Friday, December 26, 2008

SHOCK NEWS WITH ONE SENTANCE


மனக் கவலை தீர-திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறுவது:
தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.

எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு
தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக் கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.
நன்றி:மிஸ்டிக் செல்வம் அவர்கள்,ஜோதிடபூமி மே,2006

வீட்டில் துளசி செடியும்,மல்லிகைச் செடியும் வளர்ப்பது பணவரவை அதிகரிக்கும்.

உணவில் புளி சேர்த்தால் பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.பட்டை சோம்பு பிரிஞ்சா இலை சேர்த்தால் கட்டுக்கடங்காத காமம் கொந்தளிக்கும்.

உப்பு,வெங்காயம்,சிறுகீரையால் செய்த உணவுகள் காமத்தை கூட்டும்.
சிறுகீரைத்தண்டு, பெருங்கீரைத்தண்டு காமத்தைக் குறைக்கும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்தைப் போக்குவதற்கு சக்திவாய்ந்த பரிகாரம் மகாலட்சுமி பூஜை செயவதே!

ஒரு கோடி பெண் பிறப்புகளில் ஒரு பெண்ணுக்கு
10 வயதிலேயே மாதத்தில் 20 நாட்கள் தீட்டு வரும்.அதை சரிசெய்யும் மூலிகை 24 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும். அதுவும் கொல்லிமலைக் காடுகளில் மட்டுமே விளையும்.

கருதோஷ நிவாரண மூலிகை என்று ஒரு மூலிகை உண்டு.இந்த மூலிகை 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்.இதன் இலையை உற்று நோக்கினால் அதன் நடுப் பகுதியில் ஒரு குழந்தை பெண்கருப்பையில் படுத்திருப்பது போல தோற்றமளிக்கும்.
இதை ஒரு பெண் பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் அவள் மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை பெறும் வலிமையடைவாள்.50 வருடங்களாக கருத்தரிக்காத பெண் கூட கருத்தரிக்கும் பாக்யம் பெறுவாள்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், பெண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு உறவு கொண்டால் போதும்.
ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்,அரவாணிகள் தாங்கள் விரும்பும் வகையில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற குறிப்பிட்ட திதி,நட்சத்திரம் உள்ள நாளில் இந்த் மூலிகையை சாப்பிடவேண்டும்.
நன்றி:அகத்தியர் ஜீவநாடி வழியே அகத்தியர் அவர்கள்

EVERY MAN HAS SOME SECRET WITH HIS LIFETIME

இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

ARE U TAMIL SPIRITUAL OR ASTROLOGICAL WRITER?WE ARE SEARCHING YOU


தமிழில் ஆன்மீகம்-ஜோதிடம் சார்ந்துள்ள பேச்சாளர்கள்,எழுத்தாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பல துறவிகள்-மகான்களின் விருப்பமாகும்.எனவே, நீங்கள் ஆன்மீக எழுத்தாளராகவோ-பட்டிமன்றப்பேச்சாளராகவொ
அல்லது ஜோதிட எழுத்தாளராகவோ-பேச்சாளராகவோ
இருந்தால் உங்களைப் பற்றி பின்வரும் முகவரியில் பதிவு செய்து கொள்ளவும்
ஆன்மீக-ஜோதிட எழுத்தாளர் பேரவை
ஞானமணி
கே.ஆர்.எஸ்(பத்திரிகையாளர்)
567,ஹவுசிங் யூனிட்,சிங்காநல்லூர்
கோவை-641005.
செல் எண்:091-98941-76811.
ஆதாரம்:ஜோதிடபூமி-ஆகஸ்டு 2006
மதுரையிலிருந்து வெளிவரும் ஜோதிட மாத இதழ்


Transcendental Meditation coaching centres in india


மகரிஷி மகேஷ்யோகி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நமது இந்து மதத்திற்குச் சொந்தமான ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத் துறவி.
இன்றைய தினசரி வாழ்வில் நிம்மதியாக வாழ்வது என்பதே-கோடீஸ்வர வாழ்வாகிவிட்டது.இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும்-திடீர்-திடீரென டென்ஷன் ஆகிவிடுகிறோம்.இதனால் நாம்-நமது உறவுகள்-நமது நிறுவனம் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைந்து விடுகிறது.அப்படி பாதிப்புகள் வராமல் இருக்க தியானம் அவசியமாகிறது.

தியானத்தில் பல வகைகள் உண்டு.உங்களுக்கு எது பொருந்துமோ அந்த தியானம் செய்யுங்கள்.தினமும் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டியது தியானம் செய்வதற்குத் தான்.
ஆழ்நிலை தியானம் தமிழ்நாட்டில் சில இடங்களில் சொல்லித் தருகிறார்கள்.பல்சுவைநாவல்-டிசம்பர் 2008 இதழில்-எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இந்த இதழில் ஆழ்நிலைதியானத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.ஆழ்நிலை தியானம் கற்றுத் தரும் இடங்கள்:
1.மகரிஷித் தோட்டம்,எண்:28,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை-31

3.காந்தி மியூசியம்,மதுரை

7.www.tm.org=இது மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைதியானப் பயிற்சியகத்தின் தலைமையகமான நெதர்லாந்து நாட்டில் உள்ள அவரது அமைப்பின் இணையதளமுகவரி.


Thursday, December 25, 2008

DROPS OF HINDU SPIRITUAL NEWS

ஒரு வரி இந்துமத உண்மைகள்:பகுதி-2

அ. சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடித்தார் அல்லவா?
அதற்கு ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியாவிற்கு வெளியே சுவாமி விவேகானந்தர் பிறந்துள்ளார்.அவர் இந்தியாவை மையமாகக் கொண்டு ஆன்மீகப் பணிசெய்ய உள்ளார்.

ஆ.மறுபிறவி,முன் ஜென்மம்,ஊழ்வினை போன்ற இந்துமத ஆதாரங்களை மேல்நாட்டு ஆய்வாளர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அவை அனைத்தும் உண்மை என்று அறிவித்துவிட்டனர்.

Monday, December 22, 2008

FIFTH MAJOR SINS(PANJAMAPAATHAM) WILL EVICT FROM US:PRAY SIVA MAHA MANTHIRAM

பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர...

கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பொய் சொல்லுதல்,ஏமாற்றுதல்-இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்லாமல் வாழ முடியாத அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது.இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும் சிவ மகாமந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷநாளில்-பிரதோஷ நேரத்தில்- கோவிலுக்கு உள்ளே-கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து-108 முறை மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.
இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஓம் ஆம் கவும் சொள(Ohm aam howm sow)-உச்சரிப்பு ஆங்கிலத்தில்

இதே மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில் ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில்-ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும் நீங்கும்.நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.இது அநுபவ உண்மை!!

Monday, December 15, 2008

PIONEER INVENTOR OF AIR:MR.DHAL PADAYE-AN INDIAN




விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.
அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.

உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.
1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)

அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII

அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.

இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.
வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

Thursday, December 11, 2008

ANCHESTOR'S POOJAI "S POWER

அவர்கள்:1)இறைவன்,2)பித்ரு தேவதைகள்,3)எமதர்மராஜன்,4)பித்ருக்கள்.
பித்ரு பக்திக்கு இணையானது எதுவுமில்லை.பித்ரு பூஜையைப் போல பலன் அளிப்பதும் வேறு எதுவும் இல்லை.
நன்றி;குமுதம் ஜோதிடம்-வார ஜோதிட இதழ் 1.11.2002 பக்கம் 14.
1.பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது கிரகண நேரம் அல்லது தமிழ் வருடப் பிறப்பு அன்று ஒரு மந்திரத்தை கடல் அல்லது ஆற்றில் நீராடி-ஈர உடையுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஒரு முறை ஜபித்தால்-
2 கோடி X 100 கோடி முறை ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
அதாவது,நாம் உள்பட 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் உடனே தீர்ந்துவிடும்.

2.ஆறுதல் சொல்வதும் ஒரு விதபுண்ணியமே!

3.ஜோதிடர்களில் பிராடுகள் உண்டு.ஒரிஜினல் ஜோதிடர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.தட்சினை கொடுக்குறதைக் குடுங்க என்று சொல்லுவார்.அல்லது 200-300 கேட்பார்.

4.ஜோதிடர்களில் கல்யாண ஜோதிடர் என்றும்,தொழில் விருத்தி ஜோதிடர் என்றும்,மரண ஜோதிடர் என்றும் பெயர் எடுத்தவர்கள் உண்டு.விசாரித்துக் கொள்வது நமது பொறுப்பு.

IMPORTENT RESPONSIBLE IS ANCHESTOR'S POOJAI TO EACH AND EVERY MAN AND WOMAN


பித்ரு பூஜை அசுப காரியம் அல்ல! அவசியம் செய்ய வேண்டிய சுப காரியம்-ஒவ்வொரு மனிதருக்கும்;
கேள்வி:காலம் சென்ற எனது மாமனாருக்கு வருடா வருடம் தவறாமல் திதி கொடுத்து வருகிறார் என் கணவர்.நான் ஒவ்வொரு அமாவாசை அன்றும்,என் மேல் எனது அப்பா போல பாசம் செலுத்திய என் மாமனாருக்காக வீட்டில் அன்னம் வைத்து படையலிட்டு,ஓர் அதிதி(விருந்தாளி)முதலில் உணவளித்துவிட்டு,வ்ஸ்திர தானமும் அளித்து வருகிறேன்.ஒரு சிலர்,சுமங்கலிகள் இவ்வாறு செய்வது தவறு என்று கூறி தடுக்கின்றனர்.என்ன செய்வது?
திருமதி ஜெயலட்சுமி,அடையாறு

பதில்: (திரு.ஏ.எம்.ஆர்.அவர்கள்)பித்ருக்களை பக்தியுடன் பூஜிப்பது பற்றி பலர் பலவிதமாக பேசுவதற்குக் காரணம் பித்ருபூஜை என்பது அசுப காரியம் எனப் பலரும் நினைப்பதுதான்.இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
இறைவனை பூஜிப்பது எந்த அளவிற்கு புனிதமானதோ,எந்த அளவிற்கு அவசியமானதோ அந்த அளவிற்கு புனிதமான கடமை ஆகும்.பித்ரு பூஜை என்பது!
தன் பிள்ளைக்குத் தங்களை திருமணம் செய்து கெஒண்டதன் மூலம் தங்களுக்கு ‘சுமங்கலி’ என்ற அந்தஸ்த்தினை அளித்தவரே அவர்தான்.ஆதலால்,தாங்கள் அமாவாசை அன்று தங்கள் மாமனாரை நினைத்து செய்துவரும் பூஜையை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.பித்ரு பூஜைக்குப் பிரதியாக நமக்கு ஆசி வழங்கி அனைத்து நன்மைகளையும் அளிப்பவர்கள் நால்வர் எனப் புராதன நூல்களும்,ஸ்ரீமத் மகாபாரதமும்,கருடபுராணமும் விளக்கி உள்ளன.

Thursday, November 27, 2008

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்கவைக்கும் சனிபகவான் கோவில்




ஆன்மீகக் கடல்-6 அறிவியல்பூர்வமான இந்து மதம்-1

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை... ?

