Saturday, May 28, 2016

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!



வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி 29.5.2016 ஞாயிற்றுக்கிழமை


 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

தினமும் துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவ அஷ்டகம் 33 முறை வீட்டிலேயே முறைப்படி ஜபித்துவருவதன் மூலமாக நீண்டகாலக் கடன்,நீண்டகாலமாக வராமல் இருக்கும் கடன் இவைகளைத் தீர்க்க முடியும்;கடந்த சில ஆண்டுகளில் பலர் முறைப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வீட்டிலேயே வழிபட்டு வளமான வாழ்க்கையை அடைந்துள்ளனர்;

அடுத்த தேய்பிறை அஷ்டமி:27.6.16 திங்கட்கிழமை காலை11.32 முதல் 28.6.16 செவ்வாய்க்கிழமை காலை 8.53 வரை (சதுர்முகி வருடம்,ஆனி மாத தேய்பிறை அஷ்டமி)

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்;9092116990



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Monday, May 23, 2016

ஏழரைச்சனி & மாந்தி தோஷம் நீக்கும் மங்கள சனி ஆலயம்!!


வெகு காலத்திற்கு முன்பு,ஈசனாகிய சதாசிவம்,தமது வாயிற்கோப்போன் நந்திபகவானிடம் ஒரு தகவல் சொல்லுகிறார்;

கார்த்திகை நட்சத்திர மண்டலத்தைக் கடந்து கொண்டு இருக்கும் சனீஸ்வரன்,ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழையும் போது ரோகிணியைப் பிளந்து கொண்டு செல்ல இருக்கின்றார்;இதனால்,பூமியில் 12 ஆண்டுகள் வற்கடம்(மழையே பொழியாத நிலை) உண்டாகும்;இதனால்,உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு,பல கோடி உயிர்கள் பஞ்சத்தால் மடியும் சூழ்நிலை உருவாகப்போகின்றது;

இதை நந்திபகவான்,வசிஷ்டரிடம் தெரிவிக்கின்றார்;வசிஷ்டர் தசரதமகாராஜாவிடம் தெரிவிக்கின்றார்;
தசரத மகாராஜா உடனடியாக தனது அமைச்சர்களை அழைத்து மந்திர ஆலோசனை செய்கின்றார்;
முடிவாக,சனீஸ்வரனின் பயணத்தை தடுத்து நிறுத்துவதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வருகின்றார் தசரத மகாராஜா!


சுபமான லக்னத்தை தனது ஆஸ்தான குருவின் அருளால் தேர்ந்தெடுத்த தசரத மகாராஜா,அந்த நேரத்தில் தனது ரதத்தில் ஏறி,வானில் இருக்கும் கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரனை நோக்கிப் பயணிக்கின்றார்;

(முற்காலங்களில் பூமியில் வாழ்ந்து வந்த மன்னர்கள் நீதி,நேர்மையுடன் ஆட்சி புரிந்து வந்தனர்;அதனாலும்,தினசரி இறைவழிபாடு செய்து வந்தமையாலும்,அவர்களால் ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் பயணிக்க முடிந்தது;இந்த திறமை கி.பி.1900 வரை நமது தமிழ்நாட்டில் பலரிடம் இருந்தது!!!)
சனீஸ்வரன் கார்த்திகை நட்சத்திர மண்டலத்தில் பயணிக்க,அவரிடம் போரிடும் நோக்கில் தசரத மகாராஜா எதிர் கொள்கின்றார்;

ஒரு சாதாரண மனிதன்,நவக்கிரகங்களில் சர்வசக்தி வாய்ந்த தன்னிடம் போரிடும் நோக்கோடு வந்தது ஆச்சரியமாக இருந்தது;
சனீஸ்வரனும்,தசரதமஹாராஜாவும் பேசிக்கொள்கின்றனர்;
முடிவாக,ரோகிணி நட்சத்திரத்தை பிளந்து கொண்டு செல்ல மாட்டேன் என்று சனீஸ்வரன்,தசரதமஹாராஜாவுக்கு வாக்களிக்கின்றார்.இதன் மூலமாக 12 ஆண்டுகள் பூமியில் வற்கடம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது;

மேலும் தசரதமஹாராஜாவின் வேண்டுதலின் படி,சனீஸ்வரன் சுபச்சனியாக அதுவும் மங்களச்சனியாக தனது குடுமத்தோடு வந்து பூமியில்=பாரத தேசத்தில்=அதுவும் நமது தமிழ்நாட்டில் திருநாரையூர் என்ற இடத்தில் அருள்பாலிக்கத் துவங்குகிறார்;இச்சம்பவம் நிகழ்ந்து சுமாராக 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;

சனீஸ்வரன் தமது இரு மனைவிகளான மந்தாதேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன் களான மாந்தி,குளிகனுடனும்,இவர்களை வணங்கிய நிலையில் தசரதமஹாராஜா இருப்பது போல சுவாமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது;சந்திர காந்தக் கற்களால் வடிக்கப்பட்டிருப்பதால்,அபிஷேகப்பால் கறுப்பு நிற சுவாமி சிலையை நீல நிறமாக நமது கண்களுக்கு காட்டுகின்றது;அப்படி யார் கண்களுக்குத் தெரிகின்றதோ,அவர்களுக்கு மங்கள சனியின் அருள் கிடைத்துவிட்டதாக அர்த்தம்; 

திருநாரையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி திருக்கோவிலுக்குள் மேற்கு நோக்கியவாறு அருள்பாலித்து வருகின்றனர்;

ராமநாதசுவாமி கிழக்கு நோக்கியவாறும்,பர்வத வர்த்தினி தெற்கு நோக்கியும் ஒரே மண்டபத்தில் அருள்பாலித்து வர,
மங்கள சனிபகவான் தனது திசையான மேற்கு நோக்கியவாறு அருள்பாலித்து வருகின்றார்;அவரது சன்னதிக்கு எதிராக அவரது வாகனம் காக்கை,நந்தி போல அமர்ந்திருக்க,அதன் பின்புறத்தில் இரும்பால் ஆன கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கின்றது;

ஜோதிடப்படி ,ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி இருந்தால் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருந்தால்,அவரை யாராவது இப்பிறவியில் மாந்திரீகத்தால் வசியம் செய்வார்கள்;அல்லது மாந்திரீகத்தால் அவரது இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்க முடியும்;இதைச் சரி செய்ய இந்த கோவிலுக்கு ஒருமுறை வருகை தந்து மங்கள சனிபகவானிடம் வரங்களை வாங்கிச் செல்வது அவசியம்;

சனிக்கிழமையன்று ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரை மங்கள சனி சன்னதியில் அவருக்கு நேராக அமர்ந்து அவரிடம் நமக்குத் தேவையானதை வேண்டிட வேண்டும்;

நம் ஒவ்வொருடைய ஜாதகப்படி,நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனீஸ்வரனே!
சனீஸ்வரனின் தாக்கம் ஏழரைச்சனி(16.12.2017 வரை விரையச்சனியாக தனுசு ராசிக்கும்;ஜன்மச்சனியாக விருச்சிக ராசிக்கும்;பாத/வாக்குச்சனியாக துலாம் ராசிக்கும்) அஷ்டமச்சனி(16.12.2017 வரை மேஷராசிக்கு);அர்த்த அஷ்டமச்சனி(16.12.2017 வரை சிம்மராசிக்கு);கண்டச்சனி(16.12.2017 வரை ரிஷபராசி) உள்ளவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று இங்கே வந்து ராகு காலத்தில் வேண்டிக் கொள்ள வேண்டும்;

பிறகு,வேறு எங்கும் செல்லாமல்(வேறு எந்தக் கோவிலுக்கும்,உறவினர்கள் வீடுகளுக்கும்)தமது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக ஏழரைச்சனி,சுபச்சனியாக மாறிவிடும்;ஆமாம்!

அதே போல,லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருக்கப் பிறந்தவர்கள் இந்த ஆலயத்திற்கு ஒருமுறை வருகை தந்து வழிபடுவதன் மூலமாக அவர்களின் ஜாதகத்தில் யோகம் தரக் கூடிய கிரகங்கள் செயல்பட ஆரம்பிக்கும்;


இன்றைய காலகட்டத்தில்,பலருக்கு ஜாதகமே இயங்கவில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றோம்;அதற்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் மாந்தி/குளிகனே காரணம் ஆகும்;


லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் மாந்தி இருக்கப் பிறந்த ஒருவரின் ஜாதகத்தில் யோகம் தர வேண்டிய கிரகத்தை செயல்படாமலும்,கஷ்டம் தரக்கூடிய கிரகத்தை மட்டும் இயங்க வைக்கக் கூடிய ஆற்றல் மாந்தி/குளிகனுக்கு உண்டு;இதைச்சரி  செய்ய விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு ஒருமுறையாவது வருகை தந்து அபிஷேகத்தைப் பார்ப்பது அவசியம்;

அபிசேகம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டி இருக்கும்;அபிஷேகம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொண்டால் பூசாரியின் செல் எண்ணைத் தரமுடியும்;

ஜோதிட அனுபவப்படி பார்க்கும் போது,ஒருவருக்கு நடப்பில் எந்த ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றாலும், அந்தக் கிரகத்துடன் மாந்தி இணைந்திருந்தாலும் அவர்களும் ஒருமுறை இந்த ஆலயத்திற்கு வந்து வரங்களை வாங்கவேண்டியது அவர்களது ஜாதகக் கடமை ஆகும்;

பூமியில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த ஆலயத்திற்கு ஒருமுறை வரவேண்டியது அவசியம்;ஏனெனில்,இன்றைய காலகட்டத்தில் பல ஜோதிடர்களுக்கு மாந்தியைக் கணிக்கத் தெரிவதில்லை;அதனால்,பிறந்த ஜாதகத்தில் மாந்தியைக் குறிப்பதும் இல்லை;மாந்தியைக் கொண்டு செய்யப்படும் கெட்ட செயலே மாந்தி ரீகம் என்று அழைக்கப்படுகின்றது;

எப்பேர்ப்பட்ட மாந்தி ரீகத்தையும் முறியடிக்கக் கூடிய ஆற்றல் தினசரி அன்னை அரசாலையின் 12பெயர்களை  30 நிமிடம் ஜபித்தாலே கிடைத்துவிடும்;(அசைவம்,மதுவைத் தவிர்த்துவிட்டு!)


ஏழரைச்சனி ஆரம்பிக்கும் போது திருநள்ளாறு செல்ல வேண்டும்;ஏழரைச்சனி நிறைவடையும் போது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபடவேண்டும்;ஆனால்,எப்போதும்,எந்தச் சூழ்நிலையிலும் மங்கள சனீஸ்வரை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்;

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 8 வது கி.மீ.தோலைவில்(நாச்சியார் கோவிலுக்கு முந்தைய கிராமம்) திருநாரையூர் அமைந்திருக்கின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் மங்கள சனீஸ்வராய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

பூர்வீகச் சொத்துப்பிரச்சினையை உருவாக்கும் முன்னோர்களின் செயற்கை மரணங்கள்!!!


மதுரையைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்கள் குழு,1980களின் முற்பகுதியில் ஒரு வித்தியாசமான ஜோதிட ஆராய்ச்சியை மேற்கொண்டது;

பூர்வீகச் சொத்துக்காக யாரெல்லாம் வழக்கு தொடுத்துள்ளார்களோ,அவர்களின்(இருதரப்பும்) பிறந்த ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தனர்;இப்படிப்பார்ப்பதற்கு சுமாராக ஒன்றரை ஆண்டுகள் ஆயின;

முடிவாக,யாரெல்லாம் பூர்வீகச் சொத்துக்காக வழக்கு தொடுத்துள்ளார்களோ அவர்களுக்கு அல்லது யார் மீது வழக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கின்றது;முறையான பித்ரு தோஷ நிவாரணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும்,அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கும் தலைமுறை தலைமுறையாக பித்ரு தோஷம் தொடர்கின்றது;

ஜோதிடப்படி,லக்னத்துக்கு 3,5,9 இல் ராகு அல்லது கேது இருந்தாலே பித்ரு தோஷம் இருக்கின்றது என்றுதான் அர்த்தம்;
ஒரு வம்சாவழியில் தலைமுறைக்கு ஒருவர் வீதம் கடந்த ஐந்து தலைமுறையாக குறைந்தது ஐந்து பேர்கள் தற்கொலை செய்து இறந்தாலோ அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தாலோ அல்லது விபத்து/கலவரம்/போரில் இறந்தாலோ அது பித்ரு தோஷமாகப் பரிணமிக்கின்றது;

வருடத் திதி கொடுப்பது வேறு;பித்ருதோஷ நிவாரணமாக திலா ஹோமம் செய்வது வேறு;

ஒருவர் இயற்கையாக இறந்தால் அவருக்கு உறுதியாக மறுபிறவி உண்டு;செயற்கையாக இறந்தால் மறுபிறவி,திலா ஹோமம் செய்தால் மட்டுமே உண்டு;இதைச் செய்யாதவர்களுக்குத் தான் பித்ரு தோஷம் மூலமாக பூர்வீகச் சொத்தினைப் பிரிக்க முடியாமல் வழக்காக உருமாறுகின்றது;

ஜோதிடம் ஒரு முழு அறிவியல் என்பதை மதுரை ஜோதிடர்கள் குழுவின் ஆராய்ச்சி உறுதி செய்தது;

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் அண்ணாமலையே போற்றி! போற்றி!! போற்றி!!!

Friday, May 20, 2016

அழிவுகளையும்,தீமைகளையும் தரும் மேல்நாட்டுக் கண்டுபிடிப்புகள்!!!


இன்பம் மற்றும் வசதிகளை அதிகரிக்கும் விதமான கருவிகள்,கண்டுபிடிப்புகளைத் தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டத்து நாடுகள் இதுவரை கண்டறிந்துள்ளன;

ஆனால்,இந்தக் கண்டுபிடிப்புகளால் நம் ஒவ்வொருவருக்கும் நன்மைகளை விடவும் தீமைகளே அதிகமாக விளைகின்றன;

உதாரணமாக,தொலைபேசியில் தொடர்ந்து 22 நிமிடங்களுக்கு மேல் பேசினால்,அதில் இருந்து உருவாகும் கதிர்வீச்சு நமது உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது;அதே போல,செல் போனில் தொடர்ந்து 12 நிமிடங்களுக்கு மேல் பேசினாலும்,தூங்கும் போது நமது தலைக்கு அருகில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்கினாலும் அதன் கதிர்வீச்சு நமது மூளையையும்,நரம்பு மண்டலத்தையும்,காதுக்குள் இருக்கும் நரம்புகளையும் பாதிக்கின்றது;


தூங்கும் போது தலைக்கு அருகில் செல்போனை (அணைக்காமல்) வைத்து தூங்குவதால்,மூளை புற்று நோய் உருவாகும் என்று லேட்டஸ்ட் மருத்துவ ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவிக்கின்றன;


மைதாவில் செய்யப்படும் உணவு எப்போதுமே நமக்குக் கெடுதலைத் தந்திருக்கின்றது;நமது ஜீரண மண்டலத்தைக் கெடுத்திருக்கின்றது;

