Saturday, May 18, 2019

கலியுகத்தை ஆட்சி செய்யும் சண்டி சமேத ஸம்ஹார பைரவர்!!!





கலியுகத்தை ஆட்சி செய்யும் சண்டி சமேத ஸம்ஹார பைரவர்!!!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும் ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில் ஒரு    உலகம்  இருக்கின்றது;  அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;


தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம் கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;


ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம் மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது அவசியம் ஆகும்;


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;

உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர் உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம் இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும் என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில் இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக மிக எளியது விநாயகர் உபாசனை!

மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை! அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;


பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு (தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;


இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்!

இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால பைரவர் உதயமானார்;
முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;




பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் ஒவ்வொரு சனிக்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள்  கால பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;


நாம் வாழ்ந்து வரும் இந்த நூற்றாண்டினை காலத்தின் மூலமாக நிர்வாகித்து வருபவர் ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரை தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வருவதன் மூலமாக தொல்லைகள் இல்லாத (நிம்மதியான) வாழ்க்கையை வாழ முடியும்;


வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின் அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;


மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர் புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;


இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால் ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும் வழிபடலாம்;
மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள் மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;

ராகுக் கிரகத்தின் ப்ராண தேவதையாக இருப்பவர் ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரின் துணை சக்தியாக இருக்கும் அன்னை சண்டி!

சம்ஹார பைரவரின் காயத்ரி மந்திரம்:

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

சண்டியின் காயத்ரி மந்திரம்:

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி              
தந்நோ சண்டி ப்ரசோதயாத்

குறிப்பு:சமஸ்க்ருத வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்கள்,தினமும் ஒரு மணி நேரம் வரை இந்த காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரலாம்;


மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர் ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;       
                                     

மனித குலத்தைச் சீரழிக்கும் மரபணு கத்தரிக்காய்!!!




                                      மனித குலத்தைச் சீரழிக்கும் மரபணு கத்தரிக்காய்!!!

உலகத்திற்கு கடந்த 20,000 நூற்றாண்டுகளாக வழிகாட்டி வந்தது நமது இந்து சமுதாயம்;இந்து சமுதாயம் என்றால் சைவம்,வைஷ்ணவம் இரண்டும்   இணைந்த பாரத வம்சாவழியினர்   என்று அர்த்தம்;


400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வெறும் 13 பேர்கள் இந்த உலகத்தையும்,உலக மக்களையும் தமது அடிமைகளாக ஆக்கிட தீர்மானித்தார்கள்;அவர்களது வாரிசுகள் இன்று 6,000 பேர்கள் இருக்கின்றார்கள்; இவர்கள்  உலகத்தில் உள்ள தொழில்களை 13 பகுதிகளாக பிரித்து அவைகளை படிப்படியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள்;இவர்கள் சிகப்பு இந்தியர்களின் மாந்திரீகம்,இந்தியாவின் அதர்வண வேதம் போன்றவைகளைக் கொண்டு உலக கிறிஸ்தவத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்;இஸ்லாத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து அதில் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டார்கள் இந்த இலுமுனாட்டிகள்!!!


அவர்களை அழிக்கும் சகலவிதமான    ஆன்மீக ரகசியங்கள் தமிழ்நாட்டிலும்,ஸ்ரீலங்காவிலும் மட்டுமே இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்:அதனால் தான் ஸ்ரீலங்காவில் தமிழ் இனத்தை அழித்தார்கள்;இப்போது,தமிழ்நாட்டினை அழிக்க பல்வேறு சதிச்செயல்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்:

அவர்களின் தலைசிறந்த ஒற்றர்களாக முகனூல்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம்,யூட்யூப்,செல்போன் போன்றவை இயங்கி வருகின்றன;செல்போனில் நீங்கள் யாரிடமாவது பேசிக் கொண்டு இருக்கும் போதே,உலகின் எந்த மூலையில் இருந்தும் மின் காந்த அலைகளை அனுப்பி உங்களைச் சாகடிக்க முடியும்;அதற்குரிய தொழில் நுட்பத்தை இலுமுனாட்டிகள் 1980 லேயே கண்டுபிடித்துவிட்டார்கள்:

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை படிப்படியாக அழித்துக் கொண்டிருப்பது இணையம்! 2030 க்குள் உலகம் முழுவதும் இருக்கும் புத்தக  நூலகங்கள் அழிந்துவிடும்;2050 க்குள் பழைய புத்தக் கடைகளும் அழிந்துவிடும்;

திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் பழக்கத்தையும்,திரை அரங்குகளையும் நிர்மூலமாக்கிட வந்திருப்பது அமேசான் ப்ரைம் வீடியோஸ்!! இது 2040 க்குள் யூட்ட்யூப்பை அழித்துவிடும்;


ஒரு தலைப்பு அல்லது கருத்து பற்றிய முழுமையான விஷயங்களை எதிர்கால மனித குலம் அறியாமல் இருக்க கன்டுபிடிக்கப்பட்டதே முகனூல் மற்றும் டுவிட்டர்!!!(இவை இரண்டும் 2030க்குள் விக்கிப்பீடியாவையும் அழித்துவிடும்)

நமது தனிப்பட்ட சிந்தனை,செயல்பாடுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டவைகள் தான் வாட்ஸ் அப்பும்,செல்போனும்!!!!(இதன் அதிகப்படியான பயன்பாட்டினால் நமது சிந்திக்கும் திறன் அழிந்துவிடும்;கதிர்வீச்சினால் எல்லோரும் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளாவோம்)


ஒரு முன்னுதாரணமான மனித சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு உதாரணமாக நமது இந்து சமுதாயம் விளங்குகிறது;இப்படிப்பட்ட முன் உதாரணமுள்ள சமுதாயம் பாரத நாட்டில் உருவாகிட 17,00,000 ஆண்டுகள் ஆயின;அதை வெறும் 300 ஆண்டுகளில் 10% அளவு நிர்மூலமாக்கி இருக்கின்றனர் இந்த இலுமுனாட்டிகள்!

 1700 வாக்கில் இங்கிலாந்தின் கிழக்கு இந்திய கம்பெனியின் சுரண்டல் நமது ஆன்மீக பாரத நாட்டில் துவங்கியது;கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து வந்த பல கவர்னர் ஜெனரல்கள் பயிற்சி அளிக்கப்பட்ட இலுமுனாட்டி முகவர்கள் என்று இங்கிலாந்துக்கே தெரியாது;அவர்கள்   அப்போது,மேற்கு வங்காளத்தில் இருந்து மட்டும் 9 லட்சம் கோடி பவுன் தங்கத்தை கொள்ளையடித்தார்கள் என்று வரலாறு சொல்கிறது;அப்போ,நமது நாடு முழுவதும் எத்தனை லட்சம் கோடி பவுன்களை கொள்ளையடித்திருப்பார்கள்?


1947 முதல் 2014 வரை நமது ஆன்மீக பாரத நாட்டின் முக்கியமான ஐந்து துறைகள் இலுமுனாட்டிகளின் விரலசைவில் இயங்கியது;கல்வித்துறை,விவசாயத் துறை,நீதித் துறை,வெளியுறவுத் துறை,சுகாதாரத் துறை;

ஒவ்வொரு துறையிலும் இவர்கள் செய்த துரோகங்களைப் பற்றி 1 கோடி பக்கங்கள் எழுதலாம்;அதுபற்றி இன்னொரு முறை விரிவாக பார்ப்போம்;


ஒட்டு மொத்த இந்தியர்களையும் புற்றுநோயாளிகளாக மாற்றிட 1970 முதல் 1990 வரை ஒரு பெரிய முயற்சியில் இவர்கள் ஈடுபட்டார்கள்;அது படுதோல்வியில் முடிந்தது;ஏன் அப்படி படுதோல்வியில் முடிந்தது? என்று ஒரு ஆய்வு செய்தார்கள்;காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை;குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் தினசரி வாழ்க்கையில் கத்தரிக்காயை உணவில் சேர்த்து வருவதால் புற்றுநோயை உருவாக்க இலுமுனாட்டிகளால் முடியவில்லை;


அதன் பிறகு தான் அவர்கள் வேறு ஒரு குறுக்கு வழியை உருவாக்கினார்கள்;அது தான் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்!
நாத்திகப் பிரச்சாரம் மூலமாக இந்து தர்மத்தின் ஆணிவேரையே அசைத்தவர்கள் இவர்கள்!


முத்தமிழை வித்தவர் மூலமாக கோவில்களில் பரம்பரையாக சேவை செய்து வந்த பணியாளர்களை அங்கிருந்து துரத்தியவர்களும் இவர்களே!

வாசலில் பசும் சாணம் மெழுகுதல்,

வீட்டுச் சுவற்றில் வறட்டி தட்டுதல்,

வேப்பங்குச்சியில் பல் துலக்குதல்,

20 வயதிற்குள் திருமணம் செய்துவிடுதல்,

குடுமி வைத்துக் கொள்ளுதல்,

பூணூல் அணிந்து கொள்ளுதல்,

கடுக்கன் அணிதல்,

பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுதல்,

சமஸ்க்ருத மந்திர ஜபம் செய்தல்,

3 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல்,

நாட்டுப் பசுவை கடவுளுக்குச் சமமாக மதித்தல்,

வெற்றிலை பாக்கு போடுதல்,

நலுங்கு வைத்தல்,

பிறந்த குழந்தைக்கு 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்தல்,

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளுதல்,

அனைத்து சொந்தங்களோடும் குலதெய்வம் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும் சென்று வழிபடுதல்,

ஜோதிடம்,யாகம்,சித்த மருத்துவம்,சரக்கலை,வாசி யோகம்,வாஸ்து,வர்மக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுதல்,

சகுன சாஸ்திரத்தை முழுமையாக நம்புதல்,

கருப்பட்டியை உணவில் இனிப்புக்குச் சேர்த்தல்,

மாப்பிள்ளைச் சம்பா,கார்குறுவை,செங்குறுவை,குள்ளக் கார் போன்ற சிறுதானிய உணவு வகைகளால் நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்தோடும் வாழ்தல் 

போன்றவைகளை படிப்படியாக சிதைத்த இவர்கள்,இதனுள் புதைந்திருக்கும்  அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து அவர்களுடைய நாட்டில் பின்பற்றத் துவங்கிவிட்டார்கள்;

1935 முதல் இந்து முஸ்லீம்களின் ஒற்றுமையைச் சிதைத்து முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்க தூண்டியவர்களும்,அப்புறம் தனி நாடு கிடைக்கச் செய்தவர்களும்,முஸ்லீம்களின் நாட்டிற்கு அணுகுண்டு தொழில்நுட்பம் கிடைக்கச் செய்து அதன் மூலமாக விரைவாக இந்து தர்மத்தை அழிக்க வழிகோலியவர்களும் இவர்களே!


இன்று அப்பத்தா,தம்பிகள்,முப்பாட்டன் என்று ஒப்பாரி வைக்கும்  நவீன அரைலூசை(அரை கிறுக்குத்தனம் நிரம்பிய முட்டாளை) உருவாக்கியதும் இதே இலுமுனாட்டிகளே!

உலக அளவில் கத்தோலிக்கர்களுக்கும்,புராட்டஸ்டண்டுக்கும் இடையே பல நாடுகளில் போர் நடைபெற்று வருகின்றது;இஸ்லாமியர்களில் ஷியா,சன்னி பிரிவுகளிடையே பிரிவினையை உருவாக்கி,ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளத் துடிப்பதற்கும் இலுமுனாட்டிகள் தான் காரணம்!

இலுமுனாட்டிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிரி என்று எண்ண வேண்டாம்;உலக மக்கள் அனைவருக்குமே எதிரி தான்;

இந்து மதத்தை சின்னாபின்னப்படுத்தினால் மட்டுமே தன்னால் உலக மதங்கள்,மக்களை தனது நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்று எண்ணுகின்றார்கள் இலுமுனாட்டிகள்;அதனால்,இந்து மதத்தை நிர்மூலமாக்கிட துடிக்கின்றார்கள்;

கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் செய்த நமது நாட்டின் அரசியல் கட்சிகளால்,நமது வருமானம் உயரவில்லை;ஆனால்,விலைவாசி உயர்ந்து கொண்டே இருந்தது;வருமானத்தில் பற்றாக்குறை தொடர்ந்து உருவாகும் போது குடும்ப அமைப்பு சிதைந்து போகும்;கடந்த 30 ஆண்டுகளில் நமது அம்மாக்கள் தான் பாவம். . . தமது குழந்தைகளை பாதுகாக்க,சோறுட்ட,ஒரு குறையும் இல்லாமல் வாழ எத்தனை தியாகங்களும்,அவமானங்களும் பட்டார்களோ!!! இதற்கும் இலுமுனாட்டிகளின் 300 வருட சதித் திட்டங்களே காரணம்.


       முதலாளித்துவம் என்ற முகமூடியைத் தூர எறிந்துவிட்டு,உலக வர்த்தக அமைப்பு என்ற முகமூடியுடன் உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்க மயமாக்கும் வேலை ஜரூராக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


உக்கிரமான தெய்வங்களை(நரசிம்மர் அல்லது மஹா கால பைரவர் அல்லது மஹா துர்கை அல்லது மஹா வராகி அல்லது சரபேஸ்வரர் அல்லது ஸ்ரீவித்யா உபாசனை ) 1008 நாட்கள் ஜபித்து வருவதன் மூலமாக இவர்களை நிரந்தரமாக நம் ஒவ்வொருவராலும் முடக்கிட முடியும்;செய்வோமா?


நேரடி ஜோதிடப் பயிற்சி


நேரடி ஜோதிடப் பயிற்சி




உங்கள் ஊரின் ஜனத் தொகைக்கு இணையாக திறமையான மற்றும் நேர்மையான ஜோதிடர்கள் இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

ஜோதிடத்தில் உண்மைத் தன்மையை நிலைநாட்டிட நீங்களும் ஜோதிடம் கற்றுக் கொண்டு,தொழில் முறை ஜோதிடர்கள் ஆகுங்கள்;

குறைந்த பட்ச கல்வித் தகுதி:10 ஆம் வகுப்பு

மூன்று பெரும்பகுதிகளைக் கொண்டது எமது தொழில் முறை ஜோதிடப் பயிற்சி!

1.அடிப்படை ஜோதிடம்

2.ஜாதகம் கணிக்கும் கலை

3.பலன் சொல்லும் முறைகள்

இன்று வரையிலும் பலருக்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் 3 பகுதிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மட்டுமே தெரிந்திருக்கிறது;அவர்கள் மீதி ஒரு பகுதியை அறிந்து கொள்ளவும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்;

பயிற்சி நடைபெறும் ஊர்:ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு

பயிற்சி காலம்:வேகமாக புரிந்து கொள்பவர்களுக்கு 7 நாட்கள் போதுமானது;

அடிப்படையில் இருந்து பலன் சொல்லும் வரை முதன் முதலில் கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும்;

பயிற்சி முறை:தொடர்ந்து 7 முதல் 90 நாட்கள் வரை தங்கியும் கற்றுக் கொள்ளலாம்;

அல்லது

வாரம் இரண்டு (சனி மற்றும் ஞாயிறு அல்லது வேறு எதாவது இரண்டு நாட்கள்) நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;

15 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;


எனவே,ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புவோர் எமது வாட்ஸ் அப்பில் 9092116990 உங்கள் ஜாதகத்தை அனுப்பவும்.கூடவே Like2Learn Astrology என்று அனுப்பவும்;

கட்டணம் உண்டு;






ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.



மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்..


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).



அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “இம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.



இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.


ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி சொர்ண பைரவர் வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

Thursday, May 2, 2019

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்


ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால்  இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்;அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி;விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி;எந்த நாளாக இருந்தாலும் சரி;
பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும்,இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும்,வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும்,கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்;பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்;அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!


3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;


உங்களுடைய அப்பா,அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள்,அம்மாக்கள்,அவர்களுடைய அப்பாக்கள்,அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு,அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து,தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி,அழுது,அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;

 பல விதமான விலங்குகள்,செடி,கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு,இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா,அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக  ஆண் மனிதப் பிறவி எடுக்கும்;பசு பிறவி எடுக்கும் ஆத்மா,அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்;அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது,அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!! 

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்;அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ,அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;


1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும்,புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்;நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

ஒருவேளை,இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால்,நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?


போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்;போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர்,உடன் பிறந்தோர்,வாழ்க்கைத்துணை,வாரிசுகள்,சொத்துக்கள்,படிப்பு,
புகழ்,வருமானம்,லாபம்,பெருமை,பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய்,அவமானங்கள்,கடன்,வம்பு வழக்குகள்,மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல்,விரக்தி மனப்பான்மை,தற்கொலை எண்ணங்கள்,ஏமாறுதல்,துரோகத்தால் துவண்டு போகுதல்,பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல்,சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல்,ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள்,விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம்,தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;


பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன;அதே சமயம்,இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்;பலருக்கு கடினமானதாக இருக்கும்;சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள்,காலில் அடிபட்டு ரத்தம் வருதல்,தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்;இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து,அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;


மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்;அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;


பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம்,அக்னி லிங்கம்,எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்;அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்;ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்;அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும்,அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால்,உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்;விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்;மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்:அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது;ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்;அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்;மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே  அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்;ஆனால்,இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;


இந்த வரிகளை வாசித்துவிட்டு,மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே,மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