Monday, April 12, 2021

உலகத்திற்கு மறுமலர்ச்சி காலம் 2020 முதல் 2026 வரை

 ஜோதிடப்படியும் உலகம் பிறந்த ஜாதகப்படியும் டிசம்பர் 2019 முதல் மார்ச் 2026 வரையிலான கால கட்டத்தில் உலக அரசியல் மிகுந்த சுயநலம் மிக்க கார்ப்பரேட்களால் இயக்கப்பட்டு வருகின்றது என்பதை தினசரி செய்தித் தாள்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது;


இதன் படி,கொரோனா வைரஸ் பரவல் மற்றும்   உலக நாடுகளின் ஆயுத அரசியல் நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு 2020 முதல் 2026 வரை பல்வேறு துன்பங்களைத் தரும் விதமாக அமையும் என்று தெரிகின்றது;


உலகத்தின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது பாரத நாட்டினை இதுவரை மக்களை நேசிக்கும் அரசுகள் ஆட்சி செய்யாமல் இருந்ததால்,பல்வேறு விதமான துயரங்களை நாம் 2014 வரை அனுபவித்து வந்தோம்;


திரு.மோடி அவர்களின் ஆட்சி வந்த பின்னர் தான் நம்மை எப்படியெல்லாம் அண்டை நாடுகளும்,உள் நாட்டு அரசியல் கட்சிகளும் சுரண்டினார்கள் என்பதை உணர முடிந்தது;இது பற்றி விரிவான பதிவுகள் பல தகுந்த ஆதாரங்களுடன் முகனூல் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கின்றன;


நாடும்,நாட்டு மக்களும் மிகவும் பரந்த அளவில் இருந்ததால்,ஊழல்,கொள்ளை,மைனாரிட்டியை தாஜா செய்தல், போன்றவைகளால்   நாம் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பலர் உணரவே இல்லை;


வளரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொழில் வளர்ச்சி,தனி நபர் வருமானத்தை அதிகரித்தல் போன்றவைகளை 2014 வரை போதுமான அளவுக்கு ஆளும் மத்திய அரசுகள் செய்யாமல் இருந்ததால் தனி நபர் வருமானம் 130 கோடி பேர்களில் 129 கோடி பேர்களுக்கு போதுமான அளவில் இல்லாமல் இருந்தது;


1947 முதல் இன்று வரையிலும் சீரழித்த நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு திட்டங்களை நமது மோடி அவர்கள் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகிறார்.அது முழுமையடைந்து விட்டால்,பாரத நாடு உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிடும் .மீண்டும் உலக வல்லரசு நிலையை எட்டிவிடும் என்ற பொறாமையால் கொரோனா கிளப்பி விடப்பட்டது;


2021 மே ,ஜீன் மாதத்தில் இன்னொரு வைரஸ்ஸீம்


2022 பிப்ரவரி,மார்ச்சில் இன்னொரு வைரஸ்ஸீம் உலகம் முழுக்க பரவ இருக்கின்றது என்பதை பல்வேறு ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன;சில பஞ்சாங்கங்களின் கணிப்புகளும் தெரித்துள்ளன;


2026 மார்ச் மாதம் வருவதற்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தது 18 கோடி பேர்கள் இதனால் மரணம் அடைவார்கள் என்பதையும் மதிப்பிட்டு உள்ளார்கள்;


2020 இல் ஆப்ரிக்க நாடு ஒன்றின் அதிபர் தனது மகனுக்கு வந்த கொரோனா நோய்க்கு நமது தமிழ்நாட்டின் கபசுர குடிநீரை மருந்தாக கொடுத்திருக்கிறார்.அதில் அவன் முழுமையாக குணம் ஆனதால்,தனது நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி நாடு முழுவதும் வினியோகம் செய்ய ஆரம்பித்தார்;

2021 முதல் 2026க்குள் நமது நாட்டின் மூலிகை மருத்துவம்,யோகாதெரபி,இயற்கை மருத்துவம் போன்றவை படிப்படியாக உலக அளவில் முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கும்;


2021 அக்டோபர் முதல் நமது நாட்டில் ஒவ்வொருவருடைய தனி நபர் வருமானம் அதிகரிக்க ஆரம்பிக்கும்;2022 இல் இரட்டிப்பு நிலையை அடைந்துவிடும்;2024 முதல் 2026 க்குள் உலகின் முதல் வல்லரசு நிலையை நாம் அடைந்து விடுவோம்;


2025 முதல் 2026 க்குள் நாம் சற்றும் எதிர்பாராத ஒருவர் நமது நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு வருவார்;அதன் மூலமாக கிடைக்கும் பரபரப்பினால்,தமிழ்நாட்டில் அரசியல் கலந்து ஆன்மீக புரட்சி ஒன்று உருவாகும்;அந்த புரட்சியானது எல்லா மாநிலங்களையும்,எல்லா நாடுகளையும்,எல்லா கண்டங்களையும் சென்றடையும்;


2025 முதல் 2027 க்குள் இந்து மஹா சமுத்திரத்தில் நமது மோடி அரசு கடலடி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்ளும்;அதன் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும்;அதன் பிறகு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பெரும்பாலான நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள்;


நமது பாரம்பரியத்தின் பெருமைகளை நாமே அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.உலகம் கார்ப்பரேட் மயம் ஆகிவிட்டதால்,டிவி விளம்பரங்களில் வரும் உணவு பொருட்களை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்;


இயற்கை நலவாழ்வு சங்கங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன;அதில் அவ்வப்போது நடைபெறும் முகாம் மற்றும் கருத்தரங்களுக்கு செல்லுங்கள்;


இயற்கை உணவு,,சிறு தானிய உணவு,பாரம்பரிய உணவு,யோகாசனம், போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்;


நமது வாரிசுகளுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வை உருவாக்குங்கள்.

தொழில் முறை ஜோதிடப் பயிற்சி

 தொழில் முறை ஜோதிடர்களை உருவாக்கும் நோக்கத்துடன் நேரடியாக ஜோதிடம் சொல்லித் தருகின்றோம்;

தமிழ்நாடு மாநிலத்திற்குள் வாழ்ந்து வருபவர்கள் நேரடியாக வருகை தந்து ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;


நேரில் வந்து கற்றுக் கொள்வதில் 


தினசரி பயிற்சி,


வாரம் ஒரு நாள் பயிற்சி,


மாதம் இரு நாள் பயிற்சி,


மாதம் ஒரு நாள் பயிற்சி 


என்று பல பிரிவுகள் உள்ளன;(வாட்ஸ் அப் மூலமாக கற்றுக் கொள்பவர்களுக்கும் இது பொருந்தும்)


இதில் உங்களுக்கு இயன்றதை தேர்வு செய்து கொள்ளலாம்;


இடம்:விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர்


வேறு மாநிலங்கள்,தொலை தூர தேசங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்;


ஜோதிடம் கற்றுக் கொள்ள விரும்புவோர் உங்கள் பிறந்த ஜாதகத்தை Like2Learn Astrology என்று டைப் செய்து +91 9092116990 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்;


ஜோதிடம் கற்றுக் கொள்ள அடிப்படை தகுதி:10 ஆம் வகுப்பு

வயது தகுதி:குறைந்த பட்சம் 15 வயது;அதிகபட்சம் 50 வயது;


பயிற்சி காலம்:நேரடிப் பயிற்சி எனில் 3 மாதங்கள்

                                    வாட்ஸ் அப் மூலமாக எனில் 6 மாதங்கள்


பயிற்று மொழி:தமிழ்


குரு தட்சிணை உண்டு;