Friday, July 31, 2015

வராகி மாலை

              வம் வராஹ்யை நமஹ
                 

இந்த வராகி மாலையில் இருக்கும் 32 பாடல்களை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒருமுறையும்,இரவு ஒருமுறையும் மனதிற்குள் பாடினாலே அன்னை வராகி(அரசாலை)யின் அருள் நமக்கு பூரணமாக கிட்டிவிடும்;அசைவம்,மது இவைகளை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே இந்த பாடல் பாடத் துவங்க வேண்டும்;
முதலில் ஒம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் (உங்கள் இஷ்ட தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் நினைத்து ஜபித்தப் பிறகு பாடத் துவங்க வேண்டும்;

1.வசீகரணம்(தியானம்)
இருகுழை கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்த்ர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறந்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப்புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர் கொண்டு தோள் மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்)
நடுங்காவகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டு
ஆடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோண்மணி வராகி நீலி தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண் தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வராகி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசனம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப்போக விட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்ம பூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகி என் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மது மாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறை யோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப்பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்பீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்( ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்( துட்டபந்தனம்)
பாடச் சீறாடிப்பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர்வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக்கிரை இடுவாள் கொன்றை வேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகி என் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டுப் பொரித்தத் தலை
நெரிப்பாள்தலை மண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக்காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக் கள வாழ்த்து(பத ஞானயோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண்டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26.படைநேமி வாழ்த்து(சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவார் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனைநினை யாதவரே

27.அடியார் வாழ்த்து(அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர்நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகி நற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும்
மருப்புக்குநேர்சொலும் கொங்கையும்மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்(கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப்பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
மாறிட்டவர் தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட்டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்(ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம் செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவ ஞான யோகம்)
சிவ ஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரநாயகியே

எந்த ஒரு பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம் பாதிப்பிலிருந்து முழுமையாக மற்றும் நிரந்தரமாக மீண்டு நிம்மதியாக வாழ இந்த வராகி மாலையை காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் பாட வேண்டும்;வாலை தரிசனம் செய்ய விரும்புவோர் வாரம் தோறும்/மாதம் தோறும் இந்தப் பாடல் பாடும் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்;மனதில் யாருக்கும் தீங்கு நினைக்காதவர்களால் மட்டுமே இந்த பாடலை தினமும் பாட முடியும் என்பது அனுபவ உண்மை;


உச்சகட்டமான பாதுகாப்பை அருளும் வராகிமாலை!




அபிராமி பட்டர் திருக்கடையூர் வாழ்ந்து வந்தார்;அவர் அபிராமி அந்தாதி இயற்றியவர்;அபிராமி,லலிதா,பரமேஸ்வரி என்பதெல்லாம் ஆதிபராசக்தியின் வேறு பெயர்களே! அவர் எப்போதும் அன்னை அபிராமியின் நினைவாகவே இருப்பவர்;ஒருமுறை அப்பகுதியை ஆண்ட மன்னன் திருக்கடையூர் ஆலயத்திற்கு வந்தான்;மன்னன் வருகையைப் பார்த்த கோவில் ஊழியர்கள்,கோவிலுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் மன்னனை வணங்கினர்;அபிராமி பட்டரோ அன்னை அபிராமியின் நினைவாகவே இருந்ததால்,அவருக்கு மன்னனின் வருகையை உணரமுடியவில்லை;மன்னன் துணுக்குற்றான்;
மன்னன் அபிராமி பட்டரை அணுகி, ‘பட்டரே! இன்று என்ன திதி?’ என்று வினவினான்;

அபிராமி பட்டரோ,அன்னை அபிராமியின் நினைவாகவே இருந்தபடியால் அன்று அமாவாசை என்பதை மறந்து, ‘பவுர்ணமி’ என்று கூறினார்;மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது;இருப்பினும் கோபத்தை அடக்கிக் கொண்டு தனது காவலர்களை அபிராமி பட்டருக்கு காவல் போட்டுவிட்டு உத்தரவிட்டான்;

‘இன்று மாலை பவுர்ணமி உதயமாகாவிட்டால் இந்த பட்டரைச் சிரச்சேதம் செய்துவிடுங்கள்’
மன்னன் போய்விட்டான்;கோவிலில் இருந்தவர்கள்,அபிராமி பட்டரிடம் இன்று அமாவாசை திதியே;ஏன் மாற்றிச் சொன்னீரய்யா? இன்று மாலையோடு உமது உயிர் போய்விடுமே.. என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டு அவரைப் பயமுறுத்திவிட்டனர்;

அவருக்கு என்ன தெரியும்? அன்னை அபிராமியைத் தவிர!

அந்த இக்கட்டான சூழ்நிலையில்  இருந்து தன்னை காப்பாற்றும் படி அன்னை அபிராமியிடம் வேண்டிப் பாடினார்;அதுதான் அபிராமி அந்தாதி!!!

அப்படி அவர் பாடியதால்,அமாவாசையான அன்று மாலையில் பவுர்ணமி உதயமானது;மன்னன் தனது அரண்மனையில் இருந்து ஒடோடி வந்தான்;அபிராமி பட்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்;


25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பவுர்ணமி,அமாவாசை,பவுர்ணமி என்ற திதி சுழற்சி ஒருமுறை விதிவிலக்காக மாறி பவுர்ணமி,பவுர்ணமி,பவுர்ணமி என்று மாறும்;பிறகு வழக்கம் போல,அமாவாசை,பவுர்ணமி,அமாவாசை என்று திதிச்சுழற்சி ஏற்படும்;தொடர்ந்து மூன்று பவுர்ணமிகள் இம்முறை வந்தால்,அடுத்த 25,000 ஆண்டுகளுக்குப்பிறகு தொடர்ந்து மூன்று அமாவாசைகள் வரும்;இதை இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது;


“தனம் தரும்;கல்வி தரும்;ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்;தெய்வ வடிவம் தரும்;நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்;நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே” என்ற பாடல் வரிகள் வராகி மாலையை தினமும் காலையில் 6 மணிக்கு முன்பு ஒருமுறையும்,மாலையில் 6 மணிக்குப் பின்னர் ஒருமுறையும் பாடினால் அன்னை அரசாலையின் அருள் கிட்டும்;
வராகி மாலையை இயற்றியவர் சோழர் படைத்தளபதியான சுந்தரேசர் ஆவார்;

முதலாம் குலோத்துங்க சோழனுக்கும்,சாளுக்கிய மன்னன் ஆறாவது விக்கிரமாதித்தியனுக்கும் கர்நாடக தேசத்தில் நடந்த போரில் பல வீர சாகசங்கள் புரிந்து சாளுக்கியரின் கொடியைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார் சோழர் படைத்தளபதி சுந்தரேசர்;அவருக்குப் பரிசாக பாண்டிய மன்னன் ஒரு பெரிய நிலப்பரப்பை வழங்கினான்;அந்த கிராமத்தில் தங்கி சுந்தரேசர் வராகி மாலையை இயற்றினார்;அந்த கிராமத்தின் பெயர் வீரசோழன்!


சுந்தரேசர் சோழர் சேனையின் குதிரைப்படைத் தலைவனாக இருந்தார்;அதனால்,இவருக்கு வராகியின் முக்கிய ரூபமான அஸ்வாரூடாவின் மீது தணியாத பக்தி உருவானது;இன்றைய கால கட்டத்தில் நம் ஒவ்வொருவருமே நான் என்ற அகங்காரத்தால் அல்லது (இணையம்/செல்போன்/திரைப்படங்கள்/விளம்பரங்கள் மூலம்) தூண்டப்படும் மிதமிஞ்சிய காம இச்சையால் அவதிப்படுகிறோம்;இதை முழுமையாக நீக்கி பாவமே செய்யாத ஆத்மாவாக மாற வேண்டும் எனில் அஸ்வாரூடா என்ற குதிரைக்காரி என்ற அஸ்வாருட வராகியைச் சரணடைய வேண்டும்;

எதிர் எதிர் உபாசனைகள்/வழிபாடுகள் ஒருபோதும் கூடாது



நரசிம்மர் உபாசனை அல்லது வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் சரபேஸ்வரர் உபாசனை அல்லது வழிபாடு செய்யக் கூடாது;

மாடதெய்வங்கள் உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் சூலினி உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

கருட உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நாகதேவதை உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

ப்ரத்யங்கரா உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நரசிம்மர் உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

சூலினி உபாசனை/வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் நரசிம்மர் உபாசனை/வழிபாடு செய்யக் கூடாது;

இவைகள் எதிர் எதிர் தெய்வசக்திகள்;மீறி இரண்டையும் ஒரே சமயத்தில் உபாசனை/வழிபாடு செய்தால் பைத்தியம் பிடிக்கலாம்;அல்லது திடீர் மரணம் உண்டாகலாம்;


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..




உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை :-


எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை
நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.
நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.
வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.
இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.
வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.
இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.
இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...

Thursday, July 30, 2015

அட்டாமா அக்குபங்சா்

இந்திய அளவில் புகழ் பெற்ற தலைசிறந்த 'அட்டாமா அக்குபங்சா்' கல்வி நிறுவனத்தின் பட்டய பயிற்சி வகுப்புகள் விரைவில் திருச்சியில் தொடங்க உள்ளது.
பேஸ் புக் நண்பா்களும், மற்ற அக்குபங்சா் நலன் விரும்பிகளும் இதனை சோ் செய்தும், தங்களது வேண்டியவா்களை வகுப்பிற்கு அறிமுகம் செய்யுமாறுக் கேட்டுக்காெள்கிறேன்.
விண்ணப்ப படிவம் வழங்கும் நாள் :
26/07/2015 முதல் 10/08/2015 வரை
வகுப்பு தொடக்க நாள் : 13/08/2015 வியாழக்கிழமை
கல்வி தகுதி :
10வது, +2, ஏதேனும் ஒரு டிகிாி
பயிற்சி காலம் : ஒரு வருடம் (6 மாதம் படிப்பு, 6 மாதம் செய்முறை மருத்துவ பயிற்சி )
வகுப்பு நடக்கும் நாட்கள் : ஞாயிறு மட்டும்
நேரம் : காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை
சிறப்பு சலுகைகள் : விதவை, கணவனால் வருமானமற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடி
கூடுதல் சிறப்பு சலுகை :
1. சித்தாவில் பித்த, கப, சிலேத்துமம் நாடி, அதற்குாிய மருந்துகளும். ஸ்கேன் ாிப்போா்ட்யில்லாமல் நோய் அறிவிற்கும் அளவு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்படும்
2. டாா்ன் தெரபி (தண்டுவட அலைன்மென்ட்) வகுப்பிற்கும்
3. ஹோமியோபதியில் ப்ளவா் மெடிசன், பயோ மெடிசன்,
4. பிராணிக் ஹீலிங், ரெய்கி அக்குபங்சா், மனித பிரபஞ்ச சக்தி ஹீலிங், வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்
தொடா்ப்பிற்கு :
நா.சரவணமுத்து,
67, விவிஎல்பி காம்ப்ளக்ஸ், செங்குளம் காலனி ரோடு, வோ்ஹவுஸ், பாலக்கரை, திருச்சி _1.
செல் நம்பா் : 9842776546

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை



ஒருமுறை சுவாமி விவேகானந்தர்,தனது குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கோரிக்கை வைத்தார்;வீட்டில் பணக் கஷ்டம்,அப்பா இறந்ததில் இருந்து வறுமை வாட்டுகிறது;நானோ வீட்டில் கடைசிப் பிள்ளை;எல்லா அக்காக்களும் கஷ்டப்படுவதைப் பார்த்து என்னால் சகிக்க முடியவில்லை;நீங்கள் காளியிடம் எனக்காக வேண்டலாமே? என்றிருக்கிறார்;
அதற்கு ராமகிருஷ்ணபரமஹம்சர், நீயே காளிமாதாவிடம் உன் கஷ்டத்தைச் சொல்லிக் கேளேன் என்றார்;அதற்கு விவேகானந்தரும் சரி என்று சம்மதித்தார்;
ராமகிருஷ்ணர் காளிமாதாவிடம் விவேகானந்தரின் கஷ்டத்தைச் சொல்ல வருவதையும்,அவனுக்கு நீ காட்சியளித்து வரம் தா அம்மா என்றும் வேண்டியிருக்கிறார்;
ஒரு சிறப்பான நன்னாளில் ராமகிருஷ்ணர் அனுமதியோடு,தட்சிணேஸ்வரம் காளியை தரிசிக்கிறார் விவேகானந்தர்;காளியை தரிசித்ததும், அவரது குடும்பச் சிக்கல்கள்,பணக்கஷ்டங்களிலிருந்து மீட்கச் சொல்லி எதுவும் தோன்றவில்லை;
“அம்மா,உலகம் முழுவதும் இருக்கும் அப்பாவி மக்கள் நிம்மதியாக தினமும் வாழ வேண்டும்” என்றே வேண்டியிருக்கிறார்;
இப்படி மூன்று முறை காளியை தரிசித்தும் சுவாமி விவேகானந்தரால் தனக்கோ,தனது குடும்பத்தாருக்கோ என்று வேண்டிடத் தோன்றவில்லை;
இணையமும்,வண்ண அலைபேசிகளும் நம்மிடையே பரவலான பின்னர் நமது மனம் உலக வரலாற்றில் இதுவரை எந்த தலைமுறையினரும் அனுபவிக்காத இன்பங்களை அனுபவிக்கும் சாக்கில் மனமானது மிகவும் அழுக்காகிக் கொண்டிருக்கிறது;நமது ஆழ்மனமும் சரணாகதி தத்துவத்தில் இருந்து வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறது;
பார்ப்பதைவிட செய்வதே மேல் என்பதே இளைஞர்களுக்கும்,இளம் பெண்களுக்கும் கூறும் தாம்பத்திய அறிவுரை; என்ன காரணமாக இருந்தாலும் சரி! ஆண்கள் 27 வயதிற்குள்ளாகவும்,பெண்கள் 25 வயதிற்குள்ளாகவும் திருமணம் செய்து கொள்வது அவசியம்;இந்த வயதிற்கு மேல் எந்த காரணமாக இருந்தாலும் சரி; திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள்:
பார்ப்பதால் மனம் அழுக்காகிறது என்று மட்டும் எண்ண வேண்டாம்;நமது ஆத்ம சுத்தியை இழந்துவிடுவோம்;இந்த இழிவான செயல்களில் இருந்து என்னை மீட்டு காப்பாற்று அம்மா என்று அன்னையைச் சரணடைந்தால் நிச்சயமாக அன்னை அரசாலை(வராகி) நம்மை மீட்டுப் பாதுகாப்பாள்;வழிநடத்துவாள்;
உலகத்திலேயே குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கிட ஒரு சமுதாயம் 20,00,000 ஆண்டுகளாக முயற்சி எடுத்திருக்கிறது எனில் அது நமது தமிழ்ச் சமுதாயம் தான்! அதை வெறும் 20 ஆண்டுகளில் இணையம் என்ற அரக்கன் மூலமாக சின்னாபின்னப்படுத்திட முயன்றுள்ளது மேற்கு நாடுகளும் அதன் அமைப்புக்களும்! சீனாவைப் போல நமது நாட்டிலும் இணையம் என்ற பகாசுரனுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்;
மறுபுறம்,அன்னை அரசாலையைச் சரணடைந்தால் போதும்;அன்னையிடம் தான் நம்மால் எதையும் கெஞ்சியாவது மன்றாடியாவது கேட்டு வாங்கிட முடியும்;
அம்மா வராகி! எனக்கு என்னை எல்லா விதத்திலும் புரிந்து கொள்ளும் மனைவி அமைய வேண்டும் என்று வேண்டலாம்;
அம்மா வராகி! என் மீது மட்டும் அன்பு செலுத்தும் கணவன் அமைய அருள் புரி தாயே!! என்று இளம் பெண்கள் வேண்டலாம்;
அம்மா அடியேனது வறுமையைப் போக்கி,தினமும் குடும்பத்தை நிர்வகிக்கத் தேவையான பணம் கிடைக்க வழி செய்;அது போதும் என்றும் கூட குடும்பஸ்தர்கள் வேண்டலாம்;
அம்மா வராகி! இப்பிறவியே போதும்;இனி ஒரு பிறவி வேண்டாம் என்று துறவிகள் வேண்டலாம்;சோகங்களை மட்டுமே இதுவரை சந்தித்து தினமும் அழுது கொண்டிருப்பவர்களும் வேண்டலாம்;
இது போல உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் (நியாயமாக இருந்தால் போதும்) வேண்டலாம்;
கருணைக் கடல் என்பது அன்னைதானே !
கருணைப் பிரபஞ்சமும் அவள்தானே!
கருணை உணர்ச்சியை நமக்குத் தந்தவள் அவள் தானே!!!
வாழ்க பைரவ அறமுடன் ! வளர்க வராகி அருளுடன்!!!

அன்னை அரசாலை(வராகி)யின் ஆலயங்கள் பட்டியல்



காசி பஞ்சகங்கை கட்டத்தில் இருந்து சிறிது தொலைவில் பிந்து மாதவர் கோவில் இருக்கிறது;அதற்கும் சற்று தொலைவில் வாராகி கோவில் இருக்கிறது;
இந்த வராகியே முதன்மைக் கோவில் ஆகும்;கோவிலுக்கு சூரிய உதயத்திற்கு முன்பே சென்றுவிட வேண்டும்;சூரிய உதயம் ஆனதும் கோவில் நடையை மூடிவிடுவர்;மறுநாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமே திறப்பர்;
கோவிலின் உள்ளே பாதாள அறையில் சுமார் 5 அடி உயர வராகியின் திரு உருவம் இருக்கிறது;உக்கிரமான தேவியாக காணப்படுகிறாள்;அறையின் உள்ளே யாரையும் அனுமதிப்பதில்லை;சன்னதியின் மறுபக்கம் உள்ள துளையின் வழியாக பாத தரிசனம் செய்யலாம்;
காசிக்கு வருபவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்களில் இந்த ஆலயம் முதன்மையானதும்;முக்கியமானதும்;சூட்சுமமானதும் ஆகும்;
அரியலூர் ஆலந்துறையார் சன்னதிக்கு முன் படி ஏறும் பகுதியில் வராகி காட்சி தருகிறாள்;இவளை வணங்கியப் பின்னரே ஆலந்துறையாரை வணங்க வேண்டும்;திரும்பும் போது கவுமாரியை வணங்க வேண்டும்;
இவ்வாலயத்தில் சப்தமாதர்களின் ஆலயம் இருக்கிறது;இங்குள்ள ஒப்பிலா அம்மன் சக்தி வாய்ந்தவள்;இங்கு போர்க்காளி என்ற பெயரில் வராகியை வழிபடலாம்;
பவுர்ணமி நாட்களில் அரளிப்பூ மாலையை போர்க்காளிக்கு அணிவித்து அர்ச்சனை செய்தால் பதவி உயர்வு கிட்டும்;திருமணத் தடை நீங்கும்;
சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்து இருப்பது செங்கண்மால் கிராமம்;இங்கே சாலையோரம் இருக்கும் சிவாலயத்தில் செங்கண்மாலீஸுவரர்;அம்பிகை பெரியநாயகியுடன் அருள்பாலித்து வருகிறார்;இந்த கோவிலுக்கு வடக்கே சுவேத வராக தீர்த்தம் இருக்கிறது;
திருப்பன்றிக்கோடு கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருக்கிறது;
அரித்துவாரமங்கலத்தில் அலங்காரவல்லி சமேத பாதாள வரதர் அருளாட்சி புரிந்து வருகிறார்;அரியால் துவாரம் செய்யப்பட்ட மங்கலம் என்பதே இதன் பெயர் ஆகும்;மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டத் துவங்கிய இடம் இதுதான்;இன்னும் (பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னரும்) இந்த அடையாளங்கள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன;
குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் உடன் பாலகுஜாம்பாளாக காட்சி தருகிறார்;இங்கே மூலவரின் பின்புறம் சப்த கன்னியர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன;இதில் வராகியின் திரு உருவம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது;இந்த ஆலயத்தில் மட்டுமே இறைவன் சன்னதியிலேயே சப்த கன்னியர் இடப் பெற்றுள்ளனர்;
தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தில் அன்னை வராகியின் சன்னதி இருக்கிறது;முதலில் அன்னை வராகி ஆலயம் இருந்ததாகவும்,பின்னரே பிரகதீசுவரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக கர்ணபரம்பரைச் செய்திகள் தெரிவிக்கின்றன;
உத்தரகோசமங்கை ராமநாதபுரம் தூத்துக்குடி சாலையில் 18 வது கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது;இங்கே மூலஸ்தானத்தில் ஸ்ரீவராகி எட்டுத் திருக்கரங்களுடன் ஒரு காலை குத்திட்ட நிலையிலும்,மற்றொரு காலை வீராசன நிலையில் வைத்தும் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறாள்;
ஆடி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது;மேலும் நவராத்திரி நாட்களில் இங்கு அன்னை வராகிக்கு அபிஷேகம்,அலங்காரம்,சகஸ்ர நாம அர்ச்சனை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது;10 ஆம் நாள் அன்று அன்னை வராகி திருவீதி உலா வருகிறாள்;
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 15 வது கி.மீ.தொலைவில் பள்ளூர் இருக்கிறது;இங்கு அன்னை வராகிக்கு பழமையான கோவில் இருக்கிறது;இங்கே தேவி தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அன்பு ஆட்சி புரிந்து வருகிறாள்;இங்கே வராகீயின் பெயர் அரசாலை;அன்னை வராகீயின் 1008 திருநாமங்களில் ஒன்றுதான் அரசாலை!!!
அண்ணாமலை+உண்ணாமுலை அம்மன் தம்பதியாக நின்று அருள்பாலிப்பது திரு அண்ணாமலை;மஹாவிஷ்ணு ஈசனின் பாதத்தை கண்டறிய வராக அவதாரம் எடுத்து ,முடிவில் ஈசனுக்கு இணையான கடவுள் என்று ஈசனாலேயே வரம் பெற்றதும் இங்கேதான்;உண்ணாமுலை அம்மன் சன்னதியில் அவ்வளவு தெய்வீக வராகி ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன;
திருக்காளஹஸ்தியில் சிவன் சன்னதிக்கு எதிரே இருப்பது முதலில் பன்றிசிலைதான்; அதன் பிறகே நந்தி சிலை இருக்கிறது;இந்த பன்றி சிலைக்கு செவ்வாய்க்கிழமை ரோஜா மாலை வாங்கிப் போட்டு வழிபட்டால் காரிய சித்தியாகும்;
திருப்பதி மலை மீது ஆதிவராகர் இருக்கிறார்;மலை மீது இருக்கும் புனித குளத்தின் மூலையில் ஆதிவராகருக்கு தனிச்சன்னதி இருக்கிறது;முதலில் அவரை வழிபட்டப் பின்னரே வேங்கடவனைத் தரிசிக்க வேண்டும்;
எந்த அம்மன் சன்னதியிலும் காலை 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்குப் பிறகும் வராகி ஜபம் செய்யலாம்;அல்லது சப்த கன்னியர்கள் முன்பாக அமர்ந்த நிலையிலும் வராகி ஜபம் செய்யலாம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்



மனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களை எட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டு செயல்களை மையமாகக் கொண்டே மாந்திரீகம் உருவானது;மாந்திரீகத்திற்கு அஷ்டகர்மா என்று பெயர்;இந்த அஷ்டகர்மாக்களை இயக்குவது அஷ்ட பைரவப் பெருமான் களே! இந்த எட்டு செயல்களைக் கொண்டு 64 விதமான பாவச் செயல்களைச் செய்ய முடியும்;அதனால்,அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் அஷ்டாஷ்ட வடிவங்கள் எடுத்து 64 பேர்களாக தோன்றினர்;இந்த 64 பைரவர்களுக்கும் 64 தெய்வீக பெண் சக்திகள் துணை புரிகின்றனர்;இந்த 64 பைரவ தம்பதிகளில் முதன்மையானவர் உன்மத்த பைரவர்;இவரது துணையே வராகி!
வராகியின் வடிவங்களும் 64 ஆக இருக்கின்றன;இந்த 64 வடிவங்களில் முதன்மையானவர்கள் எட்டு வராகிகளே! அஷ்டவராகிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்;
பஞ்சமீ
அன்னை அராசாலை என்ற வராகியைப் பற்றி வராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது;நாத்திகப் பிரச்சாரம்,இந்தி எதிர்ப்பினால் தமிழுக்கும்,சமஸ்க்ருதத்திற்கும் இடையிலான 20,000 ஆண்டு மொழிபெயர்ப்பு தகர்ந்துவிட்டது;இதனால் பல அரிய நூல்கள் இன்று சமஸ்க்ருதத்திலேயே தங்கிவிட்டன;அண்டைமாநிலமான கேரளா கூட நம்மைவிட 120 ஆண்டுகள் முன்னேறிவிட்டது;ஆமாம்! ஏராளமான சமஸ்க்ருத நூல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளனர்;
வராகி கல்பத்தில்,வராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமீ ஆகும்;ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வராகி;பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமீ ஆகும்;சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவராகி தத்துவம் ஆகும்;இதனால் தான் இவளுக்கு பஞ்சமீ என்ற பெயர் உண்டானது;
பஞ்சமீயை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு;இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்;
வராகி என்ற வாராகி
சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வராகியைத்தான்! பரமரகசியமான இந்த வழிபாட்டுமுறையால் தான் இந்த பாரத தேசத்துடன் மோதவே மற்ற நாட்டினர் பயந்தனர்;இடையில் வந்த புறசமய தாக்குதல்களால் இந்த வராகி வழிபாடு அருகிவிட்டது;இப்போது மீண்டும் அன்னை வராகியின் அருள்பார்வை நமது தேசத்தின் மீது விழுந்திருக்கிறது;
மஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள்;மோளமுகம் கொண்டவள்;இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும்;நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்;கருநிறத்திருமேனியைக் கொண்டவள்;
படைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கியை பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைப் பொடியாக்கியவள்;
ஸ்ரீவராகி சக்தி வாய்ந்தவள்;ஒரு முகம்,இருகண்கள்,நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்;கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்;மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள்;இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும்;வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள்;சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்;
ஸ்ரீவராகி எலும்பின் தேவதை;இவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்;
மயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்;அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;இவ்வாறு இவளை வேண்டினால் வளம் பல தருவாள்;
பக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்ளல்களின் தலைமைக் கடவுளாகவே திகழுகிறாள்;இவளது பக்தர்கள் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள்;பொன்,பொருள் காட்டி இவர்களை ஏமாற்றிட முடியாது;ஆனால்,அன்புக்கு பணியக்கூடியவர்கள்;இவளது அடியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளங்குவர்;துன்பம் இவர்கள் இருக்கும் திசையில் கூட எட்டிப்பார்க்காது;மனநோயாளிகள் கூட இவர்கள் இருக்கும் பக்கம் வரமாட்டார்கள்;
வராகி பக்தர்களுடன் அன்புடன்(நயவஞ்சகமின்றி) பழகுபவர்களுக்கு மனத் தெளிவும்,வீட்டில் மகிழ்ச்சியும் ஏற்படும்;
ப்ரத்யட்ச வாராகி
கண்முன்னே தோன்றி அருள்புரிபவள் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் ப்ரத்யட்ச வாராகி என்று அர்த்தம்;சில இடங்களில் இந்த அன்னை அருளாட்சி புரிந்துவருகிறாள்;யாராவது உங்கள் ஊரில் இந்த அன்னை இருந்தால் தெரிவிக்கவும்;தன் பக்தர்களின் மனக்குறையை உடனே போக்கும் அருட்குணம் உடையவள்;எல்லாவிதத் தடைகளையும் தகர்த்து நல்வழி காட்டுபவள்;இவளது சன்னதியில் தேங்காயில் நெய்விட்டு தீபம் ஏற்றுவது நல்லது;பஞ்சமி திதியன்று இவளுக்கு புது ஆடைகளை அணிவித்து,புது மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த அன்னையை தினமும் வழிபட முடியும்;அப்படி வழிபடுவது போல நடிப்பவர்களுக்கு இவளின் அருள் சிறிதும் கிட்டாது;
தண்டினி
ஸ்ரீவாராகிதேவி ஒரு திருக்கரத்தில் தண்டு ஏந்தி காட்சி தந்ததால் இவளை தண்டினி என்று அழைப்பது வழக்கம்;
அஸ்வாரூட வாராகி
இவள் அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாவாள்;இவள் தனது திருக்கரங்களில் பாசம்,அங்குசம்,பிரம்பு ஆகியவைகளை ஏந்தி மிகவும் கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருப்பாள்;இவளது குதிரையின் பெயர் அபராஜிதா ஆகும்;இவளை வணங்கினால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உருவாகும்;
(ஆன்மீகத்தில் முன்னேற முதல் படியாக இருப்பது காம இச்சையே! இதைக் கடக்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்;இரண்டாவது தடையாக இருப்பது நான் என்ற அகங்காரம்;புராணங்கள்,கடவுள்களின் வரலாறு படித்தால் நெடுக அகங்காரத்தால் தான் பலர் சாபம் பெற்றிருப்பர்; அல்லது முறை தவறிய காம இச்சையால் சாபம் பெற்றிருப்பர்;நாம் தான் கர்ம உலகமாகிய பூமியில் வசிக்கிறோம் இல்லையா? இவளை வணங்கி,பிறப்பற்ற முக்தியைப் பெற்றுவிடுவோம்;)
சம்பத்கரி வாராகி
இவள் அம்பிகையின் யானைப்படையின் தலைவி! இவள் அங்குசத்தின் அதிஷ்டான தேவதை ஆவாள்;இந்த அங்குசத்தைத் தியானிப்பவர்கள் எதிரிகளை அடக்கும் வல்லமையைப் பெறுவார்கள்;
வாழ்க்கையில் மங்களமான இடத்தைப் பெற இவளை வழிபட வேண்டும்;இவளை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்;
தண்டினி வாராகி
அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் படைத்தலைவியாக இவள் விளங்குகிறாள்;இவள் ஆஷாட என்னும் ஆடி மாத நவராத்திரியில் வழிபடப்படுகிறாள்;தன் பக்தர்களின் எதிரிகளைத் தண்டித்து அடக்கும் சக்தி கொண்டவள்;எனவே தண்டினி எனப் பெயர் பெற்றவள்;இவள் எதிரிகளைத் தண்டிக்க பயன்படுத்தும் கருவியே தண்டம் ஆகும்;இவளுக்கு இன்னொரு பெயர் வார்த்தாளி!
சொப்பன வாராகி
கரிய நீல வண்ணத்திருமேனி உடையவள்;மூன்று கண்களும்,பன்றி முகமும் கொண்ட கன்னித்தாய்;சந்திரனைத் தலையில் சூடியிருப்பாள்;அழகிய குதிரை மீது அமர்ந்து பவனி வருவாள்;பிரபஞ்சம் எங்கும்!
நல்ல அழகும்,அருளும்,வெற்றியும் உடைய இந்த சிறப்பான பெண் தெய்வத்தை அளவற்ற புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வணங்கிட முடியும்;
சொப்பன வாராகி வழிபாட்டுமுறை மிகுந்த பாதுகாப்பானது;ஸ்ரீசொப்பன வாராகி நேரில் வரமாட்டாள்;நம் சொப்பனத்தில் வந்து நம் சந்தேகங்களுக்குப் பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பதில் இவளது தாய்மையை உணரலாம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமி


நடிகர் லாரன்ஸ் பிறப்பால் கிருஸ்துவன்.இவருக்கு 24வது வயதில் இரத்த புற்றுநோய் இருந்தது இவர் செல்லாத சர்ச்கள் இல்லை காணத மருத்துவர்களும் இல்லை.மருத்துவர்கள் அனைவரும் லாரன்ஸை குணப்படுத்த முடியாது என கூறினார்கள் மனம் உடைந்தர் லாரன்ஸ்.
ஒரு படபிடிப்பில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் லாரன்ஸ்.
லாரன்ஸ்:ரஜினிகாந்த்
அவர்களிடம் தனது பிரச்சனைகள் சொன்னார் லாரன்ஸ்.
ரஜினி காந்த்: நீ கிருஸ்துவனாக இருந்தாலும் பரவாயில்லை நான்(ரஜினி) சொல்லுவதை நீ கேள் இந்துக்களின் விரதமுறையில் அறிவியல் அர்த்தம் உண்டு நீ ஸ்ரீ ராகவேந்திரரை மனதார நினைத்து ப
பரிசுத்தமாக ஒரு மண்டலம் விரதம் இருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வா பிறகு நலமாகும் என்றார்.
லாரன்ஸ்:நான் பார்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துகள் இல்லை இதில் சரியாகாதது இந்து கடவுள்களை வணங்கினால் எனக்கு குணமாகுமா.
ரஜினிகாந்த்:எனது வார்த்தையில் நம்பிக்கை இருந்தால் நான் சொன்னதை செய்
லாரன்ஸ்:உங்கள் வார்த்தகைக்கு வேண்டி நான் கண்டிப்பாக கேட்கிறேன்.
(ரஜினி சொல்லியது போல் விரதமும் 48நாள் கழிந்தன மந்த்ராலயம் சொன்று வந்த லாரன்ஸ் முதலில் ரஜினி சந்தித்து சொன்று வந்த அனுபவத்தை கூறினார் லாரன்ஸ்.)
ரஜினி :நீ முதலில் மருதுவரிடம் சென்று பார்
என்றார்
லாரன்ஸ் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்கள் மருத்துவர்களால்கைவிடப்பட்ட லாரன்ஸை கண்டு மருத்துவர்கள் ஆச்சரிய பட்டன லாரன்ஸிடம் மருத்துவர்கள் உங்களுக்கு பரிபூரணமாக குணமடைந்து விட்டீர்கள் ஆச்சரியம் அடைந்த லாரன்ஸ்
லாரன்ஸ்:ரஜினியை சந்தித்து எப்படி எனக்கு குணமானது என கேட்டார்
ரஜினி: இந்து மத பெருமைகள் எடுத்து சொல்ல லாரன்ஸ் தனது தாய் மதம் திரும்பினார் இந்து மதம் மாறிய பின்னர் தனது பெயரை ராகவன் எனவும் தனது இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமியை வணங்கி வருகிறார்.

சிவனைப் பற்றி அப்துல் கலாம்



இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், 

ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது.மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான " அகத்தியர் " நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். 

அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்..முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்..ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுவோம் !!

அஷ்டமியன்று ஏன் சுபகாரியங்கள் துவங்கக் கூடாது தெரியுமா?


மனிதர்களுக்கு சம்பளம்,லாபம்,கமிஷனாக செல்வ வளத்தை தருபவர்கள் அஷ்ட லட்சுமிகள்! இவர்கள் இப்படி 24 மணி நேரமும் பூமியில் உள்ள மனிதர்களுக்கு செல்வத்தை தந்து கொண்டே இருப்பதால்,இவர்களுடைய தெய்வீக சக்தி குறைகிறது;எனவே,இவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இவர்களுடைய கடவுளான ஸ்ரீஸ்ரீஸ்ரீசுவர்ணா ஆகர்ஷண பைரவரை வழிபடுகின்றனர்;
தேய்பிறை அஷ்டமி திதி முழுவதும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் அனைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்சன்னதிக்கு சூட்சுமமாக வருகை தருகின்றனர்;இதனால்,இந்த திதியில் (திதி என்பதே தேதியாக உருமாறியது) அஷ்ட லட்சுமிகளால் எந்த சுபகாரியத்திலும் கலந்து கொள்ள இயலாது;
இதே தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால்,ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் பைரவப் பெருமானால் தீரும்;அதே சமயம் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிட்டும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

சித்தர்களின் வீடு சதுரகிரி


சதுரகிரியில் சித்தர்கள் பலவிதமான உயிரினங்களின் வடிவில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;இங்கே சஞ்சீவி கரணி என்றொரு மூலிகை இருக்கிறது;இது வெட்டுண்ட மனித உடலை உடனே ஒட்ட வைக்கும்;வணிக நோக்கத்தில் இதைத் தேடிச் செல்பவர்களுக்கு கண்டுபிடிக்கமுடியாது;
கல்தாமரை என்று ஒரு மூலிகையினம் இருக்கிறது;இதன் வேரின் அடிப்பகுதியில் பூசணிக்காய் சைஸீல் ஒரு கிழங்கு இருக்கிறது;இதன் மீது நின்று கொண்டு பகலில் வானத்தைப் பார்த்தால்,பகலில் நட்சத்திரங்கள் தெரியும்;இதுவும் ஜோதிடத் தேடல் உள்ள புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே தென்படும்; அளவற்ற பூர்வபுண்ணியமும்,சித்தகுருவின் ஆசியும் உள்ளவர்களுக்கே கிடைக்கும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

இந்து மஹா சமுத்திரமும்,இந்து தர்மமும்=2


இந்து மஹா சமுத்திரம் எவ்வளவு அகலமானது தெரியுமா? எவ்வளவு ஆழமானது தெரியுமா?
கூகுள் எர்த்தில் ஒருமுறை அளந்து,அலைந்து பாருங்களேன்;அல்லது யூட்யூப் வீடியோக்களில் தேடிப்பாருங்களேன்;
இந்தியா வல்லரசாகிவிட்டால்,மேற்கு நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்று பயப்படுகின்றன;அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சியே தன்னை வல்லரசு நாடுகளாக்கிக்கொண்டுள்ள அந்த மேற்கு நாடுகள் கோட் சூட் அணிவது மட்டுமே நாகரீகம் என்று கருதுகின்றன;அதுவா உண்மையான நாகரீகம்?

இந்து மஹாசமுத்திரமும்,இந்து தர்மமும்=1


பிரான்ஸ் நாட்டு ஜோதிட மாமேதை நார்ஸ்டர்டாமஸ் இன்றும் உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார்;ஏனெனில்,அவர் எழுதிய நூற்றாண்டுகள் என்ற ஜோதிடப் புத்தகமே அவரை நிரந்தரப் புகழுக்கு இட்டுச் சென்றது;அதில் கி.பி.2100 வரை உலகில் நடக்க இருக்கும் முக்கியமான சம்பவங்களை விரிவாக,துல்லியமான வருடத்தோடு எழுதியிருக்கிறார்;
அதில் இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது அவரது பாதுகாவலர்களாலேயே கொல்லப்படுவது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,அப்துல்கலாம் ஜனாதிபதியாவது,மன்மோகன்சிங் பிரதமராவது,நரேந்திரமோடி பிரதமர் ஆவது முதலான பல விஷயங்களை சரியான வருடத்துடன் எழுதியிருக்கிறார்;அதில் மஹாசமுத்திரத்தின் பெயரைக் கொண்ட மதம் உலகம் முழுக்கப் பரவும்;பின்னர் மற்ற மதங்களை மனிதர்களே கைவிடுவர்;என்றும் எழுதியிருக்கிறார்;
அட்லாண்டிக் மஹா சமுத்திரம் இருக்கிறது;அட்லாண்டிக் மதம் இல்லை;பசிபிக் மஹா சமுத்திரம் இருக்கிறது;பசிபிக் மதம் இல்லை;ஆர்டிக் பெருங்கடல் இருக்கிறது;ஆர்டிக் மதம் இல்லை;இந்து மஹா சமுத்திரம் இருக்கிறது;இந்து மதமும் இருக்கிறது;
அவரால் எப்படி இப்படி ஒரு நூலை எழுத முடிந்தது? அவர் வாழ்ந்த கி.பி.1400 களில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்;காசியில் 3 ஆண்டுகள் தங்கியிருந்து ஜோதிடம் கற்றுக் கொண்டார்;அதனால் தான் இப்பேர்ப்பட்ட நூலை எழுத முடிந்தது;என்பது மேற்கு நாடுகளால் மறைக்கப்பட்ட ப்ளாட்டின உண்மை;

அம்பத்தூர் நகருக்கான ஆன்மீகப் பெயர்க் காரணம்



அகிலாண்ட கோடி நாயகியாம் அன்னை பராசக்தி,சர்வேஸ்வரனின் கட்டளைக்கிணங்க,ஒரு சமயம் தட்சாயணி என்னும் திருப்பெயரைத் தாங்கி தட்சனின் மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்;அப்போது ஈசனையே இதயத்தில் இருந்து ஈடிணையற்ற தவம் புரிந்து, சர்வேஸ்வரனையே மணந்து சர்வேஸ்வரியும் ஆனாள்;
அப்போது தாட்சாயணியின் தந்தை நடத்திய ஒரு மாபெரும் யாகத்திற்கு,சர்வேஸ்வரனுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பாததால்,தட்சன் நடத்திய யாகத்துக்குப் போகக்கூடாது என்று தடுத்த ஈசனின் கட்டளையையும் மீறி,தந்தையின் மீதுள்ள பாசத்தால் தாட்சாயணி யாகத்துக்குச் சென்றாள்;ஆனால்,கணவனின் சொல்லை மீறிச் சென்ற பராசக்தியை அங்கே கவனிப்பாரில்லாமல் போனது மட்டுமல்லாமல் ஏளனச் சொற்களுக்கும் ஆளானாள்;இதனால் மிகுந்த சினமும் அவமானமும் கொண்ட பராசக்தி யாக குண்டத்தில் விழுந்து மாண்டாள்;
அதையறிந்த சர்வேஸ்வரன் ஒடோடி வந்து,தாட்சாயணியின் உடலைத் தம் தோளின் மேல் கிடத்திக் கொண்டு கோர நர்த்தனம் ஆடி பிரபஞ்சம் எங்கும் நடை போட்டார்;அப்போது தேவியின் உடல்பாகங்கள் பூமியில் அங்கங்கே சிதறி 51 பாகங்களாக பாரத புண்ணிய பூமியில் விழுந்தன;பெரும்பாலும் கேரளா,வங்காளமாநிலத்தில் விழுந்திருக்கின்றன;
51 வது இடமாக தேவியின் உடற்பகுதி வீழ்ந்த இடமே ஐம்பத்தோராவது ஊர் என்று பெயர் பெற்றது;அதுவே நாளடைவில் அம்பத்தூர் ஆனது;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

நாமும் நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகமும்!!!


தலைப்பு சூப்பராக இருக்கிறதா? இந்தத் தலைப்பில் பத்து லட்சம் பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமே எழுதலாம்;சுமாராக ஆயிரம் பாகங்கள் எழுதலாம்;
தினமும் கணபதி காயத்ரி மந்திரம் ஜபித்துக் கொண்டே இருந்தால்,ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியன்று(விநாயகர் சதுர்த்தி) அதிகாலையில் விநாயகர் தரிசனம் கிட்டும்;அப்படி கிட்ட வேண்டும் எனில்,ஒரு நாளுக்கு பத்து மணி நேரம் வீதம் குறைந்தது 10 மாதங்கள் வரை தினமும் விநாயகர் காயத்ரி மந்திரத்தை ஜபித்திருக்க வேண்டும்;
விநாயகர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது;பயணிக்கும் போது,சாப்பிடும் போது,நடந்து செல்லும் போது,குளிக்கும் போது, _______போது என எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;எந்தவித கட்டுப்பாடும் கிடையாது;
வேறு எந்தக் கடவுளின் காயத்ரி மந்திரத்தையும் இப்படி சுதந்திரமாக ஜபிக்கக் கூடாது;மீறி ஜபித்தால் தடுமாறிவிழுவோம்;அல்லது அந்தக் கடவுளின் வாகனமாக இருக்கும் மிருகத்தால் தாக்கப்படுவோம்;
நாத்திகத்தால் பக்தியுணர்ச்சியுள்ளவர்கள்,கட்சித் தலைவன் மீது பக்தியுள்ளவர்களாக மாறத் துவங்கியுள்ளனர்;நாத்திகப் பிரச்சாரமே தமிழ்நாட்டில் முதன் முதலில் பரிகாரக் கோவில்கள் அதிகம் இருக்கும் கும்பகோணத்தில் இருந்துதான் துவக்கப்பட்டது என்பதை அறிவீர்களா?
எதையும் மறுப்பது புத்திசாலித்தனம் என்ற பொய்க்கருத்து பரப்பப் பட்டதால்,20,00,000 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகளை இரண்டு தலைமுறை தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடிந்திருக்கிறது;இதை மீட்க இனி 200 ஆண்டுகள் தேவைப்படும்;
கடவுள்களில் முருகக்கடவுளையும்,சதாசிவனையும் தரிசிப்பது மிக மிகக் கடினம்;ஏன் எனில்,இவர்கள் தரிசனம் கிட்டியவர்களுக்கு முக்தி உடனே கிட்டிவிடும்;வேறு எந்தக் கடவுளையும் தரிசிப்பதற்கு அதிகபட்சமாக 90 நாட்கள் போதுமானது;
முருக தரிசனம் அல்லது சதாசிவன் தரிசனம் கிட்டிட குறைந்த பட்சம் ஏழு பிறவிகள் நமது தெய்வீக முயற்சிகள் இருக்க வேண்டும்;அதிகபட்சம் 3000 பிறவிகளாக நாம் தெய்வீக முயற்சி எடுக்க வேண்டும்;
ஒவ்வொரு பிறவியிலும் ஈசனை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்;அல்லது முருக தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தால் அடுத்த சில பிறவிகளுக்குப் பிறகு அதற்குரிய வழிமுறை நம்மைத் தேடிவரும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

டாவின்ஸி கோடு என்ற திரைப்படமும்,புத்தகமும்



சில ஆண்டுகளுக்கு முன்பு டாவின்ஸி கோடு என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் இருந்து வெளியானது;தமிழ் டப்பிங்கும் திரையிடப்பட்டது;அதில் சொல்லப்பட்டுள்ளதை விடவும்,அதிகமான சூட்சுமங்கள் இதே பெயரில் வெளிவந்திருக்கும் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன;ஏராளமான சின்னங்கள் மேல்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன;
அதே சின்னங்கள் நமது இந்திய நாட்டிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்தன என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்;இதன் மூலம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது உண்மை;ஒரு காலத்தில் பல நூற்றாண்டு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் ஒரே சமயம்(மதம்) இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இந்த நூலில் இருக்கின்றன;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

பாகுபலி படத்தில் வராகி வழிபாடு பற்றிய காட்சிகள்!

இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி சாதனையாக மாறியிருக்கிறது;அதுதான் பாகுபலி திரைப்படம்!
இடைவேளைக்கு முன்பாக வரும் காட்சியிலும்,இடைவெளிக்குப் பிறகு வரும் போர்க்காட்சியிலும் மகா சேனா,மகா சேனா என்ற கோஷங்களை கேட்கலாம்;இந்தப் பெயர் வராகியின் 1008 பெயர்களில் முக்கியமான பெயர் ஆகும்;
போருக்கு முன் பலி கொடுப்பதாக காட்சி அமைத்துள்ளனர்;அந்த பெண் தெய்வம் வராகியேதான்!
வராகியின் 64 வடிவங்களில் போரில் வெற்றியைத் தரும் அன்னையே(வராகி வடிவங்களில் ஒன்று) படத்தில் காட்டப்படும் அன்னை!


வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

அளவற்ற புண்ணியமும்,அளவற்ற பாவங்களும்




நாம் இப்பிறவியில் செய்யும் ஒவ்வொரு பாவச் செயலும்,புண்ணியச் செயலும் நமது ஜாதகத்தில் லக்னத்திற்கு 10 ஆம் இடத்தில் வரவு வைக்கப்படுகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது;இதை அப்படியே ஆராய்ந்தால்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ,புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்றே அர்த்தம்;
எப்படி என்பதை கொஞ்சம் பார்ப்போமா?
இப்பிறவியில் ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறப்பவர்,அடுத்த ஜன்மத்தில் சிம்மத்திற்கு பத்தாம் இடமான ரிஷப லக்னத்தில் பிறப்பார்;மூன்றாம் பிறவியில் அவர் கும்பலக்னத்தில் பிறப்பார்;நான்காம் பிறவியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பார்;ஐந்தாம் பிறவியில் மீண்டும் சிம்ம லக்னத்தில் பிறப்பார்;
அளவற்ற புண்ணியம் செய்தவர்களுக்கு,கோடிக்கணக்கில் சொத்துக்களும்,சகல சுகபோகங்களும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்;அதேசமயம்,பாவம் செய்யத் தூண்டும் செல்வச் செருக்கும்;தன்னால் பணத்தால் எதையும் வாங்க முடியும் என்ற மமதையும் கூடவே உருவாகும்;
அளவற்ற பாவம் செய்தவர்கள் மிகவும் வறிய நிலையில் பிறந்து,தினசரி ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும்;
அளவற்ற புண்ணியம் செய்தாலும் சரி;அளவற்ற பாவம் செய்தாலும் சரி;புனரபி மரணம்;புனரபி ஜனனம் தான் அதாவது மீண்டும் மரணம்,மீண்டும் பிறப்பு என்ற பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கிக்கொள்வதுதான்;
இதில் இருந்து மீளும் வித்தையை முதலில் கற்றவர்களே சித்தர்கள் ஆவர்;
பாவமும் செய்யாமல்,புண்ணியம் செய்யாமல் நமது பாவ புண்ணியக் கணக்கு ஜீரோ பேலன்ஸ் ஆகும் போது நாம் சித்தராகிவிடுவோம்;அல்லது முக்தி அடைந்து மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறக்காத சூழ்நிலையை உருவாகிவிடும்;மனிதராக பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய இறுதி ஆன்மீக லட்சியமே இதுதான்;இதை உணர சில மனிதர்களுக்கு அடுத்த பத்து பிறவிகள் ஆகும்;பல மனித ஜன்மங்களுக்கு 30,000 மனித பிறவிகள் ஆகிவிடும்;
பிறப்பு,இறப்புச் சுழலில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன;அதில் சுலபமானது அருகில் இருக்கும் சிவாலயம் சென்று ஏதாவது ஒரு சிவமந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை அதிகபட்சம் 90 நிமிடங்கள் ஜபிப்பது ஆகும்;
சிவமந்திரங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன;ஒம் நமச்சிவாய,ஒம்சிவாயசிவ,ஒம்சிவசிவா,ஒம் நமசிவ,ஒம்நமசிவாயநம,ஒம்சிவசிவஒம்,ஒம்வசியநம என சொல்லிக் கொண்டே போகலாம்;
சித்தர்களின் மந்திரக்கலை என்று ஒருபுத்தகம் நமது ஊரில் கிடைக்கிறது;அதில் சுமாராக 1000 சிவமந்திரங்களும்,அதன் விளக்கங்களும் விவரிக்கப்பட்டுள்ளன;
ஒரு நாளுக்கு 108 முறை எதாவது ஒரு சிவமந்திரம்,பழமையான சிவாலயத்தினுள் ஜபிக்க வேண்டும்;அல்லது ஒன்றரை மணி நேரம் ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபிக்க வேண்டும்;இப்படி குறைந்தது 25 ஆண்டுகள் ஒரு நாள் விடாமல் ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்தால் இப்பிறவியின் முடிவிலோ அல்லது அடுத்த பிறவியிலோ நமக்கு என்று ஒரு உண்மையான குரு கிடைப்பார்;
எட்வர்டு கெய்ஸி என்ற பெயரை இணையத்தில் ஆங்கிலத்தில் தேடினால் அவரது ஆராய்ச்சி முடிவுகள் புத்தகங்களாகவும்,வலைப்பூக்களாகவும்,தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்திருக்கின்றன;தைமூர் கேள்விப்பட்டுள்ளீர்களா? வரலாற்றில் பல நாடுகளைச் சூறையாடியவன்;இவனது படைத்தளபதி மறுபிறவி எடுத்து ஐரோப்பாவில் பிறந்தான்;இவன் பிறந்தது முதல் இறக்கும் வரை உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போலவே வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்ததாம்;இவனை எட்வர்டு கெய்ஸியிடம் அழைத்து வந்தார்கள் இவனது உறவினர்கள்;
அவர்,இவனை ஹிப்னாடிஸம் செய்து இவனது முற்பிறவிகளைப் பற்றி அறிந்து கொண்டார்;அதில்தான் இவன் தைமூரின் படைத்தளபதியாக இருந்து பலரை தனது வாள்வீச்சினால் கொன்றிருக்கிறான்;இவனால் எவ்வளவு ஆக்ரோஷமாக கொல்லப்பட்டார்களோ,அவர்களின் அத்தனை வேதனையான மரணங்களும், இவனது மறுபிறப்பில் அதே வேதனையை அனுபவிக்க வைத்திருக்கிறது;
ஏதோ நமது முற்பிறப்பு பூர்வ புண்ணியத்தால் இங்கே தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறோம்;யாரையும் துன்புறுத்த வேண்டாம்;யாரையும் நோகடிக்க வேண்டாம்;யாரையும் சித்திரவதைப் படுத்த வேண்டாம்;முடிந்தவரையிலும் பிறருக்கு நன்மை செய்யப் பார்ப்பது நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிசெய்யும்;
நாம் சித்தராவது இருக்கட்டும்;நாமும் நமது குடும்பத்தாரும் நிம்மதியாக வாழ வழியைப் பார்ப்பது உத்தமம்;
அதற்குரிய வழிமுறைகளைத்தான் எமது எழுத்துக்கள் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றன;சிவ வழிபாடு அல்லது நமது அனைத்து கர்மவினைகளையும் நீக்கி சிவத்துடன் கலக்கச் செய்யும் பைரவ வழிபாடு அல்லது வராகி வழிபாடு ஒன்றைப் பின்பற்றத் துவங்குவது அவசியம்;அவசரம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!