Monday, November 23, 2009

இந்தியாவை மனக்குரல்தான் ராம்ஜெத்மலானி அவர்களின் பேச்சு


ராம்ஜெத்மலானியின் பேச்சுக்கு பாராட்டுக்கள்

நேற்று 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுடெல்லியில் ஒரு மாநாடு நடந்தது.அது தீவிரவாதம் தொடர்பான சர்வதேச நீதிபதிகள் மாநாடு ஆகும்.அதில் இந்திய (நமது) ஜனாதிபதி ப்ரதீபா பாட்டீல், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உலக நாடுகளின் நீதிபதிகள்,சட்ட அமைச்சர்கள்,மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில் இந்திய புகழ் வக்கீல் ராம்ஜெமலானி பேசிய பேச்சு விபரம் வருமாறு:
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மோசமாக உள்ளது.
அணிசேரா இயக்கம் ஒரு தீமை;

மத்திய அரசின் பஞ்சசீலக் கொள்கை ஒரு பெருங்கேடு;

தீயவற்றை அழிக்க நல்ல சக்திகளுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும்.

இந்தியாவின் விரோதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் உறவை முறித்துக்கொள்ளும் அளவுக்கு துணிச்சலாக வெளியுறவுக்கொள்கை அமையவேண்டும்.”
இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.அதற்கு சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மறுத்துப்பேசினார்.அது:
பஞ்சசீலக் கொள்கையில் இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது.(ஆமாம்.எங்களுக்குக் கொள்ளையடிக்கவே நேரம் பத்தவில்லை; புதிய கொள்கையை உருவாக்கிட எங்களுக்கு நேரமில்லை) அணி சேரா இயக்கத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது.(ஆமாம்.நாங்கள் எங்கள் கட்சி உறுப்பினர்கள்,அரசாங்கத்தின் நலனை மட்டும்தான் பார்ப்போம்.நாட்டின் நலனைப் பார்க்க மாட்டோம்).அந்த உறுதியை எந்த ஒரு நாடோ தனிநபர்களோ குலைக்க முடியாது.(இந்தியாவின் மரியாதையை,சுயச்சார்பினை,சுயமரியாதையை நாங்கள் மட்டுமே குலைப்போம்.அமெரிக்காவின் வீழ்ச்சியை சரியாகக் கணித்து,இந்தியாவை அந்த இடத்துக்குக் கொண்டு வர விடமாட்டோம்).

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெல்மலானியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து.அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை(எங்கள் காங்கிரஸ் அரசு எப்போதுமே இந்திய மக்களின் நலனைப் பற்றி மட்டும் கவலைப்படாது)
நன்றி:தமிழ்முரசு பக்கம் 4,மதுரைப் பதிப்பு நாள் 22.11.2009.

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் கருத்து தனிப்பட்ட கருத்து என மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.
அணிசேரா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது 1955 ஆம் வருடத்தில்!
முதலாளித்துவம் பேசும் பின்பற்றும் அமெரிக்காவுடனும்,
தொழிலாளித்துவம் பேசும் பின்பற்றிய சோவியத் ரஷ்யாவுடனும்
கூட்டு சேராமல் உலக அரசியலில் நடுநிலையோடு செயல்பட நம்ம நேருமாமாவால் உருவாக்கப்பட்டது.

1990களின் பிற்பாதியில் அமெரிக்கா தனது நீண்டகால+திட்டமிட்ட+ஒருங்கிணைந்த முயற்சிக்குப் பின்னர், சோவியத் ரஷ்யாவை துண்டு துண்டாக உடைத்தது.சுமார் 16 நாடுகளாக சோவியத் ரஷ்யா பிரிந்துவிட்டது.கம்யூனிசமும் காணவில்லை.
தனது எதிரியை ஒழித்துக் கட்டியதில் அமெரிக்காவுக்கு பரம சந்தோஷம்.

உடனே, சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியது.1.1.1995 அன்று நடைமுறைக்கு வந்த உலக வர்த்தக அமைப்பினை பணக்கார நாடுகளுக்கு ஆதரவாக மாற்றியே செயல்படத்துவங்கியது.
அமெரிக்கா செய்யும் உலக தீவிரவாதத்திற்கு துணைபோவது ஆபத்து என உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றிணைந்து 1.1.2000 முதல் ஐரோப்பிய ஒன்றியம் என்று செயல்படத்துவங்கின.பொதுப்பணமான யூரோவை அறிமுகப்படுத்தின.

அமெரிக்காவின் அம்மாவான பிரிட்டன் ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டு யூரோவில் சேர்ந்தது.பாதி அமெரிக்க ஆதரவும் பாதி ஐரோப்பிய ஒன்றிய ஆதரவும் என டீன் ஏஜ் பெண்ணாக காலம் கடத்துகிறது.
இன்று உலக வர்த்தகத்தில் 30% ஐரோப்பிய யூனியனில் நடைபெறுகிறது.

இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ.45 முதல் ரூ.55 வரை! ஆனால்,நிஜமாகவே ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ்ரூபாய் மதிப்பு ரூ8/-மட்டுமே.
சரி! பிறகு எப்படி ரூ.45/-க்கு நிலைநிறுத்தப்படுகிறது.நம்ம ப.சிதம்பரம்தான் காரணம்.இந்தியாவை இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவை தூக்கி நிறுத்தியிருப்பது நம்ம ப.சிதம்பரம்தான்.இதற்காக அவர் செய்யும் செயல்களை விளக்க 1000 பக்கங்கள் விளக்க வேண்டும்.அப்படியே விளக்கினாலும்,அது உங்களுக்குப் புரிய உலகப் பொருளாதாரம் கொஞ்சமாவது நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.சுமார் 20,000 பொருளாதார சொற்களின் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.
தற்போது ஒரு யூரோவின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.70 முதல் ரூ.85 வரை!!
(கி.பி.1750 வரை உலக வர்த்தகத்தில் நம் நாடான இந்தியாவின் பங்கு 25 முதல் 30% என்பதை நினைவில் வைக்கவும்.முழு விபரம் அறிய நமது ஆன்மீகக்கடலில் முழுமையாக நீந்தவும்.)

இந்நிலையில் அமெரிக்காவில் 400 மாபெரும் வங்கிகள் திவால் ஆகின.இன்றைய நாள் படி இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்..ஆக, அமெரிக்காவின் பணமான டாலரும் தொபுக்கடீர்!!!!

பிறகு எதற்கு அணிசேரா இயக்கம்?ராம் ஜெத்மலானி கேட்டது என்ன தப்பு?

பஞ்சசீலக் கொள்கை என்பது இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக அமைதியை உருவாக்கும் நோக்கில் உருவாக்கியது.உருவாக்கியவர் அதே நேருமாமாதான் கி.பி.1955 ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார்.கி.பி.1967 ஆம் ஆண்டில் நம்மிடம் சீனா போர் தொடுத்து,நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை ஆக்கிரமித்தது.பஞ்ச சீலக் கொள்கை நமக்கு பஞ்ச் சீல் கொள்கையாகி விட்டது.
ஆனால், சீனா முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் நம் இந்தியாவை 18 துண்டுகளாக உடைக்க திட்டமிட்டு கி.பி.1990 முதல் செயல்பட்டுவருகிறது.நமது நட்புநாடுகளையும் நமக்கு எதிராக மாற்றிவிட்டது.பாகிஸ்தான்,இலங்கை,நேபாளம்,வங்கதேசம் என அனைத்துக்கும் உதவி செய்யும் விதமாக நமது எதிரிகளாக்கிவிட்டன.நாம் நமது அண்டை நாடுகளை அடிமை மாதிரியும், அவசரகாலத்தில் கூட அவர்களுக்கு உதவாமலும் இருந்துவந்தோம்.நாம் ஒரு இந்துதேசம் என்பதைக் கூட மறந்தோம்.

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையும்,அத்துடன் வரும் சீன ராணுவ வீரர்களும் அடிக்கவும்,நிர்வாணப்படுத்தியும்,மீன்பிடிப்படகுகளை உடைத்தும்,மீனவர்களை சுடுவதும் தினசரி செயல்களாகிவிட்டன.இதைத் தடுக்க வேண்டிய நமது முதல்வர் கருணாநிதி தாத்தா, இறக்குமதி அன்னை மன்னிக்கவும்.இறக்குமதி சித்தி சோனியா, மன்மோகன்சிங், தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை?
அதே நேரம் எங்கே சீனாவும், இந்தியாவும் பொருளாதார ரீதியில் ஒன்று சேர்ந்தால் (அது உலக பொருளாதாரத்தில் 50 முதல் 60%வரை கைப்பற்றிவிடும்.அப்படி ஒரு நிலை வந்தால் யூரோவின் பணமதிப்பும் சரிந்துவிடும்.டாலர் சராசரிப்பணமாகிவிடும்.அப்புறம்,அமெரிக்கக் கனவு, அமெரிக்க வேலை,அமெரிக்க சிந்தனை அத்தனையும் மாறி, அமெரிக்காவும் உலக நாடுகளின் இளைஞர்கள் இந்திய வேலை, இந்திய ரூபாய்,இந்திய வாழ்க்கை என கனவு காண ஆரம்பித்துவிடுவர்.இதை இன்னும் மன்மோகன்சிங்கும், ப.சிதம்பரமும்,எம்.கே.நாராயணனும் உணரவில்லை.ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் நன்றாகவே உனர்ந்திருக்கின்றன.)
அமெரிக்காவாகிய நாம் பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிடுவோமோ எனப் பயந்து அமெரிக்கா சீனாவை நமக்கு எதிராகக் கொம்பு சீவி விடுகிறது.சீனாவும் பேராசையோடு நம்மை தாக்கவும்,நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் சுறுசுறுப்பாக நாசவேலைகளை ஐ.நா.சபை, ஆசியான்,ராணுவம், மீடியா என சகல இடங்களிலும் செய்து வருகிறது.
நமது முன்னாள் நண்பன் ரஷ்யாவோ பாவம் அது பரம ஏழை நாடாகிவிட்டது.வேறு யாரும் உலக அரங்கில் நமக்கு ஆதரவு இல்லை.நம்மை நாம் மட்டுமே பாதுகாக்க வேண்டும்!

நாம் என்ன செய்கிறோம் என நமக்கே தெரியவில்லை.பிறகு எதற்கு பஞ்ச சீலக் கொள்கை?
பஞ்சுமிட்டாய் கொள்கையை வைத்துக் கொண்டாடுவோம்.


அமெரிக்காவும் சரி; சீனாவும் சரி ; சுயநலமே பெரிது என உலக அரங்கில் செயல்பட்டுவருகின்றன.பிறகு ஏன் நாம் பாடாவதியாகிப் போன கொள்கைகளை வைத்துக் கொண்டு மாரடிக்கணும்??

ஆக, ராம்ஜெத்மலானியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; இந்தியாவின் இந்தியாவை நேசிப்பவர்களின் இந்திய தேசபக்தர்களின் மனக்குரல்!!!

Thursday, November 19, 2009

SELF RELIANCE QUESTION AND ANSWERS

சுதேசி கேள்வி பதில்:ஏப்ரல் 2008 சுதேசி செய்தி

1) சென்ற முறை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் இந்துக்கள் அல்லவா’ என கருணாநிதி ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளாரே?

இந்து என்றால் திருடன் என்று கூறியவரும் கருணாநிதிதான்.இன்று தன் மகளை இந்து என்று கூறுபவரும் இவர்தான்.ஆக கனிமொழி . . .?

2) திபத் பிரச்னையில் சீனாவின் அடக்குமுறையை இந்தியா கண்டிக்காதது ஏன்?
நேருவின் குடும்ப அரசியலில் இருந்தும், அவரது கோணல் தேசிய அரசியலில் இருந்தும் நாள் இந்தியாவிற்கு நன்னாள்.அதுவரை நீங்கள் இதுபோல் கேட்பதும், நாங்கள் பதிலளிப்பதும் தொடரத்தான் செய்யும்.

3)இந்தியாவின் பிரதமராகத் தகுதியானவர் ராகுல்காந்தி என்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியிருக்கிறாரே?

ஆமாம்,ராகுல் மாதிரி ஓர் கத்துக்குட்டி சொகுசுப் பேர்வழி பிரதமராக இருந்தால்தானே இவர்கள் இஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ள முடியும்.அதனால் பிளேர் அப்படித்தான் கூறுவார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சுதேசி செய்தி ஆகஸ்டு 2009 இல் வெளிவந்தவை:

1)முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை சோதனை செய்த அமெரிக்க விமான நிறுவனம் காண்டினென் டல் ஏர்லைன்ஸ் பற்றி?

தெரிந்ததே! எடுத்துக் கூறிய பிறகும் செய்திருக்கிறது.இது கண்டிக்கத்தக்கதே.நாமும் ஹிலாரி கிளிண்டனை சோதனை செய்யும் உரம் பெற்றவர்களாக மாறும்போது இது போன்ற பிரச்னை வராது.

2)ராமாயணத்தை தொடர்ந்து விமரிப்பேன் என்கிறார் கருணாநிதி?

நாளையே ராமன் எனக்கு விருப்பமானவனே எனவும் கூறலாம்.
சேதுப் பாலம் விஷயத்தில் அடிக்காத பல்டியா? எத்தனை சினிமாக்களில் சவால் விட்டு அடிவாங்குகிறார் வடிவேல்.அதுபோலத்தான் இதுவும்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சுதேசிச் செய்தி:செப்டம்பர் 2008 கேள்வி பதில்

1)கனிமொழி ஹிந்திப் பண்டிட்டாமே!

ஹிந்தி ஒழிப்பு அவர்களுக்குக் கிடையாதா எனக் கேட்க வருகிறீர்களா அல்லது அந்த குடும்பத்தில் கல்வி முறையில் தமிழ்ப் பண்டிட் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்க வருகிறீர்களா?

3) ஒரிஸா கந்தமாலில் தொடரும் வன்முறை பற்றி?
40 ஆண்டு காலம் ஆசிரமம் அமைத்து கிறிஸ்தவ மதமாற்றத்தை தடுத்து மக்கள் சேவை செய்துவந்த 84 வயது ஹிந்துத்துறவி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.விளைவுதான் தொடரும் வன்முறை.
ஒரு பாதிரி கொலை செய்யப்பட்டபோது வானுக்கும் பூமிக்கும் குதித்த பத்திரிகைகள் இப்போது ஊமையாக. . .தேவைப்படும்போது ஹிந்துவை மட்டும் குறைகூறுவதால் ஏற்பட்ட கோபம் இது!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


சுதேசி செய்தி:மே 2008 கேள்வி பதில்

1)கடலின் மத்தியில் சென்று ராமர் பாலத்தில் வழிபாடு செய்கிறார்களா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனரே?

சூரியனையும், சந்திரனையும் வழிபடுபவர்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றா வழிபடுகிறார்கள்.அதற்காக சூரிய சந்திரர்களை அழிக்க முற்படலாமா?இது கேட்டவருக்கான பதில்.இனி வருவது கேள்விக்கான பதில்:1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ‘ராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு “நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.
நீதிபதிகளே நிதானம் தவறினால். . .!



2) ‘ராமானுஜரைப் போல வைராக்கியத்தோடு கொள்கை மாறாமல் நமது அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நாடு எவ்வளவு முன்னேறியிருக்கும்’ என முதல்வர் கருணாநிதி ‘தசாவதாரம்’ படவிழாவில் பேசி உள்ல்ளாரே?

ராமானுஜரை ஏற்றுக் கொண்டோம் என்றார்.பிறகு ‘திரும்பிப் பார்’ படத்தின் காட்சிகளை நினைவுகூர்ந்து ‘திருக்கோஷ்டியூர் கோயில் மதிலில் இருந்து கீழே விழுந்தவ்ர்’ என வரலாற்றில் பொய் கூறி கேலி செய்தார்.இப்போது அவரது கொள்கை வைராக்கியத்தை பாராட்டுகிறார்.என்னே நமது முதல்வரின் தேசபக்தியும் கொள்கைப் பிடிப்பும்!


3)வடமாநில தெய்வங்களைப் புறக்கணித்து, தமிழ் தெய்வங்களை மட்டுமே வணங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் சுயமரியாதைக் குரல் எழுப்பியுள்ளாரே?

அல்லாவையும்,ஏசுவையும் வழிபடுபவர்கள் தமிழர்கள் அல்ல என சொல்லும் தைரியம் அற்ற நபும்சகனின் வார்த்தைக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

சுற்றுச்சூழலின் அவசியத்தை வெளிப்படுத்தும் படம் பேராண்மை


திரைப்பட விமரிசனம்: பேராண்மை

நமது ஆன்மீகக்கடலில் திரைப்பட விமரிசனம் தேவையா? என தீபாவளி முதலே யோசித்துக்கொண்டிருந்தேன்.எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பேராண்மை தமிழ் திரைப்படத்தைஇரண்டாவது முறையாகப் பார்த்ததும் உணர்ந்தேன்.
திரைப்படங்களில் எவ்வளவோ நல்லதும் கெட்டதும் வந்தாலும் சுற்றுச்சூழலும் தேசபக்தியும் இந்தப் படத்தில் பிரதானமாக இருப்பதால் எழுதுகிறேன்.திரைப்பட விமரிசனம் ஆன்மீகக்கடலில் எழுதுவது தவறு என வாசகர்களாகிய நீங்கள் கருதினால்,ஒரு மின் அஞ்சலில் பதில் அல்லது கமெண்டு பகுதியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.


மலையேற்றப்பயிற்சிக்கு வரும் டீன் ஏஜ் மாணவிகளில் மிகவும் துடுக்கான 5 பேரை மனித நடமாட்டமில்லாத காட்டுக்குள் அழைத்துச் செல்லுகிறார் ஜெயம்ரவி.
போகும் காட்டில் ஆங்கிலேய கூலிப் படையை ஒரு மாணவி பார்க்கிறாள்.கதை விறுவிறுப்பாகிறது.காட்டிலாகா அதிகாரியான ஜெயம்ரவிக்கு ராக்கெட் தொழில் நுட்பம்,துப்பாக்கி,கண்ணிவெடிகள்,உலகப் பொருளாதாரம்,உள்ளுணர்வைப் பயன்படுத்தி துல்லியமாக முடிவெடுத்தல்,எதிரியைக் கொல்லுதல் என பல துறை நிபுணத்துவம் இருக்கிறது.ஆக ஜெயம்ரவி இந்திய உளவுத்துறை நபராகத்தான் இருக்கிறார் என்பது எனது யூகம்.
இயற்கை விவசாயத்துக்கு இந்தியா ஒரு செயற்கைக் கோளைப் பறக்க விடப்போகிறது.
அந்த செயற்கைக் கோளை ஏவும் போதே அழிக்க சிறு ஏவுகணையோடு 16 பேர் கொண்ட ஆங்கிலேயர்கூட்டம் அந்த தடை செய்யப்பட்ட காட்டுக்குள் வருகின்றனர்.அவர்கள் அனைவரையும் கொன்று, அவர்களின் சதியை ஜெயம்ரவி தனது 5 மாணவிகளோடு முறியடிப்பதுதான் கதை.


நான் பேராண்மையை தீபாவளிக்கு மறுநாள் பார்த்தேன்.அப்போது இருந்த சில வசனங்கள் நேற்று(18.11.2009)இல்லை.
ஒரு மாணவி கேட்பாள்: “யார் சார்! நம் செயற்கைக் கோள்களை அழிக்க விரும்புகிறார்கள்”
ஜெயம் ரவி, “ இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் நமது எதிரி நாடுகள்தான்.”
மாணவி, “எந்தெந்த நாடுகள் சார்”
ஜெயம் ரவி, “ அவர்கள் அனுப்பிய கூலிப் படைதான்.இவர்களுக்கு எந்த தேசபக்தியும் கிடையாது”

நேற்று,பார்த்ததில், “நமது எதிரிநாடுகள் . . . எந்தெந்த நாடுகள்” என்பவை இல்லை.

அட!!! நாம், நமது நாடு அவ்வளவு தொடநடுங்கிகளா? மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சொல்லும் வசனம்தான் ஞாபகம் வருகிறது. ‘கள்ள உறவை வெளிப்படையாகச் செய்யமுடியுது.கூடப்பிறந்தவங்களுக்கு உதவிசெய்யுறதை ரகசியமாகச் செய்ய வேண்டியிருக்கிறது’

ஜெயம்ரவியின் மேலதிகாரி பொன்வண்ணனுக்கு ஏன் இவ்வளவு அறிவு கெட்டத்தனம்? இந்திய நாட்டையும், இந்திய இறையாண்மையையும் 2 மாணவிகளை பலி கொடுத்துக் காப்பாற்றியது ஜெயம்ரவி. ஆனால், ஜனாதிபதியிடம் அவார்டு வாங்குவது பொன்வண்ணன்.
பொன்வண்ணனின் கேரக்டர்கள் தமிழ்நாட்டில் ஏராளம்.உழைக்காமலும், போராடாமலும் பதவிக்கும்,புகழுக்கும் பிசாசாக அலைபவர்கள் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அரசியல் துறையில் மட்டுமல்ல; ஐ.டி.,கல்வித்துறை,அறக்கட்டளை,சேவைத்துறை,காவல்துறை, உளவுத்துறை,ராணுவம்,ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் என எல்லாத் துறையிலும் லட்சக்கணக்கான மானங் கெட்ட ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள்.இவர்களால், எத்தனை இந்தியக் கண்டுபிடிப்புக்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கின்றன தெரியுமா?

ஜெயம்ரவி பழங்குடி இனத்தில் பிறந்து காட்டிலாக அதிகாரியாக வருகிறார்.இவரைப்பற்றி அறிமுகம் செய்யும் பொன்வண்ணன் பேசும் வசனங்கள் தடைசெய்யப்பட்டு உதடு மட்டும் அசைகிறது.இதன்மூலம் ஜாதி வெறி இன்னும் நாம் கைவிடவில்லை என்பது தெரிகிறது.

5 துடுக்கான மாணவிகளின் கொட்டம் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மொத்தமாணவிகளின் மேல்தட்டுவர்க்கத்தின் அடையாளம்தான்.இந்த மேல்தட்டுவர்க்கத்தின் திமிர்த்தனம் இன்று சாதாரண மாணவிகளிடமும் பரவி வருகிறது.எனவே, செக்ஸ் விஷயத்தில் இனி ஆண்கள் மீது மட்டும் குற்றம் இருக்கும் என்பதை ஏற்க முடியாது. ஆக, நிர்வாகத்தில் இருப்பவர்கள் மிக மிக திறமை மற்றும் சாமர்த்தியசாலிகளாக இருக்கவேண்டியது அவசியம். பெண் அழுதால் மட்டும் அந்தக் கண்ணீரின் அடிப்படையில் ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பது முட்டாள்த்தனம்.ஆனால் கல்லூரி, பள்ளி, அலுவலகம், அரசுத்துறை,ஐ.டி.என எல்லாத்துறையிலும் பலிகடா ஆவது ஆண்கள்தான்!!!

கல்வித்திட்டத்தில்மாபெரும் மாற்றம் தேவை;என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்ற பயிற்சிகளில் பயிற்சி ஆசிரியருக்கு மனோதத்துவப் பயிற்சி முழுமையாகத் தேவை. அந்தப் பாடத்திட்டத்தையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருப்பது அவசியம்.இல்லாவிட்டால், இந்தியாவாகிய நாம் வல்லரசாகியும் பயனில்லை.உருப்படாத, திமிர்த்தனம் நிறைந்த ஒரு சமுதாயத்தைத் தான் இன்றைய மெக்காலே கல்வித் திட்டம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் அதைப் பற்றி ஆளும் வர்க்கத்துக்கு சிறிதும் கவலையில்லை.



பெரும்பாலான கல்லூரி, பாலிடெக்னிக் மாணவிகள் பருத்தி வீரன் முத்தழகுகள் போல ஆண்மைத்தனம் நிறைந்தவைகளாகவே செயல்பட்டுவருகின்றனர்.தமிழ்நாட்டில் 2001 வரை ஊருக்கு ஒரு முத்தழகு இருந்தால் அது அதிகம்! இன்றோ ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சந்துக்கு ஒரு முத்தழகு இருப்பது நேரடி அனுபவம்.!!!



அவர்களில் ஒருத்தி ஜாதி பார்ப்பது,ஜெயம் ரவியை அவமானப்படுத்துவது என கொடூரமான துடுக்குத்தனத்தின் உச்சத்தை படம் நெடுக பார்க்கலாம்.
உணர்ச்சியே காட்டாத ஜொள் விடாத பாத்திரம் ஜெயம் ரவிக்கு!!! எப்போதும் கடமையே கண்ணாக இருக்க வேண்டும் என்பதை நம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரி கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.(உங்கள் லட்சியத்தில் நீங்கள் ஜெயிக்கவேண்டுமானால் மனித உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடாது.இந்த படத்தில் வரும் கதாநாயகனைப் போல)
சீமைக்கருவேல மரங்களை சதி மூலமாக வெளிநாடுகள்(நமது இன்றைய எதிரி நாடுகள் மட்டுமல்ல; நட்பு நாடுகளும்தான்) நம் நாட்டில் வளரவைத்து நமது நீர்வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொடுமை கி.பி.1947 லிருந்தே நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் கஞ்சி தொட்டிக்காலம் என 1970 களில் இருந்தது. அப்போது நான் கூட பிறக்கவில்லை.ஆனால் அதன் கொடூரத்தை நான் கேள்விப்பட்டது நிறைய்ய. நம் மீது இரக்கப்பட்டு கோதுமையை இலவசமாக அண்ணன் அமெரிக்கா தந்தது.அப்போது தமிழ்நாட்டில் அறிமுகமானதுதான் புரோட்டா.இன்று 170 விதமான புரோட்டாக்கள் தமிழக உணவகங்களில் கிடைக்கின்றன.இவற்றில் ஓரளவே சத்துக்கள் உண்டு.ஆனால், புரோட்டா தயாரிக்கும் பொருட்களால் கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியல் மிக நீளம்.
இந்த கோதுமையோடு இந்தியாவுக்கு திருட்டுத்தனமாக வந்ததுதான் ஆகாயத் தாமரைச் செடிகள்.நமது நீர் வளத்தை உறிஞ்சி, தஞ்சாவூர் போன்ற நீர் வளம் நிறைந்த பகுதிகளையே தார் பாலை நிலமாக்கும் சக்தி வாய்ந்தவை.
(இது போல நமது நாட்டை விவசாயத்தை அழிக்க ஏராளமான சதிவேலைகள் நிறைய்ய நடந்து வருகின்றன.வாசகர்களாகிய உங்களுக்கு தெரிந்த தகவல்களை அனுப்பினால் உங்கள் அடையாளங்களுடன் வெளியிடுவது எனது கடமை!)

கி.பி.2030க்குப் பிறகு இந்திய ஆண்களின் ஆண்மைத்தன்மை 20% ஆகிவிடும்.இதனால் குழந்தைப் பிறப்பு நின்றுவிடும்.ஏனெனில், இந்தியாவில் விவசாய விளைபொருட்களில் அந்தளவுக்கு ரசாயன உரங்கள் கலக்கப்படுகின்றன.இது அரிசி,கோதுமை,பருப்புவகைகளில் அதிகம் கலந்து மனித உணவாக உண்டு வருகிறோம்.விளைவு?
தாய்ப்பாலில் இந்த நஞ்சு 70% அளவுக்கு கலந்துள்ளதை 2002 ஆண்டில் ஒரு ஆய்வு தெரிவித்தது.

பசுமைபுரட்சி என்ற பெயரில் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது உண்மைதான்.பக்க விளைவாக, நமது பாரம்பரிய மரபுச் செல்வமான இயற்கை விவசாயத்தை, இயற்கையாகவே விளையும் ஏராளமான அரிசி,கோதுமை ரகங்களை இழந்தோம்.பசுமை புரட்சியால் அமெரிக்க உரக்கம்பெனிகள் பல கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டின.இதைத் தான் பேராண்மையில் ஜெயம்ரவி,
“இனிமே வெளிநாட்டுக்காரன் ஊறுகாய் விற்க இந்தியா வந்தால் கூட அவனை நாம் சந்தேகப்படவேண்டும்” என வசனம் பேசியிருக்கிறார்.
நிஜத்தில் ஃப்ளூரைடு கலந்த பற்பசை சுமார் 120 ரகங்களை சந்தையில் நாம் பயன்படுத்துகிறோம்.அவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகள்.(சில மட்டுமே இந்திய தயாரிப்புக்கள்.)அதனால் எத்தனை நன்மை என்பதை உங்கள் பல் மருத்துவரிடம் கேளுங்கள்.தெரியும்?
கோக் கோடு என்னைப் பாரு. என அக்ஷய்குமார் மேடையில் ரூ.100 கோடி சம்பளத்துக்காக விளம்பரம் நடித்தார்.கோக் என்ன மூக்குக் கண்ணாடியா?
(ஒரு இந்திய டீன் ஏஜ் பெண் தினமும் 300 மிலி பன்னாட்டுக் குளிர்பானம் அருந்திவந்தால் சில வருடங்களில் அவளது மாதவிலக்கு ஒழுங்கு சிதைகிறது.28 நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதவிலக்கு 15 நாட்களுக்கு அல்லது 42 நாட்களுக்கு ஒரு முறை என சிதைந்து போகிறது.இதுவே 25 வயதைக் கடந்த பெண்ணாக இருந்தால்,அவள் தினமும் ஒரு சிறிய பன்னாட்டுக் குளிர்பானம் அருந்தி வந்தால் சிலமாதங்களில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது ஆய்வில் கண்ட தகவல்.
இந்த ஆய்வு முடிவை பெரியளவில் பிரபலமாக்காமல் இருக்க அந்த ஆய்வுக்கூடத்துக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பல நூறு கோடிகளை அன்பளிப்பாக்கி அமுக்கிவிடுகிறது.
இருந்தும் ஏன் இதை அரசியல் கட்சிகள் சீரியஸாக்க வில்லை.?அவையும் விலை போகின்றன என்றுதானே அர்த்தம்)
முடிவாக, உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தை நம்முடைய நாடு தான்.நம்மைவிட சீனா மிகப் பெரிய சந்தையாக இருந்தாலும் அங்கே கட்டுப்பாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகம்.நம்முடைய சந்தையோ மிகச் சுதந்திரமானது.
ஒரு சர்வே கூறுகிறது: ஒரு இந்தியன் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஒரு பொருளை வாங்கினாலே அந்தப் பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் பல கோடி டாலர்கள் சம்பாதித்துவிடும்.
அவ்வளவு பிரம்மாண்டமான சந்தை நம் நாடு.இதுபற்றி ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும்.அதனால்தான் இந்திய அரசியல் வாதிகளின் பணம் 70 லட்சம் கோடி ரூபாய்கள் சுவிஸ் வங்கியில் கிடக்கின்றன.ஆக,நமது பலத்தை உணர்ந்து நம்மை சுயமரியாதையோடு நிர்வகிக்க எந்த பிரதமர் வருவாரோ?



ஆக, அடிமைத்தனத்தின் உச்சமாக நாம் நம் தமிழ்த்திரையுலகம் ஹாலிவுட் சினிமாத் தரத்துக்கு வந்துவிட்டது.ஹாலிவுட் நடிகர்கள் தமிழ்ப்படங்களிலும் நடிக்கத் துவங்கி விட்டனர்.சுற்றுச் சூழல்விழிப்புணர்வு இன்றைய காலத்தில் அவசியமான ஒன்றாகிவிட்டது.ஒரு முறை திரையரங்கில் பார்க்க வேண்டியபடம்.

சும்மாவா சொன்னார் அண்ணாத்துரை?
ஒரு சினிமாப்படம் ஆயிரம் புத்தகங்களுக்குச் சமம் என்று

SWADESHI JAGKRAN Q AND A


சுதேசி கேள்வி பதில்கள்:ஜனவரி 2007 சுதேசிச் செய்தி

1)தேசப்பிதா மகாத்மா அவர்களுடைய கொள்கைகளுக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகளுக்கும் வேறுபாடு உள்ளதா? இடதுசாரிகளுடன் நாம் இணைந்து செயல்படலாமா?


ஏறக்குறைய ஒன்றானாலும் காலங்கள் மாறியதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப சுதேசி இயக்கத்தின் செய்முறைகள்தான் மாறியிருக்கின்றன.ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தொழில்களின் உடைமையை தேசியமயமாக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தினால் விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.எனினும் எங்கெங்கு ஒத்த கருத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதிலளித்தவர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.


2)அப்சலை தூக்கிலிட மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி ஒப்படைத்துள்ள ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல் பற்றி?
ஆண்மையான செயல்!! அரசு அலித்தனமாக நடந்துவருகிறது.ராணுவ வீரர்களின் அதிருப்தி பெருகுவது நல்லதற்கான அடையாளம் அல்ல.

3)திடீரென தமிழக மக்களுக்கு பெரியார் பாசம் மீண்டும் தோன்றியுள்ளதே?1

அப்படி எதுவும் இல்லை.ஆளும்கட்சி சாதகமாக உள்ளது.அவ்வளவுதான்.எங்கெங்கு பெரியார் சிலைகள் உள்ளனவோ அவை அரசின் ஆதரவோடு நிறுவப்பட்டுள்ளன.எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ அவை மக்களால் நிறுவப்பட்டவை.
பெரியார் திரைப்படம் எடுப்பவர் கூட அரசு போடும் பிச்சைப் பணத்தில்தான் படமெடுக்கிறார்.வாழ்க சுயமரியாதை.

4) வெளிநாட்டுடன் கையெழுத்திடும் ஒப்பந்தங்களின் சாதக பாதக அம்சங்களை புறக்கணிக்க அமெரிக்காவின் இரு அவைகளுக்கும் உரிமை இருப்பது போல நமது நாட்டில் இல்லாதிருப்பது குறைபாடுதானே?

ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிநாயகம் நடத்திக்கொண்டிருக்கிறோம் நாம்.கட்சியின் கொறடா உத்தரவு என்ற நிலை மாறினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.இவ்விஷயத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் அவசியம் தேவை.க்கம்.
ர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இய்ுத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதி

Wednesday, November 18, 2009

CHINAWAR


இந்தியா சீனா போர் வருமா?

உலகத்தின் மக்கள் தொகை 700 கோடிகளைத் தாண்டிவிட்டது.இதில் இந்தியாவாகிய நமது மக்கள் தொகை 103 கோடிகள்.நம்ம பங்காளி சீனாவின் மக்கள் தொகை 115 கோடிகள்.ஆக 700 இல் 200 நாம்.நாம் இருவரும் உலக வல்லரசுகள்.உலக ஜனத்தொகை மொத்தத்தில் 38% இந்தியாவும் சீனாவும் கொள்ளுகின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மொத்த உற்பத்தியில் 50% இந்தியாவும் சீனாவும் பகிர்ந்துகொண்டன.300 ஆண்டுகளுக்கு முன்புவரை முடிந்த 2000 ஆண்டுகளுக்கு உலக வல்லரசு மற்றும் பணக்கார நாடுகளாக இருந்தன.இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஏழ்மையை அடைந்துவிடும் என்பதை அவை உணர்ந்திருக்கின்றன.அதனால் அமெரிக்கா சீனாவை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடுகிறது.
இந்தத்தூண்டலுக்கு சீனாவும் அடிமையாகிவிட்டது.


பேராசைக்காரனை புகழ்ச்சியால் வீழ்த்து என இந்து அரசியல்குரு சாணக்கியர் போதிக்கிறார்.இந்த வாசகத்தின்படி அமெரிக்கா எனக்குப்பிறகு நீதான் உலக வல்லரசு என்ற அர்த்தம் வருமாறு சீனாவுக்கு தூபம் போட்டு வருகிறது.
இதன் விளைவாக,புத்தமத நாடான சீனா,தனது ஆசியத் தோழனான இந்தியாவை வம்புக்கு இழுக்கிறது.
நமது வடமேற்கு பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி (1.1.2008க்குப் பிறகு) ஊடுறுவுகிறது.எல்லையில் இரண்டு இந்தியவீரர்களை சுட்டுக் காயப்படுத்தியுள்ளது.இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு இந்தியாவின் ஆங்கிலப்பத்திரிகை நிருபர் மீது இந்திய அரசு வழக்குப் போட்டிருக்கிறது.


உண்மைச் செய்தி மீது சோனியா அரசுக்கும்,அந்த அரசின் வெளியுறவுச்செயலாளர் நிருபமா ராவுக்கும் வந்துள்ள அக்கறை நம்மை அசர வைத்துள்ளது.(சோனியா காந்தியின் பரம்பரையில் வந்தவர் இல்லையா? அதனால்தான் காந்தித்தாத்தாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றிவருகிறார்.அதென்ன காந்தியின் அடிச்சுவடு? தொடர்ந்து வாசியுங்கள்.இந்த வலைப்பூவிலேயே இதன் விபரமான விளக்கம் இருக்கிறது)


சுதந்திரம் பேசும் நமது இந்தியப் பத்திரிகைகளும் கப்சிப் ஆகிவிட்டன.நமது இடதுசாரிகளின்(சீனாவின் வால்களான கம்யூனிஸ்டுகள்) தாக்கம் அப்படி!!!



தேசநலன் கருதுபவர்கள் இது பற்றி சற்று அலசிப்பார்ப்பது நல்லது.சமீபத்தில் சீனப்பத்திரிகை ஒன்று சீனா வலுப்பெற அது இந்தியாவைப் பல துண்டு நாடுகளாக துண்டாட வேண்டும் என எழுதியுள்ளது.(நம்ம தமிழ்நாட்டு நாத்திக அரசியல்வாதிகளின் சிந்தனையைப் போல)


இந்தக் கட்டுரையை எழுதியவர் Chinesh International Institute of Strategic Studies இன் இயக்குநரான ஷாம் லூயி என்பவர்.சீனாவின் ராணுவ இணையதளம் உட்பட அந்நாட்டின் பல அரசு இணையதளங்களும் அக்கட்டுரையை பிரசுரம் செய்துள்ளன.இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.


அக்கட்டுரையில் இந்தியா பெரும்பான்மை இந்துமத நம்பிக்கை கொண்ட நாடு.இந்து மதத்தில் இருக்கும் ஜாதிப்பிளவைப் பயன்படுத்தி அவர்களைத் துண்டாட முடியும்.காஷ்மீர்,தமிழ்நாடு,அசாம் போன்ற பகுதிகளில் இயங்கிவரும் தனி தேசிய சக்திகளை இதற்கு நாம் துணைக்கு அழைக்க வேண்டும்.இப்போதிருந்தே இதற்கு இம்முயற்சி துவங்க வேண்டும்.அதன் அடிப்படையில் 2012 இல் இந்தியாவுடன் ஒரு போர் செய்ய வேண்டும். அப்போது அகத்தில் பலம் குறைந்த நாட்டை 20 நாடுகளாகப் பிரித்துவிட முடியும்.இதற்கு பாகிஸ்தான்,நேபாளம்,பூடான் போன்ற நாடுகள் நமக்குத் துணை நிற்கும் என எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் அரசின் முயற்சியில் அங்குள்ள ஜாமத் ஏ இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அதில் (இந்தியாவுக்குள்) சிறுபான்மம ஆயுதத்தைப் பயன்படுத்தி எத்தனை தொல்லை கொடுக்க முடியுமோ அத்தனை தொல்லை இந்தியாவிற்குக் கொடுக்க வேண்டும்.பதிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கப்படும் என்றும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இதன்விளைவாக இஸ்லாமியத்தீவிரவாதிகளை வேட்டையாட ஐ.நா.சபைத் தீர்மானத்தை நிறைவேற விடாமல் தனது வீடோ பவரைக் கொண்டு சீனா தடுத்துவிட்டது.ஏனெனில் சீனாவுக்கு வீடோ அந்தஸ்து வாங்கிக் கொடுத்தது நாம் தான்.இந்தியாதான்.அதற்கு சீனா மிகவும் நன்றி விசுவாசமாக நடந்துகொள்ளுகிறது.

இந்தியாவிற்கான சீன பாகிஸ்தான் தொல்லைகளுக்குப் பின்னால் அமெரிக்க ஐரோப்பியநாடுகளின் சதித்திட்டங்கள் உள்ளன.

