Saturday, September 26, 2009

கடவுளை எப்படி நேரில் தரிசிப்பது?



நம் ஒவ்வொருவராலும் கடவுளை தரிசிக்க முடியும்.அதற்கு முதலில் நாம் மனரீதியாக தயாராக வேண்டும்.அவ்வளவே!

மனிதன் இறந்த பிறகு சூட்சும சரீரம் அதாவது நுண்ணிய உடல் வேறு அதிர்வு நிலை கொண்டதாக ஆகி விடுவதால் நாம் அவர்களைப் பார்க்கவோ தொடர்புகொள்ளவோ முடிவதில்லை.

இதே போலத் தான் தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள்,பூத கணங்கள்,சிவகணங்கள் என ஒவ்வொரு உலகத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு அதிர்வு நிலையில் செயல்பட்டுவருகின்றனர்.அவர்களின் உலகமே நமது மனித புலன்களுக்கு எட்டாத அதிர்வில் இயங்கி வருகின்றது.

உருப்பெருக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப் வைத்துத்தான் கிருமிகள்,பாக்டீரியாக்களை நம்மால் பார்க்கமுடிகின்றது.
தொலைநோக்கி எனப்படும் டெலஸ்கோப்பை வைத்து நாம் இரவு நேர வானத்தைப்பார்த்தால் நாம் எதையெல்லாம் நட்சத்திரங்கள் என வெறுங்கண்ணால் பார்த்தோமோ,அவை கிரகங்களாகத் தெரியும்.
புதன் கிரகம் பச்சைக்கலரிலும்,குருக்கிரகம் மஞ்சள் கலரிலும் தெரியும்.

அதேபோல, யோக சக்தியால் மனதை வெவ்வேறு நிலைகளில் இயக்குவதன் மூலம் வெவ்வேறு அதிர்வு நிலைகளைப் பெற்று பிரபஞ்சத்தில் அதே அதிர்வு நிலையில் இருக்கும் உலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.அங்கு நிகழ்வதைக் காணவும்,உணரவும் முடியும்.

யோகிகள் தியானம் மற்றும் சமாதி நிலைகளில் தங்கள் மனத்தை உயர்நிலைகளில் இயக்கும் வல்லமை பெற்றவர்கள்.
இதில் மிக மிக மிக உயர்ந்த நிலைப்பாடுதான் நாம் விரும்பும் கடவுளின் உலகங்கள்.
இந்த வலைப்பூவில் முதல் தகவலை மீண்டும் தேடிப்பார்த்தால் கணபதிஎனப்படும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை 4,00,000 தடவை ஜபித்தால் விநாயகரை நேரில் தரிசிக்க முடியும் என எழுதியிருப்பேன்.
அப்படியெனில்,அந்த மந்திர உரு( திரும்ப திரும்ப இடைவிடாமல் ஜபித்தல்) நம்மை விநாயகரின் உயர் அதிர்வு உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடும்.

நான் கேள்விப்பட்டவரையில், விநாயகரை மட்டுமே சுலபமாக தரிசிக்க முடியும்.
சிவபெருமானில் சதாசிவன் என்ற ஒரு சிவபெருமான் இருக்கிறார்.அவரே ஆதிசிவன் ஆவார்.அவரை தரிசிக்க வேண்டுமானால்,நாம் இதுவரை 27,000 பூமி வருடங்கள் தவம் செய்திருக்க வேண்டுமாம்.
சக்தியில் மனோன்மணி என்ற பெண் தெய்வம் இருக்கிறாள்.அவள் 10 வயதுச் சிறுமி போன்ற தோற்றத்துடன் இருக்கிறாளாம்.அவளைத் தரிசிப்பதுதான் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் மிகப்பிரம்மாண்டமான சாதனை.
அவளை தரிசிப்பதன் வழிமுறைதான் நமது ஆன்மீகக் கடலில் குறிப்பிடப்படும் வாலைப்பூஜை!!!

பூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை



சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை.ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது.இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது.16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர்.

இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர்.

“கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர்.
‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது.


ஆதாரம்:புத சங்கேத்,லக்னோ 25.12.2007

இந்தியா எப்போது வல்லரசாகும்?


ன்னி சனிப்பெயர்ச்சி;உலக அரங்கில் என்ன நடக்கும்?
ஜோதிடரீதியான கணிப்புகளின் தொகுப்பு

நமது நாடான பாரதத்தின் சுதந்திர ராசி கடகம்.
நம்ம பங்காளி அமெரிக்காவின் சுதந்திர ராசி கும்பம்.
நம்ம பக்கத்து வீடு இலங்கையின் சுதந்திர ராசி விருச்சிகம்.

நம்முடைய நாட்டுக்கு ஏழரைச் சனி இன்று அடியோடு விலகி விட்டது.
இதுவரை நடந்தது என்ன?
அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நம்முடைய மூச்சை நெரிப்பதில் தீவிரமாக இருந்தது இந்த உலகம்.
நம்ம இன்னொரு பங்காளி சீனா ரொம்பத் தான் சேட்டை செய்து வருகிறது.நமது நாட்டின் எல்லைக்குள் சுமார் 2கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவி, நமது நிலப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் சீனா எழுதி வைத்துவிட்டுச் செல்கிறது.சீன ட்ரக்குகள் நமது நாட்டின் எல்லைப்பகுதியில் எல்லைதாண்டி உள்ளே வந்து ஊர் சுற்றிவிட்டு போய்க்கொண்டிருந்தன.
பாகிஸ்தான் வழக்கம் போல தீவிரவாதத்தை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஏகப்பட்ட ஒப்பந்தங்களை ரெடி செய்து நம் தோள் மீது ஏறி உட்காரவும்,நிரந்தரமாகவே இருக்கவும் வழிகளை ஆராய்ந்து அத்தனையையும் செய்யத் தயாராக விட்டது.
குட்டித்தீவு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மனிதத்தன்மையுள்ள எவராலும் ஜீரணிக்கவே முடியாமல் இருந்து வருகின்றன.
லிபியா அதிபர் சீனாவுக்கு ஆதரவாக ஐ.நா.சபையில் நம்மையும்,நம்முடைய மதிப்பையும் குறைக்கும்விதமாக நேற்றுத்தான் பேசினார்.
நம் நாட்டில் அரசியலில் மட்டும் முதுகெலும்பற்ற தன்மை நிலவுகிறது.அதன் தொடர்விளைவால்,விலைவாசி பன்றிகாய்ச்சல் வேகத்தில் உயர்ந்துவருகிறது;மக்கள் பாவம் கடும் உழைப்பு உழைத்தே எந்த கஷ்டத்துக்கும் தன்னை பழக்கப்படுத்திவிட்டனர்.

இந்நிலையில், 26.9.2009 ஆன இன்று சனிபகவான் சிம்மராசியை விட்டு கன்னிராசிக்குச் செல்கிறார்.ஆக,கடக ராசிக்காரர்களுக்கு முழு நிம்மதி ஆரம்பம்.
கடகராசிக்காரர்கள் இன்று முதல் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவார்கள்.
நம் நாட்டில் நவம்பர் 2009 மாதத்தில் தேசபக்தி நிறைந்த ஒரு மாவீரன் பிரபலமடைவான்.அவனை அரசியல் நயவஞ்சகத்தையும் மீறி எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரித்தே ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகப்போகிறது.

அந்த மாவீரன் வடபாரதத்தில் பிறந்து,தென்பாரதத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சியை முடித்துவிட்டான்.நமது தேசத்தின் சகல சாபக்கேடுகளையும் சர்வநாசமாக்கப்போகிறான்.சீனாவுக்கு நாம் மதிப்பு புரியும்.அதற்குள் அது தனது எண்ணங்களின் வலிமையை அனுபவிக்கும்.

இந்துமதம் மீண்டும் புது எழுச்சி பெறப்போகிறது.அது வெறும் எழுச்சி அல்ல; பிள்ளையார் பால் குடித்த கதை போல அல்லாமல் சுனாமி போல பொங்கியெழுந்து வரப்போகிறது.
அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்துதர்மத்துக்கு செய்த செய்துவரும் கேடுகள் அனைத்தும் திடீரென வெளிவரப்போகிறது.இவ்வளவு அக்கிரம் நிறைந்தவர்களையா நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம்?என ஒட்டு மொத்த இந்துதேச மக்களும்,நம் நாட்டின் முஸ்லீம் மக்களும்,சீக்கிய மக்களும் திடீர் விழிப்புணர்ச்சி பெறுவார்கள்.

அயோத்தியில் இராமர் கோவில் கட்டும்வேலை ஆரம்பமாகும்.அரசியல் ட்ரெண்டு அடியோடு மாறிப்போகும்.

அந்த தேசபக்தி நிறைந்த மாவீரன் கி.பி.2011 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டின் உயர்பதவியைக் கைப்பற்றுவான்.அவன் சர்வாதிகாரியாக மாறுவான்.இதன் விளைவாக அரசியல் ரீதியாக நமது இன்றைய தேசியத் தலைவர்கள் செய்த அனைத்து தவறுகளும் உடனே சரி செய்யப்படும்.
தனது வம்சாவளி மக்களைக்கூட காப்பாற்றாமல் இருந்தது எவ்வளவு பெரியதவறு? என்பதை டிசம்பர் 2009க்குள்ளாகவே நமது தேசியத்தலைவர்கள் உணருவார்கள்.செய்த தவறுக்குப் பரிகாரம் தேடத்துவங்குவார்கள்.சுயச்சார்பின் அடையாளமாக மறைந்து வாழ்ந்த மாவீரன் சுயமாகவேதனது மக்களையும்,நாட்டையும் காப்பாற்றுவான்.அம்மாவீரனுக்கு நமது பாரதம் வெளிப்படையாகவும்,நேரடியாகவும் உதவிசெய்யும்.

திருக்கையிலாய மலை திரும்பவும் நமது நாட்டின் அங்கமாகும்.அது எப்போதும் நமது நாட்டின் மணிமகுடமாக இருக்கிறது. உலக சமாதானப்புறாவின் சமாதான மனப்பான்மையால் இதுவரை ஆக்கிரமிப்பில் இருக்கிறது.நம்மை உலகத்தின் தலைமையை ஏற்கச் சொல்லி இன்றைய வல்லரசு நாடுகள் கெஞ்சத் துவங்கும்.அதற்கான தகுதியை நாம் கி.பி.2002 ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.

அமெரிக்கா கும்பராசி,சதய நட்சத்திரம் அல்லவா? அந்த
நாட்டுக்கு அஷ்டமச்சனி ஆரம்பமாகிறது.ஏழரைச் சனி தரும் பலனை வெறும் இரண்டே வருடங்களில் தண்டனையாக அமெரிக்கா அனுபவிக்கும்.இதுவரை 125 வங்கிகள் தான் திவால் ஆகின.இனி.. .ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பிறந்த ராசி கன்னி.பிறந்த நட்சத்திரம் அஸ்தம்.அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அதன் தலையில் சனிபகவான் உட்காருகிறார்.இந்த உலகத்திலேயே தன்னைப் பற்றி மட்டுமே ஒரு நாளுக்கு 25 மணி நேரம் கவலைப்படும் ஒரே ஆத்மா அது அஸ்த நட்சத்திரக்காரர்கள் மட்டுமே!

நமது நாட்டின் சுயகவுரவத்தை விட தனது சுயநலமே பெரிது என காங்கிரஸ் இருந்தது இதுவரை நம்பி வந்தது.அது எப்பேர்ப்பட்ட தவறு என்பதை ஜன்மச்சனி பகவான் காங்கிரஸ் கட்சிக்கு புரிய வைப்பார்.

ஆக, உலகம் அமைதியை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நமது சனாதன தர்மம் ஐந்து கண்டங்களிலும் அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் பரவி இந்த பூமியே இந்து பூமியாக மாறத்துவங்கும்.
சுதந்திரத்தின் அருமையையும், வ.வே.சிதம்பரம் பிள்ளை,புலித்தேவன்,கோபாலகிருஷ்ணகோகலே,பாரதியார்,அரவிந்தர்,ஜெய்ஹிந்த் செண்பகராமன்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,மகாத்மா காந்திஜி,மாவீரன் வாஞ்சிநாதன்,வ.வே.சுப்பிரமணிய அய்யர்,கர்ம வீரர் காமராஜர்,பகத்சிங்,வினாயக தாமோதர சாவர்க்கர்,அன்னிபெசன் ட் அம்மையார்,சுவாமி விவேகானந்தர்,சுவாமி தயானந்த சரஸ்வதி,பங்கிம் சந்திர சட்டர்ஜி,திருப்பூர் குமரன் என பல லட்சக்கணக்கான இந்தியசுதந்திரப்போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தம்,செய்த தியாகங்கள், இழந்த குடும்பம்,சொத்துக்கள் அனைத்தும் அலைகடலென அனைத்து இந்துதேச மக்களுக்கும் புரியத்துவங்கும்.

யாராக இருந்தாலும் கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவன், ஒரு போதும் ஒரு நாளும் உருப்படப்போவதில்லை.

பிரபலமான குஷ்வந்த் சிங்ஜோக் இது :
அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இன்னும் இருக்கிறது?

ஏன் எனில், அது உலகத்தில் உள்ள எல்லா நாட்டு உள் விவகாரங்களிலும் தலையிட்டுக்கொண்டே இருக்கிறது.அதனால்,அது உலக வல்லரசாக இன்னும் இருக்கிறது.

சரி! எல்லாவித வளங்களும்,திறமைகளும், சந்தர்ப்பங்களும் அமைந்தும் ஏன் இந்தியா இன்னும் வல்லரசாகவில்லை?

ஏன் எனில், இந்தியா தனது உள் நாட்டு விவகாரங்களில் கூட சிறிதும் (காங்கிரஸ் கட்சியை நினைவூட்டுகிறதா?) தலையிடுவதில்லை.

இன்று முதல் இந்த ஜோக் பொய்யாக்கப்படும்.
இந்த பரந்த பூமியில் இறைவனால் நேரடியாக ஆசிர்வாதிக்கப்பட்ட நாடு என ஒன்று இருக்குமானால் அது நமது பாரதம் மட்டுமே!

சரி! நமது நாடு வல்லரசாக நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன?

அவரவர் தனது வேலையை ஒவ்வொரு நாளும் இன்னும் பொறுப்புணர்ச்சியோடு செய்தால் போதும்.அதன் செயல் தொடர்ச்சியால் இந்த உலகம் இருக்கும் வரை நமது பாரதம் மட்டுமே வல்லரசாக இருக்கும்.

ஜெய் ஹிந்த்!

அடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009


இதுவரை மகர ராசியில் ராகு பகவானும்,கடக ராசியில் கேது பகவானும் இருந்தனர்.அவர்கள் கடந்த ஒன்றைரை வருடமாக இந்த ராசிகளை மெல்ல மெல்ல நகர்ந்து,27.10.2009 அன்று ராசிமண்டலத்தில் மாற்றமடைய இருக்கின்றனர்.

ராகு பகவான் 27.10.2009 முதல் தனுசு ராசிக்குள்ளும், அதே நாள் அதே நேரத்தில் கேது பகவான் மிதுன ராசிக்குள்ளும் நுழைகின்றனர்.

ராசி மண்டலத்தில் மிக முக்கிய கேந்திரமான ராசிகளை அடுத்த ஒன்றைரை வருடங்கள் கடக்க இருக்கின்றனர்.தனுசு ராசியில் கேது பகவானின் நட்சத்திரமான மூலமும்,மிதுன ராசியில் ராகு பகவானின் நட்சத்திரமான திருவாதிரையும் அமைந்திருக்கின்றன.

அதே சமயம்,26.9.2009 அன்று இன்னொரு கேந்திரமான முக்கியராசிக்கு தர்ம தேவதையான சனி பகவான் வந்துவிட்டார்.அவர் அங்கு 15.11.2011 வரை இருக்கப்போகிறார்.அதுபோக,டிசம்பர் 2009 ஆம் மாதத்தில் நீசத்தில் இருந்த குருபகவான் மகரத்தை விட்டு கும்பராசிக்குச் செல்லப்போகிறார்.கும்பத்தில் வெறும் மூன்றரை மாதம் மட்டும் இருந்துவிட்டு,அதிசாரம் பெற்று தனது இன்னொரு ஆட்சி வீடான மீனத்துக்குச் செல்லப்போகிறார்.இதனால்,கி.பி.2011 ஆம் ஆண்டில் மட்டும் குருபகவான் ராசிமண்டலத்தில் இறுதியான கேந்திரமான மீனத்துக்கு வரப்போகிறார்.
இந்த கேந்திரங்களில் பெரிய மற்றும் முக்கிய கிரகங்கள் அமர்வு உலகை ஆளும் மனிதர்கள் பிறப்பதற்குக் காரணமாக அமையப்போகின்றன.

அதே சமயம், ராகு கோதண்ட ராகுவாகப்போகிறார்.தனுசு ராசியைத் தான் கோதண்டம் என ஜோதிடத்தை உரைக்கும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன.இதனால்,ஏராளமான புதிய செல்வந்தர்கள் இந்த பூமியில் உருவாகப்போகிறார்கள்.அதே சமயம்,புத்திக்காரனாகிய புதனின் வீட்டில் ஞான அதிபதி கேதுவின் அமர்வு பல புதிய ஆன்மீக வழிமுறைகளையும்,புதிய மதங்களும் இந்த பூமியில் தோன்றக்காரணமாகின்றன.

தனி மனித ரீதியில், தனுசு ராசி மற்றும் மிதுன ராசியினர் தேவையற்ற அவமானத்தையோ அல்லது அனாவசியமான குழப்பத்தையோ உருவாக்கக் காரணமாகப்போகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் இறைவழிபாட்டை தினமும் செய்வதால் ஓரளவு தாமும்நிம்மதியை அடையவாய்ப்பிருக்கிறது.

வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!!!

KUBERA HOROSCOPE



குபேர ஜாதகம் என்பது இதுதான்.இந்த குபேரன் ஜாதகத்தை வைரக்கல்லைப்போல வழிபட்டால்,அது நம்மை வளப்படுத்தும்.இதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.உங்கள்பூஜை அறையில் வைத்து வழிபடவும்.
புகைப்பட ஆதாரம்:www.sathish777.blogspot.com

Friday, September 25, 2009

காயத்ரி மந்திரத்தின் மகிமைகளை உணர வைத்த பத்திரகாளி


ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் நூலகம் சென்றேன்.அங்கு சக்திவிகடனை சும்மா ஒரு புரட்டு புரட்டினேன்.அதில்,காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் என ஒரு பக்கக்கட்டுரை வெளியாகியிருந்தது.

வசிஷ்டரிடம் சவால் விட்டு ராஜரிஷிப்பட்டம் பெற்ற க்ஷத்திரியர் விஸ்வாமித்திரர்.அவரால் இந்த பூமிக்குக் கிடைத்ததுதான் காயத்ரி மந்திரம்.
காயத்ரிதேவி ஐந்துமுகங்களுடன் சூரிய மண்டலத்தின் மத்தியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாள்.உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தும் ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்தே தோன்றின.
புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிடும் சக்தி காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.எல்லாவிதமான சமஸ்க்ருத மந்திரங்களுக்கும்,ஒவ்வொரு கடவுள்களின் காயத்ரி மந்திரத்துக்கும் சக்தி தருவது காயத்ரி மந்திரமே.

இந்த காயத்ரி மந்திரத்தை வீட்டில் ஜபித்தாலே அளவற்ற புண்ணியம் உண்டாகும்.
கடலோரம்,அரசமரத்தடியில், பசுக்கள் இருக்கும் கொட்டகையில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபித்தால் அதன் பலன்கள் ஏராளம்.
ஏதாவது ஒரு அம்பாள் சன்னதியில் ஜபித்தால்(மனதுக்குள் சொன்னால்)அதனால் கிடைக்கும் பலன்களை கூறவே ஒரு வருடம் ஆகும்.எல்லா அம்பாளும் அன்னை காயத்ரிதேவியின் அம்சமாகும்.
அன்று மாலை 4.30 மணிக்கே நான் பத்திரகாளியின் கோவிலுக்கு வந்துவிட்டேன்.பலருக்கு அன்று ஜாதகம் சொல்லவருவதாகக்கூறியிருந்தாலும்,அதில் அக்கறை வரவில்லை.இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதைபரீட்சித்துப் பார்ப்போம் என நினைத்தேன்.

மாலைமணி 4.35 முதல் 5.20 வரை எனது அன்னை பத்திரகாளியின் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு, மனதுக்குள் ஒரு முறை கணபதியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துவிட்டு, காயத்ரி மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினேன்.

சுமார் 5.00 மணிக்கு ஒரு கதர் சட்டையணிந்த 40 வயது பெரியவர் வந்தார்.முகத்தில் பரபரப்பு தெரிந்தது.பூசாரியைத் தேடினார்.கோவிலில் யாருமில்லை.
பொத்தாம் பொதுவாக பூசாரியை எங்கே?ன்னு கேட்டார்.நான்பதில் சொல்லவில்லை.கோவிலை விட்டு வெளியேறினார்.சில நிமிடங்களில் திரும்பவந்தார்.இரண்டு பெண்மணிகள் வந்திருந்தனர்.வந்து வள வளவென பேச ஆரம்பித்தனர்.
அந்த 40 வயது கதர்ச்சட்டை அவர்களிடம் பூசாரியை எங்கேம்மா?ன்னு கேட்டார்.ஒரு பெண்மணி , “அவரு தைலாகுளத்துல ஒரு காளிகோவில் கும்பாபிஷேகம்.அங்கே போயிருக்காருய்யா”எனபதிலை வீசி விட்டு அவர்களுக்குள் அரட்டையில் மூழ்கினர்.அந்நேரம் பார்த்து சில இளைஞர்கள் கோவிலுக்குள் வந்தனர்.அவர்களிடம் அவர், ‘தம்பி, தைலாகுளம் எப்பிடிப்போகணும்?’னு கேட்டார்.அந்த இளைஞர்களோ, ‘தெரியாது’ எனக்கூறினர்.
இதை அனைத்தையும் வேடிக்கைபார்த்துக்கொண்டே, நான் மனதுக்குள் காயத்ரி மந்திரம் ஜபித்துக்கொண்டே இருந்தேன்.
திடீரென,அந்த 40 வயது ஜிப்பா என்னிடம் வந்து, ‘ உங்களுக்கு தைலாகுளம் எங்கேயிருக்குன்னு தெரியுமா?’ எனக் கேட்டார்.நான் தெரியும் என்ற அர்த்தத்தில் தலையசைத்தேன்.
உடனே,அவர் என்னிடம் . ‘தம்பி,ப்ளீஸ், என்னுடன் வாங்களேன்.நான் உடனே கோயம்புத்தூர் கிளம்பணும்.அம்மாவைப் பார்த்துட்டுக்கிளம்பணும்.பூசாரி வந்தால்தான் (பத்திரகாளி)அம்மாவைப் பார்க்க முடியும்’எனக் கெஞ்ச நானும் அரை மனதோடு காயத்ரி மந்திர ஜபத்தை நிறுத்தி விட்டு எழுந்தேன்.அவர் வாங்க போகலாம் வெளியே கார் இருக்கு வாங்க என்றவாறு கோவிலை விட்டு பதட்டம் நீங்காமல் வெளியேறினார்.
நானும் வெளியே சென்றேன்.
அது ஒரு வெள்ளைநிற ஆம்னி வண்டி!
வண்டியில் ஏறி உட்கார்ந்ததும்,அந்த 40 வயது ஜிப்பா தன் டிரைவரிடம், “இந்த தம்பி சொல்ற ரூட்ல போப்பா” என்றார்.நான், “சிவகாசி ரோட்டுல 3 கி.மீ.தூரத்துல இருக்குது தைலாகுளம்”என்றேன்.
‘சீக்கிரம் போப்பா”என டிரைவரை விரட்டினார்.
2 கி.மீ தூரம் வரை அவரது தொழிலில் அவர் ஏமாந்த கதைகளைச் சொன்னார்.நான் அவரது முகத்தைப் பார்த்தபடி, வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன்.ஆனால்,மனதில் காயத்ரி மந்திர ஜபம் ஜபித்துக்கொண்டே இருந்தேன்.இடையிடையே, அந்த ஜபம் தடைபடவும் செய்தது.

2 வது கி.மீட்டரைத் தாண்டியதும்,பத்திரகாளிகோவில் பூசாரியும் கூடவே இன்னொருவரும் வந்ததை அந்த 40 வயது ஜிப்பா கவனிக்கவில்லை.நான் அதைக் கவனித்து, ‘இதோ! பூசாரி வர்றாரு’ என்றேன்.அதற்குள் வண்டி அவர்களைக் கடந்து 300 மீட்டர்வரை போய்விட்டது.
உடனே,வண்டி அரைவட்டமடித்து,அந்த பூசாரியின் அருகில் போய் நின்றது.
பூசாரியும் உடனிருந்த ஆளும் திடுக்கிட்டனர்.40வயது ஜிப்பா வண்டியை விட்டு இறங்கி, “சாமி,உங்களைத் தான் தேடி வந்தேன்.வாங்க கோவிலுக்குப் போகலாம்”என பதட்டத்தோடு கூற இருவரும் வண்டியில் ஏறினர்.ஏறியதும் பூசாரிக்கு மேலும் ஆச்சரியம்.
‘அட! நீங்க தானா?அம்மா நீ நடக்க வேண்டாம்னுதான் வண்டி அனுப்பியிருக்கா போல’ என பேசியவாறு இருக்க, வண்டி கோயிலை நோக்கிப் பறந்தது.

கோவில்வாசலில் நாங்கள் இறங்கியதும்,தெருவே கூடிவிட்டது.பூசாரி வண்டியிலிருந்து இறங்குகிறாரே என அந்த தெருமக்களுக்கு ஆச்சரியம்!என்னைப் பார்த்தும் தான்.கோவிலுக்குள் நுழைந்ததும் மணியைப்பார்த்தேன்.
மணி சரியாக மாலை 6.00!
MORE DETAILS AT www.global-guardian-angel.blogspot.com

I HAVE BEEN GETTING MORE BENEFITS FROM MY FIRST GAYATHRI MANTHIRA JEBAM.TILL NOW,MY LIFE HAS BEEN CHANGING EASILY,PEACEFULLY AND LOVE FULLY.
GAYATHRI MANTHIRAM'S POWER IS EXPRESSING FROM FIRST JEBAM.

Thursday, September 24, 2009

EARN THROUGH INTERNET...INCLUDING BLOG

இணையத்தில் பணம் சம்பாதிக்க!
Forum » பிகேபி வலைப்பதிவு / உங்கள் கருத்துக்கள் » இணையத்தில் பணம் சம்பாதிக்க!

இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த இணைய தளம்
unfold all | fold all | +more options
fold
இணையத்தில் பணம் சம்பாதிக்க!
raafy 28 Jun 2009, 15:26 GMT+0530
அன்பு நண்பர்களே!
இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த தளம் இதோ,

http://www.rupeemail.in/rupeemail/invite.do?in=MzUxMzUyJSMlNlREUzJzb05JQkx1UldVT2lndzduQ1FLaA==

இதில் உங்கள் ஈமெயில் -ஐ பதிவு செய்து கொண்டு வேலையை தொடங்குங்கள்,இவர்கள் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் சிறிது பணம் தன ஆனால் நம்பிகையான ஒரு தளம் ,காசோலை உங்கள் வீடு தேடி வரும்.

"யாம் பெற்ற பயன்,இவ்வையகமும் பெறட்டும்"

reply | options

fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!
tamilnenjam (guest) 29 Jun 2009, 11:09 GMT+0530
Earning money is this much easy aa? oops!. Not interested. Earning Money needs inspiration, respiration, sweating.. (:

reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!
shafiudeen (guest) 20 Sep 2009, 16:28 GMT+0530
ஹாய். தமிழ் அன்பர்களே! இணையத்தில் பணம் சம்பாதிக்க சில வெப்சைட்களை தேர்ந்து எடுத்துள்ளேன். முதலில் அலர்ட்பே, பேபால் அக்கவுண்ட் பதிவு செய்துக்கொண்டு மற்ற இணையத்தளங்களை பதிவு செய்து விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதியுங்கள்
http://www.shafinew.blogspot.com

reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-கைவிடுங்கள் இந்தப் போக்கை
முருகேசன் (guest) 21 Sep 2009, 10:03 GMT+0530
வணக்கம்
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை.
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், ஒரு நிறுவனம் உங்கள் சேவைக்கு கட்டணம் அளிக்க முடிவு செய்தால் அதை
நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடலாம், அதை விட்டு விட்டு பேபால் அக்கவுண்ட் ஆரம்பிங்க என்பதெல்லாம் ஏமாற்று வேலை,

நண்பர்களே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இப்படி தகவல் அளிப்பதை கைவிடுங்கள்

reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-கைவிடுங்கள் இந்தப் போக்கை
Ramachandran (guest) 22 Sep 2009, 23:11 GMT+0530
வணக்கம்
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை.
ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், ஒரு நிறுவனம் உங்கள் சேவைக்கு கட்டணம் அளிக்க முடிவு செய்தால் அதை
நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடலாம், அதை விட்டு விட்டு பேபால் அக்கவுண்ட் ஆரம்பிங்க என்பதெல்லாம் ஏமாற்று வேலை,

நண்பர்களே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இப்படி தகவல் அளிப்பதை கைவிடுங்கள்

நண்பரே!
இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை அல்ல. நான் கடந்த மூன்று மாதங்களாக பணம் சம்பாதித்து வருகிறேன். நீங்கள் நம்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எனவே என்னுடைய தளத்திற்கு சென்று வீடியோ ஆதாரத்தை (no graphics, no editing) பாருங்கள். மேலும் வேண்டுமென்றால் இமெயில் பண்ணவும் : ramji287(at)gmail(dot)com

*http://www.easypanam.weebly.com/**

ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. இத்தளங்களில் சேருவதற்கு முன் கூகுளில் தேடிப்பார்த்துவிட்டு சேரவும்.

என்றும் அன்புடன்….
இராமச்சந்திரன்

reply | options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
முருகேசன் (guest) 23 Sep 2009, 09:08 GMT+0530
திரு இராமசந்திரன் அவர்களுக்கு

நீங்கள் மூன்று மாதமாக பணம் சம்பாதிப்பதாக எழுதியுள்ளீர்கள். இருக்கட்டும், நீங்கள குறிப்பிடும் நிறுவனம் எத்தனை நாட்களாக செயல்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முய்ற்சி செய்யுங்கள்.
ஒரு விளம்பரத்தை ஒருவர் பார்பதற்கு 25 பைசா என்று உங்களுக்கு அந்த நிறுவனம் கொடுப்பதாக இருந்தால் விளம்பரம் கொடுப்பவர்களிடம் சாட்டிலைட் டிவிகள் வாங்ககும் கட்டணத்தை விட அதிகமாக வாங்கினால் தான் சாத்தியம், விள்ம்பரத்தை பார்ப்பவருக்கு மட்டுமல்ல அவருக்கு பரிந்துரை செய்தவருக்கும் சேர்த்து பணம் தருவதாக வேறு கூறியுள்ளீர்கள்.
ஒன்றை மனதில் கொள்ளுங்கள் நீங்கள் பார்க்கும் விள்ம்பரங்கள் உண்மையிலேயே அந்த நிறுவனம்தான் கொடுத்தததா?. இம்மாதிரியான நிறுவனங்கள் யாவும் பிரபலமான நிறுவன விளம்பரங்களைத்தான் வெளியிடும், அந்த விளம்பரங்கள் உங்களை இணைய்ம் மூலமாக மட்டும்தான் வந்தடைகிறதா? வேறு ஊடகங்களின் வழியாக நீங்கள் பார்க்கவில்லையா?
இபபோதைக்கு பணம் தரலர்ம. நாளாக நாளாக பயனர் வட்டம் பெரிதாகும் போது ஏதாவதொரு வகையில் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்க்ள். உஷாராக இருங்கள் அப்போது உங்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் மத்தியில் உங்கள் பெயர் கெடுவதுதான் மிச்சமாக இருக்கும்.

options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
Ramachandran (guest) 23 Sep 2009, 12:19 GMT+0530
திரு முருகேசன் அவர்களுக்கு,

நீங்கள் மூன்று மாதமாக பணம் சம்பாதிப்பதாக எழுதியுள்ளீர்கள். இருக்கட்டும், நீங்கள குறிப்பிடும் நிறுவனம் எத்தனை நாட்களாக செயல்படுகின்றது என்பதை அறிந்து கொள்ள முய்ற்சி செய்யுங்கள்.

இந்நிறுவனம் மே 2008 ல் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 500 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

ஒன்றை மனதில் கொள்ளுங்கள் நீங்கள் பார்க்கும் விள்ம்பரங்கள் உண்மையிலேயே அந்த நிறுவனம்தான் கொடுத்தததா?. இம்மாதிரியான நிறுவனங்கள் யாவும் பிரபலமான நிறுவன விளம்பரங்களைத்தான் வெளியிடும், அந்த விளம்பரங்கள் உங்களை இணைய்ம் மூலமாக மட்டும்தான் வந்தடைகிறதா? வேறு ஊடகங்களின் வழியாக நீங்கள் பார்க்கவில்லையா?

ஆம். அந்த நிறுவனங்கள்தான் கொடுத்தன. உங்களுடைய வெப்சைட்டுக்கும் UNIQUE HITS வேண்டும் என்றால் நீங்களும் விளம்பரம் செய்யலாம். நான் விளம்பரம் செய்து பார்த்தேன். UNIQUE HITS-உம் கிடைத்தது, விளம்பரத்திற்கான பலனும் கிடைத்தது. $2 க்கு 100 Unique visiters வருவார்கள்.

இபபோதைக்கு பணம் தரலர்ம. நாளாக நாளாக பயனர் வட்டம் பெரிதாகும் போது ஏதாவதொரு வகையில் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்க்ள். உஷாராக இருங்கள்

பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிகொண்டு ஓடி விடுகின்றன என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. ஆனால் ஏமாற்றுபவர்கள் முதலில் பணம் கட்ட சொல்லுவார்கள். இதில் நீங்கள் பணம் கட்டி சேர வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் எந்தவித இழப்பும் இல்லை.

பல தமிழர்களும் இதில் சம்பாதிதுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்பக்கத்தில் பாருங்கள்.
http://www.neobux.com/forum/?frmid=18&tpcid=68580

இந்நிறுவனத்தைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு,
*http://www.easypanam.weebly.com**

இன்னும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளேன்.
நன்றி
க. இராமச்சந்திரன்

options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
முருகேசன் (guest) 23 Sep 2009, 21:04 GMT+0530


நீங்கள் சொன்ன தளத்தில் வந்திருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள், வேலிக்கு ஓனாண் சாட்சி என்பது போல இதில் வந்திருக்கும் விளம்பரங்கள் எல்லர்ம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாமே PTC தள்ங்களின் விளம்பரங்கள்தான்.என் தளத்துக்கு வா விளம்பரம் பார் பணம் சம்பாதி என்கிற கில்லாடி வெப்சைட்டுக்கள்தான். மற்றபடி ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள் ஏதாவது உள்ளதா?
அப்புறம்
Standard Golden Emerald Platinum Sapphire Diamond Ultimate என்று வகை பிரித்திருக்கிறார்களே எதன் அடிப்படையில்.

இரண்டு டாலருக்கு 100 Unique Hits வந்ததாக கூறியுள்ளீர்களே. அந்த 100க்கே 1 டாலர் சரியாகிவிட்டது, அப்புறம் Refferal அடிப்படையில் வேறு செலவு இருககிறது, ஒன்றரை டாலர் செலவாகிவிட்டதாக கொள்வோம். பிறகு நடைமுறை செலவுகளுக்கு யாரிடம் கடன் வாங்குவார்கள்.

லைன் மெயில் டாட் காம் போன்ற தள்ங்களில் நம்மூர் ஏர்டெல் விள்ம்பரம் எல்லாம் போட்டிருந்தார்கள். பிறகு சென்னையில் ஏர்டெல் மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் நண்பனிடம் கேட்ட போதுதான் தெரிந்தது. அவர்கள் ஷ வெப்சைட்டுக்கு விள்ம்பரமே தருவதில்லை என்று.

உண்மையிலேயே இவர்கள் தொடர்ந்து பணம் தருவதாக இருந்தால் நீங்கள் சொன்ன 500 நாளில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்றிருக்க முடியும். இவர்கள் வேறு எதற்காகவோ திட்டமிடுகிறார்கள்

1. விளம்பரத்தில் காணும் அனைத்து PTC சைட்டுக்களுமே ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானதாக இருக்கலாம். இந்த சைட்டில் பணம் தருவதன் மூலம் அவர்களின் பிற வெப்சைட்களில் உறுப்பினராக்க முயற்சி செய்யலாம். விள்ம்பரத்தில வரும் அனைத்து சைட்டுகளுமே நீங்கள் கட்டும் கட்டணத்தின் அடிப்படையில் பே அவுட் லிமிட் அளிக்கின்றன. - rabbitmails.com என்ற இணையதளம் இதைத்தான செய்கிறது.

2. நீங்களும் வெப்சைட்டை நடத்தும் குழுவில் ஒருவராக இருக்கலர்ம் அல்லது வெப்சைட்டை நடத்தும் தனிநபராக இருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படித்தான் செய்தார். ஆசிரியராக பணிபுரியும் அவர், கோயம்புத்தூரிலேயே கம்பெனி உள்ளது. மாதம் மாதம் ஐசிஐசிஐ பேங்கின் பே கார்டு மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய பிட்டுக்களைப் போட்டு நிறைய பேரை சேர்த்து விட்டார். கடைசியில் கம்பெனிகாரன் அல்வா கொடுத்த பிறகு, இவர் தான் சேர்த்து விட்டவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்து தன் நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒருநாள் மது அருந்திவிட்டு போதையில் என் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது
" தம்பி முருகேசா, இந்த •••• கம்பெனிகாரனுக நீ நெறைய பேத்த சேத்து வுடு, உன்ன கம்பெனில பார்ட்னர சேத்துக்கிறோம் நிறைய லாபம் கொடுப்போம்னு சொன்னானுக கடைசில மொத்தமா •••••• கொடுத்துட்டானுக. கடைசில பி.எப் லோன் போட்டுதான் பேரைக் காப்பாத்திக்க முடிச்சுது"

3. நீங்கள் கொடுத்துள்ள போரம் லிங்கில் உள்ளபடி ஒரு வெப்பேஜை உருவாக்க ஒன்றும் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும போரம் லிங்ககில் கூட Topic: How many from Tamil Nadu?? மூனறு பக்கங்கக்ளில் முப்பதுக்கும் குறைவான நபர்களே இடம் பெற்றுள்ளனர் அதிலும் நீங்களே இரண்டு முறைக்கு மேல்.

4. நான் மேற் குறிப்பிட்டுள்ள இரண்டாவது பாயிண்ட உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள கொடுததுள்ள வீடியோ ஆதாரம் பணால் ஆகி விடுகின்றது

நான் உங்களை குற்றம் சொல்வதாக எடுத்துக கொள்ள வேண்டாம். தமிழ நெஞ்சம் சொன்னது போல உழைத்தே சம்பாதிப்போம்.
No Pains No gains
படித்திருப்பீர்கள்.
நான் சொன்ன அனைத்துமே தவறாக இருந்து, நீங்கள் சொல்வது போல சரியாகவே இருந்தாலும் இது நீடிக்க போவதில்லை, காலம் உங்களுக்கு உணர்த்தும். நான் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் போகும் பாதை சரிதானா என்பதை முற்றிலும் உணரும முன்பே மற்றவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுதான்,
ந்ன்றி இராமச்சந்திரன்
என்னுடைய கருத்துக்கள் தங்களை புண்படுத்தியிருப்பின் மன்னித்து விடுங்கள்

options
fold
Re: இணையத்தில் பணம் சம்பாதிக்க!-உண்மைகளை உணருங்கள்
Ramachandran (guest) 23 Sep 2009, 23:45
திரு முருகேசன் அவர்களே,
உங்களுடைய கருத்துக்கள் என்னை துளி அளவும் புண்படுத்தவில்லை. ஏனென்றால் உங்களுடைய பார்வையில், உங்களுடைய அனுபவத்தில், உங்கள் கருத்துக்களைக் கூறி உள்ளீர்கள்.
ஆனாலும் உங்களுக்கு சில விளக்கங்களை அளிக்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் சொன்ன தளத்தில் வந்திருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள், வேலிக்கு ஓனாண் சாட்சி என்பது போல இதில் வந்திருக்கும் விளம்பரங்கள் எல்லர்ம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாமே PTC தள்ங்களின் விளம்பரங்கள்தான்.என் தளத்துக்கு வா விளம்பரம் பார் பணம் சம்பாதி என்கிற கில்லாடி வெப்சைட்டுக்கள்தான். மற்றபடி ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள் ஏதாவது உள்ளதா?

