Wednesday, March 31, 2010

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி



லண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். லண்டனில் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறியதாவது:வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியா உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகத்தை அமைக்க முன் வருவதன் முக்கிய நோக்கம் வர்த்தகம் தான். வெளிநாடுகளில் அமைக்கப்படும் இது போன்ற பல்கலைக் கழகங்களால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை மற்ற இடங்களில் துவக்கப்பட்டாலும் அதன் தனித்துவம் கிடைக்காது.



இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டால், ஆசிரியர்களுக்கு சர்வதேச தரத்தில் சம்பளம் கிடைக்கும். இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். நோபல் பரிசு பெற்றதன் மூலம் தான் என்னை உலகம் அடையாளம் கண்டு கொண்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவிலிருந்து எனக்கு இ-மெயில் மூலம் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த பாராட்டால் உண்மையில் பீதியடைந்து விட்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையை இந்த கடிதங்கள் பாதித்ததால் எரிச்சலடைந்தேன். என்னிடமிருந்து எந்த அறிவுரையையும் இந்தியர்கள் எதிர்பார்ப்பதாக நான் கருதவில்லை.கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன். மூன்று வார காலம் அங்கு தங்கியிருப்பேன். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட கல்வி நிலையங்களில் உரையாற்றுவேன்.இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

நன்றி:தமிழ் வெப்துனியா 31.3.2010

நியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன?

நியுரோதெரபியின் சிகிச்சை முறை என்ன?

இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறையாலும்,மாறுபட்ட உணவுப்பழக்கவழக்கத்தாலும்,காலம் தவறிய உணவுமுறைகளாலும் நோயை நாமே உடம்பிற்குள் உற்பத்தி செய்துகொள்கிறோம்.

நோய்க்குத் தகுந்த உடல் உறுப்புக்களைக் கண்டறிந்து,அதன் நரம்பு மற்றும் ரத்த நாளங்களைத் தூண்டி விடுவதன்மூலம் உடலின் ஆற்றலை மீட்டுத் தரச் செய்வதே நியூரோதெரபியின் சிறப்புக்குறிக்கோளாகும்.

உங்கள் உடலே உங்களுக்கு மருந்து என்ற வாக்கியத்தின்படி நியூரோதெரபி சிகிச்சையில் அழுத்தம் உடலுக்குத் தரப்படுகிறது.இந்த சிகிச்சையில் உடலில் உயிர் ரசாயன ஆற்றலை நிலைப்படுத்தி நோய் முற்றிலும் நீக்கப்படுகிறது.

நோய் வருவதற்கான காரணிகள்:

உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சுரப்பதால் நோய் உண்டாகிறது.

வயிறு செரிக்காமை (சரியான நேரத்தில் சாப்பிடாதது, கண்டதையும் சாப்பிடுவது)

வாத,பித்தம் சமன்பாடு இல்லாமை (சித்த வைத்தியத்தின் ஆதாரக்கொள்கையே இதுதான்)

நோய்த் தொற்று,நோய் அழற்சி,வீக்கம்(Infection,inflammation)

நியுரோதெரபி மூலம் குணமாக்கப்படும் நோய்கள்:

அலர்ஜி,அல்சர்,கண் நோய்கள்,
ஆஸ்துமா, மூட்டுவலி எனப்படும் ஆர்த்ரைடீஸ்
இதய நோய், ஊளைச்சதை(எடை குறைத்தல்)
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு
புற்றுநோய்,திக்குவாய்,சிறுநீரகக் கோளாறுகள்
மன அழுத்தம்,போலிக் ஆசிட் குறைபாடு
உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்
தூக்கமின்மை எனப்படும் இன்சோமியா,ஆட்டிசம் எனப்படும் மூளை மற்றும் நரம்பியல் குறைபாடு
வலிப்பு,கல்லீரல் நோய்கள்,பக்கவாதம்,மூல நோய்
பெண்களின் கர்ப்பப்பை பிரச்னை மற்றும் மாத விடாய் பிரச்னைகள்
குழந்தையின்மை

நியூரோதெரபியால் எந்த வித மாத்திரை,மருந்துகளும் தரப்படுவதில்லை.நோய் நிரந்தரமாகக் குணமடைகிறது.பின்விளைவு,பக்க விளைவு இல்லை.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். மேலும் விபரங்களுக்கு www.dlmnt.org
டாக்டர் பா.விஜய் ஆனந்த் அவர்களின் மின் அஞ்சல் முகவரி:nerovijay@yahoo.co.in

மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி

இந்துமதத்தின் பாரம்பரிய வைத்தியமுறைகளில் ஒன்று நியூரோதெரபி ஆகும்.இது ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது.இதை நவீன்ப்படுத்தியவர் டாக்டர்.லஜ்பத்ராய் மெஹ்ரா ஆவார்.

இவர் கி.பி.1923 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே இவருக்கு இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் இருந்தது.அவரது 11 ஆம் வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரை நியூரோதெரபியைக் கண்டுபிடிக்க உதவியது.

லஜ்பதி மெஹ்ராவின் 11 ஆம் வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.அவரது ஊரில் வயதான பெண்மணி, “உனக்கு நாபி(தொப்பூள்)ப்பகுதி உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை”என்றார்.இதை அந்தப்பெண்மணி நமது பாரம்பரிய முறையான வர்மக்கலை முறையில் லஜ்பதி மெஹ்ராவுக்குச் சிகிச்சையளித்தார். உடனே,அந்த பெண்மணியின் வர்ம சிகிச்சையால் வயிற்றுவலி சரியானது.


அதிலிருந்து லஜ்பதி மெஹ்ராவுக்கு வர்மக்கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.அனைவருக்கும் தனது வர்மக்கலையால் வயிற்றுவலி,முதுகுவலி,கை கால் வலி இவைகளைச் சரி செய்தார். பின்னர், மும்பை வந்து வீட்டிலேயே வர்மக்கலையை செய்துவந்தார்.

பல லட்சம் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.மும்பை வந்த அவர் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு, செட்டில் ஆனார்.பின்னர் வர்மக்கலை சிகிச்சைக்கு நியூரோ தெரபி என பெயர் சூட்டினார்.

கி.பி.1965 முதல் முழுநேர நியூரோதெரபி மருத்துவம் செய்துவந்தார்.
கி.பி.1982 இல் மும்பையில் மாந்ரா பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்தார்.

கி.பி.1992 இல் மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யமால் என்ற ஆதிவாசி மலைப்பகுதியில் நியூரோதெரபி அகாடமி துவங்கினார்.நாடு முழுவதும் உள்ள சேவாபாரதி அமைப்பு குருஜியிடம் தொடர்பு கொண்டு நியூரோதெரபி கற்றுக்கொண்டு ,நியூரோ தெரபி இந்தியா முழுவதும் பரவிவருகிறது.

கி.பி.2007 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசாங்கம் நியூரோதெரபியை அங்கீகாரம் செய்து கிராம சுகாதார நிலையங்களில் நியூரோதெரபிஸ்டுகளைப் பணியமர்த்தியுள்ளது.ஆங்கில மருந்து,மாத்திரைகளைக் குறைத்து நியூரோதெரபி சிகிச்சையளித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நியூரோ தெரபிஸ்டுகள் சேவையாற்றி வருகின்றனர்.
நன்றி: உங்கள் உடலே உங்களுக்கு மருந்து நியூரோதெரபி (மருந்தில்லா மருத்துவம்) எழுதியவர் டாக்டர்.லஜ்பதி மெஹ்ராஜி,மும்பை.தமிழில் டாக்டர் பா.விஜய் ஆனந்த்,திருச்சி.

Monday, March 29, 2010

சென்னையில் ஒரு 2012

சென்னையில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

ஒருவனுக்கு ஒருத்தி; மானமும் வீரமும்; இந்த வாசகங்களை தனது உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இனமே நம் தமிழ் இனம் ஆகும்.அப்படிப்பட்ட தமிழ் இனத்தின் தலைநகர் சென்னையாகும்.
சென்னையில் ஐ.டி.நிறுவனங்கள் கால் பதித்தப்பின்பு, முறையற்ற காமம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

எனவே, கி.பி.2015க்குள் சென்னையின் பல பகுதிகள் கடலோரமாகப்போகின்றன.எனவே, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வேலைக்குச் சென்ற இளைஞன்,இளம்பெண்களே! சென்னையில் வீடு,மனை வாங்காதீர்கள். உங்கள் சொந்த ஊரில் வாங்குங்கள்.
விரைவில் காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு துறைமுகமாகப்போகிறது.இது ஜோதிடக்கணிப்பும்,வானியல் கணிப்பும் சேர்ந்தது.விரைவில் சென்னையில் ஒரு 2012 வரப்போகிறது.எந்தப்பரிகாரத்தாலும்,சென்னையைக் காப்பாற்ற முடியாது.

லட்சியங்கள் நனவாக்கிட உதவும் 20/20

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.

அதற்கு என்ன செய்யலாம்?

பயனுள்ள 20 டிப்ஸ் :

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்' என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்' ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.

7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக - மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.

11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.

12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் - மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...

13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.

15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.

18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.

19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

நன்றி:www.winmani.wordpress.com

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

கொல்கத்தாவில் பிறந்து,பட்டதாரியாகிய நரேந்திரன் தனது இளைமைக்காலத்தில் நாத்திகராக இருந்தார்.யாரைப்பார்த்தாலும், ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பார்.ஆமாம் என பதில் வந்தால், எனக்குக் காட்டு அப்போதுதான் நான் நம்புவேன் என வாக்குவாதம் செய்வார்.அவரது வாக்குவாதம் தோற்றுப்போனது, தட்சிணேஸ்வரம் காளிகோவில் பூசாரி ராமகிருஷ்ணரிடம்தான்.

ராம கிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ,உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல கடவுளை உனக்கும் காட்டுகிறேன்’ என தைரியமாகச் சொல்லி,விவேகானந்தருக்கு கடவுளை நேரில் காட்டவும் செய்தார்.

விவேகானந்தருக்கு ஞானம் வழங்கியது அவரது அம்மா புவனேஸ்வரியம்மாள். “எனக்கு ஞானம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என ஒரு முறை கூறியுள்ளார்.

‘உடலைப் பலமாக வைத்துக்கொண்டால்தான் உள்ளமும் பலமாக இருக்கும்’ என அடிக்கடி சொல்லுவார் சுவாமி விவேகானந்தர்.(நமது தெரு,வீடு,அலுவலகம்,நட்பு வட்டத்தில் ஏன் புறங்கூறுவது ஒரு பழக்கமாக இருக்கிறது? பலவீனமான உள்ளம் தான் பிறரது சாதாரண சாதனைகளையும் பார்த்து,அவர்களை பிறரிடம் மட்டம் தட்டும்.தானும் அதே சாதாரண சாதனையைச் செய்ய முயலாது.)
(இன்று காமம் மிகவும் மலிவாக எங்கும் கிடைக்கிறது.மெமரிக்கார்டுகளில்,இணைய தளங்களில்,கணினிகளில்,வெளிநாட்டுச் சேனல்களில். . . இவை அனைத்தும் இளைஞர்,இளம்பெண்களின் வாலிபத்தை நாசமாக்க முயலும் நச்சுக்கள்.உடல் வலிமையை நாம் இழக்கும்போது,மன வலிமையையும் இழந்துவிடுகிறோம்.காம சுகம் ரொம்ப சாதாரணமானது.அதை செய்யும் போதும்,செய்த பின்பும் அது ரொம்ப சாதாரணமானது என்பதை உணர்கிறோம்.இருந்தும் ஏன் காமக் காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்க்கத் துடிக்கிறோம்? யோசியுங்கள்)

சுவாமி விவேகானந்தர்,அகில பாரத அளவில் பிரபலமானது நமது சென்னையிலிருந்துதான்.அதுவும் எப்படி? ‘இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார்’ என்ற பெயரில் (ஆகா! என்ன ஒரு ஆங்கில அடிமைத்தனம்)
இவரிடம் மைசூர் மகாராஜா,
“நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தார்.அதற்கு சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார்.

இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை,பிரிட்டனின் அரசாங்கக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார்.குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார்.
“கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை.மும்பையில் பிறந்து படிப்பில் சுட்டியாக இருந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப்பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப்பற்றி அவதூறாகப் பேசவைத்தனர்.(அமெரிக்காவில்).அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லை.இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப்பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர்.
(ஆக,கி.பி.1000 முதல் இன்றைய கி.பி.2010 வரையிலும் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா,வளைகுடா நாடுகள்,ஆஸ்திரேலியா,இத்தாலி உள்பட உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் மதக்கண்ணோட்டத்துடன் தனது அரசியல் வியூகத்தை வகுக்கின்றன.இந்துக்களின் தாய்நாடாகிய நாம் இந்தியா மட்டுமே இந்துக்கண்ணோட்டத்துடன் செயல்படுவதில்லை.என்ன்ன்னக் கொடுமை சார் இது.?)இந்தத் தகவல்களை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆக, இந்துக்களாகிய நாம்,இந்து உணர்வு பெற்றால்,இந்த பூமியில் மத வெறி அழிந்துவிடும்.)

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது”

“முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.அதன் பிறகு,ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும்,எண்ணுவதற்கு அறிவும்,உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும்.இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள்”

ஆன்மீகக்கடல் வாசகர்களே! நீங்கள் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட வேண்டுமா? சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற நூலை சுமார் 50 முறை வாசியுங்கள்.
முதல்முறை வாசிக்கும்போது உங்களை கவரும் வரிகளை கோடு போட்டுக்கொள்ளுங்கள்.இரண்டாவது முறை வாசிக்கும்போது,நீங்கள் முதல் முறை கோடு போட்டீர்களே அதை மட்டும் வாசியுங்கள்.
மூன்றாவது முறை வாசிக்கும்போது நீங்கள் சிந்திக்கத் துவங்குவீர்கள்.இன்றைய அரசியல் கட்சிகள் நம்மை எப்படி ஏமாற்றிவருகின்றன? என்பதை உணருவீர்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்குள் சோகம் உருவாகிறதோ,அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகம் வாசியுங்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகத்தில் மூழ்குங்கள்.
நீங்கள் விரைவில் விவேகானந்தர் ஆவீர்கள்.இது எனது அனுபவ உண்மை.

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

கொல்கத்தாவில் பிறந்து,பட்டதாரியாகிய நரேந்திரன் தனது இளைமைக்காலத்தில் நாத்திகராக இருந்தார்.யாரைப்பார்த்தாலும், ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பார்.ஆமாம் என பதில் வந்தால், எனக்குக் காட்டு அப்போதுதான் நான் நம்புவேன் என வாக்குவாதம் செய்வார்.அவரது வாக்குவாதம் தோற்றுப்போனது, தட்சிணேஸ்வரம் காளிகோவில் பூசாரி ராமகிருஷ்ணரிடம்தான்.

ராம கிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ,உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல கடவுளை உனக்கும் காட்டுகிறேன்’ என தைரியமாகச் சொல்லி,விவேகானந்தருக்கு கடவுளை நேரில் காட்டவும் செய்தார்.

விவேகானந்தருக்கு ஞானம் வழங்கியது அவரது அம்மா புவனேஸ்வரியம்மாள். “எனக்கு ஞானம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என ஒரு முறை கூறியுள்ளார்.

‘உடலைப் பலமாக வைத்துக்கொண்டால்தான் உள்ளமும் பலமாக இருக்கும்’ என அடிக்கடி சொல்லுவார் சுவாமி விவேகானந்தர்.(நமது தெரு,வீடு,அலுவலகம்,நட்பு வட்டத்தில் ஏன் புறங்கூறுவது ஒரு பழக்கமாக இருக்கிறது? பலவீனமான உள்ளம் தான் பிறரது சாதாரண சாதனைகளையும் பார்த்து,அவர்களை பிறரிடம் மட்டம் தட்டும்.தானும் அதே சாதாரண சாதனையைச் செய்ய முயலாது.)
(இன்று காமம் மிகவும் மலிவாக எங்கும் கிடைக்கிறது.மெமரிக்கார்டுகளில்,இணைய தளங்களில்,கணினிகளில்,வெளிநாட்டுச் சேனல்களில். . . இவை அனைத்தும் இளைஞர்,இளம்பெண்களின் வாலிபத்தை நாசமாக்க முயலும் நச்சுக்கள்.உடல் வலிமையை நாம் இழக்கும்போது,மன வலிமையையும் இழந்துவிடுகிறோம்.காம சுகம் ரொம்ப சாதாரணமானது.அதை செய்யும் போதும்,செய்த பின்பும் அது ரொம்ப சாதாரணமானது என்பதை உணர்கிறோம்.இருந்தும் ஏன் காமக் காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்க்கத் துடிக்கிறோம்? யோசியுங்கள்)

சுவாமி விவேகானந்தர்,அகில பாரத அளவில் பிரபலமானது நமது சென்னையிலிருந்துதான்.அதுவும் எப்படி? ‘இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார்’ என்ற பெயரில் (ஆகா! என்ன ஒரு ஆங்கில அடிமைத்தனம்)
இவரிடம் மைசூர் மகாராஜா,
“நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தார்.அதற்கு சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார்.

இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை,பிரிட்டனின் அரசாங்கக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார்.குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார்.
“கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை.மும்பையில் பிறந்து படிப்பில் சுட்டியாக இருந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப்பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப்பற்றி அவதூறாகப் பேசவைத்தனர்.(அமெரிக்காவில்).அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லை.இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப்பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர்.
(ஆக,கி.பி.1000 முதல் இன்றைய கி.பி.2010 வரையிலும் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா,வளைகுடா நாடுகள்,ஆஸ்திரேலியா,சோனியா ஆண்டனி மீமொய்னோ பிறந்த இத்தாலி உள்பட உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் மதக்கண்ணோட்டத்துடன் தனது அரசியல் வியூகத்தை வகுக்கின்றன.இந்துக்களின் தாய்நாடாகிய நாம் இந்தியா மட்டுமே இந்துக்கண்ணோட்டத்துடன் செயல்படுவதில்லை.என்ன்ன்னக் கொடுமை சார் இது.?)இந்தத் தகவல்களை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆக, இந்துக்களாகிய நாம்,இந்து உணர்வு பெற்றால்,இந்த பூமியில் மத வெறி அழிந்துவிடும்.)

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது”

“முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.அதன் பிறகு,ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும்,எண்ணுவதற்கு அறிவும்,உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும்.இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள்”

ஆன்மீகக்கடல் வாசகர்களே! நீங்கள் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட வேண்டுமா? சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற நூலை சுமார் 50 முறை வாசியுங்கள்.
முதல்முறை வாசிக்கும்போது உங்களை கவரும் வரிகளை கோடு போட்டுக்கொள்ளுங்கள்.இரண்டாவது முறை வாசிக்கும்போது,நீங்கள் முதல் முறை கோடு போட்டீர்களே அதை மட்டும் வாசியுங்கள்.
மூன்றாவது முறை வாசிக்கும்போது நீங்கள் சிந்திக்கத் துவங்குவீர்கள்.இன்றைய அரசியல் கட்சிகள் நம்மை எப்படி ஏமாற்றிவருகின்றன? என்பதை உணருவீர்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்குள் சோகம் உருவாகிறதோ,அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகம் வாசியுங்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகத்தில் மூழ்குங்கள்.
நீங்கள் விரைவில் விவேகானந்தர் ஆவீர்கள்.இது எனது அனுபவ உண்மை.

தாய் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழில் பேசுங்கள்




இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.




ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.




எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.




இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்..

வி.சபேசன்




இன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக

படித்த இளைஞனே!
வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.


~~~~~ ~~~~~~~~~~ இதற்க்கு தங்கள் கருத்து என்ன?~~~~~~~~~~~~~~

நன்றி:எனது பள்ளித் தோழன் கலசலிங்கம்

திருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருடங்களுக்குப்பின்பு (தி.பி)

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்

காத்திருந்தேன்

அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் :என்னை திட்டுவாயா ?

அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று

நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?




(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்


திருமணம் பற்றி சில பழமொழிகளும்,பல அனுபவ மொழிகளும் இருக்கின்றன.அவற்றில் சில: ஒரு திறமையும்,சாமர்த்தியமும்,பொறுப்பும் கொண்ட மனைவி,அப்பாவிக் கணவனை சாதனையாளனாக்குவாள்.
நயவஞ்சகமும்,பித்தலாட்டமும்,பொறுப்பற்ற குணமும் கொண்ட மனைவி, சாதனைசெய்யும் கணவனை நாசமாக்குவாள்.
கல்யாணம் என்பது ஒரு வினோத சிறைச்சாலை.வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரத்துடிப்பார்கள்.உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் (ஆயுள் முழுக்க) தவிப்பார்கள்.

காதல் என்ற மயக்க மருந்து கொடுக்காமல்,கல்யாணம் என்னும் ஆபரேஷனை இளைய சமுதாயத்துக்கு செய்ய முடியாது.




Wednesday, March 24, 2010

உங்கள் ராசிப்படி காதல்

மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.
With Regards,

எனது பள்ளி நண்பன்KALISA LINGAM

ஒரு பொறியியல் கல்லூரி மாணவரின் சிந்தனை:ஆன்மீகக்கடல் வாசகர்களின் சிந்தனைக்கு

ஒரு என் ஜினியரிங் மாணவனின் சிந்தனை

மாதம் ரூ.25,000/-சம்பளம் தரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஐந்து கட்டத்தேர்வுகளை வைத்து என்னை வேலைக்குத் தேர்வு செய்கிறது.

முதலில்பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு, அடுத்து பாடம் சார்ந்த எழுத்துத் தேர்வு, மூன்றாவதாக ஒரு நுண்ணறிவுக்கான சோதனை,நான்காவதாக கலந்துரையாடல் எனப்படும் ஜி.டி.(குரூப் டிஸ்கசன்),இறுதியாக நேர்முகத் தேர்வு.

அப்படியே இந்த ஐந்து கட்டத் தேர்வில் வெற்றி பெற்றாலும்,எந்த முன்னறிவிப்பும் இன்றி எப்போதும் என்னை வேலையை விட்டுத் தூக்கலாம்.

ஆனால்,நம்மை ஆளும் கருணாநிதி, மன்மோகன் இவர்களை ஏன் நாம் ஒரே ஒரு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்?
நமது நாட்டை ஆள்வது அவ்வ்வ்வ்வளவு ஈஸியா?

நோ ! இந்த தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டும்.

மக்கள் நினைக்கும்போது,இந்த ஆளும் வர்க்கம் ஒழுங்கில்லை எனில்,அதை பதவி நீக்கம் செய்யும் விதமாக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது

உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

14.4.2010 அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க் கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம் முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை ) தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன் அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம் விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம் நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப் பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை

30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை

12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை

27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை

9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை

24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை

17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை

29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை

14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை

25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை

12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை

23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை

8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை

19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை

16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை

18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை

எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! கடன் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.இந்த ஆசையை நீங்களும் உங்களது லட்சியமாக்கிடலாம்.நீங்கள் பொதுச்சேவை செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்தால்,இந்த வலைப்பூ பக்கத்தை மட்டும் பிரிண்ட் எடுத்து, பிட் நோட்டீஸாக 1000 அல்லது அதன் மடங்குகளில் அச்சடிக்கலாம்.அச்சடித்து,உங்கள் ஊரில் உள்ள பழமையான கோவில்களில் விநியோகம் செய்யலாம்.இதுவும் கூட ஒரு புண்ணியமான காரியமே!

சென்றவாரம்,(மார்ச் 3 ஆம் வாரத்தில்),ஜீனியர்விகடனில் வந்த ஒரு செய்தி என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.திருப்பூர் அருகே பள்ளிப்பாளையம் என்ற ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தினர், ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியிருந்தனர்.வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாததால்,அந்தக் குடும்பத்தின் பருவ வயதுப்பெண்ணை அந்த கந்துவட்டிகும்பல் கடத்திச் சென்றுள்ளது.கடத்திச் சென்று,அவளைக் கற்பழித்துள்ளது.அப்படிக் கற்பழித்ததை,வீடியோவாக எடுத்து,இணையதளத்துக்கு விற்றுள்ளது.இதை விடக் கேவலம் நம் தமிழ்நாட்டில் வேறு என்ன இருக்க முடியும்?
அது மட்டுமல்ல; அந்த கற்பழிக்கப்பட்ட, மானமிழந்தப் பெண்ணுக்கும்,குடும்பத்திற்கும் ஆதரவாகக் களமிறங்கிய அந்தப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை அந்த கந்துவட்டிக்கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.தமிழினத்தலைவர் கருணாநிதி ஆளும் தமிழ்நாட்டில் இதுதான் நடக்கும்போலும்.
என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்,அந்த கந்துவட்டிக்கும்பலை வெறிநாய்களால் கடிக்க வைத்தே சாகடித்திருப்பேன்.அந்தப்பெண்ணைக் கெடுத்தவன்களின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்திருப்பேன்.இவன்களுக்கு ஆதரவாக எவன் வந்தாலும் அவனுக்கும் இதே கதிதான்.

Tuesday, March 23, 2010

காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு தத்துவார்த்தமான பார்வை

வாத்து மடையன்



ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''

நன்றி:எனது பள்ளிநண்பன் கலசலிங்கம்,வளைகுடா நாடு.

சுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக்குப் பின் தமிழில்


இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.
கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365
விலை ரூபாய் 75/=

Saturday, January 2, 2010
நட்சத்திர மரங்கள்





விருச்ச சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள்
நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள்.

குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள்.
தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள்.
உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.

நாடும் நலம் பெரும்.

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு



பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்

3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
thanks www.agasool.blogspot.com

Thursday, March 18, 2010

அரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவிப்பு


அரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவிப்பு

புதுடில்லி:யோகா குரு பாபா ராம்தேவும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அரசியலை தூய்மைப்படுத்துவதற்காக, 'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் யோகா பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்றவர் பாபா ராம்தேவ். மன அழுத்தங்களை போக்கும் வகையிலான பல்வேறு யோகா கலைகளை கற்றுத் தருகிறார்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா முகாம்களை இவர் நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது.'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக இவர் அறிவித்துள்ளார்.ராம்தேவ் கூறியதாவது:அரசியலில் மாசுபடிந்துள்ளது. அதை தூய்மைப்படுத்துவதற்காகவே அரசியல் கட்சியை துவக்கியுள்ளேன். அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
முதற்கட்டமாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஏழு முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். சரியான, தகுதியான நபரை அடையாளம் கண்டு, அவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துவோம்.
அதே நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எந்த பதவியையும் ஏற்க மாட்டேன். 300 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான கருப்பு பணம், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முறையான சட்ட விதிமுறைகளின்படி, இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் இந்த பணம் முழுவதையும், நம் நாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.
இதுமட்டும் நடந்து விட்டால், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா அசைக்க முடியாத பலம் பெற்று விடும். வல்லரசு நாடாக உருவெடுக்கும்.யோகா பயிற்சி கற்றுக் கொடுப்பவர்கள், அரசியல் ஆசையுடன் செயல்படுவதாக, உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள், எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்க மாட்டார்கள்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பணம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மாலைகளை உருவாக்க அவற்றை பயன்படுத்தக் கூடாது.சமீபகாலமாக, சிலர் ஆன்மிகத்தின் பெயரால், சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது கவலை அளிக்கும் செயல். இதுபோன்ற நபர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

நன்றி:www.dinamalar.com 18.3.2010

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 3

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 3

ஒரு பெண் குழந்தை பருவமடைந்தது முதல் அவளுக்கு திருமணம் ஆகி,பிரசவம் பார்க்கும் வரை அவளது அனைத்து காம சந்தேகங்களையும் அவளது அம்மாவும்,சகோதரிகளும் நிவர்த்திசெய்து தருகிறார்கள்.

அப்படி சொல்லித்தந்தாலும்,திருமணம் ஆன நாள் முதல், அந்தப் பெண்ணின் பக்குவமான மனநிலையே அவளையும்,அவளது கணவனையும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது பிரிந்தோ இருக்கச் செய்யும்.
ஆனால்,எந்த அப்பா தனது மகனுக்கு காமம் பற்றிய அடிப்படைச் சந்தேகங்களை சொல்லித்தருகிறார்?இன்றைய நவீன காலத்தில் எப்படி தனது மகன் காம வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தராததால் தான் பல மகன்கள் கணவனாகும்போது அவர்களின் நிலை ஐயோ பாவம் என்றாகிறது.அப்படிப்பட்ட ஐயோ பாவமான ஒரு கணவனை பார்ப்போம்:


ஐந்து சகோதரிகளுடன் பிறந்தவன் நாகராஜ்.வீம்பும் வீறாப்பும்கொண்டவர் நாகராஜின் அப்பா சிவானந்தம்.நான்காவது ஆணாகப் பிறந்தவன் நாகராஜ். நாகராஜீக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறாள்.அக்காக்களோ, மூன்றுபேர்கள்.மூன்று அக்காகளில் ஒருத்தி பிறமனிதர்களைப் படிப்பதில் திறமைசாலி.அவள் பெயர் முத்துமாரி.


நாகராஜிக்கு பெண்பார்க்கும் படலத்திற்கு நாகராஜ் தனது சகோதரிகளுடன் வந்திருந்தான்.பெண்ணையும்,பெண்ணின் அம்மாவாகிய முத்துலட்சுமியையும் முத்துமாரி பார்த்த உடனே,சிவானந்தத்திடம்,முத்துமாரி ‘நம்ம தம்பி நாகராஜீக்கு இந்த வரன் வேண்டாம்பா.’என பலமுறை கதறியிருக்கிறாள்.சிவானந்தத்தின் வீறாப்பில் அது எடுபடவில்லை.

சிவானந்தம் போலவே நாகராஜீம் வீராப்பானவன் தான்.ஆனால்,பட்டதாரியாக இருப்பதாலும்,நிறைய்ய புத்தகங்கள் படிப்பதாலும்,எதையும் சிந்தித்துச் செயல்படுவதாலும், தயாளகுணம் அவனது கூட பிறந்த குணமாக இருக்கிறது.இந்த தயாளகுணம் நாகராஜை அவனது குடும்ப வாழ்க்கையில் எப்படி வீழ்த்தியது என்பதை இனி பார்ப்போம்:


கி.பி.1999 ஆம் ஆண்டில் ,25 வயதில் நாகராஜீக்கு திருமணம்நடந்தது.நாகராஜின் மனைவியின் சொந்த கிராமம்,நாகராஜின் பிறந்த நகரத்திலிருந்து 16 கி.மீ.தூரத்தில் இருக்கிறது..நாகராஜின் மனைவியின் பெயர் கோதை.அப்போது கோதைக்கு வயது 23.(கணவன் மனைவி வயது வித்தியாசம் குறைந்தது 4 வருடங்களும்,அதிகபட்சம் 10 வருடங்களும் இருப்பது இருவருக்கும் நல்லது;அவசியமானதும் கூட.)
ஒருவேளை கணவனின் வயதைவிட மனைவியின் வயது 3 வயதுக்குள் இருந்தாலோ,10 வயதைவிட அதிகமாக இருந்தாலோ அது தீராத பிரச்னையைத் தரும்.(விதிவிலக்குகள் இங்கும் உண்டு)





25 வயது வரை நாகராஜ் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை.இவர்களுக்கு ஒரு ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது.அது பெண் குழந்தை.அந்தக்குழந்தை பிறந்ததிலிருந்து நாகராஜிற்கும் அவனது அப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்தது.இந்த வாக்குவாதம் அடிதடியாகி மூன்று வருடங்களில் அப்பாவும் மகனும் எதிரியாகிவிட்டனர்.மூர்க்க குணம்,தற்பெருமையடிப்பது,எந்தப்பெண் வந்து என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவது,யார் தன்னைப் புகழுகிறார்களோ,அவர்களுக்காக அடாவடித்தனம் செய்வது அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது சிவானந்தத்தின் பிறவிகுணம்.
இதே குணத்துடனும் காம ரீதியான அரசியல் செய்வதில் முத்துலட்சுமியை மிஞ்சிட யாராலும் முடியாது.காமத்தால் யாரையும் எவரையும் எப்படியும் வீழ்த்தி,அவர்களின் சொத்தினை திருடும் குணம் முத்துலட்சுமிக்கு உண்டு.
யாரையும்,எப்போதும்,எதற்காகவும் சார்ந்திருக்காமல் தன்னை மட்டும் சார்ந்து வாழும் சுயச்சார்பான வாழ்க்கையே நாகராஜின் கொள்கை.அதே சமயம் தன்னை நம்பிவந்தவர்களுக்காக தனது உயிரையும் தருவது,எவர் மனதும் புண்படாமல் பேசுவதும்,பழகுவதும்,ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஒரு தமிழனின் அடையாளம்;இவையெல்லாம் நாகராஜின் சுபாவங்கள்.


கோதையின் அம்மா முத்துலட்சுமி(நாகராஜின் மாமியார்) ஒரு திட்டம் போட்டாள்.கோதைக்கு ஒரே ஒரு தங்கை மீரா இருக்கிறாள்.கோதைக்கும்,நாக ராஜிக்கும் திருமணம் ஆனதிலிருந்து கோதையின் உறவினர்கள் கோதையின் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் நாகராஜையும் கோதையின் தங்கை மீராவையும் இணைத்துக் கிண்டல் செய்வது வழக்கம்.

இதை நிஜத்தில் செய்து பார்த்தால் என்ன? என்று கோதையின் அம்மா முத்துலட்சுமி முடிவே எடுத்துவிட்டாள்.கோதையின் அம்மாவின் அப்பா கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள்.(கோதையின் தாத்தா கிருஷ்ணனுடன் பிறந்த 11 ஆண்களுக்கும் தலா இரண்டு அல்லது மூன்று மனைவிகள்!!!)

இந்தக் கிண்டலை சிறிதும் கூட கண்டுகொள்ளாமல் இருந்தாள் கோதை.விஷயம் விபரீதமானது.கோதையின் அம்மாவின் திட்டப்படி,நாகராஜின் கோதையின் தங்கையும் தனிமையில் சந்திக்கத்துவங்கினர்.கோதையின் தங்கை, தனது அம்மாவின் திட்டத்தை நாகராஜிடம் போட்டு உடைத்துவிட்டாள்.

தன்னை நாகராஜிக்கு மணம்முடிப்பது மூலமாக நாகராஜின் மொத்த சொத்தையும் கோதையின் தங்கையின் பெயருக்கு மாற்றிவிட வேண்டியது.மாற்றியதும்,கோதையின் தங்கையை அவளது முறைமாமனுக்கு (மறு)மணம் முடித்துவிடவேண்டியது.நாகராஜிக்கு அதிர்ச்சி.



உடனே,கோதையின் தங்கை மீராவும்,நாகராஜீம் சேர்ந்து ஒரு திட்டமிட்டனர்.அதன்படி, இருவரும் கடுமையாக சண்டை போட வேண்டியது.அதுவும்,கோதையும், முத்துலட்சுமியும் சேர்ந்திருக்கும்போது கெட்ட வார்த்தைகளால் பெரிய்ய கலாட்டா செய்ய வேண்டியது.நாகராஜ் தப்பிக்க,மீராவுக்கு வேறிடத்தில் திருமணம் ஆனது.இது எப்படி என்று முத்துலட்சுமிக்கு புரியவில்லை.முதன்முதலில் தனது மருமகன் நாகராஜை நினனத்துப் பயந்தாள்.


நாகராஜிக்கு ஒரு குரு உண்டு.அந்த குரு சொன்னது நமது இந்தியாவுக்கே பொருந்தும்:
பணக்காரக்குடும்பங்களிலும் சரி; கண்ணியமான குடும்பங்களிலும் சரி; குடும்பத்து பெண்கள் பாதை மாறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான்.அது என்ன வெனில்,அந்தக் குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று குழந்தைகள் இருக்கும்.அதுவும் ஒவ்வொன்றும் சரியாக ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் பிறந்திருக்கும்.
முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும்போது அடுத்த குழந்தை பிறந்துவிடும்.இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது மூன்றாவது குழந்தை பிறந்துவிடும்.இதனால்,இந்த மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மனைவிக்கு கவனம் இருக்கும்.இதையும் மீறி எவனாவது அந்த மனைவியை பிக்.அப் செய்ய நினைத்தாலும்,அந்த மனைவியால் திசைமாறவே முடியாது.

இந்த யோசனையை செயல்படுத்த நினைத்து,கோதையுடன் நாகராஜ் ஆலோசனை செய்தால்,கோதை சம்மதிப்பதில்லை.கோதை மீது அவ்வளவு பிரியம் மற்றும் ஆசையில் தனது குருவின் யோசனையை மறந்துவிட்டான்.அதையும் மீறி,கோதையை கர்ப்பிணியாக்கும் நோக்கோடு நெருங்கினால்,கோதை சொல்வது ‘எனக்கு அதில் புண் இருக்கிறது’ என்றே 6 வருடத்தைக் கடத்திவிட்டாள்.
ஏழாம் வருடத்தில்தான் நாகராஜிக்கு வீரம் வந்தது.7 ஆம் ஆண்டின் முடிவில்,நாகராஜ் கோதை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அதற்குள்,முத்துலட்சுமியானவள்,தனது மூத்த மகளான கோதையை பெரும் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு விபச்சாரத்தில் இறக்கி அதன் ருசியை பார்க்க வைத்துவிட்டாள்.
நாகராஜ் வேலைக்குப் போனதும்,கோதையும் ‘வேலைக்குப் போய்விடுவாள்’.
கோதை தடம் மாறிச்செல்லுவது நாகராஜின் அப்பா சிவானந்தத்திற்கு எட்டியது.ஒருநாள்,சிவானந்தம் தனது மனைவி மற்றும் மகள்களோடு நாகராஜின் வீட்டிற்கு (நாகராஜ் இல்லாதபோது) வந்து,நாகராஜின் மனைவி கோதையை வம்பிற்கிழுத்து, நான்கு பெண்களும் கோதையை அவளின் குழந்தைகளின் முன்பாகவும்,தெரு மக்களின் முன்பாகவும் அடித்து உதைத்தும்,கோதையை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியும் விட்டுப்போய் விட்டனர்.இரவு வேலை முடிந்து வந்த நாகராஜீக்கு விஷயம் தெரிந்ததும்,நாகராஜ்,கோதையிடம் ஒரேஒரு கேள்வி கேட்டான்:
என்ன சொல்லி என் அப்பனும் எனது அக்காக்களும் உன்னைத் திட்டினர்?
அதற்கு கோதை பதில் சொல்ல வில்லை.
தனது ஆத்மநண்பனிடம்,விசாரித்து தான் வசிக்கும் தெருவில் நடந்த தனது குடும்பச்சண்டையைத் தெரிந்துகொண்டான்.ஆனால்,அது பற்றி தனது மனைவியிடம் மூச்சுவிட வில்லை.மனைவியின் மீதும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததால்,அவன் வேறுபதில் கூறவில்லை.ஆனால்,கோதை,நாகராஜிடம் நாகராஜின் அப்பா,அம்மா,அக்காக்களை போலீஸில் புகார் செய்யும்படி நச்சரித்தாள்.நாகராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை.மாறாக,நீ இனிமே ஒழுங்கா இரு என்றான்.இதை அப்படியே கோதை தனது அம்மாவாகிய முத்துலட்சுமியிடம் சொல்லிவிட்டாள்.உடனே,முத்துலட்சுமி வேறு ஒரு திட்டமிட்டாள்.
தனது மகளிடம் பேசிபேசியே சம்மதித்தாள்.அதன்படி,கோதை நாகராஜினை வம்புக்கிழுக்க வேண்டும்.இதனால்,இருவரும் கடும் சண்டை போடுவர்.அடி நன்றாக வாங்குவதுபோல் நடித்துவிட்டு,அந்த காயத்துடன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.இதுதான் திட்டம்.
இதற்கு கோதை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை;அதற்கு முத்துலட்சுமி சொன்ன காரணமோ சூப்பர் காரணம்.
ஏண்டி,உன் மீது பாசமா ‘அவன்’ இருந்தான்னா, உன்னை அவனோட அப்பா,அம்மா,அக்காக்கள் அடித்ததும் ஏன் அவர்களை போலீஸில் அவர்கள் மீது புகார் கொடுக்க வில்லை?ஆக, பத்துவருடம் உன்னோடு குடும்பம் நடத்தியும்,உன்னைவிட அவனுக்கு அவனது அப்பாவும் அம்மாவும் அக்காவும்தானோ முக்கியம்? என கேள்வி கேட்க கோதையும் சரியென அதன்படி செயல்படத்துவங்கிவிட்டாள்.
(இதே கோதைக்காக நாகராஜ் தனது அப்பாவையும், அம்மாவையும் எதிர்த்து எத்தனை வருடங்கள் சண்டையிட்டிருப்பான்? கோதையே முக்கியம் என பலமுறை நிருபித்தும்,கோதையைப் பற்றி நாகராஜின் அப்பா பலமுறை இழிவாகப்பேசியும் கூட அதை நம்பாமல்,அதை அப்படியே கோதையிடம் கூறியிருப்பதை கோதையானவள் உணரவில்லை.)

ஒரு வெள்ளிக்கிழமையன்று,காலை நாகராஜ் வேலைக்குப் புறப்பட்ட போது,கோதை திட்டமிட்டபடி, சண்டையைத் துவக்கினாள்.நாகராஜ் பொறுமையாக பதிலளித்தான்.உனக்கும் எனக்கும் இனி எந்த ஆசையும் இருக்கக் கூடாது? நமது குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமே முக்கியம் என்பது உனக்குப் புரியவில்லையா? எனக்கூறியதற்கு அவனது சட்டையின் மேல்பையைக் கிழித்தாள்.இதுபோதாதா? நாகராஜ், கோதையின் தலைமுடியைப் பிடிக்க இதுதான் காத்திருந்த முத்துலட்சுமி தெருவின் வாசலில் அமர்ந்துகொண்டு,
“ஐய்யய்யோ என் மகளைக் கொல்லுறானே! யாராவது காப்பாத்துங்களேன்” எனக்கூக்குரலிட, தெருவே கூடிவிட்டது.
திட்டமிட்டபடி,கோதை அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றாள்.தனது கணவன் தனக்குச் சம்பளம் தருவதில்லை; தன்னைக் கொல்ல வருகிறான் என சொல்ல மகளிர்க் காவலர்கள் அவளின் உடலை பார்த்து (எந்த ரத்தக் காயமும் இல்லாதது கண்டு) அப்படிப்போய் உட்காரு என அதட்டினர்.
கோதையோ தனது அருமை அம்மா முத்துலட்சுமியின் யோசனைப்படி, அவனை ஜெயிலில் போடுங்க, அவனை ஜெயில் போடுங்க என கத்திட, ஓங்கி ஒரு அறை வாங்கினாள்.போடி யாரை என்ன செய்யணும்ணு எனக்குத் தெரியும்.
நாகராஜை அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்தனர்.இருதரப்பையும், விசாரித்தனர்.ஒருமாதம் வரை இருவரையும் நாளை வா! அடுத்த வாரம் வா! என அலைக்கழித்தனர்.
ஒரு மாதம் கழிந்தது.முடிவில்,கோதையை அனுப்பிவிட்டு, நாகராஜிடம் மகளிர் இன்ஸ்பெக்டர் கூறினார்: எலேய், உன் பொண்டாட்டி இனி உருப்படாமல் நாசமாப் போகணும்ணு முடிவு பண்ணிட்டாடா.இனி மகளைப் பார்க்கணும்ணு அவளையோ உன் பொண்டாட்டியையோ நீ போய் பார்க்காதே.அப்படி நீ பார்த்தால் நாங்க உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்.ஏன்னா, நியாயம் உன் பக்கம் இருக்கு.சட்டம் அவ பக்கம் இருக்கு.நீ கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் அவ மேல போடு.நான் வந்து உனக்கு ஆதரவாக சாட்சி சொல்லுறேன்.
இதைச் சொல்லிமுடித்ததும், கோதை எங்கிருந்தோ மீண்டும் அனைத்து மகளிர்க் காவல் நிலையம் வந்தாள்.அப்படி வந்ததும்,சில பெண் ஏட்டுக்கள் கேட்டனர்.
சரிடி, இரண்டு குழந்தை வச்சிருக்கியே.எப்படி நீ இருவரையும் கரை சேர்ப்பே.
“நானா உழைச்சு நானா என் குழந்தைகளை கரைசேர்ப்பேன்.எனக்கு அவன் ஒண்ணும் தர வேண்டாம்.” என வீர வசனம் பேசினாள் கோதை.

உடனே, நாகராஜிடம், ‘சார்,உங்க ஒய்ப் மேல ஏதும் தப்பு இருந்தால் சொல்லுங்க.நாங்க கண்டிக்கிறோம்.’
நாகராஜ், “மேடம்,அவளுக்கு சொந்தபுத்தி கொஞ்சமும் கிடையாது.அவளோட அம்மாவும் அவளும் பேசாமல் இருந்தால் போதும்” என்றான்.
இன்று, நாகராஜ் 50 கிலோமீட்டர்கள் தள்ளிச் சென்று தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.கோதையை அவளது அம்மாவே விபச்சாரத்தில் தள்ளிவிட்டாள்.கோதையின் அம்மா முத்துலட்சுமிக்கு நோக்கம் பணம் மட்டுமே.
இந்நிலையில்,பிப்ரவரி 2009 ஆம் மாதத்தில் சிவானந்தம் ஒரு காரியம் செய்தார்.அதன்படி,நாகராஜீக்கு மனித உரிமைக்கழகத்திலிருந்து ஒரு ஓலை வந்தது.அதில்,நாகராஜீம்,நாகராஜ் மனைவி கோதையும் சேர்ந்து,சிவானந்தத்தின் வீட்டிற்குப் போய் சிவானந்தத்தையும்,அவரது மனைவியையும் அடித்ததாகவும்,சொத்துக்களைக் கேட்டுக் கொடுமைப் படுத்தியதாகவும்,குறிப்பிட்ட நாளில் ஆஜராகவிட்டால்,சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என ஒரு மனித உரிமைக்கழகம் நாகராஜை மிரட்டியிருந்தது.
(அந்த மனித உரிமைக் கழகத்தின் உறுப்பினர்களுக்கும்,சிவானந்தத்திற்கும் ஒரு ஒப்பந்தம் ஆகியிருந்தது.அதன்படி,சிவானந்தத்தின் மகன் நாகராஜை வரவழைத்து,அவனிடமிருந்து ‘எனக்கு என்னுடைய அப்பா சிவானந்தத்தின் சொத்துக்கள் வேண்டாம்’ என எழுதி வாங்கிட வேண்டியது மனித உரிமைக்கழகத்தின் பொறுப்பு.அப்படி வாங்கிவிட்டால்,மனித உரிமைக் கழகத்திற்கு கணிசமான தொகையை வழங்க சிவானந்தம் முடிவு)
மனித உரிமைக் கழகத்தினரிடம் நாகராஜ் செல்ல, நாகராஜின் உயிர் நண்பர் ஒருவர் செய்த கலாட்டாவில் மனித உரிமைக் கழகத்தினர் இந்த வழக்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.

நவம்பர் 2008 ஆம் ஆண்டில் கோதையும் நாகராஜிம் பிரிந்தனர்.2009 மே மாதத்தில் நாகராஜின் அப்பா சிவானந்தம் அடுத்த காரியம் செய்தார்.நாகராஜீக்கு மனைவியோடு வாழ்வதற்கு தந்த சொந்த வீட்டின் பூட்டை உடைத்து நாகராஜின் உடமைகள்,சான்றிதழ்கள்,பொருட்களை வெளியே வீசினார்.கொட்டும் மழையில் அவை 4 மணி நேரம் அனைத்தும் நனைந்தன.நாகராஜை வலுக்கட்டாயமாக அவனது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றினார்.மறுநாள்,நாகராஜ்,தனது அப்பா சிவானந்தம் மீது போலீஸில் புகார் கொடுத்தான்.
போலீஸில் இந்த சாதாரண வழக்கை விசாரித்தவர்,ஒரு பயிற்சி எஸ்.ஐ.ஆவார்.இதனால்,சிவானந்தம் நான் வீடு தருகிறேன் என நடிக்க,சிவானந்தத்தின் மனைவி (நாகராஜின் அம்மா) இவனுக்கு நான் வீடு தர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தனர்.மறு நாள்,இருவரையும் வரச்சொல்லிவிட, இருவருமே போக வில்லை.வீடும் போனது.சிவானந்தம் இப்போது அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.வாடகை ரூ.700/-

ஏற்கனவே,சிவானந்தம் வெறும் 35 ஆண்டுகளில் ரூ.20,00,000/- சொத்து சேர்த்துள்ளவர்.ரூ.5,00,000/-க்கு வட்டிக்கு விட்டிருக்கிறார்.மாதம் ரூ.20,000/-வட்டி வந்துகொண்டிருக்கிறது.அது போதாமல்தான்,தனது ஒரே மகனை சொந்த வீட்டை விட்டு துரத்தி,மேலும்ரூ.700/-க்கு வருமானம் பார்த்துவருகிறார்.ஆக,நாகராஜின் மாமியார் முத்துலட்சுமிக்கும்,நாகராஜின் அப்பா சிவானந்தத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமே இல்லை.இருவருமே பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள்.
வீட்டை விட்டு நாகராஜை விரட்டிய சம்பவம்,ஒரே நாளில் கோதைக்குத் தெரிந்தது.மறுநாளே,கோதை,
‘என்ன வீடு போச்சா! என்னை அடிக்க உன் அப்பனையும் ஆத்தாளையும் அனுப்பினேல்ல .நீ இனிமே பிச்சைதாண்டா எடுப்பே’ என்று சாபம் விட்டாள்.
விடுவானா நாகராஜ், ‘ நானாவது இனிமேதான் பிச்சை எடுக்கப் போறேன்.நீ நம்ம பிள்ளைகளோட தினமும் கோயிலுக்குப் போய் பிச்சை எடுத்துதானடி சாப்பிட்டுக்கிட்டு இருக்கே.உன் ஆத்தா உன்னை பிச்சை எடுக்க விட்டுட்டாளா’ என்று பதிலடி கொடுத்ததும், கோதை போனை வைத்துவிட்டாள்.
தற்போது,மாதம் ஒருமுறை நாகராஜின் சொந்த ஊருக்கு வரும் கோதை, நாகராஜின் நட்பு வட்டம்,உறவினர் வட்டம் இருக்கும் வீடுகளுக்குப் போய் நாகராஜைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.மறுபுறம், நாகராஜைப் பற்றி, நாகராஜின் அப்பாவான சிவானந்தம் தன்னுடைய பங்கிற்கு நாகராஜின் நட்பு வட்டத்திடம் இழிவாகப்பேசிக்கொண்டே இருக்கிறார்.நாகராஜ் இந்த இரண்டையும் முறியடிக்காமல், தனது மனைவியே, தனது அப்பாவே என்ற பாசத்தில் இவர்களுக்கு எதிராக “தாக்குதல் நடவடிக்கை” எடுக்காமல், ‘தற்காப்பு நடவடிக்கை’எடுத்துக்கொண்டே இருக்கிறான்.

தவிர, நாகராஜின் ஆத்ம நண்பர்கள் பலர்,காவல்துறை,கட்டப்பஞ்சாயத்து, ரவுடி,அரசியல் என எல்லாத் துறைகளிலும் இருக்கின்றனர்.அனைவருமே,நாகராஜின் மீதான பாசத்தால், கோதைக்கு எதிராக டைவர்ஸ் வழக்குப் போடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தனர்.ஆனால்,நாகராஜ் அதைச் செய்ய வில்லை.
கோதையைப் பற்றியும்,கோதையின் உறவினர்களைப் பற்றியும்,கோதையின் கிராமத்தைப் பற்றியும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறான் நாகராஜ்.எனவே,டைவர்ஸ் கேஸ் போட வில்லை.

இந்தச் சம்பவத்தில் அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.நாகராஜின் முன் அனுமதி பெற்ற பின்னரே இந்த சம்பவத்தை நாம் ஆன்மீகக்கடலில் பிரசுரிக்கிறோம்.இதில்,நாகராஜ் என்ன செய்திருக்க வேண்டும்? வாசகர்களே! பதில் கூறுங்கள்.



மூட்டுவலி,வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும் வாயு முத்திரை

உடலின் அளவற்ற கொழுப்புச்சத்தினைக் கரைக்கும் சூரிய முத்திரை

மன அமைதியைத் தரும்,உடல் அமைதியைத் தரும் ப்ருத்வி முத்திரை

கண் பிரச்னைகள்,நரம்புப் பிரச்னைகளை நீக்கும்,உடலின் சகலபாகங்களையும் சுறுசுறுப்பாக்கும் ப்ரான் முத்திரை

சாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படுத்தினால் போதும்.ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

தலைவலி,காய்ச்சலைக்குணப்படுத்தும் லிங்க முத்திரை

ரத்தத்தை சுத்திகரிக்கும்,சகல வித சருமநோய்களையும் தீர்க்கும் ஜால் முத்திரை

மன அழுத்தம் தீரவும்,ஆழ்ந்த கவனத்தை தரும் தியான முத்திரை

ஆஸ்தமா,சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் இருதய முத்திரை

ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நன்மை


காது சார்ந்த பிரச்னைகளை இந்த முத்திரை தீர்க்கிறது என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.
நன்றி:எனது வகுப்புத் தோழன் கலசலிங்கம்,வளைகுடா

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

Tuesday, July 15, 2008
வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!
வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்பொழுதே அவர்கள் ஏசுவின் நற்செய்தியை விசுவசிப்பவர்களாக மட்டுமல்ல, உலகளாவிய மதமாற்ற பிரசாரத்திற்குத் துணை போகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பின் வலைத்தளம் தெளிவாகவே அறிவிக்கிறது.
Vodaphone (முன்னாள் Hutch) வாடிக்கையாளர் முகவரிகளை இந்த அமைப்புக்கு அங்குள்ள கிறிஸ்தவ உயர் அதிகாரியே கடத்தியிருக்கிறார்.
அகில உலக புத்தசபை இந்த அமைப்பைப் பற்றி அபாய அறிவிப்பு அளித்துள்ளது.
ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.
நன்றி:www.tamilhindu.com

ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

சின்னக்கருப்பன்


சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

**

எனக்கு சுவாமி நித்யானந்தர் போன்றவர்களிடம் எந்த வித ஈர்ப்பும் இல்லை. எனக்கு தியானம் செய்வதோ, யோகா செய்வதோ விருப்பமான வேலையும் அல்ல, ஆர்வமும் இல்லை. ஆனால், குருவி ஜோஸ்யக்காரர்களிடம் ஆரம்பித்து சைகோதெரபிஸ்டுகள் என்ற நவீன குருவிஜோஸ்யக்காரர்கள் வரை செல்லும் மனிதர்களுக்கு அவர்களது மன அழுத்தங்கள், மன உளைச்சல்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையோ அல்லது தற்காலிக மன அமைதியோ தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். யாருக்குத்தான் சொந்த வாழ்க்கையில் துன்பங்கள் இல்லை?

டாக்டர் ஹவுஸ் என்னும் பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் மருத்துவ மேதையாக வரும் ஹவுஸிடம் ஒருவர் ”மதம் ஒரு அபின்” என்று சொல்வார். அதற்கு ஹவுஸ் “இல்லை. மதம் என்பது ஒரு பிளஸீபோ” (placebo) என்று சொல்வார். மருத்துவ பரிசோதனைகளில் placebo என்ற ஒரு பொருளை பரிசோதனையை கட்டுப்படுத்தும் பொருளாக உபயோகிப்பார்கள். நூறு பேர்களை வைத்து ஒரு மருந்து வேலை செய்கிறதா என்று அறிய, 50 பேருக்கு பரிசோதிக்கப்படும் மருந்தை கொடுப்பார்கள். மீத 50 பேருக்கு அதே வடிவத்தில் ருசியில் இருக்கும் வெறும் சர்க்கரை மாத்திரை கொடுப்பார்கள். எந்த அளவுக்கு பிளசீபோவை விட உண்மையான மருந்து வேலை செய்கிறது என்று பரிசோதிப்பார்கள். உண்மையான மருந்து கொடுக்கப்பட்ட 50 பேர்களில் 20 பேருக்கு குணமாகலாம். சர்க்கரை மாத்திரை கொடுக்கப்பட்ட 50 பேர்களில் 5 பேர் குணமாகலாம். ஆகவே மருந்து பிளசீபோவை விட அதிகமாக 15 பேர்களை குணப்படுத்தியிருக்கிறது என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.

கேள்வி ஏன் வெறும் சர்க்கரை மாத்திரையில் 50 பேர்களில் 5 பேர் குணமானார்கள் என்பதுதான். இதற்கு விடையை இன்னும் மருத்துவம் கண்டுபிடிக்கவில்லை.

பலருக்கு இதில் உண்மையான பலன் இருக்கிறது. தியானம் மூலமாக பலன் இருக்கிறது என்று மேலை மருத்துவம் சொல்கிறது. யோகா செய்வது மூலம் பலன் இருக்கிறது என்று மேலை மருத்துவம் சொல்கிறது. ஆனால், ஒரு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட மருந்தை சாப்பிடாதே, வெறும் யோகா மட்டும் செய் என்று யாரேனும் சொன்னால், ஆபத்தான அறிவுரை என்று விலகிவிட வேண்டும். ஏசுவை கும்பிடு மருந்து சாப்பிடாதே என்று போதிக்கப்பட்டு இறந்து போன குழந்தைகள் அமெரிக்காவிலேயே நிறைய உண்டு. இந்தியாவில் சொல்லவே வேண்டாம். மதம் என்பதும் ஆன்மீகம் என்பதும் என்னைப்பொறுத்தமட்டிலும் பிளஸீபோதான். அதற்கு மேல் அதற்கு மதிப்பு கொடுப்பது குருவி ஜோஸ்யத்தையே மட்டுமே நம்புவேன் என்று சொல்வது போன்றது. குருவி ஜோஸ்யம் பார்ப்பவர்களுக்குக் கூட அது ஒரு தற்காலிக மன அமைதிக்கான விஷயம் என்று தெரியும் என்று நினைக்கிறேன். தைமாசத்துக்கு பின்னா உன் வாழ்வில் ஒளி என்று சொன்னால், தைமாசம் வரைக்கும் உன் கஷ்டங்களை பொறுத்துக்கொள், அப்புறம் ? பழகிப்போய்விடும் என்று பொருள்.இது மாதிரி ஒரு மன நிம்மதி. இவையெல்லாம் நிச்சயமான நல்ல விஷயங்கள். ஒவ்வொரு ஏழைக்கும் நவீன குருவி ஜோஸ்யக்காரர்களான மனநல மருத்துவர்களிடம் ஏராளமான பணம் கொடுத்து போக முடியாது. ஆகவே குருவி ஜோஸ்யமும் கிளி ஜோஸ்யமும் தேவையான ஒன்று. ஆனால், குருவி ஜோஸ்யம்தான் சிறப்பானது, இல்லை கிளி ஜோஸ்யம்தான் சிறப்பானது என்று பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு போனாலும், இவைகளுக்கு ஆதரவாக சில ஆட்டோ, கார், கடைகண்ணிகளை கொளுத்துவது தேவையற்றது. ஆனால் என்னவோ, இப்படித்தான் தன்னுடைய குருவி ஜோஸ்யமே பெரியது என்று மனநல மருத்துவர்களும், மத நம்பிக்கைக்காரர்களும் தெருக்களில் இறங்கி அடித்துக்கொள்கிறார்கள்.தங்களது குருவி ஜோஸ்யப் பிரச்னைகள் வெளியில் வரக்கூடாது என்று டாவின்ஸி புத்தகங்களையும், தஸ்லிமா கட்டுரைகளையும் தடை செய்து கலவரத்தில் இறங்குகிறார்கள்.

வெகுவேகமாக நவீனமயமாகி வரும் இந்தியாவில் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது அதிகரித்துவருகிறது.கடுமையாக படித்து சிறப்பான மதிப்பெண்கள் வாங்க தீவிர போட்டி. பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பு. கடுமையாக படித்து சிறப்பாக மதிப்பெண் இருந்தாலும் வேலை கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை. குடும்பச் சூழ்நிலை. வீட்டில் எவராவது கடும் நோய்வாய்ப்பட்டால், அவருக்கு சரியான மருத்துவ உதவி கொடுக்க முடியாத நிலை. எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் நோய் என்று ஒருவருக்கு வந்துவிட்டால், அவர்களிடம் பணம் பிடுங்கும் மருத்துவர்களின் அட்டூழியம். மோசமான மருத்துவ உதவிகள். தொடர்ந்து விபத்துகள் நடக்கும் சாலைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தினால் உருவாகும் மன அழுத்தம். ரவுடிகளின் தொல்லைகள். அரசியல்வாதிகளின் அடாவடிகள். பத்திரிக்கைகளின் இழி போக்கு. தொலைக்காட்சிகள் உருவாக்கும் சீரியல்களால் மனநிலை பாதிக்கப்படும் குடும்பத்தினர். இரவுகளில் இவ்வாறு மன நிலை பாதிக்கப்பட்டவர்களின் நவீன கிளிஜோஸ்யமாக என்னுடைய கடவுளை வாங்கு என்று கடவுள்களை விற்கும் கூட்டத்தினர். திசையெங்கும் நீ பாவி நீ பாவி என்று முழங்கும் மதக்காரர்கள். திருமணம் புரிவதற்கு சரியான பெண் கிடைக்காத நிலை. திருமணம் செய்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கை. அதிகமாக சம்பளம் வாங்கும் மகன்களாலும் மகள்களாலும் இழிவு படுத்தப்படும் பெற்றோர்கள்.எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் ஒரு வீடு வாங்கமுடியாத அளவுக்கு மோசமான நகர விலைவாசி. இரண்டு அறை உள்ள வீட்டில் ஒரு பக்க அறைக்குள் சத்தம்போடாமல் முயங்கவேண்டிய சூழ்நிலை. இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கும் மனிதர்கள் மீது பரிதாபம் வராமல் கோபமா வரும்? எனக்குத் தெரிந்து என் நண்பர் ஒருவர், பெந்தகொஸ்தே, ஜக்கி வாசுதேவ், காஞ்சி சங்கராச்சாரியார், ஏதோ ஒரு இஸ்லாமிய சூஃபி, ஜோலோஃப்ட் எல்லோரையும் ஒரு வருடத்தில் முயற்சித்துப் பார்த்துவிட்டார். இவருக்கு ஆன்மீக தேடல் இல்லை. மன அழுத்தம்தான் உண்டு.அவரது பிரச்னைகளை நான் அறிவேன். தன்னுடைய பிரச்னைகளை காது கொடுத்து கேட்க ஒரு இடம் வேண்டும் என்றே என்னிடம் சொன்னார்.

ஆகவே ஏசு மூலமாகவோ, நித்யானந்தர் மூலமாகவோ, குருவி ஜோஸ்யம் மூலமாகவோ தற்காலிக மன நிம்மதியோ அல்லது வேறு எதுவுமோ கிடைத்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் சொந்த மூளையை அடகு வைத்துவிடாதீர்கள். உங்களுடைய நம்பும் குருவி ஜோஸ்யத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று கலவரத்தில் இறங்கிவிடாதீர்கள்.

**

குருவி ஜோஸ்யக்காரர்கள் போட்டிகளால் தெருவுக்கு வந்து அடித்துக்கொள்ளும்போது அது எல்லோருடைய பிரச்னையும் ஆகிவிடுகிறது. நிதி(!)யானந்தர் பெங்களூரில் நடத்தும் ஆஸிரமத்தின் நிலத்தை அபகரிக்க மாறன் குமபல் மாபியா கும்பலுடன் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று சண்டே மிட்டே பத்திரிக்கை செய்தி அளித்திருக்கிறது.

http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm

"The land dispute has nothing to do with the news we aired on our channel," said Vijayakumar, senior vice president of Sun Group and in- charge of Karnataka operations.

"We went after the swami to expose him like any other responsible media group and our sting operation is genuine," he added.

எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இப்படி ஒரு பேட்டி.

சுவாமி நித்யானந்தர் என்ன சொன்னார், அது படி நடந்தாரா என்று கேட்கிறார்கள். அவர் பிரம்மச்சாரி என்று சொல்லிவிட்டு அடிக்கும் காமலீலையைப் பார் என்று நண்பர்கள் என்னிடம் யூடியூப் இணைப்பு அனுப்பி வைத்தார்கள். எனக்கு அதில் ஆர்வமில்லை. மற்றவர்களின் படுக்கை அறைக்குள் நான் மூக்கை நுழைக்க மாட்டேன். அது அருவருப்பானது. என்னுடைய படுக்கை அறைக்குள் யாரோ மூக்கை நுழைக்கிறார்கள் எனப்து போன்ற அருவருப்பை அடைந்தேன். பதினைந்து வயதில் சினிமா பார்க்கப்போனபோது என் கண்கள் செல்லாத இடங்களுக்கு தமிழ் சினிமாவின் கேமரா குளோஸப் அழைத்துச் சென்றபோது அடைந்த வெட்க உணர்வு எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதே போன்றுதான் இன்று சன் டிவியும் தினகரன் தினசரி பத்திரிக்கையும் குடும்பத்தினர் படிக்கும் பத்திரிக்கையில், அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சியில் அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் அவர்களின் முன்னே ஒரு நபரின் படுக்கை அறை காட்சியை காட்டி பார்ப்பவர்களை அசிங்கப்படுத்துகிறது.

இதே கேள்வியை திருப்பி சன் டிவி குழும சொந்தக்காரர்களிடம் கேட்க எவ்வளவு நேரமாகும்? சன் டிவி குழும சொந்தக்காரர்களான கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும், மற்ற இந்த ஊடக குழும சொந்தக்காரர்களும் அரசாங்கத்திடம் பதிந்து வைத்துள்ளபடி, அவரவர் மனைவிகளிடம் மட்டும்தான் உடலுறவு கொள்கிறார்களா என்று அறிய மற்றவர்கள் விரும்பலாமா? அதற்காக அவர்களது படுக்கையறையில் வீடியோ கேமரா பொறுத்த அனுமதி அளிப்பார்களா என்று கேட்க எவ்வளவு நேரமாகும்?

நடந்திருப்பது ஊடக ரவுடித்தனம்.பயங்கரவாதம். இது ஒரு ஒழுக்க போலீஸ்தனத்தின் தொடர்ச்சி.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராஜ்மோகன் உன்னிதான் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தபோது இஸ்லாமிய குண்டர்களும் கம்யூனிஸ்டு குண்டர்களும் உள்ளே புகுந்து அவர்களை வெளியே இழுத்து வந்து அவமானப்படுத்தினர். ஏற்கெனவே செட்டப் செய்துவைத்திருந்த மீடியா குண்டர்களும் வந்து அதனை படம் பிடித்து தங்களது ஒழுக்க போலீஸ்தனத்தை பறைசாற்றினர்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் ராமசந்திரா ஷிராஸ் தன்னுடைய வீட்டுக்குள் ஒரு ரிக்‌ஷா இழுப்பவருடன் உறவு வைத்திருந்ததை வீடியோ படம் எடுத்து பிரச்சாரம் செய்தனர். அவரை அந்த பல்கலைக்கழகம் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது.

என் டி திவாரி தன்னுடைய படுக்கையறைக்குள் ஒரு மேஜரான பெண்ணுடன் உடலுறவு கொண்டிருந்ததை படம் பிடித்து தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்ப்பட்டார்.

இவை அனைத்து வயதுக்கு வந்தவர்கள் தாங்களாக விரும்பி செய்த பாலுறவு. இதில் யாரும் யாரையும் பலாத்காரம் செய்யவும் இல்லை, இதில் ஈடுபட்டவர்கள் தானாக முடிவெடுக்க இயலாத சிறுவர்களும் இல்லை.

இந்த ஒழுக்கபோலீஸ்தனத்தின் பின்னே இருப்பது தொலைக்காட்சிகள், பத்திரிக்கயாளர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள், கம்யூனிஸ தீவிரவாதிகள். ஆனால், இதே கும்பல்களின் உள்ளே நடக்கும் இவர்களது ஒழுக்க ஈனத்தனத்துக்கு ஒரு விளம்பரமும் இருக்காது.

மாவோயிஸ்டுகளிலிருந்து தப்பித்து வெளியே வந்த ஒரு சபிதா முண்டா என்ற பெண், தான் சீனியர் மாவோயிஸ்டு கேடர்களால பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். நமது முற்போக்கு ஊடகங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. http://www.deccanherald.com/content/52385/we-were-sexually-exploited-comrades.html

பல கிறிஸ்துவ பாதிரியார்கள் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி வந்து பலாத்காரம் செய்து காணாமல் போக்கிய செய்தி. நடந்திருப்பது, கன்யாகுமரி, முகப்பேர் என்று நம் ஊர்களில்தான்.

http://www.e-pao.net/GP.asp?src=14..130210.feb10

இது நடந்திருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் நடந்தால் நாங்கள் அதனை பற்றி பேசுவோம் என்று சால்ஜாப்பு சொல்லலாம் எனப்தால் இந்த செய்தி. வெறுமே priest என்று கூகுள் செய்தியில் தேடிப்பாருங்கள் வரும் செய்தியெல்லாம் கிறிஸ்துவ பாதிரியார்கள் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்ட செய்தியாகத்தான் இருக்கும்.

இவைகளெல்லாம் தமிழ்நாட்டு உண்மை விளம்பிகளின் கண்களில் மாட்டிக்கொள்ளாமல் போவதன் மர்மம் என்ன?

வயதுக்கு வந்த இருவர் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் இருப்பதை வீடியோ படம் எடுத்து வெளியிட்டு அசிங்கப்பட்டு அசிங்கப்படுத்திக்கொள்ளும் இந்த ஊடகங்கள், பாலுறவு பலாத்காரம், சிறுவர் சிறுமியர் வல்லுறவை ஏன் கண்டுகொள்வதில்லை?

நித்யானந்தர் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தார் அல்லது ஒரு விருப்பப்படாத பெண்ணை பலாத்காரம் செய்தார் என்றால் கைது செய்யுங்கள். அரசாங்க விதிகளின் படி தண்டனை கொடுங்கள். அதுவா நடந்துள்ளது?

.**

இதே போல ஒரு கிறிஸ்துவ பாதிரியார் ஒரு வயதுக்கு வந்த பெண்ணுடன் உறவு கொண்டார் என்றும் கூட இந்த ஊடகங்கள் எழுத முடியாது, வீடியோ காட்டமுடியாது. ஏனெனில்,அவர்களது பிரம்மச்சரியத்தை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கவும் இல்லை, அப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்திய சட்டங்கள் கோரவும் இல்லை. இன்றும்கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கைது செய்யப்படும் பாதிரியார்கள் சிறுவர்களை வல்லுறவு கொண்டார்கள் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்படுகிறார்களே அன்றி, அவர்கள் வயதுக்கு வந்த பெண்ணுடன் உறவு கொண்டதற்காக அல்ல. கத்தோலிக்க நிறுவனத்துக்கும், அதன் பாதிரியார்களுக்கும் உள்ள உடன்பாடு அது. (சொல்லப்போனால், மணம் செய்துகொள்ளக்கூடாது என்று என்னை கத்தோலிக்க நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது அது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூட ஒரு பாதிரியார் கத்தோலிக்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கலாம். அது ஒரு nondiscrimination சட்டத்தின் கீழ் ஒப்புகொள்ளப்படலாம்)

நித்யானந்தர் தான் பிரம்மச்சாரியாகத்தான் இருக்கப்போகிறேன். நான் பெண்களுடன் உடலுறவு கொள்ளமாட்டேன் என்று இந்திய அரசாங்கத்திடமோ கருணாநிதி நடத்தும் தமிழ்நாட்டு அரசாஙக்த்திடமோ எழுதிக்கொடுத்தாரா? இல்லை. அவரிடம் கோரப்பட்டதா? இல்லை. ஆன்மீகத்தில் உள்ளவர் பெண்ணுறவு இல்லாதவராக இருக்கவேண்டும் என்று இந்து மதம் கோருகிறதா? இல்லை. ஆனால், நித்யானந்தரின் சீடர்கள், பக்தர்கள் புண்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர் அவர்களிடம் தான் ஒரு பிரம்மச்சாரி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். ஆகவே அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதற்காக,அரசாங்கத்துக்கு அவரை கைது செய்யவோ, அவரை குற்றவாளியாக காட்ட சன் குழுமத்துக்கோ உரிமை உள்ளதா? நிச்சயம் இல்லை.

அவர் இந்திய நாட்டின் குடிமகன். அவருக்கு right to privacy உண்டு. அவரது அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்க எந்த ஊடகத்துக்கும் எந்த அரசாங்கத்துக்கும் அனுமதி இல்லை. invasion of privacy என்று அவர் சன் டிவி குழுமத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

சன் டிவி குழுமத்தின் மீது புகார் கொடுத்த பின்னால், எந்த லட்சணத்தில் கருணாநிதி நித்யானந்தரை குற்றவாளி என்று அனுமானம் செய்து அவரை கேவலமாக பேச முடியும்? இது contempt of court என்று புகார் செய்யப்படக்கூடுமா? குற்றவாளியா இல்லையா என்று கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும். எந்த விதியின் கீழ் அவர் என்ன குற்றம் செய்தார் என்று அரசாங்கம் சொல்லவேண்டும்.

ஆகவே, இந்த ஊடக ரவுடித்தனம், பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். இங்கே தயாநிதி மாறன் கையிலும், கலாநிதி மாறன் கையிலும் சன் டிவி குழுமம் ஒரு ரவுடித்தனத்துக்கான கருவி போல பயன்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு பத்திரிக்கா சுதந்திரம் என்ற பாதுகாப்பு வேறு. ஏற்கெனவே தராதரம் இல்லாமல் சிறுபிள்ளைகள் பார்க்கும் நேரத்தில் தொலைக்காட்சியில் பிட்டு படம் ஓட விட்ட சன் டிவியை புறக்கணிக்கப்போவதாக பலர் என்னிடம் சொல்லிவருகிறார்கள். அமெரிக்காவில் பலர் சன் டிவியை நிறுத்திவிட்டு ஜெயா டிவிக்கு போவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் ஒட்டுமொத்தமாக சன் டிவி தினகரனை புறக்கணிக்க வேண்டும். அதுவே இது போன்ற ஊடக பயங்கரவாதிகளுக்கு பாடமாக அமையும்.

இதனை படிக்கும் வாசகர்களே, தெரிந்தே ஒரு ஊடக ரவுடிகளுக்கு துணை போகாதீர்கள். நீங்கள் சன் குழுமத்தின் சீரியல்களை, ஆபாச பத்திரிக்கைகளை பார்க்காவிட்டால் ஒரு குடியும் முழுகிவிடாது. புறக்கணியுங்கள்.

*

தஸ்லிமா நஸ்ரின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டது ஒரு கன்னட பத்திரிக்கை.

பத்திரிக்கை கட்டுரை காரணமாக கர்னாடகத்தில் கலவரம் வெடித்தது. கர்னாடக அரசு உடனே தஸ்லிமா கட்டுரையை வெளியிட்ட கன்னட பிரபா ஆசிரியரையும், கலவரத்தை தூண்டிவிட்ட சியாசட் உருது பத்திரிக்கை ஆசிரியரையும் கைது செய்துள்ளது.

இங்கே அது போல நடந்திருக்கிறதா?

எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு போலி கருத்துக் கணிப்பை வெளியிட்டு மதுரையில் கலவரம் வெடிக்க காரணமாகி மூன்று பேர் இறப்பதற்கு தினகரன், சன் டிவியின் செய்தி காரணமாக இருந்தது. கலாநிதி மாறன் கைது செய்யப்பட்டாரா?

இன்று நித்யானந்தர் பற்றிய படுக்கையறை காட்சியை வெளியிட்டு அதே போல கலவரத்தை உருவாக்கியிருக்கிறது சன் டிவி குழுமம். இன்றாவது கலாநிதி மாறன் கைது செய்யப்படுவாரா? சன் குழுமம் தடை செய்யப்படுமா?

ஆபாச காட்சிகளை குழந்தைகள் பார்க்கும் நேரத்தில் ஒளிபரப்பிய ஒரு விஷயத்துக்காகவே சன் குழுமத்தின் கலாநிதி மாறன் கைது செய்யப்படலாம்.

ஆனால் அப்படி இங்கே அரச தர்மம் காக்கப்படுமா என்பது அரசின் கையில் உள்ளது.




Copyright:thinnai.com நன்றி:www.tamilhindu.com

உங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ரூ.3000/-மட்டுமே.

இறைபணியில் ஈடுபட ஒரு அரிய வாய்ப்பு

கேட்பாரற்றுக்கிடக்கும் கோவில்கள் ஒருபுறம்,கேட்பார் இருந்தும் கவனிப்பார் இல்லாமல் இருக்கும் கோவில்கள் மறுபுறம்.இரண்டும் இல்லாமல்,பெயருக்கு ஓர் அர்ச்சகர் மட்டும் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் ஏராளம்.

வருமானம் இல்லாவிட்டாலும்,அதே கோவில்களில் அர்ச்சகர் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.ஒரே காரணம் தலைமுறை தலைமுறையாக தங்கள் முன்னோர்கள் அர்ச்சித்துவந்த கோவில் என்பது தான்.

அர்ப்பணிப்பு(டெடிக்கேட்டடு) உணர்வோடு செயல்படும் அர்ச்சகர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை தி.நகரில் உள்ள மகாலக்ஷ்மி!

இவரின் முயற்சியால்,இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்பு மற்றும் உபயதாரர்களின் பங்களிப்போடு இதுவரை 14 கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இன்னும் 42 கோவில்களில் குடமுழுக்கு நடந்துகொண்டிருக்கின்றன.

இவர் அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அவர் கூறியது:
ஏராளமான கோவில்களில்,அர்ச்சகர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வருவாய் இருப்பதில்லை.இருந்தும்,தெய்வம் தங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இறைபணி ஆற்றிவருகின்றனர்.அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில்,தமிழகம் முழுவதும்,முதல் கட்டமாக 30 கோவில்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இங்கு உள்ள அர்ச்சகர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள்,ஆளுக்கு ஒரு அர்ச்சகர் என்ற ரீதியில் தத்தெடுத்துக்கொள்ளலாம்.சம்பளமாக மாதம் ரூ.1500/-,பத்து கிலோ எண்ணெய், 15 கிலோ அரிசி,,300 ரூபாய்க்கு பூ என மாதம் சுமார் 3,000 ரூபாய்க்குள் அடங்கும் செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம்.
சைவம்,வைணவம்,சாக்தம் என அனைத்துக் கொவில்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

யாரும் நேரடியாக எங்களிடம் பணம் தர வேண்டியதில்லை.சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே சென்று, நிலைமையை நேரில் பார்த்து, அதன்பிறகு, அர்ச்சகர்களிடமே அந்தத் தொகையை வழங்கினால் போதுமானது.இதன்மூலம், அந்தக் கோவில்களில் ஒரு கால பூஜையாவது தடைபடாமல் நடப்பது நிச்சயிக்கப்படும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044-2815 2533, 98400 53289 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர் பக்கம்4, நாள் 28.2.2010.
எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்களில் மாதம் ரூ.3000/- செலவழிக்க முடியும் எனில் இந்த மிகவும் புண்ணியமான காரியத்தைச் செய்ய உடனே துவங்குங்கள்.இன்று, நம்மில் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது முன்வினையால் ஏதாவது ஒரு பெரிய கஷ்டத்தோடுதான் நமது வாழ்க்கைப்பயணம் செல்கிறது. நம்மில் எத்தனைபேருக்கு குழந்தையில்லை; நம்மில் எத்தனை பேருக்கு தீராத நோய் இருக்கிறது? இவையெல்லாம் ஒரேயடியாகத் தீர இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி ஏதாவது ஒரு கோவிலை நீங்கள் பரமாரிக்க முடியும்.புண்ணியம் சேர்ப்போம்; நிம்மதியாக வாழ்வோம்.

சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்


சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்



சீனாவில் நேற்றல்ல இன்றல்ல பல வருடங்களாகவே இணையதளம்
-களுக்கு கொஞ்சம் அதிகமான கிடுக்குபிடி தான். ஏன் என்ற
பின்னனி கொஞ்சம் வித்தியாசமானதுதான் அதாவது சீனாவின் எந்த
அரசாங்க விஷயங்களும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக
தான் இத்தனை செக்யூரிட்டி.முதலில் தடை செய்த இணையதளம்
பிளாக்கர் இதன் வழியாக பல தகவல் செல்லும் என்பதால் இது
தடைசெய்யப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாம்
பயன்படுத்தும் பல இணையதளங்கள் என்று யூடியுப் வரை
சென்றுள்ளது.நாம் பயன்படுத்தும் எந்த சோசியல் நெட்வொர்க்கையும்
சீனாவில் பயன்படுத்த முடியாது.எங்கள் நாட்டு இளைஞர்கள் யாரும்
தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் ஆபாச
இணைதளங்கள் சீனாவில் வைத்திருக்கும் நபரை நீங்கள் காட்டி
கொடுத்தால் 1 இலட்சம் வரை பரிசு என்று அறிவித்து 5394 பேரை
மொத்தமாக பிடித்தது. இதன் பின்னால் ஒரு இராஜதந்திரமே
உள்ளது எப்படி என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டிலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருக்கும் நபர் கண்டிப்பாக பணத்துக்காக
எதையும் செய்வார் இப்படிபட்ட நபர்கள் பெரும்பாலும் ஹக்கர் ஆக
இருக்க வாய்ப்பு அதிகம் அதனால் இவர்களை சரியாக கண்ணி
வைத்து பிடித்தது சீன அரசு.
கூகுள் சீனாவை விட்டு வெளியேறியது என்ற செய்தி நாம் படித்தது
தான் ஆனால் ஏன் வெளியேறியது என்ற காரணம் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கூகுள் தேடுபொறி வந்து
விட்டது. சீனாவில் பயன்படுத்தப்படும் கூகுள் தேடு பொறியில்
பிரைன் வாஸ் ( Brain wash ) என்ற சொல்லை
பயன்படுத்தினால் தேடுதல் முடிவு காட்டக்கூடாது அதுமட்டுமா
டெமாக்ரசி மூமெண்ட் (democracy movement) என்ற சொல்
முதல் ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது சீனஅரசு இந்த வலைப்பூவில் மேலே
காட்டப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் காணப்படும் இணைய
தளங்களை காட்டக்கூடாது என்று சொன்னால் ஆரம்பத்தில் சரி சரி
என்று சொல்லி கூகுள் ஏற்று கொண்டது அதன் பின் தான்
தெரிந்தது இவர்கள் கொடுக்கும் வார்த்தையை வைத்து ஃபில்ட்டர்
(Filter) செய்தபின் ஒரு இணையதளத்தையும் நம்மால்
காட்டமுடியாது என்று தெரிந்து கொஞ்சம் வார்த்தையை
குறைத்திருக்கலாம் என்று நிபுனர்கள் கூறினாலும் எதையும் எந்த
வார்த்தையையும் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக
கூறிவிட்டது அதன் பின் தான் கூகிள் வெளியே வந்தது.
ஒரு நாட்டின் வருங்கால முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்கள்
எந்த விதத்திலும் தவறாக சென்றுவிடகூடாது என்பதிலும் பயிர்க்கு
பாதுகாப்பு வேலி நாட்டின் பாதுகாப்புக்கு இணையவேலி என்ற
புதிய தொலைநோக்கு பார்வையுடன் களம் இறங்கியுள்ளது
சீனஅரசு அதுமட்டுமல்ல இணையதள செக்யூரிட்டி பணிக்காக
மட்டும் பல இலட்சம் பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
நம் நாட்டில் இந்த அளவு செய்யாவிட்டாலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
நாட்டின் பல குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு நாட்டின்
பாதுகாப்பு துறையில் இருக்கும் அதிகாரிகள் பார்வைக்கு இந்த
பதிவு செல்லுமா என்று தெரியவில்லை ஆனால் கூகுள் போன்ற
தேடுபொறிகள் ஆபாச இணையதளங்ளை காட்டுவதை நிறுத்தி
விட்டால் குற்றம் பெருமளவு குறையும். இந்தியா போன்ற ஒரு
வளரும் வல்லரசு நாட்டிற்கு தேவையானது இணையபாதுகாப்பு
என்பது நம் எண்ணம்.
நன்றி: http://winmani.wordpress.com/2010/01/15/chin/

Monday, March 15, 2010

சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்

சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்

1.நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய செயல் உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள்.

2.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள்.உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும்.

3.கடந்த கால தோல்விகள் பயமுறுத்துமானால், நிகழ்காலமும் வருங்காலமும் தோல்வியாகிவிடும்.அதனால்,கடந்த காலத்தோல்விகளை வெல்ல வேண்டும்.

4.புண்பட நேரும்போது பொறுமையுடன் இருங்கள்.தகுந்த நேரத்தில் உணர்வுகளை,அமைதியாக புரியும்படி வெளிப்படுத்தி அதை சரிப்படுத்துங்கள்.

5.பணத்திற்காக, லாபத்திற்காகப் பழகுபவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது.அவர்களை விட்டு நாசூக்காக (அவர்களுக்குத் தெரியாமல்) விலகி விடுங்கள்.

6.நம் மனதில் உள்ள குற்ற உணர்வுகள் நம் மகிழ்ச்சியைப் பாதிக்கும்.நாம் செய்துவிட்ட குற்றங்களுக்காக மனம் வருந்திப் பயனில்லை.அதிலிருந்து மீள முயற்சி செய்யுங்கள்.

7.கவலைகள் நம்முடைய உடலில் நோய்களை மட்டும் உருவாக்குவதில்லை.நமது வயதையும் மிகுதிப்படுத்திக் காட்டுகிறது.

8.ஆணவம் மிக்க மனிதனே பல இடங்களில் அடிமைப் பட்டுப் போகிறான்.

9.உங்களைப் பற்றி உண்மை அல்லாத ஒன்றை யாராவது கூறினால்,அதற்காக கோபப் படாதீர்கள்.ஒருவேளை அது உண்மையானதாக இருப்பின்,உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

10.கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டால்,அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டுமென காத்திருக்காமல், நீங்களே முதலில் சென்று பேச்சைத் தொடங்குங்கள்.

11.நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் அதற்காக மற்றவர்களிடம் வாதாடாதீர்கள்.விவாதத்தை வெல்ல சிறந்த வழி அதைத் தவிர்ப்பதுதான்.

12.உங்கள் நெருங்கிய நண்பரைப் பற்றி பிறர் ஏதேனும் கூறினால்,அதை அப்படியே நம்பிவிடாமல் நேரடியாகப்பேசி உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் நட்பில் பிளவு ஏற்பட்டுவிடும்.

13.கருத்துவேறுபாடு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. அது மனித உறவுகளில் ஒரு அங்கம்.இருப்பினும், “நீ எப்போதும் அப்படித்தான்.உன்னை மாற்றவே முடியாது” என்பதுபோன்ற கடுஞ்சொற்களை பயன்படுத்தாதீர்கள்.(அது நிரந்தரப் பிரிவினையை உருவாக்கும்)

14.ஒருவனுடைய சிந்தனை,சொல்,செயல்,பழக்கவழக்கங்கள் தீயதாகவும், நய வஞ்சகமாகவும் இருக்குமானால் அவனிடமிருந்து தொடக்கத்திலிருந்தே விலகி விடுங்கள்.அல்லது அவனைப் புரிந்துகொண்ட உடனே விலகிவிடுங்கள்.

நன்றி:லட்சுமி இரவு உணவகம்.
நன்றி:தமிழ் லெமூரியா பக்கம் 59, 15.11.2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்!

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்!
-


ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை :

* அவநம்பிக்கை

* அவசரம்

* அமைதியின்மை

அவநம்பிக்கை

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது.

இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மேலும், இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பார்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரமாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்புக்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் "தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?" என்று தோண்டிப் பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால், நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை

மனத்தை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்துக்காவது மனத்தை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.

நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனத்தை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மன சக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.


thanks:::http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesanarticle230210.asp