Friday, August 31, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார்!!!




சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள்,தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை  ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்;திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க,தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார்.வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.
வெகுதூரம் ஓடி வந்த நாச்சியார்,திடீரென ஆவேசமாகி,நான் பத்தினி என்பது உண்மையானால்,பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த,உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார்.துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.
ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர்,அந்த இடமானது நடைபாதையாக மாறியது;ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது,இந்த  இடத்தை நெருங்கியதும்,ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள்.தான் இங்கே இருப்பதாகவும்,இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.
அந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல,அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு,வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக,அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.அவளுக்குப்பின்னர்,ஒரு  இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்)மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு  சொல்லிவருகிறாள்.
இந்த உத்தமி நாச்சியார்,ஸ்ரீவில்லிபுத்தூர் தபால்  அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம்  செல்லும் வழியில்
அமைந்திருக்கிறது.அதிகமாக பிரபலமாகாத இந்தக்  கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும்.ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும். 
இதே போல சில  உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன.
எங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.
ஓம்சிவசிவஓம்

ஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்!!!




Wednesday, August 29, 2012

ஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்படுத்துவோம்;


ஆவணி மாத பவுர்ணமியானது எதிர்வரும் 30.8.12 வியாழன் இரவு 8.36க்குத் துவங்கி,வெள்ளி இரவு(31.8.12) 8.05 மணி வரை இருக்கிறது.நவக்கிரகங்களில் முதன்மையானதும்,முக்கியமானதுமாகிய ரவி எனப்படும் சூரியன் ஆட்சியாகி,அதற்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் முழு பலம் பெறும் நாளே ஆவணி மாத பவுர்ணமியாகும்.இதையே ஆவணி அவிட்டம் என பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.

இந்த நாளில்,வியாழன் இரவு  முதல் நம்மால் எவ்வளவு நேரம் முடியுமோ,அவ்வளவு நேரத்துக்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.
எவ்வளவு உயரமான இடத்திலிருந்து நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபம் விரைவான பலனைத் தரும்.



இதுவரையிலும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இன்று   ஜபிக்கத் துவங்கலாம்;


பல நாட்கள்/வாரங்கள்/மாதங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்து,இடையில் பல்வேறு காரங்களால் அதை ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்,இந்த நாளில்-  மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

தொலைதூர நாடுகளில் வாழும் தமிழ் வாசகர்கள்,ருத்ராட்சம் இல்லாமலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;வைஷ்ணவத்தைப் பின்பற்றும் வாசகர்கள் ஓம்ஹரிஹரிஓம் என ஜபிக்கலாம்;ஓம்சிவசிவஓம் ஜபித்தால் என்ன பலனோ,அதே பலன் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தாலும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை!

ஓம்சிவசிவஓம்

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு!!!




ஒரு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உங்களது பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தில் பவுர்ணமி உருவாகிறது.இந்த வருடம் அவிட்டத்தில் வரும் பவுர்ணமி30.8.12 வியாழன் இரவு 8.36 க்கு ஆரம்பித்து 31.8.12 வெள்ளி இரவு மணி 8.04க்கு நிறைவடைகிறது.இந்த நேரத்துக்குள் இங்கே  கூறப்பட்டிருக்கும் தானங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்துவிடுவது அவசியம்;(தவிர கும்ப ராசியில் பிறந்த சதய நட்சத்திரக்காரர்களும் இதைச் செய்யலாம்;ஏனெனில்,சதயத்தில் ஒரு போதும் பவுர்ணமி வராது;ஆனால், அவிட்ட பவுர்ணமியின் தாக்கம் 60% சதயத்துக்கும் உண்டு)


இந்த நாளில் அவிட்டத்தில்(மகர ராசியில் அவிட்டம்1 ஆம் மற்றும் 2 ஆம் பாதங்கள்;கும்பத்தில் அவிட்டம் 3 ஆம் மற்றும் 4ஆம் பாதங்கள்)பிறந்த எவரும் பின்வரும் புண்ணிய காரியங்களைச் செய்யலாம்;

1.திரு அண்ணாமலை அல்லது பழமையான சிவாலயங்களில் அன்னதானம் செய்யலாம்;உங்களால் எத்தனை பேர்களுக்குத் தர முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு அன்னதானம் செய்தால்,அதன் பலன் மறுநாளே பல மடங்கு திரும்பி வரும்;அப்படி வருவதால் மறுநாளே உங்களுடைய நீண்டகால மற்றும் சிக்கலான பிரச்னை தீர்ந்துவிடும் அல்லது தீர வழிபிறக்கும்.இது கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்த ஜோதிட உண்மை ஆகும்.

2.உங்களுடைய விருட்சமான வன்னி மரக்கன்றை வாங்கி உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் கோவில் வளாகத்திலோ நடலாம்.நட்டு தினமும் தண்ணீர் ஊற்றலாம்.அதுவும் இந்த ஆவணி அவிட்டத்தன்று விருட்சம் நட்டால்,அப்படி நடுவதற்கே பூர்வபுண்ணியம் தேவை;நட்டுவிட்டால் உங்களுடைய அத்தனை தோஷங்களையும் அது வாங்கிக் கொள்ள வேண்டும்;ஒரே ஒரு நிபந்தனை :நீங்கள் அப்படி நட்டுவிட்ட நொடியிலிருந்து பிறரை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது;மனதாலோ,உடலாலோ ஏமாற்றக் கூடாது;இப்படி இருக்கத் துவங்கினால் உங்களுக்கு நியாயமான வழிமுறைகளிலேயே வருமானம் பெருகத் துவங்கும்;உங்களது தேவைக்கு மேலேயே வருமானம் கொட்டத் துவங்கும்;இப்படி வருமானம் அதிகரிக்க நீங்கள் குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்;அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்;அதுவும் எப்படி? நிரந்தரமாக!!!


3.ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திர ஜபத்தை உங்கள் ஊரில்  இருக்கும் ஜீவசமாதிகளில் ஏதாவது ஒன்றில் ஜபிக்க வேண்டும்;குறைந்தது 30 நிமிடம்,அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு ஜபிக்க வேண்டும்;


4.அருகில் இருக்கும் மலைக்கோவிலுக்கோ அல்லது காட்டுப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கோ செல்ல வேண்டும்;அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களை(நவ தானியங்கள் அனைத்தும் கலந்தது) உங்கள் கையால் வாங்கிச் செல்ல வேண்டும்;வாங்கிச் சென்று அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மனித காலடி படாத இடங்களில் உங்கள் கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலம் துவங்கியிருக்கிறது;எனவே,அடுத்து வரும் லேசான சாரல் பெய்தாலே அந்த நவதானியங்கள் முளைக்கத் துவங்கும்;அப்படி துவங்கியதும்,அவிட்டநட்சத்திரக்காரர்களின் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடத் துவங்கும்.

5.உங்கள் ஊரில் இருக்கும் சாதுக்களுக்கு காவி துண்டுகள்,வேட்டிகள் எடுத்து தானம் செய்யலாம்.


6.உங்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்கு நெய் அல்லது எண்ணெய் குறைந்தது ஒரு டின் வாங்கி தானமாக தரலாம்.மேலும் நைவேத்தியத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வாங்கித்  தரலாம்.(ரூபாயாகத் தரக்கூடாது)தொலை தூர இடங்களில் வாழ்ந்து வரும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தமது ரத்த உறவுகள் அல்லது நெருங்கிய நட்பு மூலமாக இவ்வாறு எந்த தானமும் செய்யலாம்;



ஓம்சிவசிவஓம்


Tuesday, August 28, 2012

தண்டபாணி பைரவர் !!!!




காசிக்குப்போயும் பாவம் தொலையலியே !
காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.
காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது
மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா!
குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.
""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.
ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.
ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.

நன்றி! http://www.gaanam.net

இரட்டை முக பைரவர்!!!


இரண்டு பைரவர்கள்




  • அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில்அழகாபுத்தூர் - 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர்தஞ்சாவூர் மாவட்டம்.

  • இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரம் 3நிலைகளைக் கொண்டதுஇத்தலவிநாயகர் சொர்ணவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

  • முன்மண்டபத்தில் புகழ்த்துணை நாயனார்தன் மனைவிலட்சுமியுடன் காட்சி தருகிறார்அருகில் சுந்தரர்மனைவிபரவை நாச்சியாருடன் இருக்கிறார்சொர்ணவிநாயகர்,தனிச்சன்னதியில் இருக்கிறார்இவரை வணங்கியபின்பே,சிவனை வழிபட வேண்டுமென்பது ஐதீகம்.

  • பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.முருகன்தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்தசுவாமிமலை தலம்இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில்இருக்கிறது.

  • இங்கு பைரவர்களை வேண்டிக்கொள்ள தவறைதட்டிக்கேட்கும் மனப்பான்மையும்துன்பங்களைத்தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பதுநம்பிக்கை.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்!!!


ஸ்தல வரலாறு::  
இங்குள்ள இறைவன்  சுவர்ணபுரீஸ்வரர் இறைவி  சுவர்ணாம்பிகை பைரவர் சுவர்ண பைரவர் ஆவர்.இத்தலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சிவனின் தரிசனம் வேண்டி 16 ஆண்டு காலம் கடும் தவம் மேற்கொண்டார் காகபுஜண்ட சித்தர். இவர மேற்கொண்ட தவத்தின் காரணமாக இறைவன் 16 முகங்களை கொண்டவராக லிங்கமாக காட்சி தந்தார்.  
இந்த சித்தர் இறையடி சேர்ந்தபின், வானகோவராயன் என்ற மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இத்தலத்தின் இறைவன் அருளால் இப்பகுதி மக்கள் பொன், பொருளுடன் செல்வச் செழிப்பாக வாழ்ந்தனர். எனவே இத்தலம் "பொன்பரப்பி' என்றும், இறைவன் "சுவர்ணபுரீஸ்வரர்' என்றும், அம்மன் "சுவர்ணாம்பிகை' என்றும், பைரவர் "சுவர்ண பைரவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.  
இத்திருத்தலத்தின் மூலஸ்தானமும்,அர்த்த மண்டபமும் எப்போதும் உஷ்ணத்துடன் இருக்கும். ஏனென்றால் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தை சூரியகாந்தக்கல்லால் வடித்துள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் அக்னி சொரூபமாக உள்ளார்.   சூரியகாந்தக்கல் நவபாஷாணத்திற்கு ஒப்பானது. லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் விரைவில் குணமாக குணமடைகின்றன.
மேலும் குழந்தை செல்வம் வேண்டுவோர், ஐப்பசி பௌவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தின் போது தரப்படும் பாகற்காய் குழம்பை பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்றும் அழைக்கப்படுகிறார்.  
பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் (பீடம்) 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது மிகவும் தனி சிறப்பு ஆகும். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ, 16 பட்டை லிங்கமான சுவர்ணபுரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் வழிபடுவது சிறப்பு.  
இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும்  இந்த கோவிலில் காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி அம்பாளின் பார்வையில் படும்படி உள்ளது சிறப்பு வாய்ந்தது ஆகும். காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர்.  
நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். இத்தலத்தில் உள்ள நந்தி சிறியதாக இருக்கும். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது.   "பால நந்தி' என்பது இதன் திருநாமம் ஆகும். முருகன் ஆறுமுகத்துடனும், 12 திருக்கரங்களுடனும் 8 அடி உயரத்தில் மயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.  
வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:::  
மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் வழிபடுவது சிறப்பு.  
சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். இங்குள்ள சிவலிங்கம் சித்தர் பிரதிஷ்டை என்பதால், கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை..  
நடை திறக்கும் நேரம்::  
கோவில் காலை 5.30-லிருந்து இரவு 9.30 மணி வரை.  
போக்குவரத்து வசதி::  
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று பின் அங்கிருந்து 27 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையகரகம் சென்று பின் அங்கிருந்து பேருந்தில் சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சேலம் சென்று பின் அங்கிருந்து கள்ளக்குறிச்சி வழியாகவும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.  
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்ல நேரடி ரெயில் வசதி உள்ளது.சேலம் செல்லும் ரெயில்கள் (எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக) திருவனந்தபுரம் மெயில் இரவு7.45 மணி, சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.10  மணி, கோவை எக்ஸ்பிரஸ் காலை 6 .25  மணிக்கு   

நன்றி ! மாலை மலர் !!

அட்டவீரட்டானங்களின் பெருமைகளும்,ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றலும்!!!



ஸ்ரீகாலபைரவர் இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சிபுரிந்து வருகிறார்;நம்மைப் போலவே மனித இனங்கள் இந்த பிரபஞ்சத்தில் சுமார் 30,000 வாழ்ந்து வருகின்றன என்பதை வானியல் மற்றும் வேற்றுக்கிரக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இருந்தபோதிலும் ஸ்ரீகாலபைரவர் அந்த 30,000 பூமிகளில் திருவிளையாடல் நடத்தாமல் நமது பூமியில் திருவிளையாடல் நடத்தக் காரணம் என்ன?

ஏனெனில்,நாம் வாழும் பூமிதான் கர்ம பூமி;மற்றவையெல்லாம் போக பூமி.கர்ம பூமி என்றால் என்னவென்று பார்ப்போம்;நாம் வாழும் பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன.நாம் மனிதனாக வாழும் இந்த உலகத்தில் முடிந்தவரையிலும் அடுத்தவரை சித்ரவதை செய்தும்,ஏமாற்றியும் வசதியாக வாழ்ந்தால் நாம் இறந்ததும் இந்த பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்கு அனுப்பப்படுவோம்;அங்கே எல்லாவிதமான சித்ரவதைகளையும்,வேதனைகளையும் குறிப்பிட்ட காலம் வரையிலும்(சில நூறு ஆண்டுகளாகவும் இருக்கலாம்) அனுபவித்துவிட்டு மீண்டும் இதே உலகத்தில் மனிதனாக பிறப்போம்;
நாம் வாழும் காலம் வரையிலும் முடிந்தவரையிலும் அடுத்தவர்களுக்கு முடிந்த வரையிலும் உதவி செய்து கொண்டும்,நமது திறமையால் பிறருக்கு வழிகாட்டியும்,அடிக்கடி அன்னதானம் செய்தும்,தவறான பாதையில் செல்லும் நமது நட்பு வட்டம் மற்றும் உறவுகளை சீர்திருத்தினால் நமது மரணத்துக்குப் பிறகு இந்த பூமிக்குமேலே இருக்கும் ஏழு உலகங்களில் நாம் செய்திருக்கும் புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல ஏதாவது ஒரு உலகத்திற்குச் சென்று சகல போகங்களையும்(சில நூற்றாண்டுகள் வரை கூட இருக்கலாம்) அனுபவிப்போம்;அனுபவித்துவிட்டு மீண்டும் நாம் வாழும் இந்த பூமியிலேயே பிறப்போம்;அப்படி பிறக்கும்போது உயர்ந்த மனிதப்பிறப்பாக பிறவி எடுக்க வேண்டியிருக்கும்;உயர்ந்த ஜாதியினராக பிறப்போம் என்று இதற்கு அர்த்தம் இல்லை;பெரும் செல்வச் செழிப்போடும்,எந்த வித மனக்குறையுமின்றியும் பிறப்போம் என்று அர்த்தம்.

ஆனால்,மனிதனாகப் பிறந்த நமது வாழ்க்கைகளின் லட்சியம் இந்த 14 உலகங்களுக்குள் போய்த் திரும்புவது அல்ல;இந்த 14 உலகங்களுக்கும் ஒரு போதும் போகாமல் இருக்கும் மறுஜன்மமில்லாத முக்தியை அடைவதே ஆகும்.இந்த முக்தியை எல்லா தெய்வ சக்திகளாலும் தர முடியும்.இவ்வாறு முக்தியடைந்தப் பின்னர்,நாம் விரும்பினால் மட்டும் மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறக்க முடியும் என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.
கடவுள்களிலும் அதிகார அடுக்குகள் இருக்கின்றன.சாதாரண அப்பாவி மனிதர்களைவிடவும்,சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரிந்த மனிதர்கள் உயர்ந்தவர்கள்;சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவர்களை விடவும்,ஜீவசமாதி அடைந்த மகான்களும்,சித்தர்களும் உயர்ந்த ஆத்மாக்கள் ஆவர்;இவர்களை விடவும் உயர்ந்தவர்கள் இந்த நிலையிலிருந்து அடுத்த தெய்வீக நிலையை எட்டியிருக்கும் தேவர்கள்,இந்திரன் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்;இவர்களை விடவும் நவக்கிரகங்கள் உயர்ந்தவர்கள்;இவர்களை விட உயர்ந்தவர்கள் பிரம்மா+கலைவாணி;பெருமாள்+மகாலட்சுமி;ருத்ரன்+ருத்ரி உயர்ந்தவர்கள்; இவர்களை விடவும் உயர்ந்தவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரே சதா சிவன் எனப்படும் திருஅண்ணாமலையார்! இவருக்கும் மேலே ஒரே ஒரு பெண் சக்தி இருக்கிறாள்;இன்றைய 12 வயது சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கும் மனோன்மணி என்ற ஆதி பரபிரம்ம சக்தி ஆவாள்.இவளுக்கு மேலே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை;

ஆக மனிதன் என்பவன் தெய்வமாகலாம்;எப்படி ஸ்ரீகால பைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக!!!
மும்மூர்த்திகள்,எமன்,சனீஸ்வரன் முதலான நவக்கிரகங்கள்,வானில் இருக்கும் நட்சத்திரங்கள்,பஞ்ச பூதங்களையும் நிர்வாகித்து வரும் பஞ்சபூத தேவதைகள் என அனைவருமே மனிதர்களாக பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து பலவிதமான புண்ணிய காரியங்களைச் செய்து இந்த நிலைகளை எட்டியவர்கள் ஆவர்.நம்ப முடியுதா? நம்பாமல் போனாலும் இதுதான் உண்மை!!!
பூமியில் 429,40,80,000 வருடங்கள் ஆனால்,பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகியிருக்கும்;பிரம்மாவுக்கு 100 வயதானதும்,விஷ்ணுவுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;இப்படி விஷ்ணுவுக்கு 100 வயதானதும்,ருத்ரனுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;

ஒரு  பிரம்மாவுக்கு 100 வயதாகி மரணமடைந்ததும்,அஷ்டவக்ரகர் என்னும் சித்தரின் ஒரு வளைவு சரியாகியிருக்கும்;ரோமரிஷியின் உடலில்  இருந்து ஒரு ரோமம் உதிர்ந்திருக்கும்;இதையெல்லாம் உணரக்கூடிய ஆன்மீக ஆற்றல் அல்லது யுக  ஞானம் நம்மில் எத்தனை பேர்களுக்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள்?
பிரமிப்பாக இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள்;போரடித்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள்:
பல தடவை மனிதனாகப்பிறந்து,ஒவ்வொரு மனிதப்பிறவியிலும் சிவனே என் அப்பன் என்று இருப்பவர்களும்,ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களும் பிரபஞ்சத்தில் சிவ கணமாக உருமாறிவிடுவார்கள்;(ஆதிகாலத்தில் மனிதனும் மிருகங்களும் உறவு கொண்டு பிறந்தவைகளே,சித்தர்களிடம் சீடர்களாகி சிவ வழிபாடு செய்து சிவகணங்களாகவும்,விஷ்ணுகணங்களாகவும் உருமாறின என்று ஒரு ரகசியக்கருத்தும் உலாவுகிறது)


இந்தப் பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களுக்கு அவர்களுடைய முந்தைய ஐந்துபிறவிகளில் செய்த அத்தனை கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;அவர்களுடைய முந்தைய 71 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ஸ்ரீகாலபைரவர் உபாசனைக்கு உண்டு;ஸ்ரீகாலபைரவரின் உபாசனையை விடவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் உபாசனை உயர்ந்தது.ஏனெனில்,நவக்கிரக நாயகனாகிய சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

பொய் சொன்ன பிரம்மனின் ஐந்தாவது தலையை ஸ்ரீகால பைரவர் கிள்ளியெறிந்த இடமே திருக்கண்டியூர் ஆகும்.இதன் பழைய பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.நமது அகங்காரத்தை அழித்து ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் சரணடைய விரும்புவோர்,இலுப்பைஎண்ணெய்,புங்கை எண்னெய்,நல்லெண்ணெய் போன்றவைகளை கலந்து 8 விளக்குகளில் ஏற்றி வழிபட வேண்டும்;ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு விளக்குகளை மூலவருக்கு ஏற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அர்ச்சனையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கும்;மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.இதனாலேயே திருக்கண்டியூர் இறைவனின் பெயர் பிரமசிரகண்டீஸ்வரர் ஆகும்.அட்டவீரட்டானத்தில் முதல் வீரட்டானம் என்று அப்பர் அடிகளார் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


இரண்டாவது வீரட்டானத்தின் பெயர் திருக்கோவிலூர் கோவல் நகர் வீரட்டம் ஆகும்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடையே உலாவிய கருவூர் சித்தரின் ஆசி மற்றும் வழிகாட்டுதலின் படி ஸ்ரீராஜ ராஜ சோழன் இங்கிருக்கும் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி+சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகியை வழிபட்டு உலக நாடுகளை வெற்றி கொண்டார்.ஸ்ரீராஜராஜசோழன் பிறந்ததும் இந்த ஊரில் தான்!
 முழுமுதற்கடவுளான கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் அகவலை அவ்வையார் இயற்றியதும் இங்கேதான்.
மனதில் தோன்றும் தீய மற்றும் நான் என்ற அகங்காரம் தீர இவரை ஞாயிறு,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வருவது நன்று.
மூன்றாவது வீரட்டானத்தின் பெயர் திருவதிகை ஆகும்.முப்புரங்களைக் கொண்டு தேவருலகத்தை சித்ரவதை செய்த வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் என்ற மூன்று அசுரர்களை ஸ்ரீகால பைரவர் அழித்த இடமே திருவதிகை ஆகும்.சமணமதத்துக்கு மதம் மாறிச் சென்ற திருநாவுக்கரசரை ஸ்ரீகாலபைரவர் தடுத்தாட்கொண்ட இடமும் இதுவே!சுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருவடி தீட்சை கிடைத்த இடமும் இதுதான்.
நமது காமம்,கோபம்,தாபம்(ஏக்கம்) போன்றவைகளை நீக்கி யோக சித்தி,ஞான சித்தி பெற விரும்புவோர் இங்கே புதன்,வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கிட வேண்டும்;சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலை போன்றவைகளால் அபிஷேகம் செய்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.புதன் கிழமையன்று பாசிப்பருப்பு சுண்டலை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;இதன் மூலமாக தீராத வியாதிகள் தீர்ந்துவிடும்.

நான்காவது வீரட்டானத்தின் பெயர் திருப்பறியலூர் ஆகும்.மாயவரத்திலிருந்து(மயிலாடுதுறையும்,மாயவரமும் ஒரே ஊரின் வேறு பெயர்கள்) திருக்கடையூர் செல்லும் சாலையில் எட்டாவது  கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலை வந்தடைந்து திருப்பறியலூர் செல்லும் பாதையை விசாரிக்க வேண்டும்;இங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.தட்சன் யாகம் செய்த இடமே இந்த கோவிலின் குளமாக அமைந்திருக்கிறது.(சிவாஜி கணேசன் சிவபெருமானாக நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்)பூர்வ ஜன்ம தோஷங்களை நீக்கவும்,தீராத கடன் தொல்லை நீங்கவும் சந்தானாதித் தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலையோடு வருகை தந்து அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்ய வேண்டும்;இந்தக் கோவிலில் ஒரு மணி நேரமாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று மஞ்சள் பட்டுத்துண்டு விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.வில்வ அர்ச்சனையும்,வில்வ அபிஷேகமும் செய்யலாம்.

ஐந்தாவதாக இருக்கும் வீரட்டானம் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் வழியில் உள்ள திருப்பயந்தங்குடிக்கு அருகில் அமைந்திருக்கிறது.திருப்பயந்தங்குடியிலிருந்து விசாரித்துக் கொண்டே சென்றால் 2  கி.மீ.தூரத்தில் திருவிற்குடியைச் சென்றடையலாம்.இது மேற்கு நோக்கிய திருக்கோவில் ஆகும்.எனவே,இது ஒரு  பரிகாரத் திருத்தலம் என்றே எல்லோராலும் அறியப்பட்டுள்ளது.ஸ்ரீஜலந்தரமூர்த்தியாக அமைந்திருக்கிறார்.

மஹாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கு சுதர்ஸன சக்கரத்தையும்,அவரது வாழ்க்கைத் துணையாகிய திருமகளையும் ஸ்ரீகாலபைரவர் அருளிய இடம் இந்த திருவிற்குடி ஆகும்.இங்கே ஸ்ரீகாலபைரவரை(மூலவர் தான்) வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும்.மாதம் ஒரு தேய்பிறை அஷ்டமி வீதம் ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளுக்கு பொன்னால் ஆன காசு(முடியாதவர்கள் ரூபாய் நாணயங்கள்)காணிக்கையாக தந்தும்,கூடவே சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,வில்வ தளங்கள்(இலைகள்);செவ்வரளிமாலை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்;முடிந்தால் தேய்பிறை அஷ்டமிகளுக்கு விரதம்(சாப்பிடாமல் இருந்து “ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று ஜபித்தல்) இருப்பதும் நன்று.(இங்கு மட்டும் செவ்வரளிமாலையுடன் அல்லது அதற்குப்பதிலாக துளசி மாலையை மூலவருக்கு அணிவிக்கலாம்)

தவிர,27 செவ்வாய்க்கிழமைகளுக்கு இங்கே வந்து மேற்கூறிய பொருட்களுடன் மூலவருக்கு அபிஷேகமும்,நமது பெயரில் அர்ச்சனையும் செய்து முடித்தால் புத்திரபாக்கியத்தை ஸ்ரீகாலபைரவர் அருளுவார்.

தொழிலில் வீழ்ச்சியை நோக்கிச் செல்பவர்கள்,தொழில் தாம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லாதவர்கள் 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அல்லது 16 வெள்ளிக்கிழமைகளில் வரும் இராகுகால நேரத்தில்(காலை 10.30 முதல் 12 மணிக்குள்) மேற்கூறிய பொருட்களுடன் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்து வந்தால் தொழிலில் படிப்படியான அதே சமயம் உறுதியான வளர்ச்சியை அடைவதை கண்கூடாகக் காணலாம்;பலருக்கு இது போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


ஆறாவது வீரட்டானம் வழுவூர் ஆகும்.இந்த ஊரானது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரம் சென்றதும்,வலதுபுறம் செல்லும் சாலையில் திரும்ப வேண்டும்.அப்படித் திரும்பி அரை கி.மீ.தூரம் சென்றால் வழுவூர் வந்துவிடும்.இங்கே தான் ஐயப்பன் அவதரித்தார்;கிருத்திவாஸர் என்ற பெயரில் ஸ்ரீகாலபைரவர் அருளாட்சிபுரிந்து வருகிறார்.


 தியானம்,தவத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டாமல் தவிப்பவர்கள் மாதம் ஒரு திருவாதிரை நட்சத்திர நாள் வீதம் பத்து மாதத்திற்கு வர வேண்டும்;வந்து அந்த நாளில் அமையும் இராகு  காலத்தில் இந்த கோவிலினுள் அமைந்திருக்கும் மூலவரின் முன்பாக அல்லது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியின் முன்பாக மஞ்சள் பட்டுத் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து
“ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்;அல்லது நாம் எந்த விதமான தீட்சை வாங்கியிருக்கிறோமோ,அதே விதமான தீட்சைப்படியும் தியானிக்கலாம்;இதுவும் செய்ய இயலாதவர்கள் இந்த ஊரில் தங்கி,கோவிலை நோக்கி தமது அறையில் அமர்ந்து இராகு கால நேரம் முழுவதும் ஜபித்து வர வேண்டும்.
திருவாதிரை நட்சத்திர நாட்களில் வர இயலாதவர்கள்,வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் அல்லது அமாவாசை நாளில் வந்து தியானிக்கலாம்.மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களும்,தன்னை  கட்டுப்படுத்திட இயலாதவர்களும் இந்த முயற்சியை ஆரம்பிக்காமல் இருந்தாலே நல்லது;(வெட்டிப்பந்தாவுக்கு ஆரம்பித்து பைரவரிடம் கடி வாங்காமல் இருப்பதே உத்தமம்),அசாத்திய மனக்கட்டுப்பாட்டுடன் தியானம் செய்பவர்கள்,பத்தாவது நாளில் அல்லது அதற்குள்ளாகவே தியானத்தில் ஸ்ரீகாலபைரவ அருளைப் பெறுவதோடு,அதன்பிறகு இந்த உலகில் எங்கே சென்று தினசரி தியானம் செய்தாலும் அதில் கிடுகிடு முன்னேற்றத்தை எட்டுவார்கள்.

மேலும் 14.12.2012 வரை அஷ்டமச்சனியில் அவதிப்படும் மீன ராசிக்காரர்களும்,ஜன்மச்சனியில் அவதிப்படும் துலாம் ராசிக்காரர்களும் எட்டு மாதாந்திர சனிக்கிழமைகளுக்கு  இங்கே வந்து ஸ்ரீகால பைரவர் சன்னதியில் எட்டு நல்லெண்ணெய் இரும்புக் கிண்ணத்தில் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் சனியின் தாக்கம் தீரும்.இதையே கன்னி,மேஷம்,விருச்சிகம்,கடகம் ராசிக்காரர்களும் செய்து வர சனியின் வெவ்வேறு தாக்கங்கள்(வாக்குச்சனி,கண்டச்சனி,விரரயச்சனி, அர்த்தாஷ்டமச்சனி) தீர்ந்துவிடும்.

ஏழாவது வீரட்டானமாகிய திருக்குறுக்கை ஆகும்.மயிலாடுதுறையிலிருந்து மணல் மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்ற இடத்தைச் சென்றடைய வேண்டும்.அங்கே வந்து திருக்குறுக்கை செல்லும் பாதையை விசாரித்து 3 கி.மீ.தூரம் பயணித்தால் திருக்குறுக்கையை அடையலாம்.வழுவூருக்கு சொன்ன அத்தனை வழிபாட்டு மற்றும் அபிஷேக  முறைகளும் திருக்குறுக்கைக்கும் பொருந்தும்.


எட்டாவது வீரட்டானம்  திருக்கடையூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வாரண்யம் ஆகும்.நல்ல ஆன்மீக குருவை அடைய விரும்புவோர் இங்கே மாதம் ஒரு திருவாதிரை அல்லது வளர்பிறை அஷ்டமி அல்லது அமாவாசைக்கு வர வேண்டும்;வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவற்றால் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்;வில்வம் கிடைக்காத நாட்களில் செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம்;இப்படி தொடர்ந்து எட்டு நாட்களுக்கும் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்தால் நமக்குத் தகுந்த ஆன்மீக குரு கிடைப்பார்;அப்படி நமக்கு அமையும் ஆன்மீக குரு சித்தராகவும் கூட இருக்கலாம்;
அமாவாசை அன்று பவுர்ணமி என்று சொன்னாரே அபிராமி பட்டர்! அவரது அன்பான துதியைக் கண்டு ,அமாவாசையையே பவுர்ணமியாக மாற்றிய பிரபஞ்ச அன்னை அபிராமி ,அமிர்தகடேஸ்வரருடன் இங்கே இருந்துதான் அருள்பாலித்து வருகிறார்.
இந்த அட்ட வீரட்டானங்களை ஸ்ரீபைரவ வழிபாட்டுப்பயணமாகச் செல்ல விரும்புவோர்,ஏதாவது ஒரு வளர்பிறை அஷ்டமியன்று பயணிக்கத் துவங்க வேண்டும்;அவ்வாறு துவங்குவதற்கு முந்தைய 14 ஆம் நாளிலிருந்து தாம்பத்தியத்தையும்,காம நடவடிக்கைகளையும் நிறுத்தி விட வேண்டும்;உணவில் அசைவத்தை தவிர்க்க வேண்டும்;வளர்பிறை அஷ்டமியன்று துவங்கும் இந்த அட்டவீரட்டானப்பயணத்தை ஒன்பது நாட்களுக்கு தொடர வேண்டும்;
இந்த ஒன்பது நாட்களுமே ஆண்கள் பனியன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்;காலையும்,இரவும் ரொட்டியும் பசும்பாலும் உணவாக சாப்பிட வேண்டும்;மதியம் வழக்கமான சைவ உணவை சாப்பிடலாம்;இந்த ஒன்பது நாட்களில் வரும் புதன்கிழமையன்று அட்டவீரட்டானங்களில் ஆட்சி புரியும் ஸ்ரீகாலபைரவருக்கு(மூலவருக்கு) நைவேத்தியமாக பாசிப்பருப்பு சுண்டலை படைக்க வேண்டும்;ஒவ்வொரு வீரட்டானத்திலும் அபிஷேகமும்,அர்ச்சனையும் முடித்தப்பின்பு,மூலவரை 16 சுற்றுக்கள் சுற்றி வர  வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,ஒவ்வொரு மூலையிலும் ஒரு நிமிடத்துக்குக் குறையாமல் நமது கோரிக்கையை நினைத்து வேண்ட வேண்டும்;ஒவ்வொரு சுற்றையும் மிக மெதுவாக சுற்ற வேண்டும்;இவ்வாறு முறைப்படி செய்தால்,ஸ்ரீகால பைரவரின் அருட்பார்வைக்குள் நாம் வந்துவிடுவோம்;அட்டவீரட்டானப்பயணமும் இனிதாக அமையும்.
ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி1,எழுதியவர்:காகபுஜண்டர் ஆசி பெற்ற தருமலிங்கசுவாமிகள்;                   வெளியீடு:காகா ஆஸ்ரமம்,திருவண்ணாமலை




மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு முன்யோசனை!!!







ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவரவரது ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பது சனிபகவானே! ஏழரைச்சனி முடிந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானே தருகிறார் என்பது எழுதப்பட்ட விதியாகும்.ஏழரைச்சனிகாலத்திற்கும் அஷ்டமச்சனி காலத்திற்கும் இடைப்பட்ட கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.அஷ்டமச்சனியின் காலத்தில் (இரண்டரை ஆண்டுகள்) ஏழரைச்சனி காலமான ஏழரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்;மேலும் ஏழரை முடிந்து 15 ஆண்டுகளாக நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்கவே அஷ்டமச்சனி வருகிறது என்பது ஜோதிட உண்மை ஆகும்.
1996 முதல் ஏழரை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு ஏழரைச்சனி வந்தது;2003 முதல் 2006 வரை விருச்சிக ராசிக்கு அஷ்டமச்சனி வந்தது;2005 இல் இருந்துதான் மேஷ ராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவானின் அருளால் பெற்றார்கள்;2009 லிருந்துதான் விருச்சிக ராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை அடைந்தார்கள்.21.12.2011 முதல் 14.12.2014 வரை சனிபகவான் துலாம் ராசியைக் கடக்கிறார்.இந்த இரண்டரை ஆண்டுகளும் மேஷ ராசிக்கு ஏழாமிடத்து சனியான கண்டகச்சனியாகவும்,விருச்சிக ராசியினருக்கு ஏழரைச்சனியில் முதல் பகுதியான விரையச் சனியாகவும் பரிணமித்திருக்கிறது;

12 ராசிகளிலும் கோபக்காரர்கள் அதிகம் பிறப்பது மேஷ மற்றும் விருச்சிக ராசிகளில் தான்;பிறரை அளவுக்கதிகமாக கேலி செய்வது;தன்னை யார் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்காக எப்பேர்ப்பட்ட உதவிகளையும் செய்பவர்கள் இந்த இரு ராசிக்காரர்களும்! எப்போதும் தம்மோடு பழகுபவர்களுடைய நலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்! பண லாபத்தோடு பழகும் ஒரு சில ராசிக்காரர்களைப் போல இவர்கள் இருப்பதில்லை;யோசித்து எந்த ஒரு காரியத்தையும் செய்வது இவர்களுக்கு 25 வயது வரை வராது;30 வயது முதல் திட்டமிட்டும்,சிந்தித்தும் உழைப்பதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது;அளவுக்கு அதிகமாக பேசியே பலரது வெறுப்பை சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்;இவை அனைத்தும் செவ்வாயின் சுபாவங்கள் ஆகும்.
மேஷ ராசிக்காரர்கள் 15.12.2014 முதல் வர இருக்கும் அஷ்டமச்சனியை எதிர்கொள்ளவும்,விருச்சிக ராசிக்காரர்கள் இதே நாளில் இருந்து வர இருக்கும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் செய்ய வேண்டியது என்ன?
இன்றிலிருந்தே அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;தேவையில்லாத நட்புக்களையும்,உங்களை கெடுக்கும் உறவுகளையும் விட்டு படிப்படியாக விலகுவது நல்லது;நியாயமான வழியில் வாழ்க்கையை அமைக்கவும்;ஒருபோதும் பிறரை மனதால்,உடலால் புண்படுத்தக்கூடாது;ஏமாற்றக்கூடாது(பெரும்பாலான மேஷ,விருச்சிக ராசியினர் ஏமாற்றுவதில்லை;)

தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை வீட்டில் இருந்து வழிபடத் துவங்க வேண்டும்;தவிர ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்;
இந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று முறையாவது ஸ்ரீகால பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டானங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.
இந்த இரண்டரை வருடங்களில் தாங்கள் தர வேண்டிய கடன்களை 1.1.2014க்குள்ளாகவே தீர்த்துவிட முயல வேண்டும்;
அட்டவீரட்டானங்கள் :தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் இருப்பது திருக்கண்டியூர்.இங்கே ஸ்ரீகாலபைரவர் பிரமசிர கண்டீஸ்வரர் என்ற பெயரில் சிவனாக இருந்து அருள்பாலித்துவருகிறார்.இது முதல் வீரட்டானம்ஆகும்.
திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்.இது திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது;இங்கே அந்தஹாசுர சம்ஹார மூர்த்தியாக காட்சியளித்துவருகிறார்.
மூன்றாவது வீரட்டானம் திருவதிகை ஆகும்.பண்ருட்டியிலிருந்து ஒரு  கி.மீ.தூரத்தில் வீரட்டானேஸ்வரர் என்னும் பெயரில் இருந்து அருளாட்சி  புரிந்து வருகிறார்.
நான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் ஆகும்.இது மாயவரம் திருக்கடையூர் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து விசாரித்து சென்றால்,இரண்டு கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்ற தம்பதியராக இருந்து அருள்புரிந்து வருகிறார்கள்.
ஐந்தாவது வீரட்டானத்தின் பெயர் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூர் நாகூர் சாலையில் இருக்கும் திருப்பயந்தங்குடிக்கு வர வேண்டும்.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே மேற்கு நோக்கிய திருக்கோவிலில் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவனாக காட்சியளித்துவருகிறார்.
வழுவூர்  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கி.மீ.பயணித்தால் வலதுபுறம் ஒரு சாலை திரும்பும்.அந்த சாலை வழியாக அரை கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது ஆறாவது வீரட்டானமாகிய வழுவூர் ஆகும்.இங்கே கிருத்திவாஸர் என்னும் பெயர் ஸ்ரீகாலபைரவ பெருமான் சிவபெருமானாக அருளாட்சிபுரிந்து வருகிறார்.அட்டவீரட்டானங்களுக்கும் சென்று வழிபட இயலாதவர்கள் இந்த வழுவூருக்கு மட்டும் வந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது;எட்டு சனிக்கிழமைகளுக்கு இங்கே காலையிலேயே வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அர்ச்சனை செய்தாலும் போதுமானது;
மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்னும் இடத்தை வந்தடைய வேண்டும்;இங்கிருந்து திருக்குறுக்கை செல்லும் சாலையை விசாரித்து 3 கி.மீ.பயணித்தால் சென்றடையலாம்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகையாக ஸ்ரீகாலபைரவர் அருளாட்சி புரிந்துவருகிறார்.இதுவேஏழாவது வீரட்டானம் ஆகும்.
எட்டாவது வீரட்டானம் திருக்கடவூர் ஆகும்.இதன் தற்போதைய பெயர் திருக்கடையூர் என்றழைக்கப்படுகிறது.இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமியாக ஸ்ரீகாலபைரவர் வாழ்ந்து வருகிறார்.

அயல் தேசத்தில் இருக்கும் இந்த ராசியினர் தமது குடும்பப் பொறுப்புகளை(வீடு கட்ட விரும்புவது;தங்கை/அக்காவின் திருமண ஏற்பாடுகள்/தம்பியின் படிப்பு/அம்மா அல்லது அப்பாவின் மருத்துவச் செலவுகள்/மகன் அல்லது மகளின் படிப்புச்செலவு) இப்போதே நிறைவேற்றிவிட வேண்டும்;குடும்பத்தில் எவருக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட தாமதப்படுத்த வேண்டாம்;
இந்த இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 30 மாதங்கள் இருக்கின்றன;நாட்கள் கணக்கில் சொல்வதாக இருந்தால் 900 நாட்கள் இருக்கின்றன;இந்த 900 நாட்களில் குறைந்தது 500 நாட்களுக்கு தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு முடித்திருந்தால்,குறைந்தது 15 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்குச் சென்று வழிபட்டிருந்தால்,சனிபகவானின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நிம்மதியான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் எவரும் இதை முயற்சி செய்யலாம்.
களத்தில் இறங்குவோமா?                                 வீரட்டானங்கள் பற்றிய தகவல் ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,வெளியீடு காகா ஆஸ்ரமம்,பெரியகுளம்,திருவண்ணாமலை

Monday, August 27, 2012

குறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்!!!



நமது கண்களையும்,காதுகளையும் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் தியானத்திலும்,தினசரி வாழ்வில் நாமும் ஒரு விஸ்வாமித்ரர் ஆகிவிடமுடியும்.
அதே கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து வைக்க மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதே திரைப்படம் ஆகும்.திரைப்படத் தொழிலில் ஜெயிப்பதற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள்(வீணடித்தவர்கள்?!) பல ஆயிரம் பேர்கள்.
இன்றைய நவீன உலகத்தில் குறும்படங்கள் திரையுலகத்தில் நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டாக இருக்கிறது.குறும்படம் தயாரிப்பது? இயக்குவது? தொகுப்பது? போன்றவைகளை பயிற்சி வகுப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் நிழல் குழுவினர் நடத்திவருகின்றனர்.
பத்துநாட்கள் கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலமாக நம்மால் சில நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தை எடுக்கவோ,இயக்கவோ,நடிக்கவோ,தொகுக்கவோ முடியும்.இதற்கான இணைய தளம் நிழல் டாட் இன் ஆகும்.

இன்று நமது இந்து தர்மம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏராளமான குறும்படங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகியிருக்கிறோம்.பொருத்தமான இயக்குநர்,தயாரிப்பாளர் கிடைப்பதில்லை;இந்து தர்மம் பற்றி நாம் அடுத்த பத்தாண்டுகளில் குறும்படங்கள் எடுக்காவிட்டால்,ஹாலிவுட் இதிலும்  ஆக்கிரமிப்பு செய்துவிடும்.ஜாக்கிரதை!!

அஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்!!!




புல்லசுகா திகளுக்கு ளென்று மேன்மை
பொருந்தாத நரகமுடின் சுவர்க்க மாதி
இல்லசுகா திகளூடனே கீழு மேலு
மெய்திநலி வுறனீங்கி யிருக்க வேண்டி
வல்லசுகா தியரெண்ணி வையந் தன்னில்
வளங்குலவு மனோலயமாய் வைகு மாறு
நல்லசுகா தனமதனில் இருக்கும் எங்கள்
நாயகன் அடிமலரை நாடி வாழ்வாம்


இந்த பாடலின் அர்த்தம்: பொருந்திய துன்பம் முதானவைகளுடனே இழிவினை உடைய நரகத்துடன் சுவர்க்க முதலிய தானங்களில் மனைவி மக்களுடன் வாழுகின்ற இன்பம் முதலியவைகளுடன் கீழும் மேலும் சென்று துன்பம் அடைதலை யொழித்துச் சுகமாய் இருக்கக் கருதி,தவத்தில் வல்ல சுகன் முதலியவர்கள் தியானித்து உலகத்தில் வளப்பம் பொருந்திய மனோலயத்துடன் வாழும் வண்ணம்,நல்ல சுகாதனத்தில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கர்த்தா(சிவனின்)
வின் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டு வாழ்வோமாக!

சீர்காழியில் இருந்து அருள் தரும் சட்டைநாதருக்கு இந்த பாடலின் கருத்துக்கள் பொருந்தும்;இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர்களும்,உள்சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரும் இருந்து அருளாட்சி புரிந்து வருகின்றனர்.


சித்தர்களின் தலைவர் அகத்தியர்,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இடைக்காடர்,ரோம ரிஷி, மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழும் தன்வந்திரி,கொங்கணர்,கோரக்கர்,கருவூரார்,கமலமுனி,போகர்,   புலஸ்தியர் போன்ற சித்தர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஷ்டமாசித்திகள் கிடைத்த இடம் இந்த சீர்காழி ஆகும்.


திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களிலும்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களிலும்,திங்கட்கிழமைகளிலும் இங்கு வந்து வழிபாடு செய்தால் நமது உள்முக வாழ்க்கை ஆரம்பமாகும்.


சித்தராக விரும்புவோர் 11 திங்கட்கிழமைகளுக்கு பலாப்பழத்தால் அபிஷேகம் செய்துவந்தால்,தகுந்த குருவை அடையமுடியும்.இந்த 11 திங்கட்கிழமைகளுமே உரியவர்கள் விரதமிருந்து இந்த கோவிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீகாலபைரவரை “ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்.எந்த திங்கட்கிழமையன்று இங்கே வருகிறோமோ அன்றும் அதற்கு முந்தைய நாளும்,மறு நாளும் தாம்பத்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும்.


இந்த 11 திங்கட்கிழமைகளிலும் கோவில் திறந்திருக்கும் நேரத்தில் மேற்கூறிய மந்திர ஜபத்தை கோவிலுக்குள்ளே இருக்கும் ஸ்ரீகாலபைரவ சன்னதியில் மஞ்சள் பட்டுத்துண்டின் மீது அமர்ந்து கண்களை மூடி ஜபிக்க வேண்டும்.

கோவில் நேரம் தவிர மீதி நேரங்களில் நாம் தங்கியிருக்கும் அறையில் (முதல் நாளே வந்து அந்த அறையை கோமயத்தினால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும்;சந்தனப்பத்தி பொருத்தியிருக்க வேண்டும்;சந்தன பத்தி வாசனை திங்கட்கிழமை முழுவதும் அறையில் பரவிக்கொண்டே இருக்க வேண்டும்)இதே மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்.

திங்கட்கிழமையன்று குறைந்தது  5 மணி நேரம் அதிகபட்சம் 12 மணி நேரம் இவ்வாறு ஸ்ரீகாலபைரவ மந்திரத்தை ஜபித்துவருவது அவசியம்.விரத நாளில் அடிக்கடி இளநீர் அல்லது பசும்பால் அல்லது தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்று மட்டும் அருந்திக்கொள்ளலாம்.


இந்த முதல்கட்டமான 11 திங்கட்கிழமைகளுக்கு வந்து மேற்கூறியவாறு வழிபாடு முடித்த சில வாரங்களில் உங்களை தகுந்த குரு தேடி வந்து அடுத்த கட்ட வழிபாட்டுக்கு  தயார் செய்வார்;அது வரையிலும் வேறு எந்த தியானப்பயிற்சிக்கும்,ஆன்மீகப்பயிற்சிக்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.நீங்கள் உலகில் எந்த மூலையிலிருந்து வந்து இந்த வழிபாட்டைச் செய்தாலும்,அந்த மூலைக்கு ஸ்ரீகாலபைரவரின் அருளாசி பெற்ற குரு உங்களைத் தேடி வருவார்.மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் சீர்காழிக்குச் செல்வோமா?
ஓம்சிவசிவஓம்

Saturday, August 25, 2012

சிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வலைப்பூ !!!



டிஜிட்டல் கேமிரா இன்று மலிவாகிவிட்டாலும்,பார்த்தாலே பரவசமாக படம்(போட்டோ)எடுக்கும் கலை படிப்படியாகத் தான் வரும்;அப்படிப்பட்ட படங்களை எடுக்க முறையான பயிற்சியை நமது நண்பர் ஒருவர் தமிழிலேயே விளக்கிவருகிறார்.கி.பி.2007 முதல் இதற்கென்றே ஒரு வலைப்பூவைதமிழில் நடத்தி வருகிறார்.நீங்கள் உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Friday, August 24, 2012

திருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தாருங்கள்!!!


நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளின் புராணகால வரலாற்றை வெளிப்படுத்தும், அரிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகத்தை பராமரித்து வரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும், புகைப்படங்களை வைத்திருக்கும் பக்தர்கள், அவற்றை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். தபாலில் அனுப்பி வைக்கவும், பக்தர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் விரைவில் நடைபெறும் ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு இந்த அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். படங்களை, பக்தர்கள் நன்கொடையாக வழங்க, முன் வர வேண்டும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நன்றி:தினமலர் 24.8.12

ஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்!!!


திருச்சி: திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சர்க்கார் பாளையம் விஸ்வநாதர் கோவில், மூலவர் லிங்கத்தின் மீது, சூரியக்கதிர்கள் வழிபாடு நடத்தியது பக்தர்களை பரவசமடையச் செய்தது.திருச்சி- கல்லணை சாலை காவிரி தென்கரை சர்க்கார் பாளையத்தில் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட, பழமையான காசி விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் சார்பு கோவிலாகும்.ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7, 8, 9ம் ஆகிய தேதிகளில், தொடர்ந்து சூரிய உதயத்தின்போது, மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் நேரடியாக படுவது இக்கோவிலின் சிறப்பம்சம். இந்நிகழ்வை சூரிய வழிபாடு என புராணங்கள் தெரிவிக்கின்றன.சிவலிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தை வழிபடும்போது பக்தர்கள் வழிபடுவது சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு கோவிலில் சூரிய வழிபாடு நேற்று துவங்கி நாளை வரை தொடர்ந்து நடக்கிறது.நேற்று அதிகாலை சூரிய உதயத்தின்போது சூரியக்கதிர்கள் கோவிலின் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசித்து பரவசம் அடைந்தனர்.தொடர்ந்து இரண்டு நாள் சூரிய வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, அர்ச்சகர் சாமிநாதசிவம், உபயதாரர்கள் சுந்தர மீனாட்சி, ராஜாராம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

உலகத்தின் தலையெழுத்தை மாற்றும் மாறுபட்ட சிந்தனைகள்!!!


நமக்குத் தெரிந்து புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டனை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.ஆனால்,நமது பாரத நாட்டில் பலதுறைகளில் நியூட்டன்கள் உருவாகிக்கொண்டே இருப்பதை நாம் உணரவில்லை.

நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு பழுத்த ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்தது;அப்படி விழுந்த ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியது;பூமிக்கு புவியீர்ப்பு விசை உண்டு என்பதை அந்த சிந்தனையின் இறுதியில் கண்டறிந்தார்.

இந்தியாவைச் சமாளிக்க அமெரிக்காவிடமிருந்து பேட்டன் ரக பீரங்கிகளை பாகிஸ்தான் வாங்கிக் குவித்தது;நமக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையில் பேட்டன் பீரங்கிகளைக் கொண்டே இந்தியாவை வீழ்த்திவிடலாம் என்று பாகிஸ்தான் செயல்பட்டது. ஆனால் நடந்ததோ தலைகீழ்!! பேட்டன் பீரங்கியின் முன்புறம் வலுவானது. எப்பேர்ப்பட்ட  பேட்டன் பீரங்கி . தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடையது, ஆனால் அதன் பின்புறம் மிகவும் பலவீனம் மிக்கது எனவே நமது இந்திய ராணுவ வீரர்கள் இதைக் கண்டறிந்து, பேட்டன் பீரங்கிகளை முன்னே போக விட்டு பின்னே அடித்து நொறுக்கினர்.பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது  அது மட்டுமா? உலக வல்லரசு அமெரிக்கா பேட்டன் பீரங்கிகள் தயாரிப்பதையே நிறுத்தியது. இந்த சம்பவத்தின் மூலமாக அசல் உத்தர்(நிஜமான பதிலடி) என்ற வீர சகாசம் இந்திய ராணுவத்தின் வரலாறாகிவிட்டது.இந்த வார்த்தையைக்கேட்டால்,பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு கடுப்போ கடுப்பு உண்டாகும்.

பேரீச்சம்பழத்திலிருக்கும் விதைகளை நீக்கி அதை அழகாக 'பேக்' செய்து விற்றால் என்ன? என்று திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நினைத்தார்.லயன் டேட்ஸ் பிறந்தது;இன்று அவரே இந்தத் தொழிலில் முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கிறார்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக்கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில், சாஷேயில் எண்ணெயை தந்தால் என்ன? என்ற சிந்தனையால் இன்று பாராசூட் தேங்காய் எண்ணெயை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்!!

மனித உடலின் வளைவு நெளிவின் தன்மையைக் கொண்டு தயாரிக்கப்படும் செல்போன்களை ஜப்பான் சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்தியது; அப்படி அறிமுகப்படுத்தும் முன்பு இது தொடர்பாக எடுத்த சர்வேகுழுவில் இருந்தவர்கள் நமது இந்திய எம்.பி.ஏ மாணவர்கள், அவர்களின் நுணுக்கமான சர்வேயால் இன்று அந்த மாடலில் கிடைக்கும் செல் போன்கள் உலக செல்போன் சந்தையைக் கைப்பற்றத்து வங்கியிருக்கின்றன (கன செவ்வகம்,கன சதுரம் என்ற வடிவில் சில வருடங்களுக்கு முன்பு வந்த செல்போன் மாடல்கள் தற்போது காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன)

இந்தியாவுக்கு வந்த  ஆங்கிலேயன் ஆரம்பத்தில் வர்த்தகம் செய்யத் தான் வந்தான். ஏன் நமது  ஆங்கிலேயனை . நாட்டோடு வர்த்தகம் செய்ய வந்தான்? நம்மில் பலருக்குத் தெரியாது. ஏனெனில்,கி.பி.1800 வரை முடிவடைந்த 2500 ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய, சுயச் சார்புள்ள பொருளாதார வல்லரசாக நமது இந்தியா இருந்தது.(நாம் தற்போது அமெரிக்காவுக்கு வேலை தேடி ஓடுகிறோம்; ஓடுவதை பெருமையாக நினைக்கிறோம் இல்லையா?) எனவே,இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய வந்தவன், மொகலாயர்கள் காலத்தில் (முழுமையாக வாசிக்கவும்: மதன் எழுதிய வந்தார்கள்;வென்றார்கள்) சென்னை, மும்பை,கொல்கத்தாவில் குடோன்கள் கட்டி அதைப் பாதுக்காக்க மொகலாய மன்னரான ஷாஜஹானிடம் அனுமதி கேட்டனர். அனுமதியும் கிடைத்தது அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை ஆள்வதே சிறந்த வியாபாரம்! என்பதை உணர்ந்து,கி.பி. 1850க்குள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

முதல் இந்திய விடுதலைப் போர் கி.பி.1857 இல் நிகழ்ந்தது, பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு கி.பி.1947 இல் நாம் சுதந்திரம் பெற்றோம், இதே கால கட்டத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்த ஒருவர்,வித்தியாசமாக சிந்தித்தார்.

எல்லோரும் ஆங்கிலேயனை எப்படியாவது இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும்? என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால்,இந்த டாக்டர் மட்டும் எப்படி இந்த  ஆங்கிலேயன் நமது நாட்டை அடிமைப்படுத்தினான்? என்று சுமார் 20 ஆண்டுகளாக சிந்தித்தார்.தனது சிந்தனையை பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பலருடைய ஆலோசனைகளையும் கேட்டார்.

ஏனெனில் நமது நாடு ஏராளமான வீரர்களை ஈன்றுள்ளது; கல்வியில் தன்னிறைவு பெற்ற நாடாக கி.பி.1700 வாக்கிலேயே இருந்திருக்கிறது; வான சாஸ்திரம், போர்க்கலை, வைத்தியம், அரசு நிர்வாகம், தியானம் என மனித இனத்துக்குத் தேவைப்படும் அத்தனைத் துறைகளிலும் சாதனை உச்சங்களைத் தொட்டிருக்கிறது. உலகின் செல்வச் செழிப்பான நாடாகவும் இருந்திருக்கிறது.இருப்பினும் எப்படி சில நூறு  ஆங்கிலேயன் 27 கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தினான்? என்பதே அவரது சிந்தனை!

அவருடைய 20 வருட சிந்தனையின் விளைவாக தோன்றிய இயக்கமே ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.ஆகும்.

 ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்து தர்மத்தின் பெருமைகளை அறிய வைப்பதே நோக்கம்; அப்படிச் செய்து விட்டால், எதிர்காலத்தில் இதே போல மீண்டும் காலனியாதிக்கம் வராமல் போய்விடும், இந்தியாவை இந்தியர்களே ஆள முடியும், இந்து தர்மத்தை பாதுகாத்து, பராமரித்து, மேலும் மேலும் மெருகு படுத்திட முடியும் .இந்த நாட்டில் பிறக்கும் கடைசிக்குழந்தைக்கும் இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் உருவானதே ஆர்.எஸ்.எஸ்.

மாறுபட்ட சிந்தனைகளால் மனித குலம் பலவிதமான முன்னேற்றங்களை சந்தித்திருக்கிறது.ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தினால் இந்து தர்மத்துக்கு ஒரு சக்தி மிகுந்த பாதுகாப்புக் கவசம் உண்டாகியிருக்கிறது.இருப்பினும்,நமக்கு இரண்டாவது சுதந்திரப்போர் இன்று அவசியமாக இருக்கிறது.அந்த அளவுக்கு அறிவு சார்ந்த காலனியாதிக்கம் நமது இந்தியாவை உலகமயமாக்கல்,முதலாளித்துவமயமாக்கல் என்ற பெயரில் ஆக்கிரமித்திருக்கிறது.