Wednesday, September 11, 2019

கர்மச்சுமைகளை விரைவில் தீர்க்கும் சாம்பிராணித் தைலம்!


கர்மச்சுமைகளை விரைவில் தீர்க்கும் சாம்பிராணித் தைலம்!

உங்கள் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியம் மொத்தமும் உங்கள் வாழ்க்கையை இயக்குகிறது என்று எண்ணினால்,அது தவறு;உங்கள் முன்னோர்களின் கர்மாவில்(பாவ & புண்ணியத் தொகுப்பு) 7 இல் 1 பங்கினை மட்டுமே நீங்கள் அனுபவிக்கிறீர்கள்! மீதி ஆறு பங்கினை மற்ற பேரன்,பேத்திகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது;

நம் ஒவ்வொருவருக்கும் ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற மூன்று கர்மாக்கள் இருக்கின்றன;இந்த மூன்று கர்மாக்களின் கணக்கு ஜீரோ லெவலுக்கு வந்துவிட்டால்,அதன் பிறகு இந்த கர்ம பூமியில் பிறவி நமக்கு கிடையாது;இந்த நிலையை எட்டிட நம் ஒவ்வொருவருக்கும் இன்னும் 20,000 முதல் 3,00,00,000 பிறவிகள் பாக்கி இருக்கின்றன;இது பயமுறுத்தும் தகவல் அல்ல;உண்மையான ஆன்மீக ரகசியம்;


மேலே சொன்ன மூன்று கர்மாக்களில் ஒரு கர்மாவை மட்டுமே நமது பல்வேறு புண்ணியச் செயல்களால் கரைத்து விட முடியும்;பிற இரண்டு கர்மாக்களை நீக்கிடவே பல ஆயிரம் பிறவிகள் அல்லது பல கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கின்றது;

 இரண்டே இரண்டு செயல்களை நாம் செய்தால்,இப்பிறவியிலேயே இந்த மூன்று கர்மாக்களையும் மொத்தமாக அழித்துவிட முடியும்;

1.அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுதல்

2.ப்ரபஞ்சத்தின் அன்னை லோக மாதா,மனோன்மணியின் படைத்தளபதியான மஹாவராகியை 6 ஆண்டுகளுக்கு தினமும் ஜபித்து வருதல்

இவைகள் இரண்டையும் செய்ய முடியாத அளவுக்கு உங்கள் வாழ்க்கை தற்போது இருக்கிறதா? பரவாயில்லை; 

எதிர்காலத்தில்  இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர்,பின்வரும் ஆன்மீக முயற்சியை உங்கள் ஊரிலேயே செய்யலாம்;


அதுதான் சாம்பிராணித் தைலத்தால், தெய்வ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வருவது!!!

அனுபவம் மிக்க சித்த வைத்தியரால் தரமான சாம்பிராணித் தைலத்தை தயார் செய்ய முடியும்;

விநாயகர்,முருகக் கடவுள்,சிவலிங்கம்,மஹாவிஷ்ணு,ஹயக்ரீவர்,மஹாலட்சுமி,   கிராம காவல் தெய்வங்கள்,குல தெய்வம்,மஹா கால பைரவர்,மஹா வராகி,சொர்ண வராகி,பாதாள வராகி,சரபேஸ்வரர்,நரசிம்மர்,காளி,துர்கை,வன துர்கை,சகஸ்ரலிங்கம்,மாரியம்மன்,அங்காளபரமேஸ்வரி என்று எந்த தெய்வத்திற்கும் அபிஷேகம் செய்ய சாம்பிராணி தைலத்தைப் பயன்படுத்தலாம்;


தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ 1008 நாட்கள் சம்பிராணித் தைலத்தால் ஒரே ஒரு தெய்வம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,கடுமையான கர்மவினைகள் தீரும்;


விநாயகருக்கு ஒவ்வொரு சதுர்த்தி திதி நாளிலும் 50 மிலி முதல் 100 மிலி அளவுக்கு சாம்பிராணித் தைலம் அபிஷேகத்திற்கு தரலாம்;

மஹாவராகிக்கு ஒவ்வொரு பஞ்சமி திதி நாளிலும் அபிஷேகத்திற்கு தரலாம்;

முருகக் கடவுளுக்கு ஒவ்வொரு சஷ்டி திதி அன்றும் சாம்பிராணித் தைலத்தை தானமாக தரலாம்;

காளி,மாரி,துர்கை முதலான உக்கிரமான பெண் தெய்வங்களுக்கு ஒவ்வொரு நவமி திதி மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை/செவ்வாய்க்கிழமைகளிலும் அபிஷேகத்திற்கு தரலாம்;


பெருமாளுக்கும் தாயாருக்கும் ஒவ்வொரு புதன் கிழமை/சனிக்கிழமை மற்றும்   ஏகாதசி திதி நாட்களில் சாம்பிராணித் தைலத்தை அபிஷேகத்திற்கு தரலாம்;

ஹயக்ரீவருக்கு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் அபிஷேகத்திற்கு தரலாம்;

ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் நந்திபகவானுக்கு அபிஷேகம் செய்ய சாம்பிராணித் தைலத்தை தானம் செய்யலாம்;


ஒவ்வொரு சிவராத்திரி,திருவாதிரை,அமாவாசை அன்றும் சிவலிங்கத்திற்கும்,சகஸ்ர லிங்கத்திற்கும்,ஜீவசமாதிகளில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திற்கும் சாம்பிராணித் தைலத்தை தானமாக தரலாம்;

விலைக்கு வேண்டுவோர் போனில் (வாட்ஸ் அப்:9092116990) முன்பதிவு செய்து நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்;

கர்மவினைகள் போதுமான அளவு தீர்ந்திருக்கிறது என்பதை எப்படி நாம் அறிந்து கொள்வது?


இதுவரை நமது மாத வருமானம் எவ்வளவோ,அது 1008 நாட்களுக்குப்பிறகு 20 முதல் 40% அதிகரித்திருக்கும்;

அல்லது

விலகிச் சென்ற உறவுகள் படிப்படியாக மீண்டும் நல்லுறவாக மாறத் துவங்கி இருக்கும்;

அல்லது

மன அழுத்தத்தால் தூக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல தூக்கம் வரும்;

அல்லது

மன அழுத்தத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள்,இனிமேல் ஆரோக்கியமாக வாழ ஆரம்பிப்பார்கள்;

அல்லது

வராக்கடன் வசூலாக ஆரம்பித்திருக்கும் அல்லது கொடுக்க வேண்டிய கடனை அடைக்கும் அளவுக்கு வருமான வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கும்;

நீங்கள் திருக்கையிலாயத்தினைச் சென்றடைய


நீங்கள் திருக்கையிலாயத்தினைச் சென்றடைய

உங்கள் ஆத்மா,உங்களுடைய இவ்வுலக வாழ்க்கை  நிறைவடைந்த பின்னர்,ஈசனாகிய பரமேஸ்வரன் என்ற அருணாச்சலேஸ்வரர் வாழ்ந்து வரும் திருக்கையிலாயத்தைச் சென்று அடைய வேண்டுமா?


இன்று முதல் இப்பிறவி முழுவதும் மது,அசைவம்,போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கைவிடுங்கள்;

அதன் பிறகு,தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் 27 முறையும்,இரவில் தூங்கச் செல்லும் முன்பாக 27 முறையும் பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வாருங்கள்!


குறைந்தது 15 ஆண்டுகள் வரையிலும் இப்படி பின்பற்ற வேண்டும்;

அதிக பட்சமாக 40 ஆண்டுகள் வரையிலும் இப்படி பின்பற்ற வேண்டும்;

ஓம் சாலுவேஷாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!!!


நேரடி ஜோதிடப் பயிற்சி




உங்கள் ஊரின் ஜனத் தொகைக்கு இணையாக திறமையான மற்றும் நேர்மையான ஜோதிடர்கள் இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

ஜோதிடத்தில் உண்மைத் தன்மையை நிலைநாட்டிட நீங்களும் ஜோதிடம் கற்றுக் கொண்டு,தொழில் முறை ஜோதிடர்கள் ஆகுங்கள்;

குறைந்த பட்ச கல்வித் தகுதி:10 ஆம் வகுப்பு

மூன்று பெரும்பகுதிகளைக் கொண்டது எமது தொழில் முறை ஜோதிடப் பயிற்சி!

1.அடிப்படை ஜோதிடம்

2.ஜாதகம் கணிக்கும் கலை

3.பலன் சொல்லும் முறைகள்

இன்று வரையிலும் பலருக்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் 3 பகுதிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மட்டுமே தெரிந்திருக்கிறது;அவர்கள் மீதி ஒரு பகுதியை அறிந்து கொள்ளவும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்;

பயிற்சி நடைபெறும் ஊர்:ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு

பயிற்சி காலம்:வேகமாக புரிந்து கொள்பவர்களுக்கு 7 நாட்கள் போதுமானது;

அடிப்படையில் இருந்து பலன் சொல்லும் வரை முதன் முதலில் கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும்;

பயிற்சி முறை:தொடர்ந்து 7 முதல் 90 நாட்கள் வரை தங்கியும் கற்றுக் கொள்ளலாம்;

அல்லது

வாரம் இரண்டு (சனி மற்றும் ஞாயிறு அல்லது வேறு எதாவது இரண்டு நாட்கள்) நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;

15 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;


எனவே,ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புவோர் எமது வாட்ஸ் அப்பில் 9092116990 உங்கள் ஜாதகத்தை அனுப்பவும்.கூடவே Like2Learn Astrology என்று அனுப்பவும்;

கட்டணம் உண்டு;






ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

உன்னதமான வாழ்க்கையைத் தரும் மஹாளய அமாவாசை தர்ப்பணம்!!!


உன்னதமான வாழ்க்கையைத் தரும் மஹாளய அமாவாசை தர்ப்பணம்!!!

உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்காவது நிம்மதியாகவும்,வளமாகவும்,புகழுடனும்,செல்வச் செழிப்புடனும் இருக்க நீங்கள் போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்புதான் காரணம்!ஆனால்,நீங்கள் எடுக்கவேண்டிய பிறவிகள் இன்னும் 20,000 முதல் 3,00,00,000 இருக்கின்றன;

உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்கு கொடூரங்கள்,வேதனைகள்,துயரங்கள்,துரோகங்கள், தோல்விகளுக்கு உங்களுடைய போன நான்கு பிறவிகளில் நீங்கள் செய்த பாவங்கள் மட்டும் காரணம் அல்ல;இப்பிறவியில் மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதும் தான்!

ஆண் வாரிசுகள் இல்லாத மகள்கள் தமது இறந்த பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு தர்ப்பணம் செய்யலாம்;வெள்ளை எள் வைத்து தர்ப்பணம் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன;

ஒவ்வொரு மாதமும் தர்ப்பணம் தர முடியாத அளவுக்கு நம் ஒவ்வொருவரது வாழ்க்கையும் பிஸியாகிவிட்டதால்,அதற்கும் மாற்று ஏற்பாடுகளை முன்னோர்களாகிய சித்தர்களும்,ரிஷிகளும் வகுத்துள்ளார்கள்;ஒரு ஆண்டில் ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று மூன்றே மூன்று அமாவாசைகளுக்கு தர்ப்பணம் தரலாம் என்று உபதேசம் செய்துள்ளார்கள்:அதுவும் முடியாதவர்கள்,ஒரு வருடத்தில் புரட்டாசி அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்தால்,அதற்கு முந்தைய 12 ஆண்டுகளுக்கு உரிய தர்ப்பணம் செய்த புண்ணியம் கிட்டும் என்பதையும் சித்தர் பெருமக்கள் நமக்கு உபதேசம் செய்துள்ளார்கள்:உதாரணமாக,2006 முதல் 2018 வரை பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாமல் இருந்தவர்கள்,இந்த புரட்டாசி அமாவாசை அன்று  28.9.2019 சனிக்கிழமை அன்று தர்ப்பணம் செய்தால்,2006 முதல் 2018 வரை பித்ருதர்ப்பணம் செய்த பலன் கிடைத்துவிடுகிறது;


14.9.2019 சனிக்கிழமை முதல் 28.9.2019 சனிக்கிழமை வரை மஹாளய பட்சம் அமைந்திருக்கின்றது;இந்த 14 நாட்களில் இறுதி இரண்டு நாட்கள் மட்டும் நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் நமது வீடுகளுக்கு சூட்சுமமாக வருகைதந்து தங்குவது வழக்கம்;     28.9,2019 சனிக்கிழமை அன்று விகாரி வருடத்தின் புரட்டாசி அமாவாசை வருகின்றது;அன்றுடன் மஹாளய பட்சம் நிறைவடைகின்றது;

இந்த 14 நாட்களும் இல்லறவாசிகளாகிய நாம் கண்டிப்பாக தாம்பத்தியத்தை தவிர்க்க வேண்டும்;அப்படி தவிர்த்துவிட்டு,தினமும் பித்ரு தர்ப்பணம் செய்வதை பித்ருக்கள் விரும்புகிறார்கள்:பொருளாதார நெருக்கடி,வேகமான வாழ்க்கை,தகுந்த அந்தணர் கிடைக்காமை,வெளிநாட்டில் வேலை பார்த்தல்,ஏழரைச்சனியால் அவதிப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் 14 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாவிட்டாலும்,கடைசி நாளன்று மட்டுமாவது பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும்!


இதனால்,நீண்டகாலமாக இருந்து வரும் நமது ஏக்கங்களை பித்ரு தர்ப்பணம் செய்தவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் நிறைவேற்றிவிடுவர்;அது மட்டும் அல்ல;இனிமேல் வர இருக்கும் விபத்து,அவமானம்,கடன்,விரக்தியையும் வரமுடியாத அளவுக்கு தடுத்து நம்மை பாதுகாத்துவிடுவர்;

இயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடன் தான் பித்ரு தர்ப்பணம்!


செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய கடன் திலா ஹோமம் என்ற திலா தர்ப்பணம்!
பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற இடங்களில் முதன்மையானது விழுப்புரம் அருகில் இருக்கும்  திரு அண்ணாமலை! இரண்டாம் இடம் தான் ராமேஸ்வரம்;மூன்றாம் இடம் வாரணாசி என்ற காசி;நான்காம் இடம் கயா;அதன் பிறகு தான் பிற ஊர்களில் இருக்கும் கோவில் குளக்கரைகள் அல்லது நதிக்கரை ஓரங்கள்!
வசதியும்,வாய்ப்பும் உள்ளவர்கள் திரு அண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;முழுமையான பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்புவோர் 27.9.2019 வெள்ளிக்கிழமை வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் செல்ல வேண்டும்;மறு நாள் 28.9.2019 சனிக்கிழமை அன்று பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;


ஆர்வமும்,ஆசையும் இருந்தும் அவ்வளவு தூரம் சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள்,அவரவர்கள் வாழும் ஊரிலேயே இருக்கும் சிவாலயம்,விஷ்ணு ஆலயத்தின் குளக்கரை அல்லது நதிக்கரையோரம் செய்யலாம்;


பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உரிய இடங்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,000 ஆலயங்கள் இருக்கின்றன;அவைகளை பட்டியல் இடலாம்;உங்கள் ஊரும்,ஊர் ஆலயமும் அதில் இடம் பெற்றுள்ளன;எனது சத்குரு வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்!!!

Friday, September 6, 2019

பாம்பன் சுவாமிகள் செய்த அற்புதம்







பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள் ஒருமுறை சக்திவிகடனின் கூறியது:


பாம்பன் சுவாமிகள் அருளிய ‘வேற்குழலி வேட்கை’ என்ற பாடல்களைத் தொடர்ந்து 48 நாட்கள் படித்தால் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இது என் மருத்துவ நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நான் சொல்லி நடந்த அதிசயம்.திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாத அந்த டாக்டர் தம்பதிக்கு,அந்த ‘வேற்குழலி வேட்கை’ படித்து குழந்தை பிறந்தது.இது தெய்வீக அதிசயம்.


தீவிரமான இதய நோய்பாதிப்புடன் வரும் என் நோயாளிகளுக்காக பாம்பன் சுவாமிகளை முழுமனதுடன் பிரார்த்திப்பேன்.உடல் ஆரோக்கியத்துக்காக பாம்பன் சுவாமிகள் எழுதிய ‘சண்முக கவசம்’ படிக்கிறது சிறந்த மருந்து.
நான் ஒவ்வோரு அறுவை சிகிச்சை மற்றும் ஆடியோகிராமுக்கு முன்பும் கந்தரனுபூதியிலிருந்து
‘வினைஓடவிடும் கதிர்வேல் மறவேன்’ என்று தொடங்கும் பாடலைச் சொல்லிய பிறகே ஆரம்பிப்பேன்.

பைரவரை ஏன் ராகு காலத்தில் வழிபட வேண்டும்?


பைரவரை ஏன் ராகு காலத்தில் வழிபட வேண்டும்?

உங்கள் உயிர் முதல் உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்கள்,ப்ரபஞ்சத்தில்  இருக்கும் அனைத்து கோள்களையும் இயக்கி வருபவர் கால தேவன் என்ற மஹா கால பைரவர் ஆவார்;

இவர் சதாசிவன் என்ற அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி,அவரது பெயரால் ஆட்சி புரிந்து வருகிறார்;எல்லா ஆலயங்களிலும் ஷேத்திர பாலர் என்ற பெயரில் வடகிழக்கு மூலையில் இருந்து அருள்பாலித்து வருகிறார்;

1925 வரையிலும் கூட நமது பாரத நாட்டில் பெரும்பாலான பூசாரிகள் மனசாட்சிக்குப் பயந்து கோவிலில் பணிபுரிந்து வந்தார்கள்;அவர்கள் ஆத்ம பலம் மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணச் சம்பவத்தை இங்கே தெரிவிப்பது எமது கடமை ஆகும்;

ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் இரவு நேர பூஜை முடிந்த பின்னர்,கோவிலின்  கோபுர வாசல் சாவியை மட்டுமே வீட்டிற்கு கொண்டு செல்வது வழக்கம்;மீதி சன்னதிகளின் சாவிக் கொத்தினை கால பைரவரின் பாதத்தில் வைத்து பூஜித்து,அவரது சன்னதிக்கு அருகில் இருக்கும் கிணற்றினுள் போட்டுவிடுவது வழக்கமாக இருந்தது; மறுநாள் காலையில் கோபுர வாசல் கதவை திறந்து கோவிலுக்கு உள்ளே செல்லும் போது,முதல் நாள் கிணற்றில் போட்ட சாவிக் கொத்து,கால பைரவப் பெருமானின் பாதத்திற்கு அருகில் இருக்கும்;  இந்த பழக்கம் சுமாராக 20,000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது;இந்த ஆன்மிக மரபு 2008 வரையிலும் கூட தமிழ்நாட்டில் சில ஆலயங்களில் மட்டும் ஒரு சில பூஜாரி/பட்டர்களின் ஆன்ம வளத்தினால்,ஆத்ம சக்தியால் நடைமுறையில் இருந்தது;


அமுதத்தைப் பெற பாற்கடலில் அசுரர்களும்,தேவர்களும் கடும் முயற்சி எடுத்தார்கள்;அதில் கிடைத்த அமுதத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்து,தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விதமாக மஹாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார்;அப்போது,இரண்டு அசுரர்கள் மட்டும் தேவர்கள் வடிவம் எடுத்து தேவர்கள் வரிசையில் நின்றார்கள்;இதைக் கண்டுபிடித்த மஹாவிஷ்ணு,அவர்களை வாளால் வெட்டிவிட,அவர்கள் ராகு,கேதுவாக மாறினார்கள்:ஆனால்,நவக்கிரகமாக பதவியைப் பெறவில்லை;


மஹாவிஷ்ணுவால் தண்டனை பெற்ற அசுரர்கள்,கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானைச் சரணடைந்தார்கள்;தங்களுக்கு சாப விமோசனம் பெற வேண்டி அழுதார்கள்;அவர்கள் சார்பாக,மஹா கால பைரவப் பெருமான்,மோகினி வடிவில் இருந்த மஹாவிஷ்ணுவிடம் பரிந்துரைத்தார்;அப்படி பரிந்துரைத்த நாள் தான் நாக சதுர்த்தி;நவக்கிரகங்களில் ராகு,கேதுவாக பரிணமித்து,கலியுக மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு ஆற்றுவீர்களாக என்று வரம் தந்தார் மஹாவிஷ்ணு!


இதனால் அகமகிழ்ச்சி அடைந்தார்கள் அந்த இரண்டு அசுரர்களும்! அன்று முதல் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதும்,ஜபிப்பதும்,அபிஷேகம் செய்வதும் நமக்கு அளவற்ற நன்மையைத்தரும் என்ற மரபு உண்டானது;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சம்ஹார பைரவாய நமஹ

சதுரகிரி மூலிகைகள்


சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!

சத்ருக்கள் அழிய நாம் செய்ய வேண்டிய வழிபாடு

எதிரிகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலவிதமான தொல்லைகள் வந்தால் சமாளிக்க வழி!

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவிலில் பணம் கட்டி அங்குள்ள கோவில் அலுவலகத்தில் செலுத்தி சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் எதிரிகளும்,எதிர்ப்புகளும் அழியும்.

நாமே பூஜைப் பொருட்கள் வாங்கினால் பணம் கொஞ்சம் குறைவாக செலுத்தினால் போதும்.இதற்கு அருணகிரிநாதர் பாடிய பாடலே சாட்சி!

“அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச்
சங்காரமாடிய பெருமாளே!”
பொருள்:முருகக்கடவுள் அரக்கர்களை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர்புரிந்து வென்றார்.

பூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை



சமுத்திரத்தின் அடியாழத்தில் ஆதிசேடன் உலகைத் தாங்கிய படி சுருண்டு கிடக்கிறான் என்று பாகவத புராணம் உள்ளிட்ட பல இந்து புராணங்கள் கூறுவதை பலர் ஏற்பதில்லை.ஆனால்,இது முழு உண்மை என்பதை 27 ஆண்டுகால ஆராய்ச்சி நிஜம்தான் என நிரூபித்துவிட்டது.இந்த ஆராய்ச்சி அமெரிக்க விஞ்ஞானிகள் தலைமையில் துவங்கியது.16 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆய்வில் பிரான்ஸ் நாட்டு புவியியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டனர்.

இந்த விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் விஞ்ஞானகள் பேரவை ஒன்றில் கூட்டாக வாசித்தளித்த ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளனர்.

“கடலுக்கடியி 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அது பாம்பின் தோல் போல் வழவழபான மேற்பரப்புள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள் சுருளாக வியாபித்திருப்பதாகவும் இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் இதேகருத்தை இன்னொரு ஆராய்ச்சிக்கட்டுரையில் வெளியிட்டுள்ளனர்.
‘செர்ப்பன் டைல் ராக்ஸ்’ 2000 கிலோ மீட்டர் ஆழம் வரை தென்படுகிறது.


ஆதாரம்:புத சங்கேத்,லக்னோ 25.12.2007

கோமாதா இந்த பூமியின் மாதா


பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.

பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.

கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.

பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.

பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.

பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.

பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.

பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.



பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக!!!



இதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.

ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.


கோமாதா பற்றிய ஆன்மீக,மருத்துவ உண்மைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கு கோ சேவா பாரதி என்ற அமைப்பு பயிற்சி அளித்து வருகின்றது;

மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு


மறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு

அ)எண்கணிதத்தின் தந்தை என மேற்குநாடுகளால் போற்றப்படுபவர் சீரோ ஆவார்.இவர் 1.11.1866 ஆம் தேதியன்று பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் காசி நகரத்தில் தங்கி, இந்துஜோதிடத்தை கற்றுக்கொண்டவர் என்பது சிலருக்குமட்டுமே தெரிந்த செய்தி!!!
ஆதாரம்:ஜோதிடபூமி,பக்கம்39,ஆகஸ்டு 2009.படத்தில் இருப்பவர் சீரோ

ஆ)ஆரியபட்டரின் மஹாஆரியபட்ட சித்தாந்தமானது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரி நூலகத்தில் என்.எஸ்.ஆர் 15.99 என்ற எண்ணில் ஓலைச்சுவடிகளாக நம்நாட்டில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதனுடைய போட்டோ நகலைப்பெறுவதற்குக் கூட நம் நாடு கி.பி.1909 ஆம் ஆண்டில் எண்ணற்ற தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது.
இந்தத்தடைகளைப் பற்றி விரிவாக சவுகாம்பா ஸேன்ஸ்க்ரிட் பப்ளிகேஷன்ஸ்,வாரணாசி வெளியிட்டுள்ள ‘மஹா ஸித்தாந்த:’ என்ற நூலின் முகவுரையின் முதல் மூன்று பக்கங்களில் நாம் காணலாம்.
இவ்வாறு கடும்முயற்சிக்குப்பின் இதன் போட்டோ நகல் மட்டும் கிடைத்து புத்தகமாக வெளியிடப்பட்டுவிட்டது.
இவ்வாறு கிடைக்காமலேயே போயிருந்தால்,ஆரியபட்டர் மஹா ஆரியபட்ட ஸித்தாந்தம் என்றஒரு கணித வான சாஸ்திர நூல் எழுதியிருந்தார்.இதுவரை அந்நூல் கிடைக்கவில்லை என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.
இந்நூலில் உள்ள நுட்பமான கணித வான சாஸ்திர விஷயங்களை,இந்நூலைப் படித்த ஐரோப்பியர்கள் அவற்றாஇத் தாமே கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பர்.(இன்றைய பல நவீனக்கண்டுபிடிப்புக்கள் இப்படித்தான் நம்மிடமிருந்து கடன் வாங்கப்பட்டு அவைகள் அவர்களின் சொந்தக்கண்டுபிடிப்பாக உலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவற்றில் விமானம்,வானொலி,அணுகுண்டு,ரேடாரில் சிக்காத விமானம்,ஏவுகணை ,எண்கணிதம், யோகா மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள் என மிக நீளமானபட்டியல் உண்டு.)

மேலும் ஆர்யபட்டர் எழுதிய மூன்றாவது நூலான ‘லகு ஆர்யபட்ட ஸித்தாந்தம்’ என்ற நூல் இதுவரை கிடைக்கவில்லை.இவ்வாறு எண்ணற்ற நமது முன்னோர்களின் அறிவுப்பெட்டகங்களை இழந்து நிற்கிறோம்.அத்தோடு காணாமல் போன இந்த நூல்களின் நுட்பமான விஷயங்களைப் படித்தறிந்துகொண்ட ஐரோப்பியர் அவற்றை தாமே கண்டுபிடித்ததாகக் கூறவும் செய்தனர்.

வசீகர சக்தியைத் தரும் சிவமந்திர ஜபம்!!!


எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக வழிமுறை
நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில் அல்லது வேலை பார்க்கிறீர்களா? 

இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல் பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிபுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள், இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்துறையில் இருந்தாலும் சரி!

 எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி
இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் செய்ய வேண்டும்.தினமும் காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும் பரவாயில்லை.தொடரலாம்)

ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு விரிப்பின் மீது நின்று அல்லது அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை ஜபிக்க வேண்டும்.


ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில் ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்கக்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட வேண்டும்.
துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே குடிக்கவேண்டும்.
(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவிட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்.)

91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில் நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.
இது 90 நாளுக்குமேல் தான் செயல்படத்துவங்கும்.
ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது.

இழந்த காது கேட்கும் திறனைத் திருப்பித் தந்த யோகா!!!



மும்பை ரயில் குண்டு வெடிப்பால் காது கேட்கும் திறனை இழந்தார் டாக்டர் காமத் என்பவர்.அவரது வயது 57.இவர் இயற்கை உணவு நிபுணர். 11.6.2006 ஆம் நாளன்று மும்பையில் பயங்கரமான ரயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடித்து ஏற்பட்ட பயங்கர சப்தத்தால் காது கேட்கும் திறன் இழந்தார்.

அவர் இயற்கை வைத்தியம் மற்றும் யோகா சிகிச்சையை மேற்கொண்டார்.சில மாதங்களில் அவரது காது கேட்கும் திறன் 80% அளவுக்கு அதிகரித்தது.

மும்பை கூப்பர் மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை நிபுணர்களால் இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதாரம்:தினமலர் ஜீலை 14,2007.

சதுரகிரியில் நடைபெற்ற அதிசயம்

சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்:
கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.

நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.

அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.
நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)
தனிச்சுற்றுக்கு மட்டும்



இன்னொரு ஆன்மீகக் குறிப்பு:திடியன் மலை என்று ஒரு சிவாலயம் இருக்கிறது;திருமங்கலம் டூ உசிலம்பட்டி சாலையில் உசிலம்பட்டியில் இருந்து 8 கி மீ தொலைவில் சாலையோரத்தில்,மலையடிவாரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;


இங்கே இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் வித்தியாசமானவர் ஆவார்;இவரது சன்னதியில் பீடங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்;அப்படி தான் நாம் பார்த்திருப்போம்;இங்கே அவரது 16 சீடர்கள்,ரிஷிகள் தோற்றத்தில் உபதேசம் கேட்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது;

ஒவ்வொரு பவுர்ணமியும் இங்கே கிரிவலம் வருவதால்,அக்யூ ஹீலிங்,ப்ராணிக் ஹீலிங் பயிற்சியாளர்கள் மற்றும் ஹீலர்களுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கும்;108 பவுர்ணமிகள் இங்கே கிரிவலம் நிறைவு செய்பவர்களுக்கு இதே கட்டைவிரல் அளவுடைய சித்தர்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை!!!

முகவரி:ந.ராதாகிருஷ்ணன்

அருப்புக்கோட்டை.
மற்றும்

த.ச.தவசிமணி (இணை ஆசிரியர்)
திரைப்படபாடலாசிரியர்
25,கணபதி தெரு,மேற்கு மாம்பலம்,
சென்னை-33.

தமிழ்ப் பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்


தமிழ்ப்பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்

பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.


ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.

ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

இந்து காலக் கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு:இந்துக் காலக் கணக்கு

ஒரு நாளில் இந்த பூமியில் பிறக்கும் உயிர்களின் எண்ணிக்கை மொத்தம் 21,600
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600


21,600 x 200= 43,20,000

ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.



கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்(மனித உயரம் 24 அடி;ஆயுள் பல ஆயிரம் ஆண்டுகள்)



திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்(மனித உயரம் 18 அடி;ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகள்)



துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்(மனித உயரம் 12 அடி;ஆயுள் சில நூறு ஆண்டுகள்)



கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்(மனித உயரம் 6 அடி;ஆயுள் 120 ஆண்டுகள்)



ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.



1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்



71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்



1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்



994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.



2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)



2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.



தற்போதையபிரம்மாவின் வயது 51 .


பிரம்மாவுக்கு 100 வயது ஆனதும் சிவனுக்குள் ஐக்கியமாகிவிடுவார்;அடுத்த பிரம்மாவாக ஒரு புண்ணிய ஆத்மா பொறுப்பு ஏற்பார்;

பிரம்மாவுக்கு 100 வயது ஆனால்,அது விஷ்ணுவுக்கு ஒரு நாள்!

அப்படி விஷ்ணுவுக்கு 100 வயது ஆகிவிட்டால்,அவரும் ஈசனுக்குள் ஐக்கியமாகிவிடுவார்;

விஷ்ணுவுக்கு 100 வயது ஆனதும்,அடுத்த விஷ்ணுவாக ஒரு புண்ணிய ஆத்மா அந்த பொறுப்புக்கு வந்துவிடுவார்;

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,       புரட்டாசி  மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 21.9.2019 சனிக்கிழமை மாலை 4.14 முதல் 22.9.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.14 வரை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;


 இந்த வருடத்தில்,இந்த மாதத்தில் தான் ராகு காலத்திற்குள் தேய்பிறை அஷ்டமி திதி வருமாறு அமையவில்லை;இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேய்பிறை அஷ்டமி நாளன்று மட்டும் இப்படி அமைந்து வருகிறது;




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், ஐப்பசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 21.10.2019 திங்கட்கிழமை அன்று அமைந்திருக்கின்றது!!!

செல்வ வளத்தை தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ ஜபம்!!!


வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை ஜபிப்பது எப்படி?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி இயக்கி வருபவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;ஒரு லட்சத்து எட்டுவிதமான கால பைரவ அவதாரங்கள் இருக்கின்றன;(நன்றி:காசியில் வாழும் அகோரிகள்) இவர்கள் அனைவரையும் விடவும் மிக உயர்வான சிவ அவதாரம் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;

தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 5 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;இதனால்,கால பைரவரின் அனுக்கிரகம் நமக்குக் கிடைக்கும்;கர்மவினைகள் தீரும்;இந்த 5 ஆண்டுகளும் அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு ஜபித்து/எழுதி வந்தால் மட்டுமே பைரவரின் அருள் கிடைக்கும்; 15 முதல் 25 வயதிற்குள் இப்படி செய்து விட்டால்,இப்பிறவி முழுவதும் எந்த விதமான மாந்திரீக பாதிப்பும் நெருங்காது;
ராகு மஹாதிசை இருப்பில் இருப்பவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று தினமும் 108 முறை வீதம் 5 ஆண்டுகள் வரை ஜபித்து வர வேண்டும் அல்லது எழுதி வர வேண்டும்;இதனால்,ராகுவால் வர வேண்டிய அவமானங்கள் வராது அல்லது சிறிய அளவில் குறைந்துவிடும்;சம்ஹார பைரவரின் அருள் கிடைத்துவிடும்;15 முதல் 25 வயதிற்குள் இப்படி செய்துவிட்டால்,அதன் பிறகு ஒரு போதும் பில்லி,சூனியத்தால் பாதிப்பு வராது பைரவரின் அருள் கவசம் பாதுகாக்கும்;
கால பைரவரையோ சம்ஹார பைரவரையோ தினமும் ஜபித்தால்,கர்மவினைகள் படிப்படியாகத் தீரும்;ஆனால்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ன  ஆகர்ஷண பைரவரை ஜபித்தால்,கர்மவினைகள் குறைந்த உடனே வருமானம் அதிகரிக்கும்;
இணைய தொழில் நுட்பம் வந்த பின்னர்,உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது;அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே எந்த நாட்டில் இருப்பவர்களையும் தொடர்பு கொள்ளும் சூழ்நிலை வந்துவிட்டது;இந்த சூழ்நிலையில்,ரகசிய வழிபாட்டு முறையான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை ஜபித்து அவரது அருளைப் பெறும் வழிமுறையை இங்கே உங்களுக்கு தெரிவிக்கிறோம்;
இரண்டு மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் பட்டுத் துண்டு
சுத்தமான பசு நெய் ஒரு கிலோ
சந்தன வாசம் தரும் பத்திக் கட்டு
தாமரை நூல் திரி 32
மண் விளக்கு இரண்டு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் ஒன்று
தீப்பெட்டி ஒரு பாக்ஸ்
மண்டை வெல்லம்(அச்சு வெல்லம் கூடாது) அல்லது வீட்டில் தயார் செய்த தயிர்(கடையில் வாங்கியது பலன் தராது)
வாரம் ஒரு நாள் தாமரை மலர்கள் 108 அல்லது
மாதம் ஒரு நாள் தாமரை மலர்கள் 108
இரண்டு புதிய கிண்ணம் அல்லது தினமும் வாழை இலை அல்லது 32 பேப்பர் ப்ளேட்
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்;4.30க்குள் குளித்து தயாராகி விட வேண்டும்;ஒரு மஞ்சள் துண்டின் மீது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;
வீட்டின் அமைப்பு அல்லது வெளிநாட்டில் வசிப்பவர்கள் அல்லது பாரத நாடு (இந்தியா) அல்லாத நாட்டில் வசிப்பவர்கள் இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்; ஒரு போதும் தெற்கு நோக்கியோ,மேற்கு நோக்கியை வைக்கக் கூடாது;
இன்னொரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;உங்கள் குல தெய்வத்தையும்,வழிகாட்டும் குருவையும் எண்ணியவாறு நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தன பத்தியை பொருத்த வேண்டும்;மஞ்சள் துண்டின் மீது அமர்ந்ததும்,உங்கள் உடலின் எந்த பகுதியும் தரையைத் தொடக் கூடாது;
ஓம் ஸ்ரீ மஹா கணபதி நமஹ என்று ஒருமுறை நினைத்துவிட்டு,சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை ஜபிக்க வேண்டும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் 1008 போற்றியை 3 முறை ஜபிக்க வேண்டும்;
ஜபித்து முடித்த உடன்,நாம் அமர்ந்த மஞ்சள் துண்டினை மடித்து வைக்க வேண்டும்.
பிறகு,காலை 8 மணிக்குள் வீட்டில் சமையல் முடிந்ததும்,முதல் வேலையாக சாதத்தை எடுத்து,அதை ஒரு கிண்ணம்/வாழை இலை/பேப்பர் ப்ளேட்டில் வைக்க வேண்டும்;அத்துடன் வெல்லத்தை பொடி செய்து கலந்து கொள்ள வேண்டும்;அல்லது தாளித்த தயிரை கலந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணா பைரவர் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பிறகு,உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் காலை உணவு சாப்பிடலாம்;இரவில் வீடு திரும்பிய பின்னர்,அந்த கிண்ணம்/வாழை இலை/பேப்பர் ப்ளேட்டில் இருப்பதை அப்படியே எடுத்து,வீட்டின் வெளிப்புறத்தில் மறைவான இடத்தில் சற்று உயரமான இடத்தில் வைக்க வேண்டும்;இப்படி 90 நாட்கள் செய்து வர வேண்டும்;இந்த 90 நாட்களும் மது,அசைவம்,போதைப் பொருட்கள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்;அதே போல, தாம்பத்திய சுகம்,காமரீதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தால்,91 வது நாளில் இருந்து வருமானம் அதிகரிக்கத் துவங்கும்;(இந்த விதியை எந்த ஒரு முறை மீறினாலும் பலன் கிடைக்காது)
அதன் பிறகு,ஒவ்வொரு பவுர்ணமி வீதம் 55 பவுர்ணமிகள் தோறும் இதே போல ஜபம் செய்யலாம்; அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வீதம் 108 வெள்ளிக்கிழமைகளில் ஜபம் செய்யலாம்;அல்லது 108 அனுஷம் நட்சத்திர நாட்களில் ஜபம் செய்யலாம்;
பவுர்ணமி,அனுஷம்,வெள்ளிக்கிழமை நாட்களில் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தவாறு ஜபித்து வர வேண்டும்;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பயன்படுத்தும் எந்த ஒரு சிறு பொருளையும் வேறு தெய்வங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது;ஜாக்கிரதை!
மஞ்சள் துண்டினை எப்போதும் துவைக்கக் கூடாது;தாமரை மலர்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்திய பின்னர்,அவைகளை பாதுகாப்பாக ,காலடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;அது வீட்டில் இருக்க இருக்க செல்வத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கும்;
மிகவும் ரகசியமான வழிபாட்டு முறையாக இருப்பதால்,இது பற்றி நெருங்கிய நட்பு வட்டம்,நெருங்கிய உறவுகளிடம் கூட தெரிவிக்காமல் ஆரம்பிக்கவும்;செல்வ வளம் வந்த பின்னரும் கூட தெரிவிக்கக் கூடாது;