Monday, December 22, 2014

ஜீவ சமாதியும் ஆலய வழிபாடும்



ஆதிசிவன் என்று அழைக்கப்படும் அண்ணாமலையைத் தவிர,இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களுமே ஆவிநிலையில் இருப்பவையே! சராசரி மக்களிடம் இதைச் சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகம்;

பூமியில் இதுவரை இருக்கும் மதங்களிலும்,இனிமேல் உருவாகப் போகும் மதங்களிலும் இருக்கப் போவது ஒரே ஒரு கருத்துதான்:- இறைவன் ஒருவனே!

அந்த ஒரு இறைவனை மனிதர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்;
மனித நிலையில் இருந்து இறைநிலையை அடைய முயலும் போது ஏராளமான ஆன்மீக முன்னேற்றங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது;அப்படி முன்னேறும் போது உருவாகும் ஒரு நிரந்தர நிலையே சித்தர்கள் நிலை;

ஒரு சித்தர்  பிறவி முழுவதும் எந்த தெய்வத்தை வழிபட்டாரோ,அந்த தெய்வம் இருக்கும் இடமே நாம் வாழும் கலியுகத்தில் பிரபல கோவிலாக வளர்ந்திருக்கிறது;

உதாரணமாக போகர் தனது வாழ்நாள் முழுவதும் முருகக் கடவுளை வழிபட்டார்;அதனால் அவர் வழிபட்ட முருகக்கடவுள் பழம் நீ என்ற பெயரில் பிரபலமான ஆலயமாக ஆகியிருக்கிறது.இன்றும் பழனிமலைக்கு அடியில் ஒரு குகையில் போகர் சித்தர் தவம் செய்வதாகவும்,கலியுகம் முடியும் போது அவர் வெளியே வருவார் என்றும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்;

படத்தில் நீங்கள் பார்ப்பது குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;இவர் ஒரு பிறவி முழுவதும் வினாயகரை வழிபட்டு வந்துள்ளார்;


இன்னும் நிறைய பார்ப்போம். . .

உலக நாடுகளுக்கு எல்லாம் குரு நமது இந்தியா!!!



உலகிலேயே அதிகமான நீரழிவு நோயாளிகள் வாழும் நாடு நமது பாரதம்! இந்த முதலிடத்தை கி.பி.2050 வரையிலும் தொடர்ந்து ‘தக்க’ வைக்கும் என உலக மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களும்,ஆய்வறிக்கைகளும் தெரிவிக்கின்றன;இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
சுதந்திரம் அடையும் முன்பு கோவா கடற்கரையில் ஒரு ஆங்கிலேயத் தளபதிக்கும் நமது நாட்டு மகாராஜாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இதற்கான பதில் மறைந்திருக்கிறது.
நமது நாட்டு மஹாராஜா ஒருவர்,தனது ‘நண்பரான’ ஆங்கிலேயத் தளபதியிடம், “ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?” எனக் கேட்டார்.
அதற்கு அந்த ஆங்கிலேயத் தளபதி, “அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவர்தம் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக் கொள்;அது போதும்”என்றான்.
இணையம்,செல்போன்,வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட் என்று தகவல் யுகத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர்களுக்கு சித்தர்கள் எழுதிய சர நூல் சாஸ்திரம்,போகர் 7000,திருமூலரின் திருமந்திரம்,மலைவாடகம்,முப்பு,மூலிகை ஜாலரத்தினம்,பதார்த்த குணசிந்தாமணி போன்ற நூல்களைப் பற்றித் தெரியும்?
சாதாரண ஜலதோஷத்தைப் போக்கி ஆரோக்கியமான சுவாசத்தை ஒரு வெங்காயமும்,கொஞ்சம் வென்னீரும் சில நிமிடங்களிலேயே தரும் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
1980களில் “மேற்கு”நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும்,ஆலிவ் எண்ணெயும் அதிகமாக உற்பத்தி  செய்யப்பட்டன;இவைகளை வீணாக்காமல் எப்படி ‘காசு பார்ப்பது?’ என யோசித்தார்கள்.அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் விளம்பரங்கள்,டாக்டர்களின் அறிவுரைகள்,ஹெல்த் கட்டுரைகள்,இலவச மருத்துவக் குறிப்புகள் மூலமாக நமது நாடு முழுக்க=காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை;குஜராத் முதல் அஸ்ஸாம் வரை இந்த எண்ணெய்கள் “ஆரோக்கிய அந்தஸ்தை” பெற்றன;

சுமாராக 20,00,000 ஆண்டுகளாக நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்த நல்லெண்ணெயும்,தேங்காய் எண்ணெயும் தினசரி பயன்பாட்டில் இருந்து காணாமல் போகத் துவங்கின;கி.பி.2010 இல் அதே ‘மேற்கு’ நாடுகளின் ஆராய்ச்சிகள் உலகில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் எண்ணெய் நல்லெண்ணெய் என்பதை நிரூபித்தன;எண்ணெய்களின் அரசி நல்லெண்ணெய் என்றும் சான்றளித்தன;(தற்காலத்தில் நாம் பயன்படுத்தப்பட்டு வரும் பேக்கிங்கில் வரும் நல்லெண்ணெய்க்கும்,தேங்காய் எண்ணெய்க்கும் இந்த குணம் கிடையாது;செக்கில் ஆட்டப்பட்டு கிராமங்களிலும்,இயற்கை விளைபொருட்கள் கடைகளிலும் கிடைக்கும் எண்ணெய்களுக்கு மட்டுமே இந்த குணம் பொருந்தும்)