Saturday, May 30, 2009

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?


இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?
மேல்நாடுகளின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் மேக்ஸ் வெபர் என்ற பொருளாதார மண்டு( என்றால் அறிவாளி என்ற அர்த்தமும் உண்டு)மேதை நமது இந்துயாவைப்பற்றியும் இந்தியப்பொருளாதாரம் பற்றியும் ஒரு கருத்து கூறினார்.
இந்தியர்களின் மதிப்பீடுகளும், சாதிப்பிரிவினைகளும், அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.நமது குடும்ப அமைப்பு முறை, பாவ-புண்ணியத்தில் நம்பிக்கை, மறு பிறவியில் நம்பிக்கை போன்றவை இந்துயா முன்னேறாமல் தடுக்கும் காரணிகள்.(ஆனால் இன்று அமெரிக்க ஒபாமா அமெரிக்கர்களே உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் .குடும்பமாக சேர்ந்து வாழப்பழகுங்கள்.அப்போதுதான் நமது அமெரிக்கா மீண்டும் வலிமை பெறும் என உபதேசிக்கிறார்)

அதாவது நாம் ஆங்கிலேயர்கள் நம்மை நிர்வகித்த போதும் அவர்களே பொறாமைப்படுமாறு வளமாக இருந்துள்ளோம்.
பின்னர் நாம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன காரணம்?
நாம் நமது பாரம்பரிய பொருளாதார மதிப்பீடுகளை மறந்து மேலைநாட்டவரின் அடியொற்றி நமது பொருளாதாரத்தை வகுத்துக்கொள்ளப் பலவந்தப்படுத்தப்பட்டதுதான்.இந்த பலவந்தம் முதலில் ஆங்கிலேயர்களால் நம்மிடையே பிரயோகிக்கப்பட்டது(அப்ளிகேட்).. .. பின்னர் நம்மை ஆண்ட ஆட்சியாளர்களால் இன்றும் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் நாம் முன்னேறி வருகிறோம்.நமது இந்துயாவில் உள்ள தொழில்நகரங்களின் மொத்த எண்ணிக்கை 2100(மனதில் சிவகாசி அல்லது திருப்பூர் அல்லது கோயம்புத்தூர் அல்லது சூரத்தை நினைத்துகொள்ளவும்.இந்நகரங்களுக்குப் போயிருந்தால்தான் நமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பு உங்களுக்குப்புரியும்)
நம் நாட்டிலுள்ள தொழில்களின் எண்ணிக்கை 8.5கோடி
முறைசாரா தொழில்களின் எண்ணிக்கை 4.4 கோடி
சிறு தொழில்களின் எண்ணிக்கை 3 கோடி
குடும்ப நிர்வாகத்தின் கீழ் வரும் கம்பெனிகள் 7,25,000
தொழில் முதலீடுகளில் 98.8% குடும்ப சேமிப்பிலிருந்து வருகின்றன.வெளிநாட்டிலிருந்து வரும் தொழில்முதலீடு 1.2% மட்டுமே!!!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% சேமிப்பாகும்.
கி.பி.2002 கணக்குப்படி, உலகளவில் சுயதொழில் புரிவோர் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருப்பது நமது இந்துயாதான்.நம் நாட்டில் 18 முதல் 64 வயது வரை உள்ள தொழில்புரிவோரின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 18%
சீனாவில் இது 12.3% மட்டுமே!
அமெரிக்காவில் இது 11% மட்டுமே!!
இந்தியாவில் முறைப்படி பதிவுசெய்யப்படாத தொழிலகங்கள் மட்டும் 4.8 கோடி.
இந்துயாவின் மொத்த மக்கள் தொகையில் 92%பேர்கள் சுயதொழில் புரிவோர்.இதில் 80% பேர்களுக்கு உறவினர்கள்தான் தொழில்செய்ய நிதியுதவி செய்கிறார்கள்.இதன் மூலம் மேக்ஸ் வெபரின் கூற்று கடைந்தெடுத்த தப்பு என்பது நிரூபணம் ஆகிறது.
வெள்ளைக்காரன் பேச்சைக்கேட்டால் இப்படித்தான் உருப்படாமப் போகணும்

நம் நாடு வல்லரசாகுமா? எப்படி?இந்தபுத்தகங்களே ஆதாரம்


நமது நாடு வல்லரசாகுமா? எப்படி?

கீழ்க்கண்ட புத்தகங்கள் எந்த அரசியல் கலப்புமின்றி நமது இந்துயா முழுக்க பயணம் செய்து ஏராளமாக சர்வே செய்து எழுதப்பட்டுள்ளன. நிச்சயமாக நமது நாடு வலிமைமிக்கதாக மாறும்.அதற்கான அடையாளங்களே இந்த புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன.
சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்:தனி மனிதனின் தனித்தன்மை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் தனித்தன்மை நிச்சயம் உயரும்.இவ்வாறு ஏராளமான நிறுவனங்களின் தனித்தன்மை உயர்ந்தால் அந்த நிறுவனங்களின் நாடு உயரும் என்றார்.(எனக்குத் தெரிந்து இந்த 2009 இல் ஒரு 45 வயது மனிதர் இருக்கிறார்.அவரது படிப்பு அந்தக்கால 3 ஆம் வகுப்பு.அவர் சுமார் 1000 செல் போன் மற்றும் போன் எண்களை தப்பின்றி கூறுகிறார்.வெறும் 200 ரூபாயில் துவங்கிய அவரது நிறுவனம் இன்று ஒரு நிமிடத்துக்கு ரூ.5000 சம்பாதித்துக்கொண்டிருக்கிறது).இந்த புத்தகங்களை ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் எழுதியுள்ளார்.இவர் சென்னையில் உள்ளார்.பல வருடங்களாக இவர் தினமணி, துக்ளக்,சுதேசிச் செய்தி இவற்றில் பல பொருளாதார விழிப்புணர்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.இவரது கட்டுரைகளை வாசிப்போர் நமது நாட்டின் மீது இன்னும் அதிக நேசத்தை கொட்டுவர்.நமது அரசியலவாதிகளின் வடிகட்டின அயோக்கியத்தனத்தினை உணர்ந்து கொள்ளுவர்.
1.பொருளாதாரம் புதிரல்ல! விலை ரூ.25/-
இந்த புத்தகம் பொருளாதாரத்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது.பல கடினமான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிமையாகப் புரிய வைக்கிறது.
2.பெண்மையைப் போற்றுதும்,பெண்மையைப் போற்றுதும் விலை ரூ.40/-
நமது நாட்டில் பெண்களைப் போற்றி மதிக்கும் தன்மையைக் குறித்தும்,பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்கள் முன்னேறுகிறார்களா அல்லது சீரழிக்கிறார்களா(பம்மல் கே சம்மந்தம் படம் ஞாபகத்திற்கு வருகிறதா?)என்பதைப்பற்றியும் விளக்குகிறது.வெளிநாடுகளில் விடுதலை பெற்ற பெண்கள்(பெண் விடுதலை பெற்றவர்கள்)படும் அவதிகளைப்பற்றியும் விளக்குகிறது.
3.நம்பிக்கை விதைக்கும் நல்லுள்ளங்கள் விலை ரூ.25/-
நாட்டில் நல்லவர்களே இல்லையே என புலம்புகிறீர்களா?இந்த நூல் இப்படியெல்லாம் இந்தக்காலத்தில் வாழ்ந்து வருகிறார்களா? என ஆச்சரியப்படும் மனிதர்களை நீங்கள் சந்திக்கலாம்.இவர்களல்லவா தன்னலமற்ற ஆத்மாக்கள்!!!
4.சீட்டுக்கட்டு மாளிகை விலை ரூ.25/-
அமெரிக்காவின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைக்கிறது.அந்த நாட்டின் பொருளாதார கலாச்சார(அவர்களுக்கு ஏது கலாச்சாரம்?) சீரழிவுகளை விவரிக்கிறது.
5.விவசாயத்தை விட்டு ஓடும் விவசாயிகள் விலை ரூ.20/-
இப்புத்தகம் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் படும் அவஸ்தைகளைப்பற்றியும் ஆழமாக அலசுகிறது.
6.நம்மை நாமே எப்போது உணர்வோம் விலை ரூ.25/-
நம்மை நாம் ஏன் தாழ்வாக நினைக்கிறோம்? எப்படி இந்த சிந்தனை நாடு முழுக்கப்பரவியது.
நமது புராதனப்பெருமைகள் என்ன? ஏன் நாம் நம்மை உயர்வாக நினைக்கவேண்டும்? (இந்த இரு கேள்விகள் தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ தோன்றக்காரணமே)என்பதை விரிவாக கூறியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்
7.ஆயிரம் உண்டிங்கு ஜாதி! விலை ரூ.25/-
ஜாதி அமைப்புகளின் வலிமை பற்றியும் அவை நமது இந்துயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உந்துசக்தியாக இருக்கின்றன என்பதைப்பற்றியும் ஆழமாக அலசுகின்றன.
(நல்ல வேளை அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைக்கவில்லை)
8.வான சாஸ்திரம் விலை ரூ.தெரியவில்லை.எழுதியவர் டாக்டர் எம்.எல்.ராஜா.
நமது பாரதநாட்டின் வானசாஸ்திர ஆராய்ச்சியில் நீண்ட நெடிய இடையீடற்ற பாரம்பரியம் கொண்ட இந்துயா நாட்டின் கூறுகளை எடுத்துக்கூறுகிறது.

இந்த 8 புத்தகங்களும் கிடைக்குமிடங்கள்:
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
K-75 14 வது தெரு
அண்ணாநகர் கிழக்கு
சென்னை-102.
போன்:94431 40930

சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
401,துருவதாரா அபார்ட்மெண்ட்ஸ்
241,டாக்டர் ராஜேந்திரபிரசாத் ரோடு
டாடாபாட்,கோயம்புத்தூர்-12.
போன்:94863 12732

இணையதளம்:www.swadeshitn.org

பாரதத்தின் தேசிய மொழி ஸம்ஸ்க்ருதம்


ஸம்ஸ்க்ருதம் ஏன் பயில வேண்டும்?

நமது புராதன இந்துயாவில் இரண்டே இரண்டு மொழிகள் இருந்தன.ஒன்று நமது தாய்மொழியாம் தமிழ்.இன்னொன்று சமஸ்க்ருதம்.இந்த இரு மொழிகளும் சிவபெருமானின் கையில் உள்ள உடுக்கை ஒலியிலிருந்து பிறந்தன.சமஸ்க்ருதத்தை பாணினி என்ற மகரிஷியும் தமிழை அகத்தியர் என்ற மகரிஷியும் நமது பாரத நாட்டில் பரப்பினர்.இந்த இரு மொழிகளும் அந்தந்த காட்டுவாசிகளின் உச்சரிப்போடு கலந்து 1700 மொழிகளாகப் பிரிந்துவிட்டன.இப்படி 2 மொழியானது 1700 மொழியாகப் பிரிவதற்கு சுமார் 25,000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன.முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அப்போ 2 மொழியானது 1700 மொழியாக வளர 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன என நம்பலாம்.ஆனால் வெள்ளைக்காரனால் நம்ப முடியாது.

இராமாயணகாலத்தில் தான் குரங்கிலிருந்து மனிதன் நாகரீகமடையத்துவங்கிய காலம் என புதைபொருள் ஆய்வாளர்களும் மானுடவியல் அறிஞர்களும் மதிப்பிட்டுள்ளனர்.இராமாயணத்தில் அசோகவனத்திலிருந்த சீதையிடம் அனுமன் இனிய மொழியில் பேசினான் என கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது ராமாயணகாவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.இங்கு இனிய மொழி என்பது நமது தமிழ்தான்.ஆக ஆஞ்சனேயருக்கும் கூட பல மொழிகள் தெரியும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
தமிழ் மொழியில் திருமந்திரம் என்ன சொல்லுகிறது?இன்றைய நவீன உலகின் சிக்கல்கள் அனைத்தையும் எப்படி தீர்ப்பது என்பதைக்கூறுகிறது.இது தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?திருமந்திரமா அது என்ன என்றல்லவா கேட்கிறோம்?
தமிழ் மொழியில் எத்தனை வளமான இலக்கியங்கள், இலக்கணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு சமஸ்கிருதத்திலும் உள்ளன.நமது பாரதத்தின் இரு கண்களாக இந்த இரு மொழிகளும் உள்ளன.



சமஸ்க்ருதம் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு முடிவு:ஒரு கணிப்பொறியை ஸ்பெஷலாக உருவாக்கினர்.அந்த கணிப்பொறியின் டெஸ்க்டாப்பின் முன்பாக ஒரு மனிதன் நின்று கொண்டு பெண் என்று கூற வேண்டும்.இந்த பெண் என்ற வார்த்தையை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் கூற வேண்டும்.(உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றன).


எந்த மொழியில் பெண் என உச்சரித்ததும் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிகிறதோ அந்த மொழியே கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என முடிவு செய்தனர்.சமஸ்க்ருதத்தில் மகிளா என உச்சரித்ததும் கணிப்பொறியின் முகப்பில் டெஸ்க்டாப்பில் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
இன்று நமது இந்துயா(பாரதம்)வில் சமஸ்க்ருதத்தை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.



ஆங்கிலேயன் சமஸ்க்ருதத்தை செத்த மொழி என்று கூறினான்.ஏனெனில் சமஸ்க்ருதம் உலகம் முழுக்கப்பரவினால் ஆங்கிலமும் இங்கிலாந்தும் அழிந்துவிடும் என பயந்தான்.ஆங்கில மொழியியல் வல்லுநர்கள் அப்படித்தான் மதிப்பிட்டனர்.எனவே சமஸ்கிருதத்தை இறந்த மொழி என வதந்தி பரப்பினர்.



(நமது பகுத்தறிவுப்பகலவன்களுக்கு வசதியாகப் போய்விட்டது.சமஸ்க்ருதம் அய்யர்களின் மொழி.எனவே அது செத்துப்போன மொழிதான் என தூற்றினர்.நமது அப்பாக்களும் அதை நம்பினர்.தமிழிலிருந்து சமஸ்க்ருதத்திற்கும்
சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் துறை அழிந்தது.ஜோதிடம், பண்பாட்டுப்பரிமாற்றம் நின்று போனது.ஆனால் இந்த பகுத்தறிவுப்பகலவன்கள் தனது பெயரை மட்டும் சமஸ்க்ருதத்தில் வைத்துக்கொண்டனர்.தமிழுக்கும் துரோகம் செய்தனர்.கருணாநிதி,தயாநிதி,கலாநிதி இவையெல்லாம் சமஸ்க்ருதப்பெயர்களே!)

இன்று 15 வயது நிறைவடைந்த எவரும் இலவசமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.இதற்காக ஸமஸ்க்ருதபாரதி என்ற தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதும் ஸமஸ்க்ருதம் பேச எழுத சொல்லித்தருகிறது.ஏராளமான வெள்ளைக்காரர்கள் தினமும் அஞ்சல் வழியாக சம்ஸ்க்ருதம் பயின்றுவருகின்றனர்.



நீங்கள் பள்ளி, கல்லூரி, நிறுவனம் எது நடத்தினாலும் சரி.குறைந்தது 10 பேர்கள் சமஸ்க்ருதம் பயிலத் தயாராக இருந்தாலே போதும்.கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொண்டாலே இலவசமாக சமஸ்க்ருதம் 10 நாள் பேச்சுப்பயிற்சிக்கு ஆசான்கள் உங்கள் இடத்துக்கே வருவர்.வந்து பயிற்றுவிப்பார்கள். ஆசான் கட்டணம் கூட கிடையாது.


ஒரு நாளுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் வீதம் வெறும் 10 நாளில் சரளமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.
தமிழ்நாட்டில் சம்ஸ்க்ருதபாரதியின் அஞ்சல்வழிப்பயிற்சியின் மாநிலத்தலைமையகம் இராஜபாளையத்தில் உள்ளது.



முகவரி:சமஸ்க்ருத பாரதி, பி.ஏ.சி.ஆர்.பவனம்,ரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்-626117.தொலைபேசி எண்:91-04563-231027விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு.


நேரடிப்பயிற்சி தருவதற்கான தமிழ்நாடு மாநில அலுவலகம்:ஸம்ஸ்க்ருத பாரதி, எண்:43, B-6 ராம சதுக்கம் 3 வது மாடி,வள்ளுவர்க் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34.தொலைபேசி எண்கள்:044-28272632, 28272639, 0-91-94437-22009.மேலும் விபரமறியwww.sanskrita-bharathi.org


அமெரிக்கான்னா அமெரிக்காதான்.இதுவல்லவோ முன்னேற்றம் என்பது




அமெரிக்கான்னா அமெரிக்காதான்.இதுவல்லவா
முன்னேற்றம்!!!

அமெரிக்காவில் கி.பி.2007 ஆம் அண்டு கணிப்பின்படி 19 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,03,28,895.இதில் ஒரு வருடத்திற்கு 15 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களில் 7,50,000 பேர்கள் கர்ப்பவதியாகிறார்கள்.திருமணமாகாமல் கருத்தரிப்போரின் எண்ணிக்கையில் இது 24%.ஆதாரம்:www.pregnantteenhelp.org

இளவயது(15-19)கர்ப்பவதிகளுக்கு ஏற்ற ஆடைகளை விளம்பரம் செய்யும் நிறுவனங்களையும் சேர்த்து சுமார் 11,60,000 வலைத்தளங்கள் உள்ளன.நமது கூகுளில் தேடிப்பாருங்கள்.இன்று 30.5.2009 இந்த வலைமனை அதாங்க இணையதளங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரித்திருக்கும்.

அமெரிக்க துணை ஜனாதிபதிகளாக அறிவிக்கப்பட்ட சாராபாலினின் மகள் ப்ரிஸ்டல் பாலின் தனது 17 வது வயதில் 5 மாத கர்ப்பவதியாக இருக்கிறார் என்பதை சாரா பாலினே ஒப்புகொண்டுள்ளார்.சாராபாலின் தனது 44 ஆம் வயதில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.அதே சமயத்தில் அவரது மகள் பிரிஸ்டல் பாலின் கர்ப்பிணியாக இருக்கிறார்.


இந்த வலைப்பூவின் முகப்பில் கொடுக்கப்பட்டிருப்பது இரவுநேர அமெரிக்கா-சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.நீலநிறமாக இருப்பது இரவு சுமார் 8 மணியளவில் எடுக்கப்பட்டது.

Thursday, May 28, 2009

சித்தர்கள் & சிவபெருமானின் பூமி சதுரகிரி


சதுரகிரி மலை:சிவபெருமானும் சித்தர்களும் வாழுமிடம்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.இது பற்றி ஏற்கனவே சக்தி விகடன் இதழில் 60 வாரங்கள் தொடர் வந்து விட்டது.அத்தொடர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.இப்போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தினத்தந்தி தினசரியின் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரில் சதுரகிரியில் நடக்கும் அதிசயங்களை கதை வடிவில் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.அக்கதையை ஹனுமத்தாஸன் அவர்கள் கூறிவருகிறார்.
படித்தீர்கள் எனில் பிரமித்துப்போய்விடுவீர்கள்.
சதுரகிரிஸ்ரீசுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா!!!

இது எனது வலைப்பூவில் 100ஆம் தகவல் பூ!!!

இந்துயாவில் மட்டும் ஏன் இவ்வளவு சித்தர்கள் மகான்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்?


இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு சித்தர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்?

ஜெருசலம்,அரேபியாவில் ஏசு பிரான் பிறந்தார்.மெக்காவில் நபிகள் நாயகம் பிறந்தார்.அதோடு சரி! அதன் பிறகு உலகில் எந்தநாட்டிலும் ஒரு மகான் கூடப் பிறக்கவில்லை.அமெரிக்காவில் திடீரென நான் தான் ஏசு என யாராவது கிளம்பினால் உடனே அமெரிக்க அரசு அந்த ஆளைத் தீர்த்துக்கட்டிவிடுகிறது.ஆனால், அமெரிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு.கி.பி.2000 வாக்கில் ஏசு பூமிக்கு நேரில் வருவார் என்பதை நம்பும் நாடு.

உலகம் நாகரீகத்தின் உச்சம் பல இடங்களில் பரவியிருந்தாலும் முழுமை பெற்ற நாகரீகத்தின் உருவம்,வேதத்தில் தென்படுகிறது எனக்கூரியுள்ளார் மாக்ஸ்முல்லர்.இந்த ஆள் ஜெர்மன்காரன்.நமது வேதம்,இந்துமதம் இவற்றைப்பற்றி ஏராளமாக ஆராய்ச்சி செய்திருந்தாலும் திராவிடம் ஆரியம் என்ற அண்டப்புளுகை உருவாக்கியவன் இவனே!

இவனைத்தவிர கீத்,ப்ளூம் பீல்ட்,மாக்டனல்,விந்தர்நிட்ஸ் போன்றவர்கள் நமது வேதத்தின் தொன்மைகளை ஆராய்ந்து ஏராளமாக எழுதியுள்ளனர்.இவர்களது படைப்புகள் அனைத்தும் இன்றும் இங்கிலாந்தில் உள்ள இந்தியா ஆபிஸ் என்ற நூலகத்தில் இருக்கின்றன.
இந்த பூமியில் பாலைவனத்தில் கரும்பை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு நிறைய தண்ணீர் தேவை.ஆற்றோரம் பேரிட்சையை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு அதீத வெப்பமும் மிகக்குறைந்த தண்ணீரும் போதும்.
அதே போல மகான்கள் இந்த பூமியில்பிறப்பதற்கு ஏற்ற இடம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நமது நாடு மட்டுமே பொருத்தமான இடம்!!!

Wednesday, May 27, 2009

வேதங்கள் வெறும் வாழ்க்கை நெறிமுறைகள் தானா?


வேதங்கள் வாழ்க்கை நெறிமுறைகள் தானே?வெறும் நெறிமுறைகளா கடவுளல் சொல்லப்பட்டிருக்கும்?

நாட்டு நடப்புக்களை தினசரி,டிவி,ரேடியோ மூலமாக அறிந்துகொள்ளலாம்.இதற்காக நாம் மகான்களை நாடுவதில்லை.ஆனால் நமது ஸ்தூல கண்களுக்கும் அறிவுக்கும் புலப்படாத பல தெய்வீக விஷயங்களை அறிய மகாத்மாக்களை நாம் அணுகுகிறோம்.
வேதத்தில் அங்கங்கே வாழ்க்கை நெறிமுறைகள் குறிப்பிடப்படலாம்.ஆனால் அது மட்டுமே வேதத்தின் தாத்பர்யம் அல்ல.பல விஷயங்களை விடுகதைகள் போல மறைத்துப் பேசுவதால் தமிழில் வேதத்திற்கு மறை என்று பெயர்.
வேதம், தேவதைகள், தேவதாலோகங்கள்,ஆத்ம தத்துவங்கள்,உபாசனை முறைகள், பக்தி,பகவானின் அவதாரங்கள்,சரணாகதி, கடவுளின் மகிமை போன்ற பலவற்றைப் பற்றி பேசுகிறது.
வேதத்தில் ஆகாய விமானம்,தரை ஊர்திகள்,நவீன ஆயுதங்கள் போன்ற பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கட்டாய மதமாற்றமே ஜாதிக்கலவரங்களுக்குக் காரணம்:இந்தியாவில்


கட்டாய மதமாற்றமே சமுதாயப்பதற்றத்திற்குக் காரணம்(ஜாதி மோதல்களுக்கு)

சில வருடங்களுக்கு முன் நமது இந்துயாவிற்கு வருகை தந்த போப் இரண்டாம் ஜான்பால் ஆசிய ஆத்மாக்களை அறுவடை செய்யுங்கள் என்றார்.

முதலாவது 1000 ஆண்டில் ஐரோப்பாவை சிலுவை மயமாக்கினோம்ம்.
இரண்டாவது 1000 ஆண்டில் ஆப்ரிக்காவையும் ஐரோப்பாவையும் சிலுவை மயமாக்கினோம்.
மூன்றாவது 1000 ஆண்டில் அதாவது கி.பி.2001 முதல் 3000 க்குள் ஆசியாவை சிலுவை மயமாக்குவோம் என சூளுரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மதங்கள் பிறந்தது ஆசியாவில்தான்.ஆசியாவில் உள்ள இஸ்லாமியரை கிறிஸ்தவர்களாக்குவது அவ்வளவு எளிதல்ல.எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என சீனா கூறி போப்பின் வருகையை தடுத்துவிட்டது.
நமது இந்துயாவில் போப்பின் வருகைக்குப்பிறகு கட்டாய மதமாற்றம் கடுமையாக அதிகரித்துவிட்டது.
அமெரிக்கா மற்றும் உலகம்முழுவதுமிருந்து இந்தியாவிற்கு டாலர்கள் கோடிக்கணக்கில் வந்து குவிந்து கொண்டேஇருக்கின்றன.
இந்த உலகில் உள்ள சகல விதமான பித்தலாட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மதம் மாற்றுவது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவியான பிறகு அக்கட்சியானது அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸாகி விட்டது.காங்கிரஸ் முதல்வர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே!
இந்த ஒரு வரிக்காக்கூட இந்த வலைப்பூ தடைசெய்யப்படலாம்.அந்த அளவுக்கு எதிரிகளை நசுக்குவதிலும் கிறிஸ்தவத்தைப்பரப்புவதிலும் எய்ட்ஸ் பரவும் வேகத்தைவிட முன்னணியில் உள்ளனர்.நாம் என்ன செய்யப்போகிறோம்?

வானுலகுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு


வானுலகுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு எத்தகையது? எதன் மூலம் தொடர்பு ஏற்படுகிறது?

நம்மிடம் தோன்றும் எண்ணங்களால் இந்த பிரபஞ்சம் பாதிக்கப்படுகிறது.பொறாமை, கோபம், முறையற்ற காமம்,வன்மம்,நயவஞ்சகம் முதலான எண்ண அலைகளால் பிரபஞ்சம் பாதிக்கப்படுவதால் தான் ஆங்காங்கே வெள்ளம்,பூகம்பம்,பஞ்சம் போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன.
தூய எண்ணங்கள், நற்சிந்தனைகள்,இறை சிந்தனை ஆகியவைகளால் பிரபஞ்சம் தூய்மையடைகிறது.பித்ருக்களையும், தெய்வங்களையும் அவரவர்களது முறைப்படி வழிபட்டால் அவர்கள் நமக்கு பல நன்மைகளைச்செய்கிறார்கள்.
வான் மண்டலத்தில் உள்ள கோள்களும் பாதிப்பை விளைவிக்கின்றன.ஒவ்வோருவரும் செய்யும் நல்ல செயல்களையும் தீய செயல்களையும் பிரகிருதி பார்த்துக் கொண்டே இருக்கிறது.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் அதனுடைய பலன்கள்
அதற்கான காலகட்டத்தில் வந்தே தீரும்.

உண்மையான மகாபாரதம்-80 ஆண்டுகளுக்குப்பிறகு


புராதன மகாபாரதம் மீண்டும் வெளியீடு

கும்பகோணம் கல்லூரி சமஸ்க்ருத பண்டிதர் தி.ஈ.ஸ்ரீநிவாசாச்சாரியாரால் மொழி பெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ்ப்பண்டிதர் ம்.வீ.ராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு கி.பி.1908 லிருந்து கி.பி.1932 வரை பல தொகுதிகளாக மகாபாரதம் வெளியிடப்பட்டுள்ளது.அது வெளிவந்த காலத்திலேயே சுதேச மித்திரன்,ஹிந்து போன்ற பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இதை தாம் செய்ய விரும்பியதாகவும் ம.வீ.ராமானுஜாச்சாரியரின் வெளியீடுகளைப்பார்த்தப்பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 80 ஆண்டுகளுக்குப்பிறகு முழுமையான அளவில் மகாபாரதம் நிஜமான சம்பவங்களின் தொகுப்பாக வெளிவருகிறது.ஒவ்வொரு பாகமும் சுமார் 800 முதல் 1100 பக்கங்களைக் கொண்டது.ஒவ்வொரு பாகத்தின் விலை ரூ.450/-
இது பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை.(தரமான பொருளுக்கு விளம்பரம் தேவையா?)
கிடைக்குமிடம்:S.VENKATRAMANAN
SHRI CHAKRA PUBLICATIONS
DOOR NO:14,Valmiki Street
Plot No:78,Selvaraj Nagar Extention-2
URAPPAKKAM(WEST)
PIN:603 211.
Ph:044-27466110
நன்றி:விஜய பாரதம் 4.7.2008

மீண்டும் வல்லரசாகும் இந்தியா


மீண்டும் வல்லரசாகும் இந்தியா

ஆமாம்!!! கி.பி.1700 வரையிலான 20,000 ஆண்டுகளுக்கு இந்த பூமிக்கு ஒரே வல்லரசாக நமது இந்துயா இருந்தது.ஆங்சன் மடிசன் எழுதியுள்ள வர்ல்டு எக்கானமி-எ மில்லினியல் பெர்ச்பெக்டிவ் என்ற புத்தகம் 2007 இல் வெளியானது.இப்புத்தகம் பலரின் கண்களைத் திறக்கும் விதமாக இருக்கிறது.கி.பி.1700 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக பொருளாதாரத்தில் ஏறத்தாழ சரிபாதி பங்களிப்பைக் கொண்டிருந்தது.அதாவது இந்துயாவின் பங்களிப்பு 25% ஆகவும் சீனாவின் பங்களிப்பு 22% அளவிற்கும் இருந்தது.கி.பி.1820 லும் இதே நிலைதான் தொடர்ந்தது.அச்சமயத்தில் இன்றைய ஜப்பான் நமது நாட்டிடமிருந்து ஸ்பின்னிங் டெக்னாலஜியை இறக்குமதி செய்துள்ளனர்.கி.பி.1950 வாக்கில் இந்த இரு நாடுகளின் உலகப்பொருளாதாரப்பங்களிப்பு 9% ஆகக் குறைந்துவிட்டது.நாம் 4% ஆகவும், சீனா 5% ஆகவும் சிறுத்துவிட்டது.

அமெரிக்கப்பொருளாதரம் நுகர்வை மையமாகக்கொண்டது.அங்கு மக்கள் தொகை இன்று 27.5.2009 30 கோடி.ஆனால் மொத்த அமெரிக்கர்களும் பயன்படுத்தும் கடன் அட்டை அதாங்க க்ரெடிட் கார்டுகள் 120 கோடி.ஒரு அமெரிக்கனுக்கு சராசரியாக 3 கிரெடிட் கார்டு.பிறகு எப்படி அமெரிக்கா உருப்படும்?அவர்களின் தனிமனித சேமிப்பு வெறும் 2% மட்டுமே!
ஆனால் நாம்?!
உலகிலேயே அதிகமான தனிநபர் சேமிப்பைக் கொண்டுள்ள முதல் நாடு நாம்தான்.எவ்வளவு தெரியுமா? 35% அதாவது சேமிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி.
அமெரிக்க மக்கள் தொகையை விட இந்திய டீன் ஏஜ்களின் எண்ணிக்கை அதிகம்.1.1.2009 அன்று 25 கோடி இளம் இந்தியர்கள் உள்ளனர்.இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடிகள்.(உலக ஆரோக்கிய அமைப்பின் மதிப்பீட்டின் படி 35 வயது வரை ஒருவர் இளைஞர்தான்).இந்த டீன் ஏஜகளின் எண்ணிக்கை 1.1.2020இல் 60 கோடிகளாகிவிடும்.யோசியுங்கள்.
இது தவிர நம் நாடு வல்லரசாவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.அவற்றை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.சில நாட்கள் பொறுங்கள்

இராமர் பாலம் இருப்பது 101% உண்மை:ஆதாரத்துடன்







இராமர் பாலம் 101% நிஜம்:ஆதாரங்களுடன்

தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணிக்கரை உள்ளது.இங்கு கடலுக்குள் நவக்கிரகங்கள் உள்ளன.இங்குள்ள 70 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் இராமர் பாலம் முழு நிஜம் என்பது தெரியவரும்.
மேலே அமெரிக்க விண்வெளி அமைப்பானநாசா எடுத்துள்ள சாட்டிலைட் புகைப்படத்தில் இருப்பது
ராமர் பாலம் தான்.
சுமார் 30 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இது கடலில் முழ்கிக்கிடக்கிறது.
இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.இதன் முனைகள் உறுதியாக உள்ளன.இதன் வயது சுமார் 17,50,000 ஆண்டுகள் ஆகும்.
நமது இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது.ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் கட்டப்பட்டதே இந்த ராமர் பாலம்.கி.பி.1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளான்.அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
இன்று இந்த ராமர் பாலத்தின் வழியாக நடந்தே இலங்கைக்குச் செல்ல முடியும்.பாலத்தின் ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்)என திருப்புல்லாணிக்கரைப்பெரியவர்கள் கூறுகின்றனர்.
நாம் நமது முன்னோர்களின் படைப்புகள், புராதனச்சொத்துக்களைப் போல உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை;பாதுகாக்கக்கூடச் செய்யவில்லை யெனில் வரலாறு நம்மை மன்னிக்குமா?//

உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்


உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்

1.நமது பாரதத்தில் கி.பி.500 முதல் பூஜ்யத்தை சூன்யம் என்று அழைத்தனர்.குறி(ஸிம்பல்) மற்றும் 1-10 வரை உள்ள தசம ஸ்தான முறை,இடத்திற்கு ஏற்ற மதிப்பு அறியப்பட்டன.சீனா-ஜப்பானில் கி.பி.600 முதல் 700 க்குள் இந்த முறைகள் பரவின.
கி.பி.900 வாக்கில் அரேபியாவிற்கும்,கி.பி.1300-இல் ஐரோப்பாவிற்கும் இந்த எண்கணித அடிப்படை அறிவு பரவியது.இன்று இந்த வலைப்பூ எழுதுமளவிற்கு கணினி தொழில்நுட்பம் (0,1 என்பதே கணினியின் அடிப்படை மொழி) வளர்ந்துவிட்டது.

2.பூஜ்யம்,1 முதல் 9 வரையிலான எண்கள் ஆர்யபட்டர் காலத்திலிருந்து(கி.பி.425) நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.ஐரோப்பாவில் இந்த எண்கணித முறை கி.பி.1546(Cataneo)யும்,மற்றும் கி.பி.1613(Cataldi)யும் வழக்கத்திற்கு வந்தன.அதற்கு முன்பு ஐரோப்பாவினர் இதில் அடிப்படை அறிவு அற்றவர்களாக இருந்தனர்.
3.தக்ஷ்ச சீலத்தில் ஏழு வருடங்களுக்கு மருத்துவம் படித்த ஜீவகன் மருத்துவத்திற்குப் பயன்படாது என்று ஒரு செடி கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை;மருந்திற்குப் பயன்படாதது என்று ஒரு வேர் கூடக் கிடையாது என தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். ‘ந அஸ்தி மூலம் அனெளஷதம்’ எனக்குறிப்பிடுகிறார்.
4.இன்று பள்ளிகளில் பயன்படுத்தப்படும்’ வர்க மூலம், கன மூலம் கண்டுபிடிக்கும் முறைகள்’ கி.பி.425 ஆம் ஆண்டில் ஆரியபட்டர் கண்டுபிடித்தது ஆகும்.
5.பரத்வாஜ மகரிஷி அவர்கள் எழுதிய புத்தகம் ப்ருஹத் யந்த்ர ஸர்வஸ்யம்.இதன் 40 வது அத்யாயம்:ப்ருஹத் விமான சாஸ்திரம்.
தூய கேது மின்சார சக்தியை உடையது என்று அவர் குறிப்பிடுகிறார்.(வித்யுத் கர்பஸ்தேஷி தூயகேதுவ:)
இவர் எழுதியுள்ள இன்னொரு நூல் அம்ச போதிநி.
இதில் ஒளி, வெப்பம்,விமானம் பற்றி விவரித்துள்ளார்.
6.லலித விஸ்தார என்ற புத்த நூல் கி.மு.100 இல் எழுதப்பட்டது.அதில் உலகின் மிகப் பெரிய எண்ணாகிய தல்லஷண(10 பவர் 53)என்பதையும்,அதாவது 10க்குப்பின் 53 பூஜ்யங்கள்! உலகின் மிகச்சிறிய எண்ணாகிய ப்ரமாணுஜ (அணுத்துகள் 7 பவர் 10):=அங்குல பர்வ என்பதையும் குறிப்பிடுகிறது.
7.கி.பி.1987 வாக்கில் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்தில் ஜெர்மனியைச்சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் பலமாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
முடிவில் அங்குள்ள மண்ணில் அணுக்கதிர் வீச்சு கதிரியக்கம் இருப்பதுக் கண்டு பிடிக்கப்பட்டது.அந்த கதிர்வீச்சின் வயது சுமார் 5000 முதல் 5100 வருடங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.இன்று 27.5.2009 தேதிப்படி கலியுகம் துவங்கி 5109 ஆண்டுகள் ஆகின்றன. ஜாதகப்பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
8.புராதன மருத்துவ ரிஷி சுஸ்ருதர் கூறியுள்ளார்: மனித உடலில் முக்கியமாக 300 எலும்புகளும், 700 நரம்புகளும் உள்ளன.மனிதத் தோல் 7 அடுக்குகள் கொண்டது.
9.இன்றைய கணிப்பொறியில் ஆரியபட்டரின் குட்டகம் என்ற முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது.இது இன்றைய ஆரக்கிளுக்குச் சமம்.

Tuesday, May 26, 2009

செல்வ வளம் தரும் மந்திரங்கள்


செல்வ வளம் தரும் மந்திரங்கள்

அ)லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ!நிக்விமோக!
இதை ஜபித்துவந்தால் தன அபிவிருத்தி ஏற்படும்.

ஆ)ருண ஹரண கணபதி(கடன் தீர்க்கும் கணபதி)

ஓம் கணேச ருணம் சித்தி வரேண்யம் உறம்நமபட்
ஹிருதயாதி ந்யாஸ திக்விமோக(ஆறுதடவைக்கு குறையாமல்/ஒவ்வொரு முறையும்)

இ)ஐஸ்வர்ய லட்சுமி போற்றி
நமவசிய அஷ்ட லட்சுமி மகிழ்ந்தே
நன்மை எல்லாம் தர வேண்டினேன் புகழ்ந்தே
அமரர் தொழும் லட்சுமி உன்னையே நினைத்தேன்
அன்பினால் மருவியே அனுதினமும் பணிந்தேன்

அருள் புரிவாயே அன்னை லெட்சுமியே
அகால இருந்தே ஐஸ்வர்யம் தந்தே

எது சரியான தமிழ்வருடப்பிறப்பு?


எது சரியான தமிழ் வருடப்பிறப்பு?

சூரியனை பூமி நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது.பூமியானது சூரியனுக்கு அருகில் வரும் காலமே தமிழ்வருடப்பிறப்பாகும்.அதுவே சித்திரை 1ஆம் நாளாகும்.அப்போது தான் அக்னி நட்சத்திரம் எனப்படும் வெப்பநாட்கள் சுமார் 25 நாட்கள் வருகின்றன.

சூரியனிடமிருந்து வெகுதொலைவில் செல்லும் காலமே நமது குளிர்காலம்.நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதன் முடிவுப்படி கிடைத்த தீர்வுகளின் அடிப்படையில் நமது மரபுகளை உருவாக்கியுள்ளனர்.

வெறும் அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றி தை 1ஆம் நாளை தமிழ்வருடப்பிறப்பு என அறிவிப்பது தவறல்லவா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதலமைச்சராக இருந்தகாலத்தில் நாட்டிய மேதை பத்மாசுப்ரமணியம் ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார்.பெரியவர் ஜகத்குரு அவர்கள் பத்மாசுப்ரமணியத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.ஆஸ்திரேலியாவில்தமிழ் பேசும் பழங்குடி மக்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.நீ எப்போதாவது அங்கே சென்றால் இது பற்றி விசாரித்துவிட்டு வா என்றார்.

இச்சம்பவத்திற்குப்பிறகு,பத்மாசுப்ரமணியம் ஆஸ்திரேலியாவிற்குச்சென்றார். அங்கு தமிழ் பேசும் பழங்குடி மக்களைக்கண்டார்.இந்தியாவிற்கு திரும்பியதும் இது பற்றி பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்.
தமிழினத்தலைவராக இருப்பவர் இதைப்பற்றி மேற்கொண்டு ஏதாவது செய்திருப்பாரா?
அவர் அப்படி செய்திருந்தால் தமிழ்நாட்டிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஏற்றுமதி/இறக்குமதி பல மடங்கு பெருகியிருக்குமே!

அந்த ஆஸ்திரேலியப்பழங்குடி தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்தில் அங்கே நிர்வாகம் செய்வதற்காக அனுப்பப்பட்டவர்களாம்.இன்று வரையில் அந்த தமிழ்சகோதரர்கள் அங்கே வாழ்ந்து பல்கிப்பெருகி வாழ்ந்து வருகின்றனர்.


இதே போல, கன்னியாக்குமரிக்கும் தெற்கே 2000 கிலோ மீட்டர்கள் தூரம் வரை லெமூரியாக் கண்டம் ஒன்று இருந்தது.

அது தமிழ்பூமியாகவும் மனசக்தியைப்பயன்படுத்தி அதிசய உலகமாக அது இருந்திருக்கிறது.குமரியாறு,பஃறுளியாறு என பல நதிகள் அங்கே இருந்திருக்கின்றன.


அங்கே ஒரு மதுரை மாநகரம் இருந்திருக்கிறது.அது முதலில் கடலால் அழிந்த பிறகு,இன்றைய இலங்கையில் உள்ள கண்டிக்குத் தெற்கே சில நூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இன்னொரு மதுரையை நமது தமிழ் முன்னோர்கள் உண்டாக்கியிருந்துள்ளனர்.அதுவும் கடலால் விழுங்கப்பட்டுள்ளது.

இப்போது இருப்பதுதான் வடமதுரை.
அட மாட்டுத்தாவணியில் இறங்குவோமே அது தான் இன்றைய மதுரை.
ஆக நாம் எவ்வளவு மிக நீநீநீண்ட பாரம்பரியம் உள்ளவர்கள்.ஏன் அது பற்றி ஆராயக்கூடாது.?
உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய இலங்கைக்குத் தெற்கே அண்டார்டிக் வரையிலும் சுமார் 1 சதுர கி.மீ அளவிற்கு ஏராளமான தீவுகள் உள்ளன.அவை அனைத்து லெமூரியக்கண்டத்தின் மிச்சங்களே!!!

சுயச்சார்புக்கு மேலும் ஒரு சம்பவம்


இன்னொரு சுயச்சார்புக்கான சம்பவம்

கி.பி.1947 க்கு முன் ரத்தன் டாடா ஒருமுறை இங்கிலாந்துக்கு சென்றிருந்தார்.லண்டனில் ஒரு உணவகத்தின் வாசலில் இப்படி எழுதப்பட்டிருந்தது.
நாய்களும் இந்தியர்களும் உள்ளே நுழையக்கூடாது
ரத்தன் டாடாவின் ரத்தம் கொதித்தது.அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.

இந்தியாவின் பொருளாதாரத்தலைநகர் என இப்போது போற்றப்படும் மும்பையில் ஒரு உணவகம் தொடங்கினார்.அதன் வாசலில் ஒரு பலகை எழுதிவைத்தார்.
நாய்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று
அப்போது நாம் சுதந்திரம் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இதெல்லாம் இப்போது எதற்கு ? அதுதான் முடிந்து போச்சே என நினைக்கிறீர்களா?
கடந்தகாலத் தவறுகளை நாம் திரும்ப ஒரு போதும் செய்வதில்லை.இதை நாம் நமது தனிமனித வாழ்க்கையில் மட்டும் பின்பற்றினால் போதுமா?நமது தேசிய வாழ்க்கையிலும்பின்பற்றினால் நமது நாடு போன வருடமே வல்லரசாகியிருக்கும்.

ஆங்கிலேயர்களின் வாலாகிய கிறிஸ்தவம் இன்று எய்ட்ஸாக நமது நாட்டில் ஏராளமான அழிவுகளை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.அவற்றை எப்போது நாம் நிறுத்தப்போகிறோம்.

உதாரணமாக, சமீபத்தில் லாரன்ஸ் என்ற கிறிஸ்தவன் கதாநாயகனாக நடித்த ராஜாதிராஜா என்ற தமிழ்த்திரைப்படம் வெளிவந்துள்ளது.அதில் நமது இந்து தர்மத்தை எவ்வளவு இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு கேவலமாக இழிவுபடுத்தியுள்ளனர்.

ஒரு காட்சியில் லாரன்ஸ் தன் காதலி ஸ்னிக்தா(கத்தாழக் கண்ணால பாட்டுக்கு ஆடியவள்) விடம் உனது அக்காவை செருப்பால் அடி என்பான்.அவளும் உடனே தனது அக்கா மும்தாஜை செருப்பால் அடிப்பாள்.

அந்தப்படத்தின் விளம்பரத்தில் லாரன்ஸ் இந்துத்துறவிக்கான காவி உடுத்தியிருப்பான்.அவனுடன் இருபுறமும் இரு நடிகைகள் அவனை கட்டிப்பிடித்திருப்பர்.இதைத்தான் ஏசுநாதர் விரும்பினாரா?இல்லை நமக்கெல்லாம் சுயகவுரவம் கிடையாதா?

சுயச்சார்பு என்ற சுயபலம்(SELF-RELIANCE)


சுய கவுரவம் என்ற சுயச்சார்பு(SELF RELIANCE)

யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் வாழும் வாழ்க்கைக்குப் பெயர்தான் சுயச்சார்பு என்று பெயர்.இப்படி வாழும் நாடு தற்காலத்தில் இஸ்ரேல் ஆகும்.
ஒரு தனிமனிதன் சுயச்சார்புடன் வாழ அவனுக்கு ஏராளமான சேமிப்பும்,ஒரு அல்லது இரு துறையில் வல்லவராகவும்,ஆழ்ந்த மத நம்பிக்கையும் இருக்க வேண்டும்.

கி.பி.1700 வரை முடிவடையும் 20,000 ஆண்டுகள் வரை நமது இந்து தேசமாகிய பாரதம் உலகின் ஒரே சுயச்சார்பு நாடாக இருந்தது.நம்மை போதுமான அளவிற்கு சுரண்டிவிட்டு நம்மைவிட்டுப்போனான் ஆங்கிலேயன்.அவன் நம்மை வெற்றுநாடாக மாற்றிவிட்டு இங்கிருந்து வெளியேறியது 15.8.1947 அன்று!!!
அப்போது நமது நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.சுமார் 3,75,000 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன.இன்று 26.5.2009 நமது நாடு முழுவதும் 2,60,000 கிராமங்கள் உள்ளன.சுதந்திரம் வாங்கும் வரையிலும் நமது நாட்டின் 6,00,000 கிராமங்களும் சுயச்சார்பு கிராமமாக இருந்துவந்தது.ஒரே கிராமத்தில் ஒரு மனிதன் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டன.
வெகு விரைவில் நமது பாரதம் மீண்டும் சுயச்சார்புள்ள நாடாக மாறப்போகிறது.மீண்டும் நாம் இந்த உலக நாடுகளுக்கே உணவளிக்கப்போகிறோம்.நமது இந்து தர்மம் உலகம் முழுவதும் உள்ள ஜாதி,மத,இன,மொழிப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்போகிறது.அதற்கான ஆரம்பப்புள்ளி 18.11.2009 அன்று அல்லது அதற்கு முன் துவங்கப்போகிறது.
ஒரு சுயச்சார்பு சம்பவத்தை இப்போது பார்ப்போம்:
இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் 1920களில் மோவார் மகாராஜா வாழ்ந்துவந்தார்.அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது.ரோல்ஸ் ராய்ஸ் அமெரிக்காவில் தயாரிப்பது தெரிந்து அமெரிக்காவிற்கே அதன் தொழிற்சாலைக்கே சென்றார் ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவதற்கு!!!
ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாகம் அவரிடம் நீங்கள் அடிமை தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்.உங்களுக்கு நாங்கள் எங்கள் காரை விற்க மாட்டோம் என அமெரிக்கர்கள்-
இன்று வரை ஜனநாயகம்,சமதர்மம்,மனித நேயம் பேசுபவர்கள்- நிறவெறியைக்காட்டிக்கொண்டனர்.
மகாராஜா சிறிதும் வருத்தப்படவில்லை.புன்னகைத்தவாறே அங்கிருந்து வெளியேறினார்.நமது நாட்டிற்குத் திரும்பினார்.

உலகம் முழுவதும் வாழும் தனது நண்பர்கள் மூலமாக நூறு ரோல்ஸ்ராய்ஸ் கார்களை -பழைய கார்களை வாங்கினார்.தனது அரண்மனையில் சேரும் குப்பைகளை அள்ளிப்போட அவற்றைப் பயன்படுத்தத்துவங்கினார்.இந்த விஷயம் இந்தியப்பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.
அவற்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டன.ஐரோப்பியப் பத்திரிகைச்செய்திகளை மேற்கோள் காட்டி அமெரிக்கப்பத்திரிகைகள் இவற்றை தலைப்புச்செய்திகளாக அமெரிக்காவில் வெளியிட்டன.ரோல்ஸ்ராய்ஸ் கார் நிர்வாகத்தின் மானம் உலகமயமானது.
மோவார் அரசாங்கத்தைத் தேடி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாணம் ஒ ஸாரி- நிர்வாகம் ஓடி வந்தது.நடந்த செயலுக்கு மன்னிப்புக்கேட்டது.100 பழைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் புதிய காரின் விலைக்கு திரும்ப எடுத்துக்கொண்டது.மகாராஜாவிற்கு புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்தது.

ஒரு போதும் உங்கள் சுய கவுரவத்தை விட்டுத்தராதீர்கள்.
இந்த பூமியை நிம்மதியாக வாழவைப்பதற்கு உருவானதே நமது சனாதன தர்மம்.
அழியாத பேரின்பத்தின் குழந்தைகளாகிய நாம் வடக்கே அலாஸ்கா முதல் தெற்கே நியூசிலாந்துவரை இந்து தர்மத்தைப்பரப்புவோம்.
இப்போதே நமது தமிழ்நாட்டிற்கு உலகம் முழுவதுமிருந்து தாமாகவே இந்து தர்மத்திற்கு மாறி இந்தியக்குடியுரிமை பெற்று இந்து தர்மப்படி ஏராளமான வெள்ளையர்கள் வாழத்துவங்கியுள்ளனர்.

வானியல்துறையில்(Astronomy)முன்னோடிகள் இந்துக்களாகிய நாம் மட்டுமே


வானியலின் முன்னோடிகள் இந்துக்கள்

இன்று வானில் ஏராளமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவருகின்றன.இவை அனைத்தும் பூமியை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றன.அமெரிக்க செயற்கைக்கோள்கள் சீனா,இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் ஒவ்வொரு விநாடியும் படம் பிடித்துவருகின்றன.அதே போலத்தான் சீனாவும்,இந்தியாவும்.வானியலில் வெள்ளைக்காரர்கள்(அமெரிக்க ஐரோப்பாவினர்)தான் முன்னோடிகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மறந்துவிடுங்கள்.அவர்கள் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நமது நாட்டிலிருந்து களவாடப்பட்டவை.ஆனால் வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.
டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார்.
அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித்திருப்பினார்.கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார்.

Monday, May 25, 2009

சில உபயோகமான இணையதளங்கள்

சில உபயோகமான இணைய தளங்கள்

உங்களது கணிப்பொறியில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஏராளமான குறிப்புகள் அதாங்க டிப்ஸ்கள் தரும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இணையதளம்:
www.staysmartonline.gov.au/secure-computer


உங்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்கில் அளவற்ற ஆர்வம் உண்டா?ஆம் எனில் நீங்கள் இணையக்குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வாளராகலாம்.இதற்கான படிப்பு புனேயில் சொல்லித்தருகிறார்கள்.இந்தியா முழுக்க (சென்னையிலும்) கிளை உண்டு. முழுக்க முழுக்க ஹார்டுவேரிலும் நெட்வொர்க்கிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கே இந்த சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேட்டர் டிப்ளமோ ஒத்துவரும்.பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு மட்டுமே இந்த கோர்ஸ் சரிப்பட்டுவரும்.இதில் சேர ஏதாவது ஒருபட்டப்படிப்பு இருந்தால் போதும்.இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதில் சேர ப்ளஸ் டூ போதும் என நிர்ணயித்திருந்தனர்.
www.asianlaws.org


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.இந்த இணையதளம் சென்று 1 முதல் 52 வரை உள்ள எண்கள் உள்ள 7 வரிசைகள் இருக்கும்.அதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது 6 எண்ணை தேர்வு செய்ய வேண் டும்.இப்படி 6 முறை தேர்வு செய்ய வேண்டும்.7வது வரிசையில் 7 எண்களைத்தேர்வு செய்யவேண்டும்.
அனைத்து வரிசைகளும் அனைத்து எண்களும் பொருந்தியிருந்தால் 10,00,000 டாலர்கள் ரொக்கப்பரிசு உண்டு.இந்தப்பரிசை கொஞ்சம் கொஞ்சமாக 25 ஆண்டுகளுக்குத்தருவார்கள்.இதைப் பெற இண்டர்நேஷனல் கிரடிட் கார்டு நம்மிடம் இருக்க வேண்டும்.இதில் கலந்துகொள்ள எந்த விதக்கட்டணமும்கிடையாது.ஒரே ஒரு மின் அஞ்சம் முகவரி இருந்தால் போதும்.உங்களை கோடீஸ்வரராக்கும் இணையதள முகவரி:
www.freelotto.com


ஆழ்நிலைதியானம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஒன்று சென்னையில் சொல்லித்தருகிறார்கள்.அது பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதிவிட்டோம்.இன்னொரு இடத்தில் கட்டணமின்றிக் கற்றுத்தருகிறார்கள்.காலம் இரண்டு நாட்கள்.இடம்:மைசூர்,கர்நாடகா மாநிலம்
www.meditationguru.com
இந்த தளத்தில் தமிழ்விளக்கமும் இருக்கும்.ஆப்சனைத் தேர்வு செய்யவும்.



நமது நியாயமான ஆசைகளை தியானத்தின்மூலம் அடையலாம்.நமது ஆழ்மனத்தைப்பயன் படுத்தி,மூன்றே மாதங்களில் நமது விருப்பங்கள் நிறைவேறத் துவங்கும்.பயிற்சி இந்தியா முழுவதும்.சென்னையில் தி.நகரில் உள்ள ஒரு உணவகத்தில்,மதுரையில்-திருச்சி-சேலம்-கோவை-இங்கெல்லாம் ஒரு உணவகத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆல்பா மைண்டுபவர் தியானம் நடைபெறுகிறது.3 மாதத்திற்கு ஒருமுறை!!! காலம் ஒரு நாள் மட்டுமே.கட்டணம் ரூ.3000/-லிருந்து... ... ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மாவட்டத்திலேயே இரண்டாம் இடம் பெற்றிருக்கிறாள்.ஆந்திராவில் ஒரு கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த நபர் இன்று தனியார்பஸ் சர்வீஸ் நடத்தி பெரும் செல்வந்தராகிவிட்டார்.மாமியார் மருமகள் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.நீண்டகால நோய்கள் குணமடைந்திருக்கின்றன.குடிக்கும் கணவன் குடியைவிட்டிருக்கிறார்.சொத்துப்பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இன்னும் எத்தனையோ நன்மைகள் விளைந்திருக்கின்றன.
www.alphamindpower.net

வேலை கிடைக்க உதவும் மந்திரம்


வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?



மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?


இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென் டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று 25.5.2009 10 செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன.அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான்.
நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல) :இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும். எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்
.

தெய்வீக மோதிரம் செய்வதற்கு ஏற்ற நாட்கள்


தெய்வீக மோதிரம் செய்வதற்கு ஏற்ற நாட்கள்;

நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த பணியில் இருக்கிறீர்களா?
உங்களது பேச்சு,நடவடிக்கை மற்றவரை-உங்கள் உயரதிகாரியையும்- கவர வேண்டுமா?
நீங்கள் உங்களது நிம்மதி மற்றும் செல்வ வளம் பெருகுவதற்காக அசைவ உணவுகளை சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிடத்தயாரா?
ஆம் எனில் தெய்வீக மோதிரம் ஒன்று செய்து அணிந்து கொள்ளுங்கள்.
இது பற்றிய விளக்கம் ஏப்ரல் 2009 ஆம் காலத்தில்
ஆன்மீகக்கடலில் நினைத்தது நடக்க உதவும் தெய்வீக மோதிரம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.
கீழ்க்காணும் நாட்களில் அந்த தெய்வீக மோதிரம் செய்ய உகந்த நாளாகும்.
அ) 16.10.2009 வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணி முதல் 17.10.2009 சனி இரவு 10.32 மணி வரை
ஆ) 15.11.2009 ஞாயிறு காலை 6.01 மணி முதல்
16.11.2009 திங்கள் காலை 6.09 மணி வரை மிக நன்று.ஏனெனில் அன்றைய நட்சத்திரம் மிக சிறப்பாக உள்ளது.
இ)16.4.2010 வெள்ளிக்கிழமை காலை 6.54 மணி முதல் 17.4.2010 சனி காலை 6.16 மணி வரை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
குறிப்பு:இங்கு குறிப்பிட்டுள்ள நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்கள்,இலங்கை முழுவதும்,மாலத்தீவுகள்,அந்தமான் தீவுகள் இவற்றிற்கு மட்டுமே பொருந்தும்.வடக்கே போபால் முதல் காஷ்மீர் வரை இந்த நேரத்திலிருந்து 18 நிமிடம் குறைத்துக்கொள்ளவும்.குஜராத் முதல் அஸ்ஸாம் வரை இப்படி 18 நிமிடம் குறைத்துக்கொள்ள வேண்டும்.இங்கிலாந்திற்கும் அமெரிக்கா,அய்ரோப்பாவிற்கும்,ஆப்ரிக்காவிற்கும் இது பொருந்தாது.

Sunday, May 24, 2009

கைரேகைக்கலையில் முன்னோடிகள் இந்துக்கள்



கைரேகையில் சீரோவுக்கும் முன்னோடி நம் இந்துக்கள்

இன்று 24.5.2009 வரையிலும் கைரேகையில் மேல்நாட்டு
நிபுணர் சீரோ என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம் சாமுத்ரிகா லட்சணம் என்ற புராதனக்கலையில்
ஒரு பிரிவே கைரேகையாகும்.ஹஸ்தம் என்றால் உள்ளங்கை
என்று பெயர்.கமல முனிவர் கைரேகை பற்றி ஏட்டுபிரதிகள்
பல எழுதியுள்ளார்.சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்னும்
தமிழ்நூலில் மதனவல்லி என்பவள் குறத்தியிடம் குறி
சொல்லுமாறு கேட்கிறாள்.அந்தப்பாடல்களில் வச்சிர ரேகை,
மகுட ரேகை போன்ற சீரோ அறியாத பல ரேகைகளும்
அவற்றின் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ருத்ராட்சங்களின்முகங்களும் அதன் தன்மைகளும்



ருத்ராட்த்தின் முகங்களும் அதனை அணிவதால் ஏற்படும் பலன்களும்

1முகம் ருத்ராட்சம் சிவனுடைய அம்சம்.இதை அணிவதால் பிரம்மஹத்தி
தோஷம் அகலும்.
2முகம் ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வர் அம்சம்.இதை அணிவதால் பசுவின்
சாபம் நீங்கும்.
3 முகம் ருத்ராட்சம் அக்னி அம்சம்.பெண்ணின் சாபம் நீங்கும்.
4 முகம் ருத்ராட்சம் பிரம்மா அம்சம்.கொலை பாதக பாவம் அகலும்.
5 முகம் ருத்ராட்சம் காலாக்னிஅம்சம்.சிவனின் அம்சமான ருத்திரனது
வரம் கிடைக்கக் காரணமாகும்.
6 முகம் ருத்ராட்சம் சுப்ரமணியர்-முருகக்கடவுளின் அம்சம்.பாவங்கள் நீங்கும்.
முருகக்கடவுளின் அருள் கிடைக்கும்.(கடவுள்களில் முருகக்கடவுளின் அருளும்
காட்சியும் கிடைப்பது மிக அரிது என்பதை உணர்க)
7 முகம் மன்மதனின் அம்சம்.வெல்வ வளம்,ஞானம்,சகல சம்பத்துகளும்
கிடைக்கும்
8 முகம் கணபதி என்ற விநாயகக்கடவுளின் அம்சம்.இதை அணிந்தால்
அஷ்டவசுக்களின் ஆசிர்வாதமும்,கங்கையின் அனுகூலமும் கிடைக்கும்
9 முகம் பைரவர் அம்சம்.பிரம்ம ஹத்தி தோஷம் விலகும்.சிவ லோகப்பதவி
கிடைக்கும்(ஏசு நாதருக்கு சிவலோகப்பதவி கிடைத்துள்ளது.அவருக்கு எப்போதும்
மறுபிறவி கிடையாது)
10முகம் விஷ்ணுவின் அம்சம்.கிரக-சர்ப்ப-பைசாச (பேய்)தோஷம் விலகும்.இந்த
ருத்ராட்சம் முற்பிறவியில் மந்திரவாதியாக இருந்தவர்களுக்கு தேவை.
11 முகம் ஏகாதசருத்ர அம்சம்.இதை அணிந்தால் ஒரு கோடி பசுக்களை தானம்
செய்த பலன் கிடைக்கும்.
12 முகம் பன்னிரு சூரியன் அம்சம்.இதை அணிந்தால் அஸ்வமேத யாகம் செய்த
பலன் கிடைக்கும்
13முகம் ஸதாசிவம் அம்சம்.சிவபெருமான்களில் இவரே மிக உயர்ந்தவர்.மேலும்
விபரமறிய சிவ அடியார்களிடம் அணுகவும்.இதை அணிந்தால் காரிய வெற்றி
உண்டு
14 முகம் ருத்ரமூர்த்தி அம்சம்.மோக்ஷ்ம் கிடைக்கும்
32 முகம் உண்டு.இதுவும் ஒரு முகமும் கிடைப்பது மிக அரிது.
இந்த இரண்டு ருத்ராட்சங்களையும் தலா ரூ.1,00,000/-கொடுத்துவாங்குவோரும்
உண்டு.

