Sunday, May 22, 2011

ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?


நாம் வாழ்ந்து வரும் காலம் கலிகாலம்.கலி என்றாலே துன்பம் தானே!எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.

நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.

நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.

தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.

அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.

ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.

எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.



நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.

இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.

இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.

முயலுவோமா?

நமது ஆசை நிறைவேற எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?






மஞ்சள்விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.நெற்றியில் விபூதி(திருநீறு) பூசிக்கொண்டோமா? என்பதை பார்த்துக்கொள்ளவும்.செல்போன்,டிவி,காலிங் பெல் இவற்றை மவுனமாக்கிக் கொள்ள வேண்டும்.(அல்லது அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முந்திய ஒரு மணிநேரம் வரையிலும் எந்த தொந்தரவும் இராது)

முதலில் ஓம் (உங்களின் குலதெய்வத்தின் பெயர்) நமக

அடுத்து ஓம் கணபதியே நமக

அடுத்து ஓம் (உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயர்) நமக என வரிசையாக மனதுக்குள்,உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.

இப்போது உங்களின் நியாயமான ஆசை என்ன வென்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

(சில உதாரணங்களைப் பார்ப்போம்:இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்

நான் விரும்பும் படிப்பில் கவுன்சிலிங்கில் சேர வேண்டும்

எனது இப்போதைய மாத வருமானம் ரூ.15,000/-இது ரூ.45,000/-ஆக உயர வேண்டும்.

எனது நோய் விரைவில் தீர வேண்டும்

எனது பிரிந்த தம்பி என்னிடம் வந்து பேச வேண்டும்

எனது 2 லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும்

எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க வேண்டும்

என உங்களுக்கு விருப்பமான,நியாயமான,யாருக்கும் தீங்கு தராத ஒரு கோரிக்கையை நினைத்துக்கொள்ளவும்.ஒரு முறை நினைத்தால் போதுமானது)

பிறகு,ஓம்சிவசிவஓம் ; ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபித்து வர வேண்டும்.

சிலருக்கு 10 நாளுக்குள் பலன் கிடைக்கத் துவங்கும்;சிலருக்கு 45 நாளாகலாம்;சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்;சிலருக்கு ஓரிரு வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஓம்சிவசிவஓம்

Wednesday, May 18, 2011

சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்கப் பயிற்சி





நீங்கள் கம்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட் ஒர்க்கிங்கில் ஓரிரு ஆண்டுகளாவது அனுபவம் உள்ளவரா?

சைபர் க்ரைம் பற்றிய படிப்புகளை இங்கே காணலாம்.நீங்கள் விரும்பியதைப் படிக்கலாம்.

உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ் மீடியத்தில் சேர்க்க வேண்டும்?





உலகில் எந்த குழந்தையும் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்(ஐந்து வயது முதல் பத்து வயது வரை) தாய்மொழிக்கல்வியிலேயே கற்றால் மட்டுமே மொழித்திறனும்,படைப்புத்திறனும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை.

இன்றைய நிலவரப்படி எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது இங்கிலீஷ்மீடியம் பள்ளி எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலோ நமது குழந்தையைப் படிக்க வைப்பது நன்று.

ஆனால்,நடைமுறையில் நமது தருமம் மிகு தமிழ்நாட்டில் இருப்பது என்ன?

3 வயதிலேயே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.தாய்மொழியாம் தமிழே தெரியாத ஒரு இனம் உலகில் உருவாகிவிட்டது எனில் அது நமது தமிழ்நாடாகத் தான் இருக்கமுடியும்.விளைவு?

படிக்கும் வயதில் பள்ளியிலும்,வீட்டிலும் தரப்படும் தொல்லைகளால் ஏராளமான தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி,வலிப்பு நோய் மாநிலமயமாகிவிட்டது.இதை எங்கள் ஊர் குழந்தை சிறப்பு மருத்துவர் சொன்னது.ஆனால்,கொந்தளிக்கும் நிஜம்.(எனவே,எனதருமை தமிழ்ப்பெற்றோர்களே,உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக்கேட்கிறேன்.உங்கள் குழந்தையை தமிழ் வழிக்கல்வியில் சேருங்கள்)

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்? எம்புள்ள இங்கிலீஷ் மீடியம் படிக்கிறது என பீற்றிக்கொள்கிறோம்.

இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்துபவர்களின் பின்னணி பணம் பண்ணுவது மட்டுமே.இம்மாதிரியான பள்ளிகளின் ஆசிரியர்களில் எத்தனை பேர்கள் தகுதி வாய்ந்தவர்கள்?வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்கள் சம்பளத்துக்கு வரும் ஆசிரியைகளின் கோபங்கள் பிஞ்சுகளை அடிக்கவும்,உதைக்கவுமே!!

உங்கள் குழந்தையின் படைப்புத்திறனையும்,சிந்திக்கும் திறனையும்,தன்னம்பிக்கையையும் நீங்கள் நாசமாக்குகிறீர்கள்.அப்படி நாசமாக்குவதை ஒரு மரபாக ஆக்கிய பெருமை தமிழறிஞர் டாக்டரைச் சேரும்.

இதிலும் பணம் சம்பாதிக்க வழி செய்த இவரா தமிழறிஞர்?புதிய சமுதாயப்பிரச்னையை உருவாக்கி,தமிழினத்தின் தரத்தை சிதைத்துவிட்ட இவரா முத்தமிழ்க்காவலர்?

Sunday, May 15, 2011

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சி








ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.



இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.



மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.



ஆன்மீகக் கடல் வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்


புத்தகம் வாசிப்பது என்பது இலக்கில்லாத மிக நீண்ட பயணம்;யார் தனது பள்ளிப்பருவத்தில் தினமும் செய்தித்தாள் வாசிக்கிறார்களோ,அவரே கல்லூரிப்பருவம் மற்றும் அதன்பிறகும் வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமையாவார்;அறிவே சக்தி என்ற கிரேக்க ஞானியின் கருத்து இந்த தகவல்யுகத்திற்கு மிகவும் பொருந்தும்.

