Wednesday, August 21, 2019

ராஜராஜசோழர் காலத்திற்கும் முந்தைய மஹாவராகி!!!






வேலூர் மாவட்டம்,வாலாஜாப் பேட்டை என்ற ஊரில் இருந்து சுமார் 10 கி மீ தொலைவில் அமைந்திருப்பது திருமலைச்சேரி கிராமம் ஆகும்;

இந்த வராகி சன்னதி,ராஜராஜசோழ மன்னனின் காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கிறது;

ஒரே ஒரு முறை இங்கே சென்று அன்னை மஹாவராகியிடம் வேண்டினால்,அது மறு நாளே வரமாக மாறிவிடுகிறது;

உள்ளூர் மக்களின் காவல் தெய்வமாக அன்னை மஹாவராகி இங்கிருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்!!!

வாலாஜாப்பேட்டையில் இருந்து போக்குவரத்து வசதிகள் இந்த திருமலைச்சேரி கிராமத்திற்கு இல்லை;நீங்களாக ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்!!!

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 23.8.2019 வெள்ளிக்கிழமை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;


 வெள்ளிக்கிழமை இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணீ வரை இருக்கின்றது;

வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் காலை 9 மணி வரை அமைந்திருக்கிறது;




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி   21.9.2019 சனிக்கிழமை மாலை 4.14 முதல் 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை மஹ்டியம் 3.14 வரை  இருக்கிறது!!!

Sunday, August 4, 2019

ஏழரைச்சனியை சுபச் சனி காலமாக மாற்றிவிடும் மங்கள சனி!!!




ஏழரைச்சனியை சுபச்சனியாக மாற்றிவிடும் மங்கள சனி!!!


தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஜனவரி 2020 வரை ஜன்மச்சனி நடைபெற்று வருகின்றது;

ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஜன்மச்சனி காலமும்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டமச்சனி காலமும்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வாக்குச் சனி(ஏழரைச்சனியின் இறுதி கட்டம்) காலமும்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்த  அஷ்டமச்சனி காலமும் வர இருக்கின்றது;
இதுவரை அசைவம் சாப்பிட்டாலோ,மது அருந்தினாலோ அன்று படாத பாடு பட வேண்டியிருக்கும்;

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் சாலையில் (திருவாரூர் மார்க்கம்) திருநரையூர் என்று ஒரு கிராமம் இருக்கின்றது;
($ திருநாரையூர் என்பது மயிலாடுதுறை அருகில் இருக்கும் சிவாலயம் என்பதை மறக்காதீர்கள்;ஒரு துணையெழுத்து மாறிவிட்டால் ஆலயமும் மாறிவிடும்$)
இங்கே அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமி திருக்கோவில் இருக்கின்றது;இதுதான் இன்று மங்கள சனி கோவிலாக மாறியிருக்கின்றது;
இந்த ஆலயத்தினுள் சனிபகவான் தனது இரு மனைவிகளான மந்தா தேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன்களான மாந்தி,குளிகன் உடன் இருந்து மங்கள சனியாக அருள் பாலித்துவருகின்றார்;
தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே காலை 8 மணிக்கு செல்ல வேண்டும்;
கோவிலை வலம் வரும் போது கோவிலுக்குள் இருக்கும் தண்ணீர்க் குழாயில் வரும் தண்ணீரை நமது தலையில் தெளிக்க வேண்டும்;பிறகு,ராமனாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசிக்க வேண்டும்;
அதன் பிறகுதான் மங்கள சனியை தரிசிக்க வேண்டும்;
11 மணி வரை இருந்து மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்;முடிவாக கால பைரவரை தரிசிக்க வேண்டும்;
பிறகு வீடு திரும்ப வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்;
அன்று முதல் ஒரு போதும் அசைவம்,மது தவிர்த்தே ஆக வேண்டும்;ஜன்மச்சனி சுபச்சனியாக,மங்கள சனியாக மாறிவிடும்;
தசரத மஹாராஜாவின் பெருமுயற்சியால் இந்த கோவில் நமக்கு கிடைத்திருக்கின்றது;இந்த கோவிலின் வயது 17,50,000 ஆண்டுகள் ஆகும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

கர்மவினைகளைத் தீர்க்கும் ருத்ராட்சக் குளியல்!!!


உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை கழுத்தில் அணிவது அவசியம்;இப்படி அணிந்திருக்கும் ருத்ராட்சத்தை எக்காரணம் கொண்டும் வாழ்நாள் முழுவதும் கழற்றக் கூடாது;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு ஒரே ஒரு ஆச்சாரம்(கட்டுப்பாடு) உண்டு;அதுதான் அசைவம் சாப்பிடாமல் இருப்பது;


ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட ஒரு மாலையை நாம் ஒவ்வொருவரும் சிவ வழிபாட்டின் போது அணிந்திருக்க வேண்டும்;

அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும்

பர்வதமலை கிரிவலம் செல்லும் போதும்

வெள்ளியங்கிரி கிரிவலம் செல்லும் போதும்

திருக்கையிலாய பயணத்தின் போதும்

அமர்நாத் பனிலிங்கப் பயணத்தின் போதும்

நர்மதா பரிக்ரமா செல்லும் போதும்

ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும்

வீட்டில் தினசரி கணபதி பூஜை/முருக பூஜை/சிவ பூஜை/பைரவ பூஜை/வராகி பூஜை/மஹாலக்ஷ்மி பூஜை/சத்திய நாராயண பூஜை/குபேர பூஜை என்று எந்த ஒரு பூஜை செய்தாலும் அவ்வாறு பூஜை செய்யும் போதும்

அன்னதானம் செய்யும் போதும்

பித்ரு தர்ப்பணம் செய்யும் போதும்

திலா ஹோமம் செய்யும் போதும்

யாகத்தில் கலந்து கொள்ளும் போதும்

சதுரகிரி பயணத்தின் போதும்(அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி சென்றடையும் வரை)

ஆடை தானம் செய்யும் போதும்

இஷ்ட தெய்வ மந்திர ஜபம் செய்யும் போதும்

ப்ராணயாமம் செய்யும் போதும்

குலதெய்வ வழிபாட்டின் போதும்

கும்பாபிஷேகம் செய்யும் போதும்/கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் போதும்

கோபூஜை செய்யும் போதும்

கோசாலையில் மந்திரம் ஜபிக்கும் போதும்

ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட மாலையை அணிந்திருக்க வேண்டும்;

இம்மாலையை அணிந்து கிரிவலம் செல்லும் போது,இயற்கை உபாதை ஏற்பட்டால் கழற்ற வேண்டும்;அதன் பிறகு,மீண்டும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்;

இம்மாலையை அணிந்திருக்கும் போது,எக்காரணம் கொண்டும் யாரையும் திட்டக் கூடாது;ஆபாசமான வார்த்தையை ஒரு போதும் பேசக் கூடாது;அது கடுமையான சாபங்களைத் தரும் என்பதை மறக்காதீர்கள்;

ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை பெறலாம்;

தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்;அதன் பிறகு,குளியலறைக்குள் புகுந்து கிழக்கு நோக்கி நிற்க வேண்டும்;(நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்) 

வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும்;சுருட்டியும் வைக்கலாம்;சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்;அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும்; ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்;


இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும் கூட செய்யலாம்;

தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்;

தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை,சிவராத்திரி,திருவாதிரை,ப்ரதோஷ நாட்களிலும்,அவரவர் ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்;

ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்;(சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்)

இப்படிச் செய்து வருவதால்,ஆத்ம பலம் அதிகரிக்கும்;பிறர் நமக்கு எதிராக செய்த,செய்துவிட்ட,செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும்,நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்;


உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்துவருகின்றன;அதனால்,நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது;அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!

தினசரி வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால்,நம் அனைவருக்கும் சராசரியைக் கடந்த சிற்றின்ப உணர்ச்சிகள் அதிகரித்துவிட்டன;அதைச் சமப்படுத்தும் செயல் தான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

அபூர்வமான அபிஷேகங்கள்


மறைந்து போன அபிஷேக முறைகள்!!!

உங்கள் இஷ்ட தெய்வம் சிவலிங்கமாக இருந்தால் பின் வரும் பொருட்களால் அடிக்கடி அபிஷேகம் செய்ய முயலுங்கள்!

1.ருத்ராட்சங்கள் 108 வாங்கிக் கொள்ளுங்கள்;ஐந்து முக ருத்ராட்சங்கள் சுலபமாக கிடைக்கும்;அதைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,மனிதர்கள் மீதான பந்த பாசம் குறையும்;கூடவே ஈசன் மீது பாசம் அதிகரிக்கும்;

2.சந்தனாதித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,குழந்தை இன்மை குறை நீங்கிவிடும்;

3.சாம்பிராணித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,பல பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;

சந்தனாதித் தைலமும்,சாம்பிராணித் தைலமும் கடைகளில் கிடைப்பவை முழு தரம் வாய்ந்தவை அல்ல;உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர் மூலமாக தயார் செய்யவும்;
ஒரு லிட்டர் ரூ.4000/-முதல் ரூ.6000/-வரை ஆகிறது;

ஊருக்கு வெளியே வெட்டவெளியில் பாழடைந்து இருக்கும் சிவலிங்கத்திற்கு நீங்களும் அபிஷேகம் செய்யலாம்;

அப்படிச் செய்யும் போது,ஒரு சல்லடை வாங்கிக் கொள்ளுங்கள்;அதன் மீது,சிறிது தரமான விபூதியும்,வில்வ இலைகளையும் போட்டு,அதன் மீது 108 ஐந்து முக ருத்ராட்சங்களையும் போட்டு அபிஷேகம் செய்யலாம்;

அபிஷேகம் செய்யும் போது ஆண்கள் கண்டிப்பாக மேலாடை அணிந்து இருக்கக்கூடாது;


அமாவாசை,திருவாதிரை,திங்கட்கிழமை வரும் சிவராத்திரி அல்லது பிரதோஷம் அன்று செய்தால் 1000 கோடி மடங்கு சிவகடாட்சம் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்:

எல்லா தெய்வீகச் சிலைகளுக்கும் சந்தனாதித் தைலம்,சாம்பிராணித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்;ஒரு லிட்டரில் ஒரு முறை அபிஷேகத்திற்கு 50 மிலி முதல் 100 மிலி அளவுக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தலாம்;

விநாயகர்,முருகக் கடவுள்,மஹாவிஷ்ணு,நரசிம்மர்,வராகி,சரபேஸ்வரர்,வீரபத்திரர்,  மஹா கால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்,சொர்ண வராகி, சிவலிங்கம்,சகஸ்ர லிங்கம்,சுயம்பு லிங்கம்,மரகத லிங்கம்,அத்தி லிங்கம்,ஸ்படிக லிங்கம்,சொர்ண லிங்கம்,ப்ளாட்டின லிங்கம்,நடராஜர்,கங்காள நாதர்,அகத்திய லிங்கம்,வாயுலிங்கம்,வருண லிங்கம்,உதய மார்த்தாண்ட லிங்கம்,சப்தகன்னியர்,சப்த மாதர்கள்,நவக்கிரகங்கள்,   காவல் தெய்வங்கள்,ஜீவசமாதியில் இருக்கும் மஹான்களின் சிலைகளுக்கும் சந்தனாதித் தைலம் மற்றும் சாம்பிராணித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

வராகி பரணி என்ற வராகி மாலை


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;

குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;

இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)

அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;

தீராத பிரச்சினை அல்லது கர்மவினையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றீர்களா?

இந்த வராகி மாலையை ஒரு நாளுக்கு ஐந்து முறை வீதம் 90 நாட்கள் இடைவிடாமல் ஜபித்தால் போதுமானது;இந்த 90 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்தில் அம்பாள் சன்னதியில் ஜபிப்பது மிகவும் நன்று;இந்த 90 நாட்களும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;

இப்படி 90 நாட்கள் ஜபித்தால்,அதன் பிறகு அல்லது அந்த 90 நாட்களுக்குள் உங்கள் நீண்ட கால பிரச்சினை/கர்மவினை தீர்ந்துவிடும்; அல்லது தீர்வதற்கு வழிகிடைத்துவிடும்;

பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;

இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!

எப்படி நமது ஆன்மீகபலத்தை இழக்கிறோம்?


உலகத்தின் ஆதி மதம் இந்துமதம்;இந்து மதத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஆறு! இதையே ஷண்மதம் என்று அழைக்கின்றோம்.
        1.காணபத்தியம்
         2.கவுமாரம்
         3.சைவம்
         4.சைவம்
         5.வைஷ்ணவம்
         6.சாக்தம்(ஸ்ரீசக்ர உபாசனை இதில் அடங்கும்)

இதில் சைவம் மட்டும் 4 பெரும்பிரிவுகளைக் கொண்டது என்று திருமூலரின் திருமந்திரம் தெரிவிக்கின்றது;

1.சுத்த சைவம்
2.அசுத்த சைவம்
3.கடுஞ்சுத்த சைவம்
4.மார்க்க சைவம்

இந்த 4 சைவங்களையும் உள்பிரிவாக வகைப்படுத்தி இருக்கின்றார்கள்;

1.ஊர்த்த சைவம்
2.அனாதி சைவம்
3.ஆதி சைவம்
4.மகா சைவம்
5.பேத சைவம்
6.அபேத சைவம்
7.அந்தர சைவம்
8.குண சைவம்
9.நிர்குண சைவம்
10.அத்துவா சைவம்
11.யோக சைவம்
12.ஞான சைவம்
13.அணு சைவம்
14.கிரியா சைவம்
15.நாலுபாத சைவம்
16.சுத்த சைவம்

இன்றைய காலகட்டத்தில் இவைகளின் பெயர்களை மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள முடியும்;நீங்கள் யாராவது ஒரு சித்தர் பெருமானின் நேரடி சீடராக இருந்தால் தாங்கள் முற்பிறவிகளில் இதில் எந்த சைவத்தினை பின்பற்றினீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்;


விபூதி,ருத்ராட்சம்,சிவலிங்கம்,மந்திர ஜபம்,சிவனடியார் இந்த ஐந்தும் குறிப்பிட்ட நாள்/திதி/நட்சத்திரம்/ஓரையில் சேரும் போது இறை அருள் முழுமையாக கிடைத்துவிடுகின்றது;


இதை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து கண்டறிந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன்,நமது ஆன்மீக பலத்தை சிதைக்க திட்டமிட்டான்;அந்த திட்டமும் 300 ஆண்டுகளில் 50% அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது;அடுத்த 100 ஆண்டுகளுக்குள் கி.பி.2118 க்குள் இந்துக்களாகிய நம் அனைவரது ஆத்ம பலத்தை,ஆன்மீக சக்தியை மொத்தமாக நிர்மூலமாக்கிட பல்வேறு செயல்திட்டங்களை நமது நாட்டில் செயல்படுத்தி வருகின்றான்;

நாம் ஒவ்வொருவரும் இது பற்றிய விழிப்புணர்ச்சியுடன் கவனமாக “வாழ்ந்து வந்தால்” இதை தவிர்க்க முடியும்;அல்லது இந்து குடியரசு நாடாக நமது பாரத நாட்டினை அறிவிக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை இனிமேல் பாதுகாத்திட முடியும்;

காலையில் பல் துலக்கும் போது,ஒரு போதும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது;இனிப்பு சுவையுடைய பற்பசையை பயன்படுத்தும் போது அது மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது;அதில் கலந்துள்ள ஃப்ளூரைடு நமது ஆன்மீக எழுச்சியை உருவாக்கும் நமது பீனியல் கிளாண்டு என்ற புருவ மத்திக்குள் இருக்கும் சுரப்பியை அழித்துவிடுகின்றது;எனவே,காலையில் பற்பொடியை மட்டுமே பல் துலக்கிட பயன்படுத்த வேண்டும்;அது துவர்ப்பு அல்லது கசப்புச் சுவையுள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும்;இது மட்டுமே நமது ஆத்ம வலிமையைப் பாதுகாக்கும்;

இறுக்கமான ஜீன்ஸ்ஸை பெண்கள் அணிவதால்,அவர்களின் கர்ப்பப் பையின் ஆரோக்கியம் நாசமாகின்றது;

நடிகைகள் தொப்புள் தெரிய நடிப்பதால்,அவர்களுக்கு இப்பிறவி மற்றும் இனி வரும் பிறவிகளில் குழந்தையின்மை உண்டாகின்றது;எந்த பெண்ணாக இருந்தாலும் தனது கணவனைத் தவிர,தெரிந்தோ தெரியாமலோ ஒரு போதும் தனது தொப்புளைக் காட்டக் கூடாது;இந்த சித்தர் உபதேசத்திற்குப் பின்னால் ஒரு புராண கால சம்பவமும் உண்டு;அதை வெளிப்படையாக தெரிவிக்க குரு அனுமதி கிடைக்கவில்லை ;

குழந்தை பிறந்த பின்னர்,தாய்ப்பால் தராமல் இருப்பதால் உடலின் இளமையைப் பராமரிக்கும் ஹார்மோன்கள் வலிமை இழக்கின்றன;


கோவில்களில் கிடைக்கும் விபூதி,குங்குமம் போன்றவைகளை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது;விலைக்கு வாங்கக் கூடாது;அப்படிச் செய்தால் அதில் ஆழ்ந்த தெய்வ பக்தி இருக்காது;ஒவ்வொரு ஆலயத்தையும் விபூதி மற்றும் குங்குமம் தயாரிக்கும் மையமாக மாற்றிட வேண்டும்;இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில்களை நிர்வாகிக்கும் வரை இது நடக்காது;(இன்றைய கால கட்டத்தில் கடைகளில் கிடைக்கும் விபூதியில் ஆன்ம பலத்தை அதிகரிக்கும் ஆன்மீகப் பொருட்கள் இல்லை)

விபூதி தயார் செய்ய,ஒவ்வொரு சிவாலயத்திலும் கோசாலை அமைக்க வேண்டும்;சிறு குற்றம் கூட இல்லாத அளவுக்கு அதைப் பராமரிக்கும் சிவ தொண்டர் படையை அமைக்க வேண்டும்;கோசாலை மற்றும் ஆலயத்தின் உள்ளே தவறு செய்தால் தீராத மற்றும் பரிகாரத்திற்கு உட்படாத சாபங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும்;

1 கோடி தேவ ஆண்டுகள் சிவலோகத்தில் ஒருவர் வாழ்வதும்,ஒரே ஒருஇரவு  கோ(பசு)லோகத்தில் வாழ்வதற்குச் சமம் என்று சித்தர்பெருமக்கள் தெரிவித்துள்ளார்கள்;அதனால்,நமது கோசாலைகளில் நாட்டுப் பசுக்களை மட்டும் வளர்க்க வேண்டும்;ஒரு போதும்,செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஜெர்ஸிப்பசுவை வளர்க்கக் கூடாது;கோமாதாவின் பெருமைகளை மக்கள் அறிந்து கொள்ள கலியுகத்தின் ஆரம்பத்தில் பல சித்தர்கள் பூமிக்கு வருகை தந்தார்கள் என்று அறியும் போது ஆச்சரியமாக இருக்கின்றது;


முற்பிறவிகள் நான்கில் சிவாலயத்திற்குள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே இப்பிறவியில் மருந்தே இல்லாத காம நோய் வருகின்றது;


முற்பிறவிகளில் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளால் காமவேட்டை ஆடியவர்களுக்கு இப்பிறவியில் வெண்குஷ்டம் வருகின்றது;தகுந்த இறைவழிபாடு,பரிகாரம்,மனம் திருந்துதல் செய்யாதபட்சத்தில் தொடர்ந்து ஆறு பிறவிகளுக்கு குஷ்ட நோய் தொடரும் என சித்தர்களின் உபதேசம் தெரிவிக்கின்றது;


பசுவின் உடலில் இருந்து வெளிவரும் சாணத்தை தாமரை இலையில் ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் பிடிக்க வேண்டும்;அதை நிர்ணயம் செய்ய அந்த கோசாலையில் நிரந்தரமான ஜோதிட வல்லுநர்கள் வேண்டும்;


சிவ தீட்சை பெற்றவர்களைக் கொண்டு முறையான விதத்தில் விபூதியை தயார் செய்ய வேண்டும்;பத்து சதுர கி மீ பரப்பளவில் இருக்கும் ஆலயங்களுக்கு ஒரு சிவாலய வளாகத்தில் தயாராகும் விபூதியை இலவசமாக(தானம்) தர வேண்டும்;


குங்குமம் தயார் செய்ய எலுமிச்சை தோட்டங்களை இயற்கை உரங்கள் போட்டு வளர்க்கவும்,பராமரிக்கவும் வேண்டும்;ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் முழுமையாகத் தெரிந்த சாக்தர்களைக் கொண்டு குங்குமத்தை தயார் செய்ய வேண்டும்;

விஸ்வாமித்திரர் மகரிஷியின் கோபத்தினால் உண்டானது பத்திராட்சம்;இது ருத்ராட்சத்திற்கு இணையாக மகரிஷி உருவாக்கியது;இதில் கிடைக்கும் ஒரு முக பத்ராட்சத்தை இணையத்தில் ஒரு முக ருத்ராட்சம் என்று விற்பனை செய்கின்றார்கள்;இது மாபெரும் சாபத்தை உருவாக்கிவருகின்றது;


கடுவன் பூனையின் உடலில் இருந்து வெளிப்படுவது தான் புனுகு ஆகும்;இது கடுவன் பூனையின் விந்தாக இருந்தாலும்,கடுவன் பூனையானது எப்போதும் சிவ நினைவுடன் இருக்கும்;புனுகினை சிவனுக்கு சட்டமாக அணிவிக்கலாம்;பைரவருக்கு அணிவிக்க பைரவரின் அருள் உடனடியாக கிடைக்கும்;நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேதுவுக்கும் அணிவிக்கலாம் என்பது சித்தர்கள் மட்டும் அறிந்த ரகசியம் ஆகும்;


கடைகளில் கிடைக்கும் புனுகு செயற்கையானது;அதனால் சிறிதும் இறை அனுபூதி கிடைக்காது;இன்றைய கால கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வணிக நோக்கில் புனுகினை டன் கணக்கில் உற்பத்தி செய்ய முடியாது;கலியுகமாக இருப்பதால் கடுவன் பூனையை வளர்ப்பதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனுமதி கிட்டாது;  சித்தர்களின் ஆசிகள் இருந்தால் ஒரே ஒரு முறை புனுகு நமக்கு கிடைக்கலாம்;ஒரு சில இடங்களில் புனுகு விற்பனை செய்யப்படுவதாக அறிகின்றோம்;ஒரு கிராம் புனுகின் விலை ரூ.2000/- க்கு விற்பனை செய்யப்படுகின்றதாம்;


கோரோசனை என்பது பசுவின் உடலில் இருந்து வெளிவரும் ஒரு அற்புத பொருள்;ஒரே ஒரு கிராம் கோரோசனை ஒரிஜினல் கிடைத்தால் அடுத்த 60 நாட்களில் நம் ஒவ்வொருவராலும் உண்மையான சிகப்பழகை அடைந்துவிட முடியும்;முழு இந்தியாவுக்கும் கோரோசனை சித்த வைத்தியர்களுக்கும்,மூலிகை ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவைப்படுகின்றது;இதுவும் ஒரு கிராம் ரு.5000/-க்கு மும்பையில் இருந்து மட்டுமே கிடைக்கின்றது;மும்பையில் இருந்து இந்தியா முழுவதற்கும் சப்ளையாகின்றது;


1985 வரையிலும் விறகு அடுப்பினை எல்லோரும் பயன்படுத்தி வந்தோம்;அடுப்புக் கரி கிடைத்தது;அதன் மூலமாக வாரம் ஒரு நாள் வீட்டில் சாம்பிராணி,குங்கிலியம் போன்றவைகளை நெருப்புத் தணல் வளர்த்து வீடு முழுக்க காட்டினோம்;பொறாமை எண்ணங்கள் சாம்பிராணி புகையில் வீட்டை விட்டு ஓடின;மண்ணெண்ணெய் அடுப்பு அறிமுகம் ஆனது;அப்புறம் கேஸ் அடுப்பு பரவலானது;போட்டி,பொறாமை எண்ணங்களால் பல கோடி இந்துக்களின் வீடுகள் இன்று நோயாலும்,கடனாலும்,தேவையற்ற சச்சரவுகளாலும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன;


கோவில்களுக்கு சாம்பிராணி,குங்கிலியம் தானம் தரும் பழக்கமே நின்று போய்விட்டது;கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாரம் ஒரு முறை சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்து வர வேண்டும்;கறுப்பு குங்கிலியம்,சிகப்பு குங்கிலியம்,வெள்ளை குங்கிலியம் என்று எதை வேண்டுமானாலும் தானம் செய்யலாம்;குங்கிலிய தானம் தொடர்ந்து செய்து வருதன் மூலமாக எல்லா மனித ரகசியங்களும் தெரியும்;எம தூதுவர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும்;பிறரையும் எமதூதர்களிடம் இருந்து மீட்கும் ஆற்றலையும் அருணாச்சலேஸ்வரர் வழங்குகின்றார்;


ஒரு ஊரில் மனிதர்கள் செய்த அனைத்து பாவங்களையும் அந்த ஊரில் இருக்கும் சிவலிங்கம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்;குங்கிலிய தூபம் இடும் போது மட்டுமே ஈர்த்துக் கொள்ளும்;அவ்வாறு ஈர்த்து,புண்ணியத்தை நறுமணம் கமழும் வெண் புகையாக வெளிவிடுகின்றார்;


சிவனை முழு முதற்கடவுளாக நினைப்பவர்கள் தினமும் சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்ய வேண்டும்;அப்படி தொடர்ந்து செய்து வந்தால்,செய்பவரின் குருவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக குங்கிலியப் புகை இருக்கும்;குருவுடனே இருக்க வைத்து நமது பிறவியை அறுக்கும்;


தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ,இரு உள்ளங்கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாத லக மகரிஷிக்கு ஜெய்” என்று ஒன்பது முறை ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்து வந்தால் மட்டுமே சிவனருள் நமக்கு கிட்டும்;சிவனருளைப் பெறுவதற்காக கடந்த பல கோடி ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்கள்;


இவைகளை முறையாகவும்,அமைப்பு ரீதியாகவும்=இன்னும் சொல்லப்போனால் கார்ப்பரேட் ரீதியாகவும் செயல்படுத்தினால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை பாதுகாக்க முடியும்;
மதமாற்றம் ஒரு நுண்ணிய பயங்கரவாதம்; அது என்ன நுண்ணிய? நம்மால் உணர முடியாத என்று அர்த்தம்;


இமயம் முதல் இலங்கை வரையிலும்,குஜராத் முதல் மியான்மர் வரையிலும் பண்பாட்டினால் சனாதன தர்மத்தை மக்கள் பின்பற்றி வருகின்றார்கள்;இவர்கள் வேறு மதத்திற்கு மாறினால்,தமது ஆன்ம பலத்தை இழந்துவிடுகின்றார்கள்;



டைனோசரைப் பற்றி ஒரு உண்மையை இங்கே விவரிக்க வேண்டி இருக்கின்றது;ஒரு டைனோசரின் நீளம் ஒரு கி.மீ.அதன் வாலை ஒரு உயிரினம் கடித்தால்,அப்படி கடிபட்ட உணர்வு டைனோசரின் மூளைக்கு தகவலாகச் செல்ல ஐந்து மணி நேரம் ஆகுமாம்;அதனால் தான் டைனோசர் இனம் அழிந்ததாம்;மனிதனின் காலில் ஒரு எறும்பு கடித்தால் மறுவிநாடியே மனிதமூளைக்கு தகவல் சென்றுவிடுகின்றது;மனித நரம்புகள் மூலமாக விநாடிக்கு 256 கி.மீ. வேகத்தில் சென்றடைந்து விடுகின்றது;     அதே போல,கேரளாவில் 1600களில் முதன் முதலில் கிறிஸ்தவ மத மாற்றம் நிகழ்ந்த போது அதை காஷ்மீர் இந்துக்கள் அது ஒரு பெரும் ஆபத்து என்பதை உணரவில்லை;இப்போது 1.9.2018 இல் மதமாற்றத்தினால் உண்டான அழிவுகளை நாம் உணரத் துவங்கியிருக்கின்றோம்;