Friday, May 22, 2009

திருமணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு ஒரு வாழ்நாள் எச்சரிக்கை


திருமணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு:

ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.

ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.
இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப்பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன.

தவிர, திருமணத்தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர்.

சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம்.இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு).
பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார்.

தனம் என்று ஒரு தமிழ்த்திரைப்படம் சில வருடங்கள்(மாதங்கள்?)க்கு முன்பு வந்திருக்கும்.அதில் தனம் பிறந்த ஜாதகம் போல பெண்கள் கிடைப்பது அரிது(ஹலோ.. நான் அவளது பிறந்த ஜாதக யோகத்தை மட்டும் தான் சொல்கிறேன்.அவளது பிழைப்பைச் சொல்லவில்லை)
அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.

சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும்.

ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய




ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

தானங்கள் 8 வகைப்படும்.அதில் மிக எளியது;நாம் ஒவ்வொருவரின் கர்மத்தையும்(நாம் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தல்) அழிக்கும்திறன் அன்னதானத்திற்கு உண்டு.
வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்யும் தானம் மட்டுமே அன்னதானம் ஆகும்.

www.thehungersite.com என்ற தளத்திற்குச் சென்றால் ஹோம் பக்கத்தில் அதாங்க முதல் பக்கத்தில் ஒரு ஆரஞ்சு நிற செவ்வகம் இருக்கும்.அதில் சுட்டொலியை வைத்து ஒரு க்ளிக் செய்துவிட்டால் போதும்.அடுத்த பக்கத்தில் சில விளம்பரங்களை நாம் பார்ப்போம்.அந்த விளம்பரத்தில் உள்ள நிறுவனங்கள் மேற்கூறிய இணைய தளத்திற்கு பணம் தரும்.அதில் ஒரு ஆளுக்கு(அனாதைக்கு) ஒருநாளுக்குத் தேவையான உணவை தந்துவிடுவர்.இது வெளிநாட்டில் உள்ள இணையதளம்.
இதே போல,நமது இந்தியாவிற்குள்ளிருந்து அன்னதான தளம் ஒன்று இயங்குகிறது.அதன் பெயர்
www.bhookh.com

Thursday, May 21, 2009

உலகின் கடைசிமதம்


புறப்பட்டுவிட்ட புதிய மதம்:மதமற்ற மதம்

11.11.1911 அன்று இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் ஒரு சிறுவன் பிறந்தான்.9 வயது வரை அவனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான்.அந்த பாட்டிதான் புதிய மதத்திற்கு அஸ்திவாரமாக விளங்கினார்.
அந்த 9 வயது சிறுவன் வெறும் 21 வயதில் தத்துவத்தில் முதுகலைப்பட்டம் அதாங்க எம்.ஏ.,பெற்றார்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அர்த்தங்களையும் இன்றைய மத அறிஞர்கள் எப்படி சிதைத்துவைத்துள்ளனர் என்பதைக்கண்டு மனம் வருந்தினார்.
அவரது போதனைகளை இந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றார்.64,000 ஏக்கரில் ஒரு மாபெரும் நகரை உருவாக்கினார்.அவரது போதனைகளால்,அமெரிக்க அரசாங்கமும்,கிறிஸ்தவ உலகத்தலைமையும் பயந்து நடுங்கியது.
உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரேமனிதர் அவர்-ஓஷோ என்ற ரஜனீஷ்!!!
அவரது கருத்துக்களைப்பற்றி முறைப்படி அறிய வேண்டுமானால் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற தலைப்பில் சுமார் 100 பக்கங்களுக்கு புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது.அதை முதலில் படியுங்கள்.அதன் பிறகு, மறைந்திருக்கும் உண்மைகள் என்ற 150 பக்கமுள்ள புத்தகம் படியுங்கள்.புத்தம் புது உலகுக்குள் செல்வீர்கள்.
உங்களது பல அந்தரங்கப்பிரச்னைகளுக்குத் தீர்வு இந்த புத்தகங்களில் ஒளிந்திருக்கின்றன.யாஹீ!!!

வைரங்களும் அவற்றின் குணங்களும்











வைரங்களும் அவற்றின் குணங்களும்
1.ஈகாபதி வைரம்:இதன் அலைகள் மனதை ஒருமுகப்படுத்தும். துறவிகளில் ராஜயோகிகள் இதை அணிந்து கொள்வர்.

2.பீங்கள வைரம்: இது மிக அபூர்வமான வைரம்.இளமையை ஈர்க்கும் காந்த அலைகளை வெளியிடும்.இதை யார் அணிந்திருக்கிறார்களோ அவரை ஏராளமானவர்கள் விரும்புவர்.

3.தனஞ்ஜெய வைரம்: இது அதிருஷ்டம் தரும்.

4.வஜ்ராவத வைரம்: இது மன உறுதியை அணிந்திருப்பவர்களுக்குத் தரும்.ராமாயண காலத்தில்- இலங்கை அசோகவனத்தில் சிறை பட்டிருந்த சீதைக்கு அனுமன் தந்தது இந்த ரக வைரத்தைத் தான்!!! இது கற்பகமரக்கரியில் 10,000 ஆண்டுகள் கர்ப்பத்தில்(புவி அழுத்தத்தால்)உண்டாகும்.

5.பூதேஷி வைரம்: இது அசாத்திய வல்லமை உடையது.இதை இனங்காண்பது கடினம்.
சில சீனர்கள் இதை மட்டுமே வணங்குவர்.எவருக்கு பிறந்த ஜாதகத்தில் குருச்சந்திரயோகம்-முழுமையாகவும்-எந்த வித தோஷமின்றியும் உள்ளதோ அவரை இந்த வைரம் தானாகவே அடைந்துவிடும்.வேறு எவரிடமும் தங்காது.

6.ருத்ரமணிவைரம்: இதை மாந்தீரீக முறைப்படி இதில் குறிப்பிட்ட விதமாக பட்டைதீட்டினால்,இது கொலை வெறியைக் கிளப்பும்.

7.அபேத வைரம்:இதன் ஒளி திருஷ்டியை நீக்கும்.இது நல்லவர்களிடம் இருக்கும்போது நன்மைகளையும் கெட்டவர்களிடம் இருக்கும்போது தீமைகளையும் அணிந்திருப்பவருக்குத்தரும்.

8.சாளக்கிராமவைரம்: இதை விஷ்ணுவின் விழி எனக்கூறுவர்.செல்வத்தின் அதிதேவதை மகாலஷ்மி தாண்டவமாடுவாள்.இதை அணிவதை விட வழிபடுவதே மிக நன்று.வட நாட்டில் உள்ள பட்டோடி,அம்பானி,குல்கர்னி,தாண்டன்,டாடா,பிர்லா இவர்களின் குலதெய்வங்கள் வாழும் கோவிலில் இந்த வைரங்கள் கொண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.மிகக் கடினமான பூஜைகள்,பூசாரி அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும்.

9.ஆதித்யவைரம்: புத்தொளி,தன்னம்பிக்கையூட்டும்.குளிர்ச்சியான(சீதள)மனித உடலை உஷ்ணம் நிறைந்த உடலாக்கிவிடும்.

10.ஜலபாண வைரம்:இது மிகுந்த யோகமுடையது.இந்த வைரத்தை அணிபவர் ஒரே நேரத்தில் ஐந்து பெண்களைக்கூட படுக்கையில் திருப்திபடுத்த முடியும்.உடலின் நரம்பு மண்டலம்,இதய மண்டலத்தின் வலிமையை பல மடங்கு அதிகரிக்கச்செய்யும்.
பொதுவாக நவக்கிரகங்களில் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நவரத்தினக்கல் வைரம் ஆகும்.ஜோதிடப்படி, சந்திரனே மனிதனின் மனம் செயல்படக்காரணமாகிறான்.ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடத்தை வைத்தே அந்த ஜாதகரின் சுபாவத்தை அறியமுடியும்.
ஒருவரது ஒழுக்கம், மன உறுதி, சிந்திக்கும் தன்மை இவற்றையும் சந்திரனின் நிலையைக்கொண்டு அறியலாம்.
ஜாதகப்படி,எப்பேர்பட்ட பாவமுள்ள ஜாதகமாக இருந்தாலும் மேற்கூறியுள்ள வைரங்கள் மனிதனின் சிந்தனையில் மிகப்பிரம்மாண்டமான மாற்றத்தை நிச்சயம் உண்டுபண்ணும் என்பது அனுபவ உண்மை.வாழ்க வளமுடன்!!!






























சிலமுக்கிய இணைய தளமுகவரிகள்

.ஆனந்த்வினய் என்ற சகோதரர் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார்.அதில் அவர் எடுத்த சூப்பர் போட்டோக்களை வைத்திருக்கிறார்.பாருங்கள் ரசியுங்கள்.சிந்தியுங்கள்.
http://www.anandvinay.blogspot.com/

உலகிலேயே மிக எளிய வலைமனை அதாங்க வெப்சைட்.அதுவும் பேனா நட்புக்கான வலைமனை.செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இயங்கிவருகிறது.மிகவும் டீஸன் டான - ஆண்/பெண் பேனா நண்பர்கள் தங்களது புகைப்படங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.www.aj.cz/penfriends

உங்கள் வீடு, தெரு,அலுவலகம் இவற்றை வானிலிருந்து 300 அடி உயரத்திலிருந்து(விமானம் /ஹெலிகாப்டரில் பறக்காமலேயே) பார்க்க விருப்பமா?
http://www.earth.google.com/ செல்லுங்கள்.பதிவிறக்கம் செய்யுங்கள்.உலகின் எந்த மூலையையும் பார்க்கலாம்.ஆனால்,இந்த வினாடியில் அதாவது லைவ்வாக ப்பார்க்க முடியாது.

இன்றைய பூமியைப்பார்க்க
http://www.flashearth.com/ சென்று ஓப்பன் லேயர் என்பதை தேர்ந்து எடுத்து சுட்டொலியை அதாங்க மவுஸை முன்னோக்கி நகர்த்திக்கொண்டே வரவும்.

இதே போல சுமார் 2000 வலைமனை முகவரிகள் வைத்திருக்கிறேன்.கொஞ்சம் பொறுங்கள்.

அத்தனையையும் வரிசைப்படுத்தி இந்த வலைப்பூவிலேயே எழுதிவிடுகிறேன்.நாளை சந்திப்போம்.

ஆழ்நிலைதியானம் கற்க சிறந்த இடம் சென்னை


ஆழ்நிலை தியானம் கற்க சிறந்த இடம் சென்னை

தியானம் தொடர்ந்து செய்துவந்தால் நமது மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்கள் அழிந்துவிடும்.
உதாரணமாக தினமும் இண்டர்நெட் பார்த்தால் எதை அதிகமாகப் பார்ப்போம்? இதனால் மனமும் உடலும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதை சீர்செய்யவும், முற்பிறவி பாவங்களை முழுமையாக நீக்கவும் ஆழ்நிலை தியானம் செய்யுங்கள்.
கீழ்காணும் முகவரியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை சுமார் 5 மணியளவில் ஆழ்நிலைதியானம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்துகிறார்கள்.இந்த உரை சுமார் ஒன்றரை மணிநேரம் இருக்கும்.
இந்த உரை பிடித்திருந்தால் மறுநாள்(ஞாயிறு) காலை சுமார் 11 மணிக்கு ஆழ்நிலைதியானம் ஆரம்பம்.கட்டணம் ரூ.700/-மட்டுமே!
ஞாயிறு முதல் புதன் வரை நடைபெறும்.அதன் பிறகு, நாம் வீட்டில் தினமும் குறைந்தபட்சம் ஒருமுறை அதிகபட்சம் இருமுறை ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.
சுமார் 3 மாதங்களுக்குப்பிறகு நமது சிந்தனை, பேசும் விதம், நடத்தை அதாங்க கேரக்டர்,ஆளுமைத்திறன் அதாங்க பர்சனாலிட்டியில் மிகப்பெரும் மாற்றங்கள் தெரியும்.
5ஆண்டுகள் தொடர்ந்து நாம் ஆழ்நிலைதியானம் செய்துவந்தால் இவ்வுலக வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி மகேஷ் தோட்டம் என்ற இடம் உள்ளது.தொலைபேசியில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்:
044-26403960, 044-26411862



























மேஷ-விருச்சிகராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை


மேஷ-விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நீங்கள் அல்லது உங்களுக்கு வேண்டியவர் மேஷ-விருச்சிக ராசிக்காரர்களா? நீங்கள் செய்ய வேண்டியது உடனே ஒரு பவள மோதிரம் வாங்கி-உங்களது மோதிர விரல் அளவிற்குப் பார்த்து வாங்கவும்.வாங்கி 15.5.2010 வரை அணிந்து கொள்ளவும்.
ஏன்?
மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள் செவ்வாய்க்கிரகத்திற்குச் சொந்தமானவை.மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள் வருகின்றன.விருச்சிக ராசியில் விசாகம் 4 ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்கள் வருகின்றன. இந்த நட்சத்திரக்காரர்கள் (பிறந்த ஆண்கள்/பெண்கள் மட்டும்.ருதுவான நட்சத்திரம் வராது) கட்டாயம் செவ்வாயின் குணங்களோடு இருப்பார்கள்.

அது என்ன செவ்வாயின் குணங்கள்:முன்கோபம், தீவிரமாக தன்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிப்பது அல்லது எதிர்ப்பது, எல்லோரிடமும் தான் சரியாக நடந்துகொண்டு அவர்களை-அதே போல சரியாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்துவது,வள-வள வெனப் பேசுவது, ரகசியங்களை காப்பாற்றாமல் எல்லோரிடமும் உளறிக்கொண்டே இருப்பது, நிறைய ஜோக் அடிப்பது, பிறரை மிகக்கேவலமாக நக்கல்-கிண்டல் செய்வது,காரம் உள்ள உணவுகளையும், உப்புகலந்த பதார்த்தங்களையும்,சூடான உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.தன்னைப்பற்றியும், தனது உடலைப்பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருப்பது.

ஜோதிடப்படி ஏன் மோதிரம் அணிய வேண்டும்?
ஒரு ராசியை செவ்வாய் கடக்க 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. கடக ராசியில் வரும் 7.10.2009 அன்று நுழைகிறது.ஆனால்,இந்த முறை செவ்வாய் 45 நாட்கள் கடகராசியில் நிற்பதற்குப்பதிலாக 270 நாட்கள்(9மாதங்கள்)வரை கடக்க எடுத்துக்கொள்கிறது.கடக ராசியை செவ்வாய் கடக்கும் 45 நாளும் நீசமாகிவிடுகிறது.அதாவது செவ்வாய் பலமிழந்து விடுகிறது.
ஒவ்வொரு தமிழ்வருடமும் செவ்வாய் கடகராசியைக் கடக்கும் 45 நாளும் நீசமடைவதால்-அந்த 45 நாட்களுக்கு உலகம் முழுவதும் வாழும் மேஷ-விருச்சிக ராசிக்காரகள் அப்போது அவமானம் அடைகிறார்கள்.இது அனுபவ உண்மை.
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அந்த 45 நாட்களில் என்ன செய்தாலும் அவர்கள் சுய கவுரவத்தை இழந்தே ஆக வேண்டும்.இது விதி!!!
இந்த முறை சுமார் 9 மாதங்கள் எனில்,
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அளவற்ற அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த அவமானங்கள் சுமார் 50% அளவிற்கு குறைய செவ்வாய்க் கோளின் ரத்தினமான பவளத்தை வெள்ளி மோதிரத்தில் பதித்து-பவளத்தின் ஒரு பக்கம் நமது விரலில் பதியும்விதமாக இன்றே அணிந்து கொண்டால் ஓரளவு அவமானங்களை தவிர்க்கலாம்.
செவ்வாய் வாக்கியகணித முறைப்படி7.10.2009 முதல் 15.5.2010 வரையிலும்,
திருக்கணிதப்படி 1.7.2009 முதல் 10.4.2010 வரையிலும் கடக ராசியில் நீசமாகிறது.எனவே, இந்த வலைப்பூவில் காட்டப்பட்டுள்ளதுபோல ஒரு பவள மோதிரம் வாங்கி அணிந்துகொண்டு நிம்மதியாக வாழுங்கள்.
இப்படி நீண்டகாலம் செவ்வாய் நீசமாகப்போவதால், உலக அளவில் காவல்,ராணுவத்துறை மனிதர்கள் மிகப்பெரிய போராட்டத்தை சந்திப்பார்கள்.உலகின் பல பாகங்களில் பூகம்பம் வரலாம்.ரியல் எஸ்டேட் விலை படுபாதாளத்தில் விழும்.ஏராளமான அழிவுகள் ஏற்படலாம். 18.5.2009 அன்று இரவு 11 மணிக்கு எனக்கு ஒரு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) யாரோ ஒருவரிடமிருந்து வந்தது.அதில் இன்று இரவு 12.30 முதல் 3.30 வரை செவ்வாய்க்கிரகத்திலிருந்து புறப்பட்ட காஸ்மிக் அலைகள் பூமியை வந்தடைகின்றன.எனவே,உங்களது செல்போனை அணைத்துவைக்கவும்.ஆதாரம்:அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் பி.பி.சி.நியூஸ்.இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பவும் என கெஞ்சியிருந்தது
இது பற்றி கிர்லிக் கேமிரா வைத்து யாராவது விண்வெளியை படம் எடுத்தார்களா? தெரியவில்லை.
(கிர்லிக் கேமிரா என்பது ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புதக் கேமிரா.இதன் மூலம் நம்மை காலையில் படம்-போட்டோதான் - எடுத்தால் நம்மைச்சுற்றி ரோஸ் நிற ஒளிவட்டம் தெரியும்.மாலையில் எடுத்தால் லேசான கறுப்பு ஒளிவட்டம்-நாம் அசதியாகத்துவங்கும் அடையாளம்-தெரியும்.இந்தக்கேமிராவின் விலை ரூ.40 லட்சம்.ஒரு போட்டோ எடுக்க ஆகும் செலவு ரூ.20,000/-)

அரசியலில், விருச்சிகராசியில் பிறந்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்


மற்றும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவும்.என்னமோ இலங்கையில் இந்த காலக் கட்டத்தில் நடக்கப்போகுது?!




Friday, May 15, 2009

அபிராமிபட்டரும் விண்வெளி அதிசயமும்


அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.
அது எந்த அளவுக்கு எனப்பார்த்தால், இன்றைய குணா சினிமாவில் எப்படி கமல் அந்த சேட் பெண்மீது ஆழமான காதலாக இருப்பாரோ அது போல !!!
ஒரு நாள். . .
அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.
அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னை அபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமி எனக்கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் என உத்தரவிட்டுப்போய்விட்டார்.

மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம் வந்துவிட்டது.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர் பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள் வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும் உடையும்.
இதன்மூலம் நமது தமிழ் தமிழர் பண்பாட்டின் தொன்மை அதாங்க பழமையை அறியலாம்.

ஏன் வடக்கு நோக்கி தூங்க்கூடாது?


ஏன் வடக்கு நோக்கி தலைவைத்துப்படுக்கக்கூடாது?

பூமியின் காந்தப்புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. 24 மணி நேரமும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காந்த அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு மனித உடலிலும் சிறு அளவில் காந்த புலம் உள்ளது.நாம் தினமும் வடக்கு நோக்கித் தூங்கும்போது மனித காந்த புலத்திற்கும் பூமியின் காந்தபுலத்திற்கும் மோதல் உருவாகி மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம் என நமது முன்னோர்கள் நம்பினர்.
இன்றைய மருத்துவத்துறை ஏராளமான ஆய்வுகள் செய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, நீண்ட நாட்களாக ஒரு மனிதன் வடக்கு நோக்கி தூங்கினால் அவனுக்கு ஹிஸ்டீரியா-மன நோய் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.

Thursday, May 14, 2009

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறு எளிய விளக்கம்

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்படவைக்கும் இந்து நுண்கலைகள்


வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்து நுண்கலைகள்

உங்களுக்குத் தெரியுமா? உலகில் பல நாடுகள் நமது இந்துயாவின் புராதனம்,பழமையான கலைகள்,அவற்றில் புதைந்துள்ள அதிமேதாவித்தனம் கண்டு மிரண்டுபோயிருக்கின்றன.அவை எவையென்றால்,ஜோதிடம்,வாஸ்து,பஞ்சபட்சி சாஸ்திரம்,சாமுத்ரிகா லட்சணம்,மாந்திரீகம்,சகுனம் என்ற நிமித்திகம் இவைகள்தான்.இவற்றில் ஏராளமான நன்மைகள் (மனிதகுலத்திற்குத் தேவையானவை) நிரம்பியுள்ளன.இதனால இவற்றைப்பற்றி ஆராய சுவிடசர்லாந்தில் வேதிக் ஸயன்ஸ் என்ற பெயரில் 20 ஐரோப்பியநாடுகள் ஒன்று சேர்ந்து ஆண்டுக்கு 100 கோடி யூரோக்கள் கொடுத்து இக்கலைகளை ஆராய்ந்து வருகின்றன.கி.பி.1700 முதல் இன்று வரை ஜெர்மனி,இங்கிலாந்து,அமெரிக்கா,சுவிட்சர்லாந்து நாடுகள் இவற்றை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.நாம் சுதந்திரம் அடைவதற்கு சில காலம் முன்பு,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சரபோஜி நூலகத்திலிருந்து சில லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து தனி கப்பலில் தனது நாட்டிற்குக் கொண்டுசென்றது.
சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களை(இக்காலத்தில் புரபசர்) இங்கிருந்து இங்கிலாந்திற்கு நிரந்தரக் குடியுரிமை கொடுத்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வேறொரு நிபுணர்குழு மூலமாக மொழிபெயர்ப்பை சரிசெய்கின்றனர்.துல்லியமாக மொழி பெயர்த்திருந்தால் மூலப்பிரதியான ஓலைச்சுவடியை எரித்துவிடுகின்றனர்.இதுதான் இன்றுவரை நடைபெறுகிறது.
இப்படி நமது அறிவுச்செல்வங்களை இங்கிலாந்து களவாடி உருவாக்கப்பட்டவையே எண்ஜோதிடம் எனப்படும் நியூமராலஜி, ரேடாரில் சிக்காத விமானம் மற்றும் பல.

ஒரு மனிதன் பிறந்த நேரத்தில்-பிறக்கும் இடத்தைப் பொருத்து அவனை நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன.மனிதனுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விவரிப்பது ஜோதிடம்.
ஒருவனது பிறந்த ஜாதகத்தில் எந்தக்கிரகம் வலிமையாக இருக்கிறதோ அதைக்கண்டறிந்து அந்த மனிதன் சில குறிப்பிட்ட கிழமை,நவரத்தினக்கல்,நிறமுள்ள ஆடைகளைப் பயன்படுத்தி வாழ்வில் ஜெயிக்க வழிகாட்டுவது தந்திரா சாஸ்திரம்.
ஒருவன்/ள் பிறந்திருப்பது வளர்பிறை அல்லது தேய்பிறை என்பதைக் கண்டறிந்து, 15 நாட்களில் குறிப்பிட்ட நேரத்தைப்பயன்படுத்தி ஜெயிக்க உதவும் சூட்சுமக் கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்!!!
ஒருவன் பிறந்த நட்சத்திரத்தைக்கண்டறிந்து அவனுக்கு குறிப்பிட்ட நட்சத்திரம் நிற்கும் நாளில் தியானம் சொல்லிக்கொடுத்து அவனது பாவங்களை அழித்து அவனை வாழ்வின் எந்த துறையிலும் அல்லது அவன் விரும்பும் துறையில் ஜெயிக்கவைக்க வழிகாட்டுவது சரக்கலை!!!
சரக்கலைக்கு மிஞ்சியகலை இவ்வுலகில் கிடையாது.
இக்கலைகளில் முழுத்திறமைவாய்ந்தவர்களே ரோமரிஷியும், அகத்தியரும்.,காகபுசுண்டரும்.
அதனால்தான் இவர்கள் பல லட்சம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்துவருகிறார்கள்.

Tuesday, May 12, 2009

உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்

  • உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்

    உங்கள் சிந்தனைக்கு சில நிமிடங்கள்:ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்? என ஒரு இளைஞன் சிந்தித்தான்.புவியீர்ப்பு விசையின் முக்கியத்துவம் இந்த அறிவியல் உலகம் அறிந்து கொண்டது.
    “சுமார் 20,000 ஆண்டுகள் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது நமது நாடு.மிகவும் திறமையான வீரர்கள், மிகவும் நுண்ணறிவுடைய அரசியல் சாணக்கியர்கள்,அனுபவம் நிறைந்த ஆட்சியாளர்கள்(மன்னர்கள்),பஞ்சமே இல்லாத நாடு என எல்லாத்துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட ஒரேநாடு நமது நாடு மட்டுமே!
    இருந்த போதிலும் ஏன் 18 கோடி மக்கள் வெறும் 300 ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம்?”- இப்படி ஒருவர் சிந்தித்தார்.(நமது நாட்டின் பெருமைகளை ஓரளவு அறிய கார்டூனிஸ்ட் மதன் எழுதி,ஆனந்தவிகடன் குழுமம் வெளியிட்டுள்ள ‘வந்தார்கள்,வென்றார்கள்’என்ற புத்தகத்தைப்படிக்கவும்)அவர் கி.பி.1920-களில் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்தவர்.நாக்பூரில் பிறந்தவர்.இவரது சிந்தனையின் விளைவாக பிறந்ததே ஒரு மாபெரும் இயக்கம் !!!
    அது தான் ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.!!!
    ஒரு மகாராஜா இருந்தார்.நமது நாட்டில் கோவாப்பகுதியில்.அவர் அப்பகுதி ஆங்கிலேயத்தளபதிக்கு நண்பராக இருந்தார்.இருவரும் ஒருநாள் கோவா கடலோரம் அமர்ந்திருந்தனர்.நமது மகாராஜா அந்த ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
    “ஏன் தளபதி? உங்களுக்கு எங்கள் பண்பாடு தெரியாது.எங்கள் மொழி தெரியாது.எங்கள் சுபாவம் தெரியாது.இருந்து எப்படி 6000 மைல்கள் கடந்துவந்து எங்கள் நாட்டைக்
    கைப்பற்றினீர்கள்?”
    ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தான்.பிறகு கூறினான்.
    “உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுத்து நிற்கச்சொல்லுங்கள்”என்றான்.அதே போல ஆங்கிலேயத்தளபதியும் தனது ஆங்கிலேயப்படைவீரர்கள் 10 பேரை நமது இந்துவீரர்களுக்குச் சமமாக கடலை நோக்கி நிற்க வைத்தான்.இரு அணியையும் கடலைநோக்கி ராணுவ மிடுக்குடன் ந்டக்க உத்தரவிட்டான்.
    நமது வீரர்களில் முதல் வீரன் தனதுகணுக்காலில் கடல் அலைபட்டதும் மேலே நகரவில்லை.ஆனால்,ஆங்கிலேய வீரர்கள் கழுத்தளவுவரை(அதாவது தனது ஆங்கிலேயத்தளபதி ஸ்டாப் மார்ச் எனக்கூறும்வரை கவாத்து போய்க்கொண்டே)இருந்தனர்.
    பிறகு சொன்னான் அந்த ஆங்கிலேயத்தளபதி,
    ‘இதுதான் காரணம்” என்று.
    ஒரு முட்டாள் தனது தலைவனாக இருந்தாலும் அவனது உத்தரவுக்குக் கீழ்ப்படிவது ஆங்கிலேயனது குணம்.
    ஒரு சர்வ வல்லமைதாங்கிய மகாராஜா சொன்னாலும் நமக்கு நம் உயிர் வெல்லக்கட்டி.

Tuesday, May 5, 2009

வாழ்க்கையில் சுயபரிசோதனை செய்வது எப்படி?

சுய பரிசோதனை என்றால் என்ன?

ஒரு மனோதத்துவ அறிஞர் சொன்னது:”ஒருவன் சரியான பாதையில் செல்ல , அடிக்கடி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதற்கு சில கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்”.
1.தொழிலிலோ, குடும்ப முன்னேற்றத்திலோ நாம் நிர்ணயித்த இலக்கை முழுமையாக எட்ட முடிந்ததா?
2.நம்மால் சகவாழ்வில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடிந்ததா?
3.நமது தொழிலின் முன்னேற்றம், தரம் எப்படி இருந்தது?
4.நமக்கு மற்றவர்கள் போதிய ஒத்துழைப்பு தந்தார்களா?
5.மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் ஏதேனும் இடர்ப்பாடு இருந்ததா? அப்படியென்றால் அதற்கு யார் காரணம்?
6.நம்மிடம் யாராவது பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அவர்கள் திருப்தியடையும்படி நடந்துகொண்டோமா?
7.அதேபோல் நாம் பொறுப்பை ஒப்படைத்தவர்களும் சரியாக நடந்துகொண்டார்களா?
8.யாரிடமாவது கடுமையாக நடந்துகொள்ளும்படி இருந்ததா? ஏன்? யார் காரணம்?

Monday, May 4, 2009

அசிங்கமான விளம்பரங்களை நிறுத்த

டி.வி., தெரு விளம்பரங்களில் முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்கள் வந்தால் அவற்றை நிறுத்தவும்,அதைப் பற்றிய முழு விபரங்களையும்,எதிர்ப்புகளையும்,எதிர்ப்புக்கான காரணங்களையும் தபால் கார்டு அல்லது இன்லேண்டு லட்டரில் எழுதி அனுப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.CONSUMER EDUCATION AND SOCIETY
‘SURAKSHA SANKOOL’
THALTEJ,SARKHEJ-GANDHI NAGAR HIGH WAY,
AHEMEDABAD-380054.
PH; 079-7489945,46.
FAX:079-7489947
e-mail:cerc@wilnetonline.net

உங்கள் அமெரிக்க மாப்பிள்ளை எப்படிப்பட்டவர்?


உங்கள் மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்களா?
அவர் எப்படிப்பட்டவர்? அவரது சுபாவம், குணம், பழக்கவழக்கம் பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா?
அல்லது உங்கள் மகள் அமெரிக்காவில் தனது கணவனுடன் எப்படி வாழ்கிறாள்? நிஜமாகவே நிம்மதியாக வாழ்கிறாளா? என்பதை அறிய $300 கட்டணம்!!! தொடர்புக்கு:kavithar@aol.com

2 நிமிடத்தில் மூட்டு வலி குணமாக


உங்களது மூட்டுவலி,முதுகுவலி 2 நிமிடத்தில் குணமடைய வேண்டுமா?

அனுபவமிக்க வர்மக்கலை ஆசான் & வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் , கோவை அவர்களைத் தொடர்புகொள்ளவும்.பல லட்சம் மக்கள் முன்பாக நடக்க சிரமப்பட்டவர்களை 2 நிமிட வர்ம மசாஜால் நடக்கவைத்தவர்.ஆதாரம் முன்னாள் திரைப்பட இயக்குனர் விசு அவர்களின் அரட்டை அரங்கம்.,ஜெயா டிவி.3.4.2009
வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் அலைபேசி எண்:0-99 94 72 41 23.

அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


நமது இந்துமதத்தின் அடிப்படை ஆதாரங்கள்: பசு, விவசாயம், பெண்.நமது நாட்டில் 15.8.1947 வரை இவைப்போற்றப்பட்டன.
மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன.வளர்ந்தன.சுயச்சார்புள்ள கிராமங்கள் இருந்தன.15.8.1947 வரை 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.
இன்று,4.5.2009 நமது நாடு முழுவதும் 3 1/2 லட்சம் கிராமங்களே உள்ளன.நகர்மயமாதலால் ஏராளமான பிரச்னைகள்.பொறுப்பற்ற பசியை சிறிதும் அறியாத நமது அரசியல்தலைவர்களால் விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் கோவில்களைக்கொண்டே குடியிருப்புகள் உருவாகின.கடவுள் பக்தியிருந்ததால் பொய் சொல்லுதல், கொலை செய்தல்,திருட்டு,பிச்சையெடுத்தல் சிறிதும் இல்லாமலிருந்தன. உதாரணமாக, மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு மும்பை நகரம் உருவானது.டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷின் தலைநகரம்) பிறந்தது.காமாட்சியம்மனின் அருளால் காஞ்சிபுரம் தோன்றியது.கி.பி.1900 வரை 1800 கோவில்கள் காஞ்சிபுரம் நகர்முழுக்க இருந்தது.இந்த கோவில் நகரங்கள் சிறப்புப் பொருளாதார மையங்களாக செயல்பட்டு வந்தன.யாரும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் எந்த சிறிய சச்சரவு கூட இல்லாமல் நமது பாரதம் வளர்ந்தது.கலைகள்,தொழில்நுட்பம் வளர்ந்தன.
கி.பி.1940 வரையிலும் நமது பாரதம் நாடுமுழுக்க உணவு,தண்ணீர்,கல்வி இம்மூன்றும் விற்பனை செய்வது பெரும்பாவம் என கருதப்பட்டது.இன்றோ இவைதான் கொழுத்த லாபம் தரும் தொழில்கள்!!!
ஒரு போதும் இவை இனி இலவசமாக மாறாது.மேலும் விபரமறிய http://www.swadeshitn.org/ என்ற இணையதளம் செல்லவும்.
நமது நாடு எப்படியெல்லாம் அரசின் தயவின்றி சாதனைகள் படைத்துவருகிறது.அரசின் முட்டாள்த்தனமான செயல்பாடுகளால் ஏற்படும் பிரச்னைகள், அதை நாம் எதிர்கொள்ள செய்ய வேண்டியது போன்ற விபரங்களை இவர்கள் சுதேசிச் செய்தி என்ற மாத இதழாக வெளியிடுகின்றனர்.ஆண்டுச்சந்தா ரூ.100/-மட்டுமே! மேலும் விபரமறிய திரு.நம்பிநாராயணன் 0-94431-40930 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு




அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு

இந்த பூமியில் உள்ள அனைத்து மனித குல முன்னேற்றங்களும் நமது இந்து தர்மத்திலிருந்தே பிறந்தன என்பதற்கு பல்லாயிரம் ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஓலைச்சுவடிகளாகப்பதிவு செய்யப்பட்டு இருந்தன.அவற்றை நாம் சுதந்திரம் வாங்கும் முன்பே இங்கிலாந்து நாட்டினர் ஒரு கப்பல் முழுக்க
இன்றைய தஞ்சை சரபோஜி நூலகத்திலிருந்து கொண்டு போய்விட்டனர். இங்கிலாந்தும் ஜெர்மனியும் இவற்றை இன்று வரை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.
குந்தம் குன்னாச்சாரி என்பவர் பிரம்மாஸ்திரம் பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்தில் 1920கள் வாக்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த புத்தகமே இன்றைய அணுகுண்டு கண்டுபிடிக்கக்காரணமாகி விட்டது.ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறால்,அணுகுண்டு இவ்வளவு கோரவடிவம் எடுத்துவிட்டது.
அக்கால பிரம்மாஸ்திரம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அவரை மட்டும் சாம்பலாக்கும்.அருகில் உள்ள மனிதன், தாவரங்கள்,பொருட்களை எதுவும் எந்த பாதிப்பும் செய்யாது.
இக்கால அணுகுண்டு ஏவப்பட்டது வானில் ஒரு கோடி சூரியன் அளவு பிரகாசம் தரும்.பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இதைப் பார்ப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்.மேலும் விபரமறிய மகாபாரதம் படியுங்கள்.அல்லது ராமாயணம் படியுங்கள்.ராவணன் மகன் இந்திரஜித் ஆஞ்சனேயர் மீது பிரம்மாஸ்திரம் ஏவுவான்.அப்போது என்ன நடக்கும் என்பதை விரிவான இராமாயணம் படித்துப்பார்க்கவும்.அணுகுண்டின் சக்தியை அறிய இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் எழுச்சி என்ற பாகத்தில் வந்துள்ள புத்தகங்களைப்படித்துப் பாருங்கள்.