Monday, January 11, 2021

தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

 



டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.

மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.

‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.

ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.

மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது சிவாய நம மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!


W.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகள்

 



சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் எவராக இருந்தாலும் , மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி,அங்கிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் வத்ராப் நோக்கிப் பயணிக்க வேண்டும்.வத்ராப் நோக்கிப் பயணிக்கையில் கோபாலபுரத்தைக் கடந்ததும்,ஒரு சாலை பிரிந்து தெற்கே செல்லும்.அந்த சாலை W.புதுப்பட்டி என்னும் கிராமத்திற்குச் செல்லுகிறது.இங்கே அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெரு இருக்கிறது.இந்தத் தெருவின் நீட்சியாக புதுத்தெரு இருக்கிறது.இங்கிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணி ஆரம்பப்பள்ளியை ஒட்டி கிழக்கு நோக்கி இந்த புதுத்தெரு அமைந்திருக்கிறது. இந்த புதுத் தெருவின் கிழக்கு கடைசியில் அமைந்திருப்பதுதான் மூவர் ஜீவ சமாதி ஆகும்.    

                                                                                                                                      இந்த மூவர் ஜீவசமாதியின் நடுநாயகமாக இருந்து அருள்பாலிப்பவர் திரு.கருப்பஞானியார் அவர்கள்;(மிக தடிமனான சிவலிங்கம் இருக்கும் படம்)இவரது வலது பக்கம்(தெற்குப்புறம்) இருந்து அருள்பாலிப்பவர் திரு. யாழ்ப்பாணம் சுவாமிகள்( சிவலிங்கத்தின் மீது விபூதிபூசியிருக்கும் படம்); இடது பக்கத்தில் இருந்து அருள்பாலிப்பவர் திரு. ஆறுமுகச்சாமிகள்(சிறியதான சிவலிங்கம் இருக்கும் படம்)     

                                                                                                                  W.புதுப்பட்டி மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிவருபவர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.இவர் கருப்பஞானியர் சுவாமிகளின் சீடராக பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்தார்;    

                                                                                 விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் மாநகர் தெற்கு வைத்திய்நாதபுரம் தெருவில் கிழக்கு எல்லையில் இருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும்,இங்கிருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவருவரும் ஒருவரே!ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களிலும் காட்சியளித்த மகான் திரு.கருப்பஞானியார் சுவாமிகள்!!!!   

                                          இன்றும் கூட, தீராத நோய்களுக்கும்,உயிராபத்தான பிரச்னைகளுக்கும் உடனடியான அருளாசிகளை வழங்குபவர் திரு.கருப்பஞானியார் சுவாமிகளின் சீடர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.நாம் செய்ய வேண்டியது மனப்பூர்வமாக வேண்டுவதோடு,இவரது சன்னிதியில் தீபம் ஏற்றி,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுதான்.                  

                                                               ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று இவரது குருபூஜை விழா மிகச் சிறப்பாக கடந்த 63 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.                                                                                                                                                 திரு.ஆறுமுகச்சாமிகள் கடந்த 30 ஆண்டுகள் வரையிலும் தினமும் அன்னக்காவடி எடுத்து வந்து,இப்பகுதி மக்களின் பசிப்பிணியைப்  போக்கியவர் ஆவார்.இந்த மூன்று சிவ மகான்களின் வரலாற்றை வெளியிடுவதில் மகாவில்வம் பெருமை கொள்கிறது.     

                                                                                வாசகர்களே,வாசகிகளே நாம் செய்ய வேண்டியது: இந்தப் புகைப்படங்களை அச்சடித்து,பிரேம் போட்டு,நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து,நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.எனது பிறந்த நாளன்று தங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருளவும் என வேண்டலாமே! அதன் மூலமாக நாம் நிம்மதியை அடைய முடியும் இல்லையா? 

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார்!!!

 




சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள்,தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை  ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்;திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க,தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார்.வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.
வெகுதூரம் ஓடி வந்த நாச்சியார்,திடீரென ஆவேசமாகி,நான் பத்தினி என்பது உண்மையானால்,பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த,உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார்.துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.

ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர்,அந்த இடமானது நடைபாதையாக மாறியது;ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது,இந்த  இடத்தை நெருங்கியதும்,ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள்.தான் இங்கே இருப்பதாகவும்,இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.
அந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல,அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு,வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக,அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.அவளுக்குப்பின்னர்,ஒரு  இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்)மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு  சொல்லிவருகிறாள்.
இந்த உத்தமி நாச்சியார்,ஸ்ரீவில்லிபுத்தூர் தபால்  அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம்  செல்லும் வழியில்
அமைந்திருக்கிறது.அதிகமாக பிரபலமாகாத இந்தக்  கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும்.ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும். 
இதே போல சில  உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன.
எங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.

அரிய சிவலிங்க வழிபாடு!

 


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;

இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;

2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;

தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;


சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;






சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;


சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;


சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்ததால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;



ஓம் அருணாச்சலாய நமஹ

இறைநாம ஜபம் தரும் செல்வ வளம் யோகம்!!!

 



கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!


எனவே,யார் இவைகளை(அசைவம்,மது,புகைப் பழக்கங்கள்) நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும்     33 முறை பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;


இன்று முதல் ஏழாம் நாள் வரை தினமும் இந்த பாடலை ஒரு  முறை ஜபிக்க வேண்டும்;

8 ஆம் நாளில் இருந்து 14 ஆம் நாள் வரை தினமும் ஏழு முறை ஜபித்து வர வேண்டும்;

15 ஆம் நாளில் இருந்து 21 ஆம் நாள் வரை தினமும் இந்தப் பாடலை 14 முறை ஜபிக்க வேண்டும்;

22 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 21 முறை ஜபிக்க வேண்டும்;

29 ஆம் நாளில் இருந்து 35 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 28 முறை ஜபிக்க வேண்டும்;

36 ஆம் நாளில் இருந்து 1008 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 33 முறை ஜபிக்க வேண்டும்;

இப்படி தொடர்ந்து ஜபித்து வரும் போது,90 வது நாளுக்குப் பிறகு 180 வது நாளுக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ உபாசகர்களில் ஒருவரை சந்திக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டாகும்;அவர் உங்களுக்கு முழுமையான வழிபாட்டுமுறையை போதிப்பார்;(இணையத்தில் எந்த ஒரு தெய்வீக ரகசியமும் முழுமையாக வெளியிடப்படுவதில்லை)

ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி வைக்க வேண்டும்;


தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.
நன்றி:உபாசனா குலபதி ஸ்ரீதுர்கைச் சித்தர் ஐயா அவர்கள்

ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;இப்படி தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால் சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில் அதிகரிக்கத் துவங்கும்;


ஜோதிடர்களாக இருப்பவர்கள் தாமும் செல்வந்தராகி,தம்மை நாடி வந்தவர்களையும் செல்வந்தர்களாக மாற்றிட இப்பாடலை 7,00,000 முறை ஜபித்திருக்க வேண்டும்;




ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால் நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்;

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

 


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!
அருள்வாக்கு சொல்லும் திறன் ஒருவருக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அந்தத் திறன் அவருக்கு ஆயுள் முழுவதும் இருக்குமா? அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை இருக்குமா? என்பதை அவரே கண்டறிய அவரது ஜாதகம் தேவை;


அருள்வாக்கு சொல்லும் திறன் மட்டும் அல்ல;கூடு விட்டு கூடு பாயும் திறன்,ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்சியளித்தல் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு செயல்களில் ஈடுபடுதல்;வானில் பறந்து செல்லுதல்;இந்த பூமியில் வாழ்ந்து கொண்டே வேறு உலகங்களுக்குச் சென்று வருதல் போன்ற பலவிதமான சூட்சுமக் கலைகள் ஒருவருக்கு கைகூடும் என்பதை அறிய அவரது ஜனன ஜாதகம் அவசியமாகின்றது;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;


ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் குறிப்பிட்ட தலைப்பில்(அரசியல்,ஆன்மீகம்,கம்யூனிஸம் என்ற தொழிலாளித்துவம்) எழுதப்படும் நூல்கள் அதிகமாக விற்பனை ஆகும்;ஆனால்,இந்த நூற்றாண்டுகள் என்ற நூல் அனைத்து பத்தாண்டுகளிலும் அதிகபிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டே இருக்கின்றன;தமிழில் மொழிபெயர்த்தும் தமிழ்நாட்டில்,தமிழர்கள் பேசும் உலகில் இந்த நூல் இன்றும் அதிகப் பிரதிகள் விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றது;

இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது என்ன?
மனிதர்களின் ஆழ்மனத்தில் எதிர்காலத்தை அறியும் ஆவல் எப்போதும் இருக்கின்றது என்றுதானே அர்த்தம்???!!!


இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!


அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?
1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;
உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;
ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!

 



ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நாம் பின்பற்றப்பட்டு வரும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர்;கடந்த 300 ஆண்டுகளில் கட்டாயப்படுத்தியும்,மிரட்டியும் இந்த காலண்டர் முறையை கிறிஸ்தவ இங்கிலாந்து நம்மிடையே பழக்கப்படுத்தியது;

நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான மற்றும் துல்லியமான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய (தெளிவில்லாத,முறையற்ற)   கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;


க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;

சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;

அதன் பிறகு,ஜோதிடப்படி,  நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.
இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;

ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!

கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;

மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை மஹாவராகி வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!


வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;


ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;

கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;இது இன்றும் தொடர்கின்றது. . .தமிழ் உணர்வாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு......

நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;


இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?
பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய மஹாவராகியை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;


தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;


மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;


இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;


மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;


குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;

யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;($ 48 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து தினமும் சிவாலயம்/அம்மன் ஆலயம் செல்ல வேண்டும்)


ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி

என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(வாட்ஸ் அப்:9092116990) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ


ஓம் அருணாச்சலாய நமஹ

அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்

 


உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;


அப்போ கேரளா,கர்னாடகா,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசிகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்;அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு;கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது;    ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?


விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்;இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்;இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்;

அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?


அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!


சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள்,தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;


மனிதனாக பிறந்த நாம்  புண்ணிய ஆத்மாவாக இருந்தால்   பணம் சம்பாதிக்கவும்,சொத்துக்கள் சேர்க்கவும்,சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;

     இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியை பரம்பொருள் நமக்கு கொடுத்துள்ளார்;

 ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் இருக்கின்றன;உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்;அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா;பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்;முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து;


ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;


இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்;முறைப்படி தீட்சை பெற்றவர்கள்,உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள்,முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;


பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;

தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;


காலையில்,மதிய நேரத்தில்,மாலையில்,இரவில்,நள்ளிரவில்,பின்னிரவில்,
அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;


சிவனை அப்பாவாக,நண்பனாக,மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை உணருவார்கள்;


$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;


முதல் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
($ நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை;

$ 3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

நமச்சிவாய

( $   நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சல சிவ
($அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆம் ஹெளம் செள
($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவையை நம
($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)


எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:


ஓம் ரீங் சிவசிவ
($ சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)


ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:


சிவாய நம
($ நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:


ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
($ ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)


பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவசிவ
($ இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய சிவாய
($ நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவாய நம ஓம்
($ சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயசிவ
($ இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)

15 ஆம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சலாய சிவ நமஹ

16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