Saturday, October 1, 2011

குமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந்து






கேள்வி: ‘வெள்ளிமணி’ காலத்திலிருந்து தங்களின் எழுத்துக்களின் ஈர்ப்பில் மனதைக் கொடுத்தவன் நான்.இந்தியாவின் ஜாதகத்தைப் பற்றி பல விளக்கங்களை அவ்வப்போது கூறிவருகிறீர்கள்.அவை உண்மையாக இருப்பதையும் பார்த்து வருகிறோம்.



ஆனால்,நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஜாதகம் பற்றியும் தாங்கள் அவ்வப்போது எழுதி வரவேண்டும்.ஏனெனில்,அந்த நாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நம் நாட்டைப் பாதிக்கின்றன.மேலும் நம் நாட்டை எதிரியாகக் கருதிச் செயல்பட்டுவருகிறது பாகிஸ்தான்.



ஆதலால்,ஏதோ ஒரு வகையில் பாகிஸ்தானின் ஜாதகத்திற்கும்,நம் நாட்டிற்கும் தொடர்பு உள்ளது தெரிகிறதல்லவா! ஆதலால்தான்,அந்நாட்டின் ஜாதகத்தைப் பற்றியும் கூற வேண்டுகிறோம்.



பதில்: தாங்கள் கூறியிருப்பவை அனைத்தும் முற்றிலும் உண்மையே! பாகிஸ்தான் ஜாதக கிரகநிலைகளுக்கும்,இந்திய நாட்டிற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.



கொலையிலும்,கொள்ளையிலும்,கற்பழிப்பிலும் தோன்றியது பாகிஸ்தான்.இந்தியா பிளவுபடுத்தப்பட்டபோது,பாகிஸ்தான் பகுதியில் இந்துக்கள் கொடூரமான முறைகளில் கொல்லப்பட்டதை ‘நியூயார்க் டைம்ஸ்’ ‘லண்டன் டைம்ஸ்’ போன்ற உலகப் பிரசித்திபெற்ற பத்திரிகைகள் விவரமாக வெளியிட்டிருந்தன.



தாங்கள் அனைவரும்,ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான்.பல வழிகளிலும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் என்பதை மறந்து இந்துக்களைக் கொன்று குவித்தனர் பாகிஸ்தானியர்கள்.பல பாகிஸ்தானியர்களின் வீடுகளில் ஏராளமான இந்துப்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு,கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு,பின்னர் படுகொலை செய்யப்பட்டனர்.கணக்கற்ற பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு,பாகிஸ்தானியர்களுக்குப் பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.பல பாகிஸ்தானியர்களுக்கு இதனால் பல ‘மனைவிகள்’ ஏற்பட்டனர்.இவை அனைத்தையும் மேலை நாட்டுப்பத்திரிகைகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளன.



எவ்விதம் தனிப்பட்ட மனிதர்களுக்கு ‘பாவம்’

‘புண்ணியம்’ என்ற தர்மநெறி முறைகள் உள்ளனவோ,அதே தர்மநெறிமுறைகள் நாடுகளுக்கும் உண்டு.நாட்டை அரசாளுபவர்களுக்கும் உண்டு.



நிரபராதிகளான இந்துக்களை அன்று கொன்று குவித்த பாவம்தான்,இன்று பாகிஸ்தானியர்களை,பாகிஸ்தானியர்களே கொன்று வருகின்றனர்.பல்லாயிரக்கணக்கான இந்துப் பெண்கள் அன்று கதறி,அவர்கள் நெஞ்சில் பெருகிய கண்ணீர்தான் இன்று பாகிஸ்தான் மக்களை சுட்டெரிக்கிறது.



1990 ஆம் ஆண்டில் ‘தினமணி தீபாவளி மலரில்’ “21 ஆம் நூற்றாண்டில் உலகம்’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் ஜாதகப்படி, அந்த நாட்டில் உள்நாட்டுக்கலவரங்கள் ஏற்படும் என்பதையும்,பாகிஸ்தானின் ஒரு பகுதி சீனாவின் ஆதிக்கத்திலும்,ஒரு பகுதி ஆப்கானிஸ்தானின் ஆதிக்கத்திலும் சென்றுவிடும் என்பதையும்,எஞ்சிய குறுகிய பகுதி மட்டும்தான் பாகிஸ்தானாக இருக்கும் என்பதையும் நாங்கள் எழுதியுள்ளதை வாசக அன்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.



என்று பாகிஸ்தான் தனது தவறை உணர்ந்து,நேர்மை,தர்மம் எனும் பாதையில் திரும்புகிறதோ,அன்றுதான் அதற்கும் அதன் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.





இந்தியாவை அழித்தால்தான் தான் வாழமுடியும் என்று இனியும் செயல்பட்டால்,அந்நாடு அடியோடு அழிந்துவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இவ்விதம் பாகிஸ்தான் விதியுடன் விளையாடுகிறதே என்பதை நினைத்துத்தான்,நாங்கள் அந்நாட்டின் ஜாதகத்தைப் பற்றி விமரிசிப்பதில்லை.

தங்கள் கடிதங்களுக்கு மீண்டும் நன்றி!



ஆன்மீகக்கடலின் கருத்து:மதம் என்ற போர்வையில் பாகிஸ்தான் செய்த அட்டூழியங்களை ,இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி,கம்யூனிஸ்டுகள்,ஜாதிக்கட்சிகள் வாய் திறக்காது.(இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நகரங்கள்,மாவட்டங்களில் இதே கொடூரங்கள் 1947 முதல் இன்று வரை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.உதாரணங்கள்:தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டிணம்,கேரளாவில் மலப்புரம் மாவட்டம்,கோயம்புத்தூரில் இருக்கும் கோட்டைமேடுபகுதி. . .)ஏனெனில்,இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டு வருகின்றனர்.எனவே,இந்தக்கட்சிகளுக்கு இந்திய நலன் முக்கியமில்லை;சிறுபான்மையினர் ஓட்டுக்களும் அதன்மூலமாக அதிகாரமும்,அதனால் கொள்ளையடிப்பது மட்டுமே முக்கியம்.



இதன் உச்சகட்டமாகத்தான் நேற்று(30.9.11) காஷ்மீர் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்திருக்கின்றனர்.இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கி,பிடிபட்டு,இந்திய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவனுக்கு,ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர்.இதை விடக் கேவலம் எதுவும் உண்டா?



இந்துக்களை ஒருங்கிணைக்கவிடாமல் தடுக்கவே ஜாதிக்கட்சிகள் ஆரம்பிக்கவும்,வளர்க்கவும் இஸ்லாமிய,கிறிஸ்தவ அமைப்புக்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துக்கொண்டே இருக்கின்றன.இதில் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சவுதி நாட்டின் உளவு அமைப்புகளின் சித்துவேலைகளும் உண்டு.இதை காங்கிரஸ் தடுக்கக் கூட செய்யாது.இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் உளவுத்துறையின் பைல்களில் தூங்கிக்கொண்டிருக்கும் அல்லது செத்துக்கொண்டிருக்கும்?!








1 comment: