Monday, May 31, 2010

கேரள மணப்பெண் வேண்டுமா?

கேரள மனைவி வேண்டுமா?





நாமக்கல் பகுதியில் கவுண்டர்கள் அதிகம் வாழ்ந்துவருகின்றனர்.இங்கு வரதட்சணை ரொம்ப அதிகம்.இதனால் 1980 களில் சர்வசாதாரணமாக பெண் சிசுக்கொலைகள் நடந்தன.விளைவு?

தற்போது திருமணத்திற்கு மணமகள் கிடைக்கவில்லை;

இந்நிலையில் சில திருமணத்தரகர்களால்,கேரளப்பெண்களை நாமக்கல் இளைஞர்கள்,முதியவர்களுக்கு திருமணம் செய்யும் போக்குதுவங்கியது.




கேரளத்தினர் தனது மகளை பெண் தரும் முன்பு,

மாப்பிள்ளைக்கு ஹெச்.ஐ.வி.இல்லை என்ற மருத்துவச்சான்றிதழும்,ஓரளவாவது வசதியானவர் என்ற இரண்டைமட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

இதனால்,நாமக்கல் பகுதியே கேரளத்து மருமகன்கள் நகரமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

கேரளாவினர் தனது மகளைத் தருவதற்கு மேலும் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.திருமணம் கேரளாவில்தான் நடைபெற வேண்டும்.திருமணம் முடிந்ததற்கான ஆதாரத்தை(திருமணப்பதிவினை) கேரளாவின் காவல்துறை,வருவாய்த்துறை,மகளிர் மேம்பாட்டுத்துறைக்கெல்லாம் அனுப்பிய பின்பே தனது மகளை புகுந்தவீட்டிற்கு அனுப்பிவைக்கின்றனர்.



தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும்,இன்றைய பெற்றோருக்கு தனது மகன்/மகளுக்கு ஓரளவாவது ‘சரிப்பட்டுவரும்’ வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சாமர்த்தியம் இல்லை;

திருமணத்தரகர்களின் வாய்ச்சவடலாலில் ஏமாந்துவிடுகின்றனர்.அல்லது உறவினர்களின் பேச்சைக்கேட்டு தனது வாரிசின் வாழ்வில் கல்லைத்தூக்கிப் போட்டுவிடுகின்றனர்.

கோர்ட்டுக்கு வராமலேயே பிரிந்து வாழும் இளம்தம்பதியினர்தான் எத்தனை லட்சம் தெரியுமா?



ஒவ்வொரு தம்பதியினரின் வாழ்விலும் மகா சோகம். . .

தமிழ்நாட்டின் எல்லா ஜாதியிலும் இந்த நிலை தொடருகிறது.



எனவே, ஒரு நாமக்கல் திருமணத்தரகரின் முகவரியை எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக தருகிறோம்.



கேரளாதமிழ்நாடு திருமணத் தகவல் சேவை

158 தண்டபாணி ஜெராக்ஸ் & பில்டிங் முதல் மாடி,

மணிக்கூண்டு,நாமக்கல்-1.

செல் எண்:90473 00213,90256 31141.

திருமணத்தரகர்: முருக ரவி

ஆதாரம்:ஜீனியர் விகடன் 2.6.2010;பக்கம் 42,43,44.


திருக்காளஹஸ்தி கோபுரம் இடிந்துவிழுந்ததன் மொத்த ஆன்மீகப்பின்னணி என்ன?

திருக்காளஹஸ்தி கோவில்கோபுரம்:முழு விளக்கம்

கிருஷ்ணதேவராயர் அவர்களின் பல போர்களின் வெற்றிக்குக் காரணம் திருக்காளஹஸ்தி சிவபெருமானே காரணம் என நம்பினார்.அதன் விளைவாக கி.பி.1510 ஆம் ஆண்டில் இந்த கோபுரத்தைக் கட்டினார்.இந்த கோபுரத்தில் கி.பி.1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுவிரிசல் ஏற்பட்டது.அதை அப்போதே சரி செய்தனர்.அதன்பிறகு சிறுசிறுவிரிசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும்.,அதை சரிசெய்துகொண்டே இருந்தாலும்,தற்போது இரண்டாகப்பிளந்து இடிந்துவிழுந்துவிட்டது.

வேதசாஸ்திரங்களில் கைதேர்ந்தவரான சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கோபுரம் இடிந்துவிழுந்தது பற்றி கேட்டபோது அவர் விளக்கமளித்தார்:
மக்களை ஆள்வோர் தவறான வழியை மேற்கொண்டால் உற்பாதம் நிகழும் என வேதநூல்கள் கூறுகின்றன.

காரணம் இல்லாமல் திடீர் திடீரென நிகழும் பேரழிவுகள் மற்றும் வினோதமான சம்பவங்களைத்தான் உற்பாதம் என்பார்கள்.

கோவில்களில் உள்ள சிலைகளில் வியர்வை வழிவது, கோபுரங்களில் விரிசல் கண்டு உடைவது,சிலைகள் அசைவது ஆகிய விஷயங்களின் மூலம் “நாட்டில் ஆள்வோருக்கும் மக்களுக்கும் கெட்ட விஷயங்கள் நடக்க இருக்கின்றன.பெரிய அளவில் பேரழிவுகள் நடக்க இருக்கின்றன.” என்பதை முன்கூட்டியே தெய்வீக சக்தி குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம்.

தவறு செய்வது மன்னனாக இருந்தாலும்,மக்களாக இருந்தாலும் தன்னை உடனே திருத்திக்கொள்ள வேண்டும்.

தனிமனித ஒழுக்கம் முக்கியமானது.தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனால் சமுதாயமே சீர்கெட்டுவிடும்.
அப்படி சீர்கெட்ட சமுதாயத்திலிருந்துதான் நம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கிறோம்.ஆள்பவர்கள் ஒழுக்கக்கேடாக இருந்தால் நிச்சயம் உற்பாதம் நிகழும்.

கோவில் கோபுரமே இடிந்துவிழுந்ததாக இதுவரை சரித்திரம் கிடையாது.ஏனெனில்,கோபுரங்களின் கட்டிட சாஸ்திர அமைப்பு(சில்ப சாஸ்திரத்தின் ஒரு பகுதி) அத்தனை பாதுகாப்பானது.மொத்த எடையும் அடிப்பாகம் தாங்கும் வகையில் அமைக்கப்படும்.காளஹஸ்தி கோபுரம் மேலிருந்து கீழ்வரை ஒட்டுமொத்தமாகச் சிதைந்துவிழுந்ததால்,அந்தளவுக்கு அதர்மம் நடந்திருக்கிறதோ? என்றுதான் அர்த்தம்.
நன்றி: ஜீனியர் விகடன்,2.6.2010,பக்கம் 6,7.

Saturday, May 29, 2010

வலிமையடைந்துவிட்ட செவ்வாய்பகவான்


மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

7.10.2009 முதல் 27.5.2010 வரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் ராசி நாதன் செவ்வாய் நீசமாகியும் ,வக்கிரமாகியும் இருந்தார்.இந்த காலகட்டத்தில் பலவிதமான அவமானங்கள்,கவனக்குறைவுகளை சந்தித்து நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற அளவுக்கு மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்கள் மனம் வெதும்பியிருந்திருப்பர்.நமது ஆன்மீகக்கடலில் கூட அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்களை வெளியிட்டிருந்தோம்.
சுமார் 60 ஆண்டுக்குப்பிறகு இப்படிப்பட்ட 8 மாத செவ்வாய் நீசம் உண்டானது.இதனால்,உலகம் எங்கும் ராணுவம்,காவல்துறையினர் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவே போராடும் நிலைவந்திருந்தது.
இலங்கையின் பிறந்த?(சுதந்திர!) ராசி விருச்சிகம்;
இலங்கைத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தராசி விருச்சிகம்(பிற்ந்த நட்சத்திரம் அனுஷம்)
அதன் தற்போதைய அதிபர் ராஜபக்ஷேவின் பிறந்த ராசியும் விருச்சிகம்; (பிறந்த நட்சத்திரம் கேட்டை)

கடகராசியில் நீசமாகவும்,வக்கிரமாகவும் இருந்த செவ்வாய் 27.5.2010 அன்று இரவு மணி 9.49க்கு சிம்மராசிக்குப் பெயர்ச்சியாகிவிட்டார்.சிம்மராசி சூரியனின் ராசி;இதுஒரு நெருப்பு ராசியாகும்;நெருப்புராசியில் நெருப்புக்கோளான செவ்வாய் வரும்போது உச்சத்துக்குரியபலனைத் தருவார் என்பது ஜோதிட விதி;அனுபவப்பாடமும் கூட!
சிம்மராசியில் செவ்வாய் இருக்க ஒரு ஜாதகர் பிறந்தால்,அவருக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
ஆனால்,இதில் சுமார் 45 விதிவிலக்குகள் இருக்கின்றன.அதில் முதன்மையாக இருப்பது சிம்மச் செவ்வாய் தோஷம் தராது.

ஆக, 27.5.2010 இரவு மணி 10 முதல் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் இதுவரை இழந்த அனைத்தையும் பெறுவார்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் தீரும்;அவமானப்படுத்தியவர்களாலேயே புகழ் வந்துசேரும்;எல்லா விஷயங்களிலும் சர்வ நிதானம் வந்து சேரும்.எதிரிகளை துவம்சம் செய்யத்துவங்கலாம்.

உங்கள் குழந்தையிடம் வாரம் ஒரு முறை மனம்திறந்து பேசுங்கள்


மனநலத்தை அலட்சியம் செய்யும் பாரதநாடு

கி.பி.2015 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தால் உருவாகும் நோயாளிகளில் முதலிடம் நமது இந்தியாவுக்குத்தான் கிடைக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.ஆதாரம் ஜீனியர் விகடன் 2008.

ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள்.இந்த மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன.மொத்தம் ஆறு குழந்தைகள்.
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீதம்,இந்த மூன்று குடும்பத்தின் அத்தனை பேரும் திரைப்படம் ஒன்றுக்குச் செல்லுகின்றனர்.படம் பார்த்துமுடிந்ததும்,அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று இரவு 7 மணிவரை அரட்டை,பரஸ்பரம் மகிழ்ச்சி,சாதனை,குடும்பப்பிரச்னை மற்றும் அலுவலகப்பிரச்னையை இந்த ஒரு மாதத்தில் சமாளித்த விதம் இவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுகின்றனர்.
இந்த பொழுதுபோக்கினை அவர்கள் குடும்ப செயற்குழுக்கூட்டம் என்றே அழைக்கின்றனர்.இதை கடந்த 9 வருடங்களாக தொடர்ந்துநடத்துகின்றனர்.
இந்த ‘குடும்ப செயற்குழு’ கூட்டத்தை தனது குழந்தைகளும் பெரியவர்களானபின்னரும் செய்யுமளவுக்கு உணர வைத்துள்ளனர்.
கி.பி.1960களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி,15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மகன்களுடன் செலவிடுவதை ஒரு ‘கடமை’யாகவே வைத்திருந்தார்.(நன்றி:திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு)அன்று முழுவதும் அவர் தனது மகன்களுடன் விளையாடுவார்.(தனது எதிர்கால வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகிக்க இரண்டு நிர்வாக சாணக்கியர்களை உருவாக்கினார்)
அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்ததும் சிற்சில மனோதத்துவ பரிட்சைகள் வைப்பார்;பணத்தின் மதிப்பு,அதை எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும்;அதை தவறாகப்பயன்படுத்தினால் அதன் முடிவு என்னாகும்? மனித உறவு என்றால் என்ன? என பலவிதங்களில் தனது வாரிசுகளை உருவாக்கினார்.
இன்று ரிலையன்ஸ் குழுமங்கள் இரண்டு மாபெரும் வியாபார சாம்ராஜ்ஜியமானாலும்,இந்திய அரசின் அமைச்சரவையை தனது இஷ்டத்திற்கு வளைக்குமளவுக்கு வளர்ந்துவிட்டனர்.
நாம் நமது குழந்தைகளுக்காகத்தான் வேலைக்குப்போகிறோம்; அல்லது அரசு வேலை பார்க்கிறோம்;அல்லது தொழில் செய்கிறோம்;

எத்தனை முறை ஒரு நாளுக்கு நாம் நம்முடைய மகன் அல்லது மகளிடம் மனம் விட்டுப்பேசுகிறோம்?
ஆனால்,அவர்களுக்காகத்தான் பள்ளி/கல்லூரி கட்டணம் கட்டுகிறோம்?
பிஸி, பிஸி,பிஸி . . . எப்போதும் பிஸி, எப்போதும் பணத்தின் பின்னாலேயே ஒடுகிறோம்; ஓடுகிறோம்; நமது பரம்பரையை பண்புள்ளவர்களாக மாற்றிட,நமது மகன்/மகளின் மனநிலை,சுபாவம்,நடத்தை,பழகும் நட்புவட்டம் பற்றி எதுவும் நாம் அறிவதில்லை;

மனம் விட்டுப்பேச ஒரு குடும்ப உறவு இல்லாததால்தான்,நமது மகள்கள் பருவமடைந்ததும் தனது காமத்துணையுடன் ஓடிப்போகிறது.
தனது கஷ்டங்களை கொட்டிட ,தலையை கோதிவிட ஒரு ஆத்மார்த்தமான உறவு நமக்கே இல்லையே? நாமாவது இன்று முதல் நமது குழந்தைகள்/சகோதரர்கள்/சகோதரிகளுக்காக ஆத்மார்த்தமான உறவாக இருக்கலாமே!!!

(மனதார்ந்த ஒரு உறவு, நம்மிடம் மனம் விட்டுப்பேசாவிட்டால்,நமது வாரிசு காமரீதியான உறவிடம் அடிமையாகிவிடும் என்று மனோதத்துவம் கூறுகிறது.

சரி, அந்த காமரீதியான உறவு டாக்டர் பிரகாஷ் ரேஞ்சுக்கு இருந்தால் என்னவாகும்? நமது வாரிசின் நிர்வாணப்படம் அல்லது வீடியோ இணையத்தில் உலகம் முழுக்க பரவிக்கொண்டே இருக்கும்.இந்த குற்றம் ஒரு குற்றமாகவே நமது வாரிசுக்குத் தெரியாது.நமக்கோ பரம்பரை அவமானமே!)

Thursday, May 27, 2010

திருக்காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்துவிழுந்தது:



சென்னை: பிரசித்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை, திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.
சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.
தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.
ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.


நமது ஆன்மீகக்கடலின் ஆழ்ந்த வருத்தங்கள்.இந்த சம்பவம் நிச்சயம் ஆந்திர அரசியல் மற்றும் இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிடும்.ஏனெனில்,நம்மை கடந்த 300 ஆண்டுகளாக சுரண்டிய இங்கிலாந்து,நமக்கு 15.8.1947 அன்று சுதந்திரம் தந்தது.
அதுவும் எப்படித்தெரியுமா?
ஜோதிடத்தை எதிரியாகவும்,மூடநம்பிக்கையாகவும் நினைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்டிருக்கும் நாடு இங்கிலாந்து.
அப்படிப்பட்ட இங்கிலாந்து,1947ஆம் ஆண்டில் நமது பாரதநாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.எந்த நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால்,அது வாழ்நாள் முழுக்க போராடிக்கொண்டே இருக்கும்? என கேள்வி கேட்டது.அந்த நேரமே நமது மாபெரும் இந்துதேசத்தின் சுதந்திர தினம்.15.8.1947 நள்ளிரவு 11.57 மணி.கடுமையான சர்ப்ப தோஷத்தில் நம் நாடு சுதந்திரம் பெற்றது.
இடிந்துவிழுந்த கோபுரமோ சர்ப்பதோஷ நிவாரணம் தரும் திருக்காளஹஸ்தி!!
கடவுளே! எனது இந்துதேசத்தைக் காப்பாற்று!!!

Tuesday, May 25, 2010

மரக்கன்று நடுவது எப்படி? நமது பூமியைக் காப்போம்


மரக்கன்று நடுவது எப்படி?

அடிக்கிற வெயிலைப் பார்த்தால்,ஐ.நா.சபை., மத்திய அரசு,மாநில அரசுகள்,அரசியல் கட்சிகள் பூமி நலனுடன் எந்த ஒரு உருப்படியான சுற்றுச்சூழல் காரியத்தையும் செய்யாது;/செய்ய முடியாது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.ஆகவே,நாம் ஒவ்வொருவரும் எப்படி மரக் கன்று நடுவது என்பதை இங்கு பார்ப்போம்:

சாலையோரம்,தெருவின் ஓரங்கள்,நமது வீட்டின் ஓரங்கள்,புழைக்கடை என நாம் விரும்பும் எந்த இடத்திலும் மரக்கன்று நடலாம்.
மரக்கன்றை நடுவதற்குரிய இடத்தை நாம் தேர்ந்தெடுத்தப்பிறகு,அங்கு 1 முதல் 3 அடி வரை குழி தோண்ட வேண்டும்.
தோண்டி உடனே மரக்கன்றை நட்டால், அந்த மரக்கன்று பட்டுப்போய்விடும்.ஏன்?
ஏன் எனில், நாம் குழி தோண்டியதும், பக்கவாட்டுமண்ணிலிருந்து வெப்பம் வெளியேறத்துவங்கும்.எனவே, குழி தோண்டி 24 மணிநேரம் கழித்து, நாம் மரக்கன்றைக் கொண்டுவந்து இணுக்கு வெளியே தெரியுமளவுக்கு மரக்கன்றை மண்ணைப்போட்டு மூட வேண்டும்.மூடிய பிறகு,மரக்கன்றை ஒட்டி தண்ணீர் ஊற்றாமல்,ஒரு சதுர அடி தள்ளி தண்ணீரை ஊற்ற வேண்டும்.இரண்டாம் நாளிலிருந்து 20 நாள் வரையிலும் மரக்கன்றினை ஒட்டியே தண்ணீர் ஊற்றலாம்.
நமது பிறந்த நட்சத்திரப்படி உரிய மரக்கன்றை வாங்கி ஊன்றலாம்; அரசு,வேம்பு,ஆல்,மஞ்சணத்தி போன்ற உபயோகமான மரக்கன்றை நடலாம்.

மரக்கன்றை நடுவதில் 10 வருட அனுபவமுள்ள எனது நண்பர் சொன்னது.
நாம் மரக்கன்றுகளை நடுவோம்;நமது மகன்,மகள்,பேரன்,பேத்தியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும்,நமது நாட்டின் இயற்கைவளம் பெருகுவதற்கும்.

மரக்கன்றை நடுவதற்கும்,நடுவதற்கான குழி தோண்டுவதற்கும் ஏற்ற நேரம் காலை 6 மணி முதல் 8 மணிக்குள்;மற்றும்/அல்லது மாலை 5 மணி முதல் இருட்டுவதற்குள்.

7,00,000 மரக்கன்றுகளை நடுவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனம்(ஸ்ரீவில்லிபுத்தூர்,மதுரை,சென்னை) இந்த நேரத்தில் பாராட்டுவதற்குரியது.
இதற்காக மட்டுமே டிவியில் விளம்பரம் கொண்டுவந்துள்ள போத்தீஸ் முதலாளிகளின் கால்களில் விழுந்து அவர்களின் பூமிப்பாசத்திற்காக நான் எனது கண்ணீரால் அவர்களின் பாதங்களைக் கழுவுவேன்.

இந்தியாவுக்கு தரமற்ற ஆயுதங்களை வழங்கும் நயவஞ்சக அமெரிக்கா:நன்றி தமிழ் வெப்துனியா

இ‌ந்‌தியாவு‌க்கு தர‌ம‌ற்ற ஆயுத‌ங்களை வழ‌ங்குகிறது அமெ‌ரி‌க்கா: இராணுவ தலைமை தளப‌தி ‌‌‌வி.கே.‌சி‌ங் புகா‌ர்

தர‌ம‌ற்ற ஆயுத‌ங்களை இ‌ந்‌தியாவு‌க்கு அமெ‌ரி‌க்கா வழ‌ங்குவதாக இ‌ந்‌திய இராணுவ தலைமை தளப‌தி ‌‌‌வி.கே.‌சி‌ங் புகா‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய இராணுவ‌த்‌தி‌ற்கு தேவையான ஆயுத‌ங்‌களை ம‌த்‌திய அரசு‌க்‌காக அமெ‌ரி‌க்கா அரசு வா‌ங்‌கி ‌வி‌ற்பனை செ‌ய்து வரு‌கிறது. இத‌ற்காக கு‌றி‌ப்‌பி‌ட்ட தொகையை அமெ‌ரி‌க்கா அரசு க‌மிஷனாகவு‌ம் பெறு‌கிறது.

டெ‌ண்ட‌ர் ‌விட‌ப்படாம‌ல் அரசுகளு‌க்கு இடையேயான உட‌ன்பாடுக‌ள் மூல‌ம் ஆயுத‌ங்க‌ள் ‌‌வி‌ற்பனை செ‌‌ய்ய‌ப்படுவ‌தி‌ல் முறைகேடுக‌ள் நட‌ப்பதாக இராணுவ‌‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

தர‌ம‌ற்ற ஆயுத‌ங்களை இ‌ந்‌தியாவு‌க்கு அமெ‌ரி‌க்கா வழ‌ங்குவதாக புகா‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள இ‌ந்‌திய இராணுவ தலைமை தளப‌தி ‌‌‌வி.கே.‌சி‌ங், இ‌ந்த மோசடி கு‌றி‌த்து ‌வி‌‌ழி‌ப்புட‌ன் இரு‌‌க்குமாறு பாதுகா‌ப்பு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி‌‌க்கு கடித‌ம் எழு‌‌தி இரு‌ப்பதாக இராணுவ வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.

கட‌ந்த 2002ஆ‌ம் ஆ‌ண்டு அமெ‌ரி‌க்கா‌விட‌ம் இரு‌ந்து வா‌ங்க‌ப்ப‌ட்ட ரேடா‌ர் கரு‌விக‌ள் உடனடியாக பழு‌து அட‌ை‌ந்து‌வி‌ட்டதாக கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள தலைமை தளப‌தி ‌வி.கே.‌சி‌ங், இது கு‌றி‌‌த்த புகா‌ர்களை அமெ‌ரி‌க்க அரசு அ‌ல‌ட்‌சிய‌ப்படு‌த்‌தி ‌வி‌ட்டதாகவு‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

3 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய்‌க்கு 145 கோ‌வி‌ட்ட‌ர் ‌பீர‌ங்‌கிகளையு‌ம், 10 ஆ‌யிர‌ம் கோடி ரூபா‌ய்‌க்கு ‌10 பே‌ர் விமான‌ங்களையு‌ம் அமெ‌ரி‌க்கா‌விட‌ம் இரு‌ந்து இ‌ந்‌தியா வா‌ங்‌குவத‌ற்கு மு‌ன் ச‌‌ர்வதேச ச‌ட்ட ‌நிபுண‌ர்க‌ளிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டு‌‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Monday, May 24, 2010

உலகமயமாக்கலால் சிதையும் இந்தியசிறுவர் பருவம்

உலக மயமாக்கலால் சிதையும் சிறுவர் பருவம்

இன்று(24.5.2010 திங்கள்) தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பில் 8 ஆம் பக்கத்தில் தடம் மாறும் இளம் ரத்தம் என்ற தலைப்பில் ஒரு முழுப்பக்கக் கட்டுரையை ச.சுப்ரமணியம் மற்றும் ச.இரகுநாதன் எழுதியுள்ளனர்.அதிலிருந்து சில பகுதிகளும்,நமது ஆன்மீகக்கடலின் சிந்தனையும்:
சில வருடங்களுக்கு முன்பு,சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச்சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர்.அவமானத்தால் துடித்த சிறுமி முடிவில் தூக்கில் தொங்கினாள்.
தற்கொலைக்குத் தூண்டியதாக சட்டம் அந்த சிறுவர்களை கைதுசெய்தது.இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்களே.இன்னொரு கொடூர நிஜம் என்னவெனில், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இளம் குற்றவாளிகள் அதிகரிக்க,இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது.அன்றாடத்தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளைக் கவனிக்கவும்,மனம் விட்டுப்பேசவும் கூட நேரமில்லாத பெற்றோர்கள் எப்படியாவது மூன்றுவேளை சாப்பிட்டால் போதும் என்ற நிலையால் அவர்களை தம் குழந்தைகளின் நிலையைக் கண்டும் காணாமல் இருக்க வைத்துவிடுகிறது.

2008 ஆம் ஆண்டு பதிவுகளின்படி 62.2% வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.ஆண்டுவருமானம் ரூ.25,000/-க்குக் கீழ் இருப்பவர்களே இளம் குற்றவாளிகளாக உருவாகின்றனர்.
ஆண்டுவருமானம் ரூ.25,000/- முதல் ரூ.2 லட்சம் இருக்கும் குடும்பங்களில் இளம் குற்றவாளிகள் 13.6% உருவாகியுள்ளனர்.
ஆண்டுவருமானம் ரூ.2,00,000/-க்கும் அதிகமாக இருப்பவர்களின் குடும்பங்களிலிருந்து இளம் குற்றவாளிகள் 24.2% உருவாகின்றனர்.
இந்த இளம் குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் தெருவில் வசிப்பவர்கள்.அதாவது பேருந்துநிலையம்,ரயில் நிலையத்தில் வாழ்ந்துவருபவர்கள்.
போலீஸார்களுக்கு “மாதக்கடைசிகேஸ்”ஆகி போலீஸ்காரர்கள் பதவி உயர்வுக்கு இந்த தெருவோரம் வசிப்பவர்களே ‘உதவி’செய்கின்றனர்.பிறகு,போலீஸ்துறையால் இவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
காமம் ரீதியான குற்றங்கள் உருவாக கவர்ச்சிகாட்டும் ஸ்ரேயாக்கள்,சிம்ரன்கள்,அனுஷ்காக்கள்,அசின்கள்,மும்தாஜ்கள்,ஷகீலாக்கள் காரணமாகின்றனர்.நாமும் இதை கண்டும் காணாமலும் அனுமதிக்கின்றன.

அந்த சமூகப்பிரச்னையின் ஒரு சுருக்கம்.


இனி ஆன்மீகக்கடலான நமது சிந்தனை:
ஒரு பெட்டிக்கடை கிராமத்தில் உருவாக்கிட ரூ.50,000/-முதலீடும்,நகரத்தில் உருவாக்கிட ரூ.1,00,000/-முதலீடும்,மாநகரத்தில் உருவாக்கிட ரூ.5,00,000/-முதலீடும் தேவை.இப்படி துவங்கிடும் ஒருபெட்டிக்கடையானது 10 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.இந்த ஆய்வுமுடிவை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியிட்டுள்ளது.

(சுதேசி விழிப்புணர்வு இயக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்தியாவின் தேசிய பொருளாதாரச் சுயச்சார்பை உருவாக்க உதவும் ஒரு பிரச்சார அமைப்பு)
ரூ.2 கோடி ரூபாயை மத்திய அரசு சர்வோதயா அமைப்புக்குத் தந்தால்,சர்வோதயா அமைப்பினால் 200 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கிடமுடியும். இதன்மூலம் 200 குடூம்பத்தை நிரந்தரமாக வறுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.
ஆனால்,நமது மத்திய அரசுகள் என்ன செய்கிறது தெரியுமா?
ஒரு வருடத்துக்கு 7,00,000 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும்(இந்தியாவைத் தவிர்த்து) வருமானம் பார்க்கும் வால்மார்ட் என்ற அமெரிக்க சில்லறை வர்த்தக பூதத்துக்கும்,அதுபோன்ற வர்த்தக பிசாசுகளுக்கும் இந்தியாவை விற்றுவிட்டது.
ஒரு சர்வேப்படி,ஒரு இந்தியன் தனது 60 வயது வாழ்நாளுக்குள் ஒரே ஒரு முறை ஒரு பொருளை (உதாரணம் ஹமாம் சோப் அல்லது பெப்சி அல்லது கேதான் பேன்) வாங்கினாலே அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துவிடுமாம்.அவ்வளவு பெரிய்ய சந்தை நம்முடைய இந்திய சந்தை.



நமது இந்தியச்சந்தையில் நுகர்வோர்கள் தான் ராஜா என எல்லா வணிகப்பத்திரிகைகளும் எழுதிக்குவிக்கின்றன.அது வடிகட்டினபொய்.மேல்நாட்டைச் சேர்ந்த (அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,சீனா,ஜப்பான்,பிரான்ஸ்)பன்னாட்டு நிறுவனங்கள்தான் ராஜா.
ஏனெனில்,ஒரு மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் விலை இந்தியாவில் ரூ6000/- அதே ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அமெரிக்கவிலை வெறும் ரூ.450/-மட்டுமே.(இந்தியாவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 72 கோடி, அமெரிக்காவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை வெறும் 25 கோடி)

அதிகமான பயன்பாட்டாளர்கள் இருந்தால் விலையைக் குறைக்க வேண்டும்.ஆனால்,பேராசை அமெரிக்கா இந்தியாவில் மட்டுமே பகாசுரக்கொள்ளையடித்துக்கொண்டே இருக்கிறது.



இந்த கொள்ளையைக் கண்டுகொள்ளாமலிருக்க மத்திய அரசின் அமைச்சர்கள்,பிரதமர்,துறைச் செயலாளர்கள் என அனைவருக்கும் அன்பளிப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.


குளிர்பானச்சந்தையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்,பெப்சியும் கோகோகோலாவும் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 1000 வட்டார குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தன.இந்தியா முழுக்க சுமார் 1,00,000 வட்டார குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.இவைகளை பெப்சியும் கோலாவும் அழித்தன;அல்லது விலைக்கு வாங்கின.

ஒரு பெட்டிக்கடையே 10 பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறது என பார்த்தோம்.ஒரு குளிர்பான நிறுவனம் குறைந்தது 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பைத் தந்திருக்கும்.அப்படியானால் 1,00,000 x 100=1,00,00,000 (ஒரு கோடி) பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கும்.
4 பேர் கொண்டது ஒரு குடும்பம் எனக் கொண்டால், 4 கோடி குடும்பங்கள் குளிர்பான நிறுவனங்களை நம்பி வாழ்ந்திருக்கும்.இந்த சுயதொழில் மற்றும் சுதேசி(உள்நாட்டு) வாழ்வாதாரத்தை சிதைத்து, 4 கோடி இந்தியக்குடும்பங்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு,1,00,000 இந்திய சிறுதொழில் நிறுவனங்களை கொன்றுவிட்டு, பன்னாட்டு குளிர்பானங்கள் இன்று ஐஸ்வர்யாராய்,டெண்டுல்கர்,அசின்,த்ரிஷாக்களின் கவர்ச்சிவிளம்பரங்களால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கின்றன. நாமும் நமது நடிகை/நடிகர்களின் மூஞ்சிக்காக சிறிதும் சத்தில்லாத இனிப்பும்போதையும் நிறைந்த குளிர்பானங்களை குடித்து நம் உடலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்,இந்தியாவில் 4 கோடி குடும்பங்கள் வறுமைநிலைக்கு வந்துள்ளது எனில்,இந்தியாவின் ஆட்டோமொபைல்,விவசாயம்,கல்வி,ஏற்றுமதி,வணிகப்பயிர்,தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் அன்னிய ஆதிக்கத்தை மட்டும் வளரவைத்து எத்தனை கோடி இந்தியக்குடும்பங்கள் வறுமையின் எல்லையைத் தொட்டிருக்கும்?

ஏன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் மகன்கள்,மகள்கள் ஒருநாளுக்கு மட்டும் பட்டினி கிடந்திருப்பார்களா? நமது நாட்டின் பெருமைகள் தெரிந்திருக்குமா?

அரிசி,பலசரக்கு,காய்கறி,உயிர்காக்கும் மருந்துகள்,அத்யாவசியப்பொருட்கள் இவற்றின் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது;ஆனால்,தனிமனித சம்பளம் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஓரிரு முறை உயருகிறது.பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவிகளின் புத்திசாலித்தனத்துக்கு வேட்டு வைக்கின்றனர் இந்தியாவின் மத்திய அரசுத்துறைகளின் கொள்ளை முடிவுகள் . . . ஓ ஸாரி கொள்கை முடிவுகள்.
இதன் விளைவாக,வேலைவாய்ப்பு சுருங்கி இந்தியாவின்/தமிழ்நாட்டின் குடும்பங்களில் விபச்சாரம் சகஜமாகிவிட்டது.விபச்சாரம் நவீனமாகி பணம் சம்பாதிப்பது ஒரு வெறிபிடித்த கொள்கையாகிவிட்டது.


எனக்குத் தெரிந்தவரையிலும்,
தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் தனது மகனையும்,மகளையும் ‘ நீ என்ன செய்வியோ தெரியாது; ஒரு நாளுக்கு குறைந்தது ரூ.100/- சம்பாதிச்சுட்டு வா.முடியலையா. . வீட்டுக்கே வராதே’ என தனது செல்வ மகன்/மகள்களை மிரட்டி வீட்டைவிட்டு வெளியேற்றும் பெற்றோர்களை நான் நேரில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
தான் வளர்த்த தனது மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்திற்கு அறிமுகப்படுத்துவதை நேரில் கண்டு நான் அந்த இளைஞர்கள்,இளம்பெண்களின் எதிர்கால நிலையை நினைத்து எனது தூங்காத இரவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.


காரணம் கேட்டால்,என் புருஷன் குடிக்கிறான்.வேலைக்குப் போக மாட்டேங்குறான்.. என பல முறை இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.





இந்துக்களுக்கு திருவிதாங்கூர் மன்னரின் அழைப்பு:நன்றி தினமலர் 24.5.2010

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்



திருவனந்தபுரம் : "இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதுகுறித்து பேசினாலோ, படித்தாலோ, எழுதினாலோ போதாது. ஒற்றுமையுடன் செயலில் இறங்க வேண்டும்' என, திருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கேட்டு கொண்டார். திருவனந்தபுரத்தில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாட்டை உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா துவக்கி வைத்து பேசியதாவது:இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இந்துக்கள் ஐக்கியத்திற்கு படிப்பதால், எழுதுவதால், பேசுவதால் மட்டும் போதாது. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.ஐந்து விரல்களும் இணைந்திருப்பதை போல், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குருதேவன், சட்டம்பி சுவாமி, வைகுந்தசுவாமி, அய்யங்காளி ஆகியோர் வலியுறுத்திய நெறிமுறைகளை, நாம் இன்னமும் பின்பற்றவில்லை.இதே நிலை நீடித்தால் கேரள மாநிலம் சிதறி விடும்.இவ்வாறு மன்னர் கூறினார்.

Saturday, May 22, 2010

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும்

Dear all,
If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2010) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form: 580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore.
Contact numbers:1. Ms. Saraswati - 99009 063382. Mr. Shivkumar - 99866 303013. Ms. Bindu - 99645 34667
Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help.
With Regards,KALISA LINGAM

Wednesday, May 19, 2010

துவங்கிவிட்ட 2012 அழிவு:பாலஜோதிடம் வார இதழின் ஆதாரத்துடன்


பாலஜோதிடத்தில் வந்துள்ள கட்டுரைச்சுருக்கம்

விக்ருதி வருடம் பிறந்த 14.4.2010 முதல் 26.12.2012 வரையிலும் சனி,செவ்வாய்,புதன் மற்றும் குருவின் சஞ்சாரச்செயல்பாடுகளால் உலகின் பெரும்பகுதிகள் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி,பூகம்பம்,கடல் மட்டம் உயருதல் போன்றவற்றால் அழியப்போகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள்,சென்னை,விசாகப்பட்டினம், இலங்கை,பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான்,இந்தோனோஷியா,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன.
இந்த பேரழிவினால் சில நாடுகளின் பொருளாதாரம் அடியோடு நாசமாகும்.சில நாடுகள் உலக அரசியலில் இருந்து நிரந்தரமாக தனது பிடியை கைவிட்டுவிடும் எனஒரு ஜோதிடர் கணித்துள்ளார்.
இந்தக்கணிப்பு மே 2010 முதல்வாரத்தில் வெளிவந்த பாலஜோதிடத்தில் வெளிவந்துள்ளது.

Wednesday, May 5, 2010

இந்தியாவிற்கு ஆத்ம சோதனை

இந்தியாவிற்கு ஆத்ம சோதனை


கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து மட்டும் இந்தியாவில் செயல்படும் கிறிஸ்தவ அறக்கட்டளைகள்,என்.ஜி.ஓ.,க்களுக்கு வந்துள்ள பணம் ரூ13,000 கோடிகள்.
இதுதவிர இவற்றில் பாதியளவுக்கு சில நாடுகள் இந்தியாவுக்கு பணம் அனுப்பியுள்ளன.அவை பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜெர்மனி,கனடா.
இந்த பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டின் பல பழமையான கோவில்களைச் சுற்றிலும் கிறிஸ்தவ அமைப்புகள் ஆக்கிரமிப்பு,வாடகை,குடியிருப்புகள் இவற்றை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.இந்தகிறிஸ்தவ வளர்ச்சியால் பல்லாயிரம் கோயில்களில் சுவாமி ஊர்வலம்,தேரோட்டம் போன்ற வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் சுமார் 1500 ஆண்டுகளுக்குப்பிறகு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை,உள்துறை,ராணுவம்,சமூகநலத்துறை என அனைத்திலும் பணிபுரியும் அதிகாரிகளில் கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள்,தனது சக ஊழியர்களை கிறிஸ்தவமதத்திற்கு மாற்றத்துவங்கியுள்ளனர்.
ஆதாரம்:குமுதம் ஜோதிடம் ஏப்ரல் 2010.
சித்திரை 1 அன்று தமிழ்நாட்டின் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கக்கூடாது என மஞ்சள்துண்டு தாத்தா வாய்மொழி உத்தரவிட்டுள்ளாராம்.
கோவையில் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் தமிழில் ஆன்மீகம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் எதையும் சமர்ப்பிக்கக்கூடாது என தமிழக முதலமைச்சரின் அலுவலகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம்.
சத்திஷ்கர் மாநிலத்தில் மாவேயிஸ்டுகளை ஒழிக்க வந்திருந்த அதிரடிப்படைக் காவலர்கள் சுமார் 100 பேரை மாவேயிஸ்டுகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.நிச்சயம் இதற்குப்பின்னால்,சீனா இருக்கிறது.இதைச் சொல்லும் துணிவு மன்மோகன் சோனியா அரசுக்கு இல்லை.அவர்களுக்கு அமெரிக்காவின் ஷீவைத் துடைப்பதற்கே நேரமில்லை;
உலகிலேயே நம்பர் ஒன் பிராடுக் கம்பெனி என பெயர் எடுத்திருக்கும் நிறுவனம்தான் மான்சாண்டோ எனப்படும் அமெரிக்க நிறுவனம்.இந்த நிறுவனத்தின் பல்லாயிரம் கோடிகள் கமிஷனுக்காக நமது மத்திய அரசு ஒரு சட்ட முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது. “மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களுக்கு எதிராக இந்தியாவில் யாராவது பேசினால்,எழுதினால்,விளம்பரம் செய்தால் அவர்களுக்கு சிறை தண்டனையும் சில லட்சரூபாய்கள் அபராதமும் விதிக்கப்படும்”என்பதே அந்த சட்ட முன்வரைவின் சாராம்சம்.


உலகம் முழுவதும் அணுமின் நிலையங்களை வைத்திருக்கும் எல்லா நாடுகளிலும்,அணுவிபத்து ஏற்பட்டால்,அதன் நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் ரூ.500 கோடிகள் தரவேண்டும் என சட்டமியற்றியுள்ளன.ஆனால்,நமது தர்மம் மிகு பாரதநாட்டில் மட்டும் அதிகபட்சம் ரூ.500 கோடிகள் நஷ்ட ஈடுதரவேண்டும் என சோனியா,மன்மோகன் அரசு சட்டமியற்றியுள்ளது.ஆக,இந்தியாவின் மூளையில் அமெரிக்காவின் நாசா,இன் டெல்,மைக்ரோசாஃப்ட்,ஓரக்கிள்,ஆப்பிள் மற்றும் உலக வல்லரசுகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.அதே சமயம்,இளிச்சாவாய் இந்திய அரசியல்வாதிகளை தனது ஷீவுக்குள் அடக்கி இந்திய அப்பாவி மக்களின் நலன்களை விழுங்கும்.
ஆக,சொரணையற்ற,விழிப்புணர்வற்ற,சுயமாக வாழவிரும்பும் இந்தியர்களுக்கு இதுதான் முடிவா?

ஆக, இந்துதர்மத்தை அழிக்க எவ்வளவு திட்டமிட்டும்,ஒருங்கிணைந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் செயல்பட்டுவருகின்றன.

கடவுளே! உனது ஆசிர்வாதம் பெற்ற எனது பாரதத்திற்கே இவ்வளவு கேடுகளா?
நீ எப்போது அந்த தேசபக்தி நிறைந்த மாவீரனை அனுப்பப்போகிறாய்?
எப்படி இந்த பிரம்மாண்ட தேசத்தை,20,00,000 ஆண்டுகள் பழமையான இந்துதர்மத்தைப் பாதுகாக்கப் போகிறாய்?

ஜாதகம் பார்க்க விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்

ஆன்மீகக் கடல் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
பலர் தமது பிறந்த நேரம்,தேதி,ஊரினை அனுப்புகிறார்கள்.இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமே!


1.8.2010 வரை எனது சில சொந்தக்கடமைகளால் உங்களின் பிறந்த ஜாதகத்தைக் கணிக்க இயலாமையால் சிலருக்கு ஜாதகபலன்களை அனுப்பிட இயலவில்லை.
எனவே,1.8.2010 வரையிலும் மட்டும் தங்களின் பிறந்த ஜாதகத்தின் நகலை மட்டும் அனுப்பினால்,உடனே பதில் அனுப்பமுடியும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆன்மீகக்கடல்

அதிசார குருப்பெயர்ச்சி 2010

அதிசார குருப்பெயர்ச்சிப்பலன்கள் 2010

2.5.2010 ஞாயிறு மாலை சுமார் 4 மணியளவில் கும்பராசியில் இருந்த குருபகவான்,அதிவேகமாக(அதிசாரமாகி) மீனராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.கார்த்திகை மாதம் அதாவது நவம்பர் 2010 இல் சில நாட்கள் மட்டும் மீண்டும் கும்பராசிக்கு வந்துவிட்டு,மீண்டும் மீனராசிக்குச் சென்றுவிடுகிறார் என பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.
இதனால்,ஓரளவு ஏழரைச்சனியில் தொல்லையிலிருந்து மீண்ட சிம்மராசிக்காரர்கள் மீண்டும் வேதனைநிறைந்த நாட்களில் வாழத்துவங்கியுள்ளனர்.
ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் துன்பத்தைஅனுபவித்துவரும் கன்னிராசிக்காரர்களுக்கும்,அஷ்டமச்சனியை அனுபவித்துவரும் கும்பராசிக்காரர்களுக்கும் இந்த அதிசார குருப்பெயர்ச்சி ஆறுதலளிப்பதாக இருக்கும்.
மீனத்துக்கு வந்துள்ள குருபகவான், ஏழாம் ராசியான கன்னியையும்,கடகத்தையும்,விருச்சிகத்தையும் பார்வையிடுகிறார்.
இதனால்,கடந்த 9 மாதங்களாக படாதபாடு பட்டுவந்த கன்னிராசிக்காரர்களுக்கு டிசம்பர் 2011 வரை இருக்கும் ஜன்மச்சனியால் பெரும் தொல்லைகள் இராது.
ஏழரை முடிந்தும்கூட,ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அல்லது லைஃப் செட்டிலை எதிர்பார்த்துக்காத்திருக்கும் கடகராசிக்காரர்கள் இதுவரை பொறுமையிழந்து,எதிர்காலம் பற்றிய பயம் கலந்த ? யாக இருந்திருப்பார்கள்.அவர்களுக்குப் பொற்காலம் துவங்கிவிட்டது.இந்த வருடம் ஆவணி மாதத்திற்குள் பெரும்பாலான கடகராசிக்காரர்கள் நிரந்தரமான வேலை அல்லது தொழிலில் அமர்ந்துவிடுவார்கள்.பலருக்கு அரசாங்கவேலை கிடைக்கும்.தைரியமாக முயற்சி செய்யவும்.

விருச்சிகராசிக்காரர்களை 11 ஆம் இடத்து சனி நன்மையைத் தந்தாலும்,சனியில் 3 ஆம் பார்வையால் அடிக்கடி நிம்மதியிழந்துதவிப்பார்கள்.இந்த நிலையை இந்த அதிசாரகுருப்பெயர்ச்சி மாற்றிவிட்டது.ஆம்!
குருவின் 9 ஆம் பார்வையும்,சனியின் 3 ஆம் பார்வையும் சேர்ந்து விருச்சிகராசிக்காரர்களுக்கு இடம் மாற்றத்துடன் கூடிய நிம்மதியான ,நல்ல,வேலை அல்லது தொழிலை அமைத்துத்தரும்.

மிதுனராசிக்காரர்கள் குருவின் பார்வையிலிருந்து தப்புவதாலும்,சனியின் முழுப்பார்வையான 10 ஆம் பார்வையில் சிக்குவதால்,டிசம்பர் 2011 வரை தேவையில்லாத சிக்கல்கள் அல்லது பிரச்னைகளில் சிக்க வாய்ப்பிருக்கிறது.ஏதாவது ஒரு ரூபத்தில்,அவமானம் வரலாம்.
தனுசுராசிக்காரர்கள் இடமாற்றத்துடன்,பதவி உயர்வு கிடைக்கும்.தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.குறிப்பாக காதல்,கள்ளக்காதல்,பிறரது அந்தரங்கம் இவற்றில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிக அவசியம்.
கும்பம்,மேஷம்,கன்னி,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திடீர் திருமணம் ஏற்படும்.அல்லது திடீரென சுபகாரியங்கள் நடைபெறும்.

வாழ்க வளமுடன்!

Saturday, May 1, 2010

பிரபாகரன் பற்றி பழைய ஜோதிடக்கணிப்பு

ஜோதிடக் கணிப்பில் தமிழர்களின் துருவ நட்சத்திரம்

கி.பி.1980 களில் இலங்கைத்தமிழர்களின் துருவ நட்சத்திரம் மாவீரன் பிரபாகரன் பற்றி ஒரு ஜோதிடர் கணித்திருந்தார்.அவர், “பிரபாகரனின் முற்பகுதி வாழ்க்கை வெளிப்படையானது;பிற்பகுதி வாழ்க்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் போல மர்மமானதாக இருக்கும்”என கணித்திருக்கிறார்.
எனது எண்ணம் என்னவெனில்,இது நிஜம் ஆகாமல்,மீண்டும் பிரபாகரன் அவர்கள் களத்துக்கு வரவேண்டும் என்பதே.பிரபாகரன் இலங்கையில் இல்லாததால்,நடக்கும் கொடூரங்களைக் கேள்விப்பட்டு சிங்கள மக்களே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
சீனாவின் உலக வல்லரசு பேராசை,ராஜபக்ஷேக்களின் அதிகாரப் பசி,இந்தியாவின் இந்திய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் சொதப்பலான அரசியல் ராஜதந்திரம்,அமெரிக்காவின் சுயநலம்,தமிழ்நாட்டு அரசியல்தலைவர்களின் தமிழ்ப்பாசத்திலும் தன்னலம் என ஆக்டோபஸ் போல எவருக்கும் இலங்கைத் தமிழினத்தின் வேதனைபற்றி சிறிதும் கவலையில்லை;எல்லோருக்கும் தத்தமது சுயநலம் தவிர வேறெதுவும் முக்கியமில்லை;
யாரையும் எவரையும் எப்போதும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த எனது மாவீரனே நீங்கள் உடனே தமிழ் ஈழத்தின் களத்துக்கு வருக!!
உலகின் அறிவுத்திறன் மிகுந்த இனம் யூத இனம்.அந்த யூத இனம் தனக்கென்று ஒரு நநடு இல்லாமல் 2000 ஆண்டுகளாக அவதிப்பட்டது.2000 ஆண்டுக்குப்பிறகு இந்த சின்னஞ்சிறு பூமியில் சுயச்சார்புடன் இஸ்ரேல் என்ற துடிப்புமிக்க தேசத்தை உருவாக்கியது.அதேபோல்,சுயபலத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத்தமிழர்களின் மானம் காத்த மாவீரன் பிரபாகரன் அவர்களே! உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனத்திற்காக ஒரு நாட்டை உருவாக்கிட வருக!!!

அடுத்த வேளை சோத்துக்குக் கூட வழிசெய்யாத சிங்கள அரக்கர்களுக்கு பாடம் புகட்டிட வருக!!!
இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத்தெறியத்துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக!!!

சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும்,கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கு உடனே வருக!!!

இப்படிக்கு
கை.வீரமுனி,ஆன்மீகக்கடல்.