எடுத்தால்,அந்த முயற்சியை சுமார் 5 முதல் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்தால்,போன 4 பிறவிகளில் செய்த அட்டூழியங்களின் விளைவுகளை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம் என்பதை கண்டுபிடிக்க முடியும்;


திருந்த வேண்டும்;மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி யாருக்கு உண்டாகிறதோ,அவரே அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வார்;

குரு,சிஷ்ய பரம்பரை கிட்டத் தட்ட நாம் வாழ்ந்து வரும் ஆண்டிராய்டு யுகத்தில் அருகி,குறுகி காணாமல் போய்விட்டது;உண்மையான குரு வேண்டும் என்று எண்ணுவோரும்,திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணமுள்ளோரும் அதற்கு சரியான முயற்சி “திரு அண்ணாமலை கிரிவலம்” தான் என்பதைப் புரிந்து கொள்வார்கள்;


மாதம் இருமுறை வீதம்,இரண்டு ஆண்டுகளில் 108 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்துவிட்டால்,உண்மையான ஆன்மீக குருவை நமக்கு அண்ணாமலையாரே அடையாளம் காட்டுவார்;


முதல் 10 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வது தான் மிகவும் கடினமாக இருக்கும்;அதுவரை நமது முற்பிறவி கர்மவினைகள் தடுத்துக் கொண்டே இருக்கும்;

மாதம் இரண்டு முறை வீதம்,அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் என்று ஒரு ஆண்டில் 24 முறை கிரிவலம் சென்றுவிடலாம்;இதில் முதல் ஆறு மாதங்கள் வரை,(12 முறை) கிரிவலம் செல்லும் போது மட்டும் மிகுந்த மனப் போராட்டம்,பொருளாதாரப் போராட்டம் இருக்கும்;அதன் பிறகு,அண்ணாமலையாரின் அருள் பார்வைக்குள் வந்துவிடுவோம்;


விழுப்புரம் அருகில் இருக்கும் அண்ணாமலையே உண்மையான திருவண்ணாமலை! அங்கே செல்வது மட்டுமே உண்மையான கிரிவலம் ஆகும்;


முதல் 10 முறை கிரிவலம் செல்லும் போது,நமது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களைப் போலவே தான் திரு அண்ணாமலையும் தெரியும்;அங்கே நமது பயண அனுபவம் மிகவும் சராசரியாகவே இருக்கும்;

அது ஒரு மாவட்டத் தலைநகரம்! 

சென்னையில் இருந்தும்,பெங்களூரில் இருந்தும் வெறும் 4 டூ 6 மணி நேரத்தில் வந்துவிடலாம்;கலியுகத்தின் எல்லாவிதமான சராசரி சம்பவங்களும் இங்கும் நிகழ்வதை நேரில் பார்க்கலாம்;ஆனால்,உண்மையான ஆன்மீகம் இங்கே தான் மறைவாக இருக்கின்றது.

அந்த ஆன்மீக சூட்சும உலகத்தை உணர வேண்டுமானால்,50 முதல் 75 முறை அண்ணாமலை கிரிவலம் சென்ற பிறகே சிறிது சிறிதாக அருணாச்சலேஸ்வரர் உணர்த்த ஆரம்பிப்பார்;

108 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் போது,முக்தியை அடையும் மார்க்கத்தையும் புரிய வைத்துவிடுவார்;

Sunday, November 10, 2019

ராம நாம கீர்த்தனைக்கு ஒரு ஆஸ்ரமம்!!!


ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது;முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்;அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!

அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்;உணவும் கிடைக்கும்;இலவசமாக! தனியாக செல்லலாம்;தம்பதியாகச் செல்லலாம்;நண்பர்களாகச் செல்லலாம்;
ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;

இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால்,இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக,நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்;அதுவும் சரியாகிவிடும்;ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்)இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;ராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்;தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்; 

இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;



அந்த ராம நாம கீர்த்தனை:


ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது;உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;

ஆனந்த ஆஸ்ரமம்,காஞ்சன்கோடு,கேரளா;

04672 209477 & 203036 (காலை 9 முதல் 1 வரை= தமிழில் விளக்கம் கிடைக்கும்)

தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் வடக்கு கேரளாவில் அமைந்திருக்கின்றது;


ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     கார்த்திகை  மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 19.11.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.50  20.11.2019 புதன்கிழமை காலை 11.41 வரை (மஹா கால பைரவப் பெருமானின் பிறந்த நாள் இதுதான்!)

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;


செவ்வாய்க்கிழமை இராகு காலம்:மதியம் 3 முதல் 4.30 வரை; 

புதன்கிழமை குளிகை காலம்:காலை 10.30 முதல் 12 வரை;



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

ஓம்,ஸ்ரீம்,ஹ்ரீம்,க்லீம்,ஐம்,க்ராம்,க்லீம்,க்லூம்,ஹ்ராம்

ஹ்ரீம்,ஹ்ரூம்,குரு குரு,ஆபதுத்தோரணாய,அஜாமிள

பந்தனாய,ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய

த்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

அல்லது

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 19.12.2019 வியாழன்   !!!

லிங்கமும் லிங்கனும்




லிங்கமும் லிங்கனும்

ஒரு சமயம் பத்திரிகையில்(தினத்தந்தி பெங்களூர் பதிப்பு) ஆயுத பூஜை தின சிறப்பு மலருக்கு விளம்பரம் கொடுத்திருந்தோம்.அதைப் படித்துவிட்டு ஒரு நபர் வந்திருந்தார்;
அவர் பெயரை கூறினர் லிங்கன் என்றது என் காதில் லிங்கம் என்று கேட்டுவிட்டது.நான் வரை அப்படியே அழைத்தேன்;


பழகுவதற்கும் மரியாதைக்கும் உரியவராக நடந்துகொண்டார்.அவருடைய தொழில் பற்றியும்,வருமானம் பற்றியும் கேட்க வந்திருந்தார்;அதற்குண்டான பதிலும்,வழிமுறையும் கூறினேன்;அதனால்  அவர் நல்ல நிலைக்கு வந்தார்;என் மீதும்,மஹான் ஆத்மா மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

அவர் பிறகு எத்தனையோ முறை வரும்போதெல்லாம் தன்னுடைய பெயரை ஆப்ரஹாம் லிங்கன் என்று கூறியும் நான் ஆரம்பத்தில்   இருந்து லிங்கம் என்று அழைத்துப் பழகிப் போனதால்,நான் அவ்வாறே அழைத்துக் கொண்டிருந்தேன்.பூஜை சாமானும் பழங்களும் வாங்கித் தருவது இவருக்கு வாடிக்கை.

நான் பேசுவதை எவ்வளவு பொறுமையாக கேட்க முடியுமோ அவ்வளவு பொறுமையாக கேட்பார்.வேற்று மதம் என்று நம் ஹிந்து கடவுள்களை வணங்குவது தவறு என்ற எண்ணமெல்லாம் அவரிடம் இல்லை.இப்படிப்பட்டவர்கள் இங்கு அவ்வளவாக யாரும் இல்லை.

நான் மஹான் ஆத்மாவிடம் பேசும் போது கேட்டேன்.லிங்கன் எப்படி இந்த குணம் உடையவராக உள்ளார் என்று.ஏனெனில் இங்குள்ளவரும் சரி அல்லது வேறு சிலரும் சரி(கிறிஸ்தவர்கள்) தங்கள் மதத்தை உயர்வாக கருதுவர்.பிற மதத்தை ஏற்றுக் கொள்வதில்லை.அதனால் நான் அவ்வாறு மஹானிடம் கேட்டேன்.

"நீ லிங்கனை லிங்கம் என்று அழைக்கும் போதெல்லாம் நீ வழிபடும் சிவபெருமானை (லிங்கம்) நினைத்துக் கொள்கிறாய்.சில சமயங்களில் பெயருக்கேற்றவாறு அவர்கள் நடந்துகொள்வார்கள்.உதாரணத்திற்கு உன் பெயர் போல் நீ மாறிவிட்டாய் அல்லவா அது போல" என்றார் மஹான்.

நான் இந்துவாக உள்ளேன்.பரசுராம் என்ற என் பெயருக்கு ஏற்றபடி நான் குருவாகவும் ஆன்மீகவாதியாகவும் மாறி பொது சேவை செய்வேன் என்பதை முன்னமே மஹான் ஆவிப் பெரியவர் கூறியுள்ளார்.அதை நான் கட்டுரையாகவும் எழுதியுள்ளேன்(இரண்டு வருடங்களுக்கு முன்)

ஆனால்,லிங்கன் நம் இறைவனை ஏற்று வழிபடும் இந்து அல்ல.அதோடு கிறிஸ்துவர்கள் நம் இந்து கடவுள்களை பழிப்பார்கள்;ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.அப்படிப்பட்ட கிறிஸ்தவ நபர் லிங்கன் எப்படி பெயருக்கேற்றவாறு மாறுவார் என்று நான் மஹான் ஆவிப் பெரியவரிடம் வாதாடினேன்.

என் வாதத்திற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.அது என்னவென்றால்,தற்போது இந்துக்களாக இருந்து கிறிஸ்துவாக மாறி இருந்தால்,ஒரு வேளை முன்னமே நம் தெய்வங்களை வணங்கிய பழக்கம் காரணமாக பக்தி ஏற்பட்டு மாற வழி உண்டாகலாம். ஆனால்,லிங்கனோ  காலம் காலமாக தாத்தா,தந்தை என்று மூதாதையர்களே கிறிஸ்துவர்கள் என்பது தான். எனக்கு இவர் எப்படி மாறுவார் என்று ஒரு யோசனை ஏற்பட்டது.

அப்போது மஹான் கூறினார். “நீ வேண்டுமானால் சிறிது நாட்களில் அவர் மாறி வழிபடுவதுமல்லாமல் பூஜை சாமான் பிரசாதம் எல்லாவற்றிற்கும் வழி செய்வார்.அவரே கொண்டு வந்து கொடுப்பார்”

இந்த பேச்சை என்னால் முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஏனென்றால்,பைபிளில் விக்ரஹத்தை வழிபடுவதோ பிரசாதங்களை உண்பதோ பாவம் என்று கூறியுள்ளதை சிலர் கூறக் கேட்டுள்ளேன்.என்னிடம் வரும் எத்தனையோ கிறிஸ்துவர்கள் கற்பூர ஆரத்தி காட்டும் போது வணங்குவதில்லை.விபூதியை தொடவோ இட்டுக் கொள்ளவோ சம்மதிப்பதில்லை என்பதை நான் கண்டுள்ளேன்.இப்படி இருக்கும் போது லிங்கன் எப்படி மாறுவார் என்பது எனக்கு சந்தேகமாக இருந்தது.

நான் சொன்னால் நீ ஏற்க மறுக்கிறாய்.ஆனால்,காலம் மாறும் போது அப்போது இந்த விஷயம் பற்றி கூறி நீ சந்தோஷம் படத்தான் போகிறாய் என்று ஆவி மஹான் கூறினார்.இதைப் பற்றி நாளடைவில் நான் மறந்துவிட்டேன்.எப்போதாகிலும் பிரச்சனை இருக்கும் போது லிங்கன் வருவார்;பிறகு சென்ற பின் போன் செய்து நன்றி தெரிவிப்பார்.

ஒரு முறை லிங்கன் வரும் போது நான் வில்வ இலை பறித்துக் கொண்டு இருந்தேன்.இது என்ன இலை? இது எதற்காக பறிக்கிறீர்கள்? இதில் அதிக முள் உள்ளதே என்று கேட்டார்.இதன் பெயர் வில்வ இலை இதை லிங்க வழிபாட்டிற்கு பயன்படுத்துவேன்.இந்த இலையை சிவலிங்கத்தின் மேல் போட்டால் பல பாவங்கள் போகும்.ஆயிரம் தங்கப் பூவிற்குச் சமம் என்று கூறினேன்.அவர் ஆச்சரியப்பட்டார்;

இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இன்னும் நிறைய விஷயம் உள்ளது என்றேன்.என்னென்ன? என்று கேட்டார் லிங்கன்.ஒரு வில்வ இலையை லிங்கத்தின் மீது அர்ச்சித்தால்,பல  ஏரி,குளங்கள் வெட்டிய புண்ணியமாகும்; பல ஏழ்மையானவர்களுக்கு திருமணம் செய்த புண்ணியமும் கிட்டும் என்று நான் அடுக்கடுக்காக வில்வ இலையின் மகத்துவத்தைப் பற்றி கூறினேன்.

நம் இந்துக்கள் இந்த தகவல்களை ஏற்றுக் கொள்வர்.ஏனெனில் சிவபுராணத்தில் இந்த விஷயங்கள் உள்ளதை படித்திருப்பீர்கள்.ஆனால்,மற்ற மதத்தவர்கள் இதையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை.இந்த சாதாரண இலையில் இவ்வளவு பலன்கள் இருக்க வாய்ப்பில்லை என்று சிலர் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.அப்படித்தான் லிங்கனும் கூறுவார் என்று எதிர்பார்த்தேன்.

லிங்கன் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து பேசினார்.இந்த வில்வ இலை வழிபாட்டை நான் கூட செய்யலாமா? என்று கேட்டார்.அதோடுல்லாமல் இதற்காக நான் மதம் மாற வேண்டுமா? என்றும் கேட்டார்.ஏனெனில், அவர்கள் (கிறிஸ்துவர்) மதத்தில் மதம் மாறினால் தான் இறைவனை வழிபட முடியும்.அப்போது தான் நம் வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொள்வார் என்பது அவர்களின் கருத்து.

மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.சிவனை நினைத்தாலே அவர் சந்தோசப்படுவார்.அவர் பெயரை உச்சரித்தாலோ வேண்டினாலோ சிவன் வேண்டியதைத் தருவார் என்று பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) கூறினேன்.நீங்கள் இவ்வாறெல்லாம் வழிபட ஆரம்பித்தால் சகல பாக்கியங்களும் நில புலன்களும் கூட கிடைக்கும் என்றூ கூறினேன்.இவர் என்ன செய்யவா போகிறார் என்ற எண்ணத்துடன்!

லிங்கன் ஒரு லிங்கம் வேண்டும் கிடைக்குமா? என்று கேட்டார்.மாத இதழ்கள் வாங்கும் போது உடன் அன்பளிப்பாக கிடைத்த சில லிங்கங்கள் என்னிடம் இருந்தன.அவற்றில் ஒன்றை கொடுத்தேன்.அவர் பெற்றுக் கொண்டார்.அந்த நேரத்தில் எனக்கும் வில்வ இலை தட்டுப்பாடு இருந்தது.நான்கே நான்கு குச்சிகள் 40 ரூபாய்.அதைப் பறித்தால் 20,30 இலைகள் கூட கிடைக்காது. 

என் அருகில் இருந்த வில்வ மரத்தையெல்லாம் வெட்டிவிட்டு அங்கெல்லாம் கட்டிடம் கட்டிவிட்டிருந்தனர்.இஷ்டம் போல் மரத்தில் பறித்துக் கொண்டிருந்த எனக்கு பணம் அதிகமாக கொடுத்து வாங்குவது கஷ்டமாக இருந்தது.அப்போது தனக்கும் கொஞ்சம் இலை கொடுங்கள் என்று லிங்கன் கேட்டார்.அவருக்கும் சிறிது கொடுத்துவிட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

எனக்கே வில்வ இலைக்கு கஷ்டம் வந்துவிட்டது.இதில் இவர் வேறு புதியதாக கேட்கிறாரே என்று தான் என் மைண்ட் வாய்ஸை கவனித்தாரோ என்னவோ லிங்கன், “ஐயா,இந்த இலையை நான் கொண்டு வந்து தந்தால்,நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றும் கேட்டார். 

காடழிந்து மரங்கள் எல்லாம் அழிந்ததுடன் வில்வ மரங்களும் வெட்டப்பட்டு நானே இந்த கொஞ்சம் இலைகளுக்கு பாடாய்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.இருந்த கொஞ்சம் இலையிலும் லிங்கன் கொஞ்சம் வாங்கிக் கொண்டதால் ஏன் தான் இவருக்கு வில்வ இலையைப் பற்றிக் கூறினோமோ என்று நினைத்த போது நிறைய இலைகள் தருகிறேன் என்றால் லட்டு தின்ன ஆசை தான் என்பது போல் தோன்றியது எனக்கு.


"கொண்டு வாங்க புண்ணியம் உண்டு" என்று கூறினேன்.ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வந்தார் லிங்கன்.இரண்டு கோணிப்பைகளில் இலைகளை பறித்து வந்திருந்தார்.நான்  அதைப்பார்த்து வியந்து போனேன்.எனக்கு கோடிக்கணக்கில் பணம் வந்திருந்தால் கூட அவ்வளவு சந்தோசம் ஏற்பட்டிருக்காது.அளவிலா சந்தோசம் ஏற்பட்டது.அதைப் பார்த்து லிங்கனும் ஆச்சரியப்பட்டார்."இவ்வளவு இலை எப்படி கிடைத்தது.மரத்தையே மொட்டை அடித்துவிட்டீர்களா?" என்று கேட்டேன்.


“இல்லை ஐயா,நான் போகும் கோல்ப் மைதானத்தில் பெரிய வில்வ மரம் இருந்தது.அங்குள்ள தோட்ட வேலை செய்பவர் மூலம் பறித்தேன்.அது சரி,இந்த இலைக்கு இவ்வளவு சந்தோசப்பட்டீர்களே! அது போதும்!” என்றும் சொன்னார்.

எனக்கு ஒரு மாதம் பிரச்சினை தீர்ந்ததே.பணமோ,அரிசி,பருப்போ சாப்பாடு பிரச்சினையைக் கூட சமாளித்துவிடுவேன்.யாரோ கொடுத்து விடுவார்கள்.ஆனால்,இந்த வில்வ இலை கிடைப்பது மிகச் சிரமம் என்று கூறினேன்.

அப்போது மஹான் பேசினார்.  “பார்த்தாயா உனக்கு இலை கிடைப்பது கஷ்டம்! ஆனால்,இவருக்கோ சுலபம்!! அதுபோலத் தான் இந்த காலத்தில் இடம் வாங்குவதோ,கிடைப்பதோ அரிது! மிகக் கஷ்டம்!! விலை அதிகம் என்று கூறினாய்!!!ஆனால்,இவர் செய்யும் பூஜைக்கு நிறைய இடமும் நிலமும் லிங்கனுக்கு கிடைக்கப் போவதை நீ பிறகு அறியப் போகிறாய்!!!” 


இந்த விஷயத்தை நான் லிங்கனிடம் கூறவில்லை.வில்வ இலை கொண்டு வந்து கொடுத்ததற்கு ஏதோ கதை விடுகிறார் என்று அவர் நினைக்கக்கூடாது என்று தான்.சிறிது நாட்கள் கழித்து லிங்கன் வந்தார்.

“ஐயா சிவபூஜை செய்த பின் மன நிம்மதி ஏற்பட்டது.பிறகு 15 ஏக்கர் நிலமும் கிடைத்தது” என்றார்.என்னால் நம்ப முடியவில்லை;பிரமித்துப் போனேன்.

அந்த இடத்தை காண்பிப்பதற்காக என்னை அழைத்தார்.நான் புறப்பட்டு உடன் சென்றேன்.விலை உயர்ந்த கார்! அதில் அழைத்துப் போனார்.அவர் என்னிடம் வரும் போதெல்லாம் கார் சாவிகளை தன் பேண்ட்டின் பெல்ட் பட்டியில் சொருகி கொண்டிருப்பார்.அதைப் பற்றி நான் கேட்கலாம் என்று நினைப்பேன்.ஏனோ இங்கிதம் கருதி கேட்கவில்லை. 

நகரத்தில் இருந்து 30 கி.மீ.தொலைவில் இங்கு நந்திமலை என்ற சுற்றுலாத்தலம் உள்ளது.உயர்ந்த ரம்மியமான இடம் அந்த இடத்தில் நிலங்களின் விலை அதிகம்.அந்த இடத்தில் நிலம் வாங்குவது கடினம்.அப்படிப்பட்ட இடத்தில் இவ்வளவு நிலம் எப்படி வாங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.யாரோடதோ என்று நான் நினைப்பதை லிங்கன் புரிந்து கொண்டார் போலும்!

காரைத் திறந்து நிலத்தின் பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்தார்.அவர் பெயரில் தான் நிலம் இருந்தது. ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று அவரைக் கேட்டேன். ‘நான் கார் டிரைவர்’ என்றார்.கார் டிரைவர்கள் சம்பாதிக்கும் சம்பளத்தில் வீடு வாடகைக்கும் சாப்பிடுவதற்கே சரியாக இருக்கும்.எப்படி நிலம் வாங்கினார்? என்று யோசித்தேன்.

மஹான் கூறினார்: “லிங்கன்  லிங்கத்தை வணங்கி பூஜிக்க எல்லாமும் கிடைத்தது” என்றார்.எப்படி என்று எப்போதுமே மஹானைத் தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
சிவபூஜை செய்ய சகல செளபாக்கியங்களும் கிட்டும் எனும் போது இது எம்மாத்திரம் என்றார் மஹான். நான் லிங்கனை எப்படி கேட்கலாம் என்று யோசித்தேன்.

“என் சம்பளமும் கூட்டியுள்ளார்கள்.இப்போது என் ஓனரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது.என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்றார் லிங்கன்.இந்த பதிலில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை.நிலம் பற்றி கூற மாட்டாரா என்று தான்.இந்த நிலம் பல கோடி பெருமானம் உள்ளதல்லவா? இது பற்றி என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்த்தேன்.

“நீ கூட இந்த சிவபூஜை செய்து சகல வசதி வாய்ப்புகளையும் அடைய நான் உதவ வில்லையா?” என்று மஹான் ஆவி கூறினார்.அதுவும் உண்மைதான்.அதனால்,லிங்கன் செய்த பூஜைக்கு சிவன் மனம் நெகிழ்ந்து இந்த நிலபுலன் வசதிகள் ஏற்பட வழிவகுத்தது எவ்வாறு என்பதை மஹான் கூறினார்.

லிங்கனின் முதலாளி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். துபாய்,சிங்கப்பூர்,கனடா போன்ற எல்லா வெளிநாடுகளிலும் அவருக்கு கம்பெனிகள்    உள்ளன.ஆனால்,அவரின் வீடும் அடுக்கு மாடி கட்டிடங்களும் பெங்களூரில் இருக்கின்றன.அவர் வரும் போது மட்டுமே எங்களுக்கு கார் ஓட்டுவது மற்ற நேரங்களில் இவர் தான் முதலாளி என்ற நிலை;

இந்த சமயத்தில் தான் இவன் (லிங்கன்) சிவபூஜை செய்தால் வசதி வாய்ப்புகள் உண்டாகும் என்று மஹான் கூறிய நேரம் பல மாற்றங்களை மஹான் மூலம் அனுபவித்த லிங்கன் இந்த வழிபாட்டை பக்தியுடன் செய்ய இந்த நிலபுலன் வசதி ஏற்பட்டுள்ளது.வெளியூர் வாசிகள் இங்கு நிலபுலன் வாங்க முடியாது.அப்படி ஒரு சட்டம் உண்டு.அப்போது தான் இந்த  நிலங்களை லிங்கன்முதலாளி  லிங்கன் பெயரில் வாங்கியுள்ளதை மஹான் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட நகரங்களில் ஒரு அடி மண் வாங்க வேண்டுமாயின் பல லட்சங்கள் வேண்டும் என்று நிலைமை.லிங்கனின் விசுவாசமான சிவபூஜைக்கு ஈசனின்   அருளால் கிடைத்திருக்கின்றது.


இதுபோன்றே இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு படிக்கும் மாணவன் எனக்கு கஷ்ட காலத்தில் வில்வ இலை பறித்துக் கொடுத்து நல்ல பதவி உயர்வு என்ற அந்தஸ்தை அடைந்ததை 2015 ஆம் ஆண்டு கட்டுரையில் தெரிவித்தேன்;


வில்வ இலை மகத்துவமானது! அதனால்,லிங்கனுக்கு ஏற்பட்ட மாற்றம் போலவே அடுத்த கட்டுரையிலும் தொடர்ந்து ஒரு வாழ்க்கை அமைந்ததையும் தெரிவிக்கிறேன்.வணக்கம்,நன்றி! மஹானுக்கும் உங்களுக்கும் தான்;வாழ்க வையகம்!!!


அனுபவம்:திருமுருகன் ஆன்மீக மையம்,திரு.மீடியம் அ.பரசுராம்,

பெங்களூரு மாரத்தஹள்ளி,

(கிளை விழுப்புரம் அருகில்)

செல் எண்கள்:98451 65327/98849 97383


நன்றி:ஆவிகள் உலகம்,பக்கம்29,30,31,32,33;

வெளியீடு நவம்பர் 2019