Sunday, July 31, 2016

அன்னை ஆதிவராகி(அரசாலை)யின் வடிவங்கள்


அன்னை வராகி, இராமநாதபுரம் அருகில் அமைந்திருக்கும் உத்திரகோசமங்கை என்ற சிற்றூரில்(ராமநாதபுரம் டூ தூத்துக்குடி சாலையில் 18 வது கி.மீ) ஆதி வராகி என்ற மங்கள மகா காளியாக அருளாட்சி புரிந்துவருகிறாள்;இந்த அன்னை சுயம்புவாக உருவானதால்,சக்தி பலமடங்கு அதிகம்;


தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ப்ருகத் வராகியாக விவசாயத்தை வளமாக்கும் அன்னையாக ஆட்சி புரிந்து வருகிறாள்;


காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் நடுவில் பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலை என்ற பெயரில் இந்தப் பிரபஞ்சத்தை ஆண்டு வருகிறாள்;


திருச்சி திருவானைக்கா அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரியாக அன்னை வராகி அருள்மழை பொழிந்து வருகிறாள்;


மதுரை மீனாட்சியும் அன்னையே!


காசி விசாலாட்சியும் அன்னை வராகியே!


பூமியில் இருக்கும் அனைத்து உக்கிரபெண் தெய்வங்களும் அன்னை வார்த்தாளியின் ஆவரணதெய்வங்களே!!!


7.8.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி வருகின்றது;இந்த நாள் தான் ராஜராஜேஸ்வரியின் புருவ மத்தியில் இருந்து அன்னை வராகி தோன்றிய நாள்;

இந்த நாளில் மேலே தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் ஒன்றிற்குச் சென்று,அன்னை வராகியின் 12 பெயர்களை அன்று முழுவதும் ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக அன்னையின் செல்லப் பிள்ளையாக மாறும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி

இந்த 12 பெயர்களை இந்த நன்னாளன்று முழுவதும் ஜபிப்பது அவசியம்;அன்னை வராகியைச் சரணடைய விரும்புவோர் இந்த நாளில் அன்னையை வழிபட ஆரம்பிக்கலாம்;எப்படி வழிபடுவது?

இந்த 12 பெயர்களை ஜபிப்பதுதான்;

இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது அம்பாள் ஆலயத்திற்குச் சென்று ஜபிக்கலாம்;

இன்று முழுவதும் ஜபிக்க இயலாதவர்கள் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்கலாம்;
ஆலயம் செல்ல கூட இயலாதவர்கள் வீட்டில் இரவில் ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;

தொலைதூர தேசங்களில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அவரவர் வீட்டு பூஜை அறைகளில் ஜபிக்கலாம்;

சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மாள் ஆலயத்தில் ஜபிக்கலாம்;ஏனெனில்,இங்கேதான் அருட்பிரகாசம் ராமலிங்க வள்ளலார் 38 ஆண்டுகள் ஒரு நாள் கூடவிடாமல் அன்னையை வழிபட்டு ஒளி உடல் பெற்றார்!!!



ஓம் வராகி சிவசக்தி ஓம்

வராகி அவதாரங்களில் முதன்மையான வராகி சக்திகள்:அஸ்வாரூடாதேவி & சம்பத்கரி வராகி!!!


ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக பிரபஞ்ச அன்னை வராகி இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் குதிரைப்படைத்தளபதியாக இருப்பவள் வராகியின் 64 அவதாரங்களில் ஒருத்தியான குதிரைக்காரி என்ற அஸ்வாரூடா இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் யானைப்படையின் தலைவியாக சம்பத்கரி வராகி இருக்கின்றாள்;

நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவள் இவள்;இவளை உபாசித்தால்,அரசாங்கம்,அரசுகள்,அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் நமக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்;நம்முடைய மனதில் உருவாகும் தேவையற்ற மற்றும் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்திட இந்த அன்னையைச் சரணடைவது மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே வழி! (வேறு வழி இல்லை;)மேலும்,நான் என்ற அகங்காரம் அழியவும் இந்த அன்னை வழிபாடு அவசியம்;

எதிரிகளின் தீரவே தீராத,திருந்தவே திருந்தாத திமிரை அடக்கிட விரும்புவோர் சம்பத்கரி வராகியை வழிபடவேண்டும்;

இவையெல்லாம் முறையான தீட்சை பெற்றே வழிபடவேண்டிய வராகி வடிவங்கள்;

தஞ்சை பெரிய கோவிலுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே ஆண்டுவருபவள் ப்ருஹத் வராகி;இந்த அன்னையை முறைப்படி யார் வழிபட்டு வருகின்றார்களோ அவர்கள் இந்த பூமியில் மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் வெற்றி கொள்வார்கள்;இந்த அன்னையை முறைப்படி வழிபட்டதால் தான் ராஜராஜசோழனின் படைகள் உலகத்தில் மூன்றில் இரண்டு பகுதியை கைப்பற்றி உலகத்தின் மிகப் பெரிய அரசாங்கத்தை உருவாக்கியது;இவரது சோழ சாம்ராஜ்ஜியம் இன்றைய இந்தியா முழுவதும்,பங்களாதேஷ்,திபத்,சீனா முழுவதும்,ஜப்பான்,மலேஷியா,சிங்கப்பூர்,ஹாங்காங்,கொரியத் தீபகற்பம்,பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா முழுவதும் பரவியிருந்தது;

உலகத்தை முதன் முதலில் ஜெயித்தது அலெக்ஸாண்டர் என்பது திட்டமிட்ட பொய்;அலெக்ஸாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பு,ராஜராஜசோழனின் சாம்ராஜ்ஜியத்தில் 100 இல் ஒரு பங்கு கூட கிடையாது என்பதுதான் உண்மை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா வராகி நமஹ

ஓம் வராகி சிவசக்தி ஓம்






அன்னை அரசாலையின் பெருமைகள்!!!


உங்களை நியாயமற்ற முறையில் எதிர்க்கும் எதிரிகளையும்,அவர்கள் உங்களுக்குச் செய்யும் இடையூறுகளையும்(பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம்,பேயை ஏவுதல்,பிசாசை அனுப்புதல்,மாந்திரீக ஏவலின் உச்சமான காஷ்மோராவை ஏவுதல்) நீங்கள் பதிலடி கொடுக்காமலேயே,பக்தியின் மூலமாகவே பதிலடி கொடுக்க வேண்டுமா? அன்னை அரசாலை என்ற வாராகி(தமிழில் வராகி)யை மனப்பூர்வமாகச் சரணடைந்தால் போதும்;அவர்களையும்,அவர்களின் ரகசிய பக்கபலத்தையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவாள் பிரபஞ்ச அன்னை அரசாலை என்ற வராகி!!!


ஆனால் நீங்கள் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிரான,உங்களுக்கு எதிரான நல்ல மனிதர்களை அழிக்க இந்த அன்னையை பிரார்த்திக்கக்கூடாது;அப்படிச் செய்தால்,இந்த பிரபஞ்ச அன்னையை ஏமாற்றிட முடியாது;ஒருபோதும் வரம் தரமாட்டாள்;


நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும்;உங்கள் எதிரிகள் நியாயமற்ற அநீதியாளர்களாக இருக்க வேண்டும்;அவர்களை அழிப்பதற்கே அன்னை தன் அருளை உங்களுக்கு வாரி வழங்குவாள்; உங்களுக்கு அதிக சக்திவாய்ந்த சூட்சும பாதுகாப்பை அன்னை வழங்குவாள்;


கழுகுகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்க பெட்டைக் கோழி எப்படி ஆக்ரோஷமாகப் பாய்ந்து பருந்தை துரத்தி அடிக்கிறது!!!
அப்படித்தான் இந்த பிரபஞ்ச அன்னை அரசாலையும் தன் அன்புக் குழந்தைகளான பக்தர்களைக் காக்க எதிரிகள் என்னும் வல்லூறுகளைத் தாக்கி அழித்து காப்பாற்றுகிறாள்;


அன்னை அரசாலை(வராகி)யை உபாசிப்பவர்கள் அன்னையிடம் சரணடைந்தால் போதும்;நமது கோரிக்கை எதுவாக இருந்தாலும் படிப்படியாக நிறைவேறிவிடும்;


திருமணத் தடை,கல்வித்தடை,கடன் தொல்லை,நோய் உபாதை,சொத்துப் பிரச்சினை, ஆன்மீகத்தில் முன்னேற விரும்பியும் தகுந்த குரு கிடைக்காமை,நீண்டகாலமாக குழந்தையின்மை,நீண்டகாலமாக சோகத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருத்தல்,தொழிலில் முன்னேற்றமின்மை,வேலையில் அக்கறையின்மை முதலான சகல தினசரி வாழ்வியல் சிக்கல்களையும் தீர்க்க அன்னை அரசாலையைச் சரணடைவோம்;

அன்னை அரசாலை(வராகி)யை தொடர்ந்து வழிபடுபவர்களின் வாக்கு வன்மையை அதிகரிப்பாள்;கர்வம் பிடித்தவர்களை பலம் குன்றிப் போகச் செய்வாள்;பிறப்பும்,இறப்பும் அற்ற இந்த அன்னை ப்ராஞப்தம்,சஞ்சிதம்,ஆகாம்யம் ஆகிய மூன்று கர்மங்களையும் தனது ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளுபவள்;


நியாயமற்றவர்களை பாரபட்சமின்றித் தண்டிப்பாள்;
ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருக்க இவள் ஒருத்திக்கே வல்லமை உண்டு;ஆளுமை உண்டு;


அவளது வேகமும்,கம்பீரமும் அவள் குதிரை மீது வரும் போது தெரியும்;அவள் தண்டனையின் உக்கிரம் அவள் கையில் உலக்கை கொண்டு வரும் போது தெரியும்;
தன்னிடம் அடைக்கலம் பெற்றவர்களை அவள் என்றுமே காப்பாற்றாமல் விட்டதில்லை;


தூய மனம்,குற்றமற்ற நடத்தை,நிஜமான பக்தி இவற்றைக் கொண்டவர்களையே அவள் தனது பக்தர்களாக ஏற்பாள்;
வெறும் பூஜைகளாலும்,தீப தூபங்களாலும் அவளை ஏமாற்ற முடியாது;


நீங்கள் அவளுக்கு எப்போதும் பிரியமானவராக இருங்கள்;
அவள் அருள் தானாகவே உங்களுக்கு வந்து அடையும்;உங்கள் இடையூறுகள் நீங்கும்;எதிரிகள் வீழ்வார்கள்;உங்கள் வாழ்க்கை முழுவதும் அவள் அருள் நிலைத்திருக்கும்;


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!


அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!


நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.



இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

ஸ்ரீ துர்கா தேவியின் நாமாவளிகள்

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள்
மற்றும்
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை/சுவாதி/.சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள்
மற்றும்
திருமணம் ஆகி ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து வாழும் தம்பதியரில் யாராவது ஒருவராவது இந்த துதியை தினமும் வரும் ராகு கால நேரத்தில் கடைசி 30 நிமிடங்களில் துர்கை சன்னதியில் ஜபித்து வரவேண்டும்;

இதன் மூலமாக அவர்களுடைய நீண்டகால துக்கங்கள்,சோகங்கள் படிப்படியாக மறையத் துவங்கும்;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இறைவரம் கிட்டும்;துர்கையை வழிபட்டால்,ராகுவின் உக்கிரம் தணியும்;

கணினி,செல்போன்,செயற்கைக்கோள்,மல்டிலெவல் மார்கெட்டிங்,சட்டபூர்வமான சூதாட்டம்,கமிஷன் தொழில்கள்,விதவை போன்றவை ராகுவின் அம்சத்தைப்பிரதிபலிப்பவை;

ஓம் ஸ்ரீ ஆதிசக்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீஆதி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ஆஸீரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ உக்ர சண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கல்யாணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காளிகை துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கரிஷ்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காத்யாயனி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ குமாரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ கூஷ்மாண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சசி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சபரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சாந்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சுபத்ரா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ தீபதுர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மசாரிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ மூல துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ரோகிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லவண துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ வனதுர்கையே போற்றி
ஓம் ஜ்வாலா துர்கையே போற்றி
ஓம் சந்தியா துர்கையே போற்றி

----------------------------------------------------------------------------------------------------------------------
18 கைகள் உடைய துர்கை இருப்பதை நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்;
18,000 கைகள் கொண்ட பிரம்ம்ம்மாண்டமான துர்கை தேவி இருக்கின்றாள்;இந்த அன்னையை பூமியில் ஸ்தாபிக்க ஆசைப்படுவதும் ஒரு மகத்தான புண்ணியமே!'

ஓம் அகத்தீசாய நமஹ

Saturday, July 30, 2016

சிம்மகுருவும் ஆடி அமாவாசை அற்புதமும்


சூரியன் கடகராசியைக் கடக்கும் மாதம் ஆடிமாதம் என்று ஜோதிடப்படி அழைக்கப்படுகின்றது;இதையேதான் வானியல் ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்துகின்றன;

வானமண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து,ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டி அதுவே ராசிகளாக ஜோதிடத்தில் இருக்கின்றன;மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,
துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று 12 ராசிகள் ஜோதிடப்படி மட்டும் ராசிகள் அல்ல;வானியல் ஆராய்ச்சிகளின் படியும் உண்மை! இவைகளை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஒப்புக் கொண்டால்,உலக அளவில் கிறிஸ்தவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்பதால் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையாகவும்,வானியல் என்பது அறிவியல் துறையாகவும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டுள்ளது;


நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் கடகராசி மண்டலத்தில் இருக்கும் ஆயில்யம் நட்சத்திர உலகத்தில் இருந்து இந்த பூமிக்கு அனுப்பப் பட்ட பிரதிநிதி என்று அர்த்தம்;இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் தெய்வீக,ஆன்மீக,ரசவாத உண்மையை தாங்கள் உணர்வுபூர்வமாக உணரவேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு;

அது

உங்களுடைய வாழ்நாளில்,அதுவும் இப்பிறவி நிறைவடைவதற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்துவிடவேண்டும்;அவ்வாறு வந்துவிட்டால்,உங்களுடைய சற்குரு உங்களைத் தேடிவருவார்;

குரு என்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்;அதைவிடவும் 1000 கோடி மடங்கு முக்கியமானவர் சற்குரு!

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சற்குருநாதர்கள் இருக்கின்றார்கள்;இவர்கள் ஒவ்வொருவருடைய வயதும் பல ஆயிரம் ஆண்டுகள்! ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறும் இவர்கள் தமது நடையுடைபாவனையை மாற்றிக் கொண்டு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு நவீன மனிதத் தோற்றத்தில் தான் இருப்பார்கள்;

இவர்களின் பிறப்பைப் பற்றியும் ஜோதிடக் கலைதான் தெரிவிக்கின்றது;தமிழ் வருடங்கள் 60! இந்த 60 ஆண்டுகளில் இந்த பூமியில் பிறக்கும் கோடிக்கணக்கான மனிதர்களில் இரண்டே இரண்டு மனிதர்கள் மட்டும் பல ஆயிரக்கணக்கான வயது ஆயுளுடன் பிறக்கின்றார்கள்;மாசி மாதத்தில் வரும் கும்ப லக்னம் அல்லது பங்குனி மாதத்தில் வரும் கும்ப லக்னத்தில் பிறக்கின்றார்கள்;இவர்களுக்கு கும்பலக்னத்தில் குரு இருக்கும்;அல்லது மீன லக்னத்தில் குரு இருக்கும்;இதற்கு மேல் சித்தர் பெருமக்கள் தெரிவிக்கவில்லை;


நமது சற்குரு நம்மைத் தேடிவந்துவிட்டால்,இதுவரை நாம் எத்தனை மனிதப் பிறவிகள் எடுத்தோமோ,அத்தனை மனிதப்பிறப்பு கர்மவினைகளும் மலையளவு அல்லது கடலளவு இருக்கும்;அவைகள் அனைத்தையும் தனது ஒரே ஒரு உபதேசத்தின் மூலமாக நிர்மூலமாக்கி,நம்மை புதுப்பிறவி எடுக்க வைத்துவிடுவார்;அல்லது இந்தப் பிறவியோடு நமக்கு முக்தி கிடைக்க வைத்துவிடுவார்;(ஏனெனில்,நம்மில் பலர் 2,00,000 முறை இந்த பூமியில் திரும்பத் திரும்பப் பிறந்திருக்கின்றோம்;சிலர் 1 கோடி முறை மனிதப் பிறவி எடுத்துள்ளோம்;)இந்த சித்தர்கள் ரகசியத்தை நமக்கு தெரிவிப்பவர் தமிழ் மொழியின் தந்தையும்,ஜோதிடக்கலை,சித்தமருத்துவம்,யோகக்கலையின் ஆதிகுருவுமான அகத்தியமகரிஷி அவர்கள் நமக்கு உபதேசமாகத் தெரிவித்துள்ளார்;அவருக்கு நாம் நமது ஆத்மார்த்தமான ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும்;


இந்த 1008 முறை கிரிவலத்தை துவக்கிட ஏற்ற சிறந்த நாள் ஆடி அமாவாசை நாள் மட்டுமே! ஒவ்வொரு ஆடி அமாவாசையும் சிறந்த நாளாக இருந்தாலும்,இந்த சதுர்முக வருடம் வரும் ஆடி அமாவாசைக்கு பல சிறப்புகள் உள்ளன;இந்த வருடம் வரும் ஆடி அமாவாசையானது ஆடி 18 அன்று வருமாறு அமைந்திருக்கின்றது;அதே நாளில் சிம்மத்தில் இருக்கும் குருவானவர் கன்னிக்குப் பெயர்ச்சி ஆகின்றார்;


குரு ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்கின்றார்;கடந்த ஓராண்டாக குரு சிம்மத்தில் இருக்கின்றார்;சிம்மத்தில் குரு இருக்க,வரும் ஆடி அமாவாசையன்று அண்ணாமலை கிரிவலத்தை துவக்கிட ஏற்ற காலம் ஆகும்;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்மகுருவும் ஆடி அமாவாசையும் சேர்ந்து வரும்;

இந்த வருடம் ஆடி அமாவாசைத்திதியானது 1.8.16 திங்கட்கிழமை நள்ளிரவு 3.48 முதல் 2.8.16 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 3.10 வரை அமைந்திருக்கின்றது;


முதல் நாளே நமது குலதெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;ஆடி அமாவாசையன்று துவங்கும் இந்த அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி நிறைவடைவதற்குள் 1008 முறை வலம் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்;
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 1008 முறை கிரிவலம் செல்ல விரும்பினால்,தொடர்ந்து 3 ஆண்டுகள் அண்ணாமலையில் தங்கவேண்டும்:இது நம்மைப் போன்றவர்களுக்கு சாத்தியமா?


எனவே,வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டு நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அவரவர் பூர்வஜன்ம கர்மாக்கள் படி அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் 1008 முறை அருணாச்சலத்தை வலம் வந்துவிட முடியும்;


இதிலும் சில சூட்சுமங்களை கும்பமுனி நமக்குத் தெரிவித்திருக்கின்றார்;
108 அமாவாசை நாட்கள்
108 விசாக நட்சத்திர நாட்கள்
108 நமது பிறந்த நட்சத்திர நாட்கள்
108 கார்த்திகை மாத பவுர்ணமி
108 திருவாதிரை நட்சத்திர நாட்கள்
108 தேய்பிறை சிவராத்திரி நாட்கள்
108 பிரதோஷ நாட்கள்
108 திங்கட்கிழமை நாட்கள்
108 தேய்பிறை அஷ்டமி நாட்கள்
108 பஞ்சமி நாட்கள் ஆக மொத்தம் 1080 நாட்கள் வலம் வரத் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாக இப்பிறவியிலேயே நமது சற்குருவின் அருட்பார்வைக்குள் வந்துவிடலாம்;

முதல் முறையாக அண்ணாமலை கிரிவலம் வர செய்யும் முயற்சியே பெருமுயற்சியாக இருக்கும்;ஒரு வருடத்தில்(ஒருவருடம் என்பது சித்திரை 1 முதல் பங்குனி 30 வரையிலான கால அளவு) குறைந்த பட்சம் 12 முறை கிரிவலம் வந்துவிட்டால்,அதன் பிறகு அண்ணாமலையின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளலாம்;இமயமலையை விடவும் 400 கோடி வருடங்கள் பழமையானது அருணாச்சலம் என்ற அண்ணாமலை;இதன் அருமை பெருமைகளை உணர்ந்தமையால் தான் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,நமது கிழக்கு எல்லைப்புற மாநிலத்திற்கு அருணாச்சலப் பிரதேசம் என்று பெயர் வைத்தார்;


முதல் பத்து வருடங்களில் வருடத்திற்கு 10 முறை வீதம் 100 முறை கிரிவலம் வந்துவிட்டாலே நமது கர்மச்சுமைகளில் 80% கரைந்து காணாமல் போய்விடும்;கடந்த ஐந்து முற்பிறவிகளில் நாம் சேமித்த கர்மச்சுமைகளில் இருந்துதான் 80% கரையும்;

அதற்கு முந்தைய 1,98,995 பிறவிகளில் செய்த கர்மாக்களை யார் கரைப்பது?


நம்மால் மட்டுமோ

அல்லது

நமது குருவானாக இருப்பவரால் நமது கர்மச்சுமையை சுமக்க முடியாது;அவர் இதை வாங்கவும் மாட்டார்;

அல்லது

நமது கர்மச்சுமையை வேறு யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;

நமது ஜன்ம நட்சத்திரத்துக்குரிய சற்குருவால் மட்டுமே நம்மை பரிசுத்த ஆத்மாவாக மாற்றிவிடமுடியும்;

1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் வரை அண்ணாமலையாரையே நமது சற்குருவாக ஏற்று அடிக்கடி கிரிவலம் வரவேண்டும்;


தற்போதைய காலகட்டத்தில் அண்ணாமலையைச் சுற்றிலும் வாழும் திருக்கோவிலூர்,வேலூர்,காட்பாடி,ஆம்பூர்,விழுப்புரம்,
திண்டிவனம்,பாண்டிச்சேரி,சேலம்,சென்னை பகுதி மக்களுக்கு மிகவும் சுலபமான வாய்ப்பு;மிகவும் குறைந்த மணிநேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;


முயற்சிப்போமா?


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

Friday, July 15, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம் 2016 டூ 2017


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;

கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;

15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை
6.1.17 வெள்ளி  மதியம் 1.14 முதல் 3.14 வரை
3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை
18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை
25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை
25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை
25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை
30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

இப்படிக்கு கை அருணமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர் 9092116990   9364231011

Thursday, July 14, 2016

அனைத்து கர்மவினைகளையும் அடியோடு நீக்கும் ஆடி மாத ஜபம்!

   
உலகில் பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவரும் கடந்து ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் மொத்தத்தை அனுபவிக்கவே  வாழ்ந்து வருகின்றோம்;ஆனாலும்,இறை சக்தியானது மிகவும் கருணை மிக்கது;

ஒவ்வொரு நாளுமே நாம் நமது கர்மவினைகளில் இருந்து விலகிச் செல்ல பலவிதமான விதிவிலக்குகளை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றது;ஆமாம்! சாலை/தெருவில் நடந்து செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;யாராவது பசிக்குது? என்று கெஞ்சினால் அது உங்கள் கர்மவினைகளின் சுமையை குறைக்க வந்திருக்கும் தெய்வீக சுயபரிகாரமே! நீங்கள் அந்த ஆத்மாவின் பசியை நீக்கினால்,உங்கள் கர்மவினையின் ஒரு சிறுபகுதியை குறைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்;

அதே போல,தினமும் ஒரு பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தந்தாலும் உங்கள் கர்மவினையை குறைக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்;

ஒரு பாழடைந்த சிவாலயத்தில் முதன் முறையாக தீபம் ஏற்றுகின்றீர்கள் எனில்,அடுத்த பிறவியில் நாடாளும் யோகம் உங்களைத் தேடிவரும் என்று அர்த்தம்;சிலருக்கு இப்பிறவியிலேயே!

முழுமையான கர்மவினைகளை ஒரே பிறவியில் தீர்த்துவிட முடியாது;தனி ஆளாக போராடினால்!

தகுந்த குரு கிடைத்துவிட்டால்,ஒரே வருடத்தில் அல்லது ஒரே மாதத்தில் ஏன் ஒரே நாளில் கூட நமது கர்மவினைகளின் சுமையை ஒரே வீச்சில் கரைத்துவிடமுடியும்;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அமைவது மிகவும் கடினமே!

ஒவ்வொரு ஆடிமாதமும் சூரியன்,ஆத்மாக்காரகனாகிய சந்திரனின் ராசியான கடகராசியைக் கடக்கின்றார்;ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியன்றுதான் மஹா கால பைரவப்பெருமானின் துணை சக்தியான வராகி(ஸம்ஸ்க்ருதத்தில் வாராகி) லலிதா பரமேஸ்வரியிடம் இருந்து உதயமானாள்;

வைஷ்ணவம் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கும் முன்பே உண்டானது சைவம்;

சைவம் தோன்றுவதற்கும் பல கோடி கல்பங்களுக்கும் முன்பே உருவானது தான் சாக்தம் எனப்படும் ஸ்ரீவித்யா வழிபாடு!

ஸ்ரீசக்கரம் என்ற வடிவில் பல கோடி சதுர கி.மீ.தூரத்திற்கு பிரபஞ்சத்தை காக்கும் பெண் சக்திகள் வசித்து அருளாட்சி புரிந்துவருகின்றன;லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும்,பிரம்மாண்டபுராணத்தையும் வாசித்தால் தான் இது பற்றிய முழு விபரமும் நம்மால் அறிய முடியும்;

யார் லலிதா சகஸ்ரநாமத்தை முறையாக ஜபிக்கும் ஆற்றலை பெறுகின்றார்களோ,அவர்கள் அடுத்த சில பிறவிகள் மட்டுமே இப்பூமியில் எடுப்பார்கள்;

வராகியில் மூன்று விதமான அம்சங்களும்,64 விதமான வடிவங்களும் இருக்கின்றன;

முதல் வராகி ஸ்ரீலலிதா பரமேஸ்வரியால் தோற்றுவிக்கப்பட்ட படைத்தலைவி! இந்த அன்னை தனித்து வாழும் சக்தி!

இரண்டாவது வராகி அருணாச்சலத்தில் அபிதகுஜலாம்பாளாக அண்ணாமலையின் துணை சக்தியாக(உண்ணாமுலையாக) அருள் பாலித்து வருகின்றாள்;அண்ணாமலையின் இன்னொரு பெயர் சதாசிவம் ஆகும்;

மூன்றாவது வராகி உன்மத்த பைரவரின் துணை சக்தி ஆவார்;
ஒவ்வொரு கிரகத்திற்கும் பிராண தேவதை இருக்கின்றார்கள்;சூரியனின் பிராணதேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்+சொர்ணதாதேவி!
புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+வராகி!


இந்த சதுர்முகி வருடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியானது 7.8.2016 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருக்கின்றது;

மனிதர்களாகிய நமக்குத் தான் பிறந்த நட்சத்திரம் பார்த்து அனைத்து சுபகாரியங்களையும் செயல்படுத்த வேண்டும்;ஆனால்,ஒரு மனிதன் இறந்துவிட்டால்,ஜன்ம நட்சத்திரம் செயலிழந்து போய்,இறந்த திதிதான் செயல்படுகின்றது;அதனால் தான் முன்னோர்கள் இறந்த திதி வரும் நாளில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வருகின்றோம்;(இதன்மூலம்,ஒருவர் இறந்து விட்டால்,அவர் தெய்வசக்தியாகி விடுகின்றார் என்றுதான் அர்த்தம்)


இறை சக்திகளுக்கு ஜன்ம நட்சத்திரம் என்று கிடையாது;திதி மட்டுமே உண்டு;விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி,முருகக் கடவுளுக்கு சஷ்டி;பைரவப் பெருமானுக்கு அஷ்டமி;வராகிக்கு பஞ்சமி!(சில அவதாரங்கள் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உதயமானதற்குக் காரணம் ஜோதிடக் கலைக்கு மனிதர்கள் மதிப்பு தரவேண்டும் என்பதற்காகவே!!!)




அன்னை வராகியின் அருள் யாருக்கெல்லாம் கிட்டும்?

மனதால் ஒரு போதும் பிறருக்கு தீங்கு தர நினைக்காமல்,தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்து பிறரின் பொறாமையால் பாதிக்கப்பட்டிருந்தால்,அவர்களுக்கு ஓடோடி வரம் தருபவள் இந்த பிரபஞ்ச அன்னை!

ஆயிரக்கணக்கில் செலவு செய்து,லட்சக்கணக்கில் பூஜை செய்து அன்னை வராகியிடம் எவராலும் வரங்கள் வாங்க முடியாது;


வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை வாசித்துப் பார்த்தால்,அன்னை வராகியை வழிபடுபவர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும்,அவர்களை எப்படி துவம்சம் செய்வாள் என்றுதான் பாடல்களே வரும்;

இதன் உள்ளார்த்தம் என்ன?

பொறாமை எண்ணம் ஒருவருக்கு வந்தால்,அவர்கள் பிறரின் முன்னேற்றத்தை தடுக்க எந்த ஒரு கேவலமான வழிமுறைக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்றுதான் அர்த்தம்;அப்படிப்பட்ட இழிவான மனமானது ஒரு போதும் திருந்தவே திருந்தாது;அவர்களை சம்ஹாரம் செய்தால் மட்டுமே அடங்குவர் என்பதையே வராகி பரணியின் பாடல்கள் தெரிவிக்கின்றது;


நீங்கள் எப்பேர்ப்பட்ட மாந்திரீக பாதிப்பில் இருந்தாலும்,இந்த விரதத்தினை முறையாகவும்,முழுமையாகவும் கடைபிடிப்பதன் மூலமாக அந்த மாந்திரீக பாதிப்பில் இருந்து மீண்டு விடுவீர்கள்;

தன்னைச் சரணடையும் தனது பக்தனையும்,அவனது குடும்பத்தையும் பாதுகாக்க எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த மந்திரவாதியையும் ஒழித்து கட்டத்தயங்கமாட்டாள் அன்னை வராகி!


16.7.16 சனிக்கிழமையன்று ஆடி மாதம் துவங்கி,16.8.16 செவ்வாய்க்கிழமையன்று ஆடி மாதம் நிறைவடைகின்றது;மறுநாள் 17.8.16 அன்று ஆவணி மாதம் பிறக்கின்றது;ஆவணி மாத பவுர்ணமியும் வருகின்றது;


இந்த 33 நாட்களும் பிரம்மச்சார்ய விரதம் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வராகி பரணியை யார் ஒரு முறை ஜபிக்கின்றார்களோ,அவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் (சிலருக்கு இந்த 33 நாட்களுக்குள்ளாகவே) அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் தூள் தூளாகிவிடும்;


இந்த 33 நாட்களும் என்ன செய்ய வேண்டும்?


வராகி பரணியை 3 நாட்களுக்குள்(15/7/16 வெள்ளி முதல் 17.7.16க்குள்) ஒருமுறை கையால் எழுத வேண்டும்;அப்படி எழுதியதையே தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் அன்னை வராகியின் படத்தை பிரேம் போட்டு வைத்துக் கொண்டு தினமும் அன்னைக்கு செவ்வரளி மாலை அல்லது தாமரைப்பூ மாலை அணிவிக்க வேண்டும்;


பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ளவேண்டும்;(ஒருபோதும் இந்த பச்சைத் துண்டினை துவைக்கக் கூடாது;வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது)

ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்;இன்னொரு மண் விளக்கில் நெய் தீபத்தையும் ஏற்றி வைக்க வேண்டும்;தரமான வாசனை பத்தியையும் ஏற்றி ஓம் வடிவில் அன்னைக்கு ஆரத்தி காட்டி பத்தி ஸ்டாண்டில் வைக்க வேண்டும்;ஆரத்தி காட்டும் போது நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ள வேண்டும்;

தினமும் கொஞ்சம் பேரிச்சம்பழம்(கொட்டை நீக்கப்பட்டது),ஒரு மாதுளம் பழம்,ஒரு செவ்வாழைப்பழம்,கொஞ்சம் தேன் அல்லது ஜிலேபி மற்றும் ஆரஞ்சுப் பழம் அல்லது பூந்தி படையலாக வைக்க வேண்டும்;*

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

என்று ஐந்து முறை வராகி சித்தரை நினைவு கூர்ந்து ஜபிக்க வேண்டும்;அதன் பிறகே,வராகி பரணியை வாசிக்க வேண்டும்;
இன்று இரவு சாத்திய செவ்வரளி மாலை/தாமரைப்பூ மாலையை மறு நாள் இரவில் அகற்றிவிடவேண்டும்;

இன்று இரவு அன்னை வராகிக்கு படையலிட்ட பழங்கள்,இனிப்புக்களை மறுநாள் இரவு (வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பு)வீட்டில் இருப்பவர்கள் அதை பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடவேண்டும்;(தனித்து வாழ்ந்து வருபவர்கள் இவைகளை இரவு உணவாக மட்டுமே கூட சாப்பிடலாம்;ரத்த உறவுகள் அல்லாதவருக்கு தரக் கூடாது)

*கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் தினமும் செவ்வாழை அல்லது பேரீட்சை மட்டுமாவது படையல் வைக்க வேண்டும்;

பெண்களும் அன்னையை வழிபடலாம்;சில இயற்கை உபாதை நாட்களன்று மட்டும் விடுமுறை விட்டுவிட்டு தொடரலாம்;

தினமும் தூங்கி எழுவதற்கு முன்பு கனவில் சில காட்சிகள் தெரியும்;அதைக் கொண்டு தாங்கள் அன்னையின் மனதில் எந்த அளவிற்கு இடம்பிடித்துவிட்டீர்கள் என்பதை உணரலாம்;


எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக இந்த விரதத்தை செயல்படுத்துகிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு விரைவான பலனைப் பெறலாம்;(உடன் பிறப்புகள்,நெருங்கிய நட்புகளிடம் தெரிவிக்க வேண்டாம்)


வெகுதூர நாடுகளில் இருப்பவர்களுக்கு படம் வைத்து வழிபடும் சந்தர்ப்பமோ அல்லது படையலை தினமும் வைத்து வழிபடும் ப்ராப்தமோ இராது;அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு மேல்(அந்தந்த நாட்டின் இரவு 10 மணிக்கு மேல்) 12 மணிக்குள் ஒருமுறை வீட்டில் / தங்கும் இடத்தில் வராகி பரணியை ஒரு தீபம் வடக்கு நோக்கி வைத்து கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு ஜபித்தாலும் பலன் உண்டு;


தீபம் வைத்து வழிபடக் கூடிய சந்தர்ப்பமும் சில நாடுகளில் வாழ்பவர்களுக்கு கிடைக்காது;பரவாயில்லை;வராகி பரணியை ஜபித்தால் மட்டும் போதும்;

33 நாட்கள் வெற்றி கரமாக முடித்துவிட்டவர்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து மீண்டுவிடுவார்கள் என்பது வராகி சத்தியம்;

ஒரு மண்டலம் தொடர்ந்து பிரம்மச்சாரிய விரதம் இருக்க விரும்புவோர் 1.9.16 வியாழக்கிழமை வரை இந்த விரதத்தைத் தொடரலாம்;


இந்த நாட்களில் ஒருமுறையாவது அன்னை வராகி உங்களை தமது ஆலயத்திற்கு வரவழைத்து ஆசி தருவாள்;கடந்த பல நூற்றாண்டுகளாக பல லட்சம் அன்னை வராகியின் அன்பு மகன் களுக்கும்/மகள்களுக்கும் இப்படிப்பட்ட அரிய ஆசிகள் கிடைத்திருக்கின்றன;


இந்த விரதம் இருப்பவர்கள் தினமும் 108 முறை ஸ்ரீவாராஹி ஸகாயம் என்றும் எழுதலாம்;ஆனால்,கட்டாயம் இல்லை;


இந்த வழிமுறை இல்லறத்தாருக்கே உரியது;வராகி உபாசனை அல்ல;வராகி உபாசனை செய்வது துறவிகளுக்கே உரியது;



ஓம் அருணாச்சலாய நமஹ 

ஒரே நாளில் வரம் தரும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்!!!


கலியுகத்தில் ராகுவின் உச்சம் ஆகும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;

இதனால்,நிம்மதியாக வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும்,ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தம்பதிகளின் எண்ணிக்கையும் படுவேகமாக குறைந்துவருகின்றது;


வேலை கிடைப்பதில்லை;கிடைத்தால் பிடிப்பதில்லை;பிடித்த வேலையாக இருந்தால் சம்பளம் போதவில்லை;

தொழில் செய்தால் எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில்லை;

குடும்பத்தில் ஒற்றுமை இல்லை;

தினசரி செய்தித்தாளை வாசித்தாலே வீட்டைவிட்டு வெளியே செல்லவே பயமாகத் தான் இருக்கின்றது;

ஒவ்வொரு குடும்பமும் கடன் அல்லது நகைக்கடன் அல்லது நோய் அல்லது சொத்துத் தகராறு அல்லது மாந்திரீகப் பிரச்சினை அல்லது பொறாமை அல்லது குழப்பத்தில் ஆழ்ந்து யாருமே நிம்மதியாக வாழ்ந்துவருவதாகத் தெரியவில்லை;


இந்த சூழ்நிலையை மாற்றிட சித்தர் பெருமக்களை வழிபடுவதே சிறந்தது;

தமிழ்நாடு முழுவதுமே சித்தர் பெருமக்கள் ஆங்காங்கே ஜீவசமாதி ஆகி உள்ளார்கள்;
பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கே சித்தர் ஜீவசமாதிகளுக்குச் செல்லும் பாக்கியம் உண்டாகும்;போராடி முயற்சி  செய்தால் மற்றவர்களுக்கும் சித்தர் பெருமானின் அருளாசி கிடைக்கும்;
இன்றைய காலகட்டத்தில் உடனே ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்;

அப்படி உடனே அருளாசியை அள்ளித்தரும் சித்தர் பீடம் ஒன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில் ஒரு கிராமத்து சிவாலயத்தினுள் அமைந்திருக்கின்றது;


போன பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்குச் சென்று இரவு 7 மணி அன்னதானம் வரை இந்த ஆலயத்தில் யாம் இருந்தோம்;மறுநாள் காலையில் இருந்து இந்த நொடி வரையிலும் எமக்கு பணக் கஷ்டம் தீர்ந்து எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது;தொழில் டல்லடித்தது போய்,ஓய்வே இல்லாத அளவுக்கு மூச்சு முட்டும் விதமாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம்;

அதே சித்தரிடம் மானசீகமாக வேண்டியதால் தான் இப்போது இந்த கட்டுரையை எழுதவே முடிந்திருக்கின்றது;

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்;

ராஜபாளயம் புது பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்;சோழாபுரம் என்ற கிராமம் வரும்;

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முறம்பு வழியாகச் செல்லும் அனைத்து டவுண் பஸ்களும் சோழாபுரம் நிற்கும்;(இதற்கு அடுத்த ஸ்டாப் தான் முறம்பு)

ராஜபாளையத்திற்குத் தெற்கே இருந்து வருபவர்கள் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்து அங்கே இருந்து முறம்பு வர வேண்டும்;அங்கே இருந்து ஒரு கி.மீ.ராஜபாளையம் சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;


சாலையானது எஸ் வளைவாக திரும்பும்.அந்த திருப்பம் ஒரு ஆற்றுப் பாலமாக இருக்கின்றது;அந்த ஆற்றுப் பாலத்தில் இருந்து பார்த்தால் மேற்கே ஒரு கோபுரம் தெரியும்;ஒரு நிலை மட்டுமே கட்டப்பட்ட கோபுரம் அது;

இந்த ஆலயம் தான் அருள்மிகு விக்கிரபாண்டீஸ்வரர் + குழல்வாய் மொழி அம்மையார் திருக்கோவில்
எல்லா நாட்களும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கின்றது;

நீங்கள் ஒரு லிட்டர் பஞ்சதீப எண்ணெய்யும்,ஐந்து கிலோ பச்சரிசி அல்லது புழுங்கலரிசியும் வாங்கிக் கொண்டு 19.7.16 செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு வந்து விடுங்கள்;சாயரட்சை பூஜையை தரிசித்துவிட்டு,அன்னதானத்தை சிறப்பித்துவிட்டு இரவு 7 மணிக்குப் புறப்படும் விதமாக திட்டமிட்டு வருவது அவசியம்;

எண்ணெயும்,அரிசியும் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டமா? கவலை வேண்டாம்! இந்த சித்தர் பீடத்தைத் தரிசித்தால் போதும்;வாருங்கள் வரங்களை சித்தர் பெருமானிடம் பெறுங்கள்;

இங்கே அன்னை குழல்வாய்மொழி சன்னதியில் அருகில் இருக்கும் சித்தர் பீடம் சுமாராக 1000 ஆண்டுகள் பழமையானது;இந்த சித்தர் பீடத்தின் அருகில் அமர்ந்து உங்கள் கஷ்டங்களை முறையிடுங்கள்;

முறையிட்டு உங்களுக்கு என்னதேவை என்பதை வேண்டிக் கொள்ளுங்கள்;(புலம்பாதீர்கள்;பிறரின் அழிவுக்காக வேண்டுவது மாபெரும் தவறு;அவர்களை விடவும் இங்கே வந்த முதல் தடவையிலேயே நீங்கள் சக்திவாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்)

எப்படி சித்தர் பிரானிடம் வேண்ட வேண்டும் தெரியுமா?

எனது கடன் ரூ.5 லட்சம் தீரவேண்டும் என்று வேண்டுவதற்குப் பதிலாக,எனது கடன் ரூ.5 லட்சத்தைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றிகள்! என்று வேண்டிட வேண்டும்;

எங்கள் மகள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்ததால்,இதுவரை நல்ல வரன் அமையவே இல்லை;இனியாவது அமையுமா? என்று அரைகுறையாக அவநம்பிக்கையோடு  வேண்டக் கூடாது;

எனது மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற்றமைக்கு மிக்க நன்றிகள் சித்தர்பிரானே! என்று வேண்டிட வேண்டும்;

எனது தொழில் மீட்சி அடையவேண்டும்;வராக்கடன் வசூல் ஆகவேண்டும் என்று கெஞ்சக் கூடாது;

ஐயா! சித்தர் குருவே தங்கள் அருளால் எனது தொழில் அபாரமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றது; உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!! என்று கோரிக்கையானது நிறைவேறியது போலவே வேண்டிக்கொள்ள வேண்டும்;

ஆடி பவுர்ணமியானது நமது இந்து தர்மத்தில் குருபவுர்ணமியாக  பல கோடி ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது;
இந்த நாளில் குருவிடம் சரணடைந்தவர்களுக்கு அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது அண்ணாமலையார் சொன்ன ஆன்மீக ரகசியம்!!!


மறுநாள் முதலே உங்கள் வாழ்க்கை ஸ்பீடாக இருக்கும்;வளமாக இருக்கும்;நலமாக இருக்கும்;அனைத்தும் பெற்று வளமோடும்,சீரோடும் சிறப்போடும் வாழ சித்தர் பெருமானின் அருள் பெற அழைக்கின்றோம்;



ஓம் ரீங் சிவசிவ

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை



$ ஆடி மாதம் 16.7.16 சனிக்கிழமை அன்று துவங்குகின்றது;துவங்கி 16.8.16 செவ்வாய்க்கிழமை வரை 32 நாட்கள் இருக்கின்றது;இந்த 32 நாட்களும் பிரம்மச்சார்ய விரதம் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் இந்த வராகி பரணியை ஒருமுறை ஜபித்தாலே நமது அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;என்பது எமது வராகி குரு அவர்கள் எமக்கு அளித்த வார்த்தாளி உபதேசம் ஆகும்;


இந்தப் பாடலை ஒருமுறை உங்கள் கையால் எழுதிக் கொள்ளவும்;அப்படி எழுதியதையே ஜபிக்கவும்;

ஜபிக்கும் போது,தலைப்பினை வாசிக்க வேண்டியதில்லை;


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே