Saturday, July 15, 2017

சிவனுக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துவது எப்படி?



உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆண் உயிரினத்துக்கும் ஒரு பெண் உயிரினம் துணையாக இருக்கின்றது;
உலகத்தை காத்து ரட்சிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு துணை சக்தி இருக்கின்றது;


காசிக்குச் சென்று கால பைரவப் பெருமானை வழிபட்டால்,அவர் உடனே வரம் தந்துவிடுவார்;அப்படி படுவேகமாக வரம் வரும் போது நமது உடல் சில சமயங்களைத் தவிர பெரும்பாலான நேரத்தில் முழுவரத்தை ஏற்றுக் கொள்ளாது;அதை கவனிக்கும் கால பைரவப் பெருமானின் துணை சக்தியாகிய கால பைரவி என்ற வராகி வரத்தை முழுமைப்படுத்துவது வழக்கம்;


யார் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை வழிபட்டு/ஜபித்து/துதித்து/உபாசித்து வருகின்றார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் அன்னை மஹாவராகியை வழிபடும் பெரும்பாக்கியம் கிட்டும்;

வெகு அரிதான சிலருக்கு இக்கலியுகத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து மஹாகால பைரவப்பெருமானின் புகழைப் பரப்பியவாறு தினமும் ஒரு மணி நேரம் வரை பைரவ ஜபம் செய்து வந்தால்,அவரது கருணையால் மஹாவராகியின் வழிபாடு தேடிவரும்;


அதே போல,சதாசிவனை தொடர்ந்து வழிபடுபவர்கள் அடுத்து வரும் சில பிறவிகளில் அன்னையின் அருமை பெருமைகளை உணர்ந்து அவளைச் சரணடயும் சூழ்நிலையும் உருவாகும்;
மலரில் இருக்கும் வாசம் போல;நெருப்பில் இருக்கும் ஒளி போல;சிவனின் வடிவில் சக்தியும் அடக்கம்;


எல்லாவிதமான கவலைகளுக்கும் மருந்தாக இருப்பது மஹாவராகியின் மந்திர ஜபமே! எல்லாவிதமான மாந்திரீகத் தடைகளையும் உடைத்து துவம்சம் செய்வது மஹாவராகியின் அருள்;

அவளது 12 பெயர்களை தினமும் இரவில் ஒரு மணி நேரம் வரை ஜபித்து வந்தாலே போதும்;நேர்மையாக வாழத் துடிப்பவர்களுக்கு குலதெய்வமாக பாதுகாப்பாள்;

ஆன்மீகத்தை முகமூடியாக கொண்டு அட்டகாசம் செய்யும் மந்திரவாதிகளை உருத்தெரியாமல் நிர்மூலமாக்கிவிடும் சக்தி மஹாவராகி ஜபத்திற்கு உண்டு;


ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களை இரவுப்பொழுதில் நமது வீட்டில் ஒரு பச்சைத் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர வேண்டும்;ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமும்,இன்னொன்றில் நெய் தீபமும் ஏற்றி வைக்க வேண்டும்;அன்னை மஹாவராகியின் படத்தை/சிலையை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;

அன்னை மஹாவராகியின் முகத்தைப் பார்த்தவாறு ஜபித்து வருவது ஒரு ரகசிய ஜப முறை ஆகும்;அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருந்தால் மட்டும் தான் அன்னையின் அருள் கிட்டும்;

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை விடாப்பிடியாக ஜபித்து வந்தால் வாழ்க்கையின் அனைத்து துக்கங்களும் நாசமாகிவிடும்;

விரைவான பலன் வேண்டுவோர் ஏதாவது ஒரு பஞ்சமி நாளில் இருந்து 90 நாட்களுக்கு தினமும் ஐந்து முறை வராகி மாலை என்ற வராகி பரணியை ஜபித்து வரவேண்டும்;முறையான உபதேசம் பெற எமது வாட்ஸ் அப் +91 9092116990,9364231011 க்கு தொடர்பு கொள்ளவும்;

கோணல் இல்லாத தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வைத்து ஜபித்து வந்தால் காரிய வெற்றிகள் கிட்டிக்கொண்டே இருக்கும்;ஒவ்வொரு காரிய வெற்றி கிட்டியதும் அன்னை மஹாவராகிக்கு உடனே மானசீகமாக நன்றிகள் தெரிவிக்க வேண்டும்;

ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை;ஒவ்வொரு பஞ்சமி,அஷ்டமி திதிகள்;ஒவ்வொரு (வழிபடுபவர்களின்) ஜன்ம நட்சத்திர நாட்களிலும் அன்னை மஹாவராகிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் படையல் வைக்க வேண்டும்;சுக்கு அதிகம் சேர்த்த காரமான பானங்களை அன்னை மஹாவராகிக்குப் படைக்க வேண்டும்;


ஒரு குடும்பத்தில் கணவர் மஹாவராகியையும்,மனைவி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரையும் தொடர்ந்து ஜபித்தும்,பூஜித்தும் வந்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடும்பத்திற்கு துக்கங்கள் முழுமையாக நாசமாகியிருக்கும்;வறுமை ஒழிந்து மகத்தான பணக்கார வாழ்க்கை வாழ ஆரம்பித்திருப்பார்கள்;சிலருக்கு இந்த கால அளவு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு உபதேசித்த உபாசனை குலபதி ஸ்ரீதுர்கை சித்தர் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!


மஹாகால பைரவ உலகம்


உலகங்களில் நாம் வாழ்ந்து வருவது மட்டுமே கர்மலோகம் ஆகும்;இங்கே நிறைய புண்ணியச் செயல்கள் செய்தால்,இறந்தப் பின்னர் அதற்கு தகுந்தாற்போல இந்த கர்மலோகத்திற்கு மேலே இருக்கும் ஏழு புண்ணிய உலகத்தில் ஏதாவது ஒரு உலகத்திற்குச் செல்வோம்;அங்கே சகல சுகபோகங்களையும் குறிப்பிட்ட காலம் வரை அனுபவிப்போம்;பிறகு,மீண்டும் இந்த பூமியில் செல்வந்தராக பிறப்போம்;

இங்கே ஆடாத ஆட்டங்கள் ஆடினால்,மரணத்திற்குப் பிறகு இந்த கர்மலோகத்திற்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகத்திற்கு அனுப்பப்படுவோம்;அங்கே உரிய தண்டனைகளை அனுபவித்துவிட்டு மீண்டும் இதே கர்மலோகத்தில் பரம ஏழையாக பிறக்க வேண்டும்;


இதே போல சிவலோகம்,விஷ்ணு லோகம்,கோ லோகம்,முனி லோகம்,வராகி உலகம்,பைரவ உலகம் என்று பலவிதமான உலகங்கள் இருக்கின்றன;


பிறந்த குழந்தைகளுக்கு நாய் வடிவத்தில் அரைஞாண்கயிறு அல்லது தாயத்து கட்டும் பழக்கம் பாரதம்,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கப்பூர்,பங்களாதேஷ்,மியான்மர்,நேபாளம்,திபத்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது;


நம் ஒவ்வொருவருக்கும் துணிச்சல் என்ற உணர்வாக இருப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!ஈசனாகிய சிவபெருமான் ஒரு போதும் அவதாரம் எடுப்பது இல்லை;தேவைப்படும் போது தமது சக்தியில் ஒரு பகுதியை வெளிப்படுத்துவார்;அவர் தான் மஹா கால பைரவப் பெருமான்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக பல மகான்கள் பைரவ உபாசனை மிகவும் கடினம் என்பதை உணர்ந்துள்ளார்கள்;அதனால்,அவர்கள் மிகவும் சுலபமான ஒரு வழிமுறையைக் கையாண்டார்கள்;


மாயம்மா,ஷீர்டி சாய்பாபா,ரமண மகரிஷி,சேஷாத்திரி மகரிஷி மற்றும் பல ஆயிரக்கணக்கான சாமியார்கள்(உதாரணமாக வெள்ளை வேட்டி சாமிகள்,புண்ணாக்கு சுவாமிகள்) தினமும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவிடுவதை ஒரு முக்கியமான கடமையாக செய்து வந்தார்கள்;அப்படிச் செய்து வந்தமையாலேயே மஹா கால பைரவப் பெருமானின் ஆசிகளையும்,அட்டமாசித்துக்களையும் பெற்றார்கள்;

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி வரும் இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் வந்தார்கள்;அப்படி வரும் போது மஹாகால பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவு இட்டார்கள்;இவைகள் அனைத்தும் கடந்த 17 ஆண்டுகளில் ஆன்மீகத் தேடல்களோடும்,பலவிதமான பைரவ வழிபாடு பற்றிய பழமையான ஓலைச்சுவடிகளை வாசித்தும்,நாடிகள் கண்டும்,ஆன்மீக வழிகாட்டிகளிடம் பணிந்தும் குரு உபதேசமாகப் பெற்றவைகளை சில வரிகளில் உங்களுக்கு கொடுத்திருக்கின்றோம்;


ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளும்,தை மாத செவ்வாய்க்கிழமைகளும் பைரவ வழிபாடு மற்றும் வராகி (சமஸ்க்ருதத்தில் வாராஹி) வழிபாட்டிற்கு ஏற்றது;


ஹேவிளம்பி வருடத்தின் ஆடிச் செவ்வாய்க்கிழமைகள்;

18.7.2017
25.7.2017
1.8.2017
8.8.2017
15.8.2017(ஆடி மாதத் தேய்பிறை அஷ்டமி)


இந்த நாட்கள் முழுவதும் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அனைத்து சன்னதிகளையும் வழிபட்டுவிட்டு,முடிவாக கால பைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்துவரவேண்டும்;சிகப்பு நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;இம்முயற்சியை எல்லோருக்கும் தெரிவித்து செயல்படுத்துவது தவறு;

வசதி உள்ளவர்கள் இந்த நாட்களில் வரும் குளிகை காலத்தில் (மதியம் 12 முதல் 1.30) அபிஷேகம் செய்யலாம்;பூசாரிக்கு அவர் மனம் குளிரும் விதமாக குருதட்சணை தருவது அவசியம்;    இயலாதவர்கள் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;இந்த நாட்களில் குறைந்தது எட்டு தெரு நாய்களுக்கு பிஸ்கட்,ரொட்டி போன்ற உணவுகளைத் தர வேண்டும்;(வளர்ப்பு நாய்களுக்கு இது பொருந்தாது)


சில ஊர்களில் ஊருக்கு வெளியே தனித்த பைரவர்கள் அநாமதெயமாக இருக்கின்றார்கள்;அவர்களுக்கு சிவலிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்வோமோ அதே போல அவருக்கு அபிஷேகம் செய்யலாம்;(அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் தான் பலன் உண்டு)
சந்தர்ப்பம் அமையும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாட்களில் இரவுப் பொழுதில் திரு அண்ணாமலை கிரிவலம் வரலாம்;


வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நாட்களில் மஹா கால பைரவப் பெருமானின் அட்ட வீரட்டானங்களுக்குப் பயணம் செய்யலாம்;

1.தஞ்சாவூர் அருகில் இருக்கும் திருகண்டியூர் ப்ரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில்

2.பண்ருட்டி அருகில் இருக்கும் திருஅதிகை 

3.மயிலாடுதுறை அருகில் இருக்கும் திருப்பரசலூர்  

4.திருக்கடையூர் மற்றும் திருக்கடையூர் மயானம் 

6.மாயவரத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் வழுவூர் பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்

7.திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி

 8.மயிலாடுதுறையில் இருந்து மணல் மேடு செல்லும் சாலையில் இருக்கும் குறுக்கை 

9.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வாழும் சிதம்பரம்


கர்மவினைகளை நீக்கும் முதல் கடவுளும்,ஜோதிடர்களின் முதல் தெய்வமுமாகிய மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுவோம்;


காலத்தை வரையறுத்துத் தந்த ஸ்ரீவாரதாரகர் சித்தரை உபாசனை செய்துதான் ஆர்யபட்டரும்,பாஸ்கராச்சாரியாரும் அழியாத புகழ் பெற்ற ஜோதிட நூல்களை எழுதினார்கள்;


ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்:



ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய்
லோகேஸ்வராய ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷணாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!
இம்மந்திரத்தை முறைப்படி ஒரு குரு அல்லது சிவாச்சாரியார் அல்லது பட்டர் அல்லது ஆஸ்தான ஜோதிடர் மூலமாக உபதேசமாக பெற வேண்டும்; அதன் பிறகே,தினமும் ஜபிக்க வேண்டும்;
முழுமையான வழிபாட்டுமுறையை எழுத்தில் கொண்டு வந்தாலும் நேரடியான உபதேசமே சிறந்தது;
செல்வ வளத்தை அள்ளித்தரும் அற்புத மந்திரம் இது;
முறையான வழிபாட்டுமுறைக்கு உங்கள் ஜனன ஜாதகத்துடன் 9092116990க்கு வாட்ஸ் அப் செய்யவும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஹேவிளம்பி,ஆடி மாதம்,16.7.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று   காலை 10.19 முதல் 17.7.2017 திங்கட்கிழமை (ஆடி மாதம் முதல் நாள்) காலை 8.34 வரை  தேய்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை துதிக்கலாம்;இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை;
ஞாயிற்றுக்கிழமை குளிகை காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 வரை;

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது,இங்கேதான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்தார்)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
35.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

36.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

37.அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம் ஜபிக்கலாம்;
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய்
லோகேஸ்வராய ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷணாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!


அடுத்த தேய்பிறை அஷ்டமி:

ஆடி மாத தேய்பிறை அஷ்டமி 14.8.2017 திங்கட்கிழமை மாலை 6.15 முதல் 15.8.2017 செவ்வாய்க்கிழமை மாலை 4.03 வரை;(ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது தேய்பிறை அஷ்டமி இது)

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Friday, July 14, 2017

இறைநாம ஜபம் தரும் செல்வ வளம் யோகம்!!!


கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!


எனவே,யார் இவைகளை(அசைவம்,மது,புகைப் பழக்கங்கள்) நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும்     33 முறை பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;


இன்று முதல் ஏழாம் நாள் வரை தினமும் இந்த பாடலை ஒரு  முறை ஜபிக்க வேண்டும்;
8 ஆம் நாளில் இருந்து 14 ஆம் நாள் வரை தினமும் ஏழு முறை ஜபித்து வர வேண்டும்;
15 ஆம் நாளில் இருந்து 21 ஆம் நாள் வரை தினமும் இந்தப் பாடலை 14 முறை ஜபிக்க வேண்டும்;
22 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 21 முறை ஜபிக்க வேண்டும்;
29 ஆம் நாளில் இருந்து 35 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 28 முறை ஜபிக்க வேண்டும்;
36 ஆம் நாளில் இருந்து 1008 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 33 முறை ஜபிக்க வேண்டும்;

இப்படி தொடர்ந்து ஜபித்து வரும் போது,90 வது நாளுக்குப் பிறகு 180 வது நாளுக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ உபாசகர்களில் ஒருவரை சந்திக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டாகும்;அவர் உங்களுக்கு முழுமையான வழிபாட்டுமுறையை போதிப்பார்;(இணையத்தில் எந்த ஒரு தெய்வீக ரகசியமும் முழுமையாக வெளியிடப்படுவதில்லை)

ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில்   வடக்கு நோக்கி நெய்தீபம்  ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி வைக்க வேண்டும்;


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.


ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;

இப்படி தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால் சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில் அதிகரிக்கத் துவங்கும்;


ஜோதிடர்களாக இருப்பவர்கள் தாமும் செல்வந்தராகி,தம்மை நாடி வந்தவர்களையும் செல்வந்தர்களாக மாற்றிட இப்பாடலை 7,00,000 முறை ஜபித்திருக்க வேண்டும்;


இம்முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில் புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகில் அமைந்திருக்கும் பொன்பேத்தி ஸ்ரீபவானீஸ்வரர் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்;அன்று முழுவதும் அல்லது ராகு கால நேரம் முழுவதும் அல்லது குளிகை கால நேரம் முழுவதும் இப்பாடலை ஜபிக்க வேண்டும்;இங்கேதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தோன்றினார்;


ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால் நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்;



Thursday, July 13, 2017

மஹாகால பைரவப் பெருமானின் சாபம் உருவாகும் விதமும்;தீர்க்கும் வழிமுறைகளும்


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் மஹாகால பைரவப் பெருமான்;பரமேஸ்வரனின் ஆணைப்படி,அவரது பிரதிநிதியாக காலதேவனாக பரிபாலனம் செய்துவருகின்றார்;

நவக்கிரகங்களில் சனிக்கிரகம் தான் நம் ஒவ்வொருவருடைய ஆயுள் மற்றும் தொழிலை நிர்வாகித்துவருகின்றார்;இவருக்கு நவக்கிரகப் பதவி கொடுத்தவர் மஹாகால பைரவப் பெருமான்!
எனவே,யார் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை துதிக்கின்றார்களோ,அவர்களுக்கு சனியின் தாக்கம் இராது;

குறிப்பாக,ஏழரைச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி,அஷ்டமசனி நடப்பில் இருப்பவர்கள் அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு தினமும் 108 முறை அல்லது 1008 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்து வரவேண்டும் அல்லது எழுதி வரவேண்டும்;


ஒரு நாளுக்கு 10,008 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஒருவருடம் எழுதி வந்தாலே மஹாகால பைரவப்பெருமானின் அருள் கிட்டிவிடும்;


ஒவ்வொரு ஆலயத்திலும் வடகிழக்கு மூலையில் க்ஷேத்திரபாலராக இருந்து கோவிலை பாதுகாத்துவருபவரும் இவரே!நவக்கிரகங்களின் தலைவரும் இவரே;வாஸ்துவின் தலைவரும் இவரே!


ஒவ்வொரு சிவாலயத்திலும்,குலதெய்வக்கோவில்களிலும் மஹாகால பைரவப் பெருமான் இருக்கின்றார்;சில குலதெய்வக்கோவில்களில் வீரபத்திரர் இருக்கின்றார்;


அதே போல,ஒவ்வொரு மஹாவிஷ்ணு ஆலயங்களிலும் க்ஷேத்திரபாலராக இருந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்! சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த சுவாமிக்குப் பதிலாக சக்கரத்தாழ்வாரை அறிமுகப்படுத்திவிட்டார்கள்;
கோவில்களை முறையாக பராமரிக்காமல் விட்டால் அது பைரவ சாபத்தை தந்துவிடும்;


கோவிலில் முறையாக நடைபெறும் பூஜைகளை தடுத்தாலோ,பூஜைக்குரிய ஆச்சாரியார்கள்,உதவியாளர்கள்,மணியம் போன்றவர்களை நியமிக்காமல் இருந்தாலோ அதுவும் பைரவ சாபத்தை தந்துவிடுகின்றது;இன்றைய காலகட்டத்தில் கோவில் ஈ ஓ க்களே இம்மாதிரியான வேலைகளை தமது அதிகாரத்தின் மூலமாக செய்வது தமிழ்நாட்டில் ஆங்காங்கே செய்துகொண்டிருக்கின்றார்கள்;அதனால் தான் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை முறையாக செயல்படுகின்றதா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கின்றது;


குலதெய்வம் கோவில்,பழமையான கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பதும்; இந்து ஆலயங்களை சர்ச் அல்லது மசூதியாக மாற்றுவதும் கடுமையான பைரவ சாபங்களை தருகின்றன;


கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் மிகவும் குறைந்த வாடகைக்கு இருந்து கொண்டு அந்த வாடகையையும் தராமல் இருப்பதால் அந்த கோவிலில் ஒரு கால பூஜை கூட நடக்காமல் இருக்கும் துர்ப்பாக்கியம் வந்தால் கடை வைப்பவர்களுக்கு 24 தலைமுறை பைரவ சாபம் துரத்தும்;


சில ஆலயங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு வாங்கி,அதில் விளைச்சல் வரும் காலங்களில் முறையாக தரவேண்டிய விவசாயப் பொருட்களைத் தராமல் இருந்தாலும் பைரவ சாபம் ஏற்படுகின்றது;

கோவிலுக்குள்ளும் கோவில் எல்லையில் இருந்து 300 மீட்டர்கள் தொலைவில் கெட்டவார்த்தைகள் பேசினாலும்,ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பைரவ சாபம் ஏற்படும்;


சில பல பூசாரிகள் பூஜை செய்வதை வேலையாகவே நினைக்கின்றார்கள்;இதனால்,குளிக்காமல் பூஜை செய்பவர்களும் பெருகி வருகின்றார்கள்;சிலர் மதியம் அசைவம் சாப்பிட்டுவிட்டும் பூஜை செய்ய வருகின்றார்கள்;இவர்களெல்லாம் பரிகாரத்திற்கு உட்படாத பைரவ சாபங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;


இவைகளைச் செய்வதில் நாத்திகவாதிகளும்,தி.மு.க.வினரும் முன்னணியில் இருக்கின்றார்கள்;பக்தியாக இருந்த தமிழ்நாட்டை இலுமுனாட்டிகளின் கட்டளைப்படி சீரழித்துவிட்டார்கள்;இவர்களுக்கும் பைரவ சாபம் கடுமையாக இருக்கின்றது;


அறங்காவலர் குழுவில் இருந்து கொண்டு வழக்கமான வருடாந்திர பூஜை அல்லது சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளில் தேவையில்லாமல் தலையிட்டு அதை ஒழுங்காக நடைபெறவிடாமல் தடுப்பதன்(நாத்திகர்களும்,கம்யூனிஸ்ட்களும்,இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களும்) மூலமாக பைரவ சாபத்தைப் பெறுகின்றார்கள்;


கோவிலுக்குள் இருக்கும் கோசாலையை முறையாக பராமரிக்காமல் இருப்பதால்,கடந்த காலங்களில் சில ஆலயங்களில் கோசாபமும்,பைரவ சாபமும் சேர்ந்தே உருவாகி இருக்கின்றன;

கோவிலில் அன்னதானம் செய்யப் போகின்றோம்;கூழ் ஊற்றப் போகின்றோம்;புனரமைக்கப் போகின்றோம் என்று கூறி பணம் வசூல் செய்துவிட்டு அதைச் செய்யாமல் இருப்பதன் மூலமாகவும் பைரவ சாபம் உருவாகின்றது.

பைரவ சாபம் நிவர்த்தி ஆகிட பைரவ உபாசகர்களை சரணடைவதே வழி! அல்லது அண்ணாமலையில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் கிரிவலம் வரவேண்டும்;கிரிவலப் பாதையில் தென்படும் பைரவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டே வரவேண்டும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ப்ரம்மாவின் அருளைப் பெறவும்,சில சாபங்களை நீக்கவும் வழி


உங்கள் அன்னையின் கருவறையில் நீங்கள் இருக்கும் போது பலவிதங்களில் சிரமங்களைக் கொடுத்துள்ளீர்கள்;அதனாலும், உங்களுக்கு சாபங்கள் உண்டாகியிருக்கின்றது;


உங்கள் பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் கவனிக்காமல் கைவிட்டிருக்கலாம்;அல்லது அதற்குரிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்;


இவைகள் தீர உங்கள் பிறந்த தமிழ்மாதத்தில்,பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் குரு ஓரையில் பின்வரும் பிரம்மா கோவில்களுக்குச் செல்ல வேண்டும்; 

அப்படி செல்ல இயலாத பட்சத்தில்,ஆடி மாத பவுர்ணமி அல்லது ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் திரு ஓணம் நட்சத்திர நாள் அல்லது அவிட்டம் நட்சத்திர நாள் அல்லது பிரதமை திதி வரும் நாள் அல்லது பிரதமைதிதியும் அவிட்டம் நட்சத்திரமும்;திருவோணமும் பிரதமைதிதியும் வரும் நாள் அன்று சென்று பின்வரும் ப்ரம்மாவின் மந்திரத்தை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;


திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் திருப்பட்டூர்    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்


அல்லது

காஞ்சிபுரம் டூ உத்திரமேரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநகர் அருள்நிறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

திருக்கருகாவூர் டூ காவலூர் அருகில் அமைந்திருக்கும் பெருமாக்க நல்லூர்  அருள்மிகு ப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

அய்யம்பேட்டை அருகில் அமைந்திருக்கும் புரசக்குடி    அருட்பெரும் ப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் கொற்கை


இந்த ஆலயங்களில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களில் குரு ஓரையில் அல்லது குளிகை காலத்தில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அதன் பிறகு,அந்த ஆலயத்திற்கு வேண்டிய பூஜைபொருட்களை வாங்கித் தரலாம் அல்லது உங்கள் ஆஸ்தான ஜோதிடருக்கு பஞ்சாங்கம் மற்றும் ஜோதிடக் கருவிகள் வாங்கித் தரலாம்;


ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோஹ் ப்ரம்ம ப்ரசோதயாத்


உத்தமமான சீடர்கள் நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;தகுந்த குருவைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்;ஆனால்,உண்மையான குருவைத் தேட வேண்டி இருக்கின்றது;இந்த நிலை மாறவும் இந்த மந்திர ஜபம் செய்து வரலாம்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


உணவில் பின்பற்றப்பட வேண்டிய ஆன்மீக விதிகள்




உலகம் எண்ணங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது;இதில் ஒவ்வொரு பொருளும்,படைப்பும் இருமுறை உருவாக்கப்பட்டுள்ளன;

ஆமாம்!

