Thursday, April 30, 2015

நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு பாகம் 2



அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார் ஒருவர்;அது இன்றும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் பொருந்திவருகிறதா?

இணையத்தின் பரவல்,செல்போனின் கட்டணக்குறைப்பு போன்றவை புத்தகவாசிப்பை இளைஞர்களிடையே குறைத்துவிட்டாலும்,இணையம் மூலமாக வாசிப்பது அதிகரித்துள்ளது;இங்கேதான் ஒரு சிக்கல்?

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சுதந்திரமான நிலை உருவாகிவிட்டதால்,இணையத்தில் எழுதுபவர்கள் அனுபவத்தைத்தான் எழுதுகிறார்களா? அல்லது சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதுகிறார்களா?

எது உண்மை?எது பொய்? எது பாதி உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.அதே சமயம் அந்த குழப்பம் பற்றி எதுவும் அறியாமலேயே கண்டதையும் வாசித்துவிட்டு செயலில் இறங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இதனாலும் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் பலருக்கு வெறுப்பாக மாறிவருகிறது;குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியே நம்மில் பலருக்குத் தெரியாது.
எனவே புத்தங்கள் எழுதி வெளியிடுவதில் 90% உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,வாஸ்து போன்றவற்றில் புத்தகவாசிப்பு இருப்பது அவசியம்;1980க்கு முன்பு வெளிவந்த வார,மாத இதழ்களில் உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,தியானம்.ஜோதிடம் போன்றவைகளில் 1940க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும்,1915க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும் ஏராளமான பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கின்றன;இவைகளைத் தேடி அலையும் கூட்டம் ஒருபுறம் தமிழ்நாட்டில் அதிகரித்தாலும்,அவர்களுக்கு இவைகளை எங்கே தேடுவது? என்று தெரியாமல் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்;அனைத்து பழைய புத்தகக்கடைகள்,கன்னிமரா நூலகம்,சென்னை,பென்னிங்க்டன் நூலகம்,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைகளில் தேடலாம்;


லண்டனில் நூலகராக வாழ்ந்து வந்த ஒரு ஆங்கிலேயர் ,லண்டனின் பழைய புத்தகக்கடையில் ஒரு நூலைக் கண்டெடுத்தார்;அந்த நூல் நமது பாரத நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது;
சீனப் பெருஞ்சுவரைப் போல நமது பாரத நாட்டில் கி.பி.1700களில் உப்பு வேலி ஒன்றை அன்றைய ஆங்கிலேயன் 2500 கி.மீ.தூரத்திற்கு நிறுவினான்;இந்த உப்புவேலி இன்றைய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே துவங்கி டெல்லி,மத்தியப்பிரதேசம்,ஒரிஸா வரை நீண்டிருந்தது;இந்த உப்புவேலியின் மூலமாக நமது பாரத நாட்டில் பலமுறை செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கினான் ஆங்கிலேயன்;இந்தப் பஞ்சங்களால் நமது தேசம் பல கோடி இந்தியர்களை பலி கொண்டது;இது தொடர்பாக அந்த ஆங்கிலேயர் தொடர்ந்து ஆய்வு செய்து,நமது நாட்டிற்கும் வருகை தந்து அந்த உப்புவேலியின் மிச்ச சொச்சத்தை 18 ஆண்டுகளாகத் தேடி அலைந்தார்;பூலான் தேவி வாழ்ந்து வந்த புந்தேல் கண்டு என்ற வனப்பகுதியில் சில நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வனத்திற்குள் இருந்ததைக் கண்டுபிடித்தார்;அதைப் படம் பிடித்து உப்புவேலி என்ற புத்தகமாகவும் வெளியிட்டார்;மார்ச் 2015 இல் தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது;நமது பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த உப்புவேலி என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பது அவசியம்;
வெறும் உப்புக்கு வரிவிதிக்கிறேன் பேர்வழி என்று நமது நாட்டின் அப்பாவி மக்கள் கோடிக்கணக்கானவர்கள் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி கொன்றான் ஆங்கிலேயன்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த தொடர் வந்தார்கள்;வென்றார்கள்;கி.பி.1000 முதல் கி.பி.1992 வரை நமது நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை பல ஆங்கில நூல்களை வாசித்து அதில் இருந்து தொகுக்கப்பட்டு வெளிவந்த தொடர் இது;ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய அற்புதமான வரலாற்றுத் தொடர்;கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது நாட்டின் வரலாற்றை வாசிக்க ஒரளவு இந்த புத்தகம் உதவும்;


பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் என்ற தலைப்பில் விநாயக தாமோதர சாவர்க்கர் ஐந்து பாகங்களாக எழுதியிருக்கும் இந்த நூல் பழமையான நூலகங்களில் மட்டுமே காணப்படுகிறது.கடந்த 10,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் எப்படியெல்லாம் வாழ்ந்தது? என்பதை சாவர்க்கர் எழுதியிருக்கிறார்;இதையே நமது பள்ளியின் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும்;அந்த அளவுக்கு ஆழமாக ஆராய்ந்து நமது பாரத தேசத்தின் பெருமைகளை விவரித்து எழுதியிருக்கிறார்;நமது தேசம் பற்றிய பெருமைகளையும்,சாதனைகளையும் இவரைப் போல வேறு எவரும் எழுதியிருப்பார்களா? என்பது சந்தேகமே!!

கண்சிமிட்டும் விண்மீன் கள் என்ற பெயரில் ஒரு நாவல் மராத்தி மொழியில் இருந்து தமிழில் 1980களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.சுசீலா கனகதுர்கா என்பவர் மொழி பெயர்த்துள்ளார்;வேற்றுகிரக மனிதர்களை சந்தித்து பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையை மனிதர்கள் பேசித் தீர்க்கும் விதமாக மராத்திய மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியிருக்கிறார்;
டீன் ஏஜ் குழந்தைகளிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய நாவல் கூடு;ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார்;நிர்வாகத்தில் நாசமாகிப் போன ஒரு நாட்டை வெறும் 48 மணி நேரத்தில் எப்படி சீரமைக்கிறார் என்பதை அவரது சொந்த ஸ்டைலில் நாவலாக எழுதியிருக்கிறார்;ஒரு நாட்டை ஆளும் மன்னன் கெட்டவனாக இருந்தால்,அந்த நாட்டில் பெண்கள் நிலை என்னவாகும்? அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்கள்? என்பதை அப்பட்டமாகவும்,சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார்;இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே ஆன்மீகத்தின் மீது ஒரு தாகத்தை உருவாக்கும் என்பது எனது அனுபவம்.


இன்னும் தொடரும். . .


இப்படிக்கு

உங்கள் கை.வீரமுனி. . .

மந்திரங்கள் எப்படி இயங்குகின்றன?




நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!

சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;
தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;

மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;

மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;
வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;

ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;

அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;

இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் ஒம்சிவசிவஒம் என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;

அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)


பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;
இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;

நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;

எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?

ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;

அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;
ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;

இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;

இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி. . .




Wednesday, April 29, 2015

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!



நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;

சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.


இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;

ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

Tuesday, April 28, 2015

ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?



உலகம் உருவாகி 5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கியதும் உலகில் தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழியே! உலகில் உருவான முதல் வழிபாடு சிவ வழிபாடே!எல்லாம் அவன் செயல் என்பது திரித்துவிடப்பட்ட பழமொழி! எல்லாம் சிவன் செயல் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழங்கும் நிஜமான பழமொழி!!

அணுவுக்குள்ளே நிலையான சக்தி,அசையும் சக்தி என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன;அதே போல சிவன் மட்டுமே நிலையான சக்தி;சிவனைத் தவிர அனைத்து கடவுள்களுமே ஒரு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அசையும் சக்திகள்;திருமூலரின் திருமந்திரத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் பல பாடல்களில் தெரிவித்துள்ளார்;தேவாரப்பதிகங்களிலும் சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளன;

மருது சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட தேவாரப்பதிகம் தினமும் பாடி வந்தனர்;அந்த தேவாரப்பதிகம் பாடியதால் தான் சராசரி மனிதர்களாக இருந்த அவர்களால் மன்னராக முடிந்தது;
ராவணன் சிவவழிபாட்டை ருத்ராட்சம் அணிந்து தொடர்ந்ததால் தான் மரணமில்லாதப் பெருவாழ்வைப் பெற்றான்;மேலும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் இயக்கும் நவக்கிரகங்களையும் அடிமைப்படுத்த முடிந்தது;பிற்காலத்தில் பெண் பித்தால் அனைத்து சிவ அருளையும் இழந்தது புராண உண்மை;

முருகக் கடவுளால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் சிவவழிபாடு செய்துதான் 1008 அண்டங்களையும் ஆளும் வரம் பெற்றான்;
இந்த உலகில் இதுவரை இருக்கும் அனைத்து மதங்களும் கூறும் உண்மை: “இறைவன் ஒருவனே”.அந்த இறைவனின் பெயர் ஆதிசிவன் என்று இந்துக்களும்,அல்லா என்று இஸ்லாமியர்களும்,பரமபிதா என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர்; பெயர் வெவ்வேறாக இருந்தாலும்,இறைசக்தி ஒன்றே!!சிவனின் தூயத் தமிழ்ப் பெயர்: ஈசன்.(ஈஷா யோகாவை இந்தப் பெயரின் மூலமாகத்தான் வைத்திருப்பார்களோ?)

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் இயக்கும் மூல முதல் சக்தி மனோன்மணி என்ற ஆதி சக்தி! இவள் எட்டு வயது சிறுமி வடிவில் தோற்றமளிப்பவள்;இவளே தலைமைக் கடவுள்! இவளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐந்து விதமான ஈசன் கள்!!
இந்த சிறுமிவடிவ தெய்வத்தை வழிபடும் தகுதியை அடைய நாம் சித்தரானால் தான் முடியும்;

சித்தராக வேண்டுமானால் அண்ணாமலையை அடிக்கடி வலம் வர வேண்டும்;அண்ணாமலை கிரிவலத்திற்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

பூமியில் 84,00,000 விதமான உயிரினங்கள் வசிக்கின்றன;சில உயிர்களுக்கு ஆயுள் சில மணித்துளிகள்;சிலவற்றிற்கு சில நூறு ஆண்டுகள்;இந்த 84,00,000 பிறப்புகளில் பெரும்பாலானவற்றைக் கடந்தப் பின்னரே மனித ஜன்மம் எடுத்துள்ளோம்;கடந்த ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்களின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம்;இன்னும் பல நூறு மனிதப் பிறப்பு எடுக்கப் போகிறோம்;இதைத் தடுத்து அடுத்த சில பிறவிகளுக்குள் முக்தி அடைய நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதுதான்;

வெகுவிரைவில் முக்தி கிடைக்கவே விரும்புகிறோம்;ஆனால்,அது நடைமுறை சாத்தியம் இல்லை;

அதே போல இப்பிறவியோடு எனக்கு மனிதப் பிறவி போதும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்;அந்த அளவிற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வேதனைகள்,கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்களை அனுபவித்ததன் விளைவாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேள்விப்படுகிறோம்;

எனவே,இனிமேல் பிறக்க இருக்கும் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அண்ணாமலை கிரிவலமே உயர்ந்தது;சிறந்தது;எளியது;

எப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்?

தமிழ் வருடப்பிறப்பு அன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

தமிழ் மாதப்பிறப்பு தோறும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;(400 ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடைமுறையில் இருந்தது)

அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அண்ணாமலையாரின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ஈசனின் ஜன்ம நட்சத்திரம் என்று நாம் நம்பும் திருவாதிரை நட்சத்திர தினங்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

எப்போதெல்லாம் நமக்கு விடுப்பும்,பணமும் கிடைக்குமோ அப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

குபேரலிங்கம் கடந்ததும் அமைந்திருக்கும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் இடுக்கு வழியாக ஒருமுறை சென்றால் ஒரு பிறவி குறையும் என்று சித்தர்களின் தலைவர் அகத்தியர் தெரிவித்திருக்கிறார்;அப்படிச் செல்லும் போது அண்ணாமலையை நோக்கி தலையை நுழைத்து இடுக்கினுள்ளே நுழைய வேண்டும்;அதுதான் முறை;

ஒம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை சொன்னால் 3,00,000 தடவை ஒம் நமச்சிவாய நமஹ சொன்னதற்குச் சமம் என்று அண்ணாமலையாரே தெரிவித்துள்ளார்;


அண்ணாமலைக்குப் புறப்படுவோமா?

Thursday, April 23, 2015

நமது உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பெற


உலகத்திலேயே மிகப் பெரிய முட்டாள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது பாரத தேசத்தில் தான்; ஆமாம்! உலக ஜனத்தொகை 700 கோடி! இதில் பாரத ஜனத்தொகை 130 கோடி!! இந்த 130 கோடிப் பேர்களையும் 300 ஆண்டுகளாக முட்டாளாக்கிவிட்டு,ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பன்னாட்டு நிறுவனங்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன;இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தோன்றிய நாட்டில் இருந்தே விரட்டப்பட்டாலும்,நம் நாட்டில் நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கூட சத்துக்களே இல்லாத உணவுகளை டிவி விளம்பரங்கள் மூலமாக நமது நாட்டில் பிரபலப்படுத்துகின்றன;நாமும் நமது சம்பளத்தை இவைகளுக்குச் செலவிட்டு தினமும் அல்லது அடிக்கடி சாப்பிட்டு, நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறோம்;


எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டோம்? என்பதை அறிய நாம் ஒவ்வொருவருமே ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் அனாடமி தெரபி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்;அவரது பேச்சுக்கள் அடங்கிய தொகுப்புகள் அவரது இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன;அதில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியதை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்;பிறகு,அடுத்த 6 மாதங்களில் அதை குறைந்த பட்சம் 3 முறையாவது கேட்க வேண்டும்;


அதன் பிறகுதான் நாம் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகிறோம் என்பது புரியும்;ஹீலர் பாஸ்கர் ஐயா அந்த 6 மணி நேரப் பேச்சில் கூறியிருப்பது வரிக்கு வரி உண்மைதான்;
இதையே வடபாரதத்தில் ராஜீவ் தீக்ஷித் என்பவர் செய்து வந்தார்;அவரது இணையதளமும்,யூ ட்யூப் பேச்சுக்களும் இன்றும் இணையத்தில் இருக்கின்றன;


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;இந்த பூமியில் எந்த மூலையில் வாழ்பவராக இருந்தாலும் பலர் காலை உணவு சாப்பிடுவதே இல்லை;இது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்;40 வயதுக்கு மேல் கண்டிப்பாக பக்கவாதத்தில் கொண்டு போய்விடும்;

சாப்பிடும் போது ஒரு போதும் தண்ணீர்/மது பானம்/குளிர்பானம் அருந்தவே கூடாது;

சாப்பிட்டு முடித்த உடனேயும் தண்ணீர் அருந்தக் கூடாது;

சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது கணினி/செல்போன்/டேப்ளாய்டு இயக்கக்கூடாது;செல் போனில் பேசக் கூடாது.

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை முழுமையாக அறிய வேண்டுமா?

நமது உடலில் இருக்கும் எந்த நோயாக இருந்தாலும் அந்த நோய் ஆங்கில மருந்துகள் இன்றித் தீர வேண்டுமா?