மைதாவில் தான் பிஸ்ஸா,பர்கர் செய்கின்றனர் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? நமது பாரம்பரிய உணவுகளான இட்லி,தோசை,சாதம்,புளி சாதம்,எலுமிச்சை சாதம்,தக்காளி சாதம்,தேங்காய் சாதம்,கறிவேப்பிலை சாதம்,மல்லிகை சாதம் போன்றவைகளால் நமக்கு ஆரோக்கியமே கிடைத்துவந்திருக்கின்றது;

இவைகளை விடவும் மேல்நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியம் மிக்கதா?(மேற்கு நாடுகள் ஒரு புதிய உணவைக் கண்டுபிடிகின்றது என்று வைத்துக் கொள்வோம்;,அதன் மூலமாக எந்த விதமான நோய் அதைத் தொடர்ந்து உண்பவர்களுக்கு உருவாகும் என்பதையும் சேர்ந்தே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கின்றது
பின்னர், அந்த நோயை குணப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்துவிடுகின்றது; அதன் பிறகே அந்த உணவை உலகம் முழுக்க விற்பனை செய்யத் துவங்குகின்றன; இதில் குழந்தை உணவாக இருந்தாலும் சரி;துணை உணவாக இருந்தாலும் சரி;நோயாளிகளுக்கான உணவாக இருந்தாலும் சரி)

உணவே மருந்து;மருந்தே உணவு என்பது நமது(பாரதத்தின்) பண்பாடு;இதை சுயநலம் மிக்க மேல்நாடுகள் உணவே நஞ்சு,நஞ்சு மூலமாக பணம் பண்ணு என்பதை உலமயமாக்கி,உலகத்தையே அடிமையாக்கிட முயன்று வருகின்றன;


அதே சமயம்,கீழ்த்திசை நாடுகளில் குறிப்பாக நமது பாரதத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,கண்டுபிடிக்கப்பட்ட ஜோதிடம்,யோகாசனம்,வாஸ்து,இயற்கை மருத்துவம்,சித்த மருத்துவம்,சரக்கலை,மூலிகை மருத்துவம்,கல்லாடம்,சோடேச கலை,சோடேச தியானம்,மருத்துவ யோகா,மந்திர ஜபம்,சகுன சாஸ்திரம்,வானியல் போன்றவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கே நன்மையைத் தான் கொடுத்து வந்துள்ளன;இவைகளின் முக்கியத்துவத்தால் இன்று நமது சனாதன தர்மம் எந்த ஒரு கட்டாயப்படுத்துதலும் இன்றி உலகம் முழுக்கவும் பரவி வருகின்றது;


நாம் ஒவ்வொருவருமே இன்பத்தையும்,வசதியையும்,செல்வச் செழிப்பையும் தான் தேடுகின்றோம்;ஆனால்,உண்மையான இன்பம் தூய ஆத்மாவில் இருக்கின்றது; ஆகவே,நிறைவான ஆனந்தம் என்பது நமக்கு உள்ளேயே இருக்கின்றது;அதைத் தூண்டுவதற்காகவே,தூண்டும் விதமாகவே நமது தினசரி வாழ்க்கையில் தெய்வீகத்தை நமது முன்னோர்கள் இணைத்து வைத்துள்ளனர்;

நம்முடைய பிறவிகள் ஒவ்வொன்றும்(ஆமாம்,நம்மில் பெரும்பாலானவர்கள் 1000,2000 சிலர் 2,00,000 )இறைவனின் நினைவோடுதான் வந்திருக்கின்றது;இப்படி இருக்கும் போது,அதை மறந்துவிட்டு, கடவுள் உண்டா? இல்லையா? என்ற விதாண்டாவாதம் நம்மை மேலும் பாவியாக்கிவிடும்;
இந்த விதாண்டாவாதம் உருவாகக் காரணமே,நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாதது தான்;

யார் தன்னை நம்புகிறார்களோ,அவர்களுக்கு வெகு சீக்கிரமாக ஆன்மீக முயற்சிகள் வெற்றியைத் தரும்;ஏனெனில்,யார் தன்னை நம்புகிறார்களோ,அவர்களால் கடவுள் நம்பிக்கையும் வரும்;


நம்மை நம்புபவர்களால் தான் படிப்படியாக கடவுளை உணரும் தன்மை மனதுக்குள் உருவாகும்;அதன் பிறகு,இறைசக்தி ஆன்மாவுக்குள்ளும் அது ஊடுருவும்;


ஓம் அகத்தீசாய நமஹ


ஓம் அருணாச்சலாய நமஹ

எப்படி கடவுளை உடனே பார்க்க முடியும்?


சாலையில் பயணம் செய்யும் போது எதிரே வரும் வாகனத்தின் ஹெல் லைட் வெளிச்சமே நமது கண்களைக் கூச வைக்கின்றது;ஜோதி வடிவில் இருக்கும் இறைசக்தி(அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்)யின் வெளிச்சத்தைப் பார்க்கும் சக்தி நமக்கு இருக்குமா?


“நான் இப்போதே கடவுளை நீ காட்டு;அப்போதுதான் நான் கடவுள் இருப்பதை நம்புவேன்” அவசரக் குடுக்கைகளும்,நாத்திகக் கொழுந்துகளும் கடந்த 60 ஆண்டுகளாக நம்மிடமும்,நமக்கு வேண்டப்பட்டவர்களிடமும் வாக்குவாதம் செய்து வாயடைத்துள்ளனர்;இப்போது இது தொடர்கிறது.

கடவுளை இப்போதே உன்னால் காட்ட முடியவில்லையே! எனவே,கடவுள் இல்லை; என்று தானாகவே சொல்லிவிடுகின்றனர்;கடவுள் என்ன இவர்கள் வீட்டு வேலைக்காரனா?


பாலுக்குள் நெய் இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும்;அதற்காக பாலைப் பார்க்கும் போதே அதில் நெய் தெரியுமா?

பாலில் இருந்து நெய்யை எடுப்பதற்கு எவ்வளவு வேலைகள் இருக்கின்றன;பாலில் இருந்து நெய்யை எடுப்பது எப்படி? என்று விவரித்தால் அதுவே தனி கட்டுரையாகி விடும்;அதன் பிறகுதானே நெய்யை எடுக்க முடியும்? அதன் பிறகே நெய்யைப்பார்க்க முடியும்!!

அது போல,கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கம் ஒருவருக்கு(ஒருத்திக்கு) உண்மையாகவே இருந்தால்,அதற்கு ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்;


கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால்,அடுத்த கேள்வி முளைக்கின்றது.எந்தக் கடவுளைப் பார்க்க வேண்டும்?

முருகக் கடவுளையும்,சதாசிவனையும் தரிசிப்பதற்கு பல பிறவிகளாக முயற்சி செய்ய வேண்டும்;பிற கடவுள்களை  முறையான குரு கிடைத்து,சரியான வழிமுறைப்படி முயற்சித்தால் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்களில் தரிசித்து விடமுடியும்;


இப்படி தாம் விரும்பும் கடவுளை தரிசித்தவர்கள் ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு தெருவில்(தமிழ்நாட்டிலும்,பாரதத்திலும்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;அவர்கள் ஒரு நாள் கூட,ஒரு தடவை கூட,ஒரே ஒருவரிடம் கூட(ஆருயிர் நண்பராக இருந்தாலும்,ஆருயிர் மகன்/ளாக இருந்தாலும்) ‘நான் இந்தக் கடவுளை தரிசித்தேன்’ என்று சொல்ல மாட்டார்கள்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் வராகி சிவசக்தி ஓம்


எது உண்மையான அன்பு? கும்பமுனியின் உபதேசம்


கேள்வி:குருதேவா! இந்த அன்பானது மனிதன் மீது கொள்கின்ற அன்பா அல்லது இறைவன் மீது கொள்கின்ற அன்பா?


பதில்:மணிதன் மீது கொள்கின்ற அன்பு காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்;

இளமைக்காலத்தில் ஒரு பெண்ணிடம் ஏற்படுகின்ற அன்பும்,
ஒருவரிடம் நமக்குப் பணம் வேண்டும் என்பதால் அவர் மீது நாம் காட்டுகின்ற அன்பும்,

நம்முடைய தாய் தந்தையரின் சொத்துக்கள் நமக்கே வரவேண்டும் என்பதனால் காட்டுகின்ற அன்பும்,

நாம் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுவதற்காக பிறரிடம் காட்டுகின்ற அன்பும்,

ஒரு பெண்ணை விரும்புவதால் ஏற்படும் அன்பும் உண்மையான அன்பு அல்ல;


ஈசன் மீது கொள்கின்ற காதலே மாறாத அன்பாகும்;இந்த மாறாத மலர்தான் அன்பு.மலராய் இருபப்வள் சக்தி;எத்தனையோ அன்பு இருக்கலாம்; ஆனால்,தாயானவள் தன் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அன்பைப் போன்று கிடைப்பது அரிதாகும்.இந்த அன்புமலரைத்தான் ஜாதி என்றார்கள்.வேறு எதையும் ஜாதி என்று சொல்லவில்லை;



ஓம் அகத்தீசாய நமஹ

எமதர்மராஜா எப்போதெல்லாம் நேரில் வருவார்?


1980களின் முதல் ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மடத்துப்பட்டித் தெருவில் ஒருவருக்கு உடல் நலம் குன்றியது;
அவரை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர்;

அவர் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு,அவரது வீட்டிற்குள் ஒரு எருமை மாடு வந்துவிட்டது;அது நகரவே இல்லை;பலர் அந்த எருமை மாட்டினை அடித்தும்,இழுத்தும் அது அங்கிருந்து போகவே இல்லை;

அவர் இறந்தப் பின்னரே அந்த எருமை மாடு அங்கிருந்து புறப்பட்டு எங்கேயோ போனது;(யார் அதையெல்லாம் கண்டு கொள்ளப் போகின்றார்கள்?)

இந்தச் சம்பவத்தில் இருக்கும் சூட்சும ரகசியம் என்னவெனில்,ஒரு மனிதன் ஒரு பிறவி முழுவதும் நல்ல ஆத்மாவாக இருந்தால்,அந்த மனிதனின் ஆயுளை முடிக்க இறப்பின் கடவுளாகக் கருதப்படும் எமதர்மராஜாவே நேரில் வருவார் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கின்றோம்;இந்த கர்ண பரம்பரைத் தகவல் உண்மைதான் என்பதை இச்சம்பவம் உறுதி செய்திருக்கின்றது;

தினமும் ஒரு மணி நேரம் எதாவது ஒரு தெய்வத்தின் பெயரை/பாடலை/ஜபத்தை/108 போற்றியை/1008 போற்றியைப் பாடுபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுகின்றனர்;

இப்பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றுள்ளவர்கள் புண்ணிய ஆத்மாவாக உயர்வார்கள்;

வயதான பசுக்களை பராமரிக்க பசுமடம் அமைத்து,மிகுந்த சிரத்தையுடன் அவைகளைப் பராமரித்து வருபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுவார்கள்;

இறைபக்தி,நாம ஜபம்,வில்வம் நடுதல் முதலான 12,500 விதமான தெய்வீகச் செயல்களை முறையாக ஏதாவது ஒன்றை மட்டுமாவது குறைந்தது 20 ஆண்டுகள் செய்து வருபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுவார்கள்;

பிறப்பில்லாத முக்தியை அடையும் மார்க்கங்கள் பல நூறு உள்ளன;தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்பவர்கள் இப்பிறவியுடன் முக்தியை அடைய முடியும்;


ஓம் அருணாச்சலாய நமஹ


எமலோகம் இருப்பது உண்மையே!!!