படைப்பாளியாக இருப்பவர் தமது சிந்தனையில் கற்பனை கொள்கின்றார்;அதன் பிறகு,அதை நேரடியாக வடிவமைக்கின்றார்;சிந்தனைக்கு அப்பேர்ப்பட்ட வலிமை உண்டு;


ஈசனே நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்றைத்தான்! நமது மனத்தை அவனிடம் கொடுத்துவிடவேண்டும் என்று விரும்புகின்றான்;இதையே சுலபமாக்கி,வேறு விதமாகவும் சொல்லலாம்;அதுதான் சரணாகதி தத்துவம்;


ஒரு அவமானம் உங்களுக்கு நிகழ்ந்தால் அதற்கு நீங்களோ,உங்கள் செயல்பாடுகளோ காரணம் அல்ல;இந்த அவமானம் மூலமாக உங்களுக்கு ‘பாடம் புகட்டும் வேலை’ நடைபெறுகின்றது;ஒரு புகழ் உங்களுக்கு கிட்டுகின்றது;அதன் மூலமாக உங்கள் மனத்தை பண்படுத்தும் வேலைதான் நடைபெறுகின்றது;


அப்பா அருணாச்சலா இதுதான் உனது ஆசை போலும் என்று அவமானப்பட்டதும் எண்ணினால் தாங்கள் உங்கள் மனத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்;


அப்பா இந்த புகழ் உனக்கே அர்ப்பணம் என்று புகழ் தேடிவரும் போது நீங்கள் நினைத்தால்,உங்களை அந்த பரமேஸ்வரன் ஏற்றுக்கொண்டான் என்று அர்த்தம்;


இம்மாதிரியான சரணாகதி தத்துவத்தை உங்களுக்குள் உருவாகாமல் தடுக்கும் சக்தி நீங்கள் தினமும் உண்ணும் சில குறிப்பிட்ட சுவையுள்ள உணவுக்கு உண்டு;அதுதான் புளிப்புச் சுவை உள்ள உணவு!


புளிப்புச் சுவையானது உங்கள் விந்தை முறிக்கும் சக்தியுள்ளது;புளிய மரங்கள் உள்ள பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உற்பத்தியாகின்றது;புளிப்புச் சுவை உடலில் தொடர்ந்து சேர்ந்து கொண்டே வந்தால் அசிடிட்டி சேரத்துவங்கும்;


புளியை பெண்கள் அதிகம் தினமும் சேர்ப்பதால் தான் பொறாமையும்,அளவற்ற முன்கோபமும் உண்டாகின்றது;குடும்பத்தினுள் சகிப்புத்தன்மை குறைகின்றது;


புளிப்புச் சுவையை அதிகம் சேர்ப்பதற்குப் பதிலாக,கசப்புச் சுவையை அதிகம் சேர்க்க வேண்டும்; ‘வாய்க்கு இனிப்பு;வயிற்றுக்கு கசப்பு’ என்ற பழமொழியின் அர்த்தம் இதுதான்;

எது வாய்க்கு நன்றாக இல்லையோ,அது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைத் தருகின்றது என்ற தத்துவமே தமிழ் மருத்துவத்தின் ஆணிவேர்க் கொள்கை ஆகும்;

புளியை அதிகம் சேர்க்கும் போது விரைவில் ரத்தம் சுண்டிவிடும்;இதனால்,இளவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்துவிடுகின்றது;காரத்தையும் அதிகம் சேர்க்காமல் அளவோடு சேர்க்க வேண்டும்;

மதிய உணவின் போது ஆறு சுவைகளும் அதில் இருந்தாலே வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும்;முழு ஆரோக்கியத்திற்குத் தேவையான சுவை மதிய உணவில் ஆறுசுவைகளாக இருக்கின்றன;

புளிய மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் கேடுகெட்டவர்களாக வாழ்ந்து தற்கொலை/கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் அதிகம் இருக்கும்;

அது மனவலிமை குறைந்தவர்களிடமும்,ஜோதிடப்படி,அவரவர் ராசியை ராகு கிரகம் கடக்கும் போதும் உடலுக்குள் ஊடுருவி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்;அல்லது உக்கிரமான குணமுள்ளவர்களாக மாற்றும் அல்லது காமவெறி பிடித்த மிருகமாக மாற்றிவிடும்;


1970 வரை வீட்டில் வாழ்ந்த அனைவரும் ப்ராணயாமம் செய்தார்கள்;அதனால்,தெரு முழுக்க காற்றில் சுத்தம் இருந்தது;இப்போது அப்படியா?


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