நேற்று தினகரன் தினசரியில் ஒரு செய்தியை வாசித்தேன்.அது எனது மனதை மிகவும் பாதித்தது.கேரளாவில் ஒரு தம்பதி!கணவன் தனக்குப் பிடித்த நடிகையின் போட்டோவை தனது செல்போனின் முகப்பில் வைத்திருந்தான்;அதைப் பார்த்த மனைவி,அந்த நடிகையின் போட்டோ தனது கணவனின் கள்ளக்காதலி என நம்பி தற்கொலை செய்துகொண்டாள்.

இந்த செய்தியில் இரண்டு உண்மைகள் தெரிகின்றன.ஒன்று,அந்த மனைவிக்கு உலக நடப்பு பற்றிய அடிப்படை ஞானமில்லை;இரண்டு எந்தக் கணவனாவது தனது கள்ளக்காதலியை செல்போனில் எல்லோரும் பார்க்கும்விதமாக வைத்திருப்பானா? என சிந்திக்கவில்லை;மூன்று தனது கணவனிடம் யார் இவள்?என்று கேட்கவில்லை

இதன் மூலமாக அந்த மனைவி சிந்திக்கத் தெரியாதவள் என்பது புலனாகிறது.தினமும் எதையாவது படித்தால் தானே சிந்திக்கும் சுபாவம் வளரும்?

ஆக,வேர்களைப் பலப்படுத்திட,ஏற்கனவே பதிவிட்ட ஒன்றை சிறு மாற்றங்களுடன் மீண்டும் வெளியிடுகிறேன்.

யாரிடம் எப்படிப் பேசுவது? எங்கே எவ்வாறு நடந்து கொள்வது? என்பது பற்றி பலருக்குத் தெரியாமைக்குக் காரணமே வாசிக்கும் பழக்கம் இல்லாமையே!

இந்தப் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை இதில் சொல்லப்பட்டுள்ள வரிசைப்படி வாசிக்கவேண்டும்.ஒவ்வொரு புத்தகத்தையும் ஆறு மாதங்கள் வரையிலும் அடிக்கடி திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் நீங்கள் மன வருத்தத்தில் இருக்கிறீர்களோ,அப்போது முதல் புத்தகத்தை வாசிக்கவும்.ஓராண்டு கழிந்தபிறகு,உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சுக்கு உள்ளார்த்தம் என்ன? அவர்கள் ஏன் அப்படிப் பேசுகின்றனர்? என்பது உங்களுக்குப் புரியும்.

சில புத்தகங்கள் நாவல்கள்,புதினங்கள்,வரலாற்று உண்மையை விவரிக்கும் கதைகளாக இருக்கும்.அவற்றை எப்போதும் எப்படியும் வாசிக்கலாம்.

1.எண்ணங்கள் / எம்.எஸ்.உதயமூர்த்தி=வானதி பதிப்பகம்

2.கர்மயோகம் /சுவாமி விவேகானந்தர்=ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் வெளியீடு

3.வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்/ ஜேம்ஸ் ஆலன்

4.வந்தார்கள்;வென்றார்கள்/மதன்=விகடன் பிரசுரம் வெளியீடு

5.மனம் தரும் பணம்/நெப்போலியன்ஹில்=கண்ணதாசன் பதிப்பகம்

6.விழிமின்;எழுமின்/சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திர வெளியீடு(அங்கு மட்டுமே கிடைக்கும்)

7.விலை ராணி/சாண்டில்யன்=வானதி பதிப்பகம்

8.ஆழ்மனதின் சக்திகள்=கண்ணதாசன் பதிப்பகம்

9.மனோசக்தி மாத இதழ்,சென்னையிலிருந்து உலகெங்கும் வெளிவருகிறது

10.தேசப்பிரிவினையின் சோக வரலாறு/ஹெ.வே.ஷேசாத்ரி

11.பாரதத்தின் விஞ்ஞானச் சாதனைகள்/இராம.கோபாலன்

12.என்று காண்போம் எங்கள் சிந்துவை/கேப்டன் எஸ்.பி.குட்டி

13.முன்கதைச் சுருக்கம்/பாலகுமாரன் அவர்களின் சுயசரிதை

14.ஓம்சக்தியும் அணுசக்தியும்

15.ஏழை படும்பாடு/விக்டர் ஹ்யூகோ/தமிழில் சுத்தானந்த பாரதியார்

16.நான் ஏன் நாத்திகனானேன்?/தந்தைப் பெரியார்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்

18.நாதுராம் விநாயக் கோட்சே/இஜட்.ஒய்.ஹிம்சாகர்=குமரிப் பதிப்பகம்

19.எப்படி ஜெயித்தார்கள்?சில மார்க்கெட்டிங் சாகசங்கள்/ரமேஷ் பிரபா

20.மனசே,ரிலாக்ஸ் ப்ளீஸ்/சுவாமி சுகபோதானந்தா=விகடன் பிரசுரம் வெளியீடு

21.அர்த்த சாஸ்திரம்

22.சதுரகிரி ஸ்தல புராணம்=தாமரை நூலகம்

23.ஞான கங்கை /குருஜி=சக்தி புத்தக நிலையம்

24.அர்த்தமுள்ள இந்துமதம் 18 பாகங்கள்/கண்ணதாசன்

25.கூடு/பாலகுமாரன்

26.கோட்டைப்புரத்து வீடு/இந்திரா சவுந்தரராஜன்

27.அடுத்த நூற்றாண்டு/சுஜாதா



சண்முகக் கவசம்;மின் அஞ்சலில் அனுப்பிய வாசகருக்கு நன்றிகள்


Saturday, May 14, 2011

சென்னை அடையாறில் ஒரு தமிழ்பண்பாட்டை வெளிப்படுத்தும் கடை





ழ கஃபே என்ற பெயரில் அருள் அரசி என்பவர் சென்னை அடையாறில் நடத்திவருகிறார்.இங்கே பதநீர்,இளநீர்,கோலி சோடா முதலான சுதேசி பானங்களுடன்,தமிழ்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்லாங்குழி(?!),மண்பானைக்குள் வைக்கப்பட்ட ஸ்பீக்கர் போன்றவை உண்டு.ஆனால்,வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மட்டும் கிடையாது.

இதற்கு சகோதரி அருள் அரசி சொல்லும் கருத்து:மல்டி நேஷனல் கம்பெனிகளின் நம்மூர் நிறுவனங்களைக் கபளீகரம் பண்ணி,மார்க்கெட்ல ஆதிக்கம் செலுத்தறத ஏத்துக்க முடியாது;இந்த பானங்களை விற்பதைத் தவிர்க்குறது மூலமா எங்களோட சின்ன எதிர்ப்பைக் காட்டுறோம்.இதில் மட்டும் நாங்க சமரசம் செய்யவே மாட்டோம்

தமிழினத் தலைவர் என சொல்லிக்கொள்ளுபவர்கள் செய்ய வேண்டிய தேச சேவையை ஒரு சாதாரண அருள் அரசி,சாப்ட்வேர் என் ஜினியர் செய்வதை நினைத்து,ஆன்மீகக்கடல் இவரைப் போற்றுகிறது.

நன்றி:குமுதம்,18.5.2011 பக்கம் 94,95,96.



டைரக்டர் கே.வி.ஆனந்த் நம்ம ஆளு





சினிமாவுல பணிபுரியணும்கிற ஆர்வத்துல வர்ற இளைஞர்களுக்கு நான் சொல்றது இதுதான்.

‘இவன் நல்லா சம்பாதிக்கிறாண்டா. . . புகழ்,பெருமை கிடைச்சிருக்கு’னு சினிமாவுக்கு வராதீங்க.நிறைய புத்தகங்கள் படிங்க;இண்டர்நெட் பாருங்க;உங்களுக்குப் புடிச்சதைச் செய்யுங்க.அதற்கான படிப்புகளைப் படிங்க;சினிமாவுக்கான பயிற்சி படிப்புகளைப் படிங்க;இப்போ அதிகமா இருக்கு;



ஊர்ல இருந்து மஞ்சள்பையை வைச்சுக்கிட்டு பஸ் ஏறி இங்கே வந்து டைரக்ஷன் பண்ண முடியாது;படிங்க;வாசிப்பு ரொம்ப முக்கியம்;அதுதான் நம்மை வளர்த்தெடுக்கும்.உங்களை சினிமாவுக்கு மட்டுமல்ல;நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் தயார் படுத்தும்.

பணம்,புகழுக்கு மட்டும் ஆசைப்பட்டு வந்தா சாதிக்க முடியாது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் போன் எண்கள்:



தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால்,மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்யலாம்.தொலைபேசி எண்கள்:

044- 24615989, 24615949,24954142, 24615929.



மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்,சி.பி.ஐ.க்கு புகார் செய்யலாம்.தமிழ்நாட்டில் சி.பி.ஐ.யின் தொலை பேசி எண்கள்:

044 28255899, 28273186, 28270992

வைகாசி விசாகத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்






எதிர்வரும் 16.5.2011 திங்களும்,17.5.2011 செவ்வாயும் பவுர்ணமி திதி வருகிறது.திங்கள் மாலை முதல் செவ்வாய் மாலை சுமார் 5 மணி வரையிலும் வைகாசி பவுர்ணமி வருவதால்,16.5.11 திங்கள் இரவுதான் பவுர்ணமி என கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர,இந்த வைகாசி மாதம் இரண்டு பவுர்ணமிகள் வருகின்றன.ஆமாம்.வைகாசி மாதத்தின் இறுதியிலும் ஒரு பவுர்ணமி வருகிறது.ஆனால்,அது விசாக நட்சத்திரத்தில் வரவில்லை;கேட்டை நட்சத்திரத்தில் வருகிறது.எனவே,முதல் பௌர்ணமியே வைகாசி விசாகம்.

பவுர்ணமியன்று ஏதாவது ஒரு அம்மன் சன்னதியில் இரவு 9 மணி முதல் 12 மணி வரை அமர்ந்து,(பகலில் முடிந்தால் எதுவும் சாப்பிடாமல் இருந்து)அல்லது ஒரு மணி நேரமாவது ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது ஒவ்வொரு ஓம்சிவசிவஓம் ஜபமும் ஒரு கோடி தடவை ஜபிப்பததற்கான பலனை நமக்குத் தரும்;

கூடவே,இரண்டு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து ஜபிப்பதால்,ஒரு ஓம்சிவசிவஓம் ஜபம்,100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலனைத் தரும்.

இருந்தும்,ஏன் நமது நியாயமான கோரிக்கை அல்லது ஆசை விரைவில் நிறைவேறுவதில்லை?

நாம் குறைந்தது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களை/கர்மங்களை இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம்.புண்ணியத்தையும் தான்.இதில் பாவ அல்லது கர்மக்கணக்கு அதிகமாக இருப்பதால் கஷ்டப்படுகிறோம்.இந்த கர்மக்கணக்கினை கரைக்க கலியுகத்தில் இறைநாம ஜபமே ஏற்றது.சுலபமானது;எளியது;

தவிர,நமது கர்மத்தை நாம் மட்டுமே கரைக்க முடியும்;வேறு யாராலும் கரைக்க முடியாது!!!

எனவே, நமது ஓம்சிவசிவஓம் மந்திரஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்ட வேண்டும்;ஒரு நாளுக்கு இரண்டு வேளை வீதம்,ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் என ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,நாம் ஒரு நாளுக்கு 400 முறையே ஓம்சிவசிவஓம் ஜபித்திருப்போம்.(எண்ணிப்பார்த்தாலும் சரி,எண்ணிப்பார்க்காமல் இருந்தாலும் சரி)

நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் ஜப எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியதும்,சிறு சிறு அதிசயங்களை நாம் உணரத்துவங்குவோம்;

இதை உணர்ந்த ஓம்சிவசிவஓம் வலைப்பூ வாசகர்கள்,தங்களின் அனுபவங்களை எழுதியனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஓம்சிவசிவஓம்

Friday, May 13, 2011

நேருவுக்குப் புரியாத ராணுவ நம்பிக்கை





இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது உறுதியானவுடன்,இந்திய ராணுவத் தலைமைத் தளபதியைத் தேர்வு செய்வதற்காக நேரு தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப்பின்,நேரு சொன்னார்:

“ஆங்கில அதிகாரி ஒருவரிடம்,இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம்.ஏனென்றால்,நம்மவர்களுக்கு,ராணுவத்தை நடத்திச் செல்வதற்குப் போதுமான அனுபவம் கிடையாது”என்றார்.கூட்டத்திற்கு வந்த அனைவரும்,இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால்,ஒரு ராணுவ அதிகாரி மட்டும், “ஐயா,ஒரு வேண்டுகோள்”என நேருவிடம் கூறிவிட்டு,

“இந்த நாட்டை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்குக் கூட நம்மவர்களுக்குப் போதுமான அனுபவங்கள் இல்லை.ஆகையால்,நம் இந்தியாவின் முதல் பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்துவிடலாமா?” என உறுதியான குரலில் கேட்டார்.

கூட்டத்தில் அதிர்ச்சியும்,அமைதியும் நிலவியது.நேரு வழக்கத்துக்கு மாறாக கோபப் படாமல்,

“இந்தியாவின் ராணுவத்தின் தலைமைத் தளபதிப் பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”எனக் கேட்டார்.

ஆனால்,அந்த ராணுவ அதிகாரியோ, “எனக்கு வேண்டாம்.எங்கள் உயர் அதிகாரியாகிய லெப்டிணெண்ட் ஜெனரல் கரியப்பா தான் இந்தப் பொறுப்புக்கும்,இங்குள்ளவர்களுக்கும் பொருத்தமானவர்”என்றார்.

பிரதமரின் கருத்துக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர் லெப்டிணெண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர்.சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டிணெண்ட் ஜெனரல்!!!

00000000000000000000000000000000000000000000000

சைபர் தேசம்:


பெர்ட்ராண்டு ரஸ்ஸல் என்பவர், “சைபர் நாட்டிலிருந்து வருகிற உங்களை வரவேற்கிறேன்” என்றதும்,ஆடிப்போனார் ஜவஹர்லால் நேரு.

உடனே, ‘என்ன இது,ஒன்றுமில்லா தேசத்தில் இருந்து வருவதாகச் சொல்கிறாரே’ என அவருக்குக் குழப்பம்.

அவரது இந்த எண்ணத்தை முகக்குறிப்பால் உணர்ந்த பெர்ட்ராண்டு ரஸ்ஸல், “கணித அறிவியலில் மிகப்பெரிய மேதைகளைக் கொண்டது உங்களுடைய பாரத நாடு.சைபர் என்னும் பூஜ்ஜியம் எண்ணைக் கண்டுபிடித்து,உலகுக்கு வழங்கிய நாடால்லவா உங்கள் பாரதம்! அந்தப் பெருமையை நினைவுபடுத்தும் விதமாகத் தான் அப்படிச் சொன்னேன்” விளக்கினார்.அதன் பிறகே,நேரு அமைதியடைந்தார்

Wednesday, May 11, 2011

வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.



அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.அது மட்டுமல்ல தேங்காய்,வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு,கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.பழம் கொட்டை என்பது கிடையாது.



அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

சொன்னவர்:வாதவூரான்,சமய சொற்பொழிவாளர்

Tuesday, May 10, 2011

புற்றுநோய் தடுப்பு மருந்துக்கு அமெரிக்க காப்புரிமை வாங்கியிருக்கும் இந்துதர்ம ஆய்வு அமைப்பு




பசுவின் மூத்திரமாகிய கோமயத்திலிருந்து பெறப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்தை கோ விஞ்ஞான் அனுசந்த்ன் கேந்த்ராக் கண்டுபிடித்திருக்கிறது.இம்மருந்தின் உயிரியல் குணத்திற்காக அமெரிக்கக் காப்புரிமைபெற்றிருக்கிறது.

காமதேனு அர்க் என்ற வணிகப்பெயர் சூட்டப்பட்ட மருந்து கோ விஞ்ஞான் அனுசந்தன் கேந்திராவும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையமும் இணைந்து இந்த ஆய்வு செய்து கண்டுபிடித்ததாகும்.

கோமயத்திலிருந்து காய்ச்சி வடிக்கப்பட்ட இந்த மருந்து மனித உடலின் டி.என்.ஏ.செல்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடியதாகும்.

அதனுடைய நோய்த் தடுப்பு வீரியத் தன்மையின் அடிப்படையில் அதற்கு மூன்றாவது அமெரிக்கக் காப்புரிமைபெறப்பட்டுள்ளது.

செம்மொழிமாநாட்டில் கிடைத்த அரிய தகவல்






ஜார்ஜ் ஹார்ட் என்ற அயல்நாட்டுத் தமிழறிஞர் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் சொன்னது:

பண்பாட்டில் சிறந்தது பாரதம்.தத்துவச் செறிவால் உயர்ந்தது இந்து தர்மம்.இலக்கியச் செழுமையால் உயர்ந்தது தமிழ் மொழி

(*எனதருமை தமிழ் ஹீமோகுளோபின்களே!நம்மில் எத்தனை பேருக்கு திருக்குறள் தெரியும்? எத்தனை பேர்களின் வீட்டில் திருமந்திரம் இருக்கிறது?எத்தனை பேர்களிடம் திருப்பாவை,திருவெம்பாவை ரிங் டோனாக இருக்கிறது?)

சனிதோஷம் நீக்கும் முருகக் கடவுள்:இராமநாதபுரம்




சனிபகவானின் தோஷத்தினால் வாழ்வே வெறுத்துப்போயிருப்பர் சிலர்.உதாரணமாக இந்த 2011 முடியும் வரையிலும் கன்னிராசிக்கு ஜன்மச்சனியும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருகிறது.2012 ஜனவரி முதல் மீனராசிக்கு அஷ்டமச்சனியும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும் கடகராசிக்கு அரை அஷ்டமச்சனியும் நடைபெற இருக்கிறது.

இவர்கள் ராமநாதபுரம் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் வழிவிடும் முருகன் கோவிலுக்குச் செல்வது அவசியமாகும்.இந்த கோவிலில் சனிபகவானின் தாயாராகிய சாயாதேவி மரமாக இருக்கிறாள்.இந்த மரத்தை “சாயாமரம்” என்றே அழைக்கின்றனர்.இங்குவந்து சாயாமரத்தை வழிபடும் பக்தர்களுக்கு சனி தோஷம் உடனே விலகிவிடும்.ஏனெனில்,சனிபகவான் தனது தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு,தனது கெடுபலன்களைக் குறைத்துக்கொள்வதாக ஐதீகம்.

இதே வழிபாடு இலங்கை கதிர்காமம் முருகன் கோவிலிலும் இருக்கிறது.



இந்துதர்மம் பட்ட சிரமங்களை அறிய உதவும் புத்தகங்கள்





1.வானம் வசப்படும்=எழுதியவர் பிரபஞ்சன்(சாகித்ய அகாடமி விருது பெற்றது.தினமணியின் ஞாயிறு இணைப்பான தினமணிச்சுடரில் தொடராக வெளிவந்தது)

2.வந்தார்கள்,வென்றார்கள்=எழுதியவர் மதன்,விகடன் பிரசுரம் வெளியீடு

3.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்ரி,

சக்தி புத்தக நிலையம்,1,எம்.வி.தெரு,சேத்துப்பட்டு,சென்னை-31.

4.என்று காண்போம் எங்கள் சிந்துவை?=எழுதியவர் கேப்டன் எஸ்.பி.குட்டி

5.ஸ்ரீரங்கன் உலா

6.கோவா வரலாறு

7.மருது பாண்டியர் வாழ்க்கை வரலாறு=மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக வெளியீடு

8.வீரபாண்டியக் கட்ட பொம்மன் கதை

9.நாதுராம் விநாயக் கோட்சே=எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்,தமிழில் வெளியீடு:குமரிப் பதிப்பகம்,8,நீலா தெற்கு வீதி,நாகப்பட்டிணம்.

10.Lecters from Columbo to Almora=Swami Vivekananada

11.விவேகானந்தர் பாறை:நினைவுச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திர வெளியீடு

12.விழிமின்;எழுமின்;=வெளியீடு விவேகானந்த கேந்திரம்,விவேகானந்த புரம்,கன்னியாக்குமரி.

13.நான் நேசிக்கும் இந்தியா=எழுதியவர் ஓஷோ

14.விநாயக தாமோதர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு

15.இந்தியாவின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்

இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம்





ஒரு தேசபக்த கிறிஸ்தவப் பாதிரியார் சொன்னது:இந்தியாவில் இருக்கும் 85% இந்துக்களை மதம்மாற்ற வந்திருக்கும் மொத்த வெளிநாட்டுப்பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

இந்துக்கள் அனைவரும் ஒரே நாளில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிட எவ்வளவு செலவாகுமோ,அதை விட மூன்று மடங்கு பணம் வந்திருக்கிறது.

நாம் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை;இந்தியாவின் ஆத்மாவைச் சிதைப்பவர்களுக்கு ஆதரவு தராமலிருந்தால் போதும்.அதற்கு நாம் செய்ய வேண்டியது:

1.பெப்ஸி,கோக்,மிரிண்டா,செவன் அப்,மாஸா முதலான பன்னாட்டு கிறிஸ்தவக் குளிர்பானங்களை அருந்தாமலிருப்பது

2.கிறிஸ்தவ வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் விஜய் டிவி,பத்திரிகைகளை படிக்காமலிருப்பது

3.சோனியா இந்தியாவிலிருக்கும் வரை காங்கிரஸீக்கு வாக்களிக்காமலிருப்பது

4.ராகுலின் கத்துக்குட்டி அரசியலில் மயங்காமலிருப்பது

5.இந்துக்கோவில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது திமுக,அதிமுக பிரமுகர்களின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்வது.

6.இந்து தர்மத்தினை வளர்க்கும் அமைப்புக்களுக்கு பண உதவி,ஆத்மார்த்த உதவி அடிக்கடி செய்வது.

7.இந்து தர்மத்தினை நக்கலடிக்கும் நாத்திகவாதிகளை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவது.

8.இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. . . விரைவில்!

Monday, May 9, 2011

பாம்பன்சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தின் மகிமை

முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;




பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று(17.5.2011 செவ்வாய்க்கிழமை)பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.





Saturday, May 7, 2011

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2011






மிதுனத்திலிருந்து ரிஷபத்திற்கு கேதுபகவானும்,

தனுசிலிருந்து விருச்சிகத்திற்கு ராகு பகவானும் பெயர்ச்சி ஆகின்றனர்.இவர்கள் இந்த ராசியில் தலா 18 மாதங்கள் இருப்பர்.

இந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ரிஷபராசியினரும்,விருச்சிக ராசியினரும் ஒரு முறையாவது காமரீதியில் அவமானப்பட வேண்டியிருக்கும்.அல்லது காவல் நிலையம் செல்ல வேண்டியிருக்கும்.

இதற்கு ஒரே பரிகாரம்:தினமும் ஏதாவது உக்கிர பெண் தெய்வத்தை வழிபட்டு வர வேண்டும்.அல்லது குல தெய்வத்தை வழிபட்டு வர வேண்டும் அல்லது மனவளக்கலையில் அகத்தாய்வு முடித்திருக்க வேண்டும்.அப்படி முடித்திருந்தாலும் தினமும் மனவளக்கலை தியானம் செய்து வர வேண்டும் அல்லது ஏதாவது ஒரு தியானப் பயிற்சியில் ஈடுபட்டு,அதில் குறிப்பிட்ட நிலையை எட்டியிருக்க வேண்டும்.