நான் முன்னரே கூறி விட்டேன். "ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. இத்தளங்களில் சேருவதற்கு முன் கூகுளில் தேடிப்பார்த்துவிட்டு சேரவும்."

இப்பக்கத்தில் உள்ளவை பெரிய budget அளவிலான விளம்பரங்கள். எனவேதான் ரெஜிஸ்டர் பண்ணாத யூசர்களுக்கு இலவசமாகக் காட்டுகின்றன. நீங்கள் ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு அந்த வெப்சைட்டின் Home page- i 15 செகன்டுக்கு ஒருமுறை refresh பண்ணி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த "ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள்" அவ்வப்போது வரும். சில நிமிடங்களிலேயே மறைந்துவிடும். ஏனென்றால் அவை சிறிய budget அளவிலான விளம்பரங்கள். ஏனென்றால் online இல் இருப்பவர்கள் சில நிமிடங்களிலே பார்த்துவிடுவார்கள். இந்த வெப்சைட்டை பற்றி உலகப் புகழ் பெற்ற alexa.com ல் போய் பாருங்கள்.

http://www.alexa.com/siteinfo/www.neobux.com

இரண்டு டாலருக்கு 100 Unique Hits வந்ததாக கூறியுள்ளீர்களே. அந்த 100க்கே 1 டாலர் சரியாகிவிட்டது, அப்புறம் Refferal அடிப்படையில் வேறு செலவு இருககிறது, ஒன்றரை டாலர் செலவாகிவிட்டதாக கொள்வோம். பிறகு நடைமுறை செலவுகளுக்கு யாரிடம் கடன் வாங்குவார்கள்.

என்ன கணக்கு இது?

இரண்டு டாலருக்கு 100 Unique Hits

100 Unique Hits = $ 1
referals = $0.5

மீதம் உள்ள $ 0.5 கடன் அல்ல. இலாபம். 100 Unique Hits க்கு $0.5 லாபம் என்றால், ஒவ்வொரு மெம்பரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 விளம்பரங்கள் பார்க்கிறார்கள். அந்த வெப்சைட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கின்றனர். கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.. 4 மில்லியன் விளம்பரங்களுக்கு எவ்வளவு லாபம் வரும்? ( ஒரு நாளைக்கு $ 20000)

உண்மையிலேயே இவர்கள் தொடர்ந்து பணம் தருவதாக இருந்தால் நீங்கள் சொன்ன 500 நாளில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்றிருக்க முடியும். இவர்கள் வேறு எதற்காகவோ திட்டமிடுகிறார்கள்


தினசரி global internet users traffic -i இங்கு பாருங்கள்.

http://www.alexa.com/siteinfo/www.neobux.com

1. விளம்பரத்தில் காணும் அனைத்து PTC சைட்டுக்களுமே ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானதாக இருக்கலாம். இந்த சைட்டில் பணம் தருவதன் மூலம் அவர்களின் பிற வெப்சைட்களில் உறுப்பினராக்க முயற்சி செய்யலாம். விள்ம்பரத்தில வரும் அனைத்து சைட்டுகளுமே நீங்கள் கட்டும் கட்டணத்தின் அடிப்படையில் பே அவுட் லிமிட் அளிக்கின்றன. - rabbitmails.com என்ற இணையதளம் இதைத்தான செய்கிறது.

எனக்கு rabbitmails.com பற்றி தெரியாது. ஆனால் NeoBux இல்,
1. நீங்கள் சேருவதற்கு ஒரு பைசா கூட கட்ட தேவை இல்லை.
2. Minimum பே அவுட் லிமிடை 50 நாட்களுக்குள் அடைந்து விடலாம் (யாரையும் பரிந்துரை செய்யாமல்- தினமும் விளம்பரம் பார்ப்பதற்கு 5 நிமிடம் கூட ஆகாது. மேலும் விளம்பரத்தைக் க்ளிக் செய்துவிட்டு வேறு வெப்சைட்டைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்).
3. பணம் எடுப்பதற்கும், பணம் கட்ட தேவை இல்லை.

எனவே இந்த வெப்சைட்டில் சேருவதால் உங்களுடைய கைப்பணம் ஒரு பைசா கூட செலவாகாது.
( Membership upgrade பண்ணுவது உங்கள் சொந்த முயற்சி. நம்பினால் Membership upgrade பண்ணுங்கள்)

2. நீங்களும் வெப்சைட்டை நடத்தும் குழுவில் ஒருவராக இருக்கலர்ம் அல்லது வெப்சைட்டை நடத்தும் தனிநபராக இருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படித்தான் செய்தார். ஆசிரியராக பணிபுரியும் அவர், கோயம்புத்தூரிலேயே கம்பெனி உள்ளது. மாதம் மாதம் ஐசிஐசிஐ பேங்கின் பே கார்டு மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய பிட்டுக்களைப் போட்டு நிறைய பேரை சேர்த்து விட்டார். கடைசியில் கம்பெனிகாரன் அல்வா கொடுத்த பிறகு, இவர் தான் சேர்த்து விட்டவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்து தன் நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒருநாள் மது அருந்திவிட்டு போதையில் என் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது
" தம்பி முருகேசா, இந்த •••• கம்பெனிகாரனுக நீ நெறைய பேத்த சேத்து வுடு, உன்ன கம்பெனில பார்ட்னர சேத்துக்கிறோம் நிறைய லாபம் கொடுப்போம்னு சொன்னானுக கடைசில மொத்தமா •••••• கொடுத்துட்டானுக. கடைசில பி.எப் லோன் போட்டுதான் பேரைக் காப்பாத்திக்க முடிச்சுது"

வாய்ப்ப்பே இல்லை. இந்த கம்பெனி போர்ச்சுக்கல்லில் உள்ளது.
refer: http://whois.domaintools.com/neobux.com
கூகுளுடன் compare பண்ணி பாருங்கள்.
refer: http://whois.domaintools.com/google.com

நான் யாரையும் பணம் கட்டி சேர சொல்லவில்லை. எனவே நான் யாருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க தேவையில்லை.

3. நீங்கள் கொடுத்துள்ள போரம் லிங்கில் உள்ளபடி ஒரு வெப்பேஜை உருவாக்க ஒன்றும் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும போரம் லிங்ககில் கூட Topic: How many from Tamil Nadu?? மூனறு பக்கங்கக்ளில் முப்பதுக்கும் குறைவான நபர்களே இடம் பெற்றுள்ளனர் அதிலும் நீங்களே இரண்டு முறைக்கு மேல்.

அது ஒன்றும் சாதாரண forum இல்லை. இன்று topic create பண்ணினால் நாளைக்கு reply கிடைக்க. ரெம்ப active ஆன forum. நீங்கள் ஒரு சம்பந்தமில்லாத topic-i ( just give your blog address -) அந்த forum இல் create பண்ணி பாருங்கள். அடுத்த நிமிடமே reply கிடைக்கும்.அல்லது ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு அக்கவுண்ட் create பண்ணி பாருங்கள். சிறிது நேரத்தில் உங்களை ban பண்ணி விடுவார்கள். அந்த forum -i முழுமையாக நீங்கள் முழுமையாக படிப்பதற்கு கண்டிப்பாக ஒரு மாத காலமாவது ஆகும். அவ்வளவு தகவல்கள் (News about NeoBux, Payment Proofs, Member Introduction, AlertPay Support, Bug Reports, Problems and Doubts, Non-English)உள்ளன.

4. நான் மேற் குறிப்பிட்டுள்ள இரண்டாவது பாயிண்ட உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள கொடுததுள்ள வீடியோ ஆதாரம் பணால் ஆகி விடுகின்றது.

இரண்டாவது பாயின்ட் உண்மை இல்லை. இதில் இதுவரை நான்கு முறை பணம் எடுத்துள்ளேன். மூன்று முறை அதை screen record பண்ணியுள்ளேன். (முதல் தடவை screen record பண்ணவில்லை. ஏனென்றால் அதை நான் அப்பொழுது நம்பவில்லை). அடுத்தவாரம் மீண்டும் பணம் எடுக்க உள்ளேன். வேண்டுமென்றால் மெயில் பண்ணுங்கள். சுடச்சுட வீடியோ அனுப்பி வைக்கிறேன்.

நான் உங்களை குற்றம் சொல்வதாக எடுத்துக கொள்ள வேண்டாம். தமிழ நெஞ்சம் சொன்னது போல உழைத்தே சம்பாதிப்போம்.
No Pains No gains
படித்திருப்பீர்கள்.

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்கு நிறைய சம்பாதிப்பது என்பதும் எளிது அல்ல மற்றும் ஒரே மாதத்தில் லட்சாதிபதியும் ஆக முடியாது. நீங்கள் சிலவற்றை சரியாக செய்ய வேண்டும். பொறுமையும் வேண்டும். (நானும் பல வெப்சைட்டில் சேர்ந்து ஏமாந்தும் உள்ளேன். நல்ல வேளையாக பணம் கட்டி சேரும் எந்த வெப்சைடிலும் நான் சேரவில்லை.)

நான் சொன்ன அனைத்துமே தவறாக இருந்து, நீங்கள் சொல்வது போல சரியாகவே இருந்தாலும் இது நீடிக்க போவதில்லை, காலம் உங்களுக்கு உணர்த்தும். நான் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் போகும் பாதை சரிதானா என்பதை முற்றிலும் உணரும முன்பே மற்றவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுதான்,

உலகப் புகழ் பெற்ற "லேமன் பிரதர்ஸ் வங்கி" யே திவால் ஆகும் பொழுது, இந்த உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கடவுள் ஒருவரே அறிவார். ( கூகுள் கூட crash ஆகலாம். ஜிமெயில் செர்வர் கூட Hack பண்ணலாம். எனவே இந்த வெப்சைட் இருக்கும் வரை சம்பாதிதுவிட்டு சந்தோசமாக இருங்கள்.)

இன்னும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளேன்.
நன்றி நண்பரே,
க. இராமச்சந்திரன்

பின் குறிப்பு:
உங்களிடம் ஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் அளியுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
நீங்கள் Google AdSense-i நம்புகிறீர்களா?

ஆம் என்றால், எதை வைத்து நம்புகிறீர்கள்?
இல்லை என்றால் ஏன் நம்பவில்லை?
நன்றி:http://wiki.pkp.in/forum/t-165676/#post-591468

HOW WILL DO EARN BY OUR BLOGSPOT?

நண்பர் Shiva கேட்டிருந்தார்.
நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?

சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது.
Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும்.
Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம்.
இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.

விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம்.
அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.

Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com
இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.

தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.

சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.


எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு.
ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.


எத்தனை அருமை வாசகம்.
நன்றி:http://pkp.blogspot.com/2008/04/in.html

ஆழ்நிலை தியானம் பற்றிய ஒரு நேரடி அனுபவம்

FRIDAY, OCTOBER 31, 2008
ஆழ்நிலைத் தியானம்

ஆழ்நிலைத் தியானம்--எத்தனையோ விதமான் தியானங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் தியானிக்க உதவுகிறது.
பொதுவாக தியானம் என்றவுடன் கண்ணை மூடி ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிக்கவேண்டும் என்பதுதான் அனைவரது பொதுவான கருத்து. ஆனால் நான் உன்னத உடல் நிலையை பராமரிக்கவேண்டுமேன்றும் உன்னத மனோநிலையை பெறவேண்டுமென்றும் சில தியானங்களை முறையாகக் கற்றுக்கொண்டேன். எனக்குப்பிடித்த முறையில் அமையும் தியானத்தை பின்பற்றுவது என்றும் முடிவு செய்து கொண்டேன்.

அவ்வகையில் எனக்குப்பிடித்த ஆறு ஆண்டு காலமாக நான் செய்துவரும் ஆழ்நிலை தியானத்தைப் பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏன் ஆழ் நிலைதியானம்?

மிகச் சுலபமாக யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் எங்கு வேண்டுமானலும் செய்யக்கூடிய ஓர் உன்னத தியானம் இது.

எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

காலையிலோ மாலையிலோ பதினைந்து முதல் இருபது நிமிடம் மட்டுமே.

எங்கு செய்யவேண்டும்?

வீட்டில் தங்களக்குப் பிடித்த எந்த இடமானாலும் சரி. வீட்டில் செய்ய நேரமில்லைஎனில் பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் தாங்கள் வண்டியை ஒட்டாத வகையில் இருந்தால் போதும்.

எவ்வர்று செய்ய வேண்டும்?

இதை முறையாக தியான ஆசிரியரிடம் நேரில் சென்றே கற்றுக்கொள்ளவேண்டும்.

பலன்கள்

மனோதைரியம். நல்ல தூக்கம் (தூக்கம் வராதவர்களுக்கு இது ஓர் வரப்பிரசாதம்) மாணவர்கள் எனில் சிதறாத கவனம் (அதனால் கூடுதலாக மதிப்பெண்கள்).

முக்கியமாக மன ஆரோக்கியம் - மன ஆரோக்கியம் என்றால் உடல் ஆரோக்கியம் தானாகவே கிட்டிவிடும்.

உலகில் வாழும் அத்துணை மனிதர்களும் ஏதாவது ஓர் இடர் உடன்தான் வாழ்கின்றனர். பணம் மட்டுமே நிம்மதி இல்லை. பணம் இருந்தால் கட்டிலைமட்டுமே வாங்க முடியும் - தூக்கத்தை வாங்க முடியாது (சினிமா பாடல் வரிதான்) - ஆனால் அதுதான் உண்மை.

நான் இந்த நல்ல அரிய கலையைக் கற்றுக்கொண்டு நலமாகவும் வளமாகவும் வாழ்வது போன்று ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் அனவைருக்கும் நான் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் கூறி விருப்பப்பட்டவர்களை நானே தியான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

சென்னையில் மஹரிஷி வித்யா மந்திர் என்ற ஓர் பள்ளி சேத்துபட்டில் (டாக்டர் குருசாமி சாலை) உள்ளது . ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை தியானம் குறித்து ஒரு அறிமுக வகுப்பினை நடத்துகின்றனர். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இந்த அறிமுக வகுப்பில் தியானம் குறித்து முழுமையாக விளக்குகின்றனர். யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தியானம் கற்றுக்கொள்ள தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும இந்த தியானம் பணத்திற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை என்ற உண்மையை அறிந்துள்ளேன்.

நான் உண்மையிலேயே பலன் அடைந்ததால் இந்த விவரத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.



இந்த தியானம் சம்பந்தமாக நான் பெற்ற அனுபவங்களை பின்னூட்டங்கள் மூலம் பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

நன்றி:http://tamilarumbu.blogspot.com நடத்துபவர்:காமாட்சிஜெயராஜ்,சென்னை.

EASY WAY TO SAFE OUR BLOG FROM HACKERS


வலைப்பதிவை ஹேக்கர்களிடமிருந்து காப்பற்றிக்கொள்ள ஓர் வழி




உங்களது வலைப்பதிவனை ஹேக் செய்ய,உங்களது மின்னஞ்சல் ஊடாகவே ஹேக்கர்கள் உள்ள புக முடிகிறது.அதனால் வேறொரு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது எப்படி என்பதை,எனக்கு தெரிந்த அளவில் இங்கே சொல்லிருக்கிறேன்.அப்படி மின்னஞ்சலை இணைப்பதன் மூலம் ஒரு மின்னஞ்சல் ஹேக் செய்ய பட்டாலும்,மற்றொரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை காப்பற்றிக்கொள்ள முடியும்.


அதற்கான வழிமுறைகள்:


உங்களது வலைப்பதிவினை Login செய்ததுடன், Dashboard சென்று, அங்கு Settings ஐ Click செய்யவும்.



Settings இல் கடைசியாக உள்ள Permissions என்ற Tab ஐ Click செய்து விடவும்.




பின், Permissions Tab பக்கத்தில் ADD AUTHORS Tab ஐ கிளிக் செய்து உங்களது நண்பரையோ அல்லது உங்களின் வேற மின்னஞ்சல் முகவரி தந்து Invite செய்து கொள்ளுங்கள்.



பின் நீங்கள் Invite செய்த மின்னஞ்சலுக்கு அந்த Invitation வந்துவிடும்.அந்த மடலில் அதற்கான சுட்டியும் சேர்ந்து வரும்.அந்த Link ஐ Click செய்தால் Blogger page திரையில் தோன்றும்.

இதில் கேட்கப்படும் Username,Password போன்ற தகவல்களை அளித்து Accept Invitation ஐ Click செய்யவும்.
பின்பு சென்று உங்களது ஏற்கனவே உள்ள உங்களது Blogger Settings - Permissions பக்கத்தில் Grant admin privileges என்பதை Click செய்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் Admin தரமளித்து பக்கத்தை மூடி விடவும்.
இனிமேல் நீங்கள் இந்த இரு மின்னஞ்சல் ஊடாகவும் உங்களது வலைப்பதிவை சீர்செய்துகொள்ளவோ,மாற்றி அமைக்கவோ முடியும்.ஒரு மின்னஞ்சல் வாயிலாக உங்களது வலைப்பதிவை ஹாக் செய்யப்படாலும்,இன்னொரு மின்னஞ்சல் வாயிலாக Login செய்து ஹாக் செய்யப்பட்ட முகவரியை Remove செய்துவிடவும் முடியும்.



பின்பு நீங்களே இன்னொரு புதிய மின்னஞ்சல் முகவரியை Add Authors ஆக நிருவகிக்க முடியும்.இந்த வழிகளினூடே வலைப்பதிவை ஹக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.
நன்றி:எனது தம்பி பாலாஜி இமலாதித்தனின் வலைப்பூwww.tamilvaasal.blogspot.com

கோமாதா பற்றிய உண்மைகள்


பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.

பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.

கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.

பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.

பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.

பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.

பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.

பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக!!!
இதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.

ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.

Wednesday, September 23, 2009

ஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து



ஓஷோ சாகரத்தின் சங்கமமாக கருதப்படுகிறார்.இவர் கி.பி.1911 ஆம் ஆண்டில் இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் பிறந்தவர்.இவரது ஆளுமையைச் செதுக்கியவர் இவரது பாட்டி!!!
இதனால்,21 வயதிலேயே தத்துவத்தில் எம்.ஏ.முடித்தவர்.இவரது சிந்தனைக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இருந்தது.இவரது போதனைகள் மிக யதார்த்தமானதாக இருக்கின்றன.இதனால்,அமெரிக்க அரசாங்கமேஇவரைப்பார்த்துப் பயந்துபோனது.இவர் 64,000 ஏக்கரில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தையே உருவாக்கினார்.(அமெரிக்காவில்தான்).உலகிலேயே அதிகமான மெர்ஸிடஸ் பென்ஸ்கார்கள் வைத்திருந்தவர் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்தவர்.அத்தனையும் இவர் மீதான பாசத்தால் இவரது அமெரிக்க சீடர்கள் அன்பளிப்பாக கொடுத்தவை.
இந்தியாவை விட்டுச்செல்லும்போது இவர் தனதுதாய்நாட்டின் பெருமையை உணரவில்லை.உலகம் முழுக்கச் சுற்றிய பின்னர்தான் ,தனது தாய்நாடான இந்தியாவின் அருமை பெருமை புரிந்தது.அதன்விளைவாக,இவர் எழுதிய புத்தகமே ‘நான் நேசிக்கும் இந்தியா’.சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்தியாவின் ஆன்மாவை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகின்றது.
இவர் சொல்வது என்னவெனில்,மதத்தலைவர்களும்,அரசியல்வாதிகளும் கூட்டுசேர்ந்து, ‘காமம் ஒரு கொடூரமான பாவம்’
என இந்த பூமியையே நம்ப வைத்துவிட்டனர்.அதனால்தான் நாம் அனைவரும் மனநோயாளிகளாக வாழ்ந்து சாகிறோம்.ஆனால்,காமம் தான் நம்மை இயக்கும் சக்தி என விளக்குகிறார்.
எனது அனுபவப்படி,ஓஷோவைப் புரிந்துகொள்ளவேண்டும் எனில் முதலில் “ஓஷோ:வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்”என்றபுத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும்.அடுத்ததாக, “காமத்திலிருந்து கடவுளுக்கு”என்ற புத்தகத்தை சுமார் 50 முறையாவது ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும்.சிந்தனைத் தெளிவு கிடைக்கும்.
இவரது புத்தகங்களில் ஒன்று “மறைந்திருக்கும் உண்மைகள்”=இந்தப்புத்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது அன்று இரவு முழுக்க தூங்கவேயில்லை.இவ்வளவு சீரும் சிறப்பும் மிக்க எனது இந்துதர்மத்தைப் பற்றி ஏன் பலருக்குத்தெரியவில்லை? தெரிந்தால் தன்னம்பிக்கையின்றி வளரும் இந்திய இளைஞர்கள் தங்களது முழுசக்தியையும் உணர்ந்துகொள்வார்களே!

(ஆக,அரசியல் அக்கப்போர்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன.மக்கள் முட்டாள்களாக இருக்க,இருக்க அவர்களின் அரசியல் வியாபாரம் செழிப்பாக ஓடும் என்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.
அதன்பிறகு,நான் இந்த புத்தகத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன்.)
இந்துதர்மக் கோட்பாட்டின்படி, 84 லட்சம் வகையான உயிரினங்கள் இருக்கின்றன.நவீன,உயிரியலும் இதை உண்மைதான் என்பதைக் கண்டறிந்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,மனிதன் ஒவ்வொருவரும் இந்த 84 லட்சம் உயிரினங்களாகப்பிறந்தப்பின்னர்தான்,மனிதப் படைப்பில் வரமுடியும் என இந்துதர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

பல லட்சம் பிறவிகள் கடந்து மனிதப்பிறவியடைந்தும் கூட ஏன் வெட்டிவேலை பார்க்கவேண்டும்?ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்? ஆகவே,ஆத்ம பரிசோதனையில் ஈடுபடுங்கள்.

ஒரு யானை தான் இறக்கும் தருவாயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும்,ஒரு முயலுக்கு புகலிடம் கொடுத்தமையால்,விழிப்புணர்வு ஏற்பட்டுஅதன் அடுத்த பிறவியில் மனிதனாய் பிறக்க நேர்ந்தது.அவர் தாம் புத்தர்!
ஜோதிடர்களின் அறிவுரைப்படி உலக சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்படியும்,கவலைகள் அறியாவண்ணம் இருக்குமாறு தன் மகன் சித்தார்த்தனை
வளர்த்தார் அரசர்.
சுகபோகங்களில் மூழ்கித் திளைத்திருந்த சித்தார்த்தன்,ஒரு நாள் நடு இரவில் கண்விழித்துப்பார்க்கையில்,அந்தப்புரத்து மங்கையர் பலர் அலங்கோலமாய் படுத்திருக்க,குறட்டைவிட்டுக்கொண்டும்,வாயிலிருந்து எச்சில் வழிந்தும் மற்றும் பிற அங்கங்கள் நாறிட காட்சிதர இக்கொடும் காட்சியை முதல் முறையாகக் கண்ட சித்தார்த்தன், மனம் வெதும்பி இம்மாயையை விட்டு விலகி,ஞானத் தேடலுக்கு ஆயத்தமானார்.ஆதாரம்:புத்தரின் உபதேசங்களை 12 தொகுப்புகள் “தம்மபதம்”என்றதலைப்பில் விளக்க உரைதந்துள்ளார் ஓஷோ!

சரகர் ஒரு அந்தணர்,நாடு புகழும் பெரும்பண்டிதர்.அரசவையில் முக்கிய ஆலோசகர்.இவர் ஞான வேட்கை கொண்டு புத்தரின் நேரடிச் சீடரான ஸ்ரீகீர்த்தியின் சீடரானார்.கனவில் ஒரு பெண் உருவம் தோன்றியது.அப்பெண்ணே தனது உண்மை குரு என்றுணர்ந்து,அவரைத் தேடிச்சென்றார்.ஒரு தாழ்குலப்பெண் அம்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காண,அவரே தன் ஆதர்ச குரு என்பதை உணர்ந்துகொண்டார்.அவரை சரகர் சரணடைந்தார்.குரு,சீடர் இருவரும் இடுகாட்டில் வாழ்ந்தனர்.
சுடுகாட்டில் ஆட்டம்,பாட்டம்,நிர்வாணத் தியானம் என்று ஒரு விசித்திர பாடசாலை அரங்கேறியது.அங்கு செல்வோரெல்லாம் இவரைப்பின்பற்றுவதும் ஆயிற்று.நாட்டுமக்கள் இவரை இழிசொல்லால்தூற்றினர்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அரசனும்தன் அபிமானத்துக்குரிய ஆலோசகர் இவ்வாறுமாறிப்போய்விட்டானே என்ற ஆதங்கத்தில், சரகரை அழைத்து வரசில பெரியோர்களை தூது அனுப்பிவைத்தார்.
சரகர் அவர்களுக்காக 120 பாடல்களைபாடினார்.சென்றவர்கள் திரும்பவில்லை.இதையடுத்து சரகரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராணி சரகரைக் காணச் சென்றாள்.ராணிக்காக 80 பாக்களைப் பாடினார் சரகர். ராணியும் நாட்டையும் அரண்மனையையும் துறந்தாள்.கலவரப்பட்ட அரசர் தானே நேரில் சென்று சரகரைச் சந்தித்தார்.அரசனுக்காக சரகர் மேலும் 40 பாக்களை(பாடல்களை)ப் பாடினார்.அரசர் சரகரை சரணடைந்தார்.அரசனே மாறிப்போனதால்,அந்த ராஜ்ஜியமே மெல்ல,மெல்ல சரகரின்பக்கம் திரும்பியது.அவர் இயற்றியப்பாக்களைத் தான் “சரகரின் ராஜகீதம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தந்திரயோகம் தந்து அருளினார் சரகர்.
அதேசமயம்,உலகின் முதல் யோகி எனப்படும் பரமசிவன், பார்வதிதேவிக்கு அருளியது தந்திரசாஸ்திரம் எனலாம்.
இதுநாள் வரை நடைமுறையில் இருந்து ,இருக்கின்ற,இனிமேலும் வரக்கூடிய அனைத்து தியான முறைகளையும் உள்ளடக்கிய 112 வகையான தியான செயல்முறைகளின் மூலம் தந்திரயோகத்தை பார்வதிதேவிக்கு உபதேசிக்கிறார் பரமசிவன்.

சுவாமி ராமதீர்த்தர், ரமணமகரிஷி, புத்தர்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜிப் ஆகியோர் இதில் எந்த வகையான தியானம் பயின்று முக்தி அடைந்தார்கள் என்ற சுவராஸ்யமான குறிப்புகளை ஓஷோ தருகிறார்.
இவ்வழிமுறைகள் அனைத்தும் “விஞ்ஞான பைரவ தந்திர” என்ற ஆதி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.எவரும் அறியாமல் ரகசியமாக நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்ட இந்நூலுக்குஒஷோ1200 பக்கங்கள் கொண்ட விளக்க உரை எழுதியிருக்கிறார். “The book of Secrets”விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இப்புத்தகத்தை வாங்கித் தெளிவு பெறுக.
இவரை மேலும் வளரவிட்டால் தங்கள் அமெரிக்கநாட்டுக்குள் (குறிப்பாக கிறிஸ்தவர்களின்)மனோபாவத்தையே மாற்றி மேற்கத்தியர்களின் போக்கையே திசை திருப்பிவிடுவார் என்று அஞ்சி அமெரிக்க அரசாங்கம் (அதிபர் ரொனால்டு ரீகன் காலத்தில்) ஓஷோவை காரணமின்றி சிறையில் அடைத்தது.அவருக்கு ஊசி மூலமாக மெல்லக்கொல்லும் விஷத்தை உடலில் ஏற்றியது.பின்னர்,குற்றங்கள்நிரூபிக்க முடியாததால் டெக்னிக்கல் காரணம் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எந்த ஐரோப்பியநாட்டுக்குள்ளும் நுழையாதபடி அமெரிக்க எதேச்சதிகாரம் சதி செய்தது.இங்கிலாந்தில் transit flightக்காக காத்திருந்த வேளையில் கூட 6 மணிநேரம் லண்டன் ஜெயிலில் பிடித்து வைத்திருந்தார்கள்.
எதிலும் துணிவு,சமன்பாட்டு நோக்கமும் நெஞ்சுரமும் கொண்ட ஓஷோகிறிஸ்தவ உலகத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
எந்த ஒரு சாமனியனும் முக்தி அடையலாம் என்பதற்கு உதாரணமாக ஓஷோ உலகிற்கு ஒரு விடிவெள்ளி.
ஆன்ம,தத்துவவிஷயங்களில் அவர் தொடாத சப்ஜெட்டே கிடையாது.
600 க்கும் மேற்பட்டபுத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.இப்படி எந்த துறவியும் இதுவரை எழுதியதில்லை;1800 தலைப்புகளில் இவரைப்போல் இனி ஒருவர் பேசுபவர்பிறப்பாரா?என்பதும் சந்தேகமே!!!இதுவரை இவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளின் மொத்தம் 6 கோடி.

இவர் கி.பி.1986 வாக்கில்தான் இந்த பூமியை விட்டுச் சென்றார்.இவரது போதனைகளைக் கண்டு,இவர் ஒரு செக்ஸ் சாமியார் என்றே உலகம் நம்புகிறது.

கண்டுகொள்ளப்படாத அற்புதக்கண்டுபிடிப்பு



குமரிமாவட்டம்,மறவன்குடியிருப்பில் வாழ்ந்துவருபவர் சேவியர் ராஜா.டிப்ளமோ இன் மெக்கானிக்கல் முடித்துள்ள இவருக்கு,படிக்கும்போதே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.தற்போது இவர் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் கிளார்க்காக பணிபுரிந்துவருகிறார்.தனது படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக சர்வதேச விஞ்ஞான இதழ்களை வாங்கிப்படித்துக்கொண்டே இருப்பார்.அதன்படி,தனது விஞ்ஞான அறிவை விருத்திசெய்து கொண்டே இருப்பதுடன்,ஏராளமான ஆராய்ச்சிகளும் செய்துவருகிறார்.
தற்போது Frequency Trace Mover என்ற கருவியைக் கண்டறிந்துள்ளார்.சர்வதேச தொலைத்தொடர்புகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் முடக்கிப்போட்டுவிட முடியும் எனக்கூறும் இவரது கண்டுபிடிப்புக்கு நமது இந்திய அரசு உரிய அங்கீகாரம் தராமல் இழுத்தடிப்பது வேதனையான விஷயம்.
இது தொடர்பாக சேவியர்ராஜா கூறுகிறார்:
“வேலைக்குப்போய்கிட்டே, ஓய்வு நேரங்களில் வீட்டில் உட்கார்ந்து ஏதாவது புதுசா ஆராய்ச்சி செஞ்சு கட்டுரைகள் எழுதிக்கிட்டே இருப்பேன்.நான் எழுதுன ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச அளவில் அறிவியலாராய்ச்சிகள் சம்பந்தமான ‘சயின் டிபிக் அமெரிக்கன்’ என்ற ஜர்னலுக்கு அனுப்பினேன்.முதன்முதலா என்னுடைய கட்டுரை அதில் பிரசுரமானப்ப ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.அந்த உந்து சக்தியால தொடர்ந்து ஆய்வுகளைச் செஞ்சேன்.என்னிடம் ஏழு விதமானபுதிய கண்டுபிடிப்புகள் இருந்திச்சு.2003 இல் அப்போதைய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்திச்சு என்னுடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசினேன்.ஆச்சரியப்பட்ட அவர்,அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ்பெர்ணாண்டசை சந்திக்க ஏற்பாடு செஞ்சார்.அவ்ர்,இந்திய அரசின்பாதுகாப்பு ஆராய்ச்சிப்பிரிவுக்கு என்னோட ஆராய்ச்சிகளை அனுப்பிவைச்சு என்னோட கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து அவார்டும்கொடுக்கச் சொல்லி பரிந்துரைத்தார். . .”நினைவுகளில் அலைக்கழிப்பில் துவண்டு போன சேவியர் ராஜா தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“பாதுகாப்புத்துறை அதிகாரிகள்,ஆட்டோமேட்டிக் ஏர்கிராப்ட் சிஸ்டம்,இசட்,எக்ஸ்.புல்லட் உள்ளிட்ட என்னோட ஆறு விதமான கண்டுபிடிப்புகளை, ‘ஏற்கனவேஇது மாதிரியான ஆய்வுகள் எங்களிடம் இருக்கு’னு சொல்லி நிராகரிச்சுட்டு, “ஃப்ரிக்வென்ஸி ட்ரேஸ் மூவர்” ஆய்வை மட்டும் பரிசீலினைக்கு எடுத்துக்கிட்டாங்க.


இந்தக்கருவி மூலமா இங்கிருந்தபடியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் சிறிய பகுதியிலும் தொலைத் தொடர்பு சேவையையும் எட்டிப்பிடித்துத் துண்டிக்கலாம்.அரசாங்கத்தின் கையில் மட்டும் இது இருந்தால்,சர்வதேச அளவில் இதற்கான அங்கீகாரமும் பெற்றுவிட்டால்,உலகத்தின் எந்தவொரு தவறான தகவல்தொடர்புசேவையையும் முடக்கிப்போடலாம்.
கார்கில்போர்மாதிரியான சமயங்களில் இதன் பயன்பட்டால் எதிரிராணுவத்தின் அனைத்து தகவல் நெட்வொர்க்குகளையும் செயலிழக்கச்செய்யமுடியும்.
நன்றி:ஜீனியர் விகடன் பக்கம் 12 13,23.8.2009
ஆன்மீகக்கடல் வாசகர்களே!
இதுபோல,சுயம்பாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கும் ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் நம்நாடுமுழுக்க இன்றும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து விருதுநகர் மாவட்டத்தில் ஒருவர் புவியீர்ப்புவிசை மூலமாக மின்சக்தியை எடுக்கும் முறையைக் கண்டறிந்துள்ளார்.இன்னொருவர்,குறைந்த செலவில் மோட்டார் ரீவைண்டிங்கில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளார்.சென்னையில் ஒரு வயிற்றுப்போக்கை ஒரே நிமிடத்தில் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்.மூலிகை பெட்ரோல் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
இதுவே அமெரிக்காவாக இருந்தால் இவர்கள் ஒவ்வொருவரும் சில வருடங்களிலேயே கோடிகளைச் சம்பாதித்திருப்பார்கள்.அந்த மனப்பான்மை,புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம்தரும் மனப்பான்மை நமக்கு எப்போதுதான் வருமோ?

இதற்கென்றே(முறைப்படி படிக்காமல் ஆனால் புதியக் கண்டுபிடிப்பு கண்டறிந்தால் அதற்கு உரிய அங்கீகாரமும் அதை வணிகநோக்கத்துக்கும்,பொதுப்புழக்கத்துக்கும் கொண்டுவருவதற்கு என ஒரு அமைப்பு நம்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.)அதுதான் நேஷனல் இன்னோவேஷன் நெட்வொர்க் .இது தேசிய அளவில் அகமாதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.இதன் இணையதளமுகவரி:www.nif.org.in

செல்வ வளம் தரும் லஷ்மிபூஜை

லக்ஷ்மி பூஜை
லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும். வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:
குத்து விளக்கு - ஒன்று
உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில்
பால் - ஒரு கிண்ணம்(சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு கிண்ணம்
குங்குமம் - இடுவதற்கு
சந்தனம்/மஞ்சள் - இடுவதற்கு
பெரிய தாம்பாளம் - ஒன்று
லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு - அவரவர்கள் வசதிக்கேற்ப வெண்கலத்திலும் சிறிய மகா லக்ஷ்மி விக்ரகாங்கள் கிடைக்கின்றன
சர்க்கரை பொங்கல் - நெய்வேத்யம் செய்ய
முளை கட்டிய கருப்பு கொண்டாய் கடலை - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)
பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம். லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே
மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டாய் கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள்.
முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.
THANKS:http://aanmiga-rr.blogspot.com

பரிகாரக் கோவில்கள்


சில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்

திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.


கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்!!!
காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.
அதில் ஒன்று,ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,தாழக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது.இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.
இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை,கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் மற்றும் அனுபவ உண்மை.

மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு


மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு

அ)எண்கணிதத்தின் தந்தை என மேற்குநாடுகளால் போற்றப்படுபவர் சீரோ ஆவார்.இவர் 1.11.1866 ஆம் தேதியன்று பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காசி நகரத்தில் தங்கி, இந்துஜோதிடத்தை கற்றுக்கொண்டவர் என்பது சிலருக்குமட்டுமே தெரிந்த செய்தி!!!
ஆதாரம்:ஜோதிடபூமி,பக்கம்39,ஆகஸ்டு 2009.படத்தில் இருப்பவர் சீரோ

ஆ)ஆரியபட்டரின் மஹாஆரியபட்ட சித்தாந்தமானது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரி நூலகத்தில் என்.எஸ்.ஆர் 15.99 என்ற எண்ணில் ஓலைச்சுவடிகளாக நம்நாட்டில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதனுடைய போட்டோ நகலைப்பெறுவதற்குக் கூட நம் நாடு கி.பி.1909 ஆம் ஆண்டில் எண்ணற்ற தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.
இந்தத்தடைகளைப் பற்றி விரிவாக சவுகாம்பா ஸேன்ஸ்க்ரிட் பப்ளிகேஷன்ஸ்,வாரணாசி வெளியிட்டுள்ள ‘மஹா ஸித்தாந்த:’ என்ற நூலின் முகவுரையின் முதல் மூன்று பக்கங்களில் நாம் காணலாம்.
இவ்வாறு கடும்முயற்சிக்குப்பின் இதன் போட்டோ நகல் மட்டும் கிடைத்து புத்தகமாக வெளியிடப்பட்டுவிட்டது.
இவ்வாறு கிடைக்காமலேயே போயிருந்தால்,ஆரியபட்டர் மஹா ஆரியபட்ட ஸித்தாந்தம் என்றஒரு கணித வான சாஸ்திர நூல் எழுதியிருந்தார்.இதுவரை அந்நூல் கிடைக்கவில்லை என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
இந்நூலில் உள்ள நுட்பமான கணித வான சாஸ்திர விஷயங்களை,இந்நூலைப் படித்த ஐரோப்பியர்கள் அவற்றாஇத் தாமே கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பர்.(இன்றைய பல நவீனக்கண்டுபிடிப்புக்கள் இப்படித்தான் நம்மிடமிருந்து கடன் வாங்கப்பட்டு அவைகள் அவர்களின் சொந்தக்கண்டுபிடிப்பாக உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றில் விமானம்,வானொலி,அணுகுண்டு,ரேடாரில் சிக்காத விமானம்,ஏவுகணை ,எண்கணிதம், யோகா மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள் என மிக நீளமானபட்டியல் உண்டு.)

மேலும் ஆர்யபட்டர் எழுதிய மூன்றாவது நூலான ‘லகு ஆர்யபட்ட ஸித்தாந்தம்’ என்ற நூல் இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு எண்ணற்ற நமது முன்னோர்களின் அறிவுப்பெட்டகங்களை இழந்து நிற்கிறோம்.அத்தோடு காணாமல் போன இந்த நூல்களின் நுட்பமான விஷயங்களைப் படித்தறிந்துகொண்ட ஐரோப்பியர் அவற்றை தாமே கண்டுபிடித்ததாகக் கூறவும் செய்தனர்.

Monday, September 21, 2009

EASY METHOD'S FOR GETTING GOD'S GRACE





தெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி


ஒருவன் காளியின் அருளைப் பெற வேண்டுமானால் இராமகிருஷ்ணபரஹம்சரை வணங்கினால் போதும்.

ஒருவன் ஆஞ்சநேயரின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டுமானால் ஸ்ரீராமரை வணங்கினால் போதும்.

ஹயக்ரீவரின் அருளை பெற வேண்டுமானால்,ஸ்ரீஇராகவேந்திரைப் பூஜித்தால் போதும்.

சக்திவழிபாடு வேண்டுபவர்கள் ஆதிசங்கரரை வணங்கினால் போதும்.

திருமூலரை வணங்கினால் சிவகணங்கள்வசியப்படும்.

இயேசுவை வணங்கினால் மைக்கேல் தேவதை வந்து பணிந்து நிற்கும்.

அல்லாவைத் தொழுதால் மலக்குகள் நீங்கள் இட்ட கட்டளையைச் செய்யும்.

நாக மாணிக்க கல் என்றால் என்ன?


அது என்ன நாக மாணிக்கம்?

நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.

எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.

இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.
இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.

ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.
இணையத்தில் நாகரத்தினம் என்றபெயரில் தமிழிலும்,ஆங்கிலத்திலும் தேடி அதன்படம்கிடைக்கவில்லை.மன்னிக்கவும்.


சிவபுராணம் தமிழ்நாட்டின் எல்லா புத்தகக்கடைகளிலும்
கிடைக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டின் 8 கோடித் தமிழர்களில் எத்தனைபேர் அதை வாசித்திருப்பர்?அதை வாசித்தாலே ஒருவருக்கு பாவங்கள் தீர்ந்து புண்ணியம்கிடைத்துவிடும்.


தகுதியுள்ளவனுக்கு தகுதியான நேரத்தில் தகுதியான பொருள் அல்லது பதவி வந்து சேரும்.


இந்த பூமியில் நமது விஞ்ஞான அறிவுக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.அவற்றை நம்புவதும்நம்பாததும் அவரவர் இஷ்டம்.அவற்றை நம் பகுத்தறிவால் ஒருபோதும் உணர முடியாது.சிலவற்றை மனித உணர்வாலும், சிலவற்றைப் பாசத்தாலும்,சிலவற்றை தியானத்தால் மட்டுமே உணரமுடியும்.


இந்துதர்மத்தை அதன் படைப்புக்களாலேயே நக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாத்திகர் இந்து புராணங்களைவாசிக்க ஆரம்பித்தார்.முடிவு அவரே ஒரு அரிய இந்து படைப்பை உருவாக்கிவிட்டார்.அந்த நாத்திகர் கவியரசு கண்ணதாசன்,அவரது அழியாத காவியம்:அர்த்தமுள்ள இந்துமதம்,பாகங்கள்20க்கும் மேல்!!!)

இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த நகைசெய்பவரிம் நாக மாணிக்கம்பற்றிக் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

.HINDU RELIGION IS THE BEST LIFEWAY TO EVERY MAN

Saturday, April 28, 2007
(155) சனாதனதருமம்... Cosmic Science, Criptology
உலகில் அதிர்வு Vibration இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை. Cosmic Vibration என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது. மனித , உயிர்களின் இதயத்துடிப்பு, 50Hz, 60Hz மின்சாரம், ரேடியோ, தொலைதொடர்பு, மைக்ரோவேவ், சூரிய ஒளிக்கதிர், தெருவிளக்கு, மொபைல் போன், என Vibration இல்லாது இயக்கம் இல்லை.

Ultraviolet rays, Infra red rays, Microwave, Radio waves, Electric frequency இவை அனைத்தும் 100 ஆண்டுகளுக்குள் மேற்கத்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறோம்.

சனாதன தருமத்தில் ஆன்மீக விஞ்ஞானிகள் காஸ்மிக் அறிவியலையும், கிரிப்டாலஜி எனும் குறியீட்டு அறிவியலையும் ஒருங்கே இணைத்து பல அறிவியல் விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள் நம் சனாதன் தரும முன்னோர்களான ரிஷிகள், முனிவர்கள்.

மேக்னடிக் வைப்ரேஷன் கொண்டு மூளை, இதயம் இவைகளை ஆராயும் கருவி MRI எனப்படும் Magnetic Resonance Imaging, மற்றும் CT Scan Computed Tomography இவைகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தின் காந்தப்புல அதிர்வுத்திறன் அளவிடும் குறியீடு அதைக் கண்டறிந்த விஞ்ஞானி பெயரான Tesla.

காஸ்மிக் வைப்ரேஷன் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி

நிக்கோலோ டெஸ்லாவின் கருத்து

சனாதன தருமத்திற்கு வருவோம். பாரதத்தின் பாரம்பரிய ரிஷிகள், முனிவர்கள் எவ்வளவு உயரிய அறிவியல் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.

சனாதன தருமத்தின் பெரும் சிறப்பே சிம்பாலிஸம் எனப்படும் குறியீடுகள் வழி உணர்த்தப்படும் விஷயங்கள் தான். மொழிப்பயன்பாட்டின் தடைகளை உடைத்து இல்லாமல் செய்வது குறியீடுகள். Symbols overcome the barrier of Language என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர்கள் சனாதன தரும விஞ்ஞானிகளான ரிஷிகளும் , அருந்தவம் செய்த முனிவர்களும்!

சனாதன ரிஷிகள் தந்தருளிய நடராஜப் பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:





ஒரு கையில் உடுக்கை. ஒலிக்கும் உடுக்கை ஏற்படுத்துவதோ அதிர்வுகள் vibrations! அழிக்கும் கடவுள் என்பதை உணர்த்தும் அக்கினி அடுத்த கையில். காலடியிலே பக்தனுக்குக் குறியீடு வழியாக நடராஜன் நவில்வதோ என்னை அடைய நான் எனும் "ஈகோ"வை மிதித்து அடக்கிப் பழகு என்பது. இன்னொரு கை பக்தனுக்கு அபயம் தருகிறது

சனாதன தருமத்தில் இதர மார்க்கங்கள் போல் அல்லாது இறைவனே பக்தனோடு நேரடியாகக் குறியீடுகள் வாயிலாகப் பேசுகிறான் இறைவன்!

அடுத்து சனாதன மாமுனிவர்கள் தந்தருளிய விஷ்ணு பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:



ஒருகையில் சங்கு. ஒலிக்கும் சங்கு எழுப்புவது அதிர்வுகள் Vibrations. இன்னொரு கையில் சுதர்சன சக்கரம். யுகங்களாய் வளைய வரும் காலம் நான் என்று எடுத்துச் சொல்கிறது. ஒரு கை பக்தனுக்கு அபயம் தந்து அரவணைக்கிறது.

மக்கள் பின்னாளில் மொழியால் பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்வார்கள் என்பதால் முக்காலம் உணர்ந்த ரிஷிகள், முனிவர்கள் இறைவனை ஆலயங்களில் குறியீடுகள் வாயிலாக பக்தனோடு நேரடியாக பேசும்படியாக அமைத்துச்சென்றார்கள் சனாதன விஞ்ஞானிகள்!

ஓம் (AUM) எனும் எழுத்து நேரடியாக இறைவன் மொழி எனப்படுவது அது ஏற்படுத்தும் காஸ்மிக் Vibration காரணமாகத்தான். அ உ ம என்று செய்யப்படும் ஓம் உச்சரிப்பு, மொழி தாண்டிய இறையுடன் ஒலி அதிர்வுகளால் இணைக்கும் இணைப்பு.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அதிர்வு, அது ஏற்படுத்தும் காஸ்மிக் வைப்ரேஷன், ஓம் பற்றிய முழுவிளக்கம் Mandokya Upanisad எனும் உபநிடத்தில் முற்றிலும் விளக்கப்பட்டிருக்கிறது. வைப்ரேஷன் பற்றிய அறிவு சனாதன தரும ரிஷிகளுக்கு, முனிவர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது தெளிவாகும்.

சங்கு, உடுக்கை, ஓம் என்று காஸ்மிக் வைப்ரேஷனைக் குறியீடாக வழிபாட்டில் வைத்த சனாதன ரிஷிகள், முனிவர்கள் ஆரவாரம் இல்லாத அறிஞர்கள்!

சனாதன தருமம் உயர் அறிவியல் என்று அறிவீர்!

போற்றுவோம் பாரதப் பாரம்பரிய சனாதன தருமத்தினை!

பாரத சனாதன தருமம் பழமையானது, தொன்மையானது, இன்றைக்கும் முழுமுதலாக அறிவியல் பூர்வமானது! சனாதனப் பாரம்பரியம் கிடைத்ததற்கு பெருமை கொள்வீர்!


அன்புடன்,

ஹரிஹரன்

நன்றி:www.harimakesh.blogspot.com2007 april

முனி என்றால் என்ன?




ஈஸ்வரன் பட்டம் என்பது மொத்தப்பிரபஞ்சத்திலும் இரண்டேபேருக்குத் தான் உண்டு.ஒருவர் ஈஸ்வரன் எனப்படும் சிவபெருமான்.மற்றவர் ஈவிரக்கமில்லாமல் தர்மத்தைக்காக்கும் சனீஸ்வரன்மூன்றாவதாக ஈஸ்வரப்பட்டம் பெற்றிருப்பது முனீஸ்வரன்.

சிவபெருமானின் அந்தரங்கக்காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.முற்காலத்தில் ஒரு கிராமத்தையே இரவுநேரங்களில் காப்பவர் முனிஆவார்.துஷ்டசக்திகளை அடியோடு ஒழித்துக்கட்டும் பொறுப்பு இவருடையது.
2000 வாட்ஸ் மின்சாரம் பாயும் மின்கோபுரங்களையே தூக்கி வீசி எறியும் சக்தியுடையவர் முனீஸ்வரன்.

இவர் செல்லும் பாதையில் இருக்கும் நிறுவனங்கள் விளங்காது.வேலைக்காரர்கள் வரமாட்டார்கள்.கட்டப்படும் வீடு பாதியிலேயே நிற்கும்.ஒருபோதும் அங்கே யாரும்குடியேற முடியாது.ஒருவேளை குடியேறினாலும் விரைவில் வேறிடம் செல்லும் நிர்ப்பந்தம் உண்டாகும்.அல்லது திடீர் மரணம் நிச்சயம்.

மகாராஷ்டிரபிராமணர்கள் மட்டுமே முனீஸ்வரனைக் கட்டுப்படுத்து சக்தியை அறிந்துள்ளனர்.

முனி என்ற பெயரைக்கொண்ட ஆண்கள்,பெண்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.ஆனால்,இவர்களைப்போல்,பாசமுள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது.இவர்களை தம் வாழ்க்கைத்துணையாகக்கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான்.முனி என்ற பெயரை உடையவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்.அதிகாரத்தால் இவர்களை சிறிதுகூடக் கட்டுப்படுத்தமுடியாது.
பல சந்தர்ப்பங்களில்,முனி என்ற பெயரைக்கொண்டவர்களின் நடத்தை மிக வினோதமானதாக இருக்கும்.சிலநேரங்களில்,இவர்கள் தன்னையறியாமல் கூறும் வார்த்தைகள் நிஜமாகும்.

ஒரு குடும்ப வம்சத்தை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 100 கிளைகள் இருக்கும்.100 கிளைகள் என்பது 100 குடும்பங்களின் தலைமுறைகள் எனச் சொல்லலாம்.ஆனால்,ஒவ்வொரு தலைமுறையிலும்,ஒரே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கே அவர்களின் குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும்.அப்படி ஆசிகிடைத்தவர்கள் எப்போதும் மனதில் சோகமயமாகவே காணப்படுவார்.ஆனால்,அவருக்கு சகலசவுபாக்கியங்களும் இருக்கும்.இப்படி குலதெய்வ அருளாசி பெற்றவர்களுக்கு மட்டுமே முனி என்ற பெயரைக்கொண்டவர்கள் அருள்வாக்கு சொல்லுவார்.அல்லது ஜாதகப்பலன் கூறுவார்.

மதுரை,தேனி,கம்பம்,விருதுநகர்,சிவகாசி,சாத்தூர்,சங்கரன்கோவில்,குற்றாலம்,தென்காசி,ராஜபாளையம்,திருநெல்வேலி,நாகர்கோவில்,தூத்துக்குடி,திருச்செந்தூர்,மார்த்தாண்டம்,குளச்சல் முதலான பகுதிகளில் முனீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் பல லட்சங்கள் இருக்கின்றன.

முனீஸ்வரர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் நகர்வலம் வருவார்.சுமார் 20 அடி உயரம் அதிகபட்சம் 1000 அடி உயரத்துக்கு வெண்புகை வடிவில் கண்கள் பஸ்ஸின் முன் விளக்கு(ஹெட் லைட்)அளவுக்கு அதாவது கால்பந்து சைசுக்கு பிரம்மாண்டமாக நெருப்புபோல பிரகாசிக்கும்.நேருக்குநேர் பார்த்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உடனே மரணமடைந்திருக்கிறார்கள்.

முனீஸ்வரர்கோவிலில் மேல்விதானம் இருக்காது.முனீஸ்வரன் கோவில் அருகே நிச்சயம் ஒரு விதவை குடியிருப்பாள்.நள்ளிரவில் முனி அவளுடன் தொடர்பு கொள்ளுவார்.முனீஸ்வரர் பூஜை என்றபெயரில் கிழக்குப்பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது.தொடர்புக்கு:www.nhm.in

சில முனிப் பெயர்களைப்பார்ப்போம்:
முனி,
முனிரத்தினம்,
முனிராஜ்.
நாகமுனி,
வீரமுனி
ஜடாமுனி
ராஜமுனி
முனிராஜா
அருள்முனி
முனிராம்
முருகமுனி
முனிக்கருப்பன்
முனிதங்கம்
முனிவைரம்
முனீஸ்வரன்
முனீஸ்வரி
ஜெயமுனி
பொன்முனி
வெண்முனி
நாகரத்தினமுனி
சிவமுனி
மகாமுனி
சக்திமுனி
சுந்தரமகாமுனிலட்சுமி
முனிலட்சுமி
முனிகாளி
முனியப்பன்
முனியப்பு
முனியப்பா
முனிவாணி
கலைமுனி
நிலாமுனி
வான்முனி
சகாமுனி
வேல்முனி
ராஜமுனி
ராம்முனி
முனிபிள்ளையார்

இச்சாதாரி என்றால் என்ன?



இது தொடர்பான டிவி தொடர் ஏற்கனவே சன் டிவியில் வந்திருக்கிறது.இருந்தாலும் எத்தனைபேர் பார்த்திருப்பர்.

நாகலோகத்திலிருந்து சில அல்லது ஒரு வேலையை மனிதர்கள் வாழும் இந்த பூலோகத்தில் முடிப்பதற்காக அனுப்பப்படும் நாகங்களே இச்சாதாரி.இச்சை என்றால் ஆசை.இச்சாதாரி என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இவை நினைக்கும் போது நினைக்கும் மனித வடிவமெடுக்கும் திறன் வாய்ந்தவை.பெரும்பாலும் சில மனிதர்களை நேரம்பார்த்துக்கொல்ல அனுப்பப்படுகின்றன. என்பதே இதுவரை நாம் அறிந்தவை.

ஆனால்,மனிதர்களைக் காக்கும் இச்சாதாரிகளும் உண்டு.அவை சில மனிதர்களை சகல சவுபாக்கியங்களுடன்(அவர்களுக்கு ஜாதகப்படி யோகமில்லாவிட்டாலும்) வாழவைக்கின்றன.இம்மாதிரியான இச்சாதாரிகளைப்பற்றி இந்த வலைப்பூவில் முழுமையாக எழுத முடியவில்லை.ஏனெனில்,அவைகளில் நான் அறிந்தவைகளை சென்சார் செய்தே இவ்வளவுதான் எழுதமுடிகிறது.சரி!
யாராவது மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் விளக்கம் அளிக்கிறேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்




மகாவிஷ்ணுவின் பத்துஅவதாரங்களில் 3வது அவதாரமான வராக அவதாரம்(பன்றி) இந்த ஊரில்தான் நிகழ்ந்தது.முற்காலத்தில் இந்த ஊருக்கு வில்லிபுத்தூர் என்றபெயர் இருந்தது.
108 வைணவத்திருத்தலங்களில் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே ஊர் இதுமட்டுமே! ஒருவர் பெரியாழ்வார்,மற்றவர் நாச்சியாரம்மன் என்ற ஸ்ரீஆண்டாள்.ஸ்ரீஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது.
வராக க்ஷேத்திரம் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழையபெயர்களில் ஒன்று
கி.பி.முதலாம்நூற்றாண்டில் ஸ்ரீஆண்டாள் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.
மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் இங்குபிறந்ததால் இந்த ஊரில் வற்றாத பால்வளம் உண்டு.இந்த ஊரின் பாலின்சுவை மட்டுமேதனித்தன்மை வாய்ந்தது.இதிலிருந்து செய்யப்படும் பால்கோவா மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது.
ஸ்ரீஆண்டாள் கோவிலுடன் சேர்ந்தே இருக்கும் ஒரே ஒரு தனிக்கடையில் கிடைக்கும் பால்கோவா மிகவும் ருசி மிக்கது என்பது இந்தியா முழுக்க வாழும் ஆண்டாள்பக்தர்களும்,பக்தைகளும் நன்கு அறிந்த விஷயம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 3 கி.மீ.தொலைவில் வடக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயர் திருவண்ணாமலை.இங்கு மலைமீது அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீஆண்டாள் கோவிலை நோக்கிய வாறு அருள்பாலிக்கிறார்.இந்தகோவில் புரட்டாசிமாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வெளிமாவட்டம்,வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தகோடிகள் வருகைதருகின்றனர்.
அதுவும் புரட்டாசி மாதம் வரும் 3வது சனிக்கிழமை மிகவும் விஷேசம் நிறைந்தது.திருப்பதிக்கு நிகராக ஏராளமான பக்தர்களின் கோரிக்கை நிறைவேற்றுபவர் அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள்.இந்த நாளில்விடிகாலை 2 மணியிலிருந்தே ஸ்ரீநிவாசப்பெருமாளைத் தரிசிப்பதற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருப்பர்.இந்த நாளில், இவரைத் தரிசிப்பவருக்கு செல்வ வளம்பெருகியிருக்கிறது.பெரும் கடனாளிகள்,இந்த புரட்டாசி 3 வது சனிக்கிழமையன்று இவரை தரிசித்த ஒரு வருடத்துக்குள் தனது மொத்தகடனையும் அடைத்துவிட்டவர்கள் ஏராளம்.தொழில்பார்ப்பவர்கள் இதே நாளில்தரிசித்தால்,அடுத்த ஒராண்டுக்குள் தொழிலில் பெரும் சாதனை செய்திருக்கிறார்கள்.




இந்தக்கோவிலுக்கு மிக அருகில் நரிப்பாறை என்ற இடம் இருக்கிறது.அதிகப்பிரபலமில்லாத கோவில் ஒன்று இங்கு இருக்கிறது.இங்கு,முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இங்கு சுமார் 10 பேர் அமரக்கூடிய குகை ஒன்று இருக்கிறது.அந்த குகையின் உள்ளே ஒரு சுரங்கம் செல்கிறது.அந்த சுரங்கத்தின் வழியாக ஊர்ந்துகொண்டே சென்றால் சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ள சதுரகிரி(சித்தரின் பூமி)க்குச் சென்றுவிடலாம்.கி.பி.1979 வாக்கில் கூட சில ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்கள் இந்த சுரங்கம் வழியாக சதுரகிரிக்குச் சென்று வந்துள்ளனர்.


அமெரிக்காவின் சதியால் கி.பி.1969 ஆம் வருடத்துடன் பால்கோவா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்டுவிட்டது.(அதன்பிறகு வந்த எந்த அரசுமே நம்மைப்பற்றியும் நமது பாரம்பரியப்பெருமைகள் பற்றியும்,அதை உலகளவில் பிரபலப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகத் தெரியவில்லை)

இங்கு,அருள்மிகு ஸ்ரீவைத்தியநாதசுவாமி சிவகாமி அம்மாள் கோவில் ராஜபாளையம் சாலையில் இருக்கிறது.இந்த கோவிலின் பெயரான ‘புதுவைத்தலம்’ என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர்களில் ஒன்று.
இங்கு,முற்காலத்தில் துர்வாசமகரிஷி வருகைதந்திருக்கிறார்.இவரது வயிற்றுவலி ஸ்ரீவைத்தியநாத சுவாமியை வழிபட்டப்பின்னர் தான் தீர்ந்தது.
இங்குள்ள ஜீரத்தேவருக்கு மிளகுப்பற்றுப்போட்டால் தீராத நாள்பட்ட ஜீரம் நீங்கும்.
இங்கு சனிபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாய் இங்குதான் இருக்கிறது.இதன்பெயர் பெரிய குளம்.சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது.ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பின்புறமாக அமைந்துள்ளது.முற்காலத்தில்,பெரியகுளத்தின் நீரலைகள் இக்கோவிலின் பின்பக்கமுள்ள சுவரில் மோதுவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையானது இந்த நிலையை மாற்றி பெரியகுளத்துக்கும், ஸ்ரீவைத்தியநாதசுவாமிகோவிலுக்கும் நடுவில் மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையை உருவாக்கிவிட்டனர்.
ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயர் மடவார்வளாகம் ஆகும்.முற்காலத்தில் இங்கு தேவரடியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைமையான சிவாலயமாக இது இருப்பதால் இங்கு ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் கோவிலே கொள்ளாதபடி பக்தகோடிகள் வருகைதருகிறார்கள்.
கி.பி.1875 ஆம் வருடம் பென்னிங்டன் என்ற ஆங்கிலேய கலெக்டர் தன்னுடைய பெயரால் ஒரு நூலகத்தைத்தொடங்கினார்.அது தற்போது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாக விஸ்வரூபமெடுத்து வளர்ந்துள்ளது.இங்கு,ஐ.ஏ.எஸ்.படிப்பவர்களுக்கு என தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.penningtonlibrary.com
தென் தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகம் அருள்மிகு கலசலிங்கம்பல்கலைக்கழகம் இங்கிருந்து 10 கி.மீ.தொலைவில் செயல்பட்டுவருகிறது.இதன் இணையதளமுகவரி:www.kalasaling.ac.in
விருதுநகர் மாவட்டத்தின் மாவட்டநீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவருகின்றன.இவை சிவகாசி சாலையில் அரசு பொதுப்பணித்துறையின் மாளிகைக்கு எதிராக இருக்கின்றன.
கோவை தமிழ்நாடு அரசு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பிரிவான பருத்தி ஆராய்ச்சிமையம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகில் செயல்பட்டுவருகிறது.இங்கு எஸ்.வி.பி.ஆர்.என்ற ரகநெல்கள்கண்டுபிடிக்கப்பட்டன.
உலகிலேயே சாம்பல்நிற அணில்கள் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியில்தான் காணப்படுகிறது.இதனால்,அரசு சாம்பல்நிற சரணாலயம் இங்குள்ள செண்பகத்தோப்புப்பகுதியில் அமைத்துள்ளது.
இங்கு பனைமரங்கள் அதிகம் இருப்பதால் பனை ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.இது தற்போது செயல்படவில்லை.

தமிழ்நாடு அரசு சின்னமாக இருக்கும் கோபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரமாகும்.இதன் உயரம்192 அடி.இந்த கோபுரத்தில் எந்த வித இந்துதெய்வங்களும் இல்லாததால் தான் இந்த கோபுரத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக்க ‘நாத்திகக்கொள்கை’கொண்ட ஜவஹர்லால் நேரு சம்மதித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மக்களின் பிரதான தொழில்களாக கைத்தறி நெசவு, தங்க நகை தயாரித்தல் மற்றும் விற்பனை,விவசாயம் இருக்கின்றன.

கி.பி.1700 களின் இறுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கோட்டை இருந்தது.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனை ஆண்டு வந்தவர் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், சங்கரன்கோவில் பகுதியில் அரசாண்ட மாவீரர் புலித்தேவன் அவர்கள் இந்த கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைத்தலைவாசல் என்ற இடமும்,கோட்டாங்கரை என்ற இடமும் தற்போது புழக்கத்தில் உள்ளதே இதற்குச் சான்று.

அரசு மருத்துவமனை,காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம் இம்மூன்றும் ஒரே இடத்தில் (விருதுநகர் மாவட்டத்திலேயே)இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே!

இதுதவிர,சிவகாசி ரோட்டில் கைகாட்டிசுவாமிகள் என்ற மகான் வாழ்ந்த இடம் தற்போது கோவிலாக இருக்கிறது.மாவட்ட நீதிமன்றம் செல்லும் சாலையில் பாம்புதின்னி சுவாமிகள் வாழ்ந்த இடம் ஆறுமுகச்சாமிகோவிலாக இருக்கின்றது.இந்த இடத்தின் இன்னொரு பெயர் பணியாரத்தோப்பு.இங்கிருந்துதான்,ஸ்ரீஆண்டாள்கோவில் கோபுரத்துக்கான சாரம் கட்டமைக்கப்பட்டிருந்தது.இன்றைய பேன் டா 1 1/2 லிட்டர் கேன் தடிமனும்,சுமார் 3 கனஅடி கொண்ட ஒரு செங்கலை இங்கிருந்து,கோபுரம் கட்டும் இடம்வரை சாரத்தின் வழியே 1 கி.மீ.தூரத்தில் கொண்டுபோய் கொடுத்தால் ஒரு பணியாரம் சம்பளமாகக்கிடைக்குமாம்.அந்த பணியாரம் தற்காலத்தில் உள்ளதுபோல சிறிதாக இல்லாமல்,மிகப்பெரியதாக இருந்ததாம்.
ஊரணிப்பட்டித்தெருவில் பொன்னாயிரசுவாமிகள் என்ற மகானும்,வெள்ளைச்சாமி என்ற மகானும் வாழ்ந்திருந்தனர்.

பணியாரத்தோப்பின் அருகே ஒரு சுடுகாடு தற்போது புழக்கத்தில் உள்ளது.இங்கு கி.பி.2002 வரை மாணிக்கம் சுவாமிகள் என்பவர் வாழ்ந்திருக்கிறார்.


முதலியார்பட்டித்தெருவில் உள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் இருக்கிற்து.ஒவ்வொரு சிவராத்திரியன்றும் இங்கு ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் தனது கைகளால் அப்பம் சுடுகிறார்.கையில் ஒரு சிறு காயமும் ஏற்படுவதில்லை.இந்தபத்திரகாளி ஏராளமான மக்களின் வேதனைகளைத் தீர்த்துவருகிறாள்.அப்படித்தீர்ந்த வரலாற்றைத் திரட்டிவருகிறேன்.விரைவில் அதற்கென்றே,இருக்கும் தனிவலைப்பூவான(global-guardian-angel.blogspot.com)இல் படிப்படியாக வெளியிடப்படும்.இங்கு,நடைபெறும் பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டால்,மறுநாளே நமது பிரச்னைகளில் ஒன்று அல்லது இரண்டு உடனே தீர்ந்துவிடுகிறது.இது அனுபவ உண்மை.ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியன்று இரவு 11 மணிக்கு ஆரம்பிக்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது.நிறைவாக அன்னதானமும் நடைபெறுகிறது.

தவிர,தாசில்தார் அலுவலகம் அருகே(பெட்ரோல் குடோன் அருகில்) ஒரு அம்மன்கோவில் இருக்கிறது.இங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 மணி முதல் 7மணி வரை ஒரு பாட்டி அருள்வாக்கு சொல்கிறார்.பணம் எதுவும் வாங்குவதில்லை.
கிபி.1970 வரை 30 வருடங்களுக்கு இந்த கோவிலில் ஒரு முஸ்லீம் தாத்தா இதேபோல அருள்வாக்கு சொல்லிவந்திருக்கிறார்.