இருப்பினும் சீனா நமது நாட்டின் அவசியத்தை புரிந்துகொண்ட நாடாக இல்லை.கம்யூனிஸம் அங்கே புகுந்தபோதே நாடுபிடிக்கும் எண்ணமும் அங்கு புகுந்துகொண்டது.ஏற்கனவே நம்மை ஏமாற்றி நமது இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது சீனா.

நாம் தற்போது செய்ய வேண்டியது என்ன?

எவ்வளவு மலிவாக இருந்தாலும் சீனப் பொருட்களை வாங்காமல் இருப்பதுதான்.சீன சேவைகளை நிராகரிப்பது; சீனாவின் வாலான கம்யூனிஸ்டுகளின் நயவஞ்சகத்தைத் தோலுரிப்பது.அட அந்த கட்சி பா.ஜ.க.கூட தேர்தல் வைத்தாலும் அதற்கும், பா ஜ கவுக்கும் ஓட்டு போடாமல் இருப்பது.

நமது பகுதிகளில் சீன சுற்றுலாப் பயணி, மாணவர் மாணவியைப் பார்த்தால் அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லுவது.,மற்றும் நமது மத்திய உளவு அமைப்புகளுக்கு மின் அஞ்சல் அனுப்புவது.

(இதே முறையில்தான் தமிழக அரசியல் நயவஞ்சகமும் நடக்கிறது.இந்துக்கள்,இந்துமதம்,இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தினால் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தனக்கு ஓட்டுப் போடுவார்கள் என இந்துமதத்தை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் மார்க்கத்தை நம்பும் இஸ்லாமியர்களும், அன்பை பின்பற்றும் கிறிஸ்துவர்களும் இந்துமத இகழ்வை ஏற்றுக் கொள்வது ஏன்?)
<நம்ம காந்தித் தாத்தாவின் முழுமை பெறாத சிந்தனையான முஸ்லீம் தாஜாப் போக்கினால்தான் பாகிஸ்தானின் தீவிரவாதத்தூண்டல் கோவை வரை வந்துவிட்டது. காந்தித் தாத்தா அரசியலுக்கு வர முடிவெடுத்ததும் தனது அரசியல் குரு கோபால கிருஷ்ணகோகலேயிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்கு கோகலே நீ அரசியலுக்கு வரும் முன் நமது நாடு முழுக்கச் சுற்றி வா என்றார். காந்தித் தாத்தா இரண்டு வருடங்களாக இந்தியா முழுக்க சுற்றினார்.அதன் முடிவில் அவர் நேரில் உணர்ந்தது. “இந்துக்களை கோழைகள்; முஸ்லீம்கள் குண்டர்கள்” என்பதுதான். காந்தித் தாத்தா என்ன செய்திருக்க வேண்டும்? இந்துக்களை குண்டர்களாக மாற்றியிருக்க வேண்டும். அல்லது முஸ்லீம்களின் அரக்கத் தனத்தை குறைத்திருக்க வேண்டும். காந்தித்தாத்தா என்ன செய்தார்? முஸ்லீம்களுக்கு செல்லம் குடுத்தார்.முஸ்லீம்களின் முரட்டுத்தனத்தின் விளைவை இந்துக்களுக்குப் புரிய வைக்கவில்லை; காங்கிரஸ் கட்சியை இந்துக்கள் கட்சி என கிறிஸ்தவ இங்கிலாந்து அரசு சொல்வதை அவமானமாகக் கருதினார் காந்தித் தாத்தா.இந்துக்கள் இப்போதும் அனாதையாகவே இந்துநாடான இந்தியாவில் வாழ்கிறார்கள். அந்த செல்லம் இன்று இந்தியப் பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்க ஸ்கெட்ச் போட்ட முஸ்லீம் தீவிரவாதி அப்சல் அகமதுவை அப்சல் குருவாக பத்திரிகைச் செய்தியில் எழுதச் செய்திருக்கிறது.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டிணம்(தூத்துக்குடி மாவட்டம்),நாகூர்(நாகப்பட்டிணம் மாவட்டம்),மலப்புரம்(கேரளா) மற்றும் முஸ்லீம் பெரும்பான்மை இந்தியப்பகுதிகளில் நிம்மதி, சுயமரியாதை யின்றி இந்துக்கள் வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.>

இன்று 18.11.2009 !!!!

இன்று அல்லது இன்று முதல் 1.1.2011க்குள் இந்தியாவின் தலைமை பீடத்தில் ஒரு மாவீரன் ஆட்சித் துவங்கப்போகிறது.அம்மாவீரன் வட பாரதத்தில் பிறந்தவன்; அவன் தென்பாரத்தைச் சேர்ந்த துறவியிடம் பயிற்சி பெற்றுவிட்டான்.தற்போது அவன் அரசியல் அடுக்கில் முக்கிய இடத்தைக் கைப்பற்றத் துவங்கிவிட்டான்.விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றி, சித்தர்களின் ஆசியோடு , சர்வாதிகார ஆட்சி நடத்துவான்(அந்த அளவுக்கு அரசு எந்திரம் லஞ்சத்திலும்,ஒழுக்கக் கேட்டிலும் சீரழிந்து போயிருக்கிறது).அவன் வைக்கும் ஆப்பு சீனாவுக்கு,அமெரிக்காவுக்கு,பாகிஸ்தானுக்கு,இந்தியாவின் குட்டித்தம்பி இலங்கைக்கும் வலுவாக இருக்கும்.எந்த நாடும் தப்பவே முடியாது.

இந்தியா சீனா போர் வரும்; இந்தியாவின் பக்கமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இருக்கும்.சீனாவின் பக்கம் பிரான்ஸ் இருக்கும். கங்கைக் கரையில் போர் முடிவுறும்.போரின் முடிவில் இந்துக்களின் புனிதநூலான பகவத் கீதை உலகம் முழுக்கப் பரவும்.

நன்றி: நார்ஸ்டர்டாமஸின் நூற்றாண்டுகள் புத்தகம்,குமுதம் ஜோதிடம் தமிழ் வார இதழ்கள் 2004 முதல் 2009 வரை,சுதேசிச் செய்தி தேசிய மாத இதழ் மற்றும் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவை.


சீனாவின் நிலை ?
அது நீங்களே பேப்பர்,டிவியில் பாருங்கள்.
சரி! நம்ம இந்தியாவின் நிலை ?

குஷ்வந்த் சிங் உருவாக்கிய இந்தியா பற்றிய ஜோக் பொய்யாகும்.அது என்ன ? ஆன்மீகக் கடலில் இரண்டாவது முறையாக எழுதிவிடுவோம்.

அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இருக்கிறது?

ஏன்னா அது உலகின் எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலையிட்டுக் கொண்டே இருப்பதால்!

சரி! இந்தியா ஏன் இன்னும்(!?) உலக வல்லரசாகவில்லை?

ஏன்னா இந்தியா தனது உள்நாட்டுப் பிரச்னைகளில் கூட தலையிடுவது இல்லை.அதனால்தான்!


Monday, November 16, 2009

சதுரகிரி மூலிகைகள்


சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!

THIRUMOOLAR


திருமூலர் செய்த சித்து அதிசயங்கள்

காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!

ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.அதாவது விநாடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் செல்லும் ராக்கெட்டில் இங்கிருந்து புறப்பட்டால், அங்கே செல்ல 2000 வருடங்கள் தான் ஆகும்.நாம் வாழும் சூரியக்குடும்பம் இருப்பது பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே அண்டத்தில் அதாவது கேலக்ஸியில்.நமது வீடான பால்வழித்திரளின் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள் தான்.நமது பால்வழித்திரளின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளிவேகத்தில் பயணித்தால் 1,00,000 ஆண்டுகள்தான் ஆகும்.பிரமிப்பாக இருக்கிறதா?இந்தத்தகவல்களை மதிப்பிட்டுக்கூறியிருப்பது நமது வானியல் விஞ்ஞானிகள்.ஆக,இந்த விஞ்ஞானிகளையும்,உங்களையும்,என்னையும் படைத்த கடவுள் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்!?!)விட்டு அண்டம் செல்ல உதவும் ‘சொரூப மணி’ என்னும் பாதரஸ மணியினை வாயிலும், ‘கமலி’ என்ற மணியினைக் கையிலும் எடுத்துக் கொண்டு ஜோதியே வடிவான அண்டவெளியில் பாய்ந்தாராம்.

பலப் பல அண்டங்களில் பலப் பல சித்தர்கள் வாழ்வதைப் பார்த்து வியந்து அவர்களிடம் ஆசி பெற்றுச் செல்லும் போது ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு அண்டத்தில் இருந்த சித்தர்களில் ஒருவர் திருமூலரின் கவுனமணிக் குளிகையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார்.

திருமூலரும் அதை நம்பி அவரிடம் கவுனமணிக்குளிகையைத் தந்தார்.அவர் அதைப் பயன்படுத்தி பல அண்டங்களுக்கு ஓடி மறைய முயன்றார்.திருமூலரும் தன்னிடமிருக்கும் மற்றொரு குளிகைமூலமாக மிகவும் சிரமப்பட்டு விரட்டிப் பிடித்து அந்த கவுனமணிக் குளிகையை திரும்பப் பெற்றார்.அவரை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.

திருமூலர் தான் பயணித்த அண்டங்களைப் பற்றி பல பாடல்களில் விவரிக்கிறார்.
ஒரு அண்டத்தில் பல சித்தர்களைக் கண்டிருக்கிறார்.அவர்களைக் கையால் தொட்டால் கைகளில் தட்டாமல் கை உடலுக்குள் சென்று வந்திருக்கிறது.மற்றொரு அண்டத்தில் உள்ளவர்கள் வெண்சங்கு நிறத்தில் இருக்கிறார்கள்.இன்னொரு அண்டத்தில் தண்ணீருக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வளவு அண்டங்களையும் சுற்றிப்பார்த்த திருமூலர் நமது பூமியில் ஜீவசமாதியானது நாம் செய்த புண்ணியமே!



திருமூலர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் என்ற இடத்தில் உள்ள ஐயனார் கோவிலில் அமர்ந்திருந்தார்.அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் எழுதியுள்ளார்.இந்தக் கோவிலின் பின்புறம் ஜீவசமாதியாகியுள்ளார்.

இவ்விடத்தைப் புதுப்பிக்க சில அன்பர்கள் முயன்றபோது,பூமியின் உள்ளே தண்ணீர் நிரப்பப் பட்ட கமண்டலம் ஒன்றும்,யோக தண்டம் ஒன்றும்,ருத்ராட்ச மாலை ஒன்றும் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.தற்போது இந்த இடத்தில் சில அன்பர்கள் தியான மண்டபம் கட்ட முயன்றுவருகிறார்கள்.திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
இவரது குருநாதர் நந்தீசர்.
இவரது சீடர் போகர்.
நன்ரி:ஜோதிட பூமி பக்கம் 49,50,மார்ச் 2008.

AFTER2010AD


ஜோதிட தீர்க்க தரிசனங்கள்:2010க்குப்பின்

பிருஹத் சம்ஹிதை, நாரத ஸம்ஹிதை, குமார சுவாமீயம்,ஜாதக அலங்காரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற ஜோதிட புராதனங்கள் விவரிப்பது என்னவென்றால், 26.12.2004 ஆம் நாளன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியானது இந்த பூமியில் மிகப்பெரிய மாறுதலுக்கான ஆரம்ப அறிகுறி!!!

கி.பி.2010க்குப் பிறகு உலக அளவில் பூகோள மாறுதல் ஏற்படும்.உலகம் முழுவதும் அழிவுகள் ஏற்பட்டாலும், இந்திய நிலப்பகுதி முழுவதுமாக அழிந்துவிடாது.இந்தியா குபேர நாடாக மாறும்.150 ஆண்டுகளுக்கு உலகத்தை இந்தியா வழிநடத்தும்.(ஆர்.எஸ்.எஸ்.ஸின் லட்சியமே இதுதான்.அவர்கள் தினமும் பாடும் பாடலில் உலகின் குருவாய் பாரதம் ஆகிட. . .)
காகிதப்பணம் அழிந்து மீண்டும் தங்க நாணங்கள்புழக்கத்துக்கு வரும்.
ஆன்மீகம்,இந்துப்பண்பாடு இவற்றை வெளிநாட்டவர் இந்தியாவுக்கு நேரில் வந்து பணம் கொட்டிக் கற்றுக் கொள்ளுவர்.சித்தர்களின் ஆசியால் எழுதப்பட்ட புராதன சுவடிகளும் இதையே விவரிக்கின்றன.
தகவல் ஆதாரம்:ஜோதிட பூமி பக்கம் 28,பிப்ரவரி 2008.

THIRUKAIYLAYAM


திருக்கையிலாய மலையின் சிறப்புகள்

சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக 40 கி.மீ.தூரத்தில் உலகிலேயே உயரமான இடத்தில் (கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிகள்) நன்னீர்த் தடாகம்தான் மானசரோவர்!இது பிரம்மாவால் மானசீகமாகப் படைக்கப்பட்டது.இது 24 கி.மீ.அகலமும்,90 கி.மீ.சுற்றளவும் கொண்டது.320 கி.மீ.பரப்பளவுடன் 250 அடி ஆழத்துடன் உள்நாட்டுக்கடல் போலக் காட்சியளிக்கிறது.
திருக்கையிலாய மலைக்கும் குர்லா மந்தாதா மலைக்கும் இடையே மானசரோவர் இருக்கிறது.

மானசரோவரின் புனித நீரை அருந்துவோர் பல நூறு பிறவியின் பாவங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவர்.தடாகக்கரை மணல் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க நமது சிவபெருமானின் வீடு, தற்போது சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கிறது.எனவே, இங்கு செல்ல விரும்புவோர் பாஸ்போர்ட் எடுத்து சீனா செல்வதற்கான விசா எடுத்துச் செல்ல வேண்டும்.
எப்போது நாம் நமது சிவபூமியை திரும்பப்பெறப் போகிறோம்?
இந்த சிவபூமி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை சீனாவின் அசுர வளர்ச்சியைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.
தமிழக இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களே! ஆளும் கட்சியினரே தன்மானச்சின்னமும்,95 கோடி இந்துக்களின் புனித ஸ்தலமுமான திருக்கையிலாயத்தை எப்போது சீனாவிடமிருந்து மீட்கப் போகிறீர்கள்?

Monday, November 9, 2009

HINDSWARAJ


காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்”

கி.பி.1910 எழுதி வெளிவந்த இந்த புத்தகம் அவரது எண்ணங்களை வெளிப்படுதுகிறது.இதை அவர் பத்தே நாட்களில் எழுதினார்.எழுதி எழுதி தனது வலது கை ஓய்ந்த போது இடது கையாலும் எழுதினார்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல இந்தப் புத்தகம் சின்னஞ்சிறுபுத்தகமே!

இந்த புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.

இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:

ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும் டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை வஞ்சிக்கிறார்கள்.

மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச் சுரண்டுகிறார்கள்.

“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும் ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.

ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடுமைமுதலியன அதிகரித்துவிட்டன.ஆங்கிலம் அறிந்த இந்தியர்கள் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும் அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.

சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!

தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.

இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப் புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டதாகும்.


நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும் அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.

சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.

மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.

GOLDGANESH


ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா

இம்மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டுப்பூஜையறையில் 108 முறைவீதம் ஜபித்துவரவேண்டும்.இப்படி குறைந்தது 90 நாட்கள்(மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்துவந்தால் வீட்டில் பணம்,தங்கம் சேரும்; மிச்சமாகும்.

SWADESHIQUESTIONS

சுதேசியனின் தேசபக்தி கேள்வி பதில்கள்
(நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்கள்-2009)

1.அமெரிக்காவின் இன்றைய உண்மையான பொருளாதார நிலை என்ன?

சீனாவை விட பொய் சொல்லுவதில் தேர்ந்துவிட்டநிலை!

2.சீனாவின் எல்லைப்புற ஆக்கிரமிப்பு பற்றியும், தாக்குதல் பற்றியும் செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர்கள் மீது(இந்திய) மத்திய அரசு நடவடிக்கை அறிவித்துள்ளது நியாயமா?

பொய்யான செய்தி என்கிறது மத்திய அரசு.அப்படியானால் மறுப்பு வெளியிட்டால் போதுமே! ஏன் இந்த நடவடிக்கை?
உண்மையை மறைக்க அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவே தோன்றுகிறது.
தலைதூக்குகிறது சர்வாதிகாரம்.ஆனாலும்,பத்திரிகை சுதந்திரம் பேசுபவர்கள்(பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள்) வாயைத் திறக்கக் காணுமே?!


3.பொக்ரான் 2 அணுச்சோதனை தோல்வி என சில விஞ்ஞானிகள் மூலம் கூறப்பட்டு வருகிறதே?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே (இந்திய) தேசம் சிறுமைப் படுத்தப்படும்.தேசத்தின் தன்னம்பிக்கை வெட்டியெறியப்படும்.அப்போதுதானே வெட்கமின்ரி அந்நியரிடம் கையேந்தலாம்! இதுவும் ஒரு சதிதான்.

4.ஆசியன் ஒப்பந்தம் பற்ரி எதிர்க்கருத்து கொண்டிருந்த முதல்வர்கள் அது சம்பந்தமாக பேச அணுகிய போது அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தன்னை சந்திக்க நேரம் தரவில்லையாமே?

அந்நியர்க்கு ஏவல் செய்ய ஒரு சர்வாதிகார அரசு உருவாகி வருகிறது.இது நல்லதல்ல.

நன்றி:அக்டோபர் 2009

5.பொருளாதாரம் உட்பட (இன்றுடன் 120 அமெரிக்க வங்கிகள் திவால்) பல விஷயங்களில் ஆட்டம் கண்டு விட்ட அமெரிக்காவிடம் இன்னமும் பல நாடுகள் அடங்கி நடப்பதேன்?

கோடிகோடிகளாக பணத்தை அங்கு (முதலீடு என்ற பெயரில்) கொட்டியாகிவிட்டது.பணம் திரும்ப வர வேண்டாமா என்ன? மரியாதையால் அடங்கி நடக்கவில்லை.பயத்தால்!!!

6.பொன்விழா பாராட்டு நிகழ்ச்சியில் கமலஹாசன்,
‘பகுத்தறிவாளர்கல் அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இனி ஆத்திகர்களே கோவில்களை இடிப்பார்கள்.நாங்கள் இடிக்கவேண்டிய அவசியமில்லை’ என பேசியுள்ளாரே!

வக்கிரத்தின் மற்றொரு பெயர் கமலஹாசன்.ஹே ராம்,தசாவதாரம்,குருதிப்புனல் எல்லாம் தலைப்புத் திருட்டு.அவரது பல படங்கள் ஆங்கிலத் திருட்டு.திருட்டு நாயகனை உலக நாயகன் என்றால்,திருடன் ஏன் உங்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தசாவதாரம் படத்தில் முஸ்லீம் கமலஹாசன்,சீக்கிய கமலஹாசன் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.ஹிந்து கமலஹாசன் நாத்திகம் பேசுவார்.இதுதான் கமலஹாசனின் பகுத்தறிவு!

7.விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சியில் “தாலி பெண்களுக்கு அவசியமற்றது” என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி கூறியது சரியா?

விஜய் டிவியும் சரி, கோபியும் சரி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் மெல்லக்கொல்லும் விஷங்கள்.
மெக்காலே படிப்பு படித்த மேல்தட்டு வர்க்கம்தான் இதன் பார்வையாளர்கள்.பஜனை,பக்தி எல்லாம் இருக்கும்.படிப்பும் பணமும் இருந்தால் கெடுவது எளிதல்லவா!
இந்துதர்மத்தின் மற்றும் இந்தியாவின் ஆணிவேரான குடும்பங்களை சீர்குலைப்பதே இவர்களது முதல் குறி!

8.பின்லேடன், தாவூத் ஆகியோரை மறைத்துக் கொண்டு மற்ற நாடுகளிடமிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பணம் வாங்குகிறதே பாகிஸ்தான்?

வளர்த்துவிட்ட நாடுகள்தான் இன்று ஒடுக்கவும் பணம் கொடுக்கின்றன.பாகிஸ்தானும் அதைப் புரிந்துகொண்டுவிட்டது பனம் கொட்டும் மரத்தை யாராவது வேருடன் பிடுங்குவார்களா என்ன?

நன்றி:நவம்பர் 2009

9.அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பில் மட்டும் கம்யூனிஸ்டுகள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் ஒத்துப்போவது ஏன்?

கம்யூனிஸ்டுகளின் கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பிற்கும்,சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் எதிர்ப்பிற்கும் நிறைய்ய வேறுபாடுகள் உள்ளன.நமக்கு (இந்திய)தேசம் முக்கியம்.அவர்களுக்கு சீனா,ரஷ்யா முக்கியம்.
நமக்கு குடும்பம்,பெண்மை,சமுதாயம்,இந்துப்பண்பாடு இவைகளின் பாதுகாப்பு முக்கியம்.
அவர்களுக்கு அப்படி அல்ல.

10.திருவள்ளுவர் சர்வக்ஞர் சிலை திறப்புகள் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா?

நாம் இருவரல்ல ஒருவர் என்பதை புரிந்து கொள்ள முதல் படியாக இருக்குமே!
1991 லும் கூட பா.ஜ.க.ஆண்ட மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இரண்டாவது மொழியாக சில பள்ளிகளில் தென்மாநில மொழிகளை கற்பிக்க முன்வந்து, தமிழகத்திடம் (இதே முதல்வர்தான்) 5000 தமிழ் ஆசிரியர்கள் கேட்டன என்பது நினைவுகூரத் தக்கது.

11.இந்தியாவில் 4% போலி நோட்டுக்கள் இருப்பது ஆபத்தானது அல்ல என்கிறாரே ரிசர்வ் வங்கி துணை கவர்னர்?

முதலில் 4% போலி நோட்டுக்கள் இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளதற்கு நன்றி சொல்லுங்கள்.அரசின் கையாலாகத்தனத்திற்கு சான்று வழங்கியுள்ளார்.பாவம் அவர் என்ன செய்ய முடியும்.

நன்றி:செப்டம்பர் 2009

Friday, November 6, 2009

ENGLISHGRAMMER

தமிழும் ஆங்கிலமும் ஒரு ஒப்பீடு

நம் தாய்மொழியாம் தமிழில் இருக்கும் பல சிறப்பியல்புகள் ஆங்கிலத்தில் இருப்பதில்லை;ஆனாலும், தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் தமிழ் மொழியைக் காணவில்லை!!?
அப்பா அம்மா தவிர அனைத்து உறவுமுறைகளும் ஆங்கிலத்தில் தொடர்மொழிகளே!
அதாவது நாம் அண்ணன் என்பதை மூத்த சகோதரன் என்றும்,
தம்பி என்பதை இளைய சகோதரன் என்றும்,
அம்மான் என்பதை தாயுடன் பிறந்தவன் என்றும்,
அத்தை என்பதை தந்தையுடன் பிறந்தவள் என்றும் இங்கனம் தொடர்மொழிகளாகவே ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.(அங்கேதான் இப்படிப்பட்ட உறவுமுறையே கிடையாதே!)
நாம் வந்திலன்,சென்றிலன் என ஒரு சொல்லாய் வழங்கும் எதிர்மறை முற்றுக்களை ஆங்கிலத்தில் பேச/எழுத 3 சொற்கள் வேண்டும்.தெரிநிலையும் குறிப்புமான ஒவ்வொரு வினையாலணையும் பெயரையும் ஆங்கிலத்தில் பல சொற்களின்றி அமைக்கலாகாது.
வந்தாய்க்கு என்பதை வந்தானாகிய உனக்கு எனப்பொருள்படுவதாய் 4 சொற்களால் அமைக்க வேண்டும்.அடியேனுக்கு என்னும் குறிப்பு வினையாலணையும் பெயரை அமைக்க 6 சொற்கள் ஆங்கிலத்தில் வேண்டும்.
நம்முடைய பெயரெச்சம்,வினையெச்சங்களும் சொல் சுருங்குவதற்கு அனுகூலமாக இருக்கின்றன.
வந்த மனிதன் என்பதை அமைக்க அவர்களுக்கு 4 சொற்கள் வேண்டும்.அவன் வந்து போனான் என்னும் ஒரு வாக்கியத்தை அவர்கள் இரண்டு வாக்கியமின்றி உரைக்க இயலாது.
அவர்களுக்கு வேற்றுமைத் தொகை,வினைத் தொகை,உவமைத் தொகை,அன்மொழித்தொகை இல்லை.
தமிழ் வினைகளின் விகுதிகளே திணை,பால்,எண் மூன்றையும் ஒருங்கே காட்டி விடுகின்றன.ஆங்கிலத்தில் வினைகளின் எண்களை மாத்திரம் எளிதில் அறியலாம்.பெருபான்மையாய் எழுவாயின் பொருளறியாமல் முடிபின் திணை பால்களை அறியலாகாது.
சாதாரண பேச்சில் நம் எழுவாயில்லாமல் கருத்தை வெளிப்படுத்த முடியும்.ஆங்கிலத்தில் அது முடியாது.உலக வழக்கில் நாம் செயப்பாட்டு வினைகளை எல்லாம் செய்வினைகளாக வழங்குகின்றோம்.அவர்களுக்குப் பெரும்பான்மையாய் இயலாது.
தான் வியாதியாக இருக்கிற விஷயத்தைப் பிறரிடம் கூற ‘நான் வியாதியாய் இருக்கிறேன்’ என்பதே ஆங்கில மரபு.
நம் தமிழில் ‘எனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது’என்பதே மரபு.இப்படிச் சொல்லுவதால் ஆங்கில மரபு ‘அகம்’பாவத்தை(ஈகோ) உணர்த்துவதாக இருக்கிறது.தமிழ் மரபோ ‘தேக தேகி’ பாவத்தைத் தழுவி ஞானசாரமாக இருக்கின்றது.
தமிழில் பெரியோர்களைப் பலர் பாலால் வழங்குகின்ற மரியாதை ஆங்கிலத்திலும் வேறு எந்த மொழியிலும் இல்லை.பெரியோர்களின் செயல்களை ‘அவர் வந்தருளினார்,செய்தருளினார்’ எனக் கவுரவமாகக் கூறும் விதமும், ஏவுகின்ற வினையின் இறுமாப்பைக்குறைக்கும் வியங்கோள்களின் அழகும் தமிழுக்கே உரியவை.
நன்றி:திருமணம்.செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘தமிழ்’ என்ற கட்டுரையிலிருந்து.

HUMANRESPONSE

கேள்வி: தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் = இந்த மூன்று கடன்களும் எப்படி ஏற்படுகின்றன?ஜாதக வாயிலாக இதை எப்படி அறியலாம்? அதை எப்படி சரி செய்வது?

பதிலளித்திருப்பவர் ஜோதிடத்திலகம்:ஜானகி மனுவித்யா அவர்கள்:கடமையைச் செய்யாமல் விடுதலே கடன் எனப்படும்.

தேவகடன் என்பது நித்திய பூஜையைச் செய்யாமல் விடுவது;குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது;கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது; நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது;
தவிர கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல்;கோவில் சிலைகளைத் திருடுதல்;கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல்; கோயிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் ஆகும்.
இவற்றை ஜாதகம் வாயிலாக, லக்னத்துக்கு 5ஆம் இடம்,சூரியன்,சனி இவர்களின் இருப்பைக் கொண்டு அறியமுடியும்.

ரிஷி கடன் இந்த கலிகாலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.ஏனெனில், தற்காலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

முற்காலத்தில் வீடு தேடிவந்த ரிஷிகளை சரியாக உபசரிக்காமல் விடுவதால் ரிஷிகள் விடும் சாபமே ரிஷிகடன் ஆகும்.இந்த ரிஷிகடனை 12ஆம் இடம்,குருவின் நிலை,12 மற்றும் 9 ஆம் இடத்து அதிபதிகளைக் கொண்டு அறியலாம்.
ரிஷிகடனைத் தீர்க்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் ஏற்பாடு செய்தல்,ஆன்மீகமடங்களில் உதவி செய்தல்,சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கும்,கோவில்களுக்கும் நேரடியாக உதவி செய்தல் செய்ய வேண்டும்.

பித்ருக்கடன் என்பது தாய் தந்தையரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும்,அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு திதி செய்யாமல் இருத்தல்,அவர்கள் எவ்வளவு அரக்கக் குணங்களுடன் இருந்தாலும் அதை சகிக்காமல் அவர்களிடம் சாபம் வாங்குமளவுக்கு சேஷ்டைகள் செய்யாமல் இருத்தல் போன்றவைகளால் உருவாகுவது.
இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும்.தந்தை வழியில் செய்த காமக்குற்றங்கள், மோசடி,பெண்ணை ஏமாற்றிக்கற்பழித்தல்,உடன் பிறந்தோர் சொத்து அபகரிப்பு இவற்றால் 7 தலைமுறைகள் மிகவும் சிரமப்படுவர்.இந்த பித்ருக்கடனை அவரவர் பிறந்த ஜாதகத்தில் 5ஆம் இடம்,9 ஆம் இடம்,ராகு,கேது,சனி இவற்றைக் கொண்டு அறியலாம்.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் கர்ம காண்டம் என்னும் நூலில் செய்த பாவங்களுக்குரிய விளைவுகளை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.

பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம்(பூஜை,யாகம் செய்வது மட்டுமல்ல;நாம் நமது மனப்பூர்வமான இறை காரியங்கள் மட்டுமே நம்மை கடன்களிலிருந்து விடுவிக்கும்.நாம்தான் நமது பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.)

தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை இவற்றால் நிம்மதியாக வாழமுடியும்.
நன்றி:ஜோதிட பூமி பக்கம் 24,அக்டோபர் 2009.

Thursday, November 5, 2009

SANSKRITCOURSE

வெளிநாடுகளில் சமஸ்க்ருதம் கல்வி

எம்.ஐ.டி என்றழைக்கப்படும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புக்களை நடத்துகிறார்.ஹார்வேர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.கலிபோர்னியா,பிட்ஸ்பர்க்,நியூயார்க் மற்றும் டல்லஸ் ஆகிய நகரங்களிலும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் சமஸ்க்ருத பட்டப்படிப்பு இருக்கிறது.

REALATHISUM

இந்து வேதங்களில் பகுத்தறிவு

பகவத் கீதையில் அர்ஜீனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்:
நான் கூறியது யாவையும் ஆராய்ந்து
பிறகு உன் விருப்பப்படி செயல்படு

“இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்” சொன்னவர் நோபல்பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்.

“பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை;அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்” என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல்(11.18.2.3)

பகவத்கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர்,
‘நெருப்பு சுடாது என நூறுமுறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்;அனுபவம் தான் பிரமாணம்(கல்வி/பிரதானம்/முக்கியம்)’என்கிறார்.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு.தமிழகத்து அரசியல்வாதிகளில் சில ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; சேம் சைட் கோல்!!!!

NATIONALSHAME

அந்தமான் தீவுகளை இலங்கையுடன் இணைக்க வேண்டுமாம்
கொழும்பு , வியாழன், 5 நவம்பர் 2009( 20:08 IST )
-->
ஐ।நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு,தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக இலங்கை அயல்விவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இதுவிடயமாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார்.இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது,தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும்,ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டுவாக்கில் கவனத்தில் என்றும் கூறினார்.மேலும் ஐ.நா. வின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித போகொல்லாகம வெளியிட்டார்.

நன்றி:தமிழ் வெப்துனியா இன்று।

சுயதர்மமும்,சுயச்சார்பையும் இழக்கும் எந்த நாடும் இப்படித்தான் அவமானப்படவேண்டும்।இலங்கையின் பின்னாடி இருந்து இயக்குவது நம்ம பங்காளி பாம்புதின்னி சீனாவேதான்।இத்தாலிக்காரிக்கு இதைப்பற்றி என்ன கவலை।?
எனது நூறுகோடி மக்களே நாம் தினமும் எதைச்சாப்பிடுகிறோம்? எப்போது நயவஞ்சக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் நம்மையும் நமது நாட்டையும் நமது தன்மானத்தையும் காக்கப்போகிறோம்?சே அவமானமாக இருக்குது.

THAMIZANNAITEMPLE

தமிழ் அன்னைக்கு பிரம்மாண்டமான கோவில்

தமிழ்நாடு மாநிலம்,திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய்கள் செலவில் தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.இங்கு மூலவராக தமிழ் அன்னை சிலை நிறுவப்படவுள்ளது.

இங்கு தமிழ் அன்னைக்கு தினமும் தமிழின் உயிர் எழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன்,தினைமாவு,கனிகள் வழங்கப்படும்.

Wednesday, November 4, 2009

TEENCHILD

உங்கள் குழந்தையின் வயது 12 முதல் 19க்குள் இருக்கிறதா?இந்தக் கட்டுரை உங்களுக்காக . . .

கி.பி.1999 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டில் பருவ வயது எனப்படும் டீன் ஏஜ்களின் தற்கொலை முயற்சி எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 400 ஆக இருந்தது.
இன்று கி.பி.2009 இன் விளிம்பில் இருக்கிறோம்.உலக மயமாக்கலின் வேகத்தால் உலகமே அமெரிக்க மயமாகிவிட்டது.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் சிறு நகரங்களிலும் பரவிவருகிறது.இந்த நிலையில் டீன் ஏஜ்கள் எனப்படும் பருவ வயதுகளில் இருப்பவர்களின் தற்கொலை முயற்சி ஒரு நாளுக்கு சராசரியாக 2500!

நீங்கள் வீட்டைவிட்டு வேலை அல்லது தொழில் நிமித்தமாகக் கிளம்புவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்கிக்கொண்டிருப்பான்/ள்.
நீங்கள் வேலை அல்லது தொழிலை விட்டு வீட்டுக்குள் களைத்துப்போய் வருவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்க ஆரம்பித்துஇருப்பர்.
சரி நாளைக்குப் பேசிக்கலாம் என பேசுவதற்குக்கூட நேரமில்லை.(அதான் செல் இருக்கே என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்)

பாசமோ,வியாபாரமோ நேரில் பேசுவது போன்ற பரிசு அல்லது வரம் எதுவும் கிடையாது.

நீங்கள் யாருக்காக பணத்தைத் தேடி ஓடுகிறீர்கள்?அவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதில் 50% நீங்களும் உங்களின் வாழ்க்கைத்துணையும்தான் என்பதை அறிவீர்களா?
அவர்களிடம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது மனம்விட்டு பேசுகிறீர்களா?
அவர்களின்(உங்கள் பருவ வயது மகன் அல்லது மகள்) தினசரி வாழ்க்கையில் என்ன நடந்துவருகிறது என தினமும் உங்களால் நேரடியாகக் கேட்கமுடிகிறதா?
அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?(ஆம் எனில் அந்த 2500 தற்கொலை முயற்சியில் நிச்சயம் உங்களின் குழந்தை இருக்காது)
சாப்பிடும் முன்பும்,சாப்பிட்டப்பின்பும் கை கழுவ கற்றுத் தருகிறோம்.காதல்,காமம்,ஏமாற்றுதல்,செல் போன் வழியே உருவாகும் பிரச்னைகள் இவற்றினை எப்படி எதிர்கொள்வது என்பதை உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஒரு நாளாவது சொல்லிக்கொடுத்ததுண்டா?(உங்களது அனைத்து செல் போன்களையும் அணைத்துவைத்துவிட்டு)


இதையெல்லாம் செய்யாமல் என் மகள் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறா? சார் நீங்கதான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க என டியூசன் ஆசிரியர்களிடம் கெஞ்சாதீர்கள்.
(உங்கள் மகளின் 5 வயது முதல் 15 வயது வரை அவள் கேட்கும் சந்தேகத்தை அவளின் கண்களை நோக்கிப்பார்த்து பொறுமையாகக் கேட்டிருந்தால் யாரோ ஒரு டியூசன் ஆசிரியரிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம்)
ஆனால் உங்கள் மகள் உங்களது டியூசன் ஆசிரியர் வார்த்தைகளைக் கேட்பாள்.உங்களை மதிக்க மாட்டாள்.ஏனெனில் டியூசன் வாத்தியாரின் வேலையே மாணவியின் (மகளின் அல்ல) பேச்சுக்களைக் கூர்ந்து கவனிப்பதுதான்.
அதே மகளிடன் அந்தரங்கப் பிரச்னைகளை (பெற்றோராகிய)நீங்கள் பகிர்ந்ததுண்டா?
ஏன் டியூசன் ஆசிரியரை மகன் மற்றும் மகள்கள் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.?
சில இடங்களில் டியூசன் ஆசிரியரே தனது மாணவியைத் திருமணம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது .ஏன்?

உங்கள் மகன் அல்லது மகள் அல்லது இருவரும் இன்று முதல் உங்களை அதிசயமாகத் தான் பார்ப்பார்கள்.இன்றே மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிட உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுங்கள் அல்லது அரட்டையடியுங்கள்.
(இவ்வலைப்பூ முழுக்க முழுக்க மனோதத்துவரீதியில் எழுதப்பட்டுள்ளது)

பிதுர் தோஷம்


பிதுர்தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

இந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.

இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.
பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.

ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நேரடியாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.கலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸி!!!

பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது.சிரத்தையுடனும்,முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம். திலா ஹோமம் செய்ய விரும்புபவர்கள் எனக்குத் தெரிந்த ஒரு வேதியரையும் அணுகலாம்.அவர் பெயர் ராகவசர்மா.அவரின் வசிப்பிடம் இராமேஸ்வரம்.செல்:9994074647,9442044092.

வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.

கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டைப்பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர்.(நாமும் இப்படிச் செய்யலாம்)

வாழ்வில் ஒருமுறையாவது காசி,கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய வேண்டும்.வயதில் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை
கொடுங்கள்.வளமுடன் வாழுங்கள்.

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன?

மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.

1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்


இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?

குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,

பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;

பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;

மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.

சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?

முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம்.

இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.

சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.

சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.

மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.

மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.

எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.

குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.

நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்.

எதிரிகளை நிர்மூலமாக்கிட

எதிரிகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலவிதமான தொல்லைகள் வந்தால் சமாளிக்க வழி!

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவிலில் ரூ.1000/-அங்குள்ள கோவில் அலுவலகத்தில் செலுத்தி சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் எதிரிகளும்,எதிர்ப்புகளும் அழியும்.

நாமே பூஜைப் பொருட்கள் வாங்கினால் ரூ.250/- செலுத்தினால் போதும்.இதற்கு அருணகிரிநாதர் பாடிய பாடலே சாட்சி!

“அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச்
சங்காரமாடிய பெருமாளே!”
பொருள்:முருகக்கடவுள் அரக்கர்களை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர்புரிந்து வென்றார்.

RAREFULLMOON


உலகின் மிகச் சிறந்த அதிசயங்களில் ஒன்று

கி.பி.1866 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியன்று முழு நிலவு இல்லை;குறைந்தும் இல்லை.அன்று சந்திரக்கிரகணமும் இல்லை.

இதே போன்ற நிலை இரண்டு கோடி வருடங்களுக்குப் பிறகுதான் ஏற்படும் என வானவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நன்றி:உலகம் தோன்றிய வரலாறு-புத்தகம்

யாரையெல்லாம் பேய் பிடிக்கும்?

பேய் யாரையெல்லாம் பிடிக்கும்?

தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும்,

கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும்,

வெட்டவெளியிலும், மொட்டை மாடியிலும் நிர்வாணமாக(உடல் மீது போர்வை போர்த்தியிருந்தாலும்) தூங்குபவர்களையும்,

உடலுறவுக்குப்பின்னர் வெட்டவெளிகளில் ஆடை உடுத்தாமலும்,குளிக்காமலும்(சுத்தப்படுத்தாமலும்) தூங்குபவர்களையும்,
அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும்

பேய் பிடிக்கும்.அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும்.

பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும்.


எனவே தினமும் குளிக்க வேண்டும்.மஞ்சள் பூசியும்,மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும்.
மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை.

காதல் ஜெயிக்க ஜெபிக்க வேண்டிய மந்திரம்

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?



அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.



காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.



ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.



இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,