Wednesday, November 26, 2008

ஆன்மிகப் பாதையில் முன்னேற...படிக்க வேண்டிய புத்தகங்கள்:


1.கர்ம யோகம்-சுவாமி விவேகாநந்தர்-ரூ.25/-
ஸ்ரீஇராமகிருஷ்ணமிஷன் & மடம்,
ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் சாலை,
மயிலாப்பூர்,சென்னை-4.
2.ராஜ யோகம்-சுவாமி விவேகாநந்தர்
3.வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்-ஒஷோ
ஒஷேஓ வெளியீடு,தமிழ்நாடு.
4.ஒரு யேஓகியின் சுயசரிதை-பரமஹம்ஷ யோகாநந்தர்
புதிய பதிப்பு
5.எழுத்துசித்தர் பாலகுமாரன் அவர்களின் எல்லா நாவல் களும்
6.எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் அவர்களின் எல்லா
படைப்புகளும்
7.பதந்ஜலி யோக சூத்திரம்-ஸ்வாமி
இந்து பப்ளிகேஷன்சு,தி.நகர்,சென்னை.
8.விழிமின்...எழுமின் - சுவாமி விவேகாநந்தர்
விவேகாநந்தர் கேந்திரம்,விவேகாநந்தபுரம்,
கன்னியாகுமரி.
*இந்தியாவில் பிறந்த எவரும் இந்த புத்தகதை அவசியம் படிக்க வேண்டும்.உங்களது குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தினை படிக்க தர வேண்டும்.
9.மறைந்திருக்கும் உண்மைகள்-ஒஷேஒ
-இந்த புத்தகம் நம்மை ஆச்சர்யப் படுத்தும்.நமது இந்து சமயம் எவ்வளவு அறிவியல்பூர்வமானது என்பதை விளக்குகிறது.

வறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்


உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா
?

கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக

யாரெல்லாம் காமப்பிரச்னைகள்/அவமானங்களில் சிக்குவர்?அதிலிருந்து மீள என்ன வழி?


இன்று-2008 பெரும்பாலும் ராகுதிசா நடப்பவர்களே ஐ.டி.பணிகளில் உள்ளனர்.ராகு என்பது யோகக்காரன் என்று கொள்ளப்படுகிறான்.ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் உருவாகுவதும்,சொத்துக்கள் இழப்பதும் ராகுவின் விளையாட்டு.
திருடா த்ருடி படத்தில் கதாநாயகியின் கால் 2-ஆம் விரல் நீண்டிருக்குமே-அப்படிப் பட்ட கால் விரல் அமைப்புள்ள பெண்களுக்கு நிஜமாகவே காமத்தில் திருப்தி கிடைப்பது அரிது.இவர்கள் ராகுவின் அம்சமே! இவர்கள் கணினி வேலைகளில் படு வேகமாக செயல்படுவார்கள்.
மனித உடல் உறுப்புக்களில் பிறப்பு உறுப்பின் செயல்பாட்டினே நிர்ணயிப்பது,அதிரடி மாற்றம் ஏற்படுத்துவதும்,குற்றங்கள் செய்யத் தூண்டுவதும்,அந்த குற்றங்கள் எப்படி நடந்தது என்பதை கண்டு பிடிப்பதற்கு புலனாய்வு செய்யும் திறமையினைத் தருவதும்,முறையற்ற உறவுகள்,குழு உறவுகள்,குறுகிய காலத்திற்குள் பல லட்சம் பேரினை பாதிக்கச் செய்தல்(அதாவது ஒரு வதந்தியை மின் அஞ்சல் மூலமாக சில நிமிடங்களில் பல லட்சம் பேரைச் சென்றடையச் செய்வது)-இவை எல்லாம் ராகுவின் குணநலன்கள்.
இதற்கு ஒரு சுலப பரிகாரம் உண்டு.அது என்னவென்றால்,தினமும்,உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு அம்மன் கோவில்(உதாரணமாக பத்திரகாளி அம்மன் அல்லது உக்கிர பெண் தெய்வம்)தினமும் ஒரு வேளை சென்று வழிபட்டு வர வேண்டும். அதே சம்யம் வீட்டிலும்-வெளியிலும் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.(இல்லாவிட்டால் ரத்தகாயம் வழிபடுவோருக்கு ஏற்படும்)
யாருக்கு ராகு திசை நடக்கிறதோ அவர்கள் அல்லது அவர்களது ரத்த உறவுகள் வழிபட்டு வருவதோடு,வெள்ளிக்கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12.00 வரை-அதுவும் 11.30-12.00=கடைசி அரை மணி நேரம் மிக முக்கியம்.அந்த நேரத்தில் எலுமிச்சம்பழத்தில் தாமரை தண்டு திரியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.
தவிர,ராகு வின் கிழமை ஞாயிறு ஆகும்.அன்று மாலை 5.30-6.00 மணிக்கு மேலே எழுதியது போல தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.இப்படி ராகு திசா காலம் முழுவதும் 18-ஆண்டுகள் வரை வழிபட்டு வந்தால் கல்யாண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
திருவாதிரை,சுவாதி,சதயம்-இந்த நட்சத்திரத்தில் பிறந்த எல்லேஈரும் மேற்சொன்ன வழிபாடு செய்து வந்தால் 2-3 ஆண்டுகள் கடந்த பிறகு உங்கள் திருமண வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.இதுவும் அனுபவ உண்மை.

கலியுகம் எப்படி இருக்கும்?



ஒரு வரி உண்மைகள்:

கி.பி.2011 முதல் இந்தியாவினை சித்தர்கள் ஆளப் போகிறார்கள்.


2009-2015 வரை உலகத்தின் பெரும் பகுதிகள் அழியப் போகிறது.
2009 முதல் 300 வருடங்களுக்கு உலகம் முழுக்க இந்து சமயம் பரவப் போகிறது.அதே சமயம்,நமது நாட்டில் ஒழுக்கம் அழிந்து விடும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது இனிமேல் இருப்பது சந்தேகம் தான். இப்பவே அப்படித்தான்னு சொல்றீங்களா?விரைவில் கணவன் சம்மதத்துடன் மனைவிமார்கள் விபச்சாரம் செய்வார்கள்.இந்த அசிங்கம் தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரத்தில் கி.பி.2000 முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது.
பொறுப்பற்ற- மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளால் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.சம்பளம் அதே வேகத்திற்கு உயரவில்லை.நேர்மையாக வாழ்பவர்கள் ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு நிலை மோசமாகப் போகிறது.குழந்தைகளைப் பெற்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?


விரைவில் தங்கம் விலை படுபாதளத்தில் விழும்.

2010 முதல் ஒரு ருபாய் யினை 50 டாலர் கொடுத்து உலகம் வாங்கப்போகிறது.உலகத்திற்கு நமது இந்தியா உணவு தந்து கொண்டே இருக்கும்.
2100 க்குள் பாகிஸ்தான் இந்தியாவுடன் இணயும்.
2010 முதல் வெளி நாட்டினர் இந்தியா வந்து தியானம்,யோகா,சோதிடம்,மந்திரம்,சிலம்பம்,சிற்பக் கலை கற்கப் போகிறார்கள்.
பணக்காரனுக்கும் ஏழ்மைக்கும் இடைவெளி அதிகரிக்கத் துவங்கி விட்டது.எனவே,விபச்சாரம் இந்தியா வின் ஒரு சமுக அங்கமாகிவிடும்.
ஓரின சேர்க்கைத் திருமணங்கள் இந்தியாவில் சகஜமாகப்போகிறது.
கலியுகத்தின் முடிவில் 10 வயதிற்குள் பேரன் பேத்தி எடுக்குமளவிற்கு ஒழுக்கம் அழிந்துவிட்ட ஒரு மரபாகிவிடும்.
காமரீதியான துணைகள் மட்டுமே ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.

Tuesday, November 11, 2008

கணபதி காயத்ரி மந்திரம்


வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.
கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!