Friday, December 8, 2017

மஹாகால பைரவரின் பிறந்த நாள் 10.12.2017!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் பரமேஸ்வரனின் பெயரால் நிர்வாகத்து வருபவர் மஹாகால பைரவப் பெருமான்! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,மஹேஸ்வரனிடம் இருந்து உதயமானவர் மஹாகால பைரவப் பெருமான்!

பூமியில் உள்ள காலக் கணக்கின்படி,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்றுதான் மஹேஸ்வரனிடம் இருந்து உதயம் ஆனார்;

மஹா கால பைரவப் பெருமானின் அருளால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை நிர்ணயம் செய்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரக சித்தர் ஆவார்;இவர் தான் ஒரு நாளுக்கு 24 மணி நேரம்,ஒரு வாரத்திற்கு 7 நாட்கள்,ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற காலக் கணக்கீட்டை கொண்டு வந்தார்!

இந்த நன்னாளில் இவரை நன்றியோடு நினைத்துக் கொண்டு பைரவ ஜபத்தைத் துவக்க வேண்டும்;

ஜோதிடர்களாக இருப்பவர்கள்,

மஹாகால பைரவரை  இப்பிறவி முழுவதும் உபாசனை செய்பவர்கள்;

ஏழரைச்சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்;

தமது கர்மவினைகள் ஒரே பிறவியில் தீர வேண்டும் என்ற ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள்

இந்த நாள் முழுவதும் மஹாகாலபைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ

அல்லது

கால பைரவர் 1008 போற்றியையோ

அல்லது

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 1008 போற்றியையோ
ஜபிக்கலாம்;

10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.32 முதல் 11.12.2017  திங்கட்கிழமை காலை 6.30 வரை கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கின்றது;

சித்தர்கள்,ரிஷிகள்,பைரவ சித்தர்கள் போன்றவர்கள் அரூபமாக பூமிக்கு இந்த நேரம் முழுவதும் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுசேருகின்றார்கள்;இந்த திதி இருக்கும் நேரம் முழுவதும் (10.12.2017 sunday 7.32am to 11.12.2017 moonday    6.30 am) அந்த இடத்தில் மஹாகால பைரவரை தத்தம் குருநாதர்களோடு ஜபிக்கவும்,பூஜிக்கவும் செய்கின்றார்கள்;

அந்த இடம்:அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழபுரம்,கும்பகோணம்;

வழி:கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் 10 வது கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;

பைரவப் பெருமானின் அருளைப் பெற விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து இங்கே நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம்;

பைரவரின் அருளோடு ஈசனின் அருளையும் பெற விரும்புவோர் 9.12.2017 அன்றே அண்ணாமலைக்கு வந்துவிட வேண்டும்;10.12.2017  ஞாயிற்றுக்கிழமை    அன்று காலை 7.32க்கு இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;

கிரிவலம் செல்லும் போது உங்களுக்குத் தெரிந்த பைரவ மந்திரம் ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை    காலை 6.30 வரை மிகவும் மெதுவாக கிரிவலம் செல்ல வேண்டும்;11.12.2017   திங்கட்கிழமை காலை 6.30க்கு கிரிவலத்தை அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே இருக்கும் கால பைரவர் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;


அல்லது சீக்கிரம் கிரிவலத்தை நிறைவு செய்துவிட்டாலும்,நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் தூங்காமல் பைரவ ஜபம் செய்யலாம்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 ஆகும் போது கால பைரவர் சன்னதியில் ஜபத்தை நிறைவு செய்ய வேண்டும்;


கிரிவலப்பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்கள் இருக்கின்றன;இவைகளுக்கு பிஸ்கட்,பொறை போன்றவைகளை தானமாக தர வேண்டும்;

இதில் எதையும் செய்ய இயலாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பைரவப் பெருமான் சன்னதியில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை(90 நிமிடங்கள்)    பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

இதையும் செய்ய இயலாதவர்கள் இந்த நாளில் உங்கள் தெருவில் இருக்கும் பைரவ அம்சமான நாய்களுக்கு உணவு இடலாம்;அவரவர் வீட்டு பூஜை அறையில் பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதலாம்;



மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் அட்டவீரட்டானங்கள் ஒன்றில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;

1.திருக்கண்டியூர் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் இருப்பது)

2.திருவதிகை (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இருப்பது)

3.திருக்கோவிலூர்

4.செம்பொனார் கோவில் (மயிலாடுதுறையில் ஒரு பகுதி)

5.வழுவூர் (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)

6.குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்தால் உள்ளடங்கி இருக்கும் கிராமம்)

7.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் இருக்கும் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)

8.திருக்கடவூர் மற்றும் திருக்கடவூர் மயானம்

9.சிதம்பரம்

இந்த ஆலயங்களில் சிவலிங்க வடிவத்தில் இருந்து அருள்பாலித்து வருவது மஹாகால பைரவரே!

ஒன்பதாவதாக இருக்கும் சிதம்பரத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளாசி புரிந்து வருகின்றார்;

($ முருகக்கடவுளுக்கு எப்படி அறுபடைவீடுகள் இருக்கின்றனவோ,அதே போல கால தேவன் என்று அழைக்கப்படும் மஹாகால பைரவருக்கும் எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இதை அட்டவீரட்டானங்கள் என்று அழைப்பது வழக்கம்$)



ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32 முதல் 11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 வரை அமைந்திருக்கின்றது;


ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

ஞாயிற்றுக்கிழமை குளிகை காலம் மதியம் 3 முதல் 4.30 வரை இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி 9.1.2018 செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கின்றது;



இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Thursday, November 30, 2017

செல்வச் செழிப்பைத் தரும் சொர்ண ஆகர்ஷண வராகி!!!


உலகில் மனிதனாகப் பிறந்தது முதல் வாழ்நாளின் இறுதிமூச்சு வரையிலும் பணம் தேவைப்படுகின்றது;உலகமயமாக்கல் நமது நாட்டினை ஆக்கிரமித்தப் பின்னர்,ஒவ்வொரு நாளையும் ஓட்டவே அதிகமான அளவில் பணம் தேவைப்படுகின்றது;


நமக்கு வரும் வருமானத்திற்கு காரணம் யார் தெரியுமா? நாம் மட்டுமே! போன ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியச் செயல்கள்,தானங்களைப் பொறுத்து இப்பிறவியில் நமக்கு இப்பிறவியில் இவ்வளவு வருமானம் கிடைத்துக்  கொண்டிருக்கின்றது;


இதை நமது பக்தி முயற்சியால் அதிகப்படுத்த முடியும்;அப்படி அதிகப்படுத்தும் பலவிதமான வழிமுறைகளை ஜோதிட அறிவியல் தெரிவிக்கின்றது;


இந்த தெய்வீக முயற்சியில் ஈடுபடும் போது,கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;நிரந்தரமாக நிறுத்தியிருந்தால் இரு மடங்கு பலன் கிட்டும்;மது,போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதை கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,தாமதப் பலன் கிட்டும்;அல்லது மறுபிறவியில் பலன் கிட்டலாம்;


ஜீவகாருண்யம் என்றால் முட்டை,புரோட்டா உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிடுவதைக் கைவிட்டிருப்பதுதான்;


பூசம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளன்று குபேரனை பூஜித்தால் நமது வருமானம் அதிகரிக்கும் என்பது ஒரு ஜோதிட ரகசியம் ஆகும்;கடந்த 40,50 ஆண்டுகளாக இப்படி பூஜித்து செல்வச் செழிப்பை அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள்;


சர்வேஸ்வரன் என்ற சதாசிவனின் ஓர் அவதாரம் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் பொன்பேத்தி      என்ற ஊரில் இருக்கும்  பவானீஸ்வரர்   சிவாலயத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஈசனின் அருளால் உதயமானார்;மஹாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தைக் கொடுத்தவர் இவரே!!!

64 சதுர்யுகங்களாக அம்பாளை பலகோடி பிறவிகளாக எண்ணி வழிபட்டு வந்தால் நம் ஒவ்வொருவராலும் குபேரன் என்ற பதவியை பொறுப்பு வகிக்க முடியும்;


தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாள் அன்று கால பைரவப் பெருமானை ஜபித்தால்/அவரது அபிஷேகத்தில் கலந்து கொன்டால் நமது கர்மவினைகள்,பாவச் சுமைகள் கரையும்;இதனால்,அடுத்த ஒரு மாதம் வரை மன நிம்மதி அதிகரிக்கும்;


    ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை முறைப்படி வழிபட்டால் நமது கர்மவினைகள் நீங்கும்;கர்மவினைகள் குறையத் துவங்கிய மறுநாளே நமதுவருமானம் அதிகரிப்பதை இன்றும் பலர் உணர்ந்துவருகின்றார்கள்;பல பிறவிகளாக பைரவப் பெருமானைச் சரணடைந்தவர்களுக்கு இவ்வாறு வழிபட்ட சில மணித்துளிகளில் வருமானம் வரத் துவங்கி இருக்கின்றது;


இதே போல     ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள்;இன்று வரை இந்த அன்னையின் வழபாட்டு முறையும்,ஜபமுறைகளும் பரம ரகசியமாகவே இருந்து வருகின்றது;


பைரவப் பெருமானை தினமும் ஜபிப்பவர்களுக்கும்,அன்னை வராகி ஜப முறையும்;அன்னை பஞ்சமி தேவி(வராகி)யை தினமும் துதிப்பவர்களுக்கு பைரவ வழிபாட்டுமுறையும் தேடி வரும் என்பது சித்தர் பெருமக்களின் உபதேச ரகசியம்!!!

ஒருவரே பைரவரையும்,வராகியையும் தினமும் ஜபிக்கலாம்;துதிக்கலாம்;வழிபட்டுவரலாம்;

7.12.2017 வியாழக்கிழமை அன்று பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1.49 வரை இருக்கின்றது;


இந்த நாளில் பகல் பொழுதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை ஜபிக்கலாம்;துர்கை சித்தர் ஐயா அவர்கள் இயற்றிய ஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபிக்க வேண்டும்;


இரவு 7 மணிக்கு மேல் நள்ளிரவு 1.49 க்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண வராகியை தகுந்த குரு உபதேசம் பெற்று ஜபிக்கலாம்;

பூசமும் வியாழக்கிழமையும் வரும் நாட்கள்:

4.1.2018 வியாழக்கிழமை காலை 9.52 வரை பூசம் நட்சத்திரம் வர இருக்கின்றது;

6.9.2018 வியாழக்கிழமை மதியம் 1.17 க்கு பூசம் நட்சத்திரம் உதயமாகி மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.38 வரை இருக்கின்றது;
4.10.2018 வியாழக்கிழமை இரவு 7.42 வரை பூசம் நட்சத்திரம் இருக்கின்றது;

ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி வைக்க வேண்டும்;


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.


ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;

இப்படி தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால் சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில் அதிகரிக்கத் துவங்கும்;

ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால் நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்;





ஓம் சத்குரு ஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்


Thursday, November 9, 2017

மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெறும் எளிய முறை!


உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நவக்கிரகங்களே காரணம்.அதே சமயம்,நவக்கிரகங்களால் தமது இஷ்டப்படி உங்களை ஆட்டிப் படைக்கவும் முடியாது; நீங்கள் போன ஐந்து பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே இப்பிறவியில் நன்மைகளையும்,தீமைகளையும் வழங்க முடியும்;


நவக்கிரகங்கள் கால தேவன் என்ற மஹாகாலபைரவப் பெருமானுக்கு கட்டுப்பட்டவை;மஹா கால பைரவப் பெருமானோ ஈசனாகிய சிவபெருமானின் அவதாரங்களில் முக்கியமானவர்;இவரின் அருளைப் பெறுவது சுலபம்;இவரது தரிசனம் பெறுவதும் சுலபம்;


இவரை உபாசனை செய்வது கடினம்;ஷீர்டி சாய்பாபா,கன்னியகுமரியில் பல காலம் வாழ்ந்த மாயம்மா,விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்து அண்ணாமலையைச் சரணடைந்த ரமண மகரிஷி போன்றவர்களுக்கே மஹா கால பைரவ உபாசனை மிகவும் கடினம் என்பதை அறிந்திருந்தார்கள்;எனவே,அவர்கள் மிகவும் சுலபமான ஒரு வழிமுறையை நமக்கு உபதேசம் செய்தார்கள்;
தினமும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்களுக்கு உணவு தருவது;ஆமாம்!


கோவில் வாசலில் இருக்கும் நாய்களுக்கு உணவு இட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;நமது தெருவில் நாம் பார்க்கும் நாய்களுக்கு தினமும் பிஸ்கட்,பொறை போன்றவைகளை தானமாக கொடுத்து வர வேண்டும்;


மகான்கள் தமது வாழ்நாளில் குறைந்த பட்சம் 40 ஆண்டுகள் வரை ஒரு நாள் கூடவிடாமல் மஹாகால பைரவப்பெருமானின் வாகனமாகிய நாய்களுக்கு உணவு இட்டு வந்தார்கள்;அதன் மூலமாகவே மஹா கால பைரவப்பெருமானின் அருளைப் பெற்றார்கள்;மேலும்,மஹா கால பைரவப் பெருமானின் கருணைக்குப் பாத்திரமாகி,சில பல பைரவ சித்துக்களையும் பெற்றார்கள்;


அண்ணாமலை கிரிவலம் செல்லும் போது கிரிவலப் பாதையில் இருக்கும் நாய்களுக்கு உணவு,பிஸ்கட், பொறை தருவதன் மூலமாக அருணாச்சலேஸ்வரரின் அருளையும்,மஹா கால பைரவப்பெருமானின் ஆசிகளையும் ஒரே சமயத்தில் பெறலாம்;முழுக்க முழுக்க கறுப்பாக இருக்கும் நாய்க்கு கறுத்த பைரீ என்று பெயர்;


வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உணவு இடுவதால் இப்படிப்பட்ட பைரவ அருள் கிட்டாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;எதிர்பாராமல் நாய் மீது வாகனத்தால் ஊனத்தை உண்டாக்கினால் பைரவ சாபம் ஏற்படும்;பிற மதத்தவர் நமது ஆலயத்தை ஆக்கிரமிக்க அனுமதிப்பதாலும்,கோவில் வழிபாட்டு முறைகளை தடுப்பதாலும் பைரவ சாபங்கள் உருவாகும்;கோவில் நடைமுறையினை சீர்குலைத்தாலும் பைரவ சாபம் உண்டாகும்;


ஸ்ரீவாரதாரக சித்தர் என்பவர் பைரவ உலகத்தில் வாழ்ந்து வருகின்றார்;இவர் தான் பல கோடி யுகங்களுக்கு முன்பு இன்றைய ஏழு கிழமைகள்;27 நட்சத்திரங்கள்,12 ராசிகள்,9 கிரகங்கள் என்று காலத்தை வகைப்படுத்தினார்;

இவரை உபாசனை செய்துதான் ஆரியபட்டரும்,பாஸ்கராச்சாரியாரும் காலத்தை கடந்து நிற்கும் ஜோதிட நூல்களான ஆரிய பட்டீயம் போன்றவைகளை எழுதினர்;

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர் பிறை அஷ்டமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வருவதன் மூலமாக ஜோதிட ஞானம் ஜோதிடர்களுக்கு அதிகரிக்கும்;ஒரே நேரத்தில் அண்ணாமலையாரின் அருளும்,மஹாகால பைரவப் பெருமானின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனங்களும் கிட்டும்;


108 தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்திற்குள் அருணாச்சலத்தை கிரிவலம் சென்று நிறைவு செய்வதன் மூலமாக ஒரு பைரவ சித்தரின் தரிசனம் கிட்டும்;


கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் (அணைக்கரை வழி) சோழபுரம் என்ற இடத்தில் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயமே பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவர்களுக்கும் தலைமையகம் ஆகும்;பைரவ உலகத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;

64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கே வருகை தந்து பைரவேஸ்வரியையும்,பைரவேஸ்வரரையும் வழிபட்டு வருவதால் அஷ்டமாசித்திகள் கைகூடும் என்பது சித்தர்கள் வாக்கு!


விரைவான பலன்களை அள்ளித்தரும் கலியுக தெய்வங்கள் மஹாகாலபைரவப் பெருமான்;மஹாவராகி,சரபேஸ்வரர்,சூலினி துர்கை;இவர்களில் முதன்மையானவர் மஹா கால பைரவப் பெருமானே!!!


ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ


ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்

ஸ்ரீபாலா என்ற ஸ்ரீபால திரிபுர சுந்தரி


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் ஈசன் என்ற ஆதிசிவனின் பெயரில் நிர்வாகித்து வருபவர் மஹாகால பைரவப் பெருமான்;இவரது இன்னொரு பெயர் காலதேவன்!


இவர்கள் அனைவரையும் இயக்குவது ஸ்ரீபால திரிபுர சுந்தரி;8 வயதுச் சிறுமியின் வடிவில் இருக்கும் இவளை முறைப்படி தரிசனம் செய்ய வேண்டுமானால் பல பிறவிகள் முயற்சி செய்ய வேண்டும்;


அதில் ஒன்றுதான் ஸ்ரீவித்யா உபாசனை!

ஸ்ரீவித்யா உபாசனையில் முதல்படி:அஷ்ட கணபதி மந்திரத்தை ஸித்தி செய்வது;அஷ்ட கணபதி மந்திரத்தை 3,00,000 முறை ஜபித்து ஸித்தி செய்ய வேண்டும்;

அதன் பிறகு,ஸ்ரீராஜாமாதங்கி அம்மன் தரிசனத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்;இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை ஸ்ரீராஜாமாதங்கி மந்திரம் ஜபித்து வரவேண்டும்;சாதாரண மனிதர்களால் இதுவரை முயற்சித்து வெற்றி பெற முடியும்;ஸ்ரீராஜாமாதங்கி அன்னை மஹாவராஹியின் அங்க தேவதை!


முந்தைய மூன்று பிறவிகளில் சித்தர் ஒருவரின் சீடராக இருந்திருந்தாலோ அல்லது முந்தைய மூன்று பிறவிகளில் மஹாகால பைரவப் பெருமானை மட்டும் துதித்து இருந்தாலோ மட்டுமே இப்பிறவியில் அன்னை மஹாவராகியை தினமும் ஜபிக்கும் பாக்கியம் கிட்டும்;


ஆமாம்!

அன்னை மஹாவராகியானவள்,ஸ்ரீபால திரிபுரசுந்தரியின் அங்க தேவதை ஆவாள்;மேலும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதி ஆவாள்;

அன்னை மஹாவராகியின் அருளைப் பெறுவது சுலபம்;அப்படிப் பெற்ற அருளை தக்க வைப்பது கடினம்;காமத்தை வெற்றிபெற்றுவிட்டால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்;

பல கோடியுகங்களாக பல ஆயிரம் கோடி மனிதர்கள் அன்னை மஹாவராகியின் அருளைப் பெற்றுவிட்டாலும்,சுயக் கட்டுப்பாடு இல்லாததால் அடுத்த நிலையான ஸ்ரீ பால திரிபுர சுந்தரியின் அருளைப் பெற முடியாமல் தவிக்கின்றார்கள்;

அணு அளவிற்கு காம எண்ணம் இருந்தாலும் மஹாவராகியின் தரிசனம் நமக்குக் கிட்டாது;ஏதாவது ஒரு விடாமுயற்சி மற்றும் பூர்வ புண்ணியத்தினால் ஸ்ரீபால திரிபுர சுந்தரியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்;அப்போது அவள் மீதே மோகம் வந்துவிட்டால் கடுமையான தண்டனையை அப்போதே தந்துவிடுவாள்;மிக மிக மிக அழகான தோற்றம் இவளுக்கு இருக்கின்றது;

காமத்தைக் கட்டுப்படுத்தவே மஹாவராகியின் ஒரு அவதாரமான அஸ்வாரூடா வராகியை உபாசனை செய்து அவளின் அருளைப் பெற வேண்டும்;இவளின் அருள் கிட்டிவிட்டால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உண்டாகும்;இவளின் வழிபாட்டு முறை பரம ரகசியமாகவே இருக்கின்றது;

நாம் பூமியில் வாழ்ந்து வருகின்றோம்;நமது சூரிய குடும்பம் பால்வழித்திரள் என்ற கேலக்ஸியில் இருக்கும் ஒரு சிறு துகள் ஆகும்;இதன் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்!

ஒளியின் வேகம் விநாடிக்கு 3,00,000 கி.மீ.தூரம் பயணிக்கின்றது;இதே வேகத்தில் ஒரு ஆண்டுக்கு பயணிக்கும் தூரம் 9,00,000 கோடி கி மீ தூரம் ஆகும்;இப்படி ஒரு லட்சம் ஆண்டுகள் பயணித்தால் பால்வழித்திரளின் ஒரு முனையில் இருந்து மறுமுனையை அடைந்துவிடலாம்;இதே போல பல கோடி கேலக்ஸிகள் இருக்கின்றன;இவை அனைத்தும் சேர்ந்ததே ப்ரபஞ்சம்! இந்த ப்ரபஞ்சத்தை விடவும் மிகப் பெரியதாக இருப்பதுதான் ஸ்ரீசக்கரம்!


அப்பேர்ப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மையத்தில் வீற்றிருப்பவள் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி;இவளின் தரிசனம் பெறுவதற்கு முன் ஸ்ரீபால திரிபுர சுந்தரியின் அருளைப் பெற வேண்டும்;

ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கு காளி தேவியின் அருளைப் பெற வேண்டி தீவிரமாக இருந்தார்;அதனால் அவருக்கு அவரது பெண் குருவாகிய பைரவப் பிராம்மணி ஸ்ரீபாலா வழிபாட்டு முறையை உபதேசித்தார்;ஸ்ரீபால திரிபுர சுந்தரியை முறையாக வழிபட்டு அவளின் அருளைப் பெற்ற பின்னரே அவருக்கு தட்சிண காளி தேவியின் தரிசனம் கிட்டியது;


தட்சிண காளி உபாசனை மிகவும் கடினமானது;உபாசனையில் சிறு தவறு ஏற்பட்டாலும் பல பிறவிகளாக படாத பாடு பட வேண்டும்;அண்ணாமலையில் அருணகிரிநாதருடன் வம்பு செய்த சம்பாந்தாண்டான் 80 கோடி ஆண்டுகள் பெரு முயற்சி செய்து தட்சிண காளியின் அருளைப் பெற்றான்;ஆனால்,அவளின் அருளைப் பெற்ற பின்னர் அதை தவறாகப் பயன்படுத்தி தனக்குத் தானே அழிவைத் தேடி கொண்டான்;



ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்

Wednesday, November 8, 2017

இறைநாம ஜபம் தரும் செல்வ வளம் யோகம்!!!



கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!


எனவே,யார் இவைகளை(அசைவம்,மது,புகைப் பழக்கங்கள்) நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும்     33 முறை பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;


இன்று முதல் ஏழாம் நாள் வரை தினமும் இந்த பாடலை ஒரு  முறை ஜபிக்க வேண்டும்;

8 ஆம் நாளில் இருந்து 14 ஆம் நாள் வரை தினமும் ஏழு முறை ஜபித்து வர வேண்டும்;

15 ஆம் நாளில் இருந்து 21 ஆம் நாள் வரை தினமும் இந்தப் பாடலை 14 முறை ஜபிக்க வேண்டும்;

22 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 21 முறை ஜபிக்க வேண்டும்;

29 ஆம் நாளில் இருந்து 35 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 28 முறை ஜபிக்க வேண்டும்;

36 ஆம் நாளில் இருந்து 1008 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 33 முறை ஜபிக்க வேண்டும்;

இப்படி தொடர்ந்து ஜபித்து வரும் போது,90 வது நாளுக்குப் பிறகு 180 வது நாளுக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ உபாசகர்களில் ஒருவரை சந்திக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டாகும்;அவர் உங்களுக்கு முழுமையான வழிபாட்டுமுறையை போதிப்பார்;(இணையத்தில் எந்த ஒரு தெய்வீக ரகசியமும் முழுமையாக வெளியிடப்படுவதில்லை)

ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி வைக்க வேண்டும்;


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.
நன்றி:உபாசனா குலபதி ஸ்ரீதுர்கைச் சித்தர் ஐயா அவர்கள்

ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;இப்படி தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால் சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில் அதிகரிக்கத் துவங்கும்;


ஜோதிடர்களாக இருப்பவர்கள் தாமும் செல்வந்தராகி,தம்மை நாடி வந்தவர்களையும் செல்வந்தர்களாக மாற்றிட இப்பாடலை 7,00,000 முறை ஜபித்திருக்க வேண்டும்;


இம்முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில் புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகில் அமைந்திருக்கும் பொன்பேத்தி ஸ்ரீபவானீஸ்வரர் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்;அன்று முழுவதும் அல்லது ராகு கால நேரம் முழுவதும் அல்லது குளிகை கால நேரம் முழுவதும் இப்பாடலை ஜபிக்க வேண்டும்;இங்கேதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தோன்றினார்;


ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால் நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்;