45 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் கிழச்சிவந்திப்பட்டித் தெருவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் எமலோகம் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது;


மாரியம்மாள் என்ற பாட்டி இறந்துவிட்டாள்;அடுத்த ஆறு மணி நேரத்தில் அந்தப் பாட்டியின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றிடத் தயார் செய்தனர்;அப்போது,ஏப்பம் விட்டவாறு மாரியம்மாள் தூக்கம் கலங்கி எழுந்திருப்பது போல,கண் விழித்துவிட்டாள்;துக்கத்திற்கு வந்தவர்கள் பயந்து நடுங்கிவிட்டனர்;


அதேசமயம்,அதே தெருவின் இன்னொரு முனையில் வாழ்ந்து வந்த இன்னொரு மாரியம்மாள் என்ற பாட்டி இறந்துவிட்டாள்;
இரண்டு கறுப்பு உருவங்கள் முதல் மாரியம்மாளை ‘அழைத்து’ச் செல்ல வந்தார்கள்;சில நிமிடமா?அல்லது சில மணி நேரமா? என்று தெரியவில்லை;


எமலோகத்தில் முதலாவது மாரியம்மாளை அந்த இரண்டு கறுப்பு உருவங்கள் கொண்டு போய்சேர்த்தன;
சித்திரகுப்தனும்,எமதர்மராஜாவும் அந்த இரு கருப்பு உருவங்களை திட்டித் தீர்த்தனர்;

“கோவிந்தராஜ் மனைவி மாரியம்மாளின் உயிரை எடுத்து வரச் சொன்னால்,கோவிந்தசாமி மனைவி மாரியம்மாளின் உயிரை எடுத்து வந்துவிட்டீர்களே! இந்த ஆத்மாவை உடனே அவள் உடலுக்குள் விட்டுவிட்டு,அந்த மாரியம்மாளை அழைத்து வாருங்கள்”

முதலாவது மாரியம்மாளைப் பார்த்து, “எப்போதாவது இப்படி எமது ஊழியர்கள் தப்பு செய்வதுண்டு;எம்மை மன்னித்துவிடு அம்மா!” என்று கூறிவிட்டு, “தாங்கள் தற்போது எமது விருந்தினர்;சாப்பிடுங்கள்;ஆனால்,பூலோகம் சென்றப் பின்னர்,இங்கே நடந்ததை அங்கே யாரிடமாவது நீங்கள் தெரிவித்தால்,உங்களுக்கு ஆயுள் முடியும் போது நோயாளியாகி,உடல் எல்லாம் புழு வைத்து இறப்பீர்கள்” என்று எச்சரிக்கையும் விட்டார் எமதர்மராஜா;

அறுசுவையுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு பூமிக்குத் திரும்பிய மாரியம்மாள்,தமது உடலுக்குள் புகுந்த உடனே ஏப்பம் விட்டது இதனால் தான்;

மாரியம்மாளால் எமலோக ரகசியத்தை மறைக்க முடியவில்லை;அனைத்தையும் அனைவரிடமும் சொன்னதால்,அடுத்த சில ஆண்டுகளில் இறக்கும் போது நோயாளியாகி புழுவைத்து இறந்தார்;

பூமியில் எவரது உயிரை எடுப்பதற்கு எமதூதர்கள் வந்தாலும்,அவர்கள் முதலில் அண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் எமலிங்கத்தை வழிபட்டுவிட்டு அதன் பிறகே உரிய ஆத்மாவின் உயிரை எடுக்கச் செல்வார்கள்;

இச்சம்பவம் 1970 முதல் 1975க்குள் நடைபெற்றது;


ஓம் அருணாச்சலாய நமஹ