Tuesday, February 28, 2012

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்


அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி

பரணி(மேஷம்)    = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,      ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்
மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
                    ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி  சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி,  திருவாரூர்(மடப்புரம்)
ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்,    நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில்,                   கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்;
ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,     ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர்,      ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர்,        ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @  குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி
ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம்82,83,84,85.
ஓம்சிவசிவஓம்

கர்மவினையை நீக்கிட ஒரு சுலப வழிமுறை:யோகி கைலாஷ்நாத்


சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல்  இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும்,12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள படி வழிபாடு செய்ய வேண்டும்.

பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும் சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால் அவ்விடத்துக்குச் செல்ல முடியும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.

தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம்,திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை,ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவயோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!

உதாரணமாக கோவையின் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகங்களும், சென்னையின் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல்களும்,சென்னை சில்க்ஸ் = சங்கிலித்தொடர் ஜவுளிக்கடைகளும்,அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் போக்குவரத்துத்துறையில் தனி முத்திரை பதிக்கும் ஸ்ரீஜெயவிலாஸ், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஆசியாவின் இருசக்கர வாகனச்சந்தையைக் கைப்பற்ற விஸ்வரூபமெடுக்கும் டி.வி.எஸ். என்று பல நிறுவனங்களின் தொழில்களைச் சொல்லலாம்.

குண்டலினி சக்தியை எழுப்பியவர்கள் மட்டுமே சோதிடத்தில் வல்லுநர்களாக இருக்க முடியும்.அவர்களால் மட்டுமே சூரியக்குடும்பத்தையும்,நட்சத்திரங்களையும், 12 ராசி வீடுகளையும் ஞானக்கண்ணால் காணமுடியும்.

ஓம்சிவசிவஓம்

சித்தர்களின் சாதிக் கொள்கை:பாடல்களாக விளக்கம்


சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி யுணர்ந்தறிவாய் , குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் (குதம்பைச் சித்தர் பாடல் 145)

ஆண்சாதி பெண் சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம்  (குதம்பைச் சித்தர் 137)

பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு மும்முளே(சிவவாக்கியர் பாடல் 40)
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவேறில்லை (அகத்தியர் ஞானம் 4)

காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக் குலம்தான் மைந்தா
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே         (வான்மீகர் ஞானம் பாடல் 8)

நால்வருணன் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சாதியெலாம் பிள்ளை விளையாட்டே
சாதியும் மதமும் சமயமும்  பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணிந்தேன்(வள்ளலார் திருவருட்பா)

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளில் கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர்

சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ (பாம்பாட்டி சித்தர்)

சாதிபேதம் சொல்லுறீர் தெய்வம்
தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதியபால் அதில் ஒன்றாகி அதில்
உற்பத்தி நெய்தயில் மோராச்சு(கொங்கணர் வாலைக்கும்மி 94)

சாதிக் கொடுமைகளை எதிர்ப்பதையும்,சாதி வேறுபாடுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் சித்தர்களின் பாடல்கள் விளக்குகின்றன.நாம் தான் அறிவாளி சமுதாயமாச்சே! கம்யூட்டர் யுகத்தில் வாழ்பவர்களாச்சே! சாதியை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தி,மனித நேயத்தை கொன்றுவிட்டோம்.அப்படிக் கொல்வதற்கு கிறிஸ்தவ ஆங்கிலேயனின் பாடத்திட்டமும் ஒரு காரணமாகிவிட்டது.
ஓம்சிவசிவஓம்





பவகார யோகம் என்றால் என்ன?


பவகார யோகம் என்றால் காற்றை சாப்பிடுவது என்று பொருள்.தொடர்ச்சியான பிராணயாமப் பயிற்சிகளால் யோகியானவன் உணவு வகைகளை,அதாவது திட மற்றும் திரவ உணவுவகைகளை ஒதுக்கி வாயுவாகிய காற்றை உண்டு(சுவாசித்து) மட்டுமே வாழக்கூடிய தகுதியைப் பெறுகிறான்.காற்றை மட்டும் உண்டு வாழும் யோகிக்கு உடலில் கழிவுப்பொருட்கள் உண்டாவதில்லை.உடல் எனப்படும் தேகம் பரிமள வாசனையோடும் இருக்கும்;இந்த யோகிகளுக்கு மரணம் என்பதே கிடையாது.மரணத்தின்மீது முழு ஆதிக்கம் செலுத்தி,மனதின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி,புலன் ஈர்ப்பு விசை எல்லைகளைக் கடந்து,புவியீர்ப்பு விசை எல்லைகளையும் கடந்து,மரணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கிடைக்கிறது.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து வரும் ஸ்ரீமகா அவதார பாபாஜி,அவர் தம் தமக்கையார்(சகோதரி) ஸ்ரீநாகலட்சுமி தேவியார் ஆகியோர் இவ்வகை யோகிகளுக்கு உதாரணம் ஆகும்.
மேலும் ஸ்ரீகவுரி சங்கர் பீடத்தில் பாபாஜியுடன் வசித்துவரும் 8 சிஷ்யர்களும் இதற்கு உதாரணம்.இமயமலை வரலாற்றுக்குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்துவரும் பல்வேறு யோகிகளும்,யூதரான ஈசா எனப்படும் யேசு,புனிதபவுல்,யோவான் ,எலீயா போன்றவர்களும் தங்கள் பருவுடலை நினைத்தபோது சிதைத்துக்கொள்ளும்,நினைத்தபோது மீண்டும் எடுத்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்று இருந்தது சிலவகை சித்தர்முறையிலான மூச்சுப்பயிற்சிகளால்தான்!!! ஆதாரம்:சித்தர் களஞ்சியம் ,பக்கம் 108
ஓம்சிவசிவஓம்

சென்னை சபையர் தியேட்டர் மூடியிருப்பதன் காரணம் என்ன?


சென்னையில் பிரபலமான நிறுவனக்குழுமம் விகம்சி(Veecumsee)ஆகும்.இந்த நிறுவனக்குழுமங்களின் தொழில்கள் தங்கம்,வைரம் வியாபாரத்தில் முன்னணி நிறுவனங்களாக இருந்தன;தவிர,சபையர்,எமரால்டு,புளுடையமண்டு என்ற பெயர்களில் திரையரங்குகளும் நடத்திவந்தன.இருப்பினும்,இந்த நிறுவனக்குழுமம் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் என்ன?
சென்னை சபையர் தியேட்டர் இருந்த இடத்தில் ஒரு மகானின் ஜீவசமாதி இருக்கிறது.அந்த மகானுடைய ஜீவசமாதியின் மேல் கோவில் மட்டுமே இருக்க வேண்டும்;மாறாக விகம்சி நிறுவனக்குழுமம் அதற்கு நேர்மாறான தொழிலை தனது பணபலத்தால் நடத்தியது.விளைவு? அந்த நிறுவனக்குழுமமே வீழ்ச்சியடைந்தது.சபையர் தியேட்டரை விற்கும் நிலைக்கு வந்துவிட்டது.

சபையர் தியேட்டரை தற்போதைய அ.இ.அ.தி.மு.கட்சியானது  வாங்கியிருக்கிறது.அக்கட்சிக்கு ஒரு ஆன்மீக வேண்டுகோள்:தயவு  செய்து சபையர் தியேட்டர் இருக்கும் இடத்தில்  ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து,கோவில் அமைக்க வேண்டும்.

நன்றி:சித்தர் களஞ்சியம் பக்கம்232.
ஓம்சிவசிவஓம்

காசியின் பெருமைகள்;சொன்னவர் ஆதிசங்கரர்


 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.
* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

ஜனநாயக கோவிலில் புளூ பிலிம் பார்க்கும் அரசியல்வாதிகள்: கெஜ்ரிவால்


புதுடில்லி : "" பார்லிமென்ட்டும், சட்டசபையும், ஜனநாயக அமைப்பின் கோவிலைப் போன்றவை. ஆனால், அரசியல்வாதிகள், இந்தக் கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு ஆபாசப் படம் பார்க்கின்றனர்' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பார்லிமென்ட்டுக்கு எதிராகவும், எம்.பி.,க்களுக்கு எதிராகவும், கருத்து தெரிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் நேற்று கூறுகையில், " பார்லிமென்ட் நடைமுறை மீது நம்பிக்கை இல்லாவிட்டால், பின் எந்த வகையான நடைமுறை மீது, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை விளக்க வேண்டும். பார்லிமென்ட் சரியில்லை என்றால், பின் எது சரி? சர்வாதிகாரா ஆட்சியா? ராணுவ ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? எதைத் தான் ஹசாரே குழுவினர் நம்புவர்' என்றார்.

வழக்கு உள்ள எம்.பி.,க்கள்
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலை தளத்தில் கூறியுள்ளதாவது: எம்.பி.,க்களையும், பார்லிமென்டையும், நான் விமர்சித்ததாக சில அரசியல் தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால், உண்மையில் நடப்பது என்ன? கட்சித் தலைமை என்ற பெயரில் சர்வாதிகாரம் நடக்கும் சூழலுக்கு, இந்தியா தள்ளப்பட்டுள்ளது.தற்போதைய பார்லிமென்டில் உள்ள எம்.பி.,பிக்களில் 15 பேர் மீது, கொலைக்குற்ற வழக்கு உள்ளது. 23 பேர் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளது. 11 பேருக்கு எதிராக, மோசடி வழக்கு உள்ளது. 13 பேர் மீது, கடத்தல் வழக்கு உள்ளது. உ.பி., சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர்களில், 5 பேர் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள். இதுபோன்ற சூழ்நிலையில், ஊழல் இல்லாத இந்தியாவை எப்படி உருவாக்க முடியும்.

ஆபாச படம்
பார்லிமென்டும், சட்டசபையும் ஜனநாயக அமைப்பின் கோவிலைப் போன்றவை. அரசியல்வாதிகள் இந்தக் கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு, ஆபாசப்படம் பார்க்கின்றனர். மசோதாக்களை கிழித்து எறிகின்றனர். நாற்காலிகளைத் தூக்கி வீசுகின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பார்லிமென்ட் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என, கேள்வி எழுப்புகின்றனர்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

thanks:dinamalar 28.2.12

சிவசித்தர் வர்மம் எனப்படும் நோக்கு வர்மம்:அடிப்படை உண்மைகள்







சிவன் வழியில் சித்தர்கள் தெரிந்துகொண்ட இந்த வர்மக்கலை மர்மமாகவும்,சூட்சுமரீதியாகவும் இன்றளவும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.ஆனால்,அதை எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக யாரும் தர முன்வரவில்லை.வர்ம ஆசான்களால் ஒவ்வொரு விஷயங்களாக மறைக்கப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.


இந்த வர்மக்கலை சேர , சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் போர்க்கலையாக இருந்தது.இது எல்லோருக்கும் தெரிந்தால் நட்டில் தன்னைக் காத்துக்கொள்ள பயன்படுத்தாமல் ஒரு சிறிய பிரச்னைக்குக்  கூட இதைப் பயன்படுத்தி அழிக்க நினைப்பார்கள் என்ற எதார்த்தத்தின் காரணமாக ஆசான்கள் யாரும் எவருக்கும் முழுமையாகக் கற்றுத்தரவில்லை.

வர்ம ஆசான்கள் முதலில் மருத்துவத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள்.இதில் காயம்,வீக்கம்,ரத்தக்கட்டு,சுளுக்கு மற்றும் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வியாதிகளுக்கு கஷாயம்,எண்ணெய்,தைலம்,குளிகை போன்ற மருந்து வகைகளைத் தயாரிக்கவும்,பயன்படுத்துமுறையையும் சொல்லிக்கொடுத்தார்கள்.இதில் முழுமையான பயிற்சியளிக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.
ஒரு மாணவன் முழு வர்மக்கலையும் அறிந்துகொள்ள 12 ஆண்டுகள் ஆகும்.அத்தனைக் காலங்கள் ஒரு மாணவன் பொறுமையோடு காத்திருந்தால் தான் ஒரு வர்மானியாக முடியும்.பொறுமையில்லாத மாணவர்கள் பாதியிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.புதிதாக ஆர்வப்பட்டு அதிகம் பேர் இதை நோக்கி வரவும் இல்லை.

வர்ம ஆசான்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை;ஓர் உன்னதமான வர்மக்கலை கண்டவர்களிடம் எளிமையாக சென்று சேரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
இந்தக் கலையின் சூட்சுமத்தை சாதாரணமாக சொல்லிக் கொடுத்து,செல்வம் சேர்க்கவோ,பொருளீட்டவோ விரும்பவில்லை.ஆனாலும் அவர்கள் தேவையானதை இந்த வர்மக்கலையை சூட்சுமரீதியில் பயன்படுத்தி பலனடைந்தார்கள்.இதை யாரும் தடுக்க முடியாது.அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இது தான் உண்மை.வர்மத்தை பயன்படுத்தி,என்னவெல்லாம் அடையலாம் என்று கேட்டால்,
1.ஒருவனை வீழ்த்த முடியும்- அதே சமயம் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்.
2.ஒருவனை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைக்கமுடியும்.அதிலிருந்து விடுதலையாக்கவும் முடியும்.(அனுபவத்தில் கண்ட உண்மை)
3.வர்மக் கலையால் ஒரு காரியத்தில் செய்லவடிவத்தை முன்கூட்டியே உணரமுடியும்.(முன் உணர்வு)
4.மனிதனின் சகலவிதமான நோய்களில் இருந்து நிரந்தர தீர்வைப் பெறலாம்.
5.நியாயமான முறையில் என்னவெல்லாம் நினைக்கிறாயோ அதையெல்லாம் கண்டிப்பாக அடைய முடியும்.

உலகியல் நடைமுறையில் கண்திருஷ்டி என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.ஒரு சிலர் அதற்காக பரிகாரங்களையும் செய்துகொண்டு தான்  இருக்கிறார்கள்.என்ன பரிகாரம் செய்தாலும் அதை நிவர்த்தி செய்ய முடியாது.
ஏன் என்றால் உங்களுக்குப் பிடிக்காதவர்கள் ஓர் வக்ர பார்வையோடு உங்கள் குடும்பத்தையோ, தொழிலையோ,நிறுவனத்தையோ பார்க்கும்போது அங்குதான் நோக்கு வர்மம் 1/1000 மடங்கு அங்கே சாதாரணப் பார்வையில் செயல்படத்துவங்கும்.அதையே வாழ்க்கையில் நீங்கள் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பீர்கள்.அவ்வாறு மீண்டும் மீண்டும் பார்வைபடும்போது அதிலிருந்து உங்களால் எந்த வகையிலும் மீள முடியாது.இதிலிருந்து விடுதலை பெற வர்மக்கலையில் எந்திரங்கள்,மூலிகை,மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும்,சித்தர்கள் அடர்ந்த காடுகளில்,கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களை நோக்கு வர்மத்தை பயன்படுத்தியே காத்துக்கொண்டார்கள்.


இந்தக் கட்டுரையை ஜோதிடபூமி,பிப்ரவரி 2012 இல் பக்கம் 27 இல் தொடராக எழுதி வருபவர்:பண்டிட் ஜி.செல்லத்துரை.

ஓம்சிவசிவஓம்

குடுமி வைத்திருப்போரை கிண்டல் செய்யாதீர்கள்=ஸ்ரீ ல ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் (தனித்துணை சிவனே! என்ற தலைப்பில் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி)


எத்தனையோ மேல்நாட்டுக்காரர்கள்(இத்தாலி,இங்கிலாந்து,ஜர்மனி,நெதர்லாந்து,ஸ்பெயின்,போர்ச்சுகல்) குடுமி வைத்துக்கொண்டு,பஞ்சகச்சம் அணிந்தபடி திரு அண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர்.இதை அடிக்கடி பார்க்கலாம்;ஏராளமான மேல்நாட்டுப்பெண்மணிகள் நம் பாரத நாட்டின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்தபடி கிரிவலம் வருகின்றனர்.

ஆனால்,இங்குள்ளவர்களோ குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள்.தற்காலத்தில் குடுமி வைத்திருப்போர்களைக் காண்பதே மிக அபூர்வம்.அவ்வாறு குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து பலர் கேலியும்,கிண்டலும் செய்கின்றார்கள்.ஏன்,குடுமியைக் கட்டாயமாக வைக்க வேண்டியவர்களே இப்போதெல்லாம் குடுமி வைத்திருப்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள்.என்றுமே குடுமி வைத்திருப்பவர்களைப்பார்ட்து யாரும் கிண்டல் செய்யக்கூடாது.
குடுமியின் பல வகைகள்
குடுமிகளில் 1008 வகைகள் உண்டு.கோலிக்குடுமி, கொண்டைக்குடுமி,சிறு குடுமி,சுருக்குக் குடுமி,தானக்குடுமி,வண்டக்குடுமி,வட்டுக்குடுமி,வாரக் குடுமி, நிட்டக்குடுமி,சேறு குடுமி, சேர்க்கும் குடுமி, நாறு குடுமி,நறுக்குக் குடுமி, நோருக் குடுமி,தோகும் குடுமி, தோகைக்குடுமி, சுவட்சக் குடுமி ,சுபக் குடுமி என்று பலவகையான குடுமிகள் உள்ளன.

தோகைக்குடுமி வைத்திருப்பவர்களுக்கு அபார சக்தி உண்டு.இந்தக் குடுமி வைத்திருப்பவர்கள் பொறுமையாக இருப்பார்கள்.ஆனால்,சில வார்த்தைகளைச் சொல்லும்போது,மனதில் நறுக்கென்று தைக்கும்படியாகச் சொல்லுவார்கள்.இத்தகைய வாக்குச் சக்தியைக் கொடுப்பதே இந்த வகைக்குடுமி.
ஒரு மனிதன் கோபத்தின் வயப்படும்போது பல தவறுகள் செய்கிறான்.பிறர் குற்றங்களைப் பார்ப்பதால் அதிகமாக தவறுகளைச் செய்கிறான்.அந்தக் குற்றங்களை மன்னித்துவிடுவதால் அதிலிருந்து அதிலிருந்து விடுபடுகிறான்.அப்பொழுதுதான் அவனுக்கு “தனித்துணை சிவனே!” என்பது புரிய வரும்.   “தனித்துணை சிவனே !” என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது யார் தெரியுமா? பூரண அவதாரமூர்த்தியான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஆவார்.

நன்றி:தனித்துணை சிவனே! பாகம் 2 பக்கங்கள் 25,26,27.

  வெளியீடு:ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயா, சேம்பர் எண்:7 , சாகாஸ் காம்ப்ளக்ஸ், எண்:4,ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்குமாடவீதி,மயிலாப்பூர்,சென்னை -4.இணையதளம் இருக்கிறது.விலை ரூ.20/-

ஓம்சிவசிவஓம்

Monday, February 27, 2012

சித்தர்களைப் பற்றிய ஒரு முழுமையான அனுபவ நூல்:சித்தர்களஞ்சியம்




சித்தர்களை தரிசித்துவிட்டால்,நமது அத்தனை கர்மவினைகளும் தீர்ந்துவிடும் என்பது நமது நம்பிக்கை ஆகும்;ஆனால்,நடைமுறையில் இந்த நம்பிக்கையானது முற்றிலும் பொய் என்பதை ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,நமது ஆன்மீக மானசீக குருவுமான மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தனது ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளார்.சித்தர்களில் யாராவது ஒருவரை நாம் பார்க்கவிரும்பினாலும்,நமக்கு பூர்வபுண்ணியம் இருந்தால் அந்த சித்தரை தரிசிக்க செய்ய வேண்டிய வழிபாட்டுமுறை தெரியவரும்;அதன்பிறகு,நமது மன உறுதி,ஆர்வம்,சிரத்தை,தினசரி வழிபாடு போன்றவற்றால் நாம் விரும்பும் சித்தரை தரிசிக்கமுடியும்.இப்படி தாம் விரும்பும் சித்தரை தரிசித்தவர்கள் ஏராளமானவர்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.பெரும்பாலும் அகத்தியர்,காகபுஜண்டர்,மச்சமுனி,போகர் முதலான 18 சித்தர்களை தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பலர் தரிசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சித்தர்களை நேரில் தரிசித்தாலும்,அவர்கள் மனது வைத்தால் மட்டுமே நமது கர்மவினைகளைத் தீர்க்க முடியும்.இல்லாவிட்டால்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்;நாம் தான் அடிக்கடி அன்னதானம்,அண்ணாமலை கிரிவலம்,ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவி,யாருக்கும் எந்த கெடுதியும் செய்யாமல் இருத்தல்,ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விதானம்(பள்ளி மற்றும் கல்லூரி பீஸ் கட்டுதல்,நோட்டுக்கள் புத்தகங்கள் வாங்கித்தருதல்),ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஐந்துவருடங்கள் வரையாவது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் மூன்று வருடங்கள் வரையாவது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தல் போன்றவற்றால் நமது கர்மவினையைக் கரைக்கமுடியும்.
இந்த புத்தகத்தின் தலைப்பான சித்தர்கள் களஞ்சியம் என்பதற்கேற்ப நிஜமாகவே சித்தர்களைப் பற்றி வேறு எந்த புத்தகங்களிலும் இல்லாத அளவுக்கு ஏராளமான சித்தர்களைப் பற்றிய உண்மைகள் கொட்டிக் கிடக்கின்றன.சித்தர் மந்திரங்கள்,சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்கள்,சித்தர்களின் வாழ்வியல்,சித்தர்களின் பூசை முறைகளும் மந்திர உச்சாடன முறைகளும்,ஒரே நேரத்தில் 200 விஷயங்களில் கவனம் செலுத்தும் கவனக்கலையானது சித்தர்களின் திறமைகளில் ஒன்று,வஜ்ரோலி முத்திரை,சித்தர்களின் இறவா நிலை தரும் மூவகை வழிகள்,ஓங்காரம் என்ற பிரணவம்,சித்தர்களைப் பற்றிய அனுபவ உண்மைகளை ஆன்மீகச் சாறாக தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பிழிந்து தந்திருக்கிறார் யோகி கைலாஷ்நாத்.
வெளியீடு:கற்பகம் புத்தகாலயம்,4/2,சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்),தி.நகர்,சென்னை-17.தொலைபேசி:044 24314347. இணையதளம் இருக்கிறது.விலை.ரூ.160/-

இந்த புத்தகம் ,சித்தர்களைப் பற்றிய உங்களின் தேடலுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.                         
இவரது ஆசிரமம் முகவரி:விஷ்ராந்தி யோகா(அமைதி மற்றும் சர்வமத சங்கமம்),பதஞ்சலி யோக மந்திரம் ட்ரஸ்ட்,சித்தர் கோவில்,ஸ்ரீசிவலோகம்,கோம்பைப்பட்டி,கணக்கன்பட்டி-அஞ்சல்,பழனி தாலுகா,திண்டுக்கல் மாவட்டம்-624613.

ஓம்சிவசிவஓம்



பெண்சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர் - வடுவகிர்க்கண்ணியம்மன்,மேலப்பெரும்பள்ளம்:வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிவு





நம் எல்லோருக்கும் கீழப்பெரும் பள்ளம் தெரியும்.கேதுஸ்தலம் என்பதும்,கேது சார்ந்த தோஷங்கள் நீங்கவும் இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் போய் வழிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.மேலப்பெரும்பள்ளம்?



ஸ்ரீ தோஷம் நீக்கும் ஸ்தலம் என இணையப்பெருங்கடலில் இந்த கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.வேறுவிபரங்கள் கிடைக்கவில்லை.எனது ஆன்மீக குருநாதர்களில் ஒருவர் இந்த ஸ்தலம் பற்றி கூற,கூற இப்படி ஒரு கோவில் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அதுவும் நமது தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கும் பூம்புகாருக்கும் நடுவே ஒரு சிறு கிராமத்தில் வலம்புரநாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பது புரிந்தது.இந்த பதிவில் காட்சியளிப்பது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் தான்.இந்தப் பதிவினை வெளியிடுவதில்  பெருமை கொள்கிறது.



சரி! யாரெல்லாம் இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?



முற்பிறவிகளில் பெண்ணை(*மனைவியை/சகோதரியை/தாயை/மகளை/மருகளை *)அவமானப்படுத்தி,அலங்கோலப்படுத்தியவர்கள் இந்த பிறவியில் அதே மாதிரியான அவமானங்களை அனுதினமும் சந்திப்பார்கள்.



யாருக்கெல்லாம் அவர்களுடைய பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருக்கின்றதோ அவர்கள் கட்டாயமாக 24 முறை இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்.ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருந்து,ராகு திசையோ அல்லது சுக்கிர திசையோ வந்தால் அந்த ஜாதகரின் நிலை என்ன தெரியுமா?



சொல்லவே கூச்சமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் வேறு வழியில்லை.உரிய ஜாதகர் இனி நிம்மதியாக வாழ வழி காட்டித்தான் ஆக வேண்டும்.



ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிரதிசையோ அல்லது ராகு திசையோ வந்தால் அவரது முழு உடலும் புகைப்படம் அல்லது வீடியோவாக இணையத்தில் வெளிவந்துவிடும்.சரி,சுக்கிரனும்,ராகுவும் சேர்ந்திருந்து,சுக்கிர திசை அல்லது ராகு திசை வராவிட்டால்? வாழ்க்கையில் ஒருதடவையாவது காமரீதியான அவமானத்தை அடைய வேண்டும்.இந்த சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை இவர்களின் முன் ஜன்மத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது.இந்த சுக்கிரன் ராகு சேர்க்கையை குருவின் ஏழாம் பார்வை பார்த்தாலும்,குரு சேர்ந்திருந்தாலும் இதே நிலைதான்! 



வெள்ளைக்காரர்கள்,வெள்ளைக்காரிகளுக்கு இது பொருந்தாது.ஏனெனில்,அவர்களின் நாகரீகம் அம்மண நாகரீகம்.மானங்கெட்ட நாகரீகம்.



இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் எந்த மதமாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த ஜாதியாக இருந்தாலும் மேற்கூறிய கிரக அமைப்புள்ள ஆண்/பெண் பிறந்தால்,அந்த ஜாதகர் உரிய திசையான ராகு திசை அல்லது சுக்கிரதிசை வரும் போது இந்த மகத்தான அவமானத்தை அடைவார்;



இந்த திசை வருவதற்கு முன்பாக இந்த கோவிலுக்கு அதிக பட்சமாக 24 முறையும்,குறைந்த பட்சமாக 6 முறையும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 முதல் 12 க்குள் (ஆமாம் ,இராகு காலத்தில்)108 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டப்பின்னர், இந்த வலம்புரநாதரின் சன்னிதிக்கு முன்பாக மஞ்சள் பட்டுத்துண்டில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசிவஓம் என ஜபிக்க வேண்டும்.அகல் விளக்குகள் இந்தக் கோவிலில் போதுமான அளவில் இருக்கின்றன.எனவே ,நெய் மட்டும் வாங்கிக்கொண்டு சென்றால் போதுமானது.



தவிர,சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருக்க ஒரு பெண் பிறந்திருந்தால்,அந்தப் பெண்ணுக்கு ஒரு தடவையாவது கர்ப்பம் கலையும்.தவிர வாழ்நாளில் ஒரு தடவையாவது காமரீதியான அவமானங்களை அடைந்தாக வேண்டும்.இதே கிரக அமைப்பில் ஒரு ஆண் பிறந்தால்,ஆண்மைக்குறைவுக்கு ஆளாக வாய்ப்பு உண்டு.அல்லது காதலால் அல்லது பெண்ணால் அவமானப்பட வேண்டும்.



அப்படி அவமானப்படாமலிக்க இந்த மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலுக்கு 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வருகை தந்து காலை 11 முதல் 12 மணிக்குள்ளும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளும் நெய் தீபங்கள் ,அகல் விளக்கில் 108 எண்ணிக்கையில் ஏற்றி வழிபட வேண்டும்.



மேலும்,எந்த ஒரு பெண் அல்லது ஆணின் பிறந்த ஜாதகத்தில் ,(எந்த ராசியாக இருந்தாலும்,எந்த நட்சத்திரமாக இருந்தாலும்,எந்த லக்னமாக இருந்தாலும்) கன்னி ராசியில் சுக்கிரன்,செவ்வாய்,இராகு சேர்ந்திருந்தால் அல்லது சுக்கிரன்,செவ்வாய்,கேது சேர்ந்திருந்தால் 24 செவ்வாய்க்கிழமைகளும்,12 வெள்ளிக்கிழமைகளும் இங்கு வருகைதந்து 108 நெய் தீபம் அகல் விளக்கு எனப்படும் மண் சட்டியில் ஏற்றிவிட்டு,சன்னதியில் அமர்ந்து 1008 முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவர்களுக்கு எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லை;



தமிழ்நாட்டில் பல ஆண்களும் பல பெண்களும் பெற்ற தாய் தந்தையாலேயே அவமானப்படுத்தப்படுகின்றனர்.ஆமாம்! எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வயது 25.எம்.எஸ்.ஸி படித்துவிட்டு,வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.21 வயதில் ஒருவனை காதலித்திருக்கிறாள்.22 ஆம் வயதில் இந்த காதல் அவளது அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது.அவர் இந்த காதல் பற்றி எதுவுமே சொல்ல வில்லை;எதிர்க்கவுமில்லை;ஆதரிக்கவுமில்லை;இவளோ பயந்துபோய்,தனது காதலனை உதறியிருக்கிறாள்.இவளது அப்பா தனது அலுவலக நண்பர்கள்,தெரு நண்பர்கள்,உறவினர்கள் என எல்லோரிடமும் இந்த 22 வயது மகளைப் பற்றி எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ,அவ்வளவு இழிவாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.இப்போது அந்த பெண்ணுக்கு வயது 27.பெற்ற அப்பாவே இப்படி அவதூறு பரப்புவதால்,அந்தப் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.இவரது ஜாதகத்தினைப் பார்த்தப்பின்னர்தான் காரணமும்,இவரது முன் ஜன்ம ரகசியங்களும் புரிந்தது. பரிகாரமாக இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி வழிகாட்டிட,4 தடவை மட்டுமே இந்தப் பெண் தனது அம்மாவுடன் மிகுந்த போராட்டத்துக்கிடையே போயிருக்கிறாள்.தற்போது மிகச்சிறந்த கணவன் அமைந்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள். 



செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்தப் பரிகார வழிபாட்டு முறையை நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும்,தான் செய்த தவறுக்கு மனதார வருந்தி,உரிய பரிகார வழிபாட்டைச் செய்தால் மட்டுமே கிரகங்கள் தீமைகளைக்குறைக்கும்; ‘கடமைக்கே’ என்றோ அல்லது ஜாலி ட்ரிப்பாக செய்தால் பலனில்லை;



மேலப்பெரும்பள்ளம் செல்வது எப்படி?



மயிலாடுதுறை ,சீர்காழி , பூம்புகார் இந்த மூன்று ஊர்களும் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த முக்கோணத்துக்கு நடுவே அமைந்திருக்கிறது.மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் மேலையூரில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.அல்லது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்னுமிடத்தில் இறங்க வேண்டும்.இங்கிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.கோவிலின் அருகிலேயே கோவில் காவலாளியின் வீடு அமைந்திருக்கிறது.பல மகான்களும்,சித்தர்களும் சூட்சுமமாக இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகைதந்து வழிபட்டு வருகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது.கோவிலின் உள்ளே ஒரே சன்னதியில் நம்மை இயக்கும் சனிபகவானும்,அவரது குருவும் பிரபஞ்சத்தை இயக்கும் கால பைரவரும் காட்சியளித்துவருகின்றனர்.ஒரு முறை போய்வருவது நல்லது.கோவிலை ஒட்டி ஒரு டீக்கடை கூட கிடையாது.எனவே, அருகில் இருக்கும் ஊரிலேயே அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்லவும்.



இன்னொரு சுலப வழி உண்டு.கீழப்பெரும் பள்ளம் செல்லவும்.அங்கிருந்து ஆட்டோ பிடித்தும் செல்லலாம். 




ஓம்சிவசிவஓம்
இத்துடன் தொடர்புடைய பதிவு:காமரீதியான பிரச்னைகளும்,கலியுகத்தின் வீச்சும்

பிள்ளையார் பட்டி அருகில் இருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்,வயிவரவன்பட்டியின் சிறப்புகள்





Sunday, February 26, 2012

திருநங்கைகளின் மனவேதனைகள் தீர ஒரு ஆன்மீக வழிகாட்டுதல்








விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கு இருந்தே தீரும்;இந்த விதிவிலக்கு பெரும்பாலும் நன்மையளிப்பதாகவே இருக்கிறது.ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர! மனித இனங்களில் ஆண்,பெண் என இரண்டே இரண்டு இனங்கள் இருந்தாலும்,பாதி ஆண்;மீதி பெண் அல்லது பாதி பெண்;மீதி ஆண் என்று சேர்ந்து ஒரு மனிதனையும் பிரம்மா படைத்துவருகிறார்;இவர்களுக்கு இந்த காலத்தில் திருநங்கை என்ற அடையாளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும்,இந்த திருநங்கைகளின் மனக்குமுறல்கள் பல நூற்றாண்டுகளாக வெளிப்படுத்திட வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கிறது.நவீன தொழில்நுட்பம் நிறைந்த இக்காலத்தில்தான் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியிருக்கின்றனர்.இருப்பினும்,இவர்களை இழிவாகவும்,கேவலமாகவும் பார்க்கும் நிலை இன்னும் மாறவேயில்லை;மேலும் இவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே பிற இனங்கள்(ஆண் இனம்,பெண் இனம்) உணருவதேயில்லை;அந்த அளவுக்கு இவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது.
மனுதர்மம் தொடங்கி,சுக்கிரநீதி வரையிலும் இருக்கும் புராதனமான தர்மநீதி நூல்களில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி ஏராளமாக விவரிக்கப்பட்டுள்ளன;

எந்த ஒரு பெண்ணையும் அனாவசியமாக அழ வைத்தால்,அது கடுமையான தோஷமாக உருவெடுக்கும்;எந்த ஒரு பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும்,அதனால் ஏற்படும் பாவங்கள், பரிகாரத்தில் தீர்க்கமுடியாத பாவங்களின் பட்டியலில் இருக்கின்றன.அதே போலத்தான்,திருநங்கைகளை மனம் நோகடித்தாலோ,திருநங்கைகளை கதறியழுமளவுக்கு யார்  செய்தாலும் (ஆண் அல்லது பெண்) அவர்கள் பரிகாரத்துக்கு உட்படாத பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாவார்கள்.அதன்விளைவாக,அவர்களின் குடும்பத்தில் அதேபோன்ற குழந்தைகள் (திருநங்கைகள்) பிறப்பார்கள்;மேலும்,இவ்வாறு நோகடிப்பவர்களுக்கு தொழிலில் அல்லது வேலையில் கடுமையான சிக்கல்கள் உண்டாகும்.அந்தச் சிக்கல்களைத் தீர்க்க யாராலும் முடியாது.ஏனெனில் ,இந்த சாபம் குறைந்தது ஏழு பிறவிகளுக்கு தொடரும்.

திருநங்கைகளின் மன வேதனைகள் தீர என்ன வழி?


அடாவடித்தனம் செய்வதில் திருநங்கைகளும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு இந்த வழிமுறை சிறிதும் பொருந்தாது;


சுமார் 17,50,000 ஆண்டுகளாக இருந்துவரும் கோவில் திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் ஆகும்.இந்த மாதிரியான பிரம்மாண்டமான வருடக்கணக்கினை 5000 ஆண்டுகளில் நாகரீகமடைந்த ஆங்கிலேயர்களால் நினைத்துப்பார்க்கமுடியவில்லை;இருப்பினும் உண்மை என்பது எப்போதும் உண்மைதானே!


 ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன்,புதன் இந்த இரண்டு கிரகங்களும் உச்சமாக இருந்தாலோ,நீசமாக இருந்தாலோ அவர்கள் இந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதப்பெருமாளை நிச்சயம் நேரடியாக வந்து தரிசிக்க வேண்டும்.சுக்கிரன் உச்சம் அல்லது நீசமாக இருக்கும்போது பிறந்தவர்கள்,குறைந்தது 6 வெள்ளிக்கிழமைகள்; அதிகபட்சம் 24 வெள்ளிக்கிழமைகளுக்கு வந்து சுக்கிரஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை தரிசிக்க வேண்டும்;


அதேபோல,புதன் உச்சம் அல்லது நீசமானாலோ அவர்கள் குறைந்தது 5 புதன் கிழமைகள்; அதிகபட்சம் 23 புதன்கிழமைகள் இங்கு வந்து புதன் ஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை வழிபட வேண்டும்.


சுக்கிரனும்,புதனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால்,அவர்களே திருநங்கைகள் ஆவர்.அவர்களுக்கும் இந்த ஆலயம் பரிகாரம் தரும் ஸ்தலம் ஆகும்.


யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத திருநங்கைகள்,ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் திருச்சியின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாளை வழிபடவேண்டும்;அவ்வாறு வழிபடும்போது தனது பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்தபின்னர்,ஸ்ரீரங்கம் கோவிலின் உட்பிரகாரத்தில் அல்லது கடைசியாக இருக்கும் விசாலமான வெளிப்பிரகாரத்தினை 16 சுற்று சுற்றிவர வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,இதுவரை தனக்கு ஏற்பட்ட வேதனைகள்,ஏக்கங்கள் தீரவேண்டும் என்ற வேண்டுதலோடு சுற்றிவர வேண்டும்.அதன்பிறகு,கோவில் யானைக்கு கரும்பு அல்லது உணவுப்பொட்டலம் வாங்கித்தர வேண்டும்;


இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் மட்டும் செய்து வந்தாலே,அவர்களின் சகல விதமான வேதனைகளும்,ஏக்கங்களும் எட்டாவது வாரத்திலிருந்து 90 நாட்களுக்குள் தீர்ந்துவிடும்.
ஒருவேளை யானைக்கு தானம் செய்யமுடியாவிட்டால்,கோவிலுக்கு வெளியே மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.


இந்த தெய்வீக ரகசியத்தை ஆராய்ந்து நமக்கு அருளியிருப்பவர் ருத்ராட்ச தெரபிஸ்ட்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்  ஐயா   ஆவார்.

ஓம்சிவசிவஓம்
ஓம்ஹரிஹரிஓம்



Thursday, February 23, 2012

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் இருப்பிடங்கள் பகுதி 8


ஜீவசமாதி வழிபாடு செய்ய விரும்புவோர்,தனது பிரச்னைகள்,கஷ்டங்கள் தீர வேண்டும் என்றுதான் செல்வார்கள்.அதுதான் மனித இயல்பும்கூட! அதே சமயம்,ஜீவசமாதி அல்லது சித்தர் வழிபாடு செய்யத்துவங்கியதுமே,அவரவர் தன்னிடம் இருக்கும் துர்குணங்களை கைவிட்டுவிட வேண்டும்.அப்போதுதான்,சித்தர்களும்,மகான்களும் நமக்கு அருள்புரிவார்கள்.இதை ஆன்மீகரீதியாக ஆராய்ந்து கூட கண்டுபிடிக்கலாம்.
ஒரு உதாரணம் சொன்னால்,உங்களுக்குச் சுலபமாகப் புரியும்:எனக்கு இருக்கும் நட்பு வட்டம் பெரியது;எனது நீண்டகால நண்பர் அவர்.எங்களின் நட்பின் வயது 22 ! அவரது குடும்பப் பின்னணி அனைத்தும் எனக்குத் தெரியும்;எனது குடும்பப்பின்னணியும் அவருக்கு நன்றாகவே தெரியும்.என்னால் அவர் ஒருமுறை கூட பண உதவி பெற்றதில்லை;அவரும் என்னிடம் கேட்டதில்லை;ஆனால்,எனது ஜோதிடத் திறனால்,அவரது ஜாதகத்தை தினமும் சில நிமிடங்களுக்கு ஆராய்ந்து வைத்துக்கொள்வேன்;செல்போன் பரவலாகும் முன்பு,என்னை தினமும் ஏதாவது ஒரு தடவை நேரில் சந்திப்பார்;அவரது பிரச்னை,மனநிலைக்குத் தகுந்தாற்போல,அவரது ஜாதகத்தில் ஒளிந்திருக்கும் நல்ல விஷயங்களை அவருக்கு நான் எடுத்துரைப்பேன்;அதனால், அவர் தன்னை தனது குணக்குறைபாடுகளை சீர்திருத்திக்கொண்டே வந்திருக்கிறார்.

அதே சமயம்,காதல்,அரசியல்,மனோதத்துவம்,ஆவிகள்,பேய்,             இந்தியாவின் எதிர்காலம்,அணுகுமுறை விஞ்ஞானம்,ஜாதி அரசியலின் பக்கவிளைவுகள்,பத்திரிகைச் செய்தி என அனைத்து விஷயங்களிலும் ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகள் எங்களிடம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.பல ஆண்டுகளாக பழகியதன் விளைவாக, அவரிடம் இருக்கும் சில விரும்பத்தகாத குணங்களைக் கண்டறிந்து, அவரிடம் ஒருநாள் சுட்டிக்காட்டி,இதை நீ கைவிட்டே ஆக வேண்டும் என்று புரியவைத்தேன்;ஆனால்,அவரோ,அன்று முதல் என்னிடம் நல்லவன் போல நடிக்க ஆரம்பித்தார்;அதையும் கண்டறிந்து,திருந்தச் சொல்லி பல ஆண்டுகளாகக் கெஞ்சினேன்.
சில மாதங்களுக்கு முன்பு,எனது ஆன்மீக குருவிடம் அந்த 22 வருட நண்பரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன்.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் படி,ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் வரையோ,அதற்கும் மேலோ நண்பராக இருந்தால்,அவர்கள் முற்பிறவி நண்பர்கள்;அதே போல,இருவர் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரியாக இருந்தால்,அவர்கள் முற்பிறவி எதிரிகள் ஆவார்.
எனவே,எனது ஆன்மீக குருவிடம், “குருவே,இவர் எனது முற்பிறவி நண்பர்” என அறிமுகப்படுத்தினேன்.அவரும் அதை மனதில் கொண்டு,அவருக்கு சிலபல ஆன்மீக ஆலோசனைகளைச் சொன்னார்.அதே நாளில்,எனக்கும் ஒரே ஒரு ஆன்மீக ஆலோசனை சொன்னார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களில்,ஆன்மீக ஆலோசனையை நான் செயல்படுத்திப் பார்த்துவிட்டு,எனது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டேன்.ஆனால்,எனது 22 வருட நட்பு,இன்னும் அந்த ஆன்மீக ஆலோசனையை ஆரம்பிக்கவே இல்லை;இன்னும் எனது 22 வருட நட்பு பல்வேறு விதமாக கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.என்னால்,இதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை;அவர் மேல் பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.


 யாரையும்,எப்போதும்,எதற்காகவும் நம்பாத அவரது குணமே காரணம்.நாம் ஒருவரை ஆழமாக நேசிக்கிறோம்.(அது நமது குழந்தை அல்ல;வாழ்க்கைத் துணை அல்ல;அரசியல் நட்பும் அல்ல;சாதாரண மனித உறவு)அப்படி நேசிக்கும்போது,அவர்களின் குறைகள் நமக்கு குறைகளாக சிறிதும் தெரியாது.ஆனால்,ஜோதிடராக நான் இருப்பதால்,எனது 22 வருட நட்பிடம் பல மாதங்களுக்கு இந்த குறையைச் சுட்டிக்காட்டி,இதிலிருந்து மாற்றிக்கொள்ளும்படி மன்றாடிக்கொண்டும் கூட மாறவில்லை;ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து,நீ உன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால்,எதாவது ஒரு முக்கிய சந்திப்பு உனக்கு நிகழ்ந்தும் கூட,அந்த புதிய உறவினை சரியாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியாமல் போகும் என்று எச்சரித்திருக்கிறேன்.இந்த எச்சரிக்கை,நிகழ்ந்த சில ஆண்டுகளில் இப்போது அது நிகழ்ந்தே விட்டது.ஆக,நம்மில் பெரும்பாலானவர்கள்,யாரையும் நம்புவதில்லை;தன்னையும் நம்புவதில்லை;தனது வாழ்க்கைத் துணையையும் நம்புவதில்லை;
நமது ரத்த உறவுகளுக்கு நாம் எப்போது எப்படி சிந்திப்போம்? எப்படி பேசுவோம்? ஏன் அப்படிப் பேசுகிறோம்? என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.அதே மாதிரி, பொதுத் தொடர்பில் இருப்பவர்களில் பலருக்கு நம்மை முதன்முதலில் பார்த்த அடுத்த நொடியே நம்மை,நமது ஆளுமைத் திறனை மதிப்பிட்டுவிடுவார்கள்;
நம்மை விட செல்வாக்கானவர், நம்மை நம்பி ஒரு சிறிய வேலையை ஒப்படைக்கும்போது,நாம் அவர்களை நம்புவதைப்போல,அவர்களும் நம்மையறியாமலேயே நாம் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம்? என்பதையும் உளவு பார்க்கத் தான் செய்வார்கள்.அப்படி பார்த்தபின்னர்,அவர்களின் திறனுக்கு ஏற்றபடி,நாம் நம்பிக்கையானவர்களாக இருந்தால் தான்,நமக்கு மறக்க முடியாத அளவுக்கு உதவி செய்வார்கள்.நமது ஆழ்மனத்தில் அந்தரங்க சுத்தி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்,இந்த உலகில் நாம் தனி மரமாக நிற்க வேண்டும்.
எல்லோரையும் நம்பி,நம்பி பல நூறுமுறை ஏமாந்த நல்ல எண்ணமுள்ளவர்களுக்குக் கூட, வாழ்க்கையில் ஒரு நாள், மிகச் சிறந்த நட்பு அல்லது  குரு அல்லது காட்பாதர் கிடைத்துவிடுவார்.
யாரையும் நம்பாதவர்களுக்கு ஒரு நல்ல நட்போ அல்லது வழிகாட்டியோ அல்லது காட்பாதரோ கிடைத்தால் கூட,அவர்கள் வாழ்க்கையில் சிறிதும் முன்னேற முடியாது.

வாழ்க்கையில் சுயநலம் தேவைதான்;ஆனால்,அடுத்தவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது.கட்டாயம் என்ற அச்சில் தான் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.அதற்காக, என்னால் மட்டுமே உனது பிரச்னையைத் தீர்க்க முடியும் என்ற தற்காலிக அகங்காரத்தால் வீழ்ச்சியடைந்து,நாசமாகப் போனவர்கள் பல கோடிப் பேர்கள்!!!

திண்டுக்கல்

ஓதச்சாமி(சுப்பையாசாமி)
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி இருக்கிறது.பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது இந்த ஓதசுவாமி திருக்கோவில்.
கருணாம்பிகை அம்மையார்
திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கா.புதுப்பட்டி
கள்ளியடி பிரம்மம்
திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.
கசவனம்பட்டி
நிர்வாண மவுனகுரு சாமி
திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது.

திருமலைக்கேணி
காமாட்சி மவுனகுரு சுவாமிகள்
திண்டுக்கல் டூ செங்குறிச்சி சாலையில் 23  கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி இருக்கிறது.இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருக்கிறது.ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது. மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பெரியகுளம்

மவுனகுரு சாமி
பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும்   வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஒட்டன் சத்திரம்

ராமசாமி சித்தர்
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.

கொடுவிலார்ப்பட்டி

ஸ்ரீசச்சிதானந்த சாமி
தேனியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் கொடுவிலார்பட்டி  சச்சிதானந்த ஆஸ்ரமம் வளாகத்துக்குள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

உசிலம்பட்டி கோட்டைப்பட்டி

நமோ நாராயண தேசிக ஆனந்த சாமிகள்

மதுரை உசிலம்பட்டியிலிருந்து எழுமலை சாலையில் கோட்டைப்பட்டி என்னுமிடத்தில் ஜீவசமாதி இருக்கிறது. இங்கிருக்கும் நந்திக்கு கீழே சுவாமியின் சீடர் குருநாத சாமி அடக்கமாகியிருக்கிறார்.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் 12 ஆம் நாள்!!!

சாப்டூர் விட்டல்பட்டி

சடையானந்த ரெட்டியார் சாமி

உசிலம்பட்டியிலிருந்து 36 கி.மீ.தூரத்தில் இருப்பது சாப்டூர். அங்கிருந்து 4 கி.மீ.தூரத்தில் இருப்பது வண்டப்புலி விட்டல்பட்டி.இங்கிருக்கும் தெப்ப ஊரணி அருகில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

செட்டியப்பட்டி
நிலைமாறானந்தா சாமி
செட்டியப்பட்டியில் இருக்கிறது.

கரூர்

கருவூரார்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கருவூராரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது. சித்திரை மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
ஒத்தை வேட்டி சாமி
அமராவதி ஆற்றின் வடகரை நஞ்சப்பன் படிக்கட்டுத் துறையில் அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.ஆனி மாதம் வரும் அனுஷம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!

நெரூர்
சதாசிவ பிரமேந்திரர்
கரூரிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் காவேரிக் கரையில் கைலாச ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

சதாசிவானந்தா

சதாசிவானந்தா ஆஸ்ரமத்தில் சமாதியில் மேருபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மவுனகுரு சாமி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஓயாமரி எனப்படும் இடுகாட்டுப்பகுதியில்  தேவஸ்தானம் என்ற பெயரில் நினைவிடம் அமைந்திருக்கிறது.

மாக்கான் சாமி

ஓயாமரி சாலையில் இடதுபக்கம் காவேரிக்கரையில் மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.

ஸ்ரீரங்கம்

ராமானுஜர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுனுள் உடையவர் சன்னதியில் ராமானுஜர்  ஸ்தூல திருமேனி புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளது.இங்கு அமர்ந்து ஓம்ஹரிஹரிஓம்  ஜபிக்க விரைவான பலன்கள் கிடைக்கும்.

வரகனேரி

ஸ்ரீகுழுமியானந்த சுவாமி

திருச்சி வரகனேரி பஜார் தெருவின் தென்பகுதியில் ஸ்ரீசற்குரு குழுமியானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளே அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா வைகாசி மாதம் வரும் திருவோணம்!

திருப்பட்டூர்

பதஞ்சலி

திருச்சி டூ சமயபுரம் டூ சிறுகனூர் பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி முனிவர் பிருந்தாவனம் இருக்கிறது.இங்கும் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர,விரைவான பலன்கள் கிடைக்கும்.

புலிப்பாணி

திருப்பட்டூரிலிருந்து அரை கி.மீ.தூரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் வியாக்ரபாதர் என்ற புலிப்பாணி ஜீவ பிருந்தாவனம் அமைந்துள்ளது.

திருவெள்ளறை

சிவப்பிரகாச சுவாமி

திருச்சி டூ துறையூர் சாலையில் திருவெள்ளறை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தின் அருகில் சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் வரும் கடைசி திங்கட்கிழமையன்று வருடாந்திர குருபூஜை!

லால்குடி பின்னவாசல்

யோகீஸ்வரர்(எ)ராமகிருஷ்ணசாமி

லால்குடி அருகே பின்னவாசல் கிராமம் இருக்கிறது.இங்கே பல்குனி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

தொட்டியம்

நாராயண பிரமேந்திரர்

திருச்சி டூ சேலம் சாலையில் அமைந்துள்ளது தொட்டியம் கிராமம்.இங்கிருந்து 14 கி.மீ.தூரத்தில் காட்டுப்புத்தூர் காவிரி வடகரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

பெரம்பலூர்

தலையாட்டி சித்தர்
புதிய பஸ்நிலையத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் பிரம்மரிஷி மலைச்சாரலில் மூசாக்கோட்டை ஆசிரமம் அமைந்திருக்கிறது.இந்த ஆசிரமத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

செந்துறை

மெய்வரத்தம்பிரான்

செந்துறை மடத்துக் கொவிலில்(பழனியாண்டவர் கோவில்) சமாதி இருக்கிறது.

தஞ்சை/திருவாரூர்/நாகை

தஞ்சை கரந்தை

பால்சாமி

கரந்தை பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி கோவில் இருக்கிறது.சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தனுத்தாரி பாபா

கரந்தை தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம் இருக்கிறது.இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.

தென்பழனி சத்தியநாராயண சித்தர்

கரந்தை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை ‘சித்தர் மண்டபம்’ இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில் சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆதித்த குரு

கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.

மன்னார்குடி & விடயபுரம்

சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்

கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

வெண்ணவாசல் கொரடாச்சேரி

பாண்டவையாற்றின் அருகே ஸ்ரீவாலையானந்தா ஆஸ்ரமம் இருக்கிறது.இங்கு மகாமேரு கோவிலுக்கு மேற்கே சமாதிபீடம் இருக்கிறது.

திருப்பூந்துருத்தி

தீர்த்த நாராயண சாமி

தஞ்சை டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத் திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு

அகப்பேய் சித்தர்

ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.

தியாகராஜ சுவாமிகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில் இருக்கிறது.சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை  தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.

ஆட்கொண்டார் சாமி

திருவையாறு திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.சாலையின் வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில் இருக்கிறது.

சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்

கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளில்ன் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.

ஸ்ரீதம்பலசாமி

சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.

ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்

காவிரியின் வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்

திருவையாறு டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின் மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

சித்தேசர்

ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)

புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஆண்டார் சமாதி

மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி  இருக்கிறது.

தாராசுரம்

ஒட்டக்கூத்தர்

தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.

சுவாமிமலை

சச்சிதானந்த சாமி

சுவாமிமலை வடகரையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.சமாதி மீது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கீழக்கோட்டையூர்

ஸ்ரீராமா சாது

கும்பகோணம் சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் இருப்பது கீழக்கோட்டையூர் கிராமம் ஆகும்.இங்கிருக்கும் வள்ளலார் கல்வி நிலைய வளாகத்துக்குள் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பிப்ரவர் 14 !

நரசிம்மபுரம்

ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாச யதீந்திர மஹா சாமிகள்
சுவாமிமலை அருகில் ஆதனூர் டூ புள்ளபூதங்குடி இடையில் நரசிம்மபுரம் சிற்றூர் இருக்கிறது.இங்கிருக்கும் திருக்குளம் பிருந்தாவன வளாகத்தில் முதலில் இருப்பது சுவாமிகளின் பிருந்தாவனம் ஆகும். இந்த சுற்றுப்புறத்தில் இவருக்குப் பின் பீடமேறிய நான்கு பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களும் இங்கு இருக்கின்றன.


கும்பகோணம்

திருமழிசை ஆழ்வார்
ஆதி கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தாரத் தெருவின் தென் கடைசியில் திருமழிசைபிரான் திருக்கோவில் இருக்கிறது.இங்கு யோகநிட்டையில் அடங்கிய இடத்தில் மேடையில் திரு உருவபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஓம்ஹரிஹரிஓம் செய்ய மிகவும் உகந்த இடமாகும்.

கும்பமுனி எனப்படும் அகத்தியர்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர் சன்னதியின் கீழே அகத்தியர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவிஜியீந்திர தீர்த்தர்

159,சோலையப்பன் தெரு அருகில் ஸ்ரீவிஜியீந்திர சுவாமிகள் படித்துறையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

மவுனசாமி

ஆதி கும்பேஸ்வரர் கோவில் சற்றுத்தொலைவில் மவுனசாமி மடத்துத் தெருவில் சுவாமிகளின் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.

அருணாச்சல சாமிகள்

மவுனசாமிகள் சமாதிக்கு தெற்குப் பக்கம் சமாதி இருக்கிறது.

ஸ்ரீஅண்ணாசாமிகள்

மடத்துத் தெரு வடகோடியில் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிரில் துளசி மாடமாக சுவாமிகளின் அஸ்தி பீடம் இருக்கிறது.
கருப்பணசாமி, மூட்டைச்சாமி,ராமலிங்கசாமி
ரயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே திருநாராயணபுரம் வடக்கு வீதி இருக்கிறது.இந்ததெருவின் கடைசியில் திரும்புமிடத்தில் பழைய கருப்பணசாமி மடம் இருக்கிறது. புதிய கதவு எண்:5 இன் பக்கமாக உள்ள சிறிய சந்தின் வழியாக சென்றால் வீட்டின் பின்புறம் சுவாமிகள் மூவரும் சமாதியான இடத்தில் முளைத்த அரசமரமும் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதையும் காணலாம்.

ராமச்சந்திர தீர்த்தர்

கும்பகோணம் மேலக்காவிரியில் அமரேந்திரபுர அக்ரஹாரம் இருக்கிறது.தற்போது அமரேந்திரபுரத் தெரு என்று பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் கடைசியில் காவிரிக்கரையில் மூல பிருந்தாவனம் இருக்கிறது.

திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.

திருவீழிமலை

ஸ்ரீவீழி சிவவாக்கிய யோகிகள்

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ.தூரத்தில் திருவீழிமலை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தில் கீழவீதியில் திருமடத்தில் யோகிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.

திருபுவனம்

விராலிமலை சதாசிவ சாமி

கும்பகோணம் டூ மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ.தூரத்தில் திருபுவனம் இருக்கிறது.இங்கு கம்பரேஸ்வரசாமி சிவாலயத்திற்கு அருகே மடமும் சமாதிக்கோவிலும் இருக்கிறது.

ஆடுதுறை

சைதன்ய சிவம்

ஆடுதுறை சூரியனார் கோவில் சாலையில் காவிரியாற்றின் மேம்பாலத்தின் மேற்கே அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவிலில் விநாயகருக்குக் கீழ் இவரது ஜீவசமாதி உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது.


சாத்தனூர்

திருமூலர்

ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது.இந்த ஊருக்கு வெளியே ஐயனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் கோவிலின் பின்புறம் திருமூலரின் ஜீவசமாதி இருக்கிறது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடமாகும்.

சூரியனார் கோவில்

சிவாக்கிர யோகிகள்

ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் இருக்கிறது.இங்கிருக்கும் தெற்குவீதியில் திருமடத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக்கோவில் இருக்கிறது.

கஞ்சனூர்

ஸ்ரீஹரதத்தர்

ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் கஞ்சனூர் இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் மணியாக்குளம் வடகரையில் வடமேற்கு பாகத்தில் அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.

சுயம்பிரகாசர்

கஞ்சனூர் மணியாக்குளம் தென்புறம் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சந்நிதியில் சிவலிங்கபிரதிஷ்டையுடன் சமாதி இருக்கிறது.அருகில் இரு சீடர்கள் சிவானந்தர் மற்றும் பரமானந்தர் ஆகியோரின் அதிஷ்டானங்களும் இருக்கின்றன.ஆலயத்திற்கு வெளியே தெற்கே தள்ளி ஸ்ரீவைத்தியலிங்க சாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


திருநாகேஸ்வரம்

ஸ்ரீநாராயணசாமி சித்தர்

உப்பிலியப்பன் கோவிலுக்கு வடக்கே கீழநடுப்பட்டறை தெருவின் கடைசியில் சமாதி பீடம் இருக்கிறது.மாசி மாதம் வரும் புனர்பூசம் நட்சத்திர் நாளில் வருடாந்திர குருபூஜை!!

கீழக் கபிஸ்தலம்

ஸ்ரீதத்துவராய சுவாமிகள்

கும்பகோணம் டூ திருவையாறு இடையே 15 கி.மீ.தூரத்தில் கீழக்கபிஸ்தலம் இருக்கிறது.இதன் வடக்கே வாழ்க்கை கிராமம் இருக்கிறது.இங்கே சாமியார்தோப்பு என்னும் இடத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.

குடவாசல்

சுப்பிரமணிய சித்தர்

கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் குடவாசல் இருக்கிறது.இங்கே இருக்கும் குருசாமி கோவிலே அதிஷ்டானம் ஆகும்.

திருவிடைமருதூர்

பத்திரகிரியார்

பட்டினத்தாரின் சீடரான இவரது ஜீவசமாதி மகாலிங்கசுவாமி கோவில் கிழக்கு கோபுர வாசலில் சிலை வடிவில் அமைந்திருக்கிறது.

வலங்கைமான்

காரை சித்தர்

வலங்கைமானுக்குக் கிழக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூர் இருக்கிறது.இந்த ஆற்றைக் கடந்தால் காந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.இந்த கொவிலின் பின்புறம் 250 அடி தூரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த பீடத்தில் காரை சித்தரின் சுதையாலான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்க உகந்த நேரம் அமாவாசை நள்ளிரவு மணி 11.50 முதல் 12.10 வரை!!!

பூனைக்கண் சித்தர்

வலங்கைமான் பாய்க்காரத் தெரு பட்டகுளம் சந்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் தசமி திதி அன்று வருடாந்திர குருபூஜை வழிபாடு!!!

சின்னகரம்

வலங்கைமானுக்குத் தெற்கே சின்னகரம் என்னும் சிற்றூர் உள்ளது.இதன் தொடக்கத்தில் துரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறமுள்ள குளத்த்தின் கரையில் வடமேற்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.

கூந்தலூர்

ரோமரிஷி ஜீவசமாதி இங்கே தான் இருக்கிறது.பஞ்சபட்சி சாஸ்திரம் கற்க விரும்புவோர்,கற்றதை சிறப்பாக செயல்படுத்திட விரும்புவோர்,8 அமாவாசைகளுக்கு இங்கு வந்து இரவு11 முதல் 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.

திருவாலங்காடு

முதல்வர் நமச்சிவாய மூர்த்தி & திருமாளிகைத் தேவர்

ஆடுதுறை டூ குத்தாலம் இடையே திருவாலங்காடு இருக்கிறது.இங்கு திருவாடுதுறை ஆதினத்திருமடத்தில் ஆதீனகுரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த வளாகத்துக்குள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி இருக்கிறது.இவருக்கு தைமாதம் வரும் அசுபதி நட்சத்திரநாளில் வருடாந்திர வழிபாட்டு நாள்!!!

முழையூர்

ஆதிசிவப்பிரகாசர்

தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதிசிவப்பிரகாசர் சிவாலயம் இருக்கிறது.இதன் கருவறையே சமாதிக்கோவில் ஆகும்.

கொத்தம்பட்டி

பாலானந்த ஜோதி சுவாமிகள்

தஞ்சாவூர் டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன் வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில் இருக்கிறது.இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை

ஸ்ரீவெங்கிடு சாமிகள்

பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வடகாடு

ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்

முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!

முத்துப்பேட்டை

ஷைகு தாவுத் வலி

ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.

மன்னார்குடி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமி
மன்னார்குடி கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு ஐயர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர தைப்பூசம் தோறும் குருபூஜை!

மாயாண்டி சாமி

சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி இருக்கிறது.

ஸ்ரீவாட்டார் மவுனகுரு சாமி

மன்னார்குடி தென்வடல் 6 ஆம் தெருவில் கோபிநாதப்பெருமாள் கோவில் அருகில் சமாதிக்கோவில் இருக்கிறது.

ஸ்ரீமேரு சாமி

மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் டூ ஈசானியேஸ்வரர் என்னும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கு வாசலை அடுத்து,வாசலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத் தென்புறம் மேருசாமி சமாதிக்கோவில் இருக்கிறது.

பூந்தி சுவாமிகள்

மேலே குறிப்பிட்டுள்ள சிவன்கோவில் அருகில் சுவாமிகளின் சமாதி இருக்கிறது.

வடகரவாயில்

சாமிநாத சித்தன்

மன்னார்குடிக்கு 10 கி.மீ.தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர் இருக்கிறது.அதன் அருகில் வடகரவாயில் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே இருக்கும் நாகமாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.மாசிமாதம் வரும் உத்ராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா !!!
அருகிலேயே குருநாதர் ஆறுமுக சித்தரின் சமாதி இருக்கிறது.இங்கே பங்குனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை!!!

முத்தையா சித்தர்

ராஜப்பையன் சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோவில் வடக்குப் பக்கத்தில் சமாதி இருக்கிறது.மாசி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செருவாமணி

ஆனந்தசாமி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடர் இவர்.மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.இங்கே இவரது ஜீவசமாதி இருக்கிறது.

திருக்களர்

வீரசேகர ஞான தேசிகர்


மன்னார்குடி அருகில் திருப்பத்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது.இதன் அருகில் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் பவுர்ணமியன்று குருபூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மருதூர்

சிவப்பிரகாச சாமிகள்

மன்னார்குடி டூ திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ.தூரத்தில் தட்டாங்கோவில் இருக்கிறது.இதன் தெற்கே 3 கி.மீ.தூரத்தில் மருதூர் இருக்கிறது.இங்கே ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.இங்கே வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் திருஓணம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

திருநெல்லிகாவல்புதூர்

ஸ்ரீஅண்ணன் சாமிகள்(எ)அருணாச்சல சாமிகள்

திருத்துறைப்பூண்டி டூ திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு மேற்கே 3 கி.மீ.தூரத்தில் புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.

நன்னிலம்

தாண்டவராய சுவாமி & நாராயணசுவாமி

நன்னிலம் கடைத்தெரு அருகே பிள்ளையார் கோவில் தெற்கு தெரு இலுப்பைத் தோப்பு இருக்கிறது.இங்கே ஸ்ரீநாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி இருக்கிறது.அருகருகே தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.வடபுறம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் விசாகத்தன்று குருபூஜை வருடம் தோறும் நடைபெற்றுவருகிறது.

சன்னாநல்லூர்
சின்னான் சுவாமி
திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூரில் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடம் தோறும் வரும் ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரநாளில் குருபூஜைவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திருவாஞ்சியம்
ராமையா சாமி
நன்னிலத்திலிருந்து 7 கி.மீ.தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால்பண்ணைச்சேரி கிராமம் இருக்கிறது.இங்கு பாலதண்டாயுதபாணிகோவில் வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 2 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா!

திருவாரூர்
கமலமுனி
திருவாரூர் ஆனந்தீஸ்வரர் சன்னதியில் சித்திபெற்றுள்ளார்.



மடப்புரம் தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மடப்புரம் பகுதியில் கமலாலய தெப்பக்குளத்திற்குத் தென்மேற்கே அம்மையப்பன் செல்லும் சாலையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே இருக்கும் சிவலிங்கத்தின் கீழே சுரங்கக் குகையில் அடக்கமாகியிருக்கிறார்.


திருக்குவளை
வன்மீகர்
திருவாரூர் அருகே திருக்குவளையிலிருந்து 2 கி.மீ.தூரத்திலுள்ள எட்டுக்குடி சவுந்தர ஈஸ்வரர் கோவிலில் சித்திபெற்றிருக்கிறார்.

திருநெய்ப்பேர்
நமிநந்தியடிகள்
திருவாரூர் டூ திருத்துறைப்பூண்டி இடையில் 7 கி.மீ.தூரத்தில் இருப்பது திருநெய்ப்பேர் ஆகும்.இங்கிருக்கும் சிவன் கோயிலைப்பார்த்தவாறு சாலைக்குக் கிழக்கே சமாதித் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

முடிகொண்டான்
ஆலங்குடி சுவாமிகள்
திருவாரூரிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் முடிகொண்டான் சிற்றூர் இருக்கிறது.இங்கு பெரியகுளத்திற்குக் கீழ்க்கரையில் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இந்த கோவிலின் நுழைவு வாயிலில் கிழக்கே மதில் சுவருக்கு வடக்கே ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் என்னும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிரது.சமாதியில் வில்வமரம் இருக்கிறது.


இதே கிராமத்தில் காலணா வெங்கடாஜலபதி திருக்கோவில் இருக்கிறது.மிகவும் புராதனமான,அளவற்ற வீர்யம் மிகுந்த திருக்கோவில் இது.இந்தக்கோவிலில் நமது மாத/ஆண்டு வருமானத்தில் 5% செலுத்திக்கொண்டே வந்தால்,நமது தொழில்/வேலை/கமிஷன் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்பது பலருக்கும் தெரியாத தெய்வீக வைஷ்ணவ ரகசியம் ஆகும்.இங்கு ஏகாதசி தோறும் ஒரு மணி நேரம் வரை ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவந்தால்,நமது நீண்டகாலப் பிரச்னைகள் தீரும்.இவ்வாறு 9 ஏகாதசிகளுக்கு ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர வேண்டும்.

பொறையாறு
பாப்பையா சுவாமிகள்
மயிலாடுதுறைக்கு கிழக்கே 35 கி.மீ.தூரத்தில் பொறையாறு இருக்கிறது.இங்கு இருக்கும் போக்குவரத்துக் கழக பணிமனையின் கிழக்கே பாப்பையா சாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.

மயிலாடுதுறை
குதம்பை சித்தர்
மயிலாடுதுறை சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அரூட சமாதி இருக்கிறது.இங்கே வெள்ளைப்பிள்ளையார் சன்னதி  இருக்கிறது.இதே இடத்தில் குதம்பைச் சித்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பால்சாமி
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் திருமஞ்சனவீதி இருக்கிறது.இங்கே காவிரிக்கரை அருகே பள்ளி எதிரில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கருவறைக்குள் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மணிவாசக சாமி
கூறைநாடு பகுதியில் காவிரி தென்கரையில் சமாதி இருக்கிறது.சமாதியின் மீது தட்சிணக்காளி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவாலங்காடு
கொங்கணசித்தர்
மயிலாடுதுறைக்கு 15 கி.மீ.தூரத்தில் திருவாலங்காடு தென்னந்தோப்பு இருக்கிறது.இதை கொங்கணேஷ்வரர் தோப்பு என்பர்.இங்கே தாமரைக்குளம் அருகில் கொங்கணசித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.

சுடுகாட்டுச்சாமி
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் ராஜன் தோட்டத்திற்கு எதிரில் 25 ஆம் எண் கொண்ட இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே பிரதி கார்த்திகை மாதம் வரும் 2 ஆம் நாளன்று குருபூஜை விழா!

யோக அபிராமி அம்மையார்
மயிலாடுதுறை கச்சேரி வீதியில் தண்டபாணி(முருகன்) கோவிலில் முருகனுக்குக் கீழே நிலவறையில் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஐப்பசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.

பாய்கட்டி சுவாமி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.

சித்தர்காடு
காழி சிற்றம்பலநாடிகள் சுவாமி
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மேற்புறம் சித்தர்காடு இருக்கிறது. காழி சிற்றம்பல நாடிகள் உடன் 60 சீடர்கள் ஒரு சேர சமாதிகொண்ட ஸ்தலம் சித்தர் காடு ஆகும்.

கண்ணப்பர் சாமி
சித்தர்காடு தென்கிழக்கே சாலைக்கு சற்றுதொலைவில் ஸ்ரீஆலந்துரையப்பர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

மாதிரிமங்கலம்
ரோட்டுசாமி(சிவராமகிருஷ்ணசாமி)
மயிலாடுதுறை டூ கும்பகோணம் சாலையில் 12 கி.மீ.தூரத்தில் மாதிரிமங்கலம் இருக்கிறது.இங்கே ரைஸ் மில்லுக்கு தெற்கில் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.இங்கே பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திரநாளில் வருடாந்திர குருபூஜை விழா!

குத்தாலம்
சேதுபாவா சாமி
மயிலாடுதுறை டூ கும்பகோணம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் குத்தாலம் இருக்கிறது.இங்கே சிவன் கோவில் சன்னதி தெருவில் மரம் அறுக்கும் ஆலைக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.

க்ஷேத்திரபாலபுரம்
உறிக்கட்டி சுவாமிகள்
மயிலாடுதுறை டூ கோமல் டூ கும்பகோணம் சாலையிலுள்ள க்ஷேத்ட்திரபாலபுரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரநாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சீர்காழி
சட்டைநாதர்
சீர்காழி சிவாலயத்தில் சித்தியானார்.

தென்பாதி
கதிர்காம சுவாமி
சீர்காழி டூ வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் இருப்பது தென்பாதி ஆகும்.இங்கே உப்பனாற்றில் வடகரையில் பாலத்துக்கு மேற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.

வைத்தீஸ்வரன்கோவில்
தன்வந்திரி
வைத்தீஸ்வரன் கோவில் பிரகாரத்தில் இவரது சமாதி மீது தன்வந்திரி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.சித்த,ஆயுர்வேத வைத்தியம் மற்றும் ஹீலிங்,ரெய்கி சிகிச்சையாளர்கள் இங்கே வந்து பிரதி செவ்வாய்க்கிழமைகளில் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இவ்வாறு மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை வீதம் ஓராண்டு வரை வந்து வழிபட,வைத்தியத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
ஓம்சிவசிவஓம்