தவிர,மேஷ ராசியினர்,துலாம் ராசியினர் புறங்கூறுவது,பிறரது அந்தரங்க விஷயங்களைப் பேசாமலிருப்பது கட்டாயம்.எச்சரிக்கை.!!!

குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2011




மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருப் பெயர்ச்சி ஆகிறார்.வாக்கிய கணித,திருக்கணித வேறுபாடுகள் இருந்தாலும் இந்த மே 2011 முதல் மே 2012 வரை குருபகவான் மேஷராசியைக் கடக்கிறார்.

இந்த குருப்பெயர்ச்சியால்,மீனம்,ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு ராசிக்காரர்கள் அதிகபட்சமான நன்மைகளைப் பெறுவர்.



கும்பம்,மேஷம்,கடகம் ராசியினர் ஓரளவு நன்மைகளைப் பெறுவர்.

கன்னி,மகரம்,விருச்சிகம் ராசியினர் சிறிதளவு மட்டுமே நன்மைகளைப் பெறுவர்.

6,12,18,24,30,36,42,48,54,60 என ஆறின் மடங்குகளில் வயதைக் கொண்டவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.மேலும் விபரமறிய உங்களின் பிறந்த ஜாதகத்தை எமக்கு அனுப்பவும்.

ஓம்சிவசிவஓம்

கேள்வி:நடிகர் சிவக்குமார் ‘இலக்கியம்,ஆரோக்கியம்,இல்லறம்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கு ஆற்றிய உரையை தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்களே,பார்த்தீர்களா?உங்கள் கருத்து என்ன?




பதில்: ஸ்லோ பாய்சனாக இந்துக்கலாச்சாரத்திற்கு வேட்டு வைப்பதையே குறிக்கோளாக செயல்படும் கிறிஸ்தவ டிவி விஜய் டிவி,சிவக்குமாரின் நிகழ்ச்சி மூலமாக பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது.சிவக்குமாரின் கருத்துக்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.குறிப்பாக,வேலைக்குச் சென்ற பெண்கள் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும்;குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்பது.



ஆன்மீகக் கடலின் கருத்து:அவ்வப்போது சித்தர்களைப் பற்றியும் விஜய் டிவி ஒளிபரப்பி நல்ல சேனலாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது.ஆனால்,இந்தியாவில் எப்போது எப்படி சித்தர்களின் ஆட்சி துவங்க இருக்கிறது? என்பதைக் கண்டறிய கிறிஸ்தவ தலைமையகத்தின் மத உளவாளிகள் விஜய் டிவியில் பணிபுரிகின்றார்கள் என நான் சந்தேகப்படுகிறேன்.

எண்டோசல்பான் விளைவுகளை ஸ்லோ பாய்சனிங் ஆஃப் இந்ஹ்டியா என்ற ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது.இப்படத்தில்,குறைபாடு உடைய குழந்தைகளைப் பார்த்தால்,சமூக உணர்வுடைய மனிதரால் தூங்க முடியாது.அவ்வளவு பாதிப்புகளை எண்டோசல்பான் ஏற்படுத்தி உள்ளது.பார்க்க:www.video.google.com/videoplay?docid=&6926416900837431283#

இந்தியாவை நேசிக்கும் எழுத்தாளர்,கவிஞர்,கட்டுரையாசிரியர்களுக்கு ஒரு அறிவிப்பு



இளம்பத்திரிகையாளர்களுக்கான இதழியல் பயிற்சி முகாம்

இடம்:சென்னை,தேதி:மே 27,28,29 மூன்று நாட்கள்.

தகுதி:எழுத்தார்வம் இருப்பவர்கள்,வயது:20 முதல் 35க்குள்.

கட்டணம்:ரூ.200/-உணவு ஏற்பாடு உண்டு.

வெளியூர்க்காரர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு உண்டு.

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதி பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்:

விஜயபாரதம்,12,எம்.வி.நாயுடு தெரு,சேத்துப்பட்டு,சென்னை-31.தொலைபேசி:044-28362271.

சுதேசி கேள்வி பதில்:மே 2011




கேள்வி;வரி ஏய்ப்பாளர் ஹஸன் அலிக்கு பாஸ்போர்ட்டுக்கு பரிந்துரைத்ததற்காக பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது பற்றி?

பதில்:

காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர் இவர்.பெரும் ஊழல் செய்தாலோ,பெரும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தாலோதான் பெரும் பதவி காங்கிரசால் வழங்கப்படும்.இக்பால் குற்றவாளியே!



கேள்வி:அன்னா ஹசாரியின் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை;ரெலேகான் சித்தியில் அன்னா ஹசாரே செய்தது சாதனையா? என கல்கியில் ஞாநி எழுதியுள்ளாரே!



பதில்:முன்னே போனால் கடிக்கும்;பின்னே போனால் உதைக்கும் இனத்தைச் சேர்ந்தவர் போலும்! அப்துல்கலாமையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.ஆனால்,கார்கில் போர் நேரத்தில் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஜால்ரா அடித்தார்.தெளிவாக எழுதும் கலை அறிந்த தெளிவற்ற “அஞ்ஞானி”.



கேள்வி:ஊழலை ஒழிக்க ஆதரவு கேட்டு அன்னாஹசாரே சோனியாவிற்கு கடிதம் எழுதுகிறார்.ஊழலை ஒழிக்க ராகுல்காந்திக்கு கடிதம் எழுதுகிறார் கிருஷ்ண ஐயர்.ஏதாவது புரிகிறதா?

பதில்:ஓ! ஊழலின் ஊற்றுக்கண் இவர்கள்.இவர்களுக்கு தலையாட்டுபவர் பிரதமர் மன்மோகன்.எனவே,தஞ்சாவூர் பொம்மைக்கு எழுதாமல் உயிருள்ள ஜீவனுக்கு,காரணகர்த்தாக்கள் எவர் என அறிந்து எழுதியுள்ளனர் என்று புரிகிறது.

சுயமரியாதைச் சிங்கம்தான் மன்மோகன்!



கேள்வி:தகவல் அறியும் உரிமையின் சட்டத்தின் கீழ் சோனியாவின் மதத்தைச் சொல்ல முடியாது.அது தனி நபர் சுதந்திரம் என்று கூறியிருக்கிறதே உச்சநீதிமன்றம்?

பதில்:பொதுவாழ்வில் இருக்கும் ஒருவர் பற்றிய முக்கியத் தகவலை கோடானுகோடி மக்கள் விரும்பும் தகவலை மறைத்து வாழ்வது சோனியா & ராகுல்களின் அயோக்கியத்தனம்.காங்கிரஸ்,கம்யூனிஸ்டு எனும் சுயமரியாதையற்ற அடிமைகள் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

Tuesday, May 3, 2011

பின்லேடன் மரணமும் இந்திய ஓட்டு வங்கி அரசியலும்







ஒருவழியாக அமெரிக்கா,பின்லேடனைப் பழிவாங்கிவிட்டது.ஆமாம்! நான்காவது முறையாக பின்லேடனைக் கொன்றுவிட்டது.இது நிஜமா? என்பதை காலம் பதில் சொல்லும்.

2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் நுழைந்து,அமெரிக்காவிலேயே விமானம் ஓட்டப் பழகி அமெரிக்காவின் இரட்டை மாடிக் கட்டிடம்,அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன்,மற்றும் சில இடங்களில் விமானத்தாக்குதல் நடத்தியவர் ஒசாமா பின்லேடன் குழுவினர்.

பின்லேடன் செய்தது தீவிரவாதம்தான்.இந்தியாவாகிய நாமே கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானின் காஷ்மீர் பேராசைக்கு பல்லாயிரம் இந்திய ராணுவ வீரர்களையும்,கணக்கற்ற காஷ்மீர் மக்களையும்(முஸ்லீம்களையும்) பலி கொடுத்திருக்கிறோம்.இந்தியப் பிரதமர்கள் அனைவருமே உலகப் போலீஸ்காரன் அமெரிக்காவிடம் பாகிஸ்தானின் தொல்லை தாங்க முடியலை என கெஞ்சியும் அமெரிக்காவின் காதில் விழவில்லை;காஷ்மீர் இந்துக்களாகிய பண்டிட்கள் டெல்லியில் அகதிகளாக வாழ்ந்து வருவது பற்றி அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸீக்கு சிறிதும் கவலையில்லை;முஸ்லீம்கள் ஓட்டு பற்றித்தான் கவலை;அமெரிக்காவுக்கோ பாகிஸ்தானின் ஆதரவு இருந்தால் ஒரே நேரத்தில் சீனாவையும்,இந்தியாவையும் தட்டி வைக்கலாம் என்ற பேராசை.எனவே, நமது கோரிக்கையை காதில் போட்டுக் கொள்வதே கிடையாது.



ஒரே ஒரு முறை ஒரே ஒரு பின்லேடன்,அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்தியதும், உலக தீவிரவாதம் என பத்திரிகைகளில் பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.(அடிவாங்குவதையுமா பில்ட் அப் செய்வது? ஓ! அமெரிக்கா உலக வல்லரசு இல்லையா?)



அமெரிக்காவின் மீதும் தவறு உண்டு என்பதை யாருமே உணருவதில்லை;இஸ்லாமியர்களின் புனித நூலான திரு குர் ஆனை கழிவறையில் கிழித்து வீசுவதை இன்றும் ஒரு கடமையாகவே அமெரிக்க ராணுவம் செய்துவருகிறது.உலகத்தை கி.பி.3000க்குள் கத்தோலிக்க மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டத்தின் இயக்குநர் வாடிகன்.செயல் இயக்குநர் அமெரிக்காவும்,இங்கிலாந்தும்.

பத்தாண்டுகள் ஆனாலும்,அடிபட்ட புலியாக கத்தோலிக்க அமெரிக்கா, இஸ்லாமிய பின்லேடனைப் பழிவாங்கிவிட்டது.எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் கட்சி இந்த சம்பவத்திலிருந்து மட்டும் பாடம் கற்றுக்கொள்ளாது.(ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசு உபதேசத்தை இந்தியாவும்,எதிரிகள் உனது ரத்த உறவுகளாக இருந்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டு;அப்போதுதான் உனக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்பதை அமெரிக்காவும் பின்பற்றுகிறது)

உலகின் பிரம்மாண்டமான ஜனநாயக நாட்டின் முக்கிய அமைப்பு இந்தியப் பாராளுமன்றம்.இந்த மதிப்புமிக்க அமைப்பினை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய விபரங்களை திருடனுக்கு ஆதரவு தரும் கன்னக்கோல் திருடனாக விளங்கும் பாகிஸ்தானுக்கும் அதன் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐக்கும் இந்தியா கொடுத்து,நடவடிக்கை எடு என சொல்லுகிறது.

இது எவ்வளவு கேவமானது.சே!உலக அரங்கில் பல நாடுகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்.கேவலமாக நமுட்டுச் சிரிப்பு சிரிக்க மாட்டார்களா?

சிரிச்சா சிரிச்சுட்டுப் போகட்டும்.எங்களுக்கு இந்திய முஸ்லீம்களின் ஓட்டுகள் மொத்தமாக விழணும்.எப்போதும் இந்தியாவை நாங்களே ஆளணும்.அதற்காக அப்பாவியான இந்து மதத்தை அழித்தாவது நாங்கள் இந்தியாவை ஆள்வோம்;சுரண்டுவோம்;ஒரு கோடி தலைமுறைக்கு சொத்து சேர்ப்போம் என அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் நமக்குப் புரிய வைக்கிறது.நாம் எப்போது தேசபக்தி மிக்க பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?

வேர்கள் சரியாக இருந்தால்தானே கனிகள் சிறப்பாக இருக்கும்.




30.4.11 சனிப்பிரதோஷமும் ஓம்சிவசிவஓம் மந்திரமும்

30.4.11 சனிப்பிரதோஷமும் ஓம்சிவசிவஓம் மந்திரமும்


சென்ற சனிக்கிழமையன்று சனிப்பிரதோஷம் வந்தது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று ஏதாவது ஒரு சிவாலாயம் சென்று பிரதோஷ நேரத்தில் நந்திபகவானை வழிபட்டால்,ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என சிவபுராணம் தெரிவிக்கிறது.

ஒரு மாதம் முன்பாகவே திட்டமிட்டு,சுமார் ஐந்து ஊர்களிலிருந்து பதினைந்து ஜோதிட வாடிக்கையாளர்களை தயார் படுத்தி,அண்ணாமலைக்கு 30.4.2011 அன்று காலையிலேயே வந்துவிட்டோம்.

கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை வழிபட்டப்பின்னர், அரசு கலைக்கல்லூரி வரும்.அதைக் கடந்ததும்,ஒரு பெரிய மைதானம் போன்ற இடம் ஒன்று திரு அண்ணாமலையை ஒட்டி காட்சியளிக்கும்.இதுதான் உட்பிரகாரம் எனப்படும் உட்கிரிவலப்பாதையின் நுழைவாசல்!!!

இன்றும் கூட சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,பிரபலங்கள் கிரிவலம் செல்லுவது இந்தப் பாதையில் வழியாகத்தானாம்.ஏராளமான அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது இந்த உட்பிரகாரப் பாதை!!!

உடன் வந்த பத்து பேருடன்(என்னையும் சேர்த்து) காலை 10.45 மணிக்கு தண்ணீர் கேன்களுடன் உட்பிரகார கிரிவலப்பாதைக்குள் நுழைந்தோம்.மதியம் 2.30 மணிக்கு குபேரலிங்கத்திற்கு அருகே வந்துவிட்டோம்.

இந்தப் பாதை முழுக்கவும்,மஞ்சள் நிற ஆடைகள் அணிந்தும்,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சங்களை வைத்தும் ஒரு விநாடி கூட வீணாக்காமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வந்தோம்.

பத்துபேர்களில் சுமார் எட்டு பேர்கள் இந்த விதமாக ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு வந்தோம்.குபேரலிங்கத்தின் அருகே ஒரு கிராமீய காவல் நிலையம் கிரிவலச் சாலைக்கும் உட்பிரகார கிரிவலப்பாதைக்கும் நடுவே அமைந்திருக்கிறது.

வழியில் காட்டு சிவா குளம் என்ற குளமும்,ஏராளமான வறண்ட குளங்களும் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் கோப்பாளம் (வெள்ளை அம்புக்குறிக்கு உள்ளே சிகப்பு கோடு) போட்டிருந்தனர்.சில வெள்ளைக்காரர்களும்,காரிகளும் எதிர்ப்பட்டனர்.திடீரென துறவிகளும்,மனிதர்களும் எதிர்ப்பட்டனர்.

கிராமியக் காவல் நிலையம் வழியே கிரிவலச் சாலையை நெருங்கியதும்,அந்த காவல் நிலைய அதிகாரி எங்களை அழைத்தார்.சரிதான் நம்மை விசாரிக்கப் போறாங்கன்னு பயந்தோம்.

இந்தாங்க கோவில் கும்பாபிஷேகப் பிரசாதம் என கை நிறைய தக்காளி சாதம் அனைவருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

அட! ஓம்சிவசிவஓம்

ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்







ஒரு ஆன்மீகக் கேள்வி பதிலும்;ஆழ்ந்த சிந்தனையும்




கேள்வி:ஐயா,ஒரு மனிதனை அதிகளவில் துன்புறுத்துவது அவனுடைய முன் ஜென்ம பாவமா அல்லது முன்னோர்கள் செய்த பாவமா?

பதில்:அனுபவமிக்க ஜோதிடர் சொன்னது:முன்னோரிடமிருந்து பெறப்பட்ட உடலின் மரபு அணுக்கள் வழியாக வரும் பாவம் எட்டில் ஒரு பங்கு மட்டுமே!

தானே முந்தைய பிறவிகளில்(ஏழு மனித பிறப்பு வரை) செய்த பாவமே எட்டில் ஏழு பங்கு வரும்.

இந்த கேள்வி பதில் ஒரு ஜோதிட மாத இதழில் வெளிவந்திருக்கிறது.இந்த மே மாதம் 2011 இல் வெளிவந்திருக்கிறது.

ஆக, நமது இப்பிறவி கஷ்டங்கள்,நோய்கள்,துயரங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.இந்த கேள்விபதில் நிஜம் என்பதை போன மாதம் உணர்ந்தேன்.ஆமாம்!

எனது துயரங்களின் விளைவாக,நானே இவ்வளவு சிரமப்படுகிறேனே,நம்மைப் போல் எத்தனை தமிழ் மக்கள் சிரமப்படுவர்? என சிந்தித்ததன் விளைவுதான் இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூ.


ஓம்சிவசிவஓம்



Monday, May 2, 2011

திருவாதிரை நட்சத்திரத்தன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்

வரும் 7.5.11 சனிக்கிழமை காலை மணி 8.04 முதல் 8.5.11 ஞாயிற்றுக்கிழமை காலை 8.08 மணி வரையிலும் சிவபெருமானின் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் நிற்கிறது.இந்த நாளில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர விரைவான நன்மைகள் நம்மைத் தேடி வரும்.

சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் குரு ஹோரை வருகிறது.சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 வரை இராகு காலம் வருகிறது;இந்த நேரத்திலும்,ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் வரும் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதால்,நமது கர்மங்கள் வெகு வேகமாகத்தீரும்.

ஓம்சிவசிவஓம்