Tuesday, July 31, 2018

கால தேவன் என்ற கால பைரவரின் அருளைப் பெற!







உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும் ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில் ஒரு    உலகம்  இருக்கின்றது;  அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;


தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம் கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;


ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம் மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது அவசியம் ஆகும்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;


உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர் உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம் இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும் என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில் இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக மிக எளியது விநாயகர் உபாசனை!

மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை! அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;

பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு (தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;


இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்! இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால பைரவர் உதயமானார்;இன்றைய கலியுகத்தில் இந்த மூன்று கால சக்திகளும் கார்த்திகை மாதத்தில் வருவது அரிதிலும் அரிது;


முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;
மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெற ஒரு அரிய நாள் அமைந்திருக்கின்றது;


விளம்பி வருடம்,ஆடி மாதம்,19 ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி திதியும்,பரணி  நட்சத்திரமும் சேர்ந்தே வந்திருக்கின்றது;4.8.2018 சனிக்கிழமை காலை 8.04 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.02 வரை தேய்பிறை அஷ்டமி திதியும்,4.8.2018 சனிக்கிழமை காலை 11.50 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.26 வரை பரணி நட்சத்திரமும் வர இருக்கின்றது;


பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் 4.8.2018 சனிக்கிழமை காலை 11.51 முதல் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் மட்டுமாவது கால பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;

வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின் அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;

மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர் புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;

இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால் ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும் வழிபடலாம்;

மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள் மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;

மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர் ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;       

                                      

Sunday, July 15, 2018

பாரதத்தேசத்தின் எதிர்காலம் பற்றி விசிறிச் சாமியார் அவர்களின் கருத்துக்கள்


உத்திரப்பிரதேசமாநிலத்தில் பிறந்து,நமது அண்ணாமலையில் ஐக்கியமாகிவிட்டவர் விசிறிச்சாமியார் அவர்கள்;இவர் ஒருமுறை மட்டுமல்ல;பல முறை கேரளாவில் இருக்கும் ஆனந்த ஆஸ்ரமத்திற்குச் சென்றவர்;அங்கே ஆனந்த ஆஸ்ரமத்தை ஸ்தாபித்த ராமதாஸ் சுவாமிஜியை சந்தித்து ஆசி பெற முயன்றிருக்கிறார்;அவர்தான் இவரை பிச்சை எடு என்று ஆசி கூறியுள்ளார்;

அவரது வார்த்தைகளாலேயே விசிறிச்சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்;அண்ணாமலையாரை அப்பா என்றே அழைத்துக் கொள்ளத் துவங்கினார்;

பாரத தேசம் என்பது எனது நாடு; எனது ‘அப்பா’வின்(அண்ணாமலையாரின்) பூமி;இப்பிச்சைக்காரனின் (விசிறிச்சாமியார்) இதயம்;புண்ணிய பூமி;வேத பூமி;இப்பிச்சைக்காரனின் விளையாட்டு மைதானம்;

நமது பாரததேசம் செழித்தோங்கி,அண்டசராசரத்திற்கு எல்லாம் வழிகாட்டும்;ஒவ்வொரு துறையிலும் பாரதம் பிற நாடுகளுக்குத் தலைமையேற்று நடத்தும்;அண்டம் முழுவதும் பாரதம் சொல்லுவதையே கேட்கும்;

எல்லாத்துறைகளிலும் மற்ற நாடுகளுக்குப் பாதையினை,நல்லப் பாதையினை பாரதம் காட்டும்;
அணு ஆயுதங்கள் போன்ற தீவினை ஆயுதங்களில் இருந்து நமது தாயகத்தை எனது ‘அப்பா’(அண்ணாமலையார்) காப்பாற்றுவார்;பாரதம் எந்தப் போரிலும் தாக்கப்படாதவாறு அவர் பார்த்துக் கொள்ளுவார்;பாரதத்தின் மேல் எந்த ஆபத்தும் வந்து தாக்காமல் அவர் பார்த்துக் கொள்ளுவார்;

உலகம் முழுவதற்கும் பாரதம் தலைமையேற்கும்;இந்துக்களின் சன்மார்க்கம் உலகெங்கும் பரவும்;இது விரைவில் நடக்கும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்

நரகத்திற்குச் செல்லாமல் இருக்க நட வேண்டிய விருட்சங்கள்!!!


ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே!

இப்பாடல் கார்த்திகை புராணத்தில் இருக்கிறது;ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு,ஒரு ஆல்,ஒரு வேம்பு,மூன்று விளாமரம்,மூன்று வில்வமரம்,மூன்று நெல்லிமரம்,பத்து புளியமரம்,ஐந்து மாமரம்,ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம்;மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது;

வில்வமரத்தையும்,வன்னி மரத்தையும் வெட்ட மாட்டார்கள்;அப்படி வெட்டினால்,அது பரிகாரத்திற்கு உள்படாத பாவத்தில் வருகிறது;கடந்த நூற்றாண்டு வரை இந்துக்களாகிய நம்மிடம் இது பற்றிய விழிப்புணர்ச்சி இருந்தது;

மரங்கள் வைத்து ‘வனமஹோத்ஸவம்’ கொண்டாட வேண்டியகாலத்தையும் நமது முன்னோர்கள் குறித்திருக்கிறார்கள்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியணி சூலினி
   மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
   சங்கரி செளந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
   கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                      1

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக்
   காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரிரொளி மதியொளி
   தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
   மாலைகள் சூடிடுவாள்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     2


சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
   சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
   பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில்வடி வுடனே
   எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     3


தணதண தந்தண தவிலொலி முழங்கிடத்
    தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர் ஒளி வீசிடக்
    கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப்
    பண்மணி நீ  வருவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்சி                   4


பஞ்சமி பைரவி பர்வத புத்ரி
   பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
   கொடுத்தநல் குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
   சக்தியெனும் மாயே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                   5


எண்ணிய படி நீ யருளிட வருவாய்
   எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
   பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
   கவலைகள் தீர்ப்பவளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி  காமாட்சி                 6


இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லை
    யென்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச்
   சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
   பழவினை ஒட்டிடுவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 7

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 8


தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இந்த துக்க நிவாரண அஷ்டகத்தைப் பாட வேண்டும்;இப்படி 90 நாட்கள் பாடிவர நமது அனைத்து சோகங்களும் நம்மை விட்டு அகன்றுவிடும்;(அசைவம் இந்த நாட்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்);



இந்த 90 நாட்களும் இரவில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்தில்(பழமையான சிவாலயம் எனில்,அங்கே இருக்கும் அம்மன் சன்னதியில்) பாடி வர ஏழு தலைமுறையாக இருந்து வரும் சோகங்களும்,கர்மவினைகளும் தீர்ந்து,மன நிம்மதியும்,அன்னை பராசக்தியின் அருளும்,அவரவர்களின் குலதெய்வ ஆசியும் கிட்டும்;

உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய (குருபலத்தை தரும்) வியாழ மாலை


தினமும் காலை 6 மணிக்குள்ளாகவும்,வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் பாடுவதன் மூலமாக அவரவர் ஜாதகத்தில் குரு பலம் அதிகரிக்கும்;கல்வியில் மகத்தான தேர்ச்சி பெற விரும்புவோர் தினமும் இதைப் பாடி வரவேண்டும்;3 ஆண்டுகள் தினமும் இதைப் பாடி வருபவர்களுக்கு தகுந்த குரு கிடைப்பார்;

ஜோதிடர் எனில் அவரது சுபாவத்திற்கு ஏற்ற ஜோதிட குருவும்,
சித்த வைத்தியர் எனில் அவரைப் புரிந்து கொள்ளும் சித்த வைத்திய குருவும்;
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு நேர்மையான குருவும் கிடைப்பார்கள்;

ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் 3 ஆண்டுகள் தினமும் பாடினால், குருக்கிரகத்தால் வர இருக்கும் தீமைகள் 99% குறைந்துவிடும்;

சித்தர்களின் ஜீவசமாதி ஒன்றில் 3 ஆண்டுகள் பாடி வர மூன்றாம் ஆண்டின் முடிவில் அந்த சித்தரே குருவாக இருந்து வழிகாட்டுவார்;

திருச்செந்தூரில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று போய் இதை 6 முறை வீதம் 12 முறை(ஒரு வருடம்) ஜபித்தால்,குருவாக திருச்செந்தூரனே வருவார்;

கழுகுமலை,திருப்பரங்குன்றம்,பழனிமலை,திருத்தணி,பழமுதிர் சோலைகளில் சஷ்டி திதி நாட்களில் 12 முறை(வளர்பிறை சஷ்டி) ஜபிக்க குமரக்கடவுளின் உபதேசம் கிட்டிடும்;

காசி மாநகரத்தில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,தகுந்த சிவனடியார் குருவாக அமைவார்;

அண்ணாமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,சிவ கணமே குருவாக அமைந்து சிவ வழிபாட்டில் அடுத்த நிலைக்கு வழிகாட்டும்;

இமயமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,காகபுஜண்டரின் தரிசனம் கிட்டும்;அவரது யுக உபதேசம் கிட்டும்;

சிவபெருமானின் வடிவமான லிங்கத்தின் முன்பாக தினமும் ஒரு முறை வீதம் 12 ஆண்டுகள் ஜபித்தால் சிவ தரிசனமும்,சிவபெருமானே குருவாகவும் அமைவார்;


ஓம் கிலி அங் உங்
ஓம் அருணாச்சலாய நம
திருவான செல்வம் திரளான மக்கள்
   தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
   மகிழ்துளப மான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
   உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
   கதியானாய் தேவர் குருவே!

அறியாமை பேசி அலையாதே என்று
    அறிஞானம் தந்த குருவே
செறியாமை யென்னும் செகமாயம் நீக்கி
    செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமை யாலே முளைத்திட்ட பந்தம்
   முடிவாக்கி விட்ட குருவே
குறியாமை யான குணக்கேடு நீக்கி
    குளிரானாய் தேவர் குருவே!

மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
    மலர்ந்தனை மன்னர் குருவே
தனவீடு என்று தனிகரும் போற்ற
   தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் செயிக்க
   செப மாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
   வணிகனே வள்ளல் குருவே!

அண்ணலே என்றுனை அவிட்டமாம் நாளில்
   அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயக்கிடும் வயிரமும்
   மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
   கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
   விளங்கினாய் தேவ குருவே!

இருபத்தி ஏழெனும் எண்தரு யந்திரம்
  இயக்கிட இருந்த குருவே
திருபற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
  திருபூசை சொன்ன குருவே
குருபத்தி கொள்ளாரின் குலம் விட்டு ஒடிடும்
  குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
  உத்தமா தேவர் குருவே!

குரு போற்றி குரு போற்றி குலத்துறை குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென் திசைக்
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!!!

தேவதானம் (ராஜபாளையம் அருகில் அமைந்திருக்கும்)அன்னை தவம்பெற்ற நாயகி 108 போற்றிகள்!!!


தினமும் இந்தப் பாடலை 21 முறை வீதம்,48 நாட்கள் பாராயணம்(வீட்டில் அல்லது கோவிலில்) செய்ய,அல்லல்கள் அகன்று அன்னையின் அருளும் சுபிட்சமும் கிட்டும்;

1.ஓம் அகிலம் காக்கும் அன்னையே போற்றி
2.ஓம் அகிலாண்ட ஈஸ்வரியே போற்றி
3.ஓம் அச்சம் தவிர்க்கும் அருமருந்தே போற்றி
4.ஓம் அரி ஹரி அம்மனே போற்றி
5.ஓம் அமுதம் அளிப்பவளே போற்றி
6.ஓம் ஆனந்த வடிவானவளே போற்றி
7.ஓம் ஆதிபராசக்தியே போற்றி
8.ஓம் இடுக்கண் களைபவளே போற்றி
9.ஓம் இருள் நீக்க வந்தவளே போற்றி
10.ஓம் இன்றும் காட்சி தரும் தேவியே போற்றி
11.ஓம் ஈடில்லா உபகாரியே போற்றி
12.ஓம் ஈகையின் வடிவே போற்றி
13.ஓம் உண்மையின் உருவே போற்றி
14.ஓம் உன் தாள் பணிந்தோம் போற்றி
15.ஓம் ஊரெல்லாம் உறைபவளே போற்றி
16.ஓம் ஊழ்வினை அறுப்பவளே போற்றி
17.ஓம் எம்மை ஆளும் சக்தியே போற்றி
18.ஓம் எங்கள் குலவிளக்கே போற்றி
19.ஓம் ஏழைக்கு இறங்குபவளே போற்றி
20.ஓம் ஏழிசை வடிவானவளே போற்றி
21.ஓம் ஏற்றமெல்லாம் தருபவளே போற்றி
22.ஓம் ஐயம் தீர்ப்பவளே போற்றி
23.ஓம் ஐஸ்வர்யம் தருபவளே போற்றி
24.ஓம் ஒளியுடைய சக்தி தேவியே போற்றி
25.ஓம் ஓங்கார நாதமே போற்றி
26.ஓம் ஓளடதமே போற்றி
27.ஓம் கருணையின் வடிவே போற்றி
28.ஓம் கனவில் தோன்றும் தாயே போற்றி
29.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
30.ஓம் திருஓலக்கம்பாறையை அரசாளும் தேவியே போற்றி
31.ஓம் காலத்தை வென்ற சாம்பவியே போற்றி
32.ஓம் காப்பாற்ற வருவாய் போற்றி
33.ஓம் கீர்த்திக்கு உரியவளே போற்றி
34.ஓம் குலம் தழைக்க அருள்பவளே போற்றி
35.ஓம் குன்றில் இட்ட விளக்கே போற்றி
36.ஓம் குங்கும கோதையே போற்றி
37.ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
38.ஓம் கூற்றுவனை அழிப்பவளே போற்றி
39.ஓம் கூவிட வருபவளே போற்றி
40.ஓம் கேட்ட வரம் தரும் அன்னையே போற்றி
41.ஓம் கொடையளிக்கும் கொற்றவையே போற்றி
42.ஓம் கோபம் தணிப்பவளே போற்றி
43.ஓம் கோதை நாயகியே போற்றி
44.ஓம் சகலசமயத்தார் போற்றும் தேவியே போற்றி
45.ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சஞ்சீவிப்புற்றே போற்றி
46.ஓம் சகலம் அளிக்கும் சக்தியே போற்றி
47.ஓம் சித்தர் வடிவானவளே போற்றி
48.ஓம் சிந்தை தெளிபவளே போற்றி
49.ஓம் சீர்மிகு அம்மையே போற்றி
50.ஓம் செல்வம் கூட்டுவிக்கும் தாயே போற்றி
51.ஓம் சோதிப்பவளே போற்றி
52.ஓம் சோதனைகளைக் களைபவளே போற்றி
53.ஓம் தவவலிமை அளிக்கும் தாயே போற்றி
54.ஓம் தஞ்சமே உன் பாதம் தாயே போற்றி
55.ஓம் திருமறையின் அன்னையே போற்றி
56.ஓம் தீவினை அறுப்பவளே போற்றி
57.ஓம் தீமைகளை அழிப்பவளே போற்றி
58.ஓம் தூயவளே போற்றி
59.ஓம் தேசமெல்லாம் உறைபவளே போற்றி
60.ஓம் நம்பிக்கை தருபவளே போற்றி
61.ஓம் நம்பிக்கை தருபவளே போற்றி
62.ஓம் நல்லனவெல்லாம் தருபவளே போற்றி
63.ஓம் நவதுர்க்கையின் வடிவானவளே போற்றி
64.ஓம் நல்வரம் தரும் நாகம்மையே போற்றி
65.ஓம் நினைவில் நிற்பவளே போற்றி
66.ஓம் நினைத்தவுடன் காட்சி தருபவளே போற்றி
67.ஓம் நெஞ்சில் நிறைந்தவளே போற்றி
68.ஓம் நேர்வழி நடத்துபவளே போற்றி
69.ஓம் நோய்கள் தீர்ப்பவளே போற்றி
70.ஓம் பசி நீக்கும் பரமே போற்றி
71.ஓம் படியளக்கும் பகேசுவரியே போற்றி
72.ஓம் பாவங்களை நீக்கும் பரமே போற்றி
73.ஓம் புவனம் காப்பவளே போற்றி
74.ஓம் தவம் பெற்ற நாயகியே போற்றி
75.ஓம் புகழுக்குரியவளே போற்றி
76.ஓம் சிவசிவ சக்தியானவளே போற்றி
77.ஓம் பூலோகம் நிறைந்தவளே போற்றி
78.ஓம் பூஜைக்குரியவளே போற்றி
79.ஓம் பூமாதேவியே போற்றி
80.ஓம் பூமாதேவியே போற்றி
81.ஓம் பூவையர் தேவியே போற்றி
82.ஓம் பெரியவளே போற்றி
83.ஓம் பேரருள் புரிபவளே போற்றி
84.ஓம் பேசும் தெய்வமே போற்றி
85,ஓம் பொன்னே புகழே போற்றி
86.ஓம் பொற்பாதம் பணிந்தோம் போற்றி
87.ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி
88.ஓம் மண்ணே மருந்தானவளே போற்றி
89.ஓம் மாங்கல்யம் அளிப்பவளே போற்றி
90.ஓம் மாதுளம்பூ நிறத்தவளே போற்றி
91.ஓம் முக்தி தரும் முனியம்மையே போற்றி
92.ஓம் முதலில் அழைக்கப்படுபவளே போற்றி
93.ஓம் மூலாதாரங்கள் அளிப்பவளே போற்றி
94.ஓம் மேதினின் திருமகளே போற்றி
95.ஓம் மேன்மை தருபவளே போற்றி
96.ஓம் வற்றாத ஜீவநதியானவளே போற்றி
97.ஓம் வளம் பல தருபவளே போற்றி
98.ஓம் வாழ்வளிக்கும் வரமே போற்றி
99.ஓம் விசுவரூபிணியே போற்றி
100.ஓம்விரதத்தின் மகிமையே போற்றி
101.ஓம் விண்ணளிக்கும் விந்தையே போற்றி
102.ஓம்விளக்கு பூஜைக்குரியவளே போற்றி
103.ஓம் வீரமளிக்கும் அன்னையே போற்றி
104.ஓம் வெற்றிக்கு உரியவளே போற்றி
105.ஓம் வேள்வியில் உதிப்பவளே போற்றி
106.ஓம்வேற்றுமை களைபவளே போற்றி
107.ஓம் தவம் பெற்ற நாயகியே போற்றி
108.ஓம் வையகம் தழைக்க வந்தவளே போற்றி

பாம்பன்சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தின் மகிமை

முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;





பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.






உங்கள் குழந்தைகளை ஏன் தமிழ் மீடியத்தில் சேர்க்க வேண்டும்?





உலகில் எந்த குழந்தையும் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும்(ஐந்து வயது முதல் பத்து வயது வரை) தாய்மொழிக்கல்வியிலேயே கற்றால் மட்டுமே மொழித்திறனும்,படைப்புத்திறனும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை.

இன்றைய நிலவரப்படி எட்டாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது இங்கிலீஷ்மீடியம் பள்ளி எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளியிலோ நமது குழந்தையைப் படிக்க வைப்பது நன்று.

ஆனால்,நடைமுறையில் நமது தருமம் மிகு தமிழ்நாட்டில் இருப்பது என்ன?

3 வயதிலேயே இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.தாய்மொழியாம் தமிழே தெரியாத ஒரு இனம் உலகில் உருவாகிவிட்டது எனில் அது நமது தமிழ்நாடாகத் தான் இருக்கமுடியும்.விளைவு?

படிக்கும் வயதில் பள்ளியிலும்,வீட்டிலும் தரப்படும் தொல்லைகளால் ஏராளமான தமிழ்நாட்டுக்குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாகி,வலிப்பு நோய் மாநிலமயமாகிவிட்டது.இதை எங்கள் ஊர் குழந்தை சிறப்பு மருத்துவர் சொன்னது.ஆனால்,கொந்தளிக்கும் நிஜம்.(எனவே,எனதருமை தமிழ்ப்பெற்றோர்களே,உங்கள் கால்களில் விழுந்து மன்றாடிக்கேட்கிறேன்.உங்கள் குழந்தையை தமிழ் வழிக்கல்வியில் சேருங்கள்)

ஆனால்,நாம் என்ன செய்கிறோம்? எம்புள்ள இங்கிலீஷ் மீடியம் படிக்கிறது என பீற்றிக்கொள்கிறோம்.

இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்துபவர்களின் பின்னணி பணம் பண்ணுவது மட்டுமே.இம்மாதிரியான பள்ளிகளின் ஆசிரியர்களில் எத்தனை பேர்கள் தகுதி வாய்ந்தவர்கள்?வெறும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்கள் சம்பளத்துக்கு வரும் ஆசிரியைகளின் கோபங்கள் பிஞ்சுகளை அடிக்கவும்,உதைக்கவுமே!!

உங்கள் குழந்தையின் படைப்புத்திறனையும்,சிந்திக்கும் திறனையும்,தன்னம்பிக்கையையும் நீங்கள் நாசமாக்குகிறீர்கள்.அப்படி நாசமாக்குவதை ஒரு மரபாக ஆக்கிய பெருமை தமிழறிஞர் டாக்டரைச் சேரும்.

இதிலும் பணம் சம்பாதிக்க வழி செய்த இவரா தமிழறிஞர்?புதிய சமுதாயப்பிரச்னையை உருவாக்கி,தமிழினத்தின் தரத்தை சிதைத்துவிட்ட இவரா முத்தமிழ்க்காவலர்?

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி





1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,

“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.

Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.



இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,

“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.



உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,

“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.



பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.



இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

நன்றி:மகரிஷியின் ஆழ்நிலை தியானம்,பக்கம்71,72.வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,சென்னை 4.விலை:ரூ.80/


பிரிட்ஜ்,வாட்டர் கூலர் இந்தியத் தயாரிப்பு





பத்தாம் வகுப்பு கூட தேறாத திரு.மன்சுக் பாயி பிரஜாபதி மண்ணால் ஆன குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்.பிழைப்புக்காக இயந்திர செங்கல் சூளை தொழிலகத்தில் வெலைபார்த்த அனுபவம் இந்த மாதிரியான சுதேசிப் பொருளைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.



18 வயதில் ரூ.30,000 வங்கிக்கடன் பெற்று சொந்தமாகத் தொழில் தொடங்கினார்.மண்ணாலான வாட்டர் பில்டரை செய்து 1995 இல் சந்தைப்படுத்தினார்.விலை ரூ.350 முதல் 400க்குள் என்பதால் அமோக வரவேற்பு பெற்றது.



2005 இல் நான்ஸ்டிக் கடாய்(வாணலி)யை மண்ணால் செய்தார்.இதை டாடா கெமிக்கல்ஸ் ஆய்வு செய்து அதன் தரத்திற்கு சான்றிதழ் வழங்கியது.இதையடுத்து இவர் உருவாக்கிய மண்ணாலான,ஓசை எழுப்புகிற ‘பிரஷர் குக்கர்’ மத்திய,மாநில ஊரக வளர்ச்சித் துறைகளின் சான்றிதழ் பெற்றது.



கடைசியில் மிட்டி கூல் என்ர பெயரில் இவர் உருவாக்கிய மின்சாரமே இல்லாமல் இயங்கும் ஃபிரிஜ் அமோக வரவேற்பு பெற்றது.எனவே,மன்சுக் ரூ.10,00,000/-கடன் பெற்று உற்பத்தியைத் தொடர்ந்தார்.வங்கிக் கடன் தவணைகளை தவறாமல் செலுத்தி வருகிறார்.மிட்டி கூலில் பால் ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்கிறது.காய்கறிகள் ஒருவாரம் வரை பசுமை கெடாமல் இருக்கிறது.டிஸ்கவரி டிவி சேனல் இவரது சாதனைகளை உலகறியச் செய்தது.இது போன்ற சுதேசி தயாரிப்புக்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.ஆம்! இதுபோன்ற சுதேசித் தயாரிப்புப் பொருட்கள் மனித நலத்தை மேம்படுத்துபவை ஆகும்.

(ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடப்படும் தண்ணீர்,உணவு போன்றவை நமது உடல் நலத்தைக் கெடுக்கின்றன.இது பற்றி யாரும் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்.ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டால்,அவற்றின் விற்பனை படுத்துவிடும் இல்லையா?)

மன்சுக்கின் தொலைபேசி:02852-221156.அலைபேசி:098251-77249.மின் அஞ்சல் முகவரி:


info@mitticool.in, இணையதளம்:http://www.mitticool.in/

இயேசு நாதர் பற்றிய உண்மைகளைக் கூறும் இன்னொரு புத்தகம்



ஹோல்கர் ஹெர்ஸ்டன் என்ற ஜெர்மனியர் Jesus Lived in India  என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் ‘நிக்கோலய் நோட்டோவிச்’ என்ற ரஷ்யர் கி.பி.1887 ஆம் வருடத்தில் திபத் வரை நடந்து வந்து ஆராய்ந்து கண்டுபிடித்த விஷயம். “இயேசு இந்தியாவில்தான் படித்தார்”.இதை எழுதியதற்காக அவரை ரஷ்ய அரசு சைபீரியா சிறைக்கு அனுப்பியது. 

விடுதலையானது அவர் திரும்பவும் திபத்துக்கு வந்து லாமாக்களின் நூலகத்தில் சுவடிகளையெல்லாம் ஆராய்ந்து இயேசுவைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற நூல் இது.

இயேசுவின் இளமைக்காலம் (13 வயது முதல் 33 வயது வரை) இந்தியாவில்தான் கழிந்தது என்பதை ஏராளமான சான்றுகளுடன் கூறுகிறது.

நன்றி:குமுதம் 6.5.1999. பக்கம் 13.

சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை


தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள்
முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து பிதுர் தர்ப்பணம் முடித்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமி தரிசனம் முடித்தபின்னர்,
அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரைஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கரைத்தபின்னர்,
பின்னர் காசி சென்று, கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர்,அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற்று,
பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.


சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும் இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாத்ரீகர்கள் செளகர்யத்தை உத்தேசித்து சிலவற்றை கடைபிடிக்க முடியவில்லை.





காசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது மோசல் சராய் ரயில் நிலையத்திலிருந்து 15 கி மீ தொலைவில் வாரணாசி ரயில் நிலையம் உள்ளது.
காசி வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான் . அருகிலேயே உள்ளது.இவ்விரண்டு இடங்களிலும் ரயில் ஏறி இறங்கலாம் காசி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி மீ தூரம் தான்.


வருணா ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் எழில் ஒன்று.

முற்பிறவிகள் உண்மை என்பதை நிரூபிக்கும் மனோதத்துவம்



காரணம் இல்லாமல் எதையாவது பார்த்ததும் பயம் வருகிறது என்றால் அது முன் ஜன்மத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்கிறார் எடித்.எடித் பையர் என்பவர் முன் ஜன்மம் பற்றியும் மறு ஜன்மம் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர்.இவர் ஹிப்னாடிச முறையில் முற்பிறவி நினைவுகளைக் கண்டறியக்கூடியவர்.



ஒரு பெண் எப்போதும் தண்ணீரைக் கண்டாலே பயந்து நடுங்கினாள்.வயதானபிறகும் இந்த பயம் இவரை விட்டு நீங்க வில்லை;ஆட்டிப்படைத்தது.பயத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய,இந்தப் பெண் எடித் பையரைத் தொடர்பு கொண்டாள்.

எடித் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி,முற்பிறவி நினைவுகளை ஆய்வு செய்தார்.முதல் பிறவியில் அவர் சிறுமியாக இருந்தபோது,ஏரியில் படகில் சென்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்திருக்கிறார்.



இரண்டாவது பிறவியில் மீனவராக பிறந்து புயலில் சிக்கி கடலுக்குள் விழுந்து இறந்திருக்கிறார்.மூன்றாவது பிறவியில் மாலுமியாக இருக்கும்போது,கப்பல் கவிழ்ந்து இறந்திருக்கிறார்.



இந்த நிகழ்ச்சிகள் அவரது ஆன்மாவில் படிந்து அச்ச உணர்வை தோற்றுவித்திருக்கிறது.மெல்ல மெல்ல முன் ஜன்ம நினைவுகளை மறக்கச் செய்து தண்ணீர் பயத்தைப் போக்கினார் எடித் பையர்.



இதே போல உயரமான இடம் என்றாலே ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவர் முற்பிறவியில் ஒரு கூலி வேலையாளாக இருந்தார்.உயரமான சர்ச கூரைகளின் மீது ஓடுகளை பழுது பார்க்கும் வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.அப்படி ஒரு சர்ச்சில் அவர் ஓடுகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது கீழே தவறிவிழுந்து இறந்திருக்கிறார்.



அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து,மறுபிறவியிலும் பயம் காட்டிக்கொண்டிருந்தது.மனோதத்துவ சிகிச்சையின் மூலமாக அந்த பயம் போக்கப்பட்டது.
இதுபோன்ற பல முன் ஜன்ம பிரச்னைகளைத் தீர்த்து வைத்த எடித் இந்த அனுபவங்களை யூ ஹேவ் பீன் ஹியர் பிஃபோர்(you have been here before)என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.



நமது முன் ஜன்ம நினைவுகள் அனைத்தும் நமது வலது பக்க மூளையில் பதிந்திருக்கின்றன.அவற்றைக் கொண்டே நாம் நமது வாழ்க்கையில் சம்பாத்தியம்,துணிச்சல்,பயம்,முன் ஜன்ம மனைவி,நட்பு,எதிரி என அனைவரையும் எதிர்கொள்கிறோம்.

ஆதாரம்:தினத்தந்தி,நெல்லைப் பதிப்பு 9.3.2011,ஆவிகள் உலகம் மாத இதழ்,                               ஜீன் 2011 பக்கம் 37.






கப்சிப் ஆன காம்ரேட்டுகள்



தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது, “ தி,மு.க.ஆட்சியில் நியமிக்கப்பட்ட கோவில் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.புது அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.சென்ற தி.மு.க.ஆட்சியில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எல்லாம் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.இந்த ஆட்சி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் தான் அறங்காவலர்களாக நியமிக்கும்” என்று தெரிவித்தார்.

உடனே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுந்து,

“தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இறை நம்பிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது” என்று (இந்துமத) எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே எழுந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டார்:

“கம்யூனிஸத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை உங்கள் கட்சிப்பணியில் ஊழியர்களாக நியமிப்பீர்களா?’

கம்யூனிஸ்டுகளின் முகம் கறுத்துப் போனது.

நன்றி:விஜயபாரதம் பக்கம் 29,30.9.11