நமது உடல் ஆரோக்கியம் உறுதிப்பட வேண்டுமா?

ஆம் எனில் அரவிந்த் ஹெர்ப் என்ற இணையதளத்திற்குச் செல்லவும்;அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு போன் செய்யவும்.(+91 4563 233308)இயற்கை நல வாழ்வுப் பயிற்சி முகாம் அடுத்து எப்போது என்று கேட்கவும்;அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்;

இந்த இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம் மாதம் தோறும் இரண்டு முறை நடைபெறுகிறது;

முதலாவது மூன்று நாட்கள் பயிற்சி முகாம்;

இரண்டாவது ஆறு நாட்கள் பயிற்சி முகாம்;

மூன்று நாட்கள் பயிற்சி முகாமில் முதல் நாளும் மூன்றாம் நாளும் பழச்சாறு மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது;இரண்டாம் நாளில் குடிநீர் மட்டுமே உணவாக அருந்த வேண்டும்;இரண்டாம் நாள் காலையில் இருந்து மூன்றாம் நாள் காலை வரை எவரிடமும் பேசக் கூடாது;தூங்க வேண்டும்;இதன் மூலமாக உடலுக்கும்,உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் முழு ஓய்வு நாம் தருகிறோம்;இதனால் நோக்குரிய காரணிகள் அழியத் துவங்குகின்றன;

இந்த மூன்று நாட்கள் முகாம் நிறைவு செய்த சில மாதங்களுக்குப் பிறகு ஆறு நாட்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்;இதில் முதல் இரண்டு நாட்களும்,இறுதி இரண்டு நாட்களும் பழச்சாறு உணவாக வழங்கப்படுகிறது;மூன்றாம் நாள் காலையில் இருந்து ஐந்தாம் நாள் காலை வரை தண்ணீர் மட்டும் அருந்தி,பகலிலும் இரவிலும் தூங்க வேண்டும்;எவரிடமும் பேசக் கூடாது.

தவிர,தினசரி 30 நிமிடம் செய்யத்தக்க சிலபல யோகாசனங்களையும்,பிராண பயிற்சிகளையும் பயிற்றுவிக்கிறார்கள்;இந்த முகாம்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளரின் பெயர் திரு.பாலு அவர்கள்;யோகா மாஸ்டர் திரு.கணேசன் அவர்கள்;

இந்த முகாம்களுக்கு பதிவுக் கட்டணம்;பயிற்சிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது;முற்றிலும் இலவசம்;இந்த முகாம்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாநகரில் முடங்கியார் சாலையில் 4 வது கி.மீ.தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தாரால் முற்றிலும் சமுதாய நலனுக்காக கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது;

பயிற்சிக்குத் தேவையான சில சிறு உபகரணங்கள் வாங்கிட ரூ.300/-தேவைப்படும்;இந்த முகாமில் கலந்து கொள்ள வயதுத் தகுதி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இந்த முகாமில் கலந்து கொண்டு முகாமை நிறைவு செய்தால் அவர்களின் எடை கண்டிப்பாக சில கிலோக்கள் குறைந்துவிடும்;


இந்த சம்மரை நமது குழந்தைகளோடு இந்த முகாம்களில் கொண்டாடினால் தான் என்ன? நமக்கும் சரி! நமது குழந்தைகளுக்கும் சரி! ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கிடைக்குமே!!!

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்,பகுதி 3

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010



மூலம்:

கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம்:

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம்:

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம்/ஓணம்:

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட 
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி:

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி:

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி:

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.

உங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவாரப்பாடல்,பகுதி 2

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்

கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை
ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி
வந்தால்,நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.
தகவல் உதவி:பால ஜோதிடம் பக்கம் 26,வெளியீட்டு நாள் 25.1.2010

மகம்:

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்:

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்:

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.


அஸ்தம்:

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை:

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி:

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால் 
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.


விசாகம்:

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை:

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே