Tuesday, July 31, 2012

அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில்,சுந்தரபாண்டியம்





விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா சுந்தரபாண்டியம் கிராமம்(க்ருஷணன் கோவிலில் இருந்து சதுரகிரி செல்லும் சாலையில்) இருக்கிறது.இந்த கிராமத்தின் வடக்கு எல்லையில் அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஊட்டுப்பறை என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு மரத்தின் கீழே நள்ளிரவு 12 மணியளவில் பூஜைகளை முடித்துவிட்டு,படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி வானை நோக்கி வீசுவார்;ஒரு சாதப்பருக்கை கூட கீழே விழாது.இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள்;மேலும் இந்தக் கோவிலானது சுமார் 8 சமூகங்களுக்குச் சொந்தமான குலதெய்வம் ஆகும்.
இந்த கோவிலின் வெளியே இருக்கும் ஐயனார்சுவாமிகள் குதிரையில் வரும் பிரம்மாண்டமான சுதை இருக்கிறது.இந்த படத்தை நமது வீட்டில்/அலுவலகத்தில்/பர்ஸில் வைத்திருந்தாலே இவர் நம்மை சூட்சுமமாகப் பாதுகாப்பார் என்பது கடந்த சில நூற்றாண்டுகளாக பல ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
எனவே,இந்த கோவிலின் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
ஓம்சிவசிவஓம்

சைவ சமயத்தை கேலி செய்யாதீர்!


எஸ்.தில்லை கார்த்திகேயசிவம், வைதிக சைவ சித்தாந்த மகா சபை, நிறுவனர், கள்ளக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், நடிகர் அஜித் நடித்த, "பில்லா-2' என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில், வில்லனாக வரும் நடிகர் இளவரசு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இவர், புறவாழ்வில் மேற்கண்டவாறு கூறினாலும், அகவாழ்வில் சட்டத்திற்கும், சமூகத்திற்கும் புறம்பான செயல்களை செய்வது போல், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த காட்சி அமைப்பு, "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்று கூறுபவர்கள், புறவாழ்வில் நடிப்பவர்கள்; அகவாழ்க்கையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்பவர்கள் என்ற தவறான எண்ணத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்துவதாக உள்ளது.இதே போன்று, சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் கமல் நடித்த, "அன்பே சிவம்' படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நாசர், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்று கூறுவது போல், காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில், சைவ சமயம் நாதியற்று உள்ளது என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. இல்லையெனில், மேற்கண்ட காட்சிகளை படங்களில் அமைப்பதற்கு இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தைரியம் வருமா?செந்தமிழ் நாட்டின், ஆதி சமயமே சைவம் தான் என்பது, திரு.வி.க., மறைமலையடிகள் போன்றவர்களின் கூற்று.தமிழகத்தில் தோன்றிய அருளாளர்களில், அகத்தியர், திருமூலர் தொடங்கி, 18 சித்தர்கள், நாயன்மார்கள், முற்கால, பிற்கால சோழர்கள், சேர, பாண்டிய மன்னர்களில் பெரும்பான்மையோர், சங்க கால புலவர்களாகிய நக்கீரர், பரணர், கபிலர் உள்ளிட்ட பெரும்பான்மையான புலவர்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார் என, பல அருளாளர்களும் சிவ வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்கும், இன்றைக்கும் உள்ள பல அடியார்களுக்கும், "திருச்சிற்றம்பலம், சிவசிதம்பரம்' என்ற திருவார்த்தைகள், மகா மந்திரங்களாகும். அதேபோல், "தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற திருவாக்கு, சைவத்தின் மகுடமாகும்.
இந்த மகா மந்திரங்களை இகழ்வது போல், திரைப்படங்களில் காட்சி அமைக்கும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் தவறை உணர்வரா? திருந்துவரா? thanks:dinamalar 31.7.12

Monday, July 30, 2012

இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது





 இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியதுநெருங்கிய நண்பரும், சத்தீஸ்கரின் முன்னாள் கவர்னருமான ஜெனரல் கிரிஷ் சேத் அவர்கள், "அ கேஸ் ஆஃப் இந்தியா" என்ற வில் ட்யுரண்ட் அவர்களின் புத்தகம் பற்றி ஜூலை 15, கடந்த ஞாயிறன்று இந்த வலைப்பூவில் நான் எழுதியிருந்த கட்டுரை பற்றிக் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.

சேத் கூறுகிறார்:

இந்தப் பதிவு புதிய தரிசனத்தை அளிக்கிறது. இந்தியாவின் இன்றைய தலைமுறையினர் இந்த உண்மைகள் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இந்தியா ஒரு காலத்தில் தங்க முட்டையிடும் வாத்து என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கலாம். நம்முடைய பாடப் புத்தகங்கள்கூட இந்த உண்மைகளை வெளிக்கொணரவில்லை. இதை எளிமையாக வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முயற்சி இந்தப் பதிவு.
ஜெனரல் சேத்
மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான வில் ட்யூரண்டின் கடும் உழைப்பின் ஒரு சிறு துளியைத்தான் என்னுடைய வலைப்பூ பிரதிபலிக்கிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நடத்திய விதம் "வரலாற்றின் மாபெரும் குற்றம்" என்ற ட்யூரண்டின் தீர்ப்பை நிறுவக்கூடிய உண்மைகள் இந்தப் புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன. என்னுடைய இந்த வலைப் பூவைப் படிக்கும் அனைவருக்கும் இந்த முழுப் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். அதே சமயம், என் எழுத்துக்களை வழக்கமாகப் படிப்பவர்களுடன் இந்தச் சிறந்த புத்தகத்தின் மற்றுமொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கல்வி மற்றும் ஆரோக்கியம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒரு நாட்டின் செயல்திறன் அதன் நிலையை மதிப்பிடுவதற்கான இரண்டு அடிப்படை உரைகல்கள் என இன்றைக்கு உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த்த் துறைகளைப் புறக்கணித்த அரசாங்கங்களை இந்த அளவுகோல்களின் அடிப்படையில் உலகம் எப்போதும் குறைகூறிவந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இங்கிருந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை எப்படி வேண்டுமென்றே, திட்டமிட்ட ரீதியில் அழித்தார்கள் என வில் ட்யூரண்ட் கூறுகிறார். சமூக அழிவு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாத்தை "அ கேஸ் ஆஃப் இந்தியா" கொண்டுள்ளது. இதில் வில் ட்யூரண்ட் எழுதுகிறார்:

பிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது கிராமப்புற சமூதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்ட சமுதாயப் பள்ளிகள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கிராமப்புற சமுதாயங்களை அழித்தனர்.....

இப்போது (100 வருடங்களுக்குப் பிறகு) இந்தியாவில் 730,000 கிராமங்களும், 162,015 தொடக்கப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. 7% சிறுவர்களும் 1 ½ % சிறுமிகளும் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள், அதாவது மொத்தமாக 4%.

"1911இல் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான மசோதாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார், அதுவும் பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது."

இதற்குப் பின் நடந்தது இன்னமும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. டுரண்ட் கூறுகிறார்:

"கல்வியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரிட்டீஷார் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது. எளிமையான உணவு, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்த்திருத்தல் ஆகியவற்றில் "மக்களின் எளிமை" வெளிப்பட்டதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கூறினார்."

"பிரிட்டீஷாரால் முதல் வர்த்தக மையம் நிறுவப்பட்டவுடன், ரம் விற்பனைக்கென்று மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன, இந்த வர்த்தகத்தில் கிழக்கிந்திய நிறுவனம் நல்ல லாபத்தைக் கண்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அது தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதிக்கு இந்த மதுபானக் கடைகளை சார்ந்திருந்தது; மது அருந்துவதையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் உரிமம் வழங்கும் முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன."

"கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற உரிமங்களிலிருந்தான அரசு வருமானம் ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது; 1922ல் ஆண்டுக்கு 60,000,000 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்காக ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்காகும்."

கேத்தரீன் மயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவுக்கு எதிரான அவதூறான நூலைக் குறிப்பிட்டு வில் டுரண்ட் எழுதுகிறார்:

ஹிந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தை ஊட்டுகின்றனர் என்று செல்வி மயோ நமக்குக் கூறுகிறார்; இந்தியா சுயாட்சிக்கு தகுதியற்றது என முடிக்கிறார்.

அவர் கூறியது உண்மைதான். அவர் கூறாமல் விட்டது, அவர் கூறியதை ஒரு நேரடியான பொய்யைவிட மோசமானது.

தாய்மார்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தினமும் தங்கள் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தைப் புகட்டினர் என்பதை அவர் நமக்குக் கூறவில்லை (அவர் அறிந்திருந்தும்கூட).

ஓபியம் அரசால் பயிரிடப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. மேலும், தேசிய காங்கிரஸ், தொழில்துறை மட்டும் சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் முக்கியமான இடங்களில் ஏழாயிரம் ஓபியம் கடைகளை பிரிட்டீஷ் அரசு நடத்திவந்தது என்பதையும் அவர் நமக்கு கூறவில்லை. மத்திய சட்டப்பேரவை 1921ல் ஓபியம் பயிரிடுதல் அல்லது விற்பனையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதன்படி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது; உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குத் தேவைப்படுகிற இருநூறு முதல் நானூறு ஆயிரம் ஏக்கர் நிலம் ஓபியம் பயிரிடுவதற்கு அளிக்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் அரசின் மொத்த வருமானத்தில் ஒன்பதில் ஒரு பங்கு வருவாய் கிடைத்தது என்பது போன்ற விவரங்களையும் அவர் நமக்குக் கூறவில்லை.

இந்த அத்தியாயத்தின் நிறைவுப் பத்தியில், 1833, ஜூலை 10 அன்று (இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) லார்ட் மெக்காலே அவர்கள் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

லார்ட் மெக்காலே கூறுவதாக ட்யுரண்ட் மேற்கோள் காட்டுகிறார்:

இந்தியாவில் உள்ள கொடுங்கோல் அரசர்கள் புகழ்பெற்ற சிலரின்  லார்ட் மெக்காலேஆற்றலைக் கண்டு அஞ்சினாலும் அவர்களைக் கொல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு தினமும் போஸ்டா என்கிற ஓபியம் தயாரிப்பை அளிப்பதை வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். இந்த போதைப் பொருள் அளிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனதின் ஆற்றல் அழிக்கப்பட்டு அவர்கள் பயனற்ற முட்டாள்களாகிவிடுவார்கள். வெறுக்கத்தக்க இந்தத் தந்திரம் படுகொலையைவிடவும் பயங்கரமானது. இது பிரிட்டீஷ் தேசத்தின் வழிமுறை இல்லை. மிகச் சிறந்த மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்யவும் முடக்கவும்கூடிய போஸ்டாவை இந்தச் சமுதாயத்துக்கு அளிப்பதற்கு நாம் ஒருபோதும் ஒப்புதலளிக்கக் கூடாது.
நன்றி எல்.கே. அத்வானி
thanks:tamilthamarai.com

ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்






அவர் ஒரு பொறியியல் பட்டதாரி! படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே? என்ற எண்ணத்தில் நம்மிடம் ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கினார்.அதற்கும் முன்பாகவே சுமார் 21 நாட்களாக தனது வீட்டு பூஜை அறையில் ஸ்ரீசொர்ண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 1பதினைந்து நிமிடம் வரை ஜபித்து வந்திருக்கிறார்.அந்த 21 நாட்களில் 14 ஆம் நாளிலிருந்தே அவரது சிந்தனையில் தேவையில்லாத விஷயங்கள்(பொறாமை,கோபம்) நீங்கத் துவங்கின.




அதே சமயம்,அவருடைய நட்பு வட்டம் சிறியது;அந்த சிறிய வட்டமும் பாரில்தான் ஒன்று சேருமாம்;அவரே நம்மிடம் சொன்னது.இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ அவருக்கு சென்றடைந்தது.தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவு ஒரு மணிநேரம் வீதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை விடாமல் செய்து வந்திருக்கிறார்.இந்த வழிபாடு துவங்கிய ஒரு  மாதத்தில் இவருக்கு ஒரு புதிய நட்பு உண்டானது.அந்த நட்பும் அவருடைய நட்பு வட்டமும் அந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் காலபைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வழிபடுபவர்கள் ஆவர்.மேலும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் சன்னதியில் பலவிதமான சிவத்தொண்டுகள் புரிபவர்கள் ஆவர்.



நமது பொறியியல் பட்டதாரி ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு துவங்கிய காலகட்டத்தில்,அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு கிடையாது;கிடைக்கும் சொற்ப சம்பளமானது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதத்தையும்,மனக்கசப்பையும்,கண்ணீரையும் தந்திருக்கிறது.
ஒரு வருடம் வரையிலும் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை தினமும் செய்துவந்தாலும்,நெருங்கிய உறவுகளில் துக்கம்,பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் உண்டானது.அந்த சூழலில் எதற்கும் செல்லாமல் பிடிவாதமாகவே ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வந்திருக்கிறார்.சுமார் 9 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,நமது பொறியியல் பட்டதாரியின் குடிகார நட்பு வட்டத்தின் விரிசல் உண்டாகி,அவர்களாகவே ஒதுங்கிவிட்டனர்.இவராக போய் அவர்களிடம் பேசினாலும்,அவர்கள் இவரிடம் சரியாகப் பேசுவதில்லை;இதன் மூலமாக வாரம் ஒருமுறை குடிக்கும் பழக்கமானது நிரந்தரமாகவே நின்றுவிட்டது.


11 ஆம் மாதம் ஆனதும்,அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிட்டன.எனது மகன் இப்போது குடிப்பதில்லை;அவனுக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கணுமோ,அப்போது கிடைக்கட்டும்;அதுபற்றி எனக்குக் கவலையில்லை; என்று அவர் தனது நெருங்கிய நண்பரிடம் கூறியது நமது பொறியியல் பட்டதாரிக்கு வந்து சேர ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.(வீட்டிலேயே நிம்மதி இல்லாவிட்டால் ஒரு இளைஞனுக்கு வேறு எங்குதான் நிம்மதி கிடைக்கும்?நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே!!!)


தவிர,மகனின் பொறுப்பான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை வெகுநாட்களாக கூர்ந்து கவனித்து வந்த அவரது அப்பாவானவர்,தானும் தனியாக வீட்டின் பூஜை அறையில் (மகன் வழிபடும் நேரம் தவிர்த்து வேறு ஒரு நேரத்தில்) ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை துவக்கியிருக்கிறார்.தற்போது அந்த பொறியியல் பட்டதாரிக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் (ஓராண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்த பின்னர்) வேலை கிடைத்துவிட்டது.அவருடைய வார்த்தைகள் அனைத்துமே அவருடைய ஆழ்மனதில் இருந்து உண்டானவை;தவிர,அவர் `12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு காலபைரவர் வழிபாட்டையும் நிறைவு செய்திருக்கிறார்.


தனது ஒரே மகனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் வழிபாடுதான் காரணம் என்பதை உணர்ந்த அவருடைய அப்பா இப்போது தனது ஊரில் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.(இந்தப் பதிவு அந்த பொறியியல் பட்டதாரியின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது).அந்த இளைஞர் கடலோர சிவாலய நகரில் பிறந்தவர்!!!


ஓம்சிவசிவஓம்

இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது



 இந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியதுநெருங்கிய நண்பரும், சத்தீஸ்கரின் முன்னாள் கவர்னருமான ஜெனரல் கிரிஷ் சேத் அவர்கள், "அ கேஸ் ஆஃப் இந்தியா" என்ற வில் ட்யுரண்ட் அவர்களின் புத்தகம் பற்றி ஜூலை 15, கடந்த ஞாயிறன்று இந்த வலைப்பூவில் நான் எழுதியிருந்த கட்டுரை பற்றிக் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.

சேத் கூறுகிறார்:

இந்தப் பதிவு புதிய தரிசனத்தை அளிக்கிறது. இந்தியாவின் இன்றைய தலைமுறையினர் இந்த உண்மைகள் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இந்தியா ஒரு காலத்தில் தங்க முட்டையிடும் வாத்து என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கலாம். நம்முடைய பாடப் புத்தகங்கள்கூட இந்த உண்மைகளை வெளிக்கொணரவில்லை. இதை எளிமையாக வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முயற்சி இந்தப் பதிவு.
ஜெனரல் சேத்
மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான வில் ட்யூரண்டின் கடும் உழைப்பின் ஒரு சிறு துளியைத்தான் என்னுடைய வலைப்பூ பிரதிபலிக்கிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நடத்திய விதம் "வரலாற்றின் மாபெரும் குற்றம்" என்ற ட்யூரண்டின் தீர்ப்பை நிறுவக்கூடிய உண்மைகள் இந்தப் புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன. என்னுடைய இந்த வலைப் பூவைப் படிக்கும் அனைவருக்கும் இந்த முழுப் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். அதே சமயம், என் எழுத்துக்களை வழக்கமாகப் படிப்பவர்களுடன் இந்தச் சிறந்த புத்தகத்தின் மற்றுமொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கல்வி மற்றும் ஆரோக்கியம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒரு நாட்டின் செயல்திறன் அதன் நிலையை மதிப்பிடுவதற்கான இரண்டு அடிப்படை உரைகல்கள் என இன்றைக்கு உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த்த் துறைகளைப் புறக்கணித்த அரசாங்கங்களை இந்த அளவுகோல்களின் அடிப்படையில் உலகம் எப்போதும் குறைகூறிவந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இங்கிருந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை எப்படி வேண்டுமென்றே, திட்டமிட்ட ரீதியில் அழித்தார்கள் என வில் ட்யூரண்ட் கூறுகிறார். சமூக அழிவு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாத்தை "அ கேஸ் ஆஃப் இந்தியா" கொண்டுள்ளது. இதில் வில் ட்யூரண்ட் எழுதுகிறார்:

பிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது கிராமப்புற சமூதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்ட சமுதாயப் பள்ளிகள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கிராமப்புற சமுதாயங்களை அழித்தனர்.....

இப்போது (100 வருடங்களுக்குப் பிறகு) இந்தியாவில் 730,000 கிராமங்களும், 162,015 தொடக்கப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. 7% சிறுவர்களும் 1 ½ % சிறுமிகளும் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள், அதாவது மொத்தமாக 4%.

"1911இல் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான மசோதாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார், அதுவும் பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது."

இதற்குப் பின் நடந்தது இன்னமும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. டுரண்ட் கூறுகிறார்:

"கல்வியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரிட்டீஷார் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது. எளிமையான உணவு, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்த்திருத்தல் ஆகியவற்றில் "மக்களின் எளிமை" வெளிப்பட்டதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கூறினார்."

"பிரிட்டீஷாரால் முதல் வர்த்தக மையம் நிறுவப்பட்டவுடன், ரம் விற்பனைக்கென்று மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன, இந்த வர்த்தகத்தில் கிழக்கிந்திய நிறுவனம் நல்ல லாபத்தைக் கண்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அது தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதிக்கு இந்த மதுபானக் கடைகளை சார்ந்திருந்தது; மது அருந்துவதையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் உரிமம் வழங்கும் முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன."

"கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற உரிமங்களிலிருந்தான அரசு வருமானம் ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது; 1922ல் ஆண்டுக்கு 60,000,000 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்காக ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்காகும்."

கேத்தரீன் மயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவுக்கு எதிரான அவதூறான நூலைக் குறிப்பிட்டு வில் டுரண்ட் எழுதுகிறார்:

ஹிந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தை ஊட்டுகின்றனர் என்று செல்வி மயோ நமக்குக் கூறுகிறார்; இந்தியா சுயாட்சிக்கு தகுதியற்றது என முடிக்கிறார்.

அவர் கூறியது உண்மைதான். அவர் கூறாமல் விட்டது, அவர் கூறியதை ஒரு நேரடியான பொய்யைவிட மோசமானது.

தாய்மார்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தினமும் தங்கள் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தைப் புகட்டினர் என்பதை அவர் நமக்குக் கூறவில்லை (அவர் அறிந்திருந்தும்கூட).

ஓபியம் அரசால் பயிரிடப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. மேலும், தேசிய காங்கிரஸ், தொழில்துறை மட்டும் சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் முக்கியமான இடங்களில் ஏழாயிரம் ஓபியம் கடைகளை பிரிட்டீஷ் அரசு நடத்திவந்தது என்பதையும் அவர் நமக்கு கூறவில்லை. மத்திய சட்டப்பேரவை 1921ல் ஓபியம் பயிரிடுதல் அல்லது விற்பனையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதன்படி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது; உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குத் தேவைப்படுகிற இருநூறு முதல் நானூறு ஆயிரம் ஏக்கர் நிலம் ஓபியம் பயிரிடுவதற்கு அளிக்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் அரசின் மொத்த வருமானத்தில் ஒன்பதில் ஒரு பங்கு வருவாய் கிடைத்தது என்பது போன்ற விவரங்களையும் அவர் நமக்குக் கூறவில்லை.

இந்த அத்தியாயத்தின் நிறைவுப் பத்தியில், 1833, ஜூலை 10 அன்று (இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) லார்ட் மெக்காலே அவர்கள் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

லார்ட் மெக்காலே கூறுவதாக ட்யுரண்ட் மேற்கோள் காட்டுகிறார்:

இந்தியாவில் உள்ள கொடுங்கோல் அரசர்கள் புகழ்பெற்ற சிலரின்  லார்ட் மெக்காலேஆற்றலைக் கண்டு அஞ்சினாலும் அவர்களைக் கொல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு தினமும் போஸ்டா என்கிற ஓபியம் தயாரிப்பை அளிப்பதை வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். இந்த போதைப் பொருள் அளிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனதின் ஆற்றல் அழிக்கப்பட்டு அவர்கள் பயனற்ற முட்டாள்களாகிவிடுவார்கள். வெறுக்கத்தக்க இந்தத் தந்திரம் படுகொலையைவிடவும் பயங்கரமானது. இது பிரிட்டீஷ் தேசத்தின் வழிமுறை இல்லை. மிகச் சிறந்த மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்யவும் முடக்கவும்கூடிய போஸ்டாவை இந்தச் சமுதாயத்துக்கு அளிப்பதற்கு நாம் ஒருபோதும் ஒப்புதலளிக்கக் கூடாது.
நன்றி எல்.கே. அத்வானி
thanks:tamilthamarai.com

ஆடி மாத பவுர்ணமி(1.8.12 புதன் இரவு)யை ஓம்சிவசிவஓம் ஜபிக்க பயன்படுத்துவோம்!!!




நந்தன வருடத்தின் ஆடி மாத முழுநிலவு நாள் வரும் புதன் கிழமை 1.8.12 இரவு வருகிறது.பூமியில் வாழும் ஓவ்வொரு மனிதனின் ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் முழு பலம் பெறுவது வெறும் மூன்று நொடிகள் மட்டுமே! ஆனால்,அந்த முழு பலத்தையும் நாம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஐந்து நாட்களுக்குப்பயன்படுத்த முடியும்.பவுர்ணமிக்கு முந்தைய இரண்டு நாட்கள்,பிந்தைய இரண்டு நாட்கள்,பவுர்ணமி என ஐந்து நாட்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,விரைவான மந்திரஸித்தி கிடைக்கும்.


இந்த நந்தன வருடத்தின் ஆடிமாதத்து பவுர்ணமி நாள் 1.8.12 புதன் கிழமை வருகிறது.இந்த புதன்கிழமையில் மாலை 4 முதல் 5 மணியும்,இரவு 11 முதல் 12 மணி வரையிலும்; மறுநாள் 2.8.12 வியாழன் காலை 6 முதல் 7 மணி வரையிலும் மிகமிக சுபமான குரு ஓரை வருகிறது.இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் நமது வீட்டில் அல்லது கோவிலில் அல்லது கடலோரம் அல்லது நதிக்கரையோரம் அல்லது ஆலமரத்தடியில் அல்லது பசுத்தொழுவத்தில் மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்வோம்;அமர்ந்து இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சங்களை வைத்து குறைந்தது 15 நிமிடம் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு  ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;


நமது முதன்மையான லட்சியமான ஒரு லட்சம் தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை சாதிப்போம்;பிறகு அதை இரண்டுலட்சமாக உயர்த்திட முயலுவோம்; பத்து வருடங்களில் ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்து,ஒரே நேரத்தில் பதினெட்டு சித்தர்களையும் நாம் நேரில் தரிசிப்போம்;நாமே சித்தர்களின் அருட்பார்வையால் ருத்ரனாவோம்;மறுபிறவியில்லாத முக்தியை அடைவோம்;

ஓம்சிவசிவஓம்

ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்




அவர் ஒரு பொறியியல் பட்டதாரி! படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே? என்ற எண்ணத்தில் நம்மிடம் ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கினார்.அதற்கும் முன்பாகவே சுமார் 21 நாட்களாக தனது வீட்டு பூஜை அறையில் ஸ்ரீசொர்ண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 1பதினைந்து நிமிடம் வரை ஜபித்து வந்திருக்கிறார்.அந்த 21 நாட்களில் 14 ஆம் நாளிலிருந்தே அவரது சிந்தனையில் தேவையில்லாத விஷயங்கள்(பொறாமை,கோபம்) நீங்கத் துவங்கின.




அதே சமயம்,அவருடைய நட்பு வட்டம் சிறியது;அந்த சிறிய வட்டமும் பாரில்தான் ஒன்று சேருமாம்;அவரே நம்மிடம் சொன்னது.இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ அவருக்கு சென்றடைந்தது.தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவு ஒரு மணிநேரம் வீதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை விடாமல் செய்து வந்திருக்கிறார்.இந்த வழிபாடு துவங்கிய ஒரு  மாதத்தில் இவருக்கு ஒரு புதிய நட்பு உண்டானது.அந்த நட்பும் அவருடைய நட்பு வட்டமும் அந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் காலபைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வழிபடுபவர்கள் ஆவர்.மேலும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் சன்னதியில் பலவிதமான சிவத்தொண்டுகள் புரிபவர்கள் ஆவர்.



நமது பொறியியல் பட்டதாரி ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு துவங்கிய காலகட்டத்தில்,அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு கிடையாது;கிடைக்கும் சொற்ப சம்பளமானது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதத்தையும்,மனக்கசப்பையும்,கண்ணீரையும் தந்திருக்கிறது.
ஒரு வருடம் வரையிலும் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை தினமும் செய்துவந்தாலும்,நெருங்கிய உறவுகளில் துக்கம்,பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் உண்டானது.அந்த சூழலில் எதற்கும் செல்லாமல் பிடிவாதமாகவே ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வந்திருக்கிறார்.சுமார் 9 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,நமது பொறியியல் பட்டதாரியின் குடிகார நட்பு வட்டத்தின் விரிசல் உண்டாகி,அவர்களாகவே ஒதுங்கிவிட்டனர்.இவராக போய் அவர்களிடம் பேசினாலும்,அவர்கள் இவரிடம் சரியாகப் பேசுவதில்லை;இதன் மூலமாக வாரம் ஒருமுறை குடிக்கும் பழக்கமானது நிரந்தரமாகவே நின்றுவிட்டது.


11 ஆம் மாதம் ஆனதும்,அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிட்டன.எனது மகன் இப்போது குடிப்பதில்லை;அவனுக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கணுமோ,அப்போது கிடைக்கட்டும்;அதுபற்றி எனக்குக் கவலையில்லை; என்று அவர் தனது நெருங்கிய நண்பரிடம் கூறியது நமது பொறியியல் பட்டதாரிக்கு வந்து சேர ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.(வீட்டிலேயே நிம்மதி இல்லாவிட்டால் ஒரு இளைஞனுக்கு வேறு எங்குதான் நிம்மதி கிடைக்கும்?நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே!!!)


தவிர,மகனின் பொறுப்பான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை வெகுநாட்களாக கூர்ந்து கவனித்து வந்த அவரது அப்பாவானவர்,தானும் தனியாக வீட்டின் பூஜை அறையில் (மகன் வழிபடும் நேரம் தவிர்த்து வேறு ஒரு நேரத்தில்) ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை துவக்கியிருக்கிறார்.தற்போது அந்த பொறியியல் பட்டதாரிக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் (ஓராண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்த பின்னர்) வேலை கிடைத்துவிட்டது.அவருடைய வார்த்தைகள் அனைத்துமே அவருடைய ஆழ்மனதில் இருந்து உண்டானவை;தவிர,அவர் `12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு காலபைரவர் வழிபாட்டையும் நிறைவு செய்திருக்கிறார்.


தனது ஒரே மகனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் வழிபாடுதான் காரணம் என்பதை உணர்ந்த அவருடைய அப்பா இப்போது தனது ஊரில் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.(இந்தப் பதிவு அந்த பொறியியல் பட்டதாரியின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது).அந்த இளைஞர் கடலோர சிவாலய நகரில் பிறந்தவர்!!!


ஓம்சிவசிவஓம்

Thursday, July 26, 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கான விஞ்ஞான ஆதாரங்கள்!!!






மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் எண்ணங்களை உணர்ந்துகொள்கிற,புரிந்து கொள்கிற ஆற்றல் உள்ளது.இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்:
ஒருவர் பல பசுக்களை பராமரித்து வந்தார்.பால் வியாபாரம் தான் அவரது தொழிலாகும்.ஒரு பசுவை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.தரகர் ஒருவரிடம் இது குறித்து அவர் சொல்லி வைத்திருந்தார்.
சில நாட்களுக்குப்பிறகு தரகர்,ஒரு நபரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.வந்தவர்கள் பால்வியாபாரியின் தொழுவத்திற்குச் சென்றனர்.அவர்களைப் பார்த்த பசுக்கள் மிரண்டுவிட்டன.அவை சத்தமாக அலறின.அவற்றின் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடியவில்லை;கட்டிப்போட்டிருந்த போதிலும் அவை ஆவேசமாக திமிறின.பால் வியாபாரி தரகரை நோக்கி,
“நீங்கள் அழைத்து வந்திருப்பது கசாப்புக்கடைக்காரரா?” என்று கேட்டார்.அது மட்டுமல்லாமல்,அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறிச்சென்று விடுமாறு பால் வியாபாரி கேட்டுக்கொண்டார்.அந்த நபர் அங்கிருந்து வெளியேறியதும்,பசுக்கள் யாவும் இயல்பு நிலைக்குத் திரும்பின.

கசாப்புக்கடைக்காரர்  என்ன நினைக்கிறார் என்பதை பசுக்கள் எப்படிப்  புரிந்துகொண்டன? இதற்கு எண்ண அலைகளின் தாக்கம் தான் காரணம்!கசாப்புக்கடைக்காரர் கொலை செய்வதற்காகத் தான் தொழுவத்தை நாடி வந்துள்ளார் என்பதைப்  புரிந்துகொண்ட காரணத்தினால்தான் தங்களது எதிர்ப்பை பசுக்கள் வெளிப்படுத்தின.

ஒவ்வொரு வீட்டிலும் அங்கு வாழ்பவர்களின் எண்ணங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.இந்த எண்ணங்கள் ஜீவனற்றவையல்ல:ஜீவத் துடிப்பு மிக்கவை;சிலந்தி பின்னுகிற வலைகளைப் போல நமது எண்ணங்கள் விரிந்து பரவுகின்றன.எதிர்மறையான எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கின்றன.ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.

ஒரு வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்திருந்தால் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் நேர்கின்றன.உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.எதிர்மறை எண்ணங்களை விலக்குவதற்காக பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.நல்லெண்ணங்களை நிரப்புவதே சிறந்த பரிகாரமாகும்.*


ஒருவர் நம்பினாலும் சரி,நம்பாவிட்டாலும் சரி,ஏற்றுக்கொண்டாலும் சரி,ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எண்ண அலைகளின் தாக்கத்திலிருந்து தப்பவே முடியாது.ஒவ்வொரு வீட்டிலும் எண்ண அலைகள் மிதந்து கொண்டே இருக்கின்றன.


வீடு “கடாக்க்ஷா” என்று அழைக்கப்படுகிறது.தயை,அருள் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.கிரகலட்சுமி என்றால் திருமகள் என்று பொருள்.ஒவ்வொரு வீடும் திருமகள் வாழும் இல்லமாகத் திகழ வேண்டும்.நல்லெண்ண அலைகள் எப்போதும் உலா வந்துகொண்டிருக்கும் இடத்தில்தான் திருமகள் வாசம் செய்வாள்.அங்குதான் மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருக்கும்.கணவன்,மனைவிக்கிடையே பெற்றோர் குழந்தைகளுக்கிடையே பாசம் ததும்பி வழியும்.இப்படிப்பட்ட வீட்டில்தான் கிரகலட்சுமி நீங்காது உறைவாள்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம்30,31;1.6.12


*ஆன்மீகக்கடலின் கருத்து:

நமது வீட்டில் அழுக்குத் துணிகளை ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்க வேண்டும்;புதிய மற்றும் துவைத்து அயர்ன் செய்தவைகளை வேறொரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.வீட்டில் ஒருபோதும் துர்நாற்றம் வீசக்கூடாது.


தினமும் காலையில் ஒரு முறை மற்றும் மாலையில் ஒருமுறை வீட்டை தண்ணீரால் அலசிவிட்டு,தரமான பத்தி ஒன்றை பொருத்தி வைக்க வேண்டும்.இதன்மூலமாக நல்லெண்ணங்கள் நம்மைத் தேடி வரும்.தினமும் ஒருமுறையாவது இப்படிச் செய்துவர வேண்டும்.


பத்திபொருத்திய பின்னரே,நாம் நமது கடவுளைக் கும்பிடுகிறோம்.அப்போது நமது நியாயமான கோரிக்கைகளை கடவுளிடம்கேட்கிறோம்.பத்தியிலிருந்து பரவும் நறுமணம் நமது ஆழ்மனத்தை விழிக்கச் செய்யும். விழித்திருக்கும் ஆழ்மனத்தில் நமது வேண்டுகோளை பதிய வைக்கிறோம்.இப்படி தினமும் செய்வதால்,நமது நியாயமான ஆசைகள் நமது ஆழ்மனதிற்குள் பாய்ந்து,பதிந்துவிடுகிறது.ஆழ்மனதிற்குள் எது பதிந்தாலும்,ஆழ்மனம் அதை பிரபஞ்ச மனதுக்கு அனுப்பி விடுகிறது.பிரபஞ்ச மனதுக்கு எந்த ஒரு கோரிக்கை (மனிதனிடமிருந்து சென்றாலும்) குறிப்பிட்ட காலத்துக்குள் நிறவேறிவிடுகிறது.இதுதான் நாம் நமது வாழ்க்கையில் முன்னேற உதவும் பிரார்த்தனை ரகசியம்.


இதுவேதான் சிறிது வேறுவிதமாக பிற மதங்களில் பின்பற்றப்பட்டுவருகிறது.
ஓம்சிவசிவஓம்

ஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;காமரீதியான அவமானங்களைத் தடுப்போம்!!!







மும்மூர்த்திகளை இயக்கி இந்த பிரபஞ்சத்தையே கட்டிகாத்து வருபவர் சிவபெருமானின் அவதாரமான பைரவர் ஆவார்.பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும்.இதில் வீட்டில் வைத்து வழிபடத் தக்கவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி போன்றவைகளின் வேதனைகளைத் தீர்க்க பைரவர் வழிபாட்டால் மட்டுமே முடியும்.


ஏனெனில்,நவக்கிரகங்களில் சனிபகவானின் குருவாக இருப்பவர் பைரவரே! நம் ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகப்படி நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனிபகவானே! தொழிலை தந்ததற்கு சனிக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோமா?அவரால் மட்டுமே நமக்கு ,நமது குணம்,சுபாவம்,திறமை,ஆளுமை,இருக்கும் செல்வ வளம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு தொழில் அல்லது வேலையை நிர்ணயம் செய்கிறார்.அந்த சனிக்கே நவக்கிரக பதவியைக் கொடுத்தவர் பைரவர் ஆவார்.இந்த பூமி,உயிர்கள்,நவக்கிரகங்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது காலச்சக்கரத்தின் மூலம் இயக்குபவரே கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.பைரவரின் திருவிளையாடல்கள் நமது தமிழ்நாட்டிலேதான் நிகழ்ந்திருக்கிறது.


ஏமாற்றுதலும்,பித்தலாட்டமும்,ஒழுங்கீனமும் கொண்ட இந்த கலியுகத்தில் ஒழுக்கரீதியாக எந்தத் தவறுமே செய்யாமலேயே வீண்பழி ஒருவர் சுமக்கிறாரெனில் அவர் நிச்சயமாக சென்ற பிறவிகளில் செய்த தவறுகளை அனுபவித்துவருகிறார் என்றே அர்த்தமாகும்.அவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,8,10 ஆம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இராகு அல்லது கேது அமைந்திருக்கும்.அப்படி அமைந்திருந்து ராகு அல்லது கேது மஹாதிசை வந்து,ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி வந்தால்,அவர்கள் வீண்பழியை சுமந்தே ஆகவேண்டும்.பல தம்பதியரிடம் காமம் கலந்த ஈகோ விளையாட்டு உருவாகி அதன் முடிவாக இருவருமே அவமானப்படுகிறார்கள்.இந்த சூழ்நிலையை தடுக்கவும்,ஏற்கனவே உண்டான சூழ்நிலையை மாற்றவும் ஏற்படுத்தப்பட்ட பைரவரே ஸர்ப்ப பைரவர் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருக்கும் சங்கர நயினார்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.



செவ்வரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெண்பொங்கல் அல்லது பாசிப்பருப்பு சாதம் இவைகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் சன்னதிக்கு வருகை  தந்து,இந்த பொருட்களால் ஸர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.(பூசாரியிடம் கொடுத்துதான்!)அபிஷேகம் நடைபெறும்போது பைரவரின் அஷ்டோத்திரம் அல்லது பைரவ பாடல் ஏதாவது மனதுக்குள் ஜபிப்பது அவசியம்.அபிஷேகம் நிறைவடைந்தபின்னர்,கொண்டு வந்திருக்கும் படையலான பாசிப்பருப்பு சாதம் அல்லது வெண்பொங்கல் சாதத்தை கோவிலுக்கு வந்திருப்பவர்களுக்கு பாதியை பரிமாற வேண்டும்.மீதியை வீட்டிற்குக் கொண்டுவந்து,குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்துவிட்டால்,ராகு மற்றும் கேதுவால் வர இருக்கும் அவமானங்கள் வெகுவாகக்குறைந்துவிடும்.(திருமணமாகாமல்  இருக்கும் சர்ப்ப தோஷ ஜாதக,ஜாதகிகள் 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இவ்வாறு சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் வழிபாட்டைச் செய்ய வேண்டும்.தொடர்ந்து 8  ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்ய முடியாவிட்டாலும்,விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம்.இதன் மூலம் திருமணத் தடை அகலும்;அதே சமயம் ஜாதகத்தில் இருக்கும் ஸர்ப்ப தோஷங்களின்  வீரியம் 10 % அளவுக்குச் சுருங்கிவிடும்)



திருமணமானவர்கள் பலருக்கு ஸர்ப்ப தோஷங்கள்  செயல்படுவதுண்டு.அப்படி செயல்படும்போது கணவன் மனைவிக்குள் ஏற்படும்பிரச்னைகளால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளே அதிகம்பாதிக்கப்பட்டுவருகின்றனர்.கணவன் மனைவி பிரிந்துவிடுகின்றனர்.இதனால்,பிற குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.இதைச் சரிசெய்ய மேலே கூறியதுபோல,6 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.

மிக முக்கியமான குறிப்பு என்னவெனில்,எந்த ஞாயிறு அன்று இவ்வாறு ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்கிறோமோ,அந்த ஞாயிறும் அதற்கு முந்தைய நாளும் காமரீதியான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.அப்போதுதான் வழிபாட்டுக்கான பலன்கள் முழுமையடையும்.



        
ஓம்சிவசிவஓம்

ஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாசைத்திருவாதிரை நாளன்று பைரவ மந்திர ஜபம்!




இந்த நந்தன ஆண்டின் திருவாதிரை அமாவாசையானது 19.6.2012 செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.02க்குத் துவங்கி,20.6.2012 புதன் இரவு 10.11க்கு நிறைவடைகிறது.ஆனால்,திருவாதிரை நட்சத்திரமோ 19.6.12 நள்ளிரவு 1.08(புதன் விடிகாலை)க்குத் துவங்கி,20.6.12 புதன் நள்ளிரவு 2.52க்கு(வியாழன் விடிகாலை)நிறைவடைகிறது.எனவே,செவ்வாய்க்கிழமை இரவு திருவாதிரையும் அமாவாசையும் சேர்ந்துவருவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மும்மூர்த்திகளின் தலைவராக சிவபெருமான் இருப்பதாலும்,அவரது ஒரே  அவதாரமாக பைரவர் இருப்பதாலும்  20.6.2012 புதன் கிழமையன்று முழுவதும் விரதமிருந்து பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஒரு நாள் முழுக்க ஜபிக்கவேண்டும்;இப்படி ஜபிப்பதற்கு 19.6.2012 செவ்வாய்க்கிழமையும்,206.2012 புதன்கிழமையும் ரொமான்ஸ் விஷயங்களை அடியோடு நிறுத்தவேண்டும்;காமரீதியான படங்கள்,வீடியோக்கள்,பேச்சுக்கள்,சிந்தனைகளை நினைக்கவே கூடாது.இப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாமல் இந்த வழிபாட்டுமுறையைச் செய்தால்,நிச்சயம் உங்களை நாய் வந்து கடிக்கும்.தேவையில்லாத புதுப்புதுப்பிரச்னைகள் வெடிக்கும் ஜாக்கிரதை!!!

தமிழ்நாடு தவிர,அயல்நாடுகள்,வெளி மாநிலங்களில் வசிப்போர் தனது அறையை சுத்தப்படுத்தி,ஆடைகளையும் சுத்தமாக்கிவிட்டு, அறையில் மேற்கு திசையில் இருக்கும் சுவற்றில் சந்தனத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;இப்படி மேற்கு சுவற்றில் வரைந்தால் நாம் வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;தெற்கு சுவற்றில் வரைந்தால், நாம் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.


பின்வரும் பைரவ ஸ்தலங்கள் பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.இதற்கு அட்டவீரட்டானங்கள் என்று பெயர்.இங்கு பைரவர் சிவபெருமானாகவே காட்சியளிப்பதால்,சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று பைரவரின் மந்திரத்தை ஒரு நாள் முழுக்கவும் ஜபிப்பது நன்று.ஒரு வேளை அப்படி ஜபிக்கமுடியாதவர்கள்,ஒரு மணி நேரம் மட்டுமாவது ஜபிப்பது அவசியம்.இதன் மூலமாக ஒரே நாளில் நமது அனைத்துக் கர்மவினைகளும் தீர்ந்துவிடும்.


1.ஆதி வில்வாரண்யம் என்று போற்றப்படும் திருக்கண்டியூர்.இந்த ஊரில் பிரமசிர கண்டீஸ்வரர்.இங்கு வடமேற்கு திசையில் சுற்றுப்பிரகாரத்தில் பைரவரின் சன்னதி இருக்கிறது.இந்த ஊரானது தஞ்சாவூர் திருவையாறு சாலையில் திருவையாற்றுக்கு அருகில் இருக்கிறது.


2.திருக்கோவிலூர்.அண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.இங்கு அந்தஹாசுர சம்ஹாரமூர்த்தி,சிவானந்தவல்லி என்ற பெரியநாயகி என்ற பெயரில் பைரவர் அருள்பாலித்துவருகிறார்.


3.திருவதிகை:பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கும் இங்கே வீரட்டானேஸ்வரர் என்ற பெயரில் பைரவர் சிவவடிவில் ஆட்சிபுரிந்துவருகிறார்.


4.திருப்பறியலூர்: மாயவரம்(மயிலாடுதுறை) திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்று தம்பதி சமேதராக பைரவர் சைவவடிவம் தாங்கி இருக்கிறார்.


5.திருவிற்குடி:திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.இங்கு ஸ்ரீஜலந்தராசுவதமூர்த்தியாக இருக்கிறார்.


6.வழுவூர்:மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்று,வலப்புறம் அரை கி.மீ.தூரத்தில் வழுவூர் அமைந்திருக்கிறது.இங்கே கிருத்திவாஸர் என்ற பெயரில் பைரவர் சிவலிங்கமாகக் காட்சியளித்துவருகிறார்.கேரளமாநிலத்தின் தெய்வம் ஐயப்பன் அவதரித்த இடம் இதுவே!


7.திருக்குறுக்கை:மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பிரிந்து 3 கி.மீ.தூரம் சென்றால் திருக்குறுக்கை வரும்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகை தம்பதியாக பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
8.வில்வாரண்யம் என்ற திருக்கடவூர்:இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமி தம்பதியாக பைரவர் ஆண்டு வருகிறார்.


இந்த அட்ட வீரட்டானங்களைத் தவிர,ஏராளமான பைரவ ஸ்தலங்கள் இருக்கின்றன.இவைகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் 20.6.12 அன்று பின்வரும் பைரவ மந்திரத்தை ஒரு நாள் முழுக்க உபவாசம் எனப்படும் விரதமிருந்து ஜபித்து,நமது கர்மவினைகளைத் தீர்ப்போம்;

எப்படி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்?

இந்த கோவில்களில் மூலவரை நோக்கி அமரலாம்;அல்லது இங்கிருக்கும் பைரவரின் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

முதலில் நமது குலதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ=ஒருமுறை மட்டும்) அடுத்தபடியாக நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை முதலில் நினைத்துக்கொள்ள வேண்டும்=ஓம் பத்திரகாளியே நமஹ=ஒருமுறை மட்டும்)பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபித்துக்கொண்டு,

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


என்று ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மணி நேரம் வரை மட்டுமாவது ஜபிக்க வேண்டும்.
இறுதியாக இந்த மந்திரத்தை நமக்கு அருளிய காகா சித்தருக்கு கோடி நன்றிகள் என்று ஒரே ஒருமுறை நினைத்துக்கொள்ள வேண்டும்.


பின்குறிப்பு:படத்தில் திரு அண்ணாமலையில் அமைந்திருக்கும் காலபைரவர்!!!
ஓம்சிவசிவஓம்

நாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்?




இந்துதர்மப்படி காலத்தை நான்காகப் பிரித்துள்ளனர் நமது பெருமைமிக்க முன்னோர்கள்.அவை கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் ஆகும்.கிருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தில் மனிதனும்,கடவுளும் நண்பர்களாகவே வாழ்ந்தனர்.இந்த யுகத்தில் தான் இராமாயணம் நமது பாரத நாட்டில் நிகழ்ந்தது;இந்த யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும்போது மரணம் அடையலாம்;தர்ம தேவதை என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருந்தன;எனவே,வேதனைகளும்,சோகங்களும் அறவே கிடையாது.மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவருக்குமே சாஸ்திர,சம்பிரதாய ஞானம் இருந்தது.எனவே,யாரும் சாஸ்திர சம்பிரதாயத்தின் மூலமாக ஏமாற்றிடமுடியாது.அதே சமயம் ,இந்த யுகத்தில்தான்  குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறத்துவங்கிய காலம் ஆகும்.அப்படி மாறிய யுகத்தில்தான் மனித இனம் தனது படைப்பிலேயே உன்னதமான மனிதப்படைப்பை உருவாக்கியது.அந்த மனித படைப்புதான் மாருதி எனப்படும் ஆஞ்சநேயர்!!!இராமாயண காலத்தில் தான் தனது ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்திக்காக காசிக்குப் பறந்து சென்று,காசியின் கடவுளாம் காலபைரவரின் அனுமதியின்றி சிவலிங்கங்களை எடுத்துச் சென்று,அவரின் சாபத்துக்கு ஆளானார் மாருதி! பிறகு,அவரிடம் சரணடைந்து,அவரின் அன்புக்குப்பாத்திரமானார்.(ஆக,வட பாரதத்தில் இருக்கும் காசியும்  தென் பாரதத்தில் இருக்கும் ராமேஸ்வரமும் சுமார் 20,00,000 ஆண்டுகள் பழமையானது என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம்.இந்தப் பெருமை உலகின் வேறு எந்த மதத்துக்காவது உண்டா?)


இரண்டாவது யுகமான திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகளைக் கொண்டது.யாகங்கள் தோன்றின.மனம் வருந்தி வேண்டினால்,கடவுள் நேரில் வந்து அருள்புரிவார்;இந்த யுகத்தில் மனிதனது ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைந்தன.இந்த யுகத்தில் மனிதன் ஒவ்வொருவரின் மரணநாளும் அவனு/ளுக்குத் தெரியும்.ஆனால்,மனிதன் நினைத்தால் தனது மரணத்தைத் தள்ளிப்போடலாம்.பாவமும்,சோகமும் தலைதூக்கத்துவங்கின;இந்த யுகத்தில் தர்மதேவதை என்னும் பசுவுக்கு மூன்றுகால்கள் இருந்தன.எனவே,சிறிது போராடி தர்மம் பாதுகாக்கப்பட்டு வந்தது.



மூன்றாவது யுகமான துவாபர யுகமானது 8,64,000 ஆண்டுகளைக் கொண்டது.இந்த யுகத்தின் ஆரம்பத்தில் கோவில்கள் உண்டாயின.இந்த யுகத்தின் மனிதனின் ஆயுள் ஓரு ஆயிரம் ஆண்டுகளாகச் சுருங்கின.கொடூரம் நிறைந்த மனிதர்கள் பிறக்கத் துவங்கினர்.இந்த யுகத்தின் முடிவில்தான் நமது பாரத நாட்டில் மஹாபாரதம் நிகழ்ந்தது.இந்த யுகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே தனது ஆயுள்காலம் அறியும் வித்தை தெரிந்தது.தர்மதேவதைக்கு இரண்டே இரண்டுகால்கள்! எனவே,ஆன்மீகத்தில் பித்தலாட்டம் ஆரம்பமானது;சாஸ்திரத்தை பின்பற்றுபவர்களை விட,அதை முகமூடியாகக் கொண்டவர்கள் பிரபலமடையத்துவங்கினர்.மக்களுக்கு தவறான ஆன்மீகவழிகாட்டுதல்கள் தரப்பட்டு,அந்த தவறான வழிகாட்டுதலால் படாதபாடு பட்டனர்.இந்த யுகத்திலும் ஆஞ்சநேயர் வாழ்ந்துவருகிறார்.


தற்போது நாம் வாழும் யுகமே கலியுகம் ஆகும்.இதன் கால அளவு 4,32,000 ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு மனிதனின் ஆயுளும் 100 வருடங்களுக்கும் குறைவே!தர்ம தேவதை என்னும் பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்கும்;எனவே,கலியுகத்தில் தர்மம்,நீதி,நேர்மைக்கு மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்;அல்லது தர்ம நியாயத்தைத் தேட வேண்டியிருக்கும்;



     கலியுகத்தின் ஆரம்பத்தில் பைரவ வழிபாடு பரவலாக எல்லோரிடமும் காணப்பட்டது.இன்று 13.6.12 கலியுகம் துவங்கி 5113 ஆண்டுகள் ஆகின்றன.இதில் சுமார் 2500 ஆண்டுகளாக பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டனர்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்,கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது பாரத நாடு பிற மதங்களின் தாக்குதலால் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதே முதல் காரணம் ஆகும்.இந்த சூழ்நிலையில்,பைரவ வழிபாட்டை நாம் பின்பற்றும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.


இன்று சாஸ்திர,சம்பிரதாயங்களை பாதுகாக்கவேண்டியவர்களே,அவர்களின் ஐந்து தலைமுறை முன்னோர்கள் செய்த தவறுகளின் விளைவாகவும்,பேராசையாலும் இன்று மிகவும் கஷ்டங்களையும்,சிரமங்களையும் அனுபவித்துவருகின்றனர்.அவர்களின் குழந்தைகள்     அதாவது 1970 முதல் பிறந்தவர்கள் இன்று திருமண வாழ்க்கை கூட கிடைக்காமலும்,பூர்வீகச் சொத்துக்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானவுள்ளவையாக இருந்தும் கூட அவைகளை அனுபவிக்க முடியாமலும், தீரவே தீராத நோய்களுடனும் நிம்மதியிழந்து தவித்துவருகின்றனர்.இந்த தவிப்பினை தீர்க்க ஒரே ஒரு வழிமுறை பைரவ வழிபாடு மட்டுமே!



சாஸ்திர,சம்பிரதாயங்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,அவர்களைத் தவிர பிற சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் என்ன பாடு படுவார்கள்?(சாமிக்கே சைக்கிள் இல்லையாம்?பூசாரிக்கு புல்லட் கேட்குதோ என்று நாம் கிண்டல் செய்கிறோமே அதற்கான உள்ளார்த்தம் இதுதான்)இந்து சமுதாயத்தினை ஆன்மீகரீதியாக வழிநடத்திட உருவாக்கப்பட்ட சமுதாயமானது,வேற்றுமத வருகை மற்றும் ஆதிக்கத்தினால் நமது  தர்மத்தை பாதுகாக்கத்தெரியாமலும்,வழிநடத்திட முடியாமலும் போனதால்,பைரவ வழிபாடும் மங்கிப்போனது.எனது குருவருளாலும்,இறையருளாலும் பைரவர் வழிபாடு பற்றிய எளிமையான முறைகளை ஆன்மீகக்கடல் மூலமாக வெளிப்படுத்திட நான் என்ன புண்ணியம் செய்தேனோ?


பைரவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்,அந்த தேசமானது துடிப்புள்ளதாகவும்,செல்வச் செழிப்புள்ளதாகவும்,பாதுகாப்பு மற்றும் முக்காலமும் உணரும் விதமுள்ள ஆட்சியாளர்களே நிர்வகிக்கும் விதமாகவும் மாறிவிடும்.எனவே, எனது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளே!



அண்ணாமலையில் இருக்கும் காகா ஆஸ்ரமம் பைரவர் வழிபாடு பற்றி சித்தர்களிடமிருந்து உபதேசம் பெற்றும்,அதை பல ஆண்டுகளாக பரீட்சித்தும் பைரவ ரகசியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.இந்த புத்தகம் ஒன்றின் விலை ரூ.100/-இந்த புத்தகத்தை ஆன்மீகக்கடல் மொத்தமாக விலைக்கு வாங்கி,தகுதியும்,பொறுப்பும் மிக்கவர்களுக்கும்,தினமும் வழிபாடு செய்யும் அன்பர்களுக்கும் இலவசமாக வழங்கிவருகிறது.இந்த தேசபக்திப்பணியில் நீங்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
ஆமாம்,குறைந்தது 10 பைரவ ரகசியம் புத்தகங்களை வாங்கி,ஆன்மீகக்கடல் முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறோம்.


பைரவ ரகசியம் புத்தகம் கிடைக்குமிடம்:ஸ்ரீகாகா ஆஸ்ரமம்,காஞ்சி சாலை,பெரியகுளம்,திருஅண்ணாமலை தாலுகா.             செல் எண்:9786012345                           அலுவகலத் தொலைபேசி எண்:04188252344
அலுவலக நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

பின்குறிப்பு:படத்தில் இருப்பது விஜயாபதி அருள்மிகு விஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமிதிருக்கோவிலில் அமைந்திருக்கும் காலபைரவர்!!!

ஓம்சிவசிவஓம்

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி பைரவர் வழிபாடு!!!




நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை! இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.அதென்ன நன்மைகள்?


1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி! அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.

2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.


நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:


1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால்,பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.
2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;இதில் சிகரெட் அடங்காது) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.ஏனெனில்,நீங்கள் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.இதனால்,தினசரி வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை சரியாக புரியாமல் போய்விடுகிறது.

3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியம்/காமச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.

சரி,அடுத்து என்ன? திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்வது? என்பதை விசாரிக்க வேண்டும்.திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.அது மட்டுமல்ல:


இங்கேதான் செல்வத்தின் அதிபதியான மஹாவிஷ்ணு துளசியால் இறைவனாகிய பைரவருக்கு அர்ச்சனை செய்து தனது சின்னமான சக்கரத்தை பெற்றார்.எனவே,அட்டவீரட்டானங்களில் திருவிற்குடி மிகமுக்கியமான கோவிலாக இருக்கிறது.இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன?
விநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம்  செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்;அல்லது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.


பின்குறிப்பு: படத்தில் காணப்படுவது திரு அண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பாதங்கள் ஆகும்.முதல் யுகத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரின் உயரம் 24 அடிகள்.அந்தக் காலத்தில் ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி   இவ்வளவு உயரமாக இருந்திருக்கிறார்.                                   ஆதாரம்:ஸ்ரீகாகபுஜண்டரின் உபதேசங்களின் தொகுப்பாகிய பைரவ ரகசியம்.                                 ஓம்சிவசிவஓம்

செல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாடு




கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள்.இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும்  ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு.இங்கு ஈசான மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.த்ரேதாயுகம்,க்ருதயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் இங்கு இருந்து அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன என்றால்,இந்த கோவில் சுமார் 20,00,000 ஆண்டுகளாக இருக்கின்றதாகத் தானே அர்த்தம்!!!

ஒரே இடத்தில் நான்கு பைரவர்கள் இருப்பதால் இவர்களுக்கு சதுர்யுகபைரவர் என்றும்,சதுர்க்கால பைரவர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.நமது வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பைரவர்கள் இவர்கள்! ஆமாம்,நான்கு யுகங்களையும் இவர்கள் கண்காணித்துவருகிறார்கள் எனில்,இவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்?!!?


இந்த சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் 108 ஒரு ரூபாய் வைத்து அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்து பின்வரும் பொருட்களைக் கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.
அவைகள்:சிகப்பு அரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளை நான்கு,நான்காக வாங்கிட வேண்டும்.


இந்த பூஜைப்பொருட்களை பூசாரியிடம் கொடுத்து வளர்பிறை அஷ்டமியில் பூஜை செய்துவிட்டு,108 ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.


ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
          ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் 
          சகவம்ஸ ஆபதுத்தோரணாய
          அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
          ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
          மமதாரித்திரிய வித்வேஷணாய
          ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ

பிறகு,தினமும் இந்த  ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீர்ந்து,பெரிய பணக்காரராக ஆகிவிடுவோம்.

அப்படி ஆவதற்கு,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;மது,போதைப்பொருட்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதைக்கைவிட வேண்டும்;முறையான தாம்பத்தியம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முடியாமல் போனாலும் இந்த வழிபாடு பலன் தராது.

ஓம்சிவசிவஓம்