Thursday, July 4, 2013

நமது கடுமையான கர்மவினைகளைப் போக்கும் திருவாதிரை அமாவாசை 7.7.13 ஞாயிறு!!!





ஒவ்வொரு மாதமும் ரவியாகிய சூரியனும்,மதியாகிய சந்திரனும் ஒரு ராசியில் ஒரே நட்சத்திரத்தில் ஒன்றிணைவார்கள்;இச்சம்பவம் வெறும் மூன்று விநாடிகள் வரை மட்டுமே நிகழும்;அதுவே அமாவாசைத் திதி எனப்படும்;விண்வெளியில் நிகழும்  அந்த மூன்று விநாடிகள் சம்பவம்,பூமியில் ஐந்து நாட்களுக்கு நீண்டுவிடும்;ஆனி மாதத்தில் வரும் அமாவாசையானது எப்போதுமே திருவாதிரை நட்சத்திரத்தில் உருவாகும்;சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் அவதார நட்சத்திரம் திருவாதிரை என்ற ஆருத்ரா ஆகும்.


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! சிவம் இல்லையேல் சவம்!! சிவனின்றி எதுவும் அசையாது;பூமியில் சிவ வழிபாடு குறைந்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பது போன்ற பழமொழிகள் நம்மிடையே பல யுகங்களாக புழக்கத்தில் இருக்கின்றன;இதில் சிவனின்றி எதுவும் அசையாது என்பதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவனின்றி அணுவும் அசையாது என்று மாற்றிவிட்டனர்;எப்படிப் பார்த்தாலும் சிவனருள் கிட்டினால் மட்டுமே இந்த மானுடப்பிறப்பு திரும்பத் திரும்ப எடுப்பது நின்று மறுபிறப்பில்லாத முக்தி கிட்டும்;
எனவே,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் இந்த விஜய வருடம்,ஆனி மாதத்தில் வரும் அமாவாசையன்று(7.7.13 ஞாயிறு) ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

பல நாட்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,பல காரணங்களால் தொடர்ந்து ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த அரிய நாளில்     (7.7.13 ஞாயிறு) மீண்டும் ஜபிக்கத் துவங்கலாம்;
சந்தர்ப்பமும்,ஒய்வும் உள்ளவர்கள் இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லலாம்;மஞ்சள் நிற ஆடை அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு,யாரிடமும் பேசாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்வது மிகவும் நன்று.அதுவும் 7.7.13 ஞாயிறு இரவு அண்ணாமலை கிரிவலம் செல்வது கடுமையான கர்மவினைகள் நீங்கிடக் காரணமாக இருக்கும்;


ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்பவர்கள்,சனியின் கடுமையான தாக்கத்தில் இருக்கும் கன்னி,துலாம்,மீனம் ராசியினர்;அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான தாக்கத்திற்குள் வர இருக்கும் மேஷ ராசி,விருச்சிகராசியினர் இந்த நன்னாளில் ஏதாவது ஒரு பைரவ சன்னதிக்கு இராகு காலத்தில் சென்று ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;


கடுமையான கர்மவினைகளால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டுவருபவர்கள் இந்த நாள் முழுவதும் தமது வீட்டு பூஜை அறை அல்லது அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது நன்று.அவ்வாறு ஜபிக்கும் போது இடையிடையே இளநீர் அல்லது தண்ணீர் அருந்துவது நல்லது; இந்தப் பதிவினை வாசித்துவிட்டு,குறைந்தது மூன்று மணி நேரம் வரை(காலையில் ஒரு மணி நேரம்;மதியம் ஒரு மணி நேரம்;இரவு ஒரு மணி நேரம்) என்றோ அல்லது அதிக பட்சமாக ஆறு மணி நேரம் ஜபிக்க முயற்சி செய்யலாம்;ஆனால்,இந்த முயற்சிக்கு முந்தைய மூன்று நாட்கள் வரை அசைவம் சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும்;

ஒரு வருடத்தில் 12 பவுர்ணமிகள் வருவதைப் போல,12 அல்லது 13 அமாவாசைகள் வரும்;அந்த 12 அல்லது 13 அமாவாசைகளில் மிக மிக மிக அரிதான,சக்தி வாய்ந்த அமாவாசை இந்த திருவாதிரை அமாவாசையே! இந்த நன்னாளில் ஸ்ரீகால பைரவரது மந்திரத்தை ஜபித்தாலும் சரி,ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம் செய்தாலும் சரி! ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,அந்த சதாசிவனின் அருளும் நமக்குக் கிட்டும் என்பது பைரவ நிச்சயம்.
ஸ்ரீகால பைரவப் பெருமானை அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்கள் பட்டியலை மீண்டும் தருகிறோம்: 

அரகஜா,ஜவ்வாது,புனுகு,அத்தர்,சந்தனாதித்தைலம்,பால்,மரிக்கொழுந்து,செவ்வரளி மாலை மற்றும் உதிரிப்பூக்கள்.(ஒருபோதும் ஸ்ரீகால பைரவருக்கு மல்லிகைப்பூ மாலை அணிவிக்கக் கூடாது)அபிஷேகம் செய்யும் போது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க பல கோடி கோடி மடங்கு பைரவ பலன்கள் கிட்டும்;

யார் முற்பிறவியில் சித்தரின் சீடராகவோ அல்லது பழுத்த சிவனடியாராகவோ இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்ய முடியும்.அது மட்டுமல்ல;வேறு எந்த கடவுளிடமும் நாம் கேட்கும் வரம் மட்டுமே கிடைக்கும்;அவ்வாறு வரம் கிடைக்க தொடர்ந்து பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அந்தக் கடவுளை வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்;அதன் பிறகே கேட்ட வரம் கிட்டும்;ஆனால்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது நாம் பலவிதமான கோரிக்கைகளை வைப்பதாக வைத்துக் கொள்வோம்;அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒரு சில கோரிக்கைகளை மறந்துவிட்டாலும்,பைரவப் பெருமானின் அருள் கிட்டும்போது நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும்;அது மட்டுமல்ல;அவரிடம் நாம் கேட்க மறந்த கோரிக்கைகளும் நிறைவேறிவிடும் என்பதுதான் ஸ்ரீகால பைரவப் பெருமானின் சிறப்பு ஆகும்.மேலும்,நாம் சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் வரை தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டாலே நமது பூர்வ கர்மாக்களின் படி விரைவாகவே அல்லது சற்றுத்தாமதமாகவோ அவர் நம்மை ஏற்றுக் கொள்வார்;அவ்வாறு ஏற்றுக் கொண்டப் பின்னர்,நமது குலதெய்வத்தின் சக்தியும் அதிகரிக்கும்;


சந்தர்ப்பம் உடையவர்கள் அவரவர்களின் ஜன்ம நட்சத்திரத்துக்கென்று பைரவ ஆலயங்களைத் தெரிவித்திருக்கிறோம்;முடிந்தால்,அங்கே சென்று அபிஷேகம் செய்து மந்திரம் ஜபிக்கலாம்;            


1.அசுபதி/அஸ்வினி=ஞான பைரவர்=பேரூர்

2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்

3.கார்த்திகை=அண்ணாமலை பைரவர்

4.ரோகிணி=பிரம்ம சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்

5.மிருகசீரிடம்=க்ஷேத்ர பாலர்=க்ஷேத்ரபாலபுரம்

6.திருவாதிரை=வடுக பைரவர்=வடுகூர்

7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி

8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்

9.ஆயில்யம்=பாதாள பைரவர்=காளஹஸ்தி

10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்

11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்

12.உத்திரம்=ஜடாமண்டல பைரவர்=சேரன்மகாதேவி

13.அஸ்தம்=யோகாசன பைரவர்=திருப்பத்தூர்

14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி

15.சுவாதி=ஜடாமுனி பைரவர்=பொற்பனைக் கோட்டை

16.விசாகம்=கோட்டை பைரவர்=திருமயம்

17.அனுஷம்=சொர்ண பைரவர்=சிதம்பரம்
18.கேட்டை=கதாயுத பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை

19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி

20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்

21.உத்திராடம்=முத்தலைவேல் வடுகர்=கரூர்

22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன் பட்டி

23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவ பலிபீடம்)

24.சதயம்=சர்ப்ப பைரவர்=சங்கரன்கோவில்

25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை,தஞ்சை

26.உத்திரட்டாதி=வெண்கலஓசை பைரவர்=சேஞ்ஞலூர்

27.ரேவதி=சம்ஹார பைரவர்=தாத்தையங்கார் பேட்டை


குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம்.காலத்தை இயக்குபவராக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.நமது அனைத்து வித தோஷங்கள் நீங்கிட!!!



அதென்ன கூகுள்? கூகுள் எனில் ஒன்றுக்குப் பின்னால் நூறு சைபர்கள் போட்டால் எவ்வளவு வரும்! அவ்வளவு நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்