Saturday, March 31, 2018

சிவ கடாட்சத்தைத் தரும் ருத்ராட்சக் குளியல்!


உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை கழுத்தில் அணிவது அவசியம்;இப்படி அணிந்திருக்கும் ருத்ராட்சத்தை எக்காரணம் கொண்டும் வாழ்நாள் முழுவதும் கழற்றக் கூடாது;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு ஒரே ஒரு ஆச்சாரம்(கட்டுப்பாடு) உண்டு;அதுதான் அசைவம் சாப்பிடாமல் இருப்பது;


ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட ஒரு மாலையை நாம் ஒவ்வொருவரும் சிவ வழிபாட்டின் போது அணிந்திருக்க வேண்டும்;

அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும்

பர்வதமலை கிரிவலம் செல்லும் போதும்

வெள்ளியங்கிரி கிரிவலம் செல்லும் போதும்

திருக்கையிலாய பயணத்தின் போதும்

அமர்நாத் பனிலிங்கப் பயணத்தின் போதும்

நர்மதா பரிக்ரமா செல்லும் போதும்

ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும்

வீட்டில் தினசரி கணபதி பூஜை/முருக பூஜை/சிவ பூஜை/பைரவ பூஜை/வராகி பூஜை/மஹாலக்ஷ்மி பூஜை/சத்திய நாராயண பூஜை/குபேர பூஜை என்று எந்த ஒரு பூஜை செய்தாலும் அவ்வாறு பூஜை செய்யும் போதும்

அன்னதானம் செய்யும் போதும்

பித்ரு தர்ப்பணம் செய்யும் போதும்

திலா ஹோமம் செய்யும் போதும்

யாகத்தில் கலந்து கொள்ளும் போதும்

சதுரகிரி பயணத்தின் போதும்(அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி சென்றடையும் வரை)

ஆடை தானம் செய்யும் போதும்

இஷ்ட தெய்வ மந்திர ஜபம் செய்யும் போதும்

ப்ராணயாமம் செய்யும் போதும்

குலதெய்வ வழிபாட்டின் போதும்

கும்பாபிஷேகம் செய்யும் போதும்/கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் போதும்

கோபூஜை செய்யும் போதும்

கோசாலையில் மந்திரம் ஜபிக்கும் போதும்

ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட மாலையை அணிந்திருக்க வேண்டும்;

இம்மாலையை அணிந்து கிரிவலம் செல்லும் போது,இயற்கை உபாதை ஏற்பட்டால் கழற்ற வேண்டும்;அதன் பிறகு,மீண்டும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்;

இம்மாலையை அணிந்திருக்கும் போது,எக்காரணம் கொண்டும் யாரையும் திட்டக் கூடாது;ஆபாசமான வார்த்தையை ஒரு போதும் பேசக் கூடாது;அது கடுமையான சாபங்களைத் தரும் என்பதை மறக்காதீர்கள்;

ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை பெறலாம்;

தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்;அதன் பிறகு,குளியலறைக்குள் புகுந்து கிழக்கு நோக்கி நிற்க வேண்டும்;(நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்) 

வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும்;சுருட்டியும் வைக்கலாம்;சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்;அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும்; ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்;


இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும் கூட செய்யலாம்;

தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்;

தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை,சிவராத்திரி,திருவாதிரை,ப்ரதோஷ நாட்களிலும்,அவரவர் ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்;

ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்;(சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்)

இப்படிச் செய்து வருவதால்,ஆத்ம பலம் அதிகரிக்கும்;பிறர் நமக்கு எதிராக செய்த,செய்துவிட்ட,செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும்,நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்;


உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்துவருகின்றன;அதனால்,நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது;அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!

தினசரி வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால்,நம் அனைவருக்கும் சராசரியைக் கடந்த சிற்றின்ப உணர்ச்சிகள் அதிகரித்துவிட்டன;அதைச் சமப்படுத்தும் செயல் தான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 6



ஆன்மீக சக்தி உடலில் தினமும் சேர: 

செயற்கை உரங்கள் மற்றும் ஆங்கில மருந்துகளால் உடலின் ஆத்ம பலம் குறைகின்றது;இதைச் சரி செய்ய தினமும் பின்வரும் ஆன்மீக உணவுகளை சேர்க்க வேண்டும்;
கறிவேப்பிலை,ஆராக்கீரை,அருகம்புல்,துளசி,கரிசலாங்கண்ணி,அகத்திக்கீரை=இவைகளை குழம்பு அல்லது ரசமாக சேர்த்துக் கொண்டே வர வேண்டும்;

பிரிந்து சென்ற மருமகள் திரும்பி வர: 

ஸ்ரீகற்பக விநாயகருக்கு கொய்யாப் பழ ஊறுகாய் மற்றும் உளுந்து சேர்த்த தோசை அல்லது ஊத்தப்பத்தை படையலிட வேண்டும்;விநாயகர் அகவல் ஆறு முறை ஜபிக்க வேண்டும்;மருமகள் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அந்த படையலை தானமாக தர வேண்டும்; 12 முறைக்குக் குறையாமல் செய்துவர மருமகள் வீடு திரும்புவாள்;

பில்லி சூனியம் அகல: முள்ளு முருங்கை இலைகளால் அடை செய்து ஸ்ரீஅனுமனுக்கு படையல் இட வேண்டும்;அனுமன் சாலிசா 9 முறை ஜபிக்க வேண்டும்;இதை செவ்வாய்க்கிழமைகளில் 17 வாரங்கள் செய்து வர வீட்டில் இருக்கும் பில்லி,சூனியம்,ஜின் ஓடிவிடும்;அல்லது நிர்மூலமாகிவிடும்;

திடீர் அதிர்ஷ்டம் கிட்டிட;

அசைவம்,மது,போதைப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இந்த வழிபாட்டினால் பலனைப்பெற முடியாது;ரத்த உறவுகளுக்கு தர வேண்டிய சொத்துபாகத்தைத் தராதவர்களுக்கும்,ஆபத்துக் காலத்தில் கூட தனது மகன்/ள் குடும்பத்தை என்ன ஏது என்று எட்டிகூட பார்க்காமல் இருப்பவர்களுக்கும் இது பலன் தராது;


சங்கு,சக்கரத்துடன் முருகக் கடவுள் தமிழ்நாட்டில் பல ஊர்களில் அருள் பாலித்து வருகின்றார்;இவருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும்,சஷ்டி திதி வரும் நாட்களிலும்,விசாகம் நட்சத்திர நாட்களிலும் பால் பாயாசம் படையல் இட்டு,கந்தரலங்காரம் ஒரு முறையாவது ஜபிக்க வேண்டும்/கூட்டுப் பாடல் போல (ஒருவர் முதலில் பாட அதைக் கேட்டு மற்றவர்கள் திருப்பிப் பாடுதல்) பாடிய பின்னர் பிரசாதமாக தர வேண்டும்;தொடர்ந்து 12 முறை செய்து வர தொழிலில் அதிர்ஷ்டம் நிறைந்த பண வரவு கிட்டும்; விருப்பமான ப்ரமோஷனும் இதனால் கிட்டும்;



 பெற்ற அன்னையின் மீது அன்பு பெருகவும்,தாய்க்கு உரிய சேவைகள் ஆற்றிடவும்,தாயின் சாபம் தீர்ந்திடவும்:

“அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா எனக்கேட்டு மங்களாம்பிகையே யென்றும்
எதுவெனக்கு நலந்தருமோ அதையே நினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே!”

இந்த அங்காளி அந்தாதியை தினமும் 20 முறைக்குக் குறையாமல் ஜபித்து வர, பெற்ற  தாய் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அந்த நிலை மகன்/ளுக்கு மாறும்;

பெற்ற தாய் இறந்திருந்தால்,அனாதையாக இருக்கும் வயதானவர்களுக்கு சரீரப் பணி புரிந்து,தேவையான உதவிகள் செய்ய வேண்டும்;

நினைவாற்றல் பெருகிட:


தினமும் இரவில் ஸ்ரீஹயக்ரீவருக்கு காரட் சாற்றில் தேனும்,பாலும் கலந்து படையல் இட வேண்டும்;ஸ்ரீஹயக்ரீவர் சன்னதியில் 21 முறை அவரது காயத்ரி தூங்கும் முன்பு ஜபிக்க வேண்டும்;பிறகு,இந்த படையலை பிரசாதமாக பெற்று அருந்த வேண்டும்;காரட் வெளிநாட்டு காய்கறி அல்ல;நமது நாட்டின் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று;

விபத்து வராமல் இருக்க:


செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஒரையில் நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கு சிகப்பு நிற ஆடைகளை சாத்த வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அதை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்;குறைந்தது 9 செவ்வாய்க்கிழமைகளுக்கு இப்படிச் செய்து வர வேண்டும்;

வயிற்றுநோய்கள் தீர:

கோணியம்மன்(கோயம்புத்தூர்) சன்னதியில் அங்கூரா பூந்தியை படையல் இட வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அந்த அங்கூரா பூந்தியை ஏழைகளுக்கு தானம் செய்து வர வேண்டும்; ஆறு முறைகளுக்குக் குறையாமல் செய்து வர வேண்டும்;

கடலைமாவுக் கலவையுடன் சர்க்கரைப்பாகு கலந்து செய்யும் முறைக்கு அங்கூரா பூந்தி என்று பெயர்.

விபத்தைத் தடுக்கும் கோமுக நீர்:


சனிக்கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 6 முதல் 7 மணிக்குள் (புதன் ஓரையில்)      பெருமாள் கோவில் அல்லது க்ருஷ்ணன் கோவிலில் கோமுகம் வழியாக வெளிவரும் கோமுக நீரை செம்பு பாத்திரத்தில் பிடிக்க வேண்டும்;(மரப் பாத்திரம்/வெள்ளிப்பாத்திரத்திலும் பிடிக்கலாம்)
அதை அந்த நேரம் முடிவதற்குள் நமது வாகனத்தின் மீது தெளிக்க வேண்டும்;இதை மாதம் ஒருமுறை வீதம் வாழ்நாள் முழுவதும் செய்து வரலாம்;

 வைத்தியத் துறையில்(ஆயுர்வேதம்,மூலிகை மருத்துவம்,இயற்கை மருத்துவம்) பிரகாசிக்க

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இந்த ஆலயத்தின் அருகில் இருக்கும் அருவிப்பகுதிக்கு வைத்தியத்தை தொழிலாக செய்து வருபவர்கள் ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வரவேண்டும்;

சூரிய உதயமான நேரத்தில் இருந்து 3 மணி நேரம் இந்த அருவியில் தலையில் தண்ணீர் கொட்டும் விதமாக குளிக்க வேண்டும்;அப்படி குளிக்கும் போது அகத்திய மகரிஷியையும்,போகரையும் எண்ணி வேண்டிக்கொண்டே  இருக்க வேண்டும்;


மாதம் ஒரு முறை வீதம் 36 முறைகளுக்கு குறையாமல் இப்படிச் செய்து வர வைத்தியத் துறையில் பிரகாசம் பெறுவார்கள்;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 5





பித்ரு தர்ப்பணத்தின் நன்மைகள்:-


அ) உத்தம நிலைகளை அடைந்திருக்கும் பித்ருக்களுக்கு மேலும் பல உன்னதமான ஆன்மீக உயர்வுகளை அளிக்கக்கூடியது;

ஆ)கொடிய செயல்கள்,தீவினைகள் செய்த சில முன்னோர்களின் தீய கர்மவினைகளுக்கு பரிகாரம் இது மட்டுமே

இ)நடப்பு வாழ்க்கையில் தர்ப்பணம் அளிப்பவர் செய்த் தீயச் செயல்களுக்கு உரிய பரிகாரத்தை பித்ருக்கள் மூலமாகப் பெறுவது;

எதையும் திருடும் குணம் விலகிட:

பலருக்கு சிறு சிறு பொருட்களைத் திருடும் சுபாவம் இருக்கின்றது;இதுவும் ஒருவிதமான மன வியாதியே;ஆனால்,இதனால் உண்டாகும் சிக்கல்களால் கவுரவ இழப்பு உருவாகின்றது;இதைச் சரி செய்ய,திங்கட்கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு ராகு காலத்தில் கொய்யாப் பழ மாலையை அணிவித்து,சோக நிவாரண அஷ்ட்கம் வாசிக்க வேண்டும்;குறைந்த பட்சம் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்;

திருமணத் தடைகள் நீங்கிட:

வியாழக்கிழமை அன்று குரு ஓரையானது காலை 6 முதல் 7 வரையும்;மதியம் 1 முதல் 2 வரையும்,இரவு 8 முதல் 9 வரையும் வருகின்றது;இந்த நேரத்தில் உங்களுக்கு வசதிப்படும் ஒரு நேரத்தில் பழனிமலையில் தவம் செய்யும் போகர் ஜீவசமாதியில் சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும்;திருமணத் தடை நீங்கும்வரை தொடர்ந்து செய்துவர  வேண்டும்;

வடதமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் பூண்டி மகான் ஜீவசமாதியில் அல்லது நாகப்பட்டிணம் அருகில் இருக்கும் கோரக்கர் ஜீவசமாதியிலும் இவ்வாறு செய்து திருமணத் தடையை நீக்கலாம்;திருவாரூரில் கமலமுனி சித்தரின் ஜீவசமாதியும்,மயிலாடுதுறையில் குதம்பை சித்தரின் ஜீவசமாதியும்,கும்பகோணத்தில் அகத்தியமகரிஷியின் ஜீவசமாதியும் மற்றும் பல ஊர்களில் பல சித்தர் பெருமக்களின் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது;அங்கே இவ்வாறு செய்து வர நல்ல வாழ்க்கைத் துணை அமையும்;

கணினி அறிவில் எக்ஸ்பர்ட் ஆகிட:

புதன் கிழமைகளில் அல்லது புனர்பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் புதன் ஓரையில் ஸ்ரீஹயக்ரீவருக்கு 108 அரிசி நெய்க் கொளுக்கட்டைகளையும்     அவித்த கொள்ளினையும் படையல் இட வேண்டும்;நமது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அதை குதிரைக்கு தானமாக தர வேண்டும்;  கொளுக்கட்டைகளை அங்கே வருபவர்களுக்கு பிரசாதமாக தரலாம்;25 முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வர கணினி அறிவில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்;கணினி படிப்புக்கு ஸீட் கிடைக்கவும் இதே வழிபாட்டைப் பின்பற்றலாம்;

தீராத ருணம்(கடன் மற்றும் வழக்கு) தீர; 

திருநெடுங்களம் சிவலிங்கத்திற்கு சிகப்பு மாதுளை முத்துக்களால் காப்பு இட வேண்டும்;ருண விமோசன பதிகம் ஜபிக்க வேண்டும்;பிறகு,அந்த மாதுகளை முத்துக்களை ஏழைகளுக்கு தானமாக தர வேண்டும்;

கணவனின் கெட்டப் பழக்கங்கள் மறைய:

அருள்மிகு லலிதாம்பிகை திருமீயச்சூரில் அருள்பாலித்து வருகின்றாள்;இவள் சன்னதியில் ஒரு முறையாவது ஸ்ரீலலிதா சகஸ்ராம ஸ்தோத்திரத்தை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபித்தால் மட்டுமே அதன் பலன் பூரணமாக நமக்கு கிட்டும்;இதே ஆலயத்தில் சுயமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்;தயாரித்து எல்லா பெண்மணிகளுக்கும் தானம் தர வேண்டும்;இதன் மூலமாக மாங்கல்ய விருத்தி உண்டாகும்;

ஓம்  சத்குரு  ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம் !!!


சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 4



பணத்தட்டுப்பாட்டைத் தீர்த்திட: 

இரட்டை விநாயகர் இருக்கும் சன்னதிகளில் சதுர்த்தி அல்லது சதுர்த்தசி அல்லது இரு திதிகளிலும் முழு தாமரை மலர்  மாலையை அணிவிக்க வேண்டும்;விநாயகர் அகவல் ஒருமுறையாவது ஜபிக்க வேண்டும்;கொளுக்கட்டைகளை படையலாக இட வேண்டும்;நமது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வர வேண்டும்;முடிவாக,தாமரை மலர்களையும்(அந்த சாத்திய மலர்களைஅல்ல;)கொளுக்கட்டைகளையும் ஏழைச் சிறுவர்கள்,சிறுமிகளுக்கு தானமாகத் தர வேண்டும்; 

மாதம் ஒருமுறை வீதம் அதிக பட்சமாக 36 முறை செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும்;இரட்டைப்பிள்ளையார் அவதாரம்,திருமாலின் மகள்களை திருமணம் செய்த பின்னரே உண்டானது;எனவே தான்,இரட்டைப்பிள்ளையார் வழிபாடு மஹாலட்சுமி கடாட்சத்தை அள்ளித் தருகின்றது;

$       $       $       $       $      $      $


வீட்டில் அரிசி வைக்கும் பானையில் ஒரு தாமரை மலரை வைக்க வேண்டும்;மறு நாள் அதை ஒரு பசு அல்லது யானைக்கு தர வேண்டும்;இதை தினமும் ஒருமுறை என்று 48 நாட்கள் செய்யலாம்;


பசுவின் வால்புறத்தின் இரு பாகத்தில் நமது முதல் சம்பளம் மற்றும் கட்ட வேண்டிய கல்வி கட்டணம்,தேர்வுக் கட்டணத்தை சில நொடிகள் வைத்துவிட்டு அதை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்;,மிகுந்த அனுஷ்டானங்கள் தெரிந்தவர்கள் படு ரகசியமாக செய்து வரும் “செல்வ வளத்தை அதிகரிக்கும்” முறைகளில் இது முதன்மையானது;



வீட்டின் நிலைப்படி,சமையலறையின் நிலைப்படி,படுக்கையறையின் நிலைப்படியை மட்டும் மாம்பலகையால் அமைக்க வேண்டும்;அல்லது பலா,தேக்கு நிலைப்படிகளும் அமைக்கலாம்;செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தாமே அரைத்த மஞ்சளையும்,தாமே அரைத்த சந்தனத்தையும் பூச வேண்டும்;பிறகு,பழுத்த சுமங்கலியைக் கொண்டு அதில் குங்குமம் வைக்க வேண்டும்;இதன் மூலமாக பண தேவதைகள் மகிழ்ச்சி அடைந்து செல்வத்தின் தலைவியான மஹாலக்ஷ்மியை அழைத்து வருவது உண்டு;


தினமும் அல்லது வாரம் இரு நாட்களில் வாசலில் மாவு கோலம் போடுவதன் மூலமாகவும் மஹாலஷ்மி கடாட்சத்தைப் பெறலாம்;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!


சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 2



படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற:

ஆங்கில வழிக்கல்வியில் 10 ஆம் வகுப்பு முன்பாக படித்தால் யாராக இருந்தாலும் சராசரி மதிப்பெண் தான் பெற முடியும்;10 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே அவரது தனித் திறமைகள் வெளிப்படும்;தன்னம்பிக்கை அதிகரிக்கும்;பெற்றோரையும்,மற்றவர்களையும் மதிக்க வைக்கும்;நமது ஜாதிப் பண்பாட்டினை மனப்பூர்வமாக உணர வைக்கும்;ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாட்டில் பரவலாக்கிய முத்தமிழை வித்தவரின் தமிழ் இனத்திற்குரிய துரோகம் இது;


வியாழக்கிழமைகளில் காலை 6 முதல் 7 க்குள் அல்லது மதியம் 1 முதல் 2 க்குள் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சின் முத்திரை காட்டும் வலது கர விரல்களுக்கு குழந்தைகள் தானாகவே அரைத்த சந்தனத்தை பொட்டாக இட்டு வர வேண்டும்;கூடவே பின்வரும் பாடலை 9 முறை ஜபிக்க வேண்டும்;


கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்


முறையற்ற காமம் அல்லது பேராசை அல்லது கோபம் அல்லது பொறாமை நீங்கிட:

நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் சன்னதிக்குச் சென்று 108 முறை தோப்புக்கரணம் போட்டு வர வேண்டும்;

அல்லது

விஜய கணபதி சன்னதியில் 108 முறை தோப்புக்கரணம் இட வேண்டும்; தினமும் என்று 11 நாட்கள் அல்லது வாரம் ஒரு நாள் என்று 11 வாரங்கள் இப்படிச் செய்து வர மனநிலையில் மாற்றம் உண்டாகும்;


தீய கனவுகள் ஏற்படாமல் இருக்கவும்,வருடக் கணக்கில் இருக்கும் மன வேதனைகள் தீரவும்:

திருப்புங்கூர்,திருப்பூந்துருத்தி,ஏனனூர்,பட்டீஸ்வரம் மற்றும் தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் முலவரை நோக்கி இல்லாமல் நந்தி விலகி இருக்கின்றார்;இப்படிப்பட்ட ஆலயங்களில் விளக்கெண்ணெயால் தீபம் 19 ஏற்ற வேண்டும்;வேர்க்கடலைகளை நந்திக்கு படையல் இட்டு மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறுவர்களுக்கு தானமாக தர வேண்டும்;
வேர்க்கடலை தானம் செய்ய இயலாதவர்கள் வேர்க்கடலை மாலையை நந்திக்கு அணிவிக்க வேண்டும்;


மனச்சஞ்சலங்களும்,சபலங்களும் தீர:

நவக்கிரக சன்னதியில் உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளன்று சந்திரனுக்கு எண்ணெய் காப்பு இட வேண்டும்;வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;மாதம் ஒரு முறை வீதம் 36 முறை செய்து வர மனம் தெளிவு பெறும்;சபலங்கள் நீங்கிடும்;



காவியுடையை யாரெல்லாம் அணியலாம்?


ஒரே ஒரு தீய எண்ணமும் எழாமல் இருக்கும் மனோபாவம் யாருக்கு இருக்கின்றதோ அவர் மட்டுமே காவியை அணிய வேண்டும்;காவி உடையை அணிந்துவிட்டால் அதையே காலம் முழுவதும் அணிய வேண்டும்;காவி உடை கிழிந்துவிட்டாலோ அல்லது திரும்பவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நைந்துவிட்டாலோ அதை ஒரு போதும் புதைக்கவோ,எரிக்கவோ கூடாது;

காவி உடை அணிந்தவாறு பல திரைப்படங்களில் சர்வ சாதாரணமாக காட்சிகளை வைக்கின்றார்கள்;இது அந்த இயக்குநர்களுக்கு கடுமையான சாபத்தைத் தரும்;

காவி உடை அணிந்து கொண்டு கெட்டவார்த்தையில் திட்டுதல்,பீடி,சிகரெட்,மது அருந்துதல் செய்தால் அதனால் உண்டாகும் பாவ வினை உடனே பல கோடி மடங்காகப் பெருகிவிடும்;
நமது சனாதன தர்மத்தில் காவி என்பது தியாகத்தினை குறிக்கும் நிறம் ஆகும்;அதை சாதாரணமாக நினைப்பதும்,காவி என்ற வார்த்தையைச் சொல்லி கேலி செய்வதும்,திட்டுவதும் கூட பலத்த சாபத்தை தரும்;



ஒரு போதும் பிறர் பயன்படுத்திய ஆடையை,பொருளை(சோப்,ஷாம்பு,பல்பொடி,பற்பசை) பயன்படுத்த கூடாது;அவர்களுடைய தீவினைகள் உடனே நமக்கு வந்து சேரும்;

யோகா மாஸ்டர்,இந்தி மாஸ்டர்,10 ஆம் வகுப்பு பாடங்கள் அல்லது 12 ஆம் வகுப்பு பாடங்கள்,ஸ்போகன் இங்கிலீஷ்,ப்ராணயாமா,ஜோதிடம்,வாஸ்து,மாந்திரீகம்,சித்த மருத்துவம்,மூலிகை மருத்துவம்,சரக்கலை,வாசியோகம் போன்றவைகளை ஒரு இடத்தில் இருந்து சொல்லித் தர வேண்டும்;எக்காரணம் கொண்டும் மாணவரின் வீடு/இருப்பிடம் சென்று சொல்லித் தரக் கூடாது;அப்படி சொல்லித் தந்தால் அடுத்த பிறவியில் இதே துறையில் ஆசானாக முடியாது;வித்தைக்குரிய தேவியின் சாபம் இது என்பதை மறக்காதீர்கள்;

தீராத பணக்கஷ்டம் தீர(வியாபாரத்திலும்,வீட்டிலும்):-

தொடர்ந்து 48 நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு எட்டு முழு வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வர வேண்டும்;அர்ச்சனை செய்யும் போதோ அல்லது முடிந்த பின்னரோ மஹாலக்ஷ்மி அஷ்டகம் எட்டு முறை ஜபிக்கலாம்;பிறகு குறைந்த பட்சம் இரண்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு தாமரைமலர்களுடன் அன்னதானம் செய்து வர வேண்டும்;

வீண்பழி வராமல் இருக்க:தெற்கு நோக்கி பல் துலக்கக் கூடாது; தெற்கு நோக்கி சாப்பிடக் கூடாது;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!



சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 1



பிரிவினை எண்ணத்தால் வீட்டை விட்டு வெளியேறியிருக்கும் அப்பா வீடு திரும்ப:

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோவில்,உய்யக் கொண்டான் மலை,திருச்சியில் அமைந்திருக்கின்றது;
இங்கிருக்கும் முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி வரும் நாட்களில் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்து வரவேண்டும்;இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு செய்து வர பிரிந்தவர் கூடுவர்;காணாமல் போன அப்பா வீடு திரும்புவர்;குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்;

சிறு வியாபாரிகளின் துயரங்கள் நிரந்தரமாக நீங்கிட:

ஸ்ரீசரபேஸ்வரர் சன்னதி இருக்கும் கோவில்களுக்கு ஞாயிறு தோறும் அல்லது மாதாந்திர ஞாயிறு தோறும் செல்ல வேண்டும்;தாமே அரைத்த சந்தனத்தை ஸ்ரீசரபேஸ்வரருக்கு பூச வேண்டும்;(முறைப்படி அனுமதி பெற்று);அப்படி பூசும் போது பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரர் மந்திரத்தை 51 முறை ஜபித்து வர வேண்டும்;
ஜபித்து முடித்த பின்னர்,கோவில் வளாகம் மற்றும் கோவில் நந்தவனத்தில் ரவை+நவதானியங்கள்+சீனி இவைகளை அரைத்த மாவை தூவ வேண்டும்;குறைந்தது ஐந்து கிலோவாக இருக்க வேண்டும்;ஓராண்டுக்கு குறையாமல் இப்படிச் செய்து வர தொழிலில் வளர்ச்சி அபாரமாக இருக்கும்;
ஓம் வீரசரபாய நமஹ
ஓம் சதாசிவாய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் பசூனாம் பதயே நமஹ
ஓம் குக்ஷ்மாய நமஹ
ஓம் சுலபாய நமஹ



சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதகாதிபதியாக சனி வந்து அதன் திசை நடைபெறும் போது) தீர:

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வரலாம்;இக்காலம் முழுவதும் அசைவம் சாப்பிடவோ,மது அருந்தவோ கூடாது;துறவிகள்,வறியவர்கள்,ஊனமுற்றோர்களுக்கு சனிக்கிழமையில் வரும் சனி ஓரையில்
அன்னதானம் செய்தாலும் சனியின் தாக்கம் தீரும்;

வன்னி மரத்தை சனிக்கிழமைகளில் சனி ஓரையில் 80 முறை வலம் வர வேண்டும்;சனி ஓரை என்பது சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;

அமாவாசை தோறும் சிவாலயங்களில் வன்னி மரத்தை நட்டு 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் பராமரித்தாலும் சனியின் தாக்கம் தீரும்;குறைந்தது 3 மரங்கள்,அதிகபட்சம் 8 மரங்கள் நட்டு தினமும் நீரூற்றி வளர்க்க வேண்டும்;

உடல் ஊனமுற்றோர்களுக்கு ஊனத்தை நீக்கும் கருவிகள் வாங்கி தானமாக தந்தாலும் சனியின் தாக்கம் தீரும்;

பித்ருக்களின் ஆசிர்வாதம் எளிதாக கிட்டிட:

வாழை இலையின் இளம் குருத்தினை சிறு சிறு துண்டுகளாக்க வேன்டும்;அதை பருப்புடன் சேர்த்து சமைக்க வேண்டும்;சமைத்ததை கீரை சாதத்துடன் கலக்க வேண்டும்;இந்த படையலை விநாயப் பெருமானுக்கு படையல் இட்டு கணபதி அஷ்டகம் அல்லது அவரது துதியை ஜபிக்க வேண்டும்;அர்ச்சனை செய்யலாம்;இந்த படையலை ஏழைக் குழந்தைகளுக்கு தானம் செய்து வர வேண்டும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை இப்படி ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்திக்கும் செய்து வர பித்ருக்களின் ஆசி கிட்டும்;அம்மா வழி பித்ருக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்;

டூ வீலர்,கார்,லாரி வியாபாரிகள் தொழிலில் சிறக்க:

சிவலிங்கத்திற்கு மாணிக்கக் கற்களால்  செவ்வாய்க்கிழமை வரும் குளிகை காலமான மதியம் 12 முதல் 1.30க்குள் அர்ச்சனை செய்ய வேண்டும்;சிகப்பு நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்;இப்படி 52 செவ்வாய்க்கிழமைகள் செய்து வர தொழிலில் கொடிகட்டிப் பறக்கலாம்;


மாமியார் மருமகள் சண்டைகள் நிற்கவும்,ஓரகத்திகளின் மனக்கசப்புகள் தீரவும்,சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் தீரவும்:

செவ்வாய்க்கிழமைகளில் வரும் செவ்வாய் ஓரையான காலை 6 முதல் 7 வரை அல்லது மதியம் 1 முதல் 2 வரை அல்லது இரவு 8 முதல் 9 வரையிலான ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளள வேண்டும்;
அஷ்டபுஜ துர்கைக்கு சிகப்பு நிற உணவினை படையல் இட்டு,துக்க நிவாரண அஷ்டகம் 8 முறை ஜபிக்க வேண்டும்; அல்லது துர்கை அஷ்டகம் 8 முறை ஜபிக்க வேண்டும்;பிறகு,அந்த சிகப்பு நிற உணவினை (காரட் சாதம் அல்லது தக்காளி சாதம்) தானம் செய்ய வேண்டும்;16 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து (விட்டுவிட்டாவது) செய்து வர பெண் வழி உறவுச்சிக்கல்கள் தீர்ந்துவிடும்;

உடல் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் பெற:

ஆலயங்களில் உள்ள நிர்மால்ய பூக்களை தாமே சுமந்து சென்று அருகில் இருக்கும் கடல் அல்லது குளத்தில் விட்டுவிட வேண்டும்;அல்லது / மேலும் கோவிலில் உழவாரப் பணி தொடர்ந்து செய்துவர  உடல் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் கிட்டும்;அதன் பிறகு மீண்டும் உடல் குற்றங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்;


வாக்கு சுத்தி பெருகவும்,உடல் குற்றங்கள்,மனக் குற்றங்கள் தணிய:

தினமும் ஆலம்பட்டையை வேக வைத்த நீர்க் கஷாயத்தினால் வாய் கொப்பளிக்க வேண்டும்;


காமத்தினால்,குரோதத்தால்,பொறாமையால்(செவ்வாய் வக்கிரம் அடைந்தவர்கள்,செவ்வாய் நீசமும் வக்கிரமும் ஆனவர்களும் செய்ய வேண்டியது) செய்த குற்றங்களுக்கு பிராயச் சித்தம் பெற:

11 கர கணபதி சன்னதி,ஆவுடையார் கோவிலுக்கு 22 சதுர்த்தி நாட்களுக்குச் செல்ல வேண்டும்;சதுர்த்தசி நாட்களுக்கும் செல்லலாம்;ஏகாதசி திதி நாட்களிலும் செல்லலாம்;12 பெரிய கொளுக்கட்டைகள் செய்து அவருக்கு படையல் இட வேண்டும்;விநாயகர் அகவல்  4 முறை ஜபிக்க வேண்டும்;பிறகு,அதில் 11 ஐ ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்;12 வதை குளத்து மீன்களுக்கு இட்டு வர வேண்டும்;மீண்டும் அதே தவற்றினைச் செய்யாமல் இருந்தால் மட்டுமே பிராயச்சித்தம் கிட்டும்;


 முறையற்ற காம இச்சைகள் நீங்கிட:

ஐயாறப்பர் திருக்கோவில்,திருவையாறு செல்ல வேண்டும்; வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் வரை சாம்பிராணி தூபம் இட வேண்டும்; அல்லது மாதம் ஒரு நாள் சென்று ஐந்து மணி நேரம் சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும்; 108 வாரங்கள் இப்படிச் செய்து வர முறையற்ற காம இச்சைகள் விலகிச் சென்று விடும்;சாம்பிராணி தூபம் இடும் போது சிவ மந்திரம் அல்லது சிவபுராணம் அல்லது திருவெம்பாவை அல்லது ஐயாரப்பர் பதிகம் ஜபிக்க வேண்டும்;வாய்விட்டுப் பாடக்கூடாது;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம் !!!


Saturday, March 17, 2018

ஜன்மச்சனியை சுபச்சனியாக மாற்றும் மங்கள சனி!!!

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பிப்ரவரி 2020 வரை ஜன்மச்சனி நடைபெற்று வருகின்றது;
இதுவரை அசைவம் சாப்பிட்டாலோ,மது அருந்தினாலோ அன்று படாத பாடு பட வேண்டியிருக்கும்;

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் சாலையில் (திருவாரூர் மார்க்கம்) திருநரையூர் என்று ஒரு கிராமம் இருக்கின்றது;
($ திருநாரையூர் என்பது மயிலாடுதுறை அருகில் இருக்கும் சிவாலயம் என்பதை மறக்காதீர்கள்;ஒரு துணையெழுத்து மாறிவிட்டால் ஆலயமும் மாறிவிடும்$)
இங்கே அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமி திருக்கோவில் இருக்கின்றது;இதுதான் இன்று மங்கள சனி கோவிலாக மாறியிருக்கின்றது;
இந்த ஆலயத்தினுள் சனிபகவான் தனது இரு மனைவிகளான மந்தா தேவி,ஜேஷ்டா தேவி மற்றும் இரு மகன்களான மாந்தி,குளிகன் உடன் இருந்து மங்கள சனியாக அருள் பாலித்துவருகின்றார்;
தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே காலை 8 மணிக்கு செல்ல வேண்டும்;
கோவிலை வலம் வரும் போது கோவிலுக்குள் இருக்கும் தண்ணீர்க் குழாயில் வரும் தண்ணீரை நமது தலையில் தெளிக்க வேண்டும்;பிறகு,ராமனாதசுவாமியையும், அம்பாள் பர்வதவர்த்தினியையும் தரிசிக்க வேண்டும்;
அதன் பிறகுதான் மங்கள சனியை தரிசிக்க வேண்டும்;
11 மணி வரை இருந்து மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு மீண்டும் ஒரு முறை பர்வதவர்த்தினி சமேத ராமனாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்;முடிவாக கால பைரவரை தரிசிக்க வேண்டும்;
பிறகு வீடு திரும்ப வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்;
அன்று முதல் ஒரு போதும் அசைவம்,மது தவிர்த்தே ஆக வேண்டும்;ஜன்மச்சனி சுபச்சனியாக,மங்கள சனியாக மாறிவிடும்;
தசரத மஹாராஜாவின் பெருமுயற்சியால் இந்த கோவில் நமக்கு கிடைத்திருக்கின்றது;இந்த கோவிலின் வயது 17,50,000 ஆண்டுகள் ஆகும்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

மூலிகை காபி செய்முறை..! ( Preparation of herbal coffee )

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம்.
இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.


காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..
தேவையான மூலிகை பொருட்கள்...
1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.
இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.
நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.
காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும்.
இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.
இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது.
நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும்.
குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.
உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.
குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது.
பசி நன்கு எடுக்கும்.
சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

*ஆரோக்கியத்தை அள்ளித் தரும் சிறுதானியங்கள்..!*



🍅🍇🍉🥝🥥🍌🍋🍍🍑🥥


நம்முடைய முன்னோர்கள் உட்கொண்ட சத்தான உணவு பழக்க வழக்கங்கள் மாறி, அதிக அளவு பாஸ்ட் புட் உணவுகளையே விரும்பி சாப்பிட்டு வருகிறோம். ஆனால், தற்போது மீண்டும், முன்னோர்களின் உணவு முறைகளையே பின்பற்றத் துவங்கியுள்ளனர். எனவே நம் முன்னோர்களின் உணவான சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி ஆகிய பாரம்பரிய தானியங்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. அவற்றின் பயன்களை பற்றி இங்கு காண்போம்.
*ராகி 



🍊 கேழ்வரகில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிக அளவில் கால்சியம் உள்ளது. கேழ்வரகை தினமும் நாம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் சூட்டை தணிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.


*தினை 
🍐பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் தினையில் உள்ளது. கண்பார்வை சிறப்பாக இருக்கவும், இதயத்தைப் பலப்படுத்தவும் உறுதுணையாக இருக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தினையைக் கூழாக்கித் தந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து பால் சுரக்க உதவுகிறது. மேலும் கபம் தொடர்பான நோய்கள் மற்றும் வாயுத்தொல்லையை போக்குகிறது.


*சாமை 
🍏 புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சாமையில் உள்ளது. மேலும், சாமை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.


*குதிரைவாலி 

🍒ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும், செரிமானத்தின் போது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாகப் பயன்படுகிறது. மேலும், உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக குதிரைவாலி செயல்படுகிறது.


*கம்பு 
🍍 வைட்டமின்கள் நிறைந்துள்ள கம்பு, உடலுக்கு தேவையான ஆற்றலையும், வலிமையையும் தருகிறது. மேலும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வு தருகின்றது, அஜீரணக் கோளாறுகளை சரிசெய்கிறது. நம் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கம்பில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.


*சோளம் 
🌽நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சோளத்தில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான குறைபாடுகள், இரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சோளம் குடல் புற்றுநோயை தடுக்கக்கூடியது. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிக அளவில் உள்ளது. 
🥕🥝🍇🍌🌽🍋🍉🥕🥝

தாமிரபரணி புஷ்கரம் 2018



குரு பகவான் விருச்சிக ராசியில் வரும் அக்டோபர் 12 2018 அன்று பிரவேசிப்பதால் தெற்கே தாமிரபரணி ஆற்றிலும்,வடக்கே பீமா ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறைதாமிரபரணி /பீமா மகா புஸ்கரம்
தாமிரபரணி மற்றும் பீமா புஸ்கரம் (2018)

இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான்.
அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.
அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தெற்கே தாமிரபரணி ஆற்றிலும்,வடக்கே பீமா நதியிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும்.
அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
குரு பகவான் விருச்சிக ராசியில் வரும் அக்டோபர் 12 2018 அன்று பிரவேசிப்பதால் தெற்கே தாமிரபரணி ஆற்றிலும்,வடக்கே பீமா ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தாமிரபரணி மகா புஸ்கரம் ஆகும்....
இந்த தாமிரபரணி/ பீமா புஸ்கரம் வரும் 2018 அக்டோபர் 12 அன்று தொடங்கி 23 அக்டோபர் 2018 வரை கொண்டாடப்படுகிறது.....
கொண்டாடப்படும் தாமிரபரணி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தாமிரபரணி மகா புஸ்கரம் ஆகும்....
இந்த தாமிரபரணி/ பீமா புஸ்கரம் வரும் 2018 அக்டோபர் 12 அன்று தொடங்கி 23 அக்டோபர் 2018 வரை கொண்டாடப்படுகிறது.....