Wednesday, March 27, 2019

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;

84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;


2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும்


16.4.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.50 முதல் 17.4.2019 புதன் கிழமை இரவு 9.06 வரையிலான நேரத்தில் உத்திரம் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்

1.5.2019 புதன் கிழமை நள்ளிரவு(வியாழன் விடிகாலை) 2.41 முதல் 2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.30 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்;

2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.31 முதல் நள்ளிரவு 3.59 க்குள் இருக்கும் நேரத்தில் ரேவதி  நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்

16.5.2019 வியாழக்கிழமை காலை 9.53 முதல் 17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.16 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி  ) பிறந்தவர்களும்

17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 முதல் காலை 6.03 க்குள் இருக்கும் நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் செல்ல முடியுமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்)

31.5.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.59 முதல் இரவு 12.10க்குள் மேஷ ராசி,அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 12.11 முதல் 1.6.2019 சனிக்கிழமை அன்று மாலை 5.18 க்குள் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

14.6.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.41 முதல் 15.6.2019 சனிக்கிழமை காலை 11.13 வரையிலான நேரத்திற்குள் விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்;காலை 11.14 முதல் மதியம் 3.37 க்குள்  அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்


30.6.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.53  முதல் காலை 9.14 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

காலை 9.15 முதல் 1.7.2019 திங்கட்கிழமை அதிகாலை 4.11 வரை ரோகிணி நட்சத்திரத்தில் (ரிஷப ராசி)பிறந்தவர்களும் ;

13.7.2019 சனிக்கிழமை பின்னிரவு(ஞாயிறுவிடிகாலை) 2.35 முதல் 14.7.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.32 க்குள் இருக்கும் நேரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; இரவு 7.33 முதல் பின்னிரவு (திங்கள் விடிகாலை) 2.27 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

29.7.2019 திங்கட்கிழமை மதியம் 2.42 முதல் மாலை 4.42 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும், மாலை 4.43 முதல் 30.7.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.13 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

12.8.2019 திங்கட்கிழமை மாலை 2.24 முதல் 13.9.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.13 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

13.8.2019  செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.14 முதல் மதியம் 3.14 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்

27.8.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.24 முதல் 28.8.2019 புதன் கிழமை இரவு 9.20க்குள் வரும் நேரத்தில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

11.9.2019 புதன் கிழமை அதிகாலை 4.39 முதல் மாலை 4.20 வரை திருவோணம் என்ற சிராவணம் என்ற ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

மாலை 4.21 முதல் 12.9.2019 வியாழக்கிழமை காலை 6 மணி வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி) பிறந்தவர்களும்;

26.9.2019 வியாழக்கிழமை காலை 7.52 முதல் நள்ளிரவு 2.37 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

10.10.2019 வியாழக்கிழமை இரவு 9.16 முதல் 11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.14 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களூம்;

11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.15 முதல் இரவு 11.19 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்ப ராசி & மீன ராசி) பிறந்தவர்களும்;

25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.38 முதல் 26.10.2019 சனிக்கிழமை காலை 7.21 வரை உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்ம ராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்; காலை 7.21 முதல் மதியம் 2.18 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.11.2019 சனிக்கிழமை மதியம் 4.22 முதல் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.18 வரை ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்களும்;

23.11.2019 சனிக்கிழமை பின்னிரவு (ஞாயிற்றுக்கிழமை விடிகாலை) 2.28 முதல் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.22 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி) பிறந்தவர்களும்; மதியம் 12.23 முதல் இரவு 12.28 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.12.2019 திங்கட்கிழமை காலை 9.45 முதல் 10.12.2019 செவ்வாய்க்கிழமை விடிகாலை 5.29 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; விடிகாலை 5.30 முதல் காலை 10.46 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

23.12.2019 திங்கட்கிழமை மதியம் 1.46 முதல்  மாலை  6.04 வரை விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்; மாலை 6.05 முதல் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.23 வரையிலான நேரத்திற்குள் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

7.1.2020 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.41 முதல் 8.1.2020 புதன் கிழமை மதியம் 2.50 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 2.51 முதல் நள்ளிரவு 2.40 வரை மிருக சீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும்;

21.1.2020 செவ்வாய் நள்ளிரவு 2.46 முதல் 22.1.2020 புதன் கிழமை நள்ளிரவு 1.36 வரையிலான நேரத்திற்குள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.2.2020 வியாழக்கிழமை  மாலை 5.24 முதல் இரவு 10.50 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;இரவு 10.51 முதல் 7.2.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.21 வரையிலான நேரத்திற்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுன ராசி & கடக ராசி) பிறந்தவர்களும்;

20.2.2020 வியாழக்கிழமை மாலை 5.38 முதல் 21.2.2020 வெள்ளிக்கிழமை காலை 10.14 வரையிலான நேரத்திற்குள் உத்ராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்; காலை 10.15 முதல் மாலை 6.14 வரை ஓணம் என்ற சிராவணம் என்ற திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

8.3.2020 சனிக்கிழமை விடிகாலை 4.30  முதல் 9.3.2020 ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 3.56 வரையிலான நேரத்திற்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

21.3.2020 சனிக்கிழமை காலை 9.52 முதல் இரவு 9.04 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி ) பிறந்தவர்களும்; இரவு 9.05 முதல் 22.3.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.23 வரையிலான நேரத்திற்குள் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

5.4.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.49 முதல் 6.4.2020 திங்கட்கிழமை காலை 9.49 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; காலை 9.50 முதல் மதியம் 1.33 வரையிலான நேரத்திற்குள் உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்




கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

ஏன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபிக்க வேண்டும்?



உங்களுக்கு இன்றுவரை கிடைக்கும் வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் வருமானங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுக்கு இன்றுவரை இருக்கும் சொத்துக்கள்,மறைமுக வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் சொத்துக்கள்,சம்பாத்தியங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுடைய கடன் அல்லது நோய் அல்லது எதிரி/துரோகிகளின் தொல்லைகளுக்கு காரணம் யார் தெரியுமா?
இதற்கும் நீங்கள் மட்டுமே காரணம்!!!
($ நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் புண்ணியத்தில் 8 இல் 1 பங்கை மட்டுமே நாம் அனுபவிக்கின்றோம்;மீதி 7 பங்கு நம்முடையது மட்டுமே!)


மாயை என்ற சக்தியின் மூலமாக நம்மையும்,நமது முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பற்றிய உண்மைகளையும் ஈசன் நம்மிடம் இருந்து மறைத்து இருக்கின்றார்;


நம்முடைய கர்மவினைகளை படிப்படியாக நீக்கி,இப்பிறவியில் நமது வருமானம் அதிகரித்து,பொருளாதார தன்னிறைவை எட்டிட நாம் செய்ய வேண்டிய ஜபம் எது தெரியுமா?


பைரவ ஜபம்!


கால பைரவரை ஜபித்து வந்தால் அல்லது கால பைரவரை தொடர்ந்து வழிபட்டால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையும்;நிம்மதியான வாழ்க்கை கிடைக்கத் துவங்கும்;வருமானம் அதிகரிக்காது;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்து வந்தால்,கர்மவினை குறையும்;அதே சமயத்தில் வருமானமும் அதிகரிக்கும்;நம்மில் எத்தனை பேர்களுடைய வீட்டில் வைர நகைகள்,முத்து நகைகள்,பவளம்,கோமேதகம்,வைடூரியம் சார்ந்த நகைகள் இருக்கின்றன?


1000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
10,000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
ஏன் எல்லோருடைய வீட்டிலும் நவரத்தினங்களுடன் கூடிய நகைகள் இல்லை;ஏனென்றால்,கடுமையான கர்மவினைகளுடன் பிறப்பவர்களின் வீடுகளில் தங்க நகைகள் கூட இருப்பதில்லை;அவை பெரும்பாலும் வட்டிக்கடையில் இருக்கும்; அல்லது வங்கிக் கடனாக இருக்கும்;இதுவும் கர்மவினையின் விளைவுகளால் தான்!

இதை ஒரே ஒரு நாள் மந்திர ஜபத்தால் சரிசெய்ய முடியாது;ஒரே ஒரு மாத மந்திர ஜபத்தால் சரி செய்யவும் முடியாது;ஆனால்,விடாமுயற்சியாக 3 முதல் 5 ஆண்டுகள் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தால் கர்மவினைகளை நீக்கி/குறைத்து செல்வ வளத்தைப் பெருக்க முடியும்!


முற்பிறவிகள் மூன்று அல்லது நான்கில் நாம் செய்த புண்ணியச் செயல்கள்,தானங்கள்,உழவாரப் பணி,இறைச் சேவைகளின் விளைவுகள் தான் இப்பிறவியில் நமக்கு இவ்வளவு செல்வ வளமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது;


போன பிறவிகளில் பள்ளியறை பூஜைக்கு பிரசாதம் தயார் செய்து,அதை இறைவனுக்கு மனதார (கவனிக்கவும்=மனதார) படைத்து,அதை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று அகத்திய மகரிஷியின் கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;


போன பிறவிகளில் கோவிலில் வாழ்ந்து வரும் ஈசனுக்கும்,அம்பாளுக்கும் தனது சொந்த வருமானத்தில் மனதார தேர் செய்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் விலை உயர்ந்த காருக்கு சொந்தக் காரராக இருக்கின்றார்;


போன பிறவியில் பல நூறு அல்லது ஆயிரம் பேர்களுக்கு இலவசமாக ஏதாவது ஒரு வித்தையை (கல்வி) சொல்லிக் கொடுத்து,அதில் அவர்களை நிபுணர்களாக ஆக்கியிருந்தவரே,இப்பிறவியில் கல்வித் தந்தையாக உருமாறியிருக்கின்றார்;


எப்படி உங்களுக்கு வருமானம் வருகின்றது என்பதை நீங்கள் யாருக்காவது சொல்லித் தருவீர்களா? ஒரு போதும் மாட்டீர்கள்;உங்கள் வாரிசுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ மட்டும் சொல்லித் தருவீர்கள்;

அதே போல,எப்படி உங்கள் வருமானம் அதிகரிக்கின்றது என்பதை உங்கள் நட்பு வட்டம் அல்லது உறவினர் வட்டத்தில் ஒரே ஒருவருக்கு தெரிவித்தாலும்,அதன் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தை உங்களால் தொடர முடியாமல் போய்விடும்;


1990களை விடவும் இன்றைய 2020 களில் போட்டி மனப்பான்மை குறுகி,பொறாமையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது;இதற்கு உலக அரசியலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கார்பரேட் வணிகமும் காரணம்!


$ 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இந்த ஜபம் செல்வ வளத்தைத் தரும்;
$ இந்த ஜபத்தை வீட்டில் இருப்பவர்களைத் தவிர,பிறருக்குத் தெரியாமல் பரம ரகசியமாக ஜபித்தால் மட்டுமே செல்வ வளத்தைத் தரும்;
$ வெளியே இந்து போல நடித்துக் கொண்டு,ரகசிய கிறிஸ்தவராக வாழ்ந்து வருபவர்களுக்கு இது பலன் தராது;
$ கூடாத நாட்களில் பிறந்தவர்கள்,அவர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர்களுக்கு இந்த ஜபம் பலன் தர இரு மடங்கு காலம் ஆகும்;
$ ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது,அண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கு விரைவாக பலன் கிடைத்திருக்கின்றது;
$ ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் இந்த ஜபம் சற்று தாமதமாக பலன் தருகின்றது;

வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர் ஜபம் செய்ய தேவையான பொருட்கள்:

1.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் (இன்றைய ஆனந்த விகடன் பத்திரிகை அளவுக்கு இருக்க வேண்டும்;அதாவது அகலம் 9 செ மீ;நீளம்/உயரம் 12 செ மீ)
2.பசு நெய்+தாமரை தண்டுத் திரி,மண் விளக்கு,தீப்பெட்டி(இவருக்கு என்று தனியாக இவைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்)
3.சந்தன பத்தி
4.மஞ்சள் பட்டுத் துண்டு அல்லது சாதாரண மஞ்சள் நிறத் துண்டு இரண்டு
5.கையால் எழுதப் பட்ட சொர்ண பைரவ அஷ்டகம்
6.தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை செய்ய வேண்டும் என்ற வைராக்கியம்

ஒரு அமாவாசை அல்லது வளர்பிறை திதி ஒன்றில் இவைகளைக் கொண்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைக்க வேண்டும்;ஆணியில் மாட்டலாம் அல்லது மணையில் ஒரு சுத்தமான மஞ்சள் துண்டினை மடித்து அதன்மீது வைக்கலாம்;

புதிய மண் விளக்கில்(அகல் விளக்கு) பசுநெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்தியை ஏற்ற வைக்க வேண்டும்;

இன்னொரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;நீங்கள் கையால் எழுதிய சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபிக்க வேண்டும்;

பலருக்கு ஜபம் புதியதாக இருக்கும்;அவர்கள் முதல் வாரம் வரை தினமும் 7 முறையும்,இரண்டாவது வாரம் வரை தினமும் 14 முறையும்,மூன்றாவது வாரம் வரை தினமும் 21 முறையும்,நான்காவது வாரம் வரை தினமும் 28 முறையும்,ஐந்தாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை       (3 ஆண்டுகள்) தினமும் 33 முறையும் ஜபித்து வர வேண்டும்;
ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்து விட வேண்டும்;விடிகாலை 5 மணிக்குள் ஜபிக்க ஆரம்பித்து,சூரிய உதயத்திற்குள் (காலை 6 மணி) ஜபித்தை நிறைவு செய்துவிட வேண்டும்;

52 வாரங்களுக்குப் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் தொடர்புடைய கனவு ஒன்று உங்களுக்கு வரும்;அதுதான் நீங்கள் மனப்பூர்வமாக ஜபித்துள்ளீர்கள் என்பதற்கு ஆதாரம்;


சொர்ண பைரவ அஷ்டகம் ஜபிப்பதற்குப் பதிலாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 330 முறை ஜபிக்கலாம்;அல்லது பின்வரும் மந்திரத்தை தினமும் 1008 முறை ஜபிக்கலாம்;


ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்


இதில் ஏதாவது ஒரு மந்திரத்தை மட்டுமே முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரை (3 ஆண்டின் முடிவு அல்லது 5 ஆம் ஆண்டின் முடிவு) ஜபிக்க வேண்டும்;மூன்று மந்திரங்களையும் ஜபிக்க கூடாது;


இங்கே உங்களுக்கு வழங்கியிருப்பது இல்லறவாசிகள் செல்வ வளம் பெருக செய்ய வேண்டிய ஜபமுறை தான்;

இதற்கு தீட்சை தேவை இல்லை;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;(3 அல்லது 5 ஆண்டுகள் வரை மட்டும்);

இந்த முயற்சியை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது;

இது உபாசனை அல்ல;

தாம்பத்தியக் கட்டுப்பாடு கிடையாது;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

விரைவாக இறைவனுடன் கலக்கச் செய்யும் சரணாகதி தத்துவம்!




உங்களுக்கு இது எத்தனையாவது மனிதப் பிறவி தெரியுமா?தெரியாது;

ஆனால்,கண்டிப்பாக இது உங்களுடைய முதல் மனிதப் பிறவி அல்ல;குறைந்த பட்சம் உங்களுடைய இந்த ஜன்மம்(பிறவி) 30,000 ஆவது அல்லது 3,00,000 ஆவது மனிதப் பிறவி என்று உறுதியாகச் சொல்லலாம்;


நம் எல்லோரும் முதன் முதலில் மனிதப் பிறவி எடுத்தது சைவத்தின் தலைநகரம் அண்ணாமலையில் தான்!84,00,000 உயிரினங்களாக வெவ்வேறு பிறவிகள் எடுத்துவிட்டு,முடிவாக ஈசனின் கருணையால் பிறப்பது மனிதப் பிறவி!!!;

யார் காளை பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே முதன் முதலில் மனிதப்பிறவி எடுக்கும் போது ஆணாகவும்,யார் பசுவாக பிறவி எடுத்திருந்தார்களோ,அவரே முதன் முதலில் மனிதப் பிறவி எடுக்கும் போது பெண்ணாகவும் பிறக்கின்றார்கள்;


பிறந்த 4 வயது வரை அடிக்கடி ஒரு குழந்தை அழுதால்,அது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை நிறைவேறாமல் தான் வாழ்க்கையை நிறைவு செய்யும் என்று அர்த்தம்;அதற்கு தான் இப்பிறவியில் என்னவெல்லாம் சாதிக்கப் போகின்றோம் என்பது தெரிந்துவிடும்;

வெகு அபூர்வமாக சில குழந்தைகள் பசிக்கும் நேரம் தவிர,பிற நேரங்களில் அழுவதே கிடையாது;அது தனது இப்பிறவியில் தனது ஆன்மீக லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும் என்று அர்த்தம்;அகத்தீசரின் கருணையால் கிடைத்த இந்த ஆன்மீக பொக்கிஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது எமது கடமை;உங்களின் குல தெய்வத்தின் ஆசிகளாலும்,இதுவரை நீங்கள் செய்த புண்ணியச் செயல்கள்,பக்திபுர்வமான நடவடிக்கைகளாலும் இந்த பதிவு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது என்றும் அர்த்தம்;


ஜோதிடத்தின் மூலமாக,உங்களுடைய ஜனன ஜாதகத்தின் மூலமாக இது உங்களுடைய எத்தனையாவது பிறவி? இன்னும் எத்தனை மனிதப் பிறவி எடுப்பீர்கள்? என்பதையும் கணித்துக் கூற முடியும்;

அதனால் என்ன லாபம்?
அதற்குப் பதிலாக,வெகு சீக்கிரமாக இறைசக்தியான ஈசன் என்ற அருணாச்சலேஸ்வரருடன் கலப்பதற்கு ஒரு சுலபவழியை அகத்தீசன் என்ற அகத்தியர் நமக்காக கண்டுபிடித்திருக்கின்றார்;அது தான் சரணாகதி தத்துவம்!

நீங்கள் போன 4 பிறவிகளில் தொடர்ந்து உழவாரப் பணி செய்திருந்தால் மட்டுமே இப்பிறவியில் எல்லோரிடமும் பணிவாக பேசி,பழகும் சுபாவம் இருக்கும்;இல்லாவிட்டால்,அளவற்ற தற்பெருமையும்,உயர்வு மனப்பான்மையும் தான் இருக்கும்;அதனாலேயே பலமுறை நீங்கள் அவமானப்பட்டிருப்பீர்கள்;அல்லது உங்கள் செல்வத்தில் சில பகுதியை இழந்திருப்பீர்கள்!


எந்த ஒரு செயலையும் எல்லோரும் காணும்(அல்லது அறிந்துகொள்ளும்) விதமாகச் செய்யும் முன்பாக “அடுத்தவர் என்ன நினைப்பார்கள்?” என்ற பயத்திலேயே பலர் தமது தனது சொந்த குணத்தையும்,பண்புகளையும் இழந்துவிடுகின்றார்கள்;
எந்த ஒரு புதிய முயற்சியையும் நீங்கள் செய்ய ஆரம்பித்தால் மூன்று நிலைகளைக் கடந்து வர வேண்டும்;

1.கிண்டல் , கேலி, ஏளனம்
2.எதிர்ப்பு
3.ஏற்றுக் கொள்ளுதல்
பலர் 1ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளைக் கைவிட்டுவிடுகின்றார்கள்;வெகு சிலர் 2 ஆம் நிலையோடு தமது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிடுகின்றார்கள்;

நீங்கள் போன 4 பிறவிகள் முழுவதும் ப்ரதோஷ பூஜையில் கலந்து கொண்டிருந்தாலோ அல்லது ப்ரதோஷ பூஜையை பல சிவாலயங்களில் ஆரம்பித்து வைத்து,அதை தங்குதடையின்றி நடைபெற வைத்திருந்தாலோ இப்பிறவியில் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டீர்கள்;அல்லது எவருடனும் எப்போதும் ஒப்பிட்டு பார்க்கவே மாட்டீர்கள்;

அரசியல் துறை,ஆன்மீகத் துறை,அரசுப்பணி,சுயமாக செய்து வரும் தொழில் துறை,ஆன்மீகப்பயிற்சிகளை சொல்லித் தரும் ஆச்சாரியர்கள்,வங்கிப் பணி,ஜோதிடம்,சிற்பம்,நடனம்,நுண்கலைகளான வாசியோகம்,புலி ஆட்டம்,சிலம்பாட்டம்,அருள்வாக்கு சொல்பவர்கள்,மந்திர உபதேசம் தருபவர்கள்=இவர்களிடையே கூட போட்டி மனப்பான்மையும் பொறாமையும் இருக்கின்றது;1970க்குப் பிறகு இது மிகவும் பல மடங்கு அதிகரித்துவிட்டது;


நீங்கள் அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக உங்கள் பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்;அப்படி குறைப்பதற்கு அருணாச்சலேஸ்வரரின் அருள் காரணமாக இருக்கும்;


நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின் விளைவும் உங்களுக்கு நன்மையைத் தரலாம் அல்லது தீமையைத் தரலாம்;ஒரு சாதனையை சாதித்து முடித்தீர்கள் என்றால்,உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்;அதனால்,உங்களுக்கு நான் என்ற அகங்காரம் வளரத் தான் செய்யும்;அதே போல,ஒரு சாதனை முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்டீர்கள் என்றால்,அப்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து விமரிசனம் வரும்;கூடவே,கிண்டல்,கேலி,ஏளனம் வரும்;அப்போது நீங்கள் “நான் எதற்குமே தகுதி இல்லாதவன்” என்ற எண்ணத்தை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்குள் உருவாக்குகின்றார்கள்;

சாதனையில் ஜெயித்தால் “நான் சாதிக்கப் பிறந்தவன்” என்ற அங்காரமும்,
சாதனையில் தோற்றால் “நான் எதற்கும் லாயக்கற்றவன்” என்ற விரக்தியும் வராமல் நடுநிலை மனப்பான்மையை உருவாக்குங்கள்;
உங்களுக்கு பிடித்தமான கடவுள் அல்லது அவதாரத்தை அடிக்கடி நினையுங்கள்;


யாராவது உங்களைப் புகழ்ந்தால்,உடனே நீங்கள் பெருமிதப் படாமல் “எல்லாப் புகழும் எனது க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;

யாராவது உங்களை இகழ்ந்தால்,அப்போது மனம் வருந்தாமல் “எல்லா இகழ்ச்சியும் எனது க்ருஷ்ணனுக்கே அர்ப்பணம்” என்று எண்ணுங்கள்;உங்கள் மனதில் தலைக்கனமோ அல்லது சுயவிரக்தியோ உருவாகாது;பிறவிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது;கர்மவினைகளும் அதிகரிக்காது;

இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சிறு சாதனையிலும்,சிறு தோல்விகளிலும் எண்ணிக் கொண்டே இருந்தால்,இந்த பிறவி நிறைவடையும் போது அந்த அவதாரத்தினைச் சென்றடைவீர்கள்;அல்லது அந்த அவதாரம் வாழ்ந்து வரும் பூமியில் உங்களுக்கு என்று ஒரு இடம் கிடைக்கும்;


அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றால் என்ன தெரியுமா?


ஒரு வருடத்தில் குறைந்தது 108 முறை கிரிவலம் செல்லுங்கள்;அது தவிர,அடிக்கடி உங்கள் இருப்பிடத்தில் இருந்து மானசீகமாகவும் கிரிவலம் செல்லுங்கள்;மானசீக கிரிவலம் ஒரு முறை செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;சில ஆண்டுகளுக்குப் பிறகு,மானசீக கிரிவலம் செல்ல 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்;


மானசீக கிரிவலம் அடிக்கடி சென்றாலும்,அடிக்கடி நேரடியாகவும் கிரிவலம் செல்லுங்கள்;இப்படி வாழ்ந்து கொண்டே வந்தால் மட்டுமே நமது உயிர் பிரியும் கணத்தில் அண்ணாமலையின் ஞாபகம் வரும்;இப்படியும் முக்தி பெறலாம் என்று அகத்தீசர் நமக்கு போதித்து இருக்கின்றார்;

Friday, March 15, 2019

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,     பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 28.3.2019 வியாழன்

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

வியாழக்கிழமை இராகு காலம் மதியம்  1.30  மணி முதல் மாலை 3.00 மணி வரை இருக்கின்றது.

 வியாழக்கிழமை குளிகை காலம் காலை 9 மணி  முதல் 10.30  மணி வரை அமைந்திருக்கின்றது.




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம்,சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 26.4.2019 வெள்ளி மாலை 5.22 முதல் 27.4.2019 சனி இரவு 7.07 வரை  இருக்கின்றது;

Monday, March 4, 2019

தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் பட்டியல்-52


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.


38.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

39.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

40.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

41.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

42.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

44.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

45.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

46.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

47.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

48.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

50.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

51.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஆடையூர்,திருஅண்ணாமலை கிரிவலப்பாதை(வாயுலிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே காஞ்சி சாலையில் 0.5 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது) (காஞ்சி சாலை தான்;காஞ்சிபுரம் அல்ல)

52.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.


முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;





நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;



அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;

அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!

தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

கடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்!!!




உங்கள் வாழ்க்கையில் இனிமேலும் வறுமை,நோய்,எதிரி,துரோகி,துன்பங்கள் தொடராமல் இருக்க ஒரு வழிமுறை கிடைத்திருக்கின்றது;(அண்ணாமலை கிரிவலம்,குலதெய்வ வழிபாடு,கோமாதா பூஜை என்ற கோ சம்ரக்ஷணம் போன்றவைகளும் நமது பாவ வினைகளைப் போக்கும்)


ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரு சிவ மந்திரத்தை ஜபித்தாலே அதன் பலன் நம்மை வந்து சேரும்;சிலருக்கு இப்பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;பலருக்கு அடுத்த பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;யாருக்கு எப்படி எப்போது வந்து சேரும்? என்று ஆராயும் போது,ஜோதிடக் கலை தான் அதற்கு விடையை தந்தது;

ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பார்;
ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,8,12 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்;


சகஸ்ரலிங்கம் என்று ஒருவித சிவலிங்கம் இருக்கின்றது;1964 முதல் 2018 வரை தமிழ்நாட்டில் நாத்திகப் பிரச்சாரம் செய்தார்கள்;அதன் விளைவாக,சிவாலயத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் இருக்கும் தெய்வீக சக்திகளின் வரலாறு,வழிபாடு செய்யும் முறைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது;இதே நிலைதான் மஹாவிஷ்ணு ஆலயங்களிலும் எப்படி,எந்த தெய்வத்தை எந்த திதி அல்லது கிழமையில் என்னென்ன பொருட்களால் அபிஷேகம்,அர்ச்சனை,அலங்காரம்,துதியுடன் வழிபட வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது;


சகஸ்ரலிங்கம் என்பது எல்லா சிவாலயங்களிலும் இருப்பதில்லை;150 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் ஒரு சிவாலயத்தில் சுயம்புவாக உருவாகும் அபூர்வமான சிவலிங்கம் ஆகும்;ஒரு பெரிய சிவலிங்கத்தின் மீது சிறிது சிறிதாக 1000 லிங்கங்கள் இருக்கும்;அதுதான் சகஸ்ரலிங்கம் ஆகும்;
சகஸ்ர லிங்கத்தின் முன்பாக அமர்ந்து இம்மந்திரத்தை ஒரு தடவை ஜபித்தால்,அது சகஸ்ரலிங்கத்தின் மீது பட்டு,1000 மடங்காக திரும்பி வந்து நமது உடலுக்குள் சேரும்;


தினமும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் ஒரு மணி நேரம் வரை பின்வரும் மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்;குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;அதிகபட்சமாக நமது வாழ்நாளில் 40 ஆண்டுகள் வரை ஜபித்து வரலாம்;இதன் மூலமாக,கடுமையான பாவ வினைகள் தீர்ந்துவிடும்;


முக்கிய சுய கட்டுப்பாடு என்னவெனில்,இந்த 3 ஆண்டுகள் வரை(அல்லது 40 ஆண்டுகள் வரை) கண்டிப்பாக மது,அசைவம் தவிர்த்து இருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,மந்திர ஜபம் பலன் தராது;

காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ

இதுதான் அந்த மந்திரம்! இம் மந்திரத்தை அகத்திய சித்தரின் பேரருளாலும்,அருணாச்சலேஸ்வரரின் கருணையாலும் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


இம் மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை ஜபித்தால்,உங்கள் ஜப எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கும்;அப்படி கடந்ததும்,உங்களது தினசரி வாழ்க்கை இப்போது இருப்பதை விடவும் மிகவும் இலகுவாக இருக்கும்;இதுவரை உங்கள் மாத வருமானம் ரூ.12,000/-எனில்,இனிமேல்,உங்கள் 15 நாள் வருமானமாக ரூ.12,000/-உயர்ந்துவிடும்;

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் அண்ணாமலை கிரிவலம் வரும்போதும் இம்மந்திரத்தை மட்டும் ஜபிக்கலாம்;
திருக்கையிலாயத்தை வலம் வர இங்கிருந்து பலர் செல்கின்றார்கள்;அப்போதும் இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;

அண்ணாமலையைத் தவிர,தமிழ்நாட்டில் பல நூறு சிவாலயங்கள் மலை மீது இருக்கின்றன;அந்த மலையை பவுர்ணமி நாட்களில் பல லட்சம் மக்கள்   வலம் வருகின்றார்கள்;அப்போதும் கூட இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;